சேலையில் கண்ணன் லீலை! (Post No.9963)

WRITTEN BY LONDON POET DR A. NARAYANAN

Post No. 9963

Date uploaded in London – 11 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சேலையில் கண்ணன் லீலை– சேலை கவர்ந்தவனே சேலை கொடுத்தவன்

கண்ணனையே  கணவனாயடைய கோபியக்

கன்னியர்கள் காத்யாயனீ நோன்பு காத்துக்

களைந்த ஆடைகளைக்  கரையில் வைத்துக்

களிப்புடன் யமுனை நதியில் நீராட  அங்கு

வந்த வாசுதேவனுக்கு வம்புக் கிழுப்பதற்கு

வாய்ப்பாக நாணம் நதியிலேப் பறிபோகும்

அச்சமில்லா ஆய்ச்சியக் கன்னியருக்குப்

பாடம் கற்பிக்க கரையிருந்த சேலைகளை

ஒரு தருக்கிளையில் தொங்க தொங்கியதோ

மங்கையர்  நாணமும் மரக்கிளையிலே

கண்ணன் கவர்ந்த சேலைகள் தருக்கிளையிலே

கண்ட கழுத்தளவு நீரில் நின்ற கன்னியர்கள்

கெஞ்சியும் கொஞ்சியும் தளராக் கார் வண்ணன்

சாத்திரமேற்கா நிர்வாண நீராட்டத்தில் வரம்பு

மீறி வழுவிய நீங்கள் அந்நிலையிலேயேக் கரை

ஏறி சேலை பெறுவதோர் பரிகாரமெனக் கண்டிக்க

தண்ணீர் வெந்நீராக கண்ணீர் சொரிந்த கன்னியர்

மன்னிக்க மன்றாட மரம் தழுவிய சேலைகளை

மங்கையரிடை தவழ மனமிரங்கிய மாதவன்

சேலை கவர்ந்தீன்ற முதல் லீலை

பண்டொரு நாள்  கௌரவன் துரியோதனன்                     

பங்காளிப் பகையில் பாண்டவர் உடைமைகளைப்         

பறிக்கத் தருமனை சூதாட்டத்துக் கீர்த்து வஞ்சகச்      

சூதில் வாரி எடுத்தானோ  தம்பிகளுட்படத் தரும        

னுடைமையெலா மெனும் நிலையில் தலை தரை       

நோக்கத் தன்னயும் பணயமாய் வைத்திழந்த காலை    

துரியோதனன் காலுருண்டதோ பஞ்சவர் முடி                     

எஞ்சியவளோ பாஞ்சாலி விட்டதைப் பிடிக்க                                                 

மிஞ்சியது வெறி கெஞ்சியது விவேகம் ஆனால்                    

மத களிர் சூதில் மிதிபட்டாளோ பாஞ்சாலி !                   

பகடையுருட்டாட்டத்தில் பணயமாய் பறிபோன

பஞ்சாலியைத்  துரியோதனன் அரசவைக்கிழுத்து

அரங்கேற்றியதோ அவள் கற்புக் களவாடும்

காட்சியாக துயிலுரிக்கத்  தம்பி துச்சாசனனை

ஏவ இடை தழுவிய சேலையை வலிவான கரங்கள்

இழுக்கத் தடுத்துப் பிடித்தப் பஞ்சாலி கைகள் தளர

இரு கரங்கள் மேல் தூக்கிக் கோவிந்தாவென்றக்

கூக்குரலில் வண்ணச் சேலைகள் ஓயா அலைபோல    

பூ மகளையும் போர்த்து விஞ்சுமளவு வர கோவிந்தன்

விந்தையே சேலையைக்  கொடுத்ததும்.

 நாராயணன்

Poem by Dr A Narayanan, London

Xxx

One more poem by Dr A Narayanan

காலன் கணக்கு

கழுதைபோல் சுமந்த வினைகள் காலங்கள் கடந்தும்

உழுத உடலில் விதைத்த கருமங்களில் சருமப்பை வாட

விழுந்த தருணம் இரு கரங்கள் விண்ணோக்கி த்

தொழ நாடி நரம்பு தளர்ந்த பின் நாராயணனை

விழித்தாலும் வேந்தனோ வேதியனோ வித்தகனுக்கோ 

கூனிக் குறுகிய வினைகளின் சுமை அசலுக்கு விஞ்சிய

வட்டிக் கடன் போலக் காலனெனும் கடன்காரன் கதவைத்  

தட்டி கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்துக் கழியாதோ

உன் கணக்குப் பல சன்மங்களிலு மென இவர் வீடு 

காலியாக விளைந்த மறு பிறவி தொடருமெங்கோ

 நாராயணன்   

Poem by Dr A Narayanan, London

tags- சேலை, கண்ணன், லீலை,  கவர்ந்தவன் ,கொடுத்தவன், 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! -10

Kaliya-Mardana-

Article Written by S NAGARAJAN

Date: 4 November 2015

Post No:2298

Time uploaded in London :–  8-35 AM

(Thanks  for the pictures) 

பாரதி இயல்

ச.நாகராஜன்

கண்ணன் என் கவி

பாரதி இயலில் பாரதி ஆர்வலர்கள் படிக்க வேண்டிய முக்கியமான ஒரு புத்தகம் கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) ஆகியோர் எழுதிய ‘கண்ணன் என் கவி’ என்ற புத்தகம். இந்த நூலை மணிக்கொடி எழுத்தாளர்கள் எழுதியது ஒரு சிறப்பு அம்சம் என்றால் இதில் பாரதியார் உலக மகாகவியாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு அம்சம்.

இன்னொரு மிக முக்கியமான விஷயம் பாரதியார் எப்படி மிகப் பெரும் கவியாக அங்கீகரிக்கப்பட்டார், அதற்கு பாரதி ஆர்வலர்கள் ஆரம்ப காலத்தில் எப்படி மகத்தான முயற்சிகளை எடுத்தனர் என்பதைச் சுட்டிக் காட்டும் மிக முக்கியமான நூலும் இது தான்.

சுமார் 195 பக்கங்கள் உள்ள இந்த நூல் முதலில் 1937இல் வெளிவந்தது. நல்ல வேளையாக 2007இல் இது மீளவும் பதிப்பிக்கப்பட்டது.

நூலின் பின்னணி குறித்து 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள நூல் விவரிக்கிறது:

.ரா.வின் கடிதம்

அதில் சில பகுதிகள்:

“1935 டிசம்பர் மாதம். சென்னையில் மணிக்கொடிக் காரியாலயத்தில் தங்கி இருந்த சமயம். இரவில் ராமையா, கி.ரா. புதுமைப்பித்தன், ஆர்யா, சிட்டி ஆகியோரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். சிட்டி ஒரு கடிதத்தை எடுத்துப் படித்தார். வ.ரா.வின் கடிதம்.இலங்கையிலிருந்து எழுதி இருந்தார். “வீரகேசரி” ஆசிரியராக அப்போது அங்கே இருந்தார். பத்திரிகையில் ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி)யும் தானும் எழுதிக் கொண்ட பகிரங்க கடிதப் போக்குவரத்தைக் குறிப்பிட்டு எழுதி இருந்தார்.

