14. பிச்சை எடுத்தேனும் உயிரைக் காத்துக் கொள்வதே தர்மம்!

begging

Compiled by S Nagarajan

Post No: 1649;  Dated: 14 February 2015

 

by ச.நாகராஜன்

 

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:.

उपवासाद्वरंभिक्षेतिन्यायः

upavasadvarambhikseti nyayah

 

உபவாஸாத்வரம்பிக்ஷேதி நியாயம்

இது ஆபத்து கால தர்மத்தைக் குறிக்கிறது. உயிர் காத்துக் கொள்ள வேண்டிய நேரத்தில் உபவாசம் இருக்க முடியுமா? முதலில் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை, உபவாசத்தை விடு என்று சொல்லும் ஆபத்து கால தர்ம நியாயம் இது.

தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம் என்பது ஆபத்து கால தர்மம்.அது போல ஆபத்துக் கால தர்மங்களில் ஒன்றாக, வீராப்புடன் பட்டினி கிடக்காமல் உயிரைக் காத்துக் கொள்; அதற்காக பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை என்று சொல்லும் தர்மம் இது. ஆபத்துக் கால விதிகளை அறிந்து கொள்வது இன்றியமையாதது.அந்த வகையில் இந்த நியாயம் மிகவும் முக்கியமானது.


two traps

उभयतः पाशरज्जुः न्यायः

ubhayata pasarajjuh nyayah

 

உபயத: பாசரஜ்ஜு: நியாயம்

இரு பக்கமும் வலைகள். இந்தப் பக்கமும் போக முடியாது; அந்தப் பக்கமும் போக முடியாது, என்ன செய்வது என்கிற நியாயம் இது.

 

எந்தப் பக்கம் போனாலும் வலையில் அகப்படுவது உறுதி. எந்த நிலையை மேற்கொண்டாலும் அபாயம் நிச்சயம் என்று இருக்கும் நிலையைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது!

 

arid land

ऊषरवृष्टिन्यायः

usharavrishti nyayah

 

உஷரவ்ருஷ்டி நியாயம்

 

வ்ருஷ்டி – மழை

வறண்ட தரிசு நிலத்தில் எவ்வளவு தான் மழை பெய்தாலும் விதை விதைத்தால் விளையாது. அது போல எவ்வளவு தான் முயன்றாலும் பலன் தராத ஒரு விஷயத்தை ஒருவர் மேற்கொண்டால் அது பலன் தராது. அப்போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

two fruits2

एकवृन्तगतफलद्वयन्यायः

ekavrntagataphaladvaya nyayah

ஏகவ்ருந்தகதபலத்வய நியாயம்

ஏகம் – ஒன்று த்வயம் – இரண்டு

ஒரு கிளையில் உள்ள ஒரே காம்பில் இரு பழங்கள் என்னும் நியாயம் இது.

ஒரே காம்பில் சில சமயம் இரு பழங்கள் பழுத்துத் தொங்கும். இதை இலக்கணத்தில் எடுத்துக் கொண்டு ஒரு நியாயத்தைக் காட்டுகிறது இந்த நியாயம். ஒரே ஒரு வார்த்தை தான் ஆனால் அது இரு பொருள் படும்படி பயன்படுத்தப்பட்டால் இந்த நியாயம் அங்கு பொருந்தும்

.

two fruits

एकमनुसंधित्सतोऽपरं प्रच्यवते न्यायः

ekamanusandhitsato aparam pracyavate nyayah

 

ஏகமனுசந்தித்ஸதோ அபரம் ப்ரச்யவதே நியாயம்

தர்க்கத்தில் வரும் சூத்திரம் இது. ஒரு வாதத்தில் ஒரு பகுதி அடிப்பட்டுப் போகிறது, ஆனால் அதே சமயம் நிலைத்து நிற்கிறது. ஆனால் அதே சமயம் தர்க்கரீதியாக ஒன்றுக்கொன்று முரண்படும் ஏராளமான விஷயங்கள் சேர எதையும் சமாளிக்க முடியாத நிலை ஏற்படும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.


******************

152 Hindu Kings of Nepal

nepal

Dictionary of 10,000 Indian Kings – Part 16

Compiled by london swaminathan

 

Post No: 1648;  Dated: 13 February 2015

160 Kings in Rig Veda published here on 23rd November 2014.

First part of the article –146 kings beginning with letter ‘A’.

Second part– 65 Pandya Kings of Madurai+ Puranic Kings

Third part — 122 kings beginning with letter ‘B’

Fourth Part- 43 Kings of Vijayanagara Empire + 34 Kings under letter C.

Fifth Part – 106 Kashmiri Hindu Kings

Sixth Part – 30 Satavahana  Kings  + 136 Kings underletter D.

Seventh Part –  35 Tamil Pandya Kings of Sangam Age.

Eighth Part – List of Chera (Kerala) 22 kings of Sangam Age+ Kings listed under E (3),G(37) & H(28)=68kings

Ninth Part- 39 Choza Kings of Tamil Nadu

Tenth Part- 104 kings from Cambodia, Champa, Sri Vjaya Kingdom of Indonesia and Pallava

11th part:Under ‘I’  13 kings+ Under ‘J’ 40 kings+ Under ‘K” 147 kings are listed.

12th Part:– 113 kings of various Indonesian kingdoms are listed.

13th Part –UNDER ‘L’ 14 + UNDER ‘M’ 72 + PANDYA II LIST 36=122 KINGS

14TH PART:Dynasties of Vishnukundina (10), Vakataka (16),Salankayana (4),Andra Ikshvaku (4) and Names under “N”(60)=94 kings.

15th Part:—-Kadamba dynasty – 14 kings, Badami Chalukya -10 kings, Rashtrakuta dynasty kings- 16

Western Chalukya kings – 14, Kakatiya dynasty – 16, Eastern Chalukya kings – 33, Ganga vamsa – 16, Kalachuri dynasty- 14, Pala vamsa -21, Chandela dynasty 34, Gurjara Pratihara -17

Hoysala-13, Alupa – 32 kings are listed = Total 226 kings

In this 16th part – Under R—121 kings and 152 Kings of Nepal = 273 kings

So far we have listed 1875+ 273= 2148 kings!

500px-Ancient_india

Kings under Letter ‘P’ (From R Morton Smith’s Book)

Padmavati, sister of Darsika – 469 BCE

Padmavati vaihotri- 505 BCE

Padmika , wife to Asmaka, 1290 BCE

Paippilada, brother of pippiladi – 880 BCE

1.Palaka ajapala –

2.Palita

3.Panchajana aiksvakava

4.Panchasikha

5.Pancavana asamanjas

6.Pandu of Mahabharata- 1000 BCE

Pandya – 1160 BCEpanini dakshiputra, grammarian,420 BCE

7.Para I Nipa – 1260 BCE

8.Para II Nipa 1200 BCE

9.Atnara hairanyanabha

10.Paramaksa

11.Paramanyu anava – 1520

12.Parasu Raukminiya Karsna –

13.Paravrt yadava – 1340

14.Parigha paravrta 1315

15.Parikshit I Kaurava – 1260 BCE

16.Parikshit II abimanyava – 950 BCE

17.Parikshit I 1490

18.Parikshit of Mahabharata

19Parikshita janamejanya –

20.Pariplava vatsa – 660 BCE

21.Pariyatra aiksvakava 1240 BCEparsva Tirthankara – 792 BCE

22.Parsvamardin, son of Rama –

Parsvin, son of Rama107 BCE

23.Partha arjuna

24.Parvata narada – 1150 BCE

Paryasravas

25.Patusravas caidya 980

Paura

26.Porus 325 BCE

Pauravasi, wife of Gadhi – 1340 BCE

27.Parusti

28.Pijavana pancala – 1110

29.Pindaraka rauhineya

30.Pippiladi

31.Pitayudha

32.Prabha vaidharbi – 1280 BCE

Prabha, wife of Ayu – 1840 BCE

Prabhavati, wife of Udayana – 460 BCE

33.Pracetas Druhyu – 1390 BCE

34.Pracetas anava – 880 BCE

35.Pracetas akisvakava

36.Pracinvat paurava 1740

37.Pradyota of Avanti – 503

38.Pradyumna karsna – 960 BCE

39.Prajani pramsava – 1440

40.Parakasa saunaka – 1080

Pramdvara , wife of Ruru – 100

41.Pramati vaisali – 1080

42.Pramati saunaka – 1025 BCE

43.Pramoda akisvakava 1590 BCE

44.Pramsu manava  1460

45.Prasena

46.Prasenajit aikvakava – 1540

47.Prasenajit of kosala -550

48.Prasenajit naighna yadava – 1120

49.Prastoka sarsnjaya – 1160

50.Prasusruta aiksvakava 925

51.Pratardana of Kasi – 1310 BCE

52.Pratibahu vajri – 920

53.Pratiksatra ksatradharmana -1580

54.Pratiksatra sameya Yadava – 1150 BCE

55.Pratindhaka marava vaideha – 1260

56.Praatipa kaurava – 1090

57Pratiratha

58.Pratiratha tamsu – 1500

59.Pratitasva aiksvakava  790

60.Prativaha yadava – 850

61.Pratoyoman aksvakava – 910

62.Prativyuha

63,Pratyagraha vasava caidya -1170 bc3

64.Prativillasana Andhra -73 CE

65.Pravira paurava -1720

67.Pravira sadyumna ailina – 1250

68.Prasadhra manava -1430

69..Prasata panchala – 1015

70.Prtha gandusi sauri – 1060

71Prtha kunti – 1060 BCE

72.Prthu aiksvakava – 1760

73.Prthu of sitraka – 1100

74..Prthu nipa – 1280

75.Prthu visnvrdhdha –

76.Prthukirti

77.Prthukirti sasabindava – 1500

78.Prthulaksa anava 1050

79.Prthurukman paravrta yadava – 1320

80.Prthusena yadava -940 bce

81.Prthusena nipa 1280

82.Prthsrvasa sasabindava 1500

83.Prthuyasas sasabindava

84.Pulastya trnabindu – 1300

85.Pulindaka sunga – 132

86.Pulomavi – Andhra – 4 to 38 CE

87.Pulomavi vasisthiputra 136

88.Pulomavi sivasri satakarni- 164

89.Pulomavi III – 242

90.Punarvas nalaya yadava -1065

91.Pundarika Aikskvakava – 1330

92.Pundra baleya –

93.Pundra saugandeya sauri –

94.Punika in Avanti – 510

95.Punjaka – 1290

96.Puramjaya (satyakarman) 1450

97.Purana vaisvamitra 1260

98.Purana kasyapa -530

99.Puravasa (Pururuvasu)

