TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 7 (Post No.9049)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9049

Date uploaded in London – –18 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி 7

Panini  Sutras from his Ashtadhyayi continued……………………………..

உலகம் முழுதும் புழங்கும் எல்லா பழைய மொழிச் சொற்களும் சம்ஸ்க்ருதம், தமிழ் ஆகியவற்றிலிருந்தே சென்றன என்பதை நிரூபிப்பதே இந்தக் கட்டுரைத் தொடரின் முக்கிய நோக்கம் 

XXXX

SUTRA 2-1-39

SATA – 100- CENTUM BRANCH, HUNDRED BRANCH IN EUROPEN LANGUAGES,

SAHASRAM IN VARTIKAM – BECOMES AAYIRAM IN TAMIL.

SINCE TOLKAPPIAM BANS SA AS INITIAL WORD IN TAMIL, THOSE WORDS WILL USE A OR AA IN TAMIL.

SABHAA IN RIG VEDA BECOMES AVAI IN TAMIL; S=A, B=V

IN INDIAN, PERSIAN AND ROMANTIC LANGUAGES SANSKRIT ‘SATA’ IS RETAINED; IN KELTIC AND GERMANIC LANGUAGES AND GREEK,  SA BECOMES KA OR HA .

RIVER SINDHU IS CHANGED TO HINDUS BY THE PERSIANS AND GREEKS

RIVER SARASVATI IS CHANGED TO HYDRAYOTES

MEGASTHENES MENTIONED KAMBISTHOLOI (KAPISTHALA=KAITHAL TOWN IN MODERN HARYANA ) AS A PEOPLE IN THE PANJAB THROUGH WHOSE TERRITORY THE RIVER HYDRAYOTES FLOWED (page 324, India as known to Panini, by V S Agrawala, 1953)

Hydra in Greek means Water (Eg. Hydrogen); this came from Udhra (aquatic animal; Eg.Otter); Udhra is derived from Uthaka/water in Sanskrit (Eg.wet, water, Vodka, Volga river); S=H

SATA சதம் – 100- CENTUM சென்டம் கிளை மொழிகள்  BRANCH, HUNDRED BRANCH ஹண்ட்ரட் கிளை மொழிகள்  IN EUROPEN LANGUAGES,

SAHASRAM IN VARTIKAM – BECOMES AAYIRAM IN TAMIL. ஸஹஸ்ரம் = ஆயிரம்

SINCE TOLKAPPIAM BANS ‘SA’ AS INITIAL LETTER IN TAMIL, THOSE WORDS WILL USE ‘A’ OR ‘AA’ IN TAMIL..

SABHAA IN RIG VEDA BECOMES AVAI IN TAMIL; S=A, B=V ஸபா = அவை

IN INDIAN, PERSIAN AND ROMANTIC LANGUAGES SANSKRIT SATA IS RETAINED; IN KELTIC AND GERMANIC LANGUAGES AND GREEK  SA BECOMES KA OR HA .

RIVER SINDHU IS CHANGED TO HINDUS BY THE GREEKS சிந்து = ஹிந்து ; ஹைட்ரவதி – சரஸ்வதி

RIVER SARASVATI IS CHANGED TO HYDRAYOTES

MEGASTHENES MENTIONED KAMBISTHOLOI (KAPISTHALA=KAITHAL TOWN IN MODERN HARYANA ) AS A PEOPLE IN THE PANJAB THROUGH WHOSE TERRITORY THE RIVER HYDRAYOTES FLOWED (page 324, India as known to Panini, by V S Agrawala, 1953)

Hydra in Greek means Water (Eg. Hydrogen); this came from Udhra (aquatic animal; Eg.Otter); Udhra is derived from Uthaka/water in Sanskrit (Eg.wet, water, Vodka, Volga river); S=H ஹைட்ரஜன்

உதக/உத்ர = நீர், நீர் வாழ் மிருகங்கள் .

XXXX

2-1-37 panchami பஞ்சமி

பஞ்ச = அஞ்சு ; சம்பந்தர் தேவாரம் காண்க.

Pancha = Anchu in Tevaram/colloquial Tamil

Aindhu in written form;literal இலக்கியத்தில் ஐந்து

Xxx

2-1-39

Anthika – Anmai in Tamil அந்திக- அண்மை

Dhura – Tholaivu ; r=l தூர – தொலைவு ; ர=ல

K ruchra – katinam ; r = t; க்ருச்ர – கடினம்

In Magharashtra and Rajasthan the names of forts are pronounced with D or R at the end

E g. Simhagar – Simhagad; Dharwar- Dharvad

Xxxx

2-1-40 saptami – seven சப்தமி= ஏழாவது

September was seventh month in Calendar before the modern calendar came into use

ச – க அல்லது ஹ

சப்த – ஹப்த

சிந்து – ஹிந்து

Sapta becomes Hapta in Old Persian ; Sapta Sindhu region of India was called Hapta Hindu in Persian; S=H

ஹப்த ஹிந்து = சப்த சிந்து ; ச–ஹ

Xxxxx

பகலும் இரவும் தமிழ்ச் சொல் இல்லை

2-1-45 Ahoratri அஹோராத்ரி

Ahas – Pahal in T amil அஹ – பஹல்

Ratri -Iravu in Tamil ராத்ரி – இரவு

In Sanskrit we see Day and Night in 99% places in literature ;

In Tamil we see Night and Day in 99 % places in literature ;

I don’t know why they follow this reverse order.

இரவும் பகலும் என்பது தமிழ் இலக்கிய மரபு ; பகலும் இரவும் என்பது சம்ஸ்க்ருத மரபு

Xxx

2-1-48

Paatra /vessel = vat in English பாத்ர = வாட் = வட்டை

P =V ப=வ

Vessel /vat

Tamils also  use this Sanskrit word Paaththiram

எவர் சில்வர் பாத்திரம், வெள்ளிப் பாத்திரம்

Xxxxx

2-1-49

Puurva, purana – pre பூர்வ /புராண

Nava – new; Nova in Biblical flood story; meaning everything new

நவ , சம, ஜரா -மூப்பு

Samaa = same, saman in Tirukkural

Jarat – old; aged; Gerontology – study of old age; aging

Xxxx

2-1-50

Dik – Direction திக், திசை

In Tamil Dikku/ Tikku or Disai/ Tisai

Xxx

2-1-56

Vyaagra – Vengai in Tamil

வ்யாக்ர – வேங்கை

Vyaagra – Tiger in English

Xxx

To be continued…………………………..

 TAGS – TAMIL WORDS-7, SAPTA SINDHU, CENTUM, SATAM, HUNDRED

மனைவியிடமிருந்து தப்பிப்பது எப்படி ??? (Post No.9048)

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9048

Date uploaded in London – – 18 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மனைவியிடமிருந்து தப்பிப்பது எப்படி ???

Kattukutty

( கணவன்மார்களேவெட்கப்படாமல் உங்கள் மனைவி,மகள்

மற்றும் சகோதரிகளிடமும் காண்பியுங்கள்)

மனைவிடமிருந்து தப்பிப்பது எப்படி???

“இதைத் தான் ரொம்ப நாளா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் சார்” என்று நினைத்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு ஒரு வார்த்தை.

பாத்திரங்களை விட்டெறியும், அல்லது பயங்கரமான ஆயுதங்களான அதாவது விளக்குமாறு, முறம், தடி, காய் வெட்டும் கத்தி, கரண்டி போன்றவற்றை “பிரயோகிக்கும்போது” தப்பிப்பது எப்படி என்ற சொல்லப் போவதில்லை……….. நாம் வழக்கமாக வாரா வாரம் காய்கறி வாங்கி வந்த பின் “வாங்கிக்” கட்டிக் கொள்கிறோமே அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதைப் பற்றி மட்டுமே பற்றி சொல்லப் போகிறேன்.

