உலகம் கெட்டுப் போனதற்கு பிராமணர்களே காரணம்?

18TH_CLIMATE_CHANG_1656852f

Picture of Topsy-Turvy World

கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்…885 தேதி 4-3-14

பிராமணர்களுக்கு தமிழ் மன்னர்கள் வாரி வழங்கியது ஏன்?

சங்க இலக்கியத்திலுள்ள எட்டுத் தொகை, பத்துப் பாட்டு ஆகிய 18 நூல்களில் உள்ள 27,000+ வரிகளைக் கரைத்துக் குடித்தவர்களுக்கும் அதற்குப் பின் எழுந்த திருக்குறள் முதலான 18 கீழ்க்கணக்கு நூல்களைப் படித்துக் கரை கண்டவர்களுக்கும் ஒன்று தெள்ளிதின் புலனாகும். ஐயர்களுக்கு மன்னர்கள் வாரி வழங்கினர். அவர்களுக்கு தானம் செய்து வார்த்த நீர் ஆறு போல ஓடியதாம். கரிகால் பெருவளத்தான், பருந்து வடிவத்தில் யாக குண்டம் செய்து வேள்வி செய்ததையும். மகத்தான வல்லமை பொருந்திய பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, பாண்டிய நாடு முழுதும் யாகக் கம்பங்களை (யூப நெடுந்தூண்) நட்டதையும், சோழன் பெருநற்கிள்ளி மஹாபாரத தருமனுக்கு நிகராக ராஜசூய யக்ஞம் செய்ததையும் புறநானூறு போற்றிப் புகழ்வதை பல கட்டுரைகளில் தந்துவிட்டேன்.

80,000 தமிழ்க் கல்வெட்டுகளைப் படித்தோருக்கு இது இன்னும் நன்றாகவே விளங்கும். பெரும்பாலான கல்வெட்டுகள் பிரமதேயம் ( பிராமணர்களுக்கு நிலம் தானம்) அல்லது தேவதானம் ( கோவில்களுக்கு மான்யம் வழங்கல்) பற்றியே பேசுகின்றன.

இவ்வாறு எதற்காகப் பார்ப்பனர்களுக்கு வாரி வழங்கினார்கள்? பார்ப்பனர்கள் அவர்களை நன்றாக ஏமாற்றினார்களா? பாவ புண்யம் என்று சொல்லி மிரட்டினார்களா? இல்லை, இல்லவே என்றே சொல்லவேண்டும்.

ஏனெனில் சங்க இலக்கியத்தில் அதிகமாகப் பாடப்படவர், போற்றப்பட்டவர் ஒரே புலவர்தான். அவர் பெயர் கபிலர். அவரை புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று பாராட்டினர். அவர்தான் சங்க காலத்தில் அதிகப் பாடல்கள் பாடியவர். அதற்காக அவரைப் பாராட்டவில்லை. புலன் அழுக்கற்ற பிராமணன் என்பதற்காகப் பாராட்டினர். மூவேந்தர்களையும் எதிர்க்கும் ஆற்றல்பெற்ற ஒரே தைரியசாலி அவர் ஒருவரே. வேற்று ஜாதியைச் சேர்ந்த பாரி என்ற குறு நில மன்னனின் புதல்விகளை ஏற்றுக் கொண்டு , ஒவ்வொரு அரண்மனையாக ஏறி இவளை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கதறினார். ஒரு மன்னனுக்கும் துணிவு இல்லை!!!

இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அப்பர் பெருமான் பெயரை தன் பிள்ளைகளுக்கும் தண்ணீர் பந்தலுக்கும் சூட்டிய இன்னொரு புரட்சிப் பிராமணன் அப்பூதி அடிகள். அதற்குப் பின்னர் வந்தப் புரட்சிப் பார்ப்பான் பாரதியை உலகமே அறியும்.

ஆக தமிழ் மன்னர்களும், கற்றோரும் மற்றோரும் எதற்காகப் பிராமணர்களுக்கு வாரி வழங்கினர்?

1.அவர்களுடைய ஒழுக்கத்திற்காக; காதலிக்குத் தூது அனுப்பவும், மன்னர்களுக்குத் தூது செல்லவும், மந்திராலோசனை வழங்கவும் அவர்களே நம்பத் தகுந்தவர்கள்.

2.தனக்கென வாழா பிறர்குரியாளராகத் திகழ்ந்தனர். கபிலர் போல பலர் இருந்தனர். வேத மந்திரங்கள் மூலம் எப்போது பார்த்தாலும் ஆக்க பூர்வ எண்ணங்களைப் பரப்பி (positive thoughts பாஸிட்டிவ் தாட்ஸ்) மனித குல முன்னேற்றத்துக்கு உதவினர். ஆயிரம் Self Improvement ‘’செல்F இம்ப்ரூவ்மென் ட்’’ புத்தகங்களில் உள்ளதை சூத்திர வடிவில் சொல்லிக்கொண்டே இருந்தனர்.

3.இறந்துபோன அத்தனை முன்னோர்களுக்கும் (departed souls) நீர்க்கடன் (தர்ப்பணம்) செய்தனர். அவர்கள் தர்ப்பண முடிவில் உறவினர் இல்லாதோர், நண்பர்கள் எல்லோருக்கும் சேர்த்து எள் இரைக்கும் ஒரு மந்திரத்தைச் சொல்லியே முடிப்பர்.

4.எப்போது பார்த்தாலும் நாடு வாழவேண்டும், தீங்கின்றி மும்மாரி மழை பெய்ய வேண்டும், ஓங்கு செந்நெல் வளர வேண்டும், மன்னர்கள் நல்லாட்சி நடத்த வேண்டும். நோய் நொடியில்லாமல் இருக்க வேண்டும் மாதா, பிதா, குரு, தெய்வத்தை வணங்க வேண்டும் என்று சொல்லி எல்லோருக்கும் மஞ்சள் அட்சதை போட்டு மங்களம் பாடினர். (ஸ்வஸ்தி பிரஜாப்ய பரி பாலயந்தாம்………….). நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க என்ற சினிமாப் பாட்டு வேத மந்திரத்தின் மொழி பெயர்ப்பு என்பதை எல்லாம் முன்னரே காtடிவிட்டேன்.

இவ்வாறு இருந்த பிராமணர்கள் அவர்களுடைய அன்றாடக் கடமைகளைச் செய்யாததே உலக வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் விவேக சூடாமணி ஆசிரியர். வள்ளுவருக்கும் அக்கருத்து உடன்பாடானதே.

ஆசாரம் செய்வாராகில் அறிவொடு புகழும் உண்டாம்
ஆசாரம் நன்மையானால் அவனியில் தேவர் ஆவார்
ஆசாரம் செய்யாராகில் அறிவொடு புகழும் அற்றுப்
பேசார்போற் பேச்சுமாகிப் பிணியொடு நரகில் வீழ்வார்
— விவேக சிந்தாமணி

பொருள்; ஆசாரங்களை அனுசரித்து ஒழுக்கத்தோடு வாழ்ந்தால்அறிவும் புகழும் உண்டாகும். ஒழுக்கம் இருந்தால் அவரை இந்தப் பூவுலகிலேயே தெய்வமாகக் கருதுவர். ஆசாரம் தவறினால் ஊமை போல நடிக்க நேரிடும்; நோய்கள் பெருகும்; இறுதியில் நரகத்தில் வீழ்வர்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் ( திருக்குறள் 50)—என்றான் வள்ளுவன்.
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள், ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரஹம்சர் முதலிய பெரியோர்களை நாம் தெய்வமாகப் போற்றுவது வள்ளுவனின் மேற்கண்ட குறளைப் பின்பற்றியே.

இந்திரன் பதங்கள் குன்றும்
இறையவர் பதங்கள் மாறும்
மந்தரம் நிலைகள் பேற
மறுகு அயல் வறுமையாகும்
சந்திரன் கதிரோன் சாயும்
தரணியில் தேகம் மாளும்
அந்தணர் கருமம் குன்றில்
யாவரே வாழ்வர் மண்ணில்?
— விவேக சிந்தாமணி

பொருள்: வேதியர்கள் அவர்களுக்குரிய ஆசார அனுஷ்டானங்களைப் பின்பற்றாவிடில்:
1.இந்திரனுடைய செல்வம் குறையும்
2.அரசாங்கம் ( மன்னர் ) நடக்கும் முறை தேயும்
3.மலைகளும் ( பூமி அதிர்ச்சி, சுனாமி ) இடம் பெயரும்
4.வறுமை அதிகரிக்கும்
5.சந்திரனும் சூரியனும் சரியாக (வறட்சி) ஒளி தராது
பிறகு யார்தான் நல்ல வாழ்க்கை வாழ முடியும்?

இந்த விவேக சிந்தாமணி நூல் யார் எழுதியது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இவருக்கு 1500 ஆண்டுகளுக்கு முன் திருக்குறளை எழுதிய வள்ளுவனும் இதே கருத்தை மொழிகிறான்:
மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் (134)

ஐயா, இந்த ஐயர்கள் வேதத்தை மறந்தால் கூடப் போனால் போகட்டும் என்று விட்டு விடலாம். காரணம்—திருப்பியும் படித்து மனப்பாடம் செய்து விடலாம். ஆனால் அவர்கள் பிறந்த காலத்திலேயே அவர்களிடம் சில ஒழுக்கங்கள் எதிர் பார்க்கபடுகின்றன. அது ஒரு முறை கெட்டுவிட்டாலும் ஆபத்து என்கிறார் வள்ளுவர்.

இந்தக் குறளையும் மேற்கண்ட விவேக சிந்தாமணி செய்யுளையும் காணும்போது உலகம் ஏன் கெட்டுப்போச்சு என்பது சொல்லாமலே விளங்கும். பிராமணர்/ அந்தணர் என்ற சொல்லை எல்லாம் மறந்துவிட்டு அவர்களைப் போல வேறு யாராவது சிலர் இருந்தாலும் போதும் உலகம் சிறக்கும்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பது தமிழர் கண்ட புதுமை அறிவியல்!!

contact swami_48@yahoo.com

Hindu Saint’s ‘Upadesa’ to a Muslim devotee

Karur

Jagadguru Sringeri Sri Shankaracharaya doing abishek at the samadhi of great saint Sadashiva Brahmendra

Sadasiva Brahmendra – A Siddha who did Miracles!
Compiled by London Swaminathan
Post No.884 Date:3rd March 2014

“Waving a reluctant farewell to a crowd of Madras students and friends, Mr Wright and I set out on our travels. On the way we stopped before a little shrine sacred to the memory of Sadasiva Brahman, in whose 18th century life story miracles cluster thickly. A larger Sadasiva shrine in Nerur, erected by raja of Pudukkottai, is a pilgrimage spot that has witnessed many divine healings. The successive rulers of Pudukkottai have treasured as sacred the religious instructions that Sadasiva wrote in 1750 for the guidance of the reigning prince.