100.Purnabhadra vaibhandaki -1040 BCE

101.Purnotsanga Andhra 168 CE

102.Puru yayateya -1780 BCE

103.Puruvaha madhu

104.Prudvant yadava – 1280

105.Purujanau pancala – 1290

106.Purukutsa Aikskvakava –  -1470

107.Purukutsa vishnuvrdhdha

108.Purumidha sauhotra – 1350

109.Purumitra, son of Ajamidha

110.Pururuvas Aila- 1860 BCE

111.Puruvasa, father in law of Kusasva – 1380

112.Puruvasu yadava – 1300

113.Puruvadhya saura – 1270

114.Pusanara -1090

115.Puskara, brother of nala – 1365

116.Puskarin (Brahmaruna)96

117.Puskarini , mother of Vitatha – 1230

118.Puspavant of Magadha – 1110

119.Pusya Aikskvakava – 1o60

120.Pushyadharman ,Mauryan viceroy – 185 BCE

121.Pusyamitra sunga -185 BCE

All the years are in BCE; Dates and Dynasties in Earliest India by R Morton Smith. I don’t agree with the dates given in the book. But we can use it as a starting point and adjust it with the eras one follows.

Here is a list of Kings of Nepal, taken from Wikipedia:—

Yalamber (The Legend King)

King Yalamber

Legendary Kirata Rulers

 

The Kirat Kings

The 29 Kirat kings were as follows :

  1. Yalamber 2. Pavi 3. Skandhar 4. Balamba, 5. Hriti, 6. Humati, 7. Jitedasti, 8. Galinja, 9. Pushka, 10. Suyarma, 11. Papa, 12. Bunka, 13. Swananda, 14. Sthunko, 15. Jinghri, 16. Nane, 17. Luka, 18. Thor, 19. Thoko, 20. Verma, 21. Guja, 22. Pushkar, 23. Keshu, 24. Suja, 25. Sansa, 26. Gunam 27. Khimbu, 28. Patuka, 29. Gasti.

Kushal (Mahabharata period)

Jitedasti (Buddha period)

Sthunko (Asoka Period)

We have lost scores of names of kingss in between the  above rulers.

Thakuri Dynasty

1.Amshu Varma

2.Raghu Deva (869 CE)

3.Gunakama Deva (949 -994)

4.Bhola deva –(1024-1040)

5.Lakshmi kama deva

6.Bhaskara deva

7.Vijayakama deva

8.Bala Deva

9.Padma Deva

10.Nagarjuna Deva

11.Shankara Deva (1067-1080 CE)

12.Bama Deva

13.Harsha Deva

14.Siva Deva III (1099-1120)

15.Mahendra Deva

16.Mana Deva

17.Narendra Deva

18.Rudra Deva

19.Amruta Deva

20.Ratna Deva

21.Someswara Deva

22.Gunakama II Deva

24.Lakshmikama III Deva

25.Vajayakama II Deva

1st_king

First Legendary King of Nepal

Lichchavi Vamsa

1)185  Jayavarmā (also Jayadeva I)

2)Vasurāja (also Vasudatta Varmā)

3)c. 400 Vṛṣadeva (also Vishvadeva)

4)c. 425 Shaṅkaradeva I

5)c. 450 Dharmadeva

6)464-505 Mānadeva I

7)505-506 Mahīdeva (few sources)

8)506-532 Vasantadeva

9)Manudeva (probable chronology)

10)538 Vāmanadeva (also Vardhamānadeva)

11)545 Rāmadeva

12)Amaradeva

13)Guṇakāmadeva

14)560-565 Gaṇadeva

15)567-c. 590 Bhaumagupta (also Bhūmigupta, probably not a king)

16)567-573 Gaṅgādeva

17)575/576 Mānadeva II (few sources)

18)590-604 Shivadeva I

19)605-621 Aṃshuvarmā

20)621 Udayadeva

21)624-625 Dhruvadeva

22)631-633 Bhīmārjunadeva, Jiṣṇugupta

23)635 Viṣṇugupta – Jiṣṇugupta

24)640-641 Bhīmārjunadeva / Viṣṇugupta

25)643-679 Narendradeva

26)694-705 Shivadeva II

27)713-733 Jayadeva II

28)748-749 Shaṅkaradeva II

29)756 Mānadeva III

30)826 Balirāja

31)847 Baladeva

32)877 Mānadeva IV

nepal-stamp

Malla rulers of the whole Kathmandu valley

  1. Ari Deva1201 – 1216
  2. Abhaya Malla1216 – 1235
  3. Ranasura1216
  4. Jayadeva Malla1235 – 1258
  5. Jayabhima Deva1258 – 1271
  6. Jayasimha Malla1271 – 1274
  7. Ananta Malla1274 – 1310
  8. Jayananada Deva1310 – 1320
  9. Jayari Malla1320 – 1344
  10. Jayarudra Malla1320 – 1326
  11. Jayaraja Deva1347 – 1361
  12. Jayarjuna Malla1361 – 1382
  13. Jayasthiti Malla1382 – 1395
  14. Jayajyotir Malla1395 – 1428
  15. Jayakiti Malla1395 – 1403
  16. Jayadharma Malla1395 – 1408
  17. Jayayakshya Malla1428 – 1482

RaniOfNepal1920

Rani of Nepal, 1920

Malla rulers of Kantipur

  1. Ratna Malla1482 – 1520
  2. Surya Malla1520 – 1530
  3. Amara Malla1530 – 1538
  4. Narendra Malla1538 – 1560
  5. Mahendra Malla1560–1574
  6. Sadashiva Malla1574–1583
  7. Shivasimha Malla1583–1620
  8. Lakshminarasimha Malla1620 – 1641
  9. Pratap Malla1641–1674
  10. Chakravartendra Malla1669
  11. Mahipatendra Malla1670
  12. Jayanripendra Malla1674–1680
  13. Parthivendra Malla1680–1687
  14. Bhupalendra Malla1687–1700
  15. Bhaskara Malla1700–1714
  16. Mahendrasimha Malla1714–1722
  17. Jagajjaya Malla1722–1736
  18. Jaya Prakash Malla1736–1746, 1750–1768
  19. Jyoti Prakash Malla1746–1750

nepal-locator6

Malla rulers of Lalitpur

  1. Purandara Simha1580 – 1600
  2. Harihara Simha1600 – 1609
  3. Shiva Simha(King of Kantipur) 1609 – 1620
  4. Siddhi Narasimha1620 – 1661
  5. Srinivasa Malla1661 – 1685
  6. Yoga Narendra Malla1685–1705
  7. Loka Prakash Malla1705–1706
  8. Indra Malla(Purandara Malla) 1706–1709
  9. Vira Narasimha Malla1709
  10. Vira Mahindra Malla1709–1715
  11. Riddhi Narasimha1715–1717
  12. Mahindra Simha(King of Kantipur) 1717–1722
  13. Yoga Prakash Malla1722–1729
  14. Vishnu Malla1729–1745
  15. Rajya Prakash Malla1745–1758
  16. Vishvajit Malla1758–1760
  17. Jaya Prakash Malla(King of Kantipur) 1760–1764
  18. Ranajit Malla(King of Bhaktapur) 1762–1763
  19. Dala Mardan Shah1764–1765
  20. Tej Narasimha Malla1765–1768

Jijabai-blessing-shivaji-

Jijabhai blessing Veera Shivaji of Maharashtra!

Malla rulers of Bhaktapur

  1. Raya Malla1482 – 1519
  2. Prana Malla1519 – 1547
  3. Vishva Malla1547 – 1560
  4. Trailokya Malla1560–1613
  5. Jagajjyoti Malla1613–1637
  6. Naresha Malla1637–1644
  7. Jagat Prakasha Malla1644–1673
  8. Jitamitra Malla1673–1696

9.Bhupatindra Malla 1696–1722

10.Ranajit Malla 1722–1769

(Pictures are taken from various sites;thanks)

நாகரத்தினம் பற்றி வராகமிகிரர் கூற்று!!

ruby

மாணிக்கம்/ கெம்பு

Research Paper written by London swaminathan

Research Article No.1647; Dated 13th February 2015.

 

கடந்த சில நாட்களில் முத்து, வைரம், ரத்தினக் கற்களின் எடை, விலை ஆகிய தலைப்புகளில் வராஹமிகிரர் கருத்து என்ன என்பதை அவரது சம்ஸ்கிருதக் கலைக் களஞ்சிய நூலான பிருஹத் சம்ஹிதையில் இருந்து கண்டோம். இன்று மரகதம், மாணிக்கம், நாகரத்தினம் பற்றி அவர் செப்புவதைக் காண்போம்.

வராகமிகிரர் 66 ஸ்லோகங்களில் ரத்தினக் கற்கள் பற்றிப் பாடினார். அவற்றில் முத்து பற்றி மட்டும் 36 பாடல்கள் பாடிவிட்டு, மரகதம் பற்றி ”ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு” — என்று ஒரே ஒரு பாடலோடு முடித்துவிட்டார்! இதோ அது:–

Group-emerald

மரகத மகிமை

சுக வம்சபத்ர கதலி சீரிஷ குசுமப்ரபம் குணோபேதம்

சுர பித்ரு கார்ய மரகதம் அதீத சுபதாம் ம்ருனாம் விஹிதம்

 

இதன் பொருள்:– கிளியின் சிறகு, மூங்கில் இலை வாழைத் தண்டு (சாம்பல்/மஞ்சள்), சீரிச மலரின் நிறம் (வெள்ளை/மஞ்சள்) ஆகிய வர்ணங்களில் உள்ள மரகதக் கற்கள் நல்ல ஜாதிக் கற்கள். இதை தெய்வங்களைக் கும்பிடும்போதும், முன்னோருக்கான கிரியைகளைச் செய்யும் போதும் அணிந்தால் மிகவும் நன்மை பயக்கும்.

