வெள்ளையன் ஹாலிடே வியந்த ‘சதி’! (Post No.4998)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 11 MAY 2018

 

Time uploaded in London –  7-37 AM   (British Summer Time)

 

Post No. 4998

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

வெள்ளையன் ஹாலிடே வியந்த சதி!

 

ச.நாகராஜன்

 

ஹிந்துக்களை கேலி செய்வதும் அவர்கள் வரலாறைக் கொச்சைப் படுத்துவதும் ஹிந்து துரோகிகளுக்கு ஒரு வாடிக்கையான பழக்கம்.

 

சமீபத்தில் சித்தூர் ராணி பத்மினியை அலாவுதீன் கில்ஜியுடன் தொடர்பு படுத்து எடுக்கப்பட்ட படம் ஹிந்துக்களின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டது.

 

சஞ்சய் லீலா பன்சாலி எடுத்த பத்மாவதி படம் அக்ரமான வழியில் சரித்திரத்தைச் சிதைத்து மாற்றி எடுக்கப்பட்ட படம்.

மஹா தியாகியான சதி பத்மினியை கொச்சைப் படுத்தியதை எந்த ஒரு ஹிந்துவாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

சதியில் உடன்கட்டை ஏறியவர்களை ஹிந்துக்கள் தெய்வமாக மதித்தனர்.

 

அனைவரும் சதியாக வேண்டும் என்று ஹிந்து மதம் ஒரு நாளும் சொல்லியதில்லை. ஆனால் ஈருடல் ஓருயிராக இருந்தோர் கணவனுடன் உடன்கட்டை ஏற விரும்பினால் அதைத் தடை செய்யவும் இல்லை.

 

இந்த சதி பற்றிய நிஜ வரலாறு கூறும் ஆச்சரியமான விஷயங்களைக் கீழே பார்ப்போம்:

 

சதி என்பது அநாகரிகமான ஒரு பழக்கம் என்று தீர்மானித்த கார்ன்வாலிஸ் அதி 1805ஆம் ஆண்டு தடை செய்தான். அப்படி சதியாக விரும்பினால் மாஜிஸ்ட் ரேட்டின் அனுமதி பெற வேண்டும் என்று அவன் சட்டம் இயற்றினான். ஆனால் 1829இல் வந்த லார்ட் பெண்டிங் அதை இன்னும் கடுமையாக ஆக்கி சதி என்பது தற்கொலை என்று சட்டம் இயற்றினான்.

 

In 1805 Marquis of Cornwallis passed a regulation by which no one could become a Sati without the permission of the Magistrate. The law was made stricter in 1829 by Lord William Bentick who enacted Sati as a suicide and all who encouraged Sati in any way were made guilty of culpable homicide.

 

Halliday’s Testimony, 1829 – Buckland in his “Bengal under the Lieutenant Governors” writes: –

 

In 1829 just before the penalizing of Sati, Sir Fredierick Halliday, the first Lieutenant Governor of Bengal was the District Magistrate of Hoogly, on the bank of Ganges, where Sati, was frequent occurrence. The last case of Sati lawfully celebrated in Bengal is thus narrated by him :- “We tried our best to dissuade her, but all to no purpose ….. Seated close to me she looked up at my face with scorn and said,

 

BRING A LAMP”. THE LAMP WAS LIGHTED AND WITH SCORN AND DEFLANCE IN HER EYES, SHE PUT HER FINGER INTO THE FLAME. THE FINGER SCORCHED, BLISTERED AND BLACKENED AND FINALLY TWISTED UP. SHE REMAINED UNMOVED, NOT A MUSCLE TWITCHED AND NOT A SOUND ESCAPED.

 

 

“Are you satisfied?” she asked.

 

“Quite,quite satisfied,” was the reply. She asked my permission and I assented.

 

Cooly and calmly she mounted the funeral pyre and laid herself down beside a part of her husband’s clothing. The husband had died far away. She was covered with light brushwood and fire was set to the funeral pyre.”

 

The following true incident is given in Tavernier’s “Travels” (published in 1677) :-

 

The Raja of Vellore was killed in a battle with the King of Visapur. Eleven of his wives resolved to become Sati. The General of the Visapur army coming to know of it, imprisoned all of them together. They told the keeper at the time, “Imprisonment is futile, we shall die in three hours.”

 

After three hours all of them lay stretched on the floor dead, and were gone with their husband, without any mark of violence on their bodies.

