ஏசு கிறிஸ்து இந்தியாவுக்கு வந்தது ஏன்?- Part 1

most of the pictures Yogic white

ஆய்வுக் கட்டுரை எண்: 1630; தேதி : 7 பிப்ரவரி 2015

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்

இந்து மதத்தின் மூன்று சிறப்புகள்:

1.உலகின் எந்தப் பகுதியிலும் சாது சந்யாசிகள், முனிவர்கள், மகான்கள், புனிதர்கள் தோன்ற முடியும். அவர்கள் அவதரித்துக் கொண்டே இருப்பார்கள் என்பதை இந்து மதம் ஒப்புக் கொள்கிறது

2.ஏனைய மதத்தினரை ‘காபிர்’ (KAFIR) என்றோ, ‘பேகன்’ (PAGAN) என்றோ ஏசுவதில்லை. எல்லோரையும் ‘அம்ருதஸ்ய புத்ராஹா’, ‘திவ்யாத்ம ஸ்வரூபலாலா’ (ஏ! இறைவனின் புதல்வர்களே) என்று அழைப்பர்.

3.உலகின் பழைய மதம் என்றாலும் பின்னர் வந்த தத்துவ ஞானிகள், இறைவனின் தூதர்கள், மத ஸ்தாபகர்கள் ஆகிய அனைவர் சொன்னதும் இந்து மத நூல்களில் ஏற்கனவே உள்ளன. இதன் காரணமாக யாரையும் மதம் மாற்றியதும் (PROSELYTISATION)  இல்லை; யாருடனும் மதம் தொடர்பாக “புனிதப் போர்” (CRUSADES, JIHADS) நடத்தியதும் இல்லை.

இந்து மத நூல்கள் கடல் போலப் பரந்து விரிந்தவை; அதில் இல்லாதது ஏதும் இல்லை.எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க, சுமேரிய பழங்கதைகளைப் படிப்போருக்கு, அட! நம்மைக் காப்பி அடித்து எழுதி இருக்கிறார்களே! –என்று நினைக்கத் தோன்றும். அத்தோடு அவ்விலக்கியங்களில் காண முடியாத உயரிய கருத்துக்களும் இந்துமத நூல்களில் இருக்கும். (உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தின் கடைசி பாடல் கருத்து பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்).

இன்ன பல சிறப்புகளால் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏசு கிறிஸ்து இந்தியாவில் இமயமலைக்கு வந்து குருகுல வாசத்தில் அமர்ந்து உபநிஷதங்களைக் கற்று, ஆட்டு இடையர்களுக்கும், சடங்குகளை மட்டும் அர்த்தம் இன்றிப் பின்பற்றியோருக்கும் உபதேசம் செய்தார். அவர் பிறவியிலேயே ஞானி. இதற்குக் காரணம் அவர் பிறந்த யூதமதப் பிரிவான ஈசன்னியர் (ESSENES) பிரிவு இந்து மத யோகியர் போன்ற நடை,உடை,பாவனை உடையதொரு ஒரு பிரிவு (கட்டுரைக்குள் இவர்கள் பற்றிச் சுருக்கமாகச் சொல்லியுள்ளேன். மேல் விவரம் வேண்டுவோர் விக்கிபீடியா முதலிய கலைக்களஞ்சியங்களை நாடலாம்).

ஜீசஸ் கிரைஸ்ட் (JESUS CHRIST)  இந்தியா வந்தார் என்று 200 ஆண்டுகளாகப் பல வெளி நாட்டினரும், நம் நாட்டினரும் புத்தகங்கள் எழுதிவிட்டனர். அதற்கு சில மறுப்புரைகளும் வந்து விட்டன. ஆனால் அவர்கள் எடுத்துக் காட்டாத சில விஷயங்களை நான் தொகுத்து — “பைபிளில் சம்ஸ்கிருதம்” (SANSKRIT IN BIBLE, PART 1 AND PART2 ) என்ற இரண்டு பகுதி கட்டுரையை மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டேன். சில நாட்களுக்கு முன் ஆங்கிலத்தில் ஜீசஸ் மிஸ்டரி (JESUS MYSTERY: DID HE LEARN AT HINDU GURUKULA?) என்று இன்னொரு கட்டுரையும் எழுதினேன். அதன் சுருக்கத்தை தமிழில் சிறு சிறு பகுதிகளாகத் தருகிறேன்.

ஏசுவின் இளமைக் காலம் பற்றி பைபிள் மவுனம் சாதிக்கிறது. மார்க், மாத்யூ, லூக், ஜான் (GOSPELS OF MARK, MATEW, LUKE AND JOHN) ஆகிய நால்வர் எழுதிய புதிய ஏற்பாடு (NEW TESTAMENT) நூல்களில் ஏசு 12 வயதில் சென்றார்- முப்பது வயதில் திரும்பிவந்தார் என்று மொட்டையாக எழுதி முடித்துவிட்டனர். இது பற்றி கிறிஸ்தவர்களே அவர்களுக்குள் தடை எழுப்பி விடை கண்ட பகுதிகளை கிறிஸ்தப் பிரசார நூல்களில் கண்டு கொள்க.

christ and krishna

ஒரு மனிதனின் இளமைக் காலம் அதிபயங்கர சக்தியுடன் எதையாவது புதுமையைப் படைக்கத் துடிக்கும் காலம். அந்த சக்தியை சரியான வழியில் திருப்பி விடாவிட்டால் அவர்களுடைய வாழ்நாள், வீழ் நாளாகவும் வீண் நாளாகவும் போகும். இதற்காக இந்துக்கள் ஒரு அற்புதமான வழியைக் கண்டு பிடித்தனர். வீட்டில் இருந்தால்தானே “அப்பா, அம்மா சொல்வதெல்லாம் தவறு- உலகம் தெரியாமல் உளறுகிறார்கள்” என்று எண்ணத் தோன்றுகிறது. வாத்தியார் வீட்டுக்கே போய் அவருக்கு உணவு படைத்து, துணி துவைத்து பாடத்தையும் படி — என்று குருகுல வாசம் செய்ய ஏழு வயதில் அனுப்பிவிட்டனர். பின்னர் 20 வயதில் வீட்டுக்குத் திரும்பி வந்தவுடன் கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டனர். இதற்குப் பின் கெட்ட வழியில் செல்வது கடினம். மேலும் வாத்தியார் வீட்டில் 13 ஆண்டுகளுக்கு தினமும் மிலிட்டரி ட்ரில் (MILITARY DRILL)  போல செய்துவந்தது அதே நல்ல வழியில் செல்லவும் உதவியது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” (HABITS DIE HARD) — என்பது தமிழ் பழமொழி. நல்லதானாலும் கெட்டதானாலும் சின்ன வயதில் படித்தது அவ்வளவு எளிதில் மாறாது.

அந்தக் காலத்தில் ஒரே குருவிடம் நூற்றுக் கணக்கான மாணவர்கள் இருந்தனர். அததகைய குருமார்களை குலபதி என்று பட்டம் கொடுத்து அழைப்பர். அது மட்டுமின்றி ஏசு பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தட்சசீலம், நாளந்தா, காஞ்சீபுரம் ஆகிய இந்திய நகரங்களில் மாபெரும் பல்கலைக் கழகங்களும் நடந்துவந்தன.

இந்த குருகுலவாசம் பற்றி ஈசன்னிகளுக்குத் தெரியும். அதனால் ஏசுவை இங்கே அனுப்பிவைத்தனர்.ஈசன்னிகள் என்பது ஈச, ஈச்வர (இறைவன்) என்னும் மூலத்தில் இருந்து பிறந்த சொல் என்பது எனது துணிபு. இந்த யூதமதப் பிரிவு பற்றி பிளினி (கி.பி.70 PLINY THE ELDER), ஜோசபஸ் முதலியோர் கொஞ்சம் எழுதி வைத்துள்ளனர். அவர்கள் கூறுவதாவது: இந்தப் பிரிவினர் தினமும் குளிப்பார்கள் (இது பாலஸ்தீனத்தில் ஒரு அதிசயம்!!). இவர்கள் இறை நாட்டம் உடைய யோகியர். இவர்களில் பெரும்பாலோர் கல்யாணம் செய்து கொள்வதில்லை (பிரம்மசாரி). சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்து யோகிகள் பற்றி என்ன என்ன சொல்வோமோ அததனையும் ஈசன்னிகள் பற்றிச் சொல்லப் பட்டுள்ளன. இந்தக் குலத்தில் பிறந்தவர்தான் ஏசு. ஆகையால் அவர் குருகுல வாசத்துக்கு இமயமலைக்கு வந்ததில் வியப்பதற்கு ஒன்றுமிலை.

மேலும் காஷ்மீருக்கும் யூதர்களுக்கும் (JEWS) உள்ள தொடர்பு பற்றி பல ஆய்வுகள் உண்டு. கி.மு 1000 ஆண்டில் இருந்த சாலமன் (SOLOMON THE WISE) காஷ்மீருக்கு வந்ததாக செவிவழிக் கதைகள் உள்ளன. அவன் விக்ரமாதித்தன்போல பெரிய அறிவாளி. இது தவிர சிலுவையில் அறைபப்பட்ட மூன்றாம் நாள் ஏசு உயிர் பெற்று எழுந்து காஷ்மீருக்கு வந்து 120 வயது வரை யோகி போல வாழ்ந்தார் என்றும் காஷ்மீரில் அவரது சமாதி உள்ளது என்றும் ஒரு புத்தகம் வேறு வெளியாகி இருக்கிறது. யூதர்களின் 12 பிரிவுகளில் ஒன்று காஷ்மீருக்கு வந்தது என்ற ஐதீகமும் உண்டு.

Jesus-Christ-and-Krishna1

பைபிள்கள் பல விதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!!

இந்து மதப் புராணங்களில் எப்படிப் பல இருக்கின்றனவோ இப்படி ஏசு பற்றி புராணங்களும் ( மாறுபட்ட பைபிள் பதிப்புகள்) ஏராளமாக இருந்தன. துரு கியில் இருந்த கான்ஸ்டன் டைன் (EMPEROR CONSTATNTINE 272-337 CE) என்ற மன்னன் ஒரு பைபிள் மகாநாடு கூட்டி எல்லா பைபிள்களையும் எரித்துவிட்டு ஒரே பைபிள் மட்டும் வைத்துக் கொண்டார். அதனால் ஏசு 12 வயது முதல் 30 வயது வரை 18 ஆண்டுகள் என்ன செய்தார், எங்கே இருந்தார் என்பதெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டது. அது இப்பொழுதும் தூய ஏசுவின் வாழ்வில் ஒரு ஓட்டை போல, கறை போல பைபிளில் உள்ளது. பைபிளை யாரும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது, யாரும் மொழி பெயர்க்கக் கூடாது, வாரம்தோறும் சர்ச்சுக்கு வந்துதான் கேட்க வேண்டும் என்று அவர் உத்தரவு போட்டார். இதை மீறிய பலர் மரண தண்டணைக்குள்ளான சோக சம்பவங்களை பைபிளின் கதை என்ற (The Story of the Bible) புத்தகத்தில் காணலாம். எல்லாம் நூல் வடிவிலும் இந்தெர்நெட்டில் கட்டுரை வடிவிலும் உள்ளன.

