சொன்னால் நம்ப மாட்டீர்கள்! (Post No.3879)

Written by S NAGARAJAN

 

Date: 5 May 2017

 

Time uploaded in London:-  5-37 am

 

 

Post No.3879

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 29

 

சொன்னால் நம்ப மாட்டீர்கள் : பாரதி மணி மண்டப வரலாற்றில் சுவையான சம்பவங்கள்!

 

ச.நாகராஜன்

 

    தேசியச் செல்வர் சின்ன அண்ணாமலையின் நினவலைகளை அவர் மிக மிகச் சுவையாகக் கூறும் நூல் : சொன்னால் நம்ப மாட்டீர்கள். 40 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலை எடுத்தால் முடிக்க வேண்டியது தான்! முடிக்காமல் கீழே வைக்கவே முடியாது!

 

  ஏராளமான சம காலத்திய சம்பவங்களை அவர் சுவைபடக் கூறும் போது பாரதி பற்றிய செய்திகள் ஆங்காங்கே விரவி வருகின்றன. இவற்றில் பாரதி பக்தர்களைப் பற்றியும், பாரதியைப் பரப்பியவர்களைப் பற்றியும் மக்கள் உலக மகாகவியை எப்படி ஏற்றுக் கொண்டனர் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

 

 

     குறிப்பாக பாரதிக்கு மணி மண்டபம் அமைக்க முயன்ற கல்கியும் சின்ன அண்ணாமலையும் நேசத்தாலும் பாசத்தாலும் இணைந்தவர்கள். இதை விளக்க ஒரே ஒரு சம்பவம்.

திடீரென்று ஒரு நாள் அண்ணாமலையை அழைத்த கல்கி அவரிடம் போர்டு ஆங்கிலியா காரின் சாவியைக் கொடுத்து ஓட்டிப் பார்க்கச் சொல்கிறார். காரை ஓட்டிப் பார்த்த அண்ணாமலை அது நன்றாக இருப்பதாகக் கூறுகிறார். சாவியை அவரிடமே தந்த கல்கி இது உங்களுக்குத் தான் என்கிறார்.

 

 

எத்தனை நாள் தான் தினமும் கல்கி வீட்டிற்கு அவர் பஸ்ஸில் போவதாம்! என்ன ஒரு அபாரமான அன்பு, நட்பு.

   கல்கியினால் சொற்பொழிவாளனாக மாறிய சின்ன அண்ணாமலை தமிழகத்தையே தன் நகைச்சுவை பேச்சினால் சிரிக்க வைத்தார்.

 

    அவர் பாரதி நிதி பற்றி குறிப்பிடும் இடத்தை அவர் சொற்களிலேயே பார்ப்போம்: அத்தியாயத் தலைப்பு : பாரதி நிதி

 

 

      “எட்டயபுரம் பாரதி மண்டப நிதிக்காக கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் நானும் கோயம்புத்தூர் சென்றிருந்தோம். இலக்கிய ரசிகர்கள் நிரம்பிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டோம். ரசிகர்கள் நிதி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

 

 

       கூட்டத்திலிருந்த ஒரு ரசிகர் எழுந்து கல்கி அவர்களே! தாங்கள் எழுதும் ‘சிவகாமியின் சபதம்’ நீண்டு கொண்டே போகிறதே?” என்று சொல்லிக் கொண்டே வரும் போதே நான் இடைமறித்து, “ஆமாம்! நீண்டு கொண்டு தான் போகிறது.

      ஐயா, குரங்கிற்குத் தான் வால் நீண்டு கொண்டு போகக் கூடாது. மயிலுக்குத் தோகை நீண்டால் என்ன?” என்று ஒரு போடு போட்டேன்.

 

      அதைக் கேட்டவுடனே மேற்படி ரசிகர், “தங்கள் பதில் என்னைப் பரவசமடையச் செய்து விட்டது. நான் பாரதி நிதிக்குப் பத்து ரூபாய் தான் கொடுக்கலாம் என்று வந்தேன். இப்போது இதோ நூறு ரூபாய் கொடுக்கிறேன்” என்று கூறு ரூ 100 பாரதி நிதிக்குக் கொடுத்தார்”.

 

கல்கி பாரதி மணி  மண்டபம் கட்ட எப்படியெல்லாம் உழைத்தார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இன்னொரு சம்பவத்தை சின்ன அண்ணாமலை, ‘நாடோடியாக நடித்தேன்’ என்ற அத்தியாயத்தில் தருகிறார்.

 

 

பெங்களூரில் பாரதி மணி மண்டப நிதி அளிப்பு விழா நிகழ்ச்சியில் பிரபல எழுத்தாளர் நாடோடி அவர்களைக் க்லந்து கொண்டு நிதியைப் பெற்று வர கல்கி ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் கடைசி நிமிஷத்தில் நாடோடி அவர்களால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. சின்ன அண்ணாமலையிடம் அந்தப் பணியை ஒப்படைத்தார் கல்கி.

நாடோடி என்று ரிஸர்வ் செய்யப்பட்ட சீட்டிலேயே பயணம் செய்தார் சின்ன அண்ணாமலை. பெங்களூரிலும் ரயில் நிலையத்தில் அவரை ‘நாடோடியாகவே’ வரவேற்றார்கள்.

 

 

சின்ன அண்ணாமலை தான் யார் என்பதைச் சொல்லவில்லை.

கூட்டத்தில் அவரை நாடோடியாகவே நினைத்து அவரைப் பற்றி அனைவரும் பேசினர். 2000 ரூபாய் நிதி  கிடைத்தது.

கூட்டத்தில் நாடோடியாகப் பேசிய சின்ன அண்ணாமலை இறுதியில் “நான் ஒரு ரகசியத்தைச் சொல்லப் போகிறேன். அதைக் கேட்டால் திடுக்கிட்டுப் போவீர்கள். ஆனால் அதை நான் இலவசமாகச் சொல்ல விரும்பவில்லை. ஆளுக்கு நான்கணா பாரதி மணி மண்டப நிதியாகத் தருவதாக ஒப்புக் கொண்டால் சொல்கிறேன்” என்று கூறி நிறுத்தினார்.

“தருகிறோம். ஆனால் நீங்கள் சொல்லப்போகும் உண்மை எங்க்ளுக்குத் தெரிந்ததாக இருந்தால் என்ன செய்வது” என்று கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.

 

 

“அது தெரிந்திருக்கவே முடியாது” என்றார் சின்ன அண்ணாமலை.

 

“நீங்கள் நாடோடி அல்ல. சின்ன அண்ணாமலை என்பது எங்களுக்குத் தெரியும் என்றார் அவர்.

சின்ன அண்ணாமலை அசந்து போனார்.

கல்கி நாடோடிக்குப் பதிலாக் சின்ன அண்ணாமலை வருவதாகத் தந்தி ஒன்று கொடுத்திருந்தார்.

சின்ன அண்ணாம்லை நாடோடியாக இருப்பதை விரும்பியது போலவே கூட்டத்தினரும் அவரை நாடோடியாக ஏற்றுக் கொண்டனர்.

 

 

 

இதன் விளைவு: கூட்டத்திற்கு வந்தவர்கள் தனித் தனியாகக் கொடுத்த தொகை ரூ 650/

 

அடடா, எப்படிப்பட்ட சம்பவங்களின் மூலம் பாரதி மணி மண்டபம்   எழுந்திருக்கிறது!

மணி மண்டபத்திற்கு பாரதி அன்பர்கள் தந்த ஒவ்வொரு காசும் பொற்காசு தானே!

