பெண்கள் மட்டுமே ஆண்ட அதிசய நாடு!

jhansi

Research Article No.1744; Date:- 23  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time  காலை 9-40

பாட்டிமார்களிடம் பழங்கதைகள் கேட்டவர்களுக்கும் பழைய கால சிறுவர் கதைப் புத்தகங்கள், பத்திரிக்கைகள் (அம்புலிமாமா, கண்ணன், கோகுலம்) ஆகியன படித்தவர்களுக்கும் மிகவும் பிரபலமான வாசகம் “56 தேச ராஜாக்கள்”. அதாவது பட்டபிஷேகம், ராஜா வீட்டுக் கல்யாணம், ஸ்வயம்வரம் எதுவானாலும் அக்காலத்தில் 56 தேச ராஜாக்களும் வந்திருந்ததாகச் சொல்லி கதையைத் துவக்குவர். இந்தியா இப்பொழுது மாநிலங்களாகவும் யூனியன் பிரதேசங்களாகவும் எப்படிப் பிரிக்கப்பட்டதோ அப்படியே அக்காலத்தில் 56 தேசங்களாகப் பிரிக்கட்டிருந்தது.

ஒரு சக்ரவர்த்தி வந்து, பல தேசங்களை வென்று, தமது பேரரசுக்குள் சேர்த்திருந் தாலும் அந்நாட்டு ராஜாக்கள் கப்பம் கட்டி விட்டு தனது ராஜா பதவியைத் தக்க வைத்துக் கொள்வார். 56 தேசங்களின் பட்டியல் அபிதான சிந்தாமணி போன்ற கலைக் களஞ்சியங்களில் உள்ளது.

மஹாபாரதத்தில் குறைந்து 29 நாடுகளின் பெயர்கள் வருகின்றன. புத்தர் காலத்தில் 16 பெரிய பிரிவுகள் (மஹாஜனபத) இருந்தன. தமிழ் நாட்டில் சேர, சோழ, பாண்டியருக்கும் கீழே பல சிறிய அரசர்கள் இருந்ததுபோல பல சிற்றரசர் நாடுகளும் இருந்தன.

Rani-Lakshmi-Bai

லெட்சுமி பாய்

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்ற நூலிலும், வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்ரத்திலும் ஸ்த்ரீ ராஜ்யம் என்று ஒரு நாட்டைக் குறிப்பிடுகின்றனர். இது ஒரு வியப்பான விஷயமாகும். அதவது பெண்கள் ராஜ்யம் என்று பெயர். கிரேக்க நாட்டில் இப்படி ஒரு கதை உண்டு. ஆனால் அங்கே அவர்களை நல்லபடி சித்தரிக்கவில்லை. நமது நாட்டில் பெண்கள் போர்ப் பயிற்சி பற்றி புகழ்ச்சியாகவே சொல்லியுள்ளனர். நம் நாட்டுக்கு வந்த, அல்லது நம் நாட்டைப் பற்றிக் கேள்விப்பட்ட கிரேக்க ஆசிரியர்கள் நம் வீராங்கனைகளைப் புகழ்ந்து எழுதியுள்ளனர்.

கி.பி.600 வாக்கில் இந்நட்டுக்கு வந்த சீன யாத்ரீகன் யுவாங் சுவாங்கும் பெண்கள் நாடு இருப்பது பற்றி எழுதியுள்ளார்.

மெகஸ்தனீஸ் எழுதிய இண்டிகா என்னும் நூலில் பாண்டிய நாட்டில் ஒரு ராணி ஆள்வதாக எழுதியுள்ளார். ஒருவேளை இது அன்னை மீனாட்சியைக் குறிப்பதாக இருக்கும் என்று அறிஞர்கள் கூறுவர்.

மௌர்ய சந்திரகுப்தன் பல்லக்கைச் சுற்றி பெண் வீராங்கணைகள் செல்லும் காட்சியை வேறு ஒரு கிரேக்க ஆசிரியர் எழுதி வைத்துள்ளார். ராமாயணக் கதைக்கு உயிரே கைகேயி பெற்ற இரண்டு வரங்கள் தான் என்பதை நாம் அறிவோம். யுத்த களத்தில் கைகேயி திறம்பட தேரைச் செலுத்தி தசரதனுக்குக்கு வெற்றி தேடித் தந்த செய்தியையும் நாம் அறிவோம்.

chennamma

கௌடில்யர் அர்த்தசாஸ்திர நூலிலும் பெண்கள் படை பற்றி எழுதியுள்ளார். ஆக, 2300 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் போர்ப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது கைகேயி யுத்த்களத்தில் தசரதனுக்கு சாரதியாக (டிரைவர்) போய் இருக்கமாட்டாள்.

பெண்கள் நாடு எங்கே இருந்தது?

இது இருந்த இடம் பற்றி நாம் ஊகிக்கவே முடிகிறது. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் இது வடமேற்கு இந்தியாவில் இருந்ததாக வராஹமிகிரர் எழுதியுள்ளார். இது இமயமலை சட்லெJ நதிப் பிரதேசம் என்று யுவாங் சுவாங் சொல்கிறார். பிரம்மபுத்ரா நதிக்கு வடகே இமய மலையில் இருந்ததாக டே என்பவர் குறிப்பிடுவதால் இது குமாவூன், கார்வால் பகுதியாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. கிழக்கு திபெத்தில், நுவாங் என்ற மலைஜாதி மக்களிடையே பிஞ்சு என்ற ராணி ஒருத்தி இருந்ததாகவும் அவரைத் தொடர்ந்து அந்நாட்டில் பெண்களே ஆட்சி புரிந்ததாகவும் ஆட்கின்ஸன் என்பவர் எழுதுகிறார். வாத்ஸ்யாயனரின் காமசூத்ரத்துக்கு உரை எழுதிய யசோதரர் என்பவர் இது வங்க தேசத்துக்கு மேற்கே இருந்த நாடு என்பார். ஆக இமய மலைப் பகுதியில் இது இருந்தது உறுதியாகிறது.

Anushka-Rudramadevi

ராணி ருத்ரமா தேவி

வராஹமிகிரர் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த நாடுகளின் பட்டியலைத் தருகிறார். ( ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க). ஒரு குறிப்பிட்ட ஜாதி, இன மக்கள் குழுவின் பெயரில்தான் நாடுகள் பெயர் இடப்பட்டன. காம்போஜர்கள் பெரும்பாலும் வாழ்ந்த பகுதியை காம்போஜர் என்றனர். ஆனால் இவர்களே காலப் போக்கில் பல இடங்களுக்குச் சென்று காலனிகளை அமைத்தபோது அதையும் காம்போஜம் என்றனர். இதனால் ஒரே பெயர் மேலும் சில இடங்களில் கானப்படும். சிலநேரங்களில் மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து சென்றுவிட்டால், பூகோளப் படத்தில் அந்த நாட்டின் பெயரே வேறு இடத்தில் இருக்கும். அதாவது எல்லைகள் மாறிக் கொண்டே இருக்கும்.

RD parade rehearsal

அபிதான சிந்தாமணி போன்ற கலைக் களஞ்சியங்களில் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் என்ற நாடு காட்டப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டிய நாடுகளின் பெயர்களுக்குப் பின்னர், திராவிடம் என்ற நாடும் உள்ளதால் தமிழ் நாட்டுக்கு வடக்கேயிருந்த பகுதியை அப்படி அழைத்தனர் என்பது தெரிகிறது. திராவிட பாஷைகளுக்கு எல்லாம் தமிழே தலைமை என்பதால் பின்னர் அது தமிழுக்கும் உரித்தானது.

திராவிட = த்ரமிள = தமிழ் என்று ஆனதாகவும் தமிழ்= த்ரமிள- த்ராவிட என்று ஆனதாகவும் வாதிப்போர் தங்கள் கொள்கைக்க்கு ஏற்றவாறு இதை மாற்றிக் கொள்வர். திராவிட என்பது வெள்ளைக்கார்கள் பயன்படுத்திய இனப் பெயராக இல்லாமல், தெற்கு என்ற திசைப் பெயராகவே முற்காலத்தில் விளங்கிற்று.

புலி மூஞ்சி, குதிரை மூஞ்சி, மூன்று கண் மனிதர்கள்!

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதாவில் 14-ஆவது அத்தியாயத்தில் திசை வாரியாக நாடுகளைக் குறிப்பிடுகிறார். இதில் உள்ள சில சுவையான செய்திகளை மட்டும் காண்போம்.

