1.அதிங்கம், மதுகம், அட்டி ஆகிய வேறுபெயர்கள் உண்டு.,இனிப்புச் சுவை அதிகம்.
3.ரியால்கர் அல்லது ரெட் ஆர்ஸெனிக் எனப்படும் விஷச் சரக்கு ⇠
4. போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும். செடியிலிருந்து பெறப்படுகின்றது. இந்தச் செடியை தமிழில் கசகசாச் செடி என்பர்.
8. (Across)ஒரு வகைமானிலிருந்து கிடைக்கும் வாசனைப் பொருள் ; ஒரு மஞ்சளின் பெயரில் ஒட்டிகொள்கிறது மருந்துகளில் பயன்படுகிறது
11.வீட்டுவாசலில் வளர்த்தால் கண் திருஷ்டி போகும். சொறி சிரங்குகளுக்கு எதிரி
12.எரி …….., சவுக் ……..அக்கர ………. இனிப்பு………. வகைகள் இங்கே கிடைக்கும் என்று படிக்கிறோம் . இதில் அக்கர ……. என்பது ஒரு மூலிகையின் பெயர்.
13. ஜீரணத்துக்கு உதவும் ‘ரகம்’; பல ரகங்கள் இருந்தாலும் இதை சீ , சீ என்று ஒதுக்கக் கூடாத ‘ரகம்’.⇠
14.திரிபலா சூரணத்தில் நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி ஆகிய இரண்டுடன் சேர்க்கப்படும் மூன்றாவது பொடி⇠
xxx
கீழே
2.மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘கண்ட xxxxx ‘ என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கனிகள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி ‘அரிசித்xxxxx என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
5.இதை வைத்து xxxxx நீர் செய்வார்கள். ஆங்கிலத்தில் xxxxxx வாட்டர் என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும் .வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு xxxx திரவம் அற்புதமாக வேலை செய்யும் .(Go up)⇡
6.ஜீரணத்துக்கு உதவும் ; சாறு, துவையல், ஊறுகாய் எல்லாம் செய்யலாம்.(go Up)⇡
7 இதனுடைய நிறத்தை வைத்தே இதன் பெயர் வந்தது அல்லது நிறத்துக்கே இது பெயர் தந்தது . இந்திய உணவில் இது அதிகம் பயன்படுகிறது.’
8.Down `காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் xxxx மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே’, `- இது சித்தர்கள் வாக்கு. `xxxx உண்டால் மிடுக்காய் வாழலாம்’, `ஈனாத மாட்டுக்கு ஒரு xxxxxx ; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு xxxx ‘என்ற பழமொழிகளை அறிந்தால் விடை கிடைக்கும்.
9.இதைக் காட்டினால் நல்ல பாம்பும் பிரக்ஞை அற்றுப்போகுமாம். இது இருக்கும் இடங்களில் பாம்பு வராதாம்
10.மற்றவர்களை அண்டி /சுரண்டி வாழ்வோரை இந்தத் தாவரத்தின் பெயரைச் சொல்லித் திட்டலாம்..(Go up)⇡
15.கறுப்பு நிறம் ஆனாலும் சாப்பிடலாம், பச்சை நிறம் ஆனாலும் சாப்பிடலாம்; கேரளத்தில் வீடு தோறும் தோட்டத்தில் கொடியாகப் படரும் ; மிளகாய் என்பதை இந்தியர் அறியாத காலத்தில் இதுதான் காரம்.. (Go up)⇡
இந்துக்கள் ஒவ்வொரு பெளர்ணமிக்கும் ஒரு பெயர் கொடுத்தார்கள் . சித்திரா பெளர்ணமி என்றால் சித்திரை நட்சத்திரமும் முழுநிலவும் ஒன்று சேரும் நாள் ; வைகாசி விசாகம் என்றால் விசாக நட்சத்திரமும் முழு நிலவும் ஒன்றுசேரும் நாள்; இதேபோல மாசி மகம் என்றால் மகம் நட்சத்திரமும் முழு நிலவும் ஒன்று சேரும் நாள்; தைப்பூசம் என்றால் பூச நட்சத்திரமும் முழுநிலவும் ஒன்று சேரும் நாள்; இப்படி இறைவனுடன் ஒவ்வொரு பெளர்ணமியையும் சம்பந்தப்படுத்தி விழா எடுத்தோம். ஆனால் மேலை நாட்டு பஞ்சாங்கத்தில் சில மூட நம்பிக்கைகளின் பெயரிலோ அல்லது அப்பொழுது நடைபெறும் அறுவடை போன்ற நடவடிக்கைகளின் அடிப்படையிலோ ஒவ்வொரு பெளர்ணமிக்கும் பெயர் சூட்டினார்கள் ; குறிப்பாக அமெரிக்க பழங்குடி மக்களின் பஞ்சாங்கப்படி இது நடந்தது. 2023 ஆகஸ்ட் 31ம் தேதி SUPER BLUE MOON சூப்பர் ப்ளூ மூன் வருகிறது!
xxxx
கீழ்க்கண்ட பட்டியலைப் பார்த்தால் அது விளங்கும்
ஜனவரி நிலவு – ஓநாய் நிலவு WOLF MOON –
காரணம் ஓநாய்களின் அலறல் சப்தம் கேட்கும் மாதம்
மற்ற பெயர்கள் :
• Canada Goose Moon (Tlingit)
• Center Moon (Assiniboine)
• Cold Moon (Cree)
• Freeze Up Moon (Algonquin)
• Frost Exploding Moon (Cree)
• Great Moon (Cree)
• Greetings Moon (Western Abenaki)
• Hard Moon (Dakota)
• Severe Moon (Dakota)
• Spirit Moon (Ojibwe)
அடைப்புக்குறிக்குள் உள்ளது அமெரிக்க பழங்குடி மக்களின் பெயர்கள் ஆகும்.
