“கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்” – கம்பன்

RAMAYANA-BALLET-WEB-BANNER2

இந்தோநேஷிய ராமாயண நாடகம்

கட்டுரை எண்: 1733 தேதி:- 20 மார்ச் 2015

லண்டன் நேரம்:– காலை 5-13

 

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 13

எழுதியவர்: — ச.நாகராஜன்

ராமன் கதை கேளுங்கள் !

 

சீதையின் திருமணம்

 

ராமன் சீதையை மிதிலையில் கண்டு சிவதனுசை ஒடித்து திருமணம் புரிந்து கொள்வதைக் கதையாகக் கேட்பதென்றால் அனைவருக்குமே காலம் காலமாக ஒரே மகிழ்ச்சி தான்!

கம்பன் சீதையின் முழு அழகை வர்ணிக்க முடியாமல் திணறுகிறான். ஏன், சீதையின் முத்துமாலை அணிவதைக் கூடத் தன்னால் திறம்பட வர்ணிக்க முடியவில்லை என்று அவனே கூறுகிறான் இப்படி:-

கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ?

வாள் நிலா வயங்கு செவ்வி வளர்பிறை வகிர்ந்தது என்கோ?

நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலாத் தவழ்ந்தது என்கோ?

பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை, யான் புகல்வது என்கோ?”

கோலங்காண் படலம் பாடல் 8

முத்துமாலை நட்சத்திரங்கள் கோர்த்த ஒன்றா! நகையில் நிலாத் தவழலா! மார்பில் தவழும் முத்து மாலையை என்ன சொல்லிப் புகல்வேன் நான்?”, என்கிறான் அவன்.

இராமன் வில்லை எடுத்து முறித்ததை அவன் சொல்லும் பாணி உலக இலக்கியத்தில் மிக்க ஏற்றம் பெற்ற தனி பாணி! (Unique style)

கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்

 

கார்முகப்படலம் பாடல் 34

அவ்வளவு தான்! சிவ தனுசை எடுத்தது கண்டனர்; பிறகு இற்றது கேட்டனர்!!

இதே இப்படி என்றால் திருமணத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்கிறான் கம்பன்! அப்படித் தனக்குத் திறமை இல்லை என்று சொல்லி அவன் வர்ணிக்கும் விதத்தைப் பார்த்தால் நமக்குத் தான் ரசிப்பதில் ரசனைத் திறமை இல்லை என்று நினைக்கத் தோன்றும்!!!

im159.guimet-D

கம்போடிய ராமாயண சிற்பங்கள், கெய்மே மியூசியம், பாரீஸ்

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு பாடலைப் பார்ப்போம்:-

ஆர்த்தன பேரிகள், ஆர்த்தன சங்கம்

ஆர்த்தன நால்மறை, ஆர்த்தனர் வானோர்

ஆர்த்தன பல்கலை, ஆர்த்தன பல்லாண்டு

ஆர்த்தன வண்டினம், ஆர்த்தன அண்டம்

கடிமணப் படலம் பாடல் 94

இப்படி ஒரு சில பாடல்களே மனதை மயக்குகிறது என்றால் முழு ராமாயணத்தையும் கேட்டால் நாம் சிறகடித்துப் பறக்க மாட்டோம்!

இராமாயணச் சாவடிகள்

காலம் காலமாக ராமாயணம் ஆங்காங்கே நகரங்களிலும் கிராமங்களிலும் ப்ரவசனகர்த்தாக்களால் சொல்லப்பட்டு வந்து கொண்டே இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள், நூல்கள், சுவடிகள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. பல சாவடிகள் இதற்கெனவே ஏற்படுத்தப்பட்டிருந்தன.

எடுத்துக்காட்டாக மதுரையில் வடக்குமாசிவீதியில் இராமாயணச் சாவடி என்ற  ஒரு மண்டபத்தை இன்றும் காணலாம். இது போல நாடெங்கும் ஆயிரக்கணக்கில் மண்டபங்கள் உள்ளன.

இது தவிர கோவில்களில் உள்ள மண்டபங்களிலும், ஆற்றங்கரை மேடைகளிலும், இப்படி ராமன் கதை கேட்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.

சிப்பிக்குள் முத்து

இதைக் காட்சி அமைப்பாகக் கொண்ட ஒரு திரைப்படம் சிப்பிக்குள் முத்து. (தெலுங்கில் ஸ்வாதி முத்யம்). ஆடிஸத்தால் சற்று மனநலம் குன்றிய கமலஹாசன், அன்றைய கதாநாயகி ராதிகா ஆகியோர் நடித்து, தெலுங்கிலும் தமிழிலும் பெரும் வெற்றியைக் கொண்ட இந்தப் படம் வெளியான ஆண்டு 1986. படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனரான கே.விஸ்வநாத்.

பாடலை இயற்றியவர் வைரமுத்து. பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

அழகிய ஆற்றங்கரை ஓரம் அமைந்த மேடையில் கதாகாலக்ஷேபமாக ராமன் கதை பாடப்படுகிறது.

தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு வரும் ராம ஸ்தோத்திர வரிகளில் ஒன்றான “ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய நமஹ” என்பதும் பாடலில் இடம் பெறுகிறது.

ராமனும், ராமபத்ரனும், ராமசந்திரனும் ஆகிய ராமனுக்கு நமஸ்காரம் என்ற பொருள் உடைய இந்த ஸ்லோகத்தின் பகுதி மந்திரமாகக் கருதப்படும் ஒன்று.

0603 (1)

கர்நாடாக மாநிலம், ராமாயண சிற்பங்கள்

ராமன் கதை கேளுங்கள்

கமலஹாசன் செருப்பைக் கையில் ஏந்தி வந்து கூட்டத்தில் ஒருவராக அமர்வதையும், இளம் விதவையான ராதிகா தன் குழந்தையுடன் அங்கு இருப்பதையும் சுவாரசியமாக பாகவதர் கதை கூற பக்க வாத்தியங்கள் முழங்க கிராம மக்களுக்கு ஏற்ப எளிய தமிழில் ராமாயணம் இசையுடன் வழங்கப்படுவதையும் காட்சி சித்தரிக்கிறது. நீண்ட கதையாக சொல்லப்படுவதால் பாடல் 6 நிமிடம் 31 வினாடிகள் நீடிக்கிறது!

