WHY DOESN’T LAKSHMI LIKE THE BRAHMINS? (Post No.4636)

Written by London Swaminathan 

 

Date: 19 JANUARY 2018

 

Time uploaded in London 17-15

 

 

 

Post No. 4636

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

Chanakya says some strange things about the Brahmins and the End of Kali Yuga

 

Chanakya says in his Chanakya Niti Sastra,

“Lakshmi’s words to Vishnu: O Lord, in disgust I avoid always the house of the Brahmins because the angry one (Agastya) drank my father (ocean), the sage Bhrgu hit with his foot my husband (Vishnu), right from childhood Brahmins carry my adversary (Sarasvati) in the cavity of their mouth, day and day out destroy my house (the lotus) for offering worship to Siva.”

 

Chapter 15, sloka 16

 

This sloka reveals two things:

1.There is a proverb in Tamil, Where is money (Panam), there is no Virtue (Gunam). In other words Lakshmi, Goddess of wealth never resides where there is Sarasvati, Goddess of Education. This is very true in Indian context. Most of the poets lived in acute poverty. Bharati, the greatest of the modern Tamil poets, suffered from poverty till his death. So the message is that Money and virtue don’t go together.

 

2.The second thing is a compliment to Brahmins, not a complaint against the Brahmins. Sarasvati lives in their tongues from their early childhood. This means they are well versed in the Vedas. Vak Devi and Sarasvati are praised in the Rig Veda, the oldest religious book in the world. And the Brahmins used the lotus flower for Siva Puja (flower offering to Lord Siva)

Fame comes from Luck!

 

In another sloka, Chanakya praises Lord Vishnu indirectly.

“A small hillock on the earth was held by you on a finger with ease. Because of this your praise is sung under the name of Govardhana both in the heaven and the earth.

Yasoda’s remark “I cary you, O Kesava,  the carrier of all the worlds, on the tips of my breasts. (Still nobody sings my praises), O Kesava, enough of words. Fame comes from luck”

Chanakya Niti, Chapter 15, sloka 19.

 

These are called Nindha Stutis. That is you criticise someone in words explicitly, but the real implicit meaning is that you praise him or her. You have to read between the lines.

 

Chanakya’s Strange Prediction

Chanakya, the greatest genius of ancient India, made a strange prediction in one of the slokas:-

 

“Hari leaves the earth with the passage of ten thousand years in Kali Yuga, in the half of that period does the Ganga water and in the half of that village deity”.

 

It is very strange that the village deity disappears first, then the River Ganges disappears and then only God leaves the earth. So we may measure  the progress of Kaliyuga  by the Ganges.

The sloka is as follows:

Kalau dasa shasreshu Harisyajati medhiniim

tadardhe jahnaviitoyam tadardhe gramadevataa

Chapter 11, sloka 4

We have already passed 5000 year limit In Kaliyuga. But Ganga is still flowing but not with its original pristine purity. So Chanakya might have mentioned Deva year and not the human year.

–Subham–

சொன்னது அவர்தானா? சொல், சொல், மனமே! QUIZ – ‘க்விஸ்’ (Post No.4635)

Written by London Swaminathan 

 

Date: 19 JANUARY 2018

 

Time uploaded in London 13-46

 

 

 

Post No. 4635

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கீழ்கண்ட பாடல்களை இயற்றியது யார்? அது எந்தப் புத்தகத்தில் உள்ளது? சொல், சொல், மனமே!

 

1.ஏர் ஆனைக் காவில் உறை என் ஆனைக்கு அன்று அளித்த

போர் ஆனைக் கன்றுதனைப் போற்றினால் – வாராத

புத்தி வரும்; பத்தி வரும்; புத்திர உற்பத்தி வரும்;

சத்தி வரும்; சித்திவரும் தான்

XXX

 

2.எண் தேர் செய்யும் தச்சன்

திங்கள் வலித்த கால் அன்னோனே

XXX

 

3.பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட தின்தோள் மணிவண்ணா! உன்

செவ்வடி செவ்வி திருக்காப்பு

 

xxx

 

4.நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற

ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான்

 

xxx

5.மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!

நாம நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு

ஓங்கிப் பரந்தொழுகலான்

 

xxx

6.தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

xxx

 

7.பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்

புன்மை யிருட்கணம் போயின யாவும்

 

xxx

 

8.பெரியாருடன் கூடல் பேரின்பம் தாமே

 

xxx

 

9.யாகாவாராயினும் நா காக்க

xxx

  1. தமிழுக்கும் அமுதென்ற பேர்- அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

 

xxx

 

 

 

 

ANSWERS

1.காளமேகம், 2. சங்க கால அவ்வையார், 3. பெரியாழ்வார், திருமொழி, திவ்யப் பிரபந்தம் 4. கம்பன், கம்ப ராமாயணம், 5. இளங்கோ, சிலப்பதிகாரம், 6. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 7. பாரதி, பாரதியார் பாடல்கள், 8. திருமூலர் எழுதிய திருமந்திரம் 9. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 10. பாரதிதாசன்

 

 

 

சிறப்பாக வாழ, சிரித்து மகிழுங்கள் (Post No.4634)

Date: 19 JANUARY 2018

 

Time uploaded in London- 6-39 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4634

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நகைச்சுவையே நல்ல மருந்து!

 

சிறப்பாக வாழ, சிரித்து மகிழுங்கள்!

 

ச.நாகராஜன்

 

1

நகைச்சுவை உணர்வு இருந்தால் தான் இந்த உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைச் சீருடனும் சிறப்புடனும் இருக்குமாறு அமைத்துக் கொள்ள முடியும்.

 

சிறப்பாக வாழ, சிரித்து மகிழுங்கள்!

 

நல்ல நல்ல நகைச்சுவை புத்தகங்களைப் படித்தல், ஜோக் புத்தகங்களை வாங்கிச் சேகரித்து வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது படித்து மகிழ்தல், நல்ல ஜோக்குகளை பத்திரிகைகளிலிருந்து எடுத்து சேகரித்தல் போன்றவற்றால் ஒரு ஜோக் களஞ்சியம் எப்போதும்ச் நம்மிடம் இருக்கும்.

எனது ஜோக் களஞ்சியத்திலிருந்து சில உதிரிகளை இங்கு உதிர்த்து விடுகிறேன் – படித்து மகிழ!

 

நகைச்சுவையில் பல ரகம் உண்டு.

இதைப் பற்றி மிகத் தீவிரமாக் ஆய்ந்து எத்தனை வகை என்று கூறும் அறிஞர்களும் உண்டு.