மனைவி சொல்கிறாள் :-

“எப்படிய்யா ஒரே முத்தல் வெண்டைக்காயையும், முத்தின கத்திரிக்காயையும் வாங்கிட்டு வந்திருக்கீங்க …… அந்த காய்கறிக்காரி, முத்தலும், தொத்தலுமா இருக்கற காயை உங்க தலையில கட்டிருக்கிறாள்……..”

நாம் குற்ற உணர்வுடன் “இது அவள் கொடுக்கவில்லை, நானே

பொறுக்கி எடுத்தேன்”………” என்கிறோம்.

“உங்கம்மா! உங்கள எப்படித்தான் வளர்த்தாளோ உங்கம்மா…..”

எங்கம்மாவுக்கு ஒரு “அடி”

“ஆமா, உங்கப்பா கூட கடைக்கு போவேளே அவர் கூட சொல்லித் தரல்லயா????”

அப்பாவுக்கும் ஒரு “அடி”

“உங்காத்து பரம்பரையிலேயே யாருக்குமே காய்கறி வாங்கத் தெரியாதா???”

எங்க பரம்பரைக்கே ஒரு “ஆப்பு”…….

“கடவுளே, இவங்களையெல்லாம் எப்படித்தான் படைத்தாயோ???”

கடைசியில் வைத்தாள் ஒரு பெரிய ஆப்பு கடவுளுக்கே!!!

இதோ காய்கறிகள் வாங்குவது எப்படி என்ற ஆராய்ச்சியில்

ஈடுபட்டு “மாஸ்டர் டிகிரி”யே வாங்கிவிட்டேன், அதாவது என் மனைவியே பக்கத்து வீட்டு பெண்மணியிடம் “உங்காத்துக்கு

ஏதாவது காய்கறி வேணும்னா சொல்லுங்கோ,

எங்காத்துக்காரரை விட்டு வாங்கிண்டு வரச் சொல்றேன். ஒரு சொத்தை, ஒரு முத்தல் இருக்காது, சுத்தமா புதுசா வாங்கிண்டு வருவார்” என்று சொல்கிறாள் இப்போது!

வெண்டைக்காய் – நுனியை உடைத்தவுடன் படக்கென்று உடைய

வேண்டும் வளையக்கூடாது. அப்படியே உடைந்தாலும் பச்சையாகவும் தொடுவதற்கு மென்மையாகவும் இருக்க வேண்டும்.

பீன்ஸ் – வளைத்தவுடன் படக்கென்று உடையவேண்டும். எல்லா பீனஸையும் உடைக்க முடியாது. ஒருபக்கம் நுனியைக் கிள்ளினால் அதிக நார் இருக்கக்கூடாது, அப்படியே இருந்தாலும் எளிதில் உரிபடும்.(நீங்கள் மனகுவது தெரிகிறது …எப்படி அத்தனையும் உரிச்சு பார்ப்பது) நீங்கள் தொட்டவுடனேயே தெரியும் முத்தலா இல்லையா என்று.

அவரை – விதை புடைத்துக் கொண்டு இல்லாமல் வளைய வேண்டும்.

கொத்தவரங்காய் – பீன்ஸ் மாதிரி படக்கென்று உடைய வேண்டும

வாழைத்தண்டு – வெள்ளையாக இருப்பதுடன், நுனியை நகத்தினால் கிள்ளினால், நார் வரக்கூடாது.

முருங்கைக்காய் – விதைகள் புடைத்துக்கொண்டு இல்லாமல் ஒரே மாதிரி பிரம்பு மாதிரியாகவும் முறுக்கினால் நன்றாக வளைய வேண்டும்

வெங்காயம் – கரு நீலம் இல்லாமல் லைட் ரோஸ் கலரில் இருக்க வேண்டும்

சேனைக் கிழங்கு – வெண்மையாக இருக்க வேண்டும். சிவப்பாக

இருந்தால் அரிக்கும். வாங்கி 2 நாள் கழித்தே சமைக்க வேண்டும்.

சேனையை நறுக்கியவுடன் புளித் தண்ணீரில் போட்டால் அரிக்காது.

கருணைக்கிழங்கு – தோலை உரித்தால் சிவப்பாக இருந்தால் நல்லது, சீக்கிரம் வேகும். சுவையாகவும் இருக்கும்

உருளைக்கிழங்கு- பச்சை நிறம் கூடாது. முளையோ, வேரோ, விட்டிருக்கக் கூடாது. அமுங்கக் கூடாது.

முள்ளங்கி – முடி முளைத்திருக்க கூடாது. கையினால் தொட்டால் சாப்டாக வழ வழ என்று இருக்கவேண்டும்.

பச்சை மிளகாய் – கெட்டியாக, மெலிந்ததாக இருக்க வேண்டும்.

தடியாக இருத்தால் உறைப்பு கம்மியாக இருக்கும்

பூண்டு- சிறியதாக இருக்க வேண்டும்

சேம்பு – கூடிய மட்டிலும் உருண்டையாக இருக்கும் படி பொறுக்கவும்.

முட்டை கோஸ் – கெட்டியாக, பச்சையாகவும் கனமாகவும் இலை பிரியாமலும் இருக்க வேண்டும்.

காலி ப்ளவர் – வெண்மையாகவும் இலைகள் பச்சையாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும். பூவின் மேல் பிரவுன் நிற

புள்ளியிருந்தாலும் வாங்கலாம். பூ மஞ்சள் நிறமாகவோ, மஞ்சள்

புள்ளிகள் இருந்தாலோ வாங்கக் கூடாது.

தக்காளி -கெட்டியாக, சிவப்பும், பச்சையாகவும் கலந்த நிறமுடையதாக வாங்கவேண்டும் மஞ்சள் நிறம் துளியும்

இருக்கக் கூடாது. மற்ற காய்கறிகளுடன் சேர்த்து வைக்காமல் மூங்கில் தட்டில் அல்லது பிளாஸ்டிக் தட்டில் பரத்தி வைக்க வேண்டும்

வெள்ளரிக்காய் – கெட்டியாக பார்த்து வாங்கவும். இரு புறமும்

நறுக்கி அந்த நறுக்கிய பகுதியைத் தேய்த்தால் நுரை வரும். அதன் கசப்புத்தன்மையும் நீங்கி விடும்.

புடலங்காய் – முறுக்கிப் பார்த்தால் நெளிய வேண்டும். கோடு தெரியக் கூடாது.

பீட்ரூட், கேரட் – பசுமையாகவும், கெட்டியாகவும் இருக்க வேண்டும்.

பாகற்காய் – நல்ல கரும் பச்சை நிறமாக இருக்க வேண்டும்

வாழைப் பூ – கெட்டியாக, கனமாக, இருக்க வேண்டும் இதழ்கள்

பிரிந்திருக்கக் கூடாது்.

சுரைக்காய் – கனமானதாக வாங்க வேண்டும்

முசுப்பலா – தோல், கிள்ள வர வேண்டும்.

கத்தரிக்காய் – கரு நீலம் கூடாது. வெளிர் நீலம் சுவையாக இருக்கும் பாவாடை( மேல் உள்ள பச்சைத்தோல்) கத்தரிக்காயை ஒட்டி இருக்க வேண்டும். அழுத்தினால் மென்மையாக இருக்க வேண்டும்.

வாழைக்காய் – பட்டையாக மூன்று புறமும் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி கருத்திருக்கக் கூடாது.

கீரைகள் – தண்டு கனமாக இருக்கக் கூடாது. தண்டை ஒடித்தால்

படக்கென்று ஒடிய வேண்டும் சிறிய இலைகளாக இருக்க வேண்டும் இலைகளில் ஓட்டை இருந்தாலும் பரவாயில்லை.

காய்களை நறுக்கும் போது வாழைத்தண்டு, வாழைப்பூவை நறுக்கும் போது, மோர் கலந்த நீரிலும், கத்தரிக்காய், சுண்டைக்காய், பாகற்காய்களை நறுக்கும்போது அரிசி

கழுவிய நீரிலும், போட்டால் அதன் நிறம் மாறாது. கசப்பு துவர்ப்பு, உவர்ப்பு போன்றவை குறையும்.

