EARTH ! YOU ARE MY MOTHER, I AM YOUR SON -ATHARVA VEDA (Post No.10,505)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,505

Date uploaded in London – –   30 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

The most famous sentence of the Atharva Veda (AV), “O Mother Earth! I am your Son” comes in the Bhumi Sukta of AV. Greeks and other communities of the world got it from us and spread it. Now we have Mother land, Mother tongue etc in many cultures. These are the contributions of Vedic people. All the rivers in the oldest book in the world, the Rig Veda, are described as sisters and in some places Mother. Vedic people saw all things in Nature as their own kith and kin.

Let me continue my commentary from the ninth mantra/stanza out of 63 in this first hymn in Book 12 (AV.12)

AV-1-12-9

This shows the geographical knowledge of Vedic Hindus about the Indian Sub Continent. Here the poet talks about the non- stopping, ever running, perennial rivers of India. Rig Veda, the oldest book in the world, describes rivers from Ganges to rivers in Afghanistan. Its geography extends from Burmese border to Iran. Very often they use the phrase 9 and 90 rivers. Though foreign translators interpreted it  ‘as a lot of rivers’ no one is able to explain the significance of 9+90 rivers.

The concept of Rashtra is mentioned in the eighth stanza itself. ‘Desa’ means place, but now used for Country= Desh; e.g.Bangladesh. But Rashtra is Nation which we use in Rashtrapathi (President of India), Rashtriya Swayamsevak Sang (RSS).

The poet requests Earth Mother to pour him milk ‘like a mother ‘.

Tamils use Night and Day. Vedic poets use Ahoratri = Day and Night. But both Tamil words for night and day are derived from Sanskrit. Aha= Pahal in Tamil; Ratri= Iravu in Tamil. But I have been proposing both came from the same root, demolishing the argument of Bishop Caldwell gang.

Varchas , the word for the spiritual light/knowledge, is used in this stanza and many stanzas in the hymn.

Xxxx

AV.1-12-10

Poet describes that the Earth was measured by Asvins and strode by Vishnu. Asvins measuring earth is not explained by the commentators but Vishnu measuring the earth with Three Steps is referred to in all the four Vedas and later mythologies. Vamana- Trivikrama Avatara of Vishnu where he asked for ‘earth measuring only three steps’ is in all sculptures and devotional songs. At the Vedic level it was interpreted differently; it is Sun who traverses the sky in three steps- Morning, Mid day and evening or earth atmosphere and sky.

‘Indra freeing himself’ is the natural phenomena of releasing clouds to pour rains . Again we come across the breast feeding simile- May she pour out milk for me – ‘like a mother to her son’.

Nowadays Western countries spend lot of money in encouraging and ‘training’ mothers to breast feed their children! One of Hindus greatest discoveries and contribution to humans is Mother’s milk and Cow’s milk are almost similar. They called Cow and Earth Mother.

Xxx

AV.12-1-11

It is equally important for its geographical reference to Himalayas. Hima means snow. Here we come across the Sanskrit word Parvata Himavantha. Any mountain that has the height of 19000 feet or over will have snow. But for Hindus , Hima Alaya= Abode of Snow, is the only snow clad mountain which is the protective line running to 1500 miles. Kalidasa of first century BCE , with his amazing telescopic eyes, described Himalayas as the Measuring Rod of Earth. His first 10 stanzas of Kumarasambhava, describing Himalayas, is in 2000 year old Sangam Tamil literature. Tamil poets also talk about Himalayas and Ganges and Yamuna. They never said anything about River Sindhu/Indus.

Vedic poet describes the colours of earth which shows the Vedic community had very clear knowledge of mineral wealth of India . They sing about golden jewellery and iron and copper instruments in various hymns in the Rig Veda itself.

The poet adds “On this earth I stand, unvanquished, unslain and unhurt”- a beautiful and positive picture of a Vedic society. Vedas are full of positive thoughts and pleasant and happy pictures.

Xxxx

AV.12-1-12

The twelfth mantra of the Hymn to Earth, has the most popular and famous line ‘EARTH IS MY MOTHER, HER SON AM I’. Vedic Hindus not only loved Earth like their own mother but also gave respect to her. We are going to see it in the later part of the hymn. The poet begs to purify all human beings. He used US and not ME. Parjanya= Rain is praised as father. Like husbands help wives, Mother Earth is helped by Father Rain. The cycle of Yajna/work- rain- plants-food- man is described by Lord Krishna in Bhagavad Gita 3-14

Poet prays for tremendous energy from the navel of earth. Linguistically speaking we use many of the words even today from the above-mentioned mantras.

நாபிநேவல் NAVEL  – தொப்புள்

மத்யமிடில்MIDDLE மத்தியத்தில்

மாதாமதர்MOTHER மாது , மாதர்

புத்ரபுதல்வன் PUTRA= PUTHALVA IN PURANANURU  (புறநானூறு காண்க)

பயஹ MILK – பால் MILK  – பயன் USE – பலன் BENEFIT – பழம் FRUIT

xxxx

INSPIRATION TO TWO GREAT POETS

Subrahmanya Bharati, Greatest of the modern Tamil poets, and his predecessor Bankim Chandra Chatterji of Bengal  were inspired by this Hymn to Earth. Their picture of earth and the words they used to describe the natural wealth of India point toward this.

Here is the Second National Anthem of India Vandematarm by B C Chatterji and its translation by Bharati (Two versions are given in my Tamil article yesterday: –

From Wikipedia

Bande[c] Mātaram.
Sujalāṃ suphalām
Malayajaśītalām
Śasyaśyāmalām
Mātaram.

Śubhra-jyotsnā-pulakita-yāminī
Phullakusumita-drumadalaśobhinī,
Suhāsinīṃ sumadhurabhāṣinīm
Sukhadāṃ baradāṃ[d] Mātaram.

Saptakoṭīkanṭha-kala-kala-ninādakarāle
Dbisaptakoṭībhujaidhṛtakharakarabāle,[e]
Abalā[f] kena mā eta bale[g]!
Bahubaladhārinīṃ[h]
Namāmi tarinīṃ
Ripudalabārinīṃ[i]
Mātaram.

Tumi bidyā[j] tumi dharma
Tumi hrṛdi tumi marma
Tbaṃ[k] hi prānāḥ śarīre.
Bāhute[l] tumi mā śakti,
Hṛdaye tumi mā bhakti,
Tomārai pratimā gaṛi mandire mandire.

Tbaṃ[m] hi Durgā daśapraharanadhārinī
Kamalā kamala-dalabihārinī
Bānī[n] bidyādāyinī[o]
Namāmi tbaṃ[p]
Namāmi kamalām
Amalāṃ atulām,
Sujalāṃ suphalām
Mātaram

Bande[q] Mātaram
Śyāmalām saralām
Susmitām bhūṣitām
Dharanīṃ bharanīṃ
Mātaram.
वन्दे मातरम्
सुजलां सुफलाम्
मलयजशीतलाम्
शस्यश्यामलाम्
मातरम्।

शुभ्रज्योत्स्नापुलकितयामिनीम्
फुल्लकुसुमितद्रुमदलशोभिनीम्
सुहासिनीं सुमधुर भाषिणीम्
सुखदां वरदां मातरम्।।

सप्त-कोटि-कण्ठ-कल-कल-निनाद-कराले
द्विसप्त-कोटि-भुजैर्धृत-खरकरवाले,
अबला केन मा एत बॅले
बहुबलधारिणीं
नमामि तारिणीं
रिपुदलवारिणीं
मातरम्।।

तुमि विद्या, तुमि धर्म
तुमि हृदि, तुमि मर्म
त्वम् हि प्राणा: शरीरे
बाहुते तुमि मा शक्ति,
हृदये तुमि मा भक्ति,
तोमारई प्रतिमा गडी मन्दिरे-मन्दिरे।।

त्वम् हि दुर्गा दशप्रहरणधारिणी
कमला कमलदलविहारिणी
वाणी विद्यादायिनी,
नमामि त्वाम्
नमामि कमलाम्
अमलां अतुलाम्
सुजलां सुफलाम्
मातरम्।।

वन्दे मातरम्
श्यामलाम् सरलाम्
सुस्मिताम् भूषिताम्
धरणीं भरणीं
मातरम्।।

Mother, I bow to thee!
Rich with thy hurrying streams,
Bright with thy orchard gleams,
Cool with the winds of delight,
Dark fields waving, Mother of might,
Mother free.

Glory of moonlight dreams,
Over thy branches and lordly streams,
Clad in thy blossoming trees,
Mother, giver of ease,
Laughing low and sweet,
Mother, I kiss thy feet,
Speaker sweet and low,
Mother, to thee I bow. [Verse 1]

Who hath said thou art weak in thy lands,
When the swords flash out in seventy million hands,
And seventy million voices roar
Thy dreadful name from shore to shore?
With many strengths who art mighty and strong,
To thee I call, Mother and Lord!
Thou who savest, arise and save!
To her I cry who ever her foemen drove
Back from plain and Sea
And shook herself free. [Verse 2]

Thou art wisdom, thou art law,
Thou art heart, our soul, our breath
Thou art love divine, the awe
In our hearts that conquers death.
Thine the strength that nerves the arm,
Thine the beauty, thine the charm.
Every image divine.
In our temples is but thine. [Verse 3]

Thou art Goddess Durga, Lady and Queen,
With her hands that strike and her swords of sheen,
Thou art Goddess Kamala (Lakshmi), lotus-throned,
And Goddess Vani (Saraswati), bestower of wisdom known
Pure and perfect without peer,
Mother lend thine ear,
Rich with thy hurrying streams,
Bright with thy orchard gleams,
Dark of hue O candid-fair [Verse 4]

In thy soul, with jewelled hair
And thy glorious smile divine,
Loveliest of all earthly lands,
Showering wealth from well-stored hands!
Mother, mother mine!
Mother sweet, I bow to thee,
Mother great and free! [Verse 5]

