மறு பிறப்பு உண்டா என்ன? – சரகர் தரும் பதில்!! (Post No 2901)

punarjanma 4

Article written by S.NAGARAJAN

 

Date: 17 June 2016

 

Post No. 2901

 

Time uploaded in London :–  5-42 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

திரு ஆர் சி ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் நெல்லையிலிருந்து தமிழில் வெளி வரும் மருத்துவ மாத இதழான ஹெல்த்கேர் இதழில் மே 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

ஆரோக்கிய ஆன்மீக இரகசியம்

 

மறு பிறப்பு உண்டா என்ன? – சரகர் தரும் பதில்!!

 

.நாகராஜன்

 punarjanma5

று பிறப்பு பற்றிய சந்தேகங்கள்

 

மறு பிறப்பு பற்றி ஏராளமான சந்தேகங்கள் இயல்பாகவே எழுகின்றன. புண்ணிய காரியங்களைச் செய், மறு உலகில் சந்தோஷமாக இருக்கலாம்; மறு பிறப்பில் நன்றாக வாழலாம் என்ற கொள்கை முன் வைக்கப்படும் போது அதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வி எழுகிறது? கண்ணால் பார்ப்பதே மெய் என்று எடுத்துக் கொண்டால் மறு உலகத்தைக் கண்ணால் காண முடிவதில்லையே!எப்படி அதை நம்ப முடியும் என்ற கேள்வி எழுகிறது.

 

 

சாஸ்திரங்களை நம்புவோர் மறு பிறப்பு உண்டு என்று சொல்லும் போது அதை ஏற்காதவர்கள் அதற்கு என்ன ஆதாரம் என்கின்றனர்.

 

தாய் தந்தையே இந்தப் பிறவிக்குக் காரணம் என்றால் இந்தப் பிறவிக்குப் பின்னால் உள்ள பிறவிக்கு யார் காரணம்? இயற்கை தான் நம்மைப் படைக்கிறது என்று வைத்துக் கொண்டால் அப்போதும் கூட இன்னொரு பிறவிக்கு காரணம் எது?மதியே அனைத்திற்கும் காரணம் என்று வைத்துக் கொண்டாலும் மறு பிறப்பு கொள்கை அடிபட்டுப் போகிறது.

இப்படி அனைத்துக் கோணங்களையும் எடுத்துக் கொண்டு அலசி ஆராய்கிறார் சரகர்.

 

 

 

எல்லைக்குட்பட்ட புலன்களின் செயல்பாடுகள்

 

புத்திசாலியாக இருக்கும் ஒருவன் மறுபிறப்புக்கு மாறாகப் பேசப்படும் வாதங்களை ஏற்கக் கூடாது.ஏன்? ஏனெனில் புலனுக்கு உள்ளடங்கிய பார்வை ஒரு எல்லைக்கு உட்பட்டவை. ஆனால் அறிவோ – சாஸ்திரங்கள் மூலமாகப் பெறப்படுவது, ஊகம், தர்க்கம் மூலமாக அறிதல் ஆகியவை மூலமாகப் பெறப்படும் அறிவோ – எல்லையற்றது. அதன் மூலம் புலன்களுக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் பற்றிய சரியான பார்வையைப் பெற முடியும்.

 

இன்னொரு விஷயம். கண்ணால் பார்ப்பது மட்டுமே மெய்; புலன்களால் உணரப்படுவது மட்டுமே உண்மை என்று கூறுவது சரியான் ஒன்றல்ல. புலனுக்கு மீறிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. மிகுந்த தொலைவில் உள்ள ஒன்றை எப்படிப் பார்க்க முடியும்? தடைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு பொருளைப் பார்ப்பது சாத்தியமா? எடுத்துக்காட்டாக சுவர் ஒன்றின்  பின்னால் இருக்கும் ஒரு பொருளை எப்படிப் பார்ப்பது? புலன்கள் கூர்மையின்றி இருந்தால் அப்போது அந்தப் புலன்கள் பார்க்க முடிபவை மட்டுமே தான் உண்மையா? புலன்கள் கூர்மையாக இருந்தாலும் மனம் ஒன்றில் ஈடுபடவில்லையெனில் எதிர்த்தாற் போல இருப்பதும் தெரிவதில்லை; காதில் ஒலி விழுந்தாலும் கவனம் இல்லையேல் அது கேட்பதில்லையே! ஒரே பொருள் போன்ற இரண்டு பொருள்களைக் கண்டால் மயக்கம் ஏற்படுகிறது. மிகச் சிறிய பொருளைக் காண முடிவதில்லை. நிழல் பட்டால் அப்போது எதிரில் இருப்பதும் மறைகிறது. ஆக இப்படி எவ்வளவோ விஷயங்கள் புலன்களை எல்லைக்குட்பட்டவை என்பதை நிரூபிக்கிறதே

 

 

பெற்றோர் தான் பிறப்புக்கு காரணம் என்றால் அது இரண்டு விதமாக ஏற்பட வேண்டும். ஒன்று  முழுமையாக அவர்கள் பிறப்புக்குரிய உயிரில் மாற வேண்டும். அப்படி என்றால் அவர்கள் புதிய உயிர் பிறந்தவுடன் மரிக்க வேண்டும். அப்படி ஏற்படவில்லை.

 

 

அடுத்து ஒரு பகுதி மட்டும் புதிய உயிரில் மாற் வேண்டும். அப்படி தாயோ தந்தையோ பகுதியைப் பிரித்துக் கொடுக்கவில்லை. அப்படி என்றால் வேறு எதோ ஒன்று புதிய உயிரின் படைப்பில் இருக்கிறது, இல்லையா?