கருணை, சேனை நறுக்கும்போதே புளித்தண்ணீரில் போட்டு புளித்தண்ணீரில் வேக வைத்தால் சாப்பிடும் போது நமைச்சல் இருக்காது.

கீரைகளை சமைக்கும்போது மூடி வைக்கக் கூடாது.

முருங்கைக் கீரையை ரொம்பவும் வேக வைக்கக் கூடாது

பச்சை நிறம் மாறக்கூடாது.

அகத்திக் கீரையை நன்றாக வேக வைக்க வேண்டும்.

அதாவது பச்சை நிறம் மாற வேண்டும்

பழ மொழி – “வெந்து கெட்டது முருங்கைக் கீரை

வேகாமல் கெட்டது அகத்திக்கீரை”!

வெந்தயக்கீரை சாம்பார் செய்யும்போது, பருப்பு கரைத்து விடும் முன் கீரையை சாம்பாரில் போட்டு சிறிது நேரம் வேக வைத்தால் சாம்பார் கசக்காது.

தண்டு கீரையின் தண்டு கனமாக இருக்கும். மலச்சிக்கலைப் போக்கும். அதன் தோலை சற்று லேசாக சீவி மூன்று மூன்று

அங்குலமாக நறுக்கி சாம்பாரிலோ, மோர் குழம்பிலோ போடலாம்.

நாம் காய் வாங்கும்போது “கொசுறு” அதாவது இலவசம் என்று

கொத்தமல்லியும்கறிவேப்பிலையும் தருவார்கள்அது மாதிரிதான் இதுவும் “கொசுறு!!!

சில காய்களின் மருத்துவ குணங்கள்

அவரைக்காய் – நரம்புகள் வலுப் பெறும், மலச்சிக்கலைப் போக்கும்

கத்தரிக்காய் – உடலின் உஷ்ணத்தைத் தணிக்கும்

வெண்டைக்காய் – ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

முருங்கைக்காய் – ஆண்மைக் குறைவு, கருப்பை கோளாறுகளை நீக்கும்

வெள்ளரிக்காய் – கல்லீரல் பலம் பெற,மஞ்சள் காமாலை குணமாக, தாகத்தை தணிக்க,குளிர்ச்சியைத்தர, எளிதில் ஜீரணிக்க

பூசணிக்காய் – இருமல் காச நோய் குணமாக

சுரைக்காய் – சிறு நீரக கோளாறுகள் நீங்க, பொட்டாசியம் தர

வாழைக்காய் – மலச்சிக்கலைப் போக்க

மணத்தக்காளிக்காய் – குடல் புண்களைப போக்க

பாகற்காய் – வயிற்றிலுள்ள புழு பூச்சிகள் நீங்க, குளிர்ச்சி தர

முட்டைகோஸ் – நெஞ்சுவலி வராமல் தடுக்க, ஜீரணத்திற்கு

சுண்டைக்காய் – நரம்பு வலுப்பெற, எலும்பு வளர்ச்சியடைய

தேங்காய் – கருப்பை, வயிற்றிலுள்ள புண்களை ஆற்ற

மாங்காய் – ரத்தத்தை விருத்தி செய்ய

கோவைக்காய் – தொண்டை, நாக்கு வெடிப்பு புண்களை ஆற்ற

நெல்லிக்காய் – கண்ணோய் அகல, மூளை நரம்புகள் பலப்பட

அத்திக்காய் – ரத்த சோகை போக

வாழைத்தண்டு – சிறு நீரக கற்களை கரைக்க

பீட்ரூட் – நார்ச்சத்து மலச்சிக்கலை போக்கும்

உருளைக்கிழங்கு -இரும்பு, பாஸ்பரஸ் சத்து அதிகமாக

சேப்பங்கிழங்கு – எலும்பு, பற்களுக்கு உறுதி தர

கேரட் – மாலைக்கண், கண் கோளாறுகளைப் போக்க

பீனஸ் – புரதச் சத்து அதிகரிக்க, கால்ஷியம் அதிகரிக்க

புடலங்காய் – எலும்பக்க உறுதி தர

கொத்தவரங்காய் – நார்சத்து மலச்சிக்கலைப் போக்க

சௌ சௌ – பற்களுக்கு, எலும்புகளுக்கு உறுதி தர

முள்ளங்கி – பொட்டாசியம் பற்றாக்குறையை நீக்க

தக்காளி – அமினோ அமிலம் உற்பத்தியாக்கும், ரத்த விருத்திக்கும் நல்லது.

பூசணிக்காய் – நீர்ச்சத்தை அதிகரிக்க, ரத்த விருத்தி, குளிர்ச்சி தர

கருணைக்கிழங்கு -மலச்சிக்கல், மூலநோய் தீர, எலும்பு வளர்ச்சிக்கு

குடை மிளகாய் -அஜீரணத்தைப் போக்க

நூல் கோல் – பாஸ்பரஸ் அதிகரிக்க, மலச்சிக்கலைப் போக்க

வெங்காயம் – அதிக பாஸ்பரஸ் உள்ளது கொழுப்பைக் கரைக்க

மணத்தக்காளி -வாய் மற்றும் வயிற்றுப்பண்களை நீக்க

(கீரைகள், மற்றும் பழங்கள் பற்றி நேயர்கள் விரும்பினால் தொடரும்)

***

tags–   மனைவி, தப்பிப்பது, எப்படி,

பாரதியாரின் ராகங்கள்! – 3 (POST No.9047)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9047

Date uploaded in London – – 18 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

டிசம்பர் 11. பாரதியாரின் பிறந்த தினம். அதையொட்டிய சிறப்புக் குறுந்தொடர் இது!

பாரதியாரின் ராகங்கள்! – 3

ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரின் வேதாந்தப் பாடல்கள் அரிய பெரிய உண்மைகளை மிகத் தெளிவாக இனிய சொற்களால தருபவை.

அவற்றிற்கு அவர் அமைத்த இசையைக் காண்போம்.

  1. மாயையைப் பழித்தல் – உண்மை யறிந்தவருன்னை

ராகம் – காம்போதி        தாளம் – ஆதி

  • அச்சமில்லை – பண்டாரப் பாட்டு
  • ஜீவன் முக்தி – ஜயமுண்டு பயமில்லை மனமே

ராகம் – கமாஸ்    தாளம் – ஆதி

  • நந்தலாலா – காக்கைச் சிறகினிலே

ராகம் – யதுகுல காம்போதி தாளம் – ஆதி

  • விடுதலை – வேண்டுமடி எப்போதும் விடுதல்

ராகம் – நாட்டை

குயில் பாட்டு

குயில் பாட்டில் இசையின் மகிமை பற்றி ஏராளமாகச் சொல்கிறார் பாரதியார்.

இதைப் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிட்டு விட்டோம்.

ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ என்கிறார் மஹாகவி.

“கானப் பறவை கலகலவெனும் ஓசையிலும்

காற்று மரங்களிடைக் காட்டு மிசைகளிலும்

ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்

நீலப் பெருங்கல் எந்நேரமுமே தான் இசைக்கும்

ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும்

மானுடப் பெண்கள் வளரும் ஒரு காதலினால்

ஊன் உருகப் பாடுவதில் ஊறிடுந் தேன் வாரியிலும்

ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெல் இடிக்கும்

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்

சுண்ணம் இடிப்பார் தம் சுவை மிகுந்த பண்களிலும்

பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்

வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாம் ஒலிக்கக்

கொட்டி இசைத்திடும் ஓர் கூட்டமுதப் பாட்டினிலும்

வேயின் குழலோடு வீணை முதலா மனிதர்

வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல் கருவி

நாட்டினிலும் காட்டினிலும் நாள் எல்லாம் நன்றொலிக்கும்

பாட்டினிலும் நெஞ்சைப் பறி கொடுத்தேன்.”  என இப்படி அடுக்கடுக்காக பதினோரு வகைப் பாடல்களைக் குயில் பாட்டில் சுட்டிக் காட்டுகிறார்.