பாடலைப் பார்ப்போம்:-

ராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீ ரகுராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை

அவள் விழிகண்டு, குடிகொண்டு மணமாலை தந்த (ராமன் கதை கேளுங்கள்)

சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே,

ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை,

வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க

ஶ்ரீ ராமசந்திர மூர்த்தி.. கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதாதேவியின் செல்லத்தோழிகள்

ராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீ ரகுராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்

யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார் (புலிகளின்)

தோளில் மலையைத் தூக்கிய வீரர் வந்தார்

இடிகளைக் கையில் பிடிப்பவர் பலர் இருந்தார்

ஆஹா!

நடந்தாள் .. சீதை நடந்தாள்

விழி மலர்ந்தாள் .. சபை அளந்தாள்

வரவு கண்டு, அவள் அழகு கண்டு

சிவ தனுசின் நாணும் வீணை போல அதிர்ந்தது! (ராமன் கதை)

வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல்லது

உடைபட விழுந்தார் – சிலர் எழுந்தார்

தொடை தட்டி எழுந்தவர்கள் முட்டி தெறித்துவிட,

சட்டென்று பூமியில் விழுந்தார்

காலும் நோக இரு கையும் நோக தம் தோளது நோகவே அழுதார்

சிலர் இடுப்பைப் பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்

ஆஹா! வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா

ஆஹா! வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா (ஆஹா)

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய நமஹ

தசரத ராமன் தான் தாவி வந்தான்

வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்

சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்

மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்

படபட படபட படபட படபட

ஒலியுடன் முறிந்தது சிவ தனுசு!

அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு!!

ஜெயஜெய ராமா சீதையின் ராமா

ஜெயஜெய ராமா சீதையின் ராமா

தசரத ராமா ஜனகன் உன் மாமா

தசரத ராமா ஜனகன் உன் மாமா

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

காணக் காண அழகாகுமே

இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே (காண)

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

ஶ்ரீராமனே அதோ பாரப்பா.. ..

அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை

அவள் விழிகண்டு, குடிகொண்டு மணமாலை தந்த (

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீரகுராமன் கதை கேளுங்கள்!

தசரத ராமா! ஜனகன் உன் மாமா!!

“வேந்தர் தம் பல்லது உடைபட விழுந்தார்”, “தசரத ராமா, ஜனகன் உன் மாமா”, போன்ற சொற்றொடர்கள் கிராமத்தினரை மனம் மகிழ வைக்கும், இல்லையா! இளையராஜாவின் இசைத்திறனை கம்பனின் பாணியில் ‘வர்ணிக்க வார்த்தைகள் இல்லை’ என்று சொல்லி விட வேண்டியது தான்!

ராமாயணத்தை, அதிலும் சீதா திருமணத்தைப் படம் தந்தது என்ற மகிழ்ச்சியில் அதைப் பாராட்டலாம் இல்லையா, நிச்சயமாக!

*******

Silence is NOT Golden!

king

Written by London swaminathan

Article No 1732; Date 19th March 2015

Uploaded at 10-19 am London Time (GMT)

Silence is golden is a proverbial saying in English. The origin of this phrase is in Sanskrit literature. But we see contradictory statements in the literature as well. ‘Silence amounts to consent’ is another saying in Sanskrit. There are a few interesting anecdotes in our literature about silence.

No answer itself is the answer – says ‘Ratnasamuccaya’

The wise should observe silence –  says ‘Subhasitaratna bhandakara’

All is achieved through silence – is found in ‘Pancatantra’

Silence is the ornament for the ignorant – says ‘Niticataka’-6

If telling the truth causes anguish, better be silent – is the saying in ‘Vishnu Purana’ 3-12-3

(Source: ‘Suktisudha’, Chinmaya International Foundation)

brahmin

Compensation case against an innocent Brahmin!

Freedom Fighter Subrahmanya sivam narrates a story in Tamil in his book ‘Moksha Sadhana rahasyam’ and a rough translation goes like this:

A thief made a hole in the wall of a wealthy Brahmin’s house to steal away his money. Unfortunately the wall was very wet and fell on him. He died on the spot. His relatives sued the Brahmin for compensation. He took the case to the king saying that it was unfair to ask money from him for a dead thief.

But the king wanted to find out the cause. He asked him, “why did you leave the wall so wet that it fell at the touch of a person?”

bricklayer_1

O King! I don’t know the reason. Better ask the builder. It is a new wall built just a day ago.

The builder was summoned immediately.

Why did you do a shabby work? You have to pay the compensation to the family of the thief, said the king.

The builder said, O King! I don’t know the reason. Probably the worker mixed the cement with much water.

Immediately the building worker was summoned.

Why did you pour more water? The thief died because of you. You have to pay the compensation  – said the king

Building worker said, O King! I don’t know the reason. The pot was unusually big. Better ask the potter about it.

Immediately the potter was summoned.

Why did you give him a bigger pot on that day? Look at what you have done. Pay the compensation to the family

potter

He said, O King! It is true I made the pot bigger on a particular day. But that was because of a beautiful prostitute walked past me in broad day light. And I was looking at her beauty. It was unusual for her to walk in our street at that time of the day. So she has to pay the compensation.

Immediately the prostitute was summoned to the court.

She said, O King! It was not my fault. I never walk in the streets during day time. On that day the washer man did not deliver the clothes. I always present myself to the clients with clean clothes. So I had to go to washer man’s house to collect my clothes. You have to ask the washer man for the delay.

Immediately the washer man was summoned.