பெற்றோர் மட்டுமே பிள்ளைகளின் பிறப்புக்குக் காரணம் என்றால், அவர்களின் மனமும், புத்தியும் பிள்ளைகளுக்கு மாற்றி விடப்படுகிறது என்றால் அப்படிப் பிள்ளை பிறந்தவுடனேயே அவர்களது மனம் புத்தி ஆகியவை இயங்காமல் நின்று விட வேண்டும்..ஆக, அதுவும் சரியல்ல.

 

 

ஒரு பிறப்பு ஏற்படும் போது ஐந்து அடிப்படை பூதங்களும் ஆத்மாவும் இணைகிறது; பின்னர் பிரிகிறது. ஆத்மா முடிவற்ற ஒன்று.

 

 punarjanma 6

உலகம் தற்செயலாக ஏற்பட்ட ஒன்றா?

 

உலகம் தற்செயலாக ஏற்பட்ட ஒன்று என்ற வாதமும் சரியில்லை.  ஏனெனில் இப்படிச் சொல்பவருக்கு எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை; ஆராய வேண்டிய அவசியமும் இல்லை. அது அது தன் பாட்டிற்கு ஏற்படுகிறது என்றால் மேலே பேசுவதற்கு ஒன்றுமே இல்லை!

 

 

அறிவால் ஆய்ந்து பார்!

ஆகவே புத்திசாலியாக இருக்கும் ஒருவன் தன் அறிவைக் கொண்டு ஆராய வேண்டும்.

எந்த ஒன்றும் இரண்டே இரண்டுக்குள் தான் அடங்கியிருக்கிறது.

ஒன்று அது உண்மையாக இருக்க வேண்டும் அல்லது பொய்யாக இருக்க வேண்டும்.

 

 

ஒரு விஷயம் உண்மையா அல்லது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க நான்கு வழிகள் உள்ளன.

  • ஆன்றோர் அல்லது ரிஷிகள் கூற்று
  • நேரடிப் பார்வை (புலனறிவு)
  • ஊகம்
  • தர்க்கம் மூலமாக அறிவது

ரஜஸ், தமஸ் ஆகிய இரண்டையும் கடந்து நிகழ் காலம் எதிர் காலம், இறந்த காலம் ஆகிய மூன்று காலங்களையும் பார்க்க வல்ல்வர்கள் ஆப்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களிடம் பொய்யே இருக்க முடியாது. ஆக அவர்கள் கூறுவதை நம்பலாம்.

 

punarajanma3

ப்ரத்யக்ஷ பிரமாணம் என்பது ஒரு எல்லைக்குட்பட்டது.

ஊகம் என்பதோ மூன்று வகைகளைக் கொண்டது. நிகழ்காலம், இறந்தகாலம் எதிர்காலம் ஆகியவற்றுடன் அது தொடர்பு கொண்டது. புகை மூலம் தீ இருப்பது தெரிகிறது. குழந்தை பிறப்பதன் மூலம் பாலியல் சேர்க்கை உணரப்படுகிறது. இவை இரண்டும் நிகழ்காலம் இறந்தகாலம் ஆகியவற்றிற்கான உதாரணங்கள்.ஒரு மரத்தின் விதையை விதைக்கும் போது அது எந்த மரமாக வளரும் என்பதை ஊகிக்க முடிகிறது. இது எதிர்காலத்திற்கான விளக்கம்.

 

 

தர்க்கம் மூலமாக அறிவதைப் பல உதாரணங்களால் விளங்கிக் கொள்ளலாம். நிலத்தைப் பண்படுத்தி உழுது. விதை விதைத்து பருவ காலத்தில் மழையும் பெய்தால் விளைச்சல் நன்கு ஏற்படும்.ஆணும் பெண்ணும் பருவ காலத்தில் இணைந்தால் கரு உருப்பெறும். நிகழ்காலம் இறந்த காலம் எதிர்காலம் ஆகிய மூன்றிற்கும் பொருந்தும் ஒன்றைப் பலவேறு காரணிகளால் புத்தி பார்த்து அறிவது யுக்தி எனப்படும்.

இது மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும் தர்மம் (புண்ய காரியங்கள்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) ஆகிய மூன்றைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.

ஆகவே இந்த அடிப்படையில் மறுபிறப்பு பற்றி ஆராய வேண்டும்.

 

punarjanma1

 

மறுபிறப்பு உண்மையே என்பதற்கான காரணங்கள்

ஒரு வித ஆசையும் அற்ற பெரும் ரிஷிகள் கூறுவது உண்மை. அவர்கள் காரண காரிய தொடர்பு பற்றி ஆய்ந்து மறு பிறப்பு உள்ளது என்கின்றனர்.

 

 

இரண்டாவதாக பிறக்கும் குழந்தைகளில் பிறக்கும் போதே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நிறம், எடை, வடிவம், அழகு,புத்தி, மனம், குரல் இப்படி எல்லாவற்றிலும் தனித் தனி வேறுபாடு இருக்கிறது. ஒரு குழந்தை ராஜ குமாரனாகப் பிறக்கிறது. இன்னொன்றோ பிச்சைக்காரனாகப் பிறக்கிறது.

ஒன்று பிறந்தவுடன் இறக்கிறது. இன்னொன்றோ நூறு வயது வ்ரை வாழ்கிறது. தாய்ப் பாலைக் குடிப்பது, அழுவது, சிரிப்பது ஆகிய எல்லாவற்றிலும் கூட ஒரு குழந்தை போல இன்னொரு குழந்தை இருப்பதில்லை.

 

 

இந்த ஜன்மத்தில் செய்யும் நல்ல அல்லது கெட்ட வினைகளுக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது என்பதை ஊகித்து அறியலாம்.

 

தர்க்கப் படியாகப் பார்த்தாலும் மறு பிறப்பு சரியே. கர்த்தா, காரணம் ஆகியவற்றிற்கேற்ப செயல்கள் அமைகின்றன. விதையின்றி மரமில்லை.