Xxxx
பிப்ரவரி மாதம் முழுப்பனி நிலவு FULL SNOW MOON
காரணம் பிப்ரவரி மாதத்தில் பூமியின் வட பகுதியில் கடும் பனி பெய்யும்.
ஆஸ்திரேலியா போன்ற தென் கோளார்த்தப் பகுதிகளில் வெய்யில் அடிக்கும் ; ஆகையால் இந்தப் பெயர் பொருந்தாது.
அடைப்புக்குறிக்குள் உள்ளது அமெரிக்க பழங்குடி மக்களின் பெயர்கள் ஆகும்.
Xxxx
மார்ச் மாத முழு நிலவு FULL WORM MOON
புழு நிலவு
இந்தக் காலத்தில் மண்புழுக்கள் வெளியே வரும் அல்லது மரப்பட்டை , பொந்துகளில் வாழும் புழுக்கள் வெளியே வரும் என்பதால் புழுக்கள் நிலவு என்று பெயர் சூட்டினார்கள்.
ஏனைய பெயர்கள் (அடைப்புக்குறிக்குள் உள்ளது அமெரிக்க பழங்குடி மக்களின் பெயர்கள் ஆகும்.)
இந்த வசந்த காலத்தில் சிறிய இளம் சிவப்பு (Pink Flowers) மலர்கள் பூக்கின்றன
ஏனைய பெயர்கள் (அடைப்புக்குறிக்குள் உள்ளது அமெரிக்க பழங்குடி மக்களின் பெயர்கள் ஆகும்.)
• Breaking Ice Moon (Algonquin)
• Broken Snowshoe Moon (Anishinaabe)
• Budding Moon of Plants and Shrubs (Tlingit)
• Frog Moon (Cree)
• Moon of the Red Grass Appearing (Oglala)
• Moon When the Ducks Come Back (Lakota)
• Moon When the Geese Lay Eggs (Dakota)
• Moon When the Streams are Again Navigable (Dakota)
• Sucker Moon (Anishinaabe)
• Sugar Maker Moon (Western Abenaki)
Xxxx
மே மாதம் பெளர்ணமி FULL FLOWER MOON
முழு மலர் நிலவு
இந்த மாதத்தில் வசந்த கால மலர்கள் மிக அதிக அளவில் பூத்து மலர் வனங்களாக காட்சி தருவதால் இந்தப் பெயர்
• Budding Moon (Cree)
• Egg Laying Moon (Cree)
• Frog Moon (Cree)
• Leaf Budding Moon (Cree)
• Planting Moon (Dakota, Lakota)
• Moon of Shedding Ponies (Oglala)
Xxx
ஜுன் மாத பெளர்ணமி FULL STRAWBERRY MOON
முழு ஸ்ட்ராபெரி நிலவு
நிலவின் வர்ணத்தை ஒட்டி எழுந்த பெயர் அல்ல. அமெரிக்காவின் சில பகுதிகளில் ஸ்ட்ராபெரி (Strawberry) பழங்கள் ஏராளமாகக் காய்க்கின்றன ; இந்தப் பழங்கள் செக்கச்செவேல் என்று இருக்கும் .
ஏனைய பெயர்கள்
• Berries Ripen Moon (Haida)
• Birth Moon (Tlingit)
• Blooming Moon (Anishinaabe)
• Egg Laying Moon (Cree)
• Hatching Moon (Cree)
• Green Corn Moon (Cherokee)
• Hot Moon
• Hoer Moon (Western Abenaki)
Xxx
To be continued……………………………
Tags- நிலவின் பெயர்கள், பெளர்ணமி , பெயர்கள் காரணம், அமெரிக்க பழங்குடி மக்கள்
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மொபைல் போன், வாட்ஸ் அப், இன்டர்நெட், கூகுள் பே , மேலை நாடுகளில் மொபைல் போன் மூலம் பயணம் செய்தல் முதலியன இல்லை. இப்பொழுது மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது சில வாரங்களுக்கு முன்னர் அறிவியல் பத்திரிகைகளில் வெளியான செய்தி காற்றிலிருந்து மின்சாரம் எடுக்கலாம் என்று சொல்கிறது. இந்தியா ,சீனா போன்ற நாடுகளில் நிலக்கரியை எரித்து நீரை வெப்பமாகிக்கி எடுக்கும் மின்சாரத்தால் காற்றும், புறச் சூழலும் மாசுபடுகிறது என்பது பெரிய குற்றச்சாட்டு . யுரேனியம், ப்ளூட்டோனியம் மூலம் உண்டாக்கும் அணுசக்தி மின்சாரத்தால் அந்தக் கழிவுப் பொருட்களில் (RADIO ACTIVE WASTE) உள்ள கதிரியக்கம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு கதிரியக்கத்தை (RADIATION) உண்டாக்கும் என்பது இன்னும் ஒரு குற்றச்சாட்டு ; இப்படி வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு கொடுப்பது காற்று மின்சாரம் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்னர் இதை யாரேனும் சொல்லியிருந்தால் என்ன கிண்டல் செய்கிறாயா? என்று பதில் கொடுத்து இருப்போம். இப்போது அப்படிச் சொன்னால் உனக்கு விஞ்ஞான அறிவு கொஞ்சமும் கிடையாதா? என்று திருப்பிக் கேட்டுவிடுவார்கள் .
