Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 29 December 2018 GMT Time uploaded in London –18-08 Post No. 5854
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
BHARTRUHARI’S NITI SATAKA VERSES 45, 46
45. Cruelty, causeless quarrels, the desire for another’s
wife or money, envy of the good, or of one’s own relatives.
These are the natural characteristics of wicked men– niti sataka
Greatest of the ancient Tamil poets, Tiru valluvar, author of the Tamil Veda Tirukkural, also say the same:-
Envy
He who is envious needs no enemy to ruin him. Envy itself is enough to bring him ruin- Kural/couplet 165
The mean find fault with others even if they eat and dress themselves normally – 1079
Another’s wife
A man who seduces another’s wife because she is easily accessible will suffer the consequence of everlasting sin – Kural/couplet 145
The man who commits adultery can never escape ENMITY, SIN,FEAR AND INFAMY- 148
Covetousness
If a man is so devoid of equality as to covet another’s wealth, not only will his family be ruined, but many other ills will also betake him – 171
Cruelty
Killing leads to all other sinful acts- 321
xxx
46. An evil man should be avoided though he be
adorned with learning. Is a snake less feared because it
is ornamented with jewels ? – niti sataka 46
A Tamil poets puts it in a better way,
If you see a horned animal stay away at least by five yards; if an animal like horse that can kick you hard, keep the distance to at least ten yards; if it is a made elephant you have to leave at least 1000 yards; but if it s a bad man, don’t even make yourself visible. That means run as far as possible so that he cant see you! This is in Niti Veba by an anonymous author.
Another verse by poet Munaippadiyar in Tamil Ara Neri Charam, says,
Look, if you give water to cows it gives you back milk; if the same water is given to snake you get only poison. This is the difference between good and bad people; The bad, even if they read scriptures; they mis quote it; interpret it in the wrong way.
So Bhatruhari is right in comparing bad people to snakes!
अकरुणत्वम् अकारणविग्रहः परधने परयोषिति च स्पृहा । सुजनबन्धुजनेष्वसहिष्णुता प्रकृतिसिद्धम् इदं हि दुरात्मनाम् ॥ 1.45 ॥
दुर्जनः परिहर्तव्यो विद्ययाஉलकृतोஉपि सन् । मणिना भूषितः सर्पः किम् असौ न भयङ्करः ॥ 1.46 ॥
Written by London Swaminathan swami_48@yahoo.com Date: 29 December 2018 GMT Time uploaded in London –16-08 Post No. 5852
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
TAMIL CROSS WORD 29-12-18
கட்டத்திலுள்ள ஐந்து சொற்களைக் கண்டுபிடியுங்கள்.கீழே விடை தரப்பட்டுள்ளது
குறுக்கே
4. டால்டா
5. ‘எல்லா நோய்களுக்கும்’ நிவாரணி என்ற விளம்பரங்களில் வரும் சொற்கள்
கீழே
1.- ராமனின் இரு புதல்வர்கள்
2. பகவத் கீதையில் அர்ஜுனனைத் திட்டும்போது, கிருஷ்ண பரமாத்மா பயன்படுத்திய சொல்; சென்னை ஆட்டோக்காரர்களின் வாயில் சர்வ சாதாரணமாகப் புழங்கும் ஸம்ஸ்கிருதச் சொல்; பொருள் அழுக்கான, தூய்மையற்ற, பலவீனமான
3. பழத்தையோ காயையோ சமமாக வெட்டும் போது இருவருக்கும் கிடைக்கும் பகுதி
answer
ல
X
க
X
பா
வ
ன
ஸ்
ப
தி
கு
X
மா
X
பா
ச
க
ல
ரோ
க
ன்
X
ம்
X
ம்
குறுக்கே
4.வன ஸ் பதி
5.சக ல ரோக
கீழே
1.லவ குசன்
2.கஸ்மாலம்
3.பாதி பாகம்
குறுக்கே
4.வனஸ்பதி- டால்டா
5.சகலரோக- ‘எல்லா நோய்களுக்கும்’ நிவாரணி என்ற விளம்பரங்களில் வரும் சொற்கள்
கீழே
1.லவகுசன் – ராமனின் இரு புதல்வர்கள்
2.கஸ்மாலம்- பகவத் கீதையில் அர்ஜுனனைத் திட்டும்போது, கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பயன்படுத்திய சொல்; சென்னை ஆட்டோக்காரர்களின் வாயில் சர்வ சாதாரணமாகப் புழங்கும் ஸம்ஸ்கிருதச் சொல்; பொருள் :கஸ்மலம் =அழுக்கான, தூய்மையற்ற,பலவீனமான
3.பாதி பாகம் – பழத்தையோ காயையோ சமமாக வெட்டும் போது இருவருக்கும் கிடைக்கும் பகுதி
டிசம்பர் 14, 2019 அன்று www.youtube.com இல் ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல் லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் இலவசம்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.