1936 இல் தினமணி பத்திரிகை, ‘பாரதி மலர்’ என்று ஒரு அநுபந்தம் வெளியிட்டிருந்தது. அதில் முதல் கட்டுரை ‘நெல்லை நேசன்’ என்ற புனை பெயரால் பி.ஶ்ரீ. ஆசார்யா எழுதிய ‘வீர முரசு’ என்பது. அதில் கண்டிருந்த இரண்டு விஷயங்கள் பற்றித் தான் விவகாரம். ஒன்று, பாரதியை தேசபக்திக் கவி என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம், அல்லவா? என்பது. இரண்டாவது பாரதி ஒரு நல்ல கவி. மகா கவி அல்லர் என்பது.

kalki stamp

கல்கியின் விமரிசனம்

நெல்லை நேசனின் கட்டுரையைப் படித்த ஒருவர் ஆனந்த விகடனுக்குக் கடிதம் எழுத, அதில் ஆசிரியர் குறிப்பாக கல்கி தன் பங்கிற்கு இப்படி எழுதி இருந்தார்:

“ஷேக்ஸ்பியரையும் ஷெல்லியையும் தாகூரையும் காட்டிலும் பாரதியார் உயர்ந்தவர். அவர்களது கவிதைகள் எல்லாம் சேர்ந்து பாரதியாரின் ஒரு வரிக்கு ஈடாகாது” என்று யாராவது வெளியிட்டிருந்தால் (இப்படி எழுதியவர் வ.ரா. அவரைக் கல்கி தாக்கும் வகையில் இப்படி எழுதி இருந்தார்.) அவருக்கு இலக்கியம், கவிதை ஆகியவற்றைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்பது வெளிப்படை. அவர் நிரக்ஷரகுக்ஷி (எழுத்து வாசனை இல்லாதவர்) என்று சந்தேகிப்பதற்கு இடம் உண்டு. அவர் ஷெல்லியையும் தாகூரையும் படித்திருப்பார் என்பது நம்பத்தக்கதல்ல. ஒரு வேளை படித்திருந்தாலும் ஒரு வரி கூட அர்த்தமாகாமலே படித்திருக்க வேண்டும். அவர் பாரதியின் கவிதையைப் படித்து ரசித்தார் என்பதும் சந்தேகத்துக்கு இடமாகும். தேசாபிமானமும் பாஷாபிமானமும் பகுத்தறிவை மறைத்து விட இடம் கொடுக்காது. பாரதியை ஷெல்லியுடன் ஒப்பிடலாம். ஆனால் ஷேக்ஸ்பியருடனும் தாகூருடனும் ஒப்பிடுதல் கூட சரியல்ல. வால்மீகி, திருவள்வக்ளுவர், காளிதாசர், கம்பர், ஷேக்ஸ்பியர், தாகூர் ஆகியவர்கள் நீண்ட காலத்துக்கு ஒரு முறையே தோன்றி உலகத்துக்கே பொதுவாய் விளங்கும் கவிகள். ஷெல்லி, பாரதி போன்றவர்கள் அந்தந்த தேசத்திற்கே சிறப்பாக உரியவர்கள். இலக்கிய ஆராய்ச்சியும் கவிதை உணர்வும் சொற்ப அளவில் உள்ளவர்களுக்குக் கூட இவ்விஷயத்தில் சந்தேகம் ஏற்படக் காரணம் இல்லை.”

கல்கியின் மேற்படி குறிப்புக்கு வ.ரா. சுதேசமித்திரன் பத்திரிகையில் விரிவாக எதிர் பதில் எழுதினார்.

இப்படிப்பட்ட சூடான கவிதா விமரிசனப் போட்டியைத் தொடர்ந்து பாரதியாரின் இடத்தை உலக மகாகவிகளுள் நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியமும் காலத்தின் கட்டாயமும் ஏற்பட்டது.

அதன் விளைவாக எழுந்ததே இந்த கண்ணன் என் கவி என்ற நூல்.

globe stamp

பாரதியாரின் உலக பரிமாணம்

ஷெல்லி, கீட்ஸ், ஷேக்ஸ்பியர் ஆகியோரின் கவிதைகளை எடுத்து அலசி ஆராய்ந்து பாரதியாரின் கவிதைகளையும் ஒப்பிட்டு இந்த நூல் எழுந்தது.

பல்வேறு ஒப்பீடுகளில் நூல் குறிப்பிடும் ஒரு ஒப்பீடு இது:

“ஷெல்லி, பைரன் முதலியவர்களைப் போல ஜெர்மனியில் கதேக்குப் பிறகு தோன்றிய ஹென்ரிக் ஹைன் என்ற சிறந்த சுதந்திரக் கவிஞர் தமது அபாரமான கவிதா திறமையைக் காட்டி தம் நாட்டாருக்குச் சில ஆழ்ந்த கருத்துக்களை எடுத்துரைப்பதற்கு உபயோகித்தார். சமீப காலத்தில் ஹைன் திறமைக்கு இணையான கவிஞன் ஜெர்மனியில் தோன்றியதில்லை. ஜெர்மானிய இலக்கியத்தில் மிகவும் எளிதான செய்யுள் முறையையே ஹைன் பெரும்பாலும் உபயோகித்தார். இந்த முறையை மிகவும் லகுவாய் கையாண்டு இதன் மூலம் மகத்தான உணர்ச்சிகளை வெளியிட்டார். பாரதியார் பழைய யாப்பு முறைகளைப் புறக்கணித்து தைரியமாய் எளிதான புது முறையில் பிரம்மாண்டமான கருத்துக்களை அமைத்தது இங்கே குறிப்பிடத்தகுந்தது. பாரதி சொந்த இடத்தை விட்டு பிரெஞ்சு நிலமாகிய புதுவையில் வசிக்க நேரிட்டது, ஹைன் பல வருஷங்களுக்கு முன்னால் தன்னுடைய சுதந்திர மனப்பான்மையின் பயனாகத் தன் சொந்த நாடாகிய ஜெர்மனியை விட்டு பிரெஞ்சு ஸ்தலமாகிய பாரிஸ் நகரத்தில் வசித்ததும் சிலருக்கு பிரமாத வியப்பாகத் தோன்றாது. ஆனால், கவிதைகள் மூலம் சுதந்திர உணர்ச்சிகளையும் கலை உணர்ச்சிகளையும் வெளியிட்டது, இருவருக்கும் பெரிய கவிகளின் லட்சணமாக அமைந்திருந்தது.”

இந்த நூல் கண்ணம்மா பாடல்களை அலசி ஆராய்கிறது; பாரதியை நிகரற்ற உலக மகாகவிகள் வரிசையில் சேர்க்கிறது.

இப்போது எண்ணிப் பார்த்து வியப்படைகிறோம். பண்டிதர்களில் ஒரு சாராரும், படித்தவர்களின் ஒரு சாராரும், பத்திரிகைத் துறையினரில் ஒரு சாராரும், அரசியல் துறையில் ஒரு சாராரும் பாரதியாரை மூடி வைக்கப் பார்த்ததையும் அவரை அதிலிருந்து தக்க சான்றுகளைக் காட்டி பாரதி ஆர்வலர்கள் அவரை உலக மகாகவியாக மீட்டதையும் வரலாறு சொல்கிறது.

கு.ப.ரா. சிட்டி, வ.ரா போன்ற எண்ணற்றோர் இந்த பாரதி யாகத்தில் தம்மை ஆகுதியாக அர்ப்பணித்துக் கொண்டதால் அல்லவா உலக மகா கவியாக பாரதி ஒளிர்ந்தான். இந்த ஆரம்பகால பாரதி பக்தர்களுக்கு நம் சிரம் தாழ்த்திய அஞ்சலியைச் செய்து இந்த நூலை பல முறை படித்து மகிழலாம்!

**********

கண்ணன் எத்தனை கண்ணனடி!

krishna unjal ,sivaramn

2015 செப்டம்பர் 5 ஜன்மாஷ்டமி. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை!

