பறவைகள் பலவிதம் ; ஒவ்வொன்றும் ஒருவிதம் –  அதர்வண வேதப்புலவன் பாட்டு (Post No.10,636)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,636

Date uploaded in London – –    6 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை 15

பாடல் 47 பொருள்

மக்கள் செல்வதற்காக நீ எத்தனை வழிகளைப் படைத்தாய் ; தேர்கள் செல்லும் வழிகளையும் , நல்லவர்களும் பொல்லாதவர்களும் செல்லும் வழிகளையும் திருடர்கள் இல்லாதபடி செய்வாயாகுக. அந்த வழிகள் எங்களுக்கு வெற்றி தருவதாகுக

இந்தப் பாட்டில் அந்தக் கால போக்குவரத்து வசதிகள் பற்றி நமக்குத் தெரிகிறது. ரதங்களும் வண்டிகளும் டும் தெருக்கள் இருந்தன. அதே நேரத்தில் திருடர் பயமும் இருந்தது. இன்றும் நாம் போக்குவரத்தின்போது திருடர்கள் பற்றி பயப்படத்தான் செய்கிறோம். விமான நிலையத்தில் கூட ஒரு நிமிடம் அசந்தால் நம் பெட்டிகள் உள்ள வண்டியை TROLLEYS ஒரு நொடிப்பொழுதில் அசத்திச் செல்லும் திருடர்களும் எல்லா நகரங்களிலும் பிக் பாக்கெட்டு PICK POCKETS களும்  இருக்கத்தான் செய்கின்றனர். அது மட்டுமல்ல; பாஸ்போர்ட்டுகளைத் PASSPORTS திருடி அடையாள அட்டையை மாற்றி உபயோகிக்கும் கும்பலையும் காண்கிறோம்.

மொழியியல் விஷயத்தில் ரத/ தேர் இரண்டும் ஒரே மூலமுள்ள சொற்கள். ரத என்பதை மாற்றிப் (MIRROR IMAGE OF RATH IS THER IN TAMIL)  போட்டால் தேர்.

ஜனா/ மக்கள் , பந்தி/ வழி போன்றவை இன்றும் பயன்படுகின்றன.

யே தே பந்தானோ பஹவோ ஜநாயனா ரதஸ்ய வத்ர் மாநஸ் ச யாதவே

யைஹி சஞ்சரன் த்யுபயே பத்ரபாபாஸ்தம் பந்தானம்

ஜயேமானமித்ர மதஸ்கரம் யச்சிவம்  தேன நோ ம்ருட – 47

xxx

பாடல் 48 பொருள் 

பூமியில் முட்டாள்களும் அறிவாளிகளும் உளர்.  எல்லோரும் இற க்கத்தான் செய்கின்றனர் . ஆண் காட்டுப் பன்றிகள் உலவும் இடத்தில்பெண் பன்றிகளும் திரிகின்றன

அண்மைக்காலத்தில் ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடலிலும் கூட ‘நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே’ என்று இறைவனைப் போற்றுகின்றார். . அதற்கு முன்னர் ‘கல்லார்க்கும் கற்றவர்க்கும் களி ப்பருளும் களிப்பே’  என்று இறைவனைத் துதிக்கிறார்… இரண்டாவதாக வரும் ஆண் , பெண்  காட்டுப்பன்றிகள் பற்றி எந்த உரைகாரரும் விளக்கவில்லை.

மல்வம் பிப்ரதீ குரு ப்ருத் பத்ர பாபஸ்ய நிதனம் திதிக்ஷுஹு

வராஹேன  ப்ருதிவீ  ஸம்விதானா ஸூகராய வி ஜிஹீத ம்ருகாய –48

XXXX

பாடல் 49 பொருள்

உன் காடுகளில் சிங்கம், புலி, மனிதனைப் புசிக்கும் வன விலங்குகள் உருமித் திரிகின்றன; .கழுதைப் புலிகளும், ஓநாய்களும் நரியும் , கரடியும் அவற்றின் தீய வழிகளில்  திரிகின்றன. ராக்ஷஸர்களும்  இருக்கிறார்கள்  அவைகளை எங்களிடம் வராமல் தொலைவில் விரட்டி விடு .

நகரங்களையும் , விவசாய நிலங்களையுயம் சித்தரித்த புலவன் வன விலங்குகளையுயம்  வருணிக்கத் தவறவில்லை. அவைகளை அழிக்கக் கூடாதென்று  தூரத்தில் விரட்டி விடும்படி வேண்டுகிறான்.. கொல்லும்படி சொல்லவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்தப் பாடலில் ஆரண்யம்/காடு , சிம்மம்= சிங்கம், வ்யாக்ர=வேங்கை என்பன பலரும் அறிந்த சொற்களே.