 

ஆக சதியாக விரும்பினோர் உடல் மனம் ஆன்மாவினால் கணவனுடன் ஒன்று பட்டவர்கள்.

 

கண்டவுடன் காதல்; காமம் முடிந்தவுடன் டைவர்ஸ் என்ற நாகரிகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது பற்றி எதுவும் புரியாது என்பது தான் உண்மை!

 

ஆதாரம் : Truth, weekly Magazine Volume 86 Issue 1 dated 20-4-2018

நன்றி : ட்ரூத் வார இதழ்

*****

பாண்டிய மஹாராணி தீயில் குதித்ததற்கு தொல்காப்பியமே காரணம்? (Post No.3210)

balinese_rite_of_suttee_in_houtman_1597_-1

Written by London Swaminathan

 

Date: 2 October 2016

 

Time uploaded in London: 7-07AM

 

Post No.3210

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

 

sati-3

புறநானூற்றில் ஒரு அழகான பாடல் வருகிறது; இது பாண்டிய மன்னன் இறந்தவுடன் அவனது மனைவி பூதப்பாண்டியன் தேவி, கணவனுடைய சிதைத்தீயில் பாய்ந்து உயிர்விட்ட சம்பவம் பற்றிய பாடலாகும். பார்ப்பனர்கள், அமைச்சர்கள் அனைவரும் தடுத்தும் “போங்கடா, போங்க! போக்கத்த பயல்களே” என்று சொல்லி அவள் தீயில் பாய்ந்தாள்.

புறநானூறு பாடல் 246:–
பல் சான்றீரே! பல் சான்றீரே!
செல்க’ எனச் செல்லாது, ‘ஒழிக’ என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப்பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!


–பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது

பொருள்: ‘’கணவனுடன் நீயும் போ என்று சொல்லாமல் பொல்லாத செயல் புரியும் பெரியோர்களே! கணவன் இல்லாத பெண்கள் வெள்ளரிக்காய் விதை போல, நெய் இல்லாத சோறு, எள்ளுத் துவையல், புளி கூட்டி சமைத்த வேள இலை ஆகியவற்றை உண்ண வேண்டும். பாய் இல்லாமல் வெறும் கல் தரையில் படுக்க வேண்டும். அது போன்ற பெண் என்று என்னை நினைத்து விட்டீர்களா? நான் அப்படிப்பட்டவள் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் மரணப் படுக்கை கஷ்டமாக இருக்கலாம். என் கணவன் இறந்துவிட்டான். அந்த சிதைத் தீயே எனக்கு தாமரைக்குளம் போல குளிர்ச்சிதரும். இதைப் புரிந்துகொள்ளுங்கள்.’’

ஒரு மஹாராணி பாடிய பாடல் இது. கணவனின் சிதைத் தீ, தாமரைக் குளம் போல குளிர்ச்சி பொருந்தியது என்று பாடுகிறாள். அப்பர் பெருமானை மஹேந்திர பல்லவன் சுண்ணாம்புக் காளவாயில் போட்ட போது அவர் ‘’மாசில் வீணையும்’’ பாடல் பாடியது நினைவுக்கு வருகிறது!

 

இதற்குத் தொல்காப்பிய சூத்திரமே காரணம் என்று தோன்றுகிறது. தொல்காப்பியர் என்பவர் த்ருண தூமாக்கினி என்ற பெயர் கொண்ட பார்ப்பான் என்று மதுரை பரத்வாஜ கோத்திரப் பார்ப்பான் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் கூறுவார். தொல்காப்பியர் சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கததை தமிழ் வழக்கமாக காட்டியுள்ளார்.

Sati : wife mounting funeral pyre of husband

 

காதலி இழந்த தபுதார நிலையும்

காதலன் இழந்த தாபத நிலையும்

நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச்

சொல்லிடைஇட்ட பாலை நிலையும்

 தொல்காப்பியம், சூத்திரம் –1025

 

 

பூதப் பாண்டியன் பெருந்தேவி போலவே போல, ஆய் அண்டிரன் மனைவியரும் தீப்பாய்ந்தனர்.

இந்த உடன்கட்டை ஏறும் வழக்கத்தை “சதி” (sati) என்பர்.

((Reference:-சங்கத் தமிழ் நூல்களில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்)–கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்–கட்டுரை எண்:–1108; தேதி 15 ஜூன் 2014.))

