மூன்று செவிடர்கள் கதை (Post No. 2386)

deaf4

Compiled by London swaminathan

Date: 13 December 2015

 

Post No. 2386

 

Time uploaded in London :–7-09 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

 

நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்

deaf joke1

மூன்று செவிடர்கள் கதை

பொண்டிரெட்டிபட்டி யென்றவூரில் பொம்மனனென்றவனுக்கு வல்லாளகண்டியென்னும் பெண்வாழ்க்கைப் பட்டிருந்தாள். அவ்விருவரும் பீரங்கிபோட்டாலும் புகையென்று சொல்லக்கூடிய காதுகேளாத கம்பிளிகள்.

 

ஒருநாள் பொம்மணன் தன் மனைவியைப் பார்த்து, அடியே! இன்று அரைக்கீரை மசியலும் , உருளைக் கிழங்கு வறுவலும் செய்யென்று சொன்னான். அதற்கவள் தாங்கள் அசலூருக்குப் போவதால் எனக்குச் சமையல் வேண்டாமென்றாள். அதற்குப் பொம்மணன், சரி, செய். வயலுக்குப்போகிறேனென்று சொல்லிப்போய்விட்டான்.  இவள் தனக்குச் செய்துவைத்திருந்த சாப்பாட்டைச் சாப்பிடப்போகும் தருணத்தில்  புருஷன் கதவைத்திறந்து உள்ளே வந்து, அடியே எனக்கு இலையைப் போடு என்றான்.

 

மனைவி:– ஏன் ஊருக்குப்போகவில்லையா?

புருஷன்:- நான்தான் உருளைக்கிழங்கு வறுவலும், அரைக்கீரை மசியலும் செய்யச் சொன்னேனே! செய்தாயா?

 

மனைவி: வண்டி உருளையை நான் பார்க்கவில்லையே!

 

புருஷனுக்குக் கோபம் வந்து உடனே தலைமயிரைப் பிடித்து அடித்துவிட்டு, ஊருக்கு மேற்கிலுள்ள மண்டபத்திலுட்கார்ந்து யோஜனைசெய்துகொண்டிருக்கும்போது,

deaf joke2

ஒரு செவிட்டு இடையன் தன் ஆடுகளில் மூன்று காணாமற்போனதால், அதைத்தேடிக்கொண்டுவர மண்டபத்திலுட்கார்ந்திருக்கும் பொம்மணனைப் பார்த்து ஐயா! என் ஆட்டுக்குட்டிகளைப் பார்த்தீராவென்று கேட்க, இவனென்னமோ கேட்கிறானென்று கீழ்திசையை நோக்கிக் கையைக் காட்டினான். அதற்கு இடையன், சாமி! ஆடுகள் அகப்படால் உங்களுக்கு நொண்டியாடு ஒன்றிருக்கிறது. அதைத் தருகிறேனென்று சொல்லிப்போனான். தற்செயலாய் அத்திசையில் மூன்று ஆடுகள் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துக்கொண்டு அம்ம்மண்டபத்துக்கு வந்து, செவிட்டுப் பொம்மனைப் பார்த்து, இச்செவிட்டிடையன், சாமி! இந்தாங்க, நொண்டியாடு வாங்கிக் கொள்ளுங்கள் என்றான்.

 

பொம்மண: அடே போடா! நான் ஒடிக்கவில்லை, காலை.

இடையன்: நல்ல ஆடாவேணும்! அது முடியாது. (காலைக் காட்டி) நொண்டியாடுதான் கொடுப்பேன்.

 

பொம்மண: வலது காலும் ஒடிக்கவில்லை, இடது காலும் ஒடிகவில்லை போடா!

இதேது, உபத்திரமாயிருக்கிறது. பெண்சாதி, சொன்னபடி கேட்கவில்லையென்று இங்குவதால் இவன் ஆட்டின் காலை ஒடித்தானென்கிறானே!

 

இடையன்; கும்பிட்டு விழுகிறேன் சாமி! கோபித்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் ஒப்புக்கொண்டபடி இந்த நொண்டியாட்டை வாங்கிக்கொள்ளவேணும்.

 

பொம்ம: ஐயையோ! இதேது இழவாயிருக்கிறது, இந்த நொண்டியாட்டை வைத்துக்கொண்டு வேறே ஆடு கேட்கிறானே. இது அநியாயம்.

deaf 3

இதற்குள் வழியே போன ஒரு தகல்பாஜி இச்செய்கையறிந்து,  இடையனைக் கூப்பிட்டு, அடே உனக்கெனடா, இந்த நொண்டியாட்டைக் கட்டிவிட்டுப் போவென்றான். அந்தப்படி கட்டிவிட்டு அவன் நெடுந்தூரம் போனபிறகு, ஓய், இதோ பாரும், நீர் இந்த ஆட்டின் காலை ஒடித்ததற்காக ஒரு போலீஸ்காரனைக் கூட்டிவரப்போகிறான் என்று உரத்துக் கூறப் பொம்மணன் விழுந்து ஓட்டமாயோடித் தன்வீடு போய்ச் சேர்ந்தான். தகல்பாஜியும் இதுதான் சமயமென்று நொண்டியாட்டைப் பிடித்துக்கொண்டுசென்றான்.

–சுபம்–

 

பூமியின் வெப்பம் விநாடிக்கு விநாடி அதிகரிக்கிறது! (Post No. 2385)

atom bomb

Radio Talk written by S NAGARAJAN

Date: 13 Decemberember 2015

Post No. 2385

 

Time uploaded in London :– 6-12 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

  1. நான்கு அணுகுண்டுகள் வெளிப்படுத்தும் வெப்பம் அளவு பூமியின் வெப்பம் விநாடிக்கு விநாடி அதிகரிக்கிறது!

 

     சமீபத்தில் (2013ஆம் ஆண்டு ஜூன் மாதம்) ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் பூமியின் வெப்பம் அதிகரிப்பதைப் பற்றி எச்சரித்து பிரபல விஞ்ஞானியான ஜான் குக் ஒரு பெரும் எச்சரிக்கையை விடுத்தார்.        

 

 

   க்வீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ள க்ளோபல் சேஞ்ச் இன்ஸ்டிடியூட்டில் (Global Change Institute) பணியாற்றும் இவர் தது உரையில் பூமியில் இப்போது விநாடிக்கு விநாடி அதிகமாகும் வெப்பத்தின் அளவானது ஹிரோஷிமாவில் வெடிக்கப்பட்ட அணுகுண்டானது வெளிப்படுத்திய வெப்ப அளவைப் போல நான்கு மடங்கிற்குச் சமம் என்று தெரிவித்தார்.அதாவது நான்கு அணுகுண்டுகளை ஒவ்வொரு விநாடியும் போட்டால் எவ்வளவு வெப்பம் உண்டாகுமோ அவ்வளவு வெப்பம் உருவாகிறது பூமியில்! இதற்குக் காரணம் மனிதன் க்ரீன்ஹவுஸ் வாயு எனப்படும் கார்பன் வாயுவை மிக அதிகமாக வெளிப்படுத்துவதே ஆகும்.

 

 

      பூமி அதிக வெப்பமாக ஆகிக் கொண்டே வருவதற்கான காரணங்களில் மனிதன் வெளிப்படுத்தும் கார்பனே முக்கியமானதும் முதலாவதுமான காரணமாக அமைகிறது. பூமியின் வெப்பத்திற்கு மனிதன் எவ்வளவு காரணமாக அமைகிறான் என்பதை ஆராயப் புகுந்த போது அனைத்து வெப்பத்திற்கும் அவனே காரணம் என்பது  தெரிய வருகிறது.

 

 

    கடந்த 20 ஆண்டுகளாக பூமி வெப்பமாதல் பற்றிய ஆராய்ச்சி நடத்தி வரும் விஞ்ஞானிகளில் 97 சதவிகிதம் பேர் இதை ஆமோதித்திருப்பதாக ஜான் குக் கூறினார்.’

 

 

     இப்படி அதிகமாக வெளிப்படுத்தப்படும் வெப்பத்தில் 90 சதவிகிதம்  பெருங்கடல்களைச் சென்று அடைகிறது. நிலம், பனிப் பரப்பு, மற்றும் மிருகங்களின் மீது ஏற்படும் விளைவுகள் ஆகிய அனைத்தையும் தெரிவிக்கும் இயற்கையான உஷ்ணமானி போல அமையும் கடல்கள் இந்த உஷ்ணநிலை உயர்வை நமக்கு அறிவிக்கின்றன.

 

 

    மனிதர்கள் அபாயமான இந்த விளைவை நன்கு உணர்ந்து கார்பன் அளவைக் கட்டுப் படுத்தும் முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.

