சிந்து சமவெளியின் “கொம்பன்” யார்? (Post No.9484)

PASUPATI IN IRELAND- CERUNNOS

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9484

Date uploaded in London – –12  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிந்து சமவெளி நாகரீகம் என்றும் சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் என்றும் அழைக்கப்படும் நாகரீகம் தொடர்பான அகழ்வாய்வுகளில் அவர்கள் பின்பற்றிய சமயம் (மதம்) தொடர்பான பல முத்திரைகள் கிடைத்துள்ளன. இவைகள் அனைத்தும் இந்து மதம் தொடர்பான முத்திரைகளே என்று பெரும்பாலான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தானிலுள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களில் கிடைத்த முத்திரைகளில் மிகவும் முக்கியமானது “பசுபதி” முத்திரையாகும்.

“பசுபதி” முத்திரையில் ஒரு கடவுள் ஆசனத்தில் அமர்ந்துள்ளார். அவரைச் சுற்றி யானை, புலி, காண்டா மிருகம், எருமை ஆகிய நிற்கின்றன.

அவரது தலையில் கொம்பு போன்ற மகுடம் உள்ளது. இந்து மத யஜூர்வேதத்தில் சிவபெருமானை பிராணிகளின் தலைவன் (பசு பதி) என்று ரிஷிகள் வருணிக்கின்றனர்.  ஆகையால் இந்த முத்திரையிலுள்ள கடவுள் சிவன் அல்லது சிவபெருமானின் மூல வடிவம் (Proto Siva) என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து வெளியிட்டனர்.

பழைய நாகரீகங்களில் கடவுளோ அல்லது மக்கள் தலைவர்களோ இப்படி ‘கொம்புள்ள கிரீடங்கள்’ அணிவதைக் காண்கிறோம்.  காளை மாடு அல்லது எருமை மாட்டின் கொம்பு தாங்கிய தலைக் கவசங்களையோ மகுடங்களையோ அணிவது வழக்கம்.  பல பழங்குடி இனத்தலைவர்கள் இதை இன்றும் பின்பற்றுகின்றனர்.  தமிழ் இலக்கியமும் சம்ஸ்க்ருத இலக்கியமும் மன்னர்களோ மக்களில் சிறந்தோரையோ ஏறு (BULL காளை) என்று போற்றுகின்றனர்.

மன்னர் ஏறு (பதிற் 38/10) குட்டுவர் ஏறு (பதிற் 90-26) புலவர் ஏறு (பத்துப்பாட்டு 1-2, 6-8) பரதவர் போர் ஏறு (பத்துப்பாட்டு 6-44) புயல் ஏறு (ஆற்றல் மிக்க மழை) உறுமின் ஏறு (ஆற்றல் மிக்க இடி) என்று சங்கப் புலவர்கள் பாடுகின்றனர். முதலில் மனிதனுக்கு மட்டும் பயன்படுத்திய “ஏறு” பின்னர் மிகப்பெரிய மழை, இடி போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது.  இன்றும் கூட ஆங்கிலத்தில் ‘GIANT’ ‘MONSTER’ போன்ற சொற்களை இப்படி பலவாறாகப் பயன்படுத்துகிறோம். சம்ஸ்க்ருதத்தில் “இந்திரனை” BULL காளை என்று வேதங்கள் போற்றுகின்றன. இதை இன்றும் கூட மன்னர்களுக்கும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் கூட பயன்படுத்துகிறோம். ராஜேந்திரன் மகேந்திரன் கஜேந்திரன் (யானைகளில் தலைமை யானை) மச்சேந்திரன் மிருகேந்திரன் (சிங்கம்) புவனேந்திரன் என்று பல ‘இந்திரன்’களைப் பார்க்கிறோம்.

சீக்கியர்கள் (பஞ்ஜாப்) தங்களின் பெயருக்குப் பின்னால் “சிங்” (சிங்கம்) என்று சேர்த்துக் கொண்டனர். ரோமானிய மன்னர்களும் “சீசர்” (கேசரி – சிசர்) என்றும் அழைத்துக் கொண்டனர்.