—Subham—

TAGS —  Mother Earth, I am Son, Vandemataram, B C Chatterjee, Bharati

பகவத்கீதை சொற்கள் INDEX-33; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் கற்போம் -33 (Post No.10,504)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,504

Date uploaded in London – –   30 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் தமிழ் இன்டெக்ஸ் 33

ஜன்மானி 4-5  பிறப்புகள், ஜன்மங்கள்

ஜபயக்ஞஹ  10-25 ஜபம் என்னும் வேள்வி

ஜயத்ரத 11-34  சிந்து தேச அரசன் ஜயத்ரதன்

ஜயஹ 10-36  வெற்றி

ஜயா ஜயவ் 2-38  வெற்றியு ம் தோல்வியும்

ஜயேம 2-6  நாம் வெற்றிபெற வேண்டும்

ஜயேஹ 2-6 அவர்கள் வெற்றிபெற வேண்டும்

ஜரா 2-13 மூப்பு

ஜரா மரண மோக்ஷஆ ய 7-29  மூப்பு, மரணத்திலிருந்து விடுபடல்

ஜஹாதி 2-50  மறுக்கிறான்………………………………. 10 WORDS

ஜஹி 3-43 தோல்வி

ஜாகர்த்தி 2-69  விழிப்புடையவன்

ஜாக்ரதஹ 6-16 நீண்ட நேரம் விழித்திருப்பவன்

ஜாக்ரதி 2-69 விழித்துக்கொண்டு;  விழிப்புடையன

ஜாதஸ்ய 2-27 பிறந்தவனுடைய

ஜாதாஹா 10-6 பிறந்தார்கள்

ஜாதி தர்மாஹா 1-43  ஜாதிக்கேற்ற தர்மங்கள்

ஜாது 2-12 எந்த நேரத்திலும்

ஜானன் 8-27 அறிந்து

ஜானாதி 15-19     அறிகின்றானோ ……………..  20 WORDS

ஜானே 11-25 காணுதல், அறிதல்

ஜாயதே 1-29 உண்டாகின்றது

ஜாயந்தே 14-12 உண்டாகின்றன

ஜாஹ்னவீ   10-31 கங்கை நதியின் மறுபெயர்; ஜூன்ஹு மஹரிஷியின் ஆஸ்ரமம் வழியாகப் பாய்ந்தவள்

ஜிகீஷதாம் 10-38 வெற்றி பெற விரும்புவோரிடத்தில்

ஜிக்ரன் 5-8 முகர்தல், முகர்ந்தாலும்

ஜீஜீவிஷாமஹ 2-6  உயிர் வாழ விரும்புதல்

ஜிக்ஞாஸுஹு 6-44  தத்துவத்தை ஆராய விரும்புபவன்

ஜித சங்க தோஷாஹா 15-5 பற்று என்னும் குற்றம் இல்லாத

ஜிதஹ 5-19  ஜெயிக்கப்பட்டது  ……………………..30 WORDS

ஜிதாத்மனஹ 6-7  தன்னை வென்ற

ஜிதாத்மா 18-56  ஜெயிக்கப்பட்ட அந்தக் கரணம் உடையவன்

ஜித்வா 2-37  வென்றால்

ஜிதேந்த்ரியஹ  5-7 புலன்களை வென்றவன்

ஜீர்ணானி 2-22 நைந்துபோன

ஜீவதி 3-16  வாழ்கிறான்

ஜீவனம் 7-9 உயிர்

ஜீவ பூதஹ 15-7 ஜீவனாக

ஜீவ பூதாம் 7-5 ஜீவ வடிவாயுள்ளது

ஜீவ லோகே 15-7  ஜீவலோகத்தில்…………. 40 WORDS

ஜீவிதேன 1-32 வாழ்க்கையாலும்

ஜுஹோஷி 9-27 ஹோமம் செய்கிறாயோ

ஜுஹ்வதி 4-26 ஹோமம் செய்கிறார்கள்

ஜேதாஸி 11-34 ஜெயிப்பாய்

ஜோஷயேத் 3-26   கருமங்களை செய்ய வைக்க வேண்டும்  ……………………….. 45 WORDS

TAGS- GITA TAMIL WORD INDEX 33

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

தாயுமானவர்! – 3 (Post No.10,503)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,503
Date uploaded in London – – 30 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தாயுமானவர்! – 3
ச.நாகராஜன்

அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது எனும் பெரிய ஆப்தர் மொழி ஒன்று பற்றி அவர் சுட்டிக் காட்டுகிறார்.
அவரது கண்ணிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
அன்பர் பணி செய்ய வெனை யாளாக்கி விட்டு விட்டால்
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே என்று பராபரக் கண்ணியில் தொண்டு பற்றிக் குறிப்பிடுகிறார்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே.

இதுவே அவரது கொள்கை.
காகமுறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ
போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா
யேக உருவாக் கிடக்குதையோ வின்புற்றிட நாம் இனி எடுத்த
தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் ஜெகத்தீரே
என்று ஜெகத்தினரை பேரின்ப வெள்ளத்தை அனுபவிக்க அழைப்பு விடுக்கிறார்.

சைவ சமயமே சமயம் என்பதில் திடமாக இருக்கும் அவர் அதை அப்படியே கூறி விடுகிறார்:
சைவ சமயமே சமயம் சமயாதீதப் பழம் பொருளைக்
கைவந்திடவே மன்றுள் வெளிக்காட்டு மிந்தக் கருத்தை விட்டுப்
பொய் வந்துழலும் சமய நெறி புகுத வேண்டா முத்தி தரும்
தெய்வ சபையைக் காண்பதற்கு சேர வாரும் ஜெகத்தீரே
இதுவே அவரது அறைகூவல்!

அத்வைத மார்க்கத்தைப் போற்றும் அவர் அதுவே Inference, experience, Logic ஆகிய மூன்றுக்கும் ஒத்தது என்று உறுதி கூறுகிறார் இப்படி:

“வேதமுடன் ஆகம முராண இதிகாசமும்
வேறும் உள கலைகள் எல்லாம்
மிக்காக அத்வைத த்வைத மார்க்கத்தையே
விரிவாய் எடுத்துரைக்கும்
ஓதரிய த்வைதமே அத்வைத ஞானத்தை
உண்டு பணும் ஞானம் ஆகும்;
ஊகம், அனுபவம், வசனம் மூன்றுக்கும் ஒவ்வும் ஈது”

இது அவர் வாக்கு!
மனத்தைப் பற்றிப் பல இடங்களில் அவர் அழகுறக் குறிப்பிடுகிறார்:

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்;
ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்;
கண் செவி எடுத்து ஆட்டலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம்;
வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்;
மற்று ஒரு சரீரத்தினுள் புகுதலாம்;
ஜலம் மேல் நடக்கலாம்;
கனல் மேல் இருக்கலாம்;
தன் நிகர் இல் சித்தி பெறலாம்;
என்று பட்டியலிடும் அவர்
“சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது;

சத்து ஆகி என் சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!
தேஜோமயானந்தமே என்று கூறுகிறார்.

மனதை அடக்குவது என்பது கடினமான ஒரு விஷயம் என்பதால் அவன் இறைவன் அருளை இப்படி வேண்டுகிறார்:

ஆழாழி கரை இன்றி நிற்கவிலையோ கொடிய ஆலமும் அமுதாக விலையோ,
அக்கடலின் மீது வட அனல் நிற்கவில்லையோ
அந்தரத்து அகில கோடி
தாழாமல் நிலை நிற்கவில்லையோ மேருவுந்
தனுவாக வளைய விலையோ
சப்த மேகங்களும் வ்ஜ்ரதரன் ஆணையிற்
சஞ்சரித்திடவில்லையோ
வாழாது வாழவே இராமன் அடியால் சிலையும்
மடமங்கை யாக விலையோ
மணி மந்த்ர மாதியால் வேண்டு சித்திகளுலக
மார்க்கத்தில் வைக்க விலையோ
என்று இப்படிக் கேட்கும் அவர் பாடலின் இறுதியில்
பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம்
பண்ணுவது உனக்கு அருமையோ

என்று,


பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறை நின்ற பரிபூரண ஆனந்தத்திடம் கேட்கிறார்!

‘நேற்றுளார் இன்று மாளா நின்றனர்’ என்ற உண்மையை அவர் சுட்டிக் காட்டுவதோடு, ‘எத்தனை பிறப்போ, எத்தனை இறப்போ எளியனேற்கு இதுவரை அமைத்தது’ என்று கூறி ஜென்மம் இனி வேண்டாம் என்று கூறி அதற்கு அருள் பாலிக்க வேண்டுகிறார்.
சமய ஆசாரியர்களை அவர் போற்றத் தவறுவதே இல்லை.
‘ஐயா, அருணகிரி, அப்பா, உனைப் போல மெய்யாக ஒரு சொல் விளம்பினவர் யார்?” என்று அருணகிரிநாதரைப் போற்றுகிறார்.

தன் குருவான மௌனகுரு ஸ்வாமிகளை அவர் ஆங்காங்கே குறிப்பிடத் தவறுவதே இல்லை.

‘ஜாதி, குலம், புறப்பு, இறப்பு, பந்தம், முக்தி, அரு உருவத்தனமை, நாமம், ஏதும் இன்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பிரிவு அற நின்று இயக்கம் செய்யும் ஜோதியை’ இனம் காட்டும் அவர்,
அதை ‘சிந்தை செய்வாய்’ என்று அறிவுரை புகட்டுகிறார்.
உலகத்தின் இயற்கையையும் ஆங்காங்கே அவர் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை.

