தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது

princess

by london swaminathan

Post No738 Dated 9th December 2013

ஒரு பிராமணன் ஒரு ராஜாவின் பெண்ணுக்கு கல்வி கற்பித்துவந்தான். காலப்போக்கில் அவள் மீது காதல் கொண்டான். எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று திட்டம் போட்டான். அது அந்த அப்பாவிப் பெண்ணுக்குத் தெரியாது. அவள் பூப்படைந்த காலத்தில் அவள் எதிர்காலம் பற்றி அந்தப் பிராமணன் இடத்தில், ராஜா ஜோதிடம் கேட்டான். தருணம் பாத்திருந்த அந்த பிராமணன், ராஜ குமாரத்தி பூப்படைந்த காலம் மிகவும் தோஷம் உடையது என்றும் ஆகையால் அவள் உயிரையும் நாட்டையும் காப்பதற்காக அவளை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விடுவதே பரிகாரம் என்றும் சொன்னான்.

மன்னனும் தன் உயிர், நாட்டின் எதிர்காலம், மகளின் நலன் எல்லாவற்றையும் மனதிற் கொண்டு அப்படியே செய்தான். அந்த பிராமணனோ ரகசியமாக ஆற்றில் மிதந்து வரும் பெட்டியைக் கவர தொலை தூரத்தில் ஆற்றின் கரையில் காத்திருந்தான். இதற்குள் வேறு ஒரு நாட்டின் அரசன் ஆற்றின் கரையில் இருக்கும் காட்டில் வேட்டை ஆடி ஒரு புலியை உயிருடன் பிடித்தான். ஆற்றில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது ஒரு பெட்டி மிதந்து வருவதைக் கண்டு அதைத் திறந்து பார்த்தான். அழகான ராஜ குமாரத்தியைக் கண்டு ஆனந்தப்பட்டு அவளை மணம் புரிய எண்ணி தன் நாட்டுக்கு அழைத்துச் சென்றான். அவள் எல்லா விசயங்கலையும் சொல்லி ஆற்றுக்குள் மிதந்தது எப்படி என்று விவரித்தாள். அதைக் கேட்ட ராஜா, அவளை அழைத்துப் போவதற்கு முன்னால், அந்தப் பெட்டிக்குள் தான் பிடித்த புலியை அடைத்து மீண்டும் ஆற்றில் மிதக்கவிட்டான்.

tamil veeran

தொலை தூரத்தில் ஆற்றங் கரையில் ஆசையுடன் காத்திருந்த பிராமணன், பெட்டியை மீட்டு, யாருக்கும் தெரியாத இடத்துக்குக் கொண்டுபோய் ஆவலுடன் பெட்டியைத் திறந்தான். புலி அவன் மீது பாய்ந்து அவனைக் கொன்று தின்றது.

“மதியிலா மறையோன் மன்னன் மடந்தையை வேட்கையாலே
ருதுவது காலம் தன்னில் தோஷம் என்று உரைத்தே ஆற்றில்
புதுமையாய் எடுத்தபோது பெட்டியில் புலிவாயாலே
அதிருடன் கடியுண்டு அன்றே அருநரகடைந்தான் மாதே!”
(விவேக சிந்தாமணி)

விவேக சிந்தாமணியில் இது போன்ற பழங்காலக் கதைகள் அடங்கிய பாடல்கள் உள்ளன. இந்த நூலை எழுதியது யார் என்பது தெரியவில்லை.

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது!
தினை விதைதவன் தினை அறுப்பான்; வினை விதைதவன் வினை அறுப்பான்!!

Contact: Swami_48@yahoo.com

floating-box

Postage Stamp on Sri Sathya Sai Baba

baba stamps

Post No 737 dated 8th December 2013

Department of Indian Post has released a commemorative postage stamp on Sri Sathya Sai Baba on 23rd November 2013. During the 88th birth day celebrations at Puttaparthi, Baba’s birth place in Andhra Pradesh, Union Minister for Communications and technology Ms Killi Kruparani released the stamp. Ministers from Andhra Pradesh Raghuveera Reddy and Geetha Reddy were present. S S Naganand, member of Sathya Sai Trust, announced the partial commissioning of water project for more towns and villages in Anantpur District. Devotees from India and abroad formed a long queue to see the Samadhi of Sathya Sai Baba.

FDC baba

Sri Sathya Sai Baba was born on 23rd November 1926 and died on 24th April 2011 at the age of 85.
In a press release here on Monday, Union minister of state for communications and information technology Killi Kruparani said Satya Sai Baba was an inspiration to people of all faiths. “As a preacher of the highest human values, Satya Sai was an iconic figure for over five decades inspiring millions to lead a moral and meaningful life. His teachings were rooted in the universal ideals of truth, righteous conduct, peace, love and non-violence.’’ She said Satya Sai endeared himself to the people through various institutions which have their headquarters at Prashanti Nilayam in Andhra Pradesh and promoted moral values, education and public health.

postal-stamp-baba

Keeping in view his noble services to the humanity and particularly for the welfare of the people of Andhra Pradesh, the decision was taken to release a commemorative postage stamp on him, she said.
stamp baba project

Earlier in 1999 a stamp was released when the Sathya Sai Water Project was inaugurated.

contact swami_48@yahoo.com

இன்னொரு பிறவியும் வேண்டுவதே இந்தப் பூவுலகிலே!

baba stamps

ச.நாகராஜன்

இண்டியாவின் பாஸ்போர்ட்

அது 1969ஆம் ஆண்டு. “ஃப்ளவர் சைல்ட் ஜெனரேஷன்’ Flower Child Generation என்று அழைக்கப்பட்ட இளைஞர் குழுவினருள் பன்னிரெண்டு பேர் இறைவனைத் தேடி ஆன்மீக தாகம் கொண்டு அலைந்தனர். அவர்களுள் ஒருவரான ஹோவர்ட், பாபாவைக் காண புட்டபர்த்தி வந்தார். அவருடன் கூட வந்தவர் இண்டியா என்ற பெயர் கொண்ட ஒரு பெண்மணி. தூய்மையான மனம் படைத்த அவர் சேவை புரிவதிலேயே வாழ்க்கையைக் கழிப்பவர். அனைவருக்கும் சமைப்பது, மற்றவர்கள் ஆடைகளைச் சுத்தம் செய்வது, இருப்பிடத்தைப் பராமரிப்பது என்று சேவையிலேயே ஆனந்தமாக வாழ்க்கையைக் கழிக்கும் பண்பு அவரிடம் வேரூன்றி இருந்தது. குழுவில் இருந்த இன்னொருவர் ஜில். அமெரிக்கரான ஜில்லுக்கு எப்போதும் தியானம் செய்வதில் ஆனந்தம். கொசுவலையைக் கட்டிக் கொண்டு தனக்கென ஒரு குட்டி வீடாக தியான இடத்தைப் பாவித்து தியானம் செய்யும் அவரை யாரேனும் தொந்தரவு படுத்தி அழைத்தால் கொசு வலையிலிருந்து – தவறு, அவரது தியான கூடத்திலிருந்து வெகுண்டு வெளியே வருவார்.

பர்த்தியில் நாட்களைக் கழித்த அவர்களில் பலருக்கு விசா காலம் முடிந்து விட்டது.

ஒரு நாள் ஸ்வாமி அவர்கள் அனைவரையும் அழைத்தார் – யார் யாருக்கெல்லாம் விசா முடிந்து விட்டது என்று தெரிந்து கொள்ள! ஒன்பது பேர்கள் கையைத் தூக்கினர்- விசா இல்லை என்று அறிவித்து! இண்டியா கம்மிய குரலில், “ஸ்வாமி எனக்கு பாஸ்போர்ட்டே இல்லை” என்றார்.
ஸ்வாமி,” என்ன? பாஸ்போர்ட் இல்லையா? போலீஸ் வந்து உன்னை அரெஸ்ட் arrest செய்து விடும் தெரியுமா?”என்றார்.

