Who discovered Five Elements/Pancha Bhuta?

panchabhuta-1

Research paper written by London Swaminathan

Research article No.1514; Dated  24    December 2014.

The concept of Five Elements, known as Pancha Bhuta in Indian languages, is found in Greek and Babylonian cultures. But they borrowed it from India. Greeks left one of the elements, Sky, and used the other four elements i.e. water, fire, earth and wind. Empedocles of Greece mentioned the four elements.

In the Babylonian myth, Enuma Elis, the elements are mentioned. But the hymn is like the creation hymn in the Rig Veda. I have already compared them in my post, “Creation: Vedic and Babylonian Hymns.

Buddhists and Jains also developed the five elements in their own way. It was exported to China and Japan.

Following is a verse from the Sangam Tamil literature:

“The earth is packed full of molecules,

the sky is supported by the earth, — patience

the air embraces the sky, — extensive wisdom

the fire encounters the air, — strength

and the water — mercy

is hostile to the fire. – destruction of enemies

Like, in nature, to the five elements, you bear with your enemies; you possess extensive wisdom, you have strength, you have might to destroy and mercy to protect —Purananuru verse 2, sung by Murinjiyur Mudinagarayar.

5-primordial-elements-7

This is like a translation of the following hymn in Taiittiriya Upanishad:

From – divine – soul, verily,

space arose;

from space wind;

from wind fire;

from fire water;

from water the earth;

from earth the herbs and food;

from food semen and from semen the person/purusa

Taittiriya Upanishad, Brahmavalli, Anuvak.1

We see the same order in both

Sky – Sky

Wind – Wind

Fire —  Fire

Water – Water

Earth – Earth

Kalidasa used the five elements in Raghuvamsa and his other works.

Raghuvamsa 1-29

Brahma created Dilipan with five elements. This is true indeed because all his virtues  are useful to others (like five elements).

Raghuvamsa 4-11

As soon as Raghu became king, even the Pancha bhutas attained new vigour

Raghuvamsa 3-4

Dilipan’s wife Sudakshina who was pregnant, ate sand out of craving .

Sangam Tamil Puram verse 20 by Kurungkoliyur kizar said the same thing.

Kings were called “Bhubuk” i.e. eaters of land (of other kings)

Kings were considered God or Vishnu

Puram Verse 92 by  Avvaiyar says king is like a father.

Ragu 3-27 says  “king is Vishnu”

In Tamil the words for the king and his palace are synonymous with the God and Temple (Ko Il; Ko is king and Il is house; Kovil is Temple.)

தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2

Adhiyamaan and Avvaiyar

அதியமான், அவ்வையார்

First Part of Tolkappiya Athisayangal was published on 14th November 2014 (Post no 1410)

The Wonder that is Tamil – Part 3

தொல்காப்பிய அதிசயங்கள்

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1513; தேதி 24 டிசம்பர், 2014.

அதிசயம் 11

கி.பி.12 ஆம் நூற்றாண்டில் நேமிநாத ஆசிரியர் குணவீர பண்டிதர், தொல்காப்பியத்தைக் கடலாகவும் நேமிநாதம் என்னும் நூலை அக்கடலில் செல்லும் சிறு படகாவும் கொள்வார்:–

தொல்காப்பியக் கடலிற் சொற்றீபச் சுற்றளக்கப்

பல்காற் கொண்டோடும் படகென்ப

அதிசயம் 12

வழிபடு தெய்வம் நிற்புறங்காப்பப்

பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து

பொலிமின் (தொல். 1367)

நாம் விரும்பிய தெய்வத்தை வழிபடும் உரிமையையும், இறைவன் நம்மை எல்லா வளங்களும் கொடுத்துக் காப்பான் என்றும் தொல்காப்பியர் கூறுகிறார். பழிதீர் செல்வம் என்ற சொற்றொடர் குறிப்பிடத்த்க்கது. நல்ல வழியில் சம்பாதிக்கும் பொருள்!

tamil poets1

அதிசயம் 13

தந்தையர் ஒப்பர் மக்கள் (1092)

“தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” — என்று தமிழில் ஒரு பழ மொழி உண்டு. மனுஸ்மிருதியில் பிள்ளை என்பவன் தந்தையின் மறு அச்சு என்கிறார். அதைத் தொல்காப்பியரும் தந்தையர் ஒப்பர் மக்கள் (1092)

என்கிறார்.

அதிசயம் 14

பெரும் பெயர் புலவர்கள்

தமிழில் பெயர்பெற்ற புலவர்களுக்கு சிறப்பு அடைமொழிகள் உள்ளன. கற்றறிந்தோர் எப்போதும் அந்த அடை மொழிகளைப் பயன்படுத்துவர்

ஒல்காப்புகழ் தொல்காப்பியன்

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்

வானோர் ஏத்தும் வாய் மொழிப் பல் புகழ்

ஆனாப் பெருமை அகத்தியன்

உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்

புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலன்

தெய்வப் புலவன் திருவள்ளுவன்

பல்கலைக் குரிசில் பவணந்தி

உளம்கூர் கேள்வி இளம்பூரணர்

ஆனாப் பெருமைச் சேனாவரையர்

WCTC/Padma Subramaniam

அதிசயம் 15

தொல்காப்பியர் தமிழுக்கு புதிய இலக்கணம் வகுத்தார் என்பதைவிட அவருக்கு முந்தியிருந்த கருத்துக்களைத் தொகுத்து நூல் வடிவில் தந்தார் என்பதே பொருந்தும். அவர் மற்றவர் வகுத்த விதிகளை மேற்கோள் காட்டும்போதெல்லாம் என்ப, மொழிப போன்ற வினைச் சொற்களைப் பயன்படுத்துகிறார். இவ்வாறு 287 இடங்களில் அவர் சொல்கிறார்.

அதிசயம் 16

பாணிணியில் சொற்செட்டை தொல்காபியத்தில் காண முடியாது. சொன்னதையே மீண்டும் சொல்லி நம் பொறுமையைச் சோதிக்கும் இடங்களும் உண்டு:–

ஆறறிவு உயிர்கள் பற்றிய சூத்திரத்தில்

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே என்று

திரும்பத் திரும்பச் சொல்லுவார்.

இதுபோல வேறு சில இடங்களில்

என்ன பெயரும் அத்திணையவ்வே,

மேலைக் கிளவியொடு வேறுபாடிலவே என்று

திரும்பத் திரும்பச் சொல்லுவார்.

paari

பாரி வள்ளல்

அதிசயம் 17

தொல்காப்பியர் 94 சம்ஸ்கிருதச் சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார். இது சங்க இலக்கியத்தை விட அதிகம் என்று கே கே பிள்ளை போன்றோர் செப்புவர்.

தொல்காப்பியத்தை முதல் முதலில் பிரசுரித்தவர் யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளை ஆவார். 1891ல் முதல் பதிப்பு அச்சிடப்ப்ட்டது. 1610 சூத்திரங்கள் கொண்ட 3 அதிகாரங்களையும் அவர் வெளியிட்டார்.

யாழ்ப்பாணக் கவிஞர் சருப்பதோபத்திரம்

saraswati

கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1512; தேதி 24 டிசம்பர், 2014.

 

தமிழ் என்னும் விந்தை! -14

சருப்பதோபத்திரம் – 3

ச.நாகராஜன்

யாழ்ப்பாணத்துக் கவிஞர் க.மயில்வாகனப் பிள்ளை இயற்றிய ஒரு சருப்பதோபத்திரம் இது:-

தேவா நாதா தாநா வாதே            

  வாரா தேதா தாதே ராவா                                        

 நாதே னாகா கானா தேநா                                            

தாதா காயா யாகா தாதா

 

 

இதன் பொருள் :-

தேவா – பிரகாசம் உடையவரே!                                         

நாதா – தலைவரே!                                                

தாநா – வலிமையினை உடையவரே!                                       

தாதா – பிதாவே!                                                      

  வாநா – ஆகாயமானவரே!                                                  

 தேன் நாகா – (கூண்டுகள் தூங்கும் கீரி) மலையை உடையவரே!      