தெய்வ வழிபாடு, இறந்தோர் வழிபாடு ஆகிய காலங்களில் ரத்தினம் அணிவது அற்றி இந்த ஒரு ஸ்லோகம் மட்டுமே உள்ளது.

நாகரத்தினக் கல் உண்மையா?

மாணிக்கக் கல் (சிவப்புக் கல்), முத்து பற்றிய பாடல்களில் நாகரத்தினம் பற்றிய விவரங்களைத் தருகிறார்:

நாகரத்தினக் கல் உண்மை என்றே வராஹமிகிரர் நம்புகிறார். ஆனால் விஞ்ஞான முறைப்படி இது வரை யாரும் கண்டதில்லை. நாகரத்தினக் கல் தருவதாகச் சொல்லி பலர் மோசடி செய்து வருவதால் இதைப் படிக்கும் எமது வாசகர்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்.

இதோ வராகமிகிரரின் கூற்று:

ப்ரமர சிகி கண்ட வர்ண: தீபசிகாசப்ரப: புஜங்கானாம்

பவதிமணி கில மூர்த்தனியோஅனர்கய சஹ விக்னபா:

——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82

இதன் பொருள் என்ன?

பாம்புகளின் தலையில் ஒரு ரத்தினம் இருப்பதாச் சொல்லுவர். அது வண்டு, மயிலின் கழுத்து நிறம் போல பளபளக்கும்;  ஒரு விளக்கின் தீ ஜ்வாலை போல ஒளியை உமிழும்; அது விலை மதிக்க ஒண்ணாதது.

snake worship

இதற்கு அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார்:

நாகரத்தினத்தை அணியும் மன்னனுக்கு விஷத்தினாலோ நோய்களினாலோ ஆபத்து வராது. அவனது நாட்டில் இந்திரன் மழை பொழிந்து வளம் குவிப்பான். இந்த நாகரத்தினத்தின் மகத்தான சக்தியால் எதிரிகளை நிர்மூலம் (வேர் அறுப்பான்) செய்வான்.

நாகரத்தினக் கல்லை ஷேக்ஸ்பியர் கூட ‘’ஆஸ் யூ லைக் இட்’’ — நாடகத்தில் குறிப்பிடுகிறார். நாகரத்தினம் உண்மையா என்று நான் எழுதிய பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் விவரம் காண்க:

Please read my research paper, “How did Shakespeare know about the Indian Cobra Jewel-Nagaratna?”– Posted on 1 October 2011.

http://swamiindology.blogspot.co.uk/2011/10/how-did-shakespeare-know-about-indian.html

வராகமிகிரர் மேலும் கூறுவதாவது: தக்ஷக, வாசுகி வம்சத்தில் வந்த பாம்புகளின் தலையில் ஒளிவீசும் நீல நிற முத்துக்கள் இருக்கும். இந்திரன் பெய்யும் மழை, இந்த பூமியில் அதிர்ஷ்டம் மிக்க இடத்தில் வெள்ளிப் பாத்திரத்தில் முத்தாகப் பொழிவதுண்டு. அவைகளும் பாம்பிடம் இருந்து வந்த முத்துகளே என்று அறிக!

இத்தகைய பாம்பு முத்துக்களை மன்னர்கள் அணிந்தால் எதிரிகள் அழிவர். மன்னரின் புகழும் வெற்றியும் ஓங்கும்.வெற்றி கிட்டும்.

ஆக, முத்து என்ற அத்தியாயத்தில் பாடுகையில் பாம்பின் தலை முத்து பற்றியும், மாணிக்கம் என்னும் அதிகாரத்தின் கீழ் பாடுகையில் நாகரத்தினம் என்றும் இரண்டு வகைக் கற்கள் பற்றிப் பகரும் பிருஹத் சம்ஹிதை!

நாகப்பாம்பு

எனது விளக்கம்:

நாகரத்தினம் என்பது பாம்புகளின் அகச்சிவப்பு உணரும் உறுப்பைக் குறித்துச் சொல்லி  இருக்கலாம்; பிற்காலத்தில் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு நாகரத்தினக் கல் என்று சொல்லிவிட்டனர். பாம்புகளுக்கு காதுகள் கிடையாது; கண்களே காதுகள் என்பதால் தமிழில் கட்செவி (கண்+செவி) என்றும் சம்ஸ்கிருதத்தில் சூன்ய கர்ண என்றும் சொல்லுவர். இருட்டில் இரை தேட அகச்சிவப்பு கதிர்கள் உதவும் .இப்பொழுது இரவு நேரத்தில் எதிரிகள் நடமாட்டத்தைக் காண அகச் சிவப்பு (இன்ப்ரா ரெட் பைனாகுலர்ஸ்) பைனாகுலர்களை ராணுவத்தினர் பயன்படுத்துகின்றனர். இது பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரையை “தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்”– (நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை, ஆண்டு 2009) புத்தகத்தில் காணுங்கள். இந்தப் புத்தகம் 1990-ம் ஆண்டுகளில் நான் லண்டனில் இருந்து வெளியான மேகம் பத்திரிக்கையில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு.

மாணிக்கக் கல்=குருந்தம்=குருவிந்தம்=கெம்பு

மாணிக்கம் என்னும் சிவப்புக் கல் — குருவிந்தம், ஸ்படிகம், சௌகந்திகம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கிறது (சௌகந்திகம் என்பது கந்தகக் கல்)

மாணிக்கக் கற்களின் விலை (1500 ஆண்டுகளுக்கு முன்)

ஒரு பலம் ( 4 கார்ஷா) எடையுள்ள கல்= 26,000 கார்ஷாபணம்

அரைப் பல கல்= 20,000 கார்ஷாபணம்

ஒரு கார்ஷா எடை= 6000 கார்ஷாபணம்

எட்டில் ஒரு குந்துமணி எடை= 3000 கார்ஷாபணம்

நாலில் ஒரு மாசா எடை கல் = 1000 கார்ஷாபணம்

(இதைப் புரிந்து கொள்ள நேற்று கொடுத்த எடைக் கல் வாய்ப்பாட்டைப் பார்க்கவும்)

குறைகள் உள்ள, ஒளி குன்றிய, மட்டான பிரகாசம் உடைய கற்களுக்கு விலை என்ன விகிதாசாரத்தில் குறையும் என்றும் வராகமிகிரர் விளக்கி இருக்கிறார்.

ஆர்வம் உடையோர் 66 பாடல்களையும் அதற்கு உரைகாரர்கள் எழுதிய வியாக்கியானங்களையும் படித்துப் பயன் அடைக!

முடிவுரை:

யாரேனும் எங்கேனும் நாகரத்தினக் கல் இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடம் ஏமாந்து போய்விடாதீர்கள். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் ஏதோ ஒரு உவமையாகத் தான் இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். நாக ரத்தினம் என்பது உவமையே அன்றி உண்மை அல்ல!! அல்ல!!

எனது பழைய கட்டுரை நிலாசாரல்.காம்  – இல் வெளியானது:–

Ruby_Jewel

தமிழ் இலக்கியம் கூறுவது என்ன?

பாம்புகளிடத்தில் நாகரத்தினம் என்னும் சிவப்புக் கல் இருக்கும் என்றும் இரவுநேரத்தில் இரை தேடுவதற்கு பாம்பு இதைப் பயன்படுத்தும் என்றும் கூறுவர். சங்கத் தமிழ் நூல்களிலும், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி, பதினென்கீழ்கணக்கு நூல்களிலும் நாகரத்தினம் பற்றிய குறிப்புகள் உண்டு. வடமொழி நூல்களிலும் ஏராளமான குறிப்புகள் உண்டு. இது இங்கிலாந்து வரை பரவி சேக்ஷ்பியர்(Shakespeare) கூட ஒரு நாடகத்தில் குறிப்பிட்டுள்ளார். அகநானூறு 72,92,138,192, புறநானூறு 172, 294 மற்றும் பல நூல்களில் பல இடங்களில் இதைக் காணலாம். காளிதாசர் முதல் சேக்ஷ்பியர் வரை நாகரத்தினத்தின் புகழைப் பாடினர். இதுவரை நாகரத்தினம் கிடைக்கவில்லை. நாகரத்தினம் என்பது என்ன என்பதை ஊகித்தறியலாம்.

நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த
மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும்”

அகம் 72

உருமுச் சிவந்து எறிந்த உரன் அழிபாம்பின்
திருமணி விளக்கிண் பெறுகுவை”

அகம் 92

பாம்புகள் தனது இரையைப் பார்க்கும் போது அவைகளின் கண்ணுக்கு அவை சிவப்பாகவே தெரியும்! அதுதான் நாகரத்தினம்! இது எப்படி என்பதைக் கீழே காணலாம் :-

பாம்புகளுக்கு தமிழில் நிறைய பெயர்கள் உண்டு. இவை ஒவ்வொன்றிலும் ஒரு ஆழமான பொருளும் உண்மையும் அடங்கியுள்ளது. இன்று அதிநவீன கருவிகளைக் கொண்டு உயிரியல் அறிஞர்கள் கண்டுபிடித்ததை தமிழர்கள் நுட்பமான பார்வையால் கண்டுபிடித்துள்ளனர்.