 

சங்கப் பலகை என்ற அத்தியாயத்தில் இன்னும் ஒரு பாரதி மணி மண்டப நிதி சேர்ப்பு சம்பவம் இருக்கிறது.

தேச பக்தர்கள் பற்றிய சுவையான நிகழ்ச்சிகளும் நூலில் அடக்கம்.

 

 

பாரதி அன்பர்கள் பாரதி மணி மண்டப வரலாற்றை அறிவது அவசியம்.

 

அதற்கு இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும்.

குமரன் பதிப்பகம், சென்னை டிசம்பர் 2004இல் வெளியிட்ட இந்த புத்தகத்தில் உள்ள பக்கங்கள் 242.

***

 

Follow the Habits of a Crow: Tamil Poets’ Advice (Post No.3878)

Written by London swaminathan

Date: 4 May 2017

Time uploaded in London: 22-07

Post No. 3878

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

Tamil poets use several birds or their habits to teach certain morals to the society. Tiruvalluvar, the author of the Tamil Veda ‘Tirukkural’ send us two messages using the crow:

The crow does not hide what it has got, but cries out to is fellows, before it eats

Prosperity among men will come only to those who have this disposition (Kural 527)

The message is “Go to the crow and learn, you selfish man”.

In another couplet, he says,

“A crow may overcome a much stronger bird, the owl, during day time,

Even so, at the right opportunity, the king could succeed easily in his campaigns” (481)

It is said that in the nocturnal fight, the owl could easily beat the crow; but if the fight takes place during the day time, the crow will be the victor. There is a story to this effect in the Panchatantra. Asvattama also used this tactic to kill important Pandava family members (see below my Mahabharata article link)

Follow the Six Points

Another Tamil poet lists six points in a four-line verse:

1.Get up early in the morning

2.Do sex like the crows, unseen by anyone

3.Take a bath everyday like the crow

4.When you have food call everyone

5.Come back to ‘your house’ (don’t go to other women)

6.Socialise like crows (they sit in a line and caw)

The crying of crows when it sees food and sharing it with others have been noticed by many other poets. They also praised the crows.

 

My articles on Crows

 

What can a Crow Teach You?

Date : 5  August  2015

Strange Belief about Crows in India and Britain!!

Research Article No. 1678; Dated 26 February 2015.

 

Strange Bird Stories in Mahabharata!

Research Article no. 1711; dated 12 March 2015

 

பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் ஒரு அதிசயம்!!

Research Article No. 1679; Dated 27 February 2015.

 

கா…கா…கா…!!! கா..கா..கா..!!!

28 March 2013

 

–Subham–

எல்லோருக்கும் இரண்டு மனைவி, இரண்டு மகன்கள்! (Post No.3877)

Written by London swaminathan

Date: 4 May 2017

Time uploaded in London: 20-08

Post No. 3877

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

 

முருகனுக்கு இரண்டு மனைவி – -வள்ளி, தெய்வானை

 

விஷ்ணுவுக்கு இரண்டு மனைவி– ஸ்ரீ தேவி, பூதேவி

 

விநாயகருக்கு இரண்டு மனைவி – – சித்தி, புத்தி

 

கிருஷ்ணனுக்கு இரண்டு மனைவி – – ருக்மணி, சத்யபாமா

 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்; இதில் நமக்குத் தெரிவது என்னவென்றால் இரண்டு மனைவியர் வரை “அனுமதி உண்டு” (allowed) ! ஆனால் நீங்களும் விநாயகரைப்போல, விஷ்ணுவைப் போல, முருகனைப் போல, கிருஷ்ணனைப் போல அபூர்வ சக்தி படைத்தவராக இருக்க வேண்டும்; மனைவி விஷயத்தில் மட்டும் இவர்களைப் பினபற்றுவேன் மற்ற விஷயங்களில் “நான் நான்தான்” என்று சொல்லக் கூடாது!!!

 

 

இரண்டுக்குப் பின்னர் எப்போதும் வேண்டாம் (ராம ராஜ்யத்தில்)!

இது ஒரு புறமிருக்க, மகன்கள் விஷயத்திலாவது நாம் கடவுளரைப் பின்பற்றலாம்:

 

சிவனுக்கு இரண்டே புதல்வர்கள் – விநாயகர், கந்தன்/முருகன்

வேதத்தில் வரும் அஸ்வினி குமாரர்கள் இரண்டே புதல்வர்கள்

 

ராமாயணத்தில்தான் அதிசய ஒற்றுமை; எல்லா சகோதர்களுக்கும் இரண்டிரண்டு புதல்வர்கள்! அது எப்படி சொல்லிவைத்த மாதிரி இரண்டு மட்டும் பெற்றார்கள்? ஒருவேளை மரபியல் அம்சமோ (Genetic factor) என்னவோ!

 

ராமனுக்கு இரண்டே புதல்வர்கள்- லவன் குசன்

மனைவி பெயர் – சீதை

 

பரதனுக்கு இரண்டே புதல்வர்கள் – தக்ஷன், புஷ்கலன்

மனைவி பெயர் மாண்டவி

 

லெட்சுமணனுக்கு இரண்டே புதல்வர்கள் –  அங்கதன், சந்திரகேது

மனைவி பெயர் ஊர்மிளை

 

சத்ருக்னனுக்கு இரண்டே புதல்வர்கள் – சத்ருகாதி, சுபாகு

மனைவி பெயர் ஸ்ருத கீர்த்தி

 

லவன், குசன் என்று ஏன் பெயர் வைத்தார்கள்?

 

स तौ कुशलवोन्मृष्टगर्भक्लेदौ तदाख्यया।
कविः कुशलवावेव चकार किल नामतः॥ १५-३२

sa tau kuśalavonmṛṣṭagarbhakledau tadākhyayā |
kaviḥ kuśalavāveva cakāra kila nāmataḥ|| 15-32

 

உலகப் புகழ் பெற்ற கவிஞர் காளிதாசர், அவரது ரகுவம்ச காவியத்தில் சொல்கிறார்:-

 

“கவி வால்மீகி தர்பைப் புல்லினாலும், பசுவின் வால் மயிரினாலும் துடைக்கப்பட்ட , அந்த சீதையின் குமாரர்களை பெயரிடும் விஷயத்திலும், அவைகளின் பெயராலேயே குசன் ,லவன் என்றே செய்தார்” (15-320

 

தர்ப்பைப் புல்லின் பெயர் குச; பசுவின் வால் மயிரின் பெயர் லவ; அதாவது குழந்தை பிறந்தவுடன் தீய சக்திகள் நெருங்காது இருப்பதற்காக, முனி பத்னிக்களின் கையில் இவ்விரண்டு பொருட்களையும் கொடுத்து குழந்தைகள் மீது தடவச் செய்தார். இது காளிதாசன் சொன்னது.

வால்மீகி ராமாயணத்தில் வேறு கதை!

 

ஆனால் ராமாயண உத்தர காண்டத்தில் தர்ப்பத்தின் முனைப் பகுதியினால் ஒருவனுக்கு குச என்றும் மற்றொருவனுக்கு தர்ப்பத்தின் அடிப்பகுதியால்

லவ என்றும் பெயரிடப் பட்டதாக ஸ்லோகம் உள்ளது.

 

குழந்தைகளுக்குப் பெயரிட்ட வால்மீகி அவ்விரு பெயர்களாலும் அவர்கள் பிரசித்தமடைவர் என்று சொன்னது உண்மையாகிவிட்டது. இரு குழந்தைகளுக்கும் வேதங்கள்,  சாத்திரங்களைக் கற்பித்ததோடு ராமனின் கதையையும் கற்பித்து பாட வைத்தார்.