இப்பொழுது பலவிதமான பைபிள்கள் கிடைத்து வருகின்றன. ஆனால் அவற்றை ஆராய்ச்சியாளர்கள் பூசி மெழுகிவருகின்றனர். சாக்கடல் பகுதியில் (Dead Sea Scrolls) கிடைத்த சுவடிகள் பற்றி பலவிதமான செய்திகள் வருகின்றன. லண்டன் பிரிட்டிஷ் நூலகத்திலும் மாஸ்கோ, ஜெர்மனி முதலான இடங்களிலும் துண்டு துண்டாக இருந்த கிரேக்க மொழி பைபிளை (Sinai Bible) அனைத்து நூலகங்களும் இணைந்து, துண்டுகளை ஒட்டுப்போட்டு இப்பொழுது இணைய தளத்தில் வெளியிட்டுவிட்டன. ஆனால் இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வில்லை. சினாய் பைபிள் (Codex Sinaiticus)  என்ற இதை யார் வேண்டுமானாலும் கிரேக்க மொழியில் படிக்கலாம். இதற்கும் கிறிஸ்தவ பைபிளுக்கும் ஏராளமான வேறுபாடுகள் இருப்பதாக பைபிள் மோசடி (The Bible Fraud by Tony Bushby)  என்ற நூல் கூறுகிறது.

இனி வரும் கட்டுரையின் தொடர்ச்சியில் ஏசு கிறிஸ்து பற்றி விவேகாநந்தரின் விநோதக் கனவு, பைபிளில் அத்வைதம் எப்படி படிப்படியாக மலர்கிறது என்ற விவேகாநந்தரின் சொற்பொழிவு, ஏசுவின் ஒரு மண்டல கால விரதம், மாதா கோவில்களில் புத்தமத வழக்கங்கள், ஏசுவுக்கு மீன் பெயர் வந்தது ஏன்?, பகவத் கீதையும் பைபிளும், கிறிஸ்துவும் கிருஷ்ணரும், விதுர நீதியும் ஏசு உபதேசமும், உபநிஷத் கதைகளும் ஏசுவின் கதைகளும், ஏசு பக்தர்கள் போட்ட நமஸ்தேயும் நமஸ்காரமும், துரதிருஷ்ட எண் 13, ஏசு செய்த பாதபூஜை ஆகிய விஷயங்களைக் காண்போம்.

தொடரும்…………………………..

குரங்குக் குட்டி நியாயமும் பூனைக்குட்டி நியாயமும்!

best cat

Cat carrying its kitten

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

  1. குரங்குக் குட்டி நியாயமும் பூனைக்குட்டி நியாயமும்!

 

Post No 1629; Dated 7th February 2015

by ச.நாகராஜன்

நியாயங்கள் வரிசையில், எல்லா ஆன்மீகச் சொற்பொழிவுகளிலும் இறைவனுடனான பக்தியை விளக்கும் போது பேசப்படும் இரு நியாயங்களை இங்கு காண்போம்:

मर्कटन्याय

MARKATANYAYA

மர்கட நியாயம்

குரங்கு நியாயம்

மர்கடம் – குரங்கு

இது மர்கட கிஷோர நியாயம் (குரங்குக் குட்டி நியாயம்) என்றும் வழங்கப்படுகிறது.

மிகவும் பிரபலமான இந்த நியாயத்தைச் சொல்லாத ஆன்மீகவாதியே இருக்க முடியாது. குரங்குக் குட்டியானது தனது பாதுகாப்பிற்காகத் தன் தாயின் மார்பை நன்கு அணைத்துக் கொண்டிருக்கும். எந்த ஆபத்து என்றாலும் கூட அது தாயை விடாது.

இதை, பக்தனான ஒருவன் பகவானை நன்கு பற்றிக் கொள்வதற்கு உதாரணமாக எடுத்துச் சொல்வர்.


best monkey

मार्जालन्याय

MAARJAALANYAYA

மார்ஜால நியாயம்

பூனை நியாயம்

மார்ஜாலம் -பூனை

இது மார்ஜால கிஷோர நியாயம் (பூனைக் குட்டி நியாயம்) என்றும் வழங்கப்படும். இதுவும் மிகவும் பிரபலமான நியாயம். மர்கட நியாயத்துடன் எப்போதுமே இது இணைத்து உதாரணமாகக் காட்டப்படுவதால் இரண்டையும் இணைத்தே அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி ஒரு பூனைக் குட்டியை அதன் தாய் வாயில் கவ்விக் கொண்டே தான் செல்லும் இடமெல்லாம் அதை எடுத்துச் சென்று அதைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்கிறதோ அதே போல பக்தன் ஒருவனை பகவான் எப்போதுமே தன் பொறுப்பில் வைத்துப் பாதுகாக்கிறான் என்பதைச் சொல்ல இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.

இந்த இரு நியாயங்களும் ஏராளமான நூல்களில் எடுத்தாளப்படுகின்றன.

ராமகிருஷ்ண உபதேச மஞ்சரியில் அவர் இந்த இரு நியாயங்களையும் உபதேசிப்பதைக் காணலாம்.


cats

இது பற்றி நிலவி வரும் கதைகளில் ஒரு கதையை மட்டும் இங்கு பார்க்கலாம்.

கர்நாடகத்தில் வாழ்ந்த பிரபலமான மகான் கனகதாஸர். இவர் வாழ்ந்த காலத்திலேயே சமகாலத்தவராக வாழ்ந்த இன்னொரு பெரும் மகான் வைகுந்ததாஸர். ஒரு நாள் வைகுந்ததாஸர் வாழ்ந்து வந்த பேலூருக்கு வந்த கனகதாஸர் அவரைப் பார்க்கும் ஆவலுடன் அவர் வீட்டிற்கு வந்தார். வந்த நேரம் நள்ளிரவு ஆகி விட்டது. ஆகவே அவரை எழுப்பி தொந்தரவு தர மனம் இல்லாததால் கனகதாஸர் வைகுந்ததாஸர் வீட்டுத் திண்ணையிலேயே படுத்து உறங்கி விட்டார். காலையில் கதவைத் திறந்த வவைகுந்ததாஸர் வீட்டுத் திண்ணையில் கனகதாஸர் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டு பெரிதும் வருத்தமடைந்தார். அப்போது விழித்துக் கொண்ட ககதாஸரை நோக்கி அவர், “இப்படி வாசல் திண்ணையில் உறங்கலாமா? என்னை எழுப்பி இருக்கக்கூடாதா? என்று ஆதங்கத்துடன் கேட்டார். அதற்கு கனகதாஸர், “உங்களை எழுப்பித் தொந்தரவு தர மனமில்லை. ஆகவே திண்ணையிலேயே படுத்து விட்டேன் என்று சமாதானம் சொன்னார்.

உடனே, வைகுந்ததாஸர்,ஆஹா! நீங்களோ ஒரு மார்ஜால நியாயி. நானோ சாதாரண மர்கட நியாயி! நீங்கள் சாதனையில் என்னை விட எங்கோ எட்டாத உயரத்தில் இருக்கிறீர்கள். இப்படி வீட்டு வாயிலில் படுத்தால் பகவான் என்னை விட்டு இன்னும் அதிக தூரம் போய் விடுவார் என்றார்.

இதிலிருந்து மர்கட நியாயம் பற்றியும் மார்ஜால நியாயம் பற்றியும் நண்ன்கு புரிந்து கொள்ளலாம்.

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் உள்ள இரு பெரும் பிரிவுகள் தென்கலை மற்றும் வடகலை. இவற்றிக்கு இடையில் சில வேறுபாடுகள் உண்டு. அவற்றில் ஒன்று மர்கட மார்ஜால நியாயம் பற்றியதாகும்.

வடகலையார் பக்தன் தனது முயற்சியைச் செய்ய வேண்டும் என்பர். அதாவது மர்கட நியாயம் போல பகவானைப் பற்றிக் கொள்ளல் வேண்டும். எல்லா சாஸ்திர, சம்பிரதாயங்களையும் அனுஷ்டிக்க வேண்டும் என்பது வடகலையார் முடிபு.

ஆனால் தென்கலையாரோ கடவுள் நிபந்தநையற்ற கருணையைப் பொழிபவர். அவரே பக்தரை மார்ஜால நியாயம் போல பரிபாலித்து தேவையானதைத் தருவார் என்பர்.


monkey

Monkey with its baby

ன்னொரு உண்மையைச் சுட்டிக் காட்டவும் இநத் இரு நியாயங்கள் பயன்படும். ஒரு நல்ல குருவானவர் தனது சீடனை மார்ஜால நியாயம் போலத் தானே பாதுகாப்பார். ஒரு நல்ல சீடனானவன் மர்கட நியாயம் போலத் தன் குருவைத் தானே பிடித்துக் கொள்வான்!

ஆக இப்படி ஆன்மீகத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள இந்த இரு நியாயங்களைப் பற்றி ஒரு தனி நூலே எழுதி விடலாம். அவ்வளவு உதாரணங்கள் உள்ளன. இதை எடுத்தாளும் ஏராளமான பாஷ்யங்கள், நூல்கள் உள்ளன. விரிப்பின் பெருகும்.

ANBU

Monkey and Cat: Kindness

***********

Kings of South India

Vakataka-Kingdom-Map-Around-400-CE

Dictionary of 10,000 Indian Kings – Part 14

Compiled by london swaminathan

Post No: 1628: Dated 6 February 2015

160 Kings in Rig Veda published here on 23rd November 2014.

First part of the article –146 kings beginning with letter ‘A’.

Second part– 65 Pandya Kings of Madurai+ Puranic Kings

Third part — 122 kings beginning with letter ‘B’

Fourth Part- 43 Kings of Vijayanagara Empire + 34 Kings under letter C.

Fifth Part – 106 Kashmiri Hindu Kings

Sixth Part – 30 Satavahana  Kings  + 136 Kings underletter D.

Seventh Part –  35 Tamil Pandya Kings of Sangam Age.

Eighth Part – List of Chera (Kerala) 22 kings of Sangam Age+ Kings listed under E (3),G(37) & H(28)=68kings

Ninth Part- 39 Choza Kings of Tamil Nadu

Tenth Part- 104 kings from Cambodia, Champa, Sri Vjaya Kingdom of Indonesia and Pallava

11th part:Under ‘I’  13 kings+ Under ‘J’ 40 kings+ Under ‘K” 147 kings are listed.

12th Part:– 113 kings of various Indonesian kingdoms are listed.

13th Part let us look at the list of those kings listed

UNDER ‘L’ 14 + UNDER ‘M’ 72 + PANDYA II LIST 36=122 KINGS

14TH PART:Dynasties of Vishnukundina (10), Vakataka (16),Salankayana (4),Andra Ikshvaku (4) and Names under “N”(60)=94 kings

So far 1649 Kings were listed.

Coins, (Vishnu_Kundina_time)

Coins from Vishnukundina period.