ஆகவே தலைமைப் பதவியிலுள்ளவர்கள் ஆதிகாலத்தில் அதற்கு அடையாளமாக காளையின் கொம்பை அணிவது வழக்கம்.

“கொம்பு“ என்றால் யானையின் தந்தம். “கொம்பன்“ என்றால் தந்தமுள்ள ‘பெரிய தலைமை யானை’ என்ற பொருளும் தமிழில் வழங்குகிறது.  இதனால்தானோ என்னவோ தமிழில் “நீ என்ன பெரிய கொம்பனா?“ என்ற சொற்றொடர் வழங்குகிறது போலும். யாரேனும் சிறப்பான கௌரவத்தையோ மரியாதையையோ எதிர்பார்த்து நின்றால் அவரது கர்வத்தைக் குறிக்க இந்த மரபுச் சொற்றொடர் பயன்படுத்தப் படுகிறது.

புகழ் பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞன் காளிதாசன் கூட “கொம்பு“ “கொம்பு சீவல்“ பற்றிக் கூறுகிறான்.  “கொம்பு“ என்றால் கர்வம் என்றும் சாதாரண கொம்பு என்றும் பொருள் உண்டு.  ரகு வம்ச மகாகாவியத்தில் காண்டா மிருகங்களை தசரதன் வேட்டையாடுவதை காளிதாசன் பாடுகிறான் (9-62). கருணையின் பொருட்டு காண்டா மிருகங்களைக் கொல்லாது அதன் கொம்புகளை மட்டும் சீவினானாம் தசரதன். அதாவது மன்னர்களைக் கொல்லாமல் அவர்களுடைய கர்வத்தை மட்டும் வெட்டி வீழ்த்தினான் என்பது காளிதாசன் கவிதையின் உட்பொருள்.

காளிதாசன் ரகுவம்சத்தில் “வீர்ய ச்ருங்கன்” (11-72) என்று கூறுகிறான். மகாபாரதத்திலும் ச்ருங்கவான் (9-52) ச்ருங்கி (1-40) என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காளிதாசனுக்கு முன்னர் வாழ்ந்த வால்மீகியும் தனது ராமாயணத்தில் ‘அரசர்களுள் ஏறு’ ‘மனிதர்களில் ஏறு’ சொற்களைப் (BULL Among Kings, BULL Among Men) பயன்படுத்துகிறார். சிந்து சமவெளி முத்திரைகளில் அடிக்கடி காணப்படும் காளை/ BULL முத்திரை இப்படிப்பட்ட “ஏறு” (தலைவன், சிறந்தவன்) என்பதை குறிப்பதாக இருக்கலாம். மிருகங்களின் தலைவனான சிங்கத்தைக் குறிக்கவும் இதை பயன்படுத்தலாம். மனிதர்களில் சிறந்த ராஜாக்களைக் குறிக்கவும் (ராஜேந்திரன்) இதைப் பயன்படுத்தலாம். ஆனால் இரண்டையும் வேறுபடுத்த ஏதேனும் ஒரு குறியீடு (DIACRITICAL MARK) அவசியம்.

INDUS-SARASVATI VALLEY PAUPATI- PROTO SIVA

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கொம்பன்

மகாபாரதத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் விஷ்ணு சஹஸ்ரநாமம் மிகப்பழமையான சஹஸ்ரநாமம் (சஹஸ்ரநாமம் = ஆயிரம் பெயர்கள்) ஆகும். இதைப் பின்பற்றியே பிற்காலத்தில் எல்லாக் கடவுள் சஹஸ்ரநாமங்கள் தோன்றின என்றால் தவறில்லை. இதில் வேதகாலக் கடவுளரும் சிவன், முருகன், கணபதி ஆகிய கடவுளரைக் குறிக்கும் சொற்களும் இருப்பதே இதை வேறுபடுத்திக் காட்டும்.