 

அக்காலத்தில் சங்கீத உபந்யாசம் எவ்வளவு பிரபலமடைந்தது என்பதை லவ-குசனின் பாடல் ராமாயணம் காட்டுகிறது. அதுமட்டுமல்ல அது இன்றுவரையும் நீடித்து வருகிறது!

 

-Subahm–

 

வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் (Post No3876)

Written by S NAGARAJAN

 

Date: 4 May 2017

 

Time uploaded in London:-  6-28 am

 

 

Post No.3876

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஜோதிடமே துணையாகும்

வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் – பஞ்ச அங்க விளக்கம் : விதி விளக்கம் – 3

 

by ச.நாகராஜன்

 

  1. வாரம், திதி,நட்சத்திரம்,யோகம், கரணம் : பஞ்ச அங்க விளக்கம்

நூலாசிரியர் மிட்டா முனிசாமி செட்டி ராகு காலம், குளிகை ஆகியவற்றை இன்றும் பார்த்து வரும் அன்பர்கள் பஞ்ச அங்கங்களை ஏன் கவனிப்பதில்லை என்று வியக்கிறார்.

அவர்  பஞ்ச அங்கங்களைப் பற்றி விளக்குகிறார்.

அவற்றில் சில பகுதிகள் இதோ:

 

 

வாரம்

வாரங்களில் திங்கள்,புதன்,வெள்ளி ஆகியவைகள் சகல சுபங்களுக்கும் அனுகூலமானவை.

செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகியவை அவ்வளவு சிரேஷ்டமாக தினசரி அனுஷ்டானத்திற்கு எடுக்கவில்லை.

 

ஆனால் செவ்வாய், ஞாயிறு, வியாழன் ஆகியவற்றில் விவாகம் முதலிய சுபங்கள் நடந்தால் மேல் சொல்லிய சுப வாரங்களின் மஹிமை குறைவதில்லை.

 

 

,திதி

சூரியன், சந்திரன் இவைகள் ஒன்றுக்கொன்று இருக்கின்ற நிலையினால் பூமிக்கு ஏற்படும் ஒரு வித சுபாவ நிலையைக் குறிப்பது திதி.

 

திதியினால் சூரியனும் சந்திரனும் இருவரும் சேர்ந்து தங்கள் சர கதியினால் சக்தியை ஆகர்ஷணம் செய்து மனிதர்களுக்குப் பல வேளைகளிலும் , பல் இடங்களிலும் அவரவர் பிராரப்தம் போலவும், ஜெனன கால நவக்கிரக பிரசாத ஈடு போலவும் இயக்கி மண்மகனைப் பிணமகனாக்கலும் போன்ற அநேக பல்ன்களளச் செய்கின்றனர்.

கிரகண காலத்தில் மனிதர்களுக்கு வியப்பையும் பயங்கரத்தையும் ப்ரவச் செய்து தங்கள் சக்தியைக் காண்பிக்கின்றனர்

 

 

நட்சத்திரம்

 

நட்சத்திரம் சந்திரனுடைய நித்ய சரகதி நிலையைக் காண்பிக்கிறது.மற்ற கிரகங்களை விட பூமிக்கு மிகவும் ச்மீபத்தில் சஞ்சரிப்பதினால், சந்திரன் தின பலனை மனிதர்கள் யூகிப்பதற்கு உதவியாக இருக்கின்றான்.

 

 

யோகம்

 

இதுவும் நட்சத்திரத்தைப் போல 27 வகை உள்ளதென்றாலும் நட்சத்திரத்தைப் போல நாழிகை ஆதியந்தம் எடுத்து ஜெனனகால விசேஷம் கணக்கிட்டு , அந்த நாழிகையை வருடமாகவும், விநாடியை மாதமாகவும் வைத்துக் கவனித்தால் ஒவ்வொருவருடைய யோகம் மாறுவது போல, பூவுலகில் தங்கள் தங்கள் அனுபவ யோகம் எப்படி மாறி வருகின்றது என்பதைக் கவனிக்கலாம்.

 

நட்சத்திரத்தைக் கொண்டு திசை கணக்கிடுகிறோம்.

ஆனால் யோகம் ஸ்தூலமாக வாழ்நாள் யோகக் கூறுபாட்டை, ஜெனன சேஷ வருஷம் மாதம் வரையில் ஒவ்வொருவர் ஆயுள் காலத்தில், தெரிவிப்பதாக்த் தற்கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

 

கரணம்

 

கரணம் தீர்க்கமாக ஆயுள் பரியந்தம் ந்டக்கும் ஆன்ம சுபாவத்தைத் தெரிவிக்கிறது.

இது யோகத்தைப் போல மாறி வருவதில்லை.

 

இனி பஞ்ச அங்கங்களைப் பற்றிச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 

வாரம்

 

  1. வார சூன்யம் : வாரமும் நட்சத்திரமும் கூடிய தினத்தன்று நன்மை உண்டாகாது. அப்படிப்பட்ட நாள்கள் சுபத்திற்கும் ஆகாது. எவ்வித காரியத்தையும் அன்று ஆரம்பிக்கக் கூடாது.

ஞாயிறு : – அனுஷம், கேட்டை, மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகம்

திங்கள் :- பூராடம்,அனுஷம், மகம், பூரட்டாதி, கார்த்திகை, விசாகம்

செவ்வாய்:- அவிட்டம், திருவோணம், சதயம்,கேட்டை, திருவாதிரை

புதன் :- மூலம், திருவோணம்,கார்த்திகை,அவிட்டம், அசுவினி, பரணி

வியாழன் – மிருகசீரிஷம்,பூராடம்,ரேவதி, புனர்பூசம்

வெள்ளி – பூசம், விசாகம், ரோகிணி, அவிட்டம்,மிருகசீரிஷம், ஹஸ்தம், அனுஷம்

சனி – ஹஸ்தம்,பூசம், புனர்பூசம், உத்திரம், ரேவதி

இவை பொது விதி. திதி,யோகம் ஆகியவற்றால் மேற்காட்டிய வாரசூனயம் நன்மையாக முடியும்.

தெய்வ அனுகூலத்தினால் மனித யத்தனமின்றி விசேஷ காரியங்களும் சுபங்களும், இஷ்ட பிராப்தியும் உருவாகலாம்.

 

  1. கிழமை பிறந்த ( நாள் என்று குறிப்பிடப்படும்) நட்சத்திரம் கூடிய வாரங்களில் செய்கின்ற கருமம் எல்லாம் தீமையாக முடியும்.

இது தினசரி அன்றாடம் கடைப்பிடிப்பதற்காக ஏற்பட்டது.

இது பின் வருமாறு

ஞாயிறு – பரணி

திங்கள் – சித்திரை

செவ்வாய் – உத்திராடம்

புதன் – அவிட்டம்

வியாழன் – கேட்டை

வெள்ளி – பூராடம்

சனி – ரேவதி

இது சிறப்பு விதி. இதை நிச்சயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

 

அடுத்து நட்சத்திரங்களைப் பற்றிச் சற்று விளக்கமாகக் காண்போம்.

– தொடரும்

Why did Valmiki name Rama’s Children Lava and Kusha? (Post No.3875)

Written by London swaminathan

Date: 3 May 2017

Time uploaded in London: 19-34

Post No. 3875

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

 

Kalidasa, the greatest poet, describes the naming ceremony of Lava and Kusha in the hermitage of the Sage Valmiki. Lava and Kusha, sons of Rama and Sita were born in the hermitage when Sita was separated from Rama.