Vishnukundina Dynasty of Andhra Pradesh

INDRA VARMA- 4TH CENTURY CE

MADHAVA VARMA- 4TH CENTURY

GOVINDA VARMA- 4TH CENTURY

MADHAVA VARMA II -5TH CENTURY

VIKRAMENDRA VARMA – 508 CE

INDRA BHATTARAKA VARMA – 528 CE

VIKRAMENDRA VARMA – II 555 CE

GOVINDA VARMA II –  573 – 621CE

MADHAVA VARMA IV-

MANCHANA BHATTARAKA – RULE ENDED IN 624

newsouthasia_ad1

VAKATAKA DYNASTY (DECCAN REGION)

VINDHYASAKTI – 250-270 CE

PRAVARASENA – 270-330

NANDHIVARDHANA BRANCH

RUDRASENA -330 -355

PRITHIVISENA -355

RUDRASENA-II  380

DIVAKARASENA -385

PRABHAVATIGUPTA (REGENT) -385

DAMODARASENA/ PRAVARASENA II – 400

NARENDRASENA-440

PRITHIVISENA II – 460-480 CE

VATSAGULMA BRANCH

SARVASENA -330

VINDHYASENA/ VIDHYASAKTI II- 355

PRAVARASENA- II 400

UNKNOWN KING -415

DEVASENA- 450-

HARISENA -475-500 CE

SALANKAYANA DYNASTY (BRAHMIN RULERS) OF TELENGANA/ANDHRA

HASTI VARMA – 300 CE

NADI VARMA

VIJAYADEVA VARMA

VIJAYANANDI VARMA – 440 CE

 Ikshwakus Kingdom

IKSHVAKU DYNASTY OF ANDHRA (GUNTUR AREA)

VASHISTIPUTRA SANTAMULA – SECOND CENTURY CE

VIRAPURUSHADATTA

EHLUVALA SANTAMULA II

RUDRAPURUSHADATTA– SECOND CENTURY CE

“N”

KINGS UNDER LETTER “N” FROM  R.MORTON SMITHA BOOK – DATES AND DYNASTIES IN EARLIEST INDIA:

N1)NABHAGA MANAVA -1470 BCE

N2)NABHAGA’S SON

N3)NABHANEDISHTA MANAVA

N4)NABHAS AIKSVAKAVA -1350 BCE

N5)NAGADARASAKA MAHANADIN 446 BCE

NAGANIKA, WIFE OF SIMUKA

N6)NAGARJUNA OF MADHYAMIKAS 150 CE

N7)NAGNASIT OF GANDHRA -1110

N8)NAGNASITI SATYA-

N9)NAHUSA AYAVA – 1820 BCE

N10)NAKULA PANDAVA-975 BCE

N11)NALA NAISADA- 1370

N12)NALA CANDANOKO DUNDUBHI-1090

N13)NALAYANA, FATHER IN LAW OF MUDGALA-1250

N14)NANDA OF MADIRA

N15)NANDA MAHAPADMA-431

ramayan

N16)NANDANA VAIDARBHA DEVANA- 970 BCE

N17)NADENDU CANDRAMASA

N18)NADHIVARDHANA- VAIDEHA -1460

N19)NADHIVARDHANA MAGADHA-467

N20)NADHIVARDHANA PRADYOTA- 385

N21)NADHIVARDHANA MAHAVIRA JINA -520 BCE

N22)NARA SAKA- 1400

N23)NARA BHARADVAJA BHARATA- 1200 BCE

N24)NARA BHANGAKARA -1101

N25)NARADA WITH PARVATA -1150

N26)NARAYNA OF MAGADHA-51

N27)NAREYA OF BHANGAKARA -1080

N28)NARISYANTA MANAVA-1470

NARMADA, WIFE OF PURUKUTSA/TRSADASYU-1470 BCE

N29)NASAMAUJAS YADAVA -1050 BCE

N30)NAVA AUSINARA ANAVA -1340

N31)NAVAKA

N32)NAVARATHA VAIDARBHA-1090

N33)NAYA VAISVAMITRA -1270

N34)NEMIKRSNA OF ARISTAKARNA

N35)NIDAGHA SATRUJIT-1075

N36)NIDATA DAIVASENI YADAVA -1100

N37)NIDHRUVA KASYAPA -1200 BCE

N38)NIGHNA NABHAGI- 1250 BCE

N39)NIGHNA YADAVA-1140 BCE

N40)NIKUMBHA AIKSVAKAVA-1580 BCE

N41)NILA YADADAVA -164

N42)NILA PANCALA -1330 BCE

NILINI, MOTHER OF NILA- 1350

N43)NIMI SAPYA AIKSVAKAVA-154

N44)NIMI VAIDHRBHA -1270

N45)NIMI -1180 BCEE

N46)NIPA -1240

N47)NIPA CARUDESNA-

N48)NIRAMITRA OF MAGADHA- 910

N49)NIRAMITRA VATSA- 400

N50)NIRAMITRA NAKULI PANDAVA – 950BCE

N51)NIRVRTI  VAIDARBHA- 1210

N52)NIRVRTI OF MAGADHA- 728

N53)NISADHA ATITHEYA- 1400 BCE

N54)NISATHA OF RAMA-1075

N55)NRCAKSAS VATSA 810 BCE

N56)NRCAKSAS VATSA II 705 BCE

N57)NRGA AUSINARA ANAVA 1340

N58)NRPANJAYA DVIMIDHA -970 BCE

N59)NRPANJAYA VATSA -600 BCE

N60)NYAGRODHA AUGRASAINYA 980 BCE

To be continued………………………….

Swami_48@yahoo.com

சிங்கள மொழி அதிசயங்கள்!

sri lanka

ஆய்வுக் கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்

ஆய்வுக் கட்டுரை எண்: 1627; தேதி: 6 பிப்ரவரி 2015

இலங்கையில் பேசப்படும் சிங்கள மொழி பல புதிர்களின் உறைவிடமாக விளங்குகிறது. இந்தப் புதிர்களுக்கு மொழி ஆராய்ச்சியாளர்களுக்கு இதுவரை சரியான விடைகள் கிடைக்கவில்லை. “ரிக் வேதம்- ஒரு வரலாற்று ஆய்வு” — என்ற (The Rig Veda – A Historical by Shrikant Talageri) புத்தகத்தில் ஸ்ரீகாந்த் தலகரி என்பவர் இதை எடுத்துக்காட்டி சம்ஸ்கிருத மொழி இந்தியாவில் தோன்றி வெளி நாடுகளுக்குப் பயணம் செய்தது; அவர்கள் இந்தியாவுக்கு வெளியில் இருந்து இம்மொழியை இறக்குமதி செய்யவில்லை என்று வலியுறுத்துகிறார்.

இந்திய-ஆர்ய (Indo-Aryan) மொழிகள் என்னும் பிரிவின் கீழ் சிங்கள மொழி வைக்கப்பட்டபோதிலும் பல பொருந்தாத விஷயங்களும் இம் மொழியில் இருப்பதை வில்லியம் கெய்கர்(Wilhelm Geiger 1856-1943) முதலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். வில்லியம் கெய்கர் சொன்னதாவது: நெடில் வர வேண்டிய இடத்தில் குறிலும் , குறில் வர வேண்டிய இடத்தில் நெடில் எழுத்துக்களும் வந்து புதிர் போடுகின்றன. மற்ற இந்திய ஆரிய மொழிகளைப் போலல்லாது வேற்றுமை உருபுகள் இருக்கின்றன. சிங்கள மொழி இலக்கணப் புதிர்களை என்னால் விடுவிக்க இயலவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.”

king batiya abhya 19 bce

King Batiya Abhaya inscription (19 BCE)

பெல்லா, ககுலா, களுவா, ஒளுவா

சிங்கள மொழியில் உடல் உறுப்புகளைக் குறிக்கும் சொற்கள் எந்த மொழியில் இருந்து வந்தவை என்றே தெரியவில்லை. தமிழ், சம்ஸ்கிருதம், வெட்டா ஆகிய மொழிகளில் வந்த சொற்களே சிங்கள மொழியில் இருக்க வேண்டும். ஆனால் தலை, கழுத்து, கால், தொடை என்னும் சொற்களைக் குறிக்கும்  ஒளுவா, பெல்லா, ககுலா, களுவா, என்ற சொற்கள் எங்கிருந்து வந்தன என்பது புரியவில்லை.

மேலும் மஹாவம்ச நூலின் மூலம் சிங்கள மக்களின் முதல் மன்னன் விஜயன் என்றும் , இந்தியாவின் கலிங்க-வங்க தேசப் பகுதியில் இருந்து வந்து பாண்டிய மன்னனின் மகளையும், ஒரு யக்ஷர் குலப் பெண்ணையும் மணந்து கொண்டான் அவன் என்றும் அறிகிறோம். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகள் சிங்கள மக்களின் மூதாதையர்கள் இந்தியாவின் சிந்து சமவெளிப் பகுதில் இருந்து வந்தவர்கள் என்று காட்டுகின்றன. இந்தியாவின் வட மேற்கு மூலையான ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று தெரிகிறது. இவர்கள் குடியேறிய காலத்தில் அப்பகுதிகள் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாகும்.

6-Sinhala-ConsonantsS

எம்.டபிள்யூ. எஸ். டி சில்வா என்பவர் சிங்கள மொழி பற்றி எழுதிய கட்டுரையில், மற்ற மொழிகளில் இல்லாத சிறப்பு அமசங்கள் இதில் இருப்பதானது மிகவும் உற்சாகமாக ஆய்வு நடத்த உந்துகிறது. தற்போதைய மொழிக் கொள்கைகள் சரியா, இல்லையா என்ற சவாலையும் இது வீசுகிறது. நாம் அறிந்த வரை தற்கால இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தில் இதற்கு ஒரு இடம் ஒதுக்குவது கடினமாகவே உள்ளது – என்று எழுதியுள்ளார்.

சிங்கள மூதாதையர்கள், வட மேற்கு இந்தியாவில் இருந்து குஜராத்தில் உள்ள லாட தேசத்தில் வந்து தங்கி,  பின்னர் இலங்கையில் குடியேறினர் என்றும் டி சில்வா கூறுகிறார். கெய்கர், பரனவிதான போன்ற அறிஞர்களும் இது பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளனர்.

தண்ணீர், தண்ணீர்

தண்ணீர் என்ற பொருள்படும் வடுரா என்ற சிங்களச் சொல் ஜெர்மானிய மொழிக் குடும்பத்தில் உள்ள “வாட்டர்” என்ற சொல்லுக்கு இணையானது பற்றியும் சர்ச்சை நீடிக்கிறது. ஹிட்டைட் மொழியிலும் ‘வதர்’ உள்ளது. ஆனால் இந்தோ ஆரிய மொழிக் குடும்ப விதிகளின்படி இப்படி வர முடியாது என்றும் ஏற்கனவே விக்ரமசிங்க என்ற அறிஞர் கூறியது போல் ‘வரதுக’ என்னும் சம்ஸ்கிருத மூலத்தில் இருந்து இச் சொல் வருவது சாத்தியமல்ல என்றும் கெய்கர் கூறுகிறார். ஆனால் பி.குணசேகர கூறியது போல விஸ்தார (பரவுதல்) என்ற சம்ஸ்கிருத சொல்லுக்குத் தொடர்புடையது இது என்பதை ஒப்புக் கொள்கிறார்.

தலகாரி இது பற்றிக் கூறுவதாவது: இந்திய- ஆரிய மொழிக் குடும்பத்தில் சேராத , இப்பொழுது வழக்கொழிந்த ஒரு இந்திய-ஐரோப்பிய (Indo – European) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது இது என்று ஏன் அவர்களுக்குத் (மேற்படி ஆராய்ச்சியாளர்களுக்கு) தோன்றவில்லை. மேலும் இந்திய மொழிகள் இந்த பூமியில் இருந்து வெளியே சென்று பரவின என்பதே உண்மை. வெளியில் இருந்து இந்திய மொழி பேசுவோர் பாரதத்தில் குடியேறவில்லை என்பதையும் இது காட்டுகிறது. (இதற்கு முந்தைய ‘பாரா’க்களில் பங்கானி என்னும் வேறு ஒரு மொழி பற்றி ஆராய்ந்ததன் அடிப்படையில் அவர் இந்த முடிவை வெளியிட்டார்)

pgss_sinhala_image1

என் கருத்து: 200 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டு “அறிஞர்கள்” எழுதிய இந்திய வரலாறு, இந்தோ ஆரிய மொழிக்கொள்கைகள் அனைத்தும் தவறானவை. திராவிடர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று கால்டுவெல் போன்றோர் நம்பியதன் அடிப்படையிலும், ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று மாக்ஸ்முல்லர் போன்றோர் நம்பியதன் அடிப்படையிலும் எழுந்த தவறான கொள்கைகள் இவை. இதை மாற்றி எழுதும் இன்றியமையாத கடமை நமக்கு உள்ளது.

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்!!

Contact swami_48@ yahoo.com

தமிழ் திரைப்படங்களில் ராமர்! -1

rama_sita_lakshman_and_hanuman

Research article written by S Nagarajan

Research Article No. 1626: dated 6th February 2015

 

by ச.நாகராஜன்

பாரதத்தின் தேசீய வீரனாகவும் தெய்வமாகவும் திகழ்பவர் ஸ்ரீ ராமர்.

