விதுரர் கூறும் விதுர நீதி – 1 (Post No.4219)

Written by S.NAGARAJAN

 

Date: 17 September 2017

 

Time uploaded in London- 5-01 am

 

Post No. 4219

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மஹாபாரதம்

விதுரர் கூறும் விதுர நீதி – 1

ச.நாகராஜன்

 

மஹாபாரதம் ஒரு பெரிய நீதிக் களஞ்சியம்.

அதில் அற்புதமான ஒரு பகுதியாக அமைகிறது விதுரர் திருதராஷ்டிரனுக்குக் கூறும் நீதி உபதேசம்.

 

 

இந்த இருவருக்கும் இடையேயான உரையாடல் விதுர நீதி என்று அழைக்கப்படுகிறது; காலம் காலமாக பெரியோர்களால் வாழ்வாங்கு வாழும் வழியாக விதுர நீதி உபதேசிக்கப்பட்டு வருகிறது.

உத்யோக பர்வத்தில் ப்ரஜாகர பர்வத்தில் வருவது விதுர நீதி.

எந்த விதமான உடன்பாட்டிற்கும் வர முடியாது என்ற தன் உறுதியான நிலைப்பாட்டை துரியோதனன் எடுத்து, ஊசி அளவு இடம் கூட உங்களுக்குத் தர மாட்டேன் என்று பாண்டவர்களிடம் கூறி விடுகிறான்.

 

 

பாண்டவர்களுக்கும் தனது குமாரனான துரியோதனனுக்கும் நடக்கும் இந்த சண்டையை எண்ணி திருதராஷ்டிரனால் தூங்கவே முடியவில்லை.

 

உடனே அவன் சகல நீதிகளையும் அறிந்த விதுரரை வருமாறு அழைப்பு விடுக்கிறான்.

 

அப்போது விதுரர் நீதி மொழிகளைப் புகல்கிறார்.

புரிந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டமான புதிர் போன்ற பாணியில் கூட அவரது உரை அமைகிறது.

 

 

காலம் காலமாக உரையாசிரியர்கள் இதற்குத் தகுந்த விளக்கம் சொல்லி வந்துள்ளதால் நாம் விதுரர் கூறியதை உணர முடிகிறது.

எடுத்துக் காட்டாக ஒரு சுலோகத்தை இங்கே பார்க்கலாம்.

 

 

ஏகயா த்வே விநிச்சித்ய த்ரீந் சதுர்பிந் வசே குரு I

பஞ்ச ஜித்வா விதி த்வா ஷட் சப்த ஹித்வா சுகீ பவ II

 

 

இதன் பொருள்:

ஒன்றால் இரண்டை ஜயித்து நான்கினால் மூன்றை வசமாக்கிக் கொள். ஐந்தை ஜயித்து ஆறை அறிந்து, ஏழை விட்டு சுகமாக இரு.

 

இங்கு ஒன்று, இரண்டு, மூன்று போன்றவற்றிற்கான பொருள் விளங்கவில்லை.

 

ஆனால் உரையாசிரியர்கள் தக்க விளக்கத்தைத் தந்துள்ளனர்.

ஒன்றால் – ஒரே உறுதியான புத்தியால்

இரண்டை – செய்யத் தகுந்தது, செய்யத் தகாதது  இவ்விரண்டையும் ஆய்ந்து தீர்மானித்து’

 

 

மூன்றை – நண்பர், விரோதி, நட்பும் பகையும் இன்றி நடு நிலையில் இருப்போர் ஆகியோரை

நான்கினால் – சாம், தான, பேத, தண்டத்தால்

ஐந்தை ஜயித்து  – ஐந்து புலன்களை ஜயித்து

 

ஆறை – சந்தி, விக்ரஹம், யானம், ஆஸனம்,த்வைதீ பாவம், ஸமாஸ்ரயணம் என்ற ராஜ நீதியில் விதிக்கப்பட்ட ஆறு உபாயங்களை அறிந்து

 

ஏழை – பெண்களிடம் மோகம், சூதாட்டம், வேட்டை, குடி, கடுஞ்சொல், கொடிய தண்டனை, பொருளை வீணாக செலவழித்தல், ஆகிய ஏழு குற்றங்களையும்

அறிந்து சுகமாக இரு.

 

 

இப்போது நன்கு பொருள் விளங்குகிறது.

இது போன்ற ஏராளமான நீதி மொழிகளை விதுரர் மனித குலத்தின் நன்மைக்காகத் தருகிறார்.

 

அதாவது மஹாபாரதத்தை இயற்றிய வியாசர் தருகிறார்.

இன்னும் சில விதுர நீதிகளை ப் பார்ப்போம்

****

 

Comets: Shakespeare also believed Hindu Views (Post No.4218)

Written by London Swaminathan

 

Date: 16 September 2017

 

Time uploaded in London- 18-48

 

Post No. 4218

 

Pictures are taken from various sources; thanks.

 

 

In Sangam Tamil literature and Hindu epic literature lot of references to comets (dhumaketu) are vailable.; all those references fear the evil effect of the comets. Ancient tamils used both Sanskrit word Dhumam (smoke) and the lieral translation of Dhema Ketu + Pukaik kodi in Purananuru.

Shakespeare also had the same belief about comets in his drama Julius Caesar, Calpurnia says

“When beggars die, there are no comets seen; the heavens themselves blaze forth the death of princes” Julius Caesar 2-2-30/31

 

Meaning:

Calpurnia, wife of Julius Caesar, begs her husband not to venture out on this morning, the ides of March. Caesar has spent a restless night and there is a wild storm raging. Calpurnia has had disturbing dreams, as well; crying out three times in her sleep, “They murder Caesar!” She begs him to stay home. Caesar sends word to the priests and they, too, return a warning that Caesar must stay home. Calpurnia is very upset , especially because of the strange events of the preceding evening: reports that a lioness was seen giving birth in the streets of Rome, the dead rising from their graves, warriors fighting in the clouds, reports of horses neighing and dying men groaning, ghosts shrieking. Comets were seen during the night, which Calpurnia interprets as a prophecy of the death of a prince.

 

Shakespeare had similar views about eclipse which is also in Tamil and Sanskrit books.

Tamil Belief

Meteor
Meteors: Kudalur Kizar (Puram 229) described the effect of a meteor he and his colleagues saw in the sky. They predicted that the Chera King Mantharan Ceral Irumporai would die in seven days time and it came true.

Comets: Like any ancient community Tamils were also afraid of the comets. They used the Sanskrit word ( Dhuma ketu) and Tamil word (Pukai Kodi) for it. Reference: Puram 117and 395 Also in post- Sangam Tamil epic Manimekalai 6-64, 7-74, Silappadikaram 10-102

 

Tamil Poet Bharati On Halley’s Comet
1.Like a palm tree set on a millet plant,
With a growing tail on a little star,
You blaze forth in kinship with eastern moon
Oh, lustrous comet! I bid you welcome

2.You range over countless crores of Yojanas
They say your endless tail wrought of gas
The softness of which is indeed peerless

  1. They say that yourtail touches the earth too
    An you fare forth with no harm to the poor;
    The wise talk of your myriad marvels.
    ( I have given only 3 stanzas from 7 stanzas of translation by Dr T N Ramachandran)

Varahamihira on Comets:

 

  1. Dhumaketu | Tamil and Vedas

tamilandvedas.com/tag/dhumaketu

Posts about Dhumaketu written by Tamil and Vedas. … is considered as Dhumaketu – a portentous comet … //tamilandvedas.com/2015/05/13/comets-in-brhat-samhita/

 

 

  1. ISON comet | Tamil and Vedas

tamilandvedas.com/tag/ison-comet

Posts about ISON comet written by Tamil and Vedas. … Dhumaketu in Sanskrit means Lord Ganesh and the … //tamilandvedas.com/2013/01/05/spectacular-comet-show-in …

 

 

 

மாக்ஸ்முல்லர் மண்ணைக் கவ்வினார்! அணுசக்தி விஞ்ஞானிகள் செமை அடி! (Post No.4217)

Written by London Swaminathan

 

Date: 16 September 2017

 

Time uploaded in London- 16-51

 

Post No. 4217

 

Pictures are taken from various sources; thanks.

 

 

வேதத்தை மொழிபெயர்த்து வெளியிட்ட மாக்ஸ்முல்லருக்கு பாம்பு போல இரட்டை நாக்கு; சில இடங்களில் வேதத்தைப் புகழ்வார்; சில இடங்களில் வேதத்தை இகழ்வார்; அவர் செய்தது கூலி வேலை. முதலில் கிழக்கிந்திய கம்பெனியும் அப்புறம் இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களும் அவருக்கு கூலி கொடுத்தன. அதாவது கூலிக்கு மாரடித்த குப்புசாமி! கூலி போட்டவர்களின் நோக்கம் என்ன? எப்படியாவது இந்துமதத்தை மட்டம் தட்ட வேண்டும் என்பதே. ஆனால் அவர்கள் பாச்சா பலிக்வில்லை. வேதத்தில் உள்ள துதிகள் உலகையே வியக்கவைத்தன. பிக் பேங்(Big Bang) பற்றியும் உலக சமாதானம் பற்றியும், பூமித் தாய் பற்றியும், நதிகள் பற்றியும், இயற்கையின் விந்தைகள் பற்றியும், காலைக் கதிரவனுக்கு முன்னர் தோன்றும் உஷா தேவி பற்றியும்’ அளவற்ற வளம் படைத்த அதிதி தேவி பற்றியும், மாயாஜாலம்  புரிந்து கடலில் சென்றவர்களை மீட்ட அஸ்வினி தேவர்களைப் பற்றியும், அக்கினி தேவன், வௌணன், உலக மஹா வீரன் இந்திரன் ஆகியோர் பற்றியும் சரமா என்ற நாய் பற்றியும், கணித வரிசைப்படி யாப்பு இலக்கணம் ( மீட்டர்) பற்றியும், டெஸிமல் ஸிஸ்டம் பற்றியும் வேத கால ரிஷிகள் பாடிய பாடல்கள்- அதுவும் மாக்ஸ்முல்லர் கணக்குப்படி 3200 ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல்கள் எல்லோர் மூக்கிலும் விரல்களை வைத்து வியக்க வைத்தன.

 

 

துப்புகெட்ட மாக்ஸ்முல்லர் ஒரு தப்புக் கணக்குப் போட்டார். வேதத்துக்கு காலம் நிர்ணயிக்கிறேன் என்று கடலாழம் தெரியாமல் காலைவிட்டார்; உலகில் எல்லா மொழிகளும் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும். புத்தமத வாசனையே இல்லாத உபநிஷதங்களுக்கு கி.மு 800 என்று காலம் சொல்வேன். அதற்கு முந்தைய ஆரண்யக, பிராமண நூல் களுக்கு கிமு.1000 என்று காலம்  சூட்டுவேன்; அதற்கு முந்தைய சம்ஹிதையிலுள்ள துதிகளுக்கு கி.மு 1200 என்று முத்திரை குத்துவேன் என்றார்.