“வாயார உண்ட பேர் வாழ்த்துவதும், நொந்த பேர் வைவதுவும் எங்கள் உலக வாய்பாடு” என்று உலக இயல்பை அவர் கூறுகிறார்.
எளிய தமிழில் இனிய கருத்துக்களைப் பாடுவதில் தாயுமானவர் ஒரு புதுவழியைக் காட்டியவர் என்றே கூறலாம்.
இவரை அடுத்துப் பின்னால் வந்த திரு அருட்பிரகாச வள்ளலார், மஹாகவி பாரதியார் ஆகியோர் இந்த நடையைப் போற்றித் தாமும் எளிய நடையை மேற்கொண்டதைப் பார்க்கலாம்.
ஏன், எளிய தமிழில் அரிய கருத்தை அவர் கூறுவது திரைப்படப் பாடல்களில் கூட எதிரொலிப்பதைப் பார்க்க முடிகிறது.
ஒரு எடுத்துக் காட்டு இது:

“எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம்
புண்ணாகச் செய்தது இனிப் போதும் பராபரமே” இந்தக் கண்ணியைப் படிப்போருக்கு பின்னால் வந்த
“எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்குறே” என்ற பாடல் நினைவுக்கு வருகிறதில்லையா?

அவரது அற்புதமான பாடல்களை விரித்துக் கூறுவதற்கோர் எல்லையே இல்லை.
அவரது பாடல்களை அனுதினமும் படிப்போம்; உணர்வோம்; உயர்வோமாக!
நன்றி வணக்கம்!


** முற்றும்

tags- தாயுமானவர் – 3

பூமா தேவியே நீ என் தாய், நான் உன் புதல்வன் (Post No.10,502)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,502

Date uploaded in London – –   28 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆராய்ச்சிக் கட்டுரை -5

அதர்வண வேத 12-ஆவது காண்டத்தில் முதல் துதி பூமி சூக்தம் ; 63 மந்திரங்களைக் கொண்ட அந்த அற்புதமான துதியைத் தொடர்ந்து காண்போம்.

இரண்டு முக்கியமான விஷயங்கள் கீழே வருகின்றன

1. பூமாதேவியே நீ என்னுடைய தாயார்; நான் உன் மகன் ; பால் தருக

2.இமயம் முதல் குமரி வரை

3000 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் மொழியும், கிரேக்க லத்தீன் மொழியும் இலக்கண இலக்கியம் படைக்கும் முன்னர், இப்படி அற்புதமான, உன்னதமான , நாகரீக முதிர்ச்சி பெற்ற கருத்துக்கள் ஸம்ஸ்க்ருதத்தில் வந்திருப்பது எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது

மந்திரம் 9

யஸ்யாமாபஹ பரிசராஹா  ஸமாநீரஹோராத்ரே அப்ரமாதம் க்ஷரந்தி

ஸா நோ பூமிபூமிரதாரா பயோ துஹா மதோ அக்ஷது வர்ச்சஸா — 9

எந்த பூமியில் இரவும் பகலும் வற்றாத ஜீவ நதிகள்  எப்போதும் ஒடிக்கொண்டு இருக்கின்றனவோ , அவள் எங்களுக்கு பல்வேறு வழிகளில் பாலைப் பொழியட்டும் ; அதே நேரத்தில் பேரொளியை அளிக்கட்டும் – 9

ஒவ்வொரு பாடலிலும் ‘வர்ச்சஸ்’ என்னும் ஆன்ம ஒளியைப் புலவர் வேண்டுவதைக் கவனிக்கவும்.

‘அஹோராத்ரி’ என்ற சொல்லையும் கவனிக்க வேண்டும். நாம் ‘இரவும் பகலும்’ என்போம். சம்ஸ்க்ருதத்தில் ‘பகலும் இரவும்’ என்றே பெரும்பாலும் வரும். மேலும் ‘அஹ’ என்பது தமிழில் ‘பகல்’ என்றும் ‘ராத்ரீ’ என்பது ‘இரவு’ என்றும் உருமாறுவதையும் கவனிக்க.

தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை; அவ்விரண்டும் உலக மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழிகள் என்ற எனது கருத்தை இவை உறுதிப்படுத்துகின்றன.

பயஹ என்பது பயன் USE என்றும் பால்  MILK என்றும் உருமாறுகிறது.

பசுவின் பயன் = பால் MILK ; சம்ஸ்க்ருதத்தில் ‘பயஹ’ என்றால் பால்.

இன்றும் நாம் பயன் USE,  என்ன/ பலன்? BENEFIT  என்ன< / பயன்படுமா ?USABLE ? என்றெல்லாம் பேசுகிறோம் . இந்த பய, உலகின் மிகப்பழைய நூலான ரிக்வேதத்தில் உள்ள சொல். அதுவே தமிழில் பழம் FRUIT என்றும் உரு எடுக்கிறது.

ஆக பயஹ MILK – பால் MILK  – பயன் USE – பலன் BENEFIT – பழம் FRUIT ஆகிய எல்லாம் ஒரே வேரிலிருந்து SAME ROOT பிறந்தவையே!

வேத கால மக்களுக்கு உள்ள பூகோள அறிவும் இங்கே குறிப்பிடப்படும் பாடல்களில் வருகின்றன. ‘எப்போதும் ஓடும்’ ‘நமக்குத் பொதுவான நீர்’ என்பது பாரதம் முழுதும் ஓடும் நதிகளைக் குறிப்பிடுகின்றன. அடுத்த சில பாடல்களிலேயே இமய மலை வந்து விடுகிறது. இவற்றை எல்லாம் 2700 ஆண்டுகளுக்கு முந்தைய பாணினி தரும் தகவலோடு ஒப்பிடுகையில் ஈரான் முதல் அஸ்ஸாம் வரை அவர்களுக்குள்ள அறிவும் தெளிவாகிறது. அது மட்டுமல்ல கங்கை யமுனையில் துவங்கி ஆப்கானிஸ்தான் நதிகளில் முடியும் ரிக் வேத துதியும் உளது. அதுமட்டுமல்ல 99 நதிகள் என்ற குறிப்பும் வேதம் முழுதும் தொடர்ந்து வருகிறது. உலகின் முதல் பூகோளப் பாடல் பூமி சூக்தம்தான்.வெள்ளைக்காரர் குறிப்பிடும் தேதி கி.மு 1000; இந்துக்கள் குறிப்பிடும் தேதி கி.மு 3150 க்கு முன்னர்.

XXXXXX

மந்திரம் 10

யாமசிவனாவமிமாதாம் விஷ்ணுர்யஸ்யாம் விசக்ரமே

இந்த்ரோ யாம் சக்ர  ஆத்மனே அனமித்ராம் சசீபதிஹி

ஸா நோ பூமிர்வி  ஸ்ருஜதாம் மாதா புத்ராய  மே பயஹ — 10

எந்த பூமி அஸ்வினி தேவர்களால் அளக்கப்பட்டதோ எந்த பூமி விஷ்ணுவின் அடிகள்/ பாதங்களால்  படப் பட்டதோ எந்த பூமி இந்திரனால் அவனுடைய எதிரிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதோ , அந்த பூமியானவள் ஒரு பிள்ளைக்குப் பாலைப் பொழிவது போல எனக்கு பால் சுரக்கட்டும் — 10

அஸ்வினிகளால் அளக்கட்டது  என்பது புதிய விஷயம்; ரிக் வேதம் முழுதும் விஷ்ணு மூன்று அடிகளால் அளந்த விஷயம் வருகிறது; இதை சூரியன் என்று அர்த்தம் செய்து காலை, பகல், மாலை என்றும் ஆண்டின் மூன்று பகுதிகள் என்றும் மனம்போனபோக்கில் வியாக்கியானம் செய்வார்கள். பின்னர்தான் இது வாமன- த்ரிவிக்ரம அவதார “ஓங்கி உலகளந்த உத்தமனுக்கு” சூட்டப்பட்டது என்பர். எப்படியாகிலும் ‘உலகை அளந்த’ என்பது உலகம் முழுதும் வியாபித்த, பரந்த என்ற சிந்தனைப் போக்கைக் காட்டுகிறது. , விருத்திரன் என்ற மேகக் கூட்டத்தை இந்திரன் வென்று, நீர் என்னும் மழையை பூமிக்கு விடுவித்த செய்தி 4 வேதங்களிலும் உளது. இந்திரன் என்ற சொல்லுக்கு நிறைய பொருள் உண்டு. இன்றும் கூட வானவில்லை ‘இந்திர தனுஷ்’ என்போம். ஆக ஒரு இயற்கைச் சக்தி என்பதே இந்திரன் (விருத்ராசுரன் கதையை பொரு த்தமட்டில்)

XXXXXX

மந்திரம் 11

கிர்யஸ்தே  பர்வதா ஹிமவந்தோ அரண் யம் தே ப்ருதிவீ  ஸ்யோநமஸ்து

பப்பரும் க்ருஷ்ணாம் ரோஹிணீம்  விஸ்வரூபாம் த்ருவாம் பூமிம் ப்ருதிவீமிந்த்ரகுப்தாம்

அஜீதோ அஹதோ அக்ஷதோ அத்யஷ்டாம் ப்ருதிவீமஹம் —   11

பூமா தேவியே ! உன்னுடைய பனி படர்ந்த மலைகளும் , குன்றுகளும், காடுகளும் சுகம் தருவதாகுக ; இந்திரனால் பாதுகாக்கப்பட்ட இந்த பழுப்பு, கருப்பு, சிவப்பு முதலிய பல வண்ணக் கலவை மிக்க பூமியில் நான் சுகமாக இருக்கிறேன்; காயங்கள் இல்லை; தோல்வி இல்லை; துன்பமில்லை – 11

VANDEMATARAM BY BANKIM CHANDRA CHATTERJI

அருமையான வரிகள். இதையே பங்கிம் சந்திர சட்டர்ஜி (சட்டோபாத்யாய) எழுதிய வந்தே மாதர கீதத்தில் காண்கிறோம். அதை பாரதியாரும் இரு முறை மொழி பெயர்த்துள்ளார். அவ்விரு கவிஞரையும் ஊக்குவித்தது பூமி சூக்தம் என்பதில் ஐயமில்லை.

வந்தே மாதரம் நமது நாட்டின் இரண்டாவது தேசீய கீதம் என்பது பலருக்கும் தெரியாது . நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இதை தேசீய கீதமாகப் பயன்படுத்தியதும் பலருக்கும் தெரியாது.

