அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் கல்வெட்டு (Post No.5096)

Picture of Mulavarman Inscription in Jakarata Museum

 

Written by London swaminathan

 

Date: 10 JUNE 2018

 

Time uploaded in London –  18-59  (British Summer Time)

 

Post No. 5096

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் கல்வெட்டு (Post No.5096)

இந்தோநேஷியா என்பது உலகிலேயே பெரிய முஸ்லீம் நாடு. அந்த நாட்டின் ஒரு பகுதியான போர்னியோ (BORNEO) தீவு உலகில் மிகப்பெரிய தீவுகளில் ஒன்று. அதில் அடர்ந்த மழை வனக்காடுகள் (RAIN FORESTS) உள்ளன. அந்த காட்டுக்குள் இது வரை மனிதர்கள் காலடியே பட்டதில்லை—இது கன்னி கழியாத காடுகள் (VIRGIN FORESTS) என்று உள்ளே நுழைந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது சில சம்ஸ்ருதக் கல்வெட்டுகள்!

இதெல்லாம் நடந்து நூறு ஆண்டுகள் ஆயிருக்கும்; ஆயினும் இக் கல்வெட்டுகளின் பெருமையை இப்பொழுதுதான் உலகம் உணரத்  துவங்கியுள்ளது.

 

1950-ஆம் ஆண்டுகளில் காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் நடத்திய சொற்பொழிவுகளில் இது பற்றிய அபூர்வ விஷயங்களைத் தொட்டுக் காட்டினார். ஆயினும் முழு விவரங்கள் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் நடத்தியது வரலாற்றுச் சொற்பொழிவு அல்ல. அது சமயச் சொற்பொழிவு.

 

அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது  ஏழு யூப ஸ்தம்பங்களாகும். மன்னர்கள் யாக யக்ஞங்கள் செய்கையில் பிராஹ்மணர்கள் இப்படி யூப ஸ்தம்பங்களை நட்டு அதில் மன்னன் பெருமை, அவர் அளித்த தான தருமங்களைச் சொல்லுவது மரபு.

 

யூப நெடுந்தூண், வேள்வித்தூண் எனபன சங்க இலக்கிய நூல்களிலும் காணப்படுகிறது. முது குடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் அஸ்வமேதம் முதலிய யாகங்களைச் செய்தான்; கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டங்கள் செய்து யாகம் செய்தான். சோழ மன்னன் பெருநற்கிள்ளி ராஜ சூய யாகம் செய்தான். சேர மன்னன் ஒருவன் பார்ப்பனீயப் புலவரின் வேண்டுகோளுக்கிணங்க பத்து வேள்விகள் இயற்றி பத்தாவது முறையில் பார்ப்பனப் புலவரையும் பார்ப்பனியையும் அப்படியே உடலுடன் சொர்க்கத்துக்கு அனுப்பி மாயமாய் மறைய வைத்தான் . இவை எல்லாம் புறநானூற்றிலும் பதிற்றுப் பத்திலும் உள. திருவள்ளுவரும் திருக்குறளில் யாக யக்ஞங்களைப் புகழ்ந்து தள்ளுகிறார். ஆக தமிழர்கள் மிகப்  பழைய புறநானூற்றுப் பாடலில் யூபம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லைப் பயன்படுத்துவதால் தமிழர்களுக்கு இதெல்லாம் அத்துபடி.

Dasatatha’s Letter to Egyptian King Amenotep (Sramana Deva) in Cuneiform script

அது மட்டுமல்ல காளிதாசனும் பாண்டிய மன்னனை அறிமுகப்படுத்தும் போது அவன் யாகம் செய்து குளித்த ஆடையுடன் எப்போதும் இருப்பவன் என்று பெருமையாகக் கூறுகிறான். அத்தோடு அகஸ்தியர் பெயரையும் சொல்கிறான். ஆக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியன் செய்த யாகங்கள் உலகப் பிரசித்தம்.

 

இந்தோநேஷியாவின் காட்டுக்குள் கிடைத்த மன்னன் 1700 ஆண்டுகளுக்கு முன்னர்– சங்க காலத்தை ஒட்டி- வாழ்ந்தவன். பாண்டவர் போலவே ‘வர்மன்’ பட்டத்தை உடையவன் ஒருவே ளை தமிழனாக இருக்கலாம் என்பதற்காகத்தான் மேற்சொன்ன பீடிகை போட்டேன்.

 

 

மூலவர்மன் கல்வெட்டு அழகான ஸம்ஸ்க்ருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. அவைதான் இந்தோநேஷியாவில் கிடைத்த பழைய கல்வெட்டுகள். முதல் இரண்டு கல்வெட்டுகளில் மூலவர்மன், அவனது தந்தை அஸ்வவர்மன், அவனது தந்தை குண்டுங்கா (குண துங்கன் என்பது மருவியது போலும்!) ஆகியோர் சிறப்பு பட்டங்களோடு குறிப்பிடப்படுகின்றனர். பின்னர் யாகத்தில் பிராஹ்மணர்களுக்கு அவன் அளித்த தான தருமங்கள் சொல்லப்படுகின்றன; யாகத்தின் போது பிரதான யஜமானன் (யாக புருஷன்) இந்தத் தூணை நிறுவியதாகவும் உள்ளது.

மூன்றாவது கல்வெட்டில் எல்லோரும், மூலவர்மனின்  தான தருமங்களைக் கேளுங்கள்– அவன்  நிலங்கள், பசுமாடுகள், அற்புத மரம் (கற்பக வ்ருக்ஷம் அல்லது சோம லதை) பிராஹ்மணர்களுக்குத் தானம் செய்தான். இவ்வாறு பலவகை அறச் செயல்களைப் புரிந்ததற்காக இந்த யூபத் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன என்று பொறிக்கப்பட்டுள்ளது.

 

அருகிலுள்ள ஜாவா தீவில் இதே போல 1700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு பிராஹ்மணர்களுக்கு 1000 பசுக்கள் தானம் அளித்ததாக எழுதப்பட்டுள்ளது.

 

 

இதை வேறு இரண்டு கல்வெட்டுகளுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறேன்; கன்யாகுமரியில் உள்ள வீர ராஜேந்திரன் என்ற சோழர் கல்வெட்டு அவனது முன்னோன் ஒருவன் 40,000 பிராஹ்மணர்களை அழைத்து வந்து காவிரிக் கரையில் குடி அமர்த்தினான் என்கிறது. காவிரிக் கரையில் பிராஹ்மணர்கள் இல்லாத குறையைப் போக்க ஆர்யாவர்த்தத்தில் இருந்து 40,000 பிராஹ்மணர்களை அழை த்து வந்தான் என்று கோபிநாத ராவ் புத்தகத்தில் (1926) விளம்புகிறார்.

 

வியட்நாமில் கிடைத்த பழைய கல்வெட்டு ஸ்ரீ மாறன் என்பதாகும். இது 1800 ஆண்டுகளுக்கு முந்தையது. வியட்நாமை ஆண்ட பாண்டிய மன்னன் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இது பற்றி எழுதினேன். திருமாறன் என்ற பாண்டியன் பெயரை ஸம்ஸ்க்ருதத்தில் எழுதுகையில் ஸ்ரீமாறன் ஆகும்.

 

 

ஆக வியட்நாம் முதல் இந்தோநேஷியாவரை ஆயிரம் ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் உள்ளன. ஒரு வரிக் கல்வெட்டிலிருந்து மிக மிக நீண்ட பாடல்கள் வரையுள்ள கல்வெட்டுகள் இவை.