மிலேச்சர்கள் பற்றி இவர் இரண்டு இடங்களில் குறிப்பிடுவார். இது அங்கே யவனர்களைக் குறித்த சொல் ஆகும். அல்பெரூனி காலத்தில் இது அராபியர்களைக் குறித்தது. தமிழிலும் இதே கதை என்பதை எனது முந்தைய கட்டுரையில் தந்துள்ளேன்.

புலி முக மனிதர்கள், குதிரை முக மனிதர்கள், பாம்புக் கழுத்து மனிதர்கள், நீண்ட கழுத்து மனிதர்கள், நாய் முக மனிதர்கள், கோரைப் பல் மனிதர்கள், சப்பை மூக்கு மனிதர்கள், தழை உடை மனிதர்கள், சபரர்கள், நிஷாதர்கள், உயர்ந்த கழுத்து மனிதர்கள், தாடிவாலாக்கள், முடி நிறைந்த தேகம் உடையோர், முக்கண்ணர்கள், ஒற்றைக் காலர்கள் என்று பலவகையான மக்கள் இனங்களையும் அவர்கள் ஆளுமிடங்களையும் குறிப்பிடுகிறார். இவை எல்லாம் ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள். ஒவ்வொரு இனமக்களும் தங்களை அடையாளம் காட்ட ஒவ்வொரு சின்னத்தைப் பச்சைக் குத்திக் கொண்டனர். அதனால் அவர்கள் அப்பெயர்களில் அழைக்கப்பட்டனர். சிக்கிம், பூடான் போன்ற நாடுகளில் இன்றும் கூட முகமூடி அணிந்து நடனம் ஆடுவர். பூதம் போல முகமூடிகளை அணிவதால் அந்நாட்டுக்கு பூதஸ்தான் (பூட்டான்) என்று பெயர். இது போன்ற வழக்கங்கள் அக்காலத்தில் பெருவாரியாக இருந்திருக்க வேண்டும்.

indian women

ராமாயணத்தில் வரும் குரங்குகள் (ஹனுமார்), கரடிகள் (ஜாம்பவான்), கழுகுகள் (ஜடாயு) ஆகியவர்கள் மிருகங்கள் அல்ல. அவர்கள் உடலில் வரைந்த ஒவியங்கள் (பச்சைக் குத்தல்) அல்லது அவர்கள் சில நேரங்களில் அணியும் முகமூடிகளைப் பொருத்து அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிவிட்டதால், அனுமார் என்றால், குரங்குகள் என்பது போலக் கதை சொல்லத் துவங்கிவிட்டனர்.

பத்து தலை ராவணன் என்றால், பத்து தலைகள் என்பது பொருளல்ல. ஒருவனுக்குப் பத்து திசைகளிலும் பார்த்து, எதிரிகளை வெல்லும் திறமை இருந்தால் இப்படி அழைப்பர். தசரதன் என்றால் அவனுக்கு பத்து தேர்கள் மட்டுமே இருந்தன என்பது பொருளல்ல. அவன் பத்து திசைகளிலும் உள்ள எதிரிகளை தேரில் சென்று, ஒடுக்கியவன் என்பது பொருள். உலகில் எல்லோருக்கும் எட்டு திசைகள் மட்டுமே தெரியும். இந்துக்களுக்கு மட்டும் பத்து திசைகள். அதாவது தசரதன், ராவணன் போன்ற வீரர்கள் மேல் உலகம், கீழ் (பாதாள) உலகம் உள்பட எல்லா இடங்களிலும் ஆட்சிச் சக்கரத்தைப் பரப்பினார்கள்.

ஆக பழங்கால இலக்கியங்களில் உள்ள முக்கண் மக்கள். ஒற்றைக் கால் மக்கள், புலி-நாய்-குதிரை முக மக்கள் என்பனவற்றை ஆராய்வது பலனளிக்கும் முயற்சியாகும்.

brooklyn museum

நியூயார்க் ப்ரூக்ளின் மியூசிய சிலை

வாழ்க வராஹமிகிரர்! படிக்க பிருஹத் சம்ஹிதா!!!

வறுத்த விதை முளைக்குமா?

Research Article No.1742; Date:- 23  March, 2015

Written by S Nagarajan

Uploaded at London time 7-56 am

 

 roasted sunflower seeds

Roasted Sunflower seeds

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

25. வறுத்த விதை முளைக்குமா?

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

दग्धबीजन्यायः

dagdhabaja nyayah

தக்தபீஜ நியாயம்

வறுத்த விதை பற்றிய நியாயம் இது.

விதைகளை வறுத்து விட்டால் அவை நிலத்தில் விதைக்கப்பட்டாலும் முளைக்க மாட்டா.

பெரிய ஞானிகள் தம் கர்மாக்களைக் கழித்து விட்ட பின்னர் அவர்கள் மீண்டும் பிறக்கத் தேவையே இல்லை. வறுத்த விதை போல அவர்கள் பூமி மீது இருந்தாலும் நடந்தாலும் அவர்களைக் கர்மங்கள் கட்டுப் படுத்தாது. ஞானம் அவர்களின் அஞ்ஞானத்தைச் சுட்டெரித்து விட்டதால் அவர்கள் ஜீவமுக்தர்கள் ஆகி விடுவர்.

இதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

aduppu3

Old Type Fuel Oven (Virahu Aduppu in Tamil)

दग्धेन्धनवह्निन्यायः

dagdhendhanavahni nyayah

தக்தேந்தனவஹ்னி நியாயம்

எரிபொருளையும் தீயையும் பற்றிய நியாயம் இது.

எரி பொருளாக இருக்கும் விறகு, மண்ணெண்ணெய் ,எரிவாயு எதுவாக இருந்தாலும் சரி, அது முற்றிலுமாக தீர்ந்து விட்டால் தீயும் தானே அணைந்து விடும்.

எடுத்த வேலையை முடிக்காமல் இலட்சியவாதியான ஒருவன் ஓயமாட்டான். எரிபொருளாக இருந்து தன் வேலையை முடித்த பின்னரே அவன் அணைந்த தீ போல ஆவான். ஓய்வெடுப்பான்!

beating snake

Beating a snake with a stick

दण्डसर्पमारणन्यायः

dandasarpamarana nyayah

தண்டசர்ப்பமாரண நியாயம்

தண்டம்தடி; கம்பு; சர்ப்பம்பாம்பு மாரணம்கொல்லுதல்

தடியும் பாம்பும் பற்றிய நியாயம் இது.

தடியை எடுத்து ஒரு பாம்பை அடிக்கும் போது பாம்பும் சாக வேண்டும், அதே சமயம் தடியும் உடைந்து விடக் கூடாது. புத்திசாலியான ஒருவன் ஒரு வேலையை முடிக்கும் போது அவன் செய்வதற்கு எடுத்த காரியமும் நன்கு முடிய வேண்டும், அதே சமயம் தனது கருவிக்கோ அல்லது மற்ற யாருக்குமோ எந்த விதமான ஆபத்தோ அல்லது ஊறோ ஏற்பட்டு விடக் கூடாது. செய்யும் வேலையைத் திறம்படச் செய் என்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

akbar-birbal-

King and a commoner

दुर्बलैरपि वध्यन्ते पुरुषाः पार्थिवाश्रितैः

durbalairapi vadhyante purusah parthivasritaih

துர்பலைரபி வத்யந்தே புருஷா: பார்திவாஷ்ரிதை: நியாயம்

சமான்யனான ஒருவன் அரசனுக்கு அருகில் இருந்தால் அவன் அந்தஸ்தே தனி தான். தற்காலத்தைக் கூட எடுத்துக் கொண்டால் பாஸ் (Boss) அல்லது உயர் அதிகாரி அருகே இருக்கும் ஒருவன் பலமுள்ளவனாக இருக்கிறான். அவன் சொல்வதை அனைவரும் கேட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவன் சாதாரணமானவனாக இருந்தாலும் இருக்கும் இடத்தால் ஏற்படும் மஹிமை அது.

இதைச் சுட்டிக்காட்டும் நியாயம்.

देवदत्तहन्तृहतन्यायः

devadattahantrhata nyayah

தேவதத்த ஹந்த்ருஹத நியாயம்

தேவதத்தனைக் கொன்றவன் கொல்லப்பட்டான் என்னும் நியாயம் இது.

தேவதத்தன் என்பவனை ஒருவன் கொன்று விட்டான். ஆனால் அந்தக் கொலையாளியை இன்னொருவன் கொன்று  விட்டான் என்ற கதையைச் சொல்லும் நியாயம் இது.

kennedy and oswald

US President J F Kennedy was shot dead by Oswald. And Oswald was shot dead by Jack Ruby(1963)

இது சுட்டிக் காட்டுவது எதை? யாருமே பலசாலி இல்லை என்பதைத் தான்! வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது பழமொழி! பலசாலியான ஒருவனுக்கு மேலே இன்னொரு பலசாலியும் இருப்பான்! இந்த நியாயம் கொலையாளி கொலை செய்யப்பட்டாலும் அவனால் கொலையுண்டவன் மீண்டும் எழுவதில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

************

Stri Rajya- Kingdom of Women in India!