 

இப்போது நாம் பார்க்கும் நகைச்சுவை என்ன வகை என்பதைப் படித்து முடித்த பின்னர் நீங்களே கூற முடியும்.

2

க்ரிமால்டி என்பவர் உலகின் மிகச் சிறந்த காமடியன். அவர் ‘ஷோ’க்களுக்குச் சென்று சிரிக்காமல் திரும்ப வரவே முடியாது.

அவரைப் பற்றிய் ஒரு ஜோக் இது!

 

There is a famous story told of Grimaldi, a well known comedian.

He went to consult a famous doctor, asking for some cure for acute melancholia.

The doctor suggested: “Go, and see Grimaldi.”

“Alas! I am Grimaldi” replied the patient.

 

3

A one –eyed doctor greeted a patient with “How are you?”

“As you see,” replied the latter.

“Then”, said the doctor, “If you are as I see, you are half dead.”

 

4

A beautiful girl was attending the lectures of a Greek philosopher. A grain of dust flew into her eye.

She begged the professor’s aid for its removal and as he stooped to the gallant task some one cried, “Do not spoil the pupil.”

 

 

 

5

When Dr Barton Warren was informed that Dr Vowel was dead, he exclaimed, “What! Vowel dead? Well, then heaven it was neither you nor I.”

 

 

6

Burke, when pressed by a shopkeeper for the payment of a bill, or for the interest at least, if not for the principal, produced a masterpiece.

“Sir”, he said, “it is not my principle to pay the interest, or my interest to pay the principal.”

 

7

Hurrying to office a busy executive was pestered by his wife to say what time he would be home.

About 7 or 8 or may be 9, he muttered.

“And what is the occasion that leaves you in the such doubt about your forward movements?”

“A meeting of the Society for Long Range Planning.”

 

 

8

A contractor wanted a favour from a Government official.

He tried to offer a small token of appreciation.

He offered the official a nice foreign sports car.

The official bristled and said he could not accept such a gift as it would be a bribe.

The contractor said, “Would it be all right if I sold you the car?”

The official asked for how much.

The contractor said,”One Hundred rupees.”

“The official promptly replied : “in that case, I will take two.”

 

9

ஜோக்குகளைச் சேர்த்து அவ்வப்பொழுது ரசியுங்கள் – சிரித்து மகிழ!

குறிப்பு:  மேலே உள்ளவற்றில் 2 முதல் 6 முடிய : Sun 24-7-1993 இதழில் Inder Mohan Puri  அளித்த ஜோக்குகள்.

7 – ரீடர்ஸ் டைஜஸ்ட் ஜனவரி 1974 இதழில் வந்தது.

8 – ஹிந்து 12-1-1998 தேதியிட்ட இதழில் திரு எஸ். கிருஷ்ணன் அளித்த ஜோக்!

 

 

10

இது போல லட்சத்திற்கும் மேற்பட்ட ஜோக்குகளை சேகரித்துள்ள ஒருவரை எனக்குத் தெரியும்!

அவர் தான் எனது அண்ணன் திரு S.சீனிவாசன், அசோக் நகர், சென்னை.

 

வீடு முழுவதும் ஜோக் புத்தகங்கள்! போதாததற்கு தடி தடியான் ஜோக்குகளை ஒட்டியுள்ள  கணக்கற்ற வால்யூம்கள்!

சிரித்துச் சிரித்து மகிழலாம்!

***

 

பாரதி போற்றி ஆயிரம் – 30 (Post No.4633)

Date: 19 JANUARY 2018

 

Time uploaded in London- 6-18 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4633

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 30

  பாடல்கள் 169 முதல் 173

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

 பாரதியைக் கண்டேன் (இறுதிப் பகுதி)

 

பாரதி :-

ஆற்று வாரிலை தேற்று வாரிலை

     அலறி நெஞ்சினை மாற்று வாரிலை

காற்றி லேறிஅவ் விண்ணையுஞ் சாடுவான்

     கடல்க டந்த நாடுகள் பலவினும்

தூற்று கின்ற உமியெனப் பறப்பதும்

     சொந்த நாட்டின் அரசி லிருப்பவர்

சோற்றி லான பிண்டங்க ளாயவர்

     துயரை நீக்க வழியிலா திருப்பதும்

 

கண்டு கண்டு வேகிறேன்! தம்பி!இஅக்

     காத கர்தமை நம்பி என் பிள்ளைகள்

துண்டு துண்டாய் வீழ்கிறார் பாரடா!

     சூழி லங்கை நாட்டினைப் பாரடா!

அண்டை யுள்ள நாட்டினில் சாகிறான்!

     அண்ண னோவெறும் மாடுபோல் நிற்கிறான்!

கண்ட துண்டோ எங்கணும், இத்தகு

     கைக ளற்ற கோழையர் குழுவினை?

 

ஆங்கி லர்க்கு வேறொரு நாட்டினில்

      அவதி நேர்ந்ததென் றறிந்த வேளையில்

வீங்கு தோளுடன் ஆங்கில நாட்டினர்

      வேலெ டுத்துப் பாய்வரே! தம்பி நீ

ஓங்கி நின்ற தமிழரின் பிள்ளையாய்

      உடலெடுத்தும் என்னடா புண்ணியம்?

பாங்கி லாதவன் பகுத்தறி வற்றவன்

      பைந்த மிழ்த்திரு நாட்டினை ஆள்கிறான்!

 

எண்ண எண்ணத் துடிக்கிற தேயடா!

      எந்த நாட்டினில் இந்த அநீதியை

மண்ணில் வீழ்ந்த மழையெனப் போற்றுவர்!

      மடையர்! சீச்சீ! தமிழ ராஇவர்!

புண்ணை உண்டு புன்பசி ஆற்றிடும்

      புல்ல ரென்று சொல்வதே மெய்ப்பொருள்!

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிடும்

      கல்வி யற்றவர் தாயகம் தென்னகம்!

 

(வேறு)

பாரதி உரைத்த இந்தப்

    பாடலைக் கேட்டேன்! நெஞ்சின்

வேரதிர்ந் ததடா! எங்கள்

    வியன் தமிழ் நாடே உன்னைப்

பாரதப் பூசை செய்யும்

    பாவிகள் கையி னின்று

கூறுபோட் டெடுத்தா லன்றிக்

    குறையற வழியே இல்லை!

             (இந்தக் கவிதை முற்றும்)

குறிப்பு: இந்தக் கவிதையில் வரும் கவிஞரின் கருத்துக்கள் பல அவரால் பின்னர் மாற்றிக் கொள்ளப்பட்டன!