 

இது தவிர சிலப்பதிகாரத்திலும் நமக்குச் சான்று உளது. எல்லோர் முன்னிலையிலும் இமயம் வென்ற செங்குட்டுவனை மாடல மறையோன் என்ற பிராஹ்மணன் குறை சொல்லுகிறான். “மன்னனே! போதும் போதும் நீ பெற்ற போர் வெற்றிகள்; போகும் வழிக்குப் புண்ணியம் தேடு; யாக யக்ஞங்களைச் செய்” என்கிறான். இப்படிக் கடிந்து கொண்ட பிராஹ்மணனை தண்டிக்காமல் எடைக்கு எடை தங்கம் கொடுத்து உடனே யாக யக்ஞங்கள் செய்ய உத்தவிட்டதாக இளங்கோ இயம்புவார்.

 

துருக்கி நாடு முதல் இந்தோநேஷியாவரை இப்படி ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் இருப்பதும் கோவலன் ஒரு பார்ப்பனப் பெண்ணின் ஸம்ஸ்க்ருத ஓலையைப் படித்ததாக சிலப்பதிகாரம் செப்புவதும் ஸம்ஸ்க்ருதத்தின் உலக வீச்சைக் காட்டுகிறது. அலெக்ஸாண்டர் போல மக்களைக் கொன்று குவித்து கிரேக்க மொழிக் கல்வெட்டுகளை நிறுவ வைத்ததைவிட அமைதியான கலாச்சார, வணிக வீச்சின் மூலம் உலகம் முழுதும் ஸம்ஸ்க்ருதத்தைப் பரவச் செய்தது மற்றொரு உலக அதிசயம் ஆகும். அது மட்டுமல்லாமல் கிரேக்க  மொழியில் ஹோமர்,  முதல் கிரேக்க நூலை எழுதுவதற்கு முன்னரே — அதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னரே– துருக்கியில் ஸம்ஸ்க்ருதப் பெயர்களும் குதிரை நூலும் இருப்பது உலக மஹா அதிசயம் ஆகும்.

 

–சுபம்–

 

Brahmin Power in South East Asian Countries- (Post No 5095)

Written by London swaminathan

 

Date: 10 JUNE 2018

 

Time uploaded in London –  9-46 am  (British Summer Time)

 

Post No. 5095

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

Brahmin Power in Cambodia ,Thailand Burma and Vietnam

(Campa)- Post No 5095

 

n Cambodia, Brahmins maintained powerful hierarchy for many centuries. They were well organised. They came there around fifth century and increased in number due to a constant flow of immigrants from India. During the reign of Yasovarman 889 CE, Saivism was predominant. We learn from the following inscription that they enjoyed a position similar to that which was theirs in India.

 

The king,well versed in kingly duties, performed Koti Homa and Yajnas, for which he gave the priest s magnificent presents of jewels, gold etc.

 

The cult of the Royal God, though founded by Jayavarman II, 802 CE, did not reach the heights of its development until two centuries after wards, and was especially associated with Vaishnavism and the temple of Angkor Wat. This cult led Brahmins enjoying even more exalted position . The priest hood became hereditary in the family of Sivakaivalya, who enjoyed immense power. This sacerdotal dynasty almost threw the royal dynasty into the shade. Brahmins were depicted on the reliefs of Angkor Wat and Coedes has identified Drona and Visvamitra amongst them. In one of the relief s which illustrates a royal procession, it is interesting that the Brahmins were the only onlookers who do not prostrate before the king, as was also the case in India. In the reliefs aristocracy wear the chignon and the lower castes short hair.

One remarkable sign of the power of the Brahmins was that they had even marriage alliances with the princesses. Bakus, the descendants of ancient Brahmins, chose one from them to succeed if the royal family failed.

 

As early as the reign of Jayavarman V, Buddhism and Hinduism got mixed and the Brahmin purohitas were expected to be well versed in Buddhist prayers and rites. But the Brahmin s of Cambodia never sank so low as did those of Campa (modern Vietnam). In the Po Nagar inscription of Campa, we read that the feet of the king were worshiped,even by Brahmins and priests.

 

 

In Thailand

 

Though the religion of Thailand was Buddhism the royalty recruited Brahmin s from Cambodia. For centuries Brahmin s enjoyed quite an important position.

The famous inscription dated about 1361 CE of King Dharma Raja mentioned the kings knowledge of the Vedas and of astronomy. The inscription on the Siva statue found at Kamben bejra recorded the desire of King Dharmasokaraja,(1510 CE), to exalt both Hinduism and Buddhism.

 

Brahmins had access to sacred books and law books and so they served the royal s in various capacities. The epigraph ic records demonstrate the powerful influence of purohitas in Burma and Cambodia, where they often served under successive rulers and provided continuity to the government in troubled times. In ninth century Angkor, for instance, Indravarman I had the service of Sivasoma, who studied VedantA under Shankara.

 

Indian Brahmins are occasionally mentioned in the south East Asian inscription s and one wondered how Brahmins travelled abroad when Manu and other lawmakers ban foreign travel for Brahmins. These prohibitions may have had little practical effect, and would n of have deterred ambitious men lured by the hope of honour and fortune in a distant land. In fact they were invited by some rulers.

 

Not only in the Hindu courts in Cambodia but also in the courts of Pagan in Burma and Sukothai in Thailand, the Brahmins conducted great ceremonies,such as the Royal Consecration and-functioned as ministers and counsellors . The grand ceremony in Pagan required the services of numerous Brahmins.

 

In Cambodia Jayavarman VIII built a temple for the scholar priest Jayamangalaartha and likewise for the Brahmin Vidyesavid. Who became Royal sacrificial Priest. The Chinese visitor Chou Ta kuan refers to the presence of Brahmins wearing sacred thread.

 

We have evidence of use of Sanskrit even in Sri Lanka. Thirteenth century work Kundamala was composed in Anuradhapura in Sri Lanka, according to some scholars.

 

Source: Source books- From Turfan to Ajanta, Edited by Eli Franco and Monika Zin, Lumbini International Research Institute, Nepal;2010

 

–Subham–

புல்வெளியில் நடப்பதால் ஏற்படும் பலன்கள்! (Post No.5094)

Written by S NAGARAJAN

 

Date: 10 JUNE 2018

 

Time uploaded in London –  7-14 am  (British Summer Time)

 

Post No. 5094

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஆரோக்கிய மாத இதழ் ஹெல்த்கேர் இதழ். இதில் ஜூன் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.

காலையில் பனித்துளி படர்ந்த புல்வெளியில் வெறும் காலுடன் நடப்பதால் ஏற்படும் நற்பலன்கள்!

ச.நாகராஜன்

 

காலையில் பனித்துளி படர்ந்த புல்வெளியில் வெறும் காலுடன் நடப்பது மிகப் பெரும் நற்பலன்களைத் தரும். இப்படி நடப்பதை ‘எர்த்திங்’ ( Earthing) என்று சொல்கின்றனர்.

ஆரோக்கிய மேம்பாட்டைத் தரும் இந்த நடைப் பயிற்சி செலவில்லாதது; எல்லோரும் எளிதில் செய்யக் கூடியது!

பூமியானது பல அரிய ஆற்றல்களைக் கொண்டது. இத்துடன் கால் மூலம் நம்மை இணைத்துத் தொடர்பு கொண்டால் மனம், உடல், ஆன்மா ஆகிய அனைத்தும் அளப்பரிய பயனைப் பெறும்.

மனதை ஒருமுகப்படுத்தும்!

வெறும் காலுடன் நடப்பது கீழ்க்கண்ட பலன்களைத் தரும்:

வெறும் காலுடன் அதிகாலை நேரத்தில் புல்வெளி மீது நடக்கும் போது நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டி வரும். கூழாங்கற்கள், முள், கூரிய கற்கள் இல்லாத பகுதியாக நீங்கள் செல்ல வேண்டி வரும்.