 

மொழிகள் மாறுமென்பது உண்மையே. புற நானூற்றுத் தமிழ் இன்று இல்லை; தொல்காப்பிய விதிகளை நாம் இன்று பின்பற்றுவதில்லை. ஆனால் மண்டு மாக்ஸ்முல்லர் தெரிந்தும் மறைத்த உண்மை- வேத மொழி மாறாதது; மாற்ற முடியாதது; அதில் இலக்கணப் பிழைகள் இருந்தாலும் ரிஷிகள் சொன்னது சத்தியம் என்று சொல்லி யாரும் அதை மாற்றிவிடக்கூடாது என்பதற்காக உலகம் வியக்கும் அதிசயமான கண பாடம், ஜடா பாராயணம் என்றெல்லாம் சொல்லைப் புரட்டிப் புரட்டி பாடம் கற்பித்தனர். உலகில் இந்த அற்புதத்தை வேறு எந்த மொழியிலும் காண முடியாது.

அது மட்டுமல்ல; திருட்டு மாக்ஸ்முல்லர், நுழை நரிக்குப் பிறந்த தந்திரசாலி மாக்ஸ்முல்லர், இன்னொரு உண்மையையும் மறைத்தார். அவர் சொன்ன 200 ஆண்டு மொழிமாற்றக் கணக்கை வேறு எந்த பழைய மொழிக்கும் ஒப்பிட்டுக் காட்டவில்லை. எடுத்துக் காட்டாக தமிழ இலக்கியத்தில  இந்தக்கொள்கையை புகுத்தினால் பழைய நூல்களின் காலம் உல்டா (அந்தர் பல்டி) அடிக்கும். சிலப்பதிகாரம், பொருள் அதிகாரம், திருக்குறள் அதிகாரம் ஆகியன ஆறாம் நூற்றாண்டுக்குத் தவ்விக் குதிக்கும்! ஆக மாக்ஸ்முல்லர் போட்டது குத்து மதிப்பான பால்காரிக் கணக்கு!

 

மாக்ஸ்முல்லர் கி.மு 1200 என்று ரிக் வேதத்துக்கு முத்திரை குத்தியவுடன் அவர் காலத்தில் வாழ்ந்த ஏனைய வேதம் படித்த வெள்ளையர்கள் அவர் மீது பாய்ந்து குதறினர். உடனே அவர் ‘ஜகா’ வாங்கினார். நான் சொன்னது இதற்கும் கீழாக எவரும் ரிக் வேத காலத்தைக் குறைக்க முடியாது என்பதே; உண்மையில் ரிக்வேத காலத்தை எவரும் சொல்ல முடியாது. அது 5000 ஆண்டுகளுக்கும் முன்னதாக இருக்கலாம் என்று பின்வாங்கினார்.

விஞ்ஞானிகள் நிரூபணம்

 

கடந்த 25 ஆண்டுகளில் பாபா அணுசக்தி ஆய்வுக் கேந்திர விஞ்ஞானிகள், நிலத்தடி நீர்க் கமிஷன் விஞ்ஞானிகள், பல்வேறு பல்கலைக்கழக ஆய்வுத் துறை விஞ்ஞானிகள் ஆகியோரும், விண்வெளி விண்கல புகைப்படமும் காட்டிய பேருண்மை, மாக்ஸ் முல்லருக்கும் இந்துக்களை மட்டம் தட்டும் மார்கசீய வாதிகளுக்கும் செமை அடி– அடி மேல் அடி — வகையடி- தொகையடி– கொடுத்தது. அதாவது ரிக்வேதம் 50-க்கும் மேலான இடங்களில் விதந்து ஓதும் பிரம்மாண்டமான, கடல் போன்ற சரஸ்வதி நதி கி.மு 2000க்கு முன் வட மாநிலங்க களை ள வளப்படுத்தி பாய்ந்தது என்றும் அது மறைந்த பின்னரே ஹரப்பா மொஹஞ்சதாரோ நாகரீகம் உச்ச கட்டத்தை அடைந்தது என்றும் காட்டினர்.

 

இது மேலும் ஒரு புதிரைப் போட்டது. சரஸ்வதி நதி ஆய்வுக்கு முன்னர், ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களையும் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு முறையில் கால வரிசைப்படுத்தினர். இப்பொழுது அவர்களுக்கும் அடி விழுந்தது. ஏனேனில் சரஸ்வதி நதியைப் புகழும் பகுதிகள் பல மண்டலங்களில் பரவி விரவிக் கிடக்கின்றன. ஆகவே அவை அனைத்தும் கி.மு.2000க்கு முன்னரே — அல்லது மிகமிக முன்னரே பாடப்பட்டிருக்க வேண்டும். நல்ல ஆராய்ச்சியளர்கள் சரஸ்வதி நதிக் குறிப்பு களைக் கொண்டே வேதத்துக்கு காலம் நிர்ணயிக்க முடியும்.

 

போகிறபோக்கைப் பார்த்தால் வியாசர் கி.மு 3102 வாக்கில் (கலியுக துவக்கம்) வேததங்களை நான்காக வகுத்ததாக இந்துக்கள் நம்புவது விஞ்ஞான உண்மையே என்று முடிவு செய்து விடுவார்கள்.

 

 

வானவியல்

வேதத்தில் உள்ள வானவியல் குறிப்புகளைக் கொண்டு ரிக்வேதத்துக்கு கி.மு4000 என்று திலகரும், கி.மு 4500 என்று ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் கால நிர்ணயம் செய்தனர். இதை ப்யூலர், பார்த், வின்டெர்நீட்ஸ், ப்ளூம்பீல்ட் ஆகியோர் ஏற்றதாகவும் அவர்களுடைய கணக்கீட் டில் எந்த தவற்றையும் எவரும் காணவில்லை என்றும் திரு சட்டோபத்யாயா கூறினார். பேராசிரியர் சென் குப்தா பழங்கால இந்திய காலவரிசை என்ற நூலில் ரிக் வேதத்துக்கு கி.மு 4000 என்று காலம் காட்டினார்.

 

ஆக பாபா அணுசக்தி கேந்திர நிலத்தடி நீர் ஆய்வு, ஐசடோப் ஆய்வு, கார்பன் 14 தேதி நிர்ணயம் — எல்லாம் சரியே; அவை அனைத்தும் சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முன்னரே சரஸ்வதி நதி ஓடியது என்று காட்டுகின்றன.

 

 

இந்தியாவுக்கு 3 சாபக்கேடுகள்/ பரிசுகள்

 

சீன, எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க, மாயன் நாகரீகத்துக்கும் இந்திய நாகரீகத்துக்கும் ஒரு பெரிய வேறு பாடு உண்டு.

 

இந்திய நாகரீகத்தை தடயங்களை மூன்று விஷயங்கள் அழித்தன

 

பருவக்காற்று- தென் மேற்குப் பருவக் காற்றும் வடகிழக்குப் பருவக் காற்றும் ஆண்டுதோறும் மழையைக் கொட்டி, நதிகளை வெள்ளப் பெருக்கெடுக்க வைத்து பல ஊர்களை அழித்தன. நாம் அசோகர் காலத்துக்கு முன்னர் கல்லில் எதையும் வடிக்காததால் தடயங்கள் அழிந்தன. பருவக்காற்றுகளை இயற்கை தந்த பரிசு என்றும் சொல்லலாம். ஜீவநதிகளால் பாசனம் பெருகியது

இரண்டாவது சாபக்கேடு; நில அதிர்ச்சி/ பூகம்பம்

 

நமது காலத்திலேயே தென்னாட்டில் தனுஷ்கோடி கடலுக்குள் போனதைப் பார்த்தோம். நேபாளக் கோவில் கோபுரங்கள் உருண்டோடி மொட்டைக் கோபுரம் ஆனதைக் கண்டோம். 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு ஒரு முறை உண்டாக்கும் மாபெரும் பூமி அதிர்ச்சி நதிகளைப் பிறட்டி,உருட்டி அட்டஹாசம் செய்தன. ஆகையால் நமது நாகரீக தடயங்கள் அழிந்தன. மொஹஞ்சதாரோவில் கல்லில் முத்திரை களை உருவாக்காவிடில் நாம் முக்கிய தடய ங்களை  இழந்திருப்போம்.

 

மூன்றாவது சாபக்கேடு வெளி நாட்டினரின் படை எடுப்பும் அவர்களின் அழிவு வேலைகளும் ஆகும். நமது கண்ணுக்கு முன்னாலேயே முஸ்லீம் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானிலுள்ள பாமியன் குகை புத்தர் சிலைகளை — மிக உயரமான புத்தர் சிலைகளை –அழித்ததைக் கண்டோம். கிமு ஆறாம் நூற்றாண்டு டேரியஸ் (Darius) காலம் முதல் 2600 ஆண்டுகளாக இந்தியா தாக்குதலுக்கு உள்ளானது; கஜினி முகமதுகளும் மாலீக்காபூர்களும் உலகிலேயே செல்வச் செழிப்புள்ள நாடு இந்தியா  என்பதை அறிந்து கொள்ளையோ கொள்ளை என்று அடித்துச் சென்றனர். இது வெள்ளையரின் கோஹினூர் வைரக் கொள்ளை வரை நீடித்தது.

 

 

உலக மஹா எஞ்சினீயர் பகீரதன், அகத்தியன்!

 

இவ்வாறு சரஸ்வதி நதி மஹாபாரத காலத்திலேயே (கி.மு3102) வற்றி பூமியில் மறையவே கங்கை என்னும் நதி புனிதம் பெற்றது. அதன் தடைபட்ட பாதையை மாற்றி அதை உத்திரப் பிரதேச, வங்காள பூமியில் திசை திருப்ப பல இந்து மன்னர்கள் முயன்றனர். இறுதியில் உலகப் புகழ்பெற்ற — உலகின் முதல் நதி நீர் பொறியியல் வல்லுனன்– பேரரசன் பகீரதன் அந்த கங்கை நதியை மாற்றினான். அதைக் கடல் வரை- வங்காள விரிகுடா சாகர் தீவு வரை பாய வைத்தான். அவனது எஞ்சினீயரிங் வேலலைகளை நாம் இன்றும் புராணக் கதைகளாகப் படிக்கிறோம். இதைப் பார்த்து அகத்தியர் என்னும் எஞ்சினீயர்/ முனிவர் காவிரி நதியையும் திசை திருப்பி கர்நாடகம், தமிழ் நாடு வரை பாயவைத்தார். விந்திய மலை மீது முதல் முதல் நில மார்க்க சாலைகளைப் போட்டார் அகத்தியர். இதை விந்திய கர்வபங்கம் என்ற புராணக்  கதைகளாக நாம் படிக்கிறோம். மூன்றாவதாக தென் கிழக்காசியாவுக்கு கடல் வழி மூலம் இந்து நாகரீகத்தை எடுத்துச் சென்றார். இதனால் அவரது சிலைகள் தென் கிழக்காசியா முழுதும் பரவிக்கிடக்கின்றன.