 

 

    ஆகவே ஒவ்வொருவரும் கார்பனை வெளிப்படுத்தப் பெரிதும் காரணமாக  அமையும் வாகனங்களின் பயன்பாட்டை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய படிப்பினை ஆகும்.

 

******** 


MUMBAI WONDERS!!! (Post No. 2384)

IMG_9748

IMG_9749

 

IMG_2814 (2)

Written by London swaminathan

Date: 12 December 2015

Post No. 2384

 

Time uploaded in London:–18-20 AM

( Thanks for the Pictures ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

I visited Mumbai in 2013 and 2015. During my first visit I covered only two places: Siddhi Vinayak Temple and Mahalakshmi Temple. This time I went to Vinayak temple again, but covered many more places including Taj Hotel, India Gate, Victoria Terminus and Nariman point.

 

Mumbai Stamp exhibition

I was going through the newspapers and found out that there was a stamp exhibition held for two days. I never missed the twice a year London Stamp exhibitions (Stampex). So I requested my friend to take me to Mumbai Stamp Exhibition held in Nerul, Navi Mumbai. There were lot of students visiting the exhibition. It was held by the post and telegraph department, and no private dealers were there. In London in addition to Royal mail stall, there will be at least 150 dealers. So I was disappointed, but yet there were display of Indian stamps. I bought some stamps in the stalls there. Next time they organise an exhibition, they must allow the private dealers to open stalls.

Mumbai Dried trees painted

One thing that attracted me was the painted and decorated trees on the road side. My taxi driver explained that many of the dried or dead tree trunks are painted and figures were carved out or drawn on it. It is a good idea which other cities could follow.

 

Tyres hung

I saw lot of yellow tyres hung on trees. First I thought that they were life buoys for the boats. When I saw more ad more at every corner, I asked my driver and he told me they were the shops who fix the punctures. Bombay is full of four wheelers and two wheelers. It looks like the puncture business is doing a roaring business.

 

Stamp Exhibition in Mumbai

 

Cheapest postage in the world

At the stamp exhibition I looked at the post cards and envelopes. I was surprised to read the price of a post card and an envelope. Probably this is the cheapest in the world. A Rs.2-50 post card can carry the message from Kanyakumari to Kashmir. In Europe the same distance will cover fifteen countries. The amount is only two and a half pence! Here the same will cost us 60 pence just to cover the area of Andhra Pradesh. Great Britain is similar to one state in India! To be precise just like Andhra Pradesh.

Rs 2-50 card

Rs 4 cover/envelope

Picture cards with land marks

 

IMG_2803 (2)

Shivaji everywhere

I know Maharashtrians named their Railway Stations, air ports, and Bus terminuses after Shivaji Maharaj. I tried to take some pictures from the car. The security guard at the airport zone (Chatrapathi Shivaji International Terminus) shouted at me when I focussed my camera on the Shivaji statue. He might have thought I am a terrorist photographing a sensitive area. Even when my driver explained that I was just taking the photo of Shivaji statue, he was not convinced. We knew if we stayed there for a few more minutes, five police cars would come after us with blaring sirens and so we quit.

 

Room rents

When we came to know that Chennai airport is closed for a few days because of the rains and floods, we tried to extend our stay in Mumbai. But to our surprise no hotel room was available in Mumbai or Navi Mumbai. Fortunately we got seats in direct flight to London. Room rents are almost similar to Western Countries.

 

Taj Hotel

We went to see the Taj Hotel opposite India gate. We were allowed into reception after passing through an electronic gate. We saw lot of illuminated Horse Carts carrying the tourists for a ride. India gate lights were switched off due to some navy Day meetings. We could see the ships with light decoration at a distance.

IMG_8067

Sugarcane Juice Stalls, peanut vendors, balloon vendors were doing good business. A large balloon was sold for Rs.50. platform food stalls are found everywhere selling Vada pav.

 

Inside the Mumbai airport, I went through the duty free shopping area. There are two shops selling Gond Tribal drawings and artefacts. They are beautiful. Make sure you visit the stalls. The drawings are expensive.

 

Next time I visit Mumbai, I must see Juhu beach and Prince of Wales Museum.

Illuminated Horse Carts near Taj Hotel

 

IMG_2794

Ships decorated with lights near India gate, Mumbai

 

 

Stalls at the Stamp Exhibition , Mumbai

–subham–

 

 

 

 

எனது பஞ்சவடி யாத்திரை! Post No. 2383

IMG_9470

படம்: பஞ்சவடியில் வால்மீகி முனிவர்

This article was published already in English

Written by London swaminathan

Date: 12 December 2015

Post No. 2383

 

Time uploaded in London :–9-38 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

IMG_9502

படம்: பஞ்சவடியில் சீதா தேவி

நாசிக்கிலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் பஞ்சவடி என்னும் தலத்துக்குச் சென்றோம். ‘பஞ்ச’ என்றால் ஐந்து, ‘வட’ என்றால் ஆலமரம்; இங்கே ஐந்து ஆலமரங்கள் இருக்கின்றன. இங்குள்ள குகையில் ராம, லெட்சுமணர், சீதை ஆகியோர் தங்கினர். இங்குதான் சூர்ப்பநகை வந்து ராமன் மீது காதல் கொள்ள, அவளுடைய மூக்கை லெட்சுமணன் அறுக்க, மாரீசன் வந்து பொன் மான் வேடம் பூண்டு ராம, லெட்சுமணர்களையும் சீதையையும் ஏமாற்ற, அதே நேரத்தில் ராவணன் தவ வேடம் பூண்டு சீதையைக் கடத்த — ராமாயணம் புதிய திருப்பத்தை அடைகிறது.

 

ஊருக்குள் நுழைந்தவுடனே ராமாயணக் காட்சிகள், சுவரில் பளிச்செனத் தெரிகின்றன. அருகிலுள்ள பூங்காவில் வால்மீகீ, சுவாமி விவேகாநந்தர் சிலைகளும் உள்ளன.

 

இந்தக் காட்சிகளையெல்லாம் பஞ்சவடியில் சித்திரமாக செதுக்கியும் வரைந்தும் வைத்துள்ளனர். அருகிலேயே காளா ராம் (கறுப்பு ராமன்) கோவில் இருகிறது.

IMG_9503

முனிவர் வேஷத்தில் ராவணன்

(ராமன், கிருஷ்ணன், வியாசர், திரவுபதி ஆகியோர் எல்லாம் கறுப்பர்கள்! ஆரிய- திராவிட பேதம் கற்பிக்கும் மூடர்களுக்கு இவர்கள் உருவம் செமை அடி கொடுக்கும்!!)

 

காளா ராம் கோவில், மிகவும் நல்ல படிமங்களைக் கொண்ட கோவில். கோவிலுக்குள் சென்று வணங்கிவிட்டு வெளியே வந்து கொஞ்சம் விளக்கு முதலிய பித்தளைப் பொருட்களை வாங்கினோம்.எல்லாம் இந்தியில் எழுதபட்டிருப்பதால் விவரங்களை அறியமுடியவில்லை. இந்தி தவிர தமிழ் முதலிய பிராந்திய மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலோஒ போர்டு இருந்தால் நலம்.

 

சீதை குகையை, குடிகாரர்கள் மிகவும் மோசமாக்கி விட்டதாக டிரைவர் சொன்னதாலும், இரவில் சென்றதாலும் தொலைவிலிருந்தே பார்த்தோம். அருகில் வேறு ஒரு மண்டபத்தில் எல்லா காட்சிகளையும் உருவங்களாகச் செய்து வைத்துள்ளனர். மாரீசன் வதை, சீதையை அபஹரித்தல் முதலியன சித்தரிக்கப்பட்டுள்ளன. அனைவரும் பார்க்கவேஎண்டிய இடம் இது.

IMG_9487

ஐந்து ஆலமரங்களையும் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் பெரிதாக எண்/ நம்பர் எழுதி வைத்துள்ளனர். பொதுவாக மகாராஷ்டிரத்தில் நிறைய ஆலமரங்கள் காணப்படுகின்றன. ஆலமரங்களில் நூல் கட்டி வைத்துள்ளனர். அருகிலுள்ள பூங்காவில் வால்மீகி சிலை, சுவாமி விவேகாநந்தர் சிலை ஆகியன உள்ளன. சுவரில் ராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

 

வெளியில் கடைகளில் ஆமை யந்திரம், சூரியன் யந்திரம் முதலினவற்றை விற்றனர் (முந்தைய கட்டுரையில் ஆமை மர்மம் பற்றி படிக்கவும்).