Many quaint stories of Sadasiva, a lovable and fully illumined master, are still current among South Indian villagers. Immersed one day in Samadhi on a bank of the Kaveri River, Sadasiva was seen to be carried away by a sudden flood. Weeks later he was found buried deep beneath a mound of earth near Kodumudi in Coimbatore district. As the villagers’ shovels struck his body, the saint rose and walked briskly away.
Sadasiva became a muni (non speaking saint) after his guru had rebuked him for worsting in dialectical argument an elderly Vedanta scholar. “When will you, O youth, learn to hold your tongue?” the guru had remarked

“With your blessings, even from this moment”.

Sadasiva ‘s guru was Swami Paramasivendra Saraswati, author of Daharaviya Prakasika and a profound commentary on Uttara Gita. Certain worldly men, affronted because the god intoxicated Sadasiva often to be dancing “without decorum” on the streets, carried their complaints to his learned guru. “Sir, they declared, “Sadasiva is no better than a mad man”.

But Paramasivendra smiled joyfully. “Oh”, he exclaimed, “if only others had such madness!”.
Sadasiva’s life was marked by many strange and beautiful manifestations of the Intervening Hand. Much seeming injustice there is in this world; but god’s devotees can testify to countless instances of His immediate righteousness. One night Sadasiva, in Samadhi, halted near the granary of a rich householder. Three servants, on the lookout for thieves, raised their sticks to strike on the saint. Lo! Their arms were immobilized. Like statues, their arms aloft, the trio stood in unique tableau until the departure of Sadasiva at dawn.

On another occasion the great master was roughly pressed into service by a passing foreman whose labourers were carrying fuel. The silent saint humbly bore his burden to required destination and there placed his load on top of a huge file. The whole heap of fuel at once burst into flames.

sadasiva-brahmendra-color-lstamp

Naked saint

Sadasiva , like Trilinga Swami, wore no cloth. One morning the nude yogi absentmindedly entered the tent of a Muslim chieftain. Two ladies screamed in alarm; the warrior dealt a savage sword thrust at Sadasiva, whose arm was severed. The master departed unconcernedly. Overcome by awe and remorse, the Muslim picked up the arm from the floor and followed Sadasiva. The yogi quietly inserted the arm into his bleeding stump. When the chieftain humbly asked for some spiritual instructions, Sadasiva wrote with his finger in the sands:
“Do not do what you want, and then you may do what you like”.

The Muslim was uplifted to a purified state of mind and understood the paradoxical advice to be a guide to soul freedom through mastery of the ego. So great was the spiritual impact of those few words that warrior became a worthy disciple; his former haunts knew him no more.

nerur 3

Teletransportation

The village children once expressed a desire in Sadasiva ‘s presence to see Madura religious festival, 150 miles away. The yogi indicated to the little ones that they should touch his body. Lo! Instantly the whole group was transported to Madura. The children wandered happily among the thousands of pilgrims. In a few hours the yogi brought his small charges home by his simple mode of transportation. Astonished patients listened to vivid tales about procession of images in Madura, and noted that several children were carrying bags of Madura sweets.

An incredulous youth derided the saint and the story. On the occasion of the next religious festival in Srirangam, the boy approached Sadasiva.

“Master” he said scornfully, “why don’t you take me to the festival in Srirangam, even as you took the other children to Madura?”

Sadasiva complied; the boy immediately found himself among the distant city throng. But alas where was the saint when the youth wanted to leave? The weary boy reached his home by the prosaic method of foot locomotion”.

From page 389 of Autobiography of a Yogi by Paramahmansa Yogananda

nerur 2

His compositions are very popular and they have been used in famous films like Sankarabaranam.
Old Tamil Encyclopaedia Abidhana Chintamani has given his life story in detail.

I am adding the following information from Wikipedia:–
Songs:
He also wrote several Carnatic compositions to spread the advaita philosophy among common people. His compositions are quite popular and can be heard frequently in Carnatic music concerts. Some of these are

1. Ananda Purna Bodhoham Sachchidananda – Shankarabharanam
2. Ananda Purna Bodhoham Satatam – Madhyamavati
3. Bhajare Gopalam – Hindolam
4. Bhajare Raghuviram – Kalyani
5. Bhajare Yadunatham – Peelu
6. Brahmaivaham – Nadanamakriya
7. Bruhi Mukundethi – Gowla, Navaroju, Kurinji, Senchurutti
8. Chetah Sreeramam – Dwijavanthi, Surati
9. Chinta Nasti Kila – Navroj
10. Gayathi Vanamali – Gavathi, Yamuna Kalyani
11. Khelathi Brahmande – Sindhubhairavi
12. Khelathi Mama Hrudaye – Atana
13. Kridathi Vanamali – Sindhubhairavi
14. Krishna Paahi – Madhyamavati
15. Manasa Sanchara Re -Sama
16. Nahi Re Nahi Re – Gavathi
17. Pibare Rama Rasam – Ahir Bhairav
18. Poorna Bodhoham – Kalyani
19. Prativaram Varam – Todi
20. Sarvam Bramha Mayam – Mishra Sivaranjani
21. Smaravaram – Jog
22. Sthiratha Nahi Nahire – Amruthavarshini
23. Tatvat Jeevitham – Keeravani
24. Tunga Tarange Gange – Hamsadhwani

He is the author of several Sanskrit works. The following works have been printed/ published.
1. Brahmasutravrutti or brahma tatva prakashika
2. Yoga Sudhakara which is a commentary on the Yoga Sutras of Patanjali.
3. Siddhanta kalpavalli
4. Advaitarasamanjari
5. Atmanusandhanam
6. Atmavidhya vilasa
7. Shivamanasapooja
8. Dakshinamurthy Dhyanam
9. Swapnoditam
10. Navamanimala
11. Swapnoditam
12. Navavarnaratnamala
13. Swanubhutiprakashitak
14. Manoniyamanam
15. Paramahamsacharya
16. Shivayoga Dipika

The following works are ascribed to Sri Brahmendral but no printed version is available.
1. Upanishadvyakhyanam
2. Kesaravalli
3. Suta Samhita
4. Bhagavatasara
5. Saparyaparyayastavah
6. Atmanatmaviveka prakashika

Character of Sadasiva Bramhendra is portrayed in the Tamil movie Mahashakti Mariamman
Tamil writer Balakumaran has written a novel Thozhan based on the life of Sri Sadasiva Brahmendra.

Contact swami_48@yahoo.cm
Pictures are taken from different sites;thanks.

முஸ்லீம் பக்தருக்கு உபதேசம் செய்த இந்து சாமியார்

nerur 3

Samadhi at Nerur near Karur

Compiled by London Swaminathan
Post No. 883 Dated 3rd March 2014.

சதாசிவ பிரம்ம யோகீந்திரர் என்பவர் மிகப் பெரிய யோகி. அவர் ஒரு அவதூத (நிர்வாண) சுவாமிகள். சுமார் 200 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர். அவருடைய தாய் பெயர் பார்வதி, தந்தை பெயர் மோக்ஷ சோமசுந்தர அவதானி. அவர்கள் தெலுங்கர்கள். அவருடைய இயற் பெயர் சிவராமகிருஷ்ணன். 17 வயதில் திருமணம் ஆகிவிட்டது. கும்பகோணத்தில் வசித்தார். புகழ்பெற்ற யோகிகளான ஸ்ரீஈதர அய்யாவாள், போதேந்திர சரஸ்வதி ஆகியவர்களுடன் படித்தவர். அவருடைய வாழ்வில் பல அற்புதங்கள் நடந்தன. இது பற்றி பரமஹம்ச யோகானந்தா அவருடைய “ஒரு யோகியின் சுயசரிதை” என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இப்போது விஞ்ஞான கற்பனைக் கதைகளில் படிக்கும் ‘டெலி ட்ரான்ஸ்போர்டேஷன்’ முதலியவற்றை நடத்திக் காட்டி இருக்கிறார். அதாவது ஒரு இடத்தில் இருந்துகொண்டு பல இடங்களில் தோன்றுதல், மற்றவர்களையும் அப்படி அழைத்துச் செல்லல், காலப் பயணம் செய்தல் முதலியன. கோபியர்களுடன் விளையாடிய கிருஷ்ண பரமாத்மா ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் இருந்ததாக நமது புராணாங்கள் கூறுவதைப் போல.
sadasiva-brahmendra-color-lstamp

பிற்காலத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் என்ற சந்நியாசப் பெயருடன் வாழ்ந்த இவர் சமாதி கூட, மூன்று இடங்களில் இருக்கிறது. அதாவது மூன்று இடங்களில் இறந்தார்!. வீரனுக்கு ஒரே சாவு, கோழைகளுக்கு ஆயிரம் முறை சாவு என்ற பழமொழி கூட இவரது அற்பதங்களில் தப்பாகிப் போய்விட்டது. புலன் ஐந்தையும் வென்ற இம்மாவீரரின் சமாதி பாகிஸ்தானில் கராச்சி, இந்தியாவில் மதுரை அருகில் மானா மதுரை, கரூர் அருகில் நெரூர் ஆகிய மூன்று இடங்களில் இருக்கின்றன( காண்க ‘விக்கிபீடியா’).

இனி அபிதான சிந்தாமணி என்ற பழைய தமிழ் என்சைக்ளோபீடியாவில் உள்ள விஷயத்தைத் தருகிறேன்:
இவர் கரூர் பட்டினத்தில் சற்றேரக்குறைய (150) வருஷங்களுக்கு முன் வசித்தவர். பிறப்பால் வேதியர். காவிரி தீர்த்தத்தின் கண்ணுள்ள திருவிசைநல்லூரில் கல்வி பயின்றவர். இவருடன் கல்விபயின்ற சகபாடிகளினும் இவர் நுண்ணறிவினராய் விளங்கினர். இவருடன் கல்வி பயின்றோர் மகாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரியார் முதலாயினோர்.

Karur

அவர் கல்வி பயின்று வருகையில் தமது பார்யை பருவமடந்தனள். இதனால் இவரது தாயார் அந்நாளை மங்கல நாளாக விசேடங்கொண்டாடப் பலவித உணவுகளைச் சமைத்தனள். அன்று யோகீந்திரர் வழக்கம்போல உணவுகொள்ளச் சென்று நடப்பதுணர்ந்து காலந்தவறி உணவு கிட்டுமென எண்ணி, இச் சம்சார துக்கத் தொடக்கத்திலேயே உணவுகிட்டாத் துக்கம் தொடங்குமாயின் இதனை மேற்கொள்ளின் வெகு துக்கமாமெனவெண்ணி அது முளைக்கும்போதே கெடுக்கவெண்ணிப் பரிபாகமுடையோராய்ப் பரமசிவேந்திர சரஸ்வதியென்னு மாசாரியரை யடைந்து ஞானோபதேசம் பெற்றனர்.