BHARATI’S TRANSLATION

18. ஜாதீய கீதம்

(பங்கிம் சந்திர சட்டோ பாத்தியாயர் எழுதிய
வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம்பல நல்குவை!

முப்பதுகோடி வாய் (நின்னிசை) முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
திறனிலாள் என்றுனை யாவனே செப்புவன்?
அருந்திற லுடையாய்! அருளினைப் போற்றி!
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை!
(வந்தே)

நீயே வித்தை நீயே தருமம்!
நீயே இதயம் நீயே மருமம்!
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே)

தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
சித்தம் நீங்காதுறு பக்தியும் நீயே!
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவியிங் குனதே! (வந்தே)

ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலைநீ!
வித்தை நன் கருளும் வெண்மலர்த் தேவிநீ! (வந்தே)

போற்றி வான்செல்வி! புரையிலை நிகரிலை!
இனிய நீர்ப்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை
சாமள நிறத்தினை சரளமாந் தகையினை!
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே போற்றி! (வந்தே)

—–

19. ஜாதீய கீதம்
(புதிய மொழிபெயர்ப்பு)

நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)

தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)

கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் னிற்கவும்,
கூடு திண்மை குறைந்தனைஎ என்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை, அரும்பதங் கூட்டுவை,
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை. (வந்தே)

அறிவும் நீ தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை
மருமம் நீ உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ
தோளிடை வன்புநீ, நெஞ்சகத்து அன்புநீ.
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம், தேவி, இங்குனதே. (வந்தே)

பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னைநீ! (வந்தே)

திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
      தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை
மருவு செய்களின் நற்பயன் மல்குவை
      வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
      பெற்றொ ளிர்ந்தனை பல்பணி பூண்fடணை.
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
      எங்கள் தாய்நின் பாதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)

(Thanks to Project Madurai website)

வந்தே மாதரம்!.. வந்தே மாதரம்!..
ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ சீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்
வந்தே மாதரம்!..

ஸுப்ரஜ் யோத்ஸனா புலகிதயாமினிம்
புல்லகுஸுமித த்ருமதல ஸோபினிம்
ஸூஹாஸினீம் ஸூமதுர பாஷினிம்
சுகதாம் வரதாம் மாதரம்
வந்தே மாதரம்!..

கோடிகோடி கண்ட கலகல நி னாத கராலே
கோடிகோடி புஜைத்ருத கரகரவாலே 
அபலாகேனோ மா யேதோ பலே
பஹூபல தாரிணீம் நமாமி தாரீணீம் 
ரிபுதல வாரிணீம் மாதரம்!.. வந்தே மாதரம்!.. 

துமி வித்யா துமி தர்மா
துமி ஹ்ருதி துமி மர்மா த்வம்ஹி ப்ராணா: சரீரே 
பாஹூதே துமி மா சக்தி 
ஹ்ருதயே துமி மா பக்தி 
தோமராயி ப்ரதிமாகடி மந்திரே மந்திரே!.. வந்தே மாதரம்!..

த்வம் ஹி துர்கா தசப்ரஹரண தாரீணீம் 
கமலாம் கமல தள விஹாரிணீம் 
வாணீ வித்யா தாயினீம் 
நமாமி த்வாம் நமாமி கமலாம் அமலாம் அதுலாம் 
சுஜலாம் சுபலாம் மாதரம்!.. வந்தே மாதரம்!.. 

ஸ்யாமளாம் ஸரளாம் 
ஸூஸ்மிதாம் பூஷிதாம் 
தரணீம் பரணீம் மாதரம்!.. 
வந்தே மாதரம்!.. வந்தே மாதரம்!..

By Bankim Chandra Chatterji

அதர்வண வேதத்தில் ஒரு அற்புதப் பாடல்! – Tamil and …

https://tamilandvedas.com › அதர்…

21 Sept 2013 — “இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை” என்றும் பின்னர் “நளிர்மணி நீரும் …

GEOGRAPHICAL KNOWLEDGE

11 ஆவது மந்திரம் மிகவும் முக்கியமானது. இமய மலை பற்றிய குறிப்பும் காடுகள்/ ஆரண்யம் பற்றிய குறிப்பும் வருகிறது. ஹிமய பர்வதம் என்றால் = பனி மலை. 19,000 அடிக்கு மேல் உள்ள எல்லா மலைகளிலும் ஐஸ் கட்டி இருக்கும். ஆனால் இந்தியர்களுக்கு அவர்களின் பூகோள எல்லையாக அமைந்த இமய மலைதான் பனி மலை  ஆகும்.. அது பற்றிய குறிப்பு பூமி ஸூக்தத்தில் வருவது குறிப்பிடத்தக்கது ; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த புறநானூற்றுப் புலவனும் இமயத்தையும் பொதியத்தையும் குறிப்பிடுகிறான். ரிக் வேதத்தில் மட்டுமே 100க்கும் ,மேலான  கடல் பற்றிய குறிப்புகள் உள்ளன . ஆகவே பாரத பூமி பற்றிய தெளிவான இயற்கை அமைப்பு அவர்களுக்கு இருந்தது. ஒருவித தகவல் தொடர்பு, போக்குவரத்து இல்லாத காலத்தில் பர்மா எல்லை முதல் ஈரான் எல்லைவரை வேதகாலத்தில் அறிவு இருந்தது உலக அதிசயம்தான். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் அலெக்சாண்டர் படை எடுக்கும் வரை வேற்று நாட்டு மக்களுக்கு இந்தியா பற்றி சரியான சித்திரம் கிடையாது; பராபரியாகக் காதில் கேட்ட விஷயங்களை ஹெரெடோட்டஸ் HERODOTUS   போன்றோர் எழுதிவைத்தனர்

BREST FEEDING

தாய்ப் பாலின் மஹத்துவதை வலியுறுத்தி மேலை நாட்டு சுகாதாரத் துறைகள் இன்றும் பிரசுரங்களை வெளியிட்டு, கர்ப்பிணிப் பெண்க ளுக்கு வகுப்புகள் நடத்துகின்றனர். ஆனால் வேதம் முழுதும் தாய்ப்பால் (MOTHER’S MILK- BREAST FEEDING )உவமை உளது!

பதினோராவது மந்திரத்தில் பூமியின் வர்ணங்கள் வருகின்றன; அவர்களுக்கு தாதுவளம் நிறைந்த, ரத்தினைக் கற்கள் நிறைந்த இடங்கள் (MINERAL SOURCES AND GEM STONES ) தெரிந்து இருந்தன. ஆகையால்தான் இந்த வண்ண வருணனை வருகிறது

XXXXX

மந்திரம் 12

யத்தே மத்யம்  ப்ருதிவி யச்ச நப்யம் யாஸ்த உர்ஜஸ்தன்வஹ ஸம்பபூவுஹு

தாஸு நோ கே ஹ்யபி நஹ பவஸ்வ மாதா  பூமிம்  புத்ரோஹம் ப்ருதிவ்யாஹா

பர்ஜன்யஹ பிதா ஸ உ நஹ பிபர்து —- 12

பூமியே நீ என் தாய் ; நான் உன் புதல்வன் ; பர்ஜன்யன்/ மழை எங்கள் தந்தை ;அவன் எங்களைக் காப்பான் ஆகுக ; எங்களை எல்லாப் பகுதிகளில் இருந்தும் சுத்தப் படுத்து; தூய்மை ஆக்கு. உன்னுடைய உடலின் நடுவிலுள்ள நாபியிலிருந்து என்னை நிறுத்தி , உன் உடலில் இருந்து புறப்படும் சக்தியில் நிலை நாட்டுவாயாக — 12

இந்த மந்திரத்தில் உலகப் புகழ் பெற்ற சொற்றொடர்  வருகிறது- பூமாதேவி தாய், நாம் அதன் புதல்வர்கள்  ; இன்று உலகமே அதை ஏற்று மதர்லாண்ட் MOTHERLAND என்ற சொல்லை உருவாக்கி இருக்கிறது. உலகில் இதை முதல் முதலில் உருவாக்கிய பெருமை இந்துக்களையே சாரும். அது எங்களைத் தூய்மையாக்கட்டும்; தந்தை போன்ற மழை பொழியட்டும். பூமியின் மத்தியில் நிறுத்தி முழு சக்தியையும் பெரும் வழியைச் செய்யட்டும் என்பதெல்லாம் உயர்ந்த மற்றும் பாசிட்டிவ் எண்ணங்களைக் POSITIVE THOUGHTS  காட்டுகின்றன. பூமி சூக்தம் முழுதும் பாசிட்டிவ்- ஆக்கபூர்வ சித்திரத்தையே காண்கிறோம் .