யே த அரண்யாஹா பசவோ ம்ருகா வனே ஹிதாஹா ஸிம்ஹா  வ்யாக்ராஹா புருஷாதஸ் சரந்தி

உலம் வ்ருகம் ப்ருதிவி துச்சுனாமித ருக் க்ஷீ காம் ரக்ஷ்ஓ  அப பாதயாஸ்மத்  — 49

XXX

APSARAS PAINTING IN SITHANNAVASAL

பொருள் 50

பூமியே, கந்தர்வர்களையும், அப்சரஸ்களையும், அராயர்களையும்  கிமீதின்களையும் , பிசாசுகளையும். ராக்ஷஸர்களையும்  துரத்திவிடு

இந்தப் பாடலில் வரும் கிமிதீன் , அராயர் என்ற கொடியோர் பற்றி வேதத்தில் எங்கும் விளக்கம் இல்லை. தீய சக்திகள் என்பதுமட்டும் தெரிகிறது. கந்தர்வர், அப்சரஸ் ஆகியோர் மேலுலத்தில் இருந்து வந்து மக்களை மயக்குவர் என்ற அச்சம் உளது; விசுவாமித்திரர்- மேனகா , புரூரவஸ்- ஊர்வசி கதைகளில் அப்சரஸ் மோகம் பற்றி விளக்கப்படுகிறது. பல கந்தர்வர்கள் சாபத்தினால் இங்கு அருவருக்கத் தக்க விதத்தில் வாழ்ந்த கதைகளும் புராணங்களில் உள்ளன.

யே கந்தர்வா அப்சரஸோ யே சாராயாஹா கிமீதினஹ

பிசாசாந்த் ஸர்வா ரக்ஷ்ஆம்சி தாநஸ்மத் பூமே யாவய -50

XXXX

பாடல் 51 பொருள்

பறவைகள் சிறகடித்துப் பறக்கும் இந்த பூமி, அன்னங்களும் கழுகுகளும் , பல வண்ணப் பறவைகளும் பறக்கின்ற பூமி, வேகமாக வீசி மரங்களை வளைத்து தூசிப் படலத்தை எழுப்பும் காற்று , அவற்றிடையே அலைக்கழிக்கப்படும்  மேகங்கள் பளிச்சிடுகின்றன………..

(அடுத்த பாடலில் அந்த பூமி மங்கலம் தரட்டும் என்று முடிகிறது.)

இது அருமையான இயற்கை வருணனை. சென்ற பாடலில் அடர்ந்த காடு, இந்தப் பாடலில் இனிய பறவைகள். அத்தோடு அவ்வப்போது வீசும் சூறாவளிக காற்று என்று புலவர் வருணிக்கிறார்.. இது “ஆற்று வெள்ளம் நாளை வரத்தேற்றுதே குறி, மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ வீசுதே” போன்ற பள்ளுப் பாடல்களையும் குற்றாலக் குறவஞ்சிப் பாடல்களையும் நினைவு படுத்தும். நல்ல இயற்கை வருணனை.

யாம் த்வி பாதஹ பக்ஷிணஹ  ஸம் பதந்தி ஹம்ஸாஹா சுபர்ணாஹா சகுனா வயாம்ஸி

யஸ்யாம் வாத மாதரிஸ்வேயதே ரஜாம்ஸி  க்ருண்வம்ஸ்ச்யாவயம்ஸ்ச வ்ருக்ஷ்ஆன்

வாதஸ்ய  ப்ரவாமுபவாமனு வாத்யர் சிஹி –51

ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி – மலை

யாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்று அடிக்குதே – கேணி

நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே

சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்று அடைக்குதே – மழை

தேடி ஒருகோடி வானம் பாடி யாடுதே

போற்றுதிரு மால்அழகர்க்கு ஏற்றமாம் பண்ணைச் – சேரிப்

புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே

(முக்கூடற் .பள்ளு . 30)

XXX

தொடரும்

TAGS- பூமி சூக்த கட்டுரை 15, பறவைகள் பலவிதம், கிமிதீன் , அராயர், கந்தர்வர், அப்சரஸ்

சிந்து சமவெளியில் கந்தர்வர்கள்!!

பிராணியின் கழுத்துக்குக் கீழே உள்ளது சோமரச வடிகட்டி

Research Paper No.1807; Date: 17th April 2015

Written by London swaminathan

Uploaded from London at 19-47

I have already published the English Version of this article.

கட்டுரைச் சுருக்கம்:

1.சிந்து சமவெளிக்கும் கந்தர்வர்களுக்கும் தொடர்பு உண்டு

.2.அங்கே அவர்கள் மற்ற இனத்துடன் வாழ்ந்தாலும் முக்கியப் பங்கு வகித்தனர்.

3.அவர்கள் சோமக் கொடி பயிர் செய்வதில் வல்லவர்கள். மலைகளில் வசித்ததால் அதை இந்து யாக யக்ஞாதிகளுக்கு சப்ளை செய்தனர். சிந்து வெளியில் சோமரச வடிகட்டி காட்டும் முத்திரைகள் கந்தர்வர்களுடையவை.

4.லவன், குசன், துர்யோதனன் நாகர்கள், இந்திரன் ஆகியோருடன் அவர்கள் சண்டை போட்டது பற்றி இதிஹாச புராணங்கள் கூறுவதால் சிந்து வெளியில் பலதரப்பட்ட மக்கள்– இன்றைய இந்து மதம் போலவே– கூடி வாழ்ந்தனர்.