இதில் அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
22-12-18 முதல் 28-12-18 முடிய இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன.
பொறியியல் அதிசயம் பனாமா கால்வாய் எப்படி உருவானது. 9500 மைல் பயணத்தைத் தவிர்க்க வைத்த இந்தக் கால்வாயை பிரான்ஸ் கை விட்டது. வில்லியம் கோர்காஸ் 1904இல் அமெரிக்காவின் சார்பில் இதை அமைப்பதில் ஈடுபட்டார்; வெற்றி பெற்றார்! எப்படி? இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.
டேவிட் ஹில்பர்ட் பெரிய கணித மேதை. ஒரு முறை பார்ட்டிக்கு அனைவரையும் அழைத்திருந்தார். அனைவரும் வந்தனர். அவரைக் காணோம். எங்கே போனார்?இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.
ப்ளினி ஒரு முறை புயல் காற்றில் சிக்கிக் கொண்டார். அவரது ஆராய்ச்சி மனப்பான்மை அவரைத் தொடர்ந்து அதில் ஈடுபடத் தூண்டியது. பிறகு என்ன நடந்தது?இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.
தான் மரணமடையப் போகும் நேரத்தைச் சரியாகச் சொன்ன விஞ்ஞானி!
ஆப்ரஹாம் டி மொய்வர் பிரபலமான ̀ விஞ்ஞானி. அவர் தான் இறக்கப்போகும் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னார். அதன் படியே அதே நேரத்தில் மரணமடைந்தார். எப்படி? என்ன நடந்தது?இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.
பிரபல விஞ்ஞானி ருதர் போர்ட் ஹீலியம் 3ஐக் கண்டு பிடித்தவர். இரவு மூன்று மணிக்கு ஒலிபண்ட் என்ற தனது உதவியாளரைக் கூப்பிட்டார். ஹீலியம் கண்டுபிடித்ததைச் சொன்னார்! எப்படி அவர் கண்டுபிடித்தார்?
நோபல் டைனமைட்டைக் கண்டு பிடித்தார். அவர் உயிருடன் இருக்கும் போதே அவர் மரணமடைந்ததாக செய்தி ஒன்றை பிரெஞ்சு பத்திரிகை ஒன்று வெளியிட்டது. மனம் நொந்த நோபல் என்ன செய்தார்? இந்தக் காணொளி காட்சியில் காணலாம்.
ஆராய்ச்சி வெற்றி ஒன்றே குறியாக இருந்த தன் நண்பர் ஹார்டியைப் பற்றி பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறியது என்ன? வில்லியம் டொனால்ட் ஹாமில்டன் என்ற விஞ்ஞானி காட்டில் உள்ள பொந்துகளைத் தட்டிப் பார்ப்பார். ஒரு நாள் கில்லர் தேனி அவரை விரட்டியது.ஆப்பிரிக்க காட்டில் ஆய்வுக்காகச் சென்றார். எப்படி அவர் இறந்தார்?
சாக்கரீன் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது. கான்ஸ்டண்டைன் ஃபால்பெர்க் கண்டுபிடித்தது எப்படி? சைக்ளமேட் ஸ்வீட்னர் யாரால் கண்டு பிடிக்கப்பட்டது. அசிசல்பேட் கே எப்படி கண்டுபிடிக்கப்பட்டது.
Isidor Rabi என்ற நோபல் பரிசு பெற்ற மேதை ஐன்ஸ்டீனுடன் ஒரு உரையைப் படித்துக் கொண்டிருந்த போது வந்தார் Schwinger என்ற இளம் வயது மாணவர். அங்கு நடந்தது என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.