இதிலுள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்களை  அப்படியே தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இன்றும் பயன்படுத்துவதால் ஸம்ஸ்க்ருதத்தை என்றும் நாம் பேசிக்கொண்டே இருப்பதையும் உணர்கிறோம்

நாபி – நேவல் NAVEL  – தொப்புள்

மத்ய – மிடில் – MIDDLE மத்தியத்தில்

மாதா – மதர் – MOTHER மாது , மாதர்

புத்ர – புதல்வன் PUTRA= PUTHALVA IN PURANANURU  (புறநானூறு காண்க)

TO BE CONTINUED………….

tags- பூமி சூக்த கட்டுரை 5, பூமா தேவியே, நீ என் தாய், நான் உன் புதல்வன்,

ராதையும் கோதையும் (Post No.10,501)

WRITTEN BY Dr A Narayanan

Post No. 10,501

Date uploaded in London – –   29 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கண்ணனைக் கடத்திய கன்னியர்

(Uploaded on 2nd January 2022)

தேடியவள் வந்தாளோ

தேடுபவனைக் கண்டாளோ

ஒடியதவ ளுடெம்பெலாம்

ஊதுகுழல் கான ஒலி

உளத்தி லுஞ்சலா டியவன்

உதட்டிலே உறவாடி

தேனுரும் பார்வையிலே

தேரோட்டம் கண்ட சாரதி

ரதியோ இந்த ராதை என்

கதியோ முக மதியோ வென

குழல் தழுவிய கை வார்

குழலி இடை தழுவியது

வண்ண மலர் தேன் உரும்

வண்டினம் போல் வந்தகோபியர்கள்

முகுந்தன் மூச்சுக் காற்றில்

மூர்ச்சித்த ராதையைக் கண்டு

கடத்தினரோ கோவலனை யாதவனோ

மாதவனோ யாவரமிவனோடு

உறவாடபிறவிப் பெரும் பேறாக

பெருந்தன ஆய்ச்சியரை

பிடித்த பேயோ அவ்வஞ்சியர்

கண்ட இடமெலாம் ஒன்றில்

பலவாக நின்றோன் பண்டொரு

நாள் பேய்முலை நஞ்சுண்டனே

நாராயணன்

xxxxxxxxxxxxxxx

POEMS BY DR A NARAYANAN, LONDON

ராதையும் கோதையும்

அந்திமந்தாரைப் பூத்த சந்திவேளையில்

முந்தானையில் முகுந்தனை முடியத் தேடி

வந்த வனிதை ராதையைக் கண்டோடி

ஏங்கிய அவள் மார்பகத்து விமலன் விட்ட

மூச்சுக்காற்று சிந்திய முத்தமோ வெனப்

பேச்சிலா நிலைலயிலவள் கண்கள் சொருக

மேனிப் பெருகிய நீரைப் பருகியதவள் 

மேலாடை யாயினும் பால் மணமே

ஆய்ச்சியர் குலப் பெண் மனமேயாக 

அவளுடல் பெருகியது பாலோவென்ற

தவள் வெண்ணிறமான மேலாடை

மேவிய நூலிடையை இடைச்சி மகன்

மேகலையாய்த் தழுவ எம்மாதருமவன்

மேய்த்திடும் கறவையாய் சுரந்த பாலில்

திரண்ட அன்பாயமுதாயயராப்பற்றாய்

ஆயன் திருடியுண்ட வெண்ணெயாக

வெண்ணெய் களவாடிய கண்ணன்

பெண்ணுள்ளம் பத்திச்சிறைப் பட்ட

மறையோனென விண்ணோரன்றி

மண்ணோரறியா மாயன் லீலையே 

வட மதுரை ராதையின் மேகலையில்

தென் மதுரைக் கோதையின் பாமாலை

தென்றல் சுமந்தத் தேனிசையாயொலிக்க

கன்றொன்று அலருகிறதென்றதனைக்

காக்கச்செல்ல வேண்டுமென்று சாக்கு

சொல்லித் தப்பி வந்த தாமோதரனை

விட்டு விடுவாளோ வில்லிபுத்தூராழ்வான்

விட்டுசித்தன் மகள்!  தேடி வந்த வேணு

விலோலனுக்குச் சூடிக்கோடுத்தப் பூ

மாலையில் பாசுரங்களின் மணம் கமழ

மாதவியின்  மஞ்சள் முகத்தில் தஞ்ச

மடைந்த மாதவனே கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலன் 

நப்பின்னையின் மாலை ஏற்று அவள்

கைப்பற்றித் தீவலம் வந்துத் தாள்பற்றி

மெட்டியிட்டுத் தாரமாக்கிய தரணீதரனே

பண்டொரு நாள் ஆமையாய் அமுதம் 

கடைந்த மந்தரகிரியை மத்தாகத் தாங்க

இன்றோ மங்கையர் மனமெனும் தாழியில்

மத்தாகி பத்தியெனுமமுதம் கடைகிறான் 

உலகத்தோர் உடலுறவாடல் போகம்

உள்ளத்தினுள்ளனோடுறவாடல் யோகம்

BY DR A. NARAYANAN, LONDON

Xxxxxxxxx

சபரிகிரி சாமியே அருள் தாராய்

சபரி கிரி வாழ் சாமி நமோ நம

சர்வ மங்கள ரூபா நமோ நம

சரணம்  ஐயப்பா நமோ நம

அருள் தாராய்

மகர ஜோதியான மணிகண்டனே  நமோ நம

மாலையணிந்துன் மலை ஏறுவோம் நமோ நம

மண்டியிட்டு வருவோரை மறவாத மலையோனே

அருள் தாராய்

ஹரி ஹர சுதனாய் அவதரித்தாய் நமோ நம

ஆதியந்த மில்லா ஈசா நமோ நம

நாதி இலலாதர் நாடிடும் தேவா நமோ நம

அருள் தாராய்

இருமுடி கட்டி உன் திருவடி சேவைக்கு

கல்லும் முள்ளுமுள்ள பாதையானாலும்

கால் வருந்தா வந்தோரைக் கைவிடா

கனக  கிரி ராஜா  நமோ நம

அருள் தாராய்

திரியும் நெய்யும் இட்ட தீபத்தில்

எரியுமோ எங்கள் மேல் சாபமெல்லாம்

ஏற்ற நிலையில் போற்றும் தெய்வமாய்

தேற்றி எம்மைக் காப்பாய் நமோ நம

அருள் தாராய்

ஓதிய வேதமே சரணமயப்பாவென

சாதி சமயம் பாராத தேவனே

தேதியும் கிழமையும் பாராது

தேவை ஒன்றுன் சரணமே ஐயனே

அருள் தராய்

மகர ஜோதியான மணிகண்டனே நமோ நம

மாலையணிந்துன் மலை ஏறுவோம் நமோ நம

மண்டியிட்டு வருவோரை மறவாதமலையோனே

அருள் தாராய்

நாராயணன்

—- subham —–

Tags- ராதையும் கோதையும், சபரிகிரி சாமியே ,அருள் தாராய்

தாயுமானவர்! – 2 (Post No.10,500)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,500
Date uploaded in London – – 29 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தாயுமானவர்! – 2
ச.நாகராஜன்


ஒரு நாள் திருச்சிக்கு சுவாமி தரிசனம் செய்ய திருமூலர் மரபிலே தோன்றி, மெய்கண்ட தேவ நாயனாரது வழி வந்த குரவரிடத்தில் ஞானோபதேசம் பெற்ற மௌனகுருசாமிகள் என்பார் வந்தார்.

அவரைக் கண்டவுடன் உளம் மிக மகிழ்ந்தார் தாயுமானவர். அவர் கையில் வைத்திருந்த புத்தகம் யாதோ என்று அவருக்கு ஆர்வம் மேலிட்டது. கேட்டார். ஆனால் சுவாமிகளோ பதில் சொல்லாமல் எல்லா இடங்களுக்கும் சென்று ஊர் அடங்கிய பின் தாயுமானவர் சந்நிதிக்குச் சென்று பத்மாசனத்தில் அமர்ந்தார். தொடர்ந்து அந்தப் புத்தகம் யாது யாது என்று தாயுமானவர் கேட்ட கேள்விக்கு இப்போது பதில் வந்தது.
சிவஞான சித்தி என்றார் ஸ்வாமிகள். பின்னர் தாயுமானவரின் கேள்விகளுக்கெல்லாம் அவர் தக்க விடையிறுத்தார். பதியிலக்கணம், பசுவிலக்கணம், பாசவிலக்கணம், ஞானாஞ் ஞான இலக்கணம், அத்துவித இலக்கணம் உள்ளிட்ட அனைத்தையும் மௌன குரு ஸ்வாமிகள் விவரிக்க அவரைத் தன் குருவாக ஏற்றார் தாயுமானவர்.
“இன்னும் சிறிது காலம் இல்லறம் நடத்தி, புத்திரனைப் பெறுக; பின்னர் யாம் வந்து நிஷ்டை கூடும் உபாயத்தை உமக்கு அளிப்போம்” என்று கூறி விட்டுச் சென்றார் மௌனகுரு ஸ்வாமிகள்.


தாயுமானவருக்குத் திருமணமும் நடைபெற்றது. மட்டுவார் குழலம்மை என்ற மாட்சி வாய்ந்த நங்கையை மணந்தார். ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கனக சபாபதி என்ற பெயர் இடப்பட்டது. காலம் சென்றது. மட்டுவார்குழலியார் சிவபதம் அடைந்தார்.
இல்வாழ்க்கையில் ஈடுபாடில்லாத தாயுமானவர் தலம் தலமாகச் சென்றார். ஒரு முறை சேது தரிசனம் செய்த பின்னர் குமரிக் கடலில் நீராடி அங்கிருந்து பொதிய மலை சென்றார். அங்கே அகத்திய மஹரிஷியின் தரிசனம் பெற்று பெரும் ஞான நிலையை அடைந்தார்.


அவரது அருள் சக்தியைக் கண்டு வியந்த அரசன ஒரு நாள் அவரை அழைத்து, “இனீ நீர் எனக்குச் சேவை செய்ய வேண்டாம். நான் தான் உமக்குச் சேவை செய்ய வேண்டும்” என்று கூறி அவரை அரசுப் பணியிலிருந்து விடுவித்தான்.
அவருக்கு ஏவல் செய்ய ஆரம்பித்து, “எனது அரசு மற்றும் உடைமைகளை ஏற்று அருள்க” என்று அவரிடம் வேண்டினான். தாயுமானவரோ அவருக்கு அரிய உபதேசங்களை அருளித் தன் குருநாதரை அடைந்தார். அவரிடம் ஞானாவுத்திரி என்னும் தீட்சை செய்யப்பெற்று துறவறம் பூண்டார்.


அன்று முதல் ஆடைகளைத் துறந்து கௌபீனதாரியாகத் திகழலானார். ஜோதிடர்கள் கூற்று மெய்யாகும்படி அரசர்களிலிருந்து சாமானியர் வரை அவரை நாடி அவர் அடி பணிந்தனர். ஒரு பெரிய அரசனுக்குரிய, ஒரு பெரியவருக்கான, தச அங்கங்களான நாமம், நாடு, நகர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி ஆகிய பத்தும் அவருக்கு இயல்பாகவே அமைந்தன.