IMG_9483

(கறுப்பு ராமன்/ காளா ராம் கோவில்

முக்திதாம் யாத்திரை

பஞ்சவடிக்கு அருகில் முக்திதாமென்ற ஊர் உள்ளது. அங்கு பெரிய சலவைக் கல் கோவில் இருக்கிறது. அதில் ராம லெட்சுமணர் மூர்த்திகளும், 12 ஜோதிர்லிங்க தலங்களின் மாதிரி உருவங்களும் நவக்ரஹ உருவங்களும் உள.

 

கார்த்திகேயர்/ முருகன் சந்நிதிக்குள் பெண்கள் அனுமதிக் கப்படமாட்டார்கள் என்று எழுதிப் போட்டுள்ளனர். பெண்கள் யாரும் அங்கே வருவதில்லை. இந்த நம்பிக்கை சங்க இலக்கியத்திலும், காளிதாசன் கவிதையிலும் உளது (இது பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே பிளாக்கில் கட்டுரை எழுதியுள்ளேன்).

 

வடநாட்டில் நாங்கள் சென்ற எந்தக் கோவிலுக்கும் அனுமதிக் கட்டணம் கிடையாது. பட்டு வேட்டி, கறுப்பு-சிவப்பு துண்டுகளின் இடையூறும் கிடையாது. எந்த தலங்களிலும் வியாபாரிகளும், விஷமிகளும் உண்டு. நாம் உஷாராக இருந்தால் ஏமாறமாட்டோம்.

IMG_9515

முக்திதாம் கோவிலில் 50 ரூபாய்க்கு கோவில் சாப்பாடு உண்டு. எங்கள் குழுவில் சிலர் வலியுறுத்தவே, அதே காம்பவுண்டிலுள்ள புரோஹித் என்ற ஹோட்டலில் நுழைந்தோம். சாதத்தைத் தவிர மீதி எல்லா, கறி கூட்டுகளும் எண்ணையில் மிதந்தன. ஒரு சாப்பாட்டின் விலை 230 ரூபாய்! தப்பித் தவறி உள்ளே நுழைந்துவிடாதீர்கள்.

 

முக்திதாம் கோவிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. கோவில் படங்களுடன் ஏதாவது புத்தகம் விலைக்குக் கிடைக்குமா என்று விசாரித்ததில் அப்படி புத்தகம் எதுவுமில்லை. கோவில் நிர்வாகம், எல்லா சிலைகளின் படங்களுடன் புத்தகமோ, பட அட்டைகளோ விற்க வேண்டும். அல்லது ஒரு கட்டணம் வசூலித்துக் கொண்டு, கூட்டமில்லாத நேரத்தில் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும்

 

பஞ்சவடி, நாசிக், திரயம்பகேஸ்வர் முதலிய இடங்கள் கோதாவரி நதியின் தோற்றுவாய்க்கு அருகில் இருப்பதால், இஅயற்கையை ரசிக்கவிரும்புவோர் பகற்பொழுதில் செல்ல வேண்டும். நாங்கள் திரயம்பகேஸ்வர் கோவிலில் நன்கு மணி நேரம் கியூவில் நின்றதால் இஅயற்கைக் காட்சிகளை ரசிக்க இயலவில்லை.

IMG_8092

அனுபவ முத்துக்கள்!!!

கடவுளைப் பார்க்க வேண்டுமானால் மற்ற காட்சிகளையும், காமெராவையும் மறக்கவேண்டும்.

காட்சிகளைக் கண்டுகளிக்க வேண்டுமானால் கடவுளை மறந்து விடவேண்டும் – சுவாமிநாதன் பொன்மொழி

 

வடக்கத்தி ஹோட்டலில், மசாலாதோசை ‘ஆர்டர் ‘ செய்யாதே. தெற்கத்திய ஹோட்டல்களில் சப்பாத்தி ஆர்டர் செய்யாதே- அவரவர்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பயன்படுத்தவேண்டும் — சுவாமிநாதன் அனுபவ மொழி.

 

சாமியார் ஆஸ்ரமத்தில் “பார்ட்டிக்கிள் பிஸிக்ஸ்” கேள்விகளைக் கேட்காதே; அறிவியல்கூடத்தில் கடவுள் ஆராய்ச்சி செய்யாதே; அறிவியல் முடியும் எல்லையில் ஆன்மீகம் துவங்குகிறது- சுவாமிநாதன் பொன்மொழி.

வடதுருவத்தில் பெங்குவின் பறவையைப் பார்க்கமுடியாது; தென் துருவத்தில் வெள்ளைக் கரடிகளைக் காணமுடியாது; இருக்குமிடத்தைவிட்டு இல்லாத இடமெல்லாம்………………….

சுவாமிநாதன் அனுபவ மொழி

 

IMG_9500

 

IMG_9489

IMG_9466

சூர்ப்பநகையின் மூக்கறுக்கும் காட்சி

IMG_9462

 

IMG_8076

IMG_8089 (2)

பஞ்சவடி கடைகளில் சூர்ய யந்திரம், ஆமை யந்திரம் விற்பனை

IMG_8087

IMG_8088

பஞ்சவடி காட்சிகள்

-சுபம்-

மாவீரர்கள் சத்ரபதி சிவாஜியும் அலெக்ஸாண்டரும் (Post No. 2382)

IMG_2814 (2)

சிவாஜி புகைப்படம், பம்பாய் விமான நிலையம்; எடுத்தவர்- லண்டன் சுவாமிநாதன்

Written by S NAGARAJAN

Date: 12 December 2015

Post No. 2382

 

Time uploaded in London :– 5-40 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ச.நாகராஜன்

 

 

IMG_2814

அன்னையின் மீது அன்பு

 

மாவீரன் சத்ரபதி சிவாஜிக்கும் மாவீரன் அலெக்ஸாண்டருக்கும் ஒரு பெரும் ஒற்றுமை உண்டு. இருவரும் பெரும் வீரர்கள் என்பது தானே ஒற்றுமை என எண்ணம் தோன்றும். ஆனால் இன்னொரு விஷயத்தில் இவர்களிடையே ஒற்றுமை உண்டு. அது தான் தன் தனது தாயை நேசிப்பது. இருவரும் அபாரமான அன்பு, மரியாதையைத் தாயின் மீது கொண்டிருந்தனர்.

சிவாஜி எதைச் செய்வதாக இருந்தாலும் தன் தாயின் ஆசியுடன் தான் தொடங்குவார். வெற்றிகளை தாய்க்கே சமர்ப்பிப்பார்.

அலெக்ஸாண்டரும் தன் தாயின் மீது அபாரமான பிரியத்தைக் கொண்டிருந்தார்.

 

 

Alexander_lifetime

ஆயிரம் கடிதங்கள்

ஆனால் அவரது தாவரட்டும்யாரான ஒலிம்பியஸ் (Olympias) ஒரு முசுடு. எல்லோரிடமும் குறை காண்பவர்; எரிச்சலை மூட்டுபவர். ஆகவே அவரை எந்த வித அரசியல் விவகாரத்திலும் அலெக்ஸாண்டர் ஈடுபடுத்தவில்லை. என்றாலும் கூட தானாகவே அனைத்து விஷயங்களிலும் தலையை விட்டு ஒவ்வொருவரைப் பற்றியும் அலெக்ஸாண்டரிடம் அவர் புகார் கூறுவது வழக்கம்.

அலெக்ஸாண்டர் தனது அன்னை கூறும் ஒவ்வொரு சொல்லையும் அமைதியுடனும் பொறுமையுடனும் கேட்பார்.

ஒரு சமயம் அவரது தொந்தரவு தாங்காமல் ஐரோப்பாவில் அலெக்ஸாண்டரின் உதவி தளகர்த்தராக இருந்த ஆண்டிபேடர் (Antipater) அலெக்ஸாண்டருக்கு அவரது அன்னையைப் பற்றி ஒரு பெரிய புகார் கடிதத்தை எழுதினார்.

அதற்கு அலெக்ஸாண்டர் பதிலாக இப்படி எழுதி அனுப்பினார்:-“ நீ எழுதியது போன்ற ஆயிரம் கடிதங்களைக் கூட என் அன்னையின் ஒரு சொட்டுக் கண்ணீர் ஒதுக்கித் தள்ளி விடும்”

 

Stamp_UK_2003_1st

சப்பாத்தி தந்த போர்த் தந்திரம்

 

இதே போல சத்ரபதி சிவாஜியும் தன் அன்னையின் மீது உயிராக இருந்தார். ஆனால் ஒலிம்பியஸைப் போலன்றி அன்னை ஜீஜாபாய் அருமையான குணநலன்கள் கொண்டவர். ராஜாங்க காரியங்களில் அநாவசியமாகத் தலையிடாத தன்மை அவருக்கு இருந்தது. சிவாஜிக்கு ராமாயண மஹாபாரதம் போன்ற இதிஹாஸங்களையும் அறநெறிகளையும் அவர் இளமையிலிருந்தே ஊட்டி வந்தார். இதுவே சிவாஜியை ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க அடி கோலியது.

