Compiled by London swaminathan
Post No.2243
Date: 14 October 2015
Time uploaded in London: 10-40 AM
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
1.ந உலூக அபி அவலோகதே யதி திவா சூர்யஸ்ய கிம் தூஷணம்? (பர்த்ருஹரி)
ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது; இது சூரியனுக்கு என்ன குறை?
Xxx
2.பத்ரம் நைவ யதா கரீர்விடபே தோஷோ வசந்தஸ்ய கிம்? (பர்த்ருஹரி)
கரீல செடியில் (துளசி) இலை இல்லாததற்கு வசந்த காலம் என்ன செய்யும்?
Xxx
3.ப்ராணீ ப்ராப்ய ருஜா புனர்ன சயனம் சீக்ரம் ஸ்வயம் முஞ்சதி –ஸ்வப்னவாசவதத்தம்
நோயாளி தானாகவே படுக்கையைவிட்டு உடனடியாக எழுவதில்லை
Xxx
4.ப்ராப்தே து ஷோடஸே வர்ஷே கர்தபீ சாப்யப்சராயதே.
16 வயது வந்துவிட்டால் கழுதைகூட அப்சரஸ் (தேவ லோக அழகி) போலத் தோன்றும்!
Xxx
5.மலயேபி ஸ்திதோ வேணு: வேணுரேவ ந சந்தனம்
மூங்கிலானது மலய பர்வதத்தில் வளர்ந்ததால் சந்தனம் ஆகிவிடாது.
Xxx
6.ப்ரம்மசர்யேன தபஸா ராஜா ராஷ்ட்ரம் விரக்ஷதி – அதர்வ வேதம்
பிரம்மசர்யரூப தவத்தினால் அரசன் ஆனவன் நாட்டைக் காப்பாற்றுகிறான்
Xxx
7.மனுர் பவ, ஜனயா தைவ்யம் ஜனம் – ரிக்வேதம்
மனிதனாக இரு; தெய்வீகமான குழந்தைகளைப் பெறு
Xxx
8.ப்ரசாதசிகரஸ்தோபி காக: கிம் கருடாயதே (சாணக்ய நீதி தர்பணம், பஞ்சதந்திரம்)
அரண்மனையின் உச்சியில் உட்கார்ந்தால், காக்கை என்ன கருடன் ஆகிவிடுமா?
ஒப்பிடுக: கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தன் பொல்லாசி சிறகை விரித்தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி – அவ்வையாரின் மூதுரை.
Xxx
9.மலயே பில்லபுரந்த்ரீ சந்தனதருமிந்தனம் குருதே – சு.ர.பா.
மலய பர்வத ப்ரதேசத்தில் மலைஜாதிப் பெண்கள், சந்தன மரத்தை விறகாகப் பயன்படுத்துவர்
Xxx
10.முண்டே முண்டே மதிர் பின்னா
ஒவ்வொருவர் தலையிலும் ஒவ்வொரு எண்ணம் (புத்தி)
ஒப்பிடுக (இந்தி)
அப்னா அப்னா டங் ஹை
அப்னீ அப்னீ சமக்ஞா ஹை
Xxx
11.யௌவனம் தன சம்பத்தி: ப்ரபுத்வமவிவேகதா
ஏகைகமப்யனர்தாய கிமு யத்ர சதுஷ்டயம் – ஹிதோபதேச
இளமை, அதிகாரம், செல்வம், விவேகமில்லாத போக்கு – இந்த நான்கில் ஒன்று இருந்தாலே கெடுதல் ஏற்படும். நாலும் சேர்ந்து இருந்தால் என்ன கதியோ!!
Xxx
12.ரிக்த: சர்வோ பவதி ஹி லகு: பூர்ணதா கௌரவாய – மேகதூதம்
வெற்றிடமாக உள்ள ஒரு பொருளுக்கு எடை இராது;
பூரணமாக இருந்தால் அதற்கு எடை இருக்கும்
ஒப்பிடுக: குறைகுடம் கூத்தாடும் (தழும்பும்) நிறைகுடம்
தழும்பாது.
பெரியார் அடக்கமாக இருப்பர். அரைவேக்காடுகள் ஆர்ப்பரிக்கும்!!
–Subham–
You must be logged in to post a comment.