ச.நாகராஜன்

Written by S NAGARAJAN

Date : 5 September  2015

Post No. 2126

Time uploaded in London : 6-16 am

காலம் காலமாக கோடிக் கணக்கானோருக்கு கோடானு கோடி விதத்தில் ஒரு அவதாரம் அருள் செய்து வருவது மனித குலத்தின் சிறப்பான ஒரு அதிசய அம்சம்.

கண்ணன்! எத்தனை கண்ணனடி!

குழந்தைகளுக்கு அவன் வெண்ணெய்திருடி. தமாஷ்வாலா!

யசோதைகளுக்கு வாயில் அண்ட பிரபஞ்சத்தையேக் காண்பிக்கும் அதிசய மாயாவி!

யௌவன ருக்மிணிகளுக்கு தன்னைப் போன்ற சரியான ஒருவனுக்குக் காதல் கடிதம் எழுத உத்வேகமூட்டும் அற்புத சுந்தரன்!

அர்ஜுனனுக்குத் தன்னை மறைத்துக் கொண்டு தேர் ஓட்டிய பார்த்தசாரதியான அற்புத நண்பன்

ஆனால் அவனை நிமித்தமாக வைத்து குருக்ஷேத்திரத்தில் உலகிற்கே கீதையை உபதேசம் செய்த லோக குரு!

cute krishna, fb

காந்தாரிக்கோ தர்மம்.

சகாதேவனுக்கு மனதால் பற்றும் பற்றற்றான்!

பீஷ்மருக்கோ இச்சாமரணியாக இருந்த போதும் மரணத்தின் போது கண்ணுக்கு நேரே வந்து அருள் பாலிக்கும் கடவுள்.

துரியோதனனுக்கு அவனது சுடுசரங்களை எதிர்கொள்ளும் காலாக்னி.

குந்திக்கு கஷ்டகாலத்தில் உன்னை நினைக்க வரம் தா என்று கஷ்டத்தை வரவேற்கத் தூண்டும் கர்த்தா!

திரௌபதிக்கோ சகல கஷ்டங்களையும் அரை நொடியில் போக்கும் ஹ்ருதய கமல வாஸன்.

தர்ம பீம நகுலருக்கோ ராஜ தந்திரி!

வியாஸருக்கு புவனத்ரய வாஸுதேவன்

சஞ்சயனுக்கோ யோகேஸ்வரன்.

krishna dance by sivaraman fb

கண்ணன் இன்னும் எத்தனை பேருக்கு என்னென்னவாக இருக்கிறானோ, யார் அறிவார்?

பாரதிக்கு அவன் தீராத விளையாட்டுப் பிள்ளை.

நம்மாழ்வாருக்கு உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்!

பொய்கையாழ்வாருக்கு வினைச்சுடரை நந்துவிக்கும் ஓங்கோதவண்ணன்!

அவன் லீலைகளைக் கேட்டவண்ணமும் சொன்ன வண்ணமும் இருக்கும் லீலாசுகருக்குச் செவிக்கு அமிர்தமாக இருப்பவன் (கிருஷ்ணகர்ணாம்ருதம் இயற்றியது அதனால் தான்!)

சைதன்யருக்குத் தன்  நாமம் சொல்லி நாட்டியமாட வைக்கும் நர்த்தன நாயகன்!

சூர்தாஸுக்கு அவனை மட்டும் பார்க்க கண்ணொளி தரும் ஞான சூரியன்!

யோகினியாக கண்ணனைத் துதிக்கும் மீராவுக்கோ அவன் கோவர்த்தன கிரிதாரி!

ஆண்டாளுக்கோ எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றோனாக ஆகும் ஆழிமழைக்கண்ணன்!

வேங்கடசுப்பையருக்கு ஈரேழு புவனமும் அசைந்தாட, குழல் ஆடி வரும் அழகன்.

தமிழ்நாட்டின் தீய சக்திகளுக்கோ கால சக்தி!

இந்திய நாட்டிற்கோவெனில் பாரதத்தை மையமாக வைத்து உலக நாடுகளை வழி நடத்திச் செல்லும் ஒளி விளக்கு!

இத்தனையும் அவன்!

இதற்கு மேலும் அவன்!!

இதெல்லாம் இல்லாமல் தன்னை மறைத்துக் கொள்பவனும் அவனே!

சொல்லுரைக்க மாட்டா விந்தையிலும் விந்தையான கண்ணனைப் பற்றிச் சொல்ல நூலாயிரம் வேண்டும். நாளாயிரமும் நாவாயிரமும் போதா!

அவனைப் போற்றி வணங்கும் இந்த ஜன்மாஷ்டமியில்,

அவனை மனம் பற்றித் துதிப்போம்! மகிழ்வோம்!! உயர்வோம்!!!

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே I

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே II***************

((Photos are from my face book friends Mr Sivaraman and others; thanks:swami))

————–xxxxxxxxxxxxx—————

சுவையான கதை: கர்ணன் கேட்ட கேள்வியும் கண்ணன் சொன்ன பதிலும்

கர்ண

கட்டுரை எண் 1713; தேதி 13 மார்ச் 2015

எழுதியவர் – லண்டன் சுவாமிநாதன்

லண்டன் நேரம்—காலை 5—53

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமண்ய சிவா மோக்ஷ சாதன ரஹஸ்யம் என்ற ஒரு அரிய நூலை எழுதியுள்ளார். பெரிய புத்தகம்—அரிய புத்தகம் – 830 பக்கங்கள் – வெளியாயான ஆண்டு 1925. தமிழ்நாட்டில் கிடைப்பது அரிது என்றவுடன் லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று அதைப் படித்தேன். அவர் சொன்ன சுவையான கதை. ஆனால் அவர் சொற்களில் சொல்லாமல் சுருக்கமாக என் சொற்களில் சொல்லிவிடுகிறேன். அன்ன தானத்தின் பெருமையைச் சொல்லும் கதை இது:–

போர்க் களத்தில் வீழ்ந்து கிடக்கிறான் கொடை வள்ளல் கர்ண மாமன்னன். தண்ணீர்! தண்ணீர்! ஒரே தாகம், தயவு செய்து தண்ணீர் தாருங்கள் என்று நாக்கு வறள கத்துகிறான். அந்தப் பக்கம் வந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு ஒரே புன் சிரிப்பு! கண்ணா, நீயாவது தண்ணீர் தரக்கூடாதா! என்று கெஞ்சுகிறான்.

கண்ணன் உடனே, இதோ தண்ணீர் என்று ஊற்றுகிறார். என்ன அதிசயம்! அவன் கையில் விழுந்தவுடன் எல்லாம் தங்கமாக மாறி ஓடி விடுகிறது. கண்ணா, இது என்ன வேலை? சாகப் போகிறவனுக்கு தங்கம் எதற்கு? எனக்கு தண்ணீர் கொடு, நாக்கு வறண்டு போய்விட்டது என்று கதறுகிறான்.

கண்ண

கிருஷ்ணருக்குமே புரியவில்லை. ஒரு நொடியில் ஞான த்ருஷ்டியில் பார்த்துவிட்டு மீண்டும் புன்சிரிப்பை நெளியவிடுகிறார். கர்ணா! வாழ்நாள் முழுதும் வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் தானம் கொடுத்தவன் நீ! பொன்னாக வாரி வாரி இறைத்தாய். ஆனால் ஒரு நாள் ஒருவன் பசியோடு வந்து அன்னம் கேட்டான். தங்கத்தை மட்டும் கொடுத்து அகந்தை ஏறிப்போன நீ, சோறா? அதோ அங்கே இருக்கிறதே அன்ன சத்திரம்– என்று உன் ஆள்காட்டிவிரலால் சுட்டிக் காட்டி அவனை அனுப்பி விட்டாய். அதனால்தான் இப்பொழுது அன்னமும் தண்ணீரும் கிடைக்காமல் தங்கமாக வருகிறது. அதனால் வருத்தப்படாதே. நீ அன்ன தானமே செய்யாவிட்டாலும் “அதோ! அன்ன சத்திரம்” — என்று ஒரு விரலால் சுட்டிக் காட்டினாயே! அந்த விரலில் ஒரு அன்னதானம் போட்ட புண்ணியம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதை வாயில் வைத்து சப்பு என்றார்.