 

ஒரு சமயம் சப்பாத்தியை சுடச் சுடத் தயாரித்து சிவாஜிக்கு பரிமாறிக் கொண்டிருந்தார் அன்னை ஜீஜாபாய்.

ஆனால் உணவில் கவனம் செலுத்தாமல் ஆழ்ந்த யோசனையில் இருந்தார் சத்ரபதி. பரந்த சாம்ராஜ்யத்தைக் கொண்டு பெரும் வலிமையுடன் இருக்கும் ஔரங்கசீப்பை வெல்வது எப்படி என்ற யோசனையில் தீவிரமாக ஆழ்ந்திருந்த அவருக்கு உண்வின் மீது எப்படிக் கவனம் இருக்கும். சூடாக இருந்த சப்பாத்தியின் நடுவில் கையை வைத்தார். அதிகமான சூட்டால் ஆ என்று அலறினார்.

அன்னை அவரை நோக்கினார்:”மகனே! அப்படி சாப்பிடக் கூடாது. சப்பாத்தியின் ஓரத்தை முதலில் கிள்ளிச் சாப்பிடு. அங்கு சூடு இருக்காது. அது ஆறி இருக்கும். பின்னர் மெதுவாக நடுப்பகுதியை எடு” என்றார்.

சிவாஜி உட்னே துள்ளிக் குதித்தார். அவருக்கு ஔரங்கசீப்பை வெல்லும் உபாயத்தை அன்னை கற்பித்து விட்டார் ஒரு நொடியில்!

 

 

வலுவான மையத்தோடு பரந்த சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்த ஔரங்கசீப்பை நேரில் தாக்காமல் முதலில் சுற்றிவர இருக்கும் கோட்டைகளைக் கைப்பற்றி அவரை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதை சப்பாத்தி அவருக்கு கற்பித்து விட்டது. சூடான மையப் பகுதி சுற்றி வர இருப்பதைக் கிள்ளிச் சா போது ஆறி விடும், இல்லையா!ப்பிடும்

 

 

சிவாஜி உடனே சுற்றி வர இருந்த கோட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கைப்பற்றினார். ஔரங்கசீப் வலுவிழந்தார். ஹிந்து சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது.

 

 

ஆதி சங்கரர் முதல் விவேகானந்தர் வரை அனைவருமே அன்னையின் அன்புக்கு அடிமைகள்! மாவீரர்களான சத்ரபதி சிவாஜியும் அலெக்ஸாண்டரும் அன்னையைப் போற்றி வணங்கியதில் வியப்பில்லை தானே

*******

 

பாரதி பாடிய பெருந்தலைவர்கள்! (Post No. 2381)

Written by London swaminathan

Date: 11 December 2015

Post No. 2381

 

Time uploaded in London :–8-24 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Subramanya Bharati- born on 11 December 1882

Died on 11 September 1921

 

டிசம்பர் 11 – பாரதி பிறந்த நாள்

பாரதியை நாம் எல்லோரும் புகழ்கிறோம். பாரதியால் புகழப்பட்டோர் யார்? எவர்? என்று பார்த்தோமானால் அது மிக நீண்ட பட்டியலாகிவிடும். இவ்வளவு பேரைப் பாரதி பாடினார் என்பதை அறியும் போது அவரது பரந்த மனப்பான்மை நமக்கு விளங்கும்.

 

 

பேஸ்புக்—கில் ஒரு ‘லைக்’ போடக் கஷ்டப்படும் நமக்கு, பாரதி எத்தனை பேருக்கு ‘லைக்’ (பிடிக்கும் என்று) போட்டிருக்கிறார் என்பதை அறிகையில் அவரது கனிவும் பணிவும் புரியும். நாம் பாராட்டினால் அவை நீர் மேல் எழுத்தாக மறைந்துவிடுகிறது. பாரதி போன்ற “மந்திரம்போல் சொல்லின்பம்” உடைய கவிஞன் பாராட்டினாலோ அது கல் மேல் எழுத்தாகி காலத்தால் அழியாததாகிவிடுகிறது.

 

 

பாரதி பாடாத கடவுள் இல்லை. போற்றாத புராண இதிஹாச புருஷர்கள் இல்லை. கர்ணனும் பார்த்தனும், சகுந்தலையும் பரதனும், வீமனும் தர்மனும் அவரால் பாடப்பட்டனர். இந்தப் பட்டியலைத் தராமல் அவர் பாடிய தலைவர்களை யும், சாதனையாளர்களையும், கவிஞர்களையும் மட்டும் காண்போம்.

 

உலக மகா இலக்கிய வித்தகன் பாணினி, இந்துமதத்தைப் புனருத்தாரணம் செய்த, ஷண்மத ஸ்தாபர் ஆதிசங்கரர், உலக மஹா கவிஞன் காளிதாசன், தமிழ்ப் புலவர்கள் கம்பன், இளங்கோ, வள்ளுவன், அவ்வை, இந்துமதத்தை முஸ்லீம் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய வீர புருஷர்களான வீர சிவாஜி, குருகோவிந்த சிம்மன், மதத்தலைவர்களான ஏசு, புத்தன், தயானந்தர், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், சுதந்திரப் போராட்டத் தலைவர்களான காந்திஜி, கோகலே, திலகர், தாதாபாய் நவுரோஜி, லாலா லஜபதி ராய், வ.உ.சி. முதலானோர் அவரால் பாடப்பட்டனர்.

 

வான சாஸ்திர மேதை பாஸ்கராசார்யார், மாமன்னன் அசோகன், கொடை வள்ளல் பாரி, சுவாமி விவேகாநந்தர், அவரது சீடர் நிவேதிதா, ஓவியர் ரவிவர்மா, தாயுமானவர், சுவாமி அபேதாநந்தா, வேல்ஸ் இளவரசர், குவளைக்கண்ணன்,வெங்கடேசு ரெட்டப்ப பூபதி,   நாம் அறியாத பல சாமியார்கள்:– சித்தாந்த சாமி, கோவிந்த சாமி, யாழ்ப்பாணத்துச் சாமி, மாங்கொட்டைச்சாமி, குள்ளச் சாமி, சுப்பராம தீட்சிதர் என்று பலரையும் போற்றிப் பாடியுள்ளார்.

இதாலிய தலைவர் மாஜினியையும் பாடினார். தாகூர்,தாமஸ் மூர், பங்கிம் சந்திர சாட்டர்ஜி மற்றும் பலரின் பாடல்களை தமிழில் மொழி பெயர்த்தார். ஆண்டாள், நம்மாழ்வார் பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதனால் இவரையும் பாடாமல் பாடினார்.

 

ரஷிய மன்னன் ஜார், ஆங்கில விஞ்ச் துரை முதலியோரை வசை பாடியுள்ளார்!

பாரதியின் போற்றுதலுக்குள்ளானோர் பட்டியலில் இன்னும் பலருமுண்டு. என் பட்டியல் முழுமையான பட்டியலன்று. அகத்தியர் — வேத, புராண, இதிஹாசத்தில் அடிபடும் ரிஷியின் பெயராகும். அவரையும் இரண்டு இடங்களில் பாடியுள்ளார்.

 

இதோ, பாரதி பாடிய சில புகழ்மிகு வரிகள்:

பாடல் 1

கம்பனென்றொரு மானிடன் வாழ்ந்ததும்

காளிதாசன் கவிதை புனைந்ததும்

உம்பர் வனத்து கோளையும் மீனையும்

ஓர்ந்ததளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்

நம்பருந்திறலோடொரு பாணினி

ஞாலமீதில் இலக்கணம் கண்டதும்

இம்பர் வாழ்வின் இறுதிகண்டுண்மையின்

இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும்

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்

தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்

பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்

பாரளித்து தர்மம் வளர்த்ததும்

பேரருட்சுடர் வாள் கொண்டு அசோகனார்

பிழைபடாது புவித்தலம் காத்ததும்

வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்

வீழ்த்திவென்ற சிவாஜியின் வெற்றியும்

அன்னர் யாவும் அறிந்திலர் பாரதத்து

ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்

பாடல் 2

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து

வான்புகழ் கொண்ட தமிழ் நாடு – நெஞ்சை

அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் – மணி

யாரம்படைத்த தமிழ்நாடு

 

பாடல் 3

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்

பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை

உண்மை இது வெறும் புகழ்ச்சி இல்லை

 

பாடல் 4

 

அகத்தியன் பற்றி தமிழ்த் தாய் சொல்வது:——

ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணம் செய்துகொடுத்தான்

 

பாடல் 5

அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்

அன்பினிற் போகுமென்றே – இங்கு

முன்பு மொழிந்துலகாண்ட புத்தன்

மொழி எங்கள் அன்னை மொழி

 

பாடல் 6

உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை

உமையவள் என்று அறியீரோ? உணர்ச்சி கெட்டீர்!