இதில் கொம்பு பற்றியும் பல நாமங்கள் உள்ளன. விஷ்ணுவைப் போற்றும் ஆயிரம் நாமங்களில் மஹா ச்ருங்காய (536), ச்ருங்கினே (797) —-நைக ச்ருங்காய (763, ) சதுர் தர்ம்ஷ்ட்ராய (நான்கு பற்கள்/கொம்பு உடையவர்) என்றெல்லாம் வருகின்றன. “பெரிய கொம்பன்”, ஒரு கொம்பு மட்டும் இல்லாமல் பல கொம்புகள் உடையவன் என்றும் இதன் பொருள். விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு முதல், முதலில் உரை எழுதிய ஆதிசங்கரர் தனது உரையில் சத்வாரி ச்ருங்காஹா – (ரிக் வேதம் 4-58-3), (தைத்ரிய ஆரண்யகம் 1-10-17) என்று  குறிப்பிடுவதை எடுத்துக் காட்டுகிறார். இதைப் பார்க்கையில் “பசுபதி” முத்திரை சிவனா விஷ்ணுவா அல்லது இவர்களுக்கு முந்திய மூலக் கடவுளா என்ற வினா எழுகிறது.

சிந்து சமவெளி முத்திரையிலுள்ள பசுபதி போலவே ஐரிஷ் (அயர்லாந்து) கடவுளின் உருவமும் உள்ளது. அக்கடவுளின் பெயரும் கொம்பன்”தான் (CERNUNNOS)  பெயர் மருவி இன்று CERUNNO என்று அழைக்கப்படுகிறார். இது ஹாலந்தில் ஒரு புதை குழியில் (GUNDESTRUP CAULDRON) கண்டெடுக்கப்பட்ட உலோகத்தாலான பெரிய அண்டாவில் பொறிக்கப்பட்டு உள்ளது. சுமார் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது சிந்து சமவெளி “பசுபதி” முத்திரை கி.மு. 1800–க்கும் முந்தியது.

சிந்து சமவெளியின் பசுபதி முத்திரையில் உள்ள நான்கு மிருகங்களும் நான்கு வர்ணத்தையோ நான்கு இன மக்களையோ குறிக்கலாம். யானை பிராமணர்களையும், புலி க்ஷத்ரியர்களையும், காண்டாமிருகம் வைஸ்யர்களையும், எருமை சூத்திரர்களையும் குறித்திருக்கலாம். பசுபதி ஆசனத்தின் கிழேயுள்ள ஆடு ஐந்தாம் வருணத்தையோ அல்லது வெளிநாட்டினரையோ குறித்திருக்கலாம். பைபிலில் (DANIEL 7) நான்கு மிருகங்கள் கனவில் வந்ததை விளக்குகையில் நான்கு நாட்டு அல்லது நான்கு இன மக்கள் என்றே வியாக்கியானம் செய்கின்றனர்.  கீழே ஆடு இருப்பதால் இந்த பசுபதியை அக்கினி தேவனாகவும்  கருதலாம்.

பசுபதி முத்திரையில் நான்கு மிருகங்கள் உள்ளன யானை, எருது, காண்டாமிருகம், புலி உள்ளன. இவை இந்திரன், யமன், வருணன், வாயு/ மித்திரன் ஆகியவற்றை குறிப்பனவா?

PAUPATI IN BAHRAIN/DILMUN

இந்திரன் – இந்திரன் வாகனம்

யமன் – எருமை வாகனம்

வருணன்- கொம்பு (சுறா அல்லது காண்டா மிருகம் )

புலி –  சாஸ்தா அல்லது தேவி

கீழேயுள்ள மான் அல்லது ஆடு- அக்கினி தேவன்

வேதத்தில் குறிப்பிடப்படும்   ஏக ச்ருங்கியும்  சிந்து வெளி ஒற்றைக் கொம்பு மிருக முத்திரையும் ஒன்றா என்றும் ஆராய்வது அவசியம். தமிழில் ‘கோண் மா’ என்ற சொல் எருமையை யோ அல்லது காண் டா மிருகத்தையோ குறிக்கும்..

