Lapis lazuli in rock formation.
கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1272; தேதி: 7 செப்டம்பர் 2014
சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் இந்தியப் பெருநிலப்பரப்பில் இருந்து லபிஸ் லசூலி (Lapis Lazuli) என்னும் நீலக்கல் உலகின் பழம்பெரும் நாகரீகங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதை சுமேரிய, எகிப்திய நாகரீக தொல்பொருட் தடயங்கள் மூலம் ஐயம் திரிபற அறிகிறோம்.
ஒருகாலத்தில் இந்துக்களின் ஆட்சி பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், அதற்கும் அப்பால் உள்ள இராக், ஈரான், துருக்கி, சிரியா வரை பரவி இருந்தது. இதற்கு மறுக்க முடியாத தொல்பொருட் சான்றுகள் இருப்பதால் எல்லா தேச அறிஞர்களும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இதில் ஒரு வரி கூட வெள்ளைக்காரன் எழுதிய பாடப் புத்தகத்தில் கிடையாது. இது அவன் பிழை அன்று. அதை இன்று வரை படித்துக் கொண்டிருக்கும் முட்டாள்களாகிய நம்முடைய பிழையே.
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் கூட 1936-ஆம் ஆண்டு சென்னைப் பிரசங்கத்தில் சொன்ன பொகஸ்கோய் Bogazkoy (துருக்கி) கல்வெட்டோ, போர்னியோவின் (இந்தோநேசியா) அதிபயங்கர காட்டிற்குள் கண்டு பிடிக்கப்பட்ட மூலவர்மனின் (Mulavarman Inscription in Borneo) கல்வெட்டோ இன்றுவரை நமது பாடப் புத்தகத்தில் இல்லாதது இந்துக்களின் தலைவிதி! இந்தியாவின் துரதிருஷ்டம்.
இராக் நாட்டில் ‘ஊர்’ (Ur) என்னும் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரசர் கல்லறைகளில் நீலக்கல் (லபிஸ் லசூலி) நகைகள் உள்ளன. இது கி.மு.2500ஆம் ஆண்டைச் சேர்ந்தது.
எகிப்து நாட்டில் லபிஸ் லசூலி இல்லாத இடமோ நகைகளோ இல்லை. அவர்களுக்கு நீல நிறத்தில் அவ்வளவு ஆசை. உயர்ந்தவகை நீலம் (சFபைர் Saphire) அரிதாகவே கிடைக்கும்; விலையும் உயர்வு. ஆகையால அவர்கள் ஆப்கனிஸ்தான் (படக்சான் Badaksan), பாகிஸ்தான் ( Quetta குவெட்டா) ஆகிய இடங்களில் வெட்டி எடுத்து சுமேரியா வழியாக வந்த நீலக் கல்லைப் பயன்படுத்தினர். எகிப்தில் பெரும்பாலும் இவை மெசபொடோமியா பொருட்களுடனே கிடைக்கிறது. லபிஸ் லசூலி என்றால் நீலக் கல் என்று பொருள். இதை வெட்டி எடுப்போர் இன்றும் நீலி (நீலம்), அஸ்மானி (வானம்), சுவ்சி என்ற வடமொழித் தொடர்புடைய சொற் களையே பயன்படுத்துவது குறிப்பிடற்பாலது
இப்போது ஆப்கனிஸ்தான, பாகிஸ்தான் என்று அழைக்கப்படும் நாடுகள் எல்லாம் இஸ்லாம் என்னும் மதம் தோன்றுவதற்கு முன் இந்து பூமியாக இருந்தன. ஆப்கனிஸ்தானில் உள்ள காண்டஹார் (Kandahar) நகரம் காந்தாரம் என்னும் சொல்லின் மருவு ஆகும். அங்கிருந்து வந்த காந்தாரியைத்தான் மஹாபராதப் புகழ் திருதராஷ்ட்ரன் கல்யாணம் கட்டினான். ஈரான் ஆப்கன் எல்லையில் உள்ள கேகய நாட்டின் பேரழகி கைகேயியைத் தான் தசரத மாமன்னன் மணம் புரிந்தான். அவள் வீராதி, வீரி, சூராதி சூரி!! தேர் ஓட்டுவதில் நிபுணி. ஒரு போரில் அசுரர்களை வெல்ல அவள் உதவியதே இரண்டு வரங்களுக்குக் காரணம் ஆகி ராமனைக் காட்டுக்கு அனுப்பி வைத்தன.