பண்டாய்ச்சி அவ்வை அன்னையும் பிதாவும்

பாரிடை முன்னறி தெய்வம் என்றாள் அன்றோ

 

பாடல் 7

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டுப்

பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை

வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க! வாழ்க!

 

பாடல் 8 (உ.வே.சா. பற்றி)

பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்

காலமெல்லாம் புலவர் வாயில்

துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்

இறப்பின்றித் துலங்குவாயே

 

பாடல் 9

தாயுமானவர் பற்றி

இறவாய் தமிழோடிருப்பாய் நீ

பாடல் 10

நிவேதிதா பற்றி

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

பெரும்பொருளாய் புன்பைத் தாகச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

நிவேதியைத் தொழுது நிற்பேன்.

 427-Kambar

 

இடம் கருதி இத்தோடு நிறுத்துகிறேன் ஏனைய கவிதைகளை பாரதியார் கவிதைத் தொகுப்பில் காண்க.

பாரதி வாழ்க! பாரதி வளர்த்த தமிழ் வாழ்க!!

 

–சுபம் —

 

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 11 (Post No. 2380)

bharati drawing

Written by S NAGARAJAN

Date: 11 December 2015

Post No. 2380

 

Time uploaded in London :– 5-36 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாரதி இயல்

டிசம்பர் 11 பாரதியார் பிறந்த தினம். உலக மகாகவியைப் போற்றுவோம்.

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 11

ச.நாகராஜன்

 

 

பாரதி பிறந்தார்

 

பாரதியார் புகழ் உலகெங்கும் பரவ உத்வேகமூட்டிய ஒரு நிகழ்ச்சி எட்டயபுரத்தில் 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் நாள் பாரதி ஞாபகார்த்த மணிமண்டப அஸ்திவார விழாவாகும்.

மிக பிரம்மாண்டமான அளவில் பாரதி ஆர்வலர்கள் கலந்து கொண்ட  அந்த நிகழ்ச்சி கல்கி (ரா.கிருஷ்ணமூர்த்தி) அவர்களின் பெரு முயற்சியால் நடந்தது.

ராஜாஜி அஸ்திவாரக்கல்லை நட கூடியிருந்தோர் மகிழ்ச்சியில் திளைக்க அழகாக நடந்த விழா தமிழக சரித்திரத்தில் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும்.

 

 

இந்த அஸ்திவார விழாவுக்கு அஸ்திவாரம் போட்டது ஒரு கட்டுரை. அதை கல்கி எழுதியிருந்தார். இதைப் படித்த சி.ரகுநாதன் ஐந்து ரூபாயை அனுப்பி இருந்தார். ஐந்து ரூபாயிலிருந்து ஆரம்பித்த நிதி சுமார் நாற்பதினாயிரம் ரூபாயைத் தாண்டியது அந்தக் கால அதிசயம்.

இந்தக் கட்டுரையையும் பொழுது புலர்ந்தது என்ற அஸ்திவார விழ பற்றிய கட்டுரையையும் இணைத்து இன்னும் ஏழு கட்டுரைகளுடன் பாரதி பிறந்தார் என்ற நூலை சின்ன அண்ணாம்லை தனது தமிழ்ப்பண்ணை வாயிலாக ஆகஸ்ட், 1945இல் (முதல் பதிப்பாக) வெளியிட்டார்.

 

பாரதி ஆர்வலர்களால் நினைவு கூர வேண்டிய ஒரு விழா கவிஞன் பிறந்த எட்டயபுரத்தில் நடந்த இந்த பாரதிப் பெருவிழாவாகும்.

அந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது இந்தப் புத்தகம்.

நூலில் ஏராளமான சுவையான சம்ப்வங்களைப் படிக்கலாம் – கல்கியின் சுவாரசியமான தமிழ் நடையில். இரட்டிப்புச் சந்தோஷம் உருவாகும்.

 

சின்ன அண்ணாமலை தன் முன்னுரையில் இறுதியில் கூறுவது:-

“ ஒரு காலத்தில் ஆங்கிலம் படித்தவர்களிடையே தமிழ்ப் புத்தகங்களையும் தமிழ்ப் பத்திரிகைகளையும் தொடுவதே கேவலமாகக் கருதப்பட்டது. அத்தகைய மனப்பான்மையைப் போக்கி இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் தமிழ் வெள்ளம் பரவும்படி செய்தவர் கல்கி தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

பாரதியார் கவிதைக்கு எப்படிப் புது மலர்ச்சியை அளித்தாரோ, அப்படித் தமிழ் வசனத்திற்கு மறு மலர்ச்சி உண்டாக்கியவர் கல்கி. எட்டயபுரம் பாரதி ஞாபகார்த்த மண்டபத்தின் மூலம் அந்த இருவரின் பெயர்களும் ஒந்றாக இணைந்து விட்டன. ஸ்ரீ கல்கி அவர்களுக்குத் தமிழ் மக்களிந் சார்பாக நன்றி கூறுகிறோம்.”

 

ஆரம்ப காலத்தில் பாரதியாரை ஒரு கவிஞர் என்ற வகையில் கல்கி ஒப்புக் கொண்டதையும் உலக மகாகவி என்பதை ஏற்க மறுத்ததையும் இதற்கு முன் வெளி வந்த அத்தியாயத்தில் படித்தோம். ஆனால் பாரதியின் அற்புதமான கவிதைகளில் மனம் தோய்ந்து அவற்றை அனுபவித்த பின்னர் அவரை உலக மகாகவி என்று கூறுவது மிகவும் சரியே என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

 

அதன் வெளிப்பாடே அவர் முனைந்து நின்று திரட்டிய நிதியும் அதனால் உருவான மணி மண்டபமும் ஆகும். அத்துடன் அவரது கதைகள், நாவல்களில் பாரதி பாடல்களைத் தாராளமாக அவர் உலவ விட்டார்.

நூலில் சில சுவாரசியமான பகுதிகளைப் பார்ப்போம்.

 

பாரதி பிறந்தார் கட்டுரையிலிருந்து:

சந்து பொந்துகளின் வழியாகச் சென்று கடைசியில் பாரதியார் பிறந்த வீட்டை அடைந்தோம். வீட்டு வாசலில் ஒன்றுக்கு மேல் ஒன்று உயரமாக இரண்டு விசாலமான திண்ணைகள் இருக்கின்றன. மேல் திண்ணையின் ஓரத்தில் சுவரில் ஒரு குறுகலான வாசற்படி காண்கிறது. அதற்குள்ளே இருந்த அறையிலே தான் பாரதியார் பிறந்தார் என்று சொன்னார்கள். ஆகா! பிறந்த குழந்தை “குவா, குவா” என்று அழுத போது அந்தக் “குவா” சத்தத்தில், தேச வெறியும் தமிழ்ப் பண்பும் பொங்கித் ததும்பும் அழகிய தமிழ்ப் பாடல்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன என்று யாருக்குத் தெரிந்திருக்கப் போகிறது.

 

அந்த வாசற்படிக்கு வெளியே, திண்ணையில் பாரதியார் தூணில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருப்பது வழக்கம் என்றும் சொன்னார்கள். இப்போது இதே இடத்திலிருந்து தான் பாரதி திருநாளன்று அவருடைய திருவுருவப் பட ஊர்வலத்தை ஆரம்பித்து நடத்துகிறார்களாம் – இலக்கிய மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தான்.

 

பொழுது புலர்ந்தது கட்டுரையிலிருந்து:-

ராஜாஜியின் பேச்சில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. 1) பாரதியாரைப் பற்றிய ராஜாஜியின் சொந்த அனுபவங்கள் 2) பாரதியாரின் கவிதைச் சிறப்பு 3) பாரதியாரை தமிழ்நாடு போற்ற வேண்டிய முறை

பின் வருமாறு பேச்சு ஆரம்ப்மாயிற்று:-

 

இந்நாளில் பலர் பாரதியாரைப் பற்றித் தங்களுடைய சொந்த அனுபவங்களையும் ஞாபகங்களையும் சொல்கிறார்கள். அவர்கள் எல்லாரையும் விடப் பாரதியாரை எனக்கு அதிகமாய்த் தெரியும்; அதிக காலமாயும் தெரியும். இதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் எல்லாரையும் விட எனக்கு வயது அதிகம் (சிரிப்பு) அவருடைய மாமாவைத் தவிரச் சொல்கிறேன். வயது எனக்கு அதிகமானதினாலேயே சில விஷயங்களில் அனுபவமும் அதிகமாய்த் தானே இருக்க வேணும்? 1906-ம் வருஷத்திலேயே பாரதியாரை எனக்குத் தெரியும். அவரும் நானும் கல்கத்தா காங்கிரஸுக்கும் அடுத்த வருஷம் சூரத் காங்கிரஸுக்கும் போனோம். பாரதியார் தீவிரவாதி. நானும் அப்போது அப்படித்தான். அந்தக் காலத்தில் தீவிரவாதம் என்றால் சாதாரண விஷயமல்ல. சூரத் காங்கிரஸில் நாற்காலிகள்  வீ  சி எறியப்பட்டன. செருப்புகளும் பறந்தன. ஆனால் இந்த அமர்க்களமெல்லாம் நடந்து கொண்டிருந்த போது பாரதியார் தூரத்தில் போய் ஸ்ரீ ஜி.எ. நடேசனுடன் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கவிஞராகையால் அப்படிச் செய்தார். கவிகள் சாதாரண மனிதர்களைப் போல் காரியங்களில் இறங்கி விட்டால் அவர்கள் கவிகளாயிருக்க முடியாது.