மார்கஸீயத் திருடர்கள்!

இந்திய கல்வித்துறை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டு அடிவருடிகள்– மார்கஸீயத் திருடர்கள் கைகளில் இருந்ததால் பல தொல்பொருத்துறை உண்மகைள் எழுதப்படவில்லை. போர்னியோவில் மனிதரே நுழைய முடியாத காட்டில் நாலாம் நூற்றாண்டு மூலவர்மனின் யூபஸ்தம்பம் இருந்தது. துருக்கி-சிரியா எல்லையில் பொகஸ்கோய் நகரத்தில் வேத மந்திரம் எழுதிய க்யூனிபார்ம் கல்வெட்டு கண்டுபித்தது, தசரதன், பிரதர்தனன் முதலிய பெயர்களில் சிரியா-துருக்கியை இந்து மன்னர்கள் ( மிடன்னி நாகரீகம்) ஆண்டது முதலியவைகளை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் தனது உரைகளில் 75 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டும் கூட கல்வித்துறை கயவர்கள் நமது சரித்திரப் புத்தகத்தில் அதைச் சேர்க்கவே இல்லை. வெள்ளைத் தோல் அறிஞர்களும் மிட்டனி நாகரீகம் குறித்தோ இந்திரன், மித்திரன், வருணன் ஆகிய வேத கால தெய்வங்களின் பெயரில் உடன்படிக்கை கைச்சாத்திட்டதையோ பேசாமல் ‘கப் சிப்’ என்று வாய் மூடி இருந்தனர்.

 

கிக்குலி என்பவன் துருக்கி நாட்டில் (துரகம்= குதிரை) வடமொழியைப் பயன்படுத்தி கி.மு 1400ல் குதிரைப் பயிற்சி கொடுத்த நூல் கிடைத்துள்ளது.

 

இது தவிர எகிப்திய மன்னன் மூன்றாவது அமெனோபிஸ்ஸுக்கு தசரதன் மகளை மணம்புரிவித்து, அவன் எழுதிய தசரதன் கடிதங்கள் இன்னும் எகிப்தில் உள்ளன. இவை அனைத்தையும் காங்கிரஸ் ஆட்சிக்கால கயவர்கள்- திருடர்கள் – வரலாற்றுப் புத்தகத்தில் சேர்க்காமல்- மார்கஸீயவாதிகள் எழுதிய அசிங்கங்களையும் வெள்ளைக்காரர்கள் தங்களை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து எழுதிய விஷயங்களையும் மட்டும் சிலபஸில் சேர்த்தனர்.

 

ராமாயாண  தசரதனையும் இந்த தசரதனையும் குழப்பிக்கொண்டு விடாதீர்கள் மாமன்னர் அசோகனின் பேரன் பெயர் கூட தசரதன்தான்.

 

மேற்கூறிய கட்டுரையின் சாரம்:–

 

பாபா அணுண்சக்தி ஆராய்ச்சியாலரின் அறிவியல் கூற்றுகளும்

திலகர் ஜாகோபியின் வானவியல் கூற்றுகளும்

பொகஸ்கோய் க்யூனிபார்ம் கல்வெட்டு தரும் தொல்பொருத் துறை ஆதாரங்களும்

எகிப்திலுள்ள தசரதன் கடிதங்களும்

ரிக் வேதத்திலுள்ள சரஸ்வதி நதியின் பிரம்மாண்ட வர்ணனைகளும்

 

மாக்ஸ்முல்லரின் வேத காலக் கொள்கைகளைப் பொடிப் பொ டியாக்கி பொய்யாய் பழங்கதையாய்ச் செய்துவிட்டன.

 

வேத காலம் என்பது வியாசரின் காலத்துக்கும் (கி.மு.3102) முந்தையது என்பது நிரூபிக்கப்ப ட்டுவிட்டது.

 

வேத காலத்துக்கு இந்திய அறிஞர்களால் கொடுக்கப்பட்ட தேதி

ஜி.கே பிள்ளை- கி.மு4000 முதல் கி.மு 3000 வரை

ராஜேஸ்வர் குப்தா- கி.மு 4000

உ.வி.ராவ்- கி.மு.5000

 

வெளிநாட்டு அறிஞர்கள்

எஹ்.டி.கிரிஸ்வால்ட்- கிமு 1200 முதல் கி.மு 4000

டி.பர்ரோ- கி.மு 1200

 

இவர்களுக்கு எல்லாம் அ ண்மை க் கால சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சிகள் தெரியாததால் அறியாத பிள்ளைகளை மன்னித்துவிடலாம்.

 

சிலர் குதிரை, இரும்பு பற்றிய குறிப்புகள் இருப்பதால் வேதங்களை கி.மு1500 க்கு முன்னர் வை க் கமுடியாதென்று வாதிடுவர். ஆனால் அந்த குதிரைக்கும் இரும்புக்கும் தேதி நிர்ண யிப்பது வெள்ளைத் தோல், உள் நோக்கப் பேர்வழிகள். இவை இரண்டும் இந்துக்களின் கண்டுபிடிப்பு; உலகம் முழுதும் சென்றது இந்தியாவில் இருந்துதான். நாம் நிர்ண யிக்கும் தேதியே சரி. மேலும் அஸ்வ (குதிரை) அயஸ் (பொன்) என்பது பல பொருள் உடைத்து.

 

இதையெல்லாம்விட மிக முக்கிய சான்று சங்கத் தமிழில் உள்ளது. புற நானூற்றின் முதல் பாடல் முதல் கடடைசி பாடல் வரை வேதக் குறிப்புகள், வேதச் சடங்கு குறிப்புகள் உள. இவை 2200 ஆண்டுகளுக்கு முந்தையவை. நாட்டில் இமயம் முதல் குமரி வரை – போர்னியோவின் மூல வர்மன் ஆட்சி வரை- வியட் நாமின் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் வரை ஒரே கலாசாரம் 2000 ஆண்டுகளுக்கு முன் இருக்க வேண்டும் என்றால்– போக்குவரத்தும் இன்டெர்நெட்டும் மொபைலும் இல்லாத காலத்தில் பரவ வேண்டுமானால் – அதற்கு 1000 அல்லது 1500 ஆண்டுகளாவது ஆகும்.

எல்லாவித தடயங்களையும் சான்றுகளை யும் ஒட்டு மொத்த முகமாக நோக்குமிடத்து பாபா அணு சக் தி ஆய்வுகளும் வியாசரும் சொல்லுவதே சரி.

TAGS: மாக்ஸ்முல்லர், வேத காலம், தேதி

–சுபம்—

சம்ஸ்கிருதத்தில் இரு புதிர்க் கவிதைகள்! (Post No.4216)

Written  by S.NAGARAJAN

 

Date: 16 September 2017

 

Time uploaded in London- 5-56 am

 

Post No. 4216

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

சம்ஸ்கிருதத்தில் இரு புதிர்க் கவிதைகள்!

 

ச.நாகராஜன்

 

சம்ஸ்கிருத இலக்கியத்தில் ஆயிரக்கணக்கான புதிர்க் கவிதைகள் உள்ளன.

 

இவற்றை விடுவிப்பதில் அனைவருக்கும் ஒரு ஆனந்தம்.

இரு கவிதைகளை மட்டும் இங்குக் காண்போம்.

 

உரசி முரமித: கா காடமாலிங்கிதாஸ்தே

  சரஸிஜமகரந்தாமோதிதா நந்தனே கா I

கிரிசமலகுவர்ணைரனர்வாக்யாதிசங்க்யைர்

  குருமிரபி க்ருதா கா சந்தஸாம் வ்ருதிரஸ்தி II

 

 

சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்ற சுபாஷிதத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள கவிதை இது.

இதன் பொருள்:

கிருஷ்ணரின் மார்பில் அவரை ஆரத் தழுவி இருப்பது யார்?

மாலினி! (1)

 

நந்தனா தோட்டத்தில் தாமரைகளின் மது யாருக்கு வழங்கப்பட்டது?

மாலினி! (2)

 

பெரிய மலைகளின் எண்ணிக்கையால் குற்றோசை உடைய அசைகளாலும், கடல்களின் எண்ணிக்கையால் நெடிலோசை நிறைந்த அசைகளாலும் எந்த சந்தம் இருக்கிறது?

மாலினி! (3)

 

 

  1. மலர் மாலை
  2. ஆகாய கங்கை அல்லது ஒரு பூக்காரி
  3. மாலினி என்ற சந்தம்

ஆங்கிலத்தில் இந்தக் கவிதைக்கான மொழிபெயர்ப்பை A.A.R. இப்படி வழங்குகிறார்:

Who remains on the chest of Krishna embracing him tightly? (Malini 1)

Who is rendered fragrant by the honey of lotuses in the Nandana garden?

(Malini 2)

With short syllables of the number of the great mountains and with long ones of the number of seas, which metre is made up? (Malini 3)

  1. Flower – garland
  2. A female florist or heavenly Ganga
  3. Malini metre.

*

உபௌ ரம்பாஸ்தம்பாவுபரி விபரீதௌ கமலயோஸ்

    ததங்கர்வே ரத்னாஷ்மஸ்தலமய துரூஹம் கிமதி தத் I

தத: கும்போ பஸ்சாத் பிஸகிஸலயே கந்தலமயோ

    ததன்விந்தாவிந்தீவரமதுகரா: கிம் புனரிதம் II

 

 

பகதத்தரின் சுக்திமுக்தாவளியில் உள்ள கவிதை இது.

இது அமைந்துள்ள சந்தம் ஷிகாரிணி

இதன் பொருள்:

இரண்டு தாமரை மலர்களின் மேல் (2) இரு வாழைத் தண்டுகள் (1) வெவ்வேறு விதமாக வைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மேலே ரத்தினக் கல்லென்னும் அகலமான பிரதேச்ம் உள்ளது.(3)

 

 

பிறகு அதன் நுண்ணிய தன்மையால் இன்னதென்று ஊகிக்க முடியாத ஒன்று இருக்கிறது. (4)

பின்னர் இரு கலசங்கள் உள்ளன. (5)

அதன் பிறகு அடுத்து இரு வாழைத்தண்டுகள் உள்ளன.(6)

பின்னர் மிருதுவான குருத்து (7)சந்திரனுடன் (8)வருகிறது.

அதன் மேல் இரு நீல அல்லி மலர்கள் உள்ளன. (9)

அத்துடம் தேனீக் கூட்டம் (10) வேறு உள்ளது.

இது என்ன? (11)

 

 

  1. தொடைகள்
  2. பாதங்கள்
  3. ப்ருஷ்ட பாகம்
  4. மெல்லிய இடை
  5. மார்பகம்
  6. கைகள்
  7. கழுத்து
  8. முகம்
  9. இரு கண்கள்
  10. கூந்தல்
  11. அழகிய பெண்

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கீழே காணலாம்: (மொழியாக்கம் A.A.R)

Two banana –stems (1) placed differently  over two lotuses (2) , above these there is the broad region of a gem-slab  (3), and then something (4) which is difficult to guess (due to smallness), then are the two pots (5), and next come two stalks (6), then the tende sprout (7), with the moon (8) over which are two blue lilies (9) and a swarm of bees (10) – What can this be (11)  – Translation by A.A.R.