கானா – கீதப்பிரியரே!                                                 

தே – தெய்வமே!                                                      

காயா – திருமேனியை உடையவரே!                                     

  யாகா – யாகங்களுக்கு உரியவரே!                                      

தாதா – கொடையாளரே!                                                 

வாது வாராதே – வாது வாராதபடி                                

தேரா – சேர்ந்து                                                  

 நா தா தா – நா வன்மை தந்தருள்க!

இனி இதை 64 அறைகளில் பொருத்திப் பார்ப்போம்:

bandhamnew14

தே வா நா தா தா நா வா தே
வா ரா தே தா தா தே ரா வா
நா தே னா கா கா னா தே நா
தா தா கா யா யா கா தா தா
தா தா கா யா யா கா தா தா
நா தே னா கா கா னா தே நா
வா ரா தே தா தா தே ரா வா
தே வா நா தா தா நா வா தே
               

 

எந்த வாயில் வழியாக நுழைந்தாலும் பாடலைப் படிக்க முடிகிறது. அது தான் சருப்பதோபத்திர பந்தம்!

இனி கவிஞர் பா.முனியமுத்து (உவமைப்பித்தன்) இயற்றிய ஒரு சருப்பதோபத்திரத்தைப் பார்ப்போம்:-

பாகா நாதா தாநா காபா                                                காவே நீகா காநீ வேகா                                                நாநீ தாமா மாதா நீநா                                                 தாகா மாதே தேமா காதா!

இதை 64 கட்டங்களில் பொருத்திப் பார்த்தால் வரும் சருப்பதோபத்திரம் இது தான்:-

பா கா நா தா தா நா கா பா
கா வே  நீ கா கா  நீ வே கா
நா நீ தா மா மா தா நீ நா
தா கா மா தே தே மா கா தா
தா கா மா தே தே மா கா தா
நா நீ தா மா மா தா நீ நா
கா வே  நீ கா கா நீ வே கா
பா கா நா தா தா நா கா பா

தமிழ் என்னும் அமுத சாகரம் பரந்து விரிந்த எல்லை காண முடியாத ஒன்று. முடிந்த வரை அதை அள்ளி அள்ளிப் பருகலாம்.

-தொடரும்

Tamil’s ban on Ca, Nja, Ra, La!

tolkappiyar

The Wonder that is Tamil-2

Research paper written by London Swaminathan
Research article No.1511; Dated 23 December 2014.

Tolkaappiam is the oldest Tamil book available today. It was written by Tolkaappian also known as Truna Dumagni. Most of the scholars date him around 1st century BCE. Tolkappiam has some strange rules that are not followed anymore. One of them is that he says Ca, Nja, Ra, La cannot be the initial letter of Tamil words. Every language has got its own peculiar rules. But Indian languages, which have come from Tamil and Sanskrit, form words in the same way. So it looks very strange that he included Ca – letter in the banned list of letters. No commentator explained the reason for it. Major languages in the world have got words beginning with the letter Sa or Ca

Though Tolkaappian said it, we find at least 14 words beginning with letter ‘Ca’ even in the ancient Sangam literature. Mostly they are Sanskrit words. Tamils had three Sangams/Cankams (Academies or Associations of scholars). Even those academies were called “Sangam/Cankam”, a Sanskrit word.

I was wondering why he included the letter “Ca” in the banned list of letters. Sanskrit has four different sounds in Ca- Varga i.e.Ca,Cha,Ja,Jha
In addition to these, there are three sibilants Sa, Sa, Sha.

06fr_Nagaswamy_boo_1134438g

Vyasa was called “Sa-kara kukshi” for his over use of the letter Ca/Sa. Probably Tamils wanted to avoid repeating the same.

Nasal sound ‘Nja’ is used mostly in Malayalam nowadays. We have a few words in Sangam corpus.
Letters L and R:– When they write Loka they add U with loka (Ulaoka), when they write Ramayana they add I and write Iramayana and when they write Lanka they add I and write Ilankai.

Tamil_Brahmi_Potsherd

Aytha Letter of Three Dots
Another strange Tamil letter is three dots ஃ with sound Ah. This is rarely used nowadays. Even in the Sangam days it was not used much. Tamil can survive without this letter. Since this is not found in ancient inscriptions, but mentioned by Tolkaappian, people even date him somewhere in the first few centuries of Common Era (A.D.)

Pobably Tolkappian was the one who invented this letter. But we need more proof to make such a sweeping statement. Though it looked like Sanskrit Visarga with two dots “ : ”, Tamil letter was not used like Visarga.

The other peculiar sound is Au as in English ‘Ow’l. Though both Tamil and Sanskrit have this as part of the vowel list, no one used it in the olden times. Even in the modern voluminous Sanskrit dictionaries, we have only four pages under Au. It shows that Indians developed their language in the same way. Being the sons of the soil, from the Himalayas up to Kanyakumari , they thought the way and spoke in the same way!

kolam painting

Who invented the Alphabet?
“A” is the first letter in most of the languages in the world. The earliest record of this as the first letter is found in the Rig Veda. Civilized and cultured Languages evolved in India and influenced other languages of the world. The voluminous Vedic literature and the highest thoughts of human welfare in it, stand as a good proof for Indian genius. Neither Hebrew nor Greek could produce anything when the Rig Veda was compiled by Veda Vyasa. Hindus say that it happened in 3100 BCE and modern scholarship say that it had happened in 1500 BCE. Either way it was well before Greek and Hebrew literature.

Tamil book Tirukkural in its very first couplets says,

“As all alphabets have the letter A for their first, so has the world the eternal God for its beginning”.
Even before Valluvar said it in his Tirukkural, Lord Krishna said that “Aksharanam akarosmi” (Bhagavad Gita 10-33) i.e. “Of the letters I am the letter A”.

He also said “he is the mono syllable Aum ( Bhagavad Gita 10-25)”, which is made up of A+U+M, again the letter A as the first one.
Bible repeated it in the Revelations 216, “I am the Alpha and the Omega”.

tol2

But even before the Bhagavad Gita, we find that all Vedic Mantras begin with Aum and the first and the last hymn of the Rig Veda is on Agni. Agni begins with A.
The first mantra in the oldest book Rig Veda begins with “Agni Mile Purohitam……”

Hindus contributed this A sound to all the major languages of the world i.e. they made the alphabet with A as the first letter. We know that the English word “ alphabet” is made up of Greek letters Alpha+Beta. Sanskrit and Tamil have the full list of vowels in the world!

contact swami_48@yahoo.com

இரண்டு நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்தியவர்!

krishnamac1

Written by S Nagarajan
Article No.1510; Dated 23 December 2014.

“ யோகம் என்பது மனதின் இயக்கங்களை நிறுத்துவது தான்!”
– பதஞ்சலி முனிவர் யோகசூத்திரத்தில் கூறுவது

மனிதனின் பூரண ஆயுள் என்று கூறப்படும் நூறு வயதை எட்டியதோடு ஆயுள் முழுவதும் திடகாத்திரமாக வாழ்ந்து காட்டி அறிவியலை வியக்க வைத்த இந்திய யோகி திருமலை கிருஷ்ணமாசார்யா (தோற்றம் 18-11-1888 மறைவு 28-2-1989). இள வயதிலேயே யோகத்தை முறைப்படி கற்ற கிருஷ்ணமாசார்யா யோகத்திற்கு ஒரு புதிய பொலிவையும் மதிப்பையும் உலக அரங்கில் ஏற்படுத்தித் தந்தார்.