Scientists generate ‘electricity from thin air.’ Humidity could be a boundless source of energy, they say.
வெய்யில் காலம் வந்தால் உடல் வேர்க்கிறது; தோல் எல்லாம் பிசு பிசு என்று ஒட்டிக்கொள்கின்றது ; இதற்கு காரணம் காற்றிலுள்ள ஈரப்பதம் (Humidity) ஆகும். இதிலிருந்து மின்சாரத்தை பெற முடியும் என்பதுதான் புதிய செய்தி.
சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் (SOLAR POWER) மின்சாரத்துக்கு வெய்யில் தொடர்ந்து அடிக்கவேண்டும். காற்றாடி மூலம் (WIND POWER) எடுக்கும் மின் சாரத்துக்கு காற்று தொடர்ந்து அடிக்கவேண்டும். ஆனால் காற்றிலுள்ள ஈரப்பத மின்சாரத்துக்கு இந்தத் தடைகள் இல்லை. அது எப்போதும் கிடைக்கும். மேலும் அது கிடைக்காத நாடு இல்லை.
அமெரிக்காவிலுள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழக University of Massachusetts-Amherst பேராசிரியர்கள் இது பற்றி சொல்கிறார்கள் : நாம் எல்லோரும் மேகங்கள் சூழ்ந்த வானத்தில் மின்னல் (Lightning) அடிப்பதை பார்க்கிறோம். இது மிகப்பெரிய சக்தியுள்ள மின்சாரம் என்பதை அறிவோம். ஆயினும் அதை அறுவடை செய்யும் வகை நமக்குத் தெரியாது. நாங்கள் என்ன செய்தோம் என்றால் அது போல ஈரப்பத சூழ்நிலையில் செயற்கையாக மின்னலைத் தூண்டி அந்த மின்சாரத்தை அறுவடை செய்யும் முறையைக் கண்டுபிடித்துள்ளோம். .
காற்றிலுள்ள ஈரப்பத்தில் மின்சாரத்தை உண்டாக்க காற்றின் சக்தியையே பயன்படுத்தும் ஒரு மயிரிழை அளவுள்ள ஜெனெரேட்டர் உளது . இதன் மூலம் ஒரு வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை எடுக்கலாம். இதையே எல்லா இடங்களிலும் உண்டாக்கினால் ஆண்டுமு னுத்தும் 24 மணிநேரமும் மின்சக்தியைப் பெறலாம் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைக்குப் பேராசிரியர்கள் பேட்டி கொடுத்துள்ளனர்
The device mentioned in the study is the size of a fingernail and thinner than a single hair. It is dotted with tiny holes known as nanopores, The Washington Post reported. “The holes have a diameter smaller than 100 nanometers, or less than a thousandth of the width of a strand of human hair,” The Post said.
மேலும் பேராசிரியர் யாவோ இது பற்றிப் பத்திரிகையாளரிடம் பேசுகையில் கோடி கோடி மயிரிழை ஜெனரேட்டர்களை வைத்தாலும் அது ஒரு ரெப்ரிஜிரேட்டர் (குளிர்ப்பதன சாதனம்) அளவுதான் இருக்கும். ஒரு வீட்டிற்கான ஒரு கிலோவாட் சக்தியை அது கொடுக்கும் என்கிறார்
Yao told The Washington Post that roughly 1 billion air-gens, stacked to be roughly the size of a refrigerator, could produce a kilowatt and partly power a home in ideal conditions.
கடலிலிருந்து தங்கம் எடுக்கும் கதை
கடலில் டன் கணக்கில் தங்கத் துகள் உள்ளது ஆனால் இதை எடுப்பதற்கான செலவு பூமியிலுலிருந்து தங்கம் வெட்டி எடுக்கும் செலவைவிட அதிகம் என்பதால் செயல்முறையில் பயன்படவில்லை. அது போல இந்தத் திட்டமும் ஆராய்ச்சியும் போய் விடாது என்று நம்புவோமாக .(Source- USA TODAY NEWSPAPER )
தடைகள் உண்டு எனில் அவற்றை அகற்றும் விடைகளும் உண்டு!
நவீன உலகில் அன்றாடம் பிரச்சினைகளைச் சந்திக்காதவரே இல்லை.
அதிலும் நகர் சந்தடியிலிருந்து விலகி வாழ்வோர் படும் துன்பங்கள் அதிகம்.
ஒரு விதமான ஆதார வளம் இல்லாமல் செல்வமும் இல்லாமல், ஆதரிப்போர் இல்லாமல் ஏராளமானோர் செய்வதறியாது திகைப்பதையும் அன்றாடம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இன்னும் உடல் குறைபாடுகளைக் கொண்டிருந்தாலோ சொல்லவே வேண்டாம். அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது.
ஆனால் விதி என்று இவற்றைச் சொல்லி அனுபவித்துத் துன்பப்படுவதை விட இதை மாற்றும் வழி உண்டா?
உண்டு என்று நிரூபித்திருப்போர் ஏராளம.
அவர்களில் சிலர் இதோ!