 

 

  1. Thighs
  2. Feet
  3. Hips
  4. Thin waist
  5. Bosom
  6. Hands
  7. Neck
  8. Face
  9. Eyes
  10. Tresses
  11. A (beautiful woman)

 

சம்ஸ்கிருத இலக்கியத்தில் இருக்கும் ஆயிரக் கணக்கான புதிர்க் கவிதைகளை ரசிப்பது ஒரு வாழ்நாள் இலக்கிய அனுபவமாகவே இருக்கும்.

இன்னும் சிலவற்றைப் பின்னர் காண்போம்.

***

 

IMPORTANCE OF KRITHIKA NAKSHATRA (Post No.4215)

Written by London Swaminathan

 

Date: 15 September 2017

 

Time uploaded in London- 19-32

 

Post No. 4215

 

Pictures are taken from various sources; thanks.

 

 

The following extract from Satapata Brahmana (dated 850 BCE by foreigners) shows that even before the Greeks wrote their literature we have all the stars mentioned in our Vedic literature. So foreigners claim that Hindus borrowed astronomy from the Greeks is  false. They themselves contradict their dates. They believed that Greeks contact came only after Alexander’s invasion.

 

The following piece shows also how complicated and symbolic is the language of the Brahmanas.

 

it is interesting to note that Tamil Sangam literature says that the Tamils celebrated the marriages under the star Rohini (see my earlier research article).

 

It is also noteworthy that Agni, Krithika Star (the Pleiades) and Lord Kartikeya are always linked in later Puranas. This has its  origin in the Vedas. in short, Hindu astronomy is older than the Greek literature. But in the time of Aryabhata, some new elements were introduced in to Hindu astronomy. Since we have lost enormous amount of Vedic literature we may never know who proposed those things first.

 

Vedic astronomers calculated that Pleiades was rising star at the horizon around 2100 BCE. So this will help us to date the Satapata Brahmana.

 

“The priest may set up fire (Yaga fire) under the Pleiades (Krithika nakshatra) for the Pleiades are Agni’s constellation (asterism) so that if he sets up fire under Agni’s constellation he will bring about a correspondence between his fires and the constellation.

 

For this reason be may setup his fires under the Pleiades. The Pleiades are the most numerous  of asterisms; hence he thereby obtains an abundance. For this reason he may set up his fires under the Pleiades. And again they do not move away do move from the eastern quarter. Thus his two fires are established in the eastern quarter; for this reason be may up his fires under The Pleiades.

 

On the other hand it is argued why he should not set up fires under the Pleiades originally the later ( the Pleiades) were the wives of the Bears (Rikshas or the Ursa Major = the great bear constellation). for the seven rishis (Saptarishi) were in former times called Rikshas. They (the Pleiades) were however precluded from intercourses with their husbands, for the latter ( the Seven Rishis) rise in the north and the  the Pleiades  in the east.

 

Now it is a misfortune for one to be precluded from intercourse with his wife. He should set fires under the Pleiades. He therefore should not set up fires under the Pleiades lest he should thereby be precluded from intercourse. But he may nevertheless set up his fire under the Pleiades; for Agni doubtless is their mate, and it is with Agni that they have intercourse.

 

 

for this reason he may set up fire under the Pleiades’ He may also set up his fire under the  constellation of Rohinii for under Rohini it was that Prajapati, when desirous of progeny, set up his fires. He created beings, and the creatures produced by him remained invariable and constant, like red cows ;hence the cow like nature of Rohini. Rich in cattle and offspring therefore he becomes- whosoever, knowing this, sets up fires under Rohini. Under Rohini indeed, the cattle set up their fires thinking that they may attain to (ruh) the desire or love of men. They did attain the desire of men; and whatever desire the cattle then obtained in regard to men, that same desire he (the sacrificer) obtains in regard to cattle, whosoever  knowing this, sets up his fire under Rohini.

 

Satapata Brahmana . 2.1-2-1-7

 

Ursa Major= Saptarishi= Great Bear

 

xxx

In the time of Alexander the Great the Hindus did not claim greater antiquity than 6777 B. c. The mode of reckoning adopted by the Hindus by which they got the Yugas is very simple. Given the precession of 49-8 seconds as determined by Hipparchus, the period of one revolution through the whole circle of 360 degrees would be  26,024 and16/166 (fraction) years. Getting rid of the fraction in the usual way by multiplying by 166 and adding the 16 we have 4,320,000 years – a Yuga.   The same result is obtained by Parasara;s precession of 46-5 or Aryabhata’s 46-2

 

-Subham–

கழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம்; இந்திரன் மகன் பற்றி சுவையான கதை (Post No.4214)

கழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம்; இந்திரன் மகன் பற்றி சுவையான கதை (Post No.4214)

 
Written by London Swaminathan

 

Date: 15 September 2017

 

Time uploaded in London- 6-33 am

 

Post No. 4214

 

Pictures are taken from various sources; thanks.

 

 

இந்திரலோகத்தில் ஒரு கொண்டாட்டம்; எல்லா தேவர்களும் வந்திருந்தனர். ஆட்டம் பாட்டம் அதிகரித்தது; அப்சரஸ் என்னும் அழகிய தேவதைகள் நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். இந்திரனுக்கு ஒரு மகன் உண்டு. அவன் பெயர் கந்தர்வசேனு. அவன் ஒரு அப்சரஸ் மீது கை வைக்கவே இந்திரனுக்கு மஹா கோபம்.

“சீ! கழுதை! நீ பூலோகத்தில் கழுதையாகப் போகக்கடவது” என்று சபித்துவிட்டார்.

 

 

உடனே வாயுதேவன், அக்கினி தேவன், யமன் , சூரியன், வருண தேவன் முதலானோர், ” அடக் கடவுளே! இளம்சிட்டு அறியாமல் பருவக் கோளாறினால் செய்த செயலுக்கு இவ்வளவு கடும் தண்டனையா? ரத்து செய்யுங்கள்” என்று மன்றாடினர்.

 

ஆனால் உலகிலேயே அற்புதமான இந்துமதம் உண்மை- ஸத்யம் என்னும் அஸ்திவாரத்தின் மீது அமைந்தது; கடவுளே ஆனாலும் இதை மீற முடியாது. ஒரு வரமோ சாபமோ கொடுக்கப்பட்டுவிட்டால் அதில் பின்வாங்குதல் என்பதே கிடையாது. இதிஹாச, புராணங்கள் அ னைத்திலுள்ள கதைகளிலும் இந்த அற்புதமான கொள்கையைக் காணலாம். ஆனால் வருத்தப்படுவோருக்கு சாப விமோசனம் கொடுக்கலாம். ஆகவே இந்திரனும், “சரி, போ! பகல் முழுதும் கழுதையாக இரு; இரவு நேரத்தில் அழகிய இளைஞனாக இரு” என்று ஒரு துணை விதியை நுழைத்தார்.

 

 

இந்திரன் மகன் என்றால் என்ன கொக்கா? கொம்பனா? சாபத்தின் படியே பூமியில் கழுதையாக விழுந்தார். அப்போது ஒரு பிராமணன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். அன்பரே எனது கதையைக் கேளும் என்று ஆதீயோடு அந்தமாக நடந்தவற்றைச் சொல்லிவிட்டு, இந்த நாட்டு மன்னனான தாரு என்பவரின் மகளை—இளவரசியை– எனக்கு மணம் முடிக்க அருள் செய்க” என்று வேண்டினான்.

 

அந்தப் பிராமணனும் அரசன் தாருவிடம் சென்று எல்லாவற்றையும் சொல்லி கல்யாணம் செய்து கொடுங்கள் என்றார்.

கழுதைக்கு என் மகளைக் கல்யாணம் முடிப்பதா? அவன் சொல்லுவது உண்மையானால் ஒரு அற்புதத்தையாவது செய்து காட்டட்டும்; அப்போதுதான் நான் நம்புவேன் என்றார்.

 

இந்திரன் மகன் கந்தர்வ சேனு கழுதை உருவத்தில் இருந்தபோதிலும் ஒரு பெரிய இரும்புக் கோட்டையை இரவோடிரவாக கட்டிக் காட்டினான். அரசனுக்கு நம்பிக்கை பிறந்தது.

மன்னரே! மனிதனின் உருவம் என்பது மேல் சட்டை போன்றது. அதைக்கண்டு ஏமாறக்கூடாது; ஆளைக் கண்டு ஏமாறாதேடா ஊது காமாலை என்றும் ஆள் பாதி ஆடை பாதி என்றும் பழமொழிகள் இருப்பதை நீங்கள் அறியவில்லையா? என்றெல்லாம் கந்தர்வசேனு மன்னனிடம் சொல்லி அவரை அமைதிப்படுத்தினான்.

 

 

 

உடனே அரசனுக்கு நம்பிக்கை பிறந்தது. கல்யாணத்திற்கு, பிராமணர்களைக் கொண்டு தேதி நிச்சயித்தார். வெளி நாட்டு அரசர்களுக்கும் உள்நாட்டு அரசர்களுக்கும் அழைப்புகள் பறந்தன. ஊரெல்லாம் கொண்டாட்டம்; அலங்காரம்.

 

இள்வரசி தேவதை போல உடுப்பு அணிந்து அலங்கார பவனி வந்தாள். கழுதை மாப்பிள்ளையிடம் இளவரசியை ஒப்படைத்தான் மன்னன் தாரு. கழுதைக்கு ஏக குஷி; ‘காழ் காழ்’ என்று கழுதை போலக் கத்தியது

 

கழுதையைப் பார்த்தவுடன், அதன் குரலைக் கேட்டவுடன்,  மற்றவர்களுக்கு ஒரே சிரிப்பு; முகத்தை மறைத்துக் கொண்டு இளி இளி என்று இளித்தனர். பல இளவரசர்களுக்கு வருத்தம். நமக்கு இந்த தேவதை– பேரழகி கிடைக்க வில்லையே! ஒரு கழுதைக்கு அடித்ததே யோகம் — என்று அங்கலாய்த்தனர்.

 

பிராமணர்களோவெனில் ஒருகாலத்தில் ஒட்டகத்துக்கும் கழுதைக்கும் நடந்த கல்யாணக் கதைகளைச் சொல்லி மன்னனை ஊக்குவித்தனர். அவர்களுக்கு நல்ல தட்சிணை கிடைத்தது.

 

 

அரண்மனைப் பெண்களுக்கும் தோழிகளுக்கும் ரொம்ப வருத்தம். மன்னரே இப்படிச் செய்வது நல்லதா? உமக்கே அடுக்குமா? இது என்ன அநியாயம்? என்றார்கள்.