அப்போது உங்கள் கவனமும் ஒருமுகப்படுத்தும் தன்மையும் அதிகரிக்கும். உள்மனதுடன் இடைவிடாது நடத்தும் போர்களும், அனாவசிய அரட்டைகளும் ஒரு முடிவுக்கு வரும். மனம் அமைதி பெறும். மனதிற்கு – அது ஏங்கும் – நல்ல ஓய்வைத் தரும். கவன சக்தி அதிகரிக்கும்!

நடைப்பயிற்சி யோகம்

வெறுங் காலுடன் நடக்கும் போது தசைகள், தசை நாண், வடம், கணுக்கால் மற்றும் இதர காலின் ஆதாரப் பகுதிகள் (the muscles, ligaments and tendons in the feet, ankles and calves stretch and get strengthened)  ஆகியவை நீட்சிக்கு உட்படுகின்றன. அத்துடன் உங்கள் தோற்ற அமைவை –posture ஐ – அது நிலைப்படுத்தும்.

வர்மப்புள்ளிகள் தரும் சக்தி (Reflexology)

உடலில் அநேக வர்மப் புள்ளிகள் (reflexology points) உண்டு. புல்வெளியில் நடப்பதை தினசரிப் பழக்கமாக ஆக்கிக் கொண்டால் உடல் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதை அனுபவ பூர்வமாக உணர முடியும். ஒரு 30 நிமிட நடையிலேயே ஆரோக்கிய மேம்பாட்டை அறியமுடியும் என்பது அனுபவஸ்தர்களின் கூற்று.

மன அழுத்தம் போகும்

புல்வெளியில் தினமும் காலையில் நடந்தால் சுத்தமான தூய காற்றை சுவாசத்தில் உள்ளிழுக்கிறீர்கள். சுற்றி வர பறவைகள் இருக்க, செடி கொடிகள் மலர்கள் சூழ்ந்திருக்க ஒரு அமைதியான சூழ்நிலையை நீங்கள் அனுபவிக்க முடியும். மன அழுத்தம், மன இறுக்கம் எல்லாம் போக இது வழி வகுக்கும். இன்றையப் பொழுதில் வாழ்வது (living in the present moment) என்ற அரிய பழக்கம் வரும்.

கவலையைக் குறைக்கும்

புல்வெளியில் தினமும் காலையில் நடந்தால் கவலைகள் 62 சதவிகிதம் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நல்ல ஹார்மோன்கள் உடலில் இருப்பதை உணர்த்துகின்றன. எண்டார்பின்களின் அளவும் அதிகரிக்கிறது.

நல்ல தூக்கத்தைத் தரும்

வெறும் காலுடன் புல்வெளியில் நடப்பதானது இன்சோம்னியா மற்றும் தூக்க வியாதிகளைப் போக்கி நல்ல தூக்கத்தைத் தருவதை சிகிச்சை நிலைய ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

  • இயற்கையுடன் இணைவீ ர்கள்

நீங்கள் இயற்கை அன்னையுடன் உங்களை இணைத்துக் கொள்ள முடிகிறது. குளுமையான பனித்துளி நிறைந்த புல்லை ஸ்பரிசிப்பதன் மூலமும் மலர்களின் நறுமணத்தை சுவாசிப்பதன் மூலமும் புலர்காலைப் பொழுதில் எழும் உதய சூரியனின் இனிய கிரணங்களை உடலில் படவைப்பதன் மூலமும் மரங்களினூடே வரும் காற்றை அனுபவிப்பதன் மூலமும் இயற்கையை நன்கு அனுபவித்து ஆனந்திக்க முடிகிறது; அமைதியைப் பெற முடிகிறது.

பூமியின் சக்தியுடன் இணைப்பு

பூமி அபாரமான காந்த புலத்தைக் கொண்டுள்ளது. இத்துடன் வெறுங்காலுடன் நடப்பதால் நீங்கள் இணைக்கப்படுகிறீர்கள். இது  காந்த மற்றும் மின் புலங்களுடன் நீங்கள் இணைக்கப்பட ஏதுவாகிறது. உடலிலிருந்து பூமிக்கும் பூமியிலிருந்து உடலுக்குமான ஆற்றல் பரிமாற்றம் பல்வேறு நலன்களைப் பெற உதவுகிறது. இது உங்கள் உடலில் உள்ள நெகடிவ் எனர்ஜியை நீக்கி ஆரோக்கியத்தைத் தருகிறது.

கண் பார்வை கூர்மை பெறும்

புல்வெளியில் வெறுங்காலுடன் நடக்கும் போது உங்கள் கண் பார்வை மேம்படுகிறது. கால் உடலின் அனைத்துப் பாகங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. இது உங்கள் கண்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நடக்கும் போது உங்கள் முன்காலில் முதல் இரண்டாம் மூன்றாம் பகுதிகளில் அழுத்தம் தரும் போது இந்த ரெஃபெளக்ஸோலொஜி புள்ளிகளால் கண் பார்வை கூரியதாகிறது; தீர்க்கமாகிறது. இந்தப் புள்ளிகள் மசாஜ் செய்யப்படுவதால் கண்கள் நலம் பெறுகின்றன.

ஆக இப்போது உங்கள் அருகிலுள்ள புல்வெளியை நாடி நல்ல பயன்களைப் பெறலாம் இல்லையா?!

***

Mulavarman Sanskrit Inscription of Indonesia (Post No.5093)

Written by London swaminathan

 

Date: 9 JUNE 2018

 

Time uploaded in London –  16-54  (British Summer Time)

 

Post No. 5093

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

I read the following piece of interesting information today about the oldest inscriptions in Indonesia, the largest Muslim country in the world.

 

“The oldest known inscriptions in Indonesia – we read in The Economic and Administrative History of Early Indonesia (van Naessesn and de Longh 1977)  – are those of East Borneo. Here there are seven stone sacrificial posts, called ‘yuupaas’ by archaeologists, that date from around 400 CE. What is written on them is described in the following terms:-

In clear, well written Sanskrit verses Mulavarman ‘the lord of king’, his father Asvavarman, ‘the founder of the noble race’ – and his grandfather, the great Kundunga, ‘the lord of men’ are mentioned on the occasion of a sacrifice. For that sacrifice, we read on one of the stone poles (yuupaa), this sacrificial post  has been prepared by the  chief amongst the twice born (dvija=Brahmins).

 

Apparently these priests who had come hither ( as written on the second pole) were rewarded by the King Mulavarman for their religious services.

Thus the third inscription sounds, “Let the foremost among the priests and whatsoever other pious men hear of the meritorious deed of  Muavarman, the king of illustrious and resplendent fame (let him hear ) of his great gift, his gift of cattle, of a wonder tree, his gift of land. For this multitude of pious deeds this sacrificial post has been set up by the priests.

(wonder tree= Krapaka Vriksha in gold or Soma plant?)

A Sanskrit inscription in West Java dating from around 450 CE deals with an occasion on which the Brahmins were presented with 1000 cows.

 

40,000 Brahmins!

(An inscription in the southern most village of India, Kanyakumari,  claims that the founder of the Cola dynasty, finding no Brahmins on the bank of Kaveri, brought a large number of them from Aryavarta and settled them there. His remote descendant Vira Rajendra created several brahmadeya (donation to Brahmins) villages and furnished forty thousand Brahmins with gifts of land (see Gopinath Rao, 1926)

 

Kanchi Parmacharya (1894-1994), Sri Shankaracharya Chandra Sekhara Indra Sarasvati of Kanchi Kamakoti Peetam mentioned about this inscription in 1950s. Now the world is shedding more light on it. When they discovered it, Borneo island was full of thick forests. They thought that thy were virgin forests and were surprised to find the Yupa posts inside the deep forest. Once upon a time it was a place where people lived happily.