காதல் காதல் காதல்

இந்தப் பாடலுக்கு பாரதியார் தரும் குறிப்பு இது:-

ராகம் – சங்கராபரணம் ஏக தாளம்

ஸ்வரம் :

“ஸா – ரிமா – காரீ

        பாபாபாபா – மாமாமாமா

ரீகா – ரிகமா – மாமா

(சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க)

இதே பாடலில்,

“நாதம், நாதம், நாதம்,

நாதத்தேயோர் நலிவுண்டாயின்

சேதம், சேதம், சேதம்” என்றும்

“தாளம், தாளம், தாளம்,

தாளத்திற்கோர் தடையுண்டாயின்

கூளம், கூளம், கூளம்”     என்றும்

“பண்ணே, பண்ணே, பண்ணே,

பண்ணிற்கோர் பழுதுண்டாயின்,

மண்ணே, மண்ணே, மண்ணே.”    என்றும்

பாடி இசையமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.

பாரதியாரின் சங்கீதத் திறனாய்வை அவர் எழுதியுள்ள சங்கீத விஷயம் என்ற கட்டுரையில் படித்து வியக்கலாம்.

இப்படி ஏராளமான ராகங்களைத் தன் பாடல்களுக்கு அமைத்துத் தந்த மஹாகவி ஸ்வர அமைப்பிலும் சிறந்தவர் என்பதை அவரது பல வாழ்க்கை நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டுகின்றன.

அன்பர்கள் பாடல்களைப் படிக்கும் போதும், பாடும் போதும் அவரது இசை அமைப்பையும் மனதில் கொண்டால் பாடல்கள் இன்னும் அதிகச் சுவையுடன் தேனாகத் தித்திக்கும் என்பதில் ஐயமில்லை.

                        ***               இந்தக் குறுந்தொடர் முற்றும்

tags- ராகங்கள்! – 3,பாரதியார்

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 6 (Post No.9046)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9046

Date uploaded in London – –17 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி 6

Panini  Sutras from his Ashtadhyayi continued……………………………..

உலகம் முழுதும் புழங்கும் எல்லா பழைய மொழிச் சொற்களும் சம்ஸ்க்ருதம், தமிழ் ஆகியவற்றிலிருந்தே சென்றன என்பதை நிரூபிப்பதே இந்தக் கட்டுரைத் தொடரின் முக்கிய நோக்கம் 

XXXX

SUTRA 1-4-87

UPA – UP உப -அப் – உப்பரிகை

IN TAMIL UPPRIKAI/BALCONY

IN HINDI UUPAR, WHICH IS UPPER IN ENGLISH ஊபர் , அப்பர்

TAMILS USE IT IN LONG DISTANCE/ LINEAR- APPAAL, APPATI

NOT IN HEIGHT BUT IN LENGTH IN SANGAM LITERATURE அப்பால், அப்படி

XXX

1-4-89

VACHANE – VAAK- SPEAK; V=P

வசனே – வசனம், வாக்- வாக்கு- வாக்கியம்

 VAAKKIYAM IN TAMIL-

THIRAIPPATA VASANAM –

வ=ப; வாக்- ஸ்பீச்

ஸ்பீச் = பேச்சு

P/B- V- M —-  ARE INTERCHANGEABLE

XXX

1-4-90

BHHAGA – SHARE- DIVISION பாக ; பகுதி; பகு , பிரி

BHAG- AN AREA IN A CITY ; KAROL BHAG IN DELHI

கரோல்பாக் – டில்லியில் உள்ள ஒரு பேட்டை

IN TAMIL BHHAGAM IS USED FOR SHARE, PART

IT IS IN PURE TAMIL AS PAKU/DIVIDE, PAKUTHI பகு

பகுதி PREFIX ;THIS PAKUTHI IS DERIVED FROM SANSKRIT PRAKRUTHI

VIKRUTHI IS SUFFIX VIKRUTHI  பகுதி, விகுதி

SO TAMIL AND SANSKRIT HAVE SAME ROOT.- PAKU OR BHAAG

பகு , பாக – ஒரே மூலச் சொல்லிலிருந்து வந்தது

XXX

1-4-94

PUJA – PUUJAI IN TAMIL, PUUSANAI IN TIRUKKURAL பூஜை ; பூசனை/குறள்

பூஜா அர்த்தம்- புகழ் பாடுதல்

PUJA MEANING – WHICH IS PRAISED, APPRECIATED, OFFERED TO GOD

XXX

1-4-95

ADHI- A LOT அதி, அதிகம்

ATHIKAM IN TAMIL; KURAL 636-  ADHI NUTPAM

அதி நுட்பம் – குறள் 636

XXX

TAMILS USED ALL GRAMMATICAL TERMS FROM SANSKRIT BECAUSE THE FITST GRAMMAR, NOW EXTINCT, CAME FROM AGASTYA. HE IS PRAISED AS FATHER OF TAMIL. BHARATI AND OTHER POETS SAY SO.

PAKUTI, VIKUTHI = PREFIX, SUFFIX CAME FROM SANSKRIT. பகுதி, விகுதி

EVEN THE WORDS SINGULAR, DUAL, PLURAL ARE EXACT TRANSLATIONS OF SANSKRIT WORDS.

ஒருமை, இருமை , பன்மை (ஸம்ஸ்க்ருதத்திலும் இதே போல, 1,2,3 உண்டு..

ஆங்கிலம் முதலான மொழிகளில் 1,2,3 கிடையாது.

SINGULAR – EKA VACHANAM – ORU MAI ; EKA=1

DUAL – DVI VACHANA – IRU MAI ; IRU=2

PLURAL – BAHU VACHANA – PAN MAI; BAHU/MANY/VEHU IN TAMIL; B=V

பஹு =வெகு ; ப=வ

XXX

1-4-105

YUSMAT = YOU யூஸ்மத்

TVAM – YOU; TU IN FRENCH, HINDI தவம்; தூ /பிரெஞ் சு

AHAM= I; VAYAM= WE  அஹம் = ஐ; வயம் – வீ

TAT= THAT= ATHU IN TAM.தட் – அது; இத- இது –

ITA – IT- ITHU IN TAM. இது

XX

xxxx

2-1-1 VARTIKAM USED SUCHI, SEW

IN TAMIL SUUCHI/NEEDLE   BECOMES   UUSI

IN ENGLISH SIIVPAN IS SEW/STITCH

சூசி= ஊசி

தை – தையல்- 

XXX

2-1-27

SAAMI= SEMI சாமி= செமி

SEMI IS USED IN SCORES OF  WORDS

SEMI CONDUCTOR, SEMI TRANSPARENT, SEMI CIRCLE, SEMI ANNUAL

XXX

2-1-28

கால=க்ரோனோ

KAALA = CHRONO

L=R

CHRONOLOGY, CHRONOMETER

XXX

2-1-34

ANNA/FOOD அன்ன = பைபிளில் மன்னா

MANNA IN BIBLE

ODHANA- FOODHANA= FOOD ஒதன

DHADHYOTHANA= THAYIR SAADHAM

XX

2-1-35

MISRA/ MIXED மிஸ்ர – மிக்ஸ்

MIX

XXX

2-1-39

சத – சென்டம்

சஹஸ்ரம்- ஆயிரம்

VARTIKA- SATA/ CENTUM, centenary ; hundred

SAHASRAM BECAME AAYIRAM IN TAMIL

XXX

2-1-41

SUSHKA = SUKKU IN TAMIL/ DRIED GINGER சுஷ்க=சுக்கு

PAKVA – PAKKUVAM

STHAALI – THAAZI/POT தாழி  , முதுமக்கள் தாழி

MUTHU MAKKAL THAAZI

 tags- tamil words -6

—SUBHAM—

சௌபாக்யம் அருளும் சுக்கிரன் !!! -PART 2 (Post.9045)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 9045