இவர் தம் குருவிடம் ஞானோபதேசத்திற்கு வருபவரை பற்பல வினாக்கள் வினவி அவமதித்து வருவதையுணர்ந்த ஆசாரியர் உன் வாயெப்போது அடங்குமென, அன்று முதல் மவுனம் சாதித்து சிஷ்டை கூடிப் பித்தர்போல் சர்வசங்கப் பரித்தியாகஞ் செய்து சமபுத்தியுடையராய் வீதிகளில் கிடக்கும் எச்சிலுண்டு திரிவாராயினர். இவரைக் கண்டோர் யாவரும் பித்தரென்று பரிகசிப்ப உலாவி வந்தனர். இவர் தம்மூர்விட்டுப் பரதேச சஞ்சாரியாய் ஆண்டுள்ள காடுகளில் ஒருவருக்கும் புலப்படாது நிஷ்டையிலிருப்பர்.

ஒருமுறை காவிரி நதியில் மணல்திடரில் நிட்டை புரிகையில் காவிரி வெள்ளங்கொண்டு இவரை மூழ்த்த இவர் மணலில் புதைந்திருந்தனர். கரையினின்றோர் யோகியார் மூழ்கினதைக் கண்டு வருந்திச் சென்றனர். மூன்று மாதங்கள் கழிந்த பின் அரசன் ஆணையால் மணலையகற்ற வேலையாட்கள் புகுந்து நதியில் வெட்டுகையில் ஒருவன் வெட்டிய மண்வெட்டி தடைப்பட்டதுணர்ந்து மண்வெட்டியைப் பார்க்க அதில் ரத்தக் கறை இருந்தது கண்டு மெல்ல அவ்விடமிருந்த மணலையொதுக்க யோகியர் நிஷ்டை கூடியிருக்கக் கண்டு வெளிப்படுத்தினர்.

IMG_9179-Edit

Sringeri Jagadguru Sri Shanaracharya doing abishek at the Samadhi

இவர் கரூரையடுத்துள்ள கிராம வழி நள்ளிருளில் செல்லுகையில் நெற்போர் படுப்பர் காவலிருந்த இடம் வழியறியாது சென்று, இடறி விழுந்தனர். காவற்காரர் இவரைக் கள்ளர் என தடிகொண்டெறியக் கைதூக்க, அக்கைகள் விழுந்து அவர்களின் தலைவன் வருமளவும் தம்பிக்க வேலையாட்களஞ்சிப் பணிய தம்பித்தல் நீக்கிச் சென்றனர்.

ஒருக்கால் ராஜ அதிகாரிகளுக்கு விறகிற்காக ஆட்கள் போதாமையால் இவரையும் அதிகாரிகள் ஒரு ஆளாகக் கொண்டு சுமைதூக்கிச் செல்ல யோகீந்திரரும் அவ்வாறு தூக்கிச் சென்று அந்த ஆட்களிட்ட விறகுச் சுமைகளின் மேல் இவர் சுமகளை இட அக்கட்டைகள் முழுதும் தீப்பற்றி எரிந்தன.

ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி

இவரைக் கண்ட பிள்ளைகள் இவரைப் பித்தரென்று பரிகசிக்க இவர் தமக்குக் கிடைத்த பொருள்களை அவர்க்கு பகுத்தளித்து வருவர். இவரை அப்பிள்ளைகள் மிக்க தூரமாகிய மதுரையில் நடக்கும் ரிஷப வாஹன உற்சவங் காண அழைக்க இவர் அப்பிள்ளைகளைத் தமது முதுகின்மேல் ஏற்றிக் கொண்டு ஒரு கணம் கண்ணை மூடிக்கொள்ள கட்டளையிட்டு மறுகணத்தில் திருவிழா தரிசனஞ் செய்வித்து அச்சிறுவர்க்கு வேண்டிய சிற்றுண்டிகளும் வாங்கித் தந்து விடியுமுன் வீட்டில் சேர்த்தனர். பிள்ளையர் தந்தையோர் முதலியோர்க்கு அற்புதச் செய்கை அறிவித்துச் சிற்றுண்டிகளையும் காட்டினர்.

இவர் சிவராத்ரி முதலிய புண்ய காலங்களில் காசி முதலிய பல தேசங்களில் தரிசனம் செய்யக் கண்ட பலரிவரை யொரே காலத்தில் வெவ்வேறு தலங்களிலும் கண்டதாகக் கூறுவர். தம்மைப் பின் தொடர்ந்த பிரம்மச்சாரிக்கும் ஒருகணத்தில் கண்ணை மூடிக்கொள்ளக் கட்டளையிட்டு ஸ்ரீரங்கத்தில் பெருமாளைத் தரிசனஞ் செய்வித்து மறைந்தனர். பிரம்மச்சாரி யோகியாரைக் காணாது நீருக்குவந்து நிஷ்டை கூடியிருக்கக் கண்டனர். யோகீந்திரர் இவரிடத்துக் கருணை கொண்டு வித்யா பலமுண்டாக அருள் புரிந்தனர்.

nerur 2
Picture of Bilva Tree at the Samadhi

முஸ்லீம் பக்தர்

மற்றொருகால் இவர் நிர்வாணியாகச் சஞ்சரிக்கையில் தேவியருடன் வந்திருந்த மகமதிய தலைவனவரிருந்த வழிசெல்ல, மகமதியன் இவரைச் சினந்து ஒரு கையை வெட்டினன். இவர் அதனையறியாது செல்ல மகமதியனிவனைப் பெரியறெண்ணிப் பின்றொடர நெடுநாட்களுக்குப் பின் இவனைக் கண்ட யோகியர் பின்பற்றக் காரணம் வினவ, நடந்தது அறிவித்துப் பிழைபொறுக்க வேண்ட மற்றொரு கரத்தால், அக்கையைத் தடவ அக்கை வளர்ந்தது. மகமதியன் அருள் பெற்று நீங்கினன்.

இவர் சிவதர்சனம் செய்யப் புகுந்து மந்திரார்ச்சனை செய்கையில் அந்தரத்தில் இருந்து ஓர் ஓர் மலர் வீழ்வதுண்டு. இவர் 1738ஆம் வருஷத்தில் புதுக்கோட்டைத் திருவரங்குளத்தைச் சார்ந்த காட்டில் திரிந்து கொண்டிருக்கையில் புதுக்கோட்டைத் தொண்டைமான் அதிக விரக்தியுள்ளவராகையில் இவரை (8) வருடம் பின் தொடர இவர் அவர்க்கு மணலில் சில உபதேச மொழிகளையெழுதி மற்றவைகளைத் தமது சகபாடியாகிய கோபாலகிருஷ்ண சாஸ்திரியாரிடம் அறியக் கட்டளையிட்டனர்.

இவர் மிதுன ரவி ஜேஷ்ட சுத்த தசமியில் பரிபூரணமடைவதாகவும் அன்று காசியிலிருந்து ஒரு வேதியன் பாணலிங்கம் கொண்டுவர அவனை இவர் தாமேயிறங்கிய சமாதிக் குழிக்கருகில் பிரதிஷ்டை செய்தனர் எனவும் கூறுப. இவர் ஒரே காலத்தில் மூன்று இடங்களில் சமாதி ஆயினர் என்பர். ஆயினும் நீருரிலுள்ள சமாதி பிரசித்திபெற்றது. இவர் குருபூசை புதுக்கோட்டைத் தொண்டைமான் அரசர்களால் செய்யப்பட்டுவருகிறது.

இவர் செய்த நூல்கள், பிரம்மசூத்ரவிருத்தி, த்வாதசோப நிஷத்தீபிகை, சித்தாந்த கல்பாவளி, அத்வைதரஸமஞ்சரி முதலிய.
—-அபிதான சிந்தாமணி, பக்கம் 557/ 558

பரமஹம்ச யோகானந்தா மற்றொரு விஷயத்தைக் கூறுகிறார். இவரைப் பின் தொடர்ந்த முஸ்லீம் , இவரது சீடராகி, உபதேசம் செய்யுமாறு வேண்ட, ‘’ நீ உனக்கு வேண்டுவதைச் செய்யாதே, அதற்குப் பின்னால் நீ விரும்புவதைச் செய்யலாம்’’ என்றாராம்.

(அதாவது மனம்போன போக்கில் போக வேண்டாம்; சுய கட்டுப்பாடு வந்துவிட்டால் பின்னர் நம்முடைய செயல்கள் நம்மைப் பாதிக்காது என்று அர்த்தம் செய்து கொள்ளலாம்.ஆனால் இந்த உபதேசம் ஒரு விடுகதை போன்றது. ஆழமான அர்த்தமுடையது: “Do not do what you want, and then you may do what you like”).

பிரபல கீர்த்தனைகள்

‘விக்கிபீடியா’ ஆங்கிலப் பகுதி, இவர் எழுதிய நீண்ட புத்தகப் பட்டியலைக் கொடுத்துள்ளது. மஹாசக்தி மாரியம்மன் என்ற திரைப்படத்தில் இவரது வாழ்க்கை காட்டப்படுவதாகவும் தெரிவிக்கிறது. பாலகுமாரன் எழுதிய ‘தோழன்’ என்ற நாவல் இவரது வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்டது.

சதாசிவ பீரம்மேந்திராளின் சம்ஸ்கிருதப் பாடல்கள் மிகவும் சுருக்கமானவை. ஆனால் ஆழ்ந்த கருத்துள்ள அற்புத ரத்தினங்கள்!! கர்நாடக இசைக் கச்சேரிகளில் பெரும்பாலும் இவரது கீர்த்தனைகள் இடம்பெறும். சிந்தா நாஸ்தி கில, மானச சஞ்சரரே, க்ரீடதி வனமாலி, ப்ரூஹி முகுந்தேகி, கேளதி மமஹ்ருதயே, காயதி வனமாலி, பஜரே கோபாலம், பஜரே யதுநாதம், பிபரே ராமரசம் முதலிய பாடல்கள் நினைவில் நிற்கும் பாடல்களாகும்.

Contact swami_48@yahoo.com

மாணிக்கவாசகரின் காலம்—2

delhi mus.manikka2

By London Swaminathan
Post No. 882 Date: 3-3- 2014
Part 2 of Age of Manikkavasagar in Tamil

மாணிக்கவாசகரின் காலம் தேவார மூவருக்கு முந்தியது என்றும் அவருடைய பெயர் சத்தியதாசன் என்றும் ஊர்க் கடவுளரின் பெயரான வேதபுரீஸ்வரர் (வாதவூரர்) மற்றொரு பெயர் என்றும் முதல் பகுதியில் ஆதாரங்களுடன் எழுதினேன். இப்போது மேலும் சில தகவல்களைத் தருகிறேன்.