“நான் உலகத்தைத் துறந்த அன்றே அதையும் துறந்து விட்டேன்!” என்றார் இண்டியா. வெகுளியான அந்தப் பெண்ணைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது! ஸ்வாமி புன்முறுவலுடன்.”பாஸ்போர்ட்டும் இல்லை, விசாவும் இல்லை! பைத்தியம் தான்! உடனே போய் அதற்கு ஏற்பாடு செய்!” என்றார்.

“நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று குழந்தைத்தனமாகக் கேட்டார் இண்டியா. ஸ்வாமி சிந்தனையில் ஆழ்ந்தார்.”உன்னிடம் பாஸ்போர்ட் இல்லையென்று போலீஸிடம் சொன்னால் அவர்கள் உன்னை அரெஸ்ட் செய்து விடுவார்கள்!” என்று ஸ்வாமி கூறியதைக் கேட்டதும் இண்டியா அழ ஆரம்பித்தார்.
“அழாதே! கவலைப்படாதே” என்றார் ஸ்வாமி தன் குழந்தைத்தனமான பக்தை அழ ஆரம்பிப்பதைப் பார்த்து.

“எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல். நான் தியானத்தில் இருந்தேன். என்ன நடந்த்தென்றே தெரியவில்லை என்று சொல்” இதைக் கூறி விட்டு ஸ்வாமி இண்டியா அனுப்புவதற்கான ஒரு கடிதத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஜில்லுக்குக் கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.
postal-stamp-baba

ஸ்வாமி! நீங்கள் பொய் சொல்கிறீர்கள்

“ஸ்வாமி! அது பொய்! நீங்கள் பொய் சொல்கிறீர்கள்!! நீங்களே எப்படிப் பொய் சொல்ல்லாம்!!!
சத்திய சாயியாக அவதரித்து சத்தியத்தின் திருவுருவமாகத் திகழும் அவர் பொய் சொல்லலாமா! ஜில் அழ ஆரம்பித்தார். அழுதவாறே அவர் சொன்னார்:”ஸ்வாமி! இண்டியா ஒரு நாளும் தியானம் செய்ததில்லை. நீங்கள் பொய் சொல்கிறீர்கள்!”
இதற்கு ஸ்வாமி அளித்த உடனடி பதில் மனித குலம் அனைத்திற்கும் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய பதில்!

பக்தர்களுக்காக என் உயிரையே கொடுப்பேன்

“இதோ பார்! உனக்கு பொறாமை வந்து விட்டது! இந்தப் பெண்ணைக் காப்பது எனது கடமை, நீ உன் கொசுவலைக்குள் அமர்ந்து கொண்டு ஒரு நாளைக்குப் பத்து மணி நேரம் தியானம் செய்கிறாய். பிறகு கொசுவலையிலிருந்து கோபத்துடன் வெளியே வருகிறாய். உனது வெடுவெடுப்பான மூஞ்சியைப் பார்த்து எங்கள் எல்லோருக்கும் களைத்துப் போய்விட்டது! நீ தியானம் செய்யும் போது இண்டியா சமைக்கிறாள். உணவின்றி உன்னால் தியானம் செய்ய முடியுமா? உயிருக்கு ஆதாரமே உணவு தான்! எப்போதுமே அவள் சாதனை செய்கிறாள் – சேவை செய்து கொண்டே! அவள் உணவை எல்லோருக்கும் தயாரிக்கிறாள் இது தியானத்தை விட முக்கியமானது. என்னைச் சரணடைந்தவர்கள் அனைவரையும் காக்கவேண்டிய பொறுப்பு என்னுடையது. இந்த அறையில் இருக்கும் மூன்று பேருக்கு மட்டும் தான் அவள் பாஸ்போர்ட்டை அவள் இழந்த போது அவளுக்கு என்ன நடந்தது என்பது தெரியும். ஜில், இதை ஆராய்வது உங்கள் பிஸினஸ் இல்லை, சார்! அவள் தங்கமான மனம் படைத்தவள். அவளைக் காப்பது ஸ்வாமியின் கடமை! இது எனது தர்மம்! எனது கடமை! எனது பக்தர்களுக்காக என் அங்கங்களைத் தியாகம் செய்ய நான் தயார்! தேவையானால் என் கையைக் கூட வெட்டுவேன்,, எனது இரத்தத்தைக் கொடுப்பேன். ஏன், என் பக்தர்களுக்காக என் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பேன்!”

ஸ்வாமி பிரவாகமாகக் கொட்டிய பதிலுக்குப் பின்னர் அந்த அறையில் அமைதி நிலவியது. அனைவரும் பிரமித்து நின்றனர். ஜில் முகத்தை மூடிக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

பக்தர்களுக்காக இறைவன் உருகி உயிரைக் கொடுக்கத் தயார் என்று அறிவித்த பிரகடனத்தை நேரில் கேட்ட அந்த மூவரும் எவ்வளவு பாக்கியசாலிகள்! ஹோவர்ட்டும், இண்டியாவும் மெய் சிலிர்த்து பகவானை வணங்கினர்.

ஒரு விஷயத்தையோ அல்லது ஒரு மனிதரையோ பற்றிய மனிதர்களின் மதிப்பீடு வேறு, இறைவனின் மதிப்பீடு வேறு என்பதை இந்தச் சம்பவம் அனைவருக்கும் உணர்த்தியது.

லெவின் ஹோவர்ட் எழுதிய ‘குட் சான்ஸ்ஸ்’ (Howard Levin, Good Chances) என்ற புத்தகத்தில் ஹோவர்ட் பதிவு செய்துள்ள இந்த சம்பவம் பகவானின் அவதார லீலைக் கடலில் ஒரு சிறிய துளி!

FDC baba

சூப்பர் ஸ்பெஷாலிடி லீலைகள்

கலி யுகத்தின் வாழ்க்கை முறைகளால் உணவில் கோளாறு,மன அழுத்தம் மற்றும் இதர காரணங்களினால் இதய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் ஏராளமானோருக்கு தன் அவதார பணியாக மேற்கொண்டு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்க ஸ்வாமி அமைத்த மருத்துவ மனை தான் சூப்பர் ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல் Super Specialty Hospital.

உலகத் தரத்தையெல்லாம் பின்னுக்குத் தள்ளி இறைவன் கரத்தின் அருள் தொடுதலுடன் மூன்று லட்சம் சதுர அடிப் பரப்பில் அமைக்கப்பட்ட மருத்துவ மனையைப் பற்றி சித்தூரிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸில்க்கு குடியேறி அங்கிருந்து பர்த்திக்கு சேவை புரிய வரும் டாக்டர் சௌதரி ஒலெட்டி பிரமித்து உளமுருக எழுதுகிறார் தன் அனுபவங்களைத் தொகுத்து தனது “மை ஹோலிமேன் இஸ் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா” என்ற புத்தகத்தில்! (My Holyman is Avatar Bhagavan Sri Sathya Sai Baba). 17 ஆர்க்கிடெக்ட்டுகள் தினம் 15 மணி நேரம் பணி புரிந்து ஐந்து மாதங்கள் இதன் டிவைன் ஜாமெட்ரி டிசைனை – தெய்வீக வடிவ இயல் அடிப்படையிலான வடிவமைப்பை – முடிக்க அடுத்த ஏழே மாதங்களில் உருவான கட்டிட அற்புதம் இது!

சாயிக்னோஸிஸ்

25 ஆண்டுகள் அமெரிக்காவில் பிரபல இதய அறுவைச் சிகிச்சை நிபுணராக அறுவைச் சிகிச்சைகளைச் செய்து வந்த அவர் புட்டபர்த்தியில் இரு வார சேவைக்காகப் பலமுறை வந்து கடினமான அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
ஒரு முறை பாபா ஒருவரை அட்மிட் செய்து அவரை செக் செய்யுமாறு கூறினார்.சோதனையில் அவருக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று சௌதரி முடிவு செய்தார்.