இந்திய வைசிராயாக இருந்த லார்ட் இர்வின் கிருஷ்ணமாசார்யாவிடம் பெரு மதிப்பு கொண்டவர். அவருக்கு நீரிழிவு நோய் இருந்தது. சிம்லாவில் தங்கி ஆறு மாத காலம் அவருக்கு யோகப் பயிற்சிகளை கிருஷ்ணமாசார்யா கற்றுத் தர அவர் பெரிதும் குணமடைந்தார். 1919ஆம் ஆண்டு கிருஷ்ணமாசார்யாவை திபெத்திற்கு அனுப்பி அதற்கான செலவு முழுவதையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

1935ஆம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்த இதய நோய் நிபுணர் தெரெஸி ப்ராஸே (Therese Brosse) என்பவர் கலிபோர்னியா விஞ்ஞானி ஒருவருடன் இந்தியா வந்து கிருஷ்ணமாசார்யா மீது சோதனைகளை மேற்கொண்டார். அவர்களிடம் யோகா மூலமாக இதயத் துடிப்பை நிறுத்த முடியும், இதய ஓட்டத்தின் மின் அதிர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தவும் முற்றிலுமாக நிறுத்தவும் முடியும் என்று கிருஷ்ணமாசார்யா கூறினார். அவர்களால் இதை நம்பவே முடியவில்லை. ஆனால் சுமார் இரு நிமிடங்கள் இதயத்தை நிறுத்திக் காண்பித்தார் அவர்கள் அயர்ந்து வியந்தனர். ஈசிஜியில் பூஜ்யம் என்ற அளவை பல வினாடிகளுக்குத் தான் பார்த்ததாக தெரெஸி ப்ராஸே தன் குறிப்பில் எழுதி வைத்தார்.

Tirumalai_Krishnamacharya

இன்னொரு ஜெர்மானிய டாக்டர் இதைப் பார்த்து விட்டு, “இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவரை இறந்து விட்டதாகவே சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

மைசூரில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் அவர் யோகா மூலமாக என்னென்ன செய்யமுடியும் என்பதை நிரூபிப்பதற்காக தனது நாடியை நிறுத்திக் காண்பித்தார். ஓடுகின்ற காரை நிறுத்திக் காண்பித்தார். பற்களால் மிகவும் கனமான பொருள்களைத் தூக்கிக் காண்பித்தார். அத்தோடு பார்ப்பதற்கே பிரமிப்பாக உள்ள கடினமான ஆசனங்களை பொது மக்கள் மத்தியில் செய்து காண்பித்தார். இதனால் மனம் மகிழ்ந்த மைசூர் அரசர் இவரை வெகுவாக மதித்து ஆதரித்தார்.

அறுபது வயதுக்குப் பின்னர் சென்னைக்கு வந்த கிருஷ்ணமாசார்யா இறுதி வரை சென்னையிலேயே வசித்தார். பழுத்த 96ஆம் வயதில் அவர் இடுப்பு எலும்பு முறியவே, அறுவைச் சிகிச்சையை ஏற்க மறுத்து தன் யோகம் மூலமாகவே சிகிச்சை செய்து கொண்டார். நூறு வயது தாண்டியும் இறுதி வரை உணர்வுடன் இருந்தது அவரது யோகப் பயிற்சியின் வலிமைக்கு ஒரு சான்றாக அமைந்தது.

அவரது சிகிச்சை முறையே அலாதியாக அமைந்தது. நோயாளியின் நாடித் துடிப்பும் அவரது தோலின் நிறம், அவரது மூச்சின் தரம் ஆகியவற்றை வைத்தே அவருக்கு இன்ன வியாதி என்று கூறி அதற்கான சிகிச்சையையும் தர ஆரம்பிப்பது அவரது விசேஷமான யோக வழியிலான சிகிச்சை முறையாக அமைந்தது.

பெரும் யோக நூல்கள் பலவும் அவருக்கு மனப்பாடம். பதஞ்சலியின் யோக சூத்திரம் உலகிற்குக் கிடைத்த அரும் கொடை என்று அவர் அடிக்கடி கூறுவார்.சூரியனின் மீது அபார பக்தி கொண்டவர் அவர். எந்த ஒரு மருந்தையும் தரும் முன்னர் சூரியனை வேண்டிய பின்னரே தருவார். சூரியனை வணங்குமாறு இடையறாது அனைவருக்கும் அவர் அறிவுரை சொல்லி வந்தார்.
Krishnamacharya_scorpion

ஆரோக்கியத்துடன் அறிவியல் வியக்கும் வகையில் ஒரு சூப்பர் மேனாக யோகா மூலம் வாழ முடியும் என்று உணர்த்திய அபூர்வ யோகியாக அவர் அமைந்தது இந்தியாவிற்கே பெருமை சேர்ப்பதாக அமைந்தது.

மனித ஆற்றலின் எல்லையற்ற சக்தியை கடந்த முன்னூறு ஆண்டுகளாக தொடர்ந்து அறிவியல் ஆய்ந்து வருகிறது. அதிசய மனிதர்களில் சிலரைப் பற்றி இது வரை பார்த்தோம். ஆங்காங்கே இப்படிப்பட்ட சூப்பர்மேன்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

விஞ்ஞானிகளுள் அபூர்வமான ஒரு மனிதர் இரத்த வகைகளைக் கண்டுபிடித்த லாண்ட்ஸ்டெய்னர். எதற்கும் அலட்டிக்கொள்ளாத சுபாவம் கொண்டவர் அவர். 1930ஆம் ஆண்டில் ஒரு நாள் மாலை நேரத்தில் அவர் வீட்டிற்கு பரபரப்புடன் அவரது நண்பர் பிலிப் லெவைன் வந்தார். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் வழக்கம் போல படிப்பதும் பேசுவதுமாக இருந்தனர்.”உங்களுக்கு விஷயமே தெரியாதா?” என்று அவர் பரபரப்புடன் கேட்டார், “என்ன விஷயம்?” என்று லாண்ட்ஸ்டெய்னரின் மனைவியும் மகனும் கேட்டனர். லாண்ட்ஸ்டெய்னர் நோபல் பரிசை வென்றிருக்கிறார் என்று பரபரப்புடன் கூறினார் நண்பர். லாண்ட்ஸ்டெய்னருக்கு நோபல் பரிசு கிடைத்த விஷயத்தை அவர்கள் அதுவரை அறிந்திருக்கவே இல்லை. அன்று காலையே லாண்ட்ஸ்டெய்னருக்கு இது தெரிந்திருந்த போதிலும் அவர் இதை யாரிடமும் சொல்லவில்லை. அப்படி ஒரு அடக்கமான சுபாவம் மனிதருக்கு.

about_krishnamacharya

போலியோ ஆராய்ச்சி, நோய் தடுப்பு அமைப்பு வேலை செய்யும் முறை, மனிதனின் இரத்த வகைகள் ஆகியவற்றில் அவர் நடத்திய ஆராய்ச்சிகளுக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று சுமார் 14 பேர்கள் நாமினேஷன் தந்து வலியுறுத்தி வந்தனர். விஞ்ஞானிகள் வட்டாரமும் அவரது நோபல் அங்கீகாரத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தது. இறுதியாக 29 நீண்ட வருடங்கள் கழிந்த பிறகு, அவரது இரத்த வகைகளின் கண்டுபிடிப்பிற்கு நோபல் பரிசு கிடைத்தது.

