மாக்ஸ்முல்லருக்கு ஸம்ஸ்க்ருதம் ‘புரியாது’ – (Post No.5361)

Direct Disciples of Sri Ramakrishna Paramahamsa. Swami Vievekananda, Swami Abhedanadda and others are in the picture.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date: 25 August 2018

 

Time uploaded in London – 8-13 AM (British Summer Time)

 

Post No. 5361

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

நான் ஏன் இந்து? அபேதாநந்தா- PART 2

மாக்ஸ்முல்லருக்கு ஸம்ஸ்க்ருதம் ‘புரியாது’ –  (Post No.5361)

 

ராமகிருஷ்ண வேதாந்த மடத்தின் ஸ்தாபகரான சுவாமி அபேதாநந்தா, எப்படி ராமக்ருஷ்ண பரமஹம்ஸரால் ஈர்க்கப்பட்டார் என்பதை நேற்று முதல் பகுதியில் கண்டோம். இதோ இரண்டாவது பகுதி:-

 

“பின்னர் நான் அக்காலத்திய பிரபலங்கள் எழுதிய வானவியல், உளவியல், இயற்பியல் புஸ்தகங்களைப் படித்தேன். சுவாமி விவேகாநந்தருடன் சேர்ந்து புத்த மத நூல்களையும் அத்வைத வேதாந்தத்தையும் கற்றேன். ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடமிருந்து த்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றையும் அறிந்தேன்.

 

1886-ல் ராமகிருஷ்ணர் சமாதி அடைந்தவுடன் நான் சந்யாசம் எடுத்தேன். அப்போதுதான் அபேதாநந்தா என்ற பெயரைப் பெற்றேன். இந்து மதத்தின் ஆறு பிரிவுகள், உபநிஷத்துகள், பாணினியின் ஸம்ஸ்க்ருத இலக்கணம், வல்லபர், நிம்பகர் எழுதியவற்றையும் படிக்க நேரம் கிடைத்தது.

காலில் செருப்பு இல்லாமல் ஊர் ஊராகச் சுற்றினேன். மக்கள் இட்ட பிச்சை உணவை மட்டுமே சாப்பிட்டேன். வாழ்க்கையின் நிலையாமை, ஆத்மாவின் நிலைத்த தன்மை ஆகியன மனதில் நின்றதால் நிறைய கஷ்டங்களை வலிய ஏற்றேன். பல விரதங்களையும் நோன்புகளையும் அனுஷ்டித்தேன். கங்கை, யமுனை நதிகள் தோன்றுமிடம் வரை சென்று இமய மலைக் குகைகளில் மூன்று மாதம் வசித்தேன். கடல் மட்டத்திலிருந்து 14,000 அடி உயரத்தில் இருந்த அந்த இடத்தில் இருந்துகொண்டு தியானம் செய்தேன். இப்போதைய வாழ்வு ஒரு கனவு போன்றது என்று உணர்ந்து பத்து ஆண்டுகளுக்கு  பாரத நாட்டை வலம் வந்தேன்.

 

கேதார்நாத், பத்ரிநாத், த்வாரகா, புரி, ராமேஸ்வரம் முதலிய புண்ய ஸ்தலங்களுக்குச் சென்றேன். பெரிய மஹான்களான த்ரைலிங்க ஸ்வாமி, பாஸ்கராநந்தா ஆகியோரை வாரணாசியில் தரிசித்தேன். காஜிபூரில் பவஹரி பாபா தரிசனம் கிடைத்தது. பிருந்தாவனத்தில் வைஷ்ணவப் பெரியோர்களையும், ரிஷிகேஷில் வேதாந்த விற்பன்னர்களையும் பார்த்தேன். அந்தக் காலத்தில் வேதாந்த விஷயத்தில் கீர்த்திவாய்ந்த தனராஜ் கிரியிடம் ரிஷிகேஷில் வேதாந்தம் படித்தேன்.

 

1893-ல் சுவாமி விவேகாநந்தர் சிகாகோ சர்வமத பார்லிமெண்டில் பேசிய பின்னர் மூன்றாண்டுகளுக்கு மேலை நாடுகளில் புகழ்பெற்ற பிரசங்கங்களை நிகழ்த்தினார். லண்டனில் ராஜ யோகம், ஞான யோகம் பற்றி உரைகள் ஆற்றினார். 1896-ல் என்னையும் உதவிக்கு அழைத்தார். 1896-ஆகஸ்டில் கப்பலில் கலகத்தாவிலிருந்து லண்டனுக்குப் பயணமானேன். என்னுடைய முதல் லண்டன் சொற்பொழிவு கிறிஸ்தவ-பிரம்மஞான சபையில் நிகழ்ந்தது. என்னை லண்டனில் ஞான யோக, ராஜ யோக வகுப்புகளை எடுக்கச் சொல்லிவிட்டு சுவாமி விவேகாநந்தா 1897- இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

 

லண்டனில் நான் இருந்தபோது மாக்ஸ்முல்லரையும் 60 உபநிஷத்துகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்த பால் டாஸன் (MAX MULLER AND PAUL DEUSSEN) என்பவரையும் பார்க்க, விவேகாநந்தர் அழைத்துச் சென்றார். மாக்ஸ்முல்லருக்கு ஸம்ஸ்க்ருதம் பேசவும் தெரியாது; பேசினால் புரிந்து கொள்ளவும் முடியாது. ‘எனது நாக்கும் காதுகளும் ஸம்ஸ்க்ருத உச்சரிப்புகளுக்குப் பழக்கப்படவில்லை’ என்று அவரே ஒப்புக்கொண்டார். ஆகையால் அவரிடம் ஆங்கிலத்தில் பேசினேன்.  ராமகிருஷ்ண பரமஹம்ஸர் விஷயத்தில் அவர் மிகவும் அக்கறை காட்டினார். மாக்ஸ்முல்லர் சொன்னார், ” ராமகிருஷ்ணர் சுயமாக சிந்திப்பவர். ஏனெனில் அவர் பல்கலைக்கழகங்களில் வேதாந்தம் கற்கவில்லை; இதனால் அவரது உபதேசங்களும் புதுமையாகவும் பூர்வீக உண்மைகளாகவும் உள.” அவர் இப்படிச் சொன்னது என் மனதில் அவர் பற்றி ஒரு நல்ல எண்ணத்தை உண்டாக்கியது. இதற்குப் பின்னர் மாக்ஸ்முல்லர் ராமகிருஷ்ணரின் வாழ்வும் உபதேசங்களும்  (LIFE AND SAYINGS OF RAMAKRISHNA) என்ற ஆங்கில நூலை வெளியிட்டார்.