ஆனால் மறுநாள் சௌதரியை நோக்கிய பாபா,” அவரை டிஸ்சார்ஜ் செய்து விடு! அவருக்கு ஒன்றுமில்லை” என்றார்.திகைத்துப் போன சௌதரி பகவானின் சொல்லை மீற முடியாமல் ஆனால் தன் மெடிகல் அனுபவத்தையும் நம்ப மறுக்காமல் அவரை மீண்டும் பரிசோதித்தார். என்ன ஆச்சரியம்! முதல் நாள் செய்த சோதனைகளின் அறிகுறிகளே அங்கு இல்லை.அவர் பூரண நலத்துடன் “பெர்பெக்டாக” இருந்தார். சௌதரி தனது ‘டயாக்னோஸிஸ்’ வேறு சாயியின் ‘சாயிக்னோஸிஸ் வேறு என்பதை உணர்ந்து அவரை அடி பணிந்து வணங்கினார். இன்னொரு நோயாளிக்கு அறுவைச் சிகிச்சையை உடனடியாகச் செய்யுமாறு பகவான் அறிவுரை –அல்ல, அருளுரை – பகர்ந்தார். சௌதரியோ திகைத்துப் போனார். ஏனெனில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள முடியாத உடல் நிலையில் அவர் இருந்தார். நிச்சயம் அவரின் உயிருக்கு ஆபத்து நேரிடும்!

ஆனால் பகவானின் மேல் பாரத்தைப் போட்டு அறுவைச் சிகிச்சையை செய்து முடித்தார். அவரே ஆச்சரியப்படும் படி அந்த இதய நோயாளி பூரண நலத்துடன் வீடு திரும்பினார். இது தனது அறுவை சிகிச்சையினால் அல்ல, பாபாவின் அருள் சிகிச்சையினாலேயே என்று உளம் நெகிழ உணர்ந்து அதிசயித்தார் உலகின் மிகச் சிறந்த இதய அறுவைச் சிகிச்சை நிபுணரான சௌதரி ஒலெட்டி!

stamp baba project

பலவான் அனுமனுக்கே பலம்

65 அடி உயரமுள்ள அனுமனின் சிலையை பர்த்தியில் நிறுவ பாபா இந்தியாவின் தலை சிறந்த கட்டுமானக் கம்பெனிக்கு ஆணையிட்டார்.

அந்த நிறுவன எஞ்சினியர்கள் முறைப்படி மண் பரிசோதனையை மேற்கொண்டனர். ஆனால் மணலோ தொள தொள என்று (புதை குழி மண் போல என்று சொல்லும் அளவில்) கெட்டிப் படாமல் இருந்தது. பிரம்மாண்டமான சிலையின் எடை என்ன! அதை எங்காவது இப்படிப்பட்ட மண்ணில் நிறுவ முடியுமா! எஞ்சினியர்கள் மறுத்து தங்கள் ரிபோர்ட்டை பாபாவிடம் சமர்ப்பித்தனர். பாபா சொன்ன இடம் சரிப்படாது என்ற அவர்களின் நிலைப்பாட்டைக் கேட்ட பாபா அந்த இடத்திற்கு வந்தார். தன் காலால் அந்த இடத்தில் இரண்டு தட்டு தட்டினார். “ஊம்! இப்போது சரியாகி விட்டது. சிலையை நிறுவலாம்!” என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார். எஞ்சினியர்கள் திகைத்துப் போய் மீண்டும் மண் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். என்ன, ஆச்சரியம்! முன்னர் பரிசோதனை செய்த அதே இடம் தான்.’! ஆனால் இப்போது பாறாங்க;ல் போல வலுவுடன் இருந்தது. ப;லவானான அனுமனுக்கே பலம் தந்த பாபாவின் அதிசயச் செயலை அருள் அற்புதமாக அனைவரும் உணர்ந்து பரவசப்பட்டனர்.

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!

ஒவ்வொரு கணத்தையும் ஒரு லீலையாக பக்தர்களுக்கு உணர்த்தி அதில் ஒரு அற்புத செய்தியையும் அவ்வப்பொழுது பொதிந்து வைத்தவர் பகவான்! அவரது லீலைகளை அனுபவித்து மகிழ்ந்த பக்தர்கள் அப்பரின் தேவாரப் பாடலையே நினைவில் கொள்வர்.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும் இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே!

என்று தில்லை நடராஜரின் ஆனந்தத் திரு நடனத்தைப் பார்க்க முடியுமென்றால் இன்னொரு மனிதப் பிறவியும் நிச்சயம் வேண்டும் என்றார் அற்புதர் அப்பர்.

பகவான் பாபாவின் லீலைகள் அடுத்த அவதாரமான பிரேம சாயி அவதாரத்திலும் தொடரும் என்பதால் அவர் வாழும் அந்த காலத்தில் அவருடன் வாழ வேண்டும் என்பதே பகவானின் அணுக்க பக்தர்களின் ஆசை. முத்தியைச் சற்று ஒத்தி வைத்து அவர்கள் ஒரு முகமாக ஆசைக் குரலில் கூவிக் கூறுவது இன்னொரு “ மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே”!

சின்ன உண்மை
நாகார்ஜுனா கன்ஸ்ட்ரக் ஷன் கம்பெனியை நிறுவிய அதன் சேர்மன் ஏ,வி,எஸ் ராஜு மிகப் பெரிய வாழ்க்கை வரலாறாக பாபாவின் வரலாற்றை எழுதியுள்ளார். 1996-லிருந்து 2007- வரை எழுதப்பட்ட 32 தொகுதிகளைக் கொண்ட ஆனால் ஒரே பைண்டிங்கில் உள்ள இந்த நூலே உலகின் மிகப் பெரிய நூல் என்று கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் சாதனைப் பட்டியலில் இதை அறிவித்துள்ளது!

Contact swami_48@yaho.com

Sand Storms destroyed Two Tamil Towns!

sandstorm05 (1)Arizona

Sand storm in Arizona, USA

London Swaminathan
Post No. 735 by London Swaminathan dated 6th December 2013

I have already written several posts about the power of curses and boons. I wrote about the fire and rain created by Kannaki, Paattinathadikal, Adi Shankara, Tansen and Muthuswami Dikshitar. I have also explained in one of the posts about spontaneous combustion in which Thiru Gnana Sambandhar, Tiruppanalvar, Nandhanar, Ramalinga Swamikal, Andal and other Hindu saints disappeared without any trace. Now I give two stories about sand storms destroying two ancient Tamil towns by the curses of poets and saints.

Uraiyur, now part of Trichy in Tamil Nadu, was the ancient capital of early Chozas. They ruled from Uraiyur 2000 years ago. We have very clear references in Sangam Tamil literature. This city was famous for its court of justice. I have explained in one of my posts, why even today British judiciary wearing white wigs following the great Tamil Choza king Karikalan. Uraiyur became more famous because of this ‘white wig’ incident.

Uraiyur also became famous because of a cock attacking the Royal elephant. The king felt that this soil must have some magical qualities to give such courage to a cock to attack the elephant. He created a city in that place and made it his capital and named it Koziyur meaning the city of cock. This incident also was referred to in Tamil epics and later literature.

sandstorm07 (1)Texas
Sand storm in Texas, USA

Sand Storm in Uraiyur

Once upon a time a Choza king named Parantakan was ruling from Uraiyur. At that time a saint known as Sarama Munivar had a beautiful garden with chrysanthemum flowers. He used to offer it to Lord Shiva every day. A servant named Mavalan stole the flowers every day and gave them to the king. The king never stopped him stealing, even though he knew it was stolen goods.

When Sarama munivar came to know this theft, he was furious. His anger brought a big sand storm to the town and destroyed it with the king. The king and the town got buried under the sand. This legend was spread by word of mouth.