தசரதன் இறந்தவுடன் பரதனுக்கு விஷயத்தைச் சொல்லாமல் அவனை அழைத்த வந்தனர். அவன் தேரில் சிட்டாகப் பறந்துவந்த மார்க்கத்தை வால்மீகி வருணித்துள்ளான. இதன் மூலம் ராமாயாண கால ‘ரோட் ட்ரான்ஸ்போர்ட்’ (சாலைப் போக்குவரத்து), ஈரான் எல்லை முதல் உத்தரப் பிரதேச அயோத்தி வரை எவ்வளவு சீராக இருந்தது என்பதை அறிய முடிகிறது!!
இந்த காந்தார நிலப்பரப்புக்கு அருகில்தான் லாபிஸ் லசூலி வெட்டி எடுக்கப்பட்டது. பிற்காலத்தில் பாகிஸ்தான் குவெட்டா பகுதியிலும் கண்டு பிடிக்கப்பட்டது. அதில் ஒரு சில பகுதிகள் சிந்து சமவெளி நாகரீகப் பகுதிக்குள் இருந்தவை. சுமேரில் கிடைத்த ஒரு நீலக்கல் முத்திரையில் சிந்து சமவெளிக் காளையின் படமும் உளது.
இப்போது முஸ்லீம்களின் ஆட்சிக்குள் வந்துவிட்ட சிரியா-துருக்கி பிரதேசங்களில் வேத கால நாகரீகம் கி.மு 1480-ல் கொடிகட்டிப் பறந்தது. துருக்கி நாட்டின் தலை நகரமான அங்காரவில் இருந்து 130 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பொகாஸ்கோய் என்னும் இடத்தில் களிமண் பலகைக் கல்வெட்டுகளின் இந்திரன், மித்திரன், வருணன், அக்னி ஆகிய நான்கு வேத கால தெய்வங்களின் பெயரில் சத்தியம் செய்து சமாதான உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளனர். நான் இன்றும் லண்டனில் தினமும் செய்யும் சந்தியாவந்தனத்தில் இந்த நாலு தெய்வங்களையும் வணங்கும் மந்திரம் வருகிறது. இதை எழுதும்போது உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. 4000 ஆண்டுகளாக ஒரு மந்திரம் ஆசியா கண்டம் முதல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மற்ற நாட்டுக கடவுளர் எல்லாம் மியூசியத்துக்குள் கண்ணாடிப் பெட்டிக்குள் பூட்டப்பட்டு விட்டனர்.
Sumer Sear with Indus Valley Bull
இந்த ஒரு தடயம் மட்டும் இருந்திருந்தால் வெள்ளைக்காரன் மூடி மறைத்து புதிய வியாக்கியானம் கொடுத்திருப்பான். மிட்டனியை (Mitanni) ஆண்ட மன்னர்களின் பெயர் எல்லாம் சம்ஸ்கிருதப் பெயர்கள்!! தசரதன், பிரதர்தனன் (விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் பெயர்) முதலிய பெயர்கள். அவன் ராஜ்யத்தைல் இருந்து குதிரைப் பயிற்சிக்கு அனுப்பிய கிக்குலி Kikkuli என்பவன் ஒரு அஸ்வசாஸ்திர நூல் Horse Training Manual எழுதி இருக்கிறான. அதில், ஏகம், த்வீதியம், த்ருதீயம் முதலிய சம்ஸ்கிருத எண்கள் உள. அதுமட்டுமல்ல. அந்த தசரதன் எழுதிய கடிதங்கள் எல்லாம் எகிப்து நாட்டில் ‘’அமர்னா லெட்டர்ஸ்’’ Amarna Letters என்ற பெயரில் களிமண் பலகைகளில் சேர்த்துவைக்கப் பட்டுள்ளன. அதில் தசரதன் ஒரே புலம்பல்! படிக்கும்போது வேடிக்கையாக இருக்கும். அவன் பெண்ணை எகிப்து மன்னன் மூன்றாம் அமனோபிஸ் (Amenophis III மன்னனுக்கு மணம் முடித்தான். அவள் பெயர் ததுகிபா (Taduhepa). அதற்குப்பின் ‘’அன்புள்ள மாப்பிள்ளையே உனக்கு ஐந்து தேர்கள், ஐந்து குதிரைகள், என் பெண்ணுக்கு தங்க மோதிரம், கொஞ்சம் தங்கம், நிறைய ரத்தினக் கற்கள் அனுப்[பியுள்ளேன். பெற்றுக்கொள்க’’. என்கிறான். இதற்குப் பின் எழுதிய கடிதங்களில் ‘’ஏன் பதிலே போடவில்லை, நான் அனுப்பியது எல்லாம் என்ன ஆயிற்று?’’ — என்றெல்லாம் புலம்பி இருக்கிறான்.