 

கவிஞர் கண்ணதாசன்: கவியரசு கண்ணதாசன் 5000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 5000க்கும் மேற்பட்ட இதர பாடல்களையும் புனைந்தவர். தமிழ்நாட்டில் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். தோற்றம்: 24-6-1927 மறைவு: 17-10-1981. இதழ் ஆசிரியர். பல காவியங்களைப் புனைந்தவர். நாவல் ஆசிரியர். பல சிறந்த நூல்களை எழுதியவர். பல விருதுகளை வென்றவர்.சிறந்த பேச்சாளர்.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்

***

 

 

எந்த திசை நோக்கி அமர்ந்து உண்டால் என்ன கிடைக்கும்? மநு தரும் அதிசய தகவல்! (Post.4632)

 

Written by London Swaminathan 

 

Date: 18 JANUARY 2018

 

Time uploaded in London  7-54 am

 

 

 

Post No. 4632

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

மநு நீதி நூல்- Part 11

எந்த திசை நோக்கி அமர்ந்து உண்டால் என்ன

கிடைக்கும்? மநு தரும் அதிசய  தகவல்! (Post.4632)

மநு நீதி நூல் இரண்டாம் அத்யாயம் தொடர்ச்சி

 

163.பிராமணர்கள் வில்வம் அல்லது பலாச மரத்தால் ஆகிய தண்டத்தையும் (கையில் வைத்திருக்கும் குச்சி), க்ஷத்ரியர்கள் ஆல், கருங்காலியால் ஆகிய தண்டத்தையும், வைஸ்யர்கள் அத்தி, இரளி ஆகிய தண்டத்தையும் வைத்திருக்க வேண்டும். ஆனால் இரண்டில் ஒரு தண்டம் மட்டுமே இருக்கலாம்.. (2-45)

164.தடியின் அல்லது குச்சியின் உயரம் பிராமணன், க்ஷத்ரியன், வைஸ்யன் ஆகியோருக்கு தலை, நெற்றி, மூக்கு அளவில் இருக்க வேண்டும்.

 

165.இந்த குச்சிகள் வடுக்கள் இல்லாததாகவும், கோணல் இல்லாமலும், அழகானதாகவும், தீயினால் கருகாததாகவும், பார்ப்போருக்குப் பயம் ஏற்படுத்தாததாகவும் இருக்க வேண்டும். மேலும் அந்தந்த மரத் தோலுடன் இருக்க வேண்டும்.

 

166.அவரவர்க்குரிய தண்டத்துடன் புறப்பட்டு, சூரியனை நமஸ்கரித்து, அக்னியை (தீ) வலம் வந்து அவரவர்களுக்குரிய கோஷங்களுடன் பிச்சை கேட்க வேண்டும்.  இனி சொல்லப் போகிற விதிப்படி பிச்சை கேட்க வேண்டியது.

 

  1. பிராமணன் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்றும், க்ஷத்ரியன் பிக்ஷாம் பவதி தேஹி என்றும், வைஸ்யன் தேஹி பிக்ஷாம் பவதி என்றும் சொல்லி பிச்சை கேட்க வேண்டும் (Permutation combinations!)

168.பூணூல் போட்டவுடன் எடுக்கும் முதல் பிச்சையை தாயிடம், அல்லது அவளுடைய சஹோதரிகளிடம், அல்லது தனது சொந்த சஹோதரியிடம் செய்ய வேண்டும். இவர்கள் இல்லாத பட்சத்தில் அந்த மாணவன் மீது அன்புடையோரிடம் எடுக்க வேண்டும்.(2-50)

 

169.இவ்வாறு மூன்று பேரிடம், போதுமான அளவு வாங்கிய பின்னர், அதை குருவுக்கு நிவேதனம் செய்து, கிழக்கு முகமாக அமர்ந்து ஆசமனம் செய்துவிட்டுப் புசிக்க வேண்டும்.

 

  1. ஆயுளை விரும்புபவன் கிழக்கு முகமாகவும், கீர்த்தியை (புகழ்) விரும்புபவன் தெற்கு முகமாகவும், சம்பத்தை (செல்வம்) விரும்புபவன் மேற்கு முகமாகவும் சத்தியத்தை விரும்புபவன் வடக்கு முகமாகவும் அமர்ந்து சாப்பிடுக.

 

171.இரு பிறப்பாளன் (மூன்று வருணத்தார்) தினமும் கைகால் கழுவி, உணவைப் பூஜித்துவிட்டு, பரிசேசனம் செய்து அன்னத்தை உண்ண வேண்டும்; பின்னர் ஆசமனம் செய்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்

(பரிசேசனம்+ மந்திரம் சொல்லி நீரால் அன்னத்தைச் சுற்றுதல்.

ஆசமனம்; கையில் உளுந்து மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் எடுத்து மந்திரம் சொல்லி உண்ணல்).

 

 

172.தினமும் உண்ணும் உணவு இறைவனின் வடிவம் (பரப் பிரம்ம ஸ்வருபம்) என்பதால் உணவை நிந்திக்கக்கூடாது. அதைப்போற்றிப் புகழ்ந்து, பார்த்து, சந்தோஷத்துடன் உண்ண வேண்டும்.

 

173.அன்னத்தைப் பூஜித்து உண்டால் தைரியமும் உணவின் சத்தும் (பலன்) கிடைக்கும்;  இல்லாவிடின் இது அழிந்துபோகும்

 

174.தான் உண்ட மிச்சத்தை எவனுக்கும் இடக்கூடாது. இரவும் பகலும் மட்டும் இரண்டே முறைதான் சாப்பிடலாம். அதிகமாகப் புசிக்ககூடாது; அதிகமாக உண்பது இக, பர லோக நன்மைகளைத் தராது.

எனது கருத்துகள்:

 

மநு ஒரு பெரிய உளவியல் நிபுணன் (great Psychologist). மநு ஒரு பெரிய விஞ்ஞானி- அறிவியல் வித்தகன் (great scientist); மநு ஒரு டாக்டர் (physician). எப்படி?

 

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? என்றனன் வள்ளுவன்.

 

மூன்று வர்ணத்து பாலகர்களும் முதலில் பிச்சை எடுப்பது அம்மாவிடமோ சின்னம்மாவிடமோ அல்லது பெரியம்மாவிடமோ, அவர்கள் வராவிடில் அல்லது அப்படி உறவுகள் இல்லாவிடில் சொந்த சஹோதரியிடமோ செய்ய வேண்டும். அவர்களும் பூணூல் விழாவுக்கு வரவில்லையென்றால் உன்னிடம் அன்பு பாராட்டுவரிடம் முதல் பிஷையை வாங்கிக்கொள்! என்ன அற்புதமான அறிவுரை!!

