இந்துமதமும் விஞ்ஞானமும்: கடல் கடைந்த கதையில் சில அறிவியல் உண்மைகள்!

axis2

இந்துமதமும் விஞ்ஞானமும்: கடல் கடைந்த கதையில் சில அறிவியல் உண்மைகள்!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1406; தேதி 12 நவம்பர், 2014.

தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்தனர். பதினான்கு “ரத்தினங்கள்” கடலில் இருந்து தோன்றின என்பது பாகவதம், மஹாபாரதம் முதலிய புராண, இதிஹாசக் கதைகளில் உள்ளன. கம்போடியாவில் உள்ள அங்கோர்வட் கோவிலில் கூட இதைச் சிற்பமாக வடிக்கும் அளவுக்கும், தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக் விமான நிலையத்தில் பிரம்மாண்டமான சிலை வைக்கும் அளவுக்கும் பிரபலமான கதை இது. தென்கிழக்காசியா முழுதும் இக்கதை பிரசித்தம்.

இதில் ஏதேனும் விஞான உண்மை இருக்கிறதா? இருக்கிறது.
14 ரத்தினங்களில் ஒன்று நிலவு. இதுவும் கடலில் தோன்றியது என்பது விஞ்ஞான உண்மையே. தமிழன் மிகவும் அறிவு வாய்ந்தவன். நிலத்தில் இருந்து – நாம் வாழும் பூமி என்னும் நிலத்தில் இருந்து— அது தோன்றியதால் அதற்கு நில+வு என்று பெயர் வைத்தான் என்பதை முன்னர் நான் எழுதிய நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு என்ற இரண்டு கட்டுரைகளில் எழுதினேன். இதை வடமொழி நூல்கள் கடலில் இருந்து வந்ததாக எழுதின. ஏன்?

நிலவு தோன்றிய இடம் இன்று பசிபிக் சமுத்திரமாக மாறிவிட்டதால் இப்படி எழுதினர். அது என்ன கதை?

பரிணாமக் கொள்கையை நமக்கு அளித்த சார்ல்ஸ் டார்வினின் மகன் ஜார்ஜும் ஒரு விஞ்ஞானி. பரிணாமக் கொள்கை நமது தசாவதாரத்தில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு காலத்தில் ஒரு பெரிய கிரஹமோ வால் நட்சத்திரமோ பூமியில் மோதிய போது பூமியில் இருந்த ஒரு பகுதி பிய்த்துக் கொண்டுபோனது. அந்த இடம் நீரால் நிரப்பப்பட்டு பசிபிக் பெருங்கடல் ஆகிவிட்டது. நிலவின் விட்டமும் பசிபிக் மஹா சமுத்திரத்தின் நீள, அகலமும் சரியாகப் பொருந்துகின்றன என்று ஜார்ஜ், 1800 ஆம் ஆண்டுகளில் ஒரு கொள்கை வெளியிட்டார். நிலவைத் தூக்கிவந்து அப்படியே பசிபிக் பெருங்கடலில் வைத்தால் நமக்கு முழு லட்டு கிடைத்த மாதிரி பூமி உருண்டை பூர்த்தியாகும்.

பசிபிக் பெருங்கடலைத் தோற்றுவித்த காரணத்தினால் இப்படி நம்மவர் சொன்னார்கள் என்று கொள்வதில் பசை இருக்கிறது. அது சரி, மற்ற 13 பொருள்களுக்கு விளக்கம் என்ன? என்று நீங்கள் கேட்கலாம்.14 ரத்தினங்கள் வந்ததையும் ஒரே நிகழ்ச்சியாகக் காணாமல், நீண்ட கால மனித குல நாகரீக வளர்ச்சியாக இதைக் காண வேண்டும்.

AB65137

முதலில் 14 ரத்தினங்கள் என்று புராண இதிஹாசம் தரும் பட்டியலில் சில வேறுபாடுகள் இருப்பதை அறிதல் நலம். ஆகையால் நான் கொடுக்கும் பட்டியலில் 14க்கு மேல் இருக்கும். இதுவரை எத்தனையோ பேர் இவைகளுக்கு பலவித விளக்கங்கள் கொடுத்தனர். ஆனால் அவை திருப்தி அளிப்பதாக இல்லை. இவை இந்துக்களின் கடல் கடந்த்த நாகரீக வளர்ச்சியைக் காட்டுகிறது அத்னையும் வெளிநாட்டில் இருந்து கப்பல் மூலம் வந்ததால் இதைக் கடலைக் கடைந்ததாகக் கூறினர் என்றார் ஒருவர்.
இன்னும் ஒருவர் இவைகளுக்கு தத்துவ விளக்கங்களைக் கொடுத்தார். எனது விளக்கம் இதோ:–

14 “ரத்தினங்கள்:
சந்திரன் (சோம, நிலவு)
வாருணி ( கள், சுரா பானத்தின் அதிபதி)
உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை
ஐராவதம் என்னும் யானை
காம தேனு என்னும் பசு/சுரபி
பாரிஜாதம் – மரம்
கற்பக விருக்ஷம் – மரம்
கௌஸ்துப மணி
குடை
காதுகளுக்கான தோடு
அப்சரஸ் – தேவலோக அழகிகள்
சங்கு
லெட்சுமி – செல்வத்தின் அதி தேவதை
ஜ்யேஷ்டா- மூதேவி; நித்திரை, சோம்பேறித்தனம் ஆகியவற்றின் கடவுள்
தன்வந்திரி – டாக்டர்
காலகூட விஷம்
அமிர்தம்

483px-Samudramanthan

மிருகங்களான யானை, குதிரை, பசுமாடு ஆகிய அனைத்தும் வனத்தில் திரிந்தன. மனிதன் அவைகளைப் பிடித்து சாதுவாக்கி பயன்படுத்தத் துவங்கியதையே – பாற்கடலில் இருந்து— வந்ததாகக் கூறுகிறோம் எனக் கொள்ளலாம்.

அது போலவே சங்கு, அப்சரஸ் பெண்கள் முதலியவற்றை இசை, நடனம் முதலிய கலைகளை மனிதன் வளர்த்த கட்டம் எனக் கொள்ளலாம்.

தோடு, கௌஸ்துப மணி என்பன மனித குலம் – பாஷன்- முதலியவற்றை ஏற்ற நிலை.
வெண்கொற்றக் குடை என்பது மனிதர்கள், தங்களுக்குள் அரசன் என்று ஒருவனை நியமித்த கால கட்டம். அதாவது முதல் மனு.

லெட்சுமி என்பவள் உழைப்பின் பலன் – வைஸ்யர்கள் தோன்றி கடல் கடந்து வணிகம் செய்த கட்டம். இதைச் செய்யாதவர்களுக்கு கிடைப்பது ஜ்யேஷ்டா (மூதேவி). இது சோம்பேறித் தனமான கட்டம்.
தன்வந்திரி என்பது ஆயுர்வேதம், சித்தா முதலிய மருத்துவ வளர்ச்சி ஏற்பட்ட கட்டம்.
அழகான பூக்கும் மரங்கள் பாரிஜாதம், கற்பக விருட்சம் ஆகியன மனிதன் மரங்களைப் பயன்படுத்தி தோட்டம், நந்தவனம் ஆகியவற்றை ஏற்பத்திய நிலை ஆகும்.
59802-Bright-Moon

இறுதியாக விஷம் — அமிர்தம் என்ற இரண்டும் உலகில் நடக்கும் எந்த ஒரு பணியிலும் நல்லதும் கெட்டதும் தோன்றும் என்பதைக் காட்டும். அத்தகைய சூழ்நிலையில் சிவ பெருமான் போல தியாக சிந்தனை உடையவரால் – விட்டுக்கொடுக்கும் போக்கு உடையவரால் – மனித குலம் தழைக்கும் என்று உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

இந்த பாற்கடல் கடைந்த வரலாறு – சமுத்ர மதனம் – மனித குலத்துக்கு தரும் செய்தி யாது?

உலகில் எப்பொழுதுமே நல்லதும் கெட்டதும் ( தேவ + அசுர) இருக்கும். இரு சக்திகளையும் ஒரு சேர அணைத்து பணிகளைச் செய்ய வேண்டும். அப்பொழுது நல்லதும் கெட்டதும் (அமிர்தம்+ விஷம்) – இரண்டும் வரும். கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளினால் மனித முலம் செழிக்கும், தழைக்கும். அசுரர்கள் தேவர்களாக மாற அமிர்தம் ( நற்செயல்கள்) உதவும். ஆயினும் எப்போதுமே உலகில் பாஸிட்டிவ், நெகட்டிவ் – ஆக்கபூர்வ/ அழிவுமிக்க சக்திகள் இருக்கத்தான் செய்யும். எப்படி மின்சாரம் பாய இரண்டும் அவசியமோ அப்படி இவை இரண்டும் தவிர்க்க முடியாதவை. கடலைக் கடைவதைப் போல நல்லதைக் கடைந்தெடுப்பது நம் கடமை.

இதில் இரண்டு இரண்டாக பாசிட்டிவ் – நெகட்டிவ் ஜோடிகளைக் காணலாம்: தேவர்/அசுரர், அமிர்தம்/ விஷம், பால்/ மது, லெட்சுமி/மூதேவி, ஆகவே உலகம் இரண்டு வகையான செயல்களால் ஆனது. நம் மனமும் அப்படித்தான்!

மனம் எனும் கடலைக் கடைந்தும் அமிர்தம் எடுக்கும் வழி உண்டு. அது ஆழ்வார்கள் நாயன்மார்கள் ஆகியோர் திவ்யப் பிரபந்த, தேவார, திருவாசகத்தில் காட்டிய வழி!
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை நாமும் வழிபட்டு அமிர்தம் எடுப்போம்!!

samudra-mandhan

contact swami_48@yahoo.com

Science behind Samudra Manthan/ Churning of Milky Ocean!

AB65137

Research paper written by London Swaminathan
Research article No.1405; Dated 11th November 2014.

Hindus knew more cosmology than any other ancient culture. The oldest book in the world, The Rig Veda, has got more hymns about creation than any other book in the world around that period — 1500 BCE or earlier.

Scholars wonder what made the Hindus to sing so many hymns on creation and cosmology and what made them to pass it on to posterity by word of mouth for thousands of years. Thank god the Brahmins kept them intact for us. At that period of time, Europe was a place of primitive tribes. Indians helped Sumerians, Egyptians ,Chinese and Greeks to learn new science according to some Indologists.

Maxmuller said that the Greeks distorted the Hindu stories and Chinese learnt astronomy from Indians. Greeks dependence on India for maths and religion is confirmed by Swami Vivekananda and Greek writers.

Whether any one believes in Hindus spreading this branch of science or not, no one can show us any creation hymn equal to that of the following Rig Vedic hymns:

samudra-mandhan

Rig Veda (from Tenth Mandala)
10-129 Nasadiya Sukta (Big Bang Theory)
10-121 Golden Embryo
10-90 Purusa Sukta (Cosmic person)
10-190 Cosmic Heat
10-81 Architect of the world
10-72 Aditi and Birth of Gods

All these hymns show their quest for scientific answers. Purusa sukta hymn reminds us of the ‘Visvarupa darsanam’ (all pervading form) in Bhagavad Gita. It is amazing that one race in the whole wide world has reached such a height in scientific thinking. Even Bhagavad Gita Viswarupa darsanam can be interpreted as the mysterious Black hole, the latest mystery in science.

483px-Samudramanthan

Churning the Ocean
Fourteen “gems” came out of the sea when Devas (angels) and Asuras (demons) churned the Milky Ocean. This is the most popular and prominent story in the Hindu Mythology. The list of 14 gems differs from book to book. But among the common gems, moon known as Soma is one. It is true to say that moon came out of the ocean.