இவரது வாழ்க்கை முழுவதும் நிகழ்ந்த சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு. அயராத கடும் உழைப்பாளியான அவர் லாபரட்டரியிலேயே தான் வாசம் செய்வார். அவரது கீழ் வேலை பார்த்த இளம் விஞ்ஞானிகள் மிகுந்த அவசரம் அவசரமாக பல முடிவுகளைத் தெரிவிப்பர். அவர்களை நோக்கி அவர்,” இது வேடிக்கையாக இல்லையா! முதுமை வயதை அடைந்த எனக்கு இன்னும் சிறிது காலமே மீதம் இருக்கும் போது நான் உங்களுக்கு பொறுமையைப் பற்றி போதிக்க வேண்டியிருக்கிறதே! உங்களுக்கு இன்னும் நீண்ட நெடிய வாழ்க்கை உள்ளதே! அவசரப்படாதீர்கள்” என்பார்.

அவரது வளர்ப்பு நாயான வால்டியை தன் டெஸ்கின் கீழே அமர வைப்பார். அசராமல் நெடு நேரம் அப்படியே உட்காரும் அது, சாப்பாடு நேரம் வந்தவுடன் குலைக்க ஆரம்பிக்கும். அதைப் பார்த்து லாண்ட்ஸ்டெய்னர், “என்ன வால்டி, விஞ்ஞானத்தை நீ மதிக்கவே மாட்டேன் என்கிறாய்” என்று செல்லமாகக் கடிந்து கொள்வார்!

Contact swami_48@yahoo.com
*****************

‘’ச’’ – எழுத்துக்கு தொல்காப்பியன் தடை விதித்த மர்மம் என்ன?

tol1

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1509; தேதி 23 டிசம்பர், 2014.

This article is available in English as well.
Tamil Wonders, Tamil Miracles, Tamil Beauty
The Wonder that is Tamil- Part 2

தமிழ் அதிசயம் -6
தமிழ் மொழியில் சில எழுத்துக்களில் சொற்கள் துவங்கக் கூடாது என்று தொல்காப்பியம் தடை விதிக்கிறது. சங்கம் என்ற சொல்லே தமிழ் சொல் இல்லை என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் தமிழர்கள் தங்கள் மொழியை வளர்க்க மூன்று தமிழ்ச் சங்கங்கள் வைத்தது அவர்களுக்குத் தெரியும்!

தமிழில் கிடைத்த நூல்களில் மிகவும் பழமையானது தொல்காப்பியம் என்று சான்றோர் கூறுவர். இதை எழுதியவர் “ஒல்காப் புகழ்” தொல்காப்பியன் ஆவார். இவர் விதித்த தடையையும் மீறி ச- என்னும் எழுத்தில் துவங்கும் சுமார் 14 சொற்கள் சங்க இலக்கியத்திலேயே உள்ளன. இவைகள் வடமொழிச் சொற்களே! சகடம், சங்கம், சடை, சமன், சரணம், சருமம், சலதாரி, சலம், சனம், சண்பகம் முதலியன அவை.

tol2

தமிழ் அதிசயம் -7
இதே போல “ஞ” என்னும் எழுத்திலும் சொற்கள் துவங்கக் கூடாது என விதி. ஏன் இப்படி விதித்தனர் என்பது யாருக்கும் தெரியாது. அப்படியும் சங்க இலக்கியத்தில் ஞமலி (நாய்), ஞமன் (யமன்) ஆகிய சொற்கள் உண்டு. ய, ர, ல ஆகிய எழுத்துக்களும் தமிழ் சொற்கள் துவங்கக் கூடாது என்பது விதி. இதற்கு என்ன காரணம் என்பது எங்கும் இல்லை.

‘’ச’’ என்பதன் மீது விதிக்கப்பட்ட தடைதான் வியப்பைத் தருகிறது. உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் ‘’ச’’ சப்தத்துடன் துவங்கும் சொற்கள் ஏராளம். தமிழில் நாம் இன்றும் கூட சங்கு, சங்கம், சமம் முதலிய சொற்களைப் பயன்படுத்துகிறோம் இவை வட மொழிச் சொற்கள். ஒருவேளை வட மொழியுடன் வேறுபடுத்த இந்த விதியை வைத்தனரோ! ஏனெனில் வடமொழியில் ‘’ச’’ – வர்கத்தில் நான்கு விதம் உண்டு. இது தவிர ஆங்கிலத்திலுள்ள ஸ், ஷ் போன்று சப்தம் உடைய நான்கு வகைகள் வேறு வட மொழியில் இருக்கின்றன. வியாசர் என்னும் மாமுனிவர் அதிகமான ஸ்லோகங்களை ‘’ஸ’’ என்னும் எழுத்தில் துவங்கியதால் அவருக்கு சகாரகுக்ஷி என்று பெயர் எனவும் சான்றோர் கூறுவர். இதனால்தான் தமிழில் ச-வுக்குத் தடை விதித்தனரோ!

ய,ர,ல, ஞ – ஆகிய சில எழுத்துக்களுக்கும் தடை விதித்ததற்குக் காரணம் கூறப்படவில்லை!

06fr_Nagaswamy_boo_1134438g

தமிழ் அதிசயம் -8
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ அஹ்து அஃது, இஹ்து, இஃது

ஆய்த எழுத்தும் ஒரு விநோத எழுத்தே. இதை சங்க காலத்திலும் சரி தற்காலத்திலும் சரி நாம் அதிகம் பயன்படுத்தவில்லை. இந்த மூன்று புள்ளி உடைய எழுத்து கல்வெட்டுகளில் காணப்படாததால் தொல்காப்பியர் காலத்தை முதல் சில நூற்றாண்டுகளில் வைப்போரும் உளர்.

ஆய்த எழுத்தைக் கண்டு பிடித்ததே தொல்காப்பியரோ என்று எண்ணவும் சில காரணங்கள் உண்டு. வடமொழியில் விசர்க்கம் என்னும் இரண்டு புள்ளி எழுத்து போல இதைப் பயன்படுத்த அவர் எண்ணி இருக்கலாம். வடமொழியில் ராம என்பதற்குப் பின் விசர்க்கம் ‘’ : ’’ (ராம: ) வந்தால் ராமஹ என்பர். ஹரி எனபதற்குப் பின் ‘’ : ‘’ வந்தால் ஹரிஹி என்பர். ஆனால் இது போல தமிழில் ஆய்தம் பயன்படுத்தப்படவில்லை. ஃ என்பது அஹ் என்ற சப்தத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது இல்லாமலேயே தமிழ் மொழி வாழ முடியும் என்று அனைவரும் ஒப்புக் கொள்வர். ஒவ்வொரு மொழியிலும் சில விநோதங்கள் உண்டு. தமிழ் மொழியில் ஃ மற்றும் மொழி முதல் எழுத்துகள் பற்றிய விதிகள் எல்லாம் விநோதமாக உள்ளது.

தொல்காப்பியரின் பெயர் த்ருணதூமாக்கினி என்று பழைய உரைகாரர்கள் கூறுகின்றனர். புதிய புத்தங்களில் அவருடைய பூர்வீகத்தை இருட்டடிப்புச் செய்கின்றனர். அதை இருட்டடிப்பு செய்யாமல் அதை எழுதி அதற்கு மறுப்புரை எழுதினால் தவறில்லை. இவ்வளவு பீடிகை எதற்கு என்று நீங்கள் யோசிக்கலாம்.