 

ஆகவே மேற்கூறிய அனைத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்தால் மறு பிறப்பு உண்டு என்பது நன்கு புரியும்.

ஒரு புத்திசாலி நாத்திக வாதத்தால் மயங்க மாட்டான். அவன் நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்து நல்லதையே பெற முயல்வான்.

 

ஆக சரகரின் இந்த விரிவான விளக்கம் மறு பிறப்பு பற்றிய தெளிவை நமக்கு ஏற்படுத்துகிறது, இல்லையா?!

************.

 

Greedy, Greedier, Greediest! (Post No.2900)

chasing-money

Compiled by London swaminathan

 

Date: 16 June 2016

 

Post No. 2900

 

Time uploaded in London :– 12-55

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Greed Anecdotes

Greedy Actress

One evening Rachel, the famous French actress, dined at the house of Comte Duchatel. The table was loaded with the magnificent flowers. But Rachel’s keen eyes presently spied out the great silver centrepiece. Immediately began to admire it. The Count fascinated by her manners, said that he would be glad to present it to her. Being greedy, she accepted it at once, but was rather fearful lest he should change his mind. She had come to dinner in a cab, and mentioned the fact. The count offered her to send her home in his carriage.

“Yes, that will do admirably”, said she.

“There will be no danger of my being robbed of your present, which I had better take with me”.

With pleasure, Mademoiselle, replied the Count. But you will send me back my carriage, won’t you?

Xxx

 

greedy-rich

Greedy World!

Rolland Diller who was one of Lincoln’s neighbours in Springfield, tells the following story:-

“I was called to the door one day by the cries of children in the street and there was Mr Lincoln, striding by with two of his boys, both of whom were wailing aloud.

“Why, Mr. Lincoln, what is the matter with the boys?”  I asked.

“Just what is the matter with the whole world”, Lincoln replied.

I have got three walnuts, and each wants two.

Xxx

Ring for you!

Rachel, celebrate d nineteenth century French actress, was notorious for her avarice. The younger Dumas once received a ring from her. Immediately he bowed low and returned it to her finger, saying

“Permit me Mademoiselle, to present it to you in my turn so as to save you the embarrassment of asking for it”.

Xxxx

Mexican War

The Mexican war was not a popular one with the American people. Abraham Lincoln, then a member of the Congress, opposed it, declaring that those who said that the war was not one of aggression made him think of the Illinois farmer who said

I am not greedy about land. I only want what is mine.

Xxx

How To Earn Fast Money

Rachel’s Guitar

Rachel, the famous French actress, had a curious way of asking everyone she met for present s and knickknack s whether they are valuable or not. She knew how to make them valuable.

Once in a studio she noticed a guitar hanging on the wall. She begged for it earnestly. As it was an old and worthless instrument, it was given to her. A little later it was reported that the dilapidated guitar had been purchased by a well-known gentle man for a thousand franks. The explanation soon followed Rachel declared that it was the very guitar with which she used to earn her living as a child in the streets of Paris.

Xxx

Expensive Dressing!

On one occasion P D Armour, the meat packer, made a present of a suit of clothes to each of his employees in a certain department. Each man was told that he might order his own suit, and send the bill to Mr Armour , no restriction being made  as to price. In order to avail himself fully of this liberality, one young man ordered evening clothes costing 80 dollars. When the bill was sent in, Mr Armour sent for the clerk to vouch for its accuracy, and finding it right assured the man it would be paid. As the clerk was leaving, Mr Armour said to him,

 

“I wish to say to you that I have packed a great many hogs in my time, but I never dressed one before”.

 

–Subham—

கண்ணு! கண்ணு! ஏ கண்ணூ!! சுவையான துணுக்குகள்! (Post No 2899)

sentamil chintamanai 1

Compiled by London swaminathan

 

Date: 16 June 2016

 

Post No. 2899

 

Time uploaded in London :– 8-06 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

செந்தமிழ் சிந்தாமணி என்ற பழைய பத்திரிக்கையில் வந்த சுவையான விஷயங்கள்:–

 

வெள்ளை காகம் விலை இரண்டரை ரூபாய்!!

 

white crow (2)

கண்ணு! கண்ணு !! ஏ, கண்ணு!!!

 

kannu kannu (2)

 

தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை!

 

poy thay (2)

–subham–

 

 

Honesty Anecdotes (Post No.2898)

Rainbow --- Image by © Royalty-Free/Corbis

Compiled by London swaminathan

 

Date: 15 June 2016

 

Post No. 2898

 

Time uploaded in London :– 19-13

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

honesty 2

Honesty is the best policy!

A young man, starting out on a business career was being given some advice by his father, himself a very successful and wealthy man.

“And remember, son”, said the older man “always keep in mind that honesty always has been and always will be the best policy”.

“Oh yes, indeed”, agreed the son.

“Oh, and incidentally” were the parting words of his father, “You might read a bit on corporation law. It is really surprising how many things can be done in a business way, and still be honest”.

 

Xxx

What is the meaning of Business Ethics?

A little boy asked his father, Papa, “what does it mean, business ethics?”

“Well,” explained the merchant, “it is like this. Comes into the store a man and makes a purchase. He gives me a bright, new five dollar bill, which is just the right amount, and he starts out. I am turning to the cash register when I discover that it is not one, it is two five dollar bills stuck together. Now comes it in the business ethics —  Should I tell my partner?”

Xxx

honesty

Jester’s Retort

Pace, jester to Queen Elizabeth, was so bitter in his retort s to her, that she forbade him her royal presence. After he had been absent for some time, a few of his friends interceded for him, assuring the queen that he would be more guarded in his remarks in the future.

The very first time Pace was as bad as ever.