George, son of Charles Darwin, proposed a theory in the 1800s that a big chunk of earth was spurned off when a big collision happened. That chunk became the moon. The hole made out of it became Pacific Ocean. It might have happened millions of years ago. He said that the moon will easily fit into Pacific Ocean and that was the hole created by the giant collision. This is the most popular theory about the origin of moon.

So Hindus are right in saying that moon came from “the ocean”. But other 13 gems from the Milky Ocean may not fit into this story. So we have to interpret each and every object separately.
The objects or people are

59802-Bright-Moon

Varuni = Sura, Soma = Moon, Lakshmi = Goddess of Wealth, Horse =Uchchaisravas , Kaustuba gem, Parijata tree, Poison = Halahala
Doctor Danvantri, Amrita = ambrosia, Divine Cow = Surabhi
Elephant Airavata, Apsaras = Damsels from Heaven, Shanka = Conch
Jyeshta = Goddess of Misfortune, Umbrella, Powerful bow
Earrings, Wish fulfilling Tree Kalapakavriksha

The 14 gems are unrelated objects. One way of interpreting is that all that is useful to men came out of the “churning”, which stands for hard labour. Some people interpret the churning as maritime expedition. Others interpret it as symbolic story. I will interpret it as getting useful things for mankind like cow, horse, elephant, trees, wine and Amrita at various stages in human history. It was a long drawn struggle. The finds like cow, horse, and elephant improved the condition of man. Their discoveries or domestication were important mile stones in human history. Discovery of trees may symbolise agriculture. Discovery of heavenly damsels, conch may symbolise arts- Dance and Music. Umbrella stands for rule of royalty and ear rings stand for fashion and jewellery.

axis2

Among the 14 gems, Amrita and Poison, Wine (Sura/Varuni) and Milk (from Surabhi), Lakshmi and Jyeshta, Asuras and Devas form pairs of opposites. Probably the moral is that any action will result in good and bad. One has to help us by swallowing the bad/poison, an action of great sacrifice like lord Shiva. There will always be positive and negative forces in the world. We have to muster the strength of negative forces (asuras) to produce positive results (Amrita).

Contact swami_48@yahoo.com

Please read my earlier posts:
1.Is Brahmastra a Nuclear Weapon?
2.Science behind Shamudrika Lakshan
3.Great Engineers of Ancient India
4.Time Travel by Two Tamil Saints
5.Amazing powers of Human Mind: Six Stories
6.How did Rama fly his Pushpaka Vimana/air plane?
7.Did Kalidasa fly an Air Plane?

தமிழில் விநோத உவமைகள்: பெண்ணே! நீ லண்டன் போல அழகி!!

pen painting

தமிழில் விநோத உவமைகள்: பெண்ணே! நீ லண்டன் போல அழகி!!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1404; தேதி 11 நவம்பர், 2014.

உலகப் புகழ் பெற்ற வடமொழிக் கவிஞன் காளிதாசனும், சங்க காலப் புலவர்கள் கபிலர், பரணர், நக்கீரர், மாமுலனார், ஓரம்போகியார், அம்மூவனார் போன்றோரும், பைபிளில் சில பகுதிகளை எழுதியவர்களும் சில விநோதமான உவமைகளைப் பயன்படுத்தினர். அழகிகளை — நகர்கள் சிற்றுர்கள், பேரூர்களின் அழகுக்கு ஒப்பிட்டுப் புகழ்ந்து பாடினர். இன்று நான் ஒரு அழகான சினிமா நடிகையின் அழகை — அவள் லண்டன் போல அழகானவள், மதுரை போல அழகானவள், ஸ்ரீரங்கம் போல அழகானவள் — என்று எழுதினால் என்னைப் பார்த்து நகைப்பர். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இதுவே ஒரு சிறப்பான உவமையாக கருதப்பட்டது.

இதோ சில உவமைகள்:
நற்றிணை 35, 253, 265, 350, 358, 367, 395
குறுந்தொகை 238, 258 ஐங்குறுநூறு 58, 175, 177 மற்றும் பல இடங்களிலும் காணப்படும் உவமைகளில், நற்றிணை என்னும் நூலில் இருந்து ஒரு சில மட்டும்:

துறைகெழு மரந்தை அன்ன இவள் நலம் (பாடல் 35, அம்மூவனார்)
(அவள் மரந்தை என்னும் ஊர் போல அழகானவள்)
பாரி பலவு உறு குன்றம் போல கவின் எய்திய ((பாடல் 253, கபிலர்)
( நீ பாரியின் பலா மரம் பழுக்கும் குன்று போல அழகி )
தேர் வண் விரா அன் இருப்பை அன்ன (பாடல் 350, பரணர்)
(கொடை வள்ளலான விராவன் உடைய இருப்பை போல அழகு)
பசும்பூண் வழுதி மருங்கை அன்ன (பாடல் 358, நக்கீரர்)
(பாண்டிய மன்னனின் மருங்கை என்னும் ஊர் போல அழகு வாய்ந்தவள்)
அம்மமூவன் என்பவர் ஒரு அழகியை, தொண்டி நகருக்கும் ஓரம் போகியார் மற்றொரு அழகியை சோழ நாட்டு ஆமூருக்கும் ஒப்பிடுவதை ஐங்குறு நூற்றில் படித்து ரசிக்கலாம்

நக்கீரர் பாடிய பாடல்களில் இந்த நகர=அழகி ஒப்புமை அதிகம் காணப்படும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் இப்படிப் பாடுகிறான்:

ரகுவம்சத்தில் (11-52) ஒரு ‘’செக்ஸி’’ உவமை வருகிறது:
தசரத மன்னனுடைய படைகள் மிதிலா நகரத்தை அடைந்தன. அங்குள்ள தோட்டங்களையும் மரங்களையும் படைவீரர்கள் படுத்திய பாடு, அன்புமிக்க கணவன் தனது மனைவியை அன்போடு அணைத்துச் செய்யும் சேஷ்டைகள் போல இருந்தது.
இங்கே மிதிலை என்னும் நகரம் ஒரு பெண்ணுக்கு ஒப்பிடப்படுகிறது.

மற்றொரு இடத்தில் (14-12), “அயோத்தி என்னும் அழகிய நகரில் கார் அகில் புகை எழுந்தது ஒரு அழகான பெண் தன் கூந்தலில் நறுமணம் ஏற்ற அகில் புகையை எழுப்பியது போல இருந்தது என்பான். இது போல காளிதாசன் காவியங்கள் முழுதும் படித்து ரசிக்கலாம்.

காளிதானின் கவிதைகளைப் படித்து ரசித்த கபிலர் என்னும் புலவர் அதன் மூலமாகவே பிரஹத் தத்தன் என்ற வடக்கத்தியானுக்கு தமிழ் கற்பித்தார். அவன் தமிழைக் கிண்டல் செய்தான். அவனுக்கு காளிதாசன் எழுதிய கவிதை போலவே இயற்கை அழகு மிக்க குறிஞ்சிப் பாட்டை எழுதிக் காண்பித்து, அவனைத் தமிழால் மயக்கி அடிமைப் படுத்தினார். தமிழுக்கு அடிமையான ஆரிய அரசன் பிரஹத் தத்தன் தமிழில் கவிதை புனையும் ஆற்றலை எய்தி அழகியதோர் கவியும் புனைந்தான். அவனுக்கு தக்க பரிசில் கொடுக்க எண்ணிய தமிழர்கள் அவன் கவிதையையும் சங்க இலக்கியத்தில் சேர்த்தனர். என்னே தமிழனின் மாண்பு, பண்பு!!

Seattle_Skyline_2112
That actress is as beautiful as this city!

காளிதாசனின் மேகதூதம், ருது சம்ஹாரம் காவியங்களிலும், சாகுந்தலம் என்னும் நாடகத்திலும் இயற்கை அழகு மிகுதியாகக் காணப்படும்.

குறிஞ்சிப் பாட்டைப் படித்த தமிழ் ஆர்வலர் டாக்டர் ரெவரெண்ட் ஜி.யூ.போப், உடனே இது காளிதாசனின் செல்வாக்கில் வந்தது என்று எழுதினார். நான் காளிதாசன் பற்றி இதுவரை எழுத்திய பத்துக்கும் மேலான கட்டுரைகளில் காளிதாசன் கி.மு.முதல் நூற்றாண்டில் ‘’சகரர்’’களை ஓட ஓட விரட்டிய பேரரசன் விக்ரமாத்தித்தன் காலத்தில் வாழ்ந்தவன் என்று காட்டியுள்ளேன். இதற்குக் காரணம் 200-க்கும் மேலான காளிதாசனின் உவமைகளை சங்கத் தமிழ் இலக்கியத்தில் காணமுடிகிறது.

ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்………

இந்துக்கள் அடிக்கடி பயன்படுத்தும் மற்றொரு உவமை “எப்படி வானில் இருந்து விழும் தண்ணீர் ( நதிகள் ) கடலை அடைகிறதோ………………….. அப்படி நான் செய்யும் எல்லா வழிபாடுகளும் உன்னையே அடையட்டும்” – என்று வழிபடுவர். பிராமணர்கள் நாள்தோறும் மும்முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் கூட இம்மந்திர உவமை உண்டு.

இதைக் காளிதாசனிலும் சங்கப் புலவர் உவமைகளிலும் காண்கிறோம். இதிலிருந்து அறிவது என்ன?

1.உலகில் வேறு எங்கும் காணாத இவ்வுவமைகளை இந்திய இலக்கியங்களில் மட்டும் ஒரு சேரக் காணமுடிகிறது. இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை, ஒரே பண்பாடு, ஒரே அணுகு முறை உடையது இந்நாடு — ஆரிய—திராவிட வாதங்கள் என்பன எட்டுக்கட்டிய கட்டுக்கதைகள் ஆகும்.
2.காளிதாசன் போன்றோரின் இலக்கியங்களும் இப்படிப்பட்ட உவமைகளை தமிழிலும் எழுத உதவி இருக்கலாம்.
3.புவி இயல் உவமைகளைப் பயன்படுத்துவது இந்துக்களின் கடல், நதிகள் பற்றிய புவியியல் அறிவுக்குச் சான்று பகரும்.
4.கவுண்டின்யன், அகஸ்தியர், பிருகு ஆகியோர், ஆளுக்கு ஒரு திசையில் கடல் கடந்து சென்று, இந்தியப் பண்பாட்டைப் பரப்பியதை வரலாற்றுச் சான்றுகளின் வாயிலாக அறிகிறோம்.

gujarati

இதோ சில உவமைகள்:

புறநானூறு 42; மலைபடுகடாம் 51-53; பெரும் பாணாற்றுப்படை 427, புறப்பொருள் வெண்பாமாலை 11, கம்பராமாயணம்-கையடைப் படலம் முதலியவற்றில் இந்த ஆகாசாத் பதிதம் தோயம் – உவமை வருகிறது:-

மலையின் இழிந்து, மாக்கடல் நோக்கி
நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
புலவரெல்லாம் நின் நோக்கினரே

சோழன் கிள்ளிவளவனை இடைக்காடன் என்ற புலவர் புகழ்கிறார்:–மலையிலிருந்து இறங்கி கடலை நோக்கிச் செல்லும் பல ஆறுகள் போலப் புலவர் எல்லோரும் உன்னை நாடியே வருகின்றனர்.