Date uploaded in London – – 17 DECEMBER 2020

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

மகாபலியும் சுக்கராச்சாரியாரும்
மகாபலியின் ஆணவத்தை , கொட்டத்தை அடக்க வாமனவதாரம்
எடுத்தார் ஸ்ரீ மகா விஷ்ணு . யாகத்தின் போது யார் எதைக்கேட்டாலும் தருவேன்
என்ற மமதையோடு இருந்த மகாபலி மன்னனிடம், மூன்றடி மண் கேட்டார் வாமனன்.
வந்திருப்பவர் மகா விஷ்ணுவே என்று தெரிந்து கொண்ட சுக்கிராச்சாரியார், தானம் வார்த்து
கொடுக்க கிண்டியில் உள்ள தண்ணீரைவிட மகாபலி முயற்சித்த போது,
கிண்டியின் மூக்கின் நுனியை வண்டு ரூபமாக போய் அடைத்தார். இதை அறிந்த மகா விஷ்ணு
ஒரு தர்பைப் புல்லை எடுத்து குத்த வண்டான சுக்கிராச்சாரின் கண் குத்தப்பட்டு குருடானது.
அதிலிருந்து சுக்கிராச்சாரியாருக்கு “ஒற்றைக் கண்”தான்!
பிறகு நடந்த கதை தான் உங்களுக்கு தெரியுமே……
விவரம் தெரிந்தவர்கள் வெள்ளிக்கிழமை கண் ஆபரேஷன்
வைத்துக் கொள்ள மாட்டார்கள்.
சுக்கிரன் ஜாதகத்தில் பலமில்லையென்றால்
பாலியல் நோய்களான V D முதல் AIDS வரை,சிற்றின்ப சுகமில்லாமை, குழந்தையில்லாமை,
சுகர், அழகுக்கு உபயோகப்படுத்தபடும் ரசாயன கலவைகளினால் அரிப்பு , சொறி, சிரங்கு
ஜன்னேந்திரியத்தில் எல்லா கோளாறுகளும், கண்ணோய்களும்,பெண்களுடைய
மாதாந்திர கோளாறுகள், வெள்ளைப்படுதல், வெண்குஷ்டம் …………போன்றவை வரும்!

சுக்கிரன் பற்றிய விஞ்ஞான விவரங்கள்
சூரியனிடமிருந்து சுக்கிரன் 6 கோடியே, 72 லட்சத்து 40மைல்கள்
சூரியனை ஒரு முறை சுற்றி வர – 225 நாட்கள்
பூமிக்கு சந்திரன் போல் சுக்கிரனுக்கு துணைக்கோள் கிடையாது.
தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 23 1/2 மணி நேரம்
பகலிலும், தெரியக்கூடிய ஒரே கிரகம் சுக்கிரன்தான்!!! சூரியனுக்கு அருகில் இருப்பதாலும்,
சூரியனுடைய ஒளியை அப்படியே பிரதி பலிப்பதாலும் “விடி வெள்ளி”யாகவும்
“மாலை வெள்ளி”ஆகவும் மிளிர்கிறார் சுக்கிரன் !!!


சுக்கிரன் பற்றிய மற்ற விவரங்கள்
வேறு பெயர்கள் – ப்ருகு, காப்பியன், அசுர மந்திரி,உசனன்,வெள்ளி,
பளிங்கு, சுங்கன், கவி, மழைக் கோள்,வேதாங்க பாரகன்,பிரபு
மனைவிகள் – சுக்ருதி, ஊரஜஸ்வதி
ஜாதி – பிராமணர்
கோத்திரம் – பார்க்கவ
இனம் – ஸ்திரீ
நிறம் – வெண்மை
குணம் – ராஜஸம்
உத்யோகம் – மந்திரி
அதி தேவதை – இந்திரன்
ப்ரத்யதி தேவதை – சசி தேவி
திசாதிபதி – தென் கிழக்கு
பூதம் – நீர்
மொழி – ஸம்ஸ்கிருதம்
உடலில் தாது – இந்திரியம்
நாடி – சிலேத்துமம்
அவஸ்தை. நடு வயது
வாகனம் – கருடன்
இஷ்ட காலம் – பிற்பகல்
சுவை – புளிப்பு
சுபாவம் – சௌமியம்
தானியம் – மொச்சை
சமித்து – அத்தி
புஷ்பம் – வெண் தாமரை
ரத்தினம் – வைரம்
உலோகம் – வெள்ளி
மிருகம் – ஆண் யானை
பறவை – மயில்
ஸ்வரம் – நி
வஸ்திரம் – வெண் பட்டு
ஆசனம் – ஐங்கோணம்
ருது – வஸந்தம்
குணம் – சுபர்
தன்மாத்தரை -ரஸம்
எழுத்து – இ
தேசம் – காம்போஜம்
நிவேதனம் – நெய் சோறு
ஆட்சி – ரிஷபம், துலாம்

உச்சம் – மீனம்
நீசம் – கன்னி
நட்பு – சனி, செவ்வாய்
சமம் – குரு, சூரியன்
பகை – சந்திரன்
பார்வை- 7ஆம் பார்வை
சுக்கிர திசை – 20 வருடங்கள்

பரிகார ஸ்தலங்கள்
சுக்கிரனே பூஜித்த ஸ்தலம் – திருநாவலூர் (பாடல் பெற்ற ஸ்தலம்)
கஞ்சனூர், ஸ்ரீ ரங்கம்,
நவ திருப்பதி ஸ்தலம்-தென் திருப்பேரை
நவ கைலாச ஸ்தலம் – சேந்தமங்கலம்
சென்னை – மாங்காடு, சைதையில் உள்ள வெள்ளீஸவரர்.
உடலில் சுக்கிரன் வலுவாக இருக்க உண்ண வேண்டிய உணவுப்
பொருள்கள்- பாதாம், சூரிய காந்தி விதை, சிவப்பு பூசணி விதை,
சுரைக்காய், நிலக்கடலை, பிஸ்தா……..
சுக்கிர காயத்ரி
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரப் ப்ரசோதயாத்
சுக்கிர ஸ்லோகம்
ஹிமகுந்த ம்ருணா லாபம் தைத்யாநாம் பரமம் குரு
ஸர்வ ஸாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம்.

மேற் கண்ட ஸ்லோகங்களாலும், சுக்கிர ஸ்தலங்களுக்கு சென்று
வழிபடுவதனாலும், சுக்கிர தோஷங்கள் நீங்கி சந்தோஷகரமான வாழ்க்கை ,
இதைக் கேட்ட, tamilandvedas ப் பார்த்த அனைவருக்கும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்தித்து விடை பெறுகிறேன்
நன்றி , வணக்கம்.

tags- சுக்கிரன்-2, Venus-2,
***

சிறந்த தானம் மூன்று, விடக் கூடாதவர்கள் மூவர்! (Post No.9044)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 9044

Date uploaded in London – – 17 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

சுபாஷிதம்

சிறந்த தானம் மூன்று, விடக் கூடாதவர்கள் மூவர், மதிப்பு போடவே முடியாதவர் மூவர்…!

ச.நாகராஜன்

சிறந்த தானங்கள் மூன்று!

த்ரீண்யாஹுரதி தானானி காவ: ப்ருத்வி சரஸ்வதி |

சிறந்த தானங்கள் மூன்று. அவையாவன பசு. நிலம், கல்வி!

*

விடக் கூடாதவர்கள் மூவர்!

பக்தம் ச பஜமானம் ச த்வாஸ்மீதி ச வாதினம் |

த்ரீநேதாச்சரணம் ப்ராப்தான் விஷமேபி சத்யஜேத் ||

விடவே கூடாதவர்கள் மூவர் :

பக்தன் – கடந்த கால பணியாளன்

பஜமான: – நிகழ்கால பணியாளன்

தவாஸ்மீதி வாதி – உங்களைச் சரணடைந்து பாதுகாப்பு கேட்பவன்

*

மதிப்பு போடவே முடியாதவர் மூவர்!