தமிழ் திரைப்படங்கள் பாரதப் பாரம்பரியத்தோடு ஒன்றிய ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில் தமிழ் திரையுலகில் ராமர் சித்தரிக்கப்பட்டிருப்பதை ஏராளமான படங்களும் பாடல்களும் சுட்டிக் காட்டுகின்றன.

வால்மீகி முனிவர் ராமரின் சரித்திரத்தை 24000 ஸ்லோகங்களில் விவரித்து ராமாயணமாகப் படைத்தார். அதை பாரதம் தேசீய நூலாக ஏற்றுக் கொண்டுள்ளது. ராமரின் வரலாறை அன்றாடம் கேட்பதே ஒரு பாக்கியம் என்பது தான் ஒரு சாதாரண இந்தியனின் மனோபாவமாக இருந்து வருகிறது.

‘ஏகைகம் அக்‌ஷரம் ப்ரோக்தம் மஹா பாதக நாசனம்’ – அதில் ஒரு எழுத்தைச் சொன்னாலும் கூட அது மஹா பாதகத்தையும் போக்கி விடும் என்பதே வால்மீகி முநிவரின் வாக்கு. அதுவே நம் அனைவரது நம்பிக்கையும் கூட.

ஒரு ஸ்லோகம் என்பது நான்கு பாதங்களைக் கொண்டிருக்கும். இப்படி அமைக்கப்பட்டுள்ள 24000 ஸ்லோகங்களில் ஒரு  பாதத்தையும் கூட மாற்ற முடியாது, இடைச் செருகல் செய்ய முடியாது என்பதை அதில் ஊறி அனுபவித்த மஹாகவி கம்பன் கூறுகிறான் இப்படி:


sita rama

“வாங்க அரும் பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்

தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்       ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவம் மாந்தி மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்”

மாற்ற முடியாதபடி சொற்கள் உள்ள வால்மீகியின் பாதங்கள் அமைந்த ராமாயணத்தை அவன் இனிய கவிதைகளால் தேவரும் பருகும்படி செய்தான். அப்படிப்பட்ட மஹாமுனி புகழ்ந்த கோசல நாட்டை அன்பெனும் கள்ளைக் குடித்து விட்டு ஊமை உளறுவது போல மொழிய ஆரம்பித்து விட்டேன் என்பது இதன் திரண்ட பொருள்.

எப்படிப்பட்ட உலகின் தலையாய மஹாகவி கம்பன்! அவனது அவையடக்கச் செய்யுள் இது! அவனே வியக்கும் அரும் கவி வால்மீகி.

பாரத மக்கள் அனைவருடைய லட்சிய புருஷராக ஒருவரை வால்மீகி மையப்படுத்திக் காட்டுவது சாதாரண விஷயமல்ல. அந்த ராம சரித்திரம் இன்று வரை மங்காமல் நாளுக்கு நாள் மெருகேறிப் புகழோங்கி வழங்கப்பட்டு வருகிறது.

அதைத் தமிழ் திரையுலகம் தமிழ் மக்களின் மேன்மைக்காகவும் ரசிப்பிற்காகவும் அவ்வப்பொழுது பயன்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது.

சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

1968ஆம் ஆண்டு மலர்ந்த படம் லக்ஷ்மி கல்யாணம். ஏ.எல்.சீனிவாசன் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் நட்சத்திரப் பட்டாளமே பங்கு பெற்றது. சிவாஜி கணேசன். எஸ்.வி.ரெங்காராவ், பாலாஜி, சோ, சௌகார் ஜானகி, வெண்ணிற ஆடை நிர்மலா என ஏராளமான நட்சத்திரங்கள். எம்.எஸ். விசுவநாதன் இசை அமைத்த இந்தப் படத்தில் பெண் பார்க்கும் படலம் ஒன்றில் அழகிய வீணையை மீட்டி வெண்ணிற ஆடை நிர்மலா பாட அதை பெண் பார்க்க வந்த பாலாஜி மெய்மறந்து கேட்க அருகில் சிவாஜி கணேசன்,வி.எஸ்.ராகவன். வி.கே.ராமசாமி, பழம் பெரும் காமடி  நடிகர் கருணாநிதி, சோ  உள்ளிட்ட அனைவரும் ரசிக்க பாடல் மலர்கிறது.

பாடலை எழுதியவர் ராம பக்தியில் தோய்ந்த ஒருவர் – கண்ணதாசன். பாடலின் கடைசி வரிகளில் லட்சோப லட்சம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வைத்தார். முதல் வரிகளிலோ அற்புத பட்டியல் ஒன்றை சித்தரித்து விட்டார். பாடல் இதோ:

rama-lakshmana-sita-and-hanuman-HF35_l

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடிஅவன்
நல்லவர் வணங்கும் தேவனடிதேவன்
(ராமன் எத்தனை ராமனடி)

கல்யாண கோலம் கொண்டகல்யாணராமன்
காதலிக்கு தெய்வம் அந்தசீதாராமன்
அரசாள வந்த மன்னன்ராஜாராமன்
அலங்கார ரூபம் அந்தசுந்தரராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

தாயே என் தெய்வம் என்றகோசலராமன்
தந்தை மீது பாசம் கொண்டதசரதராமன்
வீரம் என்னும் வில்லை ஏந்தும்கோதண்டராமன்
வெற்றி என்று போர் முடிக்கும்ஸ்ரீஜெயராமன்
(ராமன் எத்தனை ராமனடி)

 



வம்சத்திற்கொருவன்ரகுராமன்
மதங்களை இணைப்பவன்சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன்ஸ்ரீராமன்
முடிவில்லாதவன்அனந்தராமன்

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்
ராமனின் கைகளில் நான் அபயம்!!!

 
அற்புதமான இந்தப் பாடலின் ஏற்றத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம். கல்யாணராமன், சீதாராமன், ராஜாராமன்,  சுந்தரராமன்,  கோசலராமன்,தசரதராமன்,கோதண்டராமன்,


ramasita

ஸ்ரீஜெயராமன்,ரகுராமன்,சிவராமன் என்று அடுக்கிக் கொண்டே போன கவிஞர் எண்ணிக்கையற்ற தன்மையை நினைத்து அனந்தராமன் என ராமன் அனந்தம் என்று முத்தாய்ப்பாகக் கூறுவது நூல்களின் முடிந்த முடிபல்லவா!  ராமஜெயத்தை நம்பியோர்க்கு ஏது பயம் என்றும் கூறி அனைவரும் அவரது அபய்மாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார் கவிஞர். பி.சுசீலா தனக்கே உரித்த மென்மைக் குரலில் உருகிப் பாடும் இந்தப் பாட்டில் 18 முறை ராமர் வருகிறார்!

ஏராளமானோர் பங்கு பெறும் இந்தக் காட்சியில் பெண்பார்க்கும் படலத்திற்கு ஒரு புதிய அர்த்தத்தை சிருஷ்டித்து விட்டனர் கலைக் குடும்பத்தினர்.

இப்படிப்பட்ட ராமர் பாடல்களைப் பாடுவது நமது வாழ்க்கை முறை என்பதைப் படம் சித்தரிக்கிறது!

இந்த ராமனை மனதில் ஏற்றிக் கொண்டு தமிழ் திரைப்படங்களில் ராமரைத் தேடி யாத்திரயைத் தொடங்குவோம்.

 

            -தொடரும்

 

swami_48@yahoo.com

Jesus Mystery! Did he learn in Hindu Gurukula?

Jesus-Christ-and-Krishna1

Christ and Krishna

Research paper written by London swaminathan

Research article Number 1625; Date 5h February 2015

The greatness of Hinduism is that they believe that messengers of God can appear in any part of the world. Another great thing about Hinduism is that they don’t call anyone Kafir or pagan, but all are called Divine Children (Amrutasya Putraha or Divyatma Swarupalala).  The third great thing about Hinduism is that whatever said in other religions are already found in the vast ocean like Hindu scriptures. Nothing in the world came to them as a surprise or a new thing! So they din’t clash with any one or covert any one.

Bible is silent about the teenage years of Jesus Christ. The New Testament says Jesus went at the age of 12 and came back at the age of 30. Scholars from various fields have discussed this topic for nearly 200 years and have come out with various theories. Teenage years are very important in any human being’s life. Since youths have tremendous energy and turbulent mind, they will go astray very easily if their energy is not properly channelized.

buddha and chirst

Krishna, Christ and the Buddha

Ancient India had a beautiful system to tackle this problem. Children at the age of seven were sent to Teachers (Guru) houses and asked to serve them. While serving at the teachers’ houses they were taught the lessons. When they have mastered the subject by the age of twenty or so they were sent home. Immediately they were married and so there was less opportunities for following bad things. Moreover the military style discipline imparted at Guru’s place made them to fall in a groove. Habits die hard. They followed the good habits they learnt at Guru’s Ashram or Gurukula. Sanskrit scriptures say that certain teachers had hundreds of students and so they were called Kulapatis.

Jesus Christ was a born Yogi and Jnani

Jesus’ life and his teachings point out that he had education at a Hindu Gurukula in the Himalayas. Even before Jesus was born, India had big universities with thousands of students in Takshasheela (Taxila), Nalanda and Kancheepuram. So it was not impossible.

Why should Jesus come to India to learn such things?

Jesus was born in a Jewish sect known as Essenes. Roman writer Pliny the Elder ( 70 CE) gave the details of Essenes’ life. They were ascetics, they took bath every day (like Hindus), they believed in mysticism and they did not marry (Brahmacharys). Readers can find more about Essenes in encyclopaedias. They were like Hindu Yogis. The word Essenes came from Sanskrit word Isa (God). In short they were god men. In India every town has a great soul who we respect as god men.

Though many people have put forward various points to justify that Jesus visited India in his teenage years, they have not given many of the following things:

 

christ and krishna

Adwaita in the Bible: Jesus’ probably learnt Adwaita-Non Dualism from Hindu saints in the Himalayas. Swami Vivekananda spoke about three stages in the preaching of the Christ. When he went to the masses, who could not conceive anything other than a personal God, he said, Pray to your Father in Heaven and he acted like a Messenger of God. To others who could grasp a higher idea, he said, I am the vine, ye are the branches, but to his disciples, to whom he revealed himself fully, he proclaimed the highest truth, I and my father are one. This is what considered as Maha Vakyas in our Upanishads : Aham Brahmasi, Tat twam asi etc.(I am God, You are That).

When he said,’ The Kingdom of Heaven is within you’ and ‘Blessed are the pure in heart for they shall see God’, Jesus meant only the non-dualist principle, which was made popular by the greatest philosopher Adi Sankara.

Jesus Christ= Thera Buddha

Swami Vivekananda also narrated a strange dream about Jesus Christ to his disciples. Read it in his own words:

“I had a curious dream on my return voyage to England. While our ship was passing through the Mediterranean sea, in my sleep, an old and venerable looking person, Rishi-like in appearance, stood before me and said: I am one of the ancient order of Theraputtas which had its origin in the teaching of the Indian Rishis.
 The truths and ideals preached by us have been given out by Christians as taught by Jesus: but for the matter of that there was no such personality by the name of Jesus ever born. Various evidences testifying to this fact will be brought to light by excavating here. By excavating which place can those proofs and relics you speak of be found? I asked. The hoary-headed one pointing to a locality of Turkey, said, see here.
 Immediately after, I woke up, and at once rushed to the upper deck and asked the captain, ‘what neighbourhood is the ship in just now?’. ’Look yonder’, the captain replied, ’there is Turkey and the island of Crete’.”

jesus bhaktas namskar and namste

Hindu Style: Bhaktas prostrate: Namaskar and Namaste (See at the bottom right)

Bhagavad Gita & The Bible: There are many resemblances between the Gita and the New Testament. As an instance of a resemblance between the two scriptures a quotation or two may be given. Krishna says (9-27) ‘whatever thou do; whatever thou eat; whatever thou sacrifice; whatever thou give away; whatever mortification you may perform; do all as if to me.’ With this compare (I.Cor.x.31)’whether therefore ye eat or drink, Whatever ye do, do all to the glory of God.’ Krishna says again ‘Be not sorrowful; from all thy sins I will deliver thee’. While in Mathew ix.2. We read, Be of good cheer; thy sins be forgiven thee.’