அபூர்வப் பெண்மணி ஹெலன் கெல்லர்
ஹெலன் கெல்லர்: ஒரு அபூர்வப் பெண்மணி (தோற்றம் ஜூன் 27,1880 மறைவு ஜூன் 1, 1968)
மனம் தளராத விடாமுயற்சி எந்த சூழ்நிலையிலும் வெற்றி தரும்.
இது ஹெலன் கெல்லர் என்ற அபூர்வ பெண்மணி உலகிற்குக் காட்டிய உண்மை.
19 மாதக் குழந்தையாக இருந்தபோது அவர் கண் பார்வையை இழந்தார். காதால் கேட்கும் செவிப்புலன் சக்தியையும் இழந்தார். அவரால் பேசவும் முடியவில்லை.
ஹெலனின் தாயார் அவரை மசாசூசெட்ஸில் (அமெரிக்கா) பார்வையற்றோருக்கான பள்ளியில் சேர்த்தார். அங்கு ஆன்னி சல்லிவன் என்ற கண் பார்வை இழந்த ஒரு ஆசிரியை அவருக்கு ஒவ்வொரு பொருளையும் தடவிப் பார்க்கச் சொல்லி அதன் பெயரைத் தன் விரல்களினால் கூறுவார். விரல்கள் மூலம் அந்தப் பொருளின் பெயருக்கான எழுத்தை உணர வைப்பார்.
பயிற்சியின் போது, நீரை அவர் கை மீது பாய்ச்சி ‘வாட்டர்” என்று சல்லிவன் சொன்ன போது ‘சாவிலிருந்து மீண்டு ஒரு புது பிறப்பை எடுப்பது போல இருந்தது’ என்று பின்னால் ஹெலன் கெல்லர் கூறினார்.
ஆம், அவர் படிக்க ஆரம்பித்து விட்டார்!
பல வருட கால கடுமையான உழைப்பிற்குப் பின்னர் ஆங்கிலத்தை முழுதுமாகக் கற்றதோடு, பிரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, கிரேக்கம், லத்தீன், கண் பார்வையற்றோருக்கான ப்ரெயிலி ஆகிய மொழிகளில் அவர் தேர்ந்தார்.
1904ஆம் ஆண்டில் அவர் பட்டம் பெற்றார். செவிடாகவும் கண்பார்வையற்றவராகவும் இருந்து முதலில் பட்டம் பெற்ற பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றார்.
எனது வாழ்க்கை சரிதம் (The Story of My Life) என்ற மனதை உருக்கும் ஒரு புத்தகத்தை எழுதியதோடு மொத்தம் 14 புத்தகங்களை அவர் எழுதினார்.
30 நாடுகளுக்குப் பயணம் செய்து அனைவருக்கும் உத்வேகம் ஊட்டினார்; பெண்களின் உரிமைக்காகப் போராடினார்.
87ஆம் வயதில் அவர் மறைந்தார். 1964ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி பி.லிண்டன் ஜான்ஸன் அவருக்கு அமெரிக்காவின் உயரிய சிவிலியன் ஹானர் விருதை அளித்தார்.
நெஞ்சம் தளராது உற்சாகத்தோடு தனது அனைத்துக் குறைகளையும் புறம் தள்ளி வெற்றி பெற்ற வீராங்கனை அவர்.
சரி, இவர் போலல்லாது கண் பார்வையும் செவிப் புலனையும் தக்க ஆதரவையும் கொண்டுள்ள ஆயிரக் கணக்கானோர் எப்படி எல்லாம் முன்னேறலாம்?!.
தன் தடைகளை அகற்றி அவற்றைப் போக்கப் பல விடைகளைத் தந்தவர் ஹெலன் கெல்லர் என்பதே உண்மை!
மலைகளை நகர்த்திய மா மனிதன்!
மனித மனத்தில் ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று உறுதியாகிவிட்ட பட்சத்தில் முடியாதது ஒன்றும் இல்லை.
இதற்கு உதாரணம் தசரத் மஞ்சி (Dasjrath Manjhi). (தோற்றம் 14-1-1929 மறைவு 17-8-2007)
பீஹார் மாநிலத்தில் கயாவுக்கு அருகில் உள்ள ஒரு கிராமம் ஜெஹ்லௌர்.
அதில் வாழ்ந்தவர் தசரத் மஞ்சி. ஒரு துயரமான சம்பவம் அவர் வாழ்க்கையில் 1959இல் நிகழ்ந்தது. அவரது மனைவி பல்குனி தேவி மலையிலிருந்து கீழே விழ பலத்த காயம் பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அந்த மலைப் பகுதியில் சாலையே இல்லை. அவர் இறந்து போனார். அப்போது மனதிற்குள் ஒரு உறுதியை எடுத்தார் தசரத். இந்த மலையை வெட்டி ஒரு சாலை அமைப்பது என்ற முடிவு தான் அது. அவரிடம் மூன்று ஆடுகள் தாம் இருந்தது. அதை விற்று ஒரு சுத்தியலையும் உளியையும் வாங்கினார். வேலையை ஆரம்பித்தார்.
மலையை வெட்டி ஒரு ரோடு போடுவது தான் அவரது கனவு. 22 வருடங்கள் இடை விடாது உழைத்தார் – தனி ஆளாக! 1960இல் அவர் ஆரம்பித்த பாதை 1982இல் முடிந்தது.
ஆரம்பத்தில் பைத்தியக்காரன் என்று அவரை எள்ளி நகையாடிய அனைவரும் அவரது உறுதியைப் பார்த்து வியந்தனர்.