 

அந்தக் காலத்தில் பாரதியாரைப் போற்றும் விஷயத்தில் சாதியை யாரும் கவனிக்கவில்லை. உண்மையில் அவர் என்ன சாதி என்பது கூட அநேகருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. நானும் என் நண்பரு ஒருவரும் ஒரு சமயம் புதுச்சேரிக்குப் போய்ப் பாரதியாரைப் பார்த்தோம். அப்போது எங்களுக்குள் பாரதியார் என்ன சாதி என்ற கேள்வி எழுந்தது. பாரதியார் மேல் பூணூல் இல்லையாதலால் விவாதத்தை எங்களுக்குள் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. எனவே பாரதியாரையே கேட்டு விடுவது என்று தீர்மானித்துக் கேட்டோம். அவர் பிராம்மண சாதி என்று அறிந்ததும், ‘பூணூல் எங்கே?’ என்று கேட்டோம். ‘அது எங்கே போயிற்றோ? யார் கண்டது?’ என்றார். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், நமது நாட்டில் எப்போதுமே கவிகளைப் போற்றும் விஷயத்தில் சாதி குறுக்கிட்டது கிடையாது என்பதற்காகத் தான்.”

 

நூலில் உள்ள ஒன்பது கட்டுரைகளில் இரண்டு மட்டுமே பாரதியாரைப் பற்றியது என்றாலும் கூட அவை பாரதி இயல் வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுபவை என்பதால் அதி முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன. (இதர ஏழு கட்டுரைகள் திரு.வி.க., தீரர் சத்தியமூர்த்தி, கம்பரும் நானும், தெய்வமானார், கிட்டப்பா ஞாபகம், வீ ழ்ந்த ஆலமரம், சாபம் நீக்கிய கவிஞர் ஆகிய தலைப்புகளில் உள்ளன.

 

நூலில் பாரதி விழாப் படங்களும் இடம் பெற்றுள்ளன.  நூலில் அந்தக் கால விலை நான்கு ரூபாய் எட்டணா!

******

 

Beautiful Quotations on Bharati (Post No. 2379)

bharati boat

Compiled by London swaminathan

Date: 11 December 2015

Post No. 2379

 

Time uploaded in London :– 5-19 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Subramanya Bharati- born on 11 December 1882

Died on 11 September 1921

 

Poet Bharati has fulfilled the true mission of a poet. He has created beauty not only through the medium of glowing and lovely words, but has kindled the souls of men and women by the million to a more passionate love of freedom, and a richer dedication to the service of the country. Poets like Bharati cannot be counted as the treasure of any province. He is entitled by his genius and his work, to rank among those who have transcended all limitation of race, language and continent and has become the universal possession of  mankind.

—Poetess Sarojini Naidu

XXX

barati stat3

Bharati is a true poet. He has the poet’s perception, the artist’s touch, the reformer’s zeal, the devotee’s faith, the scholar’s erudition, the patriot’s nationalism and the cosmopolitan’s internationalism he is a liberal rooted in the past, and a conservative who holds forward-looking thoughts. He is a rich blend of old and new. He expresses new themes in classic metres, and classic themes in newer modes. Some of his themes are bold and unconventional – so bold that some of his contemporaries gasped in wonder, or railed at his temerity.

–P N Appuswami

XXX

 

Bharati was truly great and he was easily the greatest of the modern Tamil poets. With him came the flood tide of renaissance, as a part of national upsurge for freedom. In his hand Tamil recovered its naturalness, clarity, vigour, vitality and flexibility.

–Bharathi Tamil Sangham, Calcutta

XXX

bharathi_ninaivukal_copy

Bharati was not only a poet who could rouse the patriotic feelings of his fellow- Tamils, but was also a literary artist of the highest order who could see the universal in the particular. So, although Bharati hails from Tamil Nadu, and occupies a front place in India’s regional literature, his impact will be felt wherever great literature is loved and read.

–V K R V Rao, Education Minister, 1970

XXX

 

Bharati has proved what every reader of poetry always knew, that if a poet is equal to his task, he can invest an old theme with a new significance and beauty by his poetic emotion and artistic skill. Kannan Paattu, his magnum opus, is a lyrical cycle of poems on Krishna. Its theme is traditional, one to which India has responded since time immemorial.

–Justice S K Mukherjea

XXX

bharati b & w

Bharati was only thirty nine when he died. But he had adorned tami with such a unique body of exquisite lyrics and pieces of prose, vivid and many toned, that will be a perpetual national possession.

—-Bharathi Tamil Sangham, Calcutta

XXX

 

Subrahmanya Bharati was a man on whose tongue the Goddess Saraswati can honestly be believed to have danced the dance of patriotism. If he had been born in any free country, why in any country of the world except the India, the man would have been made the Poet Laureate of the country, would have been given honours and titles by a government which knows how to respond to the feelings of the people, and would have lived and died among the most honoured of the nation.

—S Satyamurthi in Madras Legislative Council, 1928

XXX

bharati-stamp

Subramanya Bharati’s poetry falls broadly into three divisions. The first which is most well-known, consists of his soul stirring national songs. The second which is not so well-known to the general public, but which is familiar to students of Tamil, contains his two master pieces of Panajali Sabatham and Kuyil Pattu. In between there is a third division, which comprises of his religious and philosophic poems and songs. Though these form nearly half of his total output, they are not as well know as they should be.

–A V Subramaniya Aiyar

XXX

 

Bharati is the poet of the common man. The language of the common man became in his works the language of the poetry. Till then the language of the common man was not the respectable language of high class literature.

–Prof T P Meenakshisundaran, Vice chancellor of Madurai University

XXX

bharati drawing

Bharati has introduced in accordance with the spirit of the times, a new theme of poetry. The songs of patriotism or national songs are new to Tamil literature in the way they have been elaborated by Bharati and others. There may have been poems expressing loyalty to the king as representing the nation, culture or religion. But in the national songs of Bharati the loyalty is to the nation, to the people.

–Prof T P Meenakshisundaran

XXX

 

Bharati is not only the national poet of tamil Nadu; he belongs also to the whole India. His verses should be published in all the Indian languages.

–Jawaharlal Nehru, Prime Minister of India till 1964

 

XXX

 

Rooted in tradition, Bharati used the old, simple forms of classical art to new purposes and new effects.

–P N Appuswami

XXX

 

bharati malar

Bharati is probably one of the best poets of modern period in our country and definitely the greatest of Tamil poets of our time and the Tamils can be legitimately proud of this greatest bard who has given not only a new direction and dimension but a new shape and new thrust to Tamil poetry as well. It is in his magic hand tamil poetry regained its vigour and vitality, clarity and naturalness.

Dr S Agesthialingom, Vice Chancellor, Tamil University, Thanjavur, 1989

XXX

 

Bharati’s vastitudes can be known only when the poems of great one, in Tamil, are translated in to the languages of the world.

–Bharatidasan

 

XXX

IMG_1652 (2)

The craftsmanship of Bharati, as revealed by his juvenilia, s pretty conventional and is rather dull. However, as years roll by, his irresistible genius starts asserting itself with a wondrous splendour that is truly multi- dimensional. The myriad minder bard’s apperception is achieved with a thousand tentacles of awareness and his utterances – afire with burning desire- shoot out like piercing pins of light. His words and vocables energised by a novel poetic fervour, march out, suaviter in modo, fortiter in re, and make universal conquest.

–Sekkizar Adippodi Dr T N Ramachandran

(suaviter in modo, fortiter in re= gently in manner, strongly in deed)

 

XXX

Bharati completed one more work which carries the hall mark of a born poet, using common, almost thread-bare, unconsidered material. The Kuyil is pure fantasy but with its foundations in firm-set earth. He is the Morning Star of modern literature since he was the first to discredit the vogue of poetic diction and dealt with thems close to the life of today.