அவர் மெய்யரசராக விளங்கியமையால் அவாவின்மை, மெய்யுணர்வு துறவு ஆகியவை குணம் என்னும் மலையாக அமைந்தன.


நித்தியானந்தம் நதியாக ஆனது. வேதம் முதலிய கலைகளாலும் அறிய முடியாத சிற்சத்தித் தானம் நாடாக ஆனது..அநுபூதி அவருக்கு ஊராகவும் அருள் அவருக்கு மாலையாகவும் வியாபகத்வம் என்பது குதிரையாகவும் சிவஞானம் யானையாகவும் அமைந்தன. வைதிக சைவ சித்தாந்தம் அவரது வெற்றிக் கொடியாக ஆனது. நாதம் என்னும் முரசும், அறிவித்தல் என்னும் ஆணையும் கூடிய தசாங்கங்கள் அவருக்குக் கிட்டின. பேரறிவு பெருஞ்சுடர் முடியாக ஆனது. அந்தண்மை வெண்கொற்றக் குடையாக ஆக, சமாதி சிம்மாசனம் ஆனது. மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆகிய நான்கும் அவருக்கு நால்வகைச் சேனைகளாக ஆயின. நிஜமாகவே தவ அரசராக அவர் ஆனார்.
அவர் வாயிலிலிருந்து அருட் பாடல்கள் மழையெனப் பொழிய ஆரம்பித்தன. அருகே இருந்த அவர் மாணாக்கர்கள் உடனுக்குடன் பாடலைப் படி எடுத்தனர்.
நீண்ட நாள் வாழ்ந்த அவர் இராமநாதபுரம் சென்று சிவத்தோடு கலக்க எண்ணினார். அவர் ஒரு தைமாதம் விசாக நட்சத்திர நாள் அன்று சமாதி எய்தினார். அவரது சமாதி இராமநாதபுரத்தில் லக்ஷ்மிபுரம் வெளிப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ளது. தவறாமல் குருபூஜை வருடந்தோறும் அங்கு நடைபெறுகிறது.


ஸ்வாமி சித்பவானந்தர் அண்மைக் காலத்தில் அந்தர்யோகங்களை ஆங்காங்கே நடத்தி தாயுமானவர் பாடல்களுக்கான விரிவுரை தந்து வந்தார்; பல நூல்களையும் அவர் படைத்துள்ளார். அவரது திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனமே தாயுமானவரின் சமாதியை பரிபாலித்து நிர்வகித்து வருகிறது.


தாயுமானவரின் காலம் 1705ஆம் ஆண்டு முதல் 1742 முடிய என்று வரலாறு கூறுகிறது.
இதுவே தாயுமானவரின் திவ்ய சரித்திரமாகும்.
தாயுமானவர் பாடல்களில் நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1452 பாடல்கள் ஆகும். இவை 56 தலைப்புகளில் உள்ளன.


திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் என்ற தலைப்பில் உள்ள மூன்று பாக்களின் விளக்கவுரையே பல அறிஞர்களால் மிகப் பரந்து விரித்துரைக்கப்பட்டிருக்கிறது.


அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமா
யானந்த பூர்த்தியாகி
யருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
யகிலாண்ட கோடி யெல்லாந்
தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினிற்
றட்டாம னின்றதெது சமய கோடிகளெலாந்
தந்தெய்வ மெந்தெய்வ மென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா
யென்றைக்கு முள்ள தெது மேற்
கங்குல் பகலற நின்ற வெல்லை யுள தெதுவது
கருத்திற்கிசைந்த ததுவே
கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்
கருதி அஞ்சலி செய்குவாம்
இந்தப் பாடல் எல்லாம் வல்ல மன வாக்கிற்கு எட்டாத பெரும் சக்தியைப் பற்றிச் சொல்லி வியக்கிறது.

“எண்ணரிய பிறவி தனில் மானுடப் பிறவிதானியாதினும் அரிது காண். இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன்” என்று மானுடப் பிறவியின் சிறப்பைக் கூறி அதில் மெய்யுணர்வு நாட்டம் இருக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்துகிறார்.


**

தொடரும்

tags- தாயுமானவர் 2

BIOLOGY AND EXTRA TERRESTRIALS IN VEDIC HYMN TO EARTH (Post No.10,499)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,499

Date uploaded in London – –   28 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Let me continue with the ‘Hymn to Earth’ found in the 12th book of Atharva Veda (AV)

4 out of 63 (AV.12-1- 4)

The fourth stanza/mantra is almost a repetition of third stanza. Here the poet prays for more cattle and crops from earth. Vedic society was an agricultural society mainly based in villages; Rig Veda (RV), the oldest book in the world, shows us the oldest democracy in the world. We come across names of scores of kings in the RV in addition to Sabha (elected assembly) and Samiti. ‘Sabha’ is used throughout India and Samiti=Committee (correct pronunciation is Samittee and not Kamilttee) throughout the world. We also come across Gramani= Village chief. The word Grama=village is known to every Indian.

xxx

Mantra 5/63

Moving to fifth stanza /mantra, we hear the old stories ; Devas defeated the demons; this shows there has been an opposition party from the very beginning. Like we have positive and negative nodes in electricity, a society must always have an opposition party. Otherwise, the rulers will go berserk. This opposition party is supported in the Upanishadic story as well; Kanchi Shankaracharya (1894-1994) spread the story throughout the world through United Nations where his Sanskrit song was sung by most famous musician of India MS Subbulakshmi. There he incorporated the  ‘D D D’ story from the oldest Upanishad. Damyata, Dayatva and Datta

Damyata = CONTROL yourself; advice to Devas

Datta = don’t keep everything for you ; share it; GIVE; advise to greedy mankind.

Dayatva = be MERCIFUL; advise to Asuras/Demonic forces.

This story of 3 DDD sounds from the Thunder show that Hindus used Nature to Teach and to Learn.

This story shows Opposition Party/ Asura will always be there. But such demonic forces will be defeated says stanza five of AV 12-5

The same stanza prays for magnificence and lustre.

The words used are Bhagam and Varchas

Varchas is Spiritual quality.

Bhaga means six types of treasures/ virtues.

God is called Bhagavan in Sanskrit because He is the source of Six Bhagas. They are

1.Vairagya (no worldly desire or passion)

2.Aiswarya (prosperity)

3.Kirti (fame)

4.Gnana (wisdom, knowledge)

5. Bhala (Strength) and

6.Sree/Lakkshmi (Wealth)

So the Sanskrit words BHAGA and VARCAS in the fifth mantra are very important.

Xxx

GOLD BREASTED AND SWEET HEARTED EARTH

Mantra 6 out of 63

Here the poet describes Mother Earth as gold breasted and sweet hearted. Breast feeding is encouraged throughout the world. All credits go to Hindus for two reasons:-

1.Vedas encourage breast feeding. We have similes showing loving mothers feeding babies; here Mother earth’s breasts are praised as Golden

2.Hindus discovered cow’s milk is the closest alternate to mother’s milk. They  domesticated that animal and made it mother of human race and called it Go Matha (Cow Mother; both English words are actually Sanskrit words! Go=cow, Matha=mother)

So, earth’s breasts are praised gold breasted, treasure bearing, firm staying. Indra, who is like bull, is requested to shower wealth on us.

Xxx

Mantra 7/ 63

Here the earth is praised as sweet hearted. Sweet honey MADHU is referred here and HEART (hrudaya) is mentioned  in the 8th stanza.

Here we come across the word UNSLEEPING Devas. This is reference to Extra Terrestrials (ET). Throughout Hindu spics and Puranas/mythologies, we have following qualities attributed to ETs.

1.They are in the form of Light; Devas meaning Light Emitting.

2.They don’t wink their eyes; like fish they don’t close their eyes. Even Tamil poet Tiru Valluvar compared Devas with Thieves ; he humorously refers to thieves as Devas because thieves also never sleep during night (Kural 1073) .This is my interpretation of Kural. Other old interpreters said both are same because they can do whatever they want to do; It doesn’t look right to me. Moreover, Valluvar used the Sanskrit word Devas instead of God (Iraivan).

3.They cant have sex in the heaven. (they come to earth for it)

4.They can travel to Earth with the speed of Mind (faster than Light; Einstein is only 50 % right)

5.Their feet don’t touch earth/ground (always flying)

6.Their garlands never wither away (because of metals like gold ?)

7.They are always happy

8.They enjoy Dance and Music of Gandharvas and Apsaras

9.Even the Indus/Harappan symbol of Fish is compared to Devas by some scholars because both ‘Shine’ and both ‘never close their eyes’.

The seventh mantra says Devas protect earth without erring. This mean aliens are always watching us. Intergalactic traveller NARADA visits earth now and then. Poet prays to earth to shower sweets on us. Madhu used here is Honey used in all poems on Asvins in the RV. Name of Narada appears fro the first time in AV.

Xxxx

Biology and Theory of Evolution in 8th Mantra (8/63)

Eighth stanza, mantra begins with the line ‘Earth, at first which was in the water of the ocean’  — all the biologists agree that the earth was full of water for some time and then slowly life evolved in water in the form of Phyto planktons. Its heart was eternal heaven, and it was wrapped in Truth. That is beautiful. Vedic poets always emphasises the earth is still there because of Truth and Rhythm.

Dasavataras is in line with Theory of Evolution.

Please see the attachments of English and Sanskrit verses: –

mantras 4 and 5 .

mantras 6,7,8 given below

mantras 6,7,8

–subham–

tags- extra terrestrials, biology, in Atharva veda,

விவேக சிந்தாமணி பொன்மொழிகள் (Post 10,498)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,498

Date uploaded in London – –   28 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 2022 நற்சிந்தனை காலண்டர்

31 விவேக சிந்தாமணி பொன்மொழிகள்

xxxx

பண்டிகை நாட்கள் – ஜனவரி 13 போகிப் பண்டிகை; 14- பொங்கல், மகர சங்கராந்தி; 15- மாட்டுப் பொங்கல்; 16- திருவள்ளுவர் தினம் ; 18 தைப்  பூசம், வடலூர் ஜோதி தரிசனம் ; 22- தியாகராஜ ஆராதனை ,23-சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி;26 குடியரசு தினம்; 31- தை  அமாவாசை.