அவர் இருந்த இடத்திலிருந்து ஆஸ்பத்திரி 55 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. அயராமல் உழைத்து 110 மீட்டர் நீளமும் 9.1 மீட்டர் அகலமும் உள்ள ஒரு சாலையை அவரே அமைத்து முடித்தார். மலையின் சரிவில் பக்கவாட்டில் அவர் இந்த சாலையை அமைத்து முடித்தார். இந்த சாலையால் 55 கிலோ மீட்டர் தூரமானது 15 கிலோமீட்டர் தூரமானது.
இந்திய அரசு இவரை கௌரவித்து ஒரு தபால்தலையை 26-12-2016இல் வெளியிட்டது. பீஹார் அரசும் அவரைக் கௌரவித்தது.
2011இல் அவரைப் பற்றிய டாகுமெண்டரி படம் ஒன்று ‘The Man who moved the mountain’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.
2015இல் மஞ்சி – மலை மனிதர் – Manji – The Mountain Man -என்ற பெயரில் அவரைப் பற்றி ஒரு திரைப்படமும் தயாரிக்கப்பட்டது.
இந்த சாலையின் மூலம் அவரது கிராமம் வெளி உலகுடன் இணைக்கப்படவே பள்ளி, ஆஸ்பத்திரி வசதி கிராம மக்களுக்குக் கிடைத்தது; வேலை வாய்ப்புகளும் உருவாயின.
2007இல் அவர் இறந்த போது பீஹார் அரசு அவரது இறுதிச் சடங்கில் அரசு மரியாதைகளைச் செய்து கௌரவித்தது.
முயன்றால் முடியாதது இல்லை என்பதற்கு தசரத் மஞ்சி ஒரு சிறந்த உதாரணம்!
xxxxx
சாதனை படைத்த கரிகாலன்!
டாக்டர் க்ளென் கன்னிங்ஹாம் (தோற்றம் 4-8-1909 மறைவு 10-3-1988)
அமெரிக்காவில் அட்லாண்டாவில் பிறந்தவன் கன்னிங்ஹாம் என்ற அந்தப் பையன். அவனுக்கு எட்டு வயது ஆகும் போது ஒரு கோர விபத்து ஏற்பட்டது. பள்ளியில் அறையைக் கதகதப்பாக வைக்க அடுப்பை மூட்ட வேண்டிய பணி அவனுடையது. ஒரு நாள் மண்ணெண்ணெய்க்குப் பதிலாக பெட்ரோலை விட்டதால் பள்ளி தீப்பிடிக்க அதில் கால் கருகி கால்களை இழந்து கரிகாலன் ஆனான் அவன்.
அவனால் இனி நடக்கவே முடியாது என்று டாக்டர்கள் கூறி விட்டனர்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவனுக்கு அசாத்திய மன உறுதி இருந்தது. சாதிப்பேன் என்று தனக்குத் தானே முடிவு கட்டிக் கொண்டான். தாயார் அவன வீல்சேரில் உட்கார்த்தி வீட்டின் முன்புற முற்றத்தில் வேலி வரை அழைத்துச் செல்வார். ஒரு நாள் வீல் சேரிலிருந்து மெதுவாக எழுந்தான். விழுந்தான். பின்னர் மெதுவாக நிற்க ஆரம்பித்து வேலியைப் பிடித்து நடக்க ஆரம்பித்தான்.
பள்ளிக்குச் செல்ல ஆசை வந்தது. பள்ளிக்கு முதலில் மெதுவாக நடந்து செல்ல ஆரம்பித்தான். பின்னால் பள்ளிக்குச் செல்ல ஓட ஆரம்பித்தான். ஓடினால் அவனுக்கு ஒரு ஆனந்தம்!
ஒரு நாள் மாடிஸன் ஸ்குயர் கார்டனில் நடந்த ஒரு மைல் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டான். என்ன ஆச்சரியம்! அதில் அவனே வெற்றியும் பெற்றான்.
1933இல் ஜேம்ஸ் இ.சல்லிவன் என்ற உயரிய விருதையும் பெற்றான்.
அமெரிக்கா அவனைத் தனது தலைமை விளையாட்டு வீரனாகப் பார்க்க ஆரம்பித்தது.
1932இல் ஒலிம்பிக் போட்டிகளில் 1500 மீட்டரில் கலந்து கொண்ட கன்னிங்ஹாம் நான்காவதாக வந்த போது உலகம் ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தது. 1936இல் அதே ஒலிம்பிக் போட்டியில் அவர் இரண்டாவதாக வந்தார்.
நான்கு நிமிடங்களில் ஒரு மைலை ஓடிக் கடக்க வேண்டும் என்பது அவரது ஆசை.
1934இல் ஒரு மைலை 4.06.8 நிமிடத்தில் ஓடி முடித்தார். உலக சாதனை படைத்தார்.
இது மட்டுமல்ல, நியூயார்க் பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்.டி பட்டத்தையும் பெற்றார்.
1940இல் அவர் ஓய்வு பெற்றார்.
டாக்டர்களால் நடக்கவே முடியாது என்று கூறப்பட்ட அவர் உலக சாதனை படைத்த வீரராக மாறியது எதனால்?
அவரது மன உறுதியும், எண்ண வலிமையும் அதற்கான இடையறாத உழைப்புமே தான் காரணம், இல்லையா?!
Find the Famous Hindu Goddesses in the Hindu Temples from Kashmir to Kanyakumari. Follow the colour and clues. Then you will know whether to go down or up, left or right.