CIS:4660:1/(IS)

Washer man said, O King! It was not my fault. As usual I went to the banks of the river in the early in the morning. An ascetic was washing his clothes in my place. So I did not want to disturb him. I could not finish my work at the usual time. Please ask the saint why he came to my place on the day.

Immediately the ascetic was summoned.

He was observing silence on that day. He did not bother to answer the questions of the king.

Then the ministers quoted the saying, Silence means Yes. So they unanimously decided that the ascetic was the culprit. The ascetic was detained!!

washing clothes

Silence trapped one more saint in another case in the Mahabharata. When thieves were hiding in Sage Ani Mandavya’s house, he was observing silence. When royal servants found the thieves in his house with the stolen property, he was also dragged to the court and he was sentenced to death. He was impaled with other thieves, but he survived the impalement due to his penance and was released later.

Is silence golden? You decide!

கூப்பிடு தூரத்தில் இறைவன்!

disrobing-of-Draupadi-

Written by London swaminathan

Article No 1731; Date 19th March 2015

Uploaded at 9-48 am London Time (GMT)

கதை சொன்னவர் சுப்ரமண்ய சிவா; புத்தகத்தின் பெயர்: மோக்ஷ சாதன ரஹஸ்யம்; வெளியிட்ட ஆண்டு 1925

(சொற்கள் என்னுடையவை)

தஞ்சாவூரில் பெரியதாசர் என்று ஒரு சிறந்த பக்தர் இருந்தார். அவர் சதா சர்வ காலமும் இறை வழிபாட்டிலேயே நேரத்தைச் செலவிட்டு வந்தார். அவருடைய பெருமை அரசன் காதுகளையும் எட்டின. ஒரு நாள் அரசனே நேரே வந்தான். கொஞ்சம் பேச்சுக் கொடுத்துவிட்டு, கடவுள் எங்கே இருக்கிறார்? என்றார்.

உடனே பெரியதாசர் கொஞ்சமும் தயங்காமல் கடவுள் “கூப்பிடு தூரத்தில் இருக்கிறார்” என்றார். பெரிய தத்துவார்த்த பதிலை எதிர்பார்த்த அரசனுக்கு இப்படி அவர் பதில் கூறியது என்னவோ போல இருந்தது. தன்னை பெரியதாசர் கிண்டல் செய்கிறாரோ என்று தோன்றியது.

அப்படியா? இதோ என் சேவகர்களை அனுப்பி கூப்பிடு தூரத்தில் தேடிப் பார்க்கிறேன் என்றார்.

(ஒருவர் கூப்பிடும் குரல் எவ்வளவு தூரம் வரை கேட்கிறதோ அதைக் கூப்பிடு தூரம் என்று தமிழில் செப்புவர். ஆங்கிலத்தில் இதை Hailing Distance ஹெய்லிங் டிஸ்டன்ஸ் என்பர்)

சப்தம் போட்டுக் கூப்பிட்டுவிட்டு அவ்வளவு தூரம் வரை சேவகர்களை அனுப்பிப் பார்த்ததில் கடவுளின் சுவடே தெரிய இல்லை.

PONRHanumanSacredHeart400

பெரியதாசரிடம் அரசன் சொன்னார்: “அரசனிடம் பொய் சொல்லுவது பெரிய குற்றம். அது உங்களுக்குத் தெரியும். உண்மையைச் சொல்லுங்கள் கடவுள் எங்கே இருக்கிறார்?”

நான்  தான் முன்னமே சொன்னேனே! கடவுள் கூப்பிடு தூரத்தில் இருக்கிறார் என்று.

நான் தேடிப் பார்த்தேன் கடவுள் கூப்பிடு தூரத்தில் இல்லையே- என்றான் அரசன்.

பெரியதாசர் சொன்னார்: மன்னவனே; திரவுபதி கதை உனக்குத் தெரியாதா? அவளைத் துச்சாதனன் சபைக்கு இழுத்து வந்து அவளது புடவையை உருவினான். ஒரு பெண்ணுக்கு உலகில் இதைவிடப் பெரிய கொடுமை ஏதும் இல்லை. உயிரே போனாலும் பரவாயில்லை; மானம் போகக் கூடாது என்று பெண்கள் நினைப்பர். அவள் தனது இரு கைகளாலும் புடவையைப் பிடித்துக் கொண்டு, “அடே கண்ணா, துவாரகாபுரீவாசா, என்னைக் காப்பாற்று” – என்று கதறினாள்.

துவாரகாபுரீவாசன், நாமோ ரொம்ப தூரத்தில் உள்ளோம். அவளோ தன் புடவையைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறாள் என்று எண்ணிப் பேசாமல் இருந்துவிட்டார்.

நேரம் ஆக, ஆக திரவுபதிக்குத் தெரிந்துவிட்டது. இனி மனித முயற்சியில் ஒன்றும் நடவாது என்று உணர்ந்து, இரு கைகளையும் உயரே உயர்த்தி, “அடே ஹ்ருதய கமலவாசா! உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்”– என்று கதறினாள். அடுத்த நொடியில் உலக மஹா அற்புதம் நிகழ்ந்தது. துச்சாதனன் உருவிட, உருவிட புடவை வளர்ந்தது. அவன் மயக்கம்போட்டு வீழ்ந்தான். எப்படி?

துவாரகாபுரீ வாசா என்று அவனைத் தொலைவில் வைத்து, தன்னுடைய  இரு கைகள் மீது நம்பிக்கை வைத்த வரை கிருஷ்ணன் தனது ஆசனத்தை விட்டு அகலவில்லை.

இருதய கமல (இதய தாமரை) வாசா என்று “கூப்பிடு தூரத்துக்குள்” வைத்து அழைத்தவுடன், வெளியே குதித்த கண்ணன், அவளைக் காப்பாற்றினான். கூப்பிடு தூரம் என்பது அவரவர்கள் இறைவனைப் பக்கத்தில் வைத்திருக்கிறார்களா, இல்லையா என்பதைக் காட்டும் சொல் என்றார்.

ramais in heart

அரசனுக்கு இந்தப் பதில் நல்ல திருப்தியைத் தந்தது. பெரியதாசரின் பெருமையை உணர்ந்து அவரது காலடியில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்றான்!