உருத்திரங்கண்ணனார் (ருத்ராக்ஷன்) என்னும் புலவர் தொண்டைமான் இளந்திரையனைப் பாடுகிறார்:

கல்வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு
பல்வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமையச் செல்வரை
வெண் திரை கிழித்த விளங்குசுடர் நெடுங்கோட்டுப்
பொன் கொழித்திழிரும் போக்கரும் கங்கைப்
பெருநீர் போகும்………………… (427—432)

மலை அருவிகளில் விழும் நீர் (ஆறுகளாகப் பெருகி) எப்படி கடலை அடைகின்றனவோ அப்படி பல்வேறு மன்னர்களும் கட்டும் கப்பம் உன்னை அடைகிறது. இதற்கு அடுத்த வரியிலேயே நீண்ட இமய மலை, கங்கை ஆறு பற்றிப் பாடுகிறார். இதிலிருந்து வடக்கத்திய செல்வாக்கைக் காணலாம்.

இன்னொரு உதாரணம், இதை இன்னும் தெளிவாகக் காட்டும். தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கிராமப் பெண் பற்றிப் பாடுகையிலும் கங்கை வெள்ளம் பற்றியே உவமை வருகிறது. ஆகவே காளிதாசனின் நூல்களைப் படித்தே இவர்கள் இப்படி உவமைகளைப் பயன்படுத்தினர் என்று கொள்ளலாம். இதோ அந்த உவமை:–

நற்றிணைப் புலவர் நல்வெள்ளையார் (369) கூறுகிறார்:
ஞெமை ஓங்கு உயர்வரை இமையத்து உச்சி
வா அன் இழிதரும் வயங்கு வெள் அருவிக்
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்

ஞெமை மரங்கள் வளர்ந்து ஓங்கிய இமய மலையின் உச்சியில் இருந்து அருவிகளாக விழுந்து கங்கை ஆறாகப் பெருகி கரைய உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல என் காம எண்ணம் என்னை அடித்துச் செல்கிறதே. இந்த காம வெள்ளத்தை நானெப்படிக் கடப்பேன்? – என்று தோழியிடம் சொல்லி வருத்தப்படுகிறாள் தலைவி.. இது காளிதாசன் பாடலின் எதிரொலி:

“உமை அம்மை — சிவன் என்னும் காதலனை எவ்வளவு விரும்பினாளோ அவவளவுக்கு — சிவனும் அவளைக் காதலித்தான். கங்கை நதி, எப்போதாவது கடலை விட்டு வேறு எங்காவது போகுமா? எப்போது பார்த்தாலும் தன் காதலனின் ரசத்தைச் ( சமுத்திரத்தை ) சுவைத்துக் கொண்டிருக்கிறதன்றோ!!” ( காளிதாசனின் குமார சம்பவம் 8-16)

most-beautiful-cities-101
This city is as beautiful as that woman!

இதைப் படிக்கும்போது யார் யாரைக் ‘’காப்பி’’ அடித்தனர் என்னும் குட்டு வெளிப்பட்டு விடுகிறது. காளிதாசன் பாடலைப் படிக்காமல் மதுரை ஓலைக்கடையத்து நல்வெள்ளையார் கங்கை பற்றிப் பாடி இருக்கமுடியாது. கங்கை – காம வெள்ளம் என்றெல்லாம்—ஒரு தமிழ்ப் பெண்ணின் மீது ஏற்றிப்பாடுவது தன்னிச்சையாக நடந்ததல்ல. காளிதாச னின் செல்வாக்கே!! இது போல ஒன்றல்ல, இரண்டல்ல. காளிதாசனின் 200 வகை உவமைகள் ஏறத்தாழ ஆயிரம் இடங்களுக்கு மேல் சங்கத் தமிழ் இலக்கியத்தில் காணப்படுகின்றன!! காளிதாசனோவெனில் உலகில் உவமைகளைப் பயன்படுத்துவதில் முதல்நிலை வகிப்பவன். ‘’கழுதை விஷ்டை (விட்டை) கை நிறைய’’ — என்பதல்லாமல் தரமான 1000 உவமைகளை இடத்திற்குத் தக பொருத்திய மாமேதை அவன்.

இந்தியாவில் யாராவது காளிதாசனைப் படிக்காமல் எழுதத் துவங்கினால் அவர்கள் ஆங்கிலத்தைப் படித்து பட்டம் வாங்கி விட்டு ஷேக்ஸ்பியர் யார்? என்று கேட்பதை ஒக்கும். தமிழில் பட்டம் வாங்கிவிட்டு கம்பன் யார்? என்று கேட்பதற்குக் சமம்.

இனி ஆகாசாத் பதிதம் தோயம் – உவமையை காளிதாசன் பயன்படுத்தும் ஓரிரு இடங்களை மட்டும் காண்போம்:

மலைகளின் புதல்விகளான ஆறுகள் எப்படி கடல் எனும் காதலனை நோக்கி ( இயற்கையாகவே ) ஓடுகின்றனவோ அதே போல மகதம், கோசலம், கேகயம் ஆகிய மூன்று நாட்டுப் பெண்களும் தசரதன் எனும் வீரனை மணந்தனர். ஆறுகள், மாபெரும் கடலை நோக்கித்தானே ஓடும்? (ரகு வம்சம் 9—17)
இந்திய இலக்கியங்கள் முழுதிலும் ஆறுகள் பெண்கள் என்றும் கடல் காதலன் என்றும் சித்தரிக்கப்படும்.

13-10-08_217_CONFLUENCE_OF_INDUS_RIVER_N
Akaasaath pathitham thoyam Ythaa gachchathi saagaram…………………..

கள்ளம் கபடமற்ற — பறவைகளால் வளர்க்கப்பட்ட — இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்த — சகுந்தலை என்னும் பெண்ணின் கதையான சாகுந்தலத்தில் மானுட உணர்ச்சிகள் அத்தனையையும் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுவான் காளிதாசன். இதனால் இந்த நாடகம் உலகின் தலை சிறந்த நாடகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதில் ஒரு வசனம்:

நீ உனக்குத் தகுதியான ஆளிடம்தான் உன் இதயத்தைக் கொடுத்து இருக்கிறாய்! அதிர்ஷ்டசாலிதான்!! உண்மைதான் ! பெருக்கடுத்து ஓடும் ஆறு கடலைத் தவிர வேறு எங்கு போக முடியும்? (சாகுந்தலம் 3-13)

இப்படி நூற்றுக் கணக்கான உவமைகளை ஒப்பிட்டுக் கட்டலாம். விரித்துரைப்பின் — கங்கை போலப் பெருகும் என்பதால் இத்தோடு நிறுத்துவன் யான்!

–சுபம்–

காளிதாசன் பற்றிய முந்தைய கட்டுரைகள்:

1.காளிதாசன் நாடகத்தில் வியத்தகு விண்வெளி விஞ்ஞானம் (13-9-2014)
2.நால்வகைப் படைகள்:மஹாபாரதம்- தமிழ் இலக்கிய ஒற்றுமை (13-8-2014)
3.தமிழனின் ஆறு பருவங்கள்: ஆரிய-திராவிட வாதத்துக்கு அடி (22-7-2014)
4.அரசனின் குண்நலன்கள்: கம்பனும் காளிதாசனும் (21-7-2014)
5.அன்னப் பறவை பற்றிய அதிசயச் செய்திகள் (7-7-2014)
6.ராவணந்-பாண்டியர் சமாதான உடன்படிக்கை (24-6-2014)
7.மாரி, பாரி, வாரி:காளி, கம்பன், கபிலன் (23-6-14)
8.ஆண்களே! நீங்கள் மலர் மேயும் வண்டுகளாமே! (18-6-2014)
9.கம்பனும் காளிதாசனும் சொன்ன அதிசயச் செய்திகள் (16-6-2014)
10.மூன்று புகழ்பெற்ற பிரிவுபசார உரைகள் (8-5-2014)
11.காளிதாசரின் நூதன உத்திகள்: தமிழ்லும் உண்டு
12.கடலில் மர்மத் தீ – பகுதி 2
13.சங்கத் தமிழ் இலக்கியத்தில் காளிதாசனின் உவமைகள் (29-1-2012)

My earlier posts on Kalidasa
1.Did Kalidasa fly an Airplane? 12 Sept. 2014
2.Sea in Kalidasa and Tamil Literature
3.Ganges in Kalidasa and Sangam Tamil Works
4.Gem Stones in Kalidasa and Tamil Literature
5.Bird Migration in Kalidasa and Tamil Literature
6.Kalidasa’s Age:Tamil Works confirm 1st Century BC
7.Ravana-Pandya Peace Treaty! Kalidasa solves a Tamil Puzzle (June 24, 2014)
8.Agastya in Jataka Tales and Kalidasa June 13, 2014.

contact swami_48@yahoo.com

Women and Rivers in Kalidasa and Tamil literature

gujarati

Research paper written by London Swaminathan
Research article No.1403; Dated 10th November 2014

I have listed over 200 similarities between Kalidasa’s works and Sangam Tamil literature. I have argued in my previous posts on Kalidasa that he lived in the first century BCE or before that. Most of the Indian scholars believe that he lived during the rule of Vikramaditya of first century BCE. Amazing similarities between the Tamil poems and Kalidasa’s confirm that the Sangam Tamils were very familiar with his works. This is confirmed by the Brahmin poet Kabila’s work in the Sangam period. He taught Tamil poetics to an Aryan king Bruhat Datta ( through Sanskrit) and made him write a Tamil poem which is included in the Sangam corpus. Kabila was a trend setter. He used many Sanskrit words and Sanskrit themes in Sangam verses. He copied Kalidasa in his Kurinjipattu which was noticed by an ardent Tamil lover Rev. Dr G U Pope 150 years ago.

I present below some similes where Kalidasa’s influence is noticeable.
Rivers in India are considered women and sea as their (lover) husband. Women’s beauty is compared to the beauty of cities. Though it may look strange today ancient people used this simile. If I compare a beautiful actress to the beauty of a big city today, people will laugh at me. But it is in the Bible as well.
Sangam poets Nakkirar, Paranar , Kabilar, Mamular, Orampoki and Ammuvan compared the beauty of a woman to a city/town.
Seattle_Skyline_2112
Women and city are compared in literature!

Tamil Ref. Natrinai 367, 258, 260, 340, 350, 358, 395; Ainkurunuru 56, 171
Poet Nakkirar compares the beauty of a woman to Aruman’s small and beautiful village (Natrinai 367). And in another poem (358), he compares the beauty of a woman to Pandya’s town Marungai. Poet Orampokiar compared a woman’s beauty to Choza town Amur (Aink.56). Another woman was compared to Pandya’s port city Tondi by Ammuvan (Aink.171).

20120222 Water change near Ballina

Kalidasa used this simile in Raghuvamsam :

Mithila is compared to a woman. Like a woman tolerates all that is done to her (by her husband) out of love, Mithila tolerated the army of Dasaratha -11-52,
City of Ayodhya with its smoke from sandal is compared to women with their hair drying in the fragrant smoke– 14-12

Akasath Patitam Toyam Yatha Gachchati sagaram ………

Hindus are very familiar with the rivers and the seas. Great seers Bhrgu, Agastya and Kaundinya took the Hindu culture and civilization to different parts of the world via sea route.
So they always use this comparison:
“Even as all the waters (rivers) falling from the sky invariably flow into the sea, so ………. (all prayers offered go to God)”.
This is found in Kalidasa and Tamil literature. This shows that Indians from Kashmir to Kanyakumari thought in the same way. This simile is unique to Indian literature.
Tamil references: Puram 42, Malaipatukadam 51/53; Perumpanatrupatai line 427, Purpporul Venpa 11, Kamba Ramayana Kaiyatai ppatalam 15
pen painting

Kalidasa :
“Fortunately, you have set your heart on one truly worthy of you. But then where else would a great river flow except to the ocean? (Saku 3-13)

The daughters of the Kings of Maghada, Kosala and Kekaya obtained a husband (Dasaratha) for them who is a mighty warrior, just as the rivers, daughters of mountains, obtain the mighty ocean (as their husband) (Raghu 9-17)

Just as the bride loved the bridegroom worthy of her, so too did he love her for the Ganges did not leave the ocean, and the ocean too finds the greatest delight in tasting (the nectar of) her mouth (Kumara 8-16)

most-beautiful-cities-101
Beauty of the city is compared to woman

Sangam Tamil poet Nalvellaiyar compared the amorous thoughts to the flooded Ganges River in Natrinai 369. In can’t be a rare co incidence for a Tamil poet to compare the floods in Ganges to a woman’s feelings in the southern most part of India. They are well versed in Kalidasa. Otherwise the common men would not understand or appreciate this simile!