பாம்புக்கு ‘கட்செவி’ என்று தமிழில் ஒரு பெயர் உண்டு. கட்செவி என்றால் கண்ட செவி என்று பொருள். பாம்புக்கு கண்கள்தான் செவி (காது) என்றும் காதுகள்தான் கண் என்றும் இரண்டுவிதமாக இதற்குப் பொருள் கூறலாம் .நவீன அறிவியல் இதை உண்மை என்றே கூறுகிறது.

corundumpink

குருவிந்தம் (குருந்தம்)

இரவில் இரைதேடுவதற்கு பாம்புகள் அகச் சிவப்பு கதிர்களை (Infra red rays) பயன்படுத்துகின்றன. இருட்டு நேரத்தில் எலி, தவளை போன்ற பிராணிகளை நாம் பார்க்கமுடியாது. ஆனால் பாம்புகள் அவைகளை நாகரத்தினம் போல சிவப்பாக காணும். இது எப்படி என்றால் எலி,தவளை ஆகியவற்றின் உடல்வெப்பத்தைக் கொண்டு அவை இருக்குமிடத்தை பாம்புகள் அறிந்துகொள்ளும். இந்த அகச்சிவப்பு கதிர்களை பகுத்தறியும் உறுப்பு பாம்பின் கண்களுக்கு அருகில் உள்ளது. இது கண்ணுக்குப் பக்கத்தில் ஒரு குழி போன்ற உறுப்பில் உள்ளது. இதைக் கண்டுபிடித்த தமிழன் அதற்கு ‘கட்செவி’ எண்று பெயரிட்டான்!

நாகரத்தினம் பற்றிய செய்திக்கு இந்தக் கட்செவிதான் காரணம். ஏனெனில் இரவு நேரத்தில் பாம்புக்கு இரைகள் பெரிய சிவப்புக் கல் போலவே தோன்றும். பாம்புகள் தன்னைச் சுற்றியுள்ள வெப்பநிலை சிறிது மாறினாலும் கண்டுபிடித்துவிடும். மேலும் நாக்கை வெளியே நீட்டி நீட்டி உள்ளே இழுப்பதால் காற்றிலுள்ள வாசனையைப் பிடித்து வாய்க்குள் உள்ள நரம்பு மூலம் பிராணிகள் இருப்பதை அறியும். இதை அறியும் உறுப்புக்கு ஜாகப்சன் உறுப்பு (JACOBSONS ORGAN) என்று பெயர்.

opal
ஒபல் — ஓரளவு மதிப்புடைய ரத்தினக் கற்கள்

பாம்புகளுக்கு கண் பார்வையும் குறைவு! காது கேட்பதும் குறைவு. ஆனால் அகச்சிவப்பு கதிர்களைக் கொண்டு வெப்ப நிலை மாற்றத்தை அறியும் உறுப்புகள் (HEAT PITS) உண்டு. கண்ணுக்கு அருகிலுள்ள இந்தக்குழிகள் காதுகளின் பணியைச் செய்வதால் இதற்கு கட்செவி (கண் காது) என்ற பெயர் ஏற்பட்டது.

ஆக, ஜாகப்சன் உறுப்பு,ஹீட் பிட்ஸ் (வெப்பக் குழிகள்), அகச் சிவப்புகதிர்கள் (Infra Red Rays) மூலம் பார்ப்பது இவைகளை வைத்துத்தான் நாகரத்தினம் பற்றிய கதைகள் எழுந்துள்ளன! இரவில் இரை தேட இந்த விசேஷ உறுப்புகளே பயன்படுகின்றன. நாகரத்தினம் என்று தனியாக ரத்தினக்கல் எதுவும் இல்லை!

-ச.சுவாமிநாதன் M.A (LIT), M.A (HIST)
நிலாச்சாரல்

amethist4

அமெதிஸ்ட்

agate

அகேட்

எவ்வழி உலகம் அவ்வழி அனைவரும்! உலகின் போக்கு!

NRF-cow-herd960

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. எவ்வழி உலகம் அவ்வழியே அனைவரின் வழியும்!

 

ஆய்வுக்கட்டுரை எண்: 1646; தேதி 13 பிப்ரவரி 2015

எழுதியவர் ச.நாகராஜன்

 

நியாயங்களைத் தொகுக்கப் போனால், தொகுப்பானது சுமார் 900 நியாயங்களையும் தாண்டி விடும். பல்வேறு நூல்களில் மேற்கோள்களாக எடுக்கப்பட்டவைகளைத் தொகுத்தாலோ அது ஒரு பெரிய நூலாக ஆகி விடும். மேலும் சில முக்கியமான நியாயங்களை

ப் பார்ப்போம்:-

खलमैत्रीन्यायः

khalamaitri nyayah

கலமைத்ரி நியாயம்

மைத்ரி – நட்பு

 

ஒரு வில்லனை- அயோக்கியனை- நண்பனாகக் கொள்வது பற்றிய நியாயம் இது.

ஒரு அயோக்கியனின் நட்பு ஆரம்பத்தில் பிரமாதமாக இருக்கும். போகப்போக அதன் தீவிரம் குறைவு படும். ஒரு கெட்டவனின் சிநேகம் மண்ணாங்கட்டி போல நம்புதற்கு உரியது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட வரும் நியாயம் இது.

stars-and-moon

தேய் பிறை நிலவின் படம்

திருக்குறளில் இதே கருத்தைக் காணலாம்:

 

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு      – திருக்குறள் 782

நாலடியாரில் 125 பாடல் இதனுடன் ஒப்பு நோக்குதற்கு உரியது:

 

“பெரியவர் கேண்மை பிறை போல நாளும்,

வரிசை வரிசையா நந்தும் – வரிசையால்

வான் ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே

தானே சிறியார் தொடர்பு”    – நாலடியார் பாடல் 125


pigeon
புறாவும் தானியக் களஞ்சியமும்

खलेकपोतन्यायः

khalekapota nyayah

கலேகபோத நியாயம்

தானியக்களஞ்சியமும் புறாக்களும் என்ற நியாயம் இது.

 

ஒரு தானியக் களஞ்சியம் இருந்தது. பெரிய புறாக்களும் குஞ்சுப் புறாக்களும் அங்கு சென்று வேண்டியபோதெல்லாம் வயிறு முட்ட தானியங்களைச் சாப்பிட்டுக் காலம் கழித்தன.அதன் அடிப்படையில் எழுந்த நியாயம் இது.

ஆக இது போல நல்ல மனமுடைய ஒரு பெரும் தனவந்தன் இருந்தால் அவனை அண்டி தங்கள் தேவைகளை ஏழை எளியோர் பூர்த்தி செய்து கொள்வர்.

அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் சொல்லப்படும் நியாயம் இது..

 

.

wood apple

விளாம் பழம்

गजभुक्तकपित्थन्यायः

gajabhuktakapittha nyayah

கஜபுக்தகபித்த நியாயம்

 

கஜம் – யானை கபித்தம் – விளாம்பழம்

யானை சாப்பிட்ட விளாம்பழ நியாயம் இது.

யானை சாப்பிட்ட விளாம்பழக் கதை அனைவரும் அறிந்த ஒன்று தான். யானை விளாம்பழத்தைச் சாப்பிட்டால் அது உள்ளே இருக்கின்ற பழத்தைச் சாப்பிட்டு விடும். ஆனால் வெளியே பார்த்தால் ஓட்டுடன் பழம் முழுவதுமாக அப்படியே இருக்கும். ஆகவே யானை சாப்பிட்ட விளாம்பழம் போல என்ற பழமொழி வழக்கில் உள்ளது.

பார்வைக்குப் பெரிதாகத் தோன்றும் ஒருவன் உள்ளீடற்று இருக்கும் போது, இந்த நியாயத்தைச் சொல்லி அவன் சுட்டிக் காட்டப்படுகிறான்.


elephant

गतानुगतिको लोकःन्यायः

gatanugatiko lokah nyayah

 

கதானுகதிகோ லோக: நியாயம்

குருட்டுத்தனமாக ஒரு விஷயத்தைப் பின்பற்றுவதைக் குறிக்கும் நியாயம் இது.

ஒரு லேடஸ்ட் ஃபாஷன் சிலரால் பின்பற்றப்படுகிறது என்றால் ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியாமல் அதை அப்படியே குருட்டுத்தனமாகப் பின்பற்றுவது உலக வழக்கமாகி விட்டது. அது சரியா தவறா என்ற ஆராய்ச்சியெல்லாம் எழுவதில்லை. உலகம் எவ்வழி அவ்வழி நம் வழி என்ற நிலைப்பாடில் எழும் நியாயம் இது. லோகம் என்ன செய்கிறதோ அதை அனுசரி என்ற இந்த நியாயத்தைச் சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம்!


Blind Faith- Blind leading Blind

குருடன் குருடனைப் பின்பற்றுதல்

गोबलीवर्दन्यायः

gobalivarda nyayah

 

கோபலிவர்த நியாயம்

பசு மந்தையும் காளையும் என்னும் நியாயம் இது.

 

சாதாரணமாக பசு என்ற வார்த்தை இலக்கண ரீதியாக ஆண் மாட்டையும் குறிக்கும்; பெண் மாட்டையும் குறிக்கும். ஆனால் பசு என்றால் பெண் மாட்டையே நாம் குறிப்பிடுகிறோம். ஆண் மாட்டை காளை என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறோம்.

cow_herd

இதே போல ஒரு வார்த்தையை நாம் வழக்கில் ஒத்துக் கொண்டாலும் கூட அது எதை நிஜமான பொருளாகக் கொண்டிருக்கிறதோ அந்தப் பொருளால் வழங்கப்படுவதில்லை.

இது போன்ற தகுந்த சந்தர்ப்பத்தில் இந்த நியாயம் கையாளப்படுகிறது.

bull-and-cow

பசுவும் காளையும் படம்

***************

Perfume Making in India! 2000 years ago!

costus

Costus plant

Research Paper written by London swaminathan

Research Article No.1645; Dated 12th February 2015.

Tamil and Sanskrit literature is replete with references to Sandal paste and perfumes from flowers, eaglewood/agar wood tree, musk deer, civet cat, Vettiiver and several other plants. Kamasutra of Vatsyayana lists making perfumes as one of the 64 arts/ subjects allocated to women. No wonder Varahamihira devoted one full chapter for perfume making!