“Come on, Pace”, said the queen in a gracious humour, “now we shall hear of our faults” .

“No, Madam”, said Pace, “I never talk of what is discoursed by all the world”.

Xxx

 

Mirabeau was seldom sincere. Robespierre, nearly always. Once, when Robespierre was speaking, Mirabeau, who had listened attentively, bent his leonine head over to his neighbour and remarked

“That man Wilfred go far; he believes all he says”.

 

Xxxx

Honest Beggar

A beggar asking Dr Smottett for alms. He gave him through mistake, a Guinea. The poor fellow on perceiving it, hobbled after him to return it, upon which Smottett returned it to him with another Guinea as a reward for his honesty, exclaiming at the same time, “What a lodging honesty, has taken up with!”

–Subham—

இஷ்டம், பூர்த்தம் என்றால் என்ன? (Post No.2897)

family havan2

Compiled by London swaminathan

 

Date: 15 June 2016

 

Post No. 2897

 

Time uploaded in London :– 8-20 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

 

தான தர்ம அனுஷ்டானங்கள், இஷ்டம் பூர்த்தமென இருவகைப்படும்:-

 

அக்னிஹோத்ரம் தப: சத்யம் வேதானாம் சைவ பாலனம்

ஆதித்யம் வைஸ்வதேவஸ்ச இஷ்டமித்யபிதீயதே

 

அக்னிஹோத்ரம்

தவம்

சத்யம்

வேதம் ஓதுதல்

அதிதி /விருந்தோம்பல்

வைஸ்வதேவம் ( எல்லா கடவுளர்க்கும் தினசரி அக்னியில் இடப்படும் பலி; இன்னொரு அர்த்தம் -பூத யக்ஞம்)

இவைகள் இஷ்டம் என்று அறியப்படும்.

(திருக்குறளில் துறவறவியல் மற்றும் இல்லறவியலில் இவை கூறப்பட்டுள்ளன).

 

WELL IN SALEM, AZAKIYA SINGAR

வாபீகூபதடாகாதி தேவதாயதனானி ச

அன்னப்ரதானமாராமா: பூர்தமர்த்யா: ப்ரசக்ஷதே

குளம் (வாபீ) தோண்டல், கிணறு (கூப:) வெட்டல், ஏரி (தடாகா:) அமைத்தல்,ஆலயம் கட்டுதல் (தேவ ஆயதனா:),அன்னதானம் செய்தல், சத்திரங்கள் அமைத்தல் (ஆரமா:) – இவைகள் பூர்த்தம் எனப்படும்.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) இஷ்டம், பூர்த்தம் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். தெய்வத்தின் குரல் புத்தகத்தில் காண்க. குறிப்பாக வைஸ்வதேவம் பற்றி அவர் நன்கு விளக்கியுள்ளார்)

 

xxx

 

ஆறு வகையான ஆபத்துகள்

அதிக மழை (அதி வ்ருஷ்டி)

மழையின்மை/வறட்சி (அனாவ்ருஷ்டி)

வெட்டுக்கிளி (சாலபா:0

எலிகள் (மூஷகா:)

கிளிகள் (சுகா:)

அயல்நாட்டானின் படையெடுப்பு (ப்ரத்யாசன்னா:)

 

அதிவ்ருஷ்டிரனாவ்ருஷ்டி: சலபாமூஷகா: சுகா:

ப்ரத்யாசன்னாஸ்ச ராஜான: ஷடேதா ஈர்தய: ஸ்ம்ருதா:

belize_1984_parrots

–சுபம்–

 

 

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்! (Post No.2896)

eyeanat

Article written by S.NAGARAJAN

 

Date: 15 June 2016

 

Post No. 2896

 

Time uploaded in London :–  6-17 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

17-6-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் அதிசய மனிதர்கள்!

ச.நாகராஜன்

eye3

அற்புதங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அற்புதங்கள் பற்றிய உங்கள் பார்வையை மாற்றிக் கொண்டு பாருங்கள். உங்களைச் சுற்றி ஏராளமான அற்புதங்கள் நிகழ்வதை நீங்கள் காண்பீர்கள்.” – ஜோன் போன் ஜோவி

 

 

அறிவுஜீவியான இண்டிகோ  பையன் (மிகவும் அறிவு மிக்கவர்களை இண்டிகோ என்று அழைப்பர்) தான் முற்பிறவி ஒன்றில் செவ்வாய் கிரகத்தில் பிறந்தவன் என்று சொன்னதைப் பார்த்தோம். ரஷியாவைச் சேர்ந்த இந்தப் பையனின் பெயர் போரிஸ்கா (Boriska). நாளுக்கு நாள், வளர வளர, வயது ஏற ஏற, தன் வியத்தகு அறிவினால் அனைத்து விஞ்ஞானிகளையும் அசத்தி வருகிறான் போரிஸ்கா.

 

 

அறிவியலுக்குச் சவால் விடும் வகையில் உலகெங்கும் பலர் இப்படி அடிக்கடி பிறந்து கொண்டே தான் இருக்கின்றனர். விஞ்ஞானிகளால் திகைப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை. பார்ப்பதற்கு ஆதாரமாக இருக்கும் விழிகளின் கட்புல மேலுறை (Visual Cortex) இல்லாமல் ஒருவரால் பார்க்க முடியுமா? முடியும் என்று சொன்னால் விஞ்ஞானிகள் என்ன, சாமான்ய மனிதர்களே சிரிப்பார்கள்.

விழிகளின் பார்வைக்கு ஆதாரமான கார்டெக்ஸ் இல்லாமல் பார்ப்பது எப்படி என்று கேலியும் செய்வார்கள்.

ஆனால் மருத்துவ ரீதியாக “பார்வையற்ற” ஒருவர், விஷுவல் கார்டெக்ஸ் இல்லாமல் பார்க்க முடிகிறது என்றால் அதை விஞ்ஞானிகளாலேயே நம்ப முடியவில்லை!