1897-ல், சுவாமி விவேகாநந்தர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கப்பலில் அட்லாண்டிக் கடலைக் கடந்து நியூயார்க் சென்றேன். அங்கு அவர் துவக்கி இருந்த வேதாந்தக் கழகத்தில் (VEDANTA SOCIETY) ஆறே மாதங்களில் வேதாந்தம் பற்றியும் பதஞ்சலியின் யோக சாஸ்திரம் பற்றியும் 90 சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன். நல்ல கூட்டம் வந்தது. வேதாந்தக் கழகத்தின் தலைவர் என்ற அந்தஸ்தில் நாள்தோறும் கடோபநிஷத், பகவத் கீதை வகுப்புகளையும் எடுத்தேன்.

 

1898ல் பேராசிரியர் வில்லியம் ஜேம்ஸ், (PROFESSOR WILLIAM JAMES) அவரது இல்லத்தில் பரப்பிரம்ம ஐக்கியம் பற்றி (UNITY OF THE ULTIMATE REALITY) ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். நான்கு மணி நேரத்துக்கு விவாதம் நடந்தது. பேராசிரியர்கள் ராய்ஸ், லான்மேன், ஷேலர், கேம்பிரிட்க் டாக்டர் ஜேம்ஸ் (PROFESSORS ROYCE, LANMAN, SHALER AND DR JAMES OF CAMBRIDGE) ஆகியோர் எனது வாதத்தை (UNITY) ஆதரித்துப் பேசினர்.

 

அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோவில் விரிவான சுற்றுப் பயணம் செய்து,  ஜொராஸ்தர், டாவோ, ஷின்தோயிஸம், புத்தர், கிறிஸ்து, முகமதுநபி ஆகியோரின் போதனைகள் பற்றிப் பேசினேன். திபெத்தில் வழங்கும் லாமாயிஸம்  முதலிய எல்லாம் ‘உலகத்தை உய்விக்க வந்த மஹான்கள்’ (GREAT SAVIOURS OF THE WORLD LECTURES) என்ற தலைப்பில் இடம்பெற்றன.

 

1921ம் ஆண்டில் பஸிபிக் மஹா சமுத்திரத்தைக் கடந்து ஹவாய், ஜப்பான், சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மலேயா முதலிய நாடுகளில் சொற்பொழிவாற்றிவிட்டு கல்கத்தாவுக்குத் திரும்பினேன்.

1922ம் ஆண்டில் கால்நடையாக இமயமலையில் நடந்தேன்; காஷ்மீரிலிருந்து திபெத்துக்குச் சென்று லாமாயிஸம் (திபெத்திய பௌத்தம்) பற்றி அறிந்தேன். எனது இலக்கு லடக்கிலுள்ள லே என்னும் இடத்திலிருந்து 25 மைல் தொலைவில் இருந்த ஹெமிஸ் பௌத்த மடாலயம் (HEMIS MONASTERY, 25 MILES FROM LEH) ஆகும்.

 

1923ம் ஆண்டில் கல்கத்தவுக்குத் திரும்பினேன். ராமகிருஷ்ண வேதாந்த கழகத்தைத் துவங்கி இன்று வரை அதன் தலைவராக இருக்கிறேன் . டார்ஜிலிங் நகரில் வேதாந்த ஆஸ்ரமத்தைத் துவக்கினேன்.

 

என்னுடைய இந்த வாழ்க்கைச் சரிதம் எனது மதத்தில் நான் ஏன் ஆழ்ந்த பற்றுக் கொண்டேன் என்பதையும் அதற்குக் காரணமாக இருந்த   அம்சங்களையும் சக்திகளையும் விளங்கிக் கொள்ள வாசகர்களுக்கு உதவும்”.

 

1936 ஆம் ஆண்டில் வெளியான புஸ்தகத்தில் உள்ள கட்டுரை இது.

சுவாமி அபேதாநந்தா-

தோற்றம் -2-10-1866;

மறைவு- 8-9-1939

 

–சுபம்-

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 3 (Post No.5360)

Australian aborigines

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 25 August 2018

 

Time uploaded in London – 6-14 AM (British Summer Time)

 

Post No. 5360

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 3

 

ச.நாகராஜன்

 

5

எங்கு கிறிஸ்தவ மத வெறியர்கள் சென்றாலும் அங்குள்ள பூர்வ குடியினருக்கு ஆபத்துத் தான். கலவரம், கொள்ளை, கொலை இவைகளே அவர்களின் வழிமுறைகள்.

 

ஹவாயில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் 5 லட்சம் பூர்வ குடியினர் வசித்தனர். ஆனால் இன்றோ அவர்களின் ஜனத்தொகை வெறும் ஐம்பதினாயிரமாகக் குறைந்து விட்டது. அவர்களது பண்பாடு, பழக்க வழக்கம், மதம் எல்லாம் போயே போய் விட்டது. அவர்களது மொழியோ வெறும் ஐந்நூறு பேர்களால் மட்டுமே இன்று பேசப்படுகிறது. அவர்கள் தொழுத கடவுளோ வெறும் கஹுனா (Kahuna) குருமார்களால் மட்டுமே தொழப்படுகிறது.

 

 

ஸ்பெயின் நாடு வெற்றிகரமாக மதத்தைப் பரப்பிக் கொள்ளை அடித்து செல்வம் சேர்த்து வருவதைப் பார்த்த போர்த்துக்கல் நாமும் ஏன் இப்படிக் கொள்ளை அடிக்கக் கூடாது என்று எண்ணியது. தென் அமெரிக்கா முழுவதும் ஸ்பெயினால் காலியாக்கப்பட்டதை எண்ணிய போர்த்துக்கல் தமது நாட்டினரையும் கப்பலில் அனுப்பி பார்த்தவர்களை எல்லாம் கொன்று பணத்தை எடுத்து வாருங்கள் என்று அனுப்பியது.

 

இதைப் பார்த்த ஸ்பெயினுக்குக் கோபம் வரவே இது ஸ்பெயினுக்கும் போர்த்துக்கல்லுக்குமான போராக மாறியது.

இதைப் பார்த்த வாடிகன் போப் திடுக்கிட்டார். மதமாற்றம் என்னும் முதலுக்கே மோசம் வந்து விட்டதே என்று எண்ணிய அவர் இரு நாடுகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தார்.

 

அவரது சமரச திட்டத்தின் படி கொள்ளை,கொலைக்கான எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது லத்தீன் அமெரிக்காவில் ஒரு எல்லை நிர்ணயிக்கப்பட்டு தென் பிராந்தியங்கள் எல்லாம் ஸ்பானியர்களின் கொள்ளை, கொலை பிரதேசம் என்றும் வட பிராந்தியங்கள் எல்லாம் போர்த்துக்கல்லின் கொலை, கொள்ளை பிரதேசம் என்றும் வ்ரையறுக்கப்பட்டது.