ACROSS
2.Goddess of Kanyakumari temple and many Kerala temples
7. Goddess of Nepalese people
8. Goddess of Temple in Jagat village in Udaipur district
9. Goddess of Kasi on Diwali day
3. Goddess of Kokatta temple
10. Goddess of Shikarpur in Bangladesh;also Himalyan Peak Nanda Devi
காந்திஜி ஆற்றிய இரண்டு மூன்று சொற்பொழிவுகளிலும், ஹரிஜன் பத்திரிகை கட்டுரைகளிலும் பிரம்மச்சர்யம் என்றால் என்ன என்று விளக்குகிறார். பதஞ்சலி முனிவர் 5 விதிகளை சொன்னார்; பின்னர் 11 விதிகளைப் பின்பறுவோர் பிரம்மச்சாரி என்று விரிவாகியது. ஆனால் ராம நாமத்தை இருதயத்தில் வைத்தால் அந்த விதிகள் எல்லாம் கொசுறு போன்றது; பயனற்றவை என்பது தெரிந்தது; இதை உருளி காஞ்சன் கிராமத்தில் இருந்த பொழுது நான் உணர்ந்தேன் என்கிறார் காந்திஜி. (மகாராஷ்டிரத்தில் புனே அருகிலுள்ள உருளி காஞ்சன் கிராமத்தில் 1946ல் இயற்கை வைத்திய நிலையத்தை காந்திஜி துவக்கியதையும் அது 75 ஆண்டுகளாக நடந்து வருவதையும் பற்றி சில நாட்களுக்கு முன்னர் நான் எழுதிய கட்டுரையை வாசியுங்கள்) இப்போது பிரம்மச்சர்யம் பற்றி காந்திஜி சொல்லுவதைக் கேளுங்கள் :-
பிரம்மச்சர்யம் என்றால் என்ன ? பிரம்மன் அதாவது கடவுளை அடைய உதவும் வழிமுறை ஆகும் ; சந்ததிகளை உருவாக்கும் முறை மீது முழுக்கட்டுப்பாடு விதிப்பதாகும் . இது சொல், செயல், சிந்தனை என்ற த்ரிகரண சுத்தியுடன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் . சிந்தனை தாறுமாறாக ஓடினால்கூட பயனற்றுப் போகும்.
ஹிந்துஸ்தானி மொழியில் ஒரு பழமொழி உண்டு: “எவனுடைய உள்ளம் சுத்தமாக இருக்கிறதோ, கங்கா நதியின் தூய்மை முழுதும், அவன் வீட்டிலுள்ள தண்ணீரிலும் உண்டு”. ஒருவன் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடிந்தால் மற்றவை எல்லாம் சின்னக்குழந்தை விளையாட்டு போல எளிதாகிறது .என்னுடைய கணக்குப்படி பிரம்மச்சாரி நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வான் தலைவலி கூட வராது மனதினால் உடலினால் செய்யும் வேலைகள் அவனுக்கு களைப்பை உண்டாக்காது.எப்போதும் பிரகாசமாக காட்சி தருவான்; தூங்கி வழிய மாட்டான் ; அவனுடைய சுறுசுறுப்பான வெளித் தோற்றம் அவனது உள்ளத்தின் பிரதிபலி ப்பு ஆகும்.. பகவத் கீதையில் சொன்ன ஸ்திதப்ரக்ஞனின் எல்லா குணங்களும் அவனுக்கு இருக்கும் ; இப்படி ஒருவனுக்கு சர்வ குணங்களும் இல்லாவிடிலும் கவலைப்படவேண்டாம் .
இதில் என்ன வியப்பு இருக்கிறது? மனிதர்களை உருவாக்கவல்ல விந்துவை ஒருவன் கட்டுப்படுத்தி அதை சக்தியாகக் காக்கமுடியுமானால் மேற்கூறிய எல்லா குணங்களையும் காட்டுவதில் வியப்பே இல்லை.ஒரு சொட்டு விந்து ஒரு உயிரையே உண்டாக்குமானால், அதைச் சேர்த்துவைப்பவனின் வல்லமையை யாரால்தான் அளக்க முடியும்?