Anushka-Rudramadevi

Queen Rudrama Devi

Research Article No.1741; Date:- 22  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time 17-30

56 Countries in Ancient India!

Whenever Hindu grandmas tell a story to their grandchildren about any event in ancient India, they will always tell them that “the kings from all the 56 counties were present there or were invited to the coronation or a Royal wedding or big Yaga or Yajna”. Like we have divided today’s India into several states and union territories, ancient India was divided into 56 smaller states or countries. Even when the countries came under one powerful ruler for some time the states or countries never forgot their identity.

During Buddha’s time there were 16 big political divisions known as 16 Mahajanapadas. But there were smaller divisions as well. In Tamil Nadu there were three big powers called Chera, Choza and Pandyas. At the same time there were smaller chieftains ruling their own territories paying tributes to the three kings.

Mahabharata mentioned at least 29 countries or divisions. Most of them took part in the great war, either supporting Kauravas or Pandavas.

16 janapadas

Studying those 56 countries gives us information about ancient India’s geography and history. Varahamihira, in his Brhat Samhita (Fifth Century CE) gives us some interesting information in this area—Geography of India:-

Since many countries were named after the tribal group, the same name may appear at more than one geographical location. If Kambojas live at different locations, all those countries will be called Kamboja. Sometimes the community as a whole migrates to a different region, then the geographical name of the country would change.

Another interesting thing is that people were named after their appearance: long faced, long haired, horse faced etc. We see a dominant group Lambakannas (Lamba Karna = Long eared) in Mahavamsa of Sri Lanka. In Brhat Jataka, we come across:

Vyagramukhas (Tiger faced), Danturakas (People with protruding teeth), Asvavadanas (Horse faced), Vyalagrivas (Serpent necked) Surpa karnas (ears like winnowing basket), Urdhvakanthas (High necked ones), Smasrudharas (the bearded ones), Mahagrivas (long necked ones), Sauvira (Sour gruel or Jujube Fruit or Antimony), Turagananas (Horse faced) Kesadharas (hairy ones), Cipitanaskikas (Flat nosed tribe), Svamukhas (dog faced people), bark clad people, Trinetras (three eyed people),Ekachara (one footed people) and Mlechas.

Mlechas, according to Kern, are foreigners or barbarians. In 2-15 of Brhat Samhita, the Greeks are spoken of as Mlechas. In Alberuni’s time, the term was used to denote the Arabs. ( I have already dealt with this word in two of my articles).

Varahamihira mentioned a kingdom by name Harahaura. It is mentioned very rarely. The Harahaura country is supposed to be the land lying between the Indus and the Jhelum and the Gandgarh Mountain and the salt range.

brooklyn museum

Women soldier, Brooklyn Museum, NY

When Varahamikhira says horse faced or tiger faced, they might have had some tattoos or masks with animal pictures. We need cross references to confirm it. Once we solve this puzzle, then we can understand the Hanumans, Jambavans and Jatayus of Ramayana. They are not monkeys, bears or eagles. They were as human as we are today, but named after those animals or birds for some reasons.

 

Rani-Lakshmi-Bai

Rani Lakshmi Bai

Kingdom of Women!

Varahamikhira included Stri Rajya in the North West division of India. Kingdom of Women called Stri Rajya was known to Chinese pilgrim Yuan Chwang as an Amazonian kingdom in the Himalayan valley of Sutlej. Dey states that it was a country in the Himalaya immediately on the north of Brahmaputra, which has been identified with Garhwal and Kumaun. Atkinson tells us that a woman named Pinchu ruled over the Nu Wang tribe in Eastern Tibet, and the people in each successive reign chose a woman for their Sovereign. Vatsyayana mentions a Stri Rajya (2-5-27), which Yasodhara places to the west of Vanga.

(Megasthenes mentioned the Pandya queen; it may be Goodees/ Queen Meenakshi of Madurai. Curtius mentioned women soldiers following Maurya Chandragupta’s Palanquin. Kaikeyi drove the chariot of Dasaratha in the battlefield and got two boons)

Divisions of the Globe (chapter 14 of Brhat Samhita)

Central region

Bhadra, Arimeda, Mandavya, Salva, Nipa, Ujjihana, Samkhyata, Marwar, Vatsa, Ghosa, Matsya, Madhyamika, Mathura, Upajyotisa, Dharmaranya, Surasena, Gauragriva, Uddehika, Pandu, Guda, Asvatta, Panchala, saketa, Kanka, Kuru, Kalakoti,  Kukkura, Udumbara, Kapisthala, Hastinapura

East

Vyagramukhas (Tigerfaced), Suhmas, Karvatas, Surpakarnas (whose ears resembled winnowing baskets), Khasas, Magadha, Mithila, Samatata, Orissa, Asvavadanas (Horse faced), Danturakas (People with protruding teeth), Pragjyotisa, Cannibals, Bhadras, Paundras, Gaudas, Utakal, Kasi, Ambasthas, one footed people.

Magadha was called Kikata in Vedic days and Bihar now.

jhansi

South East

Kosala, Kalinga, Vanga, Upavanga, Jatharanga, Sulika, Vidarbha, Vatsa, Andhra, Cedi, Urdhvakantas, Island of Vrsa, Nalkrera dvipa, Carmadvipa Vyagrivas, Mahagrivas, Kiskindha, Kantakasthala, Nisadas, Purikas, Dasarna, naked sabras, parna sabaras,

 

South

Lanka, Kalajinas, Saurikrsnas, Talikatas, Girinagara,

Malaya, Dardura, mahendra Malindya mountains

Bharukachas, kankatas, Kankanas, Vanavasis (banvasi in North Kanara)Sibikas, Phaniakaras, konkanas, Abhiras, Avartakas, Dasapura, Gonardas, Kerala, Karnataka, mahatavi (Great Forest), Citrakuta, Kollagiri, Nasik, Colas, Kraunca Islands, Jatadharas, Kaveri river, Rsyamuka, Dharmapattana, Ghanarajya, Velluru, Pisikas, Surpa mountain, Kusuma mount, Tumbavana, Karmaneyakas, Southern Ocean, Tapasasrama, Rsikas, Kanci,Marucipattana, Ceryarakas, Simhalas, Rsabas, Baladevapattanam, Dandaka forest, whale eater, Bhadras, Cutch, Elephant caves, Tampraparni river

South West

Pahlavas, Kambojas, Sindhu sauviras, Vadavamukhas, Aravas, Ambasthas, Kapilas, Narimukhas, Anartis, Yavanas, Margaras, Karnapraveyas, Parasavas, Sudrasm barnars, Kiratas, Khandas, Kravyadas, Abhiras, cankukas, Surastras, Badaras, Dravidas, Great ocean

West

Haihayas, Vokkanas, Punjab, Ramathas, Paratas, Taraksiti, Jrngas, Vaisyas, Kanakas, Scythians, Mlechas

 

chennamma

North West

Mandavyas, Tusaras ,Talas, Halas, Madras, Asmakas, Kulutas, Haladas, Stri rajya/Kingdom of women, Nrsimha forest, Khasthas, Phalgukukas, Guluhas, Marukuchas, Carmarangas, One eyed tribe /ekavilochana, Sulikas, Dirge griva /long necked ones, Dirge vasya / long faced, Dirgakesa / long haired

 

North

Uttarakuru , Ksudraminas, Kaikayas, Vasatis, Yamunas, Bhogaprastha, Arjunayanas, Agnidhras, Adarsas, Antardvipins, Trigarta, Turagananas /horse faced, Svamukhas / dog faced, Kesadharas / hairy ones, Cipitanasikas /flat nosed  tribe, Daserakas, Vatadhanas, Saradhanas, Taxila, Puskalavata, Kailavata, Kanthadhanas, Ambaravatas, Madrakas, Malwa, Pauravas, Kachcharas, Dandapingalaks, Manahalas, Huns, Kohalas, Sitakas, Mandavyas, Bhutapura, Gandhara, Yasovati, Hematalas, Ksatriyas, Khacaras, Gavyas, Yaudheyas Dasameyas, Syamakas, Ksemadhurtas

North East

Kira, Kashmir, Abhisaras, Daradas, Tanganas, Kulutas, Sairindhras, Varashtra, Brahmapura, Darvas, Damaras, Vanarajya, Kiratas, Cinas, Kaunindas, Bhallas, Patolas, Jatasuras, Kunatas, Khasas, Ghosas, Kucikas, One fotted men, /eka chara, Anuvidhdhas, Suvarnabhu, Vasudhana, Divisthas, Pauravas, Bark clad people, Trinetras/ three eyed people.

indian women

Commentators have identified these places and the communities. But there are some doubtful identifications or simple guesses. Amazing thing about Brhat Samhita is that he had full knowledge of all parts of India and the communities or tribes occupying those places.