இதைக் கேட்ட கர்ணன் நாணிக்கோணி தனது ஆள்காட்டி விரலை வாயில் வைக்கிறான். தண்ணீர் ஊற்றெடுத்துப் பெருகுகிறது. கன்னனுக்கும் கண்ணனுக்கும் – இருவருக்கும் — ஆனந்தம். அன்னதானத்துக்கு அவ்வளவு சக்தி. சாகும்போதும் உதவும், செத்தபின்னர், போகும் வழியிலும் உதவும்!!!

கன்னன் = கர்ணன்

karnanan-1-e13315594338311

கஞ்சன் பட்டபாடு! இன்னும் ஒரு கதை!!

இந்தக் கதையை ஒரு மஹா லோபி (வடித்தெடுத்த கஞ்சன்) கேட்டு விட்டான். எச்சில் கையாலும் காக்கா ஓட்டாதவன் அவன்! அடடா! ஒரு விரலால் அன்ன சத்திரத்தைக் காட்டினால் இவ்வளவு புண்ணியமா. என்னிடம் யாரவது வரட்டும் என்ன செய்கிறேன் என்று பார் என்று எண்ணிக் கொண்டே போனான்.அந்த நேரத்தில் ஒருவன் வந்து சேர்ந்தான்; ஐயா! பசிக்கிறது; சோறு இருந்தால் போடுங்கள் என்றான்.

உடனே அவன் ஒரு விரலால் சுட்டிக்காட்டவில்லை! உடம்பு முழுதையும் வளைத்து நெளித்து சுழித்து அன்ன சத்திரம் இருக்கும் திசையைக் காட்டி அங்கே போ, சோறு கிடைக்கும் என்று விரட்டினான். இப்படி உடம்பு முழுதையும் நெளித்து விரட்டி அடித்ததால் அடுத்த ஜென்மத்தில் நெளிந்து நெளிந்து செல்லும் புழுவாகப் பூமியில் பிறப்பெடுத்தான்!

Karnan29211

இதுவும் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா சொன்ன கதைதாந் — மோக்ஷ சாதன ரஹஸ்யம் — என்னும் அவரது புத்தகம் கிடைத்தால் படிக்காமல் விடாதீர்கள். அவர் சொன்ன மற்றொரு கதை:

சுவையான கதை: “பார்வதி கேட்ட கேள்வியும் சிவன் சொன்ன பதிலும்” — அதை நாளைக்குச் சொல்கிறேன்.

மல்யுத்தம் தோன்றியது எங்கே?

krishna-and-balarama-wrestling1

Krishna and Chanura fighting.

கட்டுரை மன்னன்: லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:– 1329; தேதி:– 5 அக்டோபர் 2014.

மல்யுத்தம், மற்போர், குஸ்தி (WRESTLING) என்று அழைக்கப்படும் இந்த வீர விளையாட்டு குறைந்தது 4000 ஆண்டுகளாக விளையாடப்படுகிறது. இதற்கான பழைய சான்றுகள் எகிப்தில் பேனி ஹாசன் என்னும் இடத்தில் சுவரில் எழுதப்பட்ட பழைய சான்றுகளில் உள்ளது. அதற்குப் பின்னர் கிரேக்கர்கள் வெளியிட்ட நாணயங்கள், செய்த பானைகள், சிலைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2500 ஆண்டு பழமை உடையவை. அப்படியானால் மல்யுத்தம் தோன்றியது எகிப்தில் என்று சொல்லி விடலாமா? முடியாது .இந்தியா என்றே நான் சொல்லுவேன்.

இப்படிச் சொன்னால் உடனே அதாரம் கேட்பார்கள். தொல்பொருத் துறை சான்றுகள் இல்லாவிடினும் இலக்கியச் சான்றுகள் ரிக் வேதம், அதர்வ வேதம், சங்கத் தமிழ் இலக்கியப் பாடல்களில் உள்ளன. இதிலும் இரண்டு வகை உண்டு. ஆதி மனிதன் பிறந்த நாள் முதலே, குகைகளில் சண்டை போட்டிருப்பான். அது எல்லாம் மல்யுத்தம் ஆகிவிடாது. பின்னர் எது மல்யுத்தம்?

முறையாக அறிவித்து, பின்னர் சமநிலையில் இருக்கும் இருவரை விதிகளின்படி சண்டை போட வைத்து வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதே மல்யுத்தம். இந்திய இலக்கியத்தில் இதற்கான சான்றுகள் ஏராளம். ஆனால் ஏன் தொல்பொருத் துறைச் சான்றுகள் கிடைத்தில?
kamsa wretlers
Krishna and Balarama are wrestling with Kamsa’s men

இதற்கு 5 காரணங்கள் உண்டு:

1.இந்தியர்கள் எதையுமே மறுபடியும் உபயோகப்படுத்த வேண்டும் என்ற கொள்கையுடயோர். இப்போதுதான் மேலை நாடுகள் இந்த RECYCLING ‘’ரீ சைக்ளிங்’’ பற்றிப் பேசுகின்றன. நம் வீட்டுப் பெண்மணிகளோவெனில் ஆண்டுதோறும் பழைய நகைகளை அழித்துப் புதுபுது ‘’டிசைன்’’ (Design) செய்து பழகியவர்கள்; ஆகையால் கிடைத்த அத்தனை தங்கம், வெள்ளி கலைப் (antiques) பொருட்களையும், நாணயங்களையும் உருக்கி அழித்துவிட்டனர்.

2.மன்னன் எவ்வழி, அவ்வழி மக்கள் — என்று கீதையில் (3-21) கிருஷ்ணனும், புறநானூற்றில் (187) ஒரு புலவரும் செப்புவர். ஆக அவர்கள்தான் முதல் முதலில் மாற்றான் அரண்மனையில் கிடைத்த கிரீடங்களையும், மணி மகுடங்களையும், கங்கணங்களையும், சிம்மாசனங்களையும், வீர வாட்களையும் உருக்கி தன் காலடியில் பாதம் வைக்கும் பீடங்களாகப் (foot stool) பயன்படுத்தினர். இது காளிதாசன் காவியங்களிலும் சங்கத் தமிழ் பாடல்களிலும் பல இடங்களில் உள்ளது. மேலை நாட்டிலோ அதைப் பாதுகாத்து வைத்தனர்.

3. இந்தியர்கள் எழுதியது அனைத்தும் (Bark) மரவுரி, பனை ஓலை (Palm leaves) போன்று அழியும் பொருட்கள்! கல் மேல் பொறிப்பது என்பது அசோகன் காலத்தில் தோன்றியது. நல்லவேளையாக சிந்து சமவெளிமக்கள் அந்த முத்திரைகளை கற்களில், சுடுமண்ணில் செய்ததால நமக்குக் கொஞ்சம் பழைய தடயங்கள் கிடைத்தன.