1.அவர் சம்பந்தருக்கு ஓரிரு நூற்றாண்டுகள் முன்னர் வாழ்ந்திருக்கலாம். மாணிக்கவாசகர் மீது அரசாங்கப் பணம் கையாடல் சுமத்தப்பட்டதாலும் அப்போதைய அரசர்கள் சமண மத ஆதரவாளர்கள் என்பதாலும் சம்பந்தர், அப்பர் முதலானோர் அவரைப் பாராட்டுவதைத் தவிர்த்திருக்கலாம்.

2. மாணிக்கவாசகரின் திருவாசகம் கண்டெடுக்கப்பட்டது தேவாரக் கண்டுபிடிப்புக்கும் பின்னர் நிகழ்ந்ததால் சேக்கிழார் முதலானோர் அவரை விட்டிருக்கலாம். எட்டாம் திருமுறையாக திருவாசகம் எப்போது சேர்க்கப்பட்டது என்பதை ஆராய வேண்டும். இவை எல்லாம் ஊகங்களே. இதைவிட வலுவான அகச் சான்றுகளைக் காண்போம்.

3.ஆகமங்கள் பற்றி மாணிக்கவாசர் பாடியதால் அவர் பிற்காலத்தவர் என்பது பசையற்ற வாதம். சம்பந்தருக்கு முந்தைய திருமூலர், ஆகமங்கள் பற்றி நிறைய பாடி இருக்கிறார்.

4. ஆண்டாள் பாடிய திருப்பாவைக்கும் மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவைக்கும் மிக மிக நெருக்கமான ஒற்றுமை இருக்கிறது. பாவை என்பது ஒரு குறிப்பிட்ட வகைப் பாட்டு என்பதால் இப்படி ஒற்றுமை இருக்கலாம் என்பது சரியல்ல. மாணிக்கவாசகர் தனது பாடல்களில் உபநிஷதக் கருத்துக்களை அபரிமிதமாகப் பொழிந்து தள்ளியதை சுவாமி சித்பவானந்தர் போன்றோர் எழுதிய உரைகள் மூலம் அறிகிறோம். ஆனால் ஆண்டாள் ஓர் ‘டீன் ஏஜ் கேர்ள்’ என்பதால் உபநிஷதத்துக்கு இணையான உயர் தத்துவங்களைக் காணமுடியவில்லை. அவர் மிகவும் ‘பிராக்டிகலா’கப் பாடி இருப்பதை பல கட்டுரைகளில் முன்னரே குறிப்பிட்டேன். ஆக, அவருடைஅய நாச்சியார் திருமொழி என்பது திருக்கோவையாரை மனதில் வைத்துப் பாடப்பட்டதாகவும், அவருடைய திருப்பாவை மாணிக்கவாசகரின் திருவெம்பாவையை வைத்துப் பாடப்பட்டதாகவுமே கருத வேண்டியுள்ளது. இரண்டு பாவைகளையும் கையில் வைத்துக் கொண்டு ஒருவர் ஆராய்ந்தால் நான் சொல்லுவது நன்கு புரியும்.

5. மற்றொரு அகச் சான்று பிள்ளையார் பற்றி அவர் எங்கும் பாடாதது ஆகும். அப்பர், சம்பந்தர் முதலியோர் பாடிய கணபதி வழிபாடு, மாணிக்கவாசகர் காலத்தில் பெரிய அளவில் இல்லை. இதனாலும் அவர் காலத்தால் முந்தியவரே.

Thiruvathavur,December 1997-2

6. பிற்காலத்தில் பாடல்களில் குறிப்பிடப்படும் லிங்க வழிபாடும் இது போன்றதே. கணபதி, லிங்க வழிபாடு அறவே இல்லை என்று நான் சொல்லவில்லை. இவை எல்லாம் பாடல்களில் இடம்பெறும் அளவுக்குப் பெரிதாகவில்லை.

7. மாணிக்கவாசகர் பயன்படுத்திய அகவல்பா முதலியன முற்காலத்தியவை. பின்னர் வந்தவர்கள் வெண்பாக்களாகப் பாடித் தள்ளிவிட்டனர். இவர் ஏழு அந்தாதிகளைப் படி இரூக்கிறார். முதல் மூன்று ஆழ்வார்களும் இப்படி அந்தாதி பாடி யிருப்பதால் அவர்கள் காலத்தில் இவரும் இருந்திருக்கலாம். தனி ஒருவர் என்று எடுத்துக் கொண்டால் மாணிக்கவாசகர் மட்டுமே அதிகம் அந்தாதி பாடி இருக்கிறார். முதல் மூன்று ஆழ்வார்களைப் பாராட்டும் வகையில் பாடல்களில் பூதம், பேய், பொய் என்ற சொற்களைப் பிரயோகிக்கிறார்.

8. சொல்லாட்சி: பல பழைய சொற் பிரயோகங்களையும், வழக்கங்களையும் திருவாசகத்தில் காணமுடிகிறது. ஆக அவர் சங்கம் மருவிய காலத்தில், ஒருவேளை ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம். ஆனால் தேவார மூவருக்கும் இவருக்கும் பெரிய இடைவெளி இல்லை.
9. மாணிக்கவாசகர் குறிப்பிடும் சில க்ஷேத்திரங்கள் எது என்றுகூடத் தெரியவில்லை. அவர் சொல்லும் மண்டோதரி சம்பவம் முதலியன மற்றைய இடங்களில் கானப்படவில்லை. மதுரையில் நடந்த பல திருவிளையாடல் நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்ட அவர் சம்பந்தருக்குப் பின்னால் வாழ்ந்திருந்தால் அதைத்தான் முதலில் குறிப்பிட்டிருப்பார்.

10. மாணிக்கவாசகர் பாடல்களில் திருக்குறளின் தாக்கமும் தெரிவதால் வள்ளுவவர் காலத்தை (ஐந்தாம் நூற்றாண்டு) ஒட்டியே வாழ்ந்திருக்க வேண்டும்

11. பொன் அம்பலம், காஞ்சி செம்பொற் கோவில் ஆகியன எல்லாம்பாட்டில் வருவதால் பல்லவர்கள் இதைச் செய்த காலத்தில் வாழ்ந்திருக்கலாம். ஐயடிகள் காடவர்கோன் (கி.பி 550-575) என்ற பல்லவ மன்னன் பொன் வேய்ந்ததை நாம் அறிவோம்.

12.இவர் அரிமர்த்தன பாண்டியன் காலத்தில் வாழ்ந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. ஆனால் வரலாற்றில் அப்படி ஒரு பாண்டியனைக் காணமுடியவில்லை. இருந்த போதிலும் திருவிளையாடல் புராணம் குறிப்பிடும் மன்னர் பட்டியலைக் கொண்டு பார்த்தால் இவருக்குப் பின்னரே சம்ப்ந்தர் கதை வருகிறது. மாணிக்கவாசகருக்கும் சம்பந்தருக்கும் இடையே பெரிய மன்னர் வரிசை இருக்கிறது!!!

13.சம்பந்தருக்கு முந்தி வாழ்ந்த கண்ணப்பர், சண்டீசர் ஆகியோரை மாணிக்கவாசகர் பாடுகிறார். சம்பந்தருக்குப் பிற்பட்ட யாரையும் பாடவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது
14. மாணிக்கவாசகர், தமிழ்ச் சங்க காலத்தைஒட்டி வாழ்ந்தவராக இரூக்கவேண்டும் திருக்கோவையில் ‘உயர் மதில் கூடலில் ஆய்ந்த ஒண் தீந்தமிழின் துறைகள்’ என்றும் திருவாசகத்தில் ‘தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே’ என்றும் பாடுவது இவர் சங்க காலத்தை ஒட்டி வாழ்ந்தவர் என்று காட்டுகிறது. இவர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தால் இப்படிப் பாடி இருக்க மாட்டார். கடந்தகாலத்தில் நடந்ததை ‘இறந்த கால’த்தில் பாடி இருப்பார்.

Thiruvathavur,December 1997-3
15.சிதம்பரத்துக்கு ஆதித்ய சோழன் பொன் வேயும் முன்னர் காடவர்கோன் (பல்லவ மன்னன்) பொன் வேய்ந்ததாக அறிகிறோம். ஆக திருமூலரும், மாணிக்கவாசகரும் குறிப்பிடும் பொன் அம்பலம் மிகப் பழைய பொன் அம்பலமே.

16. அப்பர் போல நேரடியாகக் குறிப்பிடாமல் சம்பந்தர், மாணிக்கவாசகரை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார்: இரண்டாம் திருமுறையில் ‘தெரிந்த அடியார் திசைதோறும் குருந்த மரும் குரவின் அலரும் கொண்டேந்தி இருந்து நின்றும் இரவும் பகலும் ஏத்தும்’ — என்று பாடுகிறார். மாணிக்கவாசகர், குருந்த மரத்தடியில் இருந்த குருவிடம் உபதேசம் பெற்றதால் குருந்த மரத்தை அடிக்கடி குறிப்பிடுவது முக்கிய தடயமாகும்.

17.கோவைக்கு இலக்கணமாக இவர் எழுதிய திருக்கோவையாரையே பேராசிரியர் போன்ற உரைகாரர்கள் குறிப்பிடுவதால் மாணிக்கவாசகர், பாண்டிக்கோவைக்கு மிகவும் முந்தியவர்.

18. நவீன எழுத்தாளர்கள் மாணிக்கவாசகரை வரகுணன் காலத்தவர் என்று சொன்னாலும் இஅர் அரிமர்த்தன பாண்டியன் அவையில் மந்திரியாக இருந்தவர் என்று திருவிளையாடல் புராணம் கூறுவதையும் கவனிக்கவேண்டும்.

19.மாணிக்கவாசகரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்ச்சி நரி – பரி ஆன லீலை ஆகும். அவரை பாண்டிய மன்னன் அனுப்பியது குதிரை வாங்குவதற்கே. குதிரை வியாபாரம் நமது கடற்கரையிலும், அருகில் இலங்கையிலும் நடந்தது சங்க இலக்கியக் குறிப்பாலும் இலங்கையில் தமிழ்க் குதிரை வியாபாரிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆட்சியைக் கைப்பற்றியதாலும் தெரிகிறது.
Thiruvathavur,December 1997

20. மதுரையின் முக்கியப் பெயர்களில் ஒன்று ஆலவாய். இதை மாணிக்கவாசகர் பயன்படுத்தவில்லை ஆனால் சம்பந்தர் பயன்படுத்துகிறார். ‘ஞாலம் நின்புகழே மிகவேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே’ என்று சம்பந்தர் பாடுவது, தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி– என்ற மாணிக்கவாசகரின் வரிகளின் எதிரொலியாகத் திகழ்கிறது

தொடரும்………………..
Contact swami_48@yahoo.com

Manikkavasagar’s age: History Puzzle solved!

delhi mus.manikka2

By London Swaminathan
Post No 881 Date: 2-3- 2014

Manikkavasagar is one of the four great Tamil Saivite saints. Appar, Sundarar, Sambandar and Manikkavasagar are known as ‘The Four Saints’ in Tamil. All the four revived Saivism in Tamil Nadu after it was under the spell of Jainism and Buddhism for a few centuries. We know the times of the three saints Appar alias Tirunavukkarasar, Sambandar – the Boy Wonder and Sundarar. But the age of Manikkavasagar remained a mystery.