 

கர்நாடகத்தில் இப்படி உடன்கட்டை ஏறிய கற்புக்கரசிகளின் கைச் சின்னங்கள் இன்னும் இருக்கின்றன.

sati3

பாண்டியன் நெடுஞ்செழியன், கோவலனைக் கொன்றது தப்பு என்று தெரிந்தவுடன், மாரடைப்பால் – Heart Attack ஹார்ட் அட்டாக்கால் — இறந்தார். உடனே அவன் அருகில் இருந்த அவன் மனைவியும் ஹார்ட் அட்டாக்கால் இறந்தாள் என்பதை சிலப்பதிகாரம் மூலம் அறிவோம்.

 

உலகப் பேரழகி சித்தூர் ராணி பத்மினி மீது எப்படியாவது கை வைக்க வேண்டும் என்று படை எடுத்துவந்த அலாவுதீன் கில்ஜியின் கண்,,,,,,,,ல் மண்ணைத்தூவி விட்டு சித்தூர் ராணி பத்மினி, தனது நூற்றுக் கணக்கான ழியருடன் தீப்பாய்ந்து வரலாறு படைத்தாள் ரஜபுதனப் பெண்கள் வீராங்கனைகள். தன் மானத்துக்கும் கற்புக்கும் மதிப்பு கொடுத்த கற்புக்கரசிகள்!

 

ஆனால் உடன் கட்டை ஏறுவது COMPULSORY கம்பல்ஸரி/ கட்டாயம் அல்ல. தசரதன் இறந்தவுடன் அவன் மனைவியர் நால்வரும் உயிருடன் இருந்ததை வால்மீகி ராமாயணம் மூலம் அறிவோம். அதே போல பாண்,,,,, மஹாராஜன் இறந்தும் குந்தி உயிர் வாழ்ந்ததை மஹா பாரதம் மூலம் அறிவோம்.

 

 

மதத்தைப் பரப்ப வந்தவர்களும், நாடுபிடிக்க வந்தவர்களும் அந்தக் காலத்தில் எழுதிய புத்தகத்தில், —- எல்லா இந்தியப் பெண்களையும் கணவன் சிதைத்தீயில் தள்ளுவது போலப் படம் போட்டு — புத்தகங்களை எழுதினர்! ஆனால் அவர்கள் பிரசாரம் எல்லாம் விழலுக்கு இரை த்த நீர் போல ஆகிவிட்டது.

வேதங்களில் வரும் இந்திரனையும் வருணனையும் தமிழர்கள் தெய்வங்களாகத் தொல்காப்பியர் குறித்ததும், பலராமனின் பனைக்கொடியைப் பற்றி அவர் சூத்திரம் சொல்லுவதும், மனு தர்ம சாத்திரத்திலுள்ள எட்டு வகைத் திருமணத்தை தொல்காப்பியம் விதந்துதுரைப்பதும், கார்த்திகைத் திருவிழாவை அவர் குறிப்பால் உணர்த்துவதும், பாரதம் ஒன்றே என்ற கொளகையுடையோருக்கு வியப்பளிக்காது. ஆனால் அவர் “சதி” என்னுமுடன்கட்டை ஏறும் வழக்கத்தையும் (இறந்த கணவனுடன் சிதைத்தீயில் எரிவதும்) தமிழர் வழக்கமாகக் கூறுவது பலருக்கும் தெரியாது.

 

திராவிட “அறிஞர்கள்”, இது பற்றி மவுனம் சாதிப்பதும் ஒருவர் இதை ‘இடைச் செருகல்’ என்பதும் மற்றொருவர் 30, 40 பக்கம் எழுதி சப்பைக் கட்டு கட்டுவதும் தொல்காப்பியத்தை நன்கு படித்தவர்கள் அறிந்ததே. சிலர் இது “ஆரிய வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகப் புகுந்தது” என்பதைக் காட்டுவதாகச் சொல்லுவதும் “கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை பார்” என்ற பழமொழியை நினைவுபடுத்தும்.