 

ஆனால் அன்றிரவு ஒரு அற்புதம் நடந்தது; கழுதையானது அழகிய இளவரசன் ரூபத்தில் தோன்றியது. மன்ன னுக்கும் இளவரசிக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

 

 

அரசனுக்கு ஒரு யோஜனை உதித்தது. ஒன்றிரண்டு நாள் இதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் செத்துப்போன கழுதையின் உடல் வெளியே இருப்பதைப் பார்த்தான். இந்த கழுதை உடலை எரித்துவிட்டால் இளவரசன் எப்போதும் இளவரசனாகவே இருப்பானே என்று கருதி ஒரு நாள் இரவில் கழுதையின் உடலை எரித்துவிட்டான்.

 

அன்று முதல் கந்தர்வ சேனு சாபம் நீங்கி என்றும் இளவரசனாக விளங்கினான்.

 

இந்தக் கதை நூறு ஆண்டுகளுக்கு முன் பாதிரியார் ஆஸ்பார்ன் மார்டின் எழுதிய இந்தியக் கடவுள்கள் என்ற புத்தகத்தில் உள்ளது; மொழி பெயர்ப்பு லண்டன் சுவாமிநாதன்.

—சுபம்—

இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 2 (Post No.4213)

Written  by S.NAGARAJAN

 

Date: 15 September 2017

 

Time uploaded in London- 5-25 am

 

Post No. 4213

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

15-9-2017 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 30வது) கட்டுரை

இரஸவாதத்தால் தங்கமாக்கியோர்!

 

இரஸவாதக்கலை நிபுணர்கள்! – 2

by ச.நாகராஜன்

 

 

“ஒவ்வொன்றையும் கேள்வி கேட்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நகர்வதற்கு முன்னர் காத்திரு; அடி எடுத்து வைப்பதற்கு முன்னர் விழியைப் பதி; அனைத்தையும் உற்று கவனி. – நிக்கோலஸ் ஃப்ளாமல்

 

 

   இரஸவாதத்தில் பித்துப் பிடித்து அலைவோர் ஏராளம். இவர்களை நாகத்திலிருந்து வெளீப்படுவதாகச் சொல்லப்படும் நாகமணிக் கல்லைத் தேடி அலைவோருடன் ஒப்பிடலாம்.

     தங்கள் கையில் இரஸவாதப் பொடி இருப்பதாகவும் அதனால் தங்கத்தை “உருவாக்க முடியும் என்றும் கூறும் இவர்கள் தங்கப் பொடியையும் கூடக் காண்பிப்பார்கள்.

ஆகவே தங்கம் பற்றிய சில இரகசியங்களை அனைவரும் அறிந்து கொள்வது ந்ல்லது.

உண்மையான தங்கத்தையும் போலித் தங்கத்தையும் எப்படிக் கண்டு பிடிப்பது?

 

     இரஸவாத நிபுணர்களும் பொற்கொல்லர்களும் தங்கத்தின் மீதான ஆசையுடன் ‘தங்கமான துறையில் ஈடுபடுபவர்களும்  தங்கத்தின் தூய்மையைப் பார்ப்பதற்கு என்ன வழியைச் சொல்கின்றனர்? அதைச் சூடாக்கி, உருக்கிப் பார்ப்பதே சிறந்த வழி என்று அனைவரும் ஏகோபித்துக் கூறுகின்றனர்.

 

 

இப்படி உருக்குவதால் தூய்மையற்ற இதர உலோகங்கள் மற்றும் கசடுகள் அகன்று விடும்.

 

  இன்னொரு பழைய வழி தங்கத்தை உரைகல்லில் உரசிப் பார்ப்பது. தங்கத்தையும் அத்துடன் ஒப்பிட வேண்டிய இன்னொரு உலோகத்தையும் உரைகல்லில் உரசிப் பார்த்தால் உடனே நல்ல வித்தியாசம் தெரியும். இதனால் போலிகளைத் தூக்கி எறிந்து விடலாம்.

 

  இன்னொரு வழி – அடர்த்தியை வைத்துக் கண்டு பிடிப்பது. தங்கத்தையும் , தங்கத்தைப் போல உள்ள இன்னொரு உலோகத்தையும் ஒரே எடையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பீக்கரில் நீரை விட்டு அதில் தங்கத்தைப் போட வேண்டும். தங்கம் உடனடியாக நன்கு உள்ளே அமுங்கி மூழ்கி விடும். அப்போது நீரின் மட்டத்தைக் குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் தங்கத்தை எடுத்து விட்டு ஒப்பிட வேண்டிய பொருளை அதே பீக்கரில் போட்டுப் பார்த்து நீர் மட்டத்தைப் பார்க்க வேண்டும். ஒப்பிடும் பொருள் தங்கமாக இருந்தால் அதே மட்டத்தை நீரில் காட்டும்; இல்லையேல் நீர் மட்டம் உயரும்.

 

 

இந்தச் சுலபமான வழியும் போலிகளைக் காட்ட உதவும்.

       தங்கத்தை உருவாக்கும் இரஸவாதிகள் அதை இப்படிப்பட்ட அறிவியல் வழிகளின் மூலம் அது தங்கம் இல்லை என்று சொல்லும் போது நம்ப மறுக்கின்றனர்; அல்லது மிகவும் மன வருத்தம் கொள்கின்றனர்.

 

     தங்கம் போல இருக்கும் ஒரு பளபளப்பான பொருள் நார்டிக் கோல்ட் ((Nordic Gold) இதில் 89% தாமிரம், 5% அலுமினியம், 5% துத்தநாகம், 1% டின்

இதை உருவாக்க முயலும் போது அலுமினியத்தை உருவாக்குவது மிகவும் கஷ்டம்.

 

    இன்னொரு தங்கம் போல இருக்கும் பொருள் கோல்ட் டாம்பாக் (Gold Tombac or Red arsenic Tombac)

இதில் 85% தாமிரமும் துத்தநாகமும் உள்ளது ரெட் ஆர்செனிக் டாம்பாக்கில் 98% தாமிரமும் 2% ஆர்செனிக்கும் உள்ளது.

லெட் ஐயோடின் (Lead Iodine) பார்க்கத் தங்கம் போலவே இருக்கும்.

 

 

இரஸவாதக்கலையில் ஈடுபட்டவர்கள் பல விதமாக தங்கம் இருப்பதாக நம்புகின்றனர்.

கெபர் (Geber)  தங்கமானது நுட்பமான பாதரஸத்தால் ஆனது என்றும் கந்தகம் போன்றவை அதற்கு தங்க வண்ணத்தை அளிப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

 

 

சென் யின் என்னும் சீன இரஸவாதி தனிம மாற்றத்தால் (Tranmutation) தங்கத்தை விட உயர்தரமான சில மூலகக் கூறுகள் அதில் கலந்திருக்கும் என்று கூறுகிறார்.

சில இரஸவாதிகளோ திரவ வடிவத்தில் தங்க திரவத்தை குடித்தே இருக்கின்றனர்.

 

பெரிய இரஸவாதிகள் யாரும் தங்களைச் சாதாரணமான பொற்கொல்லர்கள் சோதனை செய்வதை விரும்பியதில்லை. படாடோபமான அவர்களது பகட்டுக்கு முன் மற்றவர்கள் எம்மாத்திரம்! அப்படி ஒருவர் சோதனை செய்வது தனக்கு இழைக்கும் அவமதிப்பு என்றும் தெய்வ குற்றம் என்றும் கருதினர்.

 

பிரான்ஸை சேர்ந்த பிரபல இரஸவாதியான நிக்கோலஸ் ஃப்ளாமெல் (Nicholas Flamel) 1330ஆம் ஆண்டு பாரிஸில் பிறந்தவர்.

புத்தக விற்பனையாளரான நிக்கோலஸ் இரண்டு கடைகளுக்குச் சொந்தக்காரர். சாதாரண எளிய வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர் ஒரு நாள் ஒரு கனமான பழைய புத்தகத்தை எடுக்க வேண்டி இருந்தது. அதைத் திறந்து பார்த்தவர் அசந்து போனார். அதில் பல எழுத்துக்கள் மாறி மாறி இருந்தன. பல மொழிகளில் அந்தப் புத்தகம் எழுதப் பட்டிருந்தது.

 

 

நிக்கோலஸிற்கு பல மொழிகள் அத்துபடி. நிக்கோலஸின் மனைவியான பெரெனெல்லி அவரை விட பத்து வயது மூத்தவர். அவரும் இந்தப் புத்தகத்தைப் பார்த்து விட்டு இந்த மர்மமான புத்தகத்தில் உள்ள சங்கேத சொற்களில் இருந்த புதிரை அவிழ்க்க ஐரோப்பா முழுவதும் சுற்றினார். இறுதியில் அந்தப் புத்தகத்தை எழுதியவர் ஆப்ரஹாம் (Abraham the mage) என்று அவர்கள் கண்டு பிடித்தனர்.

 

   ஆப்ரஹாம் உடல் முழுவதும் தங்க மயமாக இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவர் எழுதிய கோடக்ஸ் (Codex) என்ற புத்தகம் நிக்கோலஸை இரஸவாதத்தில் புகுத்தியது.

  அவருக்கு இறந்தவருடன் தொடர்பு கொள்வதோ அல்லது மந்திர தந்திரங்களோ தெரியாது. ஆனால் அவரது மனைவியோ இதில் வல்லுநர்.

 

இருவரும் இணைந்து கடைசியில் ஒரு வழியாக கோடக்ஸ் புத்தக்த்தில் இருந்த மர்மத்தைக் கண்டு பிடித்துவிட்டனர். நிக்கோலஸின் மனைவி “என்றும் இளமையுடன் இருப்பதற்கான ஒரு மருந்தை கண்டுபிடித்தார்,

 

   ஆனால் அந்த விசித்திரமான இளமை மருந்தைத் தொடர்ந்து அவர்கள் அருந்த வேண்டும். கோடக்ஸ் புத்தகம் கூறும் சரியான வழி முறைப்படி அருந்தாவிட்டால் ஒரு நாளில் ஒரு வருட வயது மூப்பு வந்து விடும்.

 

  இதற்கிடையில் இங்கிலாந்தின் அரசிக்கு உயர் ஆலோசனை கூறும் ஜான் டீ என்பவரை அவர்கள் தங்கள் சிஷ்யனாக ஏற்றனர். ஆனால் விதி வசமாக அவரே இவர்களைக் கொல்ல முயன்றார். ஆகவே நிக்கோலஸும் அவரது மனைவியும் தாங்கள் இறந்து விட்டதாக தங்கள் முடிவை உலகிற்கு அறிவிக்க போலியாக நடிக்க வேண்டியதாயிற்று,

   நிகோலஸின் அபார சக்தியைப் பற்றி ஏராளமான கதைகளும் சம்பவங்களும் உண்டு.

 

 

அவரைச் சுற்றி ஒளி வட்டம் உண்டு என்றும் அவர் பல மிருகங்களின் கண் கொண்டு பார்க்க வல்லவர் என்றும், அவர் எந்த வித உலோகத்தின் அணுவையும் மாற்ற வல்லவர் என்றும் இன்ன பிற சக்திகள் அவருக்கு உண்டு என்றும் ஏராளமான செய்திகள் உலவி வந்தன.