(M= Read as Manikkavasagar)

Neither the three saints of Thevaram mentioned ‘M’ by name nor ‘M mentioned the other three in his two works. This was a great puzzle for the historians.

Manikkavasagar was the author of two Tamil works known as Tiruvasagam and Tirukkovaiyar. Since there is a reference to a great Saivite king Varaguna Pandyan , some scholars thought he lived in the ninth century. Of the two Vargunan Pandyas known to history one was a great devotee of Lord Shiva. So ‘M’ (Manikkavasagar) was placed in his times i.e. ninth century AD.

Thiruvathavur,December 1997

Tiruvathavur Temple (Manikkavasagar’s Birth Place)

But Appar’s Thevaram contradicted this. In one of the Thevaram hymns, Appar who lived in the seventh century mentioned the major event that happened in ‘M’s life time. Lord Shiva brought a lot of horses to the Pandya king and they turned into foxes in the night. Then M was punished for the fraud and Siva rescued him later through his miracles. If we go by Appar’s Thevaram reference to this story, M must have lived before eighth century.

Appar is very reliable and he was the one who mentioned about a clash between Dharumi and Nakkirar, two poets of Sangam age. Later Tiru Vilaiyadal Puranam expanded on this episode.

Now new information has emerged which puts ‘M’ before the Thevaram Triad i.e. the three saints Appar, Sundara, Sambandar who composed the Thevaram hymns on Lord Shiva.

New Data to prove M’s Age:

Periya Purana (Great Purana) written by Sekkizar gives the story of 63 Saivite saints. Manikkavasagar is not included in the Purana. But scholars thought that the basis for Sekkizar’s Purana was two earlier short poems done by Sundara and Nambi Andar Nambi. Both of them refer to ‘Poy Adimai Ilatha Pulavar’, literally translated it would sound ‘the poet(s) whose homage was flawless’ or ‘the poet(s) without hypocrisy’. Nambi andar nambi was the one who took is as a reference in plural and interpreted as poets such as Kapilar, Paranar and other such Sangam poets. Neither Sekkizar nor Sundarar interpreted it as poets in plural.
Famous archaeologist and historian Dr R Nagaswamy, who is well versed in Tamil and Sanskrit, has done a good deal of research into the Sanskrit translations of Periya Puranam. According to him there are two translations UPAMANYU BHAKTA VILASAM and AGASTYA BHAKTA VILASAM. Both these works throw much light on the line ‘Poy Adimai Ilatha Pulavar’. Both treat it as singular and mentioned a Brahmin poet by name Sathyadasan who lived in Vedapuram. They also pointed out that he lived praising Siva for 12 years before reaching the feet of Lord Siva. (Source ‘Poyyili Malai ‘by Dr R Nagaswamy).

Thiruvathavur,December 1997-3
Shrine of Manikka vasagar

Going by the Sanskrit translations, I guess they refer only to Manikkavasagar. The name of the God in Thiruvathavur is Vedapureeswar. This proves that the Vadavur is derived from Vedpuram. Manikkavasagar may have two names, one Sathydasan given by his parents and Vedapura saint (Vathavurar in Tamil).
This means he must have lived at least a century or two before Appar and Sambandar. There are also other proofs to establish his age such as non reference to Ganesh or Shiv linga, the literary genre he used and Tiruvempavai verse which a later poetess Andal copied from him. Second part of my article in Tamil gives more on these aspects.

with sekkizar

The Great Four Saivite Saints with Sekkizar,author of Periya Puranam.

For Tamil references of verses, please follow my Tamil version of this article
Contact swami_48@yahoo.com

மாணிக்கவாசகரின் காலம் என்ன? மிகப் பெரிய சைவப் புதிர்!!

asia soci,NYmanik

By London Swaminathan
Post No 880 Date: 2-3- 2014
This article is available in English as well.

Q.1.மாணிக்கவாசகரின் காலம் என்ன?
Q.2.அவருடைய உண்மைப் பெயர் என்ன?
A.1.மாணிக்கவாசகரின் காலம் தேவாரம் பாடிய மூவருக்கும் முந்தியது.
A.2.அவருடைய இயற்பெயர் வேதபுரீஸ்வர சத்தியதாசன்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நால்வர் சைவ சமயத்தின் மாபெரும் தூண்கள். தமிழகத்தைக் காப்பாற்றிய காவலர்கள். நாத்திகம் பேசி நாத்தழும்பி ஏறியவர்களைப் பாதாளப் படுகுழியில் தள்ளிய சமய வீரர்கள். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானிகள். 30,000 தமிழ் நாட்டுக் கோவில்களுக்குப் புத்துயிர் ஊட்டிய புனிதர்கள். வேத ஆகம நெறியை வேரூன்ற வைத்த வித்தகர்கள், சத்திய சீலர்கள். இந்த நால்வரும் தமிழ் கூறு நல்லுலகத்துக்கு இட்ட விடுகதையை, புதிரை விடுவிக்க முடியாமல் அறிஞர்கள் தவித்தனர்.

என்ன புதிர்?

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் என்ன? அவருடைய பெயர் என்ன? யாருக்கும் விடை தெரியாத கேள்வி. தேவாரம் பாடிய மூவருக்கு முன்னால் இவர் வாழ்ந்திருந்தால் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் இவர் பெயரைச் சொல்லாதது ஏன்? நாயன்மார்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லாதது ஏன்?
இந்த மூவருக்கும் பின்னால் அவர் வாழ்ந்திருந்தால் திருவாசகத்திலோ, திருக்கோவையாரிலோ மூவரையும் மாணிக்கமாவது குறிப்பிட்டிருப்பாரே! ஏன் குறிப்பிடவில்லை? மதுரை வரை வந்து கூன் பாண்டியனை நின்ற சீர்நெடுமாறனாக்கிய சம்பந்தரை எப்படி மாணிக்கம் மறக்கமுடியும்?
இனி ‘மா’ என்ற சுருக்கெழுத்தில் நான் குறிப்பிடுவதை மாணிக்கவாசகர் என்று நீட்டிப் படிக்கவும்:–
சுருக்கமாகச் சொன்னால் மூவரை ‘மா’ குறிப்பிடவில்லை. ‘மா’வை மூவர் குறிப்பிடவில்லை. ஆனால் சில குறிப்புகள் சில ஆராய்ச்சியாளர்களை ஒரு முடிவுக்கு வர உதவியது. பாவை பாடிய வாயால் கோவையும் பாடியவர் மாணிக்கம். அதாவது திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையைப் பாடியவர், திருக்கோவையார் என்னும் நூலையும் அவர் இயற்றியதை அறிஞர் உலகம் ஒப்புக்கொள்கிறது. அதில் சைவத்தில் பற்றுள்ள ஒரு வரகுணனைப் பற்றி ஒரு குறிப்பும் உள்ளது. அதைக் கொண்டு ‘மா’ ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று பலரும் முடிவு கட்டிவிட்டனர். ஆனால் எனது ஆராய்ச்சிகள் இது பிழை என்றே காட்டுகின்றன.

Thiruvathavur,December 1997
Thiruvathavur near Madurai

சைவ வரலாற்றில் மிக முக்கியமான நக்கீரர்– சிவ பெருமான் மோதல் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு திருவிளையாடல் புராணத்தை உண்மை என்று நிரூபித்தவர் அப்பர் பெருமான்.

நான்கு சைவ சமயத் தூண்களில் நெடுங்காலம் வாழ்ந்தவரும் இவர்தான். பழுத்த சமயவாதி, புரட்சிவாதியும் கூட. சைவத்தில் இருந்து சமணத்துக்குத் தாவி, பின்னர் சமணத்தில் இருந்து சைவத்துக்குத் தாவி, மகேந்திர பல்லவனுடன் பயங்கரமாக மோதிப் பின்னர் அவரையும் சைவ சமயத்துக்கே அழைத்துவந்த—இழுத்து வந்த புரட்சிவாதி. ஆகையால் அவர் சொல்லுவது தவறாக இராது. தருமி என்னும் பார்ப்பனப் புலவர் தமிழ் சங்கம் ஏறியது பற்றி இவர் பாடியதை ‘திருவிளையாடல் புராணம் உண்மையே என்ற கட்டுரையில் காட்டினேன். அதே வாயால் ‘மா’வின் வாழ்க்கையில் நடந்த நரி-பரி ஆக்கல் திருவிளையாடலையும் இவர் பாடி இருக்கிறார். இதை யாரும் புறக்கணிக்க முடியாது.ஆக மா’ அப்பருக்கும் முன் வாழ்ந்தவர் என்பது தெள்ளத் தெளிவு.

இப்போது வரகுணன் பற்றிய குறிப்பை ஆராய்வோம். வரலாற்றுக்குத் தெரிந்த வரகுணன்கள் இருவர் உண்டு. அதில் சைவ சமயப் பற்றுடைய ஒருவருடன், ‘மா-’ வை தொடர்புபடுத்துவது நியாயமாகவே தோன்றும். ஆனால் இவரைத் தவிர வேறு வரகுணன்கள் இருந்திருக்கலாம் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். ஏனெனில் ‘வரகுண’ என்பது ஒரு அடைமொழி. யாரும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் இது வெறும் ஊகமே. ஆகையால் வேறு சில சான்றுகளைக் காண்போம்.

63 நாயன்மார்களைப் பாடிய சேக்கிழார் பெருமான் ஏன் இவரை (மா–வை) விட்டுவிட்டார்? என்பது மற்றொரு புதிர். இந்தப் புதிருக்குப் பலரும் கூறிய விடை ஏற்புடையதே. திருத்தொண்டர் தொகையில் ‘மா’ பெயர் இல்லாததால் சேக்கிழார் பாடவில்லை. அவருக்கு திருத்தொண்டர் தொகையே ஆதார நூல் என்பர் அறிஞர் பெருமக்கள். ஆனால் திருத்தொண்டர் தொகையிலும் ஒரு புதிர் உள்ளது. அதை விடுவித்தால் மா’ பற்றிய புதிர் விட்டுப்போகும்.

திருத் தொண்டர் தொகையில் பொய்யடிமை இல்லாத புலவர் என்று ஒரு வரி வருகிறது. யார் இவர்? அல்லது யார் இவர்கள்?

பொய் அடிமை இல்லாத புலவர்

பொய் அடிமை இல்லாத புலவர் என்பது மாணிக்கவாசகரே. இதுவரை ‘மா’ பற்றி எழுதிய யாரும் அவருடை இயற்பெயரைக் கூறாமல் திருவாதவூரர் என்று அவர் பிறந்த ஊரின் பெயராலும் கடவுள் கொடுத்த மாணிக்கவாசகர் என்ற பெயராலுமே அழைத்து வருகின்றனர். மாணிக்கவாசகரின் இயற் பெயர் –தாய் தந்தை இட்ட உண்மைப் பெயர் ‘பொய் அடிமை இல்லாதவர்’ என்பதாகும். இதற்கு ஆதாரம் என்ன?