 

Yupa post is mentioned in 2000 year old Tamil Sangam literature with the same Sanskrit word. Great Pandya King Mud Kudumi Peru Vazuthi did so many fire sacrifices (Yagas) and Kalidasa mentioned  that the Pandya king was always wearing the Yaga clothes. So Yupas were very familiar with the Tamil Pandyas and Cholzas. When Cheran Chenguttuvan was boasting about his historic march to the Himalayas, a Brahmin openly challenged him amidst a big crowd that he must stop the wars and do Yagas and Yajnas. This episode of Madala Maraiyon is in the most famous Tamil epic Silappadikaram. Instead of chopping the head of Madala Maraiyon for this open criticism, Cheran Senguttuvan the great Chera king immediately ordered for the fire sacrifices. He rewarded the Brahmin with gold equal to the weight of huge Chenguttuvan.

Source books- From Turfan to Ajanta, Edited by Eli Franco and Monika Zin, Lumbini International Research Institute, Nepal; Silappadikaram; Kanchi Paramacharyal Discourses, Kalaimakal Karyalayam.

 

–Subham–

 

PROBLEMS SOLVED WITH A CATALOGUE! (Post No.5092)

Compiled by London swaminathan

 

Date: 9 JUNE 2018

 

Time uploaded in London –  14-51  (British Summer Time)

 

Post No. 5092

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

EMPLOYMENT AND WORK ANECDOTE

An enterprising American telephone engineer established somewhere in Panama a unique business, a four-leaf clover arm. The conditions were ideal and he raised fine, large clovers which he was able to market in a variety of ways for a variety of purposes, to florists, manufacturers of novelties etc.

 

At the height of his success, all of his employees, a group of Panamanian girls, confronted him with an unprecedented labour problem.  They had no objection to the wages or the hours, they seemed to have nothing to do with the money.

 

Perplexed in the extreme, their employer raked his brains until he hit upon a brilliant solution. He sent for a Sears-Roebuck catalogue and put it in the hands of the girls, explaining to them how they could come into possession of those fabulous articles pictured therein. His problem was solved.

 

xxx

 

Poverty Anecdote

C R W Nevinson tells this story:

“One day he (Henry Matisse) wanted to do a lithograph. I offered him all my chalk and stones, but he would have none of them. He got some lithographic paper, broke one of my lithographic chalks in half, and left himself with only about an inch and a quarter of grease to draw with. When I protested, and pressed him to take a box, he assured me it was unnecessary and much too expensive a gift, a comment on the wonderful French economy and the appalling poverty he must have suffered in his early days”.

 

xxx

 

Working Conditions anecdote

A well-meaning employer desired to introduce a new spirit into his plant. He called his employees together, and said, “Whenever I come into the shop, I want to see every man cheerfully at work. I am placing a box here and I should like anyone who has any suggestions as to how this may be brought about more efficiently to just put it in here.”

 

The next day he saw a slip of paper in the box and looked at it. It said, “Take the rubber heels off your shoes”.

 

xxx

King and Emperors Anecdotes

The late King George the Fifth, in his domestic setting, was quite an average husband and family head. When, on social occasions, he would talk too long to someone or express himself too rashly, Queen Mary would prod him gently with her umbrella and murmur ‘Now George’. Also when palace guests would admire the Cloisonné, the Wedgewood, the Chippendales etc., the King would always refer to his wife, saying, ‘Now, Mary, you know about this’.

 

xxx

King of Italy!

It is reported that King Victor Emmanuel, when asked what he thought of the African campaign, replied very unenthusiastically, “If Italy wins, I shall be King of Ethiopia; if the Ethiopians win, why then I shall be King of Italy again.”

–Subham–

 

 

ஜி.யு. போப் பற்றிய புரளி– கல்லறையில் உபநிஷத் மந்திரம் (Post No.5091)

Written by London swaminathan

 

Date: 9 JUNE 2018

 

Time uploaded in London –  8-40 am  (British Summer Time)

 

Post No. 5091

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

ஜி.யு. போப் பற்றிய புரளி– கல்லறையில் உபநிஷத் மந்திரம் (Post No.5091)

Picture of G U Pope

பாகிஸ்தானில் லாகூரில் ஒரு கல்லறையில் உபநிஷத் மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆங்கிலேயர் கல்லறையில்!

 

ஆக்ஸ்போர்டில் ஜி.யூ. போப் கல்லறையில் ‘நான் ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கப்பட்டுள்ளதாக பல, திராவிடங்கள் எழுதிக்கொண்டே இருக்கும்; ஆனால் அங்கு போய் வந்த தமிழர்கள் எனக்கு போன் செய்து, ‘ஸார் அப்படி அங்கு ஒன்றும் இல்லையே’ என்பர். என் நண்பர்கள் ஆண்டுதோறும் அங்கு சென்று கல்லறைக்கு மாலை போட்டு அஞ்சலி செய்துவருகின்றனர். அவர்களும் பார்த்ததில்லை- நான் ஒரு தமிழ் மாணவன்’ கல்லறைப் பதிவை. நிற்க.

 

அதே ஆக்ஸ்போர்டு நகரில் இருந்து வந்த மற்றொரு பெரியார் வூல்னர் (A C Woolner). ஜி.யு.போப், தமிழில் இருந்த திருவாசகம், நாலடியார், பல புற நானூற்றுப் பாடல்கள், திருக்குறள் ஆகியவற்றை மொழிபெயர்த்தார். அது போல வூல்நரும் பல ஸம்ஸ்க்ருத நூல்களை மொழி பெயர்த்தார். அவர் ஸம்ஸ்க்ருதம், ப்ராக்ருதம், பாரசீக மொழி, சீன மொழி ஆகியவற்றைக் கற்றவர். பஞ்சாப் (பாகிஸ்தானின் லாகூரில் உளது) பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பணிற்றியவர்.

 

டாக்டர் ஆல்ப்ரெட் கூப்பர் வூல்னர் 1878 மே 13ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். 1936ல் இறந்தார். இந்த ஆண்டுகளுக்குள் அவர் அழியாத புகழுடைய பல நூல்களைப் படைத்தார்.

ஆக்ஸ்போர்ட் பலகலைக்கழகத்தில் பாலி, ஸம்ஸ்க்ருத மொழிகளைப் பயின்ற அவருக்கு பல விருதுகள், மான்யங்கள் கிடை   த்த பின்னர் லாகூரில் ஓரியண்டல் கல்லூரியில் பிரின்ஸிபாலாக வேலைக்குச் சேர்ந்தார்

33 ஆண்டுகளுக்கு பஞ்சாப் பலகலைக்கழகத் துணைவேந்தராக பணியாற்றினார்.

அவர் எழுதிய ஆங்கில நூல்கள்

Picture of A C Woolner

1.ப்ராக்ருத மொழிக்கு ஓர் அறிமுகம்

2.அசோகர் கல்வெட்டு மொழி

3.பாஷா-வின் 13 ஸம்ஸ்க்ருத நாடகங்களின் மொழிபெயர்ப்பு

4.குண்டமாலா (மல்லிகை மலர் மாலை) மொழிபெயர்ப்பு

5.இந்திய மாணவர்களுக்கு மொழிநூல் கையேடு

 

இது தவிர ஏராளமான ஆராய்ச்சிக் கட்டுரைகள்!

 

நல்ல ஆஜானு பாஹூவான ஸரீரம் படைத்த வூல்நர் மிகவும் உயரமானர்; புகழிலும் உயர்ந்தவர். அடக்கமானவர். அவரது சிலைகள் லாகூரில் பல்கலைக் கழக வளாகம், அதன் முன்னுள்ள சாலைகளில் இடம்பெற்றுள்ளது.

அவர் மால்டா ஜூரம் எனப்படும் ஒரு வகை பாக்டீரியா தாக்கி இறுதியில் நிமோனியாவால் 1936ல் இறந்தார். அவருடைய கல்லறை லாகூரில் உளது. அதில் பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்தின் புகழ் பெற்ற வாக்கியங்கள் தேவ நாகரி லிபியில் பொறிகப்பட்டுள்ளதாக 1940 ஆண்டு வெளியான நினைவு நூல் கட்டுரை ஒன்று  விளம்புகிறது:-

அஸதோ மா ஸத் கமய

தமஸோ மா ஜ்யோதிர் கமய

ம்ருத்யோர் மா அம்ருதம் கமய— என்பதே அந்த மந்திர வாக்கியங்கள்.