மிருகங்களால் சூழப்பட்ட கடவுள் உருவம் முதலில் சிந்து/சரஸ்வதி நதிக்கரையில் கிடைத்தது. பின்னர் ஹாலந்தில் அதைப் போன்ற ஐரிஷ் கடவுள் சிலை கிடைத்தது. நான் செய்த ஆராய்சசியில் அதே போல மத்திய கிழக்கு — பஹ் ரைன்  தீவிலும் கிடைத்துள்ளது. ஐரிஷ்  என்பது ஆரிய மொழிகளின் நஃபிரிவு என்பர் . மத் தியக் கிளக்கோ இந்திய கலாச்சாரத்திலிருந்து மிகவும் வேறுபட்டது மூன்று வெவ்வேறு இடங்களில் இதுபோல கிடைத்திருப்பதா ல்  சிந்துவெளி மக்கள் யார் என்று கேள்வி எ ழுகிறது ; எழுத்தைப் படிக்கும்போதுதான் உண்மை புலப்படும் .

–சுபம்–

TAGS -PASUPATI SEAL, INDUS VALLEY, BAHRAIN, DILMUN, IRISH, CERUNNOS, பஹ்ரைன்,  சிந்துவெளி,  பசுபதி , அயர்லாந்து

உலகம் வியக்கும் கண்டுபிடிப்பு – கிரேக்க நாட்டில் சிந்து சமவெளிக் குரங்கு (Post.7366)

 Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 21 December 2019

Time in London – 8-53 am

Post No. 7366

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

சிந்துவெளி எழுத்தைப் படிக்க காஸைட்ஸ் நாகரீகம் உதவலாம் (Post No.6073)

written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 14 FEBRUARY 2019


GMT Time uploaded in London – 9-25 am


Post No. 6073

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தமிழர்களின் குமரிக் கண்டம் அழிந்தது எப்படி? (Post No.4121)

 

 

Written by London Swaminathan
Date: 2 August 2017
Time uploaded in London- 15-54
Post No. 4121
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

pictures by london swaminathan.

 

 

சிந்து சமவெளி நாகரீக அழிவுக்கும்  , குமரிக்  கண்ட மறைவுக்கும்   கிரேக்க எரிமலை வெடிப்புக்கும் தொடர்பு?

 

கிரேக்க நாட்டுத் தீவில் இன்பச் சுற்றுலா – பகுதி 2 (முதல் பகுதி நேற்று வெளியானது)

 

 

 

சான்டோரினி (Santorini Islands) தீவு அழகான பிரமிப்பூட்டும் காட்சிக்கு மட்டும் பெயர்போன இடம் என்று எண்ணிவிடக்கூடாது. அந்த மண்ணில் நின்றபோது எனக்கு ஏற்பட்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஏன் என்றால் நான் சிந்து/ சரஸ்வதி நதிச் சமவெளி நாகரீகம் பற்றி எழுதிய 20, 25 கட்டுரைகளுக்கும், ஆரிய- திராவிட ‘புருடா’, ‘கப்ஸா’, ‘பொய் பித்தலாட்டம்’ பற்றி எழுதிய 20, 30 கட்டுரைகளுக்கும் எனது தேரா (Thera/ Santorini சாண்டோரினி) தீவு விஜயத்துக்கும் தொடர்பு உண்டு.

வரலாற்றையே மாற்றிய ஒரு மிகப் பெரிய எரிமலை வெடிப்பு கி.மு 1630ல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பாகும். அதற்கு முன்னரும் பின்னரும் இந்த தேரா/ சாண்டோரினி எரிமலை பல முறை சீறி இருக்கிறது.