அமாவாசை-ஜனவரி 2,31; பெளர்ணமி – 17, ஏகாதசி விரத நாட்கள் -13, 28;

சுபமுஹுர்த்த  நாட்கள் – ஜனவரி 20

XXXX

ஜனவரி 1 சனிக் கிழமை

நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென வழுத்த லாமே. (96)

xxx

ஜனவரி 2 ஞாயிற்றுக் கிழமை

கற்பூரப் பாத் திகட்டிக் கஸ்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர வுள்ளியினை விதைத்தாலு மதன்குணத்தைப் பொருந்தக் காட்டும்

Xxxx

ஜனவரி 3 திங்கட் கிழமை

நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய தாமளவும்
பேய்கொண்டா லுங்கொளலாங் பெண்கொள்ள லாகாதே. (85)

Xxxx

ஜனவரி 4 செவ்வாய்க் கிழமை

மெய்யதைச் சொல்வ ராகில் விளங்கிடு மேலும் நன்மை
வையக மதனைக் கொள்வார் மனிதரிற் றேவ ராவார்

Xxx

ஜனவரி 5 புதன் கிழமை

நன்மனை தோறும் பெண்களைப் படைத்து நமனையு மென்செயப் படைத்தனையோ! (82)

Xxxx

ஜனவரி 6 வியாழக் கிழமை

பொய்யதைச் சொல்வா ராகில் போசன மற்ப மாகும்
நொய்யரி சியர்க ளென்று நோக்கிடா ரறிவுள் ளாரே. (67)

xxxxx

ஜனவரி 7 வெள்ளிக் கிழமை

அந்தணர் கருமங் குன்றில் யாவரே வாழ்வர் மண்ணில் – 125

Xxx

ஜனவரி 8 சனிக் கிழமை

வெட்டையிலே மதிமயங்கும் சிறுவருக்கு மணம்பேசி விரும்பித் தாலி
கட்டையிலே தொடுத்து நடுக் கட்டையிலே கிடத்துமட்டுங் கவலை தானே

Xxxx

ஜனவரி 9 ஞாயிற்றுக் கிழமை

மறையோர் மன்னர் வணிகர்நல் லுழவோ ரென்னுங்
குலங்கெடும் வேசை மாதர் குணங்களை விரும்பு வோர்க்கே. (122)

Xxx

ஜனவரி 10 திங்கட் கிழமை

பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் நட்பால்
ஒருமையி னரக மெய்து மேதுவே யுயரு மன்னோ. (119)

Xxx

ஜனவரி 11 செவ்வாய்க் கிழமை

மங்கை கைகேசி சொற்கேட்டு மன்னர்புகழ் தசரதனும் மரண மானான்
செங்கமலச் சீதைசொல் ஸ்ரீராமன் கேட்டவுடன் சென்றான் மான்பின்

xxxxx

ஜனவரி 12 புதன் கிழமை

நிலமதிற் குணவான் தோன்றி னீள்குடித் தனரும் வாழ்வார்
தலமெலாம் வாசந் தோன்றும் சந்தன மரத்திற் கொப்பாம்

xxx

ஜனவரி 13 வியாழக் கிழமை

தங்கையவள் சொற்கேட்ட ராவணனும் கிளையோடு தானு மாண்டான்
நங்கையர்சொற் கேட்பதெல்லாங் கேடுவரும் பேருலகோர் நகைப்பர் தாமே. (117)

xxxxx

ஜனவரி 14 வெள்ளிக் கிழமை

புலவர்கள் சபையில்கூடிப் புன்கவி யாளர் சார்ந்தால்
நலமென்றே கொள்வதல்லால் நவில்வரோ பெரியோர் குற்றம். (102)

Xxx

ஜனவரி 15 சனிக் கிழமை

நலமிலாக் கயவன் றோன்றின் குடித்தனம் தேசம் பாழாம்
குலமெலாம் பழுது செய்யுங் கோடரிக் காம்பு நேராம். (112)

xxxx

ஜனவரி 16 ஞாயிற்றுக் கிழமை

மின்னலைப்போல் மனையாளை வீட்டில்வைத்து வேசைசுகம் விரும்புவோரும்
அன்னைபிதா பாவலரைப் பகைப்போரு மறிவிலாக் கசடராமே. (97)

Xxx

ஜனவரி 17 திங்கட் கிழமை

நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென வழுத்த லாமே. (96)

Xxxx

ஜனவரி 18 செவ்வாய்க் கிழமை

அறிவுளோர் தமக்கு நாளு மரசருந் தொழுது வாழ்வார்
நிறையொடு புவியிலுள்ளோர் நேசமாய் வணக்கஞ் செய்வார்–64

Xxxx

ஜனவரி 19 புதன் கிழமை

கோளினர் தமக்கு நன்மை செய்வது குற்ற மாமே.–63

Xxx

ஜனவரி 20 வியாழக் கிழமை

முடவனை மூர்க்கன் கொன்றால் மூர்க்கனை முனிதான் கொல்லும்
மடவனை வலியான் கொன்றால் மறலிதா னவனைக் கொல்லும்-59

Xxx

ஜனவரி 21 வெள்ளிக் கிழமை

வேம்புக்குத் தேன்வார்த் தாலும் வேப்பிலை கசப்பு மாரா
தாம்பல நூல்கற் றாலுந் துர்ச்சனர் தக்கோ ராகார். (61)

Xxx

ஜனவரி 22 சனிக் கிழமை

பொல்லார்க்குக் கல்விவரில் கெருவமுண்டா மதனோடு பொருளுஞ் சேர்ந்தால்
சொல்லாதுஞ் சொல்லவைக்குஞ் சொற்சென்றால் குடிகெடுக்கத் துணிவர் கண்டாய்- 99

Xxxx

ஜனவரி 23 ஞாயிற்றுக் கிழமை

சந்திர னில்லா வானந் தாமரை யில்லாப் பொய்கை
மந்திரி யில்லா வேந்தன் மதகரி யில்லாச் சேனை

Xxx

ஜனவரி 24 திங்கட் கிழமை

சுந்தரபு புலவ ரில்லாத் தொல்சபை சுதரில் லாவாழ்வு
தந்திக ளில்லா வீணை ஸ்தனமிலா மங்கை போலாம். (57)

Xxxx

ஜனவரி 25 செவ்வாய்க் கிழமை

ஆசாரஞ் செய்வா ராகி லறிவொடு புகழு முண்டாம்
ஆசாரம் நன்மை யானா லவனியிற் றேவ ராவார்

xxxx

ஜனவரி 26 புதன் கிழமை

ஆசாரஞ் செய்யா ராகி லறிவொடு புகழு மற்றுப்
பேசார்போற் பேச்சு மாகிப் பிணியொடு நரகில் வீழ்வார். (50)

xxxxx

ஜனவரி 27 வியாழக் கிழமை

புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால்
எத்தனை விதத்தினாலு மிடரது வந்தே தீரும்– 47

xxxx

ஜனவரி 28 வெள்ளிக் கிழமை

பொருளிலார்க் கின்ப மில்லை புண்ணிய மில்லை யென்று
மருவிய கீர்த்தி யில்லை மைந்தரிற் பெருமை யில்லை– 60

Xxx

ஜனவரி 29 சனிக் கிழமை

ஊழ்வினை வந்த தானால் ஒருவரால் விலக்கப் போமோ
ஏழையா யிருந்தோர் பல்லக் கேறுதல் கண்டி லீரோ. (41)

Xxxx

ஜனவரி 30 ஞாயிற்றுக் கிழமை

அத்தன்மால் பிர்ம தேவனா லளவிடப்பட் டாலுஞ்
சித்திர விழியார் நெஞ்சந் தெரிந்தவ ரில்லை கண்டீர்-44

Xxxxx

ஜனவரி 31 திங்கட் கிழமை

மதன லீலையில் மங்கையர் வையினும்
இதமுறச் செவிக் கின்பம் விளையுமே. (46)

xxxx

Bonus quote

அற்பர்தம் பொருள்க டாமு மவரம ரிறந்த பின்னே
பற்பலர் கொள்வா ரிந்தப் பாரினி லுண்மை தானே—32

–SUBHAM—

TAGS –விவேக சிந்தாமணி, பொன்மொழிகள் , ஜனவரி 2022, நற்சிந்தனை ,காலண்டர்

பகவத்கீதை சொற்கள் INDEX-32 கீதை மூலம் சம்ஸ்க்ருதம் -32 (Post.10,497)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,497

Date uploaded in London – –   28 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத் கீதை சொற்கள் தமிழ் இன்டெக்ஸ் 32

சாந்த்ர மஸம்  8-25  சந்திர மண்டலம்

சாபம் 1-47  வில்

சிகீர்ஷு 3-25 செய்ய விரும்பி

சித்தம்- 6-18  சித்தம் (மனம்)

சித்ரரதஹ 10-26 —— சித்ரரதன்  …5 WORDS

சிந்தயன்தஹ 9-22 சிந்திப்பவராய்

சிந்தயேத் 6-25  நினைத்தல்

சிந்தாம் 16-11  கவலையை

சிந்தயஹ 10-17  சிந்திப்பதற்குரியவன்

சிராத் 12-7  தாமதம் ………. 10 WORDS

சிரேன 5-6   தாமதம்

சூர்ணிதை ஹி 11-27 துண்டிக்கப்பட்ட , நசுக்கப்பட்ட

சேகிதானஹ  1-5   பாண்டவ வீரன் சேகிதானன்

சேத் 2-33  IF ஆவிட்டால் (செய்யா விட்டால் )

சேதனா 10-22  அறிவு ……….. 15 WORDS

சேதஸா 8-8 சித்தத்தால்

சேஷ்டதே 3-33  நடந்திடுவான்

சேஷ்டாஹா 18-14 செயல்களும்

சைலாஜின குசோத்தரம் 6-11 தர்ப்பையின் மீது (மான்  அல்லது புலித்) தோல், துணி விரிக்கப்பட்ட (ஆசனம்)