பதஞ்சலி , இதற்கு ஐந்து கட்டுப்பாடுகளை விதித்தார் ; அதில் ஒன்றை மட்டும் பின்பற்றினால் போதும் என்ற பேச்சுக்கே இடமில்லை; வேண்டுமானால் சத்தியம் (வாய்மை) ஒன்றிருந்தால் போதும் என்று சொல்லலாம். ஏனெனில் சத்தியத்தைக் கடைப்பிடித்தால் மற்ற நான்கும் அதில் அடக்கம் ஆகிவிடும். தற்போதைய உலகிற்கு அந்த 5 விதிகள் 11 ஆக விரிவாக்கப்பட்டது ஆசார்ய வினோபா இதுபற்றி ஒரு மராட்டி மொழி கவிதை எழுதியுள்ளார் . அவர் அஹிம்சை, சத்யம், பிறர் பொருள் நயவாமை , நாக்கினைக் கட்டுப்படுத்தல், உழைத்து உண்ணுதல், அச்சமின்மை, எல்லா மதங்களையும் மதித்தல், ஸ்வதேசி உணர்வு , தீண்டாமை ஒழிப்பு என்று சொல்லுவார் . இவை எல்லாம் சத்தியத்தைக் கடைப்பிடித்தால் கிடைக்கக்கூடியதே. வாழ்க்கை என்பது சிக்கலானது ஆகையால் இவை ஒவ்வொன்றும் முக்கியமானதே (ஹரிஜன் இதழ் 8-6-1947)
Xxxx
இந்தியாவில் பிரம்மச்சாரிக்கான கட்டுப்பாடுகள்
இந்தியாவில் பிரம்மச்சாரிக்கான சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பெண்களுடனோ, பிராணிகளுடனோ, அலிகளுடனோ அவன் வசிக்கக்கூடாது .பெண்களுக்குத் தனியாகவோ குழுவாகவோ பாடம் எடுக்கக்கூடாது ; தயிர், பால் வெண்ணெய், போன்ற கொழுப்பு உணவுகளைப் பயன்படுத்தக்கூடாது பெண்களுடன் ஒரே பாயில் அமரக்கூடாது பெண்களின் உடலுறுப்புகளைக் காணக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள். நான் தென் ஆப்பிரிக்காவில் சில பிரம்மச்சாரிகளைக் கண்டேன். அவர்கள் இந்தக்கட்டுப்பாடுகளை தேவை என்று கருதவில்லை.. நானும் இதைக் கடைப்பிடிக்கவில்லை. விதிகளை மீறுவதில் சமர்த்தன் நான். நானும் பால் , தயிர் நெய்யை விட்டவன்தான். ஆனால் அதற்கான காரணங்கள் வேறு. இந்தியாவுக்கு வந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் அதையும் விட்டேன். பால், தயிர் , நெய் ஆகிய சத்துக்கு இணையான காய்கறிகள் கிடைத்தால் பிராணிகளிடம் கிடைக்கும் பொருட்களை உண்ண மாட்டேன் ; மகிழ்ச்சியோடு அவைகளை விட்டுவிடுவேன் ; அது வேறு கதை (இப்போது வேண்டாம் ) .
Xxxx
நல்ல பிரம்மச்சாரி ஒரு துளி விந்துவையும் வீணடிக்க மாட்டான் .. அதை அவன் அதிகரிக்கவும் செய்கிறான் ; அதை வீணடிக்காமல் பாதுகாக்கிறான் .ஆகையால் அவனுக்கு (மனத்தளவில்) முதுமை வராது; அவன் புத்தி கூர்மையாகவே இருக்கும் எனக்கு ஒரு விஷயம் மனத்தில் படுகிறது . உண்மையான பிரம்மச்சாரிக்கு இவை எல்லாம் கூடத் தேவையில்லை; .வெளிப்புற கட்டுப்பாடுகளால் வருவதில்லை பிரம்மச்சர்யம்.; பெண்களையே பார்க்காமல் ஓடுபவன் , பிரம்மச்சர்யத்தைப் புரிந்துகொள்ளவில்லை .
பொய்யான கட்டுப்பாடுகளை அவன் வெறுத்து ஒதுக்குவான் .அவனுடைய வரம்புகளை அறிந்து அவனே வெளி போட்டுக்கொள்ளலாம். இனி அவை தேவை இல்லை என்ற நிலை வருமானால் வேலிகளை உடைத்து எறியலாம்.. முதலில் பிரம்மசர்யத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதன் மஹிமையை உணர்ந்து விலை மதிக்க முடியாத அந்த பொக்கிஷத்தை பாதுகாத்துக் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டிற்கு சேவை செய்ய இது தேவை
ஹரிஜன் 15-6-1947
Xxx
இறைவனை அறிய பிரம்மச்சர்யம்
மின்சாரம் சக்தி வாய்ந்தது ; எல்லோரும் அதனால் பயனடைய முடியாது. சில விதிகளைப் பின்பற்றினால்தான் அதை உற்பத்தி செய்ய முடியும் . அதற்கு உயிர் கிடையாது மனிதன் கஷ்டப்பட்டுதான் அதைப்பற்றிய முழு அறிவையும் அடைகிறான் ; அதே போலவே நாம் கடவுள் என்று அழைக்கும் சக்தியும் , அவன் பற்றிய விதிகளை அறிந்தால் நம்முள் இருப்பதை அறியலாம்.கடவுளின் விதிகளை அறிவது மெத்த கடினம் என்பதை நாம் அறிவோம், கடவுளை அடைய, ஒரு விதி பிரம்மச்சர்யம் ஆகும். இதை நான் அனுபவத்தில் கண்டேன். துளசிதாஸ் போன்ற பத்தர்கள் இந்த செம்மையான வழியைக்காட்டுகின்றனர். எனக்கு ராம நாமத்தின் சக்தி நான் உருளி காஞ்சன் கிராமத்தில் இருந்தபோது தெரிந்தது.
என்னுடைய சொந்த அனுபவத்துக்கு முக்கியம் தரவேண்டாம்.எனக்கு அந்த கிராமத்த்தில் தான் ராமநாமத்தின் சக்தி தெரிந்தது எல்லா பிரச்சனைகளுக்கும் ராமா நாமம் தீர்வு தரும்; யார் ஒருவன் இந்த நாமத்தைப் பயன்படுத்துகிறானோ அவன் சிறிது முயற்சி செய்தாலும் பெரும்பலனை அடைகிறான்.