Only when people are civilized and fulfilled the three basic needs of Food, Shelter and Clothing, they can think of making scent and perfumes. Tamil literature and Kalidasa’s works show that common men and women were using perfumes around first century BCE. This shows that the India civilization was highly advanced in India 2500 years ago. The jewellery seen on the sculptures of Barhut, Nagarjunakonda, Amaravati and Ajanta paintings show that they were highly skilled in metallurgy and chemistry.

The commentator on the chapter 77 in Brahat Samhita quotes more than 40 couplets from Nighantu on this subject—perfumes!

Varaha mihira even advises people with grey hair to dye the hair every day! He explains the method of making hair dyes. Now the hair dye and perfume industries make billions of dollars profits every year. Foreign invasions destroyed the ancient industries of India. But even today India is a major exporter of essence of Jasmine, Rose, Vettiver, sandal and other flowers.

Rubia Cordifolia

Rubia cordifolia

Here are some slokas from Brhat Samhita (Chapter 72):

A scented water fit for the washing of kings’ head is prepared with equal quantities of woody cassia, costus (Saussura lappa), Renuka (Piper aurantiacum), Nalika (Hisbiscus cannabius), Rasa or Bola (Commiphora myrrha), Tagara (valeriana wallichi), Valaka (Aporosa lindyana), Nagakesara (Meusa ferrea) and Patra (laurus cassia).

Look at the number of plants used. They have a complete knowledge of Botany and Chemistry.

Shorea_robusta.jpg(SAL)

Shorea robusta (Sal Tree)

Hair Oil Preparation!

A hair oil having the perfume of Champaka flower (Michelia champaka) is made by mixing together equal quantities of the powders of Manjistha (Rubia Cordifolia), Vyagranakha ( a tree, in Tamil it is called Pulinaka Kondrai)), Nakha (shell perfume), woody cassia, Costus, Bola and the whole thing being mixed with the oil of Sesamum indicum, being heated by the Sun’s rays!

Even today Tamils use sesamum (Gingelly oil) oil for oil bath every week. Oil bath is applying oil over the body and take a bath in hot water. The oil is washed with soap nut powder. Keralites use coconut oil almost every day. Traditional Perfume products for mixing with the oil s readily available from Sri villiputtur (Andal powder) and other places. I mention all these to show that the 2000 year old tradition is continued until today.

Tagetes_erecta_'Inca_Gold'

Tagetes erecta

Scent to aggravate passion!

A scent called Smaroddipana to aggravate passion is mentioned by Varahamihira. It is prepared with equal quantities of Patra (Laurus cassia), juice of Turuska (Tagetes erecta), Vala (Aporosa lindiyena) and Tagara (Valeriana wallichi). We may call it “Viagra Oil”! He gives the ingredients for another perfume named Bakula.

Following plants are used in the perfume industry according to Brhat Samhita:

Sandal ( Santalum album)

Jatiphala (Myristica fragrans)

Coriander ( Coriander sativum)

Satapushpa (Pimpinella anisum)

Kunduruka (Boswellia serrata)

Priyangu ( Aglaiya roxburghiana)

Musta bulbs (Cyperus rotunda)

Jatamamsi (Nardostachys jatamansi).

Many delightful perfumes are made from

Haritaki (Terminalia chebula)

Ghana (Cyperus plant) and the plants mentioned already.

There are nine ingredients with which we can make 19 or 36288 varieties of perfumes. i.e.changing the quantity of ingredients, says the commentator.

vettiver

A perfume is named Kopachada (Anger Lid). Just to control the anger and cool down. It is made up of four parts of each of sugar, benzoin, and Cyperus rotundus, two parts of turpentine and resin (shorea robusta= Sal tree) as well as of Nakha and Guggulu, mixed with camphor powder and rolled into a ball with honey.

He gives the formula for Gandharnava (Perfume ocean). One needs sixteen ingredients to prepare it.  Most of the ingredients are mentioned already. By permutation combination with the same sixteen ingredients 96 different varieties are made, says the commentator. The 16 ingredients are :

Cyperus rotundus, Aporosa lindiyena, benzoin, camphor, Vettiveria zizanoides, Mesua ferrea, pulinakha, Bryonopsis laciniosa, Aquilaria agallocha, Randia dumetorum, shell perfume, Valeriana wallichi, Coriander, Hedychium spicatum, Scirpus articulates, and Sandal (Chandana)

Cyperus rotundus

cyperus rotundus

Varahamihira himself mentioned a big number of perfumes in the next few slokas. The total number of perfumes resulting from the sixteen ingredients being mixed in all possible combinations is 174720! (i.e.4000+70000+100 000+720). This number is arrived at by taking different quantities of each ingredient.

Mathematics plays a big part in almost all branches of Sanskrit learning.

In the same chapter he gives the formula for scented tooth sticks (tooth pick), tooth powder, Betel leaves and Betel nuts.

Chewing betel leaves with betel nuts helps in digestion. Caraka also praised this. Moreover betel nuts contains some essential minerals required for the body.

valeriana-wallichi_250x250

valeriana wallichi

Conclusion:

France leads the world in the perfume industry. They are far advanced in this field. It is difficult to beat them by using these native ingredients only. But we were the pioneers in this filed once. The subjects chosen by Varahamihira show what Indians were up to 2000 years ago! The number of plants used show their knowledge in botany. Some of them can still serve the poor men With government’s subsidy they can make and supply “poor men’s perfume”!

Myristica_fragrans-Sri_Lanka_(2)

Myristic fragrans (wikipedia picture)

ரத்தினங்களை அணிவதால் என்ன கிடைக்கும்? வராஹமிகிரர் பதில்!!

nose_ring_wikipedia

ஆராய்ச்சிக் கட்டுரை எண் 1645; தேதி 12 பிப்ரவரி 2015

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்

 

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் “பெர்fயூம் செய்வது எப்படி?” என்பது உள்பட 106 தலைப்புகளில் எழுதியுள்ள அரிய பெரிய விஷயங்களைக் கடந்த சில நாட்களில் கண்டீர்கள். இன்று முத்துக்கள் பற்றிப் பார்ப்போம்.

 

முத்துக்கள் உற்பத்தியாகும் எட்டு இடங்கள்:

த்விப: புஜக: சுப்தி: சங்க: அப்ர: வேணு: திமி: சூகர: சூதானி

முக்தா பலானி ஏஷாம் பஹூ சாது ச சுப்திஜம் பவதி

——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81

பொருள்: யானை, பாம்பு, முத்துச் சிப்பி, சங்கு, மேகம், மூங்கில், திமிங்கிலம், காட்டுப் பன்றி ஆகிய இடங்களில் முத்து கிடைக்கும்.

வராக மிகிரர் இப்படிச் சொன்னாலும் விஞ்ஞானிகள் அறிந்த முத்துக்கள் கடலிலும் சில இடங்களில் ஆறுகளிலும்  கிடைக்கும் முத்துக்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாதவையே. வராஹ மிகிரரும் தனக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் கருத்துக்களைத் தான் தொகுத்திருப்பதாகவே கூறுகிறார். அதனால் தன் நூலுக்கே சம்ஹிதை=தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளார்.

pearl-large

முத்து கிடைக்கும் இடங்களைக் குறிப்பிடுகையில் தாம்ரபரணி நதி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளையும் பரளி என்னும் இடத்தையும் இவர் குறிப்பிடுதல் சிறப்புடைத்து.

வராகமிகிரருக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னரே- இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர் — சாணக்கியன் எனப்படும் உலக மகா அறிவாளிப் பிராமணன் எழுதிய அர்த்தசாஸ்திரத்திலும் ‘பாண்டிய கவாடம்’ என்று பாண்டிய நாட்டு முத்தை சிறப்பிகின்றான்.

முத்து என்ற சொல்லும் பரல் (பேர்ள்) என்ற சொல்லும் சம்ஸ்கிருத வேத கால (முக்தா) இலக்கியங்களிலும், ஆங்கிலத்திலும் இருப்பது தமிழர் பெருமைப்படவேண்டிய விஷயம். பரளி என்ற ஊரின் பெயரில் இருந்து பரல் (முத்து) என்ற சொல் உண்டாகியதா அல்லது முத்து என்ற ரத்தினமே பரளி என்ற  பெயரை உண்டாகியதா என்பதையும் ஆராய வேண்டும். பரளி என்ற ஊரும் ஆறும் கேரளத்தில் உள்ளது. லட்சத் தீவுகளில் பரளி  என்ற தீவும் உளது.

வேத கால இலக்கியங்களில் வரும் முத்து பற்றிய சத்தான விசயங்களை கீழேயுள்ள எனது ஆய்வுக்கட்டுரையில் கண்டு கொள்க:

Pearls in the Vedas and Tamil Literature- posted by me on 17 May 2014

http://swamiindology.blogspot.co.uk/2014/05/pearls-in-vedas-and-tamil-literature.html

pearl-oyster

ரத்னங்களின் குணங்கள்

ஸ்னிக்த: ப்ரபானுலேபி ஸ்வச்சோ அர்சிஷிஷ்மான் குரு: சுசம்ஸ்தான:

அந்த: ப்ரபோ அதிராகோ மணிரத்னகுணா: சமஸ்தானாம்

—–(பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82)

ரத்தினக் கற்களின் சிறப்புத் தன்மை என்ன? ஒரு கல் சிறப்பானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது:- அது ம்ருதுவாக வழுவழுப்பானதாக இருக்கவேண்டும். தடவிப்பார்த்தால் கையில் எதுவும் நெருடக் கூடாது. கல்லுக்குள் மாசு, மரு, குற்றம், குறை இருக்கக் கூடாது. மின்னல் (டால்) அடித்து பளபளக்க வேண்டும்; ஒளிவீச வேண்டும்.  கனமாகவும் நல்ல வடிவத்திலும் இருக்க வேண்டும். மாணிக்கக் கல்லானால் நல்ல சிவப்பு வர்ணத்தில் இருக்கவேண்டும்.

என்ன கிடைக்கும்?