 

இதன் பொருள் என்ன?

 

மாயத் தோற்றத்தில் இருந்து என்னை உண்மை நிலைக்கு இட்டுச் செல்வாயாக

 

இருளிலிருந்து ஒளிமயமான பாதைக்கு அழைத்துச் செல்வாயாக

மரணத்திலிருந்து மரணமிலாப் பெருவாழ்வுக்கு கொண்டு போவாயாக

 

சுருக்கமான பொருள்- வீடு பேற்றினை அருள்வாயாக; அதற்கான பாதையில் செல்ல எனக்கு அருள் புரி; வழி காட்டு

–சுபம், சுபம்-

கைலாசபதி அவர்களின் ‘பாரதி ஆய்வுகள்’ (Post No.5090)

Written by S NAGARAJAN

 

Date: 9 JUNE 2018

 

Time uploaded in London –  7-32 am  (British Summer Time)

 

Post No. 5090

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 50

க.கைலாசபதி அவர்களின் ‘பாரதி ஆய்வுகள்

 

ச.நாகராஜன்

 

1

பாரதி ஆர்வலர் .கைலாசபதி அவர்கள் பாரதியியலில் பெரும் ஆர்வம் கொண்டவர். பாரதியியல் என்ற வார்த்தையையே அவர் தான் முதலில் பயன்படுத்தினார் என்று பாரதி ஆய்வுகள் என்ற அவரது இந்த நூலை வெளியிட்ட பதிப்பகத்தார் குறிப்பிடுகின்றனர்.

 

இந்த நூலில் 1955 முதல் 1982 முடிய 27 வருடங்களில் அவர் எழுதிய 22 கட்டுரைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொன்றும் ஆய்வுக் கட்டுரையே.

 

.கைலாசபதி மறைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் (நவம்பர் 1982) சிதம்பர ரகுநாதன் அவர்கள் எழுதியபாரதிசில பார்வைகள் என்ற நூலுக்கு அளித்த மதிப்புரையில் அவர் பாரதியின் வாழ்க்கையையும் உலக நோக்கையும் முழுமையான் ஆய்வுக்குரியனவாகக் கருதிச் செயல்பட்டு வந்திருப்பவர்கள் சிலரே என்று குறிப்பிடுகிறார்.

உண்மை.

 

 

பாரதி நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில் பாரதி  ஆய்வுகள் என்ற ஒரு நூலை எழுதத் திட்டமிட்டிருந்த கைலாசபதி அதைத் தொடங்காமலேயே மறைந்து விட்டார்அவரது கட்டுரைகளைத் தொகுத்து அவர் மனைவி சர்வமங்களம் கைலாசபதி இந்த நூலை வெளியிட்டுள்ளார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை முதல் பதிப்பை மார்ச் 1984-லிலும் இரண்டாம் பதிப்பை அக்டோபர் 1987-லும் வெளியிட்டுள்ளது.292 பக்கங்கள் கொண்டது இந்நூல்.

 

 

2

இருபத்தி இரண்டு கட்டுரைகளின் தலைப்பையும் பார்த்தாலேயே ஆய்வுக் களத்தின் அகலமும் நீளமும் ஆழமும் தெரிய வரும்.

 

கட்டுரைகளின் தலைப்புகள் வருமாறு:

  • பாரதியார்பழமையும் புதுமையும் 2) பாரதியும் யுகமாற்றமும் 3) சிந்துக்குத் தந்தை 4) பாரதியும் சுந்தரம்பிள்ளையும் 5) பாரதியும் மேனாட்டுக் கவிஞரும் 6) பாரதி வகுத்த தனிப்பாதை 7) பாரதிக்கு முன் … 8) பாரதியும் வேதமரபும் 9) பாரதியாரின் கண்ணன் பாட்டும் 10) பாரதி நூல்களும் பாட பேத ஆராய்ச்சியும்சில குறிப்புகள் 11) பாரதி நூற்றாண்டை நோக்கிசெய்ய வேண்டியவைசெய்யக் கூடியவை 12) பாரதி ஆய்வுகள்வளர்ச்சியும் வக்கிரங்களும் 13) பாரதி நூல் பதிப்புகள் 14) பாரதியார் கவிதையும் தமிழ்ப் புலமையும் 15) பாரதியின் சமகாலத்தவரும் பாரதி பரம்பரையினரும் 16) இலங்கை கண்ட பாரதி 17) ஈழத்துத் தமிழ்க் கவிதையில் பாரதியின் தாக்கம் (சில குறிப்புகள்) 18) சிறு சஞ்சிகைகளில் பாரதி ஆய்வுகள் 19) பாரதியின் புரட்சி 20)முற்போக்காளரின் பாரதி ஆய்வுகள் 21) பாரதியியலுக்கு ஒரு பங்களிப்பு 22) பாரதி கண்ட இயக்கவியல்

 

 

3

புத்தகம் முழுவதும் ஏராளமான ஆய்வுக் கருத்துக்களால் நிரம்பி இருப்பதால் புத்தகத்தை வாங்கிப் படிப்பதே சாலச் சிறந்தது.

 

என்றாலும் நூலாசிரியரின் சில முக்கியக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

 

 

  • முதல் கட்டுரை: பாரதியின் கவிதா வளர்ச்சியை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார் கைலாசபதி. 1) தனி மனித நாட்டத்தினால் பாடப்பட்ட பாடல்கள் 2) பாரதி நெஞ்சிலே இருந்த பழமைபுதுமை போராட்டம் காரணமாக உருவான கவிதைகள். பழமை கனிந்த மனோநிலை ஏற்பட்ட காலத்தில் இந்த இரண்டாம் காலப் பகுதி முடிவடைகிறது. 3) வேதாந்தம் நன்கு முகிழ்ந்த வேதாந்த காலப் பகுதி.

 

  • மூன்றாம் கட்டுரை: இது பாரதியின் கவிதை வளத்தை அலசுகிறது!

“நவநவமான தத்துவத்தை எல்லாம் சொல்லில் வடித்தவன் பாரதி. இசை வளத்தை அளவுடன் நிறுத்திக் கொண்டு பொருள் வளமும்  சேர்த்தான்; முன்னோரை மிஞ்சினான்.

உருவத்திற்கும் உள்ளடக்கத்திற்கும் உள்ள நுண்ணிய பிணைப்பையறிந்து கொள்ளப் பாரதியை விட வேறு சிறந்த உதாரணக் கவிஞன் வேண்டுமோ?” என்கிறார் நூலாசிரியர்.

 

  • ஐந்தாம் கட்டுரை : இதில் ஆசிரியர் தரும் கருத்துக்கள் : “குடியாட்சி, ஆண் பெண் சமத்துவம், விடுதலை ஆகிய பண்புகளை விட்மனிடம் கண்டு போற்றியுள்ளார் பாரதியார். விட்மனுக்கும் பாரதிக்கும் “உள்ளக் கலப்பு” ஏற்படுவதற்குக் காரணங்கள் பல…”

பாரதியாரின் காதல் கவிதைகள் சிலவற்றிலும் ஆங்காங்கே ஷெல்லியின் சாயலைக் காணமுடிகிறது.

04) எட்டாம் கட்டுரை : இந்தியத் தத்துவ ஞானமரபின் பல்வேறு கூறுகளைப் பற்றிய அறிவும் ஈடுபாடும் பாரதியாருக்கு நிரம்ப இருந்தது என்கிறார் கைலாசபதி இந்தக் கட்டுரையில்.