அறிவியலிலும் ஆணாதிக்கம் இருப்பதை எண்ணி வருந்திய மேடம் க்யூரி
மேடம் க்யூரி நொபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் அவர். அவர் அறிவியல் அகாடமியில் சேரக் கூடாது என்று தோற்கடிக்கப்பட்டார். அவர் வருந்தினார். நிகழ்ந்தது என்ன?
புலவர் போற்றிய நாணில் பெருமரம்- அகம்.273 அவ்வையார்
‘புலவர்கள் புகழ்ந்த நாணம்’ இல்லாமற் போயிற்று
ஜனவரி 28 திங்கட் கிழமை
முது மொழி நீரா, புலன் நா உழவர்
புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர- மருதன் இளநாகன், மருதக்கலி, கலித்தொகை பாடல் 68
அறிவுரை வழங்கும் அமைச்சர் போல, செந்தமிழ் என்னும் பழைய மொழியால், நாக்கு என்னும் ஏரால் உழுது உண்ணும் புலவர் சொன்ன சொற்கள் பாண்டிய மன்னனின் செவி என்னும் நிலத்திற்குப் பாய்ச்சிய நீர் ஆகும்; புலவர்களுடைய புதிய கவிதைகளை கேட்டு உண்ணும் (மகிழும்) நீர் சூழ்ந்த மதுரை நகரத்தை உடையன் அவனே!
ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப, என்ப, தம் செய்வினை முடித்து எனக் கேட்பல்- புறம் 27, முதுகண்ணன் சாத்தனார்
புலவர்கள் படும் அளவுக்கு புகழ்பெற்றவர்கள், பைலட்/விமானி இல்லாமல் தானே இயங்கும் விமானத்தில் செல்லுவர்; அவர்கள் ‘செய்யவேண்டிய செயல்களை எல்லாம் செய்து முடித்தவர்கள்’ என்று சான்றோர் கூறுவர்
ஜனவரி 30 புதன் கிழமை
கவீனாம் உசனா கவிஹி (பகவத் கீதை 10-37)
‘முக்காலமும் உணர்ந்த கவிகளுள் நான் உசனா கவி’ (கண்ணன் கூறியது).
ஜனவரி 31 வியாழக்கிழமை
‘அருஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்’– அவ்வையார், புறம்.235
Tags- ஜனவரி 2019 காலண்டர், கவிஞர், கவிகள், புலவர், கவிதை பற்றிய 31 பொன்மொழிகள்
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
திரைப்படங்கள்
லக்ஷ்மி, சீக்ரட் சூப்பர் ஸ்டார் – இரு திரைப்படங்கள்!
ச.நாகராஜன்
2017, 2018 ஆகிய ஆண்டுகளில் வெளியான இரண்டு திரைப்படங்கள் நம் கவனத்தைக் கவர்கின்றன.
ஒன்று லக்ஷ்மி(2018). இன்னொன்று சீக்ரட் சூப்பர்ஸ்டார் (2017).
ஒன்று நடனம் பற்றியது. இன்னொன்று இசை பற்றியது.
இரண்டிலும் திறமையுள்ள இரு இளம் சிறுமிகள் தங்கள் ஆசைகளை நிறைவேற விடாமல் செய்யும் ஒரு அப்பா, ஒரு அம்மா ஆகியோரையும் மீறி நல்லெண்ணம் படைத்த உதவியாளருடன் அகில இந்திய முதலிடத்தைப் பெறுகின்றனர்.
நடனம், இசை ஆகியவற்றில் போட்டி என்றாலே படம் எப்படி இருக்கும் என்பதை எளிதில் யூகித்துக் கொள்ளலாம்.
லக்ஷ்மியில் இளம் பெண்ணுக்கு உதவி புரியும் விஜய கிருஷ்ணாவாக பிரபு தேவா வந்து அசத்துகிறார். டான்ஸ் மாஸ்டருக்கே உரித்தான படம் என்பதால் அவரிடம் நடன மாயாஜாலங்களைப் பார்க்க முடிகிறது.
கதை, வசனம். டைரக்ஷன் ஏ.எல்.விஜய். 130 நிமிடங்கள் ஓடும் இந்தத் தமிழ்த் திரைப்படம் 28-8-2018 இல் திரைக்கு வந்தது.