ஏதானி சர்வானி மஹா குணாணி சுதார்த்த சௌபாக்ய யசஸ்கரானி

ருக்சோக ஹந்த்ருனி ச பார்த்திவானாம் முக்தாபலானி ஈர்ச்சித காமதானி — (பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81)

இந்த ஸ்லோகம் முத்து பற்றிய அத்தியாயத்தில் வருகிறது. இது எல்லா ரத்தினக் கற்களுக்கும் பொருந்தும் என்பது உரைகாரர்களின் கருத்து.

இதன் பொருள் என்ன? எல்லா வகை முத்துக்களும் மிகவும் மதிப்பு மிக்கவை. இவைகளை அணிவோருக்கு புத்ர (மகன்கள்) பாக்கியம், பணம், புகழ், செல்வாக்கு ஆகியன வந்து குவியும்; நோய்களையும் துக்கத்தையும் அழிக்கும்; அரசர்கள் அணிந்தாலோ இஷ்டப்பட்டது எல்லாம் கிடைக்கும்.

குறையுள்ள வைரங்கள் படுகொலைகளை உருவாக்கும் என்பதால் கிருஷ்ண பரமாத்மாவே சியமந்தக மணியை கொடுத்துவிட்டதையும் அது இப்பொழுது அமெரிக்காவில் மியூசியத்தில் முடங்கிக் கிடப்பதையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏற்கனவே எழுதிவிட்டேன்:
1)Lord Krishna’s Diamond in USA? –  posted on 23 April 2012

https://tamilandvedas.com/2012/04/23/krishnas-diamond-in-usa/

2)அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?

http://swamiindology.blogspot.co.uk/2012/05/blog-post.html

3)Gem Stones in Kalidasa and Tamil Literature

13th February 2012

http://swamiindology.blogspot.co.uk/2012/02/gem-stones-in-kalidasa-tamil-literature.html

mthangi sevai

அம்மனுக்கு முத்து அங்கி

தென் இந்தியக் கோவில்களில் முத்து மாலை, முத்து அங்கி போட்டு சுவாமியையும் அம்மனையும் அலங்கரிப்பது விஷேசமான ஒன்று. இதைக் காண பெண்கள் அணி திரண்டு படை படையாகச் செல்வர். எங்கள் ஊர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முத்து அங்கி, ஸ்ரீரங்கம் பெருமாள் முத்து அங்கி சேவை, திருப்பதி பாலாஜி கோவில் முத்து ஆபரணங்கள் மிகவும் பிரபலமானவை. இது வராகமிகிரர் காலத்துக்கும் முன்னரே இருந்திருப்பது அவர்தம் ஸ்லோகங்களில் இருந்து வெள்ளிடை மலை போல விளங்குகிறது.

அவர் 17 வகை முத்து மாலைகளை வருணிக்கிறார். இதை கோவிலில் உள்ள நகைகளும் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய கற் சிற்பங்களில் உள்ள நகைகளும் மெய்ப்பிக்கின்றன; யக்ஷி, யக்ஷர் சிலைகளில் உள்ள நகைகள் ப்ரமிப்பூட்டுகின்றன. அஜந்தா, சிகிரியா (இலங்கை) ஓவியங்களும் இந்த நகைகளைக் காட்டும்.

17 வகை முத்து மாலைகளில் சில:

1008 வடம் (நாலு முழ நீளம்) = இந்து சந்தா (கடவுளுக்கானவை)

504 வடம் (இரண்டு முழ நீளம்) = விஜய சந்தா

108 வடம் (இரண்டு முழ நீளம்) = ஹாரம் (மாலை)

81 வடம் = தேவ சந்தா

64 வடம் = அர்த்த ஹார

54 வடம் = ரஸ்மி கலாப

32 வடம் = குச்ச

20 வடம் = அர்த்த குச்ச

16 வடம் = மாணவக

12 வடம் = அர்த்த மாணவக

எட்டு வடம் = மந்தர

ஐந்து வடம் = ஹார பலக

27 முத்துக்கள் கொண்ட மாலை (ஒரு முழ நீளம்) = நட்சத்திர மாலா

இவ்வாறு முத்துக்களின்  பெருமைகளை 36 பாடல்களில் பாடிப் பரவியுள்ளார்.

muthangisrivaishnavism-site

எடைகள் பற்றிய வாய்ப்பாடு

ரத்தினக் கல் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு சின்னச் சின்ன எடைக் கற்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

1500 ஆண்டுகளுக்கு நாம் பயன் படுத்திய எடைகள், பணம், காசு முதலியன பற்றியும் அந்தக் காலத்தில் ரத்தினக் கற்களின் விலை பற்றியும் வராக மிகிரர் விரிவாக எடுத்துரைக்கிறார். இதோ வாய்ப்பாடு:

விம்சதி: ஸ்வேதிகா: ப்ரோக்தா: காகின்யேகா:

விசக்ஷணை: தத் சதுஷ்கம் பண: இதி சதுர்த்தம் தத் சதுஷ்டயம்

 

சதுர்த்தக சதுஷ்கம் து புராண: இதி கத்யதே

கார்ஷா பண; சஹ ஏவ உக்த: க்வசித் து பண விம்சதி:

 

20 வெள்ளிக் காசு= ஒரு காகினி

4 காகினி = ஒரு பணம்

4 பணம் = ஒரு சதுர்த்தம்

4 சதுர்த்தம் = ஒரு புராண அல்லது கார்ஷா பணம்

80 வெள்ளிக்காசு =ஒரு பணம்

20 பணம் = ஒரு கார்ஷா பணம்

muthu angi

8 வெள்ளைக் கடுகு (ஐயவி)= ஒரு அரிசி

20 அரிசி எடை வைரம் = 2 லட்சம் கார்ஷா பணம்

14 அரிசி அடை= 1 லட்சம் கார்ஷா பணம்

முத்து விலை

5 குந்து மணி (ரத்தி/குஞ்சா/கிருஷ்ணல) = 1 மாச

16 மாச = 1 சுவர்ண

4 சுவர்ண = ஒரு பல

அரை பல = தரண அல்லது சுவர்ண

4 மாசக எடை (16 குந்துமணி) முத்து= 53,000 கார்ஷா பணம்

ஒரு மாசக எடை முத்து = 135 கார்ஷா பணம்

இப்பொழுது அவர் சொல்லும் ரத்தினக் கற்களின் விலை பொருள் உடைத்து அல்ல. ஆயினும் அவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் மதிப்பை அறிய முடியும். இடம், நேரம் ஆகியவற்றின் அருமை கருதி, இங்கே எல்லாவற்றையும் தர இயலவில்லை.

68-March-Pearl

அடுத்த கட்டுரையில் நாகரத்தினம் (பாம்பின் தலையில் உள்ள ரத்தினம்), மாணிக்கம், மரகதம் பற்றி வராகமிகிரர் சொல்லுவதைக் காண்போம்.

—தொடரும்……………………………..

கர்ணன் பெயரில் ஒரு நியாயம்! கிணறு பெயரில் இரு நியாயம்!!

Karnan

கட்டுரை எண் 1644; தேதி 12 பிப்ரவரி 2015

எழுதியவர் ச.நாகராஜன்

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. ராதேயன் கர்ணன்!

 

நியாயங்களின் வரிசையில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:-

कूपखानकन्यायः

kupakhanaka nyayah

கூபகானக நியாயம்

கூபம் – கிணறு

கிணறு வெட்டுவது பற்றிய நியாயம் இது.

ஒரு கிணறை வெட்டும் போது அதை வெட்டுபவனுடைய உடலில் சகதிகள், மண், சேறு முதலில் படியும். ஆனால் வெட்ட வெட்ட கிணற்றிலிருந்து தண்ணீர் ஊறும். அந்த நீரினாலேயே அவன் தன் உடல் முழுவதையும் கழுவிக் கொண்டு சுத்தமாக ஆகி விடுவான். இதே போல ஒருவன் செய்யும் பாவங்கள் எல்லாம் கூட அவன் பின்னால் செய்யும் தான தர்மங்களினால் கழுவப் பட்டு விடும். இதை அழகாக எடுத்துரைக்கும் நியாயம் கூப கானக நியாயம்.


communal-well_kerala1

कूपयन्त्रघटिकान्यायः

kupayantraghata nyayah

கூபயந்த்ரகடிகா நியாயம்

ஒரு கிணறில் நீர் எடுக்க உதவும் உருளையில் பக்கட்டுகளை இணைத்திருப்பது பற்றிய நியாயம் இது.

கிணறிலிருந்து நீர் எடுக்கும் போது சில பக்கட்டுகள் நீர் நிரப்பப்பட்டு மேலே வரும். சில சமயம் நீர் இல்லாமலேயே மேலே வரும். கீழே போகும் போதோ காலியாக கீழிறங்கும். அதே போல உலகியலில் வாழ்க்கையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நீர் நிரம்புவதும் நீர் நிரம்பாமல் இருப்பதுமாக, மேலே ஏறுவதும் கீழே இறங்குவதுமாக எத்தனை எத்தனையோ மாறுதல்கள்.

இந்த மாறுதல்களைச் சுட்டிக் காட்டுவது தான் கூபயந்த்ரகடிகா நியாயம்.

 

drinking09-village-well_13106_600x450

कैमुतिकन्यायः

kaimutika nyayah

கைமுதிக நியாயம்

“இன்னும் எவ்வளவு” என்னும் நியாயம் இது. வேலையே பார்க்காமல் இன்னும் எவ்வளவு அதிகமாகக் கிடைக்கும் என்று அதிகம் பெறுவதையே நோக்கமாக ஒருவர் கொள்ளும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

Karnan29211

कौन्तेयराधेयन्यायः
kaunteyaradheya nyayah
கௌந்தேய ராதேய நியாயம்
கௌந்தேய ராதேய என்னும் நியாயம் இது பிரபலமான ஒன்று.

மஹாபாரதத்தில் வரும் கர்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்ட நியாயம் இது. குந்தியின் மகனான கர்ணன் அவளால் ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விடப்பட அந்தக் கூடையை எடுத்துப் பார்த்துத் திகைக்கிறாள் ராதா என்னும் பெண். அவனைத் தன் மகனாக வளர்க்க ஆரம்பிக்கிறாள்.ராதையின் மகன் என்று அவனைச் சுட்டிக் காட்டப்படுகிறான் அவன்.