Tamil Poet Idaikatan of Puram verse 42 compares the rivers that eagerly flow into the sea to poets that come towards the Choza king Killivalavan.

Uruthirankannan, author of Perumpanatruppatai, says that like the rivers take all the things to the sea, kings come to you with their tributes (line 427)
Raghu.12-35,13-9, 13-58, 13-62,15-60 more references

13-10-08_217_CONFLUENCE_OF_INDUS_RIVER_N
Rivers go to seas, men go to kings or gods.

My earlier posts on Kalidasa
1.Did Kalidasa fly an Airplane? 12 Sept. 2014
2.Sea in Kalidasa and Tamil Literature
3.Ganges in Kalidasa and Sangam Tamil Works
4.Gem Stones in Kalidasa and Tamil Literature
5. Bird Migration in Kalidasa and Tamil Literature
6.Kalidasa’s Age:Tamil Works confirm 1st Century BC
7.Above articles in Tamil

contact swami_48@yahoo.com

தமிழ், சம்ஸ்கிருத இலக்கியத்தில் சிங்கம்!

Lion seems to be symbol of Pallava Dynasty
Pallava symbol lion in Mamallapuram (Narasimha Pallavan has lion in his name)

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1402; தேதி 10 நவம்பர், 2014.

நாம் எல்லோரும் சிறுவயதில் படித்த கதைகள் பஞ்ச தந்திரக் கதைகளும் ஈசாப் கதைகளும் ஆகும். சின்னச் சின்னக் கதைகளில் பறவைகளையும் மிருகங்களையும் கதாபாத்திரமாக வைத்து நமக்கு பல நீதிகளைப் புகட்டினர். இது எல்லாம் இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் சென்றது பலருக்கும் தெரியாது. உலகின் மிகப் பழமையான நூலான ரிக் வேதத்திலேயே இந்தக் கதைகளில் சில உவமை வடிவத்தில் இருக்கின்றன.

ஈசாப் என்ற கிரேக்க அடிமை, தான் கேட்ட கதைகளை எழுதிவைத்தார். இவர் கேட்ட கதைகளில் பல இந்தியர்களிடமிருந்து கேட்டவை என்பதை மயில் முதலிய பறவைகள் மூலம் அறியலாம். ஏனெனில் உலகம் முழுதும் மயில் என்னும் அதிசயப் பறவைகளை ஏற்றுமதி செய்தவர்கள் நாம் ஒருவரே. ஈசாப் வாழ்ந்த நாட்டில் மயில் கிடையாது. நிற்க.

nahapana newwwww

சிங்கம் பற்றிய சுவைமிகு விஷயங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

1.ஜூலியஸ் சீசர், ஆக்டேவியஸ் சீசர் என்று பல மன்னர் பெயர்களை ரோமானிய வரலாற்றைப் படித்தவர்கள் அறிவர். இதில் உள்ள சீசர் என்பது கேசரி என்ற சம்ஸ்கிருத பெயரில் இருந்து வந்தது. கேச+அரி = மயிர் உடைய மிருகம். ஆண் சிங்கத்தின் பிடரி மயிர் காரணமாக கேசரி என்ற பெயர் உண்டாயிற்று.

2.ஏரியல்: ஏரியல் என்ற ஹீப்ரு பெயரில் உள்ள அரி என்பது சிங்கம் என்பது ஹீப்ரூ (எபிரேய) மொழி படித்தவர்கள் அறிவர்.

3.சங்க இலக்கியத்தில் அரி: சங்க இலக்கிய நூலான ஐங்குறு நூற்றில் கபிலர் பாடிய குறிஞ்சிப் பகுதியில் (265, 268) அரி என்ற சொல்லைக் காணலாம். இது வட மொழியில் சிங்கத்துக்கு உள்ள பெயர். சிங்கத்தை ஹரி என்பர். தமிழில் “ஹ” இல்லாததால் அது “அரி” ஆய்விட்டது. இது ஹீப்ரூ வரை சென்றுவிட்டது.
தமிழில் அரி என்ற சொல் பறை, கிணை ஆகியவற்றுடனும் பல இடங்களில் வருகிறது. ஆயினும் அந்த இடத்தில் சிங்கத்தின் பொருளை எழுதவில்ல. ஆனால் அதர்வ வேதத்திலும் ரிக் வேதத்திலும் டமார, முழவு கர்ஜனையுடன் சிங்க கர்ஜனை ஒப்பிடப்படுவதால் அரி + ஓசை என்ற இடமெல்லாம் சிங்க கர்ஜனை எனவே பொருள் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்

4. சிம்ஹ, சிம்ம: ரிக் வேதத்தில் மட்டும் சிங்கம் என்னும் சொல் கிட்டத்தட்ட 20 இடங்களில் வருகிறது. பிற்கால பிராமணங்கள் முதலியவற்றில் மேலும் பல இடங்களில் வருகிறது. இது போலவே அதர்வண, யஜூர் வேதங்களிலும் உள்ளன. சுருங்கச் சொல்லின், வேறு எந்த வன விலங்கையும் விட சிங்கமே அதிகம் இடம்பெறுகிறது.

(இருபதுக்கும் மேலான குறிப்புகளை எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க)

5.இலங்கைக்கு வங்க நாட்டில் இருந்து குடியேறிய சிம்ம பாஹூவை வைத்து சிங்கள என்ற இனம் வந்ததும் அந்நாட்டுக் கொடியில் சிங்கம் இருப்பதும் அனைவரும் அறிந்ததே. ஈரானில் கோமெய்னி புரட்சி வெடிக்கும் முன், அந்நாட்டுக் கொடியில் இலங்கை போலவே வாள் ஏந்திய சிங்கம் இருந்தது. இந்தியாவின் தேசிய சின்னத்தில் சிங்கம் இருக்கிறது.

6.சிங்கபுரம் என்பதே சிங்கப்பூர் ஆனதாகச் சொல்லுவர். இன்னும் சிலர் ஸ்ருங்கபுரம் (கொம்பு போல நீண்ட பகுதி — என்பர். இரண்டும் சம்ஸ்கிருதச் சொற்கள். மலேய தீபகற்ப வரைபடத்தைப் பார்ப்போர்க்கு இது விளங்கும்).

7.இலங்கையில் கி.மு.ஆறாம் நூற்றாண்டு முதலே (சிம்மபாஹு—விஜயன்) சிங்கம் பிரபலமானது. ஆனால் இந்தியாவின் தென்பகுதியிலோ, தென் கிழக்காசிய நாடுகளிலோ இது கிடையாது. ஆயினும் சிற்பங்களிலும், படங்களிலும், இலக்கியங்களிலும் உண்டு.

yali

யாளி என்ற விநோத விலங்கு

8.யாளி, வ்யால= லியோ= லியாண்டர்
வ்யால/ யாளி என்ற ஒரு மிருகம் இந்துக் கோவில் தூண்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இப்போது இல்லாத மிருகம். சிங்கத்தை விட வலியது என்பர். நிறைய கிறிஸ்தவப் பெயர்கள் லியோ, லியாண்டர், லியார்னடோ என்பனவும் ஆங்கிலச் சொற்களான லயன் (சிங்கம்) லியோ (சிம்ம ராசி) முதலியனவும் யாளி, வ்யால என்பதில் இருந்து வந்தன. யாளி என்ற சொல்லை கண்ணாடியில் பார்த்தால் லியா என வரும் இவ்வகை சொற்களை கண்ணாடி உருவச் சொற்கள் என்பர். இப்படியும் வந்திருக்கலாம். அல்லது வ்யால என்னும் மிருகம் பெயர் லயன், லியோ என்றும் நேராகவும் வந்திருக்கலாம்.

9. இந்தியாவுக்குப் பாரதம் என்ற பெயர் ஏற்படக் காரணமானவன் இந்தியாவின் முதல் சக்ரவர்த்தியான பரதன் என்பதைப் பலரும் அறிவர். இந்தப் பரதன் சிங்கத்துடன் விளையாடுவான் அதனால் அவனுக்கு சர்வ தமனன் என்ற பெயரும் உண்டு. இதைப் பாரதியாரும் பாடுகிறார்:–

சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத்
தட்டி விளையாடி – நன்று
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை.

iran flag

வேதத்தில் சிங்கக் கதைகள்

10.உலகில் கதை இலக்கியத்தை உருவாக்கியவர்கள் இந்தியர்களே. வேத, உபநிஷத, பிராமண, ஆரண்யக, இதிஹாச, புராணங்களில் பிராணிகளை வைத்துச் சொல்லப்படும் ஏராளமான நீதிக்கதைகள் உள்ளன. இவைகளில் பலவற்றை புத்த, சமண மத நூல்களிலும் காணலாம். பஞ்சதந்திரக் கதைகளும் ஹிதோபதேசக் கதைகளும் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகெங்கும் பரவின. இன்று உலகம் முழுதும் பரவிய ஆங்கில ஹாரிபாட்டர் கதைக்கான “கரு” எல்லாம் விக்ரமாத்தித்தன் வேதாளக் கதைகளிலும், கதைக்கடல் (கதாசரித்சாகரம்) என்னும் வடமொழி நூல்களிலும் உள்ளன.

11.ரிக்வேதத்தில் (கி.மு1700க்கு முன்) எல்லா மண்டலங்களிலும் சிங்கம் பற்றிய குறிப்புகள் இருப்பதால் ஒரு காலத்தில் சரஸ்வதி நதிதீரம் முதல் கங்கைச் சமவெளி வரை சிங்கம் உலவி இருக்கவேண்டும். இப்பொழுது குஜராத் மாநிலக் காடுகளில் மட்டுமே சிங்கம் உளது. ஆண்டாள் திருப்பாவையில் சிங்கம் பற்றி தத்ரூபமாகப் பாடியிருப்பது பற்றி எனது முந்தைய கட்டுரையில் காண்க.

12..ரிக் வேதத்தில் சிங்கம் பற்றி வரும் இரண்டு உவமைகள் அக்காலத்திலேயே பஞ்சதந்திரக் கதைகள் போன்ற கதைகள் இருந்ததற்குச் சான்று பகரும் (RV 10-28-4 and 7-18-17).
சுதாசன் என்ற மன்னனுக்கு இந்திரன் வழங்கிய உதவியால் அவன் மகத்தான வெற்றி பெற்றன். பல மன்னர்கள் எதிர்த்த பத்துராஜா யுத்தத்தில் அவன் வெற்றி பெற்றது “சிங்கத்தை ஆடு தோற்கடித்தது” போல இருக்கிறது என்று ஒரு ரிஷி பாடுகிறார். வேறு ஒரு இடத்தில் “நரி சிங்கத்தைத் தோற்கடித்தால் அது அதிசயமன்றோ!” என்று இன்னொரு புலவர் வியக்கிறார். இவை எல்லாம் கதைக்கான கருக்கள்.