 

 

05) பத்தாம் கட்டுரை: “பாரதியாரின் கவிதைகளிலே பாடபேதங்கள் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று அவர் வாழ்நாளிலும் அவர் மறைந்த பின்னும் அவரது நூல்கள் சில வெளியிடப்பட்ட விதமாகும். அவர் இறந்த பின்னரே அவரது கவிதைகள் பெரு நூல்களாகத் தொகுக்கப் பெற்றன. இதனால் கவிஞரே அவற்றைச் சீராக வெளியிடும் வாய்ப்பிருக்கவில்லை.” என்று கூறும் ஆசிரியர்  பாரதியாரின் பாடல்களின் சுத்தமான வடிவம் நமக்குத் தெரிய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

06) பன்னிரெண்டாம் கட்டுரை : இதில் சீனி விசுவநாதன் தொகுத்த மகாகவி பாரதி நூற்பெயர்க் கோவை (ஏப்ரல் 1981) நூலைக் குறிப்பிட்டு பாராட்டுகிறார் நூலாசிரியர். 370 நூல்கள், 145 எழுத்தாளர்கள்,162 பதிப்பாளர்கள் சம்பந்தமான தகவல்களைத் தருகிறது சீனி விசுவநாதனின் தொகுப்பு நூல்.

 

இப்படி நல்லா ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகள் வளர்கையில் வக்கிர புத்தி உடையவர்களும் பாரதியை விட்டு விடவில்லை.

 

எடுத்துக்காட்டாக ஒரு உதாரணத்தை நம் முன் வைக்கிறார் கைலாசபதி.

 

“நடுநிலையாய்வு, விஞ்ஞானப் பார்வை என்பன பாரதியாராய்ச்சிகளை வளப்படுத்தும் வேளையில் வக்கிர நோக்குடன் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது. ‘பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே’ (மே 1981) என்னும் நூல், இதன் ஆசிரியர் வெற்றிமணி…. இந்நூல் காலங்கடந்த – பாமரத்தனமான – பார்ப்பனீய எதிர்ப்புடன் எழுதப்பட்டிருக்கின்றது.”

 

4

நூலில் உள்ள அனைத்துக் கட்டுரைகளுமே பாரதி ஆர்வலர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது உறுதி. பல்வேறு நோக்கங்களுடன் பல்வேறு விதமாக பாரதியை ஆய்வு செய்தவர்கள் – செய்பவர்களை – சுட்டிக் காட்டுகின்ற கட்டுரைகளும், பாரதி பாடல்களில் உள்ள பாட பேதங்களை நுணுகி ஆராய்ந்து நல்ல ஒரு பதிப்பு வெளியிடப்பட வேண்டும் என்ற நூலாசிரியரின் நோக்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகளும் பாராட்டப்பட வேண்டியவை.

 

பாரதி ஆர்வலர்களின் பாரதி இயல் நூலகத் தொகுப்பில் இருக்க வேண்டிய நூல் இது.

***

 

 

 

 

தொல்காப்பியரும் மநுவும் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள் (Post No.5089)

Written by london swaminathan

 

Date: 8 JUNE 2018

 

Time uploaded in London –  22-09  (British Summer Time)

 

Post No. 5089

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

மநு நீதி நூல்- Part 19

 

மூன்றாம் அத்யாயத் தொடர்ச்சி

தொல்காப்பியரும் மநுவும் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள்    (Post No.5089)

 

3-20 இக, பர சௌக்கியங்களைத் தரும் எட்டு வகைத் திருமணங்கள் பற்றிச் சொல்லுவேன்

 

3-21. பிராமம், தெய்வம், ஆருஷம் பிராஜாபத்யம், ஆசுரம், காந்தர்வம், இராட்சஸம், பைசாஸம்,  என எட்டு வகை.

3-22. இவைகளில் உயர்ந்தது எது, தாழ்ந்தது எது என்பதையும் எதனால் பிறந்த பிள்ளைகளில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று கற்பிக்கப்படுகிறது என்பதையும் கேளீர்.

 

3-23. பிராமணனுக்கு பிராமம் முதல் காந்தர்வம் வரை ஆறும், க்ஷத்ரியனுக்கு ஆசுரம் முதல் பைசாசம் வரையுள்ள நான்கும், ஏனைய இரு வகுப்பாருக்கு இராட்சஸம் தவிரவுள்ள ஏனைய மூன்றும் சரியான விவாகங்களாம்.

3-24. இவற்றில் பிராமணனுக்கு பிராமம் முதல் நான்கும், க்ஷத்ரியனுக்கு ராட்சஸமும் , ஏனைய இரு வகுப்பாருக்கு ஆசுரமும் சிறந்தவை.

 

3-25.பிராஜாபத்யம் முதல் பைசாஸம் வரையுள்ள ஐந்தில் மூன்று உயர்வு; பின்னிரண்டு தாழ்வு. பிராமண, க்ஷத்ரியர்களுக்கு ஆசுரம், பைசாசம் இரண்டும் பொருந்தா.

3-26 க்ஷத்ரியனுக்கு காந்தர்வமும் இராக்கதமும் உயர்வாகையால்                  இரண்டையுமோ ஒன்றையோ அவர்கள் ஏற்கலாம்.

 

3-27. வேத வித்தாகவும், நல்லொழுக்கமும் உடைய பிரம்மச்சாரியை வலியச் சென்று அழைத்து புத்தாடை கொடுத்து அலங்கரித்து பெண்ணைக் கொடுப்பது பிரம்ம விவாஹம்

 

3-28. வேள்வித் தீயின் முன்னிலையில் அதைச் செய்யும் புரோகிதனுக்குப் பெண்ணைக் கொடுப்பது தெய்வ மணம்

3-29. பெண்ணுக்கு வரதட்சிணை ( பசுவும் காளை மாடும்) வாங்கிக் கொண்டு ஒருவனுக்கு மணம் புரிவிப்பது ஆருஷம்.

3-30. ஒரு பிரம்மச்சாரியை அழைத்து, மரியாதை செய்து, நீங்கள் இருவரும் அறத்துடன் வாழ்க என்று வாழ்த்திப் பெண்னைக் கொடுப்பது  பிரஜாபத்யத் திருமணம்.

 

3-31. பெண்ணைப் பெற்றவன் சொல்லும் பொருளை எல்லாம் கொடுத்து, பெண்ணை விலைக்கு வாங்கி மணப்பது ஆசுரம் (அசுரத் திருமணம்)

3-32. ஆணும் பெண்ணும் தாங்களாகவே சந்தித்து மனம் ஒருமித்துப் புரியும் திருமணம் காந்தர்வம்

3-33. ஒரு பெண்ணின் உறவினர்களைக் கொன்று பெண்னை வலியக் கடத்திச் சென்று மணம் புரிவது இராக்சஸத் திருமணம்.

3-34. தூக்கத்திலும், மது போதையிலும், பித்துப் பிடித்தும் பெண்ணைப் பறிப்பது தாழ்ந்த முறை.

3-35. நீர் வார்த்துக் கரம் பிடித்துக் கல்யாணம் செய்வது பிராமணர்களுக்கு உகந்தது. மற்றவர்களுக்குத் தேவை இல்லை. அவர்கள் வாயினால் மந்திரம் சொல்லி மணம் புரியலாம்.

3-36. முனிவர்களே, இதுவரை விவாஹ முறைகளைக் கேட்டீர்கள்; இனி அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் குணப் பாகுபாடு பற்றிச் சொல்வேன்

3-37. பிரம்ம விவாகத்தினால் பிறக்கும் சாதுவான பிள்ளையின் மூலம், அவருக்கு முந்தைய  பத்துத் தலைமுறை நரகம் செல்வது தவிர்க்கப்படும்; பின்னால் பிறக்கப்போகும் பத்துத் தலைமுறையினரும் சாதுவான பிள்ளைகளாகப் பிறப்பார்கள்.