Let me add just one further quotation, in which the resemblance is striking: In describing Heaven Krishna says of it that it is a place ‘in which neither sun nor moon need shine, for all the lustre it possess is mine.’

The Heaven described in Revelation xxi.23 is a city which had no need of the sun, neither of the moon to shine in it, for the glory of god did lighten it.’ Quoting all these in his book Indian Philosophy, the learned author J.F.Kennedy says that the writers of the New Testament borrowed all these from Bhagavad Gita.

King Herod= King Kamsa

Mr.J.F.Kennedy adds one more analogy in the above said book that Kamsa who killed all the children is Indian Herod.( Herod was a Roman king who ordered the slaughter of all the children to make sure that Jesus’ is dead.)

 

Catholic Church and the Buddhist Monastery: All the customs, from the uniform to the convent is copied from the Buddhists who were sent to the West from the days of Asoka. This was noticed and reported by a lot of Western scholars.

‘The Original Jesus’ written by E R Gruber and G Kersten gives hundreds of examples with proof. Asoka sent preachers to different countries and Jesus also arranged for his disciples travel even before his death. The convent, the system of preachers, the uniform for the priests- all copied from the Buddhists and the Buddhists adopted all these from the Hindus. To give one example, Hindu saints wore saffron cloth and the Buddhists wore yellow cloth. Hindu saints went to different parts of the world including South East Asia where there are many statues of Agastya even today.

most of the pictures Yogic white

Old Jesus pictures are in Hindu Yogi’s white dress!

Jesus and Fish Symbol

Scholars struggled very hard to justify why Jesus was identified with Fish symbol. At last they found out a circuitous route to explain it. They took him all the way to Greece and named him fish in Greek language! No one can see any logic in this strange link! In Greek “Ichtys” means fish and it was the acronym for” Iseous Christos Theou Hyos Soter” (Jesus Christ, Son of God, Saviour). This is a scholarly invention or concoction. It is like giving the meaning for the word ‘WIFE’ as “Worries Invited Fore Ever”! A senseless joke. The fact of the matter is that in the Bhagavad Gita, Hindus’ holy book, Lord Krishna says, “Jasaanaam makaras ca asmi”. The meaning is “Of the fishes I am Makara”. Makara is translated as shark or alligator or even big fish. Here the Sanskrit word for fish is Jasa. In course of time this sound was used for Isa (God), Yasa/s(fame) and names such as Jason etc.

In short, the Sanskrit word for fish and the name of Jesus sounded similar. But scholars struggled very hard to give umpteen interpretations for Jesus’ link with fish.

Vidura Niti= Jesus Niti

Like Sermon on the Mount and the Buddhist Dhammapada, the Hindu scriptures also teach men to return good for evil. This is what said to have uttered by Vidura, the wise man of Mahabharata in the Vidura Neethi.

Thiruvalluvar, the great Tamil saint in his Thirukkural says:

When a man has experienced pain caused by harm done to him, how can he cause pain to others? (Couplet 318)

‘The best way to punish those who harm you is to make them feel ashamed by doing them well and thinking no more of it’ (couplet 314).

Na tath parasya sandhadyath pratikuulam yadatmana: 7-17
“Do not do unto others as you wish others not to do unto you – Vidura Niti

padapuja

Padapuja : Hindu style! Washing the feet!

Mahabharata Santiparva 167-9 also repeats the same message in a positive way:

Tasmaad dharma praaadheenena bhavitavyam yataatmanaa
Tathaa cha sarvabhuutesu vartitavyam yathaatmani

Hence, by self control and by making right conduct (dharma) your main focus, treat others as you treat yourself.

Jesus Christ also said the same in the Bible,

Therefore all things whatsoever ye would that men should do unto you, do ye even so unto them (Matt.7,12)

Blind Leading the Blind: Many of the parables told by Jesus are similar to the parables in the Upanishads. Even the Upanishad and Vedic phrases such as Honey and Milk, Blind leading the Blind are found in Jesus teachings (Mathew 15:13-14, Luke 6:39-40)

Namaste by Jesus Devotees

Several of Catholic Christian customs such as Baptism, Using Bells, Incense, early paintings  showing Namaste (Joining both hands to show respect), Jesus in simple dress like Hindu yogis, Idol worship in the form of Virgin Mary, Cross  etc. show the influence of Hinduism and Buddhism.

When the people noticed that he was teaching at the age of 30, they were wondering, “is not this the carpenter’s son?” (see Mathew). The word used in Greek bible is Tekton (Sanskrit word Taksha, Tamil Thachan). There are hundreds of Sanskrit words in the Bible. Please see my early articles: Sanskrit in the Bible part 1 and Part 2

Oral Tradition in Kashmir

 

The oral tradition in Kashmir says that the Biblical king Solomon visited Kashmir. Jesus Christ was said to have spent his last days in Kashmir after resurrection The present Bible was redacted in 3rd century AD in Constantinople and lot of different versions were burnt at that time. Like Hindu Puranas they had various versions of the Bible. To avoid confusion they were burnt by the king Constantine. There is a bible called Sinai Bible in the British Library in London which differs widely from the modern Bible. There are 14,800 differences according to the author of “The Bible Fraud”, Tony Bushby.

There is a grave in Kashmir, which is considered Jesus’ grave. The epitaph on the grave says, “The messenger of peace rests here”. Several scholars have pointed out the similarity between the parables of the Upanishads and Christ.

jesus blessing, Hindu gesture

Hindu blessing : jesus does it with right hand like Hindu Yogis!

Forty Day (Mandalam) Fast: Jesus fasted for 40 days in the desert at the beginning of his ministry.

Even today 40 day fasting period leading up to Easter was followed by orthodox Christians. This 40 day period is called a Mandalam in Hindu scriptures. Even today millions of Hindus visiting Sabarimalai in Kerala and Murugan temples in Tamilnadu (Skantha Shasti) follow this custom.

Washing the feet: When Dharma alias Yudhistra performed the Rajasuya Yagna he allocated the tasks to different people. Krishna chose the work of washing the feet of the worthy Brahmins. One but cannot recall to mind an identical incident in the Life of Jesus, who when he ate the Passover meal with his 12 disciples went round washing their feet. This custom of washing the feet existed in Ancient India even today when great men like Sankaracharyas visit any one, it is done.

 

Unlucky No.13: The Christians think that number 13 unlucky. This is because that Judas, who betrayed Jesus was the thirteenth person at the Last Supper. But this belief about No13 has a different origin. The ‘Brahmanas’, the books that came immediately after Vedic Samahitas, call No13 a dirty number because the thirteenth month is called a dirty (mala) month. When the Vedic society used a lunar calendar unlike our modern solar calendar there was always a few days left as balance at the end of each year. When it accumulated in to a full month they treated as something dirty and avoided all good activities during that period. Amazing coincidence is that the South American Mayan civilization had also the same belief.

Christ-Yogic aura, buddha

Jesus has aura around his head like Hindu Yogis and Buddha!

Krishna Miracles: There are very many similarities between the miracles done by Jesus Christ, Krishna and Moses. The river Jamuna separated to give way to Krishna and Red Sea separated to give way to Moses and his followers. Jesus fed 5000 people with bread from the basket which contained only a few breads. In the same way Draupati fed a lot of people with Akshayapathram by the grace of Lord Krishna.

(Many of the above things are already reported in my posts at various articles. Now I have put them together:swami)

Contact swami_48@yahoo.com

(Pictures are used from various sites;thanks)

தமிழ் திரைப்படங்களில் சம்ஸ்கிருதம்! – 2

Karnan2

by ச.நாகராஜன்

Post No 1624: Date 5th February 2015

 

திரைப்படங்களில் சுபாஷிதம்

தமிழ் திரைப்படங்களில் சுபாஷிதம் எனப்படும் தனி ஸ்லோகங்களைக் கூட காண முடியும். கமலஹாஸன் நடித்த படத்தில் வரும் ஒரு ஸ்லோகம் இது:

புஸ்தகம் வனிதா வித்தம் பரஹஸ்தம் கதம் கதம் I                           அதவா புநராயேன ஜீரண ப்ரஷ்ட ண்ட II

புஸ்தகம், பெண், பணம் ஆகியவை அடுத்தவன் கைக்கு மாறினால் போனது போனது தான்! திரும்பி வந்தாலும் ஜீரணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு பின்னமும் துண்டுகளாகவும் உருமாறி வரும் என்பது இதன் திரண்ட பொருள்!

கர்ணனில் கீதை

பகவத் கீதை உலகமெலாம் போற்றப்படும் அற்புத நூல். இதையும் தமிழ்ப் படங்களில் பலவற்றிலும் காண முடியும். குறிப்பாகச் சொல்ல ஒரே ஒரு படத்தை எடுத்துக் காட்டலாம்.

1963ஆம் ஆண்டில் வெளியாகிய படம் கர்ணன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கர்ணனாகவும் என் டி ராமாராவ் கண்ணனாகவும் எஸ்.பி.முத்துராமன் அர்ஜுனனாகவும் நடித்து னைவரின் பாராட்டையும் பெற்ற படம் இது.

அதில் கீதையை என் டி ராமாராவ் சுருக்கமாகவும் அழகாகவும் போர்க்களக் காட்சியில் இப்படிக் கூறுவார்:

 

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!

மரணத்தின் தன்மை சொல்வேன்;

மானிடர் ஆன்மா மரணமெய்தாது,

மறுபடிப் பிறந்திருக்கும்;

மேனியைக் கொல்வாய்! மேனியைக் கொல்வாய்!

வீரத்தில் அதுவும் ஒன்று;

நீ விட்டு விட்டாலும் அவர்களின் மேனி,

வெந்து தான் தீரும் ஓர் நாள்.

 

என்னை அறிந்தாய், எல்லா உயிரும்,

எனதென்றும் அறிந்து கொண்டாய்;

கண்ணன் மனது கல் மனதென்றோ

காண்டீபம் நழுவ விட்டாய்

காண்டீபம் நழுவ விட்டாய்

மன்னரும் நானே, மக்களும் நானே,

மரம் செடி கொடியும் நானே;

சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்;

துணிந்து நில் தர்மம் வாழ.

 

புண்ணியம் இதுவென்றிவ் வுலகம் சொன்னால்,

அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே;

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்

போகட்டும் கண்ணனுக்கே.

 

கண்ணனே காட்டினான், கண்ணனே சாற்றினான்;

கண்ணனே கொலை செய்கின்றான்.

காண்டீபம் எழுக! நின் கை வன்மை எழுக!

இக்களமெலாம் சிவக்க வாழ்க!

karna

கண்ணதாசனின் அற்புத கவிதை வரிகள் கீதையின் சுருக்கத்தைத் தந்து நம் உளத்தை உருக்குகிறது; மகிழ்விக்கிறது. இதைத் தொடர்ந்து கீதையில் நான்காவது அத்தியாயத்தில் வரும் முக்கியமான ஸ்லோகம் அப்படியே சம்ஸ்கிருதத்தில் கம்பீரமாக ஒலிக்கிறது.