அன்பர்களே, இந்தக் கதை புகட்டும் நீதி என்ன?

உள்ளத்தில் கடவுளை வையுங்கள்; அவன் மீது முழுநம்பிக்கை வையுங்கள். முழு நம்பிக்கையோடு கூப்பிட்டால் உடனே வருவான், அருள்வான்.

இருதய கமல வாசன் வாழ்க! இருதயங்கள் வெல்க!!

செம்மறி ஆட்டுக் கூட்டம்!

aattu mandhai

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

 Article No 1730; Date 19th March 2015

Written by S Nagarajan

லண்டன் நேரம் காலை 4-55 am

 

24. செம்மறி ஆட்டுக் கூட்டம்!

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

अपराह्नच्छायान्यायः

aparahnacchaya nyayah

அபராஹனச்சாயா நியாயம்

சாயாநிழல்

மாலை நேர நிழல் பற்றிய நியாயம் இது

ஒருவனின் வாழ்க்கையில் வளம் குன்றிக் கொண்டே போகிறது. அல்லது பாசத்தின் அடிப்படையிலான நெருக்கம் தேய்பிறை போலக் குறைந்து கொண்டே வருகிறது. அப்போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும். மங்கும் செல்வம் அல்லது குறையும் உறவின் நெருக்கம் ஆகியவை மாலை நேர நிழலுக்கு ஒப்பிடப் படுகிறது. இருள் சூழும் போது நிழலும் இருக்காது. அது போல இன்னும் சிறிது காலத்தில் இப்போது இருப்பதும் போய் விடும்.

shadow-on-the-farm

इषुवेगक्षयन्यायः

ishuvegaksaya nyayah

இஷுவேகக்ஷய நியாயம்

வில்லிலிருந்து விடுபட்ட அம்பு பற்றிய நியாயம் இது.

வில்லிலிருந்து ஒரு அம்பு எய்யப்பட்டவுடன் அது இலக்கை நோக்கி வேகமாகச் செல்லும். அது தனது இலக்கைத் தாக்கும் வரை ஓயாது. அது போல ஒரு இலட்சியத்தைக் கொண்டுள்ள ஒரு மனிதன் தன் இலட்சியத்தை அடையும் வரை ஓயமாட்டான். தன் இலட்சியத்தை அடைந்தவுடன் எப்படி அம்பை எய்தவுடன் ஒருவன் வில்லைக் கீழே வைக்கிறானோ அதே போல அவனும் தன் கருவிகளைக் கீழே வைத்து விட்டு ஓய்வு எடுப்பான்.

கருமமே கண்ணான ஒருவன் பற்றிய செய்யுளை ஏற்கனவே பார்த்துள்ளோம்:-

குமரகுருபரர் இயற்றியுள்ள நீதிநெறி விளக்கம் நூலில் 52வது பாடலாக அமைந்துள்ளது இது.

மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார்                              எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி                             அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்                                       கருமமே கண்ணாயினார்

செவ்வி அருமை – காலத்தின் அருமை

aaddu

गड्डरिकाप्रवाहन्यायः

gaddarikapravaha nyayah

கட்டரிகா ப்ரவாஹ நியாயம்

தொடர்ந்த ப்ரவாஹத்தைக் குறிக்கும் நியாயம் இது.

நாம் அனைவரும் அறிந்த செம்மறியாட்டுக் கூட்டம் பற்றிய நியாயம் இது. ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டத்தில் ஒரு ஆடு கிணறில் தவறி வீழ்ந்து விட்டால், அனைத்து ஆடுகளும் கிணற்றில் விழும்.

ஒரு செயல் சரியா, தவறா என்பதையெல்லாம் பாராது, குருட்டுத்தனமாக ஒருவன் செய்யும் செயலையே அனைவரும் செய்ய ஆரம்பித்தால் செம்மறி ஆட்டுக் கூட்டம் போல என்ற இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும். சாய்ஞ்சா சாயற பக்கமே சாயற செம்மறி ஆடுகளா என்று திரைப்படப் பாடல் ஒன்று கூட இதைச் சுட்டிக் காட்டுவதை நோக்கலாம்.

எறும்பு

घुणाक्षरन्यायः

ghunaksara nyayah

குணாக்ஷர நியாயம்

பூச்சி ஒன்று மரத்தில் எழுத்தைப் பொறித்தது பற்றிய நியாயம் இது. மரத்தில் பூச்சி ஊர்ந்து ஏற்படுத்தியவை எழுத்துக்கள் போல தற்செயலாக அமைந்திருப்பதைப் பார்த்து விட்டு வியக்கிறோம். பழைய புத்தகத்தைப் பிரித்துப் பார்க்கும் போது உள்ளே பூச்சி அரித்ததால் ஏற்பட்ட அரிப்பு எழுத்துப் போல இருப்பதைப் பார்த்து வியக்கிறோம்.

தற்செயலாக அல்லது அதிர்ஷ்டவசமாக ஏற்படுவனவற்றைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படும்.

oil pan

तदागमे हि तद दृश्यते

tadagame hi tad drisyate

ததாகமே ஹி தத் த்ரிஷ்யதே நியாயம்

ஒரு அரிய குணம் இயல்பாக வராமல் வேறு இடத்திலிருந்து அடையப்பட்டிருப்பதை இந்த நியாயம் சுட்டிக் காட்டும்.