4. இந்தியப் (Monsoon) பருவநிலை – வரலாற்றின் மாபெரும் எதிரி. எகிப்து போன்று மணல் பாலைவனமும் (desert) இல்லை. ஐரோப்பா போல பனிப் பாலைவனமும் அல்ல. எப்போது பார்த்தாலு திசை மாறிச் செல்லும் கங்கை, சிந்து போன்ற மாபெரும் நதிகள். கடும் – சுடும் – வெய்யிலும், கனமழையும் மாறி மாறி வந்து அத்தனையையும் அழித்துவிட்டன.

5. மேல்நாட்டோர் போல குறுகிய கால எல்லை பற்றிக் கவலைப் படாதவர்கள் இந்துக்கள். அவர்கள் எல்லாம் மாபெரும் யுகக் கணக்கில்தான் (eras and eons) எதையும் பார்ப்பார்கள். சின்னக் குழந்தைகூட சூர்ய கோடி சமப்ரபா என்றும் சஹஸ்ர கோடி யுக தாரிணே நம: என்றும் தினசரி வழிபடுவர். ஆக இவர்கள் சொல்லும் கி.மு. கி.பி. எல்லாம் இந்துக்களுக்கு கொசு அல்லது — கொசுறு!!

இன்னபல காரணங்களால் நம்மிடையே புறச் சான்றுகள் குறைவெனினும் இலக்கியச் சான்றுகளுக்குக் குறைவில. ஆயினும் இதைக் கண்ட வெள்ளைக்காரன் பயந்து போய், இவை அனைத்தையும் கட்டுக்கதை, பொய்யுரை என்று பரப்பி, ஆரிய-திராவிட வாதத்தைப் புகுத்தி, நமக்கு வரலாறே இல்லை அததனையும் கடன் வாங்கியவை என்று ஆங்கிலத்தில் புத்தகம் எழுதிவிட்டான். உடனே நம்மூர் அரை வேக்காடுகள் அதைப் பரப்பத் துவங்கிவிட்டன.

Beni_Hassan3
Beni Hasan Murals in Egypt; at least 400 year old!

தமிழ் மற்போர் சான்றுகள்

சங்கத் தமில் நூலகளில் நிறைய மற்போர் சான்று ள் உள. புற நானூற்றின் பாடல் 80-ல் ஆமூர் மல்லனுக்கும் கிள்ளிக்கும் நடந்த மற்போரை சாத்தந்தையார் வருணிக்கிறார். பரணர் என்னும் பெரும்புலவர் மிக மிக விரிவாக நமக்கு மற்போர் செய்திகளைப் பல பாடல்கள் வழியே தருகிறார்.

ஒரே ஒரு எடுத்துக் காட்டை மட்டும் காண்போம். அகநானூறு 386-ல் பாணனுக்கும் ஆரியப் பொருநனுக்கும் நடந்த சண்டை பற்றிப் பாடுகிறார். பாணன், கட்டி என்ற இரண்டு வடக்கத்திய மல்லர்கள் கணையனின் நண்பனான மற்றொரு வடக்கத்திய மல்லன் ஆரியப் பொருநனுடன் பொருதுகின்றான். ஆரியப் பொருநன் உடல் இரண்டு துண்டாகி விழுகிறது! இவர்கள் அனைவரும் வடநாட்டு மல்லர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களை வேலைக்கு வைத்தது தமிழ் மன்னர்கள் அல்லது குறுநில மன்னர்கள் எனதும் குறிப்பிடற்பாலது.

பாணனும், கட்டியும் தமிழ் நாடு முழுதும் சென்று யார் யார் சண்டைக்கு வரத் துணிவர் என்று சவால் விட்டனர். தித்தன் வெளியன் வாழும் உறையூருக்கும் சென்றனர். ஊருக்கு வெளியே வானத்தைப் பிளக்கும் முரசொலி கேட்டு, என்ன நடக்கிறது ? என்று வினவினர். அதுவா? தித்தன் வெளியனின் வெற்றிகளை ஊரே கொண்டாடுகிறது என்று மக்கள் சொல்லவே இரண்டு மல்லர்களும் பயந்து ஓடிவிட்டனர்!!

ஒரு புலவர் அழகாக வருணிக்கிறார்: யானையானது மூங்கில் கழிகளைப் பிடுங்கி காலில் வைத்து முறிப்பது போல மல்லனின் கால்களை கிள்ளி ஒடித்தான் என்கிறார்.

பரிபாடல் 12-72, சிலப்பதிகாரம் (16-198, 16-73), பெருங்கதை (52—3115) ஆகிய இடங்களில் முறையான — பறை அறிவித்து நிகழ்த்தப்பட்ட — மல்யுத்தப் போட்டிகளை விரிவாகக் காணலாம். இவை எல்லாம் இரண்டாயிரம் ஆண்டு மல்யுத்தச் சான்றுகள்.

Silver_stater_obverse_Aspendos_374 BCE
Greek Silver coin; at least 2300 year old!

கண்ணன், பலராமன் செய்த மற்போர்

கலியுகம் துவங்கும் முன் (கிமு.3100) வாழ்ந்த கண்ணனும், அவன் அண்ணன் பலராமனும் பல மல்லர்களுடன் மோதி அவர்களை வானில் சுழற்றி எறிந்ததை புராண இதிஹாசங்களில் படிக்கிறோம் கம்ச சானூர மர்த்தனம் என்று கம்சனையும் சானூரனையும் அவர்கள் கொன்றதை இன்று வரை மேடைகளில் கர்நாடக சங்கீத பாகவதர்களும் பஜனைப் பாடகர்களும், சின்னக் குழந்தைகள் சொல்லும் ஸ்லோகங்களிலும் கேட்கிறோம்; பாடுகிறோம். ஆயினும் இவைகள் எல்லாம் வரலாறு அல்ல, வெறும் புனைக்கதைகள் என்ற விஷ விதையை வெள்ளைக்காரர்கள் பரப்பிவிட்டனர். யாதவ குல வீரர்கள் இருவரும் பல மல்லர்களை வென்றனர்; கொன்றனர்.

வாலி-சுக்ரீவன்
கண்ணனுக்கு முன் வாழ்ந்த ராமபிரான் காலத்தில் குரங்குப் படைகளும் கூட “த்வந்த்வ யுத்தம்: (ஒருவனுக்கு ஒருவன்) செய்ததை அறிவோம். வாலி- சுக்ரீவன் சண்டைகளை அறிவோம். அவைகளையும் வரலாறு அல்ல, கட்டுக்கதை என்று பரப்பிவிட்டனர். ஆனால் ஏழாம் நூற்றாண்டில் வெளியான கோ கருநந்தடக்கன் கல்வெட்டு கூட, கலியுகத்தை வியப்புறும் விதத்தில் நாட்கணக்கில் சொல்கிறது அதாவது தமிழனுக்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருந்த நம்பிக்கையை, பஞ்சாங்கங்களை வெளிநாட்டு :அறிஞர்கள்” பேச்சை கேட்டு ஒதுக்கிவிட்டோம்!!!

kushti2
Kazakastan Rock paintings before 1000 BCE.

வேதத்தில் மற்போர்

ரிக் வேதத்திலும், அதர்வண வேதத்திலும் முஷ்டி ஹன், முஷ்டி ஹத்ய (RV 5-58-4, 6-26-2 and AV5-22-4) என்ற சொற்கள் ஒருவருக்கு ஒருவர் கைகலப்புகள் பற்றிப் பேசும். ஆனால் இவை மல்யுத்தப் போட்டி என்ற பொருளில் வராமல் மல்யுத்தப் போர் என்ற முறையில் கையாளப்படுகின்றன.