RD parade rehearsal

சொட்டை, யாராவது வந்திருக்கானா? குருகைக்காவலன் கேள்வி!

natha
நாதமுனி
Article No.1740; Date:- 22  March, 2015
Written by London swaminathan
Uploaded at London time 11-37 காலை

சொன்னவர்: சுதந்திரப்போராட்ட வீரர் ஸ்ரீயுத சுப்பிரமணிய சிவம் (சுதந்திராநந்தர்)

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஸ்ரீகுருகைக் காவலப்பன் என்ற பெரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரது பெருமையை மணக்கால் நம்பியிடமிருந்து அறிந்த ஆளவந்தார், அவரைக் காணச் சென்றார்.

ஆளவந்தார் என்பவர் ஸ்ரீ நாதமுனிகளின் பேரன். அவர் சென்ற நிமிடம் குருகைக் காவலப்பன் தியானத்தில் இருந்தார். ஆளவந்தாருக்கும் அவருக்கும் இடையே ஒரு பெரிய தட்டி இருந்தது. அதற்குப் பின்னால் நின்று அவர் நீண்ட நேரம் காத்திருந்தார்.

திடீரென்று ஒரு சத்தம் வந்தது, “ அங்கே யாராவது சொட்டை வந்திருக்கானா? என்று.

சொட்டை என்பது நாதமுனிகள் வம்சத்தினரின் குடும்பப்பெயர். ஆளவந்தாருக்கு மிகவும் ஆச்சரியம். குருகைக்காவலரைத் தரிசித்துவிட்டு, நான் மறைவான தட்டிக்கு அந்தப் பகத்தில் நின்றேனே, நான் வந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டார்.

ஸ்ரீமன் நாராயணன் லெட்சுமி தேவி வந்தால் கூடத் திரும்பிப் பார்க்கமாட்டாதவர். அவர் என் தோள் பட்டையை அமுக்கிக்கொண்டு இரண்டு மூன்று தடவை நீ இருக்கும் திசையை எட்டிப் பார்த்தார். இப்படிப்பட்ட பாக்கியம் சொட்டை குடும்பத்துக்கு உண்டு என்று எனக்குத் தெரியும். ஆகையால்தான் அவரது குடும்பத்தினர் வந்திருக்கிறார்களோ என்று வினவினேன் என்றார்.

chotainambi alavandar

சொட்டை நம்பி ஆளவந்தார்

பேரழகி லெட்சுமி; பெரும் செல்வத்துக்கு அதிதேவதை; அவளுடைய வலையில் கூட எளிதில் சிக்காத பகவான், பக்தர்களின் வலையில் எளிதில் விழுந்துவிடுவான்! அவன் கருணைப் பெருங்கடல்!

ஆதாரம்: மோக்ஷ சாதன ரஹஸ்யம் (சுப்பிரமணிய சிவா எழுதியது)

தாலாட்டுப் பாடல்களில் ராமர்

yogya-ramayana-ballet-2084-r001-030

ராமாயண நாட்டிய நாடகம், இந்தோநேஷியா

Article No.1739; Date:- 22  March, 2015

Written by S Nagarajan

Uploaded at London time காலை 7-02

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 14

ச.நாகராஜன்

லாலி! லாலி! ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே!

 

தாலாட்டில் ராமர்

 

தமிழ் திரைப்படங்களில் தாலாட்டுப் பாடல்களுக்கு தனி இடம் ஒன்று உண்டு, ‘

‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ’ என்ற சோகமான பாகப்பிரிவினை படப் பாட்டு ஒரு ரகம் என்றால் ‘தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே’ என்ற நாயகன் படப் பாடல் இன்னொரு ரகம்.

ஆனால் ராமரையும் கௌஸல்யையும் கம்பனையும் வால்மீகியையும், தியாகையரையும் பாடல் வரிகளில் இடம் கொண்ட லாலி லாலி பாடல் அற்புதமான ஒரு பாடல்.

தெலுங்கு படமான ஸ்வாதி முத்யத்தில் இந்த தாலாட்டுப் பாட்டை எழுதியவர் டாக்டர் சி.வி. நாராயண ரெட்டி. தமிழில் சிப்பிக்குள் முத்து படத்திற்காக எழுதியவர் கவிஞர் வைரமுத்து.அற்புதமாக இதைப் பாடியிருப்பவர் பி.சுசீலா.

 

 

வால்மீகி என்னும் குயிலை வணங்குகிறேன்

        ராம பக்தரான ஶ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் 24000 கிருதிகளை இயற்றியவர். ஆனால் 700 கிருதிகளே நம்மிடம் இன்று உள்ளன. கம்பனோ பத்தாயிரம் பாடல்களில் ராமனைப் பாடிப் பாடி மகிழ்ந்தான். வால்மீகியோ 24000 ஸ்லோகங்களில் ராமனின் அமுதக் கதையை அமிர்தமாக வர்ஷித்தார். வால்மீகி ராமாயணத்தை பாராயணம் செய்யும் பக்தர்கள் அன்றாடம் சொல்லும் தியான ஸ்லோகங்களில்  வால்மீகிக்கு வணக்கம் தெரிவிக்கும் ஸ்லோகம் முக்கியமான ஒன்று; சுவையானதும் கூட!

 

 

கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் I

ஆருஹ்ய கவிதாஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம் II

 

ஆருஹ்ய கவிதா ஷாகாம்கவிதை என்னும் மரத்தின் உச்சியில் ஏறி

கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்ராம ராம என்னும் இனிய அக்ஷரங்களை இனிமையாகக் கூவும்

வந்தே வால்மீகி கோகிலம்அந்த வால்மீகி என்னும் குயிலை வணங்குகிறேன்

 

முதல் காவியத்தை இயற்றியதால் வால்மீகி ஆதி கவி எனப்படுகிறார். முதல் காவியம் ராமாயணம் என்பதால் இது ஆதி காவியம் என அழைக்கப்படுகிறது. கவிதையின் சிகரத்தில் ஏறியவர் என்பதோடு ராம நாமத்தைக் கூவிக் கூவிப் பாடும் குயில் என வால்மீகி அழைக்கப்படுகிறார். அப்படிப்பட்ட ராம நாமம் கூவும் குயிலைக் கொண்டாடுவது குழந்தையின் தாலாட்டிலிருந்தே ஹிந்துப் பண்பாட்டுக் குடும்பங்களில் ஆரம்பித்து விடுகிறது!

im159.guimet-B

தெலுங்குப் பாடல்லாலி லாலி

 

டாக்டர் சி.வி.நாராயண ரெட்டி எழுதிய தெலுங்குப் பாடலின் ஒரு சில வரிகளை முதலில் பார்ப்போம்:-

வடபத்ரசாயிக்கு வரஹால லாலி
ராஜீவ நேத்ருனுக்கி ரத்னால லாலி
முரிபால கிருஷ்ணுனிக்கி முத்யால லாலி
ஜகமேல ஸ்வாமிக்கி பகடால லாலி

கல்யாண ராமுனிகி கௌஸல்யா லாலி

யதுவம்ச விபுனுகி யசோதை லாலி என்று இப்படி அற்புதமான வரிகளுடன் தெலுங்குப் பாடல் அமைந்திருக்கிறது.