 

பச்சிளம் பிராஹ்மணப் பையன், அல்லது க்ஷத்ரியப் பையன் அல்லது வைஸ்யப் பையன் முதல் நாளிலேயே தெருவில் சென்று பிச்சை எடுத்து, அவர்கள் சீ’, போ!’ என்று சொல்லிவிட்டால் அந்த இளம் உள்ளம் எவ்வளவு வருந்தும்? இந்த அற்புதமான உண்மை தெரிந்த அன்பே உருவான மாபெரும் ரிஷி மநு!

 

மஹா அற்புதம்; அவர் ஒரு மாபெரும் ஸைகாலஜிஸ்ட் (Psychologist).

 

எந்த திசையில் அமர்ந்து எந்த திசையை நோக்கி உணவு அருந்தினால் என்ன கிடைக்கும் என்றும் சொல்கிறார். அவர் ஒரு பெரிய டாக்டர். இன்னும் விஞ்ஞானம் கண்டு பிடிக்காத விஷயங்களை அவர் ஞான த்ருஷ்டியில் கண்டு நமக்கு வழங்கியுள்ளார். இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் நியூ ஸைன்டிஸ்ட் அல்லது ஸைன்டிபிக் அமெரிக்கன் (New Scientist or Scientific American) பத்திரிக்கையில் “திசையும் உணவும்” என்று ஆராய்ச்சிக் கட்டுரை வரும்போது நாம் வியப்போம்; அன்றே சொன்னார் எங்கள் மநு என்று!

மநு ஒரு பெரிய பொடானிஸ்ட் (Botanist); அவரது தாவரவியல் அறிவு வியக்கத்தக்கது. மரம் வளர்ப்பது பற்றியும், மரங்களை வெட்டுவது பாவம் என்றும் வரப்போகும் அத்தியாயங்களில் விளம்புவார். இப்போது எந்த ஜாதிக்காரன் எந்த குச்சி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மொழிவது அவர்தம் தாவரவியல் அறிவுக்குச் சான்று

 

 

இங்கே மேலும் ஒரு கருத்தையும் சுட்டிக் காட்டுவேன். மநு தர்ம சாஸ்திரம் 2200 ஆண்டுகளுக்கு முந்தையது எனது மேலை நாட்டாரும், அவர்தம் அடிவருடும் அரை வேக்காடுகளும் சொல்லும்.

 

ஆனா மநுவோ மூன்று ஜாதியினரும் பூணூல் போடுவது, கையில் தண்டம் வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பது, ஒவ்வொருவரும் வெவ்வேறு வாக்கியங்களுடன் பிக்ஷை எடுப்பது,  பற்றி எல்லாம் பகர்கின்றார். இந்த வழக்கங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன் கூட இருந்ததில்லை. அப்படி இருந்தால் அது புத்தர், மஹாவீரர் கதைகளில் வரும்; அவர்கள் க்ஷத்ரியர்கள்; சம்ஸ்கிருத நாடகங்களில் வந்திருக்கும்.

முன்னரே சொன்னேன்; மநு ஸரஸ்வதி நதியின் முழு நீளம் பற்றிப் பேசுகிறார். மனைவியை எரிக்கும் உடன்கட்டை வழக்கம் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. மேலும் ரிக் வேதத்தில் பல மநுக்களைப் பற்றிய குறிப்புகள் உள. ஆகையால் ஒரிஜினல் மநு நீதி நூல் மிகவும் பழையது; அதில் பல இடைச் செருகல்கள் நுழைக்கப்பட்டுள்ளன. அதுவே இன்று நம் கைகளில் தவழ்கிறது என்பது என் வாதம்.

மேலும் பிராமணர்கள் இன்று அரச மரக் குச்சியையே கையில் வைத்துப் பூணூல் கல்யாணம் நடத்துகின்றனர். மற்றவர்கள் நடத்துவதும் இல்லை. இந்தக் குச்சி, பிச்சிசை எடுக்கும் முறை, வேதக் கல்வி ஆகியனவும் அவர்களிடையே இல்லை.

 

இவை எல்லாம் எந்தக் காலத்தில் விடுபட்டது? என்பதை ஆராய்ந்தால் மநுவின் பழமை விளங்கிவிடும்!

 

இன்று டெலிவிஷன் பார்த்துக்கொண்டே உண்ணுவதால் ஏற்படும் தீங்குகளை பிரபல ஹிப்னாடிஸ்ட் (Hypnotist) பால் மக்கென்னா சொன்னதை ஏற்கனவே ஒரு கட்டுரையில் தந்துள்ளேன். உணவை வணங்க வேண்டும்; புகழ வேண்டும்; சந்தோஷத்துடன் கண்ணால் பார்த்து உண்ண வேண்டும்– இவை எல்லாம் இன்று எடையைக் குறைக்க நவீன விஞ்ஞானம் சொல்லும் உத்திகள்; இதைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மநு சொல்லிவிட்டார்! மேலும் உணவை நிந்திக்கக் கூடாது என்பதால் தாயையும் மனைவியையும் சமையல் அறையில் ஏசும் வழக்கமும் அறுபட்டுப் போகும். மநு மாபெரும் ஸைகாலஜிஸ்ட் (Psychologist) ; பெரிய விஞ்ஞானி! எதைச் சாப்பிட வேண்டும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று சொல்லும் உணவியல் நிபுணன் (Dietician). மாணவர்கள் அதிகம் புசிக்கக் கூடாது; அளவோடு உண்டால்தான் மூளையில் பாடங்கள் பதியும் என்கிறான்; இது மேல் உலகிலும் உதவும் என்பான்.

இப்போது நாம் ஏற்றுக் கொண்ட நவீன மநு– அம்பேத்கரின்– அரசியல் சட்டத்தையே பார்லிமெண்ட் பலமுறை திருத்திவிட்டது! ஆகவே ஒரிஜினல் மநுவும் பல முறை திருத்தப் பட்டிருக்கும். இந்த மநு நூலின் சில ஸ்லோகங்களை மட்டும் எடுத்துக் காட்டும்- திராவிடங்களையும் மார்கஸீயங்களையும் பார்த்து அழுவதா சிரிப்பதா?

 

இரண்டாயிரத்து அறுநூற்று எண்பைத்தைந்து ஸ்லோகங்களில் சுமார் 200 மட்டுமே கண்டுள்ளோம்; இனியும் வரும்!!! பல வியப்பான விஷயங்கள் வரும்!!!