 

ஆகவே தான் ஸ்பெயினின் மாரடோனா இன்று ஸ்பானிஷ் (Maradona of Spain)  மொழி பேசுவதையும் பிரேஜிலின் பீலே (Pele of Brazil) போர்த்துக்கல் மொழி பேசுவதையும் இன்று நம்மால் பார்க்க முடிகிறது.

இப்படி மதமாற்றத்திற்கு ஊறு நேராத படி சமரசம் செய்வதில் போப்புகள் வல்லவர்கள். மதமாற்றம் அல்லாத போர்களைப் பற்றி அவர்கள் அக்கறை காட்ட மாட்டார்கள்.

 

ஆனால் கிறிஸ்தவ மத மாற்றும் முயற்சியில் ஏதேனும் பங்கம் ஏற்பட்டால் அவ்வளவு தான், வரிந்து கட்டிக் கொண்டு சமரச முயற்சியில் தங்களது போப் என்ற செல்வாக்கை வைத்துக் கொண்டு இறங்குவார்கள்.

 

இரண்டாவது உலக மகா யுத்தத்தை எடுத்துக் கொள்வோம்.

ஹிட்லர் கத்தோலிக்க கிறிஸ்தவர். அவர் லட்சோபலட்சம் அப்பாவி யூதர்களைக் கொன்று குவித்தார். இதைப் பார்த்த உலகமே திடுக்கிட்டு பிரமித்தது. ஆனால் போப்போ இதைக் கண்டிக்கவே இல்லை. ஏனெனில் சாவது யூதர்கள் தானே!

ஒரு முறை இப்படிப்பட்ட கோரக் கொலைகளை போப் கண்டிக்கவில்லை என்பது சோகமான ஒரு வரலாற்று உண்மை!

 

6

விஞ்ஞானத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் ஆரம்ப காலம் முதலே சண்டை தான். ஏனெனில் பல விஞ்ஞான உண்மைகள் கிறிஸ்தவம் கூறும் கொள்கைகள் தவறு என்பதை நிரூபிப்பதால் தான்.

 

கலிலியோ சூரியனைச் சுற்றியே பூமி வருகிறது என்பதை நிரூபித்தார். ஆகவே பைபிள் கூறுவது அபத்தமானது என்பதை வெட்ட வெளிச்சமாக்கினார். வந்தது கோபம் போப்பிற்கு.

உடனடியாக அரசாளும் மன்னருக்கு உத்தரவு போட, கலிலியோ கைது செய்யப்பட்டார்.

 

கலிலியோ தனது “கண்டுபிடிப்பை” வாபஸ் வாங்குமாறு செய்யப்பட்டார்.

முதுமைக் காலத்தில் கலிலியோ சிறையில் வாடியதும் அவர் எழுதிய கடிதங்களும் தனி ஒரு நூலுக்கான விஷயம்.

பைபிள் அபத்தம் என்று கூறும் விஞ்ஞான உண்மைகளைக் கூறும் விஞ்ஞானிகள் போப்பினால் உடனடியாகக் கண்டிக்கப்படுவது வாடிக்கையான ஒரு விஷயம்.

இதையும் மீறி அறிவியல் உலகம் இன்று முன்னேறி வருகிறது.

 

7

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விஷயம் இது.

கிழக்கு ஐரோப்பிய பால்கன் நாடுகள் யூகோஸ்லேவியாவிடமிருந்து பிரிந்தன. செர்பியா, போஸ்னியா, க்ரோஷியா, ஹெர்சகோவினா (Serbia, Bosnia,Croatia and Herzegovina) ஆகிய நாடுகள் பிரிந்த நிலையில் பிரம்மாண்டமான ஒரு ஆதிக்கப் போட்டியும் எந்த பிரதேசம் யாருக்குச் சொந்தம் என்ற நில ஆக்கிரமிப்புப் போட்டியும் தொடங்கியது. இரத்தம் சிந்தும் அந்தப் போர் பயங்கரமாக உருவெடுத்தது.

 

இதைக் கண்ட போப் திடுக்கிட்டார். அமெரிக்க அரசை நாடிய போப் ஏதேனும் செய்ய வேண்டுமென்று ஆலோசனை கூறினார். இந்த பிரச்சினைக்கு அவர் கூறிய தீர்வு ஒரு நிபந்தனையுடன் கூடியது.

 

என்ன அந்த ஒரு நிபந்தனை?

 

முஸ்லீம் மற்றும் ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் முழு ஜனத்தொகையுடன் மொத்தமாக ரோமன் கத்தோலிக்கராக  மாற வேண்டும் என்பது தான் அந்த ஒரே ஒரு நிபந்தனை!!

அட, கிறிஸ்தவத்தின் கத்தோலிக்க பிரிவு தானே இப்படிச் செய்கிறது என்று சொல்லி விட்டு விட முடியாது. இதே அளவுக்கோ அல்லது இதை விட மோசமான அளவுக்கோ கிறிஸ்தவத்தின் இதர பிரிவுகளும் தங்கள் இப்படி செய்ததைச் சுட்டிக் காட்டும் சம்பவங்கள் ஏராளம் உள்ளன.

எடுத்துக் காட்டாக …….

தொடரும்

***

 

நான் ஏன் இந்து? அபேதாநந்தா பதில் (Post No.5359)

COMPILED BY LONDON SWAMINATHAN

Date: 24 August 2018

 

Time uploaded in London – 21-28 (British Summer Time)

 

Post No. 5359

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

சுவாமி அபேதானநந்தா ராமகிருஷ்ண வேதாந்த மடத்தின் ஸ்தாபகராவார். அந்த மடத்தின் தலைமைப் பீடத்திலும் இருந்தார்.

 

இந்திய தத்துவப் பேராசிரியரும் பிற்காலத்தில் ஜனாதிபதியுமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், தற்கால தத்துவ அறிஞர்களுக்கு மூன்று கேள்விகள் அனுப்பினார். அதற்கு மஹாத்மா காந்தி உள்பட பலரும் பதில் அளித்தனர். அபேதானநந்தா அளித்த பதிலின் சுவையான அம்சங்களை மட்டும் தருகிறேன்.

 

மூன்று கேள்விகள்

 

  1. உங்கள் மதம் என்ன?
  2. அதில் ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?

சமுதாய வாழ்வில் அதன் தாக்கம் எப்படி இருந்தது?

 

 

இதற்கு அபேதாநந்தா அளித்த பதில்:–

 

நான் கல்கத்தாவில் 1866-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ம்தேதி பிறந்தேன். பிறந்தபோது பெற்றோர்கள் சூட்டிய திரு நாமம் காளி பிரஸாத்.

என் அப்பா ரஸிக்லால் சந்திரா தத்துவ ஆர்வலர். ஆனால் அவர் கல்கத்தா ஓரியன்டல் செமினரியில் ஆங்கில ஆசிரியர்.