சிறுமியின் அம்மா தன் பெண்ணின் டான்ஸ் ஆசையை ஆதரிக்கவில்லை; பெண் ஹோட்டல் உரிமையாளர் விஜய் உதவியுடன் அகில இந்தியப் போட்டிக்குச் செல்கிறாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு விபத்து ஏற்படவே அவள் காதுகள் கேட்காமல் போக, டான்ஸ் மாஸ்டரான விஜய் அவருக்கு அபிநயம் பிடித்துக் காட்ட அவள் ஆடுகிறாள்; அனைவரையும் அசத்துகிறாள்; ஜெயிக்கிறாள்.
அளவான கதா பாத்திரங்களுடன் கச்சிதமான நடன அசைவுகள் நிரம்பி இருக்க படம் கவரும் வகையில் செல்கிறது. தித்யா பாண்டே, ஐஸ்வர்யா ராஜேஷ், கோவை சரளா என நடிகைகள் தங்கள் பங்கிற்கு கச்சிதமாக அளவுடன் நடித்துள்ளனர்.
கதை சொல்லும் நீதி – குழந்தைகளின் திறமைக்குத் தடை போடாதீர்கள் என்பது தான்!
அடுத்த படம் சீக்ரட் சூப்பர்ஸ்டார் 2017இல் வெளியான ஒரு ஹிந்தித் திரைப்படம். அத்வைத் சந்தனால் டைரக்ட் செய்யப்பட்ட இந்தப் படத்தில் அமீர்கான், கிரன் ராவ், ஜைரா வாசிம், மெஹர் விஜ், ராஜ் அருண் ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை இது தான் :
இன்சியா 15 வயதான ஒரு முஸ்லீம் பெண். இனிமையான குரல் வளமும் கிதார் வாசிப்பதில் நல்ல திறமையும் கொண்டவள். அவளது தந்தையோ ஒரு முன்கோபக்காரன். மியூசிக் பிடிக்காத ஒரு முரட்டு ஜந்து. அம்மாவின் ஆதரவு இன்சியாவிற்கு இருக்கிறது. பள்ளித் தோழனின் பாசமும் ஆதரவும் இருக்கிறது.
அம்மா தன் நெக்லஸை விற்று லேப் டாப் வாங்கித் தர பர்தா அணிந்து சீக்ரட்டாக அடையாளத்தை மறைத்துத் தன் இசைப் பயணத்தைத் துவக்குகிறாள்.
மக்கள் மெய்மறந்து அவளின் இசையைக் கேட்டு யார் இந்த சீக்ரட் சூப்பர்ஸ்டார் என வியக்கின்றனர்.
பம்பாயில் உள்ள சக்தி குமார் என்ற திறமைசாலியான மியூசிக் டைரக்டர் அவளை அழைக்க அவள் வீட்டிற்குத் தெரியாமல் பள்ளித் தோழன் உதவி செய்யத் தனியாக விமானத்தில் ஏறி பம்பாய் செல்கிறாள்; பாடுகிறாள். சக்தி குமார் மெய்மறந்து அவளது இசையில் லயிக்கிறார்.
இன்சியாவின் தந்தைக்கு ரியாத்தில் வேலை கிடைக்க விமானநிலையம் சென்ற குடும்பத்தினர், எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்று கிதாரை தந்தை தூக்கி எறிய மனம் கசந்து அவரைப் பிரிகின்றனர்.
பம்பாயில் சிறந்த பெண் பாடகி தேர்வு நடக்கிறது. அதில் வெற்றி பெற்றவர் மனமுவந்து சீக்ரட் சூப்பர்ஸ்டாரே வென்றவர் என்று கூற மறைந்திருந்த சீக்ரட் ஸ்டார் சக்திகுமாரின் (அமீர்கான்) உதவியுடன் மேடை ஏறுகிறாள்.
தன் தாய் தனக்காகப் பட்ட துன்பங்களை எண்ணி மேடையிலிருந்து ஓடி வந்து அவளைக் கட்டி அணைக்கிறாள். சுபம்!
இந்தப் படம் பல அவார்டுகளைப் பெற்ற படம். நேஷனல் சைல்ட் அவார்டை இன்சியாவாக நடித்த வாசிம் பெற்றாள். 3 பிலிம் ஃபேர் அவார்டுகளையும் இந்தப் படம் பெற்றது.