TAGS—உணவு, திசை, தண்டம், குச்சி, பிராமண, க்ஷத்திரிய, வைசிய, பூணூல்

–தொடரும்………………

DON’T HATE YOURSELF AND OTHERS- MANU, BUDDHA, CHANAKYA & VALLUVAR AGREE! (Post 4631)

DON’T HATE YOURSELF AND OTHERS- MANU, BUDDHA, CHANAKYA & VALLUVAR AGREE! (Post 4631)

 

Written by London Swaminathan 

 

Date: 18 JANUARY 2018

 

Time uploaded in London  6-18 am

 

 

 

Post No. 4631

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

Hatred to oneself leads to death;

to another person loss of wealth;

to the king to destruction and

to a Brahmin to the destruction of the family

–Chanakya Niti, chapter 10, sloka 11

aatmadveshaad bhavenmrtyuh paradveshaad dhanakshyah

rajadveshaad bhavennaaso brahmadveshaat kulakshayah

 

We know that if someone hates oneself, it leads to one’s suicide; if one hates others it leads to conflicts and clashes resulting in destruction of life or property.

 

The message is any form of hatred creates problems.

Buddha in Buddhist Veda Dhammapada and Tiruvalluvar in Tamil Veda Tirukkural deal with this topic. It shows the importance of the topic.

The opposite of hatred is Love.

 

Chanakya dealt with hatred in only one couplet/ sloka.

 

Tamil poet Tiru valLuvar deals with this topic in ten couplets!

 

Valluvar says,

Out of hatred arise all evils; out of love comes the glory that is called discreteness- Kural 860

“The evil of hatred is the grief of griefs. If it is rooted out, you can enjoy the joy of joys (854)

Nip in the bud the feeling of hostility and you prosper well. FOr one is fast ruined by fomenting hatred – Kural 858

 

Buddha said,
For hate is not conquered by hate; hate is conquered by love. This is a law eternal (Dhammapada1-5)

 

Valluvar said,
The best punishment for those who do evil to you, is to shame them by returning good for evil (Kural 314).

 

Manu hates Hatred!

Manu, the author of the world’s first book on law—Manu Smrti deals with hatred in more places than the Buddha.

 

In the very beginning he says law book is ‘only for those who are without passion or hatred’!

 

“Learn the religion that is constantly followed by learned men, good men who have neither passion nor hatred”- Manu 2-1

“If someone speaks wrongly and someone questions wrongly, one of them will die or incur other’s hatred “ 2-11

“By obstructing his sensory powers, destroying passion and hatred, and doing no violence to living beings, he becomes fit for immortality”- 6-60

 

“The man who is deluded to hate the king will certainly be destroyed, for the king quickly makes up his mind to destroy him” – Manu 7-12

 

“ A husband should wait for one year for a wife  who hates him; but after a year, he should take away her inheritance and not live with her”- 9-77

“Satva Guna is traditionally regarded as knowledge, Rajo Guna as hatred and passion, Tamo Guna as darkness and ignorance”– Manu 12-26

Duryodhana was an embodiment of hatred and jealousy; Yudhishthira was a symbol of love and righteousness. Duryodhana destroyed himself; Yudhishthira survived! This is a lesson from the Mahabharata.

If you want to live without problems, don’t hate anyone.

 

–subham–

 

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 9 (Post No.4630)

Date: 18 JANUARY 2018

 

Time uploaded in London- 5-41 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4630

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 9

முந்தைய கட்டுரைகள்: முதல் கட்டுரை எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17

நான்காம் கட்டுரை எண்  4472  – வெளியான தேதி :    9-12-17

ஐந்தாம் கட்டுரை எண் 4511 – வெளியான தேதி : 18-12-17

ஆறாம் கட்டுரை எண் 4546 – வெளியான தேதி : 26-12-2017

ஏழாம் கட்டுரை எண் 4574 – வெளியான தேதி : 2-1-2018

எட்டாம் கட்டுரை எண் 4597 – வெளியான தேதி : 9-1-2018

 

பரிச்சேதம், வஸ்துக்கள், சத்துக்கு ஆனந்தத்துவம் ஆகியவற்றின் விளக்கம்!

ச.நாகராஜன்

 

 

இனி பரிச்சேதம், வஸ்துக்கள், சத்துக்கு ஆனந்தத்துவம் பற்றித் தெரிந்து கொள்வோம்

*

ஐயா, பரிச்சேதம் என்றால் என்ன?

வரம்பு அல்லது பிரிவு அல்லது பாகம் எனலாம்.

தேச, கால, வஸ்து பரிச்சேதம் மூன்றும் இயற்கையில் தேகத்திற்கே தவிர பரிபூரனணாகிய பிரதியேகாத்மாவுக்கு பரிச்சேத திரயம் (திரயம் என்றால் மூன்று என்று பொருள்) இல்லை.

ஆகவே, தேசத்தினாலாவது,

காலத்தினாலாவது,

வஸ்துவினாலாவது

பிரிக்க அல்லது பாதிக்கப்படாதது எதுவோ அதுவே பிரம்மம்.

ஆத்மா சர்வ வஸ்துக்களுக்கும் ஆத்மாவாக இருக்கின்றபடியால் பரிச்சேதம் இல்லை.

 

வஸ்துக்கள் என்றீர்களே, அவைகள் எவை?

ஸஜாதீய பேதம்,

விஜாதீய பேதம்,

சுவகத பேதம் என்று இப்படி மூன்று வகை வஸ்துக்கள் உண்டு.

 

அவைகளின் விவரம் என்ன?

 

ஒரு மரத்திற்கு மற்றொரு மரம் ஸஜாதீய பேதம் ஆகும்.

மரத்திற்கு கல் என்பது விஜாதீய பேதம் ஆகும்.

ஒரு மரத்திற்கு அதன் இலை, பூ, காய், கனி முதலியன சுவகத பேதம் ஆகும்.

இந்த மூன்று வித பேதங்களும் ஆத்மாவுக்கு இல்லை.

ஆகவே ஆத்மாவுக்கு வஸ்து பரிச்சேதம் இல்லை.

 

அது எப்படி?  ஒரே சைதன்னியமானது பிரம்ம சைதன்னியமாயும், ஈஸ்வர சைதன்னியமாயும், ஜீவ சைதன்னியமாயும் இருக்கும் போது ஸஜாதீய பேதம் இருக்கிறதல்லவா?

மேலும் ஆத்ம ஸ்வரூபம் பிரம்மம் என்றும், அநாத்ம ஸ்வரூபம் பிரபஞ்சம் என்றும் இரண்டு விதமாக இருக்கும் போது விஜாதீய பேதம் இருக்கிறதல்லவா?

அன்றியும், பிரம்மத்திற்கு சத், சித், ஆனந்தம் என்று  மூன்று இருக்கின்றபடியால் சுவகத பேதமும் இருக்கிறதல்லவா?