5.அவர்கள் காதல் திருமணம் ஆடம்பர/செண்ட் போட்ட உடை, நாட்டியம், சங்கீதம் ஆகியவற்றில் விருப்பம் உடையவர்கள். சங்கீதத்துக்கு மறு பெயர் கந்தர்வ சாஸ்திரம்

6.இவர்களுக்கு தாவரம் பற்றிய அறிவு, கட்டிடக் கலை அறிவு மிகுதி. இந்த விஷயங்கள் எல்லாம் இந்துமத நூல்களில் உள்ளவை. வேதத்தில் எந்த இடங்களில் இவர்கள் பற்றி வருகின்றன என்பதை எனது ஆங்கிலக் கட்டுரையில் காணவும்.

கந்தர்வர்கள் பற்றி ராமாயணம் மஹாபாரதம், புராணங்கள், வேதங்கள் ஆகியவற்றில் சொல்லிய விஷயங்களை இன்னும் யாரும் முழுக்க ஆராயவில்லை. சிந்து சமவெளிக்கும் கந்தர்வர்களுக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு. இது பற்றி நான் எழுதிய நீண்ட ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் இங்கே தருகிறேன்.

soma filter

சிந்து சமவெளி சோமரச வடிகட்டி

1.கந்தர்வ மணம் என்பது காதல் கல்யாணம். இது மனு ஸ்ம்ருதி எனும் சட்டப் புத்தகம் கூறும், இந்துக்களின் எட்டு வகைத் திருமணங்களில் ஒன்று. மனு ஸ்ம்ருதி கூறியதை தொல்காப்பியரும் அப்படியே கூறுகிறார். இதன் விவரங்களை “இந்துக்களின் எட்டு வகைத் திருமணங்கள்” என்ற எனது கட்டுரையில் கொடுத்திருக்கிறேன்.

2.வேதங்களில் சோம ரசத்துக்குப் பாதுகாவலர்கள் கந்தர்வர்கள் என்றும் அவர்கள் வானத்தில் (உயரமான மலைகளில்) வசிப்பவர்கள் என்றும் அவர்கள் சோம ரச உற்பத்திக்குப் பெயர் எடுத்தவர்கள் என்றும் பல துதிகள் வருகின்றன.

3.சிந்து சமவெளி முத்திரைகளில் பிராணிகளுக்குக் கீழே ஒரு மர்ம சின்னம் இருக்கிறது. இதுவரை அது என்ன என்பதற்கு உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை. அது போலவே ஒற்றைக் கொம்பு மிருகத்துக்கும் விளக்கம் கிடைக்கவில்லை. சிலர் இது குதிரை என்பர். அது போலவே அந்த மர்ம வடிவம் சோம ரசத்தை வடிகட்டும் பாத்திரம் என்பர். இந்த குறிப்பிட்ட வகை முத்திரைகள் எல்லாம் கந்தர்வர்களுடையவை என்று நாம் கொண்டால் அந்த மர்ம பாத்திரம் சோம ரச வடிகட்டியாக இருக்கலாம். ஏனைய முத்திரைகளில் இவை இல்லாததற்குக் காரணம் அவை கந்தர்வர் இல்லாத வேறு குழுவினருடையவை என்று கொள்ளலாம். சிந்து நாகரீகத்தில் ஆரிய திராவிட இனவெறியைப் புகுத்தி அந்த ஆராய்ச்சியைக் குட்டிச் சுவராக்கிய மார்ட்டிமர் வீலர் போன்றவர்களை மறந்து விட்டு, அது பல இன குழுக்கள் நாகரீகம் என்று கொண்டால் எளிதில் அந்த எழுத்துக்களைப் படிக்கலாம்.

4.கந்தர்வர்கள் என்போர் — மனிதர், நாகர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லோருடனும் வசித்ததை வேத துதிகள் உறுதி செய்கின்றன. அவர்கள் நாகர்களுடனும் சண்டை போட்டனர். இறுதியில் புருகுத்சர் என்பவர் விஷ்ணு அமசத்துடன் தோன்றியதாகவும் நாக குல பெண் நர்மதா புருகுத்சனுக்கு கந்தர்வர் ஒளிந்து கொண்டிருக்கும் பகுதியைக் காட்டி அவர்களை அழித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.

5.கந்தர்வர்கள் 27 பேர் என்று யஜுர் வேதமும் 6333 பேர் என்று அதர்வ வேதமும் கூறும். அந்தந்த இடத்தில் இந்த எண்களை வைக்கையில் சரியான பொருள் கொள்ள முடியும். ரோகிணி நட்சத்துடன் கந்த்ர்வர்களை தொடர்புபடுத்துவர். தமிழர்களும் வடக்கே இருந்தவர்களும் பழங்காலத்தில் ரோகிணியில் கல்யாணம் செய்துகொண்டதை அகநானூற்றில் காணலாம்.

6.வானவில், கானல் நீர் ஆகியவற்றுடன் கந்தர்வர்களைத் தொடர்புபடுத்தும் துதிகளும் உள.