ஆகவே அவனை ராதேயன் என்று சாதாரணமாகக் கூப்பிடுவது வழக்கம்.

பேச்சு வாக்கில் கடைப்பிடிக்கப்படும் ஒரு பழக்கம் எப்போதுமே வழங்கப்பட்டு நிஜமான ஒன்றாக ஆவது போல இருக்கும் சமயத்தில் இந்த நியாயம் வழங்கப்படும்.

குந்தியின் மகன் தான்; ஆனால் ராதேயனாக ஆகி அதுவே நிஜமாகி விட்டது. அதைப் போன்ற தருணங்களில் வழங்கப்படும் நியாயம் இது!

bald

खल्वाटबिल्वीयन्यायः

khalvatabilviya nyayah

கல்வாடபில்வீய நியாயம்

வழுக்கைத் தலையரும் வில்வப் பழமும் என்னும் நியாயம் இது.

இதற்கு அடிப்படையான கதை ஒன்று உண்டு.

 

ஒரு நாள், வழுக்கைத் தலையரான ஒருவர் வெய்யிலின் கொடூரம் தாங்காமல் களைப்பாறுவதற்காக ஒரு வில்வ மரத்தின் அடியில், நிழலில் வந்து அமர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய வில்வப் பழம் அவர் மண்டை மீது திடீரென்று விழுந்து காயம் ஏற்பட அவர் துடிதுடித்துப் போனார். துரதிர்ஷ்டம் எங்கு போனாலும் தொடர்ந்து வரும் என்பது போல சிலருக்கு எங்கே போனாலும் ஏதாவது இப்படி நடந்தால் இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

WoodApple_12339

*****************

Nagaratna/ Cobra Jewel, Rubies and Emeralds in Brhat Samhita

3 stones in 1

Written by London swaminathan

Research Paper No 1643; Date:- 11th February 2015

Varahamihira devoted sixty six verses for gem stones in his Sanskrit encyclopaedia Brhat Samhita. He was more interested in pearls than any other gem stones in the Nava Ratna. He dealt with pearls in 36 verses but dismissed Emerald in a single verse.

He says that gem stones are beneficial. About emeralds, he says,

Suka vamsa pathra kadali sirisa kusuma prabham gunopetham

Sura pithru karyam marakatham athiva subadham nrunaam vihitham

“An emerald of the hue of parrots’ wings, bamboo leaves, banana trunk (greyish yellow) or Sirisa flower (Albizza lebbeck in whitish yellow colour) and of good qualities is highly beneficial to people when they wear it at ceremonies in honour of Gods and Manes.

Group-emerald

Emerald Stones from Colombia, South America

Snigda prabhaanulepi swachcho archismaan guru susamsthana:

Antha prabo athirago maniratna gunaa: samasthaanaam

The general qualities of all excellent gems are smoothness, illumination with rays, purity, sparkle heaviness, fine shape, brilliance within and bright redness.

This verse proves that gems have spiritual powers that can be utilized both for remedial and progressive purposes.

He says that rubies are born of sulphur (Saugandika), Kuruvinda (corundum) and crystal.

Padmaraga, Manikya,Kuruvinda are all red colour stones.

Ruby_Jewel

Ruby Stone

Nagaratna (Snake Jewel)!!

Varahamihira gives interesting information about Nagaratna (Cobra Jewel). The lore about Cobra jewel is found in 2000 year old Sangam Tamil literature and in Sanskrit literature. Shakespeare also heard about it and used his in his drama ‘As you Like it’:

Please read my research paper, “How did Shakespeare know about the Indian Cobra Jewel-Nagaratna?”– Posted on 1 October 2011.

http://swamiindology.blogspot.co.uk/2011/10/how-did-shakespeare-know-about-indian.html

Varahamihira says, “It is said that on the head of the serpents there is a gem with the hue of a bee or peacock’s neck, and shining like the flame of a lamp. Such a gem is to be known as of inestimable value”.

Bramara siki kanta varnor Deepasikasaprabho Bhujanganaam

Bhavati mani khila murdhani yo anargheya: sa vignjeya:

“A king who wears such a serpent gem will never have troubles arising from poison and diseases. Indra will always be pouring good rains in his realms, and as a result of the intrinsic power of the gem he will annihilate his enemies”.

opal

Opal Stones

Price List of Rubies 1500 years ago:-

Ruby weighing a Pala (i.e. 4 karsas) = 26,000 silver pieces or Karsapanas

Ruby weighing half Pala (i.e. 2 karsas = 12,000

Ruby weighing 8 Masas or Rattis= 3000

Four masa weight= 1000

It is very interesting to compare the price of diamonds and pearls (Please see my earlier two papers on Diamonds and Pearls. I Have also given the Tables for Weights)

Earlier Research Articles on Gem Stones in Literature:

Eight Types of Pearls, posted on 9 Feb.2015

http://swamiindology.blogspot.co.uk/2015/02/eight-types-of-pearls-varahamihiras.html

Gemmology in Brhat Samhita, posted 8 Feb.2015

http://swamiindology.blogspot.co.uk/2015/02/gemmology-in-brhat-samhita.html

Krishna’s Diamond in USA ?

agate

Agate

amethist4

Amethyst

corundumpink

Corundum (Kuruvinda in Sanskrit, Kuruntha in Tamil)

Gem Stones in Kalidasa and Tamil Literature

13th February 2012

http://swamiindology.blogspot.co.uk/2012/02/gem-stones-in-kalidasa-tamil-literature.html

Pearls in the Vedas and Tamil Literature- posted by me on 17 May 2014

http://swamiindology.blogspot.co.uk/2014/05/pearls-in-vedas-and-tamil-literature.html

Lord Krishna’s Diamond in USA? –  posted on 23 April 2012

https://tamilandvedas.com/2012/04/23/krishnas-diamond-in-usa/

contact swami_48@yahoo.com

பெண்கள் வைரங்களை அணியலாமா வராஹமிகிரர் கருத்து என்ன?

diamonds-loose-certified-1

ஆய்வுக்கட்டுரை எழுதுபவர்- லண்டன் சுவாமிநாதன்

ஆய்வுக்கட்டுரை எண்:–1642; தேதி 11 பிப்ரவரி 2015

கடந்த சில நாட்களில் எழுதிய கட்டுரையில் 1500 ஆண்டுகளுக்கு முன் வராகமிகிரர் என்ற மாமேதை யாத்த பிருஹத் சம்ஹிதா என்னும் அற்புத நூல் பற்றிக் கண்டோம். இது சம்ஸ்கிருதத்தில் உள்ள ஒரு கலைக் களஞ்சியம் என்றும் அவர் பேசும் 106 தலைப்புகள் பற்றியும் கண்டோம். இன்று வைரங்கள், ரத்தினக் கற்கள் பற்றி அவர் சொன்ன சில சுவையான விஷயங்களைக் காண்போம்.

22 வகை ரத்தினக் கற்கள்

மனிதருள் மாணிக்கம் என்று சிலரைப் போற்றுகிறோம்; ஆங்கிலத்தில் அவன் ஒரு ரத்தினம் என்று நல்லோரைப் போற்றும் மரபுச் சொற்றொடர் உண்டு. மாமன்னன் விக்ரமாதித்தன் அரசவையில் உலக மஹா கவிஞன் காளிதாசன் உள்பட ஒன்பது  அறிஞர்கள் இருந்ததை நவரத்தினங்கள் என்று அழைக்கிறோம். இதே போல பெண்கள், குதிரை, யானையில் சிறந்த ஜாதிகளை ரத்தினம் என்பர். சிறந்த பெண்ணை நாரீரத்னம் என்பர். இதை வராகமிகிரரும் அமரகோசம் நிகண்டு எழுதிய அமரசிம்மனும் பகர்வர்:

ரத்னம் ஸ்வ ஜாதி ஷ்ரேஷ்டேயி – என்று செப்புகிறது அமரம்.

ரத்னக் கற்கள் எங்கே தோன்றுகின்றன?

இது குறித்து தனது காலத்துக்கு முன் ஆயிரக்கணக்கான, ஆண்டுகளாக இருந்து வரும் நம்பிக்கைகளை எழுதிவிட்டு தனது அறிவியல் பூர்வ கருத்தையும் மொழிகிறார் வராகமிகிரர்:

பலன் என்னும் அசுரனின் எலும்புகளில் இருந்து ரத்தினக் கற்கள் உற்பத்தியானதாகச் சிலரும், ததீசி முனிவர் இடமிருந்து உற்பத்தியானதாகச் சிலரும், பூமியின் குணங்கள் மூலம் உற்பத்தியானதாகச் சிலரும் கூறுவர். இதற்கு வியாக்கியானம் எழுதிய உத்பலர் என்பவர் சில புராண ஸ்லோகங்களை முன்வைத்து பூமியின் நிலையே காரணம் என்பார். தற்கால அறிவியலும் பூகர்ப்ப இயலின் ஒரு பகுதியாகவே ஜெம்மாலஜி (ரத்ன பரீக்ஷா) சாஸ்திரத்தை வைத்துள்ளது.

a_pair_of_diamonds

22 வகை ரத்தினக் கற்களை இரு ஸ்லோகங்களில் தருகிறார் வராக மிகிரர்:

வஜ்ரேந்திர நீலசரகதககர்தே பத்மராகருதிராக்யா:

வைடூர்யபுலகவிமலக ராஜமணிஸ்படிக ஸஸிகாந்தா:

சௌகந்திககோமேதகசங்ரவ மஹாநீல புஷ்பராகாக்யா:

ப்ரஹ்மணிஜ்யோதிரஸஸஸ்யகமுக்தாப்ராவாலானி

(இந்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களைச் சந்தி பிரித்துப் படித்தால் பல ரத்னக் கற்கள் நமக்கு முன்னரே தெரிந்தவை என்பதை உணர்வீர்கள்)