3-38. தெய்வ விவாஹத்தில் பிறக்கும் குழந்தைகளின் பின் பிறக்கும் 7 தலைமுறைகள் கடைத்தேறுவர். ஆருஷத் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளின் முன், பின்னுள்ள மூன்று, மூன்று தலைமுறைகள் பயனடைவர். பிரஜாபா பத்யப் பிள்ளைகளின் முன் ஆறு பின் ஆறு தலை முறைகள் கடைத்தேறுவர்.

 

3-39. பிராமம் முதலான நான்கினால் பிறக்கும் பிள்ளைகளே பிரம்ம தேஜஸ் உடையவர்கள்

3-40.இவர்கள் அழகு, வலிமை, செல்வம், அறம், புகழ், அனுபவம், கவர்ச்சி ஆகியவற்றுட 100 ஆண்டுகள் வாழ்வர்.

 

3-41. ஏனைய நான்கு வகை விவாஹத்தினால் பிறப்போர் பொய், கொலை,சூது வாது, தர்ம/வேத/யாக நிந்தனை உடையோராய் இருப்பர்.

3-42. நல்ல திருமண முறைகளால் பிறப்போர் சாதுக்களாகவும், ஏனைய முறைகளால் பிறப்போர் கெட்ட நடத்தையும் உடையவராய் இருப்பர். ஆகையால் தாழ்ந்த திருமண முறைகளை அணுகக் கூடாது.

 


எனது கருத்துகள்

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் எண்வகைத் திருமணம் பற்றி வருகிறது. மநு சொன்னதை தொல்காப்பியரும் சொல்லுவதால் இமயம் முதல் குமரி வரை இந்த வழக்கம் இருந்தது தெரிகிறது

 

எட்டு வகை திருமணம்

தொல்காப்பியம் சொல்வதாவது:-

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணுங்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே.

தொல்.பொருளதிகாம்– 1038

 

 

 

மேலும் இந்த வகைத் திருமணங்கள் இந்தியாவுக்கு வெளியே இல்லாததால் இந்துக்கள் இங்கேயே பிறந்து வளர்ந்து உருவாக்கிய கலாசாரம் இது என்பது தெரிகிறது; ஒரு இனத்தினர் வெளியிலிருந்து வந்திருந்தால் அங்கே இதன் மிச்ச சொச்சங்களாவது இருந்திருக்கும்.

 

மேலும் இந்த ஸ்லோகங்களில் பத்து தலை முறை, 100 ஆண்டுகள் முதலிய டெஸிமல் (Decimal system) முறைகள் வருவது ரிக்வேத காலம் முதல் உள்ள எண்கள். இதுவும் வெளிநாடுகளில் 2000 ஆண்டுகளுக்கு முன் இல்லை. ஆகவே இந்துக்கள் இந்த நாட்டில் உருவாக்கிய முறையே இவை.

 

முன்காலத்தில் பெண்களுக்கு ஆண்கள் வரதட்சிணை கொடுத்தது சங்கத் தமிழ் இலக்கியத்திலும் உளது.

எட்டு வகைத் திருமணங்களில் சில—- அக நானூற்றுப் பாடல்கள், சிலப்பதிகாரத்தில் தீ வலம் செய்து நடந்த திருமணங்கள், பாரி மகளிரை அசுர முறையில் மூவேந்தர் கவர முயன்றது முதலிய பல வகைத் திருமணங்களில் காண்கிறோம்.

 

அமைதியான முறையில் நடக்கும் கல்யாணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகள் நல்லபடியாக வாழ்வதை இன்றைய உளவியல் நிபுணர்களும் (Psychologists) உறுதி செய்கின்றனர். காதல் திருமணங்கள் மட்டுமே உள்ள வெளிநாடுகளில் உலகிலேயே அதிக அளவு விவாஹ ரத்து இருப்பதையும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. பெற்றோர்கள் நடத்தி வைக்கும் கல்யாணங்களில் விவாஹ ரத்து குறைவு.

எட்டு வகையான திருமணங்களை அங்கீகரித்தது உலகில் அதிக கருத்து சுதந்திரம் உள்ள அமைப்பு இந்து அமைப்பு என்பதைக் காட்டுகிறது.

 

உலகிலேயே எங்கும் காண முடியாத0—- பெண்களுக்கு அதிக உரிமை தரும்—- ஸ்வயம்வரம் என்பது இந்தியாவில் மட்டுமே இருந்தது. இந்துக்கள் வெளியில் இருந்து வந்திருந்தால் இதன் தாக்கம் அங்கேயும் இருந்திருக்கும். இத்தகைய ஸ்வயம்வரம் புராண இதிஹாச காலத்தில் இந்தியாவில் இருந்தது. வேறு எந்த கலாசாரத்திலும் இல்லை. ஆக இந்த ஸ்லோகங்கள் அனைத்தும் ஆரிய- திராவிட வாதத்துக்கு ஆப்பு வைக்கிறது.

 

-சுபம்-

English Man’s Tomb with Upanishad Mantra! (Post No.5088)

Written by london swaminathan

 

Date: 8 JUNE 2018

 

Time uploaded in London –  11-59 am  (British Summer Time)

 

Post No. 5088

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

I was reading the Woolner Commemoration Volume published in Lahore (now in Pakistan) in 1940. I found some interesting details about him:

 

Dr Alfred Cooper Woolner was born on May 13,  1878 at a place called Etruria Hall in Staffordshire in England. In 1897, he won an open Classical Exhibition at Trinity College, Oxford and was also awarded Ford Studentship. At Oxford he studies Sanskrit and Persian along with the classics and in 1901 ,was awarded the Boden Scholarship for Sanskrit. He studied Sanskrit, Pali and Chinese. He was appointed Principal of Oriental college in Lahore.

 

He was equally interested in almost all branches of Sanskrit studies. Linguistics had a special charm for him. He worked for 33 years in Punjab University. In spite of heavy administrative works, he was able to produce a good amount of valuable work. Besides his contribution to various research journals of research, he published the following:

  1. Introduction to Prakrit (Year 1917)
  2. Asoka Text and Glossary (1925)
  3. Thirteen Trivandrum Plays attributed to Bhasa (Translated into English with Dr L Sarup, 1930, 1931)
  4. Jasmine Garland or Kundamala, translated into English in 1935 (but published after his death)
  5. Indian Students’ Handbook of Philology (incomplete)

He always enjoyed a good health. He never suffered from a long illness except one occasion when an attack of malta fever (Brucellosis) made him to take rest for several weeks. He fell ill of malaria on December 17, 1935, which after a week developed into pneumonia and he died in Mayo Hospital on January 7, 1936.

 

He was buried the next day, in the new cemetery on the Ferozepur Road (in Lahore). His body takes eternal rest in tomb 125, under a black marble slab, on which are engraved, besides the usual inscription, the following Vedic lines in Devanagari script, perhaps for the first on the tomb of an European

“Out of non being lead me into being;

out of darkness into light

out of death into life eternal.”

 

(First line is translated in other books Lead me as ‘From unreal to rea’l—Brihat Aranyaka Upanishad)

(These lines are taken from elsewhere; NOT from his tomb)

A bust of his has been enshrined in the Woolner Hall of the University Union, and a statue erected on the roadside in front of the hall. Mrs Woolner (Mary Emily Bland) was his constant companion.

Sir George Anderson Said,

“Dr Woolner was tall, well built, and, of somewhat massive proportions; his presence was dignified and stately; and his beard, which he wore even in his Oxford days, seemed both natural and imposing. He could not pass unnoticed in any company, but he gave often the impression of extremes austerity. Then, all of a sudden, his face would be lit up with by the merry twinkle in his and the real man that was within him would appear.”