 

இரஸவாதத்தில் குறிப்பிடத் தகுந்த ஒருவராக கூறப்படுபவர் நிக்கோலஸ். இரஸவாத மர்மம் போலவே அவர் வாழ்வும் கூட ஒரு மர்மம் தான்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

,,

பிரபல கணித மேதையான கோடல் (Godel)  குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்தார். அதனுடைய இறுதி கட்ட விசாரணை நீதிபதியின் முன்னர் வந்தது. அதே நீதிபதி தான் ஐன்ஸ்டீனின் குடியுரிமை பற்றி விசாரித்து அளித்தவர். ஆகவே கோடலுடன்  ஐன்ஸ்டீனும் இன்னொரு நண்பரான ஆஸ்கர் மார்கென்ஸ்டர்னும் (Oscar Morgenstern) கூடச் சென்றனர். ஐன்ஸ்டீனைப் பார்த்த நீதிபதிக்குத் தலைகால் புரியவில்லை.

 

அவருடன் நெடுநேரம் தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். நாஜி ஜெர்மனியில் என்னவெல்லாம் நடந்தது உள்ளிட்ட அனைத்தையும் கூறி முடித்த நீதிபதி கடையில் கோடல் பக்கம் திரும்பினார்: “ நமது அரசியல் சாஸனத்தை நீங்கள் நன்கு படித்திருப்பீர்களே!  அதெல்லாம் இங்கு நடைபெற வாய்ப்பில்லை என்பதை உணர்ந்திருப்பீர்களே என்றார்.

 

உடனே கோடல், “உண்மையைச் சொல்லப் போனால்.. என்று ஆரம்பித்தார்.

அவ்வளவு தான், கூட இருந்த நண்பர் அவர் தோளைப் பலமாக இடித்தார். உடனே கோடல் புரிந்து கொண்டு தன் வாயை மூடிக் கொண்டார்.

 

பிறகென்ன,அவருக்கு நீதிபதி குடியுரிமையை வழங்கினார்.

நல்ல வேளையாக உண்மையைச் சொல்ல ஆரம்பிக்கவில்லை கோடல்.(அமெரிக்க சாஸனத்தைத் தா படித்ததில்லை என்று சொன்னாலும் ஆபத்து, நாஜி ஜெர்மனியில் அவர் நடந்ததாகச் சொல்லியதை எதிர்த்துச் சொன்னாலும் ஆபத்து தான்!)

 

சில சமயம் சில இடங்களில் உண்மையைச் சொல்லக் கூடாது இல்லையா?

***

 

 

 

TWO STRANGE STORIES ABOUT INDRA AND HIS SON (Post No.4212)

Picture sent by Lalgudi Veda

Written by London Swaminathan

 

Date: 14 September 2017

 

Time uploaded in London- 14-54

 

Post No. 4212

 

Pictures are taken from various sources; thanks.

 

 

INDRA’S SON BECAME AN ASS!

 

The following is characteristic of the stories told of this god and his doings:

 

On a certain occasion, many of the gods were invited to an entertainment in Indra’s palace. To complete their happiness, several of the Apsaras, beautiful nymphs, danced before them. Gandharvasenu, son of Indra, was so fascinated with the charms of one of them and behaved so indelicately that that his father commanded him to descend to earth in the form of an ass. All the assembled gods beseeched him to modify this sentence, and ultimately Indra agreed that his son should be an ass by day, but a man by night. With this he dismissed him to wander about the earth. One day a Brahman  came to bathe at a pond near which the ass was wandering. The animal spoke to him and told him he was Indra’s son and asked him to speak to King Dharu to give him his daughter in marriage. The Brahman consented, and next day the king went with his counsellors and held a conversation with the ass, who related his story and the cause of his degradation. The king refused consent to the marriage unless the ass would perform some miracle to prove his descent. To this he agreed, and the following night he built a fort of iron, forty miles square and six high. Then the king was forced to yield, and appointed the day of marriage.

 

The day came, and with splendid show, dancing, and music the bride, adorned with jewels and the richest attire, was led into the iron fort to be married to the ass. The bridegroom on seeing her could not refrain from giving voice. Th guests on hearing the ass bray were filled with grief and astonishment. Some hid their faces with sorrow, some because of laughter. Others, more bold, went to the king and said “O King, is this the son of Indra O Monarch, you have found an excellent bridegroom. Don’t delay the wedding! we never saw so glorious a match. We have heard of a camel being married to an ass, when the ass, looking the camel said, “Bless me what a fine form and the camel, hearing the voice of the ass, said Dear me what sweet voice! In that wedding the bride and the bride groom were equal, but that your daughter should have such a bridegroom is truly wonderful!

 

Then the Brahmans said “Oh King at some weddings, as a sign of joy, the sacred conch shell is blown, but thou hast no need of that (alluding  to the braying of the ass).

 

 

 

The women then cried out, “O King, what is this? To give so angelic a damsel in marriage to an ass! The king felt ashamed and hung his head. At length Gandharvavenu reminded the king of his promise, and urged upon him that the body is merely a garment, that wise men never estimate the worth of a person by the clothes he wears, and, moreover, he was in this shape from the curse of his father, and during the night he would assume the form of a man.

 

The king then withdrew his objection and the man marriage was celebrated. By the time the guests were dismissed the night drew on, and a handsome man, suitably dressed, presented himself to the king. The king brought the bride in great state to the palace and gave her to her husband. The next day he gave jewels, horses, camels, and servants to her and dismissed the guests with suitable presents. Dharu, however, could not but feel anxious that his son-in- law should finally throw off his ass body. After a thousand contrivances, he said to himself Gandharvasenu is the son of Indra, therefore he can never die; at night he casts off his ass’s body, which lies like a dead body. I will burn it and so keep him always in the form of a man. This he did and the curse was removed.

 

xxx

STORY ABOUT INDRA

 

 

On one occasion Indra assumed the form of a shepherd boy so that he might more easily steal some pomegranate blossoms from a garden to deck the dark tresses of his consort Indrani.

 

The sequel is told in Sir William Jones’ charming hymn to him

 

“The reckless peasant, who these glowing flowers, Hopeful of rubied fruit has fostered long,

Seized and with cordage strong,

Shackled the god who gave him showers.

Straight from the seven winds immortal genii flew- Varuna green, whom foamy waves obey;

Bright Vahni, flaming with the lamp of day

Kuvera, sought by all, enjoyed by few;

Marut, who bids the wingéd breezes play

Stern Yama, ruthless judge! and Isa cold

With Narrit, mildly bold:

They, with the ruddy flash that points his thunder,

Rend his vain bands asunder.

Th’ exulting god resumes his thousand eyes,

Four arms divine, and robes of changing dyes.

 

These “robes of changing dyes” are of course the clouds, and the thousand eyes were the marks of the displeasure of the gods for his intrigue with Gautama’s wife.

 

 

SOURCE: The Gods of India by the Rev.E.Osborn Martin, London ,1914

 

–SUBHAM–

 

 

 

சரஸ்வதி நதி பற்றிய சுவையான விஷயங்கள்! (Post No.4211)

Written by London Swaminathan

 

Date: 14 September 2017

 

Time uploaded in London- 10-47

 

Post No. 4211

 

Pictures are taken from various sources; thanks.

 

 

வேத காலத்தில் ஒரு பிரம்மாண்டமான நதி ஓடியது; அதன் பெயர் சரஸ்வதி; உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் இதன் புகழ் பாடுகிறது. ஆனால் மஹா பாரத காலத்திலேயே (கி.மு.3100) இது வற்றிச் சுருங்கி விட்டது. இப்பொழுதும் மனிதர்கள் நம்புவது என்னவென்றால் இந்த நதி அந்தர்வாஹினியாக த்ரிவேணி சங்கமத்தில் (அலஹாபாத், உத்திரப் பிரதேசம்) கலக்கிறது என்பதாகும்

 

சரஸ்வதி நதி பற்றி பாபா அணுசக்தி ஆராய்ச்சி (B A R C) நிலையம் கொடுத்த தகவல்கள் இந்திய வரலா ற்றையே மாற்றிவிட்டது. நாம் இது வரை சிந்துவெளி நாகரீகம் என்று அழைத்தது எல்லாம் தவறு அது, வேத கால சரஸ்வதி நதி நாகரீகம் என்று விஞ்ஞான ஆராய்ச்சி நிரூபித்துவிட்டது!

 

ரிக் வேதம் 50 க்கும் மேலான இடங்களில் சரஸ்வதி நதியைக் குறிப்பிடுகிறது. அந்த வற்றாத ஜீவ நதிக்கு நம் நாவில் வெள்ளமெனப் பொழியும் சரஸ்வதி தேவியின் பெயரை வைத்தது என்ன பொருத்தம்!

 

நாகரீகத்தின் உச்சானிக் கொம்பில் நின்ற வேத கால இந்துக்கள் நதிகளுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டினர். தாய்மார்களின் கருணையும் அளவற்றதன்றோ!

 

ரிக்வேதம் போற்றும் சரஸ்வதி!

 

நீயே சிறந்த தாய்

நீயே தலைசிறந்த நதி

நீயே கடவுள்

 

ரிக்வேதத்தில் நதி ஸ்துதி என்று ஆறுகளை போற்றித் துதிக்கும் அற்புதமான பாடல் ஒன்று உண்டு! இதில் கங்கா, யமுனா, சரஸ்வதி, சுதோத்ரி (சட்லெஜ்) ஆகியன போற்றப்படுகின்றன. ஆரிய-திராவிட வாதம் பேசும் அறிவிலிகளுக்கு செமை அடி கொடுக்கும் பாடல் இது! ஏனெனில் இந்திய நதிகளைக் கிழக்கிலிருந்து மேற்காக வருணிக்கின்றன இந்த நதி ஸ்துதி. ஆக வேத காலத்திலேயே கிழக்கில்- கங்கைச் சமவெளியில் – பெரிய நாகரீகம் நிலவியது. மேலும் ரிக் வேதத்தில் அதிகப் பாடல்களில் பாடப்படும் இந்திரனின் திசை கிழக்கு! ஆகவே இந்துக்கள் மண்ணின் மைந்தர்கள்! வந்தேறு குடியேறிகள் அல்ல!

இந்த துதிப்பாடல் சரஸ்வதி நதியை சட்லெஜ்-யமுனை நதிகளுக்கு இடையே வைக்கிறது

 

நதிகளில் எல்லாம் புனித மான சரஸ்வதி உயிர்த்துடிப்புள்ள நதி; மலையிலிருந்து கடல் நோக்கிச் செல்லும் இந்த நதி அபரிமிதமான வளத்த்தைச் சுரக்கிறது

 

இப்பேற்பட்ட சரஸ்வதி பாலைவனத்தில் மறைவது பற்றி மஹாபாரதமும் ஐதரேய, சதபத பிராமணங்களும் பேசுகின்றன.