 

They were named Lava  and Kusha after the ceremonial materials used by Valmiki, i.e. Cow’s tail and Sacred Kusha grass. But Valmiki differs from Kalidasa in one matter.

 

Kalidasa, in his classic Raghuvamsa, says,

सखा दशरथस्यापि जनकस्य च मन्त्रकृत्।
संचस्कारोभयप्रीत्या मैथिलेयौ यथाविधि॥ १५-३१

sakhā daśarathasyāpi janakasya ca mantrakṛt |
saṁcaskārobhayaprītyā maithileyau yathāvidhi|| 15-31

That expounder of the hymns, namely Valmiki, being the friend of Dasharatha as well as of Janaka, out of regard for both, procedurally performed purificatory ceremonies with regard to both the sons of Maithili. [15-31]

 

स तौ कुशलवोन्मृष्टगर्भक्लेदौ तदाख्यया।
कविः कुशलवावेव चकार किल नामतः॥ १५-३२

sa tau kuśalavonmṛṣṭagarbhakledau tadākhyayā |
kaviḥ kuśalavāveva cakāra kila nāmataḥ|| 15-32

Verily the poet gave the names Kusha and Lava to the two sons of Seetha from the names of the wiping materials, namely kusha grass and the hair of the tuft of the cow’s tail (lava), since the infants had been wiped of the post delivery uterine moisture by means of those two materials. [15-32]

–o)0(o–

साङ्गम् च वेदमध्याप्य किंचिदुत्क्रान्तशैशवौ।
स्वकृतिम् गापयामास कविप्रथमपद्धतिम्॥ १५-३३

sāṅgam ca vedamadhyāpya kiṁcidutkrāntaśaiśavau |
svakṛtim gāpayāmāsa kaviprathamapaddhatim|| 15-33

 

No sooner had the boys come out of the stage of infancy than Valmiki taught them the Vedas with their ancillaries, and then made them chant his own composition RAMAYANA which was the first guiding principle for all later time poets. [15-33]

–o)0(o–

रामस्य मधुरम् वृत्तम् गायन्तो मातुरग्रतः।
तद्वियोगव्यथाम् किंचिच्छिथिलीचक्रतुः सुतौ॥ १५-३४

rāmasya madhuram vṛttam gāyanto māturagrataḥ |
tadviyogavyathām kiṁcicchithilīcakratuḥ sutau|| 15-34

Singing the pleasant legend of Rama before their mother the two sons slightly lessened her grief of separation from Rama. [15-34]

–o)0(o—

 

VALMIKI’S  VERSION

 

Valmiki’s version in the Uttara Kanada  (Chapter 66 )

of Valmiki Ramayana is slightly different from Kalidasa’s.

“During the night Shatrughna passed in the leaf thatched hut, Sita gave birth to two children, and at midnight the youthful ascetics brought the pleasant and auspicious tidings to Valmiki. Immediately he went to see the newly born children. On beholding those two infants, his heart was filled with delight and he performed the Rakshasa Rite ( to avert evil).

Taking a handful of Kusha grass with its roots, Valmiki pronounced the formula of protection for the destruction of evil forces, saying:-

‘Since they will rub the first born of the children with the Kusha grass blessed by the aid of Mantras, his name shall be Kusha and, as the last born will be carefully dried by the female ascetics with the roots of the grass, he shall be called Lava, and by these names that I have given them, they will become renowned.

 

Thereafter the female ascetics purified themselves and reverently received the grass from the hands of the Muni (Vamiki), applying it to the two children

xxx

 

Four Brothers had Eight Sons!(4 X 2=8)

Another interesting coincidence is that all the four brothers had two sons each. Not many people know the names of the wives of Rama’s brothers and their sons!

Rama and Sita were the parents of Lava and Kusha

Bharata and Mandavi were the parents of Dakshan and Pushkalan

Lakshmana and Urmila were the parents of Angathan and Chandraketu

Shatrughna and Sruthakeerthi were the parents of Shatrugathi and Subahu

 

इतरेऽपि रघोर्वंश्यास्त्रयस्त्रेताग्नितेजसः।
तद्योगात्पतिवत्नीषु पत्नीष्वासन्द्विसूनवः॥ १५-३५

itare’pi raghorvaṁśyāstrayastretāgnitejasaḥ |
tadyogātpativatnīṣu patnīṣvāsandvisūnavaḥ || 15-35

 

The other three scions of the race of Raghu, namely Lakshmana, Bharata, Shatrughna, who were as resplendent as the triple sacred fires, became the fathers, each begetting two sons on their wives who were pre-eminent ‘as wives’ by being married to them. [15-35]

 

Then Kalidasa describes their achievements.

 

(Sanskrit slokas are taken from sanskritdocuments.com; thanks)

 

–Subham–

 

 

காஷ்மீர் அமைச்சரின் தியாகம்! (Post No.3874)

Written by London swaminathan

Date: 3 May 2017

Time uploaded in London: 15-52

Post No. 3874

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

கல்ஹணர் என்ற பிராமணனை வெளிநாட்டு அறிஞர்கள் அனைவரும் சிலாகித்துப் பேசுவர். அவருக்கு ஏன் அவ்வளவு கியாதி (புகழ்)? ஏனெனில் இந்தியாவில் முதல் முதலில் வரலாற்றை எழுதியவர் இவர்தான் என்பது வெளிநாட்டு அறிஞர் கருத்து. சங்கத் தமிழ் நூல்களில் எண்பதுக்கும் அதிகமான வரலாற்றுச் செய்திகளை வரலாற்று மன்னன் பரணன் அளித்த போதும், அதற்கு முன்னால் 140-க்கும் மேலான தலைமுறை

 

மன்னர்களைப் புராணங்கள் பட்டியலிட்ட போதும் அதை எல்லாம் அறிஞர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் இந்தக் காஷ்மீரி பிராமணன் 3400 க்கும் மேலான சம்ஸ்கிருத ஸ்லோகங்களில் “வருட”த்தைக் குறிப்பிட்டு வரலாறு எழுதியுள்ளான்.

 

கல்ஹணர் சொன்ன பல அதிசய விஷயங்களை ஏற்கனவே பல கட்டுரைகளில் தந்தேன். இதோ மேலும் ஒரு அற்புதம்!

 

ரிக்வேதத்தில், தலைகொடுத்த தத்யாங்க் பற்றிப் படித்தோம். புராணங்களில் , வஜ்ராயுதம் செய்ய தன் முதுகெலும்பையே தியாகம் செய்த ததீசி முனிவர் கதையை அறிந்தோம்; சிவபெருமானுக்காக கண்களையே தியாகம் செய்த கண்ணப்ப நாயனார், மஹாவிஷ்ணு பற்றிப் பெரிய புராணத்திலும் தேவாரத்திலும் கேட்டோம். ஆனால் உடலையே நீச்சல் அடிக்க உதவும் தோல் பையாயாக்கி உயிர்த் தியாகம் செய்த தேவ சர்மன் பற்றிக் கேட்டிருக்க மாட்டோம்.

 

இதோ கல்ஹணர் வாய்மொழியாக கேட்போம்:

காஷ்மீரில் கி.பி.750-ஆம் ஆண்டை ஒட்டி ஜெயபீடன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவன் நேபாள நாட்டின்மீது படை எடுத்தபோது அங்கே அரமுடி என்ற மன்னன் ஆட்சி செய்துவந்தான். அவன் கில்லாடி. மந்திர தந்திரங்களில் வல்லவன்; ராஜ தந்திரமும் கற்றவன்.