தீ மூட்டப்பட்டு அதனால் ஏற்படும் வெப்பத்தின் காரணமாகவே எண்ணெய் கொதிக்கிறது. ஆகவே வெப்பம் என்பது எண்ணெயினால் ஏற்பட்ட ஒன்றில்லை; அது தீயினால் ஏற்பட்ட ஒன்று. இன்னொருவன் மூலம் அடையப்பட்ட குணத்தை அல்லது சக்தியை அல்லது ஒரு பேறை ஒருவனுக்குரியதாக எண்ணி விடக் கூடாது அடுத்தவனிடம் கடன் வாங்கிப் பெற்று மகுடம் சூடிக் கொள்வதை இந்த நியாயம் எடுத்துக் காட்டுகிறது.

*************

மன்னர் – முனிவர் இடையே சுவையான உரையாடல்!

guru_disciple-336x352

Article No 1729; Date 18th March 2015

Written by London swaminathan

லண்டன் நேரம் காலை 8-15

வைசம்பாயனர் – ஜனமேஜயன் உரையாடல்

ஆதாரம் – சுதந்திராநந்தர் சுப்ரமண்ய சிவா எழுதிய மோக்ஷ சாதன ரஹஸ்யம் – ஆண்டு 1925, புத்தக இருப்பிடம்- பிரிட்டிஷ் லைப்ரரி.

முனிவர் வைசம்பாயனர்:

மன்னர் மன்னவா! உனக்கு மஹாபாரதம் என்னும் மகத்தான இதிஹாசத்தை அறிமுகப்படுத்த ஆவல். தங்கள் சௌகரியம் எப்படியோ?

மன்னன் ஜனமேஜயன்:

முற்றும் துறந்த முனிவரே! உம்மைப் போன்ற அவகாசம் எமக்கில்லையே. இறைவன் இன்னும் இரண்டு கைகள் கொடுத்து, ஒரு நாளைக்கு 48 மணி நேரம் என்றால் கூட எனக்கு நேரம் போராதே! எனக்கு தலைக்கு மேலே பல வேலைகள் உள்ளன.

முனிவர் வைசம்பாயனர்:

மன்னா! கவலை வேண்டாம். மஹா பாரதத்தில் உள்ள 18 பர்வங்களையும் சொல்லாமல் ஒரே ஒரு பர்வம் மட்டும் சொல்கிறேன்.

மன்னன் ஜனமேஜயன்:

வேண்டவே வேண்டாம்; ஒரு நிமிட அவகாசம் கூட எனக்கில்லை.

முனிவர் வைசம்பாயனர்:

(பொறுமைக்கு இலக்கணமானவர் வைசம்பாயனர்; ஆகையால் விடவில்லை) – அதனால் என்ன மன்னா? ஒரு அத்தியாயம் மட்டும் சொல்கிறேனே!

மன்னன் ஜனமேஜயன்:

முனிவரே, உமக்கு அரசாட்சி என்றால் என்ன என்றே புரியவில்லை, பாரும்! இன்னும் எத்தனை முறை சொல்ல வேண்டும்? எனக்கு நேரமில்லை, எனக்கு நேரமில்லை, எனக்கு நேரமில்லை. இல்லவே இல்லை!

guru-shishya (1)

முனிவர் வைசம்பாயனர்:

புரிகிறது, புரிகிறது, நன்றாகவே புரிகிறது. மாபாரதத்தில் மொத்தம் ஒரு லட்சம் ஸ்லோகங்கள் இருக்கின்றன. ஒரே ஒரு ஸ்லோகம் மட்டும் சொல்லுகிறேனே!

மன்னன் ஜனமேஜயன்:

சரி, சரி! ஒன்றே ஒன்று. நேரத்தை வீணடிக்காமல் சட்டென்று சொல்லும்.

முனிவர் வைசம்பாயனர்:

துரியோதனன் போய் பசுக்களை அபகரித்து வந்தான் (ஆநிரை மீட்டல்). பெரிய யுத்தம் நேரிட்டது. துரியோதணன் செத்தான். போய்ட்டு வரட்டுமா?

இவ்வாறு சொல்லிக் கொண்டே எழுந்தார்.

மன்னன் ஜனமேஜயன்:

சுவாமிகளே! நில்லுங்கள். துரியோதணன் மாபெரும் மன்னன். அவன் போய், பசுக்களை எதற்காகத் திருட வேண்டும்? புரியவில்லையே. கதையில் ஏதோ தப்பு இருக்கிறது.

முனிவர் வைசம்பாயனர்:

ஓ, அதுவா? அவன் ஏன் பசுக்களைக் கவர்ந்தான் என்றால் …………………………………

இப்படியாக விளக்கம் சொல்லவும், ஜனமேஜயன் மேலும் ஆர்வம்கொண்டு பல துணைக் கேள்விகளைக் கேட்டான். ஒவ்வொன்றுக்காக அவர் பதில் சொல்லச் சொல்ல முழு மஹாபாரதத் தையும் சொல்ல வேண்டிவந்தது.

ஒரு லட்சம் பாடல்களைக் கொண்ட—இரண்டு லட்சம் வரிகளைக் கொண்ட – பத்து லட்சம் சொற்களைக் கொண்ட — ஏராளமான உபகதைகளைக் கொண்ட – மஹாபாரதம் – காலத்தை வென்ற ஒரு காவியம். கேட்கக் கேட்க தெவிட்டாத இலக்கியம். உலகிலுள்ள எல்லாம் அதில் உள. அதில் உள்ள எல்லாவற்றையும் உலகில் ஒரே இடத்தில் காண்பது அரிது.

வாழ்க மஹா பாரதம்! வளர்க சொற்பொழிவாளர்கள்!!

What is the Distance between You and God?

ramais in heart

Article No 1728; Date 18th March 2015

Written by London swaminathan

What is the distance between God and ourselves? There is an interesting story told by Subrahmanya Sivam, famous freedom fighter of Tamil Nadu. I give below a rough translation of his story narrated in his Tamil book Moksha Sadhana Rahasyam.

There was a saintly person in Thanjavur by name Periya Dasar (meaning Great Slave to God).He was very pious and doing all religious rituals 24 hours a day. His name and fame spread far and wide. Local king also wanted to meet him.