15 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் 965 கோடி ரூபாய் வசூலைப் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதாவது 6000 மடங்கு ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட்! போட்ட முதலை விட அவ்வளவு மடங்கு வசூலை அள்ளிக் குவித்த படம்!
இரு படங்களின் மையக் கருத்து ஏறத் தாழ ஒன்று போல இருப்பது போலத் தோன்றினாலும் ஒன்று நடனத்தையும் இன்னொன்று இசையையும் மையமாகக் கொண்டிருப்பதால் இரு படங்களையுமே சுவாரசியமாகப் பார்க்க முடிகிறது.
வீட்டில் நடக்கும் வன்முறை, இளம் பெண்களின் அபிலாஷைகள், துணிவுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளல் போன்ற பல கருத்துக்களைப் படங்கள் முன் வைக்கின்றன. ஐட்டம் டான்ஸ் இல்லை என்பது ஒரு ப்ளஸ் பாயிண்ட் அல்லது பலருக்கு மைனஸ் பாயிண்ட்!
நல்ல படங்களைப் பார்த்த திருப்தி ஏற்படுகிறது என்பதால் இரு படங்களையுமே பார்க்கலாம்!
எல்லா ராக்ஷசர்களும், நல்லோரைத் துன்புறுத்தியதால்தான் விஷ்ணு பல அவதாரங்களை எடுக்க நேரிட்டது.
திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் கயவர்களின் குணத்தை வருணிக்கிறார்
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ் -குறள் 1079
பிறர் நன்றாக உடுப்பதையோ உண்பதையோ கண்டால்,கயவர்கள், பொறாமை கொண்டு அதற்கும் குற்றம் காண வல்லவர் ஆவார்கள்.
ஈசாப் கதையில் வரும் ஆடு- ஓநாய் கதை போலத்தான். வலிய சண்டைக்கு இழுத்து ஆட்களைக் கொல்லுவர். ரிஷி முனிவர்கள் காடுகளில் பழங்களையும் தேனையும் சேகரித்து உண்டு அமைதியான வாழ்க்கை நடத்தியபோதும் அவர்களுடன் வம்புச் சண்டைக்குப் போனவர்கள் அரக்கர்கள்.
பிறன் மனை நோக்காத பேராண்மை
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்- குறள் 146
பிறருடைய மனிவியை நாடிச் செல்பவனுக்கு நான்கு கெடுதிகள் எப்போதும் வரும்/ இருக்கும்:–
பகைமை, பாவம், பயம், உலகமே பழித்துரைக்கும் வசவுகள் இவை நான்கும் நீங்காமல் நிற்கும்.
இதை பர்த்ருஹரி அழகாகஒரே ஸ்லோகத்தில் சொல்லிவிட்டார்.
Harsh language of pure in heart is better than the sweet language of impure heart, Nanneri verse-2
JANUARY 2 WEDNESDAY
Milk of a cow is obtained with the help of her calf. In the same way get help through your friend from his friend-3
JANUARY 3 THURSDAY Riches from a man who is not ready to help others will go to one who is ready to help like the salt water of the ocean is taken by the clouds for distributing to people as fresh water-4
JANUARY 4 FRIDAY Both the eyes look at the same objects. In the same way husband and wife should perform their domestic duties without disagreements-6
JANUARY 5 SATURDAY Don’t boast that you have ocean wide knowledge. Even the ocean of water was drunk by a Rishi-7
JANUARY 6 SUNDAY Controlling anger is a virtue. It is like controlling the floods with the banks-8
JANUARY 7 MONDAY
The weak will not be afraid of their powerful foe if they secure the friendship of one who is more powerful- Nanneri verse 9
JANUARY 8 TUESDAY
The moon instead of removing its own dark spots tries to remove the darkness of the world. Great people alleviate the calamities befallen on others and care not to satisfy their wants- 10
JANUARY 9 WEDNESDAY The five senses will have power over fools and lead them to sin, but not over those who have true wisdom -11
JANUARY 10 THURSDAY It is truly wonderful that how the soul subject to various suffering s is kept in the body with nine holes . It is like a vessel full of holes holding water in it- Nanneri verse12
JANUARY 11 FRIDAY The great will not be proud, because they possess immense wealth. Even Mount Meru was once bout as a bow- 14
JANUARY 12 SATURDAY
To one who is destitute of love, of what use is it to possess wealth, house and property? To the blind, of what use is light? -15
JANUARY 13 SUNDAY The people of the vast earth are delighted not with the harsh but pleasant words . The sea is raised not by the burning rays of the sun but by the cool beams of the moon-18
JANUARY 14 MONDAY