ஆரியதரங்கிணி என்ற புத்தகம் எழுதிய திரு கல்யாணராமன் இந்தோநேஷியாவில் ஒரு அகத்தியர் சிலை அருகே த்ருணபிந்து என்ற பெயரில் தொல்காப்பியர் சிலை இருப்பதாக எழுதியுள்ளார். ஆனால் இடத்தின் பெயர் இல்லை. அது சரியானால், அதையே- த்ரி பிந்து என்று படித்தால் முப்புள்ளி என்று ஆகும். இது ‘’ ஃ ’’ கண்டு பிடித்ததால் அவருக்கு இட்ட பெயரோ என்று நான் கருதுவதுண்டு. இது ஒரு கற்பனையே. மேலும் ஆதாரம் கிடைக்கும் வரை கற்பனையாகவே எண்ணல் வேண்டும்.

tolkappiyar

தமிழ் அதிசயம் -9
ஔ- கார மர்மம்
தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் உயிர் எழுத்துக்கள் கிட்டத்தட்ட ஒன்று. குறில் எ, ஒ ஆகியன வடமொழியில் இல்லை. அதற்குப்பதில் க்ரு என்ற எழுத்து உண்டு. இருந்தபோதிலும் அரிதாகவே பயன்படுத்தப்படும் ஆனால் இரண்டு அரிச்சுவடியிலும் ‘’ஔ’’ என்னும் எழுத்து இருந்தும் யாரும் பயன்படுத்தவில்லை. சங்க காலப் புலவர் முதல் வள்ளுவன், பாரதி வரை ஔ—வில் பாட்டு துவங்கவில்லை. சங்கப் புலவர் எழுதிய 30,000 வரியிலும் வள்ளுவன் எழுதிய 2660 வரிகளிலும் ‘’ஔ’’ என்ற எழுத்தில் துவங்கும் சொல்லே இல்லை. ஔவையாரையும் அவ்வை என்றே எழுதினர். ஆனால் அங்கிலத்தில் ‘’ஔ’’ல் (ஆந்தை) போன்ற ஒலிகள், சொற்கள் உண்டு.

தமிழும் சம்ஸ்கிருதமும் வேற்றுமை (விபக்தி), அரிச்சுவடி போன்ற பல விஷயங்களில் ஒத்துப் போவதால் சிந்து சமவெளி ஒலிக் குறிப்புகளும், சொல் துவக்கமும் இதே போலத்தான் இருக்கவேண்டும். அதாவது 25 விழுக்காடு சொற்கள் உயிர் எழுத்தில்தான் துவங்கும். அ என்னும் எழுத்து அதிகமாக இருக்கும் ஆ என்பது குறைவாக இருக்கும். இ என்பது அதிகம் இருக்கும் ஈ என்பது அரிதாகவே இருக்கும். இப்படிப் பல அபூர்வ ஒற்றுமைகளை எனது ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. எனக்கு சிந்து சமவெளி எழுத்துக்களைப் படிக்க மான்ய உதவி கிடைத்தால் அதை நொடிப்பகுதியில் அலசி ஆராய இது போன்ற பல நூதன உத்திகள் என்னிடம் உள.

Tamil_Brahmi_Potsherd
Pot with Brahmi script near Vadalur (Script writing: Atiyakan)

தமிழ் அதிசயம் -10

அ என்னும் எழுத்தைக் கண்டு பிடித்தது யார்?
உலகில் எல்லா மொழிகளும் அ- வில்தான் துவங்க முடியும் என்ற மாபெரும் உண்மையை, முதல் (1) திருக்குறளில் வள்ளுவனும் வள்ளுவனுக்கு முன் கிருஷ்ண பரமாத்மா கீதையிலும் சொல்லி வைத்தனர். அதற்கு முன் ரிக் வேத முனிவர்கள் சொல்லி வைத்தனர்.

உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் ‘’அக்னி மீளே புரோஹிதம்’’ என்ற செய்யுளுடன் துவங்கி அக்னி என்னும் செய்யுளுடன் 10,000-க்கு மேலான மந்திரங்களுடன் முடிவடைகின்றன. கிரேக்க மொழியானாலும் அராபிய மொழியானாலும் நம்மைத் தான் பின்பற்றுகின்றனர். வேத மந்திரங்கள் எல்லாம் ஓம் என்னும் மந்திரத்துடன் சொல்ல வேண்டும் என்பது விதி. அந்த ஓம் என்னும் ஏக அக்ஷரமும் ‘’அ+உ+ம’’ என்ற அ-வில்தான் துவங்கும். ஆக உலகிற்கு ‘’அ’’ என்னும் எழுத்தைக் கற்பித்து அரிச்சுவடியில் முதல் எழுத்தாக வைத்ததும் நாம் தான். இதை ஏசு பிரானும் பைபிளில் ‘’ஐ ஏம் தெ ஆல்பா அண்ட் ஒமேகா’’ என்று கூறுவதை உலகம் அறியும். அவர் இமயமலையில் முனிவர்களிடம் வேத உபநிஷத் பகவத் கீதையைக் கற்றுச் சென்றதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

kolam painting
Tamil’s wonderful ancient art KOLAM. Only Tamil girls in the whole wide world can draw perfect mathematical diagrams without any instruments!!

சிவ பெருமான், பாணினி என்னும் உலக மகா இலக்கண வித்தகனுக்கு வழங்கிய 14 மாஹேஸ்வர சூத்ரங்களில் முதல் சூத்திரமும் அ-வில் துவங்குவதே! பாணிணியின் உலக மஹாப் புலமையைக் கண்டு வியந்த பாரதி உலகம் நம்ப முடியாத திறன் (நம்பருந்திறல் பாணிணி) என்று பாடுகிறார்.

வாழ்க தமிழ் மொழி! வாழ்க நிரந்தரம்!

Tamil Talent beyond Belief!

Indian-Rope-Trick

Research paper written by London Swaminathan
Research article No.1508; Dated 22 December 2014.

The Wonder that is Tamil – Part 1

Tamil literature is vast. It is vast like an ocean. Pearls and corals are at the bottom lying undiscovered. Tamils wasted their 50% time by criticizing Sanskrit and another 50% by shouting slogans “Long Live Tamil” from political stages. Because they mingled politics with Tamil language lot of gems are still lying unknown and undiscovered. They are beyond the reach of general public. Gems form Sanskrit literature was translated in to European languages 300 years ago. Tamils have slowly woken up and started translating them in to other languages. Even the existing translations don’t highlight the juicy bits. One has to dig deeper to find those gems. Let us look at one of the gems now:

Tondai Manadala Satakam consists of 100 verses. It belongs to modern period. The poem glorifies the people, philanthropists, chieftains and kings of Tondai Nadu. Tondai Nadu is the northern most area of Tamil Nadu. It covers the old Pallava kingdom including Kancheepuram, Chennai, Tiruvannamalai and Pondicherry. One of the philanthropists who supported the bards and their wives was Sadayanthan. He was the patron of many talented singers and dancers.

Like the famous Rope Trick of North India, Tamils were practising and demonstrating certain talents which were beyond one’s belief. They could dance with several water pots on their heads and pick up a needle from the floor without dropping a single water pot. Even today we have such talented folk dancers.

king2

Hundreds of years ago there was a dancer who could climb a pole like an acrobat and slip her nose ring from the top and swing lie a king fisher to catch the falling nose ring. Several types of birds can do this extraordinary feat of catching their falling prey or fruits or nuts in the mid air. This talented dancing girl did this like a bird called Vichuli. It is like king fisher bird that can catch its prey from anywhere.