Since Parantakan is a general Sanskrit title which several kings bore, we never knew the period of his rule. Though archaeological excavations were done, we did not have any clear proof for this incident. Hindus believe that saints anger can bring down kingdoms. Tamil Veda Tirukkural also (264, 269,894,898,899) stresses this.

sandstorm10 (1)OZ
Sand storm in Australia

Poet’s Anger destroyed a town

Poet Kalamegam was famous for his poems with pun and irony. He lived in the fifteenth century. When he went to Thirumalairayan Pattinam, local poets clashed with him. They challenged him on various counts but he answered all their questions. But the local king was partial and gave all the credits to local poets. Kalamegam was very angry. He composed two songs in which he prayed for the destruction of evil people. As soon as he recited both the verses a big sand storm struck at the town and engulfed it in the sand.
Tamils believe that a certain genre of poems can kill people. They believed in word power. Like the Sanskrit mantras, Tamil poems also produced several miracles. Particularly the life history of Nayanmars and Alvars (Tamil Saivite and Vaishnavite saints) are full of anecdotes where even Gods obey the words of their devotees.

I have given the full Tamil verses in my Tamil post.

Contact swami_48@yahoo.com

sandstorm11 (1)sudan

Sand Storm in Sudan, Africa.

மணலில் புதைந்த 2 தமிழ் நகரங்கள்

sandstorm11 (1)sudan

Picture of sand storm in Sudan

லண்டன் சுவாமிநாதன்

முனிவர்களோ புலவரோ சீறினால் சாம்ராஜ்யங்கள் சரிந்துவிடும். நகரங்கள் தீக்கிரையாகும். வெள்ளத்தில் தீயோர் அடித்துச் செல்லப்படுவர். திருவள்ளுவரும் இதைத்தெளிவாகவே கூறுகிறார் (894, 898, 899). பெரியாரைப் பகைப்பது எமதர்ம ராஜனை, “வாடா சண்டைக்கு என்று கை தட்டிக் கூப்பிடுவதற்குச் சமம்”– என்று அழகாக உவமிக்கிறார்.

ஒரு முனிவரின் கோபத்தால் உறையூர் அழிந்தது. ஒரு புலவர் கோபத்தால் திருமலைராயன் பட்டிணம் அழிந்தது. இதற்கு முன் நான் எழுதிய கட்டுரைகளில் ஆண்டாள், சம்பந்தர், வள்ளலார், திருப்பாண் ஆழ்வார், நந்தனார் முதலிய பல இந்து சாது, சன்யாசிகள் ஜோதியில் மாயமாய் மறைந்தது எப்படி? என்று விவரித்தேன். உளம் கடந்த செயல்கள் துறை விஞ்ஞானமும் இது முடியும் என்று ஒப்புக்கொள்கிறது. கண்ணகி மதுரையை அழித்ததையும், ஆதி சங்கரரும் பட்டினத்தடிகளும் அற்புதமாக அன்னையரின் சிதைக்குத் தீ மூட்டியதையும், தான்சேன் தீயை உண்டாக்கும் ராகத்தைப் பாடியதையும், முத்துசுவாமி தீட்சிதர் மழையை உண்டாக்கும் ராகத்தைப் பாடியதையும் தனித் தனி கட்டுரைகளில் எழுதிவிட்டேன்.

sandstorm10 (1)OZ
Picture of a sand storm in Australia

இதோ மணல் புயல் உண்டாக்கிய இரண்டு சம்பவங்கள்:

உறையூர் என்பது தற்கால திருச்சியின் பகுதி. 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாலன் முதலிய சக்தி வாய்ந்த சோழ மன்னர்களின் தலைநகரம். அங்கிருந்த நீதி மன்றத்தால் ‘அறம் துஞ்சும் உறந்தை’ எனப் புகழ் பெற்றது. கரிகால வளவனைப் பின் பற்றி பிரிட்டிஷ் நீதிபதிகள் இன்றும் வெள்ளை முடி அணிந்து தீர்ப்புக் கூறுவதை ஏற்கனவே கட்டுரையாக எழுதிவிட்டேன். இந்த உறையூர் பற்றி சிலப்பதிகாரமும் சங்கத் தமிழ் நூல்களும் வேறு ஒரு அதிசயத் தகவலையும் தருகின்றன.

ஒரு சோழ மன்னன் யானையில் வருகையில் பட்டத்து யானையை ஒரு சேவற் கோழி யானையின் கண்களில் கொத்தி அதை அடித்து விரட்டியதையும் அதனால் இந்த ஊருக்கு கோழியூர் என்று பெயர் ஏற்பட்டதையும் அவை எடுத்துக் காட்டுகின்றன. அதன் பின்னர் அந்த வீர மண்ணில் ஒரு நகரம் உதயமாகி சோழ சாம்ராஜ்யத்தின் தலை நகர் என்னும் சிறப்பை அடைந்தது.
இப்படிப் புகழ் வாய்ந்த உறையூரில் பராந்தகன் என்னும் சோழன் ஆளுகையில் சாரமா முனிவர் என்பவர் ஒரு நந்தவனத்தை உருவாக்கி சிவபெருமானுக்காக செவ்வந்தி மலர்ச் செடிககளை வளர்த்து வந்தார். மிக அழகான அந்த செவ்வந்தி மலர்களை ஒரு ராஜாங்க ஊழியன் திருடிக் கொண்டுபோய் அரசனுக்குத் தந்தான். அவனும் அதை விரும்பவே இந்தத் திருட்டு, வாடிக்கையாக நடக்கத் துவங்கியது.

திருட்டுப் பொருள் என்று தெரிந்துமே அரசன் இப்படி வாங்கியது முனிவருக்குப் பெருங்கோபத்தை உண்டாகியது. பெரியார் சீறினால் சிறியார் பிழைப்பரோ? பெரும் மணல் புயல் உண்டாகி உறையூரை மணலுக்குள் மன்னனோடு புதைத்தது என்பது செவி வழிக் கதையாகும்.
sandstorm07 (1)Texas
Picture of a sand storm in Texas,USA

தற்காலத்தில் உறையூரில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டபோதும் இந்த சம்பவத்துக்கான தெளிவான சான்று கிடைத்ததாகத் தெரியவில்லை. ‘பராந்தகன்’ என்ற சம்ஸ்கிருத விருதைப் பல மன்னர்களும் சூடி இருப்பதால் எந்த பராந்தகன் என்பதும் தெரியவில்லை. எது எப்படியாகிலும் தீ இல்லாமல் புகையுமா? ஒரு காரணம் இருப்பதால்தானே இந்தக் கதைகள் இன்றுவரை உலவுகின்றன.

காளமேகம் அழித்த பட்டினம்

கவி காளமேகத்தை அறியாதோர் இல்லை. சிலேடைக் கவி சக்ரவர்த்தி; ஆசு கவி மன்னன். மழை போல் கவி பொழிபவன்; ஒரு முறை திருமலைராயன் பட்டினம் சென்றபோது அரசவையில் கவிபாடினார். பொறாமை கொண்ட ஆஸ்தான கவிஞர்கள் பல தடைகளை எழுப்பவே இவர் அத்தனைக்கும் விடை பகன்றார். ஆயினும் மன்னர் ஓரச் சார்பாக நடந்துகொண்டு தனது அவைக்கள புலவர்களே வென்றதாகக் கூறினான். அவமானம் தாளாத ஆசுகவி காளமேகம் அறம் பாடினார்.

வடமொழியில் மந்திரங்கள் உள்ளது போலவே தமிழிலும் ‘அறம் பாடுதல்’ என்ற வழக்கம் உண்டு. உள்ளத்தால் பொய்யாது ஒழுகும் உத்தம புலவர்களுக்கும் சாது சன்யாசிகளுக்கும் இந்த அபூர்வ சக்தி கிடைக்கும். அவர்கள் கரு நாக்கில் விழுந்தவர்கள் பிழைக்க முடியாது. கருப்பு நிற ராஜ நாகத்தைவிடக் கொடியது அவர்களின் சொல்லாற்றல்.