 

பாடலுக்கு மிக அற்புதமாக இசை அமைத்திருப்பவர் இளையராஜா

 

 

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி

 

இந்தப் படத்தில் ராமன் கதை கேளுங்கள் பாடலைத் தொடர்ந்து ராமனை நினைவூட்டும் இரண்டாவது பாடல் இது. தமிழில் இதே இசைக்குத் தக ஆழ்ந்த  பொருளுடன் அமைக்கப்பட்ட பாடலைப் பார்ப்போம்:-

லாலி லாலி லாலி லாலி                 லாலி லாலி லாலி லாலி

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி      ராஜாதிராஜனுக்கு இதமான லாலி                          வரம் தந்த சாமிக்கு பதமான லாலி       ராஜாதிராஜனுக்கு இதமான லாலி                       குறும்பான கண்ணனுக்கு ஆ..         குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி                    ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி (வரம் தந்த)

ஆரிராரோ ஆரிராரோ                  ஆரிராரோ ஆரிராரோ

கல்யாணராமனுக்கு கௌஸல்யை நானே

கல்யாணராமனுக்கு கௌஸல்யை நானே     யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே  யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே           கரு யானை முகனுக்கு மலையன்னை நானே           கரு யானை முகனுக்கு மலையன்னை நானே                                                       பார்போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே (வரம் தந்த)

ஆரிராரோ ஆரிராரோ         ஆரிராரோ ஆரிராரோ

ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே            ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே          ஶ்ரீராமன் பாட வந்த கம்பநாடன் நானே                                            ஶ்ரீராமன் பாட வந்த கம்பநாடன் நானே        ராமராஜனுக்கு வால்மீகி நானே                      ராமராஜனுக்கு வால்மீகி நானே                                                                                     ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே   ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே (வரம் தந்த)

ஆரிராரோ ஆரிராரோ        ஆரிராரோ ஆரிராரோ

ராதிகா துளியில் குழந்தையை ஆட்டுவதும், குழந்தையை முதுகில் சுமந்தவாறே கோலம் போடுவதும், தையல் மெஷினை இயக்குவதுமாக பின்னணிக் காட்சிகள் இருக்க பாடல்  பல கருத்துக்களை முன்னணியில் முன் வைக்கிறது!

 

lord rama,fb

கௌசல்யையும் யசோதையும்

 

பாரதத்தில் பிறந்த ஒவ்வொரு அன்னையும் பிள்ளையைப் பெற்றவுடன் அந்த வரத்தைத் தந்தருளிய இறைவனுக்கு நன்றி சொல்வது வழக்கம். புத் என்ற நரகம் செல்ல விடாமல் தடுப்பதனாலேயே புத்திரன் என்று அழைக்கப்படுகிறான்.

ஆக அப்படி வரம் தந்த சாமிக்கு பதமான லாலி பாடல் இசைக்கப்படுகிறது. தன் மகனை ஒரு ராமனாக, கண்ணனாக, கஜமுகனாக, முருகனாக நினைத்துப் பாடுகிறாள் தாய். தன்னை வால்மீகியாக, கம்பனாக, ஆழ்வாராக, தியாகையராக நினைத்துப் பாடும் இந்தப் பாடலின் கருத்தை எண்ணி மகிழலாம்.

குறிப்பாக தியாகராஜ ஸ்வாமிகள் (யதுகுல காம்போஜி ராகத்தில்) பாடியுள்ள கீர்த்தனையான

“ஶ்ரீராம ஜெயராம ச்ருங்கார ராமயநி

சிஞ்சிஞ்ச ராதே ஓ மனஸா

தலுகு செக்குல முது பேட்ட கௌசல்யா முனு

தபமேமி ஜேசெனொ தெலியா”

என்ற கீர்த்தனையில் கௌசல்யை ராமனின் முத்தம் பெற்று அவனை வளர்க்க என்ன தவம் செய்தாளோ என்று உருகுகிறார்!

அதே போல, பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியுள்ள அருமையான பாடலான

“என்ன தவம் செய்தனை யசோதா

என்ன தவம் செய்தனை

எங்கும் நிறை பரப்ரம்மம் – அம்மா வென்றழைக்க

என்ன தவம் செய்தனை

என்பதையும் இங்கு நினைவு கூரலாம்.

ஒரு தாலாட்டுப் பாடலில் பிரம்மாண்டமான பாரம்பரிய வரலாறுகளைச் சித்தரிக்கும் இந்தப் பாடல்  தாலாட்டுப் பாடல்களில் சிறந்த ஒன்று என்று தயங்காமல் கூறலாம்!

*****************

Subrahmanya Siva’s Personal Experience with Miracle Men

SubramaniyaSiva

Article No.1738; Date:- 21  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time 17-40 pm

Freedom Fighter Subramanya Sivam (1884- 1925) narrated two personal experiences with miracle men in his Tamil book Moksha Sadhana Rahasyam. But he ignored them as basic siddhis (power to do some miracles) which one attains during the spiritual practice.

A rough translation of what Siva said in Tamil goes as follows:

Vibhuti manifestation

Once I was sitting with my friends. A beggar approached me and pinched me. Vibhuti (holy ash) came in his hand from my body. I suspected some foul play and so I asked him to get Vibhuti from the sand in front of me. He got it just like that and that Vibhuti had the great fragrance of Palani temple (Palani is famous for fragrant smell in Vibhuti. Making Vibhuti/holy ash and exporting it is a big industry even today. Siva wrote it in 1922. The book was published in 1925). His level of knowledge was lower than that of an animal! I asked him how he acquired this power. He told us by practising a particular ‘Vidhyai’ (some mantra or tantra practice), he acquired this power.

Another time a Bairahi (North Indian Wandering Yogis) came to me. I was talking to a Tamil scholar at that time. He asked my friend to go out and told me that he could cure my (leprosy) disease.  He asked me to bring a paper and pen. He signalled the paper to come to him. It moved towards him. I checked whether he is pulling it with a string. No, he didn’t. There was some space between the paper and the floor.

Siva narrates another old story to illustrate the wastage of energy on petty things after a penance. A yogi did practice Yoga for 12 years. One day when he came to the river he put his feet in water. They did not submerge in water. He tried to walk on water and he did succeed. When the Guru saw his feet bone dry, he asked him how come his feet were dry. He boasted about his newly acquired power. Then the Guru told him, “ Look! what you have saved is just a quarter Anna ( equivalent to few Pennys) after 12 long years of penance. If it is the only one use, you could have paid just quarter anna to the boat man and saved your 12 years”.

He advised him not to use such powers for small things but to advance spiritually.

(This story is also found in Ramakrishna Paramahamsa Upadesa Manjari as well. Siva was a great admirer of Sri Ramakrishna and Swami Vivekananda. He was a firebrand patriot and worked with VO Chidambaram Pillay and the great Tamil poet Subramanya Bharati).

The True Friend Who Comes Along With You after Your Death

3 friends

Article No.1737; Date:- 21  March, 2015

Written by S Nagarajan

Uploaded at London time 12-35 pm

BY Santhanam Nagarajan

I read an interesting story which I would like to share with the readers.

A person had three friends. But he felt more attracted towards the two and as to the third he did not bother much, was rather indifferent to him. Once he was in deep distress. He went to his first friend and told him, “I shall have to appear in a court in connection with a charge against me. I am in great difficulty. So you please help me and accompany me to the court?” The friend’s reply was very curt and straight. He said, “what to speak of a court, I can’t go with you a single step even.”

Thus disappointed by the friend this person felt very sad and approached his second friend and explained to him his distress and difficulty and requested him to accompany him to the court. And the second friend said, “You are in distress. Well, I shall only go along with you some distance. But I can’t help you going inside the court and assist you in the case.”

The person grew sadder and when he felt absolutely helpless he went to his third friend of whom he did not so long care to take notice. He spoke out to him about the distress he was in and everything about his friends. The third friend listened to him and not only went to the court along with him but cited such irrefutable proofs of his innocence as a witness in the court that the person was released.

The person then felt that the friend whom he had so long neglected had really rendered him the most sincere service at the time of his danger and distress.

And who are these three friends. Wealth, Relations and virtuous deeds. After death when a person goes to the next world his wealth (the first friend) will be of no avail. The second friend (Relations) will accompany the person only up to the burning ghat or burial ground. But the third friend is a real friend because he was a friend in need and was his savior.

Man’s only friend is his righteous deeds which alone follows him after death. Everything else perishes with his body when the man dies.

The Hindu scriptures emphasize on virtuous deeds. In order to merge with the Brahmam or Supreme Reality, Yoga Vasistha shows the way very simply.

In order to destroy the sins, associate with virtuous people and good deeds. By this, your mind will be purified.

Let the mind be led to the state of purity or righteousness through the study of scripture and by the association of virtuous people.

Three Musketeers

The scriptures or Shastras will teach you relating to the three classes of the objects of human life namely virtue, wealth and enjoyments.

The mind will be purified through the study of scripture and the application of repeated practice.
From the scriptures the knowledge of one’s own self flowing forth from the meanings of the great sayings contained therein, is obtained through one’s own experience, like the sweetness from the juice of the sugarcane.

Once the mind is purified, the Self or Supreme Reality will be realized through oneself through the power of Swabodha or one’s own enlightenment from those precepts.

The Yoga Vasishtha way is a simple way for salvation. The Hindu doctrines are so simple to follow.
**************

மிலேச்சர்களை அழிக்கும் கல்கி அவதாரம் எப்போது?