Her name and fame spread far and wide. The Pandya king wanted to see her acrobatic talent in person. When he sent a word to the singers and dancers this lady came forward to demonstrate her talent. But Pandya’s wife was very jealous about this village beauty and so she was planning to distract her husband, the king, from watching such a brilliant performance. She succeeded in distracting the king at the nick of the moment and so the king missed the important bit. He could not watch the girl catching the falling nose ring by flying like a bird in mid air. The queen made him to turn his face away under some false pretense.
kingfisher

The disappointed king asked the lady to demonstrate it one more time. But the woman insisted it requires lot of Yoga practice and breathing exercises such as Jala sthambana and Vayu sthambana to do it perfectly without endangering her life. When he insisted her to do it and promised all precautions to save her in any eventuality, she knew that she would die half way through such a feat. She did it to satisfy the king and died when she caught the falling nose ring. But she was so grateful to the philanthropist Sadayanathan who supported her, composed a poem and recited to a bird, requesting the bird to convey it to her patron. The song and story were part of Tondai Mandala Satakam. Just because it was preserved in the poem, we come to know about the extraordinary talent of a Tamil woman.

Those were the days the whole world was looking for such miracles from India. Even Emperor Jahangir recorded witnessing a rope trick in person. All the foreign travellers who visited India for 2300 years from the days of Megasthenes wrote hundreds of pages about India and its wonders. We must thank those people who made us feel proud.
ndian-rope-trick-set-1127-p

(I have translated this into English from my brother S Nagaraja’s Tamil article: swami48@yahoo.com )

அதிசயத் தமிழ், அற்புதத் தமிழ், விந்தைத் தமிழ்

Tamil-annai
Mother Tamil- Tamil Annai

Research paper written by London Swaminathan
Research article No.1507; Dated 22 December 2014.

Tamil Wonders, Tamil Miracles, Tamil Beauty
The Wonder that is Tamil- Part 1
தமிழ் ஒரு அற்புதமான மொழி. ஏராளமான அதிசயச் செய்திகள் நிறைந்த மொழி. படிக்கப் படிக்கத் தெவிட்டாத செய்திகள் உடைய மொழி. பழமொழிகளும் தனிப் பாடல்களும், நல்ல இலக்கியங்களும் ஆயிரக் கணக்கில் உடைய இம்மொழியை கற்று அனுபவிக்கப் பல பிறவிகள் எடுக்க வேண்டிவரும். இதன் சுவையை நுகர ஒரு சில எடுத்துக் காட்டுகளைப் பார்ப்போம்.

தமிழ் அதிசயம் -1
எத்தனை மன்னர்கள் அடிபணிந்தனர்?
குலோத்துங்க சோழனின் (1070-1118) வெற்றிகளை எடுத்துரைப்பது ஜயம்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணி என்னும் நூல். அதில் குலோத்துங்கன் வெற்றிகொண்ட நாடுகள், இனங்களின் பட்டியலைக் கேளுங்கள்:

தென்னவர் வில்லவர் கூபகர்
சாபகர் சேதியவர் யாதவரே
கன்னடர் பல்லவர் கைதவர்
காடவர் காரிபர் கோசலரே
சங்கர் கராளர் கலிந்தர்
துமிந்தர் கடம்பர், துளும்பர்களே
வங்கர் இலாடர் மராடர்
விராடர் மயிந்தர் சயிந்தர்களே
சிங்களர் வங்களர் சேகுணரே
சேவணர் செய்யவர் ஐயணரே
கொங்கணர் கொங்கர் குலிங்கர்
சவுந்திரர் குச்சரர் கச்சியரே
வத்தவர் மத்திரர் மாளுவர்
மாகதர் மச்சர் மிலேச்சர்களே
குத்தர் குணத்தர் வடக்கர்
துருக்கர் குருக்கர் வியத்தர்களே
அந்தக் காலத்தில் பாரத நாடு 56 தேசங்களாகப் பிரிந்திருந்தது. சோழ மன்னன் இவர்கள் எல்லோரையும் வெற்றிகண்டதைப் பட்டியல் கூறுகிறது.

tamil annai 2

தமிழ் அதிசயம் -2 வாய்மை,உண்மை,மெய்மை
இந்து மதம் சத்தியம் என்னும் மாபெரும் அஸ்திவாரத்தின் மீது அமைந்துள்ளது. கடவுளே ஆனாலும் சத்தியத்தை/ கொடுத்த வாக்கை மீறமுடியாது. இதை பஸ்மாசுரன் கதை முதலிய வேறு பல எடுத்துக்காட்டுகளால் என்னுடைய பல கட்டுரைகளில் விளக்கிவிட்டேன். ஆனால் தமிழர்கள் இந்த சத்தியத்தை விளக்குவது போல வேறு யாரும் அழகாக விளக்கவில்லை.

மனம், மொழி, மெய் (காயேன, மனசேன, இந்த்ரியைர்) ஆகிய மூன்றும் ஒன்றுபட்டு, சாஸ்திரங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்களைச் செய்தால், ஒருவர் சித்தராகி அற்புதங்களைச் செய்யலாம். இதற்கு தமிழர்கள் மட்டுமே மூன்று அற்புதமான சொற்களைத் தனித்தனியே சொல்லுகின்றனர்.

மனதால் (உள்ளம்) பின்பற்றப்படும் சத்தியம்= உண்மை
வாக்கால் (வாய்ச் சொல்) பின்பற்றப்படும் சத்தியம்= வாய்மை
உடம்பால் (மெய்) பின்பற்றப்படும் சத்தியம்=மெய்மை

தமிழ் அதிசயம் -3 உண்மையான தமிழ் வாழ்த்து
தமிழர்களின் உண்மையான தமிழ் வாழ்த்து இதுதான். பாரதியின் வாழ்க தமிழ் மொழி, சுந்தரம் பிள்ளையின் நீராரும் கடலுடுத்த ஆகிய இரண்டு பாக்களையும் விட தமிழின் சிறப்புகள் அத்தனையும் கொண்டது கவி யோகி சுத்தானந்த பாரதியாரின் காதொளிரும் குண்டலமும் பாடல். இது தமிழரின் இல்லம் தோறும் நாள்தோறும் முழங்க வேண்டிய பாடல்.
இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் ஐம் பெரும் காப்பியங்களில் பெயரும், தமிழுக்குத் தனிச் சிறப்பு சேர்க்கும் திருக்குறளும், நால்வர் மற்றும் ஆழ்வார் பெயரும், சேக்கிழார் கம்பன் பெயரும் இரண்டே பாக்களில் அடங்கிவிடுவதால் ஏறத் தாழ ஆயிரம் ஆண்டுத் தமிழ் வரலாற்றை அறிகிறோம்.

காதொளிரும் குண்டலமும்,கைக்குவளை
-யாபதியும்,கருணை மார்பின்
மீதொளிர்சிந் தாமணியும், மெல்லிடையில்
மேகலையும், சிலம்பார் இன்பப்
போதொளிர்பூந் தாமரையும், பொன்முடிசூ
ளாமணியும் பொலியச் சூடி,
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க !

நால்வரிசை அமுதிருக்க, நம்மாழ்வார்
மொழியிருக்கச் சேக்கி ழாரின்
பால்வடிசெந் தமிழிருக்கக் கம்பச்சித்
திரமிருக்கப் பகலே போன்று
ஞாலத்தி லறம்விளங்கும் நாயனார்
குறளிருக்க, நமது நற்றாய்,
காலத்தை வென்றோங்கும் கற்பகம்போற்
கனிபெருகக் கண்டி லோமோ !

475px-Tamil_Culture

தமிழ் அதிசயம் -4
ஒரே அம்பில் ஐந்து
ராமனுடைய ஆற்றல் எவ்வளவுதான் பெரிதானாலும் அதைச் சோதிக்காமல் அவரை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று சுக்ரீவனும் அனுமனௌம் முடிவு செய்கின்றனர். ஏழு மரா (சால்) மரங்கள் வரிசையாக நின்ற ஒரு இடத்தைத் தேந்தெடுத்து அம்பால் துளைக்கச் செய்தனர். ராமன் விட்ட அம்பு ஏழு மரங்களையும் எளிதில் துளைத்துச் சென்றது. இது போல தமிழ் இலக்கியத்திலும் ஒரு செய்தி வந்துள்ளது. கடை எழு வள்ளல்களில் ஒருவர் ஓரி. வருடைய பெருமையைப் வன் பரணர் பாடுகிறார்.

