சொன்னது அவர்தானா? சொல், சொல், மனமே! QUIZ – ‘க்விஸ்’ (Post No.4635)

Written by London Swaminathan 

 

Date: 19 JANUARY 2018

 

Time uploaded in London 13-46

 

 

 

Post No. 4635

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கீழ்கண்ட பாடல்களை இயற்றியது யார்? அது எந்தப் புத்தகத்தில் உள்ளது? சொல், சொல், மனமே!

 

1.ஏர் ஆனைக் காவில் உறை என் ஆனைக்கு அன்று அளித்த

போர் ஆனைக் கன்றுதனைப் போற்றினால் – வாராத

புத்தி வரும்; பத்தி வரும்; புத்திர உற்பத்தி வரும்;

சத்தி வரும்; சித்திவரும் தான்

XXX

 

2.எண் தேர் செய்யும் தச்சன்

திங்கள் வலித்த கால் அன்னோனே

XXX

 

3.பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட தின்தோள் மணிவண்ணா! உன்

செவ்வடி செவ்வி திருக்காப்பு

 

xxx

 

4.நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற

ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான்

 

xxx

5.மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!

நாம நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு

ஓங்கிப் பரந்தொழுகலான்

 

xxx

6.தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

xxx

 

7.பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்

புன்மை யிருட்கணம் போயின யாவும்

 

xxx

 

8.பெரியாருடன் கூடல் பேரின்பம் தாமே

 

xxx

 

9.யாகாவாராயினும் நா காக்க

xxx

  1. தமிழுக்கும் அமுதென்ற பேர்- அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

 

xxx

 

 

 

 

ANSWERS

1.காளமேகம், 2. சங்க கால அவ்வையார், 3. பெரியாழ்வார், திருமொழி, திவ்யப் பிரபந்தம் 4. கம்பன், கம்ப ராமாயணம், 5. இளங்கோ, சிலப்பதிகாரம், 6. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 7. பாரதி, பாரதியார் பாடல்கள், 8. திருமூலர் எழுதிய திருமந்திரம் 9. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 10. பாரதிதாசன்