இப்படி மூன்று வித பேதங்களும் இருக்கும் போது, பேதங்களே இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

ஆகாயம் ஒன்றானாலும், உபாதி பேதத்தினால், மேக ஆகாயம் (மேகாசம்), மட ஆகாயம் (மடாகாசம்), கட ஆகாயம் (கடாகாசம்)  என்ற பேதங்களைக் காண்பதைப் போல, சைதன்னியம் ஒன்றானாலும் மாயோபாதியினால் பிரம்மம் என்றும், ஈஸ்வரன் என்றும், அவித்தியோபாதியினால் கூடஸ்தன் என்றும் ஜீவன் என்றும் சொல்கிறோம்.

ஸஜாதீய பேதம் தோற்றமே தான்.

மேலும் கயிறன்றி அதில் பாம்பு என்கின்ற தோற்றம் எப்படி இல்லையோ அப்படி ஆத்மாவன்றி அநாத்மா இல்லை. ஆகவே விஜாதீய பேதம் இல்லை.

அதிஷ்டானத்தைத் தவிர ஆரோபிதம் என்பதெல்லாம் மித்தையே.

அதாவது பொய்யே. (மித்தை என்றால் பொய்)

ஆத்மா சாக்ஷி கூடஸ்தன்.

பாரமார்த்திகன்.

பிராக்ஞன்.

பிரம்மம்.

சச்சிதானந்த நித்தியன்.

ஏகன்.

பூரணன்.

ஆகவே சுவசுத பேதமில்லை.

அப்படியானால் ஆத்மா சத் ரூபன்,  சித் ரூபன், ஆனந்த ரூபன் என்று ஏன் அடிக்கடி சொல்ல வேண்டும்? ஒரே உபதேசம் போதாதா?

ஆத்ம ஸ்வரூபமான சத்துவத்தை ஜகத்திலும்,

சித்துவத்தை ஜடங்களாகிய புத்தி ஆதிகளிலும்

ஆனந்தத்துவத்தை புத்திர, பாரி (மனைவி) ஆதிகளிலும்

அப்படியே, ஜகத் ஸ்வபாவமாயுள்ள அசத்துவத்தையும், புத்தி ஆதிகளிலுள்ள ஜடத்துவத்தையும், புத்திரபாரியாதிகளிலுள்ள துக்கத்துவத்தையும்,

சச்சிதானந்த ஸ்வரூபமான ஆத்மாவினிடத்திலும் பரஸ்பரம் விபரீதமாக  ஆரோபிக்கிறபடியால் இந்த பிராந்தி நிவர்த்தியின் பொருட்டு சொல்லப்பட்டது.

 

நல்லது, சத் தானாகவே விளங்குகிறதா? அல்லது மற்றொன்றினால்  விளங்குகிறதா?

சத்தே சித்தாகும்.

சத்தே சித்து. சித்தே சத்து.

அது தானாகவே விளங்குகிறது.

 

தானாக விளங்குகின்ற சத்துக்கு ஆனந்தத்துவம் எப்படி ஐயா?

சத்துக்கு இரண்டாவது வஸ்து இல்லை.

ஆகவே ஆனந்தத்துவம் பூரணமாக இருக்கிறது.

ஆகவே ஒன்றான சத்துக்கு இரண்டாவது இல்லாததினால் அத்வைதத்துவமும் உண்டாம்.

அதனால் பூரணத்துவமும் சித்தம்.

இப்படிப்பட்ட பரிபூரணானந்த ஆத்மாவுக்கு துக்கம் ஆகந்துகம்.

அந்த துக்கம் சரீரத்தினாலும்,

சரீரம் கருமத்தினாலும்,

கருமம் இராக, துவேஷாதிகளினாலும்,

ராகாதிகள் அபிமானத்தினாலும் வந்தது என்று அறிக!

அப்படி அறிந்து அந்த அஞ்ஞானத்தை ஞானத்தினால் நிவர்த்தியாக்க வேண்டும்.

அந்த ஞானமே விசாரத்தினால் உண்டாகிறதென்றும்,

ஆத்மா சச்சிதானந்த ஸ்வரூபம் என்றும்,

தேகாதி பிரபஞ்சம்  அந்த ஜட துக்க ரூபமானதென்றும்,

இந்த பிரபஞ்சமானது அத்தியாரோப்பியமென்றும்

விசாரித்து, தத்துவம் பத வாக்கியார்த்தத்தினால்  உண்டாகும் ஞானத்தினால்,

“நானே பிரம்மம்” என்னும் தன்னுடைய பரோக்ஷ ஞானானுபவத்தினால்

சாக்ஷாத்காரமாகிய அபரோக்ஷ ஞானம் எதுவோ  அதை அடைகின்றவனே

பரம குரு எனவும் பரமஹம்ஸர் என்றும்  சொல்லப்படுகிறான்.

ஆகவே அனைவரும் ஆத்ம தத்துவத்தைக் கேட்டு, மனனம் செய்து,

தியானித்து, சாக்ஷாத்காரம் செய்து கொண்டு,

நித்திய சுத்த புத்த முக்த சத்திய பரமானந்த அத்துவய பிரம்மஸ்வரூபமாய் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

 

ஐயா! நன்றி. நன்றி. நன்றி. அருமையான அத்வைத சாரத்தை இவ்வளவு நல்ல முறையில் விளக்கியதற்கு மீண்டும் நன்றி.

நன்றி.

***

அத்வைத சார விளக்கம் முற்றிற்று.

***

அன்பர்கள் நிதானமாக, ஒவ்வொரு விஷயமாகப் படித்து, அதை ஆழ்ந்து சிந்தித்து, பல துணை நூல்களையும் படித்து அத்வைத ஆனந்தம் சித்திக்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்

***

முடிவுரை:

ஒரு சுவாரசியமான புத்தகம்.

சுமார் நூற்றியிருபது ஆண்டுகளுக்கு முன்னர் 1898ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட புத்தகம்.

கோயமுத்தூரைச் சேர்ந்த திரு எஸ்.பி.நரசிம்மலு நாயுடு அவர்கள் எழுதிய  ‘ஹிந்து பைபில்’ என்ற புத்தகம் எனக்குக் கிடைத்தது.

அதில் உபநிடதக் கருத்துக்கள், அத்வைத, த்வைத சார விளக்கம் உள்ளிட்டவை விளக்கப்பட்டுள்ளன.

அதில் இருந்த அத்வைத சார சங்க்ரஹ விளக்கத்தையே சற்று தமிழ் நடையை எளிதாக்கி, சில பிழைகளைத் திருத்தி, இறைவன் அருளால் ஒரு தொடராக அளிக்க முடிந்தது.