13.வடமேற்கு இந்தியா முழுதும் சிங்கம் சீறிப்பாய்ந்த போதும், சிந்து சமவெளியில் ஒரு சிங்க முத்திரையும் இல்லை. இதே போல குதிரைப் படமும் பசு மாட்டின் படமும் இல்லை!! காளை மாட்டை வரைந்த சிந்துவெளியான், பசுமாட்டை மறந்தது ஏனோ!— இது ஒரு பெரிய மர்மம். ஒருவேளை பசு, அஸ்வமேத யாகக் குதிரை இவைகளை முத்திரையில் பொறிப்பது அபசாரம் என்று கருதிவிட்டானோ!!!

LAKSHMI-NARASIMHA_statue_at_Hampi
Narasimha from Hampi (Picture from Wikipedia)

14.இந்துக்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்தது சிங்கம். விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று நர+சிம்ம அவதாரம்= பாதி மனிதன்+பாதி சிங்கம்!

15.சிம்மாசனம் என்னும் சொல் ,இந்து மத தோத்திரங்களிலும், கதைகளிலும் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகின்றது. இந்தக் கருத்தை உலகிற்கு தந்தவனும் இந்துவே. சிங்கத்தைக் காட்டு ராஜாவாக உயர்த்தியதும் நம்மவரே என்பது வடமொழி இலக்கியத்தில் இருந்து தெரிகிறது. விக்ரமாதித்தன் சிம்மாசனம், ஸ்வயமேவ ம்ருகேந்த்ரதா – என்ற சம்ஸ்கிருத மரபுச் சொற்றொடர்கள் இதற்குச் சான்று.

16.பாபர், ஹைதர், ஷேர் (ஷா), சிங், சிம்ம, கேசரி – முதலிய மன்னர் பட்டங்கள் அனைத்தும் சிங்கம் எனப் பொருள்படும். முஸ்லீம் மன்னர்களும் கூட நம்மிடமிருந்து அவ் வழக்கத்தைக் கற்றனர்.

17.சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்த சிம்மன் தனக்குப் பிறகு எல்லா சீக்கியர்களும் சிங் (கம்) என்ற பெயரைச் சூடவேண்டும் என்று சொன்னதால் சீக்கியர் அனைவரும் சிங் என்ற பின்னொட்டுப் பெயர் வைத்துள்ளனர். மற்ற வட இந்திய ஜாதியினரும் சிங் என்று பெயர் வைப்பர். ஆகையால் எல்லா சிங் – குகளும் சீக்கியரல்ல.

18.ரிக்வேதத்தில் அக்னி, ருத்ரன் ஆகியோரை சிங்கத்துடன் ஒப்பிட்டுப் பாடிய துதிகள் உள. சிம்ம கர்ஜனை, இடி முழக்கம் போன்ற ஒலியுடைய முரசுடன் ஒப்பிடப்படுகின்றது சிங்க வேட்டை பற்றிய வருணனைகளும் இருக்கின்றன. பெண் சிங்கத்தின் வலிமையையும் வீரத்தையும் பாராட்டும் பாடல்களும் உள.
simhasanam
Lion Throne (Simha Asanam) at Louvre Museum, France;photo by london swaminathan.

19.உலகின் முதல் அகராதி- நிகண்டு ஆன அமரகோசம் வடமொழியில் சிங்கத்துக்குரிய பத்து சொற்களைப் பட்டியலிடுகிறது:-

சிங்க, ஹரி, கேசரி, ஹர்யாக்ஷ, ம்ருகேந்த்த்ர, பஞ்சாஸ்ய, ம்ருகத்ருஷ்டி, ம்ருகரிபு, ம்ருருகச்ன, கண்டிரவோ எனப் பல பெயர்களைத் தருகின்றது.

20.இலங்கைத் தமிழர் பெயர்களில் புலிகளை விட பாலசிங்கம், விக்ரமசிங்கம் போன்ற சிங்கம் பெயர்களே அதிகம்!!

srilankan coins
–சுபம்–

contact swami_48@yahoo.com

Vedic Lion around the World!

simhasanam
Lion Throne at Louvre Museum, France.

Research paper written by London Swaminathan
Research article No.1401; Dated 9th November 2014.

The Story of Lion King is found in the Vedas (RV 10-28-4 and 7-18-17)!!.Lion maintains a prominent place in the Vedic literature. No other literature has so many references to the lion. We find the origin of Panchatantra stories in the Rig Veda. Aesop and other fable writers are indebted to Rig Veda and Panchatantra.

Sanskrit words for LION are used all over the world. Kings who ruled India had lion as suffix or surnames. Even Roman kings had this Sanskrit title. The Lion throne concept was borrowed from India.

Ceasar=Kesari
Kesari is the Sanskrit word for lion which was used by all the Roman kings with the title Caesar.

yali

Yali in Hindu temples. English word Leo is derived from Yali.

Ariel = Ari
Hari is a Sanskrit word for lion. Hebrew and Tamil use this word as Ari. In Tamil Ja, Ha, Sha, SH, S sounds don’t exist. So they are Tamilized. Ari is used in Sangam literature (Ainkuru Nuru 265, 268) and Hebrew literature as ‘Ariel’ etc.

Muslim Kings had names such as Babar, Haidar, Asad and Sher which meant lion. These are NOT cognates of Sanskrit. But the idea of having it as a title was borrowed from India.

Sing = Simha (R.V.1-64-8; 1-95-5; 3- 2-11; 3-9-4; 3-26-5; 4-16-14; 5-83-3)
Simha is the most common Sanskrit word for the lion. This occurs more times than any other animal name. All Punjabi Sikhs have it as surname after their last and Tenth Guru, Guru Govinda Sing, made it a surname.
This comes from the word Simha.

Sri Lankans had it from Sixth Century BCE from their forefather Simhabahu. Sinhalese and many more words are derived from this. Iran had it on its flag before the Islamic revolution.
iran flag
Old Flag of Iran

Lion=Leo=Yali=Vyala

Words such as leo, leander, learnando, lion etc. came for the lion like animal Vyala. In Tamil it is called ‘Yali’ and Leo may be the mirror image of the Tamil word or derivative of Vyala. (Vyala=Yali=Liya=Leo)
Concept of Lion Throne (Simha + Asana= Simhasana) also spread to various parts of the world from India. It is found in most of the Sanskrit books. Lion as the king of the forest is in Panchatantra stories, for which Aesop is indebted. Sanskrit proverbs such as Swayameva Mrigendratha and Vikramaditya Simasana also praise the lion. In all religious hymns god is said to have seated on the Lion Throne. So this is not an imported concept.

Lion seems to be symbol of Pallava Dynasty

Pallavas had lion as their emblem

Lion in the Vedas & Origin of Fables

Rig Veda, the oldest book in the world, has got more than fifteen references to the lion. It is used in beautiful similes which show that it’s a well known animal. Since almost all the Mandalas use lion, it must have lived in the Sarasvati, Sindhu, Gangetic plains of India for long. Now it is found only in Gujarat. Atharva Veda also has got many references.
The roaring of the lion and the
Thundering noise of lion are described in the Vedas.

In Tamil Sangam literature lot of references to drum sound has the word lion (Ari in Tamil) before it. But for want of evidence the commentators left it as drum sound. It must be actually roaring sound like a lion which is in the Rig Veda and Atharva Veda.

Lion hunting and the courage of lioness are also described in the Vedas.
Rudra is compared to a lion
Agni is compared to a lion

That a jackal should defeat the lion is spoken of as a marvel. Here we see the origin of fables. Fables had its origin in India.

The aid given to Sudas by Indra against the vast host of enemies is compared to the defeat of a lioness by a ram. Here we see the origin of animal fables.

Apart from the references already given under Simha, following are other references to the lions:
R.V.1-54-2; 10-160-2; 2-33-11; 3-9-4; 10-28-4; 1-174-3; 10-28-10; 5-74-4; 5-15-3; 7-18-7
Yajuveda and Brahmana literature have many more references.
It is a mystery that Indus valley had no seals with cow or horse or lion!Hundreds of seals with bull are available, but no cow!!!

srilankan coins
Sri Lankan coins with lion.

Sanskrit literature described heroes as Bull, Lion or Tiger. But among the wild animals, lion gets more references than tiger. The reason being tiger kills any animal that it sees. Lion kills only for its food when necessary. A lot of stories in ancient literature show that lions are attached to humans and become harmless. King Bharata who gave the name Bharata to India was said to have played with animals as a young boy. So he was called Sarva damanan.

Amarakosa , the oldest dictionary, dated to fifth century CE, gives the following Sanskrit words for lion:
Simha, Mrgendra (King of Animals), Panchasyo, Kesari, Hari, Haryaksha, Mrgaripu, Kandiravo, Mrgadrushti, Mrgasanah.

India and Sri Lanka have lion in its national emblem and flag. Hindus worship Nara Simha (man-lion form) avatar of Vishnu. There are famous temples in South India for Narasimha who killed the demon king Hiranyakasipu just to save the demon’s son.
nahapana newwwww
Nahapana coins.

Contact swami_48@yahoo.com

சுமேரு, குமேரு, பாமேரு, மேரு

sumeru_parvat9742

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1400; தேதி 9 நவம்பர், 2014.

சுமேரியா/ சுமேரு என்னும் நாகரீகம் தழைத்த இடம் இராக்
பாமீர்/ பாமேரு என்னும் பீடபூமி இருப்பது தாஜ்கிஸ்தான், கிர்கிஸ்தான் பகுதி
குமேரு என்பது தென் துருவம்; குமரி என்பது தென் கோடி மலை, க்மேர் என்பவர் கம்போடியர்
மேரு என்பது இந்துக்களின் புனித மலை.

இவை எல்லாவற்றிலும் மேரு இருப்பதன் மர்மம் என்ன?

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 12-10-1932ல் சென்னையில் நடத்திய சொற்பொழிவில் சொல்கிறார்:
“ வடக்கே உள்ளதற்கு ஸுமேரு என்று பெயர். தெற்கே உள்ளதற்கு குமேரு என்று பெயர். ஸூமேருவிலிருந்து குமேரு வரை ஏழு ஸமுத்ரங்களும் த்வீபங்களும் இருக்கின்றன என்று காணப்படுகிறது. இப்பொழுது உள்ளாற்றைப் பார்த்தால் அது பொய் என்று தோற்றுகிறது. ஏழு த்வீபங்களைக் காணோம், ஏழு ஸமுத்ரங்களும் இல்லை. இதைப் பற்றி கொஞ்சம் யோசிக்கலாம்.”
இப்படிச் சொல்லிவிட்டு பின்னர் பூமியின் அச்சு ஒரு காலத்தில் துருவ நட்சத்திரத்துக்கு நேராக இருந்ததும் பின்னர் அது சிறிது சிறிதாக நகர்ந்து இப்போழுது தள்ளி இருக்கிறது என்றும் அது நேராக இருந்த காலத்து இருந்த நிலையையே புராணங்கள் கூறுவதகாவும் விளக்குகிறார். ஆடிவிட்டு நிற்கப் போகும் பம்பரம் போல பூமி தலை சாய்ந்து சுற்றுவதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை துருவ நட்சத்திரம் மாறுவதும் விஞ்ஞான உண்மை. நிற்க.

((காண்க: —ஸ்ரீ ஜகத்குருவின் உபதேசங்கள், முதற்பாகம், பக்கம்75, ஸ்ரீகாமகோடி கோசஸ்தானம், சென்னை, 1957, வில ரூ3.))

sumermap2 in modern Iraq

நாம் காண வந்த விஷயம் குமேரு. அதற்காகத்தான் காஞ்சிப் பெரியவரின் உரையை மேற்கோள் காட்டினேன். இதைத்தான் நாம் குமரிக் கோடு என்கிறாம். அதாவது ஒரு காலத்தில் குமரி மலை (கோடு) என்று ஒன்று இருந்ததும் அது சுனாமி தாக்குதலில் கடலுக்குள் சென்றதும் தமிழ் இலக்கியம் வாயிலாக நாம் அறிகிறோம். குமரி என்பது குமேருவில் இருந்து வந்திருக்கலாம். அல்லது தென் துருவம் குமேரு என்றும் அது போல உள்ள மலை குமரிக்கோடு என்றும் வந்திருக்கலாம்.

