Written by London Swaminathan
Date: 7 DECEMBER 2017
Time uploaded in London- 22-08
Post No. 4466
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
மாக்ஸ்முல்லர் குத்து மதிப்பாக வேதத்துக்கு நிர்ணயித்த காலம் எல்லாம் தவறு என்பது எல்லோராலும் ஏற்கப்பட்டுவிட்டது. அவரது காலத்திலேயே அவர் சொன்ன கி.மு 1200 என்பதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர் ‘ஜகா’ வாங்கினார். நான் சொன்னதெல்லாம், இதற்கு கீழாக வேதத்தின் காலத்தை யாரும் குறைக்கமுடியாது என்று சொன்னேனே தவிர இதுதான் முடிவு என்பதல்ல; வேதத்தின் காலம் 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இருக்கலாம் என்று சப்பைக்கட்டு கட்டி தப்பித்துக் கொண்டார்.
இப்பொழுது சரஸ்வதி நதிதீர ஆய்வு, விஞ்ஞான முறையில், வேதத்தின் காலத்தை நிர்ணயித்துவிட்டது. அதாவது கி.மு.2000க்கும் முன்னர்தான் இருக்க முடியும்; சிந்துவெளி நாகரீகத்துக்கு முந்தியோ அல்லது சமகாலத்தானதோ இருக்கலாம் என்று காட்டிவிட்டது.
ஆனால் இதற்கு முன்னரே ஹெர்மன் ஜாகோபி, பாலகங்காதர திலகர் ஆகியோர் வானசாஸ்திர முறைப்படி ஆராய்ந்து கி.மு 4000 அல்லது அதற்கு முன் என்று சொன்னார்கள்; பலருக்கும் புரியாத விஷயம் என்பதால் எதிர்ப்பும் இல்லாமல் ஆதரவும் இல்லாமல் அந்த வாதம் ஒரு புறம் ஒதுங்கிவிட்டது.
அண்மைக் காலத்தில் இந்த அணுகுமுறையை மேலும் சிலர் தீவிரமாக ஆராய்ந்து கிரஹணக் குறிப்புகளை மட்டும் வைத்து உலகிலேயே மிகப் பழைய நூலான ரிக் வேதத்துக்குக் காலம் நிர்ணயம் செய்துள்ளனர்.
உமாபாத சென் என்பவர் ரிக்வேத காலம் என்ற புத்தகத்தில் பல சுவையான செய்திகளைத் தருகிறார். ரிக் வேதத்தில் உள்ள சூரிய கிரஹணக் குறிப்புகளை யாரும் உதாசீனம் செய்யமுடியாது; ஏ.லுட்விக் (A.Ludwig) என்பவர் இந்த விஷயத்தை மிகவும் விரிவாக ஆராய்ந்து எழுதினார்.
பத்தாவது மண்டலத்தில் (10-138-4) சூரியன் கிரஹணத்தால் பீடிக்கப்பட்டது பற்றிப் பாடியுள்ளனர். சிலர் இதை சந்திர கிரஹணம் என்று தவறாக மொழி பெயர்த்துவிட்டனர். ஆனால் முழு துதியையும் படித்தால் சூரிய கிரஹணம் என்பது தெளியப்படும்.
லுட்விக் என்பவர் வேதத்தைக் குறை
கூறுவோரைக் கண்டித்துள்ளார். இதே போன்ற குறிப்புகள் பிற நாட்டு இலக்கியங்களில் வரும்போது கேள்வியே கேட்காமல் இருப்பவர்கள் ரிக் வேதம் என்று சொன்னவுடன் மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? என்பது அவரது கேள்வி.