 

இன்னும் பலர் உலகப் புகழ் பெற்ற, தமிழில் அதிகமாக உரைகளை எழுதிக் குவித்த மதுரை நகர பாரத்துவாஜ கோத்ரப் பார்ப்பனன் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியன் எழுதிய உரை எல்லாம் சரிதான், ஆனால் அவர் தொல்காப்பியனை “த்ருணதூமாக்கினி” என்னும் ரிஷி என்று சொல்லுவது மட்டும் ‘பொய்’ என்று பிதற்றுவதெல்லாம் நல்ல நகைச்சுவையாக அமையும். நிற்க.

sati2

சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம், சுயம்வரம் என்னும் கணவனைத் தேடும் பெண்களின் சுதந்திரம், அஸ்வமேத யக்ஞம, ராஜ சூய யக்ஞம் மற்றும் பார்ப்பனர் அன்றாடம் செய்யும் சந்தியாவந்தனம், தென்பக்கத்தில் யமன் உள்ளான் என்ற நம்பிக்கை இவை எல்லாம் இமயம் முதல் குமரி வரை உளதே! ஏனடா இவை எல்லாம் ஆரியரின் சொந்த பூமி என்று நீங்கள் கூறும் மத்திய ஆசியாவிலோ, ஐரோப்பாவிலோ இல்லை என்று வெள்ளைத் தோல் “அறிஞ ர்களை” கேள்வி கேட்டால் முழி பிதுங்க பேதைகளாக நிற்பர். உண்மையில் இந்துக்கள் உலகம்     எங்கும் சென்று நாகரீகத்தை நிலை நாட்டியது ரிக் வேதத்திலேயே உளது “ச்ருன்வந்தோ விஸ்வம் ஆர்யம்= உலகம் முழுதும் சென்று பண்பாட்டைப் பரப்புக” என்ற வாக்கியம் வேதத்தில் உள்ளது. உலக மக்கள் அனனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்— மாதா பூமி, புத்ரோஹம்— (பூமி நமது அன்னை, நாம் அதன் புதல்வர்; யாதும் ஊரே யாவரும் கேளிர்) என்பது அதர்வண வேதத்தில் உள்ளது.

 

ஆக உலகம் முழுதும் நாம் மொழிகளையும் கலாசாரத்தையும் பரப்பினோம் என்பதை ஒப்புக்கொண்டால் ஏன் சில வழக்கங்களை மட்டும் அவர்கள் எடுத்துக் கொண்டனர், ஏன் தமிழ்ச் சொற்களும் சம்ஸ்கிருதச் சொற்களும் உலக மொழிகள் அனைத்திலும் ஆயிரக்கணக்கில் காணப்படுகின்றன என்பது விளங்கும்.

 

வாழ்க தமிழ் மொழி! வளர்க தொல்காப்பியன் புகழ்!!

 

சங்கத் தமிழ் நூல்களில் “சதி”

Balinese_rite_of_Suttee_in_Houtman_1597_

Suttee in Bali in 1597 (Wikipedia picture)

சங்கத் தமிழ் நூல்களில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்)

கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1108; தேதி 15 ஜூன் 2014.

சதி என்று அழைக்கப்படும் வழக்கம் பழங்கால இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை இருந்தது. கணவன் இறந்தவுடன், அவனுடன் சிதைத் தீயில் ஏறி உயிர் விடுவது ‘’சதி’’ என்றும் ‘’உடன்கட்டை ஏறுதல்’’ என்றும் அழைக்கப்படும். இதை ஆரிய வழக்கம் என்று பிதற்றியோருக்கு புற நானூறும் பிற்கால இலக்கியமும் பதில் கூறுகிறது.

சதி என்பது ராமாயண, மஹாபாரத காலங்களில் கூட கட்டாயம் இல்லை. விரும்பினால் உடன்கட்டை ஏறலாம். அதீத அன்பினால் நடைபெறும் ‘தற்கொலை’ இது. தசரதன் இறந்தபோது அவன் அன்பு மனைவியர் உடன்கட்டை ஏறவில்லை. பாண்டு இறந்தபோது முதல் மனைவியான குந்தி தேவியும் உடன்கட்டை ஏறவில்லை. இரண்டாவது மனைவியான மாத்ரீ மட்டுமே உடன்கட்டை ஏறினாள். ஆக இது அந்தக் காலத்திலும் கூடப் பெருவாரியாக நடக்கவில்லை.

sati2

வெளிநாடுகளிலும் கூட அன்பின் காரணமாகவோ, பயம் காரணமாகவோ கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொள்வதையும், அல்லது ஒருவர் இறந்தவுடன் அடுத்தவர் தற்கொலை செய்து கொள்வதையும், பத்திரிக்கைகளில் படிக்கிறோம். அப்படிப் படிக்கையில் அவர்களின் அன்பைக் கண்டு வியந்து பாராட்டுகிறோம். இது போலவே முன்காலத்திலும் சதி மூலம் இறக்கும் பெண்களை பத்தினித் தெய்வமாக வணங்கி கோவில் எழுப்பி வழிப்பட்டனர். தமிழ் நாட்டில் நடுகல் வைத்து வீரர்களை வணங்கியது போல, வட இந்தியாவிலும் கர்நாடகத்திலும் கை சின்னத்துடன் கோவில்கள் வைத்து பத்தினிகளை வழிப்பட்டனர்.