கலைக் களஞ்சியங்களைப் படிப்போருக்கு ஒரு விஷயம் தெரியும் — க்மேர் எனப்படும் கம்போடிய இனம், சுமேரிய இனம் ஆகியவற்றின் மூலமும் இதுவரை மர்மமாகவே இருக்கிறது. இதற்கு விளக்கமே கிடைக்கவில்லை. காஞ்சிப் பெரியவர் சொல்வதன் அடிப்படையில் நான் சொல்வது குமரி என்பதும் க்மேர் என்பதும் குமேருவில் பிறந்த சொற்கள் என்பதே!

mount-meru
Meru in Kenya, East Africa

க்மேர் என்னும் இனம் கம்போடியாவில் ஆட்சி புரிந்தது — இன்றும் இருக்கிறது. அவர்கள் காம்போஜர்கள். அதை இப்பொழுது கம்போடியா என்போம். இந்த இனம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு காலத்தில் இருந்ததை வடமொழி புராண, இதிஹாசங்கள் மூலம் அறிகிறோம். அவர்கள் 1500 ஆண்டுகளுக்கு தென்கிழக்காசிய நாடுகள் முழுதும் இந்துப் பண்பாட்டைப் பின்பற்றினர். அவர்கள் குமரி வழியாகப் போனதன் நினைவாக க்மேர் என்ற பெயர் நிலைத்திருக்கலாம் .அகத்தியர் கடல் கடந்து இவர்களைக்கொண்டு சென்றதாலோ அல்லது அவர்களுக்கு நாகரீகத்தைக் கற்பித்ததாலோ இன்றுவரை அகத்தியர் சிலைகள் அந்த நாடுகள் முழுதும் இருப்பதையும் நாம் அறிவோம்.

காம்போஜர்கள் கட்டிய உலகப் புகழ்பெற்ற அங்கோர்வட் என்னும் இந்துக் கோவில் மேருமலை வடிவத்தில் அமைக்கப்படதையும் அதைத் தொடர்ந்து இந்தோநேசியாவில் போரொபுதூரில் மேருமலை வடிவத்தில் கோவில் கட்டப்பட்டதையும் உலக மக்கள் அறிவர். இத்தகையோர் க்மேர்– குமேர்—குமேரு – மேரு என்று பெயர் கொண்டதில் வியப்பதற்கு ஏதேனும் உண்டோ?

pameru
Pamir– Roof of the World

இனி சுமேரியாவைக் கண்போம். சு+மேரு என்பதன் பொருளும் யாருக்கும் தெரியவில்லை. அருகில் வசித்த அக்கடியர்கள் இவர்களை சுமேரம் என்று குறித்தனர். ஆனால் சுமேரியர்கள் யார்? அவர் மெசபொடோமியாவுக்கு வெளியே இருந்துவந்த வந்தேறு குடிமக்களா? என்று அறிஞர் உலகம் இன்றும் காரசாரமாக விவாதித்து வருவதாக லண்டன் பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட “அண்மைக் கிழக்கு நாட்டு அகராதி” கூறும். அந்த நூலைப் பன்முறை படித்த நான் கூறுவது, “ சுமேரியர்கள் இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து குடியேறியவர்களே என்பதாகும். அல்லது ஒரு பிரிவு மக்கள் இந்தியக் குடியேறிகளாக இருக்கலாம்.

சுமேரியர்களுக்கு சப்த ஸ்வரங்களைக் கற்பித்தவர்கள் அக்கடியர்கள் என்பதும் மற்ற எல்லா சங்கீத விஷயங்களையும் கற்பித்தவர்கள் ஹிட்டைட்ஸ் என்பதும், அந்த ஹிட்டைட்ஸ் என்பவர்கள் சம்ஸ்கிருத மொழியுடன் தொடர்புடைய மொழி பேசியோர் என்பதும் பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதி தரும் தகவல் ஆகும். ஆகவே, நான் செய்த சொல் ஆராய்ச்சியில் தெரிவதும் அவர்கள் இந்தியத் தொடர்புடைய ஒரு பழங்குடி என்பதேயாகும். இன்ன பிற காரணங்களால் சுமேரியா என்பது சு+மேரு என்று கொள்வதே சாலப் பொருத்தம்.

maha-meru-yantra
Sri Chakra and Meru: Hindu Goddess Worship

இனி பாமீர் மலைத் தொடரைக் காண்போம். பாமேரு என்பதன் சிதைந்த வடிவே பா மீர் என்பதாகும். அராபிய, உருது மொழிகளில் மீர் என்னும் அடைமொழி காட்டும் பொருள்: உயர்ந்தவன், சிறந்தவன், மதிப்பு மிக்கவன். இதனால் முஸ்லீம் பெயர்களில் மீர் காசிம், மீர் முகமது முதலிய பல பெயர்களைக் காண்கிறோம். இந்த “மீர்” பெயர்களுக்குப் பின் வருவதும் உண்டு. ஆக உலகின் கூரை என்றழைக்கப்படும் மிக உயர்ந்த சிகரத்தை பா+மேரு என்று அழைத்ததில் வியப்பில்லை. பா என்னும் முன் ஒட்டுடன் பல வடமொழிச் சொற்கள் பயிலப்படுகின்றன. எ.கா. பாமதி.

ஆகவே குமேரு, சுமேரு, பாமேரு, மேரு என்பனவெல்லாம் நாம் உலகிகு வழங்கிய கொடையே. இமய மலையை பிற்காலத்தில் நாம் மேரு என்று சொன்னதும் வடதுருவச் சிறப்பால் அன்றோ! இந்து சமய தேவி உபாசனையில் ஸ்ரீசக்ரமும் அதன் மத்தியில் உயர்ந்து நிற்கும் மேருவும் போற்றப்படுவதும் இதனால் அன்றோ.

khmer new year
Khmer people celebrating New Year

“திருநெல்வேலி ஐயரின் வடதுருவ யாத்திரை” — என்ற கட்டுரையில் வடதுருவச் சிறப்பை விளக்கி இருக்கிறார். மேருவில் ஆறுமாதம் பகல், ஆறுமாதம் இரவு என்ற புராணக் குறிப்புகள் பற்றி அவர் விளக்குகிறார்.

-சுபம்–

contact swami_48@yahoo.com

இந்துக்களின் 18 பிரிவுகள் : பதினெண் கணங்கள்

Samudra manthan
சமுத்ர மந்தனம், பாங்காக், தாய்லாந்து

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1399; தேதி 9 நவம்பர், 2014.

வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் ஆட்சியை நிலைநாட்டவும் மதத்தைப் பரப்பவும் இந்தியாவுக்குள் நுழைந்தனர் —– பைபிளிலும் குரானிலும் செய்ய பயப்படும் ஆராய்ச்சிகளை, துணிந்து இந்துமத நூல்களில் மட்டும் செய்தனர் —– “இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்” என்ற பழமொழிக்கு இணங்க இந்துக்கள் என்னும் இளிச்சவாயன்களைக் கண்டனர். ரிக்வேதம் பற்றியும், சிவலிங்கம் பற்றியும் கைக்கு வந்த படியும் வாய்க்கு வந்தபடியும் எழுதித் தள்ளினர். “ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி: என்ற பழமொழியும், இந்துக்கள் விஷயத்தில் உண்மை ஆயிற்று—– அவர்கள் குனியக் குனியக் குட்டு வாங்கினார்கள். “இந்தியர்கள் எல்லாம் ஓரினம் அல்ல; அவர்கள் ஆரியர்கள், திராவிடர்கள், கிராடர்கள், முண்டாக்கள் என்னும் நான்கு பிரிவினர்” — என்று சொல்லி வெள்ளைக் காரர்கள், கதைத்தனர்; நகைத்தனர்.

பட்டத்துக்காகவும் பதவிக்காகவும் நம்மூர் அறிஞர்கள் “ஆமாம்சாமி” போட்டனர். இன்னும் சிலர், பிராமணர்களின் மேலாதிக்கததையும் அடாவடித்தனத்தையும் பொறுக்கமாட்டாமல் வெள்ளைக்கரன் சொன்னது உண்மையே என்று எண்ணி கட்சி துவக்கினர். இப்போது தூசிப் புயல் அடங்கி புதிய சிந்தனை மலர்ந்து வருகிறது.

“அட, வெள்ளைக்காரன் சொன்னது இருக்கட்டும். வெள்ளைகாரன் காட்டுமிராண்டியாகத் திரிந்த நாட்களுக்கு முன்னரே நம்மூர் தமிழ் ,வடமொழி இலக்கியங்கள், நாகரீகத்துடன் எழுதப்பட்டு விட்டனவே, அவை என்ன சொல்கின்றன?” என்று பார்ப்போம் என்று பார்க்கத் துவங்கிவிட்டனர்.

அரக்கர்கள், அசுரர்கள், இயக்கர்கள், தைத்யர், தானவர் அனைவரும் வானவர் புதல்வர். எல்லோரும் ரிஷி முனிவர்கள் வழி வந்தவர்கள் என்று நம் இலக்கியங்கள் பகர்வதைக் கண்டு கண் திறந்தனர்— விழிப்புற்றனர்.

பகச் சொல்லி கேளிர் பிரிக்கும் பாங்குடைய வெளி நாட்டுக்கார அறிஞர்கள் சொன்னதெல்லாம் பொய் என்று நகச் சொல்லத் துவங்கிவிட்டனர்.
devasura

ஆரியனுக்கு கூரிய, வீரிய, நேரிய, பாரிய, சீரிய மூக்கு, திராவிடனுக்கு போண்டா மூக்கு என்று வெள்ளைக்காரன் எழுதியதெல்லாம் இப்பொழுது குப்பைத் தொட்டியில் விழுந்து வருகின்றன. விழித் தெழுந்த தமிழன் கேட்கிறான்:–

விஷ்ணு என்பவன் கறுப்பன்
வியாசன் என்பவன் கறுப்பன்
இராமன் என்பவன் கறுப்பன்
கிருஷ்ணன் என்பவன் கறுப்பன்
அகத்தியன் என்பவன் கறுப்பன்
தீர்க்கதமஸ் என்பவன் கறுப்பன்
காளி என்பவள் கறுப்பாயீ
திரவுபதி என்பவள் கறுப்பாயீ
எல்லாம் ஒரே கறுப்பு மயம்!!

எங்கள் ஊர் திராவிடக் கழக சட்டைகளில் கூட இவ்வளவு கறுப்பு கண்டதில்லை. இந்துக்கள் என்றாலே கறுப்பண சாமி மதம் என்று சொல்லிவிடலாம் போல இருக்கிறதே என்று திருப்பித் தாக்கத் துவங்கி விட்டனர். போண்டா மூக்கு அகத்தியனுடன் படுக்க வரமட்டேன் என்று லோபாமுத்திரை போட்ட கண்டிஷன் ( நிபந்தனை ) எல்லோருக்கும் தெரியும். மஹா அசிங்கமான உடலுடைய கறுப்பு வியாசனைக் கண்ட பெண்களுக்கு பிறந்த அங்கஹீன திருதராஷ்ட்ரன், பாண்டு கதையும் நம்க்குத் தெரியும். அகத்தியனும், வியாசனும் அவ்வளவு கறுப்பு, அவ்வளவு அவலட்சணம். ஆனால் நாம் வணங்கும் கடவுளர் – மாமுனிவர்கள் அவர்களே!