மஹாபாரத மல்யுத்தங்கள்
மஹாபாரதத்தில் பீமனுக்கும் கீசகனுக்கும் நடந்த மற்போர் மிகத் தெளிவான சித்திரத்தைத் தருகிறது. சைரந்திரி என்ற பெயரில் வேலை பார்த்த திரவுபதியை கீசகன் பின்பற்றவே அவனை பீமன் கொன்றான். பீமன் மேலும் பலருடன் போட்ட மல்யுத்தங்களையும் மஹாபாரதம் விரிவாகவே தரும்.

ஆக வேத, ராமாயண, மஹாபாரத, பாகவத புராண, சங்க இலக்கிய மல்யுத்தக் குறிப்புகள் பற்றிப் படிப்போருக்கு — கலியுகம் என்பது இற்றைக்கு 5100 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கியது என்ற நம்பிக்கை இருக்குமானால் —- எகிப்தியர்கள், கிரேக்கர்களுக்கு முன்னால் மல்யுத்தத்தைப் பயின்றவர்கள் நாம்தான் என்பது விளங்கும்!!
???????????????

இந்தியர்கள் இதை மெய்ப்பிக்கும் விதத்தில் மல்யுத்தப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று வருகின்றனர். நாடு முழுதும் எல்லா மொழிகளிலும் ‘’மல்ல, குஸ்தி, பைல்வான்’’ — என்ற சொற்கள் பயிலப்படுகின்றன. பீமன் பெயரில் நாடு முழுதும் மற்போர் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன.

வளர்க மல்யுத்தக் கலை! வாழ்க மல்லர்கள்!!

மண் தின்ற வாயைக் காட்டிய மாயக் கண்ணன்!

12.சம்ஸ்கிருதச் செல்வம் 

12. மண் தின்ற வாயைக் காட்டிய மாயக் கண்ணன்!

ச.நாகராஜன்  

 

பாரத தேசத்தில் கிருஷ்ணனின் லீலைகளைப் பேசாத வீடே கிடையாது. யமுனை, ராதை, கோகுலம் போன்ற வார்த்தைகளை இன்றைய கவிஞர்கள், குறிப்பாகத் திரைப்படப் பாடலாசிரியர்கள் எழுதும் போது அது உடனடி ‘ஹிட்’ ஆகி விடக் காரணம் இந்த வார்த்தைகள் பல்லாயிரக்கணக்கானோரின் உள்ளங்களில் பழைய பாரம்பரியத்தை ஒரு க்ஷணத்தில் கொண்டு வந்து அந்த வார்த்தைகளுக்குத் தனி ஒரு கௌரவம், ஆழம், அர்த்தத்தைத் தருவதால் தான்!

 

 

சந்தேகம் இருந்தால் தமிழ் திரைப்படப் பாடல்களில் கண்ணன் என்று வரும் சொல் உள்ள சில பாடல்களை இசைத்துப் பாருங்கள்!

கண்ணனின் லீலைகளை ஆழ்வார்கள் முதல் பாரதியார் ஈறாக எண்ணற்ற பெரியோர் அழியாத சொற்களில் பதித்து வைத்துள்ளார்கள்.

இந்தவகையில் லீலா சுகர் தனி ஒரு இடத்தைப் பெறுகிறார்.

அவரது காலம் கி.பி, 1220 முதல் 1300 முடிய என்று சரித்திரம் கூறுகிறது.

அவர் எழுதிய கிருஷ்ணகர்ணாம்ருதம் காலத்தால் அழியாத காவியம். இது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த மூன்று பகுதிகள் ஆஸ்வாஸம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

முதல் ஆஸ்வாஸத்தில் 110 ஸ்லோகங்களும், இரண்டாவது ஆஸ்வாஸத்தில் 109 ஸ்லோகங்களும் மூன்றாவது ஆஸ்வாஸத்தில் 109 ஸ்லோகங்களும் உள்ளன. மொத்தத்தில் 328 ஸ்லோகங்களும் கர்ணாம்ருதம் என்ற சொல்லுக்கு ஏற்ப செவிக்கு அமுதமாக அமைந்துள்ளன. மாதிரிக்கு ஒன்றைப் பார்ப்போம்:

க்ருஷ்ணேனாம்ப கதேன ரந்து-மதனா

ம்ருத்பக்ஷிதா ஸ்வேச்சயா

தத்யம் க்ருஷ்ண க ஏவ-மாஹ முஸலீ

மித்யாம்ப பச்யானனம் I

வ்யாதேஹீதி விதாரிதே சிகமுகே

த்ருஷ்ட்வா ஸமஸ்தம் ஜகத்

மாதா யஸ்ய ஜகாம விஸ்மயபதம்

பாயாத் ஸ ந: கேசவ: II

(இரண்டாவது ஆஸ்வாஸம் 64ஆம் ஸ்லோகம்)

 

இதற்கு பிரபல உரையாசிரியர் அண்ணா (ஸ்ரீ ராம கிருஷ்ண மடம், சென்னை) தரும் விரிவுரை அழகான ஒன்று.

 

அம்ப – அம்மா!

ரந்தும் – விளையாடுவதற்கு

கதேன – சென்ற

க்ருஷ்ணேன. – கிருஷ்ணனால்

அதுனா – இப்பொழுது

ம்ருத் – மண்ணானது

ஸ்வேச்சயா – இஷ்டப்படி

பக்ஷிதா – தின்னப்பட்டது

 

கத்யம் க்ருஷ்ண – மண்ணைத் தின்றது உண்மையா, கிருஷ்ணா?

க: ஏவம் ஆஹ – யார் அப்படிச் சொன்னது?

முஸல: – பலராமன்

 

மித்யா அம்ப, பச்ய ஆனனம் – பொய் அம்மா, வாயைப் பார்!

வ்யாதேஹி – வாயைத் திற

இதி – எனவே

விதாரிதே சிசு முகே – குழந்தையின் திறந்த வாயில்

ஸமஸ்தம் ஜகத் – உலகம் அனைத்தையும்

யஸ்ய மாதா – எவனுடைய தாயார்

த்ருஷ்ட்வா – கண்டு

விஸ்மய பதம் – ஆச்சரிய நிலைய

ஜகாம- அடைந்தாளோ

ஸ: கேசவ: -அந்தக் கண்ணன்

ந: – நம்மை

பாயாத் – காப்பாற்றட்டும்

தீராத விளையாட்டுப் பிள்ளையான கண்ணன் நடத்திய லீலைகளை கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் படிக்கக் கொடுத்து வைத்தவர்கள் பாக்யம் செய்தவர்களே!

 

328 அம்ருதத் துளிகளை இந்த ஜன்மத்திலேயே ஒரு முறையேனும் படிப்போம்; மலர்வோம்; மகிழ்வோம்.

contact: swami_48@yahoo.com

*******

 

“கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு”

 

என் பெயர் புலவர் நக்கீரன். “கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற தலைப்பில் பேச வந்திருக்கும் உங்கள் அனைவர்க்கும் முதல் கண் நன்றி கலந்த வணக்கங்கள். சென்ற இரண்டு வாரங்களில் ‘மன்னிக்க வேண்டுகிறேன்”, என்ற தலைப்பிலும் “ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை” என்ற தலைப்பிலும் பேசினீர்கள். கன கச்சிதமாக இருந்தது. அதே போல இன்றும் தலைப்பை ஒட்டி மட்டுமே பேசவேண்டும்.