The great will rejoice and put on a smiling countenance at the approach of the good; and will grieve at the sight of the wicked-Nanneri verse19
JANUARY 15 TUESDAY The great will look upon the affliction of others as though it were their own and they will be, in heart, butter on fire-20
JANUARY 16 WEDNESDAY
All the knowledge gained by the illiterate will vanish in the presence of thorough scholars-21
JANUARY 17 THURSDAY Seek not to be high or low by birth but by knowledge-22
JANUARY 18 FRIDAY By frequent conversation with women , the strength of the heart, will be shaken-23
JANUARY 19 SATURDAY In this world although one possesses virtue, the low minded will catch at his defects and speak of them. In the thriving grove of trees the winged insects love the flower bed: but the crow love fruit of the neem tree-24
JANUARY 20 SUNDAY In the assembly of low people who possess some slight knowledge acquired without study, a thorough scholar will not be appreciated and honoured-25
JANUARY 21 MONDAY
Because of the littleness of their body, the ocean wide knowledge of the poets of bright genius is neither less appreciated nor despised -26
JANUARY 22 TUESDAY With no expectation of a return for their favour the learned afford aid to their neighbors as much as they could from what they gain by hard labour -27
JANUARY 23 WEDNESDAY
Even in anger the great will afford aid to their neighbors; the mean will not give even in the warmth of their heart. The fruit of the plantain tree is good for food whether it is ripe or not. The fruit of the Etti tree is poison even when it is ripe- Nanneri verse 28
JANUARY 24 THURSDAY
Though it be a crore of bodily evils that cause nigh, those who constantly direct their thoughts to the Supreme Being, will not fear-29
JANUARY 25 FRIDAY
Before the approach of cruel Yama, to take away our lives, let us live in the practice of virtue with matured mind-30
JANUARY 26 SATURDAY The virtues practiced by those who have no knowledge of the precepts contained in the shastras will not be valid. It is like a house without a bolt-32
JANUARY 27 SUNDAY
Great persons love those who have acquired knowledge; but mean persons regard them not-35
JANUARY 28 MONDAY Gifts are bestowed not on unworthy but on worthy persons. Hence the noble minded confer their gifts on the worthy. Water is stored in reservoirs only for paddy, not for wild plants- Nanneri verse 36
JANUARY 29 TUESDAY
The kings that put on gold ornaments are not to be compared to the learned who wear them not. Body parts that bear the ornaments cannot see; eyes wear no ornaments, but can see- Nanneri 40
JANUARY 30 WEDNESDAY
Very close friendship formed by the illiterate though it last long will be productive of evil; flower with perfume give its fragrance only on the day it blooms- 39
JANUARY 31 THURSDAY
Friendship formed by the good will increase daily ; if the green fruit ripens I is good for food- Nanneri Verse 38
TAGS– JANUARY 2019 CALENDAR, NANNERI QUOTATIONS, SIVAPRAGASAR
Compiled by London Swaminathan swami_48@yahoo.com Date: 28 December 2018 GMT Time uploaded in London – 8-21 am Post No. 5846
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
பாகவத புராணம் அபூர்வ படங்கள்- பகுதி 7
கடந்த 6 நாட்களில் வெளியான அபூர்வ படங்களையும் கண்டு களிக்கவும்.
பாகவதத்தில் மொத்தம் 12 ஸ்கந்தங்கள் (பிரிவுகள்) உண்டு. இத்துடன் பத்தாவது ஸ்கந்தம் முடிவடைகிறது. மேலும் இரண்டு ஸ்கந்தங்கள் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தால் அவற்றையும் (பொருளடக்கமும் படங்களும் மட்டும்) வெளியிடுகிறேன்.
இது வரை மொத்த பக்கங்கள்-2466
PART SEVEN OF BHAGAVATA PURANA PICTURES ; PLEASE SEE THE PICTURES POSTED IN THE PAST SIX DAYS. THESE ARE FROM A 100 YEAR OLD BOOK, available in the British library in London.