18 குடி மக்களை துவாரகையில் இருந்து அழைத்து வந்து தமிழுக்கு இலக்கணம் செய்தவன் அகத்தியன் ((தொல்காப்பியம், புறம் 201 நச்சி. உரை , புறம். கடவுள் வாழ்த்து காண்க)). “ தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன்” – என்று கம்பனால் புகழப்பட்டான். தென் கிழக்காசிய நாடுகள் அனைத்துக்கும் தமிழனைக் கடல் கடந்து அழைத்துச் சென்றவன் அகத்தியன். வியாசரோ உலக மகா சாதனை செய்தார். கங்கு கரை காண முடியாத வேதங்களைப் பகுத்தார். பல லட்சம் பாக்களைக் கொண்ட புராணங்களைத் தொகுத்தார். உலகிலேயே மிக நீண்ட மதப் புத்தகமான மஹாபரதத்தை எழுதிச் சலித்தார்; ஒரு சவாலும் விட்டார். இதில் இல்லாத பொருள் உலகில் இல்லை என்றார். இன்று வரை அது முற்றிலும் உண்மை.

churning3

இந்து மஹா ஜனங்களோவெனில் விழித்தெழுந்து நேற்று கூட அமெரிக்க பெண்மணி வெண்டி டோனேகர் எழுதிய அவதூறு புத்தகததை பெங்குவின் நிறுவனத்தினரை வாபஸ் வாங்க வைத்துவீட்டனர். இந்துக்கள் விழித்தெழுந்ததைக் கண்ட பெங்குவின் புத்தக நிறுவனம் இப்பொழுது நடு நடுங்குகிறது. இவர்களும் மாற்று மதத்தினர் போல பொங்கி எழுந்து நமது உடைமைகளைத் தீக்கிரையாக்கிவிடுவர் என்று அஞ்சி நடுங்குகின்றனர்.

மஹாமாயா என்பவள் மகமாயீ
காத்யாயனி என்பவள் காத்தாயீ
மூகாம்பிகை என்பவள் மூக்காயீ
ராகா தேவி என்பவள் ராக்காயீ

அடப் பாவி மகனே!! எங்களிடம் பொய் சொல்லி இவை எல்லாம் திராவிட தெய்வம்,தமிழர்களின் கிராமீய தெய்வங்கள், வெள்ளைத்தோல் ஆரியன் வணங்குவதெலாம் வேறு தெய்வம் என்று சொன்னாயே என்று “அது”களைக் கேள்வி கேட்கத் துவங்கி விட்டனர் இந்துக்கள்.

வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி!!

மாட்சி தீர் மிலேச்சர் மனப்படி ஆளும்
ஆட்சியில் அடங்குவோன் ஆரியன் அல்லன்

என்ற பாரதி வாக்குப்படி இந்துக்களும் சீறி எழத் துவங்கிவிட்டனர்.

வெள்ளைத் தோல் வெளி நாட்டினன் வந்து ஆரிய—திராவிட விஷ விதை தூவுவதற்கு முன், புற நானூற்றில் (கடவுள் வாழ்த்து மற்றும் புறம் 201), இன்ன பிற சங்க இலக்கிய நூல்கள் ஆகியவற்றிலும் ராமாயண மஹா பாரத நூல்களிலும் என்னதான் சொல்லி இருக்கிறது என்று பார்த்தால் அங்கு ஆரிய திராவிட என்னும் சொற்கள் இனத் துவேஷ பொருளில் எங்கேயுமே காணோம்.
பாரதி என்னும் தூய தமிழ்ப் புலவன் – சொற்தேரின் சாரதி —தனது பாடல்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் “ஆரிய” என்ற சொல்லை எந்த நற்பொருளில் பயன் படுத்தினானோ அதே பொருளில்தான் புற நானூற்றுப் பதிற்றுபத்துப் புலவர்களும் பயன்படுத்தினர் எனக் கண்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.
நம்முடைய இதிஹாச, புராண செந்தமிழ் பைந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் செப்புவது யாதெனின், லோகவாசிகள் 18 கணத்தினர்.

ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (தமிழ் கலைக் களஞ்சியம்) தரும் பட்டியல்:

அமரர்
சித்தர்
அசுரர்
தைத்தியர்
கருடர்
கின்னரர்
நிருதர்
கிம்புருடர்
கந்தர்வர்
இயக்கர் (யக்ஷர்)
விஞ்ஞையர் (வித்யாதரர்)
பூதர்
பைசாசர்
அந்தரர்
முனிவர்
உரகர்
ஆகாயவாசியர்
போகபூமியர் — (பிங்கலம்)

இந்த பிங்கலந்தை நிகண்டு கூறும் செய்தி பல பொருள் உடைத்து. சிலர் பூலோக வாசிகள்; சிலர் மேல் லோக வாசிகள். சிலர் காற்றில் சஞ்சரிப்போர். அவர்களை திரிகூட ராசப்ப கவிராயர், திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் போன்றோர் வானில் கண்டு அழகுபட தெள்ளு தமிழில் அள்ளித் தெளித்திருக்கின்றனர்.

Assurbanipal_op_jacht
அஸீரிய மன்னன் அசுர பானிபால்

வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பர்
கமன சித்தர் வந்து வந்து காய சித்தி விளைப்பார்
தேன் அருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக் காலும் தேர்க் காலும் வழுகும்
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

சித்தர்கள் ஆகாய மார்க்கமாக வந்து அருள் புரிவர். இதுபோல பல விஷயங்கள் 18 கணங்களில் உள.
18 கணங்களையும் பொதுவான குழுக்களாகவும் பிரிப்பர்:
1.அமரர், சித்தர், கிம்புருடர், கந்தர்வர், விஞ்ஞையர் (வித்யாதரர்), ஆகாயவாசியர், போகபூமியர் , முனிவர், கின்னரர்
2.இயக்கர் (யக்ஷர்), நாகர்( உரகர்), கருடர்
3.அசுரர், தைத்தியர், பூதர், பசாசர், நிருதர் (ராக்ஷசர்)
இந்தப் பட்டியல் சில மாறுதல்களுடன் ஏனைய நூல்களில் இடம்பெறும்.

எனது முந்தைய கட்டுரைகளில் மேல் விவரம் காண்க.
எனது முந்தைய கட்டுரைகள்:
அரக்கர்கள்,அசுரர்கள் யார்? (நவம்பர் 7, 2014)
அசுரர்கள், அரக்கர்கள் அகராதி (அக்டோபர் 23, 2014)
திராவிடர்கள் யார்?
அகத்தியரை நியூசிலாந்து மக்கள் வணங்குவது ஏன்?

இந்தியாவில் இருந்து அசீரீயா, பாரசீகம் (ஈரான்) முதலிய நாடுகளுக்குச் சென்ற வேத கால இந்துக்களில் ஒரு பிரிவினர் தங்களை அசுரர் என்று அழைத்துக் கொண்டனர். ரிக்வேதத்தில் இந்திரன், அக்னி, வருணன் என்போர் அசுரன் என்று போற்றப்படுகின்றனர். பிற்காலத்தில் பாரசீகம் சென்ற கோஷ்டியால் இப்பெயர் பொலிவிழந்தது. அவர்கள் வருணன் போன்ற வேத கால தெய்வங்களை அசுரன் என்று போற்றினர். சௌராஸ்ட்ரத்தில் (குஜராத்) இருந்து சென்ற சௌரஷ்ட்ரர் (ஜொராஷ்ட்ரர்) என்ற பெயரில் ஒரு மதமும் துவங்கினர். அஸீரிய மன்னர்கள் அசுர என்ற பெயரை தங்கள் பட்டங்களில் சேர்த்துக் கொண்டனர்.

–சுபம்–

SuMeru, KuMeru, PaMeru,Meru

pameru
(Pamir (Pa Meru Mountains)

Research paper written by London Swaminathan
Research article No.1398; Dated 8th November 2014.

Sumeru is Iraq; old Mesopotamia
Kumeru is South Pole, Kumari in South India and Khmer in Cambodia
Pameru is Pamir, the roof of the world in Tazkistan, Kyrgystan, Afghanistan
Meru is North Pole and Mountain Peak in Kenya; Himalayas in modern times

I am just developing a theme on the basis of Kanchi Paramacharya Swamikal’s lecture in Chennai in 1932. Kanchi Paramacharya (1894 -1994) was the Shankaracharya of Kamakoti Mutt. His Madras lectures were famous and brought out in book form in several editions. On 12th October 1932, he was talking on the topic “Our Religion”. In his scholarly exposition, he said that our Puranas explain that North pole is Su Meru and South Pole is Ku Meru and in between there are seven oceans and seven continents. But today we don’t see such a division because it was the position seen millions of years ago. Then he explained how the earth pole is tilted and how the pole star changes during thousands of years.

mount-meru
Mount Meru in Kenya, Africa

Now look at the words Sumeria, Pamir Mountains, Khmer civilization of Cambodia and Kanyakumari of South India. All these have Meru in their names which mean a Peak, a High place, a Mountain etc.
Meru becomes Medu (high land) in Tamil. I have already explained in one of my posts that R=L=D are interchangeable in most of the names we know.

Kumari in South India is the land’s Southern most point today. But thousands of years ago it was a mountain area which went into the sea.Tamil literature mentioned it in at least two places. There they referred Kumari only as a mountain ( Kumari Kodu in Tamil). It may be Ku+Meru. The people might have migrated to different places and named them after Kumari. We see Comoros islands in Indian Ocean and Khmer in Cambodia.

If you search for the origin of the words Khmer and Sumer, you will draw blank. There is no origin for Sumer, Khmer and Kumari. At least Kanchi Shakaracharya’s 1932 talk explained Kumeru. But he did not elaborate on this and he never said Kumeru is Kumari. I only guess that Tamils might have named it Kumari after the South pole Ku Meru.

sumermap2 in modern Iraq
Sumer in Iraq

In the absence of logical explanation for the Khmer race or Khmer Kingdom, I guess that is also based on Ku+Meru. There is no need to explain Khmer’s Hindu origin. Kambojas were living in the North West part of India long ago and they migrated to different places. The Sanskrit word Kamboja (Camboja=Cambodia) and Meru like Angkhor Wat and Borobudur (Java in Indonesia) temples are self explanatory.

Now look at Sumeria. Again no encyclopaedia gives the origin of the word. Sumerum was the term given by Akkadians according to the “Dictionary of the Ancient Near East” published by the British museum, London; it adds, “However it has not prevented violent scholarly debates in modern times about the possible origins outside Mesopotamia of a Sumerian race who allegedly entered the area as immigrants”.

After going through the Dictionary several times I strongly believe that the Sumerians migrated from some parts of India. If we study the music in ancient Sumer we can see the Sapta swara (seven notes) contribution of Akkadians and all other music things from the Hittiltes. Scholarly world knew that Kassites and Hittites spoke a language closer to Sanskrit family.

maha-meru-yantra
Maha Meru in Sri Chakra of the Hindus

Hindus who migrated to Mesopotamia might have named it Su+Meru. The term occurs for the first time in Taitriya Aranyaka. English people who migrated to Australia, Canada and United states 200 years ago named all the new places after their places of origin. Just to avoid confusion they added ‘NEW’ before the place names (Eg. New South Wales, New England). Tamils who migrated to Northern Sri Lanka named several places after Tamil towns in Tamil Nadu. All the Sri Lankan rivers are given Ganga as a suffix. In the same way Hindus named their new land Su+Meru.

The peak of the tallest mountain in East Africa is also called Meru (Kenya). Meroe is also a known place name in Kushite civilization. When we have a bird’s eye view from top we know that all these civilizations were helped by the Hindus

sumeru_parvat9742
Even Kailash is consiered meru in modern days

Pameru= Pa+Mir
Mir in Arabic and Urdu means high, exalted, honourable which is used as a suffix or prefix in many place names and peoples’ names. Pamir is called the roof of the world. No wonder they called it Meru (Pa+Meru). Pa is a Sanskrit prefix which is used in the book title Pamathy. The nearby mountain in China is called Tien Shan (Deva Achala). It means celestial mountains in Chinese.