 

ஜெய பீடனின் படைகளை நேரில் சந்திக்காமல் அவனைத் தாக்காட்டி தொலைதூரம் இழுத்து வந்தான். ஒரு கடலும் நதியும் சந்திக்கும் இடம் (முகத்துவாரம்) வரை படைகளை இழுத்தான். ஆற்றின் ஒரு பக்கத்தில் ஜெயபீடனின் படைகளும் மறுபுனிறத்தில் அரமுடியின் படைகளும் நிலைகொண்டிருந்தன. மிகவும் திட்டமிட்டு ஒரு நாள் திடீரென்று போர் முழக்கம் செய்து முரசு கொட்டினான் அரமுடி. அவனுடைய சூது வாது தெரியாத ஜெயபீடனி ன் படைகள், ஆற்றைக் கடந்தன. முழங்கால் அளவே தண்ணிர் என்று கருதி ஜெயபீடன் ஆற்றில் புகுந்தான். ஆயினும் நதியைக் கடப்பதற்குள் கடல் அலைகள் உள்ளே வந்து நீர் மட்டத்தை உயர்த்தின ஜெயபீடன் தத்தளி த்தான். பெரும்பாலான படைகளை வெள்ளம் கடலுக்கு அடித்துச் சென்றது

‘த்ருதி’ என்னும் தோல் பைகளை கட்டி நீந்தி வந்த வீரர்கள் வந்து ஜெயபீடனைக் கைது செ ய்து சிறைவைத்தனர். ‘த்ருதி’ என்பது எருமை மாட்டின் தோலினால் ஆனது. அதைக் காற்றடைத்து,  அதைப் பிடித்துக்கொண்டு நீந்துவது காஷ்மீரி மக்கள் அறிந்ததே.

ஜெயபீடனை ஒரு உயரமான கட்டிடத்தில் நதி ஒரமாகக் காவலில் வைத்தான் நேபாள மன்னன் அரமுடி!

 

ஜெயபீடனிடம் தேவ சர்மன் என்ற புத்திசாலி அமைச்சன் வேலை பார்த்து வந்தான். மன்னரைக் கடவுளாகக் கருதி தன் இன்னுயிரையும் ஈயும் உத்தம குணம் கொண்ட சத்திய சீலன் அவன். நல்ல தந்திரம் ஒன்றை வகுத்தான். மன்னன்  அரமுடிக்குத் தூது அனுப்பி, ஜெயபீடன், இதுவரை போரில் வென்ற செல்வப் புதையலை எல்லாம் அளிப்பதாகவும் ஜெயபீடனை மட்டும் விடுவித்தால் போதும் என்றும் செப்பினான்.

 

தலையில் குறை முடியே உடைய அரைமுடியும் அதற்குச் சம்மதித்தான். உடன்படிக்கை கையெழுத்தானது. தங்கள் மன்னரை ஒருமுறை சந்திக்க அனுமதி கோரினான் தேவசர்மன். அப்பொழுது நடந்த சம்பாஷணை:–

“மன்னர் மன்னவா

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தில் குறைவதுண்டோ; சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ? நீங்கள் சிறைப்பட்டாலும் உங்கள் வீரமும் மனோ திடமும் குலையவில்லை என்றே கருதுகிறேன்” – என்றான் தேவ சர்மன்

 

“அது எப்படி முடியும் சர்மா? என்ன வீரம் இருந்து என்ன பயன்? நான்கு சுவருக்குள் இருக்கும் நான் என்ன செய்ய முடியும்?” – என்றான் ஜெயபீடன்

 

“மன்னா! நான் படைகளை நதியின் மறு கரை யில் தயாராக வைத்துள்ளேன். நீங்கள் மட்டு ம் இப்பொழுது நதியில் குதித்து, மறுகரைக்கு நீந்திச் சென்றால் போதும்.”

“நானா? இவ்வளவு ஆழத்திலிருந்து குதித்தால் மேலே  உடல் வராது. தோல் பையைக் கட்டிக் கொ ண்டு குத்தித்தாலோ தோல் பை கிழிந்துவிடும்”.

 

“அரசே! துணிவை இழக்காதீர்கள் நான் சொல்லும்படி செய்யுங்கள். ஒரு இரண்டு நாழிகை ( 48 நிமிடம்) வெளியே நில்லுங்கள்” – என்று மன்னனிடம் சொல்லிவிட்டு மன்னனின் அறைக்குள் சென்று, எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு, தன்னையே கத்தியால் குத்திக் கொண்டு இறந்தான் தேவ சர்மன்.

 

அரசன் உள்ளே சென்ற போது சடலத்தைப் பார்த்து திடுக்கிட்டான். தனது உடலையே தோல்பையாகக் கொண்டு நீந்தி மறுகரைக்குச் செல்லும்படி குறிப்பு எழுதி வைத்திருந்தான் மன்னன் வசதியாக அமர பல பாகங்களில் துணிமணிகளைக் கட்டி வைத்தீருந்தான். மன்னனும் அவனது தியாகம் வீணாகக் கூடாது என்று எண்ணி உடனே ஆற்றுக்குள் குதித்தான். தனது படைகளை அடைந்தான்.

 

பின்னர் பெரும்படை திரட்டி, நேபாளத்தை நோக்கிச் சென்று அரமுடியைக் கவிழ்த்தான். தேவ சர்மனின் தியாகத்தால் காஷ்மீர் அரசு பிழைத்தது! இது உண்மையில் நடந்த சம்பவம்.

 

–சுபம்–

வள்ளுவர் குறளில் வடமொழிச் சொற்கள் (Post No.3873)

TIRUVALLUVAR STATUE AT LONDON UNIVERSITY

 

Written by S NAGARAJAN

 

Date: 3 May 2017

 

Time uploaded in London:-  5-45 am

 

 

Post No.3873

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

குறள் வேதம்

 

முக்கியக் குறிப்பு:

 

வைஷ்ணவ பரிபாஷை என்ற அழகிய நூலை எனக்கு அனுப்பி உதவியவர் எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்ரிநாதன் அவர்கள்.

அவ்வப்பொழுது அவர் அனுப்பும் மின் நூல்கள் அற்புதமானவை; பொருள் பொதிந்தவை. அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

 

வள்ளுவர் குறளில் கையாண்ட வடமொழிச் சொற்கள்

 

ச.நாகராஜன்

 

 

சங்க காலம் தொட்டே சம்ஸ்கிருதமும் தமிழும் ‘கொண்டு கொடுத்து’ உறவைச் செழுமைப் பயன்படுத்திக் கொண்ட மொழிகள்.

 

 

தமிழிலிருந்து சம்ஸ்கிருதத்திற்குச் சென்ற வார்த்தைகள் ஏராளம். அதே போல சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்த வார்த்தைகளும் ஏராளம்.

காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, பகை இன்றி தமிழ்ப் புலவர்களும் சம்ஸ்கிருத பண்டிதர்களும் தேவையான இடங்களில் நல்ல பதங்களை தங்கள் கவிதைகளிலும் காவியங்களிலும் நயம் படக் கையாண்டு வந்தனர்.

இதற்கு எடுத்துக்காட்டாக வள்ளுவர் தம் திருக்குறளில் கையாண்ட வடமொழிச் சொற்களைக் கூறலாம்.

இதைப் பட்டியலிடும் அரும் பணியில் ஈடுபட்ட எம்பார் கண்ணன் ரங்கராஜன் அவர்கள் வைஷ்ணவ பரிபாஷை என்ற தனது அரிய நூலில் கீழ்க்கண்ட பட்டியலைத் தந்துள்ளார். நூலின் பெருமையைப் பற்றி தனியே இனி எழுத இருக்கும் ஒரு கட்டுரையில் காணலாம்.