TWO MORE CHAPTERS (SKANAM 11&12) ARE THERE. I WILL POST THEM WHEN I GET THEM FROM THE BRITISH LIBRARY.
I AM PUBLISHING ONLY THE PICTURES AND CONTENTS.
PAGES SO FAR (IN TAMIL)—-2466
SUDYUMNAN SEES RUDRA AND PARVATI
GOPIS BEG TO KRISHNA FOR THEIR CLOTHES
KRISHNA BLESSING THE BRAHMIN WOMEN
KRISHNA LIFTING THE GOVARDHANA HILLS TO SAVE THE COWHERDS FROM A TORRENTIAL DOWNPOUR
KRISHNA DANCING WITH HIS DEVOTEES
KRISHNA RELEASING NANDA FROM A PYTHON
KRISHNA KILLING THE BULL THAT WAS SENT TO KILL HIM
AMBASSADOR AKRURA MEETING KRISHNA AT GOKULAM WITH A MESSAGE FROM KAMSA.
ஆற்றில் வெள்ளம் அடித்துக் கொண்டு போனாலும் நாய் நக்கித் தான் குடிக்கும்;
நாயாவது நல்ல தண்ணீரைச் சிறிதாவது வெள்ளத்திலிருந்து எடுத்து நக்கிப் பருகுகிறது!
ஆனால் கழுதை! அதற்கு என்ன தெரியும்? கற்பூர வாசனை தெரியாது; ‘காள் காள்’ என்று தான் கத்தும்.
அதே போலத் தான் முதல் பக்கமே பார்க்கத் தெரியாத முட்டாள் கீதையின் மறுபக்கம் பார்த்தானாம்!
சிரிப்புத் தான் வருகிறது. குருடனுக்கு முதல் பக்கமாக இருந்தால் என்ன, மறுபக்கமாக இருந்தால் என்ன, ஒன்றும் தெரியாது.
ஆனால் இந்த முட்டாளைக் குறை கூறி என்ன பிரயோஜனம்? இவன் வந்த வழி அப்படி!
இவனது தலைவன் உலகம் வணங்கும் லோக மாதா சீதா தேவியைப் பார்த்த பார்வை எப்படித் தெரியுமா?
மற்ற கோடானு கோடி பேர்கள் அன்னையின் பாதங்கள் இரண்டை மட்டும் பார்த்து வணங்குவோம்.
ஆனால் தலைவனோ கழுத்துக்குக் கீழேயும், இடுப்புக்குக் கீழேயும் பார்த்தான்.
கோணல் பார்வை! ராக்ஷஸ பிறப்பு! வம்ச தோஷம்!
அதே போல கீதையின் மறுபக்கத்தை இவன் பார்த்து விட்டானாம்!
சரி, போகட்டும் விடுங்கள். குருடன் ராஜமுழி முழித்தால் தான் நமக்கென்ன?
அவன் யார் என்கிறீர்களா? 1967க்குப் பின் தமிழக நூலகங்களில் படிக்குச் சரி பாதி அதாவது ஐம்பது சதவிகிதம் குப்பை நூல்கள் பெருகி உள்ளன அல்லவா,
அதில் ஒன்று தான் இந்தக் குருடன் பார்வையில் விளைந்த புத்தகம்.
அவனுக்கு என் மூலம் விளம்பரம் வேறு ஒரு கேடா?
நல்லதைப் பற்றிப் பேசுவோம்.
*
கீதையை நன்கு புரிந்து கொள்ள விரும்பினாள் ஒரு மஹாராணி.
எத்தனை ஸ்லோகங்கள் என்று கீதையில் பாண்டித்யமுள்ள ஒரு பண்டிதரை வரவழைத்துக் கேட்டாள்.
எழுநூறு ஸ்லோகங்கள் என்றார் அவர்.
தனாதிகாரியை வரவழைத்த மஹாராணி, “700
பொற்காசுகளைத் தயார் செய்யுங்கள். கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்தின் அர்த்தத்தையும் நம் பண்டிதர் சொல்லச் சொல்ல அவருக்கு ஒரு பொற்காசு தர வேண்டும். ஆக எழுநூறு ஸ்லோகங்களுக்கு எழுநூறு பொற்காசுகளைத் தயார் செய்யுங்கள்” என்றார்.
பண்டிதருக்கு மஹா ஆனந்தம். 700 பொற்காசுகளா?