 

 

‘பயலாஜி’ என்ற விஞ்ஞான இதழில் 2008ஆம் ஆண்டு இவரைப் பற்றிய அதிசய விவரங்கள் வெளியிடப்பட்டன.

இவரது முழுப்பயரைச் சொல்லாமல் இவர் டிஎன் (TN) என்று குறிப்பிட்ப்பட்டார்

 

டி என் ஒரு டாக்டர். துரதிர்ஷ்டவச்மாக இவர் இருமுறை பக்கவாதத்தால் தாக்கப்பட்டார். இரு விழிகளின்  மேலுறையும் முற்றிலுமாக பழுதுபட்டன. உறுப்புகள் சிதைந்தே விட்டன. ஒன்றும் செய்ய முடியாத நிலை.

 

ஆனால் இவர் எதிரில் இருக்கும் தடைகளை எல்லாம் “பார்க்கிறார்” அல்லது உணர்கிறார்.

இதை நம்ப  மறுத்த விஞ்ஞானிகள் இவருக்கு ஒரு சோதனையை வைத்தனர்.

 

நெதர்லாண்ட்ஸ் பல்கலைக் கழகம் இந்த ஆய்வை முன்னின்று நடத்தியது.

 

ஒரு ஹாலில் ஏராள்மான தடைகளை ஏற்படுத்தி   – நாற்காலி,மேஜை ஆகியவற்றைக் குறுக்கும் நெடுக்குமாக  வைத்து – அதில் இவரை நடந்து போகச் சொன்னார்கள்.

என்ன ஆச்சரியம், சரியாக கண்பார்வை உள்ளவர் போல இவர் தடையின்றி எதன்  மீதும் இடிக்காமல் நடந்தார்.

இது எப்படி சாத்தியம் என்று யாராலும் விளக்கமுடியவில்லை.

மூளைக்கு இன்னொரு பாதை இருக்கிறதா – பார்ப்பதற்கு?!

பிரப்ல விஞ்ஞான இதழான, ‘தி ஸயின்டிஸ்ட்’ பத்திரிகையில் இவர் இன்னொருவரின்  முகபாவத்தில் ஏற்படும் கோபம் மற்றும் பயத்தைக் கூட உணர்கிறார் என்று எழுதப்பட்ட கட்டுரை உலகையே பரபரப்புக்குள்ளாக்கியது.

 

 

உலகில் பார்வையற்ற நிலையில் இப்படிப் பார்க்கும் ஒரே நோயாளி இவர் தான் என்று அறிவிய்ல் உலகம் கூறுகிறது.

இவர் எப்படிப் பார்க்கிறார் என்ற மர்மத்தை விடுவிக்க இன்னும் முடியவில்லை!

elizabeth susler

இன்னொரு அதிசயப் பெண்மணி எலிஸபத் சல்ஸெர் (Elisabeth Sulser) என்பவர். இவருக்கு இரு புலன்கள் ஒரே சமயத்தில் வேலை செய்கின்றன.

 

பதினாறு வயதிலேயே அவர் இதைக் கண்டு பிடித்து விட்டார். தொழில் துறையில் இவர் ஒரு இசைக் கலைஞர்.

2004, 2005ஆம் ஆண்டுகளில் ஸ்விட்ஸர்லாந்தில்  ஜூரிச் பல்கலைக் கழகம் இவரை ஆய்வுக்காக அழைத்தது.

 

ஒலியைக் கேட்கும் போது அதன் வடிவத்தை இவர் உணர்கிறார். உதாரணமாக இசை ஸ்வரத்தில் சி நோட் (C Note)

இசைக்கப்பட்டால் அதை சிவப்பாக இவர் காண்கிறார். டி நோட் என்றால் நீல நிறத்தை இவர் காண்கிறார். கலைடாஸ்கோப் போல பல்வேறு வண்ணங்களை ஸ்வர மாறுதலுக்குத் தக்கபடி இவர் தொடர்ந்து காண்கிறார்.

 

 

அதே போல இசையில் ஒரு நோட்டிற்கும் இன்னொரு நோட்டிற்கும் இடையே உள்ள சிறிய இடைவெளியில் இவர் நாக்கில் சுவையை உணர்கிறார். ஒரு சமயம் புளிப்புச் சுவை. இன்னொரு சமயம் கசப்புச் சுவை. ஒரு சமயம் நீரை அருந்தும் உணர்வு. இன்னொரு சமயம் ஐஸ் க்ரீம் சாப்பிடும் உணர்வு. ஒவ்வொரு ஸ்வர இடைவெளிக்கும் இடையே ஒவ்வொரு விதமான சுவை.

 

 

இந்த அரிய அனுப்வத்தை அறிவியல் ‘ஸினஸ்திசியா’ (Synesthesia) என்று அழைக்கிறது. உலகில் உள்ள 750 கோடி பேரில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பேருக்கே இப்படிப்பட்ட இரு புலன்களின் கலப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம்! மூளையில் உள்ள சில அமைப்புகள் தீவிரமாக இணைக்கப்பட்டிருப்பதால் இப்படி புலன் கலவை ஏற்படுகிறதாம்.

 

 

ஸினஸ்தீசியா என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்த வார்த்தை. பல்வேறு உணர்வுகளின் அனுபவம் என்று இதற்குப் பொருள்.

 

இப்படிப்பட்டவர்களில் வெளி உலகிற்குத் தெரியும் வகையில் ஆய்வுக்கு வந்த முதல் இசைக் கலைஞர் இவர் என்பதால் இவருக்கு ஏகமான புகழ். விஞ்ஞானிகளும் இவரை எல்லா ஆராய்ச்சிகளுக்கும் அழைத்து சோதனைகளைச் செய்து வருகின்றனர்.