–P.Mahadevan

–subham—

 

 

 

 

 

My Visit to PANCHAVATI (Post No. 2378)

 

IMG_9462

 

IMG_9466

Written by London swaminathan

Date: 10 December 2015

Post No. 2378

 

Time uploaded in London :– 16-01

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

IMG_9470

Saint ValmikiIMG_9483

Kala Ram/ Back Ram Temple

From Triambakeswar we came back to Nashik and proceeded to Panchavati which is very nearby. As soon as we entered the town, we saw Ramayana scenes on the wall with descriptions in Hindi. This is about Rama’s encounter with Surpanaka followed by Maricha Vada (Killing of Maricha).

 

Panchavati became famous because of the incidents in the Aranya Kanda of Ramayana. Surpanakha tried to seduce Rama and Lakshmana followed by her disfigurement (nose cut). Maricha came disguised as a golden deer and Rama tried to catch it at the behest of Sita and Ravana came at the time to abduct Sita. Since Rama and Lakshmana camped there for most of the 14 year period in the forest, all the places there were connected with Ramayana.

IMG_9486

We went to see the five banyan trees which gave the name to the place: Pancha means Five and Vata means Banyan tree = Five Banyan Trees= Pancha Vati.

 

The banyan trees are numbered from 1 to 5. Tourists can easily identify them. But most of the sign boards are in Hindi only. We need them in English or regional languages such as Tamil, Telugu and Kannada. North Indians can follow Hindi.

 

All along our route we saw lot of banyan trees and Sugar cane juice stalls. There is a Sita Cave (Sita Guha or Gufa). As our driver warned us about the condition of the cave we did not venture to go there. He told us some drunkards abused the place and there was even a murder in the recent past. But opposite the five trees, there was a centre with all the Ramayana statues and dolls. It was very good to see the scenes from the Aranyakanda.

IMG_9487

The big attraction in Panchavati is the Kala Ram (Black Ram) temple. It is a beautiful Rama temple. In the nearby park we saw statues of Swami Vivekananda and Valmiki. Lot of shops sell things for tourists. We also bought some brass bells. I have already written about the tortoise lucky yantras sold there. With them Surya yantras are also sold.

 

Too many Toll gates:

Between Mumbai and Shirdi, we came across 8 to 10 toll gates. They extracted money and delayed the traffic. State and Central governments must find a way to eliminate them or use machines to photograph the number plates and charge them like we do in London for the Congestion Charge. Alternately State governments may be subsidised and the toll gates can be done away with.

 

Since onions became scarce and were in great demand, a lot of vendors were selling the  onion bags on the road side. We also saw lot of shops selling cheap Chinese toys such as teddy bears.

IMG_9489

IMG_9500

IMG_9502

 

 

IMG_9503

Ravana

 

MUKTIDHAM

Muktidham is another place near Panchavati. There is a beautiful marble temple were all Hindu gods and saints are displayed in miniature form. There is a central shrine for Rama and Sita. On either side there are lot of statues or marble figures depicting Puraic scenes. Dis play of the 12 Jyotirlinga shrines is the most impressive one.

 

There was a Kartikeya (Skanda) shrine where women are not allowed following the age old tradition. Poet Kalidasa and Tamil Sangam literature also talk about such a taboo.

 

One disappointing thing about such a beautiful temple is that we don’t get any pictures for sale. No one is allowed to take pictures inside the temple. In future, at least the temple should sell picture post cards.

IMG_9515

Picture of Muktidham Temple

Warning about Oily food

Our driver advised us to go to Rs 50 meals sold by the temple trust. But our ill luck made us to try the Purohit restaurant in the same compound where a meal (Thali) is Rs.230. We did not mind paying the amount, but all the dishes were floating in oil. Literally the vegetables were swimming in the oil!

 

Next time you go there, please try the temple restaurant and write to me about the quality of the food. Let me find out whether it is better than the restaurant!

IMG_9519

–Subham—

எனது திரயம்பகேஸ்வர் யாத்திரை! Post No. 2377

IMG_2692

Written by London swaminathan

Date: 10 December 2015

Post No. 2377

 

Time uploaded in London :– 9-10 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

வட நாட்டில் சிவ பெருமான் மீதும், ராமர், சீதாதேவி மீதும் அபார பக்தி இருக்கிறது. இதை அவர்கள் வணங்கும்விதத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். பல தமிழ் நாட்டுக் கோவில்களில் போலி பக்தர்களும் போலி பக்தியும் நிலவுகிறது. சடங்குகளும் அதிகம்- அதாவது தேங்காய், பழம், சூட தீபாராதனை என்று பற்பல. பட்டுப் புடவை உடுத்திய பெண்கள் ஒரு புறம்; மறுபுறம்;– கழுத்தில் கொட்டை, நெற்றியில் பட்டை, காலில் கட்டை, கையில் சட்டை!!

(கொட்டை= ருத்திராட்சம்; பட்டை= விபூதி அல்லது நாமம், கட்டை= சாமியார் செருப்பு, சட்டை= மேல் சட்டை)

12 jyotirlinga

நாங்கள் மும்பையில்ருந்து நாசிக் சென்றோம். அங்கிருந்து திரயம்பகேஸ்வர் கோவில் சென்றோம். இது 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று. இதற்கு முன் ராமேஸ்வரம், ஸ்ரீசைலம் ஆகிய இரண்டு ஜோதிர்லிங்க தலங்களைத்தான் பார்த்திருக்கிறேன்.

 

வெள்ளைக்காரந்தான் இந்நாட்டை ஒன்றுபடுத்தினான் என்று என் நண்பர்கள் பலர் பிதற்றுவர்/ உளறுவர். ஆனால் 51 சக்தி பீடங்களும், 108 வைஷ்ணவ திருப்பதிகளும், 12 ஜோதிர்லிங்க தலங்களும், ஆதி சங்கரரின் நான்கு மடங்களும் அகண்ட பாரதம் என்பதை நிரூபிக்கிறது. இதில் பல தலங்கள் பாகிஸ்தான், பங்களாதேஷில் இருப்பதால் அவைகளும் நம்முடையவையே. இன்னும் சொல்லப்போனால் ஐரோப்பியர்களுக்கு தேசீயம் என்பதை சொல்லிக் கொடுத்த நாடே பாரதம்தான். ஏனெனில் கிரேக்க, ரோமானிய, எகிப்திய, சீன, சுமேரிய நாகரீகங்களில் இக்கொள்கை இல்லை.

 

இந்த தலங்கள் அனைத்துக்கும் மோடி அரசு தனித்தனியே தபால்தலை வெளியிட வேண்டும். வெள்ளைக்காரன் காலத்தில் இந்தியக் கோவில்கள் இந்திய தபால்தலைகளில் இடம்பெற்றன. பின்னர் வந்த நேரு-காந்தி கொழ கொழா, வழ வழா ‘செக்யுலர்’ அரசு சொதப்பிவிட்டது. என்னுடைய தபால்தலை ஆல்பத்தில் உலக நாடுகள் ஆண்டுதோறும் வெளியிடும் கிறிஸ்துமஸ் தபால் தலைகள் உண்டு. முஸ்லீம் நாடுகள் வெளியிட்ட மசூதி, மெக்கா , காபா தபால்தலைகள் உண்டு. ஆனால் இந்துதபால்தலைகள் மிகக் குறைவு.

 

திரயம்பகேஸ்வரர் கோவில் கோதாவரி நதி தோன்றுமிடத்துக்கு அருகில் இருக்கிறது. அண்மையில் அங்கு கும்ப மேளா நடந்ததால், அப்போது போலீஸ்காரகள் வைத்த ஆயிரக்கணக்கான தடுப்புகள் சாலை ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

IMG_8070 (2)

படம்:– கோவிலுக்கு வெளியே எல்லோருக்கும், அழகான திரிசூல முத்திரை வைக்கிறார்கள்!