So I believe that these Pamir Mountains, Khmer culture, Sumerian civilization and Tamil Kumari mountains (which went under the sea long ago according to Tamil literature) share the word Meru which means high place or a tall mountain.

In the Hindu religious literature Meru has geographical, symbolical, ritual and mythical meanings (John Woodroffe and many others have explained it).

Tamil Reference book :– Sri Jagaguruvin Upadeasangal, First Part, page 75, Kamakoti Kosasthanam, Chennai, 1957, Rs.3.

contact swami_48@yahoo.com

மணமகளே, மணமகளே வா,வா! உன் வலது காலை எடுத்துவைத்து வா வா!!

Griha-Pravesh
Hindu Bride entering the house with her right foot stepping first

மணமகளே, மணமகளே வா,வா! உன் வலது காலை எடுத்துவைத்து வா வா!!

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1397; தேதி 8 நவம்பர், 2014.

தமிழ்நாட்டில் திருமணப் பந்தல்களில் அடிக்கடி ஒலிக்கும் தமிழ் திரைப்படப் பாடல் “மணமகளே, மணமகளே வா வா! உன் வலது காலை எடுத்து வைத்து வா வா!!” — ஏன் வலது காலை எடுத்து வைக்க வேண்டும். இடது கால் கூடாதா?

உலகம் முழுதும் வலதுசாரிகளுக்கு கொஞ்சம் மதிப்பு அதிகம். இந்தக் கொள்கையை உலகம் முழ்ழுதும் பரப்பியோர் இந்துகளாகத்தான் இருக்க வேண்டும் என்பது கீழ்கண்ட விஷயங்களால் தெரிகிறது:

1.கடிகாரம் ஏன் வலமாகச் சுற்றுகிறது? இந்துக்கள் ஏன் கோவிலை வலமாகச் சுற்றுகிறார்கள்? இரண்டையும் ஒப்பிட்டால் நாமே கடிகாரத்தை வலமாகச் சுற்றவைத்தவர்கள் என்றும் தோன்றுகிறது. இந்துக்கள் எந்த சுப காரியத்தையும் வலப் பக்கமாகவே செய்வர்.

2.இடது கையை — சுத்தம் செய்யப் பயன்படுத்துவதால் மட்டும் வலது கைக்குப் பெருமை என்று எண்ணி விடக்கூடாது. சிலர் பிறப்பிலேயே இடது கையை அதிகமாகப் பயன்படுத்துவர். இப்படிப்பட்ட இடது கைக் காரர்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டனர். இடது கையரைவிட வலது கைக்காரர்கள் ஒன்பது ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்கிறார்கள். சர்வே, புள்ளி விவரம் எதுவும் நடத்தாமலேயே இந்துக்களுக்கு அந்தக் காலத்திலேயே இந்த விஞ்ஞான உண்மை தெரிந்திருக்கிறது.

right foot
Hindu Griha Pravesh Ceremony

3.இந்துக்கள் வீட்டில் யாராவது இடது கைப்பழக்கத்தோடு பிறந்து விட்டால் அவர்களை அதட்டி மிரட்டி வலது கைக்காரர்களாக மாற்றி விடுவர். வலது காலை எடுத்து வைத்துதான் கல்யாணப் பெண் வீட்டுக்குள் வரவேண்டும். கிரஹப் ப்ரவேசம், பூஜைகள் எல்லாவற்றிலும் எதையும் வலது புறமகவே செய்ய வேண்டும்

4.பிராமணச் சிறுவர்கள் செய்யும் சமிதாதானம், எல்லோரும் செய்யும் சந்தியா வந்தனம் ஆகியவற்றிலும் வலது கைப்புறமாகவே முத்திரைகள், பொட்டு வைக்கத் துவங்குவர்.

5.தமிழன் கண்ட அதிசயம்
சங்க இலக்கியத்தில் அடிக்கடி ஒரு உவமை வரும். அதாவது புலியால் தாக்கப்பட்ட மிருகம் வலப் பக்கம் விழுந்தால்தான் புலி சாப்பிடுமாம். இதை பத்துப் பதினைந்து புலவர்கள் பாடி விட்டார்கள்! ஆக மணப் பெண்ணை வலது காலை வைக்கச் சொன்ன தமிழன், காடுகளில் புலியையும் கவனித்திருக்கிறான் (காண்க புறம். 190, அகம் 238, 252).

6.இந்துக்கள் கோவில்களுக்குப் போனாலும், உணவகங்களுக்குப் போனாலும் வலது கையை மட்டுமே பயன்படுத்துவர். அதே போல சாது சந்யாசிகளும், கோவில் குருக்களும் கூட வலது கை மூலம் மட்டுமே எல்லாம் செய்வர்.

7.ஒரே ஒரு இடத்தில் மட்டுமே – மயானத்தில் மட்டுமே—சடலத்தை வலம் வராமல் – இடமாக வருவர். இதே போல பிராமணர்கள் தர்ப்பணம் செய்கையில் இடது தோளின் மீதிருக்கும் பூணூலை வலது தோளில் மாற்றி (அதாவது பூணூல் இடப்பக்கமாக சரியும்படி) நீர்க்கடன் செலுத்துவர். இந்துக்கள் செய்யும் பூஜைகளில் பெண்கள் எப்போதும் வலப்பகம் நிற்க வேண்டும்.

entering-the-new-house

8. இன்னும் ஒரு இடம் இறைவனே தனது இடப்பக்கத்தை உமை அம்மைக்குக் கொடுத்ததாகும். அர்த்த நாரீஸ்வரன் கதைதான் பைபிளில் ஆதாம்—ஏவாள் கதையாக வந்தது. இடப்பக்க எலும்பை உடைத்து பெண்ணை உருவாக்கினான் இறைவன். சம்ஸ்கிருதத்தில் பெண்ணுக்கு வாமா (இடது) என்ற பெயரும் உண்டு. (காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சொற்பொழிவில், வேதத்தில் உள்ள ஒரு கதைதான் இது என்பார். ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் இருந்தன. ஒரு பறவை பழம் சாப்பிடாமல் ஆனந்தமாக இருந்தது மற்றொன்று பழத்தைச் சாப்பிட்டது என்பது வேதக் கதை–. இதுவே ஆடம் எனபவர் ஆப்பிள் சாப்பிட்டகதையாக வந்தது. ஆத்மா என்பது ஆதாம் என்றும் ஈவ் என்பது ஜீவ்+ஆத்மா= ஜீவாத்மா என்றும் மாறியது.)

9.கிரேக்க கவிஞர் ஹோமர் எழுதிய ஆடிஸியில் பல இடங்களில் வலது பக்கப் பெருமையை எழுதி இருக்கிறார். ஒரு கருடன் வலப் பக்கமாகப் பறந்தவுடன் கடவுளே நல்ல சகுனம் காட்டிவிட்டார் என்று பாடுகிறார். இது போலப் பல இடங்களில் வலது என்பது அதிர்ஷ்டம் என்று எழுதுகிறார்.

left-right-handedness-dominance

வலப் பக்கம் இலை வந்தால், கணவர் நல்லவர்!

10.இங்கிலாந்தில் ஒரு குறிப்பிட்ட செடியை பூஞ்சட்டியில் வைத்துப் பெண்கள் தொங்க விடுவர் என்றும் அதன் இலைகள் வலப் பக்கம் திரும்பினால் கணவர் நல்லவர் என்றும், இலைகள் இடது பக்கம் திரும்பினால் கணவன் மற்ற பெண்களுடன் தொடர்பு கொண்டவன் என்றும் நம்பினர். இந்தச் செடிக்கு “மிட் சம்மர் மென்” என்று பெயர். ஆக ஐரோப்பவிலும் இந்த நம்பிக்கை இருந்தது தெரிகிறது.

11. வால்மீ கிராமாயண யுத்த காண்டத்தில் ராமன் சொல்கிறான்: இதோ எனது வலது கண் துடிக்கிறது. நான் யுத்தத்தில் வெற்றி பெறுவேன் என்கிறார். ஆண்களுக்கு வலது கண் துடித்தால் அதிர்ஷ்டம். பெண்களுக்கு வலது கண் துடித்தால் கெட்டது. உத்தர காண்டத்தில் சீதை புலம்புகிறாள்: என் வலது கண் துடிக்கிறது சகுனங்கள் சரியில்லை. எனக்கு தீங்கு நடக்கப்போகிறது”. அவள் சொன்னது சரிதன் — இதற்குப்பின், அவளை ராமன் காட்டிற்கு அனுப்பிவிட்டான்.

இதிலும் விஞ்ஞான உண்மை இருக்கலாம். பெண்களுக்கு வலப் பக்க மூளையும் ஆண்களுக்கு இடப்பக்க மூளையும் பலம் வாய்ந்தவை என்பது மருத்துவ அறிவியல் காட்டும் உண்மை. ஆனால் வலது மூளை உடலின் இடது பக்கத்தையும் இடது மூளை உடலின் வலது பக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது என்பதையும் மருத்துவ நூல் கூறுகிறது. ஆகவே வால்மீகி ராமயணம் சொல்வது உண்மையே.

12.இதே போல ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும், லத்தின் மொழியிலும் வலதைப் பாராட்டியும் இடது புறத்தை இகழ்ந்தும் பல பல மரபுத் தொடர்கள் உள்ளன ( எனது ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரங்களும் உள்ளன.)

13.இந்துக்கள் கிழக்கு நோக்கி நின்று பூஜை செய்வர். பிறகு வலது பக்கம் திரும்புவர். அது தெற்கு திசை — தட்சிண திசை. ஆகையால் இப்படி வலப்பக்கம் செல்வது ப்ர+தக்ஷிணம் எனப்படும்.

traditional_banana_leaf_meal
You have to use only right hand for eating

நீங்கள் இடதா? வலதா?

14.வாமாசாரம் என்பது இந்துக்களில் ஒரு வழிபடும் முறை. இதற்கு இடது புற முறை என்று பெயர். அவர்களுக்கு ஐந்து “ம” முக்கியம். அதாவது மது, மாது, மத்ஸ்யம் (மச்சம்=மீன்), முத்ரா (முத்திரைகள்), மைத்துனம் (செக்ஸ்) என்பன ஆகும். ஆகையால் இது கெட்ட பெயர் எடுத்தது . ஏனெனில், இந்த வழியும் கடவுளை நோக்கி அழைத்துச் செல்லுமானாலும், பாதியில் வழுக்கி விழும் வாய்ப்புகள் அதிகம்.

book on left

15.முடிவுரை:–

1.கிரேக்க, லத்தீன், பிரெஞ்சு, ஆங்கில மொழிகளில் உள்ள சொற்றொடர்கள் உலகம் முழுதும் இந்த வழக்கம் இரூப்பதைக் காட்டினாலும் இந்து மத நூல்களில் ஏராளமான குறிப்புகள் இருப்பதாலும் இன்று வரை நாம் மட்டுமே இதைப் பயன்படுத்துவதாலும் நாமே இதைத் துவக்கியவர்கள் என்று சொல்லலாம்.
2.வலது கால், வலது கை ஆகியவற்றின் பெருமைதனைக் கூறும் சொற்றொடர்கள் ஐரோப்பிய மொழிகளில் இருப்பதும் கருடன் பற்றிய குறிப்புகள் இருப்பதும் நம்முடைய தொடர்பைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.

3.வலம்புரிச் சங்கு போன்ற புனிதப் பொருட்களும் வலதின் மகிமையை உணர்த்தும்

left_verse_right_brain

contact swami_48@yahoo.com