சதி என்பது ஆரிய வழக்கம் என்று பிதற்றிய பி எச். டி.வாலாkகளும் வெள்ளைத்தோல் வெளிநாட்டு ‘’அறிஞர்களும்’’ உள் நோக்கத்தோடு இந்தியா பற்றி அவதூறுகளைக் கிளப்பினர். பெண்களை தீயில் தூக்கி எறிவது போல படங்கள் போட்டு கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப முயன்றனர். ஆரிய வழக்கம் என்று முத்திரை குத்தப்பட்ட நூற்றுக கணக்கான வழக்கங்கள் இமயம் முதல் குமரி வரை இருப்பதோடு உலகில் ஆரியர்கள் வாழ்ந்ததாக ‘’அறிஞர்கள்’’ கூறும் வேறு எவ்விடத்திலும் இல்லை!! ஆரியர்களும் வெளிநாட்டுக்காரர்களும் சைபிரீயவிலோ மத்திய ஆசியாவிலோ ஒரே இடத்தில் வசித்திருந்தால் நூற்றுக் கணக்கான ’’ஆரிய’’ பழக்க வழக்கங்கள் அங்கே இல்லதது ஏனோ??

சங்கத் தமிழ் நூல்களில் உள்ள வழக்கங்கள் வடக்கிலும் 2000 ஆண்டுகளுக்கு மேல் இருந்தன. ஆரிய- திராவிட வேறுபாடு அல்லது அத்தகைய இனச் சொல்லாட்சி எங்கனும் இல்லை. சங்க காலத்தில் வாழ்ந்த 461 கவிஞர்கள் எழுதிய 2389 பாடல்களில் உள்ள 27,000 வரிகளைக் கரைத்துக் குடித்தோருக்கு ஆரிய திராவிட இனவெறிக்கொள்கை நகைப்பைத் தரும். அது ஒரு பொய்மை வாதம் என்பது வெள்ளிடை மலை என விளங்கும். உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ளத் தெளிவாக தெரியும். இதற்குப் பின்னும் விளங்கவில்லை என்றால் அவர்கள் எல்லோரும் “விளங்காதவர்களே”!

ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கையை வைத்து ‘’திராவிடங்கள்’’ கோடிக் கணக்கில் பணம் குவித்ததையும், ஹிட்லர், முசோலினி போன்றோர் கோடிக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்ததையும் உலகம் அறியும்.

sati 3

சங்க இலக்கியத்தில் குரங்கு கூட ‘’சதி’’ செய்ததை அறிகிறோம். இதோ புற நானூறு முதல் நற்றிணை வரை சில ‘’சதி’’ பற்றிய பாடல்கள்:–

புறநானூறு பாடல் 246:–
பல் சான்றீரே! பல் சான்றீரே!
‘செல்க’ எனச் செல்லாது, ‘ஒழிக’ என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப்பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
–பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது

பொருள்: ‘’கணவனுடன் நீயும் போ என்று சொல்லாமல் பொல்லாத செயல் புரியும் பெரியோர்களே! கணவன் இல்லாத பெண்கள் வெள்ளரிக்காய் விதை போல, நெய் இல்லாத சோறு, எள்ளுத் துவையல், புளி கூட்டி சமைத்த வேள இலை ஆகியவற்றை உண்ண வேண்டும். பாய் இல்லாமல் வெறும் கல் தரையில் படுக்க வேண்டும். அது போன்ற பெண் என்று என்னை நினைத்து விட்டீர்களா? நான் அப்படிப்பட்டவள் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் மரணப் படுக்கை கஷ்டமாக இருக்கலாம். என் கணவன் இறந்துவிட்டான். அந்த சிதைத் தீயே எனக்கு தாமரைக்குளம் போல குளிர்ச்சிதரும். இதைப் புரிந்துகொள்ளுங்கள்.’’