நாலாவது மண்டலத்திலும் (4-28-2) ஒரு கிரஹணக் குறிப்பு வருகிறது. அங்கே இந்திரன், சோமனால் சூரியனை மறை
த்தார் என்று துதி பாடுகின்றனர் சோம என்ற சொல்லுக்கு வேதத்தில் இரண்டு பொருள் உண்டு: 1.நிலவு, 2.சோமரஸம்
இது நிலவைத்தான் குறிப்பிடுகிறது, சோம ரசத்தை அல்ல என்று பேராசிரியர் வில்லிபிராண்ட், வேதகால பழங்கதைகள் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இந்திரன் இந்த கிரஹணத்துக்குக் காரணம் என்று அந்த மந்திரம் சொல்லுவது பலருக்கும் புதிராக இருந்தது. மேலும் ஸ்வர்வானு என்பதை மேகங்களென்று மொழி பெயர்த்தனர் ஆனால் சொல்பிறப்பியல் முறைப்படி ஆராய்ந்தால் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும்சந்திரன் எனப் பொருள்படும். விஷ்ணு புராண காலத்தில் ஸ்வர்பானு என்பதை ராகு என்ற கிரகமாக மாற்றிவிட்டட்னர். புராணங்கள் என்பது வேதக் கருத்துக்களைப் பாமரமக்கள் புரிந்து கொள்வதற்காக எழுதப்பட்ட கதைப் புத்தகமாகும்.
இந்திரன் கிரஹணத்தை உண்டாக்கியதாகவும் அத்ரி நாலாவது மந்திரத்தில் சூரியனைக் கண்டுபிடித்ததாகவும் வேதம் சொல்லும். இதன் பொருள் அவர் நாலு மந்திரம் உச்சரிக்கும் காலத்துக்கு சூரியன் முழுஅளவு மறைந்திருந்தது என்பதாகும்.
இந்துக்களின் சரியான கிரஹணக் கணக்கீட்டு முறைகளை லுட்விக் பாராட்டுகிறார். சூரியனின் ஒளியைத்தான் சந்திரன் பிரதிபலிக்கிறான் என்பதை வேத கால ரிஷிகள் அறிவர். இது மிகவும் அதிசயமான விஷயம் என்கிறார்.
இந்திரனை கேட்டை நட்சத்திரத்துக்கு அதிப தி என்பர். இந்து இந்திரனுக்கும் கேட்டை நசத்திரத்தும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது.
ரிக்வேதத்தின் 10-138-3/4 மந்திரத்தில் சூரியனின் குதிரைகளை இந்திரன் அ விழ்த்துவிட்டான் என்பது சூரியனின் ஒளி குன்றி கிரஹணம் ஏற்பத்தட்டதாகும் என்று லுட்விக் சொல்கிறார்.
ஐந்தாவது மண்டல (5-40) சூர்ய கிரஹணத்தை விரிவாக்கக் காட்டுகிறது என்பார்.
வேத காலத்தில் நடந்த இரண்டு சூரிய கிரஹணங்களில் ஒன்று பூரண சூரிய கிரஹணம். இந்திய அட்ச ரேகையில் நடந்த கிரஹணம் சூரியன், கேட்டை (இந்திரன்) நட்சத்திரத்தின் அருகில் பகல் நேரத்தில் இருந்தபோது நடந்தது. இந்த மாதிரியான நட்சத்திர நிலை எப்போது இருந்தது என்று இந்திய வானாராய்ச்சிக் கூடத்துக்கு உமாபாத சென் எழுதிக் கேட்டபோது பதிலே வரவில்லை. ஆனால் வெளி நாட்டு ஆய்வுக் கூடங்கள், சரியான பதிலை அனுப்பின. அமெரிக்காவிலுள்ள ஸ்மித்சோனியன் வானாராய்ச்சிக் கூடத்தைச் சேர்ந்த டாக்டர் ப்ரையன் மார்ஸ்டென், இப்படிப்பட்டதொரு நிலை கி.மு 2990ல் இருந்தது என்று எழுதினார்.ஆகவே முழு சூரிய கிரஹணத்தை கி.மு.3000 ஆண்டை ஒட்டியது என்றும், மற்ற பர்ஸ்வ கிரஹணம் பிந்தியது என்றும் தெரிகிறது.
சரஸ்வதி நதி தீர ஆராய்ச்சி, வானியல் ஆராய்ச்சி ஆகியன எல்லாம் விஞ்ஞான மு றைப்படி வேத காலத்தை கி.மு.2000க்கு முன்னர் வைக்க உதவுவதால் மாக்ஸ்முல்லர் சொன்ன தேதியை ஒதுக்கித் தள்ளிவிடலாம்.
TAGS:- சூரிய கிரஹணம், வேத காலம், ரிக் வேதம்
-SUBHAM–