ச்யவந்தி  9-24 – நழுவுகின்றனர் …20 WORDS

சந்தஸாம் 10-35 சந்தங்களுள்

ச்சந்தாம்ஸி  15-1 வேதங்கள்

சந்தோபிஹி  13-4 வேதங்களால்

சலயதாம் 10-36  வஞ்சகர்களுள்

சித்வா 4-42  வெட்டி —– 25 WORDS

சிந்தந்தி 2-23 சிதைத்தல்

சின்ன த்வைதாஹா  5-25 சந்தேகங்கள் நீங்கினவோ

சின்ன சம்சயஹ  18-10 சந்தேகம் தெளிந்தவன்

சின்னாப்ரம்  6-38 சிதறுண்ட மேகம் (போல)

சேதா  6-39 சிதைப்பவர், நீக்குவோர்  ……………….30

சேதும் 6-39 அறுக்க, நீக்க

XXXX

ஜ – சொற்கள்

ஜகதஹ 7-6 உலகத்துடைய

ஜகத் 7-5 உலகம்

ஜகத் பதே 10-15 உலகை ஆள்வோனே

ஜகன்னிவாச  11-25  உலகத்திற்கு உறைவிடமானவனே ———- 35

ஜன்ய குண வ்ருத்தஸ்தாஹா 14-18 கீழான குணம் உடையோர்

ஜனகாதயஹ 3-20 ஜனகன் முதலானோர்

ஜனயேத்  3-26 உண்டாக்குதல்

ஜனஸம்சதி  13-10 ஜனக் கூட்டத்தில்

ஜனஹ  3-21 ஜனங்களும் ……………………….. 40

ஜனாதிபாஹா 2-12 அரசர்கள்

ஜனானாம்  7-28 ஆட்கள், மக்கள்

ஜனார்தன  1-36 கிருஷ்ணனின் பெயர்

ஜனாஹா  7-16 மக்கள், ஜனங்கள்

ஜந்தவஹ  5-15 பிராணிகள், ஜந்துக்கள்  45 WORDS

ஜன்ம  2-27  பிறப்பு

ஜன்ம கர்மபலப்ரதாம்  2-43 ஜன்மத்தையே தொழிலின் பயனாகக் கொண்டதும்

ஜன்மனாம் 7-19 பிறப்புகளில்

ஜன்மனி ஜன்மனி 16-20 பல பிறப்புகளில்

ஜன்ம பந்த விநிர்முக்தாஹா 2-51 …… பிறவித்  தளையினின்று விடுபட்டு ……………………………50

ஜன்ம ம்ருத்யு  ஜராத்துக்கைஹி – 14-20 பிறப்பு, இறப்பு, மூப்பு, துன்பம் இவற்றினின்று

ஜன்ம ம்ருத்யூ ஜரா வ்யாதி துக்க தோஷ அனுதர்சனம் 13-8 பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி, துன்பம்  — இவைகளில் உள்ள தீமைகளைச் சிந்தித்தல் …………….

 52 WORDS ARE ADDED FROM PART 31 OF GITA TAMIL WORD INDEX

TO BE CONTINUED……………………………..

TAGS- பகவத் கீதை, சொற்கள், தமிழ், இன்டெக்ஸ் 32

தாயுமானவர்! – 1 (Post No.10,496)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,496
Date uploaded in London – – 28 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 27-12-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.
எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். இந்த உரை மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.

தாயுமானவர்! – 1
ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

என்றுமுள செந்தமிழில் அழகிய வேதாந்தக் கருத்துக்களையும் இறைவனின் இயல்புகளையும் அனைவருக்கும் புரியும்படி எளிய இனிய சொற்களால் பாக்களைப் பாடியவர் தாயுமானவர். மாபெரும் வேதாந்தி அவர்.

சோழ நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள வேதாரண்யம் என்னும் திருமறைக்காடு தலத்திலே அவர், வேளாளர் குலத்திலே கேடிலியிப்ப பிள்ளை- கெஜவல்லி தம்பதியினருக்குப் பிறந்தார்.
கேடிலியப்ப பிள்ளை சிவத்தல விசாரணைக் கர்த்தராக இருந்தார். அச்சமயம் 1704ஆம் ஆண்டு முதல் 1731 முடிய திருச்சியை ஆண்ட முத்து விஜய ரகுநாத சொக்கலிங்க நாயகர் கேடிலியப்ப பிள்ளையின் அருமை பெருமைகளை அறிந்து அவரைத் தன்னிடம் பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார். அதை அவரும் ஏற்றார்.

அவருக்கு சிவ சிதம்பரம் என்ற அருமைக் குமரன் பிறந்தான். ஆனால் அந்தக் குமாரனை சந்ததியின்றி இருந்த தனது தமையனாருக்கு சுவீகாரமாகக் கொடுத்து விட்டார்.
தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என்று வருந்திய அவர் திருச்சி தாயுமானவரை வேண்ட அவர் அருளால் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

குழந்தையின் ஜாதகத்தைக் கணித்த ஜோதிடர்கள் வியந்தனர். ஐந்து கிரகங்கள் உச்சமாய் இருப்பதையும் அவை சுப ஹோரையில் இருப்பதையும் கண்ட அவர்கள் தேவாம்சமாகப் பிறந்த இந்தக் குழந்தை உலகை ஆளும் நரேந்திரனாக நிலவும் என்று கூறினர்.

திருச்சி தாயுமானேஸ்வரரின் அருளால் பிறந்த அந்தக் குழந்தைக்கு தாயுமானவர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
குழந்தை அறிவில் சிறந்து விளங்கியதோடு தமிழையும் வடமொழியையும் கற்றுத் தேர்ந்தது.

தாயுமானவருக்கு இலக்கிய இலக்கணம், இதிஹாஸ புராணம், சிவாகமம், உபநிடதம், பன்னிரு திருமுறை, மெய்கண்ட சாஸ்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ் உள்ளிட்ட சகலமும் அத்துபடியாயின.

அரசன், தந்தைக்கு வயதானதையொட்டி மகன் தாயுமானவரை அரசுக் கணக்கராகப் பணி புரிய அழைத்தான். பதினான்கு வயதே ஆன தாயுமானவர் அந்தப் பொறுப்பை ஏற்றார்.

அப்போது ஒரு நாள் அரசவையில் முக்கியமான ஆவணம் ஒன்றை அனைவருக்கும் முன்பாக, இறைவனுடன் இறை தியானத்தில் ஒன்றி இருந்த நிலையில், கசக்கித் தூக்கி எறிந்தார்.
இதைப் பார்த்துத் திடுக்கிட்ட அவையினர் இது அரசனை அவமதித்த செயலாகும் என்று கூறினர்.

ஆனால் அதே சமயத்தில் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோவிலில் அம்பாளின் ஆடையில் நெருப்புப் பிடிக்க, சிவாசாரியர்கள் அதைக் கவனிப்பதற்குள் தாயுமானவர் அங்கே நுழைந்து ஆடையைத் தன் கையால் கசக்கி நெருப்பை அணைத்தார். இதைக் கண்ணுற்ற அவர்கள் அதிசயித்து நடந்ததை மன்னரிடம் தெரிவிக்க அனைவரும் வியப்படைந்தனர். தாயுமானவரின் சக்தியையும் உணர்ந்தனர்.

ஒரு நாள் அவர் அரசனைக் காண்பதற்காக வந்தார். அப்போது அரண்மனையில் புதிய மணல் கொட்டப்பட்டிருந்தது. அதில் தாயுமானவரது காலடிச் சுவடுகள் பதிந்தன. அரசனும் இதர முக்கியஸ்தர்களும் அந்த வழியே வந்த போது அந்தக் காலடிச் சுவடுகளைக் கண்டனர். பத்ம ரேகை படிந்து காணப்பட்ட அந்தச் சுவடுகள் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின.
“யார் இவ்வழியில் வந்தது?” என்று அவர்கள் கேட்க, “தாயுமானவர்” என்று பதில் வந்தது.

உடனே அவரை அழைத்து அது உண்மை தானா என்பதை அவர் காலடிகளுடன் ஒப்பிட்டு அரசன் ஐயம் தீர்ந்தான்.
சங்கப்பாட்டியியலில் கூறப்பட்ட சாமுத்திரிகா லக்ஷணங்கள் இவை:

அகவடி யுகிர்விரல் புறவடி கரடே
கழலே கணைக்கான் முழந்தாள் குறங்கே
கடிதங் கொப்பூழ் வயிறதின் வரையே
யிடையே மயிரி னொழுக்கே முலையுகிர்
விரலே முன் கை யங்கை தோளிணை
கழுத்தே முக நகை செவ்வாய் மூக்குக்
கண்ணே காது புருவ நுதலெனு
மாறைந் துறுப்பு யனிரண்டும் பாதம்

ஆக இப்படி முப்பத்திரண்டு உறுப்புகளும் தெய்வத்தன்மை சிறந்து விளங்க அமைந்திருப்பதை அனைவரும் கண்டு வியந்தனர்.
இதனால் அரசனுக்கு அவர் மேல் பெரு மதிப்பும் மிகுந்த அன்பும் ஏற்பட்டது.

அரசனிடத்தில் கவிஞர், கவி ராயர், கவிச் சக்கரவர்த்தி, பண்டிதர், பாவலர், பாரதி, நாவலர், வித்துவான், மகா வித்துவான் , வித்வ சிரோமணி, புலவர் உள்ளிட்ட பல பட்டங்களைத் தரித்து வருவோரிடம் தாயுமானவர் யதார்த்தமாக வாதம் செய்து அவர்களைத் தோற்க அடிப்பார். பின்னர், “உண்மையைக் காண்பீர்களாக” என்று உரைத்து அவர்களை அனுப்புவார்.

TAMIL FILM ON THAAYUMAANAVAR


**

தொடரும்

TAGS- தாயுமானவர்