கி.மு 1340ஆம் ஆண்டில், இன்றைக்கு 3340 ஆண்டுகளுக்கு முன், தசரதனைப் (Tushretta) படுகொலை செய்து விடுகின்றனர். எகிப்திய மன்னனும் காலமாகி விடுகிறான். தசரதன் பெண் தது கிபாவை (தத்த சிவா) அமனோபிஸ் இறந்தவுடன் அவன் மகன் திருமணம் செய்துகொள்கிறான். எகிப்தியர்கள் தங்கையையே கல்யாணம் செய்கையில் சின்னம்மா எம்மாத்திரம்!!
இந்த தசரதன் ராமாயண தசரதன் அல்ல. இவன் வேறு. ஆக கி.மு.1400 ஆண்டை ஒட்டி கங்கை நதி முதல் ஈரான் வரை நம்மவர்கள் ஆண்டுவந்தனர். இப்போது எல்லாம் மாற்று மதத்தினரின் கைக்குள் போய்விட்டதால் இந்த ஆராய்ச்சி எல்லாம் ஆமை வேகத்தில், நத்தை வேகத்தில் நடைபெறுகிறது. சிரியா (சூர்ய), இரான் (ஆர்ய), பாக்தாத் (பகவான் தத்), துருக்கி (துரக / குதிரை ஸ்தானம்) என்பதெல்லாம் அறிஞர்கள் கண்ட உண்மை. ஆனால் இன்றுவரை எல்லா நாடுகளிலும் ‘’ஸ்தானம்’’ என்ற சம்ஸ்கிருதச் சொல் மட்டும் அழியா இடம் பெற்றுவிட்டது. ஜனஸ்தானம் (மக்கள் இருப்பிடம்) என்பது இப்படிச் சுருங்கிச் சுக்காய்ப் போய்விட்டது!!
வேத கால முனிவர்களுக்கு நூற்றுக் கணக்கான ஒட்டகங்கள் பரிசளிக்கப்பட்டதை உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதம் பகரும். இது காணப்படும் ரிக் வேத (Eighth Mandala) எட்டாம் மண்டலம் மிகவும் மர்மம் நிறைந்த மண்டலம். பலரும் இது ஈரானிய நிலப்பரப்பைச் சேர்ந்ததோ என்றும் ஐயம் கொள்வர். இது பற்றி தனியாக எழுதுகிறேன். ரிக் வேதத்தில் 99,000 வண்டிகள், 99000 வண்டிச் சரக்குகள் பற்றி எல்லாம் பாடி இருக்கின்றனர். இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கையில் நம்மவர்கள் இராக் ( சுமேர், பாபிலோனிய, மெசபொடோமிய பூமி) மற்றும் ஈரான் வரை செல்வதெல்லாம் நம்பக் கூடியதே என்று காட்டும். இதற்கு லபிஸ் லசூலி கற்களும் அவைகளாலான நகைகளும், சிலைகளும் அழியாத சான்றுகளாக நீடிக்கின்றன.
INDUS VALLEY CIVILIZATION என்னுடைய முந்தைய கட்டுரைகள்:
சிந்து சமவெளியில் பேய் முத்திரை
சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் Aug.23, 2012
‘எள்’ மர்மம்: ரிக் வேதம் முதல் சிந்து சமவெளி வரை! Post No 755 dated 23/12/13
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி1 November 2012
சிந்து சமவெளியில் செக்ஸ் வழிபாடு (26/7/13)
கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி – எகிப்து அதிசய ஒற்றுமை (15/10/12)
‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’ Post-763 dated 28th Dec. 2013.
Trade Routes of ancient world.
சிந்து சமவெளியில் அரசமரம்
சிந்து சமவெளி நாகரீகம் பெயரை மாற்றுக! March 29, 2014
1500 ஆண்டு பிராமண ஆட்சியின் வீழ்ச்சி 24-3-14
சிந்து சமவெளி பிராமணர் தொடர்பு ((Post No 1033, Date 10-5-14)
சிந்து சமவெளியில் இந்திரன்- செப்.6, 2014.
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.