கல்கி

Research Article No.1736; Date:- 21  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time 6-05 am

விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும் எந்த தேதியில் (திதியில்) நிகழும் என்று நம் முன்னோர்கள் அழகாக எழுதி வைத்துள்ளார்கள். அதைப் படிக்கையில் அடுத்த அவதாரம், அதாவது மிலேச்சர்களை ஒடுக்கும் கல்கி அவதாரம் எப்போது நிகழும் என்று தெரிகிறது.

1.சைத்ரே மாசி சிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் திதௌ விபு:

உதபூம் மத்ஸ்ய ரூபேண ரக்ஷார்தம்  அவனேர்ஹரி:

பொருள்:–சித்திரை மாத சுக்ல பட்சத்தில் த்ரயோதசி திதியில் (அமாவாசைக்குப் பின் 13-ஆவது நாள்), ஹரியானவர் உலகத்தைக் காப்பதற்காக மீன் உருவத்தில் பிறந்தார்.

2.ஜேஷ்ட மாசே ததா க்ருஷ்ண த்வாதஸ்யாம்  பகவான் அஜ:

மந்தரம் ப்ருஷ்டத: க்ருதவா கூர்மரூபீ ஹரிர்ததௌ

பொருள்:– ஆனி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் த்வாதசி திதியில் (பௌர்ணமிக்குப் பின்னர் 12-ஆவது நாள்) பகவான் மந்தர மலையை பின்னே வைத்து ஆமை உருவத்தில் பிறந்தார்.

3.சைத்ரக்ருஷ்ணே து பஞ்சம்யாம் ஜக்ஞே நாராயண ஸ்வயம்

புவம் வராஹரூபேண  ஸ்ருங்கப்யாம் உததேர் பலாத்

 

பொருள்:– சித்திரை மாத கிருஷ்ண பட்சத்தில் பஞ்சமி திதியில் (ஐந்தாவது நாள்) பன்றி உருவத்தில் பலத்துடன் பூமியைக் கொம்புகளில் சுமந்தவாறு நாராயணன் தோன்றினார்.

4.வைசாக சுக்லபக்ஷே து சதுர்தஸ்யாம் இனே அஸ்தகே

உத்பபூவ  அசுரத்வேசீ ந்ருசிம்ஹோ பக்தவத்சல:

 

பொருள்:– வைகாசி மாத சுக்ல பட்சத்தில் சதுர்தசியன்று (14-ஆவது நாள்), சூர்ய அஸ்தமன காலத்தில்  அசுரர்களின் எதிரியான பக்தர்களின் அன்புக்குப் பாத்திரனான நரசிம்மர் தோன்றினார்.

5.மாசி பாத்ரபதே சுக்ல த்வாதஸ்யாம் வாமனோ விபு:

அதித்யாம் கஸ்யபாஜ் ஜக்ஞே நியந்தும் பலிமோஜசா

 

பொருள்:– புரட்டாசி மாதத்தில் சுக்கில பட்ச த்வாதசி திதியில், அதிதி- கஸ்யபர் இருவரிடத்தில் பலியை அடக்குவதற்காக ஒளி பொருந்திய வாமனனாகத் தோன்றினார்.

பரசுராம

6.மார்கசீர்ஷே த்வீதிய்யாயாம் க்ருஷ்ணபக்ஷே து பார்கவ:

துஷ்ட க்ஷத்ரிய வித்வேசீ ராமோ அபூத் தாபசாக்ரணீ:

 

பொருள்:– மார்கழி மாத கிருஷ்ண பட்ச த்விதியை (இரண்டாம் நாள்) திதியில் துஷ்டர்களான க்ஷத்ரியர்களின் விரோதியான தபஸ்விகளில் முன்னோடியான பார்கவ ராமர் (பரசுராமர்) தோன்றினார்.

7.சைத்ர சுக்ல நவம்யாம் து மத்யன்ஹே ரகுநந்தன:

தசானன வதா காங்க்ஷீ ஜக்ஞே ராம: ஸ்வயம் ஹரி:

 

பொருள்:– சித்திரை மாதத்தில் சுக்கிலபட்சத்தில் நவமி திதியில் மத்தியான நேரத்தில், ரகு குலத்தில் ராவணனை வதை செய்ய

சாக்ஷாத் விஷ்ணுவானவர் ராமராக தோன்றினார்.

8.வைசாகே சுக்லபக்ஷே து த்ருதீயாயாம் ஹலாயுத:

சம்கர்ஷணோ பலோ ஜக்ஞே ராம: க்ருஷ்ணாக்ரஜோ ஹரி:

 

பொருள்:– வைகாசி மாத சுக்கில பட்ச திருதியை திதியில், கிருஷ்ணருக்கு மூத்தவரான ஹலாயுதன், சம்கர்ஷணன் (பலராமன்) தோன்றினார். ஹலாயுத= கலப்பை ஏந்தியவன்

balarama

9.மாசி து ஸ்ராவணி அஷ்டம்யாம் நிசீதே க்ருஷ்ணபக்ஷகே

ப்ரஜாபத்யக்ஷர் சம்யுக்தே க்ருஷ்ணம் தேவக்ய அஜீஜனத்

பொருள்:– ஆவணி மாத அஷ்டமி (எட்டாம் நாள்) திதியில் இரவில் தேவகியிடத்தில் கிருஷ்ணர் அவதரித்தார்.

10.மாசி பாத்ரபதே சுக்ல த்விதீயாயாம் ஜனார்தன:

ம்லேச்சாக்ராந்த கலாவந்தே கல்கிரூபோ பவிஷ்யதி

பொருள்:– கலியின் முடிவில் புரட்டாசி மாதத்தில் சுக்லபட்ச (இரண்டாம்) த்விதீயை திதியில் மிலேச்சர்களை ஒடுக்க கல்கி உருவத்தில் ஜனார்த்தனனாகிய விஷ்ணு அவதரிப்பார்.

kalki

மிலேச்சர்கள் யார்?

ரிக் வேதம் (5-29-10), சதபத பிராமணம் ஆகியன கொச்சை மொழி, மிலேச்ச பாஷை பற்றிச் சொன்னதை, சிந்துவெளியில் இருந்த திராவிடர்களைப் பற்றி சொன்னது என்று சில “அறிஞர்கள்’ அழகான கதை எட்டுக் கட்டினர். உண்மையில் வேற்று மொழி பேசும் எல்லோரையும் மற்றவர்கள் ‘’வன்சொல்’’ என்று கேலி செய்வது வழக்கம்.

தமிழர்களை தெலுங்கர்கள் அரவா (சத்தம்) என்று கேலி செய்வர். எபிரேய பைபிளில் அராபியர்களை ‘அரவா’ என்று அழைத்தனர். பார்லிமெண்ட் உறுப்பினர் சேட் கோவிந்த தாஸ், தமிழ் மொழியைக் கிண்டல் செய்யும் போது, ‘’ஒரு தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்குங்கள்—அதுதான் தமிழ் மொழி’’ — என்று கிண்டல் செய்தார். கிரேக்கர்கள், மற்ற எல்லோரையும் காட்டுமிராண்டிகள் (பார்பாரிக்) என்றழைத்தனர். முஸ்லீம்கள் மற்ற எல்லோரையும் ‘’காபிர்கள்’’ என்றும், கிறிஸ்தவர்கள் மற்ற எல்லோரையும் ‘’பேகன்கள்’’ என்றும் மட்டம் தட்டியது போலாகும் இது. ஆகையால் சிந்து சமவெளி ஆய்வாளர்கள் சொன்னதை ஒதுக்கி விடுதல் நலம் பயக்கும்.

யவனர்களை அடியார்க்கு நல்லார், “மிலேச்சர்கள்” என்று சொல்லியது சரியே. தேசியகவி சுப்பிரமணிய பாரதியும் முஸ்லீம் மன்னர்களை ‘’வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்’’ —- என்று வசை பாடுவதைக் காண்க. சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், வெள்ளைக் காரனையும் ‘’மிலேச்சன்’’ என்று இகழ்ந்ததையும் கருத்திற் கொள்க.

தமிழ் கலைக்களஞ்சியமான ‘’அபிதான சிந்தாமணி’’ யவனர் பற்றிக் கூறுவது:

அ)அரேபியா நாட்டு மிலேச்சர்

ஆ)யயாதியின் மகனான துர்வாசு மரபினர். ஒழுக்கங் குன்றி இவ்விடம் சேர்ந்து இப்பெயர் பெற்றனர்

இதைத் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் உள்ள குறிப்புகளும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டு  உள்ளன.