நல்லோரைக் காத்தற்கும் தீயோரை அழித்தற்கும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகம் தோறும் அவதரிக்கிறேன் என்ற பொருள் உடைய இந்த ஸ்லோகம் கேட்போரைப் பரவசப்படுத்துகிறது:

 

பரித்ராணாய சாதூனாம்,

விநாசாய துஷ்க்ருதாம்;

தர்ம சம்ஸ்தாபனார்த்தாய,

சம்பவாமி யுகே யுகே.  (கீதை நான்காம் அத்தியாயம் எட்டாவது ஸ்லோகம்)


papanasam

பாபநாசம் சிவனின் அமர கீதங்கள்

இனி தமிழ் திரையுலகின் ஆரம்ப வருடங்களை எடுத்துப் பார்த்தாலோ அங்கும் சம்ஸ்கிருத வார்த்தைகளைப் பரவலாகக் கொண்ட பாடல்களை

நாம் காண முடியும்:

பாபநாசம் சிவன் பெரும் சாஹித்யகர்த்தா. அழகிய இனிமையான பாடல்களை எழுதிய திரைப்படப் பாடலாசிரியர். பெரும் புகழ் பெற்ற கவிஞர். சுமார் 2400 கீதங்களை இயற்றியவர். இவற்றில் திரைப்படப்பாடல்கள் மற்றும் சுமார் 800. இதுவரை முறையாகத் தொகுக்கப்பட்ட கீர்த்தனைகள் 400. அனைத்துப் பாடல்களையும் முறையாகத் தொகுக்கும் முயற்சியை அவரது மகள் இப்போது செய்து வருகிறார்.

என்ன தவம் செய்தனையசோதா என்ன தவம் செய்தனை என்ற இவரது பாடலை இன்றும் மேடை தோறும் வீடு தோறும் கேட்க முடிகிறது. இது போல ஏராளமான உள்ளம் உருக்கும் கீதங்களை யாத்தவர் இவர்.

papanasam2

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

ராதே உனக்கு கோபம் ஆகாதடி போன்ற நூற்றுக் கணக்கான இவரது பாடல்களுக்கு இன்றும் ஒரு தனிப் பெருமை உண்டு.

1945இல் வெளியாகி சக்கைப் போடு போட்ட படமான சகுந்தலை படத்தில் அனைத்து பாடல்களையும் இயற்றியவர் பாபநாசம் சிவன் தான். இசை அமைத்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன்.எம்.எஸ். சுப்புலெட்சுமியும் ஜி.என்.பாலசுப்பிரமணியனும் பாடிய ஒரு பாடலின் சில வரிகள் இதோ:

பிரேமையில் யாவும் மறந்தேனே

பிரேமையில் யாவும் மறந்தேனே  .. பிரேமையில் ஜீவனம் உனதன்பே ஜீவனம் உனதன்பேஎன்

அன்பே வானமுதும் விரும்பேனே

பிரேமையில் யாவும் மறந்தோமோ   ..பிரேமையில்

பிரேமை வெண்ணிலா ஜோதி வீசி  . . என் உள்ளம்

பரவசமாக பிரேமை வெண்ணிலா ஜோதி வீசி

என்னை மறந்தேன் மதனமோகனா

என்னை மறந்தேன் மதனமோகனா

இப்படி தமிழும் சம்ஸ்கிருதமும் சரியான விகிதத்தில் கலந்து குழைத்து அமுத கானம் வழங்கியவர் பாபநாசம் சிவன்.


haridas

எம் கே டி பாடிய பாடல்கள்

கிருஷ்ணா முகுந்தா முராரே போன்ற துதிப் பாடல்களில் இவர் சம்ஸ்கிருத சொற்களையே அதிகம் கையாண்டார். இன்றும் பக்தர்கள் தவறாமல் கேட்கும் பாடல் இது.

எம்.கே.தியாகராஜர் நடித்துப் பாடி இவர் எழுதிய பாடல்கள் தமிழும் சம்ஸ்கிருதமும் கலந்த ஒரு அழகிய சங்கமம். காலத்தால் வெல்ல முடியாத இந்தப் பாடல்களின் பட்ட்டியலை எழுதத் தொடங்கினால் அது ஒரு தனி நூலாக விரியும்.

 

ஆக இப்படி தமிழ் திரைப்படங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை சம்ஸ்கிருதம் உரிய இடத்தை தமிழ் திரைப்படங்களில் பெற்றுக் கொண்டே தான் இருக்கிறது.

நம் கலைஞர்களுக்கு மொழிப் பற்று உணடு; மொழி வெறி இல்லை. இந்த நல்ல போக்கு எதிர்காலத்திலும் தொடரும்; தொடர வேண்டும்.

இதை எதிர்ப்பவர்கள் அரசியலில் தமிழை வணிகமாகப் பயன்படுத்தும் சுயநலமிகள் என்பதை நன்கு அறிந்து கொண்ட தமிழர்கள் அவர்களை காலம் தோறும் உதாசீனப்படுத்தி வருவதையே இது காட்டுகிறது

krishna mkt

தமிழும் சம்ஸ்கிருதமும் நமக்கு இரு கண்கள்

நமது நோக்கம் தெளிவானதாக இருத்தல் வேண்டும். தமிழும் சம்ஸ்கிருதமும் இந்தியராகிய நமக்கு இரு கண்கள்.

தமிழை உலகத்தின் தலையாய அழகிய மொழி என்பதை ஆதாரங்களுடன் தருவோம்; நம் மொழியை இன்னும் அதிக வளம் வாய்ந்த செழுமை மொழியாக ஆக்குவோம். அதே நேரத்தில் சம்ஸ்கிருதத்தைக் கற்று நம் பண்பாட்டை இன்னும் அதிகமாக வேரூன்ற வைப்போம், இதற்கு திரைப்படமும் ஒரு கருவி என்பதால் அதிலும் இதே கொள்கையைக் கடைப் பிடிப்போம்!

********* முற்றும்

contact swami_48@yahoo.com

திருவண்ணாமலை கோவிலில் சில விநோதச் சடங்குகள்

OLYMPUS DIGITAL CAMERA

கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்

ஆய்வுக் கட்டுரை எண் -1623; தேதி 5 பிரவரி 2015

இந்துக்களின் கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டும் அல்ல. அவை கலா கேந்திரங்கள்; பல்கலைக் கழகங்கள்; காலாகாலமாக இருந்துவரும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் அகியவற்றின் மூல ஆதாரங்கள். உள்ளூரில் வசித்த சாது சந்யாசிகளின், புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பாதுகாத்து வைக்கும் பெட்டகங்கள்.

தமிழ் நாட்டுக் கோவில்கள் வரலாற்றுப் பதிவேடுகள். அங்கிருக்கும் பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகள்தான் தமிழக வரலாற்றின் ஆதாரங்கள். இசை, நடனம், தமிழ் பக்தி இலக்கியங்கள், சிற்பகலைக்கு அஸ்திவாரமாக விளங்குபவை. விழாக்கள் மூலம் மக்களை ஒன்று சேர்க்கும் சமுதாயச் சீர்திருத்தக் கூடங்கள். சுற்றுலாப் பயணிகளையும் யாத்ரீகர்களையும் வெளிநாட்டுப் பயணிகளையும்  ஈர்க்கும் காந்தங்கள் —- என்று இப்படி கோவில்களைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம்.

ஒவ்வொரு கோவிலிலும் உள்ள விநோதச் சடங்குகள், பழக்க வழக்கங்கள் மக்களுக்கு எவ்வளவோ பாடங்களைப் போதிக்கின்றன. திருவண்ணா மலையிலும் இரண்டு பாடங்களைக் கற்பிக்கும் நிகழ்ச்சிகள் உண்டு.

வீரவல்லாளன் (1291-1343) என்ற மாமன்னன் இந்து மதத்தின் காவலனாக விளங்கினான். அவன் ஒரு ஹோய்சாள மன்னன். அவனுக்கு மூன்றாம் வல்லாளன் (கன்னடத்தில் பல்லாளன்) என்ற பெயரும் உண்டு. அவனுக்குத் திருவண்ணாமலையின் மீது தனி அன்பும் பக்தியும் உண்டு. அடிக்கடி அண்ணாமலைக்கு வந்து சென்றவன் பிற்காலத்தில் அருணசமுத்ர வீர வல்லாளன் பட்டணம் என்று அந்த ஊருக்குப் பெயர் சூட்டி அதை ஹோய்சாள ராஜ்யத்துக்கு இரண்டாம் தலைநகரமாகவும் ஆக்கினான். அருணகிரிநாதர், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், யோகி ராம்சுரத் குமார் போன்ற எத்தனையோ மகான்களைக் காந்தமாக இழுத்தது அண்ணாமலை. ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னதாக அங்கு சென்றவன் ஹோய்சாள மாமன்னன் வீர வல்லாளன்.

Hoysala_emblem

ஹோய்சாளர் சின்னம்: சிங்கத்தை வீழ்த்தும் வீரன்

பஞ்சபூதத் தலங்களில் அக்னியின் அம்சமாக விளங்குவது திரு அண்ணாமலை. சிவன் அடியார்களால் பாடல் பெற்ற தலம். அக்கோவிலுக்கு வீர வல்லாளன் எவ்வளவோ திருபணிகளைச் செய்தான். வீர வல்லாளன் திருவாசல் என்று அழைக்கப்படும் பெரும் கோபுரத்தையும், மதில் சுவரையும் பல மண்டபங்கலையும் அவன் கட்டினான. அவனது 9 கல்வெட் கள் கோவிலில் இருக்கின்றன. அவை அவனது நீண்ட விருதுகளையும் பட்டங்களையும் அவனும் ராணியின் அளித்த தான தருமங்களையும் எடுத்துரைக்கின்றன.

வல்லாளன் கன்னட, ஆந்திர, தமிழகப் பகுதிகளை ஆண்ட காலம் மிகவும் கொந்தளிப்பான ஒரு காலம். வடக்கே டில்லியில் இருந்த சுல்தான்களின் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திய காலம். கோவில்களை அழித்து அதன் செல்வங்களைச் சூறையாடுவது அவர்கள் வழக்கம்.

அலாவுதீன் கில்ஜியின் அடிமைச் சேவகன் — தளபதி மாலிக்காபூர் திடீரென படை எடுத்து வந்த போது வல்லாளன் அவனது தலைநகரில் இல்லை. அவன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மகன்கள் இடையே ஏற்பட்ட சண்டையில் பங்கேற்க வந்திருந்தான். தலைவன் இல்லாத் தலை நகரம் சூறையாடப்பட்டது. பீன்னர் ஒருவாறாக சமாதானத்தின் பேரில் அவனுக்கு நாட்டைத் திரும்பித் தந்தான் அலவுதீன் கில்ஜி. பின்னர் முகமது பின் துக்ளக் படையெடுத்தான். இதற்குப் பின்னர் மதுரையை ஆண்ட உடௌஜி என்பவன் போர்தொடுத்தான். ஆனல் அவன் மர்மமாக வந்த ஒரு அம்பினால் மாய்ந்தான். இனி அமைதியான ஆட்சி எண்ணி இருந்த தருவாயில் மதுரையை ஆண்ட சுல்தான் கியாஸ் உதீன் தம்கானி என்பவன் தாக்கினான். ஆறு மாத முற்றுகையின் போது, சமாதானம் செய்வதாகச் சொல்லி முன்வந்து, எதிர்பாரத தாக்குதல் நடத்தினான் சுல்தான். இது கண்ணனூர் குப்பம் என்ற இடத்தில் நடந்தது. இந்தத் தாக்குதலில் வீர வல்லாளன்  சிறைப் பிடிக்கப்பட்டுச் சிரச் சேதம் செய்யப்பட்டான.

வல்லாளனின் தலையை மதுரைக் கோட்டைச் சுவரில் தொங்கவிட்டான். அப்போது மதுரைக்கு யாத்திரை வந்த இபின் பட்டுடா என்னும் அராபியப் பயணி இந்த தலை தொங்குவதைப் பார்த்து குறிப்பேட்டில் எழுதிவைத்தான்.

