Translated by london swaminathan
Date: 8 May 2016
Post No. 2792
Time uploaded in London :– 6-32 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
இந்தப் பகுதியில், அன்னை (மாதா) பற்றிய பழமொழிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருத பழமொழிகள்- பகுதி-7
(பகுதி 6 ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியிடப்பட்டது)
104.கா நாம மாதா புத்ரக அஸ்ய அபராதம் ந மர்ஷயதி – பிரதிமா நாடக
தனது குழந்தையின் தவறை மன்னிக்காத தாயும் உண்டோ?
105.குபுத்ரோ ஜாயதே க்வசித் அபி குமாதா ந பவதி –தேவி அபராதக்ஷமாஸ்தோத்ரம்
கெட்ட மகன்கள் இருக்கலாம், கெட்ட தாயார் கிடையவே கிடையாது.
106.ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரீயசீ
-கஹாவத்ரதனாகர்
பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே
107.ஜீவன் மாத்ருக ஏவ நூனம் அதுலம் ப்ருங்தே சுகம் ஸ்வாலயே-கஹாவத்ரதனாகர்
தாய் உயிரோடிருக்கும் வரைதான் வீட்டில் சுகம்.
108.து: கம் ஹி ஜனனீனாம் சுதுஸ் சுகம் –ப்ருஹத் கதா மஞ்சரி
அம்மாக்கள் படும் துயரம் கொஞ்சநஞ்சமல்ல.
109.துஹிது: ப்ரதானகாலே து:கசீலா ஹி மாதர:
பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து அனுப்புகையில் தாயார் மனம் தவிக்கும்.
110.ந மாது: தைவதம் பரம்- சாணக்ய நீதி
அம்மாவுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை (தாயினும் பெரிய கோயில் இல்லை)
111.பதிதா குரவஸ்த்யாஜ்யா நது மாதா கதாசன
மேலிருந்து கீழே வீழ்ந்த பெரியோரை விட்டுவிடலாம், ஆனால் அம்மாவை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது.
112.பாததே ந நிஜ ஆபத்யம் மார்ஜாரீ தசன ஆவலி.
தாய்ப் பூனையின் பற்கள், பூனைக்குட்டிகளுக்கு தீங்கு செய்யா (கோழி மிதித்து குஞ்சுகள் சாகா)
113.மாதா கில மனுஷ்யாணாம் தேவதானாம் ச தைவதம் – மத்யமவ்யாயோக
எல்லா மனிதர்களுக்கும் அம்மாவே தெய்வத்தின் தெய்வம்.
114.மாதா பித்ருப்யாம் சப்தஸ்ஸன்ன (சப்த:+சன்+ ந) ஜாது சுகமஸ்னுதே – கதாசரித்சாகரம்
பெற்றோர்களின் சாபத்துக்குள்ளான பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழமுடியாது.
115.மாத்ரு ஜங்காஹி வத்சஸ்ய ஸ்தம்பீ பவதி பந்தனே – ஹிதோபதேசம்
அம்மாவின் கால்களே, குழந்தைகளைத் தாங்கும் தூண்கள் (தாயார்தான் ஆதரவு தரும் கொழுகொம்பு)
116.மாத்ரு தேவோ பவ பித்ருதேவோ பவ- தைத்ரீயோபநிஷத்
தாயை தெய்வமாக வணங்கு; தந்தையை தெய்வமாக வணங்கு.
117.மாத்ருதோஷோ ந தோஷ: -ப்ரதிமா நாடக
அம்மாவிடமுள்ள குறை, குறையாகாது
118.மாத்ரா சமம் நாஸ்தி சரீர போஷணம் – சுபாஷிதாவலி
தாயைப்போல உடம்பைக் கவனிப்பவர் எவருமிலர்.
தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை!
119.யாத்ருசீ ஜனனீ லோகே புத்ரீ பவதி தாத்ருசீ
— கஹாவத்ரதனாகர்
தாய் எப்படியோ அப்படியே மகள் இருப்பாள் (தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை).
120.ஸஹஸ்ரம் து பித்ரூன் மாதா கௌரவேனாம் அதிரிச்யதே—மனுஸ்மிருதி 2-145
தந்தையைவிட ஆயிரம் மடங்கு கௌரவுத்துக்குரியவர் தாய்.
121.ஹஸ்த ஸ்பர்சோ ஹி மாத்ரூணாம் அஜலஸ்ய ஜலாஞ்சலி: -ப்ரதிமா நாடக
தாயின் அரவணைப்பு, தாகத்தால் தவிப்பவனுக்குக் கிடைத்த தண்ணீர் போல சுகம் தரும்.
–சுபம்–
You must be logged in to post a comment.