தாய்லாந்து மியூசிய கின்னரர் சிலை

7.கந்தர்வர்களுக்கு தாவரங்கள் பற்றி நன்கு தெரியும் என்றும் விஸ்வவசு ஒரு முறை சோமக் கொடியைத் திருடியதாகவும் பின்னர் அது மீட்கப்பட்டது என்றும் அதர்வ வேதம் கூறும்

8.ஒரு இந்துப் பெண் கல்யாணம் முடிப்பதற்கு முன், அவள் அக்னி, சோம, கந்தர்வருக்கு சொந்தமாக இருந்தாள் என்றும் கூறப்படுகிறது

.9.கந்தர்வருடைய தோற்றம் பற்றியும் வேத மந்திரங்கள் வருணிக்கின்றன.

10.வராஹமிகிரர் எழுதிய ப்ருஹத் சம்ஹிதையில் கந்தர்வர்கள், ஆப்கனிஸ்தான-பாகிஸ்தானம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார். இது சிந்து சமவெளிப்பகுதிக்குள் வந்து விடுகிறது. அவர் சிந்து நதியின் இரு கரைகளில் உள்ள புஸ்கலவதியையும், தக்ஷசீலத்தையும் குறிப்பிடுகிறார்.

11.கந்தர்வரின் நகரங்களை மிகவும் அழகான நகரங்கள் என்று புராணங்கள் வருணிக்கின்றன இந்து சிந்துவெளி நகரங்களைப் பற்றியதாக இருக்கலாம்.

12.கந்தர்வர் பெயர்களில் “சித்ர” என்ற பெயர் மிகவும் அடிபடுகிறது. இந்த மூன்று எழுத்துக்களை சிந்துவெளி முத்திரைகளில் கண்டுபிடித்துவிட்டால அதைப் படிப்பது எளிதாக இருக்கும்.

13.சங்கத் தமிழ் இலக்கியத்தில் கங்கை, இமயம் பற்றி பல குறிப்புகள் உண்டு. ஆனால் சிந்து நதி அல்லது அந்தப் பிரதேசம் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆகவே “தமிழர்-சிந்துவெளி தொடர்பை” ஒதுக்கி வைத்துவிட்டு ஆராய்வது நலம் பயக்கும்.

14.கந்தர்வர்களை சுகந்த மணம் வீசும் ஆடைகளை அணிபவர்களாகவும் வேதங்கள் பாடுகின்றன.

15.சரஸ்வதி நதிதீரத்தில் 12 ஆண்டு வறட்சி ஏற்பட்டபோது பிராமணர்கள் எல்லோரும் வெளியேறிவிட்டனர் என்றும் 12 ஆண்டுகளில் அவர்கள் வேதங்களைக்க்கூட மறந்து விட்டனர் என்றும் மஹாபாரதம் கூறும். அதில் ததீசி முனிவரின் மகன் மட்டும்  அங்கேயே தங்கியதால் அவர் பெயர் சரஸ்வத என்றும் அவர் திரும்பிவந்த பிராமணர்களுக்கு வேதம் கற்பித்ததாகவும் கூறும். வெளியேறிய சாரஸ்வத பிராமணர்கள் இப்போது இந்தியாவில மேற்குக் கடற்கரையோர மாநிலங்களில் வசிக்கின்றனர். சிந்துவெளி-சரஸ்வதி தீர நாகரீகம் வறட்சி முதலிய இயற்கைக் காரணங்களால் அழிந்ததற்கு மஹாபாரதத்தில் தடயம் உள்ளது.

நான் முன்னரே ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதை மீண்டும் நினைவு படுத்துகிறேன். சிந்துவெளியில் இன்றைய இந்தியாவைப் போலவே பல்வேறு தரப்பினர் ஒரே நேரத்தில் இருந்திருக்கலாம். ராமனின் மகன்கள் லவனும் குசனும் கந்தர்வர்களிடம் இருந்து சிந்துவெளி நகரங்களைக் கைப்பற்றியதை நான் ராமாயண ஆதாரங்களோடு எழுதினேன். இதை மகாபாரதமும் உறுதி செய்கிறது.

சந்தனுவுக்கும் சத்யவதிக்கும் சித்ராங்கதன் என்று ஒரு மகன் இருந்ததாகவும் அவன் அகந்தையால் அழிந்தான் என்றும் சரஸ்வதி நதிதீரத்தில் கந்தர்வர்களுக்கும் அவனுக்கும் நடந்த யுத்தத்தில் அவனுடைய பெயர் உடைய ஒருவனே அவனைக் கொன்றான் என்றும் மகாபாரத ஆதி பர்வம் கூறும் (1-101). ஆக சிந்துவெளியை கந்தர்வர்கள் ஆட்சிபுரிந்ததை இரு இதிஹாசங்களும் உறுதி செய்கின்றன. மகா பாரதம் ஜெயத்ரதன் என்ற மன்னனையும் சிந்து தேச அரசன் என்றே குறிப்பிடுகிறது.

celestials.jpg (400×300)

மாமல்லபுரத்தில் கந்தர்வர்கள்

சித்ரரதன் யார்?