 

எரிமலை வெடித்து அதற்குள் ஏற்படும் பள்ளங்களில்  நீர் நிரம்பி ஏற்படும் சமுத்திரப் பகுதிகளை கால்டெரா எனபர். அப்படிப்பட்ட கால்டெரா (Caldera) வில்தான் நான் நின்றேன்.

 

இந்த பிரம்மாண்ட தேரா வெடிப்பு பற்றி பல மர்மங்கள் உள்ளன. தமிழர்களாகிய நாம் குமரிக் கண்டம் மறைந்தது பற்றி எப்படி அங்கலாய்க்கிறோமோ அதே போல கிரேக்க நாட்டு எழுத்தாளர்களும் புலவர்களும் அட்லாண்டீஸ் (Atlantis) என்னும் மர்ம கண்டம் முழுகியது பற்றி நிறைய எழுதி வைத்துள்ளனர். அதை ஏற்காதோரும் இந்த எரிமலை வெடிப்பால் மினோவன் (Minoan Civilization) நாகரீகம் அழிந்ததை ஒப்புக் கொள்வர். இந்த எரிமலை சீற்றத்துக்கும் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சீன ஆட்சிக் குழப்பத்துக்கும், எகிப்திய ஆட்சிக் குழப்பத்துக்கும் (கி.மு.1600) இதுவே காரணம் என்பது வரலாற்றாய்வா ளர்களின் ஊகம். இதை எல்லாம் பார்க்கும் போது நமது குமரிக் கண்டம் மறைந்ததற்கும் சிந்து / சரஸ்வதி நதி தீர நாகரீகம் க்ஷீணம் அடைந்து படிப்படியாக மறைந்ததற்கும் தொடர்பு இருக்கிறது என்பது என் கணிப்பு. ஆகையால்தான் நான் இந்த மண்ணில் நின்றபோது ஒரு பிரமிப்பு, ஆனந்தக் களிப்பு!

2000 தீவுகள் உடைய நாடு!!

 

கிரேக்க நாட்டுக்குச் சொந்தமாக 2000க்கும் மேலான தீவுகள் உள்ளன.

கடலிடையே உள்ள சிறிய குன்றுகளையும் கணக்கில் சேர்த்தால் 6000 தீவுகள் என்றும் சொல்லுவர்.

 

இவ்வளவு தீவுகள் இருந்தாலும் (Crete) க்ரீட் எனப்படும் மினோவன் நாகரீக தலைமையிடமும் இந்த சாண்டோரினி தீவும்தான் முக்கியமானவை.

 

சாண்டோரினி தீவின் தலை நகர் Fபிரா. (Fira)–இயா என்னும் கிராமத்தில் (Oia) சூரிய அஸ்தமனத்தைக் காண ஏராளமானோர் வருவர். கழுதையில் சுற்றிப் பார்க்கவும் வசதி உண்டு. எல்லாவற்றுக்கும் கட்டணம்தான். ஏதன்ஸ் நகரை விட உணவும் உறைவிடமும் அதிக செலவு பிடிக்கும் இடங்கள்.

 

இந்த இடம் ஒரு குறிப்பிட்ட வகை ஒயின் (Wine) செய்வதற்கும் பெயர் பெற்ற இடம். ஆகையால் பழங்காலத்தில் எப்படி ஒயின் செய்தனர் என்பதைக் காட்டும் மியூசியமும் (Winery Museum)  உள்ளது.

அக்ரோதிரி (Akrotiri) என்னும் இடத்தில் தொல்பொருட் துறையினர் மினோவன் நாகரீக தடயங்களைக் கண்டு எடுத்துள்ளனர். அங்கு ஒரு காட்சி சாலையும் இருக்கிறது.

கருப்பு நிற மணல் கடற்கரையும் சிவப்பு மணல் கடற்கரையும் ஒரே தீவில் இருப்பது இயற்கை அதிசயமே.