அவதாரங்கள்
‘மிலேச்ச’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப் பாட்டில் வருகிறது. மகாபாரதம் முதல் பல சம்ஸ்கிருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் வருகிறது. எல்லா இடங்களிலும் பாரத நாட்டைச் சாராத ‘அந்நியன்’ அல்லது ‘அந்நிய மொழி’ யைப் பேசுவோன் என்ற சொல்லிலேயே புழங்கியிருக்கிறது. யவனர்கள் எனப்படும் கிரேக்கர்கள் அல்லது ரோமானியர்களை இப்படி அழைத்தனர். படை எடுத்து வந்த முஸ்லீம்களையும் பிரிட்டிஷ்காரர்களையும் இப்படி அழைத்தனர்.

பலுச்சிஸ்தான் என்ற பகுதியில் வசித்தவர்களையும் இப்படி அழைத்தனர். பலுச்சி என்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’ என்று அழைத்தனர். பிற்காலத்தில் இந்தச் சொல் அர்த்தம் மாறி தீய அர்த்தத்தில் மட்டும் வழக்கத்தில் வந்தது.
யாராவது ஏதாவது புரியாத விஷயத்தைச் சொன்னால் ஆங்கிலத்தில் “இட் இஸ் கிரீக் டு மீ” என்று சொல்லுவார்கள். இதற்கு கிரேக்க மொழி என்று பொருள் அல்ல. எனக்குப் புரியவில்லை என்று பொருள். ஆக இந்த இடங்களில் கிரீக், பார்பேரியன்ஸ் என்ற சொற்களை எப்படி அர்த்தம் செய்துகொள்கிறோமோ அப்படித்தான் நாமும் ‘மிலேச்ச’ என்ற சொல்லுக்குப் பொருள் காண வேண்டும்.

சிந்துவெளி ஆய்வை திசை திருப்பிய சொல்

சிந்து சமவெளியை மிளக்கா என்று பாபிலோனியர்கள் அழைத்தனர் என்றும் களிமண் ஏடுகளில் மிளக்கா என்பது உள்ளது என்றும் சொல்லி சிந்து வெளி ஆய்வை திசை திருப்பிய அறிஞர்களும் உண்டு. முன் கூறியது போல இது பலுச்சிஸ்தான் என்னும் குறுகிய நிலப்பரப்பில் வாழ்ந்த ஒரு இனத்தை மட்டும் குறித்திருக்கலாம். மலக் (மாலிக்) என்ற ஒரு தெய்வத்துக்கு இஸ்ரேலியர்கள் குழந்தைகளைப் பலி கொடுத்ததை பைபிள் இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறது. அவர்களும் மிலேச்சர்கள் என்ற சப்தத்துள் அடங்குவர்.
முல்லைப் பாட்டில் ரோமானிய மக்களைக் குறிக்கையில் வாய் பேசாதோர், ஊமை போன்று சைகை மொழியில் பேசுவோர் என்று மிலேச்ச என்ற சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ரிக் வேதத்திலும் கூட சிலரை வாய் பேசாதோர், மொழியே இல்லாதோர் என்றும் கூறியிருக்கின்றனர். இதன் பொருள் ‘நம் மொழியைப் பேசாதவர்’ என்பதே.

இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வேல்ஸ் மக்களையும் ஜெர்மானியர்களையும் எப்படி மிலேச்சர்களாக கருதினர் என்ற எடுத்துக்காட்டுகளைக் கொடுத்துள்ளேன்

நரசிம்மர்
மாபாரத ஆதி பர்வத்தில் அரக்கு மாளிகை கட்டிய எஞ்சினீயரை மிலேச்சன் என்றும் மாபாரத யுத்தத்தில் பங்குகொண்ட (சாத்யகியால் கொல்லப்பட்ட சால்வன் ஒரு மிலேச்ச மன்னன்;கௌரவர்கள் தர்ப்பில் போரிட்ட அங்க என்பவனும் மிலேச்சன் என்கிறது மாபாரதம்) பல மன்னர்களை மிலேச்சர்கள் என்றும் சொல்லியிருக்கிறது. சேரன் செங்குட்டுவன் யவனர்களைப் பிடித்து மொட்டை அடித்து அவர்கள் தலையில் எண்ணை ஊற்றி அவமானம் செய்ததை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரத்தில் காணலாம். சகரர், ஹூணர், கிரேக்கர்கள் ஆகியோரை வட மொழிக் கல்வெட்டுகளும் நூல்களும் மிலேச்சர்கள் என்று கொச்சையாகத் திட்டுவதையும் காணலாம்.

சுருக்கமாகச் சொன்னால் மிலேச்சர்கள் தமிழோ சம்ஸ்கிருதமோ பேசாதவர்கள், இந்து மத நம்பிக்கைகளுக்குப் புறம்பானவர்கள் என்பதை 3000 ஆண்டு சொல் பிறப்பியல் வரலாறு காட்டும்.

ஆகவே சிந்து சமவெளி ‘மிளக்கா’வும் இல்லை, அங்கே பேசப்பட்ட மொழி ‘மிலேச்ச பாஷை’யும் அல்ல என்பது இக்கட்டுரையின் துணிபு.
முந்தைய கட்டுரைகள்:–

MLECHA: Most Misunderstood Word (Posted on 3 September,2012)

“மிலேச்ச” என்றால் என்ன? (Posted on 6 September,2012)

Date of Kalki Avatar!

kalki

Research Article No.1735; Date:- 20th March, 2015

Written by London swaminathan

Uploaded at London time 9-23 am

We all know that Lord Vishnu will reincarnate himself as Kalki Avatar at the end of Kali Yuga for “Paritraaya Saadhunaam and Vinaasaaya sa dushkrtaam” (to protect the good and destroy the wicked). Then he will establish righteousness (Dharma sam sthaapanaarthaaya) .

When will this happen? Is there any indication in our scriptures?

Yes, there is a ‘sloka’ (couplet) which clearly tells us the date of his arrival here on earth.

For all the Ten Avatars we have information in the traditional hymns:

அவதாரங்கள்

TEN INCARNATIONS OF VISHNU

Fish – Matsya Avatar/ incarnation – Month Chitra – 13th day in bright half

Tortoise – Kurma Avatar/ incarnation – Month Jyeshta – 12th day in dark half

 

Boar – Varaha Avatar/ incarnation – Month Chitra – 5th day in dark half

Man Lion– Narasimha Avatar/ incarnation – Month Vaisaka – 14th day in bright half of the month – (Sukla Paksha)

 பரசுராம

PARASU RAMA AVATAR (RAMA WITH AXE)

Short man – Vamana Avatar/ incarnation – Month Bhadrapatha – 12th day in bright half of the month – (Sukla Paksha)

Rama with axe – Parasurama Avatar/ incarnation – Month Margasirsha – 2nd day in dark half of the month/ Krishna paksha.

Rama  – Rama Avatar/ incarnation – Month Chitra – 9th day in bright half

Man with a plough – Balarama Avatar/ incarnation – Month Vaisaka – 3rd  day in bright half of the month

balarama

BALARAMA= HALAYUDHA= RAMA WITH A PLOUGH = AGRICULTURAL ENGINEER

Blackman  – Krishna  Avatar/ incarnation – Month Sravana – 8th  day in dark half of the month/ Krishna paksha.

Tenth Avatar

 

Man on a White Horse – Kalki Avatar/ incarnation – Month Bhadrapatha – 2nd  day in bright half of the month – (Sukla Paksha) at the end of Kali Yuga

Masi Bhadrapathe sukla dwitiyaayaam Janardhana:

Mlechaakraantha kalavanthe Kalki rupo bhavishyati

—is the traditional sloka/couplet.

கல்கி

KALKI AVATAR- MAN ON A WHITE HORSE; MLECHAS WILL BE DESTROYED

But nobody knows when the current Kaliyuga will come to an end. Mlechas are interpreted as anti- Hindu or Anti religious.

The foreigners who translated Manu Smrti (Hindu law Book) translated Mlechas as barbarians.

2000 year old Sangam Tamil literature used this word for Romans and Greeks. Tamil commentators are very clear about it.

In Mahabharata , Shalva was a Mlecha king who fought on the side of Kauravas. There was another Shalva who invaded Dwaraka when Krishna was away, but he was defeated by Krishna’s son.

The engineers who built the inflammable House of Lac to kill the Pandavas are described as Mlechas in Mahabharata. Duryodhana borrowed foreign (Greek) ideas to destroy Pandavas.

Anga was another Mlecha in Mahabharata who fought on the side of Kauravas.

Later Sanskrit literature used it for Muslim invaders and British rulers because they were killing cows and eating beef.

The greatest of the modern Tamil poets Subramanya Bharati used the term for Muslim invaders who destroyed Hindu temples.