மஹாபாரதத்தில் சித்ரரதன் பற்றி இரண்டு விஷயங்கள் வருகின்றன. இவன் கந்தர்வ இனத் தலைவன். இவன் தலைமையில் இருந்த படைகள் கௌரவர் படையைத் தாக்கவே கர்ணன் போன்ற பெருந் தலைவர்கள் உயிருக்குப் பயந்து ஓடி விட்டனர். துரியோதனனை கந்தர்வர்கள் கைது செய்தனர். அர்ஜுனன் போய் சமாதானம் பேசி மீட்டு வந்தான். ஏனெனில் சித்ரரதன் அர்ஜுனனின் நண்பன்.

கந்தர்வர்கள், ஒரு குறிப்பிட்டவகை போர்ப் பயிற்சியில் வல்லவர்கள். இசைக் கலையிலும் மன்னர்கள். அவர்களுடைய மனைவியரான அப்சரஸ் என்னும் அழகிகள் நாட்டியக் கலையில் வல்லவர்கள் ஆகவே இந்தியாவில் இசை-நடனக் கலைக்குப் பெயர் கந்தர்வ வேதம். இது ஆய கலைகள் 64-இல் ஒன்று. சிந்து சமவெளியில் கிடைத்த நாட்டியப் பெண்ணின் சிலை, கந்தர்வர் தொடர்பை உறுதி செய்கிறது.

இப்போது ஒரு சந்தேகம் எழும். தேவ லோக கந்தர்வர்களுக்கும் பூலோக கந்தர்வர்களுக்கும் என்ன தொடர்பு? இதற்கு விடை என்னவென்றால் கந்தர்வர் என்னும் சொல்லும் கின்னரர் என்ற சொல்லும் பூவுலகில் வேறு பொருள் உடைத்து. இந்தியாவில் உள்ள எல்லா ஜாதிகளும், தாங்கள் கடவுள் அல்லது தேவர்களிடம் தோன்றியதாகக் கூறும். அதாவது தேவலோகம் வேறு, அவர்களுடன் தங்களை அடையாளம் காண விழையும் பூலோக வாசிகள் வேறு. இதனைப் புரிந்து கொண்டு இரு மட்டங்களில் – இரு வேறு தளங்களில் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெளிதல் வேண்டும். தமிழ் மன்னர்கள் கூட சூரியகுலம், சந்திர குலம் என்று சொல்லி தங்களை தேவலோகத்துடன் தொடர்பு படுத்துகின்றனர்.

சிந்து சமவெளி பற்றிய என்னுடைய முந்தைய 30 கட்டுரைகள்: Read my other 30 posts on Indus:

சிந்து சமவெளி பாடகர்கள்: ஹாஹா, ஹூஹூ!!  28-10-2014

சிந்து சமவெளி: பிராமணர் தொடர்பு, 10 மே 2014

சிந்து சமவெளியில் பேய் முத்திரை

சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண்  Aug.23, 2012

கொடிகள்: சிந்து சமவெளி- எகிப்து இடையே அதிசய ஒற்றுமை

‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13

தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012

சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை(15/10/12)

‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
சிந்து சமவெளியில் அரசமரம்

சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! march 29, 2014

1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14

Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu (posted 21/1/12)
Human Sacrifice in Indus Valley and Egypt (posted on 31/10/12)
Ghosts in Indus Seals and Indian Literature

Flags: Indus Valley- Egypt Similarity

Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian?

Indra on Elephant Vahana in Indus Valley

Indus Script Deciphered

Human sacrifice in Indus Valley and Egypt 0ct.31, 2012

Indus Valley Cities in Ramayana Dec.18, 2012

Open Sesame’: Password to Heaven Post No 756 dated 23rd December 2013

Change ‘’Indus’’ valley civilization to ‘’Ganges’’ valley civilization! Ulta! 29-3-2014

Indus Valley Case: Lord Indra Acquitted Post No 764 dated 28th Dec. 2013

‘Sex Worship’ in Indus Valley
Flags: Indus Valley – Egypt Similarity (15/1012)

The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty
Vishnu in Indus Valley Civilization (posted on 19-10-11)
Serpent Queen: Indus Valley to Sabarimalai 18 June 2012

Fall of Brahmin Kingdoms in Pakistan and Afghanistan 23-3-14

சிந்து சமவெளி பாடகர்கள்: ஹாஹா, ஹூஹூ!!

two_thai_bronze_kinnara_
Kinnaras in Thailand

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1375; தேதி அக்டோபர் 28, 2014.

உலகின் முதல் அகராதி / நிகண்டின் பெயர் அமரகோசம். இது சம்ஸ்கிருதத்தில் உள்ளது. இதை அமரசிம்மன் என்பவர் எழுதினார். இது விக்ரமாத்தித்தன் -(கி.மு.முதல் நூற்றாண்டு)– காலத்தில் எழுதப்பட்டதாக செவிவழி வந்த செய்திகள் கூறின. ஆனால் கட்டாயம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன் இது இருந்ததற்கான சான்றுகள் உள. சுமார் 2000 ஆண்டுப் பழமையுடையது என்று கொண்டால் தவறில்லை. உலகின் முதல் நிருக்தம் ( கி.மு 800 சொற் பிறப்பியல் நூல்), உலகின் முதல் இலக்கண நூல் ( கி.மு 700 பாணீனீயம்), உலகின் முதல் காம நூல் (காம சூத்ரம்), உலகம் வியக்கும் டெசிமல் சிஸ்டம் ( தசாம்ச முறையின் மிகப்பெரிய எண்கள்; கி.மு.1000 வேத கால பிராமணங்களில் உள ) – ஆகிய அனைத்தையும் உண்டாக்கியோருக்கு ‘அகராதி’ என்பது ஒரு எளிய பணியே.