 

நாங்கள் இயா (oia) கிராமத்தில் கடைத் தெருவில் நின்றபோது நம் ஊரில் மார்கழி மாத பஜனை கோஷ்டி வருவது போல ஒரு கோஷ்டி இசை முழக்கத்துடன் சென்றது. தினமும் நடக்கும் கிரேக்க இசை நடன ஷோவுக்கு விளம்பரம் தேடி துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்துச் சென்றனர்.

 

ஒரு பழங்கால மொனாஸ்ட்ரிக்கும் (Monastery) சென்று வந்தோம். கிரேக்க நாட்டில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் வகுப்பினர் (Greek Orthodox) அதிகம். இது பிராடெஸ்டண்ட், கதோலிக்கத்திலிருந்து வேறுபட்டது.

 

சுற்றுலா வரும்படியை நம்பியே மக்கள் வாழ்கின்றனர். கிரேக்க நாடு சலவைக் கல் எனப்படும் மார்பிள் (marble) கற்களை அதிகம் உற்பத்தி செய்கிறது. உலக உற்பத்தியில் ஏழு சதவிகிதம் இவர்களுடையதே. கிரேக்கர்களுக்கு என்று சில விசேஷ உணவு வகைகளும் உண்டு. நாங்கள் கிரீக் சாலட் (Greek salad) முதலிய வெஜிட்டேரியன் வகைகளை மட்டும் சுவைத்தோம்.

 

அடுத்த கட்டுரையில் ஏதென்ஸ் அதிசயங்களை எழுதுகிறேன்.

TAGS:- தேரா மினோவன், சிந்துவெளி, குமரிக்கண்டம்

–சுபம்–

மூளையில் ஆபரேஷன்:புராதன இந்தியர் சாதனை!!

Bhoja 32ft 7 tons

King Bhoja In Bhopal, Madhya Pradesh

Post No 1939; Date: 18  June 2015

Written  by London swaminathan

Uploaded from London at 8-57

 

தேரையர், ஜீவகன் ஆகிய இரண்டு பெரிய வைத்தியர்கள் செய்த சாதனைகளை நம்மில் பலரும் அறிவோம். தேரையர் என்பவர் தலையில் இருக்கும் தேரைகளையும் (தவளை அல்ல; ஒரு வகை நோய்) எடுப்பார் என்றும் ஒரு பாத்திரத்தில் மலஜல விமோசனம் செய்து அதில் ஒரு துளி எண்ணையை விட்டு நோய் கண்டுபிடிக்கும் புதிய வழிமுறைகளை தேரையர் கற்பித்தார் என்றும் நூல்கள் பகரும்.ஜீவகன் என்பான் மஹா பெரிய வைத்தியன் என்றும் அவனுடைய ஆபரேஷன் பீஸ் (கட்டணம்) மிக அதிகம் என்றும் புத்த மத பாலி மொழி நூல்கள் செப்பும்.

ஜீவகன் செய்த கண் ஆபரேஷன், பொற்கைப் பாண்டியனுக்கு செயற்கைக் கை பொருத்தும் ஆபரேஷன், கண்ணப்ப நாயனாரும், மஹா விஷ்ணுவும் சிவபெருமானுக்கு கண் கொடுத்து முதல் முதல் “ஆர்கன் டொனேஷனை”த் துவக்கி வைத்த பெருமை இவைகள் எல்லாம் தனித் தனி கட்டுரையில் முன்னே கூறினேன்.

இன்று சிந்து சமவெளியில் 4300 ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆபரேஷன் (ஆறுவைச் சிகிச்சை) குறித்தும் போஜ மன்னனுக்கு நடந்த ஆபரேஷன் குறித்தும் பார்ப்போம்.