 

கோவிலை நெருங்க, நெருங்க போன்களையும் காமெராக்களையும், செருப்புகளையும் இங்கே விட்டுச் செல்லுங்கள் என்று பல வணிகர்களும் அவர்களது ஏஜெண்டுகளும் வழிமறித்தனர். அவர்களில் ஒருவரை நம்பி எல்லாவற்றையும் விட்டுச் சென்றோம். எல்லாவற்றுக்கும் குறைந்தது பத்து ரூபாய் கட்டணம்! நம்முடைய மொபைல் நம்பர் எல்லாவற்றையும் எழுதிக் கொண்டு ஒரு டோக்கன் தருகிறார்கள். (கோவிலுக்குள் மொபைல் போன்களை அனுமதிக்கக்கூடாது என்பதை நான் ஆதரிக்கிறேன்)

 

கோவிலுக்குச் சென்றவுடன் 200 ரூபாய் விஷேச தரிசன ‘கியூ’வுக்குச் சென்றோம். ஆனால் அதற்கு நேரக் கட்டுப்பாடுகள் இருப்பதால் பொது பக்தர் வரிசையில் நின்றோம். ஆளுக்கு ஒரு பையில் பூ வாங்கிக் கொண்டோம். ஞாயிற்றுக் கிழமை என்பதால் கிட்டத்தட்ட 20 வரிசைகள் இருந்தன. மக்கள் வேகமாக நகருவதைப் பார்த்து அதில் சேர்ந்தோம். மூன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் சந்நிதியில் நின்றோம்! ஆயினும் பெரிய மின்னணுத் திரையில் சன்னிதியில் நடப்பதைப் பார்த்துக் கொண்டே நகரலாம்.

IMG_2688

எனக்கு சிறு வயதில் என் தந்தை கற்றுக் கொடுத்த ஓம் திரயம்பகம் …… என்று துவங்கும் த்ரயம்பக மந்திரம் (யஜூர் வேத ருத்ரத்தில் ஒரு மந்திரம்) வேறு ஒரு திரையில் ஓடிக்கொண்டிருந்தது.

 

ஒரு ஐடியா/ யோஜனை

நாம் எத்தனையாவது வரிசையில் நிற்கிறோம் என்பதை இலக்கமிட்டு, அவ்வப்பொழுது அறிவிக்கலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் 20-ஆவது வரிசையில் இருந்தால் இன்னும் மூன்று மணி நேரத்துக்குப் பின்னர் சந்நிதியில் இருப்பீர்கள் என்று அறிவிக்கலாம். வரிசைக்கு எண் குறித்து பெரிய ‘போர்ட்’ வைக்கலாம். திருப்பதியில் நாம் நிற்கும் ஷெட்டுகளின் எண் பெரிதாகத் தெரியும். இது தவிர இனிமையான, சன்னமான குரலில் ஏதேனும் பாடல்களை ஒலிபரப்பலாம். நல்ல வேளையாக ஆங்காங்கே தண்ணீர் குடிக்க, குழாய்கள் வைத்திருக்கிறார்கள்.

 

நாங்கள் சன்னிதியை நெருங்கும்போது மாலை நாலு மணி ஆகிவிட்டதால் 200 ரூபாய் வரிசையும் அதில் கலக்கத் துவங்கியது. இந்த இடத்தில் கோவில் நிர்வாகம் ஒரு கயிறு கட்டி இரண்டு வரிசைகளையும் ஏக காலத்தில் நகர்ந்து செல்ல வசதி செய்ய வேண்டும். ஏனெனில் அங்கு கொஞ்சம் தள்ளு முள்ளு இருந்தது. இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கொந்தளிப்பு இருக்கத்தானே செய்யும்!

IMG_8069 (2)

ஒர் ஏமாற்றம்

நாங்கள் கோவிலுக்குள் நுழையும் முன்னர் ஒரு பெண்மணி எல்லா பூக்களையும் வாங்கி ஒரு கூடையில் போட்டுவிட்டு, பிரசாதம் என்று அதிலிருந்து இரண்டு பூக்களைக் கொடுத்தாள். இது ஏமாற்றமளிப்பதாக இருந்தது. ஒரு பூவையாவது, வில்வத்தையாவது எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வளவு பூவையும் அனுமதிக்க முடியாதுதான்.

சீரடி, திரயம்பகேஸ்வரம், மும்பை சித்தி விநாயகர் கோவில்கள் ஆகிய எல்லாவற்றிலும், அரை நிமிட தரிசனம்தான். அந்த அரை நிமிட நேரத்தில் கிடைக்கும் திருப்திக்காக மூன்று மணி நேரம் வரிசையில் நிற்பதால் நம் பாவங்களனைத்தும் கரைந்துவிடும்.

 

வெளியே வந்து “உடுப்பி” ஹோட்டலில் நுழைந்தோம். பெயர்தான் உடுப்பி. சாப்பாடோ கடுப்பு!

ஆனால் சீரடியில் கோவிலுக்கு எதிரேயிருந்த உடுப்பி ஹோட்டல் அருமையான கன்னட சாம்பார் சட்னியுடன் சுவையாக இருந்தது. வட நாட்டில் வடக்கத்திய சாப்பாட்டையும், தென்னாட்டில் தெற்கத்திய சாப்பாட்டையும் எதிர்பார்ப்பதுதான் நியாயம். ஆனால் நம் நாக்கு, அதை கேட்க மாட்டேன் என்கிறது!!!என்ன செய்ய?

 

சிவபெருமான், எப்பொழுதும் நீரில் இருக்க வேண்டும் என்னும் ஓர் ஐதீகம் இருப்பதால், பூசாரிகள் தண்ணீரை அபிஷேகம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். திங்கட் கிழமை தோறும் பல்லக்கில் ஒரு கவசம் எடுத்துவரப்படும் என்று படித்திருக்கிறேன். படத்தில் நாங்கள் கண்ட மும்முக கவசமாக இது இருக்கலாம்.

IMG_8090

ஆமை மர்மம்!!!!!!!!!!!!!!!!!!!!!

 

திரயம்பகேஸ்வர் கோவில் கோபுரம் தன் பழமையைக் காட்டுகிறது. உள்ளே பெரிய ஆமை உருவம் தரையில் சந்நிதிக்கு முன்னிருந்தது.

முன்னர் நான் எழுதிய கட்டுரைகளில் ஆமை மட்டும் எப்படி உலகில் அதிக நாள் வாழ்கிறது என்று சுவாசக் கணக்குப் போட்டுக் காட்டியிருந்தேன். அப்படிச் செய்தால் நாமும் 300 ஆண்டுகள் வாழலாம். இன்னொரு கட்டுரையில் திருச்செங்கோடு முதலிய இடங்களில் ஆமைமீது மண்டபம் இருப்பதையும், கேரள கோவில்களில் மட்டும் ஆமையின் முதுகின்மேல் த்வஜ ஸ்தம்பம் இருக்கும் மர்மம் பற்றியும் எழுதியிருந்தேன். ஆனால் நான் படித்த எந்த கோவில் , ஆகம புத்தகங்களிலும் இதற்கு விளக்கம் இல்லை!!!

 

சீனர்கள் ஆமை முதுகின் மேல் எழுதப்பட்டதாக நம்பும் மேஜிக் ஸ்கொயரை (எப்படிக் கூட்டினாலும் 15 எண் வரும் குபேர யந்திரம்) அதிர்ஷ்டகரமாகக் கருதுவதையும் எழுதியிருந்தேன். இதையெல்லாம் மனதிற்கொண்டு த்ரயம்பகேஸ்வரர் கோவிலில் பெரிய ஆமை உருவம் சிவனுக்கு முன்னர் வரையப்படிருப்பதையும் அது நந்தியின் ஸ்தானத்தை வகிப்பதையும் கண்டு வியந்தேன். இதை விட அதிசயம், பஞ்சவடியில் எல்லா கடைகளிலும் ஆமை படம் போட்ட “லக்கி” யந்திரங்கள் விற்பதையும் கண்டு அதிசயித்தேன். இதற்குப் பழைய இந்துமத நூல்களில் ஆதாரமில்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம் கீதையிலும், குறளிலும் திருமந்திரத்திலும் வரும் ஆமையின் புலனடக்கப் பாடல்தான் (ஒருமையுள் ஆமை போல….)

தேவாரத்தில் சிவன் அணியும் பல பொருள்களில் ஆமை ஓடும் ஒன்று. விஷ்ணுவின் அவதாரங்களில் கூர்ம அவதாரம் ஒன்று.

 

கோதவரியைக் காணோம்!

நாங்கள் கோவிலை விட்டு வெளியே வருகையில் அந்தி நேரம் நெருங்கியதால், கோதாவரி நதியின் தோற்றுவாய்க்குச் செல்ல முடியவில்லை. ஆனால் த்ரயம்பகேஸ்வரத்தில் கோதாவரி, வெறும் தேங்கி நிற்கும் தண்ணீராகவே காட்சி தந்தது. இயற்கை அன்பனான எனக்கு அது ஒரு ஏமாற்றமே. பஞ்சவடியிலுள்ள ஐந்து ஆலமரங்களை வெளிச்சத்தில் காணும் அவாவில் காரின் வேகத்தை அதிகப் படுத்தி சிட்டாகப் பறந்தோம் (பஞ்சவடி அற்புதங்களை அடுத்த கட்டுரையில் காண்க).

–சுபம்–