 

1872ம் ஆண்டில் சி.எF ஓல்தமும் ( C F Oldham and R D Oldham) ஆர்.டி. ஓல்தமும் நடத்திய சர்வேயில் சரஸ்வதியும் அதன் உபநதிகளும் ஒரு காலத்தில் ஓடியதை உலகிற்கு அறிவித்தனர். சரஸ்வதி நதிக்கு யமுனையும் சட்லெஜ் நதியும் தண்ணீர் கொண்டுவந்தன என்றும் புவியியல் மாற்றங்களால் அவை விலகிச் செல்லவே சரஸ்வதியின் ஒளி மங்கியது என்றும் அவர்கள் எழுதிவைத்தனர்.

விஞ்ஞானிகள் என்ன கண்டார்கள்?

 

வி.எம்.கே.புரி, பி.சி.வர்மா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் இந்த நதி அப்பர் ப்ளைச்டோசின் (UPPER PLEISTOCENE ) காலத்தில் இருந்தது,

கார்வால் இமயமலைப் பகுதியில் இருந்த பனிக்கட்டி ஆறுகள் உருகி இதற்கு தண்ணீர் அளித்தது. பின்னர் பனிக்கட்டி யுகத்தில் கதை மாறியது என்று சொன்னார்கள்.

 

(இந்தியாவின் முதல் அணுகுண்டு 1974லும் இரண்டாவது அணுகுண்டு 1998லும் வெடிக்கப்பட்டன)

1998 மே 11ல் பொக்ரானில் நாம் அணுகுண்டு வெடித்துச் சோதித்து உலகையே வியப்பில் ஆழ்த்திய போது, அந்த அணுகுண்டு வெடிப்பினால் நிலத்தடி நீருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஆராய்வதில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டது. அபோது அது குடி நீருக்குப் பயன்படுத்தக்கூடியது என்பதும் கீழேயுள்ள தண்ணீர் 8000 முதல் 14000 ஆண்டுப் பழமையானது என்றும் தெரியவந்தது.

 

இது தவிர மத்திய நிலத்தடி நீர் கமிஷன் 24 கிணறுகளை வெவ்வேறு இடத்தில் தோண்டி ஆராய்ந்ததில் 23 கிணறுகளின் நீர் தூய குடிநீர் என்றும் கண்டது.

 

இதிலிருந்து வரலாற்று நிபுணர்கள் கண்ட முடிவு:

கி.மு.6500 முதல் கி.மு3100க்கு இடைப்பட்ட காலத்தில் ஹரப்பா நாகரீகத்துக்கு முந்தைய சரஸ்வதி நதிதீர நாகரீகம் இருந்தது . அப்போதுதான் ரிக்வேதப் பாடல்கள் எழுந்தன. பின்னர் கி.மு3100 முதல் கி.மு 1900 வரை சிந்துவெளி/ஹரப்பன் நாகரீகம் இருந்தது.

கிமு 1900 முதல் கிமு 1000 வரை சரஸ்வதி-சிந்து நாகரீகம் படிப்படியாக அழிவு நிலை க்கு வந்து சரஸ்வதி நதி அடியோடு மறைந்தது. இதனால் மக்கள் அங்கேயிருந்து கங்கைச் சமவெளிக்குக் குடியேறினார்கள்.

 

இந்த தேதிகள், வரலாற்று ரீதியில் சில சிக்கல்களை ஏற்படுத்தும். ஆயினும் விரிவான ஆய்வுகள் மூலம் புதிர்களை விடுவிக்கலாம்.

 

1995 ஆம் ஆண்டு ஆய்வுகள்

 

ராஜஸ்தானிலுள்ள ஜைசால்மர் மாவட்ட விண்கல புகைப்படங்களை ஆராய்ந்தபோது சரஸ்வதி நதியின் மறைந்த தடயங்களில் சில பகுதிகள் தென்பட்டன. இது பற்றி பாபா அணுசக்தி விஞ்ஞானிகள் CURRENT SCIENCE கரண்ட் சயன்ஸ் என்ற சஞ்சிகையில் எழுதினர். 1995ல் டாக்டர் எஸ்.எம் ராவ், டாக்டர் கே.எம்.குல்கர்னி ஆகியோர் ஐசடோப் பிரிவைச் (ISOTOPE DIVISION) சேர்ந்தவர்கள் . அவர்கள் நிலத்தடி  நீரின் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன்  ஐசடோப்புகளை ஆராய்ந்தனர். ரிக்வேதத்தில் சரஸ்வதி நதி பற்றிச் சொல்லப்பட்ட விஷயங்கள் உண்மை என்று அவர்கள் ஆய்வு முடிவுகள் காட்டின. இப்போது கங்கா நகர் மாவட்டத்திலுள்ள கக்கர் நதியின் வறண்ட நிலப்படுகைகள், பாகிஸ்தானிலுள்ள ஹக்ரா, நரா நதிகள் ஆகியன சரஸ்வதியின் ஒரு சில பகுதிகள். இன்னும் நிலத்தடியில் சரஸ்வதியின் நீர் உள்ளது கோடைகாலத்திலும் இந்த நீர், பயிர்கள் வளர உதவுகின்றன. ஜைசாலமர் பகுதியில் மிகக்குறைந்த அளவு மழை பெய்தாலும் நிலத்துக்கு 50-60 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது. இவை எல்லாம் சரஸ்வதி நதியின் மிச்ச சொச்சங்களே என்றும் கண்டனர்.

 

நிலத்தடி நீர் சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை ரேடியோ கார்பன் தேதிகள் நிர்ணயிக்கின்றன.

 

 

1910 ஆம் ஆண்டில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்ட ஜி.இ. பில்க்ரிம் ( G E PILGRIM) என்பவரும் மிகப் பழங்கால வண்டல் மண் படுகைகள் காணப்படுவதாகவும் இமயத்தின் அடிவாரத்திலிருந்து சிந்து வளைகுடா வரை காணப்படும் இப்படுகைகள் சிவாலிக் என்ற நதியாக இருக்கலாம் என்றும் எழுதினார்.

ரிக்வேத சரஸ்வதி பற்றி அவருக்குத் தெரியாது.

ரிக்வேதம் இந்த நதியை நதிகளுக்கு எல்லாம் தலையாயது என்று பாராட்டியதை அவர் அறியார்.

அம்பிதமே நதிதமே தேவிதமே சரஸ்வதி (ரிக்.2-41-16) புகழ்கிறது

 

(சிறந்த தாய், சிறந்த நதி,  சிறந்த தேவி சரஸ்வதி)

 

மஹோ ஆர்ணா சரஸ்வதி ப்ரசேதயதி கேதுன தியோ விஸ்வ  விரஜதி 1-3-12

 

சரஸ்வதி கடல் போன்றது; அவள் ஒளிவீசுகிறாள்; எல்லோருக்கும் ஊற்றுணர்ச்சி ஊட்டுபவள் அவளே

 

நி த்வததே வர அப்ருதிவ்ய இளைஸ்பதே சுதிநத்வே அஹ்னம்; த்ருஷத்வயம் மானுஷே அபயயாம் சரஸ்த்வயாம் ரெவத் அக்னே திதி (3-23-4)

 

ஓ அக்னியே நாங்கள் உன்னை பூமியின் புனிதமான இடத்தில் — இலா பூமியில்-  ஒளிமிகு நாட்களில் ஏற் றியுள்ளோம். த்ருஷத்வதி, அபயா, சரஸ்வதி ஆறுகளின் கரை மீது மானுடர்களுக்காகப் பிரகாசிப்பாயாக.

சித்ர இத் ராக ராஜக இத் அன்யகே சரஸ்வதீம் அனு: பர்ஜன்ய இவ ததநதி வர்ஷ்த்ய சஹஸ்ரம் அயுத ததாத் 8-21-18

 

சரஸ்வதி தீரத்தில் வசிக்கும்  புகழ்மிகு அரசன், மற்ற எல்லாரும் இளவரசர்கள். மழைக்கடவுள் மழையைப் பொழிந்து தள்ளுவது போல, அவன் பத்தாயிரம் பசுமாடுகளை ஆயிரம் தடவை தருகிறான்

அயஸி புரஹ; விஸ்வ ஆபோ மஹின: சிந்துர் அன்ய: சுசிர் யதி கிர்ப்ப்ய அ ஆ சம்த்ராத் 7-95-1/2

 

சரஸ்வதி ஒரு வெண்கல நகரம்; எல்லா நதித் தீரங்களைளையும் , நீர் நிலலைகளையும் விஞ்சி நிற்கிறது. மலையிலிருந்து சமுத்ரம் வரை தூய நீராக ஓடுகிறாள்

 

இப்படி எல்லா மண்டலங்களிலும் சரஸ்வதி புகழ்ப்படுவதால் ரிக் வேதம் என்பது கி.மு.3000க்கும் முன்னதாகவே சரஸ்வதி நதிக்கரைகளில் ஒலித்திருக்க வேண்டும்!

 

இந்தியாவிலிருந்து பாரசீக நாட்டுக்கு (ஈரான்) குடியேறிய ஜொராஸ்டரும் சரஸ்வதியைப் போற்றுகிறார்.

மனு தர்ம சாஸ்திரமும் இந்த நதியைப் புகழ்கிறது

சரஸ்வதிக்கும் த்ருஷத்வதிக்கும் இடைப்பட்ட பூமியே கடவுளால் உண்டாக்கப்பட்டது. இதுவே பிராமணர்கள் வாழுமிடம் (மனு 2-17-8)

 

ஆனால் வேத காலம் முடிவதற்கு முன்னரே சரஸ்வதி மறையத் துவங்கியதை பஞ்சவம்ச பிராமணம் தெளிவாகக் குறிப்பிடுகிறது

 

 

ராஜஸ்தானிலும் பாகிஸ்தானிலும் ஓடிய சரஸ்வதி பூகர்ப்ப மாற்றங்களால் நான்கு முறை திசை மாறி ஓடியது.

 

டெக்கான் காலேஜ் பட்டமேற்படிப்பு ஆராய்ச்சிக் கழகம் சரஸ்வதி நதியின் பாதை எப்படி எல்லாம் மாறியது என்று ஆராய்ந்து வெளியிட்டுள்ளது. கிமு4000 ஆம் வாக்கில் இமயமலையில் தோன்றிய சரஸ்வதி, மதுரா, கட்சிலுள்ள பஞ்சபத்ரா வழியாக ஓடியது. நாலாவது முறை திசை மாறியபோது அது சிந்து நதியில் இணைந்து தனது பெயரையும் புகழையும் இழந்தது. யமுனையும் சட்லெஜ்ஜும் தண்ணிரைக் கொணந்து கொட்டிவிட்டு யமுனை நதி திசை மாறிக் கங்கையில் கலந்தவுடன் சரஸ்வதியின் வளம் குறைந்தது

 

ஹரப்பன் நாகரீக நகரங்களான லோதல் காலிபங்கன் ஆகியன சரஸ்வதி நதிப் ப டுகையிலேயே அமைந்துள்ளன.