போஜன் என்ற பெயரில் வேத காலம் முதல் பல மன்னர்கள் இருந்தனர். வேத கால போஜன் பற்றி ஐதரேய பிராமணம் விளம்பும். காளிதாசன் கால போஜன் பற்றி சுபாஷித ரத்ன பாண்டாகாரம் செப்பும். நாம் காணப்போகும் போஜன் பற்றி போஜப் பிரபந்தம் என்னும் நூல் விதந்து ஓதும். இவன் 1000 ஆண்டுகளுக்கு பரமார வம்ச மன்னனாக மத்தியப் பிரதேச நகரமான தாரா நகரில் இருந்து ஆட்சி புரிந்தவன். இவனுக்கு தெரீயாத “சப்ஜெக்ட்” உலகில் எதுவுமே இல்லை. இவன் பெயரில் 84 “டெக்னிக்கல்” புத்தகங்கள் உள்ளன. இவனுடைய சம்ஸ்கிருத இலக்கணக் கல்வெட்டு மசூதிக்குள் கண்டு பிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் 1932-ல் மைலாப்பூர் உபந்யாசத்தில் சொன்னதை முன்னரே கொடுத்துவிட்டேன்.

போஜ மன்னனுக்கு பெரிய தலை வலி. நிரந்தர தலை இடி. தாரா நகர வைத்தியர்கள் எவராலும் தீர்க்க முடியவில்லை. அப்பொழுது மன்னனின் இடைவிடாத் துயர் கேட்டு உஜ்ஜைனி நகரிலிருந்து இரண்டு பிராமண சர்ஜன்கள் (அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்) வந்து மன்னன் தலை இடியைப் போக்குவதாகக் கூறினர். ஆனால் கபாலத்தைத் திறந்து செய்யும் மேஜர் ஆபரேஷன் இது என்றும் எச்சரித்தனர்.

ஆபரேஷன் செய்கையில் நோயாளியை மயக்க நிலையில் வைக்க இப்போதெல்லாம் குளோரோபர்ம் என்னும் வாயுவைப் பயன்படுத்துகிறோம். சர்ஜன் அருகிலேயே அனஸ்தெடிஸ்ட் (மயக்க மருந்து வல்லுநர்) நின்று கொண்டு குளோரோபர்ம் லெவலை (அளவை) ஏற்றி இறக்கி ஆளின் மயக்கத்தை அதிகரிக்கவோ தெளிவிக்கவோ செய்வார்.

அந்தக்காலத்தில் மருதுவர்கள் சம்மோகினி (அதிக மயக்கம்) என்னும் மூலிகைச் சாற்றைக் கொடுத்து மயக்கி அறுவைச் சிகிச்சை செய்வர். இதே போல போஜ மஹாராஜாவுக்கும் நல்ல முறையில் அறுவைச் சிகிச்சை செய்தனர். மயக்கம் தெளிவிக்க சஞ்சிவினி என்னும் மூலிகையைப் பயன்படுத்தினர். சம்ஸ்கிருதத்திலுள்ள வால்மீகி ராமாயணத்தில் லெட்சுமணன் மீது இந்திரஜித் “பயலாஜிகல் வார்பேர்” (விஷவாயு பிரயோகித்து) செய்து மயக்கம் போட வைத்ததையும் உடனே அனுமன் சஞ்சீவினி மூலிகை எது என்று தெரியாமல் அது முளைத்த பாறையையே (மலை) தூக்கி வந்ததையும் நீங்கள் அறிவீர்கள். போஜ ராஜன் ஆபரேஷன் 100 சதவிகித வெற்றிபெற உதவிய சம்மோகினி, சஞ்சீவினி என்ன, எது என்பது இன்று நமக்குத் தெரியாது. இது அரிய வகை மூலிகை. இமய மலைப் பகுதியில் மட்டுமே கிடைத்ததால் அனுமன் அங்கே பறந்து சென்றான் என்பதும் நோக்கற்பாலது. யாராவது சில பகுத்தறிவுத் திராவிடங்கள் இது எல்லாம் கட்டுக்கதை என்று சொன்னால், இந்த விஞ்ஞான முறைக் கற்பனை உதிக்கக்கூட ஓரளவு நாகரீகம் தேவை என்பதை உணர்த்துங்கள். அப்போதும் விளங்கிக் கொள்ளாதவர்கள், “விளங்காதவர்களே”!!!