One day the king came and met Periyadasar. During the conversation he asked where God was. Immediately Periyadasar replied that God was at “Calling (hailing) Distance”. This phrase calling (hailing) distance is used by Tamils frequently, particularly in village side. The meaning of the phrase is a place or a person is at the distance where your shout or call or cry can be heard. The king was not happy at his reply and thought that the saint was insulting him.

disrobing-of-Draupadi-

Immediately he sent his servants and retinue to find God at “hailing distance”. They came back without finding God. The king warned Periyadasar that insulting a king amounts to treason and may invite harsh punishment. But Periyadasar insisted that God was at a shouting distance. When the king asked for an explanation, Periyadasar explained to the king as follows:

O King! Haven’t you heard the story of Draupadi? She was dragged by Dushasadana to the assembly for disrobing her and she prayed for help from Krishna. First she shouted, “Oh DWARAKApureevasa, please come and help me”, holding her garments tight. Krishna did not bother to come and help her, because she addressed him as Resident of DWARAKA which was far away from Hastinapura. Moreover she was trying to help herself by holding her saree. When she realised that that she was utterly helpless, she cried, “O, HRUDAYA Kamala Vasa (resident of my Lotus shaped heart), please help me”, lifting both her hands over her head. Krishna came to her help the next minute. Krishna supplied her garments endlessly and Dushasana fell down out of exhaustion.

PONRHanumanSacredHeart400

It is up to you to place God at the distance of Dwaraka or just at a hailing distance (inside your heart). King was very happy at his explanation. He thanked him immensely for enlightening him.

Let us keep God in our hearts!

swami_48@yahoo.com

காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை!

crow

Article no.  1727; Date- 18th March 2015

Written by S Nagarajan

London Time- 5-10 am

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

23. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை!

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

काकतालीयन्यायः

kakataliya Nyayah

காக தாலீய நியாயம்

காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்தது போல என்ற நியாயம் அனைவரும் அறிந்த பிரசித்தி பெற்ற ஒரு நியாயம்.

காக்கை ஒன்று பனைமரக் கிளை ஒன்றில் உட்கார, அதே கணம் அதன் தலையில் பனம் பழம் ஒன்று விழுந்து அதைக் கொல்லப் பார்த்த சம்பவத்திலிருந்து இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது. யதேச்சையாக நடந்த ஒரு சம்பவத்தை சுட்டிக் காட்டுகிறது இது.

காசிகாவிருத்தியில் பாணிணி பற்றிச் சொல்லும்போது இது எடுத்துக்காட்டப்படுவதாக டாக்டர் எக்கிலிங் (Dr Eggeling) சுட்டிக்காட்டுவதாக கர்னல் ஜி.ஏ.ஜாகோப் (Colonel G.A.Jacob – A Handful of Popular Maxmims- Current in Sanskrit Literature – Volume 1 page 17) எடுத்துக் காட்டுகிறார்.

நீலகண்ட கோவிந்தர் மஹாபாரதம் சாந்திபர்வத்தில் தனது விளக்கவுரையில் இந்த நியாயத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.

அவர் கூறுவது: காக்கை உட்காருவதும் பனம் பழம் விழுவதும் இரண்டு தனித் தனிச் செயல்கள். யதேச்சையாக ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் நடந்தவை. ஆனால் காக்கை உட்கார்ந்ததால் தான் பனம் பழம் விழுந்ததாக எடுத்துக் கொள்வது போல இந்த நிகழ்வு அமைகிறது.

இந்தத் தொகுப்புகளை கர்னல் ஜாகோப் தொகுத்துக் காட்டுகிறார்.

வழிபாடு

गोमयपायसीयन्यायः

gomayapayasiya nyayah

கோமயபாயசீய நியாயம்

கோமயமும் (பசுஞ்சாணி) பால் பாயசமும் பற்றிய நியாயம் இது.

முட்டாள் ஒருவன் சாணி, பசும்பாலினால் தான் ஆனது; ஏனெனில் அது பசுவிடமிருந்து தானே வருகிறது என்று வாதம் புரிந்தால் அவன் புத்தியை என்னவென்று சொல்வது? முட்டாள்தனமாக வாதம் புரிவதை –  விதண்டா வாதம் புரிவதைஇந்த நியாயம் எடுத்துக் காட்டுகிறது.

யோகசூத்திரத்தில் வியாசபாஷ்யத்தில் இந்த நியாயம் அழகுற எடுத்துக் காட்டப்படுகிறது.நியாயவார்திக தாத்பர்ய டீகாவிலும் இது எடுத்துக் காட்டப்படுகிறது.

புத்தரின் சர்வதர்சன சங்க்ரஹத்தில் இந்த நியாயம் பார்க்கப்படும் பொருள் மற்றும் பார்ப்பவன் பற்றி எடுத்துரைக்கும் போது சுட்டிக் காட்டப்படுகிறது.

இந்த விளக்கங்களை சம்ஸ்கிருத மேற்கோள்களுடன்  கர்னல் ஜி.ஏ.ஜாகோப் நூலில் படிக்கலாம். (Colonel G.A.Jacob – A Handful of Popular Maxmims- Current in Sanskrit Literature – Volume 1 page 25)

குறிப்பு: –

இத்துடன் இந்தத் தொடரில் இத்துடன் நூறு நியாயங்கள் விளக்கப்பட்டுள்ளன. நியாயம் பற்றி அதிகம் அறிந்து கொள்ளப் பலரும் விரும்புவர். ஆங்கில அறிவும் சம்ஸ்கிருத ஞானமும் கொண்டவர்கள் கர்னல் ஜி.ஏ,ஜாகோப் தொகுத்து எழுதியுள்ள A Handful of Popular Maxmims- Current in Sanskrit Literature நூலை இணையதளத்தில் படிக்கலாம்; இலவசமாக தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

vatsalyam

இனி, நூற்றியொன்றாவது நியாயம், தொடர்கிறது:-

कार्यनाशे कारणनाशः

karyanase karananasah

கார்யநாஷே காரண நாஷ நியாயம்

ஒரு காரணத்தினால் தான் ஒரு விளைவு ஏற்படுகிறது. விளைவைத் தடுக்க என்ன செய்வது? காரணத்தை அழித்து விட்டால் காரியம் அதாவது விளைவே ஏற்படாது. காரண நாசத்தினால் காரிய நாசம் ஏற்படும் இந்த நியாயம் பிரபலமான ஒன்று.

the-boiled-sugarcane-

गुडजिह्मिकान्यायः

gudajihmika nyayah

குடஜிஹ்மிகா நியாயம்

சர்க்கரைப் பாகும் வேம்பும் பற்றிய நியாயம் இது.