வல்லாளனின் முடிவு பரிதாபமான முடிவு என்றாலும் அவன் புகழ் திருவண்ணாமலை கோபுரம் அளவுக்கு இன்றும் உயர்ந்து நிற்கிறது. 700 ஆண்டு காலமாக புகழ் பரப்பும் அக்கோபுரம் இன்னும் ஆயிரம் ஆண்டுக்கும் அவன் புகழைப் பரப்பும். அவனுடைய சிலைகள் கோவிலில் பல உருவங்களில் பல இடங்களில் உள்ளன. இன்றும் அந்தச் சிலைக்கும் பூமாலை சாற்றி போற்றி வருகின்றனர்.

vallala

இந்து மதக் காவலன் வீர வல்லாளன்

வல்லாளன் புகழை,  14-ஆம் நூற்றாண்டுப் புலவர் எல்லப்ப நாயனார் பாடிய அருணாசல புரானத்தில் காணலாம். வல்லாளனைத் தீர்த்துக் கட்டீய மதுரை சுலதானை விஜய நகரப் பேரரசனின் படைத்தளபதி குமார கம்பண்ணன் வந்து நிர்மூலம் செய்தான். முஸ்லீகளால் சூறையடப்ப்பட்டு 40 ஆண்டுக்காலத்துக்கு மூடிக்கிடந்த மதுரை மீனாட்சி கோவிலையும் திறந்து வைத்தான். இத்தனையயும் போர்க்கால பத்திரிக்கை நிருபர் போல அவன் மனவி கங்காதேவி மதுரா விஜயம் என்னும் அற்புதமான சம்ஸ்கிருத காவியத்தில் எழுதிவைத்துள்ளாள். உலகின் முதல் நேரடி வருணை செய்த (பத்திரிக்கை நிருபர்) பெண்மணி மகாராணி கங்காதேவி.

தென்னாட்டில் முஸ்லீம் ஆதிக்கத்துக்குச் சாவு மணி அடித்தவன் குமார கம்பண்ணன். அவன், அவர்களை வட நாட்டிற்கு விரட்டினான். அங்கு சுல்தான் ஆட்சி போய், மொகலாய ஆட்சி வந்து அட்டூழியங்களைத் தொடர்ந்தது. சிவாஜி என்னும் மாமன்னன், மலை ஜாதி மக்கள் இடையே தோன்றினான். உலகின் முதல் கெரில்லா யுத்தத்தை நடத்தி மொகலாய ஆட்சிக்கு சாவு மணி அடித்தான்.

வல்லாளனுக்கு குழந்தை இல்லை என்றும் இதுபற்றி அவன் அண்ணாமலையானிடம் முறையிட்டபோது நாமே உமக்குக் குழந்தையாக வருவோம் என்றும் சொன்னதாக ஒரு கதை உண்டு. ஆக ஒரு மாசி மாதத்தில் மன்னன் இப்படிக் கொடூரமாக இறந்த செய்தியை அர்ச்சகர்கள் சிவனிடம் அறிவிக்கவே அவர் நாமே அவனது இறுதிச் சடங்குககளை நடத்துவோம் என்று சிவன் சொன்னதாகவும் உடனே பள்ளிகொண்ட பட்டு என்னும் இடத்தில் அவருடைய இறுதிச் சடங்குகள் நடந்ததாகவும் கோவில் வரலாறு கூறுகிறது.

hoysala king

ஹோய்சாளமன்னன் சிலை

இதை ஒட்டி ஆண்டுதோறும் இப்போதும் அந்த இறுதிச் சடங்கை சிவ பெருமானே செய்துவருகிறார். இது ஒரு புறமிருக்க திருவண்ணா மலையில் ஆண்டுதோறும் நடக்கும் பத்து நாள் உற்சவத்தில் அர்ச்சகர்களும் ஊழியர்களும் சுவாமியை வல்லாளன் திருவாசல் வழியாகக் கொண்டு செல்ல முயன்றபோது அவ்வாயில் வழியாக போக முடியாமல் தடங்கல்கள் வந்தன. உடனே பத்து நாள் உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் வேறு வழியாக சுவாமியையும் அம்மனையும் திரு உலா எடுத்துச் சென்றனர். வல்லாளன் மாபெரும் கோவில் கோபுரத்தைக் கட்டிவிட்டோம் என்று மமதை கொண்டிருந்ததால் இப்படி நடந்தது.

சுவாமியின் பல்லக்கு இப்படி செல்ல மறுப்பதை அறிந்த வல்லாள மாமன்னன் தாமே அங்கே வந்து இறைவனிடம் கண்ணீருடன் மன்றாட பத்தாம் நாளன்று அந்த சப்பரம் வல்லாளன் திருவாசல் வழியாக தடங்கல் இன்றிச் சென்றது. இதை நினைவு கூறும் விதத்தில் இன்றும் பத்தாம் நாளன்று மட்டும் வல்லாளன் திருவாசல் வழியாக சுவாமி ஊர்வலம் புறப்படும்.

இவ்விரு விநோத நிகழ்ச்ழ்ச்சிகள் நமக்கு உணர்த்தும் இரு விஷயங்கள்: 1)அம்மா அப்பா இல்லாதோருக்கு, தந்தை-தாய் ஆகிய எல்லாம் இறைவனே. மகன் இல்லார்க்கு தானே மகவாக வருபவனும் அவனே. 2)மமதை, அகந்தை (யான் எனது என்னும் செருக்கு) இருந்த எல்லோருக்கும் பாடம் கற்பித்து நல் வழிப்படுத்தி, உய்ய வைப்பதும் இறைவனே.

அண்ணாமலைக்கு அரோஹரா!!

Sinhalese Wonder! A Riddle in Indo-Aryan Languages!

king batiya abhya 19 bce

King Batiya Abhaya inscription, 19 BCE

Compiled by London swaminathan

Article Number 1622; Dated 4th February 2015

Sinhalese language spoken in Sri Lanka is a puzzle for linguists. Vedic Scholar Shrikant G Talageri use this riddle to prove that Indians went out to different parts of the world and spread their language and not vice versa. The original settlers of Sri Lanka came from North West India- the present day Afghanistan, via Gujarat.

Read this interesting write up in Talagheri’s words ( From “THE RIG VEDA – A Historical Analysis” by Shrikant Talageri, Aditya Prakashan, New Delhi)

“The Sinhalese language of Sri Lanka is generally accepted as a regular, if long separated and isolated member of the “Indo Aryan” branch of Indo-European languages; and no linguist studying Sinhalese appears, so far, to have suggested any other status for the language.

“Wilhelm Geiger, in his preface to study of Sinhalese, points out that the phonology of the language is full of intricacies…. We sometimes meet with a long vowel when we expect a short one and vice versa, and further: ‘in morphology there are formations, chiefly in the verbal inflexion, which seem to be peculiar to Sinhalese and to have no parallels in other Indo Aryan dialects…. And I must frankly avow that I am unable to solve all the riddles arising out of the grammar of the Sinhalese language.’

 sri lanka

“The Sinhalese word watura, “water” is not only closely cognate to the Germanic words (which include English water) and Hittite watar, but it represents a form which is impossible to explain on the basis of Sanskrit or Indo Aryan etymologies. Geiger himself, elsewhere, rejects an attempt by an earlier scholar, Wickramasinghe, to derive the word from Sanskrit vartaruka as ‘improbable’; and although he accepts the suggestion of another scholar, B Gunasekara, that the original meaning is ‘spread, extension, flood (M.vithar).. Pk.vitthaara, Sk.vistara, he notes that ‘vocalism a.u. in vatura is irregular cf. vitura.

2M W S de Silva, in his detailed study of Sinhalese, points out that Indo Aryan (or Indic) research began with an effort devoted primarily to classifying the Indian languages and tracing their phonological antecedents historically back to Vedic and Classical Sanskrit… Early Sinhalese studies have followed the same tradition. However Sinhalese presents a  linguistic make up which for various reasons, distinguishes itself from the related languages in North India… there are features in Sinhalese which are not known in any other Indo Aryan language, but these features, which make the  story of Sinhalese all the more exciting, had not received much attention in the earlier studies.

6-Sinhala-ConsonantsS

Oluva, Bella, Kakula, Kalava

He also points out: Another area of uncertainty is the source of the small but high frequency segment of the Sinhalese vocabulary, especially words for parts of the body and the like: eg.Oluva ‘head’, bella ‘neck’, kakula ‘leg’ and ‘kalava’ thigh etc. which are neither Sanskritic nor Tamil in origin. The native grammarians of the past have recognised that three are three categories of words— a) loan words, b) historically derived words and c) indigenous words… No serious enquiry has been made into these so called indigenous words.

ancient inscription

“In his preface, e Silva notes that ‘there is a growing awareness of the significance of Sinhalese as a test case for the prevailing linguistic theories; more than one linguist has commented on the oddities that Sinhalese is unlikely any language I have seen. Further he quotes Geiger: it is extremely difficult, and perhaps impossible, to assign it a definite place among the modern Indo Aryan dialects.”

But, it did not strike to de Silva, any more than Geiger, the reason for all this confusion is among linguists could be their failure to recognise the possibility that Sinhalese is not an Indo Aryan language (in the sense in which the term is used) at all, but a descendant of another branch of  Indo European languages.

De Silva quotes Geiger as well as Paranavitana, and agrees with their view that the band of immigrants who gave their name Sinhala to the composite people, their language and the island, seems to have come from North western India… their original habitat was on the upper reaches of the Indus river … in what is now the borderland between Pakistan and Afghanistan, and quotes Paranavitana’s summary of the evidence, and his conclusion: “All this evidence goes to establish that the original Sinhalese migrated to Gujarat from the lands of the Upper Indus, and were settled in Lata for some time before they colonised Ceylon”.

A thorough examination, with an open mind, of the vocabulary and grammar of Sinhalese, will establish that Sinhalese represents a remnant of an archaic branch of Indo European languages.

pgss_sinhala_image1

The evidence of Bangaani and Sinhalese (the one word watura itself) constitutes a strong case for an Indian homeland since it clashes sharply with any theory of Indo Aryan migrations into India.”

 

I have shown in bold some sentences to emphasize my point that theold linguistic theories are false and Indians only went out and spread their language and culture and not vice versa: swami

inscription

Contact swami_48@yahoo.com

சிவனை நோக்கி கனவில் நடந்த கிருஷ்ணார்ஜுன பயணம்!

Mbharat7a

ஞான ஆலயம்

மஹாசிவராத்திரி 2015 பிப்ரவரி 17ஆம் தேதி வருகிறது. அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது. சிவனைப் போற்றித் துதித்து சகல பேறுகளையும் பெறுவோம்.

சிவனை நோக்கி கனவில் நடந்த கிருஷ்ணார்ஜுன பயணம்!

by ச.நாகராஜன்

 

Post No 1621; Dated 4th February 2015

 

சிவபக்தன் அர்ஜுனன்

மஹாபாரதம் விளக்கும் தெளிவான ஒரு உண்மை நர நாராயணர்களே அர்ஜுனனாகவும் கிருஷ்ணனாகவும் அவதரித்தனர் என்பது.