Thiruvathavur,December 1997-2

Manikkavasagar shrine

டாக்டர் நாகசாமி புத்தகம்

எனது குருநாதர் டாக்டர் இரா. நாகசாமி எழுதிய கட்டுரையில் இதற்கு ஆதாரம் இருக்கிறது:
டாக்டர் நாகசாமியின் புத்தகத்தின் பெயர் ‘பொய்யிலிமாலை’ அதில் பக்கம் 189-ல் பொய்யடிமை இல்லாத புலவர் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அவருடைய கட்டுரைச் சுருக்கம்:

1.திருத் தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள், ‘பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்” என்று பாடுகிறார். இது ஒருவரா பலரா என்று தெரியாது.

2. சுந்தரமூர்த்திக்குப் பின், நம்பியாண்டார் நம்பி, இத்தொகையை விரிவாக்கி திருத் தொண்டர் திருவந்தாதி பாடுகையில் கபிலர், பரணர், நக்கீரர் முதலிய பலர் என்றும் சங்கப் புலவர் என்றும் பாடிவிட்டார்.
#

3.அடியார் புராணத்தை விரித்துரைத்த சேக்கிழார் பாடலில் பொய்யடிமை இல்லாத புலவர் ஒருவரா பலரா என்று தெளிவாக இல்லை. ஆனால் நம்பி குறிப்பிடும் கபிலர், பரணர், நக்கீரர் பற்றி சேக்கிழார் எதுவுமே குறிப்பிடவில்லை. இது ஏன் எனக் கூற இயலவில்லை.

4.அடியார்கள் புராணத்தை வடமொழியில் தரும் உபமன்யு பக்த விலாசம், இரண்டு விதமாக பொய் அடிமை இலாத புலவரை மொழி பெயர்த்துள்ளது: ‘அஸத்ய தாஸ்ய ரஹித கவி’, ‘ஸத்ய தாஸ்ய கவி’. இதைக் கூர்ந்து படித்தால் புலவர் என்னும் சொல் ஒருவரையே குறிக்கிறது என்பது தெளிவாகிறது
5.அந்தக் கவி (ஸத்யதாஸர்) சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் பாடவில்லை. அவர் பக்தியை மெச்சி பரமன் அவருக்குக் கவிபாடும் வரம் அளித்தார். அன்றிலிருந்து எப்பொழுதும் கவிதையால் மகிழ்வித்து சிவபதம் அடைந்தார்.

6. அறுபத்து மூவர் வரலாற்றைக் கூறும் அகஸ்திய பக்த விலாசம் என்ற சம்ஸ்கிருத நூலும் பொய் அடிமை இலாத புலவரை ‘ஒருவர்’ என்றே கூறி அவருடைய பெயர் ஸத்யதாசன் என்றும் குறித்துள்ளது. அவர் வேதபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர், அந்தண குலத்தவர் 12 ஆண்டுப் பரமனைப் பாடிப் பரவி சிவபதம் அடைந்தார்.

7. நம்பி மட்டும் கபிலர்,பரணர் முதலியோரைக் குறிப்பிட, மற்றவர்கள் ஒருவரே என்று கூறுவது மேலும் ஆராய்ச்சிக்கு உரித்தாகும்
என்று சொல்லி திரு நாகசாமி கட்டுரையை முடிக்கிறார்.

இனி எனது கருத்துகளைக் கூறுகிறேன்:

மாணிக்க வாசகரின் பெயர் ஸத்தியதாசன். ஏனெனில் மேலே சத்யதாசனுக்குச் சொன்ன எல்லா விஷயங்களும் ‘மா’வுக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதைவிட முக்கிய விஷயம் வேதபுரம் என்பது திருவாதவூரே! வேதபுர என்பது தமிழில் வாதவூர் என்று எழுதப்படும். திருவாதவூர் சுவாமிக்குப் பெயர் வேதபுரீஸ்வரர்!!!!

மதுரையில் ஒருவர் பிறந்தால் சுந்தரேஸ்வரன் என்றும் திருவாரூரில் ஒருவர் பிறந்தால் தியாகராஜன் என்றும் பெயர் சூட்டுவது போல வேதபுரத்தில் பிறந்த ‘மா’-வுக்கு வேதபுரீஸ்வரர் (தமிழில் வாதவூரர்) என்றும் மற்றொரு செல்லப் பெயராக சத்தியதாசன் என்றும் வைத்திருப்பர். ஆகவே பொய்யடிமை இல்லாத= ஸத்யதாச என்பதும் வேதபுரீஸ்வரர்=வாதவூரர் என்பதும் நாம் வணங்கும் மாணிக்கவாசகரே ஆவார்.

மேலும் பல சான்றுகளை கட்டுரையின் இரண்டாம் பகுதியில் தருவேன்.

மேற்கோள்கள்
1.தருமி பொற்கிழி கதை
நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண்
– திருப்புத்தூர் தாண்டகம், அப்பர் தேவாரம்

2.நரி—பரி லீலையும் அப்பர் தேவாரத்தில் வருகிறது.

நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதங் கொண்டு ஆடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த
அரவு அரைச்சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
–(4-33 அப்பர் தேவாரம்,திருவாரூர் பதிகம்)

தொடர்பு கொள்ள: Contact swami_48@yahoo.com

Monkeys in Ancient Tamil Literature

monkey photo

By London swaminathan
Post no 879 dated 1st March 2014

Tamils are keen observers of nature. They are friends of the trees and animals of the forest. They describe everything happening in the forest and attribute human feelings to it. They hear music in the buzzing of the bees and beetles. They hear drums in the thunder. They watch the peacock dance with the background orchestra of these sounds. The descriptions like this go on and on. Here are a few word pictures of the Sangam age poets.

A philandering male sparrow returns late to its nest, and on its return, its mate refuses it admission and makes it outside in the drizzling; and only when evening sets in, it pities and recalls it. A female monkey has clandestine union with a male and trying to escape the notice of its group, looks into a deep pool of clear water, uses it as mirror and sets right its hair on the head. This is described in Natrinai poems 181 and 151 of Sangam Tamil literature.

It is very interesting to note that women doing make up by looking at a mirror– actually water source used as a mirror in this case– , like Andal used the well water to look at herself with a big and beautiful garland.

baboon puzzled

Kishkinda Kanda and Sundra Kanda of Valmiki Ramayana have beautiful descriptions of nature and monkeys’ antics. When the monkey brigade failed to find Sita on the main land, their leader Angada even thinks of committing suicide. But in Tamil literature we have a reference of another monkey actually committing suicide. A monkey bereaved of its loving mate, hands over its young to its kith and kin and commits suicide by falling down from a cleft. This is described in 2000 year old Kuruntokai poem 69.
In such pictures the poets introduce human feelings in to animal activities. In the olden days they thought all these things are exaggeration or poetic imagination. But modern researches show that they had feelings like human beings. What Discovery Channel shows today under Nature was seen and painted in words by the Tamils long ago!

Day light Robbery!

There is a funny account of a cunning monkey in Natrinai poem 57 by Pothumpil Kizar:
A wild cow came and rested under a Venkai tree in the forest. A female monkey wanted to take advantage of the sleepy (stupid) cow. It signs to its troupe to keep quiet. It went and milked the cow and distributed it to its little ones. They had hands full of milk. It is nothing but a day light robbery!!
Another scene in Ainkurunuru shows a monkey using a stem of a plant to beat the thin cloud approaching it (276). People living in high mountains may have enjoyed such scenes. Every time the clouds pass by you like mist, your children try to touch it with their hands.

A poet sees a young boy riding on the back of a buffalo, which is a common scene in Indian villages. He compares it to a monkey on the rocks! (Akananuru 206).

Tamil poets hear different sounds in the forest and imagine a jungle orchestra formed by creatures of the forest. While the peacocks dance, the bees sing tunes. A monkey wanted to play drums and immediately it picks up a jack fruit (which resembles Mrudangam, a drum used in South Indian music) and beats it with its hands (Aka Nanuru 352. It may be a bit of imagination of the poet!

Tamils enjoy watching nature and immortalise it in writing. Poets who lived 2000 years before our time enjoyed the antics of monkeys. Monkeys were the clowns in the jungle dramas. Among the animals, the monkey is depicted most playful. A group of monkeys bathes in the mountain torrents, swings in the swing left hanging by the owners of the Tinai (millets) fields and plays among the branches of the Venkai trees, dropping down flowers on the rocks below (Natrinai 334).

Probably human beings learnt the habit of bathing under the showers from the monkeys!
A poet describes the peacock dance with the accompaniments of forest orchestra as an entertainment to the monkeys in Akananuru verse 82.

The longest description of the torrent is by Nakkirar in Tirumurukatrppatai, the last twenty lines of which depict it (295-316)

Suicide of a Monkey

There are also pathetic descriptions of the sufferings of animals. A female monkey who lost its young one in a deep cleft mourns over its loss by crying aloud among its group (Malaipadukadam lines 311-314). The Tamil novel ‘Thekkadi Raja’ describes the mourning of elephants in the Kerala forests. Elephants’ intelligence is proved by modern research, which the Tamils noticed 2000 years ago. That was described in the ‘Gajendra Moksha’ (Elephant—Crocodile) episode in the Puranas and Tamil literature as well. In Tamil, we see elephants helping another elephant that fell in a ditch by extending the tree branches. I have given innumerable episodes of animals using tools in my other posts. But I read articles in science magazines only now about animals using tools!

tamil kurangu

Kutralam Water Falls

In the modern age ‘Kutrala Kuravanji’ by Trikuta Rasappa Kavirayar is a wonderful poem like Wordsworth’s poems on Daffoldils, Tintern Abbey and Shelly’s Skylark.
The beauty of monkeys in the back ground of a high water falls called Honey falls is painted in words. The female monkeys are dropping fruits by shaking the branches of the fruit trees for which the males are longing. The Honey falls sends its water so high that even the chariot of the Sun finds its path slippery ( In Hindu mythology Lord Sun is supposed to ride a chariot with seven horses (VIBGYOR colours) or with one wheel. The Siddhas who do miracles frequent the place by using air routes!

In Kuruntokai 278, we see a similar picture where the father monkey climbs over the trees and drops the ripe fruits from there when the young ones peck at them from below. Monkeys and apes are just like human beings in their show of love and affection towards their kith and kin.

There are many more stories and word pictures of nature in Sangam Tamil and later literature.

Source : Valmiki Ramayana,Kutrala Kuravanji by Trikuta Rasappa Kavirayar, The Treatment of Nature in Sangam Literature by M.Varadarajan.

kurangu ramayan
Ramayana paintings.