காளமேகம் பாடி முடித்தவுடன் மணல் புயல் வீசி ஊரையே அழித்தது!

இதோ அவர் பாடிய பாடல்கள்:

“செய்யாத செய்த திருமலை ராயன் வரையில்
அய்யா அரனே அரை நொடியில்—வெய்ய தழற்
கண்மாரியால் மதனைக் கட்டழித்தாற் போற்றீயோர்
மண்மாரியால் அழியவாட்டு”

“கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்ற ஊர்
களைகளாய் நின்று கதறும் ஊர்— நாளையே
விண்மாரியற்று வெளுத்து மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான்”

sandstorm05 (1)Arizona

Picture os a sand storm in Arizona, USA
காளமேகம் ஆகட்டும், கண்ணகி ஆகட்டும் தீயோரை மட்டுமே அழிக்கும்படி பாடியது குறிப்பிடத்தக்கது. சாபங்களும் வரங்களும் என்ற எனது ஆங்கிலக் கட்டுரையிலும் பெரியோர்கள் மரணம் பற்றிய உண்மைகள் என்ற தமிழ்க் கட்டுரையிலும் மேலும் பல அதிசய விசயங்களை எழுதியுள்ளேன்.
கல்மாரி, மண்மாரி கதைகள் இன்னும் பல உள்ளன. மீண்டும் எழுதுவேன். எகிப்திய பாரோவுக்கு எதிராக மோசஸ் செய்த அற்புதங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ளன. அற்புதங்கள் என்பவை எல்லா மதங்களுக்கும் பொதுவானவை.
contact swami_48@yahoo.com

Hindu Quiz on Holy Forests

dandakaranya2

Dandakaranya

Post No. 733 by London swaminathan

(Vanam, Aranya are the Sanskrit words for Forest/Jungle)
1.What is the name of the forest that was burnt down by Arjuna and Krishna?
2. In which grove Sita was kept under custody by Ravana? Where was it?
3.Brindavan is associated with Lord…………?
4. Where did Suka recite the Puranas (mythology) to his disciples? Where is it?
5. What is the name of the forest that was visited by the famous Tamil saints Appar and Sambandhar ?

6. What are the sections named after forest in the Hindu epics Ramayana and Maha Bharata?
7. In what way Dandakaranya forest is linked to Rama?
8. What is the stage known as in which a family man is supposed to go to forest for penance?
9. What is the Upanishad that contains the word forest?
10. In which Vana (forest) Buddha gave his first sermon?

gangotri glacier2

Picture of Gangotri

11. What is the name given for the region that consists of forests in ancient Tamil literature?
12. What happened in Tarukavanam?
13.Where is Svetaranyam?
14. What God you can see in Badarivanam?
15. What is the name of the Vedic God in charge of forests?

16. What is the name of Forest Treatises in Vedas?
17. Where is Tapovan?
18. What is the name given to Indra’s garden?

naimisaranya-pKS-543020
Naimisaranya

ANSWERS:

1.Kandava Vanam; It was near modern Delhi.
2. Asokavan; it was in Sri Lanka
3.Krishna
4. Naimisaranya; it is in Uttar Pradesh. There is a famous Vaishnavite shrine with the same name.
5.Vedaranayam; once the area was full of woods. Now there is a small town with this name. Appar and Sambandhar did miracles in this place.

6. Ramayana: Aranya Kanda;Maha Bharata: Aranya Parva also known as Vana Parva
7. Dandakaranaya was he forest where Rama met several Rakshasas (demons) such as Kara, Dushana, Surpanaka.
8. Vanaprastha is the third stage in which one went to forest for self introspection and penance
9. Brhat Aranyaka Upanishad (Aranya means forest)
10. Mrga Vana (Deer Park)

Khandava in Flames
Khandava Forests in Flames sculpture

11. Mullai
12. Arrogant ascetics ignored gods. So Shiva and Vishnu went in the disguise of Bikshatana and Mohini and taught them a lesson at Tarukavanam (Vanam means forest)
13. Svetaranyam is Tiru Ven Kadu near Mayiladuthurrai
14. Badarivanam is the abode of Vishnu in the form of Nara Narayaa or Badari Narayana
15.Aranyani

16. Aranyakas
17. Tapovan is a common noun but there is one famous place with that name just above the Gangotri where Ganges originates
18. Indra’s garden is known as Nandanam. That is the name for Temple gardens as well.

Earlier Quiz posted by me:

27 Star Quiz (In English and Tamil)
Hindu Picture Quiz-1 (In English and Tamil)
தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
Hindu Tamil Quiz (in Tamil)
Hindu Tamil Quiz (in Tamil)-2
Hindu Tamil Quiz (in Tamil)-3
Hindu Tamil Quiz (in Tamil)-4
Hindu Quiz–1
Hindu Quiz–2
Hindu Quiz–3
Hindu Quiz–4
dandakaranya
Dandakaranya forest

For more of the same contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

காடுகள் பற்றி இந்துமதம்—-கேள்வி&பதில்

tapovan3

Tapovan area

Post No. 732 by London swaminathan

1.அர்ஜுனனும் கண்ணனும் அழித்த வனத்தின் பெயர் என்ன?
2.சீதையை ராவணன் சிறைவைத்த வனத்தின் பெயர் என்ன? அது எங்கே இருக்கிறது?
3. பிருந்தாவனத்துடன் தொடர்புடைய கடவுள் யார்?
4.முனிவர்கள் சுகப்பிரம்மத்திடம் புராணம் கேட்ட காடு எது? அது எங்கே உள்ளது?
5. எந்தக்காட்டுக்கு அப்பரும் சம்பந்தரும் சென்றனர்?

6. ராமாயணம், மஹா பாரதம் ஆகிய இரண்டு இதிஹாசங்களிலும் காட்டின் பெயராலுள்ள பிரிவுகளின் பெயர் என்ன என்ன?
7.தண்டகாரண்யத்துக்கும் ராமனுக்கும் என்ன தொடர்பு?
8.மனித வாழ்வின் நான்கு கட்டங்களில் வனத்துக்குச் செல்லும் கட்டத்துக்கு என்ன பெயர்?
9. காட்டின் பெயர் உடைய பெரிய உபநிஷத் எது?
10. புத்தர் முதல் பிரசங்கத்தை எங்கே நடத்தினார்?

gangotri glacier2

11. தமிழில் நாநிலப் பாகுபாட்டில் காடு, காட்டை சேர்ந்த இடத்துக்கு என்ன பெயர்?
12. தாருகாவனத்தில் என்ன நடந்தது?
13. ஸ்வேதாரண்யம் எங்குள்ளது?
14. பதரிவனத்தில் யாருடைய கோவில் இருக்கிறது?
15. வேதத்தில் காட்டிற்கு அதிதேவதை யார் என்று கூறப்பட்டுள்ளது?

16. காட்டில் உருவாக்கப்பட்ட வேதத்தின் பகுதிகளுக்கு என்ன பெயர்?
17. தபோவனம் எங்கே இருக்கிறது?
18. கோவில்களுக்காகப் பூச் செடிகளை வளர்க்கும் இடத்துக்கு என்ன பெயர்?

dandakaranya
Dandakaranya

ANSWERS:

1.காண்டவ வனம்
2.அசோக வனம்; இலங்கையில் இருக்கிறது
3. கிருஷ்ணன்
4. நைமிசாரண்யம். அது தற்போதைய டில்லியைச் சுற்றியுள்ள பகுதி. இதே பெயரில் ஒரு புனிதத் தலம் இப்போது உத்தரப் பிரதேசத்தில் இருக்கிறது.
5. வேதாரண்யம் எனப்படும் திருமறைக்காடு. இதைச் சுற்றியுள்ள காடுகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. இப்போது ஒர் ஊரின் பெயராக இருக்கிறது.