7_Sulser

 

இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட இரு புலன் உணர்வுகளை அறிவியல் இனம் கண்டுள்ளது. சிலருக்கு எண்களை வண்ணங்கள் மூலமாக மட்டுமே அறிய  முடிகிறது! எந்த எண்ணைச் சொன்னாலும் அவர்களுக்கு அதற்குரிய வண்ணமே தோன்றும்!

 

ஆனால் இப்படி ஏன் அதீத புலன் உணர்வு சிலருக்கு  மட்டும் வருகிறது என்பதை விஞ்ஞானிகளால் இது வரை கண்டு பிடிக்க முடியவில்லை.

விநோதமான உலகத்திலே வித விதமான் அதிசயங்கள்! அதைச் செய்து காட்டும் மனிதர்கள்!! அறிவியலும் விடுவதாயில்லை. அவர்களின் மீதான தனது ஆராய்ச்சியைத் தொடர்கிறது!!!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

இயற்பியலில் பெரும் மேதை ஜான் பர்டீன் (John Bardeen – தோற்றம் 23-5-1908 மறைவு 30-1-1991)

இயற்பியலில் இரு முறை நோபல் பரிசு பெற்ற பெருமை இவர் ஒருவரை மட்டுமே சாரும்.

 

john bardeen

டிரான்ஸிஸ்டரைக் கண்டுபிடித்ததற்காக 1956இல் முதல் முறையாக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் சூபர்கண்டக்டிவிடி துறையில் இவர் செய்த ஆராய்ச்சிக்காக 1972இல் இரண்டாம் முறையாக நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

 

அதிகம் பேசாத மேதை இவர். சொற்களை யோசித்துப் பேசுவார்.

டிரான்ஸிஸ்டர் கண்டுபிடிப்பு மின்னணுவியலில் ஒரு பிரம்மாண்டமான மாறுதலை ஏற்படுத்தியது. கம்ப்யூட்டர் உருவாக இது பெரிதும் காரணமாக அமைந்தது.

முதல் முறை பரிசைப் பெற இவர் ஸ்வீடனுக்குச் சென்றார். சாதாரணமாக நோபல் பரிசு பெறும் அறிஞர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடாமல் தன் குடும்பத்துடன் விழாவிற்குச் செல்வது வழக்கம்.

 

 

ஜான் பர்டீனுக்கு  மூன்று  மகன்கள். மூவரில் ஒருவரை மட்டும் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவிற்குத் தன்னுடன் அழைத்துச் சென்றார் அவர்.

அவரை வரவேற்ற ஸ்வீடன்  மன்னர் ஆறாம் குஸ்டாஃப் (King Gustaf VI) , “கூட யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?: என்று அவரிடம் வினவினார். தன் மகன்களில் ஒருவர் மட்டுமே தன்னுடன் வந்திருப்பதாக பர்டீன் பதிலளித்தார்.

 

 

உடனே அவரைச் செல்லமாகக் கடிந்து கொண்டார் மன்னர். அனைவரையும் கூட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டாமா என்றார் அவர்.

எப்போதுமே மெதுவாக பதில் சொல்லும் பர்டீன் இப்போது, உடனடியாக, “அடுத்த முறை குடும்பத்துடன் வருகிறேன்” என்று பதிலளித்தார்.

 

 

அனைவரும் பிரமித்துப் போயினர். ஒருமுறை நோபல் பரிசு பெறுவதே முடியாத காரியம். அடுத்த முறை அழைத்து வருவதாவது?

 

ஆனால் மேதை தன் வாக்கை மெய்யாக்கிக் காட்டினார்.

1972இல் இரண்டாம் முறை நோபல் பரிசைப் பெற்றார்; விழாவிற்கும் குடுபத்துடன் சென்றார்!

************

 

Brevity Anecdotes (Post No.2895)

caesar-veni-vidi-vici

Compiled  by London swaminathan

 

Date: 14 June 2016

 

Post No. 2895

 

Time uploaded in London :– 16-38

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

veni vidi vici

The editor of a small Missouri paper sent a notice to one Bill Jenkins that his subscription had expired. The note came back with the laconic scrawl ‘so is Bill ‘.

Xxx

Bananas!

During his administration, President Coolidge was one time taken on a tour of inspection through the fabulously magnificent and variegated horticultural conservatories on the estate of Pierre S DuPont at Longwood, Pennsylvania

 

The marvellous beauties of the spring flowers, the exotically cultivate d special fruits, the weird and unreal form of cacti, the beautiful ferns, the orchids. All these things elicited from the President no word of comment. Stepping into the close and humid atmosphere of the room devoted to tropical trees, the president looked about for a moment and remarked with interest, ‘Bananas’.

 

xxx

Press Conference

At one of the White House press conference s various reporters were vainly firing their questions at Calvin Coolidge

 

Have you anything to say about prohibition ?

No

Have you anything to say about the world court?

No

About the farm situation?

No

About the forthcoming senatorial campaign?

No

The meeting broke up and the reporters began to file out of the room

And called the president, don’t quote me

Xxx

to be  or

Gift of Gab

Bob Burns, the local boy who made good food from Arkansas, is well known for his stories about his large and amusing family. One day when chided for his loquaciousness, he explained that not all members of his family were as given to the gift of gab as himself.

 

Now take my cousin Wilfred. He was eleven years old before he so much as said one word. One day he was sitting on a fence, watching his father plot a field.

 

A bull broke through into the pasture and made straight for Wilfred’s pa.  all of a sudden Wilfred s mouth opened and he yelled

Hey, Pa! Hey! Look out for the bull.