தமிழ் இலக்கியத்தில் குரங்கு பற்றிய அதிசயச் செய்திகள்

monkey photo

This article is availabe in English as well.

By London swaminathan
Post no 878 dated 1st March 2014

தமிழ்க் குரங்குகளுக்கு அறிவு ஜாஸ்தி!!
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!……..இல்லை…… இல்லை,…..
தமிழ்க் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று சொல்லுவதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் நாம்தான் உலகில் முதலில் பிறந்தோம் என்று பறை சாற்றிக் கொள்கிறோம் அல்லவா?

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு
முன் தோன்றிய மூத்த குடி”

— தமிழ்க் குடி என்று சொல்லுவது உண்மையானால் முதல் குரங்கு தமிழ் குரங்காகத்தானே இருக்க வேண்டும்! நிற்க.

தமிழன் இயற்கையில் ஊறித் திளைத்தவன் என்பது சங்க இலக்கியத்தின் 2000+ பாடல்களைப் படிப்போருக்கு தெள்ளிதின் விளங்கும். அவன் வருணிக்கும் மரம், செடி, கொடி, விலங்கினங்கள், பறவைகள் எல்லாவற்றையும் ஓவியமாக வரைந்து வைத்தால் காணக் கண்கள் ஆயிரம் வேண்டும். இன்று நமக்கு மிக நெருங்கிய உடன் பிறப்பான குரங்கை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

மனிதனைப் போன்ற உணர்வு குரங்குகளுக்கும் உண்டு என்பதெல்லாம் இப்போதுதான் ‘டிஸ்கவரி சேன்னல்’ முதலியவற்றில் ஆராயப்படுகின்றன. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன், பிராணிகளை உன்னிப்பாகக் கவனித்து அவைகளை உவமைகளாகவும் எழுதி வைத்துவிட்டான்.

“இஞ்சி தின்ன குரங்கு போல”, “குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல”, “குரங்குப் பிடி” என்ற பழமொழிகளை எல்லாம் மனக் கண் முன்னால் ஓவியமாகக் கண்டு பாருங்கள். எவ்வளவு கன கச்சிதமாகச் சொல்லியிருக்கிறான் என்பது புரியும்.

baboon puzzled

இதோ சில காட்சிகள்:
காடுகளில் மயில்கள் ஆடும்போது வண்டுகள் பாடுகின்றனவாம். குரங்குகள் பலாப் பழத்தை மத்தளம் போல வைத்துக் கொண்டு தாளம் போடுகின்றனவாம்.காட்டிற்குள் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா/ இசைக் குழு! இப்படி ஒரு காட்சி. (அகம்.352)

இன்னொரு இடத்தில் ஒரு குரங்கு மழைத் தண்ணீரில் எழும் காற்றுக் குமிழ்களைக் கம்பால் அடித்து மகிழ்கிறதாம் (ஐங்கு 275)

மற்றொரு குரங்கு மயில் முட்டையை எடுத்து பாறை மீது உருட்டி பந்து விளையாடுகிறதாம் (குறு. 38)
கான மஞ்ஞை அறையீன் முட்டை
வெயிலாடுமுசுவின் குருளை உருட்டும்—(குறு. 38)

குரங்குகள் மரத்தில் கிளைக்கு கிளை தாவிப் போவதையும், ஊஞ்சல் ஆடுவதையும் புலவர்கள் வருணித்து மகிழ்கின்றனர்.

kurangu ramayan
பெண்கள் ‘மேக் அப்’

குரங்குகளுக்குக் கூடப் புணர்ச்சிக்குப் (செக்ஸ்) பின் வெட்கம் வரும் என்பதைக் கவனித்துப் பாடியும் வைத்திருக்கிறான் தமிழன் (நற்றிணை 151)

கடுவன், முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்
கறிவளர் அடுக்கத்து கள்வினிற் புணர்ந்த
செம்முக மந்தி செல்குறி கருங்காற்
பொன்னினர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்
குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கி கவிழ்ந்து தன்
புன்தலைப் பாறு மயிர் திருத்தும் — ( நற்றிணை 151)

ஒரு ஆண் குரங்குடன், செம்முக மந்தி களவினில் தொடர்பு கொண்டதாம். தன்னுடைய கோஷ்டிக்குக் கலைந்த தலை முடியையும் முகத்தையும் காட்டினால் ரகசியம் வெளியாகி விடும் என்று அஞ்சி ஒரு மரத்தின் மீது ஏறி நீர்ச் சுனையில் கண்ணாடி போல முகம் பார்த்து தலை மயிரை அழகாக சரி செய்து கொண்டதாம். பெண் (குரங்கு) கள் ‘மேக் அப் போடுவது’ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ணாடிக்கு முன் நடந்திருக்கிறது!!

இந்தக் காட்சி மிகைப் படுதப்பட்டதல்ல, இப்போது குரங்குகளைப் பற்றி ஆராய்சி செய்வோர் அதற்கு மனிதன் போல சிந்தித்து முடிவு எடுக்கும் புத்தி இருக்கிறது என்பதைச் சோதனைகளில் கண்டு பிடித்து இருக்கிறார்கள். நாம் அவர்களை 2000 ஆண்டு இடைவெளியில் தோற்கடித்து விட்டோம். இது புலவர் இள நாகனார் பாடிய பாடல்.

குரங்கின் மனநிலையை, ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்திலும் சுந்தர காண்டத்திலும் கவிஞர்கள் (வால்மீகி, கம்பன்) அழகாகச் சித்தரித்துள்ளனர். சீதா தேவியைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், குரங்குகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்கின்றன.
( நமது அரசியல்வாதிகளுக்கு கோப்பெருஞ்சோழனும், ராமாயணக் குரங்குகளும்தான் உண்ணாவிரத முன்னோடிகள்).

tamil kurangu
தற்கொலை செய்து கொண்ட குரங்கு

தமிழ் இலக்கியமும் இரண்டு பரிதாபக் காட்சிகளை வருணிக்கின்றன:
ஒரு பெண் குரங்கின் குட்டி மலைப் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து இறந்துவிட்டது. அது கண்டு பொறாது, தனது கூட்டத்தில் நின்று அழுதது. இதை வருணிக்கிறார் மலைபடுகடாம் கவிஞர் பெருங் கவுசிகனார்:

“கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி
அருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு
முறிமேல் யாக்கை கிளையொடு தவன்றி
சிறுமையுற்ற களையாப் பூசல்:- — ( மலைபடு வரி 311- 314)

“தேக்கடி ராஜா” போன்ற தமிழ் நாவல்களைப் படித்தவர்களுக்கு யானைகள் முறையாக துக்கம் அனுஷ்டிப்பது தெரிந்து இருக்கும். மேலை நாட்டினர் இப்போதுதான் விலங்கின அறிவாற்றலை உணரத் துவங்கி இருக்கின்றனர். நமக்கு முன்பே தெரியும்.

மற்றொரு குரங்கு அதன் காதல் கணவன் இறந்ததால், குட்டிகளை சுற்றத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு மலை மீது இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாம் (குறுந்தொகை 69)

கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி,
கல்லா வன்புறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும்
–(கடுந்தோட் கரவீரனார், குறு. 69)

ஒரு புலவர் குரங்குச் சேட்டையைக் கண்டு அப்படியே வருணிக்கிறார்:
மந்திக் காதலன் முறிமேய்க் கடுவன்
தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப்
பொங்கல் இளமழை புடைக்கும் (ஐங்குறு 276)

மேகங்கள் வேகமாக ஓடுவதைப் பார்த்துவிட்டு ஒரு நறைக்கொடியின் தண்டை எடுத்து அதை அடிக்கப் போகுமாம்.

இன்னொரு பாடலில் எருமை மாட்டின் மீது சவாரி செய்யும் பையனைப் பார்த்த புலவர் அவனை பாறை மேல் உட்கார்ந்து இருக்கும் குரங்குக்கு ஒப்பிட்டு மகிழ்கிறார். (அக.206)

பால் கறந்து விநியோகித்த திருட்டுக் குரங்கு

குரங்குகள் பழங்களைத் திருடுவதையும் தட்டிப் பறிப்பதையும் நாம் கோவில்களில் கண்டிருக்கிறோம். ஆனால் திருட்டுத் தனமாக காட்டுப் பசுவின் பாலைக் கறந்து தன் குட்டிகளுக்கு விநியோகித்த அபூர்வக் காட்சியை ஒரு புலவர் பாடி வைத்திருக்கிறார். “இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்” என்பது தமிழ்ப் பழமொழி. அபடிப்பட்ட ஒரு காட்டுப் பசு ஒரு வேங்கை மரத்தின் கீழ் நின்று உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்று உறங்கும் வேளையில் இந்தக் குரங்கு தன் கைவரிசையைக் காட்டிவிட்டது. அது மட்டுமல்ல. சுற்றத்தாரிரிடம், உஷ், பேசாமல் சும்மா இருங்கள்! என்று சைகை செய்துவிட்டுச் சென்றதாம்! எவ்வளவு குசும்பு!!

இதோ அதை வருணிக்கும் பொதும்பில் கிழாரின் நற்றிணைப் பாடல்:
தடங்கோட்டு ஆமான் மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென,
துஞ்சுபதம் பெற்ற துய்த் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை குவியாக் குறுகி,
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால்
கல்லா வன் பரழ்க் கை நிறை பிழியும்
மா மலை நாட! ( நற்றிணைப் பாடல் 57, பொதும்பில் கிழார்)

தற்காலத்தில் திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியில் வரும் அழகான காட்சி:

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம்பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே

இது போன்ற பாடல் குறுந்தொகை 278 லும் உண்டு. தந்தைக் குரங்கு சிந்தும் கனிகளைக் குட்டிக் குரங்குகள் உண்டு உண்டு மகிழ்ந்தனவாம். இன்னும் இப்படிப் பல உள. அத்தனையும் ஒரே நேரத்தில் சுவைத்தால் திகட்டி விடும் அல்லவா !

Contact swami_48@yahoo.com

Murder mystery is solved by A Parrot!

parrot-med

Post no 877 dated 1st March 2014

News Story from London Metro News paper:

“ It looked like the perfect murder: a woman found dead in her home, no clues and no witnesses. Well, no human witnesses, at least.

But the killer of 45-year-old Neelam Sharma will end up doing some bird after all as the case was cracked by the victim’s pet parrot, nicknamed Hercule (Hira is the correct name. See below: swami).

The mystery started when journalist Vijay Sharma came home to find his wife and pet dog dead.
The only survivor was the parrot, who had been stunned into silence by what he saw at the home in Agra, in the north Indian state of Uttar Pradesh.

Mr Sharma thought he would never have justice… until a visit from his nephew Ashutosh, who seemed to ruffle a few feathers.

‘The parrot that was unusually quiet suddenly started shrieking and flapping around the cage,’ said Mr Sharma, editor of a Hindi daily newspaper.