இந்தப் புத்தகத்தை வரவேற்று அந்தக் கால பத்திரிகைகள் – சுதேசமித்திரன் உள்ளிட்ட பத்திரிகைகள் – நல்ல மதிப்புரையைத் தந்துள்ளன.

நமது நன்றியை திரு எஸ்.பி.நரசிம்மலு நாயுடு அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறோம்.

புத்தகம் மக்கி மறைந்து போகும் நிலையில் அதன் ஒரு சிறு பகுதியை அளிக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தத் தொடரை படித்த அன்பர்களுக்கு எனது நன்றி.

அன்பர்களின் கருத்துக்களை வரவேற்கிறோம்.

அன்பன் ச.நாகராஜன்

***

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 29 (Post No.4629)

Date: 18 JANUARY 2018

 

Time uploaded in London- 5-33 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4629

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

பாரதி போற்றி ஆயிரம் – 29

  பாடல்கள் 165 முதல் 168

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

 பாரதியைக் கண்டேன் (தொடர்ச்சி)

 

வாழ்பவர்க்குச் சோறுத ராதவன்!

    மாண்ட வர்க்குமண்டபம் கட்டுவோ

ஆள்ப வர்க்குத் துதிபல பாடுவோன்

     அச்ச மென்பதன் அரும்பெறல் மைந்தனாம்!

சூழ்சு டற்புவி தனைஇவன் முன்னையர்

     துளைத்த காதையைச் சொல்வத லாலொரு

வாளெடுக்கும் திறனுமில் லாதவன்

    வம்பெ தற்கென ஒதுங்கியே செத்தவன்!

 

 

அன் றிலங்கையை ஆயிர மாயிரம்

     ஆனை தானைகள் வென்றதைச் சொல்லுவான்!

இன்றி லங்கையில் ஆதர வற்றவன்

     இன்ன வன் துணைத் தம்பிய ரல்லரோ?

இன்னும் இந்தத் திசைகல் எட்டினும்

     இழிந்தி ருப்பவன்! தமிழர் திருமகன்,

வென்றி கொண்ட வீரனின் பிள்ளையாம்!

      வீணர் சொன்ன பொய்மைக் கதையடா!

 

 

இருவர் சேர்ந்தங் கொருவரை மற்றவர்

       ஏற்றிப் பாடும்பரஸ்பர முகஸ்துதி

தரும மானது தமிழரின் நாட்டினில்!

       தம்பி நீஇவர் தலைகவிழ்ந் தாரெனப்

பொருமிச் சாவதும் போர்செயச் செல்வதும்

      பொருத்த மற்றதுன் பெற்றவர் உற்றவர்

கரும மட்டும் கணக்கினி லேற்றுவாய்

      கண்கள் மூடுமுன் கவலைகள் மாற்றுவாய்!

 

 

யான்:

 

சோர்ந்து கூறும் சொற்களோ பாரதி?

      தூய தேன் தமிழ்ப் பாவினம் பற்பல

ஆய்ந்து வைத்தவன், அன்னையின் நாட்டினர்

       அடிமை தீர்த்திடும் போர்முர சானவன்

வேய்ந்த கூரையாய் வெள்ளொளிக் கைகளால்

        வீர நாட்டினைக் காக்கத் துடித்தவன்

தேர்ந்த பாவலன் செந்தமிழ்ச் சாரதி

       சிந்தை நொந்தியோ செப்படா பாரதி!

 

            (கவிதையின் இறுதிப் பகுதி அடுத்து வெளிவரும்)

 

கவிஞர் கண்ணதாசன்: கவியரசு கண்ணதாசன் 5000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 5000க்கும் மேற்பட்ட இதர பாடல்களையும் புனைந்தவர். தமிழ்நாட்டில் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். தோற்றம்: 24-6-1927 மறைவு: 17-10-1981. இதழ் ஆசிரியர். பல காவியங்களைப் புனைந்தவர். நாவல் ஆசிரியர். பல சிறந்த நூல்களை எழுதியவர். பல விருதுகளை வென்றவர்.சிறந்த பேச்சாளர்.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

***

 

The Man Who ‘Discovered’ Yosemite! (Post No.4628)

Picture of Yosemite in U S A

Compiled by London Swaminathan 

 

Date: 17 JANUARY 2018

 

Time uploaded in London  8-12 am

 

 

 

Post No. 4628

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

Travel Anecdotes

 

YOSEMITE

One day in Yosemite valley, a traveller was told that there was an old man in the office of the hotel who in 1851 had been one of the company that had discovered the Yosemite. Eagerly he seized the opportunity of finding out what it was like to be the first of civilised men to behold one of natures most marvellous works. It must have been wonderful, he said, to have the valley burst suddenly upon you.

 

The old man spat over the edge of the veranda and looked reflective for a moment.

Well, he said, I will tell ye. If I ‘d ha’ knowed it was going to be so famous I ‘d ha’ looked at it.

 

Xxxx

 

GRETA GARBO

A tourist journeyed by camel to see the great pyramids. He was swept away by the beauty of the desert night and the work a day world seemed to fade away from his remembrance. After absorbing all the glamour of the experience and desiring to preserve every detail of the dream like world in which he found himself, he remounted his steed, at the same time asking his Arab guide,

What is the name of my camel?

Greta Garbo, replied the guide.

 

Greta Garbo was a famous actress and she said,”I never said, ‘I want to be alone.’ I only said, ‘I want to be left alone.’ There is all the difference.”

Garbo also means Dustman

 

Xxx

 

TO HELL WITH YALE!

 

There’s the story of a Harvard man who spent some days in Egypt, and enjoyed during that time the services of a French speaking native guide and courier.

As they parted the guide requested

Sire teach me words of English with which I may attract your country men.

The Harvard man did so.

Some time later he returned to Egypt, looked up his guide, and said,

How did you make out with the English I taught you?

“Sire, said the guide, “some there were who smiled and came with me, others there were who were angered and turned away”.

The phrase he had been taught was

“To Hell with Yale!”

 

(Harvard and Yale are two different universities in Harvard and Yale)

Xxx

 

How to go to Canada?

 

 

In the days of underground Railway many Southern Negroes conceived of Canada, the ultimate objective of most runaway slaves, as a kind of free paradise. Old Uncle Jake had the notion that he would like to get there. He asked a friend how one might get to Canada, and was told that if he were to travel far enough all the way up the length of Missisipi he could get there.