 

குழந்தையின் உடல் நலத்திற்காக வேப்பம்பழம் தர வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கசப்பான வேம்பை குழந்தை எப்படி சாப்பிடும்? அதைச் சாப்பிட வைக்க முதலில் இனிப்பான கருப்பஞ்சாறை முதலில் கொடுத்து கூடவே வேம்பையும் தருவது உலக வழக்கம்.

 

ஒரு காரியத்தை நிறைவேற்ற முயலும் போது அதில் இருக்கும் கஷ்டங்களை நினைத்து ஒருவன் மலைத்து நிற்கையில் அவனுக்கு சுலபமான சில வேலைகளை முதலில் கொடுத்து விட்டுப் பிறகு அந்த கஷ்டமான வேலையைக் கொடுத்தால் அதைச் செய்வதற்கான மனப் பக்குவமும் திறமையும் அவனுக்கு வந்து சேரும்.

 

இது போன்ற சந்தர்ப்பங்களில் இந்த வேம்பும் கருப்பஞ்சாறும் பற்றிய நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

**********

Sorry! No Time for Religious Stories!!

guru_disciple-336x352

Written by London swaminathan

Article no. 1726; dated 17 March 2015

Up loaded at 10-18 am London time

Sage Vaisampayana wanted to tell the full Maha Bharata story to king Janamejaya. He approached the king with great interest and enthusiasm. But the king rejected his proposal outright saying that he was too busy for such stuff. This did not dampen the enthusiasm of Vaisampayana.

“No problem there are 18 Parvas/Sections. I will just narrate to you only one Parva”.

Janamejya gave him a curt reply. “Sorry Vaismpayana. I have no time. I am very  busy”.

Vaisampayana was very persistent. He said to the king, “No Problem. I will just recite only one chapter”.

Janamejaya was very rude now, “how many times do I have to tell you I am very busy”.

guru-shishya (1)

Sage Vaisampayana was the embodiment of patience. He insisted, “No Problem. I will tell you just one couplet (sloka) from the one hundred thousand couplets”.

“OK, Ok. That is fine, just one Sloka. Hope that would not take much of my time. Please go ahead”, said the king.

Vaisampayana did not miss the opportunity. He began, “King Duryodana raided the Pandava territory and took the cows. That was the reason for the great war. At last Duryodhana died in the battle field. Finito!”

I am finished, God Bye, said Vaisampayana.

Hang on. Duryodhana was a great king. Why did he raid for cows? It does not sound correct, said Janamejaya.

Vaisampayana was very happy that he kindled his enthusiasm. Then he gave him the reason for the cattle raid.

Then Janamejaya asked some more sub questions on the same topic. Vaisampayana started narrating the full epic. Janamejaya listened to him with pin drop silence.

Mahabharata, the longest epic in the world with 100,000 couplets, 200,000 lines with approximately one million words, will captivate anyone! Any modern problem can be compared to one of the problems already narrated in the epic. And there is a solution to all the problems of the world too!

No Pain, No Gain!

(Source: Moksha Sadhana Rahasya by Subrahmanya Siva, Year 1925.)

மோட்சம் வேண்டாம் என்று சாமியார் ஓட்டம்!

brama2

Written by London swaminathan

Article no. 1725; dated 17 March 2015

Up loaded at 9-12 London time

சுதந்திராநந்தர் என்று தன்னை அடைப்புக்குறிக்குள் பெயர் போட்டுக் கொள்ளும் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீர்ர் சுபரமண்ய சிவா பல சுவையான கதைகளை அவரது நூலில் தருகிறார். இதோ மேலும் ஒரு கதை (கதையின் கரு அவருடையது. சொற்கள் என்னுடையவை. பிழை இருப்பின் பொறுத்தருள்க)

ஒரு ஊரில் ஒரு போலி சாமியார் இருந்தார். சரியான ஆஷாடபூதி- வேடதாரி. நெற்றியில் பட்டை—கழுத்தில் கொட்டை-தலையில் மொட்டை. அதாவது விபூதி,ருத்திராட்சம், பாத குறடு—சகிதம் துறவி போலக் காட்சி தந்தார்.

கோவிலில் அல்லும் பகலும் குடியிருந்து, இறைவா இன்னும் உன்னிடம் அழைத்துக் கொள்ள மாட்டேன் என்கிறாயே என்று கதறல். கோவிலில் எல்லோரும் போகும்வரை இப்படிப் புலம்பிவிட்டு நள்ளிரவில் வீட்டுக்குச் செல்வார்.

எதற்காக இப்படிச் செய்தார்? இந்த சந்யாசி வேடத்தால் அவருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு,  ராஜ உபசாரம். ஆனால் கோவில் அர்ச்சகர் இந்த சாமியாரிம் போலித்தனத்தை நன்கு அறிவார். ஆயினும் ஊரே புகழும் ஒருவரைக் குறை கூறினால் “ஐயருக்குப் பொறாமை” — என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்று பயந்தார்.

runner

திடீர் என்று ஒரு ‘ஐடியா’ வந்தது. திட்டம் தீட்டி செயலில் இறங்கினார். ஒரு நாள் கிட்டத்தட்ட நள்ளிரவு நேரம். எல்லோரும் போய்விட்டனர். அர்ச்சகர் ஒவ்வொரு விளக்காக அணைத்துவிட்டு சுவாமியிடம் மட்டும் விளக்கு இருக்கும்படி பார்த்துக் கொண்டார். மற்ற இடமெல்லாம் கும்மிருட்டு. போலி சாமியார் வழக்கம்போல தன் வசனத்தை ஒப்புவித்தார். “இறைவா, இன்னும் உன் கண்கள் திறக்கவில்லையா? என்று எனக்கு முக்தி கிட்டும்? என்னை உன்னிடம் அழைத்துக் கொள்ள மாட்டாயா?”