‘It was clearly distressed about something and only calmed down when Ashutosh left. Then when I spoke to other people, every time I mentioned Ashutosh’s name the parrot would start screeching.
‘This made me really suspicious and I decided to call the police.’

The police, acting on parrot’s tip-off, checked on Ashutosh’s phone records before arresting him.
And before long, he was singing like a canary.
26-parrot1

‘He said that he had gone with a friend to his uncle’s house with the intention of stealing and was surprised by his aunt, who they had killed because they were worried she would have identified them to police,’ said Agra police spokesman Shalabh Mathur.

‘They had then robbed the place before fleeing.
‘He admitted he had also killed the dog, thinking it could be used in an identity parade against him, but had not thought about killing the parrot which had been silent in its cage.’

Metro News Paper, London 28th February 2014

(London news papers reported the Parrot’s name as Hercule, but it is actually Hira; I have given below the following clarification from an Indian news paper)

parrot (1)
London News papers compared this parrot with Hercule Poirot (Detective in Agatha Christie’s novel), punning with the words Parrot and Poirot, but later Indian newspapers clarified that the role of the parrot in this murder case is minor. More over the name of the parrot is not Hercule, (as reported in London news papers) but Hera. Any how he is a Hero now!

1st March, The Indian Express (India) adds

So where does Hira come in?

According to Sharma, his daughters, along with a local reporter, decided to “confirm” the police’s findings with the parrot. “My mother was very attached to Hira. He has been with us for over two decades. We took the names of all the people in the house in front of him, including my brother, the milkman, and my cousin Ashutosh. Hira started squawking when we took Ashutosh’s name,” Pallavi, one of Sharma’s daughters, said.

According to Sharma, the parrot’s contribution to the case was limited to only “reacting excitedly” to Ashutosh’s name. Pallavi, however, insisted that Hira “nodded when I took Ashu’s name”.

Please read the following stories posted earlier:

Post 813 மான் குட்டிக்குப் பால் கொடுத்த புலி ! Date 2-2-14
Post 814 Tigers and Deer—Friends in Hindu World ! Date 2-2-14

13 Saints in Nature!
இயற்கை போதிக்கும் 13 பாடங்கள்
Dogs at Sringeri and Kanchi Mutts

Hindu Eagle Mystery deepens
INDIAN CROW by Mark Twain
Can Humans communicate with Animals?
Birds for finding Direction: Sumer to Tamil Nadu via Indus Valley
Donkeys in Tamil and Sanskrit Literature

Amazing Andal: Where did she see the Lion?
Vedic Dog and Church Dog
The Great Scorpion Mystery in History-1
Who rides what Vahana (Animal or Bird)?

வேத நாயும் மாதா கோவில் நாயும்
தேள்— ஒரு மர்ம தெய்வம்!

Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri
The Mysterious Vedic Homa Bird: Does It Exist?
Gajalakshmi in Kalidasa and Tamil Literature
Bird Migration in Kalidasa and Sangam Tamil literature
Mysteriou Tamil Bird Man
Four Birds at One Sloka

அதிசயப் பறவைத் தமிழன்!!!
சிட்டுக்குருவியிடம் பாரதி கற்ற பாடம்
யானை பற்றிய நூறு பழமொழிகள்
கா! கா! கா! கா!

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை
தேள் தெய்வம்
வாகனங்கள் தோன்றியது எங்கே?
சுமேரியாவில் தமிழ்ப் பறவை

Double headed Eagle
Serpent Queen: Indus Valley to Sabarimalai
Can parrots predict your future?
When animals worship god why not men?
Animal Einsteins- Part 1
Animal Einsteins- Part 2

Contact swami_48@yahoo.com

கொலைகாரனைக் காட்டிக்கொடுத்த கிளி

parrot-med

கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
தேதி மார்ச் முதல் தேதி, 2014; கட்டுரை எண்-

மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் நாம் நினைப்பதைவிட அதிகமாகவே அறிவு உண்டு என்பதை பல சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன. இதுபற்றியும் சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள கிளி வளர்ப்பு, வேதத்தைத் திருப்பிச் சொல்லும் கிளிகள், கிளி ஜோதிடம், பறவைகளில் சகுன சாஸ்திரம், காளிதாசனிலும் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் காணப்படும் பறவைகளின் அதிசயக் குடியேற்றம், திருக் கழுகுக் குன்றத்தின் கழுகு அதிசயம் ஆகியன குறித்தும் பல தலைப்புகளில் இந்த பிளாக்-கில் எழுதிவிட்டேன். இப்பொழுது கொலைகாரனைக் காட்டிக் கொடுத்த ஒரு இந்தியக் கிளி பற்றி லண்டன் பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ராவில் ஒரு இந்தி பத்திரிக்கையின் ஆசிரியராக வேலை பார்ப்பவர் விஜய் சர்மா. அவருடைய மனைவி நீலம் சர்மாவையும் (45 வயது) வளர்ப்பு நாயையும் பிப்ரவரி மாதம் யாரோ கொலை செய்துவிட்டனர். அவர் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மனைவியும் நாயும் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். துப்புத் துலக்கிய போலீசார், வீட்டுக்கு வந்து போகும் நெருக்கமான ஒருவர்தான் கொன்றிருக்க வேண்டும் என்று சொன்னார்கள் அவர் அதை நம்பத் தயாராக இல்லை.

26-parrot1

அவர்கள் வீட்டில்ஒரு கிளியையும் வளர்த்து வந்தனர். கொலைச் சம்பவத்துக்குப் பிறகு கிளி ஒரே மௌன மாகிவிட்டது. விஜய் சர்மாவின் மருமான் பெயர் ஆசுதோஷ். ஒரு நாள் அவர் வீட்டூக்குள் வந்தபோது வழக்கமாக அமைதி காக்கும் கிளி, பெரிதாகக் கீச்சிடத் துவங்கியது. ஆசுதோஷ் வெளியே போனவுடன் அமைதி ஆகிவிட்டது.

பிறகு விஜயின் மகள், கிளியிடம் போய் நீலத்தைக் கொலை செய்தது யார்? என்று சொல்லு என்று சொல்லிவிட்டு வரிசையாகப் பல பெயர்களை வாசித்தார். ஆசுதோஷ் பெயர் வந்தபோது, கிளி பட பட வென்று இறக்கையை அடித்துக் கொண்டு கிரீச் என்று கத்தத் துவங்கியது.

போலிசாருக்கும் ஏற்கனவே நெருங்கிய உறவினர்கள் மீது ஒரு கண் இருந்ததால், ஆசுதோஷைக் கைது செய்தனர். அவருடைய போன் முதலியவற்றைச் சோதித்தபோது குற்றத்துடன் தொடர்புடைய பல தடயங்களும் சிக்கின. பின்னர் அவரை விசாரித்ததில் உண்மையை ஒப்புக் கொண்டார். தான் வேறு சிலர் உதவியுடன் விஜய் வீட்டில் திருடப் போனதாகவும், எதிர்பாராதவிதத்தில் அத்தை நீலம் அங்கே இருந்தவுடன் அவரைக் கொன்றதாகவும் ஒப்புக்கொண்டார்.

அவரை உயிருடன் விட்டால், தான் திருடன் என்பதை உலகத்துக்கே அறிவித்துவிடுவார் என்று எண்ணி இப்படிச் செய்ததாகவும் ஆசுதோஷ் சொன்னார். ஒரு வேளை நாயைக் கொண்டு அடையாளம் கண்டுபிடிக்கக்கூடும் என்று பயப்பட்டு நாயையும் தீர்த்துக் கட்டிவிட்டதாகச் சொன்னார்.
விஜய்—நீலம் தம்பதியினர் வளர்த்த கிளியின் பெயர் ஹீரா. இனிமேல் அதை ஹீரோ என்று அழைப்பதே பொருத்தம்!

parrot (1)

London News papers compared this parrot with Hercule Poirot (Detective in Agatha Christie’s novel), punning with the words Parrot and Poirot, but later Indian newspapers clarified the role of the parrot in this murder case is minor. More over the name of the parrot is not Hercule, but Hera. Any how he is a Hero now!

பறவைகள் மிகவும் கெட்டிக்காரத்தனம் உடையவை. சில மாதங்களுக்கு முன்னால் பிரிட்டனில் ஒரு கிளி கள்ளக் காதலன் பெயரைத் திரும்பத் திரும்பச் சொன்னவுடன் கணவனுக்கு மனைவி மீது சந்தேகம் வலுத்தது. பின்னர் குட்டு வெளிப்பட்டது. மனைவியும் கள்ளத் தொடர்பை ஒப்புக்கொண்டாள். எல்லா பிரிட்டிஷ் பத்திரிக்கைகளும் அந்தக் கிளியின் படத்தைப் பிரசுரித்து அதை கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டன!

எச்சரிக்கை:- அடுத்தமுறை நீங்கள் ஏதேனும் தவறு செய்யப் போனால் பக்கத்தில் காக்கா, குருவி, நாய் ,பூனை இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்!!!!!

இதற்கு முன் இதே பிளாக்—கில் வெளியான பறவை- விலங்குக் கட்டுரைகள்:

Post No 813 மான் குட்டிக்குப் பால் கொடுத்த புலி ! Date 2-2-14
Post No. 814 Tigers and Deer—Friends in Hindu World ! Date 2-2-14
13 Saints in Nature!
இயற்கை போதிக்கும் 13 பாடங்கள்
Dogs at Sringeri and Kanchi Mutts
Hindu Eagle Mystery deepens
INDIAN CROW by Mark Twain
Can Humans communicate with Animals?
Birds for finding Direction: Sumer to Tamil Nadu via Indus Valley
Donkeys in Tamil and Sanskrit Literature
Amazing Andal: Where did she see the Lion?
Vedic Dog and Church Dog
The Great Scorpion Mystery in History-1
Who rides what Vahana (Animal or Bird)?
வேத நாயும் மாதா கோவில் நாயும்
தேள்— ஒரு மர்ம தெய்வம்!
Mysterious Messengers for Ajanta, Angkor Wat and Sringeri
The Mysterious Vedic Homa Bird: Does It Exist?
Gajalakshmi in Kalidasa and Tamil Literature
Bird Migration in Kalidasa and Sangam Tamil literature
Mysteriou Tamil Bird Man
அதிசயப் பறவைத் தமிழன்!!!
Four Birds at One Sloka
சிட்டுக்குருவியிடம் பாரதி கற்ற பாடம்
யானை பற்றிய நூறு பழமொழிகள்
கா! கா! கா! கா!
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை
தேள் தெய்வம்
வாகனங்கள் தோன்றியது எங்கே?
சுமேரியாவில் தமிழ்ப் பறவை
Double headed Eagle
Serpent Queen: Indus Valley to Sabarimalai
Can parrots predict your future?
When animals worship god why not men?
Animal Einsteins- Part 1
Animal Einsteins- Part 2