ஓரியின் வில் ஆற்றல் தமிழகம் எங்கும் பரவியதால் அவன் பெயரே வல் வில் ஓரி என்று ஆயிற்று. அவன் கையிலிருந்த வில்லில் இருந்து பாய்ந்த அம்பு ஒரு யானையைத் துளத்து ஒரு புலியைத் துளைத்து, மானை மாளச் செய்து, பன்றியின் உடம்பில் பாய்ந்து இறுதியில் ஒரு உடும்பின் உடலில் சென்று தைத்து நின்றதாம்.(புறம் 152)

வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும் பிறிது உறீஇப்
புழல்தலைப் புகர்க்கலை உருட்டி, உரல் தலைக்
கேழல் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்

தமிழ் அதிசயம் -5

பாரதிக்கு எத்தனை பெயர்கள், அடை மொழிகள்?
புரட்சிக் கவி பாரதிதாசனின் குரு மஹா கவி சுப்பிரமணிய பாரதியார். குருவின் மீது பாரதிதாசனுக்கு அபார பக்தி. இதோ அவர் பாரதி பற்றி எழுதிய புகழுரையைப் படியுங்கள். எத்தனை அடைமொழிகள்!

“ செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை !
குவிக்கும் கவிதைக் குயில் ! இந் நாட்டினரைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு !
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா !
காடு கமழும் கற்பூரச் சொற்கோ !
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் !
திறம் பாட வந்த மறவன்; புதிய
அறம் பாட வந்த அறிஞன்: நாட்டிற்
படரும் சாதிப்படைக்கு மருந்து !
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன் !
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன் !
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் !
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்”

Dialogue between Sringeri Swamiji and a Disciple

fate

Fate and Free Will – IX

Compiled by S. Nagarajan
Article No.1505; Dated 22 December 2014.

In our series we may include one more important dialogue on Fate and Freewill.
(The following dialogue is available on net and I am thankful to the provider who has done a great service by doing so. The readers who want to read the original, may refer Dialogues with the Guru at http://srisharada.com/QA/QA.htm)

Sringeri Sankaracharya HH Chandrashekara Bharathi III was a jeevan muktha. (October 16, 1892 – September 26, 1954). He shed his body on the day of Mahalaya Amavasya. He took a bath in the Tunga river in Sringeri on that fateful day.

Afterwards, he sat in padmasana posture and attained Videha Mukti on the banks of the river. His body was discovered floating in the river. The body was brought to the shore. The face was calm and peaceful as it used to be daily. There was no symptoms of any struggle for breath nor water had entered inside. It was very clear that the great guru had shed His body at His own will. (pl refer Wikipedia for more information)
He used to clear all the doubts of the devotees whenever they approached him.
One evening a disciple approached His Holiness with a view to obtain some valuable instruction.

D: It is no other than the problem of the eternal conflict between fate and free-will. What are their respective provinces and how can the conflict be avoided?

The pontiff told the disciple that fate and freewill are not two distinct things. The disciple asked Him how?

HH: As a follower of our Sanatana Dharma, you must know that fate is nothing extraneous to yourself, but is only the sum total of the results of your past actions. As God is but the dispenser of the fruits of your actions, fate, representing those fruits, is not His creation but only yours. Free-will is what you exercise when you act now.

D: Still I do not see how they are not two distinct things.

HH: Have it this way. Fate is past karma, free-will is present karma. Both are really one, that is, karma, though they may differ in the matter of time. There can be no conflict
when they are really one.

D: But the difference in time is a vital difference which we cannot possibly overlook.

HH: I do not want you to overlook it, but only to study it more deeply. The present is before you and, by the exercise of free-will, you can attempt to shape it. The past is past and
is therefore beyond your vision and is rightly called adrishta, the unseen. You cannot reasonably attempt to find out the relative strength of two things unless both of them are before you. But, by our very definition, free-will, the present karma alone is before you and fate, the past karma, is invisible.

Even if you see two wrestlers physically squatting before you, you cannot decide about their relative strength.

For, one may have weight, the other agility; one muscles and the other tenacity; one the benefit of practice and the other of coolness of judgement and so on. We can on these grounds
go on building arguments on arguments to prove that a particular wrestler will be the winner. But experience shows that each of these qualifications may fail at any time or may
prove to be a disqualification. The only reasonable, practical and sure method of determining their relative strength is to ask them to wrestle with each other. While this is so, how do
you expect to find by means of arguments a solution to the problem of the relative value of fate and free-will when the former by its very nature is unseen!

To be continued in the next chapter.

***********

தமிழகத்தின் விச்சுளி வித்தை!

rope1
Famous Indian Rope Trick

கட்டுரையை எழுதியவர் :– S Nagarajan
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1505; தேதி 22 டிசம்பர், 2014.

“ ஒரு கயிறு செங்குத்தாக நிற்க அதில் ஒரு பையன் ஏறிக் காட்டும் இந்தியக் கயிறு வித்தையை என் கண்களால் நானே பார்த்தேன்” – முகலாய சக்கரவர்த்தி ஜிஹாங்கீர்

அறிவியல் வியந்து ஆராயும் கலைகளுள் முக்கியமானது இந்தியாவில் தோன்றிய யோகா. இந்தியாவிலும் தமிழகத்தைச் சேர்ந்த சித்தர்கள் ஆற்றிய, ஆற்றி வரும் அற்புதங்கள் ஏராளம். அத்தோடு தமிழகத்தில் பழைய நாட்களில் பெரும் கலைஞர்கள் ஜல ஸ்தம்பனம், வாயு ஸ்தம்பனம் ஆகியவற்றுள் தேர்ச்சி பெற்று அவற்றின் அடிப்படையிலான வித்தைகளைச் செய்து காட்டி உலகோரை வியக்க வைத்தனர்.

நல்ல வேளையாக இப்படிப்பட்ட வித்தைகளில் சிலவற்றைத் தமிழ் இலக்கியம் பதிவு செய்திருக்கிறது. அவற்றில் ஒன்று வியக்க வைக்கும் விச்சுளி வித்தை.

rope4

விச்சுளி வித்தை என்றால் என்ன? கூத்தாடுகின்றவள் கழை மீது ஏறி அதிலிருந்தபடியே பல வித்தைகளைச் செய்து காட்டுவாள். திடீரென தன் மூக்கில் இருந்த ரத்தின மூக்குத்தியைக் கழற்றி நழுவ விடுவாள். அது கீழே சற்று தூரம் இறங்கு முன், “விச்சுளி” என்னும் பறவை போலக் கழை மேலிருந்து கீழே பாய்ந்து, அதனைக் கையினால் தொடாமலேயே, பாய்ச்சலிலேயே மூக்கில் கோர்த்துக் கொண்டு கீழே குதிக்காமல், அந்தரத்தில் இருந்தபடியே பின்னும் மேலே பாய்ந்து கழை மேல் ஏறிக் கொள்வாள்.

நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கும் இந்த விச்சுளி வித்தையைச் செய்து காட்டுபவர்கள் பலர் தமிழகத்தில் இருந்தார்கள் என்றால் பிரமிப்பாயில்லை?!

இதைப் பற்றிய வரலாறு ஒன்றை தொண்டை மண்டலத்துச் சதகம் கூறுகிறது.