 

The old Negro had no geographic sense, but he had a considerable desire for liberty. Sneaking off early one morning, he took his battered row boat and headed upstream, rowing as vigorously and intently as he could. The current was swift and the old man, working feverishly without looking to the right or left, barely held his own and, by the end of the day, actually lost some six or twelve feet of distance. At this time he was aroused from his intense concentration by an acquaintance who hailed him from the shore,

What you doin’ out there in that boat, Jake?

Fo’de Lord’s sake, exclaimed Jake.

Who on earth knows me way up here in Canada!

 

xxx

 

To Boston!

The poet John Godfrey Saxe, had his bag packed for a trip when a friend encountered him and asked,

Where are you going?

To Boston, Deo volente

What route is that?, his acquaintance asked.

By way of Providence, of course, replies Saxe.

(Deo volente means God willing , or if nothing prevents it)

 

xxx

 

Names are Misleading!

Texas is a big state. Easterners go far into the Middle West as Chicago have a lot to learn about it. An instance is the Chicago firm that sent a wire to its travelling representative in El Paso, saying that as long as he was in Texas anyway, he might as well clear up a little affair in Texarkana.

The salesman wired back, “Be cheaper, send a man from Chicago. Closer than I am.”

Astonished, his home office checked with the map and sent out a man from Chicago.

(Distance between Texarkana and Chicago-  792 miles; distance between Texarkana and El Paso- 813 miles)

xxxxxxxxxxxxxx SUBHAM xxxxxxxxxxxxxx

 

சந்யாசியும் பெண்மணியும்- சாணக்கியன் (Post No.4627)

தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

Written by London Swaminathan 

 

Date: 17 JANUARY 2018

 

Time uploaded in London  6-58 am

 

 

 

Post No. 4627

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

ஏக ஏவ பதார்தஸ்து த்ரிதா பவதி தீக்ஷிதஹ

குணபஹ காமினீ மாம்ஸம் யோகிபிஹி காமிபிஹி ஸ்வபிஹி

 

–சாணக்கிய நீதி, அத்யாயம் 14, ஸ்லோகம் 16

பொருள்

ஒரே பொருளோ, மனிதரோ பார்வையாளரின் மனப்போக்கிற்குத் தக மூன்றாகத் தோன்றும். ஒரு பெண்ணுடைய உடலானது யோகிகளுக்கு வெறும் உயிரற்ற சடலமாகவும், காதல்வயப்பட்ட ஆணுக்கு பேரழகியாகவும், நாய்களுக்கு வெறும் மாமிஸமாகவும் தோன்றும்.

சாணக்கியன் சொல்லுவது சரியானதுதான் என்பதற்கு மேலும் சில உதாரணங்களைச் சொல்லலாம்

 

ஒரு அழகான இளம் பெண், அவளுடைய சஹோதரனுடன் பஸ்ஸில் அருகருகே உட்கார்ர்ந்து இருந்தால், அவன் என்ன நினைப்பான். ‘அட, நமக்கு எவ்வளவு அழகான சஹோதரி வாய்த்திருக்கிறாள்; இவள் நல்லபடி கல்யாணமாகி, நல்லபடி வாழ வேண்டும்’ என்று கடவுளைப் பிரார்த்திப்பான். சஹோதர வாஞ்சையுடன் இருப்பான்.

 

அதே அழகி, ஒரு இளைஞன் அருகில் உட்கார்ந்து இருந்தால், அந்த இளைஞன் என்ன நினைப்பான்; ‘அடடா, என்ன அழகு! இந்தப் பெண் நமக்கு மனைவியாக இருந்தால் எப்படி இருக்கும்!’ என்று காம உணர்வுடன், காதல் நோக்கில் அவளைப் பார்ப்பான்.

 

அவன் அருகில் ஒரு சிறு குழந்தை உட்காந்து இருந்தால், அது மற்ற ஒரு பெண்ணையும் தாய் போலக் கருதி, கட்டிக் கொள்ளும். அங்கே தாய்- மகன் என்ற பாச உணர்வு (Supreme love and affection)  மட்டுமே இருக்கும். உலகிலேயே மிக உன்னதமான உணர்ச்சி அது.

 

இப்போது நமக்குள் ஒரு கேள்வியை எழுப்பிப் பார்க்கலாம். அருகிலுள்ள பெண்ணின் உடல்தான் இந்த உணர்வுகளுக்குக் காரணமா? அல்லது அவளை நாம் பார்த்தவிதமும் மனதின் போக்கும்தான் காரணமா?

 

மனதின் போக்குதான் இதற்குக் காரணம் என்பர் சான்றோர்கள். மேலும் எது இன்பம் என்பதை விளக்கவும் அவர்கள் ஒரு அளவுகோல் (Scale or Touch stone) வைத்துள்ளனர். எது ஒன்று எல்லோருக்கும் எப்போதும் நிரந்தர இன்பம் தருமோ அதுவே இன்பம் என்பர்.

இதனால்தான் “கண்டேன் கண்டேன் கண்ணுக்கினியன கண்டேன்” என்றும் “சேரவாரும் ஜகத்தீரே” என்றும் “யான்பெற்ற இனம் பெறுக இவ்வையகம்” என்றும் சான்றோர்கள் ஆடிப்பாடி கூத்தாடுகின்றனர்.

 

நிரந்தர இன்பம் இது என்று நாங்கள் சொல்லியும், காட்டியும் பின்னர் நீங்கள் அடியார் திருக் கூட்டத்தில் சேராதது ஏன் என்றும் வினவுகின்றனர்.

 

இன்னும்சில யோகியர் வேறு ஒரு எடுத்துக்காட்டை நம்முன் வைப்பர். ஒரு நாய்க்கு எலும்புத் துண்டு ஒன்று கிடைத்ததாம். அது கூரான முனைகளை உடையது. அதை வாயில் போட்டு மென்றவுடன் ரத்தம் வரவே அதற்கு பெரு மகிழ்ச்சி. முன்னைவிட எலும்பை பலமாகக் கடித்துக் குதறத் துவங்கியது. அது நினைத்தது—‘எலும்பிலிருந்து ரத்தம் வருகிறது’ என்று; ஆனால் உண்மையில் எலும்பின் கூரான முனைகள் அதன் வாயைக் கிழிக்க, கிழிக்க ரத்தம் மேலும் மேலும் வெளி ஏறியது. இன்பத்தின் காரணம் என்ன என்பதை அது தவறாகப் புரிந்து கொண்டது.

 

சாணக்கியன் இரண்டே வரிகளில் சொன்னதை சமயச் சான்றோர்கள் மணிக் கண்ணக்கில் உபந்யாசங்களில் விளக்குவர்!!!

 

-சுபம்,சுபம்–