சர்ஜரி, ஆபரேஷன் என்பதேல்லாம் இந்துக்களுக்குப் புதிதல்ல. சுஸ்ருதர், சரகர் எழுதிய நூல்களில் எல்லாம் 400–க்கும் அதிகமான கருவிகளின் பெயர்கள் உள்ளன. என்றைக்கு பாரதீயன் சம்ஸ்கிருதத்தைப் புறகணித்தானோ அன்று முதல் நம்முடைய விஞ்ஞான சாஸ்திரங்கள் எல்லாம் அழிந்து போயின. இதற்கு 700 வருஷ முஸ்லீம், 300 வருஷ வெள்ளைக்காரன் ஆட்சியே காரணம்.

இங்கே நான் வாழும் லண்டனில், லண்டன் பல்கலைக் கழகத்திலும், பிரிட்டிஷ் லைப்ரரியிலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பழம்பெரும் சம்ஸ்கிருத நூல்கள் தூசி படிந்து கிடக்கின்றன. நானும் அவ்வபோது போய் தூசி தட்டிவிட்டு அட்டையை மட்டும் புகைப் படம் எடுத்து வருகிறேன். பல்லாயிரக் காணக்கான நூல்கள் உள்ள சம்ஸ்கிருதம் அழியும் அன்று இந்தியா, இந்துமதம் எல்லாம் அழிந்து போகும். புத்தர் செய்த பெரிய தவறு சம்ஸ்கிருதத்தைப் புறக்கணித்ததே என்று விவேகாநந்தர் சொன்னதையும் இதனால், “தோன்றிய நாட்டி”லேயே புத்த மதம் அழிந்ததையும் நினைவுகூறுதல் பொருத்தம்.

skull brain sugery

The trepanated Harappan male skull H-796/B in the Palaeoanthropology Repository of Anthropological Survey of India, Kolkata in three views: a, the left lateral view showing the trepanated hole; b, the postero-lateral view showing the horizontal linear traumatic fracture on the occipital bone; c, an enlarged view of the trepanated site showing the rim of callous formed due to healing, and d, the trepanated Burzahom female skull showing signs of multiple trepanations. (Image Source: Current Science)

சிந்துவெளியில் மூளைச் சிகிச்சை

ஹரப்பா நகரத்தில் கிடைத்த மண்டை ஓடுகளில் சில கல்கத்தா நகர இந்திய தொல்பொருட்துறைத் துறையின் மானுடவியல் பிரிவில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு மண்டை ஓட்டில் (கபாலத்தில்) மூன்று மில்லிமீட்டர் அகலத்திற்கு ஒரு ஓட்டை இருக்கிறது. இதை ஆராய்ந்த திரு. சாங்க்யாயன் என்பார், அந்தக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட முறையில் இப்படி சர்ஜரி செய்வது வழக்கமாக இருந்தது என்றும் இதுவே பின்னர் ஆயுர்வேத புத்தகங்களில் காணப்படுகிறது என்றும் சொல்கிறார். மேலும் எலும்புகளை ஆராய்ந்தபோது அந்த சிந்து வெளி மனிதன் அதற்குப் பின்னரும் நீண்டகாலம் வாழ்ந்தது தெரிகிறது என்றும் சொல்கிறார். இந்தச் செய்தி 2013–ஆம் ஆண்டில் எல்லாப் பத்திரிக்கைகளிலும் பெரிதாக வந்திருந்தது. ஆக சிந்துவெளி நாகரீகத்தின் தொடர்ச்சியே இந்திய நாகரிகம் என்பதும், வெளிநாட்டிலிருந்து வந்தேறு குடியினர் எவரும் வந்து எதையும் செய்யவில்லை என்பதும் வெள்ளிடை மலையென விளங்குகிறது.

எனது முந்தைய ஆங்கிலக் கட்டுரைகள்:—

Jeevaka’s Eye Operation ( Posted on 25-2-2013)

How did a Pandya king get a golden hand? (Posted on Nov 18,2011)