அர்ச்சகர் சிலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு திடீரெனக் குரல் கொடுத்தார்- “ பக்தா உன் பக்திக்கு மெச்சினோம். உமக்கு முக்தி கிட்டும் — இன்றே கிட்டும் — இப்பொழுதே கிட்டும் என்றார். போலி சாமியார் திடுக்கிட்டுப் போனார்.

அந்த நேரத்தில் சிலைக்கு இரு புறமும் இரு கைகள் நீண்டு, வா, வா! என் அருகே வா! இப்பொழுதே உன்னை மோட்ச லோகத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்றார். இதைக் கேட்டதுதான் தாமதம். போலி சாமியாருக்கு ஒரே உதறல். கோவிலில் இருந்து வெளியேறி, வீட்டை நோக்கி ஓடினார். அர்ச்சகரும் விடவில்லை. சுவாமியின் வஸ்திரங்களைத் (உடைகள்) தலையில் போட்டுக் கொண்டு போலி சாமியாரின் பின்னாலேயே ஓடினார். இப்பொழுதே மோட்சத்துக்கு அழைத்துச் செல்வேன், அஞ்சாதே என்று பெரிய குரல்!!

போலி சாமியார் தலை தெறிக்க ஓடி வீட்டுக் கதவை ‘தடால்’ என்று தட்ட அவன் மனைவி அதைப் ‘படால்’ என்று திறந்தார். இவர் ‘மடால்’ என்று உள்ளே விழுந்து சீக்கிரம் கதவைத் தாளிடு என்று கத்தினார். அவர் மனைவி யாரோ திருடன் துரத்தி வந்தான் என்று எண்ணி கதவைத் தாளிட்டார். எனக்கு மோட்சம் தருவதாக – இப்பொழுதே தருவதாகச் — சொல்லி கோவிலில் இருந்த கடவுள் தன்னை விரட்டிக் கொண்டு வந்ததாகவும் இனிமேல் அக்கோவிலின் பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்க மாட்டேன் என்றும் கொட்டித் தீர்த்தார். அவர் மனைவிக்கு, இவர் ஏதோ காய்ச்சலில் உளறுகிறார் என்று தோன்றியது.

இறைவன் நாளைக்கே மோட்சம் தருவதாகச் சொன்னால் பெரிய ஆன்மீகவாதிகள் கூட ‘வாய்தா’ கேட்பர். உடனே உலகை விட்டுப் பிரிய மனம் வாரா. அப்படி இருக்கையில் போலி சாமியார்கள் – ஆஷாடபூதிகள் – ருத்திராட்சப் பூனைகள் எம்மாத்திரம்?

ஆதாரம்: மோக்ஷ சாதன ரஹஸ்யம், ஆண்டு 1925, புத்தக இருப்பிடம்:– பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்

HOW TO ACQUIRE WEALTH – THE HINDU WAY

devi by akila

Written by S Nagarajan

Article no. 1724; dated 17 March 2015

Up loaded at 8-25 am London time

By SANTHANAM NAGARAJAN

“The Hindu religion is not only a religion, it is also a philosophy not only religion and philosophy, it is a way of life”, so said the well known English writer Somerset Maugham in his book Points of View.

The Hindu religion shows the way to lead the life successfully. Needless to say, for anybody’s success wealth is important.

The Goddess Mahalakshmi is being worshipped as the promoter of prosperity by Hindus.
Mahalakshmi means the great source of the best in life. It also means ‘worshipful’ and ‘engrossed in appearance’.

devi

Lakshmi also means the thinker of the welfare of the devotees.
Sri and Lakshmi are the two manifestations of Mahalakshmi. Though they are two, yet they are one. The word Sri means luminosity, beauty, reputation, glory, magnanimity, splendor, prosperity and consolation.

In order to acquire wealth, the Hindu way of life suggests to worship Lakshmi every morning after taking bath. The Sri Sukta praises Goddess Lakshmi.

This Sukta forms the chapter two, Varga six of the Khilas appended to Rig Veda. The Rig Veda is the oldest known text of the world. There are fifteen mantras in Sri Sukta.
The Sri Sukta can be recited or those who had not learnt the Sukta can hear recorded audio tapes.

Those who would like to have enormous wealth usefully recite the one hundred eight name of Goddess Lakshmi, every day.

bowl

There is one more secret. If you keep water in a small bowl in the north-east corner of your hall in your home it will remove all negative vibration and pave the way to get the wealth you want. Every morning the water in the bowl should be drained and fresh water should be filled up. The bowl should be kept in the same place every day. Amazing results could be observed within forty eight hours.

The presence of Lakshmi, who is firm and steady, bestows gold, cattle, horses and human beings.

She is seated on a Lotus flower. She is implored to bestow fame and prosperity.
Lakshmi resides where the fragrance of sandal and camphor exists! Those who desire that the goddess Sri should always reside in their family should be pure. The purity is required both mentally and physically!

And hence the dwelling place should always be kept clean.

There are certain symbols associated with welfare, glory, prosperity and worship. They are lotus, elephant, conch, swastika, pot, garments, diamond, crocodile, owl, discus, mace, bullock, wish fulfilling tree or Kalpa tree, jack fruit, armour and a pair of fish. Hence using these symbols appropriately will make Lakshmi’s presence.

The Hindu literature gives details of performing Lakshmi puja or Lakshmi worship.
We will learn more about Lakshmi worship in our next article.