நான் முதலில் ஸம்ஸ்க்ருதப் பள்ளியிலும் பின்னர் வங்காளிப் பள்ளியிலும் பயின்றேன். 18 வயதில் படிப்பை முடித்தேன். சிறு வயதிலிருந்தே எதையும் ஏன் எப்படி என்று அறிவதில் ஆர்வம் உண்டு.

 

Standing: swami Vivekananda and others

Sitting: Swami Abedhananda and others

 

வில்ஸன் எழுதிய இந்திய சரித்திரம் என்ற புஸ்தகத்தைப் படித்தேன்; அவர் ஆதி சங்கரரின் தத்துவ அறிவைப் போற்றி எழுதி இருந்தார்; அதைப் படித்த போது உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்ச்சி. நானும் தத்துவ அறிஞராக மாறி அவர் எழுதியதை எல்லாம் படித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்பொழுது ஸெமினரியில் ‘வரையும் கலை’ (DRAWING AND PAINTING) யைப் பயின்று கொண்டிருந்தேன். இயற்கை ஓவியங்களை வரைவதும் வண்ணம் தீட்டுவதும் என் படிப்பு. திடீரென்று இதை விட்டுவிட்டு தத்துவ அறிஞர் ஆவோம் என்று வெளியேறி விட்டேன்.

 

முன்னரே பள்ளியில் ஸம்ஸ்க்ருதம் பயின்றதால் வீட்டில் ‘முக்தபோதம்’ என்ற இலக்கண நூலைப் பயின்று நல்ல ஸம்ஸ்க்ருத அறிவைப் பெற்றேன். இப்பொழுது ஸம்ஸ்க்ருதத்தில் கவிதைகள் எழுதும் அளவுக்கு ஆற்றல் வந்துவிட்டது.

 

அப்பாவின் நூலகத்துக்குள் நுழைந்த போது பகவத் கீதை புஸ்தகத்தைக் கண்டேன். அதைப் படிக்கத் துவங்கினேன். அதைப் பார்த்துவிட்ட என் அப்பா, புஸ்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு இது எல்லாம் பையன்களுகான விஷயம் அல்ல; இதைப் படித்தால் பைத்தியக்காரன் ஆகிவிடுவாய் என்று சொல்லிவிட்டார். அப்படிச் சொல்லியும் அதை என்னால் படிக்காமல் இருக்க முடியவில்லை.

 

சிறு வயதிலிருந்தே சமயச் சொற்பொழிவுகளுக்குப் போவேன். இந்து மத உபந்யாஸம் மட்டும் என்றில்லாமல் ரெவரெண்ட் மக்டொனால்டு, ரெவரெண்ட் காளிசரன் பானர்ஜி ஆகியோர் ஆற்றிய கிறிஸ்தவ சொற்பொழிவுகளையும் செவி மடுத்தேன். பைபிளை எதிர்த்து நடத்தப்பட்ட பிரச்சாரக் கூட்டங்களுக்கும் போனேன். பிரம்ம சமாஜத்தின் பெரும் புள்ளிகளான கேசவ சந்திர சென், பிரதாப் சந்திர மசூம்தார் ஆகியோரின் பிரசங்கங்களைக் கேட்கும் பாக்கியமும் கிடைத்தது.

 

1883-ல் இந்து தத்துவ வித்தகர் பண்டிட் சேஷாதர் தர்க்க சூடாமணி இந்து தத்துவ இயலின் ஆறு பிரிவுகள் பற்றி உரையாற்றினார். வைசேஷிகம், சாங்க்யம் பற்றி உரையாற்றுகையில் கானடர், கபிலர் ஆகியோரின் கொள்கைகளை நவீன விஞ்ஞானக் கொள்கைகளுடனும் கிரேக்க ஞானிகளின் கொள்கைகளுடனும் ஒப்பிட்டார். பதஞ்சலியின் யோகம் பற்றிப் பேசுகையில் அவர் சொன்னதைக் கேட்டு இந்து உளவியலில் (HINDU PSYCHOLOGY) எனக்கு ஆர்வம் பிறந்தது.

 

இதையடுத்து கபிலரின் யோக சாஸ்திரத்தை காளிபர வேதாந்த வாகீஷிடம் கற்றேன். அவர் அதை விரிவான விளக்க உரையுடன் அ வங்காளி மொழியில் மொழிபெயர்த்த காலம் அது.

 

நானும் ஹட யோகம், ராஜ யோகம் ஆகியவற்றைப் பயிற்சி செய்து நிர்விகல்ப சமாதி அடைய முயன்றேன். சிவ சம்ஹிதையைப் படித்த போது அதிலுள்ள யோகப் பயிற்சிகளை முறையான யோகிகளின் வழிகாட்டுதலோடுதான் செய்ய வேண்டும் என்று எச்சரித்தனர். யாராவது குரு கிடைக்க மாட்டார்களா என்று தவித்தபோது என்னுடைய சக மாணவர் ஞானேஸ்வர் பட்டாசார்யா என்னை ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் செல்லும் படி சொன்னார்.

 

கல்கத்தாவிலிருந்து நாலு மைல் தொலைவில் தட்சிணேஸ்வரம் இருந்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைச் சந்திக்க அங்கே சென்றேன். யோகத்தைக் கற்பிக்க முடியுமா என்று வினவியபோது அவர் உடனே ‘சரி’ என்று சொன்னார். நீ பூர்வ ஜன்மத்தில் பெரிய யோகியாக இருந்தாய். வா, வா, உனக்கு யோக முறைகளைச் சொல்லித் தருகிறேன் என்றார். எனக்கு பயிற்சி முறையை விளக்கிய பின்னர் என் நெஞ்சைத் தொட்டார். என்னுள்ளே உறைந்து கிடந்த குண்டலினி சக்தி மேலே கிளம்பி அற்புத அனுபவத்தைத் தந்தது. நான் அவருடைய பரம பக்தனாகவும் சீடனாகவும் மாறினேன். அவருக்கு இரண்டு ஆண்டுகள் பணிவிடை செய்த காலத்தில் அவருடைய மற்ற சீடர்களுடன் ,குறிப்பாக சுவாமி விவேகாநந்தருடன் தொடர்பு ஏற்பட்டது.

 

அவரோடு நல்ல பழக்கம் ஏற்பட்டதால் இந்திய ஐரோப்பிய தத்துவவியலின் பல அம்சங்கள் பற்றி விவாதிப்பேன்.

 

–தொடரும்

 

WHY I AM A HINDU?- MAHATMA GANDHI (Post No.5358)

 

COMPILED BY LONDON SWAMINATHAN

Date: 24 August 2018

 

Time uploaded in London – 17-33 (British Summer Time)

 

Post No. 5358

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

GANDHIJI’S ANSWER TO THREE QUESTIONS

I have been asked by Sri S Radhakrishnan (later President of India) to answer the following three questions:

What is your religion?