வீடு சென்ற அவர் ஏராளமான நூல்களைப் படித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.
மஹாராணிக்கு விளக்க வேண்டுமே!
மறுநாள் சபை ஆரம்பமானது.
700 பொற்காசுகள் குவியலாக இருக்க பண்டிதரின் கண்கள் அதை நோட்டம் விட்டன.
‘கடவுளே! மஹாராணிக்கு கீதையைப் புரிந்து கொள்ள அருள் செய்வாயாக! கண்ணபிரானே நீயே துணை.’
கம்பீரமாக முதல் ஸ்லோகத்தை ஆரம்பித்தார்.
‘தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே’
மஹாராணிக்குக் கண்களில் நீர் வழிந்தது.
“நிறுத்துங்கள்!” என்று பண்டிதரை நோக்கிக் கூவினாள்.
பண்டிதர் திடுக்கிட்டார்.
மஹாராணி மந்திரியை அழைத்துப் பல்லக்கைத் தயார் செய்யுங்கள், கிளம்பலாம் என்றார்.
‘அட 700 காசுகளும் போச்சே’ என்று பண்டிதர் வருந்தினார்.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை. “ராணியாரே! இன்னும் ஆரம்பிக்கக் கூட இல்லையே” என்று இழுத்தார்.
“அட என்ன அற்புதமான விளக்கம்; நான் நன்கு புரிந்து கொண்டு விட்டேன், கீதா தாத்பர்யத்தை. இதோ, இந்தாருங்கள் 700 பொற்காசுகள்; ஒரு கணமும் இனி தாமதிக்க மாட்டேன்; இதோ நீங்கள் கூறியபடியே செய்யப் போகிறேன்.”
மஹாராணி இப்படிச் சொன்னதைக் கேட்டவுடன் அவருக்குத் தலை சுற்றியது.
“நான் என்ன விளக்கினேன்?” அழாக் குறையாக அவர் கேட்டார்.
அது தான் அழகாகச் சொல்லி விட்டீர்களே; கீதா தாத்பர்யத்தை! தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே – அதை எப்படிப் பிரிக்க வேண்டும்? ‘க்ஷேத்ரே க்ஷேத்ரே தர்மம் குரு!’ என்று. க்ஷேத்ரே க்ஷேத்ரே -க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகச் சென்று அதாவது ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று- தர்மம் குரு – தர்மத்தைச் செய்- அதாவது தர்மத்தைச் செய்ய வேண்டும். அது தானே கீதை காட்டும் பாதை! கீதையின் போதனை! இதோ தர்மம் செய்யக் கிளம்பி விட்டேன்” என்றாள் ராணி.
பண்டிதர் தன் ஆயுளிலும் அறியாத ஒரு பெரிய உபதேசத்தை கால் ஸ்லோகத்தில் ராணி அறிந்து விட்டாரே என்று மகிழ்ந்தார்.
இத்தனை நாள் படித்தும் தமக்கு கீதா போதனை ஏறவில்லையே என்று வருந்தினார்.
‘மஹாராணியாரே! உங்களிடமிருந்து கீதா பாடம் கற்றுக் கொண்டேன். இந்தப் பொற்காசுகளை என் சார்பாக நீங்களே தர்மத்திற்குச் செலவிடுங்கள்; இதோ உலகைத் துறக்கிறேன். என் வழியில் போகிறேன்’ என்று சொல்லி விட்டுத் தவம் புரியச் சென்றார்;பின்னர் பெரும் மஹான் ஆனார்.
*
ஆக அந்த மஹாராணி எங்கே, இந்த முட்டாள் எங்கே!
கீதையின் மறுபக்கம் பார்க்க வேண்டாம்; முதல் பக்கத்தில் முதல் ஸ்லோகத்தின் கால் ஸ்லோகம் பார்த்தாலும் கூட நாடு முழுவதும் தர்மம் பெருகும்; தழைக்கும்!
கீதை காட்டும் பாதையை முழுவதுமாகப் படித்து அறிவோம்; உயர்வோம்!
***
சென்னை கோடம்பாக்கம் கல்லூரியில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த ஆன்மீக மாநாட்டில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவர் சொன்ன ராணியின் கதைக்கு இங்கு எனது நன்றியைப் பதிவு செய்கிறேன்.