த்ரய ஏவாதனா ராஜன் பார்யா தாஸஸ்ததா சுத: |

யத்தே சமதிகச்சதி யஸ்ய தே தஸ்ய தத்தனம் ||

மனைவி, பணியாளன், மகன் ஆகிய இந்த  மூவருக்கு மதிப்பு போடவே முடியாது. விலை மதிக்க முடியாத செல்வங்கள் இவர்கள்.

*

கடன் கொடுக்கவே கூடாதவை மூன்று

புஸ்தகம் வனிதா வித்தம் பரஹஸ்தகதம் கதம் |

யதி சேத் புனராயாதி நஷ்டம் ப்ரஷ்டம் ச கண்டிதம் ||

புஸ்தகம், பெண், பணம் இந்த மூன்றையும் கடனாகக் கொடுக்கவே கூடாது.

ஒருவேளை திரும்பி வந்தாலும் புஸ்தகம் சிதிலமாகி இருக்கும்; பெண் ப்ரஷ்டையாகி இருப்பாள், வந்த பணம் குறைந்தும் சில்லறையாகவும் இருக்கும்!

*

புரிந்துகொள்ளவே முடியாத அளவு சக்தி கொண்டவை மூன்று!

அசிந்த்யோ ஹி மணி மந்த்ர ஔஷதீனாம் ப்ரபாவ |

நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத அளவு அளப்பரிய சக்தி கொண்டவை மூன்று!

அவையாவன ரத்தினக் கற்கள் (மணி), மந்திரம், மூலிகைகள்

*

அலங்காரங்கள் மூன்று

தத்ர ப்ரதமம் சப்தார்தோபகதத்வேன த்ரைவிதமலங்காரவர்கஸ்ய

ப்ரதாபருத்ரீயம் , சப்தாலங்கார ப்ரகரணம்

கவிதையில் வரும் அலங்காரங்கள்  மூன்று! அவையாவன வார்த்தை, அர்த்தம், வார்த்தையும் அர்த்தமும்!

*

தவிர்க்க வேண்டியவை மூன்று

வாக்வாதார்த்த சம்பந்ததத்பத்னீபரிபாஷணம் |

யதிச்சேத் விபுலாம் மைத்ரீம் த்ரிணி ந காரயேத் ||

 கருட புராணம் 114.5

ஒரு நட்பு நீடித்து இருக்க வேண்டுமானால்

வாக்கு வாதம் கூடாது

அர்த்த சம்பந்தம் அதாவது பணம் தொடர்பான விஷயங்கள் இருக்கக் கூடாது.

தத் பத்னி பரிபாஷணம் அதாவது நண்பனுடைய மனைவியுடன் பேசக் கூடாது.

இந்த மூன்றும் நட்பு நீடித்து இருக்க வேண்டுமானால் தவிர்க்கப்பட வேண்டும்.

*

போரினால் பெறும் பயன்கள் மூன்று

பூமி மித்ரம் ஹிரண்யம் ச விக்ரஹஸ்ய பலம் த்ர்யம்

ஹிதோபதேசம் III- 66

விக்ரஹ பலம் அதாவது போரினால் ஏற்படும் பலன்கள் மூன்று

பூமி கிடைக்கும். நட்பு கிடைக்கும் (போரில் உதவிக்கு வருவோர்). தங்கம் கிடைக்கும்.

*

tags- tags —   தானம் ,மூன்று, 

INDEX 39 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (9043)

PICTURES FROM SYDNEY, AUSTRALIA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9043

Date uploaded in London – –16 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 2016  FEBRUARY  ARTICLES

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9000 PLUS POSTS.

INDEX 38 FOR LONDON SWAMINATHAN’S  ENGLISH & TAMIL ARTICLES 

FEBRUARY TAMIL 2016 INDEX

நன்கொடை/ தானம் பற்றிய பழமொழிகள், பாடல்கள் (Post No.2584); 29-2-2016

ரோமானிய சக்ரவர்த்தியின் ‘வில்லன்’ சிரிப்பு! (Post No 2579) 27/2

தலைகீழாகக் காற்றில் நடந்த பெண்ணைக் காப்பாற்றிய நீதிபதி! (Post No.2576); 26/2

ஆசிரியரைப் பழிவாங்கிய நீதிபதி! Post No. 2573; 25/2

மூன்றாம் கடிதம்:மாமிகளின் துயரமும் மருமக்களின்

கொண்டாட்டமும் (Post No. 2570); 24/2

இரண்டாவது மாமியின் கடிதம்! (Post No 2567); 23/2

மாமியின் துயரம்! (Post No 2564);22/2

ஆர்டிக் பிரதேச பனிக்கட்டிக்கு அடியில் வைரக்கற்கள்! (Post No 2561);21/2

விஸ்வ பாவனா ( யாதும் ஊரே! யாவரும் கேளிர்) (Post No. 2557);20/2

லண்டனில் இந்திய மஹாராஜா மோதிரங்களும் காதல்கிளிகளும் (Post No. 2556);19/2

கடலுக்கும் ஆற்றுக்கும் இடையே உரையாடல்! (Post No 2551);18/2

ராஜா தந்த முத்தை பிச்சைக்காரனுக்கு கொடுத்த பூசாரி (Post No 2550);17/2

நம்பினார் கெடுவதில்லை: மரண தண்டனை ரத்து! (Post No.2546);16/2

மெத்தக் கற்ற எத்தன் சிட்டாய்ப் பறந்துபோனான்! (Post No.2542);15/2

108 உபநிஷத்துகளின் பட்டியல் (Post No. 2539);14/2

பேசத் ‘தெரிந்தவன்’! (Post No.2536);13/2

புனித அய்யர் மலையைப் பற்றிய கதைகள்! (Post No. 2533);12/2

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532);12/2

பிரிஸ்பேன் நகர அதிசயங்கள்! (Post No. 2529); 11/2

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சுவையான வரலாறு (Post No. 2526);10/2

ஆஸ்திரேலியப் பழங்குடி கலாசாரத்தில் ‘அக்னி’ (Post No. 2523); 9/2

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களிடையே இந்துமத கருத்துக்கள் (Post No. 2520);8/2

ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தமிழர்களா? (Post No. 2517); 7/2

ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்! (Post No.2514);6/2

ஆஸ்திரேலியாவில் கடலோர பொங்கு நீரூற்று (Post No 2512); 6/2

உலகின் மிகப் பெரிய இயற்கை அதிசயம்! (Post No 2510);5/2

தமிழ்ப் பாஷையறியாத தர்மராஜ பிள்ளை (Post No 2507)4/2

பாரதியாரின் நூலுக்கு 1908 ஆம் ஆண்டு

செந்தமிழ் மதிப்புரை! (Post No. 2503);3/2

சீனர்களின் அபார ஜோதிட நம்பிக்கை! (Post No. 2497);1-2-2016

XXXX

FEBRUARY ENGLISH 2016 INDEX

What are Panchangam? Panchmrutam? Panchagavyam? Pancha yajnam? (Post No. 2585); 29 பெப்ரவரி 2016

Interesting Story of the Greatest and Oldest Poet in the World! (Post No 2582); 28/2

Rules about Dhana/ Charity in Hindu Literature (Post No.2580);27/2

S NAGARAJAN POSTS – ALREADY INDEXED SEPARATELY – 2583, 2581, 2578, 2575,2569,2566,2563,2560, 2558, 2554, 2552, 2548, 2545, 2541, 2538, 2535, 2531, 2528, 2525, 2522, 2519, 2516, 2513, 2509, 2506,2504, 2499, 2496.