 

5000 ஆண்டுகளுக்கு முன் இமயமலையின் சிவாலிக்  குன்றுகளில் உதயமாகி ஹிமாசல் பிரதேஷ், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் வழியாக ஓடி அரபிக் கடலில் கலந்த சரஸ்வதியின் கதை இது!

 

பேராசிரியர் வைத்யா போன்றவர்கள் சரஸ்வதி நதியின் கதையை புத்தகமாக வெளியிட்டுள்ளனர். தமிழிலும் சரஸ்வதியின் கதை வெளியாகியுள்ளது. நான் கொடுத்தது எல்லாம் பத்திரிக்கை செய்திகளின் தொகுப்பகும்.

 

இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்பட்டதே சரஸ்வதின் மறைவுக்குக் காரணம்.

 

சரஸ்வதி நதி பற்றிய வேத, இதிஹாச, பிராமன நூல்கள் தகவல்களை வரிசைப் படுத்தினால் வேத காலம், சிந்துவெளி, சரஸ்வதி நாகரீக காலங்களை உறுதிப்படுத்திவிடலாம்.

 

Geo Morphologist Dr Amal Kar ஜியோ மார்ப்பாலஜிஸ்ட டாக்டர் அமல் கர் சில சுவையான விஷயங்களைச் சொல்லுகிறார்:

 

பத்து லட்சம் ஆண்டுகளுக்கும் 40,000 ஆண்டுகளுக்கும் இடையே சரஸ்வதி நதி தார்ப் பாலைவனம் வழியே ஓடியது

லோக்பட் என்னும் துறைமுக நகரம் கல்விக்கும் வணிகத்துக்கும் பெயர்பெற்ற இடம்.  இந்த நதிக்கரையில் இருந்தது.

மஹாபாரதம் குறிப்பிடும் நாராயண சரோவர் இதன் கரையில் இருந்தது

 

ஹரப்பன் நாகரீகத்துக்கும் முந்தைய அலிபங்கன், கலிபங்கன் நாகரீகம் இதன் கரையில் செழித்தோங்கியது.

சதத்ரு (சட்லெஜ்) என வேதம் குறிப்பிடும் நதி இதன் உபநதியாகும்.

 

மஹாபாரதம் சப்த சரஸ்வதி என்னும் நதி பினாசன் (விநாசன்) என்னும் இடத்தில் மறைவதைக் குறிப்பிடுகிறது.

 

TAGS: சரஸ்வதி, கக்கர், வேத நதி, நதி துதி

 

–SUBHAM–

 

 

 

புலவர்கள் பல விதம்! (Post No.4210)

Written  by S.NAGARAJAN

 

Date: 14 September 2017

 

Time uploaded in London-5-01 am

 

Post No. 4210

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தனிப்பாடல்களில் புலவர்கள்

புலவர்கள் பல விதம்!

 

ச.நாகராஜன்

 

புலவர்கள் பல விதம். ஒவ்வொருவரும் ஒரு விதம்.

 

பாண்டிய மன்னன் ஒருவன் புலவர்களைப் பற்றிப் பாடியதாகப் பழம் பெரும் பாடல் ஒன்று உள்ளது.

 

போற்றினும் போற்றுவர்  பொருள்கொ டாவிடில்

தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை

மாற்றினு மாற்றுவர் வன்க ணாளர்கள்

கூற்றினும் பாவலர் கொடிய ராவரே

 

எமனை விட மோசமானவர்கள் புலவர்கள் என்று ஒரேயடியாக அடித்துச் சொல்லும் பாண்டிய மன்னன் அதற்கான காரணங்களையும் வரிசையாக அடுக்கி விட்டார்.

தூக்கி வைத்தால் ஒரேயடியாக இந்திரன் சந்திரன் என்று புகழ்வர்.

கையிலே காசு தரவில்லை எனில் கீழே போட்டு மிதித்துத் தாழ்த்தி விடுவர். சொன்ன சொற்களை நிலைமைக்குத் தகுந்த மாதிரி மாற்றினும் மாற்றுவர். இவர்களிட்ம் மாட்டிக் கொண்டால் ஒருவன் படும் பாடு – எமனே தேவலை!

 

இதைச் சோழ மன்னன் ஒருவன் பாடியதாகவும் பரம்ப்ரைக் கதை கூறும்.

 

இராமச் சந்திரக் கவிராயர் என்று ஒரு கவிஞர். அவரது அனுபவமோ இதற்கு நேர் எதிர்.

ஒரு கஞ்சனிடம் அவர் சென்று சேர்ந்தார். அவர் அனுபவத்தை ஒரு பாடலிலேயே கூறி விட்டார் இப்படி:-

 

கல்லாத ஒருவனை நான் கற்றா யென்றேன்

    காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்

பொல்லாத வொருவனைநா னல்லா யென்றேன்

   போர்முகத்தை யறியானைப் புலியே யென்றேன்

மல்லாரும் புயமென்றேன் சூம்பற் றோளை

     வழங்காத கையனை நான் வள்ள லேயென்றேன்

இல்லாது சொன்னேனுனக் கில்லை யென்றான்

      யானுமென்றன் குற்றத்தா லேகின் றேனே!

 

 

 

நான் கல்வி அறிவில்லாத ஒருவனைக் கல்விமானே என்று புகழ்ந்தேன். காட்டை வெட்டுகின்ற மறவனை நாட்டை ஆள்பவனே என்று புகழ்ந்தேன். பொல்லாதவன் ஒருவனை நல்லவனே என்றேன். யுத்தத்திற்கே செல்லாத ஒருவனை புலியே என்றேன். சுருங்கித் திகைந்த தோள்களை உடையவனை மற்போர் செய்வதற்கு உரிய தோள் என்றேன்.யாருக்கும் ஒன்றும் கொடாத கைகளை உடையவனை வள்ளலே என்றென்.

 

இவ்வாறு இல்லாத குணங்களைச் சொன்ன உனக்கு இல்லை என்றான் அவன்.

நானும் நான் செய்த பிழையால் பேசாமல் செல்கின்றேன்.

சரி தானே!

 

தத்துவப் பிரகாசர் என்று ஒரு புலவர்.

தன்னைப் பற்றி விரிவாக அவர் குறிப்பிடுகிறார் மூன்று பாடல்களில்.

நினைவு கவி சொல்வோமெனச் சொலிப் பலகவிதை

      நினைவினைத் திருடி வையோம்

நீடுலகின் மனிதரைப் பாடிலோ நாமென்று

       நீள்வசைகள் பாட வறியோம்

பினையிளைய நாவல ருடன்பங்கு பேசிப்பிர

     பந்தங்கள் பாடிக் கொடோம்

பேசுவது தேவார மேயலால் வாய்க்கெளிய

      பேய்க்கிரந் தங்கள்  பேசோம்

 

இனிமைதரு பூருவத் துக்குருக் களைமறந்

        தெங்கணுந் தீட்சை யேற்கோம்

இட்டவொரு பேர்மாற்றி மாதமொரு பேரிட்

  டிடப்பெறோ மிறுமாந் திரோம்

தனியிருந் தெம்மைப் புறங்கூறு வார்கணெஞ்

   சமுமுருகு கவிபா டுவோம்

சமணூல் களைப்பொரு ளெனக்கொளோந் திருஞான

    சம்பந்த ரடியர் நாமே

 

பாம்புகடி த்தாலதுவு நீக்க வல்லோம்

   பசாசறைந்தா னீறிட்டுப் பார்க்க வல்லோம்

வேம்புகசப் பறக்கறியு மாக்க வல்லோம்

    விற்ல்வேழத் ததிகமதந் தணிக்க வல்லோம்

சாம்பொழுது திடமாகப் பேச வல்லோம்

   தரணியின் மேற் கல்லாத தொன்று மில்லை

தீம்பரைநல்ல் வராக்கிக் குணமுண் டாக்குந்

       திறமதறி யாமனின்று திகைக்கின் றோமே   

 

தத்துவப் பிரகாசர் மிகத் தெளிவாகத் தன் இயற்கை இயல்புகளைக் கூறி விட்டார்.

திருஞான சம்பந்தரின் அடியாராகிய் அவர் தேவாரம் தவிர வேறு

பேய்க் கிரந்தங்களை ஓத மாட்டார். சமணரின் நூல்களைப் படிக்க மாட்டார். மனிதர்களைப் பாட மாட்டார். பல கவிதைகளை உடனடியாகப் பாடுவதாகக் கூறி நினைவில் வைத்திருக்கும் கவிதைகளைத் திருட்டுக் கவிதைகளாகக் கூற மாட்டார். ஊருக்கு ஒரு பெயர் வைத்து ஏமாற்ற மாட்டார்.

அவரின் திறமைகளோ எல்லையற்ற ஒன்று. பாம்பு கடித்தால் அந்த விஷத்தை இறக்க வல்லவர். பிசாசு பிடித்தால் அதைப் போக்க வல்லவர். வேம்பு போலக் கசப்பாக இருந்தாலும அதை நீக்கிச் சுவையான் கறி படைக்க வல்லவர். மதம் பிடித்த யானையைக் கூட அடக்க வல்லவர். இறக்கும் போது கூடத் திடமாக பயப்படாமல் பேச வல்லவர். அவர் கற்காத கலைகள் ஒன்றுமே இல்லை.

ஆனால் இப்படிப்பட்ட அறிவாளிக்கும் முடியாத விஷயம் ஒன்று இருக்கிறது. அதை அவரே ஒப்புக் கொள்கிறார்.

 

தீயவர்களை நல்லவராக்கி அவரை குணவான்களாக ஆக்கும் திறமை மட்டும் அவருக்கு இல்லை. அதனால் அவர் திகைக்கின்றார்.

 

புலவர்கள் பல விதம்.

எப்படியும் பாடும் புலவர்களைக் கண்டு பாண்டிய மன்னனுக்குப் பயம். எப்படிப் புகழ்ந்தாலும் மசியாத கஞ்சனைப் பாடி நொந்து போன கவிஞருக்கு அப்படிப்பட்டவர்களைக் கண்டால் பயம். எதையும் சாதிக்க வல்ல இன்னொரு கவிஞருக்கோ தீயவர்களைக் கண்டால் பயம். அவர்களை நல்லவராக்கும் திறம் மட்டும் அவருக்கு இல்லை!

 

 

அதாவது வல்லவன் யாராக இருந்தாலும் அவர்கள் தீமையே உருவாக இருப்பவரைத் திருத்தல் அரிது.

ஒவ்வொரு புலவரையும் பற்றி அறியும் போது சுவையான தகவல்கள் பல வருகின்றன.

அனைவரையும் படித்தால் நமக்குத் தான் ஆதாயம்!

 

 

ஆதாரம் : தனிச் செய்யுள் சிந்தாமணி மற்றும் தனிப்பாடல் திரட்டு ஆகிய நூல்கள்

 

(இவற்றில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளில் ஐந்தை மட்டும் மேலே பார்த்தோம்.)

***