 

இப்போது குறள்களின் பட்டியல்:-

குறள் 1

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

குறள் 9

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை

குறள் 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

குறள் 19

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்

குறள் 29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது

குறள் 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானொன்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

குறள் 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு

குறள் 102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது

குறள் 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்

குறள் 215

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு

குறள் 261

உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே

தவத்திற் குரு

குறள் 266

தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட்பட்டு

குறள் 271

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்

குறள் 337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல

குறள் 360

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்

குறள் 490

கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து

குறள் 580

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்

குறள் 636

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை

குறள் 667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து

குறள் 682

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று

குறள் 706

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்

குறள் 738

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து

குறள் 763

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்

குறள் 931

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

குறள் 958

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்

குறள் 1029

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு

குறள் 1073

தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்ல்

குறள் 1086

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண்

குறள் 1116

மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன்

குறள் 1157

துறைவன் துறந்தமை தூற்றாக்கொல் முன்கை இறைஇறவா நின்ற வளை

மேலே உள்ள குறள்களின் எண்ணிக்கை மொத்தம் 30

இவற்றில் வரும் சம்ஸ்கிருத்ச் சொற்கள் தடித்து சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன.

சொற்களின் பட்டியல்:

ஆதி

பகவன்

குணம்

பூசனை

தானம்

தவம்

குணம்

கணம்

தெய்வம்

மங்கலம்

காலம்

வாணிகம் (இரு முறை)

நீர்

உரு

தவம்

கருமம்

ஆசை

பூதங்கள்

கோடி

காமம்

நாமம்

பருவம்

நாகரிகம்

மதி

அதி

அச்சாணி

தூது

முகம்

அணி

நாகம்

சூது

குலம்

குடும்பம்

தேவர்

புருவம்

மதி

பதி

வளை

சம்ஸ்கிருதச் சொற்களின் மொத்த எண்ணிக்கை 39.

இவற்றில் இரு முறை வந்த சொற்கள் :குணம், தவம், வாணிகம்,மதி ஆகியவை.

ஆக மொத்த எண்ணிக்கையில் ஆறைக் கழித்தால் வரும் சம்ஸ்கிருத்ச் சொற்கள் 33.

 

சில அறிஞர்கள் இன்னும் சில சொற்களையும் கூட சம்ஸ்கிருதப் பட்டியலில் சேர்த்திருக்கின்றனர்.

ஆனால் எம்பார் கண்ணன் ரங்கராஜன் அவர்கள் தந்துள்ள பட்டியலில் இடம் பெறுபவை இவை மட்டுமே.

வள்ளுவர் சொல்லின் மகிமையை அறியாதவ்ர் இல்லை.

அணுவைத் துளைத்து பொருளைத் தரும் அற்புதக் குறளின் வன்மையை அறியாதவர் யார்?

அவர் நினைத்திருந்தால் இவற்றைத் தவிர்த்திருக்கக் கூடும்.

ஆனால் எடுத்துக் கொண்ட பொருளின் தன்மை கருதி உரிய கருத்திற்கு உரிய இடத்தில் அவற்றைப் பயன் படுத்தி இருக்கிறார்.

குறள் தமிழ் மறை. இதற்கு மேலும் விவரிக்க வேண்டாமே!

இனி அடுத்த கட்டுரையில் தமிழ்த் தாய் வாழ்த்தில் இடம் பெறும் சம்ஸ்கிருதச் சொற்களைக் காண்போம்.

 

PLEASE READ THE OLD POSTS

 

வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் | Tamil …

https://tamilandvedas.com/…/வள்ளுவன்-ஒரு-சம்…

5 Nov 2012 – Picture: Tamil Poet Valluvar’s statue at SOAS, University of London பொய்யா மொழிப் புலவன் திருவள்ளுவன் ஒரு பெரியசம்ஸ்கிருத அறிஞன். அவன் செய்த …

 

Who was Tiruvalluvar? written and posted by me on 24 July 2013

Abert Einstein and Tiruvalluvar, posted on 17 December 2013

Tamil Merchant who dumped god into sea, posted on 17 August 2014

Elelasingan Kathai (Tamil), posted on 17 August 2014

 

வள்ளுவனும் வன்முறையும் (ஜூலை 24, 2013)

 

வள்ளுவன்  ஒரு  சம்ஸ்கிருத  அறிஞன் (நவம்பர் 5, 2012)

 

வள்ளுவான் சொன்ன புராண, இதிஹாசக் கதைகள் (ஜூலை 30, 2013)

 

வள்ளுவன் காமெடி ( 5 ஜனவரி, 2015)

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532) , 12 -2-2016

திருவள்ளுவர் யார்?,  Post No. 748 dated 17th December 2013.

 

Buddha and Tamil Saint on Good thoughts!, Post No 717 dated 21 November 2013

ஏலேல சிங்கன் கதை!, கட்டுரை எண்:– 1238; தேதி 17 ஆகஸ்ட் 2014.

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்! 14-11-2015

 

திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா? (Post No.3068); Date: 17th August 2016

–SUBHAM–

 

 

 

 

Kashmir Minister’s Sacrifice Saved the King! (Post No.3872)

Written by London swaminathan

Date: 2 May 2017

Time uploaded in London: 21-35

Post No. 3872

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

We have read about the great sacrifice of Dadhichi Rishi (see) who sacrificed his backbone to make Vajrayudha weapon to kill the bad people. We have heard about the sacrifice of eyes by Tamil saint Kannappa Nayanar and Mahavishnu. We also know the sacrifice of head by Dadhyank in the Rig Veda. But not many people know the great sacrifice of Devasarman the minister of Kashmiri King Jeyapida who ruled Kashmir around 750 CE.

Kalhana gives a graphic account of his sacrifice in his book Rajatarangni (River of Kings) in Sanskrit

From the Fourth Taranga (Chapter):

Jayapida invaded Nepal; but the King Aramudi did not fight with him. He was skilled in magic and statecraft. He retired to a great distance from his army. Jeyapida also followed him. Aramudi went to the other side of a river and beat the war drums. Jeyapida’s army crossed the knee-deep water in the river. Suddenly the water level rose from the tides of the sea. Aramudi was waiting for this moment; He caught the king from the middle of the flooded river. Jeyapida did not know the territory but Aramudi skilfully drew him to a place near the eastern ocean. Jeyapida’s army was washed away into the sea.

 

Kashmiris use Drti (Inflated skin) to cross the river; it was the primitive method to cross a river or stream. it is inexpensive because they use the buffalo skin to make this skin bag.

 

Jeyapida was imprisoned in a stone building on the bank of the River Kalagandika. The natural sceneries were so beautiful, Jeyapida composed slokas (couplets) on it. Kashmiris were reciting those slokas, at least until the days of Kalhana. Rajatarangini says his slokas were melting hearts.

Jeyapida had a very wise minister called Devasarman. He sent emissaries to the Nepalese King Aramudi. Devasarman told the Nepalese king that Jeyapida’s treasure would be given to him. Since the army is holding the war booty he had brought the entire army to the other side of the river bank. Nepalese King Aramudi believed all these things.

 

Devasarman had a different plan. After getting the permission of Aramudi, he went and saw Jeyapida.