 

Soon as his Pa got out of the field he went straight for Wilfred and said, Wilfred you shore done me a right smart favour that time. But how come you are speaking all of a sudden? You ain’t never said nothing afore

 

“Well, Pa”, was Wilfred’s reply “I just ain’t never had nothing to say before”.

 

—Subham–

 

 

 

 

உத்தமன் யார்? மத்யமன் யார்? அதமன் யார்? (Post No.2894)

Logo Three people on podium

Written by London swaminathan

 

Date: 14 June 2016

 

Post No. 2894

 

Time uploaded in London :– 16-16

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

three figures

நல்லவன் யார்?

மீண்டும் மீண்டும் இடையூறு வரினும் எடுத்த காரியத்தை முடிப்பவனே (உத்தமன்) சிறந்தவன்.

சிலர், ஒரு வேலையைத் துவக்கியபின்னர், இடையூறு வந்தால் அதை விட்டு விடுவார்கள். இவர்கள் (மத்யமன்) இடைப்பட்ட நிலையிலுள்ளவர்கள்.

இடையூறு வரும் என்று பயந்துகொண்டு வேலையையே துவங்கமாட்டார்கள் கீழ்நிலையிலுள்ளவர்கள் (அதமன்).

 

ப்ராரப்யதே ந கலு விக்னபயேன நீசை:

ப்ராரப்யதே விக்னவிஹதா விரமந்தி மத்யமா:

விக்னைர் முஹுர்முஹுர் அபி ப்ரதிஹன்யமானா:

ப்ராரப்தம் உத்தமகுணா ந பரித்யஜந்தி

 

கருமமே கண்ணாயினார்

உத்தமர் யார் என்று நீதிவெண்பா கூறுகிறது:-

ஒரு வேலையைச் செய்யும்போது, உடலுக்கு வரும் கஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார். பசியைப்பற்றி கவலைப்படமாட்டார். வேலை முடியும் வரை தூங்க மாட்டார். யார் இடையூறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தார். காலம் வீணாகுமோ என்று கவலைப்படமாட்டார். யார் இகழ்வதையும் பொருட்படுத்தமாட்டார்.

 

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்- செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங்கொள்ளார்

கருமமே கண்ணாயினார்

Snakes---Banded-Egyptian-Cobra

விஷப் பாம்பும், தீயோரும்

தாழ்ந்தோருக்கு செய்யும் (உபகாரம்) உதவியால் கெடுதலே (அபகாரம்) வரும். பாம்புக்கு பால் வார்த்தால் விஷம்தான் அதிகரிக்கும்.

உபகாரேண நீசானாம் அபஹாரோ ஹி ஜாயதே

பய: பானம் புஜங்கானாம் கேவலம் விஷவர்தனம்

–சுபம்–

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல! (Post No.2893)

blindfolded1

Article written by S.NAGARAJAN

 

Date: 14 June 2016

 

Post No. 2893

 

Time uploaded in London :–  6-56 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் ! – 4

 

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல!

 

ச.நாகராஜன்

 

யோக வாசிஷ்டம் என்னும் பெரிய நூலை படிக்கலாம் என்று அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க ஆரம்பிப்பது  கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கிறது என்று அன்பர்கள் சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்கத்தான் இருக்கிறது.

 

 

விஷயம் சூக்ஷ்மமான விஷயம். ஆர்வம் உள்ளவர்களுக்கே 32000 சுலோகங்களைப் படிப்பது என்பது எளிதான காரியமல்ல. அதுவும் ஆங்கிலத்தில் படிக்கும் போது முழு சாரத்தையும் கிரகிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுவது இயல்பே.

இதனால் அன்பர்கள் முதலில் “Quintessence of Yogavasishtha” என்ற புத்தகத்தை முதலில் படிக்கலாம். ருசி வந்து விடும்,

 

 

பின்னர் சம்ஸ்கிருதத்தின் அழகைக் காணவும் அதில் ஆழ்ந்த அர்த்தமுள்ள பல்வேறு விஷயங்களைப் படிக்கவும் ஒரு நல்ல நூல் உள்ளது.  தேர்ந்தெடுத்த சுமார் 2500 சுலோகங்கள் சம்ஸ்கிருதத்திலும் அதன் ஆங்கில மொழியாக்கமும் உள்ள புத்தகம் அது        


B.L. Atreya
தேர்ந்தெடுத்த ஸ்லோகங்களை Samvid  என்பவர்அழகுற ஆங்கிலத்தில்  மொழியாக்கம் செய்துள்ளார். இந்த நூலின் பெயர் ‘The Vision and the way of Vasistha’.  583 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் யோக வாசிஷ்டம் எதைச் சொல்ல வருகிறது என்பதைப் புரிந்து கொண்டு பிரமிக்கலாம் இதன் இன்றைய விலை ரூ 400/

 

 

அழகிய எளிய சம்ஸ்கிருதம் இந்த நூலில் அமைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்ட இரு ஸ்லோகங்களை இங்கு பார்க்கலாம். நூலின் பெருமையைக் கூறும் ஸ்லோகங்கள் இவை.

 

 

க்ரந்தேனானேன லோகோயமஸ்மாத் ஸம்சார சங்கடாத்

சமுத்தரிஷ்யதி க்ஷிப்ரம் போதேனேவாஷு ஸாகராத்

 

This mankind will cross over this peril of worldly existence speedily by this work, as (one crossed over) the ocean quickly by a boat.

.

யதிஹாஸ்தி ததன்யத்ர யத்ரேஹாஸ்தி ந தத் க்வசித்

இமம் சமஸ்தவிஞ்ஞான சாஸ்த்ர கோஷம் விதுர்புதா:

 

What is here (in this work), that is elsewhere.  What is not here that is nowhere. The wise consider this as the repository of all scriptures of Higher Knowldege.  (Translation by Samvid)

 

 

 

இந்த நூலைப் படித்த பின்னர் யோகவாசிஷ்டம் முழுவதையும் ப்டிப்பதில் கஷ்டம் இருக்காது.