 

Dr G U Pope and Tamil

Dr Rev.G U Pope translated Tiruvasakam, Naladiyar and several Sangam verses from Tamil into English when he was in Tamil Nadu. People very often read about his intention to engrave that ‘I am a Tamil Student’ on his tombstone. But THERE IS NO SUCH THING ENGRAVED ON HIS TOMB STONE IN OXFORD. I don’t know how the false notion was spread by the Tamils.

— Subham—

 

‘இந்துக்களுக்கு கடல் ஒரு கால்வாய்- பூமி ஒரு முற்றம்’ (Post No.5087)

Written by london swaminathan

 

Date: 8 JUNE 2018

 

Time uploaded in London –  8-597am  (British Summer Time)

 

Post No. 5087

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

1400 ஆண்டுகளுக்கு முன்னர் ஹர்ஷ சரிதம் இயற்றிய பாணன் என்ற ஸம்ஸ்க்ருத கவிஞன் செப்புகிறான்–  “எங்கள் நாட்டு மக்களுக்கு கடல் என்பது ஒரு கால்வாய் போல; பூமி என்பது முற்றத்தில் கிடக்கும் கல் மேடை போல” என்று. அதாவது கடற் பயணத்தில் வல்லவர்கள் இந்துக்கள் என்பது இதன் கருத்து.

“அங்கணவேடி வஸுதா குல்யா ஜலாப்திஹி” – ஹர்ஷ சரித

ராஜ ராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் இதற்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் தென் கிழக்காசிய நாடுகளில் புகழ் கொடி நாட்டியதை நாம் அறிவோம். அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களும், கலிங்கர்களும் கடலாதிக்கம் செலுத்தினர். கீழைக் கடலிலும் மேலைக் கடலிலும்  குப்தர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

 

‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது தமிழ்ப் பழமொழி; இதை பாணனும் பாடுகிறான்:

‘அப்ரமனேன ஸ்ரீ சமாகர்ஷனே’ – ‘லக்ஷ்மியானவள் கடல் பயணத்தின் மூலம் வருகிறாள்’ என்பான்.

 

சூத்ரகன் என்ற சம்ஸ்க்ருத நாடக ஆசிரியன் 1800 ஆண்டுகளுக்கு முன்பு ‘மிருச்ச கடிகம்’ என்ற நாடகத்தை எழுதினான். இதை பண்டித கதிரேசன் செட்டியார் ‘மண்ணியல் சிறுதேர்’ என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இதில் வசந்த சேனை என்ற விலைமாதரின் வீட்டில் சாருதத்தன் என்னும் கதாநாயகன் நகைகளைத் திருப்பிக் கொடுப்பதற்கு விதூஷகனை (நகைச் சுவை நடிகன்) அனுப்புகிறான்.

அவன் அவளது எட்டு அடுக்கு வீட்டைப் பார்த்து– அரண்மனையைப் பார்த்து– மூக்கில் விரல் வைத்து, வசந்த சேனையின் தோழியிடம் வியக்கிறான்—‘அம்மையே! என்ன கடல் வாணிபம் செய்வதில் வல்லவரோ நீவீர்! இவ்வளவு செல்வம் எங்கிருந்து வந்ததோ!’

‘பவதி கிம் யுஸ்மாகம் யானபாத்ராணி வஹந்தி!’

 

ஆக அக்காலத்தில் யாரிடமாவது செல்வம் அளவுக்கு மீறி இருந்தால் அது கடல் வர்த்தகம் மூலம் சம்பாதித்ததாகப் பேசுவர்.

 

மஹாபாரதம் சபா பர்வத்தில் அனந்ததாகி (துருக்கி நாட்டு அண்டியோக்), ரோமா ( இதாலி நாட்டு ரோம்), யவனபுரி ( எகிப்திலுள்ள அலெக்ஸான்ட்ரியா) முதலிய துறைமுகங்கள் குறிப்பிடப்படுகின்றன.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் தந்தை ஒரு மஹா நாயகன் – கப்பல் வணிகன் (மாநாய்க்கன்); கோவலனின் தந்தை நில வணிகன் (மஹா சார்த்தவாஹ) மாசாத்தன்.

 

சங்கத் தமிழ் இலக்கியம் முழுதும் வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி பற்றிய குறிப்புகள் நிறைய உள. சுங்க வரி விதித்து புலி முத்திரை குத்தியது வரை சுவையான செய்திகள் கிடைக்கின்றன.

 

மஹா பாரதத்தில் யக்ஷப் ப்ரஸ்னம் ( பேயின் கேள்விகளுக்கு யுதிஷ்டிரன் கொடுத்த பதில்கள்) பகுதியில் ஏரியைப் பாதுகாக்கும் பிராஹ்மணப் பேய் (பிரம்ம ராக்ஷஸ்) பல கேள்விகளைக் கேட்கிறது. அதில் ஒரு கேள்வி

யார் நண்பன்?

அதற்கு தர்மனின் (யுதிஷ்டிரன்) பதில்:-

‘பயணம் செய்வோனுக்கு வண்டி நண்பன்; வீட்டில் உள்ளோருக்கு மனைவி நண்பன்’– என்று விடை பகர்வான்.

 

இது வியாபாரி ஒருவனை மனதில் கொண்டு தர்மன் அளித்த பதில் என்பது ஸம்ஸ்க்ருத சொற்றொடரைக் காண்கையில் ‘உள்ளங்கை நெல்லிக் கனி’ என விளங்கும்

‘சார்தஹ ப்ரவசதோ மித்ரம் பார்யா மித்ரம் க்ரிஹசதஹ’ (ஆரண்யக பர்வம்).

துலுக்கர் கையில் சிக்கிய குதிரை வியாபாரம்

 

முதலில் இந்துக்கள் கைகளில் இருந்த குதிரை வர்த்தகம் மெதுவாக அராபியர் கைகளுக்கு மாறியது. குதிரைகளுக்கான ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் அராபிய மயமாயின. கி.மு 1400ல் துரக (குதிரை) ஸ்தானத்தில் ஸம்ஸ்க்ருத்த்தில் குதிரைகளைப் பழக்கிய தகவல்கள் மிகவும் பிரஸித்தம்- துரக ஸ்தானம் என்பது துலுக்கர் கைகளில் சிக்கியவுடன் ‘துருக்கி’ ஆனது. துருக்கன் என்பது ‘துலுக்கன்’ ஆனது.

 

ஆயினும் அராபியர்கள் அவ்வளவு எளிதில் இந்திய வணிகத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகம்   முழுதும் துலுக்கர்கள் படை சென்றபோது அந்த நாடுகள் அட்டைப் பெட்டிகள் சரிந்து போவது போல சரிந்து மடிந்தன. ஆனால் இந்தியாவில் துலுக்கர் படைகள் காஸி நகரை அடைய 450 ஆண்டுகள் ஆயின. ஸோமநாதபுரத்தைக் கொள்ளையடிக்க கஜினி முகமது என்னும் அயோக்கிய அரசன் 17 முறை படை எடுக்க வேண்டி இருந்தது அப்படியும் கூட ப்ருத்விராஜ், சுந்தர பாண்டியன் போன்றோர் காட்டிக் கொடுத்ததாலேயே ஒரு கோரி முகமதுவும், ஒரு மாலிக்காபூரும் நுழைய முடிந்தது. ஆக 1500 ஆண்டுகளுக்கு தென் கிழக்காசிய நாடுகள் அனைத்திலும் கொடிகட்டிப் பறந்த இந்து வணிகம் சிறுகச் சிறுக அராபியர் கைகளில் வீழ்ந்தன. அவர்கள் மலேஸியா, இந்தோ நேஷியா போன்ற நாடுகளை துலுக்க நாடுகளாக மாற்றினர். வணிகர்களாக வந்த ஆங்கிலேயரும் துலுக்கர்களும் மத த்தையும் பரப்பினர். இந்துக்கள் அதைச் செய்யத் தவறினர்.

 

–சுபம், சுபம்–