What are you reading? My son! (Post No 2577); 26/2

Kings, Fools and Scoundrels!(Post No. 2574); 25/2

Judge’s Sweet Revenge on a Teacher! (Post No 2571); 24/2

Win Anger by serenity, wickedness by Virtue (Post No. 2568); 23/2

When angry, count a hundred! (Post No 2565); 22/2

Who will shut the door? Husband and Wife Quarrel! (Post No 2562); 21/2

Hindu Science: Four Types of Speech (‘Vak’)- Post No 2559; 20/2

Grace will last, Beauty will blast! (Post No 2555);19/2

Famous Doctor refused to write a book! Why? (Post No. 2553); 18/2

Why do you praise me without knowing past and present? – Buddha (Post No.2549);17/2

The difference between a Sage and an Astrologer (Post No.2547);16/2

The Big and the Small: Conversation between the River and the Ocean! (Post No. 2544);15/2

Priest and the Emperor (Post No.2540);14/2

Vows made in Storms are forgotten in Calms! (Post No.2537);13/2

Miser or Philanthropist? 5 Anecdotes (Post No. 2534); 12/2

Sixty Stories about Ayers Rock!(Post No.2530);12/2

Let them Enjoy or You Speak! Eleven Anecdotes (Post No. 2527);10/2

‘An inch of Gold will not buy an inch of Time’ (65 Sayings on TIME) – Post No 2524;9/2

Fire/ Agni in Vedic and Aborigine Cultures (Post No. 2521);8/2

Hindu Thoughts in Australian Aborigines’ Folklore! (Post No. 2518);7/2

Are Australian Aborigines Tamil Hindus? (Post No. 2515); 6/2

Absent minded Professor (Post No 2511);5/2

New COLOURING Book on Astrology! (Post No 2508);4/2

Eating Habits of Famous Authors (Post No 2505);3/2

Amazing Ganesh Figure in Australian Hills! (Post No 2502);2/2

Chinese belief in Astrology (Post No. 2498); 1-2-2016

— SUBHAM —

TAGS– INDEX-39, SWAMINATHAN, FEBRUARY 2016

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- Part 5(Post No.9042)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9042

Date uploaded in London – –16 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி 5

Panini  Sutras from his Ashtadhyayi continued……………………………..

உலகம் முழுதும் புழங்கும் எல்லா பழைய மொழிச் சொற்களும் சம்ஸ்க்ருதம், தமிழ் ஆகியவற்றிலிருந்தே சென்றன என்பதை நிரூபிப்பதே இந்தக் கட்டுரைத் தொடரின் முக்கிய நோக்கம் 

XXXX

1-4-69

ACCHA – AGO; BEFORE

THIS IS ONLY MY GUESS; I NEED MORE PROOF TO SUSTATIATE MY CLAIM

XXX

கண்- தமிழ் சொல் இல்லை?

SUTRA 1-4-74

SAAKSHAAT – SIGHT; சாட்சாத்

SA+ AKSHA – MAKE IT VISIBLE WHICH IS NOT VISIBLE TO NAKED EYE/AKSHA

சாக்ஷி ; சாட்சி = கண்ணுக்குத் தெரியாதவற்றைப் புலப்பட வைத்தல் அக்ஷ= கண்  (மீனாக்ஷி, காமாக்ஷி, விசாலாக்ஷி )

IN TAMIL COURT WITNESSES ARE CALLED SAATCHI

EYE IS ALDSO A SANSKRIT WORD – AKSHA

IT BECOMES AANKH IN HINDI/SPOKEN FORM

அக்ஸ = ஐ/ஆங்கிலத்தில்  = ஆங்க் = திருப்பிப் படித்தால்  கண்

சாட்சி = சைட் /ஆங்கிலத்தில்

IF YOU REVERSE IT – MIRRORED – IT GIVES TAMIL WORD – KANN

SO AKSHA- EYE- AANKHAN—KAN ARE ALL COGNATE WORDS

SIGHT – SAATCHI- SAAKSHAATH

XXX

மனது – தமிழ் சொல் இல்லை?

1-4-75

MANAS – MIND – MANM – MANATHU மனஸ் =மனது மைண்ட் /ஆங்கிலம்

SANSKRIT WORD MANAM IS USED IN TAMIL FOR OVER 2000 YEARS. IT IS SANGAM TAMIL LITERATURE AND FAMOUS TIRUKKURAL.

THE BEAUTY IS IT COMES CLOSER TO ENGLISH THAN SANSKRIT

MANAs – MANAthu; S =T ஸ் =து

TION IN ENGLISH IS PRONOUNCED AS SION IN ALL THE WORDS; SO T=S

TAMILS ALSO CHANGE ALL S IN TO T WHEN IT COMES FROM SANSKRIT

MANAS – MANAthu; VAYAS- VAYAthu; MAASA/MONTH-MAAtha/ MANUSH-MANItha

S= T IN ALL THE ABOVE WORDS.

தமிழிலும் அங்கியத்திலும் மட்டும் ஸ் = த  ஆவது தமிழும் ஆங்கிலமும் எவ்வளவு நெருக்கம் என்பதைக் காட்டும்

ஆங்கிலத்தில் டியன் TION என்று ஸ்பெல்லிங் எழுதிவிட்டு SION ஷன் என்றே படிப்பர்

வயஸ் = வயது; மனஸ் = மனது; மாச =மாத ; மனுஷ் = மனித

SO ENGLISH FOLLWS TAMIL IN CONSTRUCTION IN MANY WORDS; BUT NOT ALL THE  WORDS.

SCHOLARS POINT OUT THAT THE SANSKRIT WORD MANUSHYA/ MAN IN ENGLISH/ MANITHAN IN TAMIL ARE DERIVED FROM MAN=THINK; MAN IS FAMOUS FOR HIS THINKING AND DECIDING WHAT IS GOOD AND WHAT IS BAD. THAT IS WHY IT IS CALLED MANU SMRTI; THAT MEANS GREAT THINKER’S GUIDE BOOK

மனதினால் எண்ணி நல்லது கெட்டதை முடிவு செய்யும் திறன் இருப்பவன் மனிதன் = மனஸ் உள்ளவன்; இதைச் சொன்னவரை மனு என்று சொல்வர்- அது ஆங்கிலத்தில் மேன் MAN ஆனது. நல்லது கெட்டதை முதல் முதலில் எழுதிய குறிப்புகளை மனு ஸ்ம்ருதி என்று அழைத்தனர். இதில் இடைச் செருகல்களை நீக்கிப் படித்தால் உலக மகா அறிஞனை — மனிதனைக் – காணலாம்

XXXX

1-4-75

URAS- CHEST/MIND

ULLAM IN TAMIL  – MIND ; R=L

உரஸ் = மார்பு ; உள்ளம்

ர=ல ; உலஸ் =உள்ள

XXX

1-4-76

MADHYA – MEDI- MEDI TERRANEAN SEA- MEDIATION- MEDIAL

TAMILS EVERYDAY USE MADHYAANAM- MID DAY; ALSO MADHYASTHAM/MEDIATION

LOT OF ENGLISH WORDS ARE THERE WITH MEDI=MADHYA

மத்திய தரைக்கடல் ; மத்தியஸ்தம் ; மத்தியானம்

மத்தி = நடு

XXX

திரு மணம் – தமிழ் சொல் இல்லை?

1-4-77

PAANI- HAND; HASTE=HAND; UPAYAMANA= WEDDING

PAANIGRAHANA/ PAANIKRTYA – MARRIAGE; LITERALLY HOLDING HAND

HASTEKRTYA – HOLDING HAND

KAIPPIDITHTHAN IN TAMIL WEDDED; LITERALLY HELD HAND

UPAYAMANA – IN TAMIL MANM IS SMELL AND WEDDING.