Tamil Encyclopedia Abidhana Chinatamani gives two more meanings:

1.Arabians

  1. Descendants of Durvasu, Son of Yayati; they were described as Mlechas because they were characterless.

In short Mlechas are those people who are against Hindu Dharma.

நரசிம்மர்

NARASIMHA = MAN LION = DESTRUCTION OF THE WICKED

Foreigners concocted a story saying that Mlechas were the occupants of Indus Valley. But actually those Mlechas were worshippers of Molek. Israelites sacrificed their children to Moloch by burning (Bible- 1 Kings 11-7 and 2 Kings 23-10)

Please read my article:

MLECHA: Most Misunderstood Word (Posted on 3 September,2012)

Swami_48@yahoo.com

பிராமணன் மீது நஷ்ட ஈடு வழக்கு! ஒரு பழைய சுவையான கதை!

king

Article No.1734; Date:- 20th March, 2015

Written by London swaminathan

Uploaded at London time 9-04 am

மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி, பழி ஓரிடம் பாவம் வேறிடம்

 

பழி ஓரிடத்திலே பாரம் ஒரிடத்திலே என்றும், பாவம் ஓரிடத்திலே என்றும் ஒரு பழமொழி உண்டு. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி அல்லது சமம் என்று மற்றொரு பழமொழி உண்டு. முட்டாள் களிடையே மௌனமாக இருப்பதே மேல் என்றும், புத்திசாலிகள் மௌனம் கடைப்பிடிப்பர் என்றும் சம்ஸ்கிருதத்தில் பழமொழிகள் இருக்கின்றன. மௌனம் என்பது அறியாமையைக் காட்டும் என்று நேர் எதிர்மாறாகக் கூறும் பழமொழியும் சம்ஸ்கிருத நூல்களில் வருகிறது. இதை விளக்க ஒரு சுவையான கதை இருக்கிறது.

மோக்ஷ சாதன ரஹஸ்யம் என்னும் நூலில் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவம் சொல்லும் கதையை என் சொற்களில் கூறுகிறேன்:-

ஒரு ஊரில் திருடன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு பணக்கார பிராமணன் வீட்டில் திருடுவதாற்காக இரவு நேரத்தில் சென்று சுவற்றில் கன்னம் வைத்தான் (ஓட்டை போடுதல்). அந்தச் சுவர் ஈரமான சுவர். உடனே இடிந்து விழுந்தது. மூச்சுவிட முடியாமல் திருடன் செத்தான்.

திருடர்களின் நண்பர்கள் நஷ்ட ஈடு கோரி பிராமணன் மீது வழக்குத் தொடுத்தனர். அவர், அது தனது குற்றம் இல்லை என்று சொல்லி வழக்கை மன்னன் முன்னிலையில் வைத்தார்.

மன்னன்: ஓய், பிராமணரே! ஏன் இடியும் அளவுக்கு ஈரத்துடன் சுவரைக் கட்டினீர்?

மன்னா! அதை நான் அறியேன். பெரிய கொத்தனார்தான் அதைக் கட்டினார். அவரைக் கேளுங்கள்.

brahmin

யார் அங்கே? பெரிய கொத்தனாரை இழுத்து வாருங்கள்.

ஓய் கொத்தனாரே! சுவற்றை இவ்வளவு ஈரத்துடன் கட்டியதால் திருடன் இறந்துவிட்டான். நீர்தான் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்.

மன்னா! நான் என்ன செய்வேன்? வேலையாள் கலந்துகொடுத்த சிமெண்டை (காரையை) அப்படியே பூசினேன். ஈரக் கலவை பற்றி அவனைத் தான் கேட்க வேண்டும்

யார் அங்கே? சித்தாளை இழுத்து வாருங்கள்.

ஏய், ஏன் ஈரக் கலவையான காரையை அளித்தாய்?

மன்னர் மன்னா? வழக்கத்தைவிட பெரிய பானையை அன்று என் கையில் கொடுத்தான் குயவன். அதில் கொஞ்சம் தாண்ணீர் கூடுதலாகப் போய்விட்டது. நான் குயவனை நம்பியிருந்தேன்.

bricklayer_1

யார் அங்கே? குயவனை இழுத்து வாருங்கள்.

குயவரே! என்ன காரியம் செய்தாய்? வழக்கத்தைவிட பெரிய பானையைக் கொடுத்ததால் ஒரு மரணம் சம்பவித்துவிட்டது. நீயே நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்.

மன்னர், மன்னா! உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அன்று நம்மூர் விபசாரி, பேரழகி பகல் நேரத்தில் மேனியை மினுக்கி குலுக்கி, நடந்து சென்றாள் —- அவள் அழகில் மயங்கி நின்றபோது இந்தத் தவறு நிகழ்ந்துவிட்டது. அவளை அழைத்து விசாரியுங்கள்.

யார் அங்கே? அந்தப் பேரழகியை இழுத்து வாருங்கள்.

மன்னா! எனது தொழில் தர்மப்படி நான் இரவு நேரத்தில்தான் வெளியே வருவேன். மேலும் எனது வாடிக்கையாளர்களின் நலன் கருத்தி துவைத்த, தூய ஆடைகளை அணிவதே வழக்கம். அன்று வண்ணான்,என் வீட்டுக்குத் துணிகளைக் கொண்டு வராததால் அவன் வீட்டுக்குப் பகலில் நடந்து போனேன். வண்ணான் ஏன் தாமதித்தான்? தயவுசெய்து அதை விசாரியுங்கள்.

potter

யார் அங்கே? அந்த வண்ணானை இழுத்து வாருங்கள்.

மன்னவனே! எனது தொழிலில் மிகவும் முக்கியமான கொள்கை காலத்தில் துணிகளைக் கொடுப்பது. நான் வழக்கம் போல காலையில் சலவைத் துறைக்குச் சென்றேன். அன்று ஒரு சந்யாசி ஆற்றங்கரையில் என் கல்லில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவரைத் தடுக்க மனமில்லாமல் காத்திருந்தேன். அதனால் தாமதம் ஏற்பட்டது. அது என் பிழையன்று. அந்த சந்யாசி ஏன் என் படித்துறைக்கு அன்று வந்தார்?

யார் அங்கே? அந்த சந்யாசியை அழைத்து வாருங்கள்.

முனிவரே! ஏன் இப்படி வண்ணான் துறைக்கு வந்து துணி துவைத்தீர்?

அந்த முனிவர் அன்று மவுன விரதத்தில் இருந்ததால் எந்த பதிலும் சொல்லவில்லை. எத்தனை முறை கேட்டாலும் அவர் மவுனம் சாதித்தார்.

CIS:4660:1/(IS)

மன்னன்:– அமைச்சரே! இதற்கு என்ன பொருள்?

மன்னர் மன்னா! “மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி”. ஒருவர் தக்க விளக்கம் கூற முடியாதபோது அவர் அதை ஒப்புக்கொண்டதாகவே கொள்ளல் வேண்டும் என்று நமது  நீதி நூல்கள் பகர்கின்றன என்றார் அமைச்சர்.

அப்படியா? இந்த சந்யாசி நஷ்ட ஈடு கொடுக்கும் வரை இவரை சிறையில் அடையுங்கள் என்று மன்னன் உத்தரவிட்டான்.

பழி ஓர் இடம், பாவம் அல்லது பாரம் ஓர் இடம்.

washing clothes

மஹாபாரதத்தில் மாண்டவ்ய முனிவர் கதையிலும் இதையே காண்கிறோம். மிகச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். அரண்மனையில் கொள்ளையடித்த நகைகளுடன் திருடர்கள், அந்த ரிஷியின் வீட்டில் ஒளிந்து கொண்டனர். அப்போது ரிஷி, மௌன விரதம் அனுஷ்டித்து இருந்தார். ராஜாவின் சேவகர்கள், அந்த வீட்டில் தேடிப் பார்த்ததில் திருடர்களும் அரண்மனைச் செல்வங்களும் கிடைத்தன. மாண்டவ்யர்தான் அவர்களை ஒளித்து வைத்துவிட்டு, சும்மா மௌனம் இருப்பதாக பாசாங்கு செய்தார் என்று எண்ணி திருடர்களுடன் அவரையும் ராஜாவின் முன்னிலையில் நிறுத்தினர். எல்லோரையும் கழுவேற்றிக் கொல்ல மன்னன் உத்தரவிட்டான். கழுவில் அவர் மட்டும் உயிரோடு நின்றதால் அரசன் தன் தவற்றை உணர்ந்து அவரை விடுதலை செய்தான். மௌனம், ஆபத்தில் முடிந்த கதை இது!