 

கண்ணபிரான்: என் பெயர் கண்ணன். வடக்கில் கிருஷ்ணன் என்பார்கள். இப்படி ஒரு தலைப்பில் யாராவது பேச அழைக்க மாட்டார்களா என்று காத்திருந்தேன். காரணம் என்னவென்றால் என் கலரை மனதில் வைத்துக் கொண்டு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கன்னா பின்னா என்று எழுதுகிறார்கள். கிருஷ்ணனென்ற பெயரை ஆங்கிலத்தில் சொல்லப்போனால் மிஸ்டர் பிளாக் Mr Black. உண்மையில் நான் சொல்வதுதான் வேதங்களிலும் உபநிஷதங்களிலும் உள்ளது. அவைகளை ஆரியக் கொள்கை என்றும் நான் சொன்னது த்ராவிடன் சொன்னது என்றும் பிதற்றுகிறார்கள். உண்மையில் ஆரியமே திராவிடமோ இல்லை. எல்லா காதல் பாட்டுகளிலும் கண்ணனென்று ஒப்பிட்டு காதலனை அழைப்பார்கள். இதிருந்தே உங்களுக்கு தெரியும் கறுப்புதான் எல்லோருக்கும் பிடிச்ச கலரு என்று.

 

வியாசர்: இடை மறித்துப் பேசுவதற்கு மன்னிக்கவும். யாராவது இந்ததலைப்பில் பட்டிமன்றம் நடத்தமாட்டார்களா என்று நானும் காத்திருந்தேன். என் பெயர் வியாசர். வேதங்களை அழகாகத் தொகுத்து நாலாகப் பிரித்து நான்கு சீடர்கள் மூலம் பரப்பியவன் நான். மஹா பாரத்தை எழுதியவன் நான். என் மகன் புராணங்களை எல்லாம் தொகுத்துச் சொன்னவன். என்னுடைய உண்மையான பெயர் கிருஷ்ண த்வைபாயனன். ஆங்கிலத்தில் சொன்னால் மிஸ்டர் ப்ளாக் ஐலண்டர் Mr Black Islander. நானும் கறுப்பன் (Black) தான். இந்த ஆரிய திராவிட வாதம் எல்லாம் பொய். ஆரியக் கலர் வெள்ளை என்றும் திராவிடக் கலர் கறுப்பு என்றும் மஹா பேத்தல்களால் மனம் நொந்தே போனேன்.

 

தீர்க்கதமஸ்: வியாசர் ஐயா அழகாச் சொன்னாரு. என்பெயர் தீர்க்க தமஸ். ஆங்கிலத்தில் சொன்னால் லாங் டார்க்நெஸ் LongDarkness. நான் ரிக்வேத ரிஷி. நான் ஒரு கறுப்பன். இதை வைத்தே நிறவாத ஆரிய திராவிடக் கொள்கை பொய் என்று சொல்லாமலே விளங்குமே. வேத காலத்தில் இப்படி நிறபேதம் இல்லை என்பது வியாசர் ஐயாவையும் என்னையும் கறுப்பனான ராம பிரானையும் பார்த்தாலேயே தெரியும்.

 

ராம பிரான்: அட, நான் பேச நினைத்தஎல்லாம் நீ பேச வேண்டும் என்று நினைத்தேன். என்னையும் ஒரு கறுப்பன் என்று இனம் காட்டினீர்கள். நன்றி, தீர்க்கதமஸ் ஐயா.

 

என் பெயர் திரவுபதி. அர்ஜுனன் மற்றும் நான்கு பாண்டவர்களின் மனைவி. என் பெயர் கிருஷ்ணா (krishnaaa. நானும் கறுப்புதான். மக்கள் என்னை எந்த அளவுக்கு கொண்டாடினார்கள் தெரியுமா? ( வடமொழியில் கிருஷ்ண என்பது கண்ணன், கிருஷ்ணா என்பது திரவுபதி)

அட நீ ஒன்று. என் பெயர் காளி. கலி, காளி, காலன் என்றாலே கறுப்பு என்றுதான் அர்த்தம். நானும் விஷ்ணுவும் கறுப்புதான். நாங்கள் என்ன ஆரியர்களா, திராவிடர்களா?

 

என் பெயர் காலன். என்னை எமன் என்று சொன்னால் எல்லாருக்கும் எளிதில் புரியும். இந்த வெளி நாட்டு ஆராய்ச்சியாளரும், பி.எச்டி. பைத்தியங்களும் என்னை ஆரிய தெய்வங்களில் ஒன்று என்று எழுதி வைத்துவிட்டார்கள். மஹா உளறல். என்னை அனுதினமும் பிராமணர்கள் மூன்று முறை சந்தியா வந்தனத்தில் வணங்குகிறார்கள். அதில் கூட என்னை நீலாய (Yamaaya Dharmarajaaya……..Neelaaya parameshtine) என்ற மந்திரத்தால்தான் துகிக்கிறார்கள். நீலம் என்றாலும் கறுப்பு என்றாலும் ஒன்றுதான். நீலக் குயில் ,கருங்குயில் என்று சொல்வதிருந்து இது எளிதில் புரியு.ம்.

 

முக்கண்ணன்: ஐயாமார்கள் சொன்னதெல்லாம் ரொம்ப ரொம்ப சரி. வேதத்தைப் படித்தவர்களும் சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றி முதலில் எழுதியவர்களும் நகைப்புக்குரிய ஒரு கொள்கையை வெளியிட்டு என் பெயரை எல்லாம் ரிப்பேர் ஆக்கிவிட்டர்கள். ஆரிய ருத்திரன் சிவப்பு என்றும் திராவிட சிவன் கறுப்பு என்றும் காலப்போக்கில் இது ஒன்றாகக் கலந்துவிட்டது என்றும் நல்ல கதை கட்டிவிட்டு ஏராளமான புத்தகங்களும் எழுதிவிட்டார்கள். உண்மையில் அப்பர் பெருமான் பாடிய பாடலில் சிவனும் ருத்திரனும் ஒன்றே என்று அழகாகப் பாடியிருக்கிறார். எனக்கு ஐந்து நிறம் உண்டென்பதை இன்னொரு பாடலில் சொல்லிவிட்டார். ருத்ரம் என்னும் வேதப் பகுதியில்தான் நமசிவாய என்ற மந்திரமே வருகிறது. தமிழில் சிவன் என்ற சொல்லே ஐந்தாம் நூற்றாண்டில்தான் முதலில் வருகிறது. சங்க இலக்கியத்தில் என் பெயரே சிவனென்று சொல்லப்படவில்லை. சிவன் என்னும் செம்மேனி அம்மான் என்பதே சரி. நிறத்தின் அடிப்படையில் ஆரிய திராவிட பாகுபாடு செய்ததெல்லாம் மஹா அபத்தம் என்பது இப்போதாவது புரிகிறதா?

நீங்கள் கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று சொன்னாலும் சரி, சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு என்று சொன்னாலும் சரி, எனக்கு மகிழ்ச்சியே.

 

அப்பர் பெருமான்:

நீலவுரு வயிரநிறை பச்சை செம்பொன்

நெடும்பளிங்கு என்ற அறிவரிய நிறத்தர்போலும்

கோலமணி கொழித்தெழியும் பொன்னி நன்னீர்

குடந்தை கீழ்கொட்டத்து என் கூத்தனாரே.

 

(இப் பாட்டில் சிவனுக்கு நீலம், வயிரம், பச்சை, பொன், பளிங்கு என ஐந்து நிறங்கள் உள்ளதாக அப்பர் பாடி இருக்கிறார். வேறு பாடல்களில் சிவணை செம்மேனி அம்மான் என்பார்)

வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை

செம்பொன்னே மரகதமே மணியே போற்றி.

 

நக்கீரர் முடிவுரை:

மிக அழகாக இனவாத, நிற வாத ஆரிய-திராவிட வாதத்தை தகர்த்துவிட்டீர்கள்.

மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா

அந்தகர்க்கு எளியேன் அலேன்” – என்று திரு ஞானசம்பந்தர் பாடியிருக்கிறார்.. இது பெரிய ஒரு தலைப்பு. ஆகையால் அடுத்த கூட்டத்தில் “ சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை, அதை சொன்னாலும் கேட்பவருக்கு புரியவில்லை” என்ற தலைப்பில் பேச உங்களை அழைக்கிறேன். மீண்டும் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது திருமுருகாற்றுபடை புகழ் நக்கீரன்.

வாழ்க தமிழ், வளர்க பாரத ஒற்றுமை.

contact: swami_48@yahoo.com

கண்ணன் வழி , தனி வழி !

Raja Ravi Varma picture: Krishna and Sathyaki in Kaurava court

( நாமும் அனுமார் ஆகலாம் என்ற கட்டுரையின் இரண்டாவது பகுதி இது. அனுமார், அவருக்கு வந்த இடையூறுகளை எவ்வாறு களைந்தார் என்பது முதல் பகுதியில் விளக்கப்பட்டது. இதோ கண்ணன் வழி )

சோதனைகள், பிரச்சினைகள், இடையூறுகள் வந்தால் அவைகளைக் கண்ணன் தீர்க்கும் வழி தனி வழி. மகாபாரதக் கதைகளை கேட்டவர்களுக்கு நூற்றுக் கணக்கான உதாரணக் கதைகள் நினைவுக்கு வரும். இது கண்ணன் பற்றிய ஒரு பாகவதக் கதை.

கண்ணனும் சாத்யகியும் இணை பிரியா நண்பர்கள். இருவரும் யாதவ குல திலகங்கள். ஹஸ்தினாபுரத்துக்கு தூது சென்றபோதும், யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்துக்குச் சென்றபோதும் கண்ணனுடன் சென்றவன் சாத்யகி. மாபாரதப் போரில் 18 நாட்களும் போரிட்டவன். பாண்டவர்களின் ஏழு படைப் பிரிவுகளில் ஒரு படைக்கு தளபதி.

ஒரு நாள் கண்ணனும் சாத்யகியும் தொலைதூரப் பயணம் சென்றனர். பாதி வழியில் இருட்டிவிட்டது. இருவரும் நடுக் காட்டில் கூடாரம் அடித்துத் தங்கினர். யார் பாதுகாவல் காப்பர்கள் என்று ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். நாலு ஜாமம் கொண்ட இரவில் மாறி மாறி ஒவ்வொரு ஜாமத்தையும் ஒருவர் காப்பது என்று உடன்பாடு ஆயிற்று.

முதல் ஜாமத்தில் சாத்யகி காவல் காத்தார். அப்போது ஒரு பூதம் அவனைத் தாக்க வந்தது. சாத்யகி மாவீரன். கோபமும் வீரமும் கொந்தளிக்க பூதத்தைத் தாக்கினான். இவன் தாக்கத் தாக்க பூதம் மேலும் பலம் அடைந்தது, உருவத்தில் பெரிதாகிக் கொண்டே வந்தது. இதற்குள் முதல் ஜாமம் முடியவே, கண்ணன் காவல் காக்க வெளியே வந்தான்.

ஒன்றுமே நடக்காதது போல பாவனை செய்துகொண்டு சாத்யகி தூங்கப் போய்விட்டான். அதே பூதம் கண்ணனுடன் மோதியது. கண்ணன் கோபத்தையும் வீரத்தையும் காட்டாமல் அன்பே, ஆருயிரே, என் செல்லமே என்று பூதத்தைத் தட்டிக் கொடுத்தான். கண்ணன் அன்போடு தட்டத் தட்ட பூதம் சுருங்கிக் கொண்டே போயிற்று. இதற்குள் மூன்றாம் ஜாமம். உடனே சாத்யகி மீண்டும் காவல் காக்க வந்தான். கண்ணனை ஏற இறங்கப் பார்த்தான். அடி வாங்கிய சுவடே இல்லை. வாரிய தலை கூட கண்ணனுக்குக் கலையவில்லை. விஷமக் கார கண்ணன் முதல் ஜாமத்தில் நடந்தது என்ன என்று ஊகித்தறிந்தான்.

கண்ணன் தூங்கபோன உடனே பூதம் வந்தது, மீண்டும் சண்டை, அடி தடி, குத்து, வெட்டுதான். சாத்யகிக்கு செமை அடி. அவன் தாக்கத் தாக்க பூதம் பெரிதாகியது. சாத்யகிக்கு மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. கண்ணனை உதவிக்கு அழைத்தால் அவமானம்.. நல்ல வேளையாக அந்த ஜாமம் முடிவுக்கு வரவே கண்ணன் காவல் காக்க வந்தான். எல்லாம் பழைய கதைதான். பூதத்தைப் புகழ்ந்து புகழ்ந்து தட்டிக் கொடுத்தான். கண்ணன் அன்போடு தட்டத் தட்ட பூதம் சுருங்கிக் கொண்டே போயிற்று அவன் அதைப் பிடித்து வேட்டியில் ஒரு ஓரத்தில் கட்டிக் கொண்டு முடிச்சுப் போட்டுவைத்தான். உள்ளே போய், “சாத்யகி விடிந்துவிட்டது. நாம் பயணத்தைத் துவங்கவேண்டும்” என்று கூறினான்.

சாத்யகிக்கு ஒரே ஆச்சர்யம். இது என்ன? அந்த பூதம் என்னிடம் மட்டும்தான் வாலாட்டியதா? கண்ணனிடம் வரவே இல்லையா? என்று நினைத்துக் கொண்டு மெதுவாக கண்ணனிடம் பேச்சுக் கொடுத்தான். “கண்ணா, இரவில் ஏதேனும் நடந்ததா? காவல் காப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா?” என்றான் மெதுவாக.

கண்ணனுக்குதான் சுற்றிவளைத்துப் பேசத் தெரியாதே! “ஓ, நீ பூதம் பற்றிக் கேட்கிறாயா? இதோ பார் இதுதான் என்கூட இரவில் சண்டைக்கு வந்தது என்று வேட்டியின் முடிச்சை அவிழ்த்து பூதத்தைக் காட்டினான். சாத்யகியுடன் சண்டை போட்ட அதே பூதம்! சாத்யகிக்கு ஆச்சர்யம் எல்லை கடந்துபோனது. அவன் கேள்வி கேட்பதற்கு முன்னர் கண்ணனே பதில் கூறிவிட்டான்.

“இதோ பார் சாத்யகி, ஒரு பிரச்சினை அல்லது கோபம் வரும்போது அதைப் பெரிதாக்குவது நாம்தான். அதையே நினைத்து நினைத்து ,அதனுடன் மோத மோத அது பெரிதாகிவிடும். அதே கோபத்தையோ பிரச்சினையையோ ஆற அமர சிந்தித்து ஆத்திரப் படாமல் சிந்தித்தால் பிரச்சினை சிறிதாகிவிடுமென்று சொல்லிக் கொண்டே கண்ணன் அந்த குட்டி பூதத்தைக் காட்டுக்குள் தூக்கி எறிந்தான். அது உருண்டு ஓடி விட்டது.

ஆங்கிலத்தில் பூதத்தை உண்டாக்கி சண்டை போடுவது என்ற சொற்றொடரே (Creating a Phantom and fighting with it) இருக்கிறது. ஆக பிரச்சினையோ சோதனையோ வந்தால் அமைதியாகத் தட்டிக் கொடுங்கள். அது உங்களுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓடிப்போய்விடும்.

*************************