How are you led to it?

What is its bearing on social life?

my religion is Hinduism which, for me, is Religion of humanity and includes the best of all the religions known to me.

 

I take it that the present tense in the second question has been purposely used instead of the past.. I am being let to my religion through Truth and Non Violence, i.e. love in the broadest sense. I often describe my religion as Religion of Truth. Of late, instead of saying God is Truth, I have been saying Truth is God, in order more fully to define my religion. I used, at one time , to know by heart the thousand names of God which a booklet in Hinduism gives in verse form and which perhaps tens of thousands of Hindus recite every morning. But nowadays nothing so completely describes my God as truth. Denial of God we have known . Denial of Truth we have not known. The most ignorant among mankind have some truth in them. We are all sparks of Truth. The sum total of these sparks is indescribable, as yet unknown Truth, which is God. I am being daily led nearer to it by constant prayer.

The bearing of this religion on social life is, or has to be, seen in one’s daily social contact. To be true to such religion one has to lose oneself in continuous and continuing service of all life. Realization of Truth is impossible without a complete merging of oneself in, and identification with, this limitless ocean of life. Hence, for me, there is no escape from social service, there is no happiness on earth beyond or apart from it. Social service here must be taken to include every department of life. In this scheme there is nothing high. For, all is one, though we seem to be many.

 

–M K Gandhi

Source book:-

Contemporary Indian Philosophy, Edited by S Radhakrishnan and J H Muirhead, 1936 (second revised edition 1952)

(My father V santanam bought this book on 3-9-1956 for 26 rupees 4 Annas and numbered the book as 580. Probably his book collection number. It was bought from Bharathi Puthaka Nilayam in Madurai. I see his underlining of important points  throughout the book. Total number of pages 650.  I used to go to Bharathi Puthaka Niayam with my father and the owner’s name was also Swaminathan; so I got a chocolate every time I went there!—London swaminathan)

 

 

Homer and Vyasa- Iliad, Odyssey and the Mahabharata (Post No.5357)

Blind Poet Homer of Greece

COMPILED BY LONDON SWAMINATHAN

Date: 24 August 2018

 

Time uploaded in London – 9-03 AM (British Summer Time)

 

Post No. 5357

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

WHO IS HOMER?

 

 

HOMER PROFILE

Greek poet
Lived 8 th century BCE

Of all the ancient poets of Greece Homer is the most mysterious and most extraordinary. He is known as the author of the two earliest works of European literature, the Iliad and the odyssey. Nothing at all is known for certain about his life, and many scholars have argued that he never even existed.

The Iliad and odyssey describe events during and soon after the Trojan war, a conflict between Ancient Greek s and citizens of a city called Troy around 1250 BCE. The works were probably composed several hundred years after this time. If Homer was a real person , he may have lived during the 8th century BCE. Those who argue that Homer is a myth say that the poems are the work of several generations of poets combined into one long text at a much later date.

Whatever the truth, the name of Homer was revered in Ancient Rome and Greece. The Iliad and the odyssey were regarded in much the same way as Christian Bible was later regarded in medieval Europe. They were the basic education al texts of the time q, and quotations from them were used to settle disputes and resolve moral problems.

Both the Iliad and the Odyssey are epic poems. They tell the stories of heroes and their incredible deeds in a mythical past when gods and goddesses interfere d directly in the lives of mortals. Characters and events from the Iliad and the odyssey were often used by the later Greek writers and are still referred to in the European literature today. James Joyce’s novel Ulysses, written around 3000 years later, is based on the adventures of Odysseus, hero of the odyssey.

 

Comparison of Homer and Vyasa

Vyasa wrote the longest epic in the world. His master piece Mahabharata has over 200,000 lines. If you compare it with Homer, the first poet of Greek literature, who wrote the Iliad and the odyssey, you will enormous know the size of the Hindu epic. Both of Homer’s epics have only 30 000 lines.

Dr F A Hassler of America says about the Mahabharata ,
“I have studied it more than any other work for a long time past, and I have made at least 1000 notes which I have arranged in alphabetical order for the purpose of study. The Mahabharata has opened to me, as it were, a new world, and I have been surprised beyond measure at the wisdom, truth, knowledge , wisdom and love of the right which I have found displayed in its pages. Not only so, but I have found many of the truths which may own heart has taught me in regard to the Supreme being and His creations set forth in beautiful, clear language”.

Professor Sylvan Levi says
“The Mahabharata  is not only the largest, but also the grandest of all the epics, as it contains throughout a lively teaching of morals under a glorious garment of poetry”

Mahabharata is an inexhaustible mine of proverbial philosophy— Macdonell’s Sanskrit literature.

American ethnologist Jeremiah Curtin says,
“I have never obtained more pleasure from reading any book in my life. The  Mahabharata will open the eyes of the world to the true character and intellectual rank of the people of India. The Mahabharata is a real mine of wealth not entirely known, I suppose, to anyone outside your country, but which will be known in time and valued in all civilized lands for the reason it contains information of the highest import to all men who seek to know in singleness of heart, the history of our race on earth, and the relations of man with the Infinite Power above us, around us and in us.”

 


Saint Hilarie Batholemy thus speaks of the Mahabharata in the Journal Des Savantes of September 1886 ,
“When a century ago Mr Wilkins published in Calcutta an extract from the grand poem Mahabharata, and made it known through the episode of the Bhagavad Gita, the world was dazzled with its magnificence. Vyasa the reputed author of the Mahabharata, appeared greater than even Homer, and it required a very little indeed to induce people to place India above Greece….. It has not the less been admitted that this prodigious Hindu epic is one of the grandest monuments of its kind of human intelligence and genius”.

Titus Munson Coan says,
“The Hindu epics have a nearer significance for us than anything in the Norse mythology. The Mahabharata, one of the longest of these poems, has wider romantic element in it than King Frithiop’s Saga; its action is cast upon a grander scale, and its heroes belittle all others in mythology. The Hindu poems, early though are, contain ethical and human elements that are unknown to the Norseman. It is in this that their enduring, their growing interest remains for the mind of Europe and America”.

Mon A Barth says ,
“Some portions of the Mahabharata may well compare with the purest and most beautiful productions of human genius. The Ramayana is three times as large as Homer’s Iliad and the Mahabharata four times as large as the Ramayana. Homers Iliad and odyssey have thirty thousand lines, the Mahabharata has two hundred twenty thousand lines, and in addition a supplement of sixteen thousand three hundred seventy four couplets. But it is not in size alone that the sacred epics of Valmiki and Vyasa excel They enchant by the wondrous story they tell us of an ancient people’s life, faith and valour. There is also a lively teaching of morals under a glorious garment of poetry. Matchless vivacity, unsurpassably tender and touching episodes, and a perfect store house of national antiquities, literature and ethics”.