6. ராமாயணத்தில் ஆரண்ய காண்டம், மஹா பாரதத்தில் ஆரண்ய / வன பர்வம்
7.தண்டகாரண்யத்தில்தான் அரக்கர்களை வதம் செய்தான் ராமன். கர தூசணர்களை வதைத்தான்; சூர்ப்பநகையை அவமானப்படுத்தினான்.
8. வானப்ரஸ்தம் என்பது வனத்துக்குச் செல்லும் நிலை. அதற்கு முன் பிரம்மசர்யம், கிரஹஸ்தாஸ்ரமம் என்ற இரண்டு நிலைகளும் வானப்பிரஸ்தத்திற்கு அடுத்தபடியாக சந்யாசம் என்ற துறவு நிலையும் உண்டு.
9. பிருஹத் ஆரண்யக உபநிஷத் (ஆரண்யம், வனம் என்றால் காடு என்று பொருள்)
10. மான்கள் பூங்காவில் (ம்ருக வனம்) நடத்தினார்
naimisaranya-pKS-543020

Naimisaranya

11. முல்லை என்பது காடும் காட்டைச் சேர்ந்த பகுதியும் ஆகும்; குறிஞ்சி என்பது மலையும் மலையைச் சேர்ந்த பகுதியும் ஆகும்
12. தாருகாவனத்தில் செருக்குற்ற முனிவர்களை இறைவன் அடக்கினான். சிவன் பிட்சாடனராகவும் விஷ்ணு மோகினி உருவத்திலும் சென்று அவர்களுடைய பலவீனத்தை உணரச் செய்தனர்.
13. ஸ்வேதாரண்யம் என்பதன் தமிழ்ப் பெயர் திருவெண்காடு. இது மயிலாடுதுறை- பூம்புஹார் இடையே இருக்கிறது
14. இமய மலையில் பதரிவனத்தில் பத்ரி நாராயணர் ( நர நாராயணர் ) கோவில் இருக்கிறது. பத்ரிவனம் என்றால் இலந்தைமரக் காடு என்று பொருள். வியாசர் வசித்த இடம்
15. வேதக் கடவுள் அரண்யானி

16. ஆரண்யகம் (சம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் ஆகிய நான்கும் வேதத்தின் பகுதிகள்)
17. தபோவனம் என்பது தவம் செய்யக்கூடிய எந்தக் காட்டையும் குறித்தாலும் புகழ்பெற்ற தபோவனம் இமயமலையில் கங்கை நதி உற்பத்தியாகும் கங்கோத்ரி பனிக்குகைக்கு மேலாக இருக்கிறது. இதன் அருகில் நந்தவனம் என்ற பகுதியும் இருக்கிறது.
18. நந்தவனம். இது இந்திரன் தோட்டத்துக்கும் பெயர் ஆகும்.

Earlier Quiz posted by me:

27 Star Quiz (In English and Tamil)
Hindu Picture Quiz-1 (In English and Tamil)
தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
Hindu Tamil Quiz (in Tamil)
Hindu Tamil Quiz (in Tamil)-2
Hindu Tamil Quiz (in Tamil)-3
Hindu Tamil Quiz (in Tamil)-4
Hindu Quiz–1
Hindu Quiz–2
Hindu Quiz–3
Hindu Quiz–4

For more of the same contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

Goddess Kali Outsmarted!

Genius-is-1-inspiration-99-perspirationsuccessis

Post No 731 dated 4th December 2013

By London swaminathan

Inspiration & Perspiration: Bhatti & Vikramaditya

The greatest of the historical Indian kings is Vikramaditya. He lived in the first century before Christ. We have an era in his name. Hundreds of Indian kings who followed him had his title ‘Vikramaditya’. Nine great scholars including Kalidasa, known as Nava Ratna (Nine Gems) lived during his reign. There are lots of stories about Vikramditya, his wise minister Bhatti and royal poet Kalidasa. Stories of Vikram and Vetal are famous throughout India. One of the stories tells us about how they out smarted Goddess Kali!

When Goddess Kali appeared before Vikramaditya, she blessed him to ‘rule the country for one thousand years’! He boasted to his minister Vetala Bhatti about his boon. Wise Bhatti told him that he would make it 2000 years rule. Vikramaditya was surprised to hear it and asked for clarification. Bhatti told him to ‘rule the country’ for six months in a year and spend another six months in the forest. It would double the time of his rule. Vikram was very happy and was ready to follow his advice. But he wanted his minister to stay with him throughout his rule. Bhatti promised that he would also get a boon for 2000 year life span.

(This episode gave birth to the saying in Tamil “Kaadu Aru Matham, Naadu Aru Matham” meaning ‘forest six months, country six months’. This is a phrase even common man uses very often to refer any 50-50 situation! I am pretty sure this phrase exists in other Indian languages as well.)

Bhatti prayed to Goddess and she appeared before him. When he asked for 2000 year life span, Goddess Kali put a condition, just to avoid Bhatti. She asked Bhatti to cut off the head of Vikram and bring it to her. Bhatti went to Vikram and cut off his head while he was asleep. Vikram knew what happened but did not prevent Bhatti cutting his head off. Vikram had so much trust in his minister that whatever he did was for his good.

Seeing the head of Vikram, Kali kept her promise and blessed Bhatti to live for 2000 years. Immediately Bhatti sniggered at her. Kali was surprised and asked the reason for his laughter. Bhatti said to her, “Oh, I thought you are going to cheat me like you cheated my king Vikram. You gave him a boon to live for 1000 years and look here, I have got his head for you. Kali suddenly realised her ‘mistake’ and brought Vikram to life.

vikram

Vikram praised his wise minister Bhatti and both of them ruled for 2000 years. When Vikram was away in the forest for first six months, Bhatti ruled the kingdom. When Bhatti was in the forest, Vikram ruled.
This gave birth to a saying Mantra one quarter, Mathi/brain three quarters ( in Tamil ‘Manthiram oru kaal, Mathi mukkaal)’. We can say that ‘Perspiration one percent and Inspiration 99 percent’, contrary to the popular quotation “Genius is one percent inspiration and 99 % perspiration!

This type of stories existed from the days of epics and Puranas! The famous Satyavan & Savitri story was also based on word play. When Yama gave Savtri the boon of remaining a Deerga Sumangali ( married life with husband for a full life span), Savitri reminded Yama, the God of Death, that her husband must be revived immediately who died a short while ago.

Contact swami_48@yahoo.com

vikramaditya_acl31

அரவிந்தர் வாழ்க்கையில் நடந்த அற்புதங்கள்

sri-aurobindo

டிசம்பர் 5ஆம் தேதி அரவிந்தர் மஹாசமாதி தினம். அதையொட்டி அவரைப் போற்றும் அஞ்சலிக் கட்டுரை இது.

Post No 730 dated 4th December 2013

அரவிந்த யோகம் by ச.நாகராஜன்

வான் அரசாட்சி இம் மண்ணுலகத்திலே
வளர்ந்து செழித்திடவே
தேனருவி என மோனத்திலே நின்று
தெய்வக் கனல் பொழிந்தான்
மானவ ஜாதிக்கே அமர நிலை பெற
வாழும் வகையளித்தான்
போனது கலியுகம், பூத்தது புதுயுகம்
பூரணன் வாழியவே
வாழ்க அரவிந்தன் வாழ்க பராசக்தி
வல்லபன் வாழியவே!

-கவியோகி ஶ்ரீ சுத்தானந்த பாரதியார்

வேத நெறி தழைக்க வந்த அவதாரம்

தேசீயம் தெய்வீகம் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கலந்து அதையே தன் வாழ்க்கையாக்கி மனித குலத்தை சனாதன தர்மம் தந்த வேத நெறியில் உயர்த்த அவதரித்தவரே மஹரிஷி அரவிந்தர்.