தொண்டைமண்டலத்தில் இருந்த 24 கோட்டங்களில் ஒன்றான புழற் கோட்டத்தின் அருகில், “அயன்றை” என்னும் சிற்றூரில் பெரும் பிரபுவும், சிறந்த தியாகியும், வேளாண்குடியில் பிறந்தவருமான சடையநாத வள்ளல் என்பவர் விறலியர் வகுப்பினரை ஆதரித்து வந்தார். அந்த வகுப்பைச் சேர்ந்த பாணக்கூத்தி ஒருத்தி பாண்டிய மன்னனின் அரண்மனையில் கழைக்கூத்து வகையில், “விச்சுளி வித்தையைச்” செய்து காட்டினாள்.

ndian-rope-trick-set-1127-p

அந்தக் கூத்தியின் அழகையும் வித்தையின் நேர்த்தியையும் பார்த்த பாண்டியனின் மனைவி , தனது சூழ்ச்சியால் அந்த வித்தையைப் பாண்டிய மன்னன், பார்க்காதவாறு செய்து விட்டாள். ஆனால் எல்லோரும் புகழ்வதைக் கேட்ட பாண்டியன், அந்த வித்தையைத் தனக்காக மீண்டும் ஒருமுறை செய்து காட்டுமாறு கூத்தியை வேண்டினான். ஆனால் கூத்தியோ,” ஆறு மாத கால அளவு, சுவாச பந்தனம் என்னும் மூச்சை அடக்கிப் பழகும் பயிற்சியைச் செய்து தேகத்தைப் பலப்படுத்திய பின்னரே இந்த வித்தையை மீண்டும் செய்ய முடியும். அதை மீறி உடனடியாகச் செய்தால் நான் இறந்து படுவது உறுதி” என்று பதில் கூறினாள். ஆனால் அரசனோ விளைவைச் சரியாக ஆராயாமல் உடனடியாகச் செய்து காட்டுமாறு கூத்தியைப் பணித்தான்.

அரசன் ஆணையினால் சாகத் துணிந்த அந்தக் கூத்தியரின் தலைவி கழையேறி, “விச்சுளி” பாயும் போது, ஆகாயத்தில் பறந்து போகும் பறவைகளைப் பார்த்து, “பறவைகளே பாண்டியனின் மனைவி, என் மேல் பொறாமை கொண்டு பாண்டியனைத் தன் பக்கம் திருப்பி, எனது அரிய வித்தையைப் பாராமல் இருக்கச் செய்து விட்டான். அதனால் நான் மீண்டும் அந்த வித்தையை இப்போது செய்து காட்டிச் சாகப் போகிறேன். நீங்கள் தொண்டை மண்டலத்தின் புழல் கோட்டத்திற்குப் போவீர்களானால், அயன்றை நகரில் வாழ்பவனும், எத்தகைய பொருள் கேட்டாலும் இல்லை என்னாது கொடுப்பவனுமாகிய சடையநாதப் பிரபுவைக் கண்டு இங்கு நடந்த இந்தச் செய்தியைச் சொல்லுங்கள்” என்ற கருத்தை அடங்கிய கீழ்க்கண்ட செய்யுளைச் சொன்னாள்”

INDIAN ROPE TRICK

“மாகுன்றவாய பொற்றோளான் வழுதிமன் வான்கரும்பின் பாகொன்று சொல்லியைப் பார்த்தென்னைப் பார்த்திலன் பையப் பையப் போகின்ற புள்ளினங்காள்! புழற்கோட்டம் புகுவதுண்டேல் சாகின்றனளென்று சொல்வீர் அயன்றைச் சடையனுக்கே”

இப்படிப் பாடி விட்டு வித்தையைச் செய்து காட்டி விட்டு அவள் இறந்து போனாள்.

ஆக வாயு ஸ்தமபனத்தில் வல்லவர்கள் தமிழகத்தில் இருந்து பெரும் புகழ் பெற்றிருந்தனர் என்பதை வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

இந்தச் செய்தியை தொண்டை மண்டலச் சதகம் கீழ்க்கண்ட பாடல் மூலம் தெரிவிக்கிறது:-

“பாகொன்று சொல்லியைப் பார்த்தமை
யாலன்று பாண்டியன்முன்

நோகின்ற சிற்றிடை வேழம்

கூத்தி கொடிவரையில்

சாகின்றபோது தமிழ் சேர்

அயன்றைச் சடையன்றன்மேல்

மாகுன்றெனச் சொன்ன பாமாலை
யுந் தொண்டை மண்டலமே”

தொண்டை மண்டலத்தின் பெருமைகளைக் கூறும் நூறு பாடல்களில் முக்கியமான விச்சுளி வித்தையை விளக்கும் பாடல் 33வது பாடலாக அமைகிறது.

இந்த வித்தையை மனக்கண்ணால் ஒரு முறை கற்பனை செய்து பார்த்தால் எவ்வளவு பெரிய அரிய செயலைத் தமிழ்ப் பெண் ஒருத்தி செய்து காண்பித்திருக்கிறாள் என்பதை உணரலாம்.

மனித சக்தி எவ்வளவு எல்லையற்ற ஆற்றல் உடையது என்பதைக் காண்பிக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக விச்சுளி வித்தை அமையும் போது அதைச் செய்து காண்பித்த தமிழ்ப் பெண்மணியை சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசயப் பெண் என்று கூறுவதில் தவறில்லையே!

Indian-Rope-Trick

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
மிகுந்த கூச்ச சுபாவம் உடைய பால் டிராக் (Paul Dirac) பற்றி ஏராளமான சுவையான சம்பவங்கள் உள்ளன. இவரது நண்பர் வெர்னர் ஹெய்ஸன்பர்க்கும் ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி தான். 1929ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு மகாநாட்டில் கலந்து கொள்ள இருவரும் ஒரு கப்பலில் பயணம் மேற்கொண்டனர். இருவருமே மிகவும் இளவயதினர். மணமாகாதவர்கள். ஹெய்ஸன்பர்க்கோ எப்போதும் இளம்பெண்களுடன் நடனம், அரட்டை என நேரத்தைப் போக்குபவர். பால் டிராக்கோ தனியே மௌனமாக இருப்பவர். “ஏன் இப்படி நடனம் ஆடுகிறீர்கள்?” என்று ஹெய்ஸன்பர்க்கிடம் பால் டிராக் கேட்டார். “அவர்கள் நைஸ் கேர்ள்ஸ் (nice girls). அவர்களுடன் நடனம் ஆடுவதே ஒரு ஆனந்தம்” என்று பதில் சொன்னார் ஹெய்ஸன்பர்க்.

“நடனம் ஆடுவதற்கு முன்பேயே அவர்கள் நைஸ் கேர்ள்ஸ் என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டார் பால் டிராக்!

kingfisher

விக்னர் என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் சகோதரியான மார்ஜிட் என்பவரை பால் டிராக் மணந்தார். மார்ஜிட் விவாகரத்து ஆனவர். ஒரு முறை ஒரு நண்பர் டிராக்கின் வீட்டிற்கு வந்த போது மார்ஜிட்டைக் கண்டு திகைத்தார். ஒரு பெண்மணி டிராக்குடன் இருப்பதை அவரால் நம்பவே முடியவில்லை. ஒரு அழகிய பெண்மணி தன்னுடன் இருப்பதைப் பார்த்து வியக்கும் நண்பரைப் பார்த்த பால் டிராக்,”இவர் விக்னரின் சகோதரி. இப்போது என்னுடைய மனைவி” என்று கூச்சத்துடன் கூறினார்.மார்ஜிட்டுடனான டிராக்கின் வாழ்க்கையில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகள் இன்னும் ஏராளம் உண்டு!

Contact swami_48@yahoo.com

king2

Vichuli=King Fisher Bird
*******************