இதே பாதையில் செல்லும் நான் ஒன்று சொல்லுவேன்; பிரம்மசர்யத்துக்குத் தேவையான மற்ற கட்டுப்பாடுகள் இந்த ராம நாமத்தின் முன்னர் கொசுறு போன்றதே.. இந்த ஈடு இணையற்ற கருவியை அறியும் முயற்சியில் நாடும் வழிமுறை யாது, நாடித் தேடும் பொருள் யாது என்பதுகூட மறைந்து போகிறது .ராம நாமத்தை இருதயத்தில் நிறுத்தினால் அதன் அபூர்வ சக்தியை அறியலாம் இவ்வழியில் இறைவனை அடைய 11 விதிகள் இருப்பதைக் கண்டோம். சத்தியம் என்னும் வழியாக ராமன் என்னும் பொருளைத் தேடினோம்.ராம நாமமும் சத்தியமும் ஒன்றே அல்லவா ?
மீண்டும் பழைய விஷயத்துக்கு வருகிறேன் ;பிரம்மச்சர்யம் என்பதன் சரியான பொருள் ஜனன உறுப்பின் மீது முழுக்கட்டுப்பாடு பெறுவதாகும். அதற்கான தங்கச் சாவி ராமநாமம் ஆகும்
–ஹரிஜன் இதழ் 22-6-1947
–சுபம்—
Tags- பிரம்மச்சர்யம் , பிரம்மச்சாரி, விதிமுறைகள் , கட்டுப்பாடுகள், காந்திஜி, உருளி காஞ்சன்
What is Brahmacharya (celibacy) ? It is the way of life which leads us to Brahman (God). It includes full control over the process of reproduction. The control must be in thought, word and deed. If the thought is not under control, the other two have no value.
There is a saying in Hindustani:
He whose heart is pure has all the purifying waters of Ganga in his house.
For one whose thought is under control the other is mere child’s play. The Brahmachari of my conception will be healthy and will easily live long. He will not even suffer from so much as a headache. Mental and physical work will not cause fatigue. He is ever bright, never slothful. Outward neatness will be an exact reflection of the inner. He will exhibit all the attributes of the steadfast one described in the Gita. It need cause no worry if not one person is met with answering the description.
Is it strange that one who is able completely to conserve and sublimate the vital fluid which has the potentiality of creating human beings should exhibit all the attributes described above? Who can measure the creative strength of such sublimation, one drop of which has the potentiality of bringing into being a human life?
Patanjali has described five disciplines. It is not possible to isolate any one of these and practise it. It may be posited in the case of Truth, because it really includes the other four. And for this age five have been expanded into eleven. Acharya Vinoba has put them in the form of a Marathi verse. They are non-violence, truth, non-stealing, brahmacharya, non-possession, bread labour, control of the palate , fearlessness, equal regard for all religions, swadeshi and removal of untouchability .
All these can be derived from Truth. But life is complex. It is well to bear in mind that all the disciplines are of equal importance.(Harijan 8-6-1947)
There are certain rules laid down in India for the would be Brahmachari.Thus he may not live among women, animals an eunuchs, he may not teach a woman only or even in a group, he may not sit on the same mat as a woman, he may not look at any part of a woman’s body, he may not take milk, curds, ghee or any fatty substance nr indulge in baths and oily massages. I read about these when I was in South Africa. There I came in touch with some men and women, who while they observed Brahmacharya, never knew any of the above named restraints were necessary. Nor did I observe them and I was none the worse for the non-observance. I did give milk, ghee and other animal substances but for different reasons. I failed I this attempt after two or three years after my return to India but today if I could find any effective vegetable substitute for milk and ghee, I would gladly renounce all animal products. But this is another story.
A perfect Brahmachari never loses his vital fluid. On the contrary, he is able to increase it day by day and, what is more, he conserves it; he will, therefore, never become old in the accepted sense and his intellect will never be dimmed.
It appears to me that even the true aspirant does not need the above mentioned restraints Brahmachari
Brahmacharya is not a virtue that can be cultivated by outward restraints . He who runs away from a necessary contact with a woman does not understand the full meaning of brahmacharya.
The true brahmachari will shun false restraints. He must create his own fences according to his limitations, breaking them down when he feels that they are unnecessary. The first thing is to know what true brahmacharya is, then to realize its value and lastly to try to cultivate this priceless virtue . I hold that true service of the country demands this observance.
Harijan 15-6-1947
Xxx
Brahmacharya in relation to God
Electricity is a powerful force. Not all can benefit from it. T can be produced by following certain laws. It is a lifeless force. Man can utilize it if he labours hard enough to acquire the knowledge of its laws.
The living force which we call God can similarly be found if we know and follow His law leading to the discovery o Him in us. But it is self evident that to find out God’s law requires far harder labour. The law may, in one word, be termed Brahmacharya. I can say this from experience. Devotees and sages like Tulsidas have shown this royal path. No one need to give undue importance to my own experience. Perhaps I am right in saying that the potency of Ramanama brought vividly home to me in Uruli Kanchan (It is the Maharashtra village where with Manibhai Desai, Gandhiji established the Naturopathy Ashram- Nisargopachar Ashram). It was there I asserted the surest remedy for all our ills was Ramanama. He who can make full use of it can show powerful results with very little outside effort.
Following this line of thought I can say with conviction that the orthodox aids to Brahmacharya pale into insignificance before Ramanama, when this name is enthroned in heart. Then and then only do we realize its transcendent beauty and power. In the vigilant search for this matchless and unfailing weapon we find it hard to differentiate between ends and means. Thus , the 11 rules of conduct are the means to enable us to reach God. Of the 11 rules Truth is the means and God called Rama is the end. Is it not equally true that Ramanama is the means and Truth is the end?
But let me revert to the original point the accepted meaning of the Brahmacharya is the attainment by man of complete control over the sex organ. The golden means to attain that end is Ramanama.