சிறு குழந்தைகள் சம்ஸ்கிருத பள்ளிக்குப் போனவுடன் இலக்கண வாய்ப்பாட்டையும், நாம லிங்கானுசாசனம் எனப்படும் அமரகோசத்தையும் மனப்பாடம் செய்ய வைத்துவிடுவர். வாழ்நாள் முழுதும் இதை மறக்க முடியாது. நானே பள்ளிக்கூட வகுப்பு முடிந்தவுடன் மதுரை மேலச்சித்திரை வீதி ஆடிட்டர் வீட்டு நடையில், தரையில் உட்கார்ந்து இப்படிக் கற்றவன். உலகமே வியக்கும் அற்புதமான வகையில் சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. நிற்க. சொல்ல வந்த விஷயம் வேறு.
kashmir Kinnara_600x450
Kinnars in Avantipur, Kashmir

அமரகோஷத்தில் ஒவ்வொரு கடவுளருக்கும் சொல்லுக்கும் உள்ள பல பெயர்கள் இருக்கின்றன. இதற்கு வியாக்கியானம் செய்த உரைகார்கள் அற்புதமான விஷயங்களை நமக்கு அளிப்பர். அவைகளை ஒருவன் கற்றால் அறிவு ஒளிரும். லண்டனில் ஒரு சம்ஸ்கிருத ஆசிரியரை வீட்டிற்கு அழைத்து கற்றுக்கொண்ட சில விஷயங்களை ஏற்கனவே ஆங்கிலத்தில் கொடுத்தேன். இன்று அமரகோசம் குறிப்பிடும் கந்தர்வர்கள் “ஹாஹா ஹூஹூ” பற்றி பார்ப்போம்.

“கந்தர்வானாம் (அஹம்) சித்ரரத:”
— என்று பகவத் கீதையில் (10-26) கண்ண பிரான் கூறுகிறார்.

மஹாபாரதம் மூலம் சித்ரரதனை நமக்குத் தெரியும். ஆனால் ‘’ஹாஹா’’, ‘’ஹூஹூ’’ பற்றி எங்குமே தகவல் இல்லை. கந்தர்வர் பற்றி வரும் விஷயங்களை வைத்து நாம் ஊகிக்கத்தான் வேண்டும்.

celestials
Gandharvas in Mamallapuram

கந்தர்வர் பற்றிய ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது; ஏனெனில்
1.ராமாயணமும் மஹாபாரதமும் கந்தர்வர்களை சிந்து சமவெளியுடன் தொடர்பு படுத்துகின்றன. ஆகவே சிந்து சமவெளி நாகரீக ஆட்சியாளர் பற்றி அறிய உதவும்.

2.வெள்ளைக்காரர்கள் வந்து ஆரியர், திராவிடர், முண்டா என்று இந்தியர்களை 3 கூறு போடுவதற்கு முன் நம் வடமொழி, தமிழ் மொழி இலக்கியங்கள் இந்தியர்களை 18 கூறுகளாகப் போட்டன. ஆனால் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும் எழுதி வைத்தார்கள். அந்த 18 வகையினரில் கந்தர்வர் என்பவர் பாடகர்கள் — கின்னரர்கள் என்போர் வாத்யம் வாசிப்போர். துருக்கி வரை பல இசைக் கருவிகளுக்கு கின்னர, கின்னரி, தும்புரு, தம்புரா, டாம்போரின் என்று தான் பெயர்!!! ஆகவே வேத காலம் முதல் வழங்கும் கந்தர்வ என்னும் சொல் இசை ஆராய்ச்சி செய்வோருக்கு மிகவும் முக்கியம்.

chiron
Chirone from Greek mythology

சித்ரரதன் யார்?

மஹாபாரதத்தில் சித்ரரதன் பற்றி இரண்டு விஷயங்கள் வருகின்றன. இவன் கந்தர்வ இனத் தலைவன். இவன் தலைமையில் இருந்த படைகள் கௌரவர் படையைத் தாக்கவே கர்ணன் போன்ற பெருந் தலைவர்கள் உயிருக்குப் பயந்து ஓடி விட்டனர். துரியோதனனை கந்தர்வர்கள் கைது செய்தனர். அர்ஜுனன் போய் சமாதானம் பேசி மீட்டு வந்தான். ஏனெனில் சித்ரரதன் அர்ஜுனனின் நண்பன். அது என்ன கதை?