ஒரு மஹாராணி பாடிய பாடல் இது. கணவனின் சிதைத் தீ, தாமரைக் குளம் போல குளிர்ச்சி பொருந்தியது என்று பாடுகிறாள். அப்பர் பெருமானை மஹேந்திர பல்லவன் சுண்ணாம்புக் காளவாயில் போட்ட போது அவர் ‘’மாசில் வீணையும்’’ பாடல் பாடியது நினைவுக்கு வருகிறது!

sati3

புறநானூறு பாடல் 373:– கிள்ளிவளவன் மீது கோவூர் கிழார் :–

மடக் கண் மயில் இயல் மறலியாங்கு,
நெடுஞ்சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து,
மெந்தோள் மகளிர் மன்றம் பேணார்
புண்ணுவ……………………………………………..
…………………………………………….. அணியப் புரவி வாழ்க என,
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர –(வரிகள் 10-15)

பொருள்:– ‘’நல் இல் புலம்ப, கடை கழிந்து, மென் தோள் மகளிர் மன்றம் பேணார்’’— என்ற வரிக்கு உரைகார்கள் சொல்லும் பொருள்:தம் கணவர் திரும்பி வாராமையால் மகளிர் மன்றத்தில் எரியை மூட்டி தீயில் பாய்ந்து உயிர்விடுதலை உடனே செய்து……………………………… (காண்க- புறநானூறு உரை, வர்த்தமானன் பதிப்பகம்)

அலாவுதீன் கில்ஜி என்ற வெறியன் உலக மஹா அழகி சித்தூர் ராணி பத்மினியை எப்படியும் அடைய வேண்டும் என்று வந்தபோது, அந்த மஹா உத்தமி ஆயிரம் பெண்களுடன் தீப்பாய்ந்து உயிர்த் தியாகம் செய்தாள். வரலாற்றில் அழியாத இடம் பெற்றாள். அந்த நிகழ்ச்சியை நினைவு படுத்துகிறது கோவூர் கிழாரின் பாடல்.

குறுந்தொகை 69 (கடுந்தோட் கரவீரனார்)
கருங்கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென
கைம்மை உய்யாக் காமர் மந்தி,
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடு நாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே — குறுந்தொகை 69 (கடுந்தோட் கரவீரனார்)

பொருள்: ஆண் குரங்கு இறந்தது.– விதவையாக இருக்க விரும்பாத பெண் குரங்கு,— ஒன்றும் பயிலாத தன் குட்டியை நெருங்கிய உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு ஓங்கி உயர்ந்த மலையில் இருந்து விழுந்து இறக்கும் நாட்டை உடையவனே!

குரங்கு கூட அன்பின் மிகுதியால் மலையில் இருந்து பாய்ந்து உயிர் நீத்தது. இது பற்றி எழுதிய மு. வரதராசனார் இதை ‘சதி’ என்றே எழுதியமை குறிப்பிடத்தக்கது. (காண்க:– Reference: The Treatment of Nature in Sangam Literature by M.Varadarajan)

பஞ்ச தந்திரக் கதையில் புறாக் கூட தீப்பாய்ந்த கதை வருகிறது. கணவன் புறாவை வேடன் பிடித்துச் சாப்பிட்டவுடன் மனைவி புறாவும் அவனுக்கு உணவாக தீயில் பாய்ந்தது சதி என்னும் வழக்கத்தினால் வந்ததன்றோ!!

ரிக் வேதம் பத்தாவது மண்டலத்தில் உள்ள சில பாடல்கள் ‘’சதி’’ என்னும் வழக்கத்தைக் குறிப்பிடுவதகச் சொல்வர் வெளி நாட்டோரும் பி. எச். டி. வாலாக்களும்— அதே பத்தாவது மண்டலத்தை நீங்கள் வேறு எதற்காவது மேற்கோள் காட்டினால் அது பிற்காலச் சேர்க்கை என்பர். வெளி நட்டோரும் அவர்களுக்கு அடிவருடும், ஒத்து ஊதும் நம்மவர்களும் அரை வேக்காடுகள் மட்டும் மல்ல, பாம்பு போல இரட்டை நாக்கினர் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டுமா? உங்களுக்கே புரியாதா?

எல்லை மீறிய அன்பு, பாசம் தொடர்பான கதைகளையும் நாவல்களையும் படித்தோருக்கு உடன்கட்டை ஏறும் பழக்கம் வியப்பைத் தருமேயன்றி அருவருப்பைத் தராது. எனினும் ஆதிகால வழக்கத்தைப் பலரும் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட காலையில் ராஜாராம் மோஹன்ராய் போன்ற பெரியோர்கள் முன்னின்று பிரம்ம சமாஜம் மூலம் அதற்குத் தடை போட்டதும் சரியே!