
Article Written S NAGARAJAN
Date: 3rd August 2016
Post No. 3030
Time uploaded in London :– 8-22 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
வேத நெறி
வேதம் விளக்கும் சந்தோஷம்! (Post No.3030)
ச.நாகராஜன்

வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது வேதத்தின் அன்புக் கட்டளை!
மனதால் சந்தோஷம்
வாக்கால் சந்தோஷம்
சரீரத்தால் சந்தோஷம்
இந்த மூன்று வகை சந்தோஷங்களையும் அடைந்து விடு என்று அறைகூவுகிறது வேதம்.
இப்படி ‘சந்தோஷ அறைகூவலை’ உலகில் வேறு எந்த ஒரு நூலுமே ஆதி காலத்திலேயே விடுத்ததில்லை என்பது நிதர்சனமான உண்மை.
உண்மையான சந்தோஷத்தை அடையும் விதத்தையும் அது விளக்குகிறது.
சந்தோஷம் என்ற பதத்தை அப்படியே வேதம் கூறவில்லை.
ஆனால்
தோஷமானா: (யஜுர் வேதம்)
துஷயந்தி (ரிக் வேதம்)
தோஷதமா: (ரிக் வேதம்)
என்று இப்படி பல விதங்களில் கூறுகிறது.
தர்மார்த்த காம எனப்படும் அறம் பொருள் இன்பம் என்ற மூன்று வித புருஷார்த்தங்களால் நியாயமான வழியில் பொருளைத் தேடு என்கிறது அது.
அதிக பணம் வந்தாலும் சரி, குறைவாகப் பணம் வந்தாலும் சரி, அதிக மகிழ்ச்சியையோ அல்லது அதிக துக்கத்தையோ அடையாதே என்று அது கூறுகிறது.
உழுது பிழை; உழைத்துப் பிழை என்பது யஜுர் வேதம் கூறும் அறிவுரை!
பதஞ்சலி முனிவரும் வேத வழியில் நின்று வாழும் சந்தோஷத்தின் பலன் உத்தமமான சுகத்தை அடைவதே என்கிறார்,
சந்தோஷத்தை மூன்று வகையாக விள்க்குகிறது வேதங்கள்.
மானஸிக சந்தோஷம் – மனத்தால் ஏற்படும் சந்தோஷம்
வாஸிக சந்தோஷம் – வாக்கினால் ஏற்படும் சந்தோஷம்
சாரீரிக சந்தோஷம் – உடலால் ஏற்படும் சந்தோஷம்
ஆக இப்படி சந்தோஷத்தை ஒவ்வொருவரும் மூன்று வகையாக அடைய முடியும்!

மனத்தால் ஏற்படும் சந்தோஷம்
‘சூதாடி வரும் பணத்தைக் கண்டு மகிழ்ச்சி அடையாதே. அது பாவம்’ என்று நண்பனுக்குக் கூறும் அறிவுரையாக வேதம் கூறுகிறது.
தியாகம் செய்வதன் மூலமாக சுகம் பெறலாம் என்ற ரகசியத்தை அது விளக்குகிறது.
(தேன த்யக்தேன புஞ்ஜீயா மா க்ருத: கஸ்யஸ்வித்தனம்!)
சோம்பேறியாக இருக்காதே; அதிர்ஷ்டத்தினால் உன்னிடம் இருக்கும் பணத்தால் ஆனந்தப்படாதே, உழைப்பினால் வருவதே செல்வம் என்றும் அது விளக்குகிறது.
வேத சம்ஹிதைகள் போலி சந்தோஷத்தையும் உண்மையான சந்தோஷத்தையும் இப்படி இனம் பிரித்து நன்கு காட்டுகின்றன!
உண்மையாக பணம் சம்பாதிக்கும் போது மனதில் உண்மை சந்தோஷம் ஏற்படுகிறது; அது நிலைக்கிறது.
வாக்கால் ஏற்படும் சந்தோஷம்
அடுக்குமொழி வசனங்க்ளை அள்ளி வீசுவதை வேதம் ஆதரிக்கவில்லை.
அனுத்வேககரம் வாக்யம் சத்யம் பிரியம் ஹிதம் (கீதை)
அடுத்தவருக்கு ஆத்திரம் ஊட்டாத வார்த்தைகள்
உண்மையான வார்த்தைகள்;
அடுத்தவருக்கு பிரியமான வார்த்தைகள் (உண்மையாக இருந்தாலும் அடுத்தவரைப் புண்படுத்தினால் அதைப் பேசாதே) அடுத்தவருக்கு ஹிதமான வார்த்தைகள்
இவற்றையே பேச வேண்டும்.
வாசம் வததி சாந்திவாம் – அதர்வண வேதம்
வாசம் வதத் பத்ரயா – அதர்வண வேதம்
ம்ங்களம் பொருந்திய மதுரமான வாணி, சாந்திமயமான வார்த்தைகள் இவ்ற்றையே அதர்வண வேதம் வலியுறுத்துகிறது.

சரீரத்தால் ஏற்படு சந்தோஷம்
காம குரோதங்களால் ஏற்படும் திருட்டு, ஹிம்சை, விபசாரம் இவற்றை விட்டு விடுக.
அடுத்தவருக்கு சேவை செய்க
நல்ல கர்மங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வருக (நடைமுறைப்படுத்துக) என்கிறது வேதம்.
சந்தோஷம் பரமாஸ்வாய சுகார்த்தீம் ச்மயதோ பவேத்
ச்ந்தோஷமூலம் ஹி சுகம் துக்கமூலம் விபர்யய: (மனு 4 -12)
வெறுப்பு, ஆசை, பொறாமை ஆகியவற்றை விடுத்து சந்தோஷத்துடன் உற்சாகமாக வாழ்க்கையை நிர்வகித்தலே சுகத்திற்கான அடிப்படை மூலம்; மாறாக இவற்றை விட்டு விட்டு வாழ முற்படுவதே துக்கத்தின் மூலம் என்கிறார் மனு.
இன்னும் இராமாயணம் மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்கள் வேத வழியை விரிவாகக் கூறி சந்தோஷம் பெறும் வழியைக் சுட்டிக் காட்டுகின்றன.
ஹிந்து மதம் காட்டும் வாழ்க்கை நெறியே அலாதியானது. அநாதி காலம் தொட்டு இருந்து வருவதும் கூட!
**********
You must be logged in to post a comment.