 

Source book
Is Hindu a Superior Reality, Krishan Lal Jain, 1989

–subham–

சூரிய ஆற்றலின் நன்மைகள்! (Post No.5356)

India’s solar energy train.

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 24 August 2018

 

Time uploaded in London – 5-35 AM (British Summer Time)

 

Post No. 5356

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

சூரிய ஆற்றலின் நன்மைகள்!

சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாசைத் தவிர்க்க சூரிய ஆற்றல் பெரிதும் உதவியாக இருக்கும்.

படிம எரிபொருள் என்று கூறப்படும் ஃபாஸில் ஃப்யூயல்களைத் தவிர்த்து சூரிய ஆற்றலை பயன்படுத்துவதால் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை முதலில் தவிர்க்கப்படும். கார்பன் டை ஆக்ஸைடு வளி மண்டலத்தை நச்சு மண்டலம் ஆக்காமல் தடுப்பதையும் உலகம் வெப்பமயமாதலிலிருந்து தவிர்ப்பதையும் இந்த சூரிய ஆற்றல் செய்கிறது.

அமெரிக்காவில் இன்று நிறுவப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மட்டுமே ஆண்டுக்கு 168 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான கார்பன் டை ஆக்ஸைடைத் தவிர்க்கிறது என்றால் உலகெங்கும் சூரிய ஆற்றல் பயன்படுத்தப்பட்டால் எவ்வளவு நச்சு வாயு வெளியேற்றம் தடுக்கப்படும் என்பதை எளிதில் ஊகிக்கலாம்.

 

Solar Energy station in Rajasthan

இதர அனைத்து உற்பத்தி முறைகளுக்கும் நீர் இன்றியமையாதது. ஆனால் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும் போட்டோவொல்டைக் செல்களுக்கு  நீர் தேவையில்லை. ஆக அரிதான நீர் பெருமளவு சேகரிக்கப்படும். தெர்மல் பவர் நிலையங்களுக்கு அவற்றின் சாதனங்களைக் குளிர்விக்கவும் நீர் தேவை. ஆனால் சூரிய ஆற்றலின் உற்பத்திக்கோ இப்படிப்பட்ட நீரின் தேவை இருக்காது. சூரிய ஆற்றலின் மிகப் பெரும் ஆதாயம் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசே ஏற்படாது என்பது தான்!

 

அடுத்து சூரிய ஆற்றல் மறுசுழற்சிக்கு உள்ளாகக் கூடியது. உலகின் மிகப் பெரும் ஆற்றல் சக்தியாக இருப்பது சூரியன். 1,73,000 Terawattsஒரு லட்சத்து எழுபத்திமூன்றாயிரம் டெராவாட்ஸ் என்ற அளவிற்கு அது சூரிய ஆற்றலை ஒவ்வொரு விநாடியும் தருகிறது. இது உலகின் மொத்த தேவையான ஆற்றலைப் போல பத்தாயிரம் மடங்காகும்! அது மட்டுமல்ல, இந்த சூரிய ஆற்றலை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும், ஆனால் படிம எரிபொருளை ஒரு முறையே பயன்படுத்த முடியும் , அதன் நச்சு விளைவுகளுடன் கூட!

 

சூரிய ஆற்றல் இன்னும் பல கோடி ஆண்டுகளுக்குக் குறையாது, அழியாது. ஆனால் பெட்ரோல், டீஸல் ஆகிய எரிபொருள்கள் இனி கிடைப்பது அரிதாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றை எடுத்து சுத்திகரிக்க ஆகும் செலவு கூடிக் கொண்டே போகிறது. ஆனால் இவற்றை ஒப்பிடும்போது சூரிய ஆற்றலின் செலவு மிக மிகக் குறைவானது என்பதும் ஒரு நல்ல செய்தி!

 

Solar energy is used by Indian Railways.

ஆக சூரிய ஆற்றலின் பயன்பாடு செலவைக் குறைக்கும்.பல கோடி ஆண்டுகளுக்கு நீடித்திருக்கும், சுற்றுப்புறச் சூழலின் மாசை அறவே தடுக்கும்.

***

 

Shelley’s Sky Lark in Tamil (Post No.5355)

Compiled by London swaminathan

Date: 23 August 2018

 

Time uploaded in London – 7-09 am  (British Summer Time)

 

Post No. 5355

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

Translated by M Gopalakrishnan of Madurai 100 years ago!

PERCY BYSSHE SHELLEY PROFILE

SHELLYEY, English Poet, Novelist and Essayist

Born August 4, 1792

Died July 8, 1822

Age at death 29

P B Shelley was one of England’s greatest Romantic poets. He was born into a wealthy noble family. He was educated at Eton college, where his radical views on politics and religion earned him a nick name ‘Mad Shelley’. While still at Eton and aged just 18, he published his first book, a gothic horror novel called Zastrozzi. In 1811 he was expelled from Oxford University for writing an anti-Christian pamphlet.

 

The same year 19 year old Shelley shocked his family even more by secretly marrying 16 year old Harriet Westbrook. This was the start of Shelly’s adventurous life of elopements and restless travels. Three year later Shelley eloped with Mary Wollstonecraft Godwin, who became Mary Shelley and who wrote the famous novel Frankenstein. Harriet killed herself in 1816, and Shelley married his new love. Mary and Shelley moved around constantly; they travelled around Europe and lived in many different towns in England. Shelley wrote his poetry in short bursts of intense creativity. His poems such as Alastor and Ozymandias, overflow with intense emotion and radical ideas that were not always appreciated by readers of his time.

 

In 1818 Shelley and Mary left England to live in Italy. He completed some of his greatest poetry there, including his masterpiece Prometheus Unbound. A few years later, on a short sea voyage along the Italian coast, Shelly’s small sail boat was caught in a storm and he was drowned. He was just 29 years old, but he had written poetry hat established him as one of the greatest English poets.

Publications

1810 Zastrozzi

1813 Queen Mab

1816 Alastor

1818 The Revolt of Islam

1818 Ozymandias

1819 The Cenci

1820 Prometheus Unbound

1821 Adonais

Published after he died

1824 The Triumph of Life

 

Shelley was Tamil Poet Bharatiyar’s favourite poet.