 

Devasarman told Jeyapida:

“I hope you have not lostyour personal bravery; for it exists like mural support for frescoes, the plans of perilous adventure will be successful”

Jeyapida replied to him: “O minister! thus segregated and without arms what wonderful act could I do even if I were possessed of courage”

Devasarman said: Are you capable of, after falling into the waters of the river from this window, of going to the further bank? For your own army is there.”

The King said to him: “After falling from here one cannot come to the surface of the water without an inflated skin (Drti) and in this place even the inflated skin would burst owing to the distance of the fall.”

 

Then after consideration the minister said to him: “Stay out side for two nalikas (48 minutes). Then the minister entered the room alone and killed himself; He has written with his blood:

I am the inflated skin for you; the body is filled with breath, it having been destroyed just now, mount me and cross the river; to serve as a hold for your thighs when mounted, the turban has been tied by me around my own loins, get into this and jump at once into the water”.

Such was the direction tied to the neck with a strip of cloth, written in blood, torn with the nails from his limbs, which he saw and deciphered.

 

At first the king was surprised and shocked, but later without wasting time jumped into the waters and reached his army. His army went into Nepalese territory and defeated Aramudi. Thus, the minister sacrificed his own life and saved Jeyapida.

–Subham–

 

காஷ்மீரில் திராவிட மந்திரவாதி- உண்மைக் கதை (Post No.3871)

Written by London swaminathan

Date: 2 May 2017

Time uploaded in London: -6-46 AM

Post No. 3871

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

திராவிட மந்திரவாதி: ராஜ தரங்கிணி நூலில் அற்புதச்செய்தி

காஷ்மீரின் வரலாற்றை கல்ஹணர் என்ற புலவர் 3400-க்கும் மேலான சம்ஸ்கிருத பாக்கள் மூலமாக எழுதினார். அப்புத்தகத்தின் பெயர் ராஜதரங்கிணி. அதில் பல அதிசயமான விஷயங்களும் சுவையான செய்திகளும் உள. திராவிட என்ற சொல்லை அவர் இரண்டு இடங்களில் பயன்படுத்துகிறார். இந்த நூல் சுமார் 1000 ஆண்டு பழமை உடைத்து.

 

திராவிட அதிசயங்களைக் காண்போம்:

ஜெயபீடன் (கி.பி.750)  என்ற  அரசன் காலத்தில் நடந்த நிகழ்ச்சி இது: உண்மைக் கதை:

 

ஜெயபீடன் கனவில் ஒரு நாள் ஒரு மஹாபுருஷர் தோன்றினார்; இரு கரங்களையும் கூப்பியவாறு அவர் சொன்னதாவது–

 

“ஓ, அரசனே! உன்னிடம் அடைக்கலம் வேண்டி நான் வந்துள்ளேன். நான் உனது அரசின் எல்கைக்கு உட்பட்ட ஏரியில் வசிக்கிறேன். நான் ஒரு நாகன்; என் பெயர் மஹாபத்மன்;  ஒரு திராவிட மந்திரவாதி, தனது மந்திர சக்தியைப் பிரயோகித்து என்னை ஏரியிலிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறான்; நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

 

என்னை நீ காப்பாற்றுவாயானால் காஷ்மீருக்குள் உள்ள ஒரு மலையில் தங்கம் கிடைக்கும்; அந்த மலையை உனக்குக் காட்டித் தருவேன் என்றான் மஹாபத்மன்.

 

இந்தக் கனவைக் கண்ட அரசன் காலையில் தூங்கி எழுந்தவுடன், முதல் வேலையாக இப்படி ஒரு மந்திரவாதி தனது எல்கைக்குள் இருக்கிறானா என்று கண்டறிய உளவாளிகளை ஏவினான்; அவர்கள் பல திக்குகளிலும் பறந்து சென்றனர். தொலை தூரத்திலுள்ள ஒரு திராவிட மந்திரவாதியைக் கண்டுபிடித்து அரசன் முன்னிலையில் நிறுத்தினர். அரசன் ஜெயபீடன் கேட்டான்:

 

“நீ மந்திரசக்தியால் ஒரு நாகனை அகற்ற முயற்சி செய்கிறாயாமே?”

 

“ஆமாம் அது உண்மைதான்; எனது மந்திர சக்தியால் நான் எவரையும் கவர்ந்திழுக்க முடியும்” என்றான்.

 

அரசன் சொன்னான்: “அது எப்படி முடியும். காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு ஏரியும் ஆழமும் அகலமும் உள்ளது. நீ சொல்லுவது உண்மைதானா?”

 

மந்திதிரவாதி செப்பினான்:

அரசனே! என்னுடன்  ஊலூர் (Uloor/ Wular) ஏரிக்கு வாருங்கள்; நானே காட்டுகிறேன்.

 

அரசனும் மந்திரவாதியும், பரிவாரங்கள் சூழ ஸ்ரீநகர் அருகிலுள்ள ஊலூர் (இப்பொழுது இந்த அழகிய ஏரியின் பெயர் ஊலார் Wular) ஏரிக்குப் போனார்கள். மந்திரவாதி பல மந்திரங்களை உச்சாடனம் செய்தான். அம்புகளை ஏரியின் நால் திசைகளிலும் எய்தான்; சிறிது நேரத்தில் ஏரி வறண்டது. ஏரிக்கு நடுவில், சகதியில் ஒரு பாம்பு (நாகன்) சில சிறு பாம்புகள் புடை சூழ நெளிந்து கொண்டு இருந்தது.

மந்திரவாதி சொன்னான்: “பார் இப்பொழுது; சூ! மந்திரக் காளி என்று சொல்லி அவனை என் கைக்குள் கொண்டு வருகிறேன்”.

 

இதைக் கேட்ட அரசன் கோபத்துடன் அப்படிச் செய்யாதே என்று கட்டளையிட்டான். மந்திரவாதியும் அரசனின் கட்டளைக்கு அடிபணிந்து அப்படியே ஆகட்டும் என்று சொல்லி மந்திர உச்சாடனங்களை திரும்பப் பெற வேறு சில மந்திரங்களைச் சொன்னான். என்ன அதிசயம்!

 

 

ஏரி முழுதும்  மீண்டும் நிரம்பியது. அரசன், அந்த மந்திரவாதிக்கு நிறைய சன்மானங்களைக் கொடுத்து நீ போகலாம் என்றான் அரசன்.

 

மாதங்கள் உருண்டோடின. அரசனுக்கு, மஹாபத்மன் தங்க மலையைக் காட்டவில்லை. கனவிலேயே அந்த நாகனிடம், நா ன் தான் உன்னைக் காப்பாற்றி விட்டேனே; எனக்கு ஏன் இன்னும் தங்க மலையைக் காட்டவில்லை? என்று கேட்டான்.

அரசே! என்னை நீ காப்பாற்றவில்லை. என்னுடைய சந்ததியினர் முன்னே என்னைச் சக்தியற்றவனாகக் காட்டி அவமானம்தான் செய்தாய்; போகட்டும்; உனக்கு தங்கம் கிடையாது; ஆனால் தாமிரம் விளையும் ஓரிடத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி அந்த இடத்துக்குப் போகும் வழிகளை மஹாபத்மன் பகர்ந்தான்.

 

 

அவன் வாய்மொழியில் கே ட்டவாறு அரசனும் தாமிர மலையை நாடிச் சென்று நாட்டிற்குத் தேவையான கனிவளத்தைத் தோண்டி எடுத்தான்; தன் பெயர் பொறித்த கோடிக் கணக்கான தாமிர நாணயங்களை வெளியிட்டான்.

 

 

கல்ஹணர் தனது ராஜதரங்கிணியில் நாலாவது அத்தியாயத்தில் சொன்ன கதை இது.