மஹாசக்தி வழி நடத்திய புருஷர்

ஒரு மாபெரும் சக்தி அவரை வாழ்க்கை முழுவதும் வழி நடத்தி வந்தது. அந்த வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்களோ ஏராளம்!
1908ஆம் ஆண்டு மிர்ஜாபூரில் வெடித்த குண்டைத் தொடர்ந்து அரவிந்தர் அலிபூர் சிறையில் ஒன்பது அடி நீளம், ஐந்து அடி அகலம் உள்ள சிறிய அறையில் அடைக்கப்பட்டார்.அங்கு அனைத்தையும் வாசுதேவனாகக் கண்டார். ‘சர்வம் கல்விதம் ப்ரஹ்மம்’ என்ற மகத்தான அநுபூதியைப் பெற்றார். ஒரு நாள் அவர் உடல் தரையிலிருந்து மேலே சிறிது எழும்பியது. அந்த நிலையில் கைகளையும் உயர்த்தினார். எப்படி முயன்றாலும் அடைய முடியாத ஒரு விசித்திரமான நிலையில் அவர் உடல் இருக்கவே, அதைப் பார்த்த சிறை வார்டர் அரவிந்தர் இறந்து விட்டதாக மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்க, அவர்கள் ஓடோடி வந்து பார்த்த போது அரவிந்தர் இயல்பான நிலையில் இருந்து.
சிரித்தார். தன்னை இறந்ததாக அறிவித்தவனை முட்டாள் என்றார்!

இயல்பாகவே அரவிந்தருக்குத் தீர்க்கதரிசனக் காட்சிகள் தோன்றி வந்தன. அவரே கூறிய ஒரு சம்பவம் இது:- “ஒரு சமயம் சி.ஆர்.தாஸின் நண்பரான வ.ரா. (பிரபல தமிழ் எழுத்தாளராக பின்னால் புகழ் அடைந்தவர்) என்னைக் காண வருவதாக இருந்தது.அவரது தோற்றம் எப்படி இருக்கும் எனக் காண விரும்பினேன். நன்கு ஒட்ட வெட்டிய தலையோடு உரமான முரட்டு இயல்போடு கூடிய ஒருவரின் தோற்றத்தைக் கண்டேன். ஆனால் வ.ரா நேரில்வந்த போது சாந்த முகம் உள்ள தென்னிந்திய அந்தணருக்கே உரித்தான தோற்றத்துடன் விளங்கினார்! ஆனால் இரு வருடங்களுக்குப் பிறகு அவரை மீண்டும் சந்தித்த போது நான் முதலில் எப்படிக் கண்டேனோ அப்படி அவர் மாறிவிட்டிருந்தார்.”

டீ அடிமையாக அவர் இருந்த போது தனது மைத்துனர் எப்போது டீ கொண்டு வருவார் என்று அவர் எண்ணிய சமயத்தில் எதிரே இருந்த சுவரில் டீ வரும் சரியான நேரம் எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. சரியாக அதே நேரத்தில் டீயும் வந்தது. “அன்று முதல் தினமும் டீ வரும் நேரம் சுவரில் எழுதப்படுவதைக் கண்டேன்” என்று அரவிந்தர் பின்னால் தன் அனுபவங்களைக் கூறினார்.

பாண்டிச்சேரி செல்!

சிறையில் அவருக்கு உள்ளிருந்து குரல் ஒன்று கிளம்பி அவர் செய்ய வேண்டியதைப் பணித்தது.அது எந்த காரணத்தையும் சொல்லாமல் இதைச் செய்; அதைச் செய் என்று மட்டும் பணித்தது. மற்றவர்கள் எல்லாம் அவரை பிரான்சுக்குச் செல்ல ஆலோசனை தந்த போது அவரது உள்ளார்ந்த குரலோ அவரை பாண்டிச்சேரி செல்லுமாறு கூறியது.31-3-1910 அன்று கல்கத்தாவிலிருந்து கப்பலில் கிளம்பிய அரவிந்தர் 4-4-1910 அன்று மூன்று மணிக்குப் புதுவை வந்து சேர்ந்தார். அங்கு மகத்தான யோக சாதனையைச் செய்தார். எதற்காக புதுவைக்குச் செல்லச் சொன்னதோ அந்த மஹாசக்தியின் விருப்பப்படி அரவிந்த ஆசிரமமும் உருவானது.

1926ஆம் தேதி நவம்பர் மாதம் 24ஆம் தேதி கிருஷ்ணர் பூவுலகில் அவரது உடலில் ஆவிர்பித்ததை அவர் அறிவித்தார். அது இன்றளவும் சித்தி தினமாக்க் கொண்டாடப்படுகிறது. சூபர்மைண்ட் எனப்படும் அதிமானுட மனமும் ஆனந்தமும் பெரும் பணியை நிறைவேற்ற வந்திருப்பதை அனைவரும் அறிந்து மகிழ்ந்த அன்றைய தினத்தில் அரவிந்தர் தனிமையை நாடித் தன் பெரும் பணியை மேற்கொண்டார். அதன் பின்னர் வருடத்திற்குச் சில குறிப்பிட்ட தினங்களே அவரை தரிசிக்கும் பாக்கியம் சாதகர்களுக்குக் கிடைத்தது.

Sri_aurobindo2

அன்னையின் பார்வை

புதுவை வந்த அன்னை ஆசிரமத்தின் பெரும் சக்தியாக மாறினார்.
அரவிந்த ஆசிரமம் நிறுவப்பட்டவுடன் அன்னை ஆசிரமத்தை நிர்வகிக்கும் பணிகளை மேற்கொண்டு சாதகர்களுக்கு உற்ற வழிகாட்டியாகவும் ஆனார். அன்னையின் பல்வேறு அபூர்வ சித்திகளையும் சக்திகளையும் அரவிந்தர் எளிதில் உணர்ந்து கொண்டார்.அன்னையின் பார்வை சகல வல்லமை படைத்தது என்பதை அரவிந்தர் அனைவருக்கும் எடுத்துரைத்தார்.
சாதாரணமாக உடல் அளவில் அன்னை பெற்றிருந்த சக்தியைக் கூட அவர் அறிந்து வைத்திருந்தார். ஒரு முறை அன்னையின் பார்வை ஆற்றலைப் பற்றி அவர் இப்படிக் குறிப்பிட்டார்:-“சிறு வயதில் அன்னைக்கு இருளில் கூடப் பார்க்கும் சக்தி இருந்தது.எங்கும் பார்க்கும் ஆற்றலை அவர் வளர்த்துக் கொண்டார்.இப்போது கூட தனக்குப் பின்னால் உள்ள அனைத்தையும் அவரால் பார்க்க முடியும்.அவர் கண்களின் பார்வையை விட இந்தப் பார்வை இன்னும் துல்லியமாக இருக்கும். கண்களை மூடிக் கொண்டாலோ இது இன்னும் நன்கு வேலை செய்யும்.”

கூடவே வரும் துணை

அரவிந்தரின் யோகம் அவருக்காக மட்டும் செய்யப்படவில்லை. அவரே ஒரு முறை,” முக்தியையும் பரிபூரணத்வத்தையும் எனக்கு மட்டும் பெற எண்ணி இருந்தேனென்றால் எனது யோகம் நெடும் காலத்திற்கு முன்னரே முடிந்திருக்கும்.எனது சித்தியானது மற்றவர்கள் அதை அடைவதற்கு ஒரு முன்னோடி தான்.” என்று குறிப்பிட்டார்.ஆக சாதகர்களுக்கு அவர் எப்போதும் உற்ற துணையாக இருந்தார்; இருந்து வருகிறார்!

பிரபல எழுத்தாளரான பால் பிரண்டன் தன்னுடன் உற்ற துணையாக யாரோ கூட வருவது போன்றே உணர்ந்து வந்தார். அரவிந்தரின் போட்டோவைப் பார்த்த போது அது ‘கூட வரும் துணையைப்’ போல இருக்கவில்லை.ஆனால் அரவிந்தரை நேரில் தரிசித்த போது ‘கூட வரும் துணை’ அவரே என்பதை உணர்ந்து கொண்டார்.