 

பாரதியாரைக் கவர்ந்த ஆங்கிலப் புலவன் ஷெல்லியின் வானம்பாடிக் கும்மி. தமிழில் தருபவர் மதுரை எம். கோபால கிருஷ்ண அய்யர்

 

 

 

 

 

 

–subham–

 

 

 

நகர் எங்கும் தக்காளிச் சட்னி! (Post No.5354)

Written by London swaminathan

Date: 23 August 2018

 

Time uploaded in London – 6-36 am  (British Summer Time)

 

Post No. 5354

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஸ்பெயின் நாட்டில் புனோல் (Bunol in Spain) என்ற ஒரு நகரம் உள்ளது ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கடைசி புதன் கிழமை தக்காளித் திருவிழா (La Tomatina) நடைபெறும்; இதைத் தக்காளிச் சட்னி திருவிழா என்று அழைப்பதே சாலப் பொருத்தம். இந்த ‘பிளாக்’ (BLOG)கில் ஸ்பெயின் நாட்டுத் திருவிழா பற்றி எழுதுவானேன் என்று சிலர் நினைக்கலாம்.

 

பிள்ளையார் சிலை செய்தால் குற்றம்; கரைத்தால் குற்றம்; துர்கை சிலை செய்தால் குற்றம். பட்டாசு வெடித்தால் குற்றம்; வாங்கினால் குற்றம்— இப்படி பலர்— அறிவு ஜீவிகள்– வாய்ச் சொல் வீரர்கள்– பேசுவதும் போதாக்குறைக்கு சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் (case) போட்டும் வீரர் போலக் காட்சி தருவதையும்  காண்கிறோம்.

கோவிலில் பாலாபிஷேகம் செய்தால் அதை ‘வீண்’ ,வேஸ்ட், (waste) என்பர். விளக்கு ஏற்றினால் அது புகை (pollution) ‘பொல்லூஷன்’ என்பர். ஆனால் ஆடுகளையும் ஒட்டகங்களையும் ஒரே நாளில் லட்சக் கணக்கில் உலகெங்கும் வெட்டுவதைக் கேட்கவோ, கண்டு கொள்ளவோ மாட்டார்கள். ஒவ்வொரு நிமிடமும் எரிக்கப்படும் கோடிக் கணக்கான சிகரெட் புகை பற்றிப் பேச மாட்டார்கள். ஆண்டு தோறும் ஒவ்வொரு நாடும் புத்தாண்டு, சுதந்திர தினம் போன்றவற்றில் சில மணி நேரத்துக்குள் வெடித்துத் தீர்க்கும் ‘டன்’ கணக்கான பட்டாஸ் பற்றிப் பேச மாட்டார்கள். அவர்கள் எல்லாம் பாலாபிஷேகம் வீண் என்று சொல்லும் முன், ஒரே மணி நேரத்தில் 150 டன் தக்காளி எப்படி வீணடிக்கப்படுகிறது என்பதையும் அறிதல் நலமே.

 

இந்த ஆண்டு தக்காளித் திருவிழா ஆகஸ்ட் 29 (2018) புதன் கிழமை நடக்கிறது. லாரி  நிறைய தக்காளிகளைக் கொண்டு வருவர். அதில் 150 டன் பழுத்த தக்காளிப் பழம் இருக்கும். ஒருவர் மீது ஒருவர் தக்காளியை வீசி எறிந்து ஆனந்தப் பட வேண்டும். எல்லோரும் ரத்தக் கறை படிந்த கொலைகாரர்கள் போல காட்சி தருவர். ஒரு மணி நேரம் தலையணைச் சண்டை– அல்ல , அல்ல, தக்காளிச் சண்டை— போடுவர். ஒரு மணி நேரத்துக்குள் ஊரே தக்காளிச் சட்னியாகி விடும்; அத்தனையையும் நகர தண்ணீர் வாஹனங்கள் கழுவி விட்ட பின்னர் அவை அருகிலுள்ள நதியில் கலந்து விடும்.

 

2013 வரை விழாவுக்கு 50,000 மக்கள் வந்தனர். 9000 மக்களே வசிக்கும் புனோல் நகருக்குள் 50,000 பேர் நு ழைந்தால் அது ‘பனால்’ ஆகி விடும் என்று இப்பொழுது டிக்கெட் வைத்து விட்டார்கள்; 20,000 பேருக்கு மட்டுமே அனுமதி. 150 டன் தக்காளி வீணாவது பற்றி எவருக்கும் கவலை இல்லை. அதிலுள்ள சிட்ரிக் அமிலம் ஊரை சுத்தம் செய்கிறதாம். நதியில் எத்தனை உயிரினங்களைக் கொல்கிறதோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

இந்த லண்டனிலும் இந்த தக்காளி சட்னி/ சண்டை விழாவை ஏற்பாடு செய்து 50 பவுன் டிக்கெட் வைத்துள்ளனர். உலகின் பல நாடுகளில்- குறிப்பாக கொலம்பியா முதலிய ஸ்பானிய மொழி பேசும் தென் அமெரிக்க நாடுகளில் இது பரவி வருகிறது இந்தியாவில் டில்லியிலும் பெங்களூரிலும் இந்த விழா அறிவிக்கப்பட்டவுடன் கடும் எதிர்ப்பு கிளம்பியது; அதை அறிவித்தவர்கள் ‘உடும்பு வேண்டாம், கையை விட்டால் போதும்’ என்று ஓடி விட்டனர்.

 

லாரிகள் தக்காளி கொண்டு வந்தவுடன் உறியடித் திருவிழா ஆரம்பமாகும்; கிருஷ்ணன் கோவில்களில் நடக்கும் விழா போல ஓங்கி வளர்ந்த எண்ணை பூசப்பட்ட கம்பத்தின் மீது துண்டு கட்டி வைத்திருப்பர். அதை யாராவது ஒருவன் கொண்டு வந்த பின்னர் விழா துவங்க வேண்டும் என்பது நியதி; ஆனால் அந்த அளவுக்கு மக்களுக்கு பொறுமை கிடையாதென்பதால் ஒரு தண்ணீர் பீரங்கி மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பர். உடனே ‘தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்’ என்ற பாணியில் தக்காளிச் சண்டை துவங்கும். யாரும் முழுத் தக்காளியை எறியக்கூடாது. அதைப் பிய்த்தோ பிழிந்தோ கசக்கியோ மற்றவர் மீது எறியலாம். எல்லாம் வேடிக்கைதான் ; ஆனால் 150 டன் தக்காளி ஒரே மணி நேரத்தில் காலி! சரியாக ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் மற்றொரு தண்ணீர் பீரங்கி தண்ணீரை வீசும். “கதை முடிந்தது; கத்தரிக்காயும் காய்த்தது; அவரவர் வீட்டிலே அவரைக்காய்ச் சோத்துலே” என்று (NURSERY RHYME) நர்ஸரி ரைம் பாடியவாறு நதியில் விழுந்து நல்ல ஸ்நானம் செய்து ‘அவா அவா ஆத்து’க்குப் போகலாம்.

 

இந்த விழா எப்படித் துவங்கியது?