வைரம், நீலம், மரகதம், பச்சைக்கல் (அகேட்), மாணிக்கம், சிவப்புக்கல் (பிளட் ஸ்டோன்),வைடூர்யம், அமெதிஸ்ட், விமலக, ராஜமணி (க்வார்ட்ஸ்), ஸ்படிகம், சந்திரகாந்தம், சௌகந்திகம், ஓபல், சங்கு, நீலநிறக் கல், புஷ்பராகம், பிரம மணி, ஜோதிரஸ, சஸ்யக, முத்து, பவளம்

ஒவ்வொரு ரத்தினக் கல்லுக்கும் யார் அதிதாவதை என்றும் வராஹமிகிரின் பிருஹத் சம்ஹிதா சொல்கிறது:

வெள்ளை நிற அறுகோண வைரம்= இந்திரன்

பாம்பின் வாய் போன்ற கறுப்புநிற வைரம்=யமன்

வாழைத் தண்டு நிறம்= விஷ்ணு

கர்ணிகார பூவின் நிறம்=வருணன்

நீலம்,சிவப்பு கலந்தது= அக்னி

அசோக மலர் வர்ணம்= வாயு

வைரம் கிடைக்கும் இடங்களை இன்னும் ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார்:

வேணா நதிக் கரை, கோசலம், சௌராஷ்ட்ரம்,சௌர்பார தேசம், இமயமலை, மதங்க, கலிங்க, பௌண்டிர தேசங்கள்.

diamonds-1

ஜாதியும் வைரமும்

பிராமணர்கள் வெள்ளை நிற வைரங்களை அணியலாம்; சிவப்பு, மஞ்சள் நிறம் க்ஷத்ரியர்களுக்கும், வெள்ளை-மஞ்சள் (சீரிச மலர்) வைரம் வைஸ்யர்களுக்கும், வாளின் நிறம் உடைய வைரம் சூத்திரர்களுக்கும் நன்மை பயக்கும் என்று ஒரு ஸ்லோகத்தில் சொல்லுவார்.

வைரங்களின் எடை, அதன் விலைகள் ஆகியவற்றையும் பட்டியல் இடுகிறார் (என் ஆங்கிலக் கட்டுரையில் விவரம் காண்க)

பெண்கள் வைரம் அணிவது பற்றி அவர் சொல்கிறார்: குழந்தைகளை வேண்டும் பெண்கள் வைரங்களை அணியக்கூடாது என்று சிலர் சொல்லுவர். ஆனால் என் கருத்து, ஆண் குழந்தைகளை விரும்பும் பெண்கள் முக்கோண வடிவுள்ள அல்லது, கொத்தமல்லி விதை வடிவமுள்ள வைரங்களை அணியலாம்.

இன்னும் ஒரு ஸ்லோகத்தில் வராஹமிகிரர் செப்புவது யாதெனில்: குறையுள்ள வைரங்களை அணிவது வாழ்க்கையையே பாதிக்கும்; செல்வம், குழந்தை, குடும்பத்தையே பாதிக்கும்; நல்ல வைரங்களோவெனில் எதிரிகளை அழித்து வெற்றிக்கொடி நாட்டவைக்கும்; விஷம், இடி, மின்னல் கூட அவர்களைப் பாதிக்காது. மன்னர்கள் அணிந்தால் கூடுதல் சுகபோகங்கள் கிட்டும்.

Good-Type-of-Diamond-Investment

பிருஹத் சம்ஹிதா கூறும் முத்து, நீலம், மரகத விஷயங்களை இன்னும் ஒரு கட்டுரையில் சுருக்கி வரைவேன்.

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 3

rojaraja

Post No 1641; Dated 11th February 2015

written by Santanam Nagarajan

by ச.நாகராஜன்

Part 2 is published under the Title:– ஒரு வில், ஒரு சொல், ஒரு இல்!(தமிழ் திரைப்படங்களில் ராமர் – 2 (Post No 1635; Dated 9th February 2015)

கம்பனின் கவினுறு பாடல்கள்

மாபெரும் கற்புக்கரசியாகவும், பேரழகியாகவும், திருவுடைச் செல்வியாகவும் விளங்கிய சீதையையும் ராமனையும் கம்பனைப் போல ரசித்து, வணங்கித் தொழுது புகழ்ந்தவ வேறு யாரும் இல்லை.

 

அவனிடம் ராமருக்ர்கும் சீதைக்கும் எல்லாமும் இருப்பதாகப் புகழ்கிறீர்களே, அவர்களுக்கு இல்லாதது ஒன்றுமே இல்லையா என்று கேட்ட போது, உடனே, பளிச்சென்று இருக்கிறதே, “ஐயனுக்கு வசையில்லை; அன்னைக்கு இடையே இல்லை” என்று பதில் அளித்தானாம்!

அவனது பெண் பார்க்கும் படலத்தின் சிறப்பை பல நூறு பாடல்கள் காட்டினாலும் எடுத்துக் காட்டிற்கு இங்கு மூன்றே மூன்று பாடல்களை மட்டும் பார்க்கலாம்:

 

“எண் அரும் நலத்தினாள் இனையள் நின்றுழி,

கண் ஒடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று

உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட,

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள் – மிதிலைக் காட்சிப் படலம்  பாடல் 35

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள் – இந்த வரி உலக இலக்கியத்தில் ஏற்படுத்திய, ஏற்படுத்தும் தாக்கம் பற்றி எழுத ஒரு தனி நூல் அல்லவா வேண்டும்!

 

மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,

ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்,

கருங் கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ!   – பாடல் 38

நங்கைக்கு இல்லாதது இடை; நம்பிக்கு இல்லாதது வசை!கண்ணோடு கண் நோக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல! விஷ்ணு லோகத்தில் பாற்கடலிலிருந்து பிரிந்து வந்து மீண்டும் ஒருவரை ஒருவர் மீண்டும் பார்த்தவர்கள் பேசவும் வேண்டுமோ!

rama green

சீதையின் அழகு!

 

அடுத்து சீதையின் அழகு எப்படி இருந்தது? ஒரே ஒரு பாடலை மட்டும் இங்கு காணலாம். கோலங்காண் படலத்தில் 28வது பாடலாக மலர்கிறது இது:

பொன்னின் ஒளி,

பூவின் வெறி,

சாந்து பொதி சீதம்,

மின்னின் நிழல் – அன்னவள் தன் மேனி ஒளி மான,

அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழுதும் நாண,

மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்

இதைப் படித்தோருக்கு கம்பனை முழுவதுமாகக் கற்கும் ஆசை எழுவது இயல்பே அல்லவா!

கவிஞன் கம்பனைத் திட்ட வேண்டும் என்று அவனது காவியத்தில் குதித்து அதிலிருந்தும் அதன் சுவையிலிருந்தும் மீள வழி தெரியாமல் திகைத்து பெரும் ஆத்திகனாக மாறி பல ஆயிரம் பாடல்களைப் பாடினார் கண்ணதாசன் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்!

ஆகவே தான் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தான் அனுபவித்து மகிழ்ந்த கம்பனைத் தமிழ் மக்களுக்குத் தன் பாடல்கள் மூலம் இனம் காட்டி மகிழ்ந்தார்

அவர்.


rama sudhai

‘ஜனகனின் மகளைபாடல்

கண்ணதாசன் பாடல் எழுத எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைக்க பி.சுசீலா பாடிய இன்னொரு பெண் பார்க்கும் படலப் பாடல் 1976ஆம் ஆண்டு வெளியான ரோஜாவின் ராஜா படத்தில் இடம் பெற்றது. இயக்குநர் கே.விஜயன்.

சிவாஜிகணேசன், ஏ.வி.எம்.ராஜன், வாணிஸ்ரீ, மேஜர் சுந்தரராஜன் என பிரபல நடிகர்கள் நடித்து வெளியான படம் இது. கதையின் நிலைக்களனுக்கு ஏற்ப இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. வாணிஸ்ரீ பாடலைப் பாட சிவாஜிகணேசனும் ஏ.வி.எம்.ராஜனும் அதைக் கேட்க சிவாஜி தன் முகபாவங்களினாலேயே வேதனையைத் தெரிவிக்கும் காட்சி இது.பாடலைப் பார்ப்போம்:

ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்

ராஜாராமன் நினைத்திருந்தான்

அவள் சுயம்வரம் கொள்ள மன்னவர் சிலரும் மிதிலைக்கு வந்திருந்தார் –

மிதிலைக்கு வந்திருந்தார் .

மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்

இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனைத் தேடி நின்றாள்

நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம் கவலை மறுபுறம்

அவள் நிலைமை திரிபுறம்

கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே

அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே

 

நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை

அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீ ர் மறைத்தும் மறையவில்லை


rama garland

முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம்

சீதை தனியிடம் அவள் சிந்தை அவனிடம்

 

மன்னவர் எல்லாம் சுயம்வரம் நாடி மண்டபம் வந்து விட்டார்.

ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கி விட்டாள்

ஜானகி கலங்கி விட்டாள்.

 

ஜானகி கலங்க கதாநாயகியும் கண்களில் நீர் விழ எழுந்து செல்கிறாள்.பாடல் முடிகிறது. பாடலின் பின்னணியில் அழகிய சித்திரக்காட்சிகளாக சீதையின் படமும் பல்லக்கும் பல்லக்கின் முன்புறமும் பின்புறமும் பலரும் செல்வதும் சித்தரிக்கப்படுகிறது.

ராமரின் கதை எந்தச் சூழ்நிலைக்கும்  ஏற்பக் கையாளப்பட முடியும் என்பதைச் சுட்டிக் காட்டும் பாடல் இது. நேயரின் விருப்பமாக இது இன்றும் கேட்கப்பட்டு ரசிக்கப்படுகிறது.

சுயம்வரத்தில் சீதை வரும் காட்சியை அமைத்த கம்பரின் காவிய வரிகளை முதலில் மேலே பார்த்தோம். திரைப்படக் காட்சிக்கேற்ப கண்ணதாசன் அமைத்த வரிகளையும் மேலே பார்க்கிறோம். ஒப்பிட்டு மகிழலாம்.

ராமரின் பெருமையே பெருமை!

 

– தொடரும்