 

இன்னொரு அத்தியாயத்தில் காஷ்மீரில் சிந்து சமவெளி பிராமணர்களுடன் திராவிட பிராமணர்கள் தங்கி இருந்ததைப் போகிற போக்கில் பாடுகிறான்.

 

கால்டுவெல், மாக்ஸ்முல்லர் போன்றோர் ஆரிய, திராவிட என்ற சொற்களுக்கு இனவெறி அர்த்தம் (அனர்த்தம்) கற்பிப்பதற்கு முன்னால் சம்ஸ்கிருத , தமிழ் இலக்கியங்களில் அப்படி அர்த்தமே இல்லை. ஆரிய என்றால் பண்பாடு உடைய, மாண்புமிகு என்ற பொருளும், வடக்கில் இமய மலையில் வாழும் முனிவர்கள் என்ற பொருளும் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. சம்ஸ்கிருதத்தில் திராவிட என்பது தென் திசையிலுள்ள தேசம் என்ற பொருளில் மட்டுமே பிரயோகிக்கப்பட்டுள்ளது. திராவிடர்கள் யார் என்ற எனது கட்டுரையில் மேல் விவரம் அறிக.

 

My old articles on Kalhana’s Rajatarangini and Kashmir

 

திராவிடர்கள் யார்? | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/திராவிடர்கள்-யார்/

 

17 Jul 2013 – பிராமணர்கள் திராவிடர்களே !! திராவிடர்கள் யார்? தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன!!

 

கல்ஹணர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கல்ஹணர்/

ராஜதரங்கிணி என்றால் என்ன? காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் நூல் ராஜதரங்கிணி — இதை கல்ஹணர் என்ற காஷ்மீரி பிராமணர் எழுதினார் …

 

 

 

ராஜதரங்கிணி அதிசயங்கள் – பகுதி 1

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1470; தேதி 9 டிசம்பர், 2014.

 

100 யானைகளை மலையிலிருந்து உருட்டிவிட்ட ஹூண மன்னன்!

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1475; தேதி 11 டிசம்பர், 2014.

 

கஜினி முகமது நாணயத்தில் சம்ஸ்கிருதம்!

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1582; தேதி 17 ஜனவரி 2015

 

அழகான காஷ்மீரி பெண்கள் பெயர்கள் !

ஆய்வுக் கட்டுரை எண் 1586; தேதி 18 ஜனவரி 2015

ராமாயணம் படித்தால் சாபம் தீரும்! ராமாயண அதிசயங்கள்! (Post No.3753)Date: 24 March 2017

 

 

Ramayana cures Curses! Rajatarangini Episode! (Post No.3754);  24 March 2017

 

Kaliyuga Calculation: Kalhana’s Blunder! Post No: 1574:  14th January 2015

 

Nehru on Rajatarangini; Article No.1465; Dated 7th December 2014.

 

Kashmiri King who attacked Tamil Nadu and Sri Lanka; Article No.1468; Dated 8th December 2014.

 

106 Kings of Hindu Kashmir!; Post No: 1577: Dated 15th January 2015

 

Beautiful Names of Ancient Kashmiri Women!; Article No 1583; Dated 17th January 2015.

 

Sanskrit in Mahmud of Ghazni Coins!; Article No 1579; Dated 16th January 2015

 

–SUBHAM—1.

கடவுளிடம் கேட்கக் கூடாத கேள்வி! (Post No.3870)

Written by S NAGARAJAN

 

Date: 2 May 2017

 

Time uploaded in London:-  6-23 am

 

 

Post No.3870

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

கடவுளும் மனிதனும்

 

கடவுளிடம் கேட்கக் கூடாத கேள்வி!

ச.நாகராஜன்

 

உலக பிரசித்தி பெற்ற விம்பிள்டன் நட்சத்திர விளையாட்டு வீரர் ஆர்தர் ஆஷ் எய்ட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டார். 1983ஆம் ஆண்டு அவருக்குச் செய்யப்பட்ட இதய அறுவை சிகிச்சையின் போது எய்ட்ஸ் தொற்று பிடித்த ரத்தத்தைச் செலுத்தியதால் அவருக்கு வந்தது இந்த எய்ட்ஸ் நோய்.

 

 

உலகெங்கிலுமிலிருந்து அவரது விசிறிகளிடமிருந்து ஏராளமான கடிதங்கள் அவருக்கு வந்து குவிந்த வண்ணம் இருந்தன. அதில் அவரது விசிறி ஒருவர் தனது கடிதத்தில், “ கட்வுள் இந்த மோசமான நோயைத் தருவதற்கு உங்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?” என்று கேட்டிருந்தார். “உங்களுக்கு ஏன் இந்த வியாதியைக் கடவுள் தர வே” என்ற அன்பரின் ஆதங்கம் ஆஷுக்குப் புரிந்தது.

 

 

அந்த விசிறிக்கு ஆஷ் இப்படி பதிலை அனுப்பினார்:

“உலகெங்குமிலிருந்து 5 கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கின்றனர்.  அதில் 50 லட்சம் பேர்கள் டென்னிஸை எப்படி விளையாடுவது என்று கற்கின்றனர். அதில் ஐந்து லட்சம் பேர்கள் உண்மையாக தொழில் ரீதியாக அதை விளையாடக் கற்கின்றனர். அதில் ஐம்பதினாயிரம் பேர் உள் வளையத்திற்குள் வருகின்ற்னர். அதில் ஐந்தாயிரம் பேர்கள் க்ராண்ட் ஸ்லாம் விளையாட வருகின்றனர். அதில் ஐம்பது பேர் விம்பிள்டனுக்கு வருகின்றனர். அதில் நான்கு பேர்கள் அரை-இறுதிக்கு வருகின்றனர். அதில் இரண்டு பேர் இறுதிப் போட்டிக்கு வருகின்றனர். அதில் ஒருவர் விம்பிள்டன் கோப்பையை வெல்கிறார். விம்பிள்டன் கோப்பையை நான் கையில் பிடித்திருந்த போது கடவுளிடம் ‘என்னை மட்டும் ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தீர்க்ள்?” என்று நான் கேட்கவில்லை. ஆகவே வ்லியில் துடிக்கும் இப்போது மட்டும் நான் கடவுளிட்ம், எதற்காக இது எனக்கு? என்று கேட்கக் கூடாதல்லவா!”

 

 

என்ன அற்புதமான பதில். இறைவனின் உள்ளப் பாங்கை அறிந்த ஒரு பக்குவி ஆர்த்ர் ஆஷ் என்பது தெரிகிறதல்லவா?

ஆதாரம் : கொல்கொத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ் TRUTH – 28-4-2017 இதழ்

தமிழ் ஆக்கம் ச.நாகராஜன்

 

இதன் ஆங்கில மூலம் கீழே தரப்படுகிறது;

One Paragraph That Explains Life !

 

Arthur Ashe, the legendary Wimbledon player was dying of AIDS caused by infected blood he received during a heart surgery in 1983.

 

From the world over, he received letters from his fans, one of which conveyed: “Why does God have to select you for such a bad disease”.

 

To this, Arthur Ashe replied: The world over fifty million children start playing tennis, five million learn to play tennis, five lakhs learn professional tennis, fifty thousand come to the circuit, five thousand reach the grand slam, fifty reach Wimbledon, four get to the semi-final and two to the finals. When I was holding the Wimbledon Cup, I never asked God, “Why me?” So, today in pain I should not be asking God: “Why me?”

 

நன்றி: TRUTH WEEKLY 28-4-2017 ISSUE