இது பற்றிப் பல கதைகள் உண்டு. ஒரு திருவிழாவின் போது இளைஞர்கள் சாலை ஓரக் கடையில் தவறி விழுந்தவுடன் சண்டை துவங்கியது என்றும் அருகிலுள்ள தக்காளி அனைத்தையும் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையா’க மக்கள் எறிந்தனர் என்றும் சொல்லுவர். இன்னும் சிலர் வேண்டாத நகரசபை அதிகாரிகள் மீது அழுகிய தக்காளி எறிந்தவுடன் ஆண்டுதோறும் அதைச் செய்யத் துவங்கினர் என்பர். 1945 ஆம் ஆண்டில் துவங்கியது. இந்த விழா இடையில் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் துவங்கியது.

 

தக்காளிச் சண்டைக்கு வருவோர் கூரான ஆயுதங்கள், பாட்டில்கள் கொண்டுவர அனுமதி இல்லை.

 

பெண்களே! 150,000 கிலோ தக்காளியில் எத்தனை ஈயச் சொம்பு ரஸம் வைக்கலாம் என்று கணக்குப் போடுங்கள். ஆண்கள! எத்தனை கப் தக்காளி சூப் (CUP SOUP) கிடைக்கும் என்று கணக்குப் போடுங்கள்.

 

–சுபம்–

ஆச்சரியப்பட வைக்கும் சில இளம் பெண்கள்! (Post No.5353)

WRITTEN BY S NAGARAJAN

Date: 23 August 2018

 

Time uploaded in London – 5-39 AM (British Summer Time)

 

Post No. 5353

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

சென்னை வானொலி நிலையம் அலை வரிசையில் 21-7-2108 முதல் 31-7-2018 முடிய தினமும் காலையில் ஒலிபரப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் இடம் பெற்ற எட்டாவது உரை.

 

தன்னார்வத் தொண்டைச் செய்யும் ஆச்சரியப்பட வைக்கும் சில  இளம் பெண்கள்!

 

சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்த வேண்டும் என்பதில் இன்றைய உலகில் இளம் பெண்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான இளம் மங்கையர்  அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் செயல்களைச் செய்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக சில இளம் பெண்களைப் பற்றிச் சொல்லலாம்.

 

கனடாவைச் சேர்ந்த பதினெட்டே வயதான ஆன் மகோசின்ஸ்கி (Ann Makosinski) என்ற இளம் பெண் இரண்டு புது விதக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ளார். ஹாலோ ஃப்ளாஷ் லைட் (Hallow Flash light) என்ற இந்த விளக்கு உடலில் உள்ள வெப்பத்தால் எரியக்கூடிய ஒன்று. அவரது இன்னொரு கண்டுபிடிப்பு இ- ட் ரிங்க் (e-drink) என்பதாகும். இது ஐ- போனை சார்ஜ் செய்யும் ஒரு கோப்பையாகும். அதிலிருக்கும் பொருளின் அதிக வெப்பமானது மின்சாரமாக மாறும். இப்படி நாம் அறியாமல் நம்மைச் சுற்றியுள்ள ஆற்றலைப் பயன்படுத்தும் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதே இவரது பொழுது போக்கு. இவரது கண்டுபிடிப்புகளை கண்டு வியப்போர் இவரை ஆங்காங்கே அழைப்பதால் உலகெங்கும் சுற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் Times 30 Under 30 World Changers- அதாவது 30 வயதுக்குக் கீழேயுள்ள 30 கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராக பிரபல டைம்ஸ் பத்திரிகை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை.

 

 

சிகாகோவைச் சேர்ந்த 20 வயதான மாணவி ஜெண்டயி ஜோன்ஸ் (Jendayi Jones) இளமையிலிருந்தே சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவர். மறு சுழற்சி, நல்ல உரங்களை உருவாக்கல், ஆற்றலைச் சேமிக்கும் பல்புகளின் பயன்பாடு, கழிவுகளைக் குறைக்கும் வழிமுறைகள் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட இவர் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கினார். இவரால் ஏராளமானோர் உத்வேகம் பெற்று சுற்றுப்புறச் சூழலைக் காப்பதில் இவருடன் இணைந்து தன்னார்வத் தொண்டைச் செய்து வருகின்றனர்.


இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண்ணான பதினேழே வயதான தீபிகா குருப் (Deepika kurup) தனது கோடைக்கால பயணங்களில் ஆங்காங்கே குழந்தைகள் அழுக்கு நீரைக் குடிப்பதைக் கண்டு மனம் நொந்தார். உடனடியாக சூரிய சக்தியால் நீரை அசுத்தமாக்கும் பாக்டீரியாக்களை அகற்றும் ஒரு புது வழியைக் கண்டு பிடித்தார். இது ஏழைக் குழந்தைகளுக்கு சுத்த நீரைத் தரும் வரபிரசாதமான கண்டுபிடிப்பாக அமைந்து விட்டது.

 

இருபத்தேழே வயதான இளம் மங்கை ஷானா மஹாஜன் (Shauna Mahajan) சிறுவயதிலிருந்தே உலகம் எப்படி இயங்குகிறது என்று அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆகவே விஞ்ஞானத்தை தனது பாடமாக எடுத்துக் கொண்டு இயற்கையுடன் மனிதர்கள் பழகும் விதத்தை ஆராயலானார். பார்படோஸில் உள்ள பவழப் பாறைகளை ஆராய்ந்தார்.கென்யாவில் உள்ள மீனவக் குடும்பங்களின் வாழ்க்கை முறையையும் தெற்கு க்யூபெக்கில் விவசாயம் எப்படி செய்யப்படுகிறது என்பதையும் ஆய்வு செய்தார். தனது நீண்ட ஆய்வுகளின் முடிவில் இவர் கண்டுபிடித்தது இயற்கையுடன் மனிதன் நன்கு லயத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்பதைத் தான். இதன் மூலமாக சுற்றுப்புறச் சூழல் வெகுவாக மேம்படும் என்பதை பிரசாரம் செய்து வருகிறார்.

 

Shauna Mahajan

இவர்களைப் போல அனைத்துப் பெண்களும் முனைந்து நின்றால் பூலோகம் சொர்க்கமாகி விடும் இல்லையா?!

***

 

QUOTATIONS ON INDIA AND BHAGAVAD GITA (Post 5352)

Compiled by London swaminathan

Date: 22 August 2018

 

Time uploaded in London – 15- 32  (British Summer Time)

 

Post No. 5352

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

FOLLOWING TWO PAGES ARE TAKEN FROM LONDON HOLY MISSION SINDHI COMMUNITY HOUSE NEWS LETTER, AUGUEST 2018.

TWO PAGES OF QUOTATIONS ON BHAGAVAD GITA (HINDU HOLY BOOK) AND INDIA.

 

 

 

 

 

-subham-