அர்ஜுனன் சிறந்த சிவ பக்தன். அர்ஜுனனின் வில்வித்தையைக் கண்டு மகிழ்வதற்காக வேடனாக வந்த சிவன் பன்றியின் பின் பக்கமாக அம்பு எய்ய அர்ஜுனன் அது செல்லாது என்கிறான். ஆனால் தர்ம சாஸ்திரப்படி அது செல்லும் என்று கூறிய சிவன் அர்ஜுனனைப் பலவிதமாக திக்குமுக்காடச் செய்து அவன் வில்வித்தையைக் கண்டு மகிழ்கிறார். ஒரு கட்டத்தில் வில்லைத் தூக்கி எறிந்த பார்த்தன் மல்யுத்தம் செய்ய முன்வர சிவன் மகிழ்ச்சியோடு அவனை எதிர் கொள்கிறார். யுத்தத்தின் ஒரு அங்கமாக சிவனின் காலை அர்ஜுனன் மடக்கிப் பிடிக்கவே தன் காலில் விழுந்த பக்தனுக்கு அனுக்கிரஹம் செய்வதையே கடமையாகக் கொண்ட சிவன் தன் சுய உருவத்தைக் காண்பித்து அவனை ஆசீர்வதிக்கிறார். பிரமித்து நிற்கும் அர்ஜுனன் தனது பெரும் பேறை எண்ணி மகிழ்கிறான். (இன்னொரு கூற்றின் படி வேடனைத் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் அர்ஜுனன் சிவலிங்கத்தைத் தொழ கேட்டதை அனுக்ரஹிக்கும் சிவன் வேட உருவத்தை மாற்றி சிவனாக அவன் முன் தோன்றி ஆசீர்வதிக்கிறார்)


Shiva_gave_bow_arjun

அர்ஜுனனின் சபதமும் கவலையும்

இப்படிப்பட்ட மாபெரும் சிவ பக்தன் ஒரு நாள் பெரும் சோதனைக்கு ஆட்பட்டுக் கவலையில் ஆழ்ந்தான். அபிமன்யுவின் அநியாயமான மரணத்திற்கு சிந்து தேச அரசனான ஜயத்ரதனே காரணம் என்பதை அறிந்து பெரும் கோபம் அடைந்த அர்ஜுனன் மறுநாள் சூரிய அஸ்தமனத்திற்குள் அவனைக் கொல்வதாக சபதம் பூணுகிறான். அன்று இரவு தான் அவனுக்குப் பெரும் கவலை ஏற்பட்டது. தனது சபதத்தை அறிந்த கௌரவ சேனை முழுவதும் மறுநாள் ஜயத்ரதனைக் காக்க வருமே, இந்த சோதனையிலிருந்து எப்படி மீள்வது என்று சிந்தித்தவாறே உறக்கத்தில் ஆழ்ந்தான்.

கனவில் நடந்த அதிசயப் பயணம்

அப்போது அவனுக்கு கனவு ஒன்று தோன்றுகிறது. கிருஷ்ணர் அர்ஜுனனிடம் வந்து கவலைக்குக் காரணம் என்ன என்கிறார். மறுநாள் ஜயத்ரதனைக் கொல்வது சாத்தியமா என்கிறான் அர்ஜுனன்..

உடனே கிருஷ்ணர் அர்ஜுனனை அழைத்துக் கொண்டு கைலாயம் செல்கிறார். இருவரையும் கண்ட சிவன் வந்த விஷயம் என்ன என்று கனிவுடன் கேட்கிறார்.

கிருஷ்ணரும் அர்ஜுனனும் அவரைத் துதித்து மறுநாள் நடக்கவிருக்கும் போருக்காக பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதோடு அதன் பிரயோகத்தையும்  அறிவதற்காக வந்துள்ளதாகவும் சிவன் அனுக்ரஹம் புரியவேண்டுமெனத் துதிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

உடனே சிவ பெருமான் அருகில் உள்ள தடாகத்தில் உள்ள வில்லையும் அம்பையும் எடுத்து வருமாறு பணிக்கிறார். அருகே உள்ள தடாகத்திற்கு கிருஷ்ணார்ஜுனர்கள் சென்ற போது அங்கே பயங்கரமான இரு ஸர்[ப்பங்களை தடாகத்தில் பார்க்கின்றனர். அர்ஜுனன் சதருத்ரியம் என்னும் வேத மந்திரத்தால் துதிக்க அந்தப் பாம்புகள் இரண்டும் ஒன்று வில்லாகவும் இன்னொன்று அம்பாகவும் மாறவே வியப்படைந்து அவை இரண்டையும் எடுத்துக் கொண்டு சிவபிரானிடம் வருகிறான்.

arjuna

அந்த வில்லையும் அம்பையும் சிவபிரான் பெற்றவுடன் அங்கு ஒரு பிரம்மச்சாரி எழுகிறான். அவன் வில்லிலே அம்பைப் பூட்டிக் காண்பிக்க அர்ஜுனன் அந்த நிலையை நன்கு கற்றுக் கொண்டு ருத்ரன் கொடுத்த மந்திரத்தையும் பெற்றுக் கொள்கிறான்.

இப்படியாக, சிவன் பாசுபாதாஸ்திரத்தை அர்ஜுனனிடம் கொடுத்து ஆசீர்வதிக்கிறார்.. கனவிலேயே நடக்கும் இந்த அதிசயப் பயணமும் பாசுபதாஸ்திரத்தைப் பெறும் நிகழ்ச்சியும் மஹாபாரதம் துரோண பர்வத்தில் வேத வியாஸரால் விவரிக்கப்படுகிறது. படிப்போரைப் புல்லரிக்க வைக்கும் அதிசய நிகழ்வு இது! (துரோண பர்வத்தில் 80, 81 அத்தியாயங்களிலும் 147,148ஆம் அத்தியாயங்களிலும் விவரிக்கப்படுகிறது – 1922ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட ம.வீ.ராமானுஜாசாரியார் பதிப்பு).கனவில் இப்படியொரு அற்புத அஸ்திரம் பெறும் நிகழ்வைச் சுட்டிக் காட்டும் ஒரே இலக்கியம் மஹாபாரதமே!

பாசுபதாஸ்திரம்

பாசுபதாஸ்திரம் சாதாரணமாக மனிதர்கள் மேல் பிரயோகிக்கப்படக் கூடாத தெய்வீக அஸ்திரம். மனம் பரிசுத்தமான, பாவமற்ற ஒருவனே அதைப் பெற முடியும். சிவன் அர்ஜுனனை மனிதர்களிலேயே உத்தமமான ஒருவனாக அங்கீகரித்து அதை உலகிற்குக் காட்டிய சம்பவம் இது. கிருஷ்ணரும் அர்ஜுனனை கீதையில் ‘பாவமற்றவனே’ என அழைப்பதையும் காணலாம்.

மந்திரம் கூறி வெறும் கண்களினால் எய்யப்படும் ஆச்சரியமான பாசுபதாஸ்திரத்தை ஜயத்ரதன் மீது கிருஷ்ணரின் ஆணையால் அர்ஜுனன் பதினான்காம் நாள் நடந்த போரில் பிரயோகிக்க அவன் தலை அறுந்து ஆகாயத்தில் பறக்கிறது.

உடனே கிருஷ்ணர், ‘”அர்ஜுனா! அதைக் கீழே விழ விடாதே. அவனது தகப்பன் விருத்தக்ஷத்திரன் அந்தத் தலை யார் மீது விழுகிறதோ அவன் தலை சுக்கு நூறாக வெடிக்க வரம் வாங்கியுள்ளான். இப்போது தவத்தில் ஆழ்ந்துள்ள அவன் மீது தலையை விழச் செய்” என்று கட்டளை இடுகிறான்.


shivaarujuna

Baphuon, Cambodia

அர்ஜுனன் தலையை ஆகாயத்தில் பந்தாடிச் சுழலவிட்டு அதை விருத்தக்ஷத்திரன் மடியில் விழச் செய்யவே அவன் தலை சுக்கு நூறாக வெடிக்கிறது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! சிவ, கிருஷ்ணரின் அனுக்ரஹம் சேர்ந்து இருக்கும் போது அர்ஜுனனால் எதைத் தான் சாதிக்க முடியாது!

மகாபாரதம் விவரிக்கும் அற்புதமான சிவானுக்ரஹத்தை கதை நெடுகிலும் ஆங்காங்கே காணலாம். சிவ பக்தியின் மஹிமையையும் பயனையும் உணர்ந்து மெய் சிலிர்க்கலாம்.


mahabalipuram

சிவன் வழி நடத்திச் சென்ற மஹாபாரதப் போர்

இன்னொரு மாபெரும் ரகசியத்தையும் துரோண பர்வத்தின் இறுதி அத்தியாயத்தில் (263ஆம் அத்தியாயம்) காணலாம்.துரோண வதம் முடிகிறது. அர்ஜுனன் தற்செயலாக அங்கு வந்து சேர்ந்த மஹரிஷி வியாஸரிடம், “மஹரிஷியே! பகைவர்களைக் கொன்றேன். ஆனால் எனது முன்னால் அக்னி போன்று பிரகாசிக்கும் ஒரு மஹாபுருஷர் சென்று கொண்டிருப்பதைக் காண்கிறேன். அவர் சென்ற வழியே நான் செல்கிறேன். அவர் செல்லும் வழியெல்லாம் பகைவர் அழிகின்றனர். எல்லோரும் நான் தான் பகைவரைக் கொன்று கொண்டிருப்பதாக எண்ணுகின்றனர். அவர் யார்?” என்று விளங்காத மர்மத்தைத் தெரிந்து கொள்ளூம் ஆவலில் கேட்கிறான்.

மஹரிஷி வியாஸர்,” அவரே சங்கரர். பக்தர்களுக்கு அழியாத வரம் கொடுத்து அனுக்ரஹிக்கும் மகாதேவனைச் சரண் அடை” என்று அருளுகிறார்.

மஹாபாரதப் போரில் அர்ஜுனனைக் கருவியாகக் கொண்டு சிவனே யுத்தத்தை முன் நின்று நடத்திய மாபெரும் அதிசயச் செய்தியை அர்ஜுனன் மற்றும் வியாஸ முனிவரின் வார்த்தைகளால் தெரிந்து கொள்ள முடிகிறது.


Rudram-Namakam-Chamkam-800x737

சிவ ரகசியம்:சத ருத்ரியம்

சிவனின் மஹிமைகளை வியாஸர் அர்ஜுனனுக்குத் தெளிவாக விவரிக்கையில் பல ரகசியங்கள் நமக்குப் புலப்பட ஆரம்பிக்கின்றன. அவற்றில் முக்கியமான சில:-

1)ஆயிரம் வருட காலம் இடைவிடாமல் சொன்னாலும் சிவனின் குணங்களின் பெருமையை என்னால் சொல்ல முடியாது – வியாஸர்

2)பக்தர்களை அவரே எல்லா இடுக்கண்களிலிருந்தும் விடுவிக்கிறார். நீண்ட ஆயுளும், ஆரோக்யமும், ஐஸ்வர்யமும், தனமும்,புஷ்களமான அபீஷ்டங்களையும் அவரே பக்தர்களுக்கு அனுக்ரஹிக்கிறார்.

3)அபீஷ்டங்களுக்கு பிரபு ஆதலின் அவர் ஈஸ்வரர் (எனப்படுகிறார்).மஹா பூதங்களுக்கு ஈஸ்வரராக இருப்பதால் அவர் மஹேஸ்வரர்.

4)பிரம்மா, வருணன், இந்திரன், யமன்,  குபேரன் இவர்களைத் தண்டித்து சம்ஹரித்தலால் அவர் ஹரன். பலாத்காரமாக இரண்டு கண்களும் மூடப்பட்டபோது மூன்றாவதாக ஒரு கண்ணை உருவாக்கிக் கொண்டதால் அவர் முக்கண்ணர்.

5) அவரது மங்களரூபமானது  தொடைகள் வரை அக்னி மயமானது. மறு பாதி சந்திரமயமானது. யார் ஒருவர் அவரைத் தொழுகிறாரோ அவர் சகல ஐஸ்வர்ங்களையும் பெறுகிறார்.

இப்படி சத ருத்ரியமாக சிவனின் பெருமைகளை வேத வியாஸர் விவரிப்பது பிரமிக்க வைக்கும் பெரும் வேத ரகசிய விளக்கமாகத் திகழ்கிறது.

rudram

சிவன், சக்தி, விநாயகர், முருகன் விஷ்ணு என அனைவரின் மஹிமைகளையும் விளக்கும் அபூர்வமான இலக்கியமான மஹாபாரதம் உலகின் தலையாய அற நூல். இதைப் பரப்புவதன் மூலம் அறத்தை தலை நிறுத்தி பாரதத்தை உலகின் உன்னத ஸ்தானத்தில் ஏற்ற முடியும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!

 

contact swami_48@yahoo.com

1621 articles are available in English and Tamil. Absolutely Free!!!!

om namashivaya

****************