BECAUSE IT IS A HOLY UNION TAMILS CALLED IT TIRU- MANAM

UPAYA MANA = TIRU MANA

IN SANSKRIT WE CAN ALSO INTERPRET TWO MINDS COMING TOGETHER; TWO HANDS COMING TOGETHER

THE WORD PAANI IS USED IN TAMIL AS VERB PANNU- DO WITH YOUR HANDS SOMETHING

HASTA IS IN ENGLISH AS HAND

பாணி = கை ; ஹஸ்த = கை

பாணிக்ரஹணம் = கைப்பிடித்தல் = கல்யாணம்

ஹஸ்த/HAND க்ருதே = கைப்பிடித்தல் = கல்யாணம்

உபயமன = திரு மணம்

மன = மணம் = கல்யாணம்

பாணியால் செய்வது = பண்ணுவது

பண்ணு = செய்

XXX

1-4-78

PRAATVA= ROAD; WAY

BANDANE  =BOND, BIND; BONDED LABOUR

TAMILS USE BANDHU/RELATIVE; PAASA BANDHAM= RELATIONSHIP/ AFFECTION

பந்தம், பந்து, பந்தனம் , பாச பந்தம்

XXX

1-4-79

JEEVIKA = LIVE = EVE IN BIBLE= VIVE IN FRENCH

J BECOMES Y; YEEVE= JIVATMA (JESUS=YESU; JUDA=YUUDHA; JOSEPH= YUUSUF)

VIVE LA FRANCE – LONG LIVE FRANCE

READ MY RESEARCH ARTCLE SANSKRIT IN BIBLE IN TAMILANDVEDAS.COM

ADAM= ATMA/PARAMATMA, EVE=JEEV+ATMA ACCORDING TO KANCHI PARAMACHARYA (1894-1994) ; TH UPANISHAD STORY IS USED AS ADAM AND EVE IN THE BIBLE;

LEFT BONE BECAME WOMAN – VAAMA=LEFT

THE ARDHANAARI STOLEN IS ALSO USED IN BIBLE IN ADAM AND EVE STORY.

SEMETIC PEOPLE STOLE ALL HINDU CONCEPTS AND INCLUDED IN THE VERY FIRST CHAPTER OF THE BIBLE

MAN= MANUSHA; WOMAN= VAAMANA/LEFT PART OF MAN/LORD SHIVA

ARDHA NAARI = HALF SHIVA+HALF UMA/PARVATI

ஜீவ – வீவ் VIVE /பிரெஞ்சு = பை பிளில் EVE ஈவ்

கிறிஸ்தவ, யூத , இஸ்லாமிய மதங்கள் பரமாத்மா /ஆடம் ADAM/ATMA

ஜீவாத்மா =ஈவ் JEEVE= EVE என்று சொல்லுவது உபநிஷத்தில் ஒரே மரத்தில் உட்கார்ந்த இரு பறவைக் கதை என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) விளக்கியுள்ளார்.

முதல் மனிதன் இடது விலா எலும்பை முறித்து பெண்ணை உருவாக்கினான் என்பதும் அர்த்த நாரி கதை ஆகும். வுமன் /பெண் = வாம/ இடது புறம்

WO MAN  VAAMA=LEFT RIB

பைபிளின் முதல் அத்தியாயமே இந்துக்களிடமிருந்து எடுக்கப்பட்ட கதை. மற்ற செமிட்டிக் மதங்களும் ஒப்புக் கொள்கின்றன ; முதல் அத்தியாயம் முழுதும் சஸ்கிருதச் சொற்கள் ; இது போல எழுப்பத்துக்கும் மேலான  சம் ஸ்கிருதம் இருப்பதை “பைபிளில் சம்ஸ்க்ருதம்” (Sanskrit in Bible) என்ற என்னுடைய ஆராய்சசிக் கட்டுரையில் காண்க

TO BE CONTINUED…………………………………….

GS- TAMIL WORDS-5

சௌபாக்யம் அருளும் சுக்கிரன் !!! -PART 1 (Post .9041)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 9041

Date uploaded in London – – 16 DECEMBER 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள்கிழமை தோறும் ஒளிபரப்பாகும் ஞான மயம் நிகழ்ச்சியில்

14-12-2020 அன்று ஒளிபரப்பப்பட்ட உரை!

FOR LIVE SPEECH PLEASE GO TO FACEBOOK.COM/GNANAMAYAM

       சௌபாக்யம் அருளும் சுக்கிரன் !!!

                                       Kattukutty

அன்பர்கள் அனைவருக்கும் ஸ்ரீனிவாசன் அன்பான மாலை வணக்கம்

கேள்வி – மக்களை மகிழ்ச்சிகரமாக வைக்கும் கிரகம் எது???

உலகத்திலேயே மிக மிக சந்தோஷகரமான வாழ்க்கை அமையப் பெற்ற

அதிர்ஷ்டம் யாருக்கு தெரியுமா????

அதிக பணம் வைத்திருப்பவருக்கா??? அல்லது

எல்லா வசதிகளும் பங்களாக்கள், கார்கள் எஸ்டேட்டுகள் வைத்திருப்பவருக்கா???

அல்லது நினைத்ததை எல்லாம் நடத்தி வைக்கும், ஆட்கள் உடைய அதிகாரம்

உடைய அரசியல்வாதிகளுக்கா???

உலெகெங்கும் பத்திரிக்கைகளிலும், T V க்களிலும் தினசரி வரும் சினிமா ஸ்டார்களுக்கா?

இந்த கேள்விக்கெல்லாம் விடை…

மனதறிந்து நடக்கும் மனைவி இருந்தாலே போதும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு!!!

இதை கேட்கும் அல்லது tamilandvedas ஐ படிக்கும் அனைவருக்கும் நெஞ்சை

உறுத்திக் கொண்டிருக்கிற விஷயம் இது – “மனைவி” என்றவுடன், அதையெல்லாம்

மறந்து தான் உங்கள் பேச்சை கேட்க வந்திருக்கும் எங்களுக்கு அவளை மீண்டும்

ஞாபகப்படுத்தி துனபுறுத்தாதீர்கள்……….என்கிறீர்களா?

30-11-2020 தேதி. ஒருதினசரியில் மனைவியிடம் காப்பி கேட்டிருக்கிறான் கணவன்.

தராததால் அவன் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி…….

ப்பூ இவ்வளவுதானா??? எங்கள் வீட்டுல காப்பி கேட்டுக் காத்திருப்பது

தினசரி நடக்கிற விஷயமாச்சே……..

சரி. விஷயத்திற்கு வருவோம்.

சுக்கிரனின் சிறப்பு

நடனம், இசை, கவிதை,வரைகலை, சிற்பம் போன்ற 64 கலைகளுக்கு நாயகனும்,

களத்திர காரகனும் , காதல் மன்னனும் , கவர்ச்சி நாயகனும், என்றும் இளமைத்தோற்றம்

அளிப்பவனும், ஆடை அலங்காரத்திற்கும், வாசனை திரவியங்களுக்கு அதிபதியும்,

அரண்மனை போன்ற பெரிய வீடுகளுக்கும், விதம் விதமான வாகனங்களுக்கு அதிபதியும்,

பசு , பால் ,எல்லா வெண்ணிற பொருட்களுக்கும்,ஆடை, பட்டுத்துணிகளுக்கும்,

சுருக்கமாக சொல்லப்போனால் எல்லா சுகமளிக்கும் பொருட்களுக்கும்

சுக்கிரனே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காரணம்!!!!

அயன, சயன, சுக, போக பாத்யாதிபதி சுக்கிரனே!!!!

எந்த கிரகமும் 1,4, 7, 10 ல் இருந்தால் “கேந்திராதிபத்ய தோஷம்”

உண்டு என்பார்கள் ஜோதிட வல்லுனர்கள்.

கேந்திராதி பத்ய தோஷமே இல்லாத ஒரே ஒரு கிரகம் சுக்கிரனே!!!(7ம் இடம் தவிர)

வெளி நாட்டினர் இதன் ஒளியை கண்டு மயங்கி அழகு தெய்வத்தின்

பெயரையும் இந்த கிரகத்தின் பெயரையும் “வீனஸ்”என்று

வைத்தனர்!!! மழையை வரவழைப்பதும இவரே…..இவருக்கு

“மழைக்கோள்” என்றும் பெயர்

சுக்கிரனின் பிறப்பு

பிரும்மாவின் மானஸ புத்திரர்களில் ஒருவரான “ப்ருகு” என்னும்

முனிவருக்கும் “புலோமிசை” என்பவளுக்கும் பிறந்தவர் தான்

பார்க்கவன்(சுக்கிர பகவான்)..