பஞ்சாப் (பாஞ்சாலம்) நோக்கி பாண்டவர்கள் சென்றபோது அவர்களை சித்ரரதன் தாக்கினான். அவனை அர்ஜுனன் கைது செய்து சிறைப் பிடித்தபோது, அவனது மனைவி கும்பிநாசி கெஞ்சவே, அவனை விடுதலை செய்தான். அவன் நன்றி பாராட்டும் முகத்தான் அர்ஜுனனுக்கு கந்தர்வ வகைப் போர்க்கலையை கற்றுக் கொடுத்தான். இருவரும் நண்பராயினர்.

கந்தர்வர்கள், ஒரு குறிப்பிட்டவகை போர்ப் பயிற்சியில் வல்லவர்கள். இசைக் கலையிலும் மன்னர்கள். அவர்களுடைய மனைவியரான அப்சரஸ் என்ன்னும் அழகிகள் நாட்டியக் கலையில் வல்லவர்கள் ஆகவே இந்தியாவில் இசை-நடனக் கலைக்குப் பெயர் கந்தர்வ வேதம். இது ஆய கலைகள் 64-இல் ஒன்று.

kinnari
Kinnari instrument

அர்ஜுனன், மாதலி ஓட்டி வந்த –ஸ்பேஸ் ஷட்டிலில்—விண்வெளிக் கப்பலில் — சென்று ஐந்து ஆண்டுக் காலத்துக்கு வேறு கிரகத்தில் வசித்தான். அப்போது சித்ர சேனன் என்னும் ஒரு கந்தர்வன் அவனுக்கு இசையையும் நடனத்தையும் பயிற்றுவித்தான். தேவலோக ஊர்வசி அர்ஜுனனைக் காதலித்து அங்கேயே இருக்கும்படி கெஞ்சினாள். அர்ஜுனன் மறுக்கவே ‘’நீ அலியாகப் போ’’ என்று சபித்தாள். சித்ர சேனன் இடைமறித்து சமாதான உடன்படிக்கை செய்தான். அதன்படி குறிப்பிட்ட காலம் மட்டுமே அவன் அலியாக முடிவு செய்யப்பட்டது .பிற்காலத்தில் அஞ்ஞாதவாச காலத்தில் அவன் அலியாகி– உத்தராவுக்கு நடனம் கற்பித்து கரந்துறை வாழ்வு நடத்த இது பயன்பட்டது.

இந்தக் கதையிலும் ராமாயணக் கதையிலும் பஞ்சாப், சிந்து மாகாணம் மட்டுமே கந்தர்வர்களுடன் தொடர்புபடுத்தப் படுகிறது. இப்போது ஒரு சந்தேகம் எழும். தேவ லோக கந்தர்வர்களுக்கும் பூலோக கந்தர்வர்க ளுக்கும் என்ன தொடர்பு? இதற்கு விடை என்னவென்றால் கந்தர்வர் என்னும் சொல்லும் கின்னரர் என்ற சொல்லும் பூவுலகில் வேறு பொருள் உடைத்து. இந்தியாவில் உள்ள எல்லா ஜாதிகளும், தாங்கள் கடவுள் அல்லது தேவர்களிடம் தோன்றியதாகக் கூறும். அதாவது தேவலோகம் வேறு, அவர்களுடன் தங்களை அடையாளம் காண விழையும் பூலோக வாசிகள் வேறு. இதனைப் புரிந்து கொண்டு இரு மட்டங்களில் – இரு வேறு தளங்களில் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெளிதல் வேண்டும்.

kinnara_1
Tumburu from Hindu Mythology

ராமாயணத்தில் பரதன் படையெடுத்து வென்ற இடம் சிந்து சமவெளி நகரங்கள் ஆகும்— இதை வருணிக்கும் வால்மீகி முனிவர் ‘’நன்கு கட்டப்பட்ட கட்டிடங்களும் நகரங்களும்’’ அங்கே இருப்பதாக வருணிக்கிறார். லாகூர் என்னும் பாகிஸ்தானிய நகரமும் லவன் – இராமனின் மகனால்- உருவாக்கப்பட்டது. ஆக கந்தர்வர் பற்றிப் பேசும் வடமொழி இலக்கியங்கள் மூன்று விஷயங்களைத் தெளிவு படுத்துகின்றன:–

1.பஞ்சாப், சிந்து மாகாணங்களில் கந்தர்வர் –கின்னரர் என்னும் ஒரு இனம் வசித்தது. (அங்குதான் மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்கள் உள்ளன).

2.அவர்கள் கட்டிடக்கலை மன்னர்கள். இசை நாட்டியத்துறை நிபுணர்கள். சிந்துவெளியில் கிடைத்த நடன மாதுவின் வெண்கலச் சிலை இதற்குச் சான்று. அங்குள்ள செங்கல் வீடுகளும் மிகப்பெரிய குளமும், குதிர்களும் இதற்குச் சான்று.

3.அவர்கள் குறிப்பிட்ட போர்க்கலையில் வல்லவர்கள். பரதன், துரியோதனன், அர்ஜுனன் ஆகியோரை அவர்கள் தாக்கியதே இதற்குச் சான்று. கர்ணனையும் உயிருக்குப் பயந்து ஓட வைத்தவர்கள்!!