நான் தருகிறேன் உத்தரவாதம்

பாரதம் சுதந்திரம் அடைவது பற்றிய பேச்சை சில சீடர்கள் எழுப்பிய போது அவர்களுள் ஒருவர் “அப்படி ஒரு சுதந்திரம் வர உத்தரவாதம் வேண்டுமே” என்றார். உடனே அரவிந்தர், “ அதற்கு நான் தருகிறேன் உத்தரவாதம்” என்று கூற அனைவரும் வியப்படைந்தனர். அவர் அளித்த உறுதியின் படியே பாரதம் சுதந்திரம் பெற்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் அவரது பிறந்த நாள். எனது பிறந்த நாள் பரிசாக இரண்டு பகுதிகளாக இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று அவர் பிரிவினை பற்றிக் கூறினார். ஆனால்,” பாரதப் பிரிவினை இயற்கையானதல்ல; அது போக வேண்டும். போய் விடும்” என்று தீர்க்கதரிசன வாக்கைக் கூறியுள்ளார்.

பாரத தேசம் மகோன்னதமான நிலையை எய்தும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ள அரவிந்தர் அந்த உயரிய நிலை உலகம் முழுவதும் மேம்படுவதற்கான ஒரு ஆரம்பம் என்று அருளினார். அவரது அற்புதமான பூரண யோகம் இதை நோக்கமாகக் கொண்டே அனுஷ்டிக்கப்பட்டு பூரணாத்மாக்களை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

பவானி பாரதி

பவானி பாரதி என்ற அற்புதமான சதகத்தை – நூறு பாடல்கள் கொண்ட சம்ஸ்கிருத நூலை அரவிந்தர் யாத்துள்ளார். உக்கிர மான காளியின் அற்புதவர்ணனைகளுடன் மயிர்க்கூச்சலெழுப்பும் சொற்களுடன் உள்ள ஸ்லோகங்களில் உத்திஷ்ட (எழுமின்)
ஜாக்ரத (விழிமின்) என்ற ஆவேசமூட்டும் சொற்களைக் காணலாம். அதில் இனி வேதகோஷம் முழங்கும் என்றும் துஷ்டன் அழிவான் என்றும் புகழோங்கிய நிலையை பாரதம் அடையும் என்றும் பாடியுள்ளார்.

அரவிந்தரின் பணி பாரதத்தை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து அதன் பண்டைய நாகரிகத்தை உணர்த்தி அதன் அடிப்படையில் புதிய யுகத்தை உலகத்தில் நிர்மாணிப்பதே!

அரவிந்த யோகம்

அரவிந்த யோகம் என்றால் என்ன என்பதை -கவியோகி ஶ்ரீ சுத்தானந்த பாரதியார் அழகுற இப்படி விளக்குகிறார்:-
பக்தி யோகம், நிஷ்காம்ய கர்ம யோகம்,கடவுளைத் தியானத்தால் கலந்து நிற்கும் ஞான யோகம், எல்லோரையும் சமமாகக் காணும் சர்வாத்ம சித்தி எல்லாம் ஒருங்கே சேர்ந்தது ஶ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்.

அரவிந்த யோகம் உலகை உயர்த்துகிறது.அழகில் தெய்வத்தைக் காண்கிறது.அழகை ஆத்ம பரிபூரணத்திற்கு ஒரு வழியாக்குகிறது.வாழ்வைக் குறுக்கி ஒடுக்காமல் விரிந்து பொலியச் செய்கிறது.உலக வாழ்வையே தெய்வ சித்தி பெற ஓர் அகண்ட சமரஸ யோகமாக்குகிறது.

இதுகாறும் உலகில் பெரியார்கள் வகுத்த யோக சாதனங்களின் நன்மைகளை எல்லாம் தன்னகத்துக் கொண்டுள்ளது அரவிந்த யோகம்.அது ஒரு தோட்ட ரோஜாக்களை ஒரு சிறு அத்தர் புட்டியில் காண்பது போன்றது. அது மனிதனில் தெய்வத்தை விளக்குகிறது. வாழ்வை எல்லாம் யோகமாக்குகிறது.”

அரவிந்த யோகத்தை வாழ்க்கை முறையாகக் கொண்ட சாதகர்கள் பெருமளவில் பெருகும் போது இந்தியா அமர நிலையை எய்தும் முறையை உலகிற்குக் கற்பிக்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!

சின்ன உண்மை!
பவானி பாரதி மிகவும் சக்தி வாய்ந்த உக்ரமான சொற்களால் ஆன நூறு பாடல்களைக் கொண்ட நூல். மாதிரிக்கு ஒரு ஸ்லோகத்தின் அர்த்தம்:-
இதயத்திற்கு அம்ருதத்வத்தை வழங்கும் வேத கோஷ முழக்கத்தை மீண்டும் நான் வனங்களில் கேட்கிறேன். ஆன்ம ஞானத்தை அடைந்த, பெருக்கெடுத்தோடும் மனித குல வெள்ளமானது ரிஷிகளின் குடில்களை நோக்கிப் பாய்கிறது.
பவானி பாரதி 93 ஆம் ஸ்லோகம்
Contact swami_48@yahoo.com

*****************

A Tamil Muslim Miracle!

சீதக்காதி, தனசெகரன் போட்டோ

Picture of Seethakkathi arch at Keelakkarai

Hits so far 210,636
Post No. 729 dated 2nd December 2013 by london swaminathan

There is a well known proverb in Tamil about elephants. “An elephant is worth thousand gold coins, whether it is alive or dead”. Equally famous was another Tamil saying “ Seethakathi gave even when he was dead”. Seethakathi was a good scholar, patron of Tamil poets and a great philanthropist. He was doing shipping business and exported goods such as black pepper from India. He lived in the later part of seventeenth century in the east coast of Tamil Nadu.

Seethakkathi’s real name was ‘Sheik Abdul Kader’ which was changed into spoken Tamil as Seethakkathi! He lived around 1650. He had very good relations with people of other religions. King of Ramnad Kizavan Setupati appointed him as one of his ministers and several Hindu temples were constructed during his period.

He was born near Keelakkarai and lived in Keelakkarai. His name and fame spread far and wide. He supported one of the poets of his time, Umaru Pulavar. Umaru was the author of a monumental work ‘Seera Puranam’, life history of Prophet Muhammad in Tamil. There was a big famine in his part and he gave lot of money to feed the poor. One of the famous contemporary poets, Padikkasu Pulavar, praised him sky high for his philanthropy. “When the prices of same measure of paddy and gold were same, you gave paddy to feed the people without expecting any credit for it. What a great charity it was!”

seethakkathi

Picture of Seethakkathi grave

During his tour, a poor man met Seethakathi and told him about the difficulty in getting his daughter married for want of money. When Seethakkathi came forward to give him money, the poor man told that he would take the money when the marriage was finalised. After sometimes Seethakathi died suddenly. The poor man came all the way to Keelakkarai to get the money for his daughter’s wedding, without knowing Seethakkathi’s demise. Town people gave him the bad news when he enquired about the whereabouts of Seethakathi.

The poor man felt very sad but yet wanted to pay his respects at his grave. When he went to Seethakkathi’s grave and paid his respects suddenly a hand protruded from below the grave. It was Seethakkathi’s hand and there was a pearl studded gold ring in one of his fingers! The man took it and thanked his philanthropy even after he died. This gave the popular Tamil phrase “Seththum Kodthaan Seethakkathi” meaning Seethakkathi gave even after his death!

(There is an alternate version to this anecdote. Some people believe that it was Padikkasu Pulavar who went to his grave when the miracle happened! Whoever it was, the popular saying is known even to a child in Tamil Nadu today).