 

இவ்வளவு பீடிகைக்குப் பின்னரும் இந்த அதிச்ய நூலைப் படிக்காமல் இருந்தால் அது பாக்கியக் குறைவே.

படிப்பவர்களுக்கு மற்றவர்களுக்குப் புரியாத பிரபஞ்ச இரகசியங்கள் புரியும்.

 

********

ஜமைகா சத்திரம்: கடத்தல்காரர்கள் சொர்கம் (Post No.2892)

jam 1

Written by London swaminathan

 

Date: 13 June 2016

 

Post No. 2892

 

Time uploaded in London :– 17-59

 

(  Pictures are taken by london swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

jam 2

 

இங்கிலாந்தின் கார்ன்வாலில்(Cornwall) உள்ள ஜமைகா இன் (சத்திரம்) Jamaica Inn என்ற மியூசியத்துக்கு ஜூன் 11 (2016) போயிருந்தேன். அங்கு கடற் கொள்ளைக் காரர்கள், கடத்தல் காரர்கள் பற்றி ஒரு சிறிய மியூசியமும், ஹோட்டலும், மதுபான விடுதியும் உள்ளன. லண்டனிலிருந்து ஐந்து மணி நேரம் காரில் சென்றால் இந்த இடத்தை அடையலாம். கார்ன்வால் என்னும் பிராந்தியம் அழகான கடற்கரை, பழங்காலச் சின்னங்கள், நீர்வீழ்ச்சிகள் முதலியவற்றுக் கும் பெரிய மார்க்கெட்டுக்கும் பெயர் பெற்ற இடம். நாங்கள் இரண்டே நாள் விடுமுறையில் சென்றதால் ஜமைகா இன், நியூ கீ கடற்கரை, ஈடன் கார்டன் Eden Garden என்ற மிகப்பெரிய தாவரவியல் பூங்கா, செயின்ட் ஆஸ்டல் (St Austell) வாரச் சந்தை ஆகியவற்றை மட்டுமே பார்க்கமுடிந்தது.

 

ஒருகாலத்தில் கார்ன்வால் என்பது யாரும் அதிகம் வராத ஒரு பகுதியாக இருந்ததால் அது கஞ்சா முதலிய பொருட்களை கடத்துவோரின் சொர்கபூமியாக மாறியது. வெளி உலகிற்கே இப்படி ஒரு கடத்தல்காரர் பூமி இருப்பதும் அவர்கள் ஒரு ஹோட்டலில் வழக்கமாக சந்தித்து பண்டமாற்றம் செய்வதும் யாருக்கும் தெரியாமல் இருந்தது. 1936 ஆம் ஆண்டுகளில் இவ்விஷயங்களைக் கூர்மையாகக் கவனித்த டாப்னி டூ மோரியர் (Daphne du Mauriere) என்ற பெண்மணி கடத்தல்காரர், கடற்கொள்ளைக்காரர்கள் பற்றி நல்லதொரு நாவல் எழுதினார். அவர் வாயிலாக இந்த இடம் பற்றி எல்லோரும் அறிந்தனர். பின்னர் ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் இதே பெயரில் ஒரு திரைப்படம் எடுத்தார்.

jam5

அந்தத் திரைப்படத்தில் கடல் கொள்ளையர்கள், எப்படிக் கப்பல்களைக் கவிழ்த்து, மாலுமிகளைக் கொன்று பொருள்களைக் கொள்ளையடிக்கின்றனர் என்று காட்டப்படுகிறது.

 

இப்பொழுது பாட்மின், லான்சஸ்டன் என்ற இரண்டு ஊர்களுக்கிடையேயுள்ள ஜமைகா இன், ஒரு சுற்றுலா இடமாக மாறிவிட்டது. ஒரு சின்ன மியூசியத்தில் கடத்தல் காரர்கள் பற்றிய நாவல்களின் தொகுப்பு, பழைய ஓவியங்கள், அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், அவர்கள் கடத்திய பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

தமிழ்நாட்டில் சணல் நாரினால் பின்னப்பட்ட பைகளில் சாமான்கள் வாங்குவோம். அது மாதிரிப் பையின் மீது கஞ்சா படம் போட்டு இத்தனை கிலோ என்று எழுதி இருக்கிறார்கள். ஒருகாலத்தில் இப்படி கிலோ கணக்கில் ஜமைகா தீவில் கஞ்சா விற்கப்பட்டது. அந்தப் பைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பாம்பாட்டிகள் வைத்திருக்கும் மகுடிகள் அங்கே பழங்கால இசைக்கருவிகள் என்றும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஜமைகா என்னும் நாடு மேற்கிந்தியத் தீவு நாடுகளில் ஒன்று ஆகும்.

ஒரு தனி அறையில் பத்து நிமிட வீடியோ திரைப்படமும் காட்டப்படுகிறது. டாப்னி எழுதிய நாவல்களும் உள்ளன. ஜமைகா இன் என்ற பெயரில் பி.பி.சி.சீரியல், நாடகம் ஆகியனவும் வந்திருப்பதால், இந்தக் கதைகளை அறிந்தோருக்கு இது ஒரு நல்ல மியூசியமாகத் திகழும். ஒரு சிறிய நுழைவுக் கட்டணம் இருந்தபோதிலும், நாவலைப் படித்தவர்களும், திரைப்படத்தைப் பார்த்தவர்களும் ஜமைகா இன் – சத்திரத்தைப் பார்க்காமல் வரமாட்டார்கள். சுமார் 300 ஆண்டுப் பழமையான இடம் இது.

 

jam 7

 

jam11

 

jam10

–சுபம்–