Cantharus_Stathatou_Louvre_CA1987

Mycenaean Cantharus (Gandharva) from Louvre Museum, France

வேத காலச் சான்றுகள்:–
ஊர்வசி என்னும் பெண், ரிக் வேத காலத்திலேயே பிரபலமானவள். தேவலோகப் பெண்கள், கந்தர்வர்களின் மனைவியராவர். இது தவிர, போதாயன ஸ்ரௌத சூத்திரத்தில் (20-25) பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காந்தர்வாய பாலேய அக்னிவேஷ்ய என்னும் பெயர் இருக்கிறது. ஆக கந்தர்வர், அப்சரஸ் ஆகியோர் ரிக்வேத காலத்தில் இருந்ததும், அவர்கள் பஞ்சாப் சிந்து பிரதேசத்தில் வசித்ததும், அவர்கள் வடமொழிப் பெயர்கள் வைத்திருந்ததையும் வேத கால இலக்கியங்கள் உறுதி செய்கின்றன.

ashmoloean
Box with Kinnara figures in Asmolean Museum, Oxford, UK

இசை மன்னர்கள்
கின்னரர் என்ற பக்க வாத்தியக்காரர்களின் பெயரில் பல்வேறு வகை இசைக் கருவிகள் துருக்கி வரை இருக்கின்றன. கின்னரர் தலைவன் தும்புரு என்பவர், நாரதருக்கே இசை கற்பித்தவர். அவருடைய பெயரில் தம்பூரா, டாம்போரின் முதலிய கருவிகளும் பல நாடுகளில் காணப்படும். ஆக இசை ஆய்வுக்கும் ‘’கின்னரர் ஆய்வு’’ உதவும். தும்புரு போலவே குதிரை முகமும் மனித உடலும் கொண்ட ‘சிரோன்’ என்ற கிரேக்க தேவனும் குறிப்பிடத்தக்கவர். கிரேக்க நாகரீகத்துக்கு முன்னர் அங்கே நிலவிய மைசீனிய நாகரீகத்தில் ‘காந்தரோஸ்’ (கந்தர்வோஸ்??) என்பவர் இப்படிக் குதிரை உடலுடன் காட்டப்பட்டுள்ளார். இந்து மதக் கதைகள் இப்படி வெளிநாடுகளை அடையும்போது உருச் சிதைவதும், காலப்போக்கில் பழைய உண்மைக் கதைகள் மறைந்து புதுக்கதைகள் எட்டுக்கட்டபடுவதும் ஆய்வளர்களுக்கு புதுமை அன்று.

என்ன காரணத்தினாலோ கின்னரர்கள குதிரை உடல் அல்லது பறவை உடலுடன் சித்தரிக்கப் பட்டுள்ளனர். முகம் மட்டும் மனித முகம்!! இந்திய கின்னரர்- கந்தர்வர் உருவங்கள் தென்கிழக்காசியா முழுதும் பரவிக் கிடக்கின்றன. தாய்லாந்து நாட்டில் இது மிகவும் அதிகம். உலகிலேயே மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தோநேசியாவின் போரோபுதூர், கம்போடியாவின் அங்கோர்வட், ப்ராம்பனான், தாய்லாந்தின் பாங்காக் ஆகிய இடங்களில் இந்தியாவை விட அழகிய கந்தர்வர்- கின்னரர் உருவங்கள் இந்தியப் பண்பாட்டைப் பறை சாற்றி நிற்கின்றன.

kinnara in thailand musuem
Kinnara from Thailand Museum

தேவலோக கந்தர்வர் என்போரும் உண்மையே. ரமண மகரிஷிக்கு முந்திய, திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் பல அற்புதங்களைச் செய்து காட்டியவர். அவர் ஒரு இசைப் பிரியர். திடீரென வானத்தை உற்று நோக்கி இசைய ரசித்து மகிழ்வார். பக்தர்கள் கேட்டபோது வானுலக கந்தர்வர் பாடிக்கொண்டே போனதாகவும் அவர்கள் இசையைக் கேட்டு அதில் லயித்ததாகவும் கூறுவார். ஆக விண்ணுலக கந்தர்வர் என்றுமுளர். மண்ணுலக சிந்து சமவெளி கந்தர்வர் மண்ணில் கலந்துவிட்டனர் என்று கொள்வதில் தவறில்லை.

உலகம் முழுதும்— மைசீனிய நாகரீகம் வரை — கிடைக்கும் எல்லாத் தகவல்களையும், கின்னர, தும்புரு இசைகருவிகள் முதலியவற்றையும் இராமாயண, மஹாபாரத, சிந்து சமவெளி தகல்களுடன் ஒப்பிட்டால் மேலும் பல உண்மைகள் வெளியாகும். நான் முன்னர் எழுதியதுபோலவே சிந்து சமவெளி என்பது பல இன மக்கள்—பல வகை வழிபாட்டுடையோர்- ஒருங்கே வசித்த பூமி என்பதையும் நினைவிற் கொண்டால் பல புதிர்கள் விடுபட்டுப்போகும்!

Prambanan-Kinnara-bas-relief
Kinnaras from Prambanan, Cambodia

-சுபம்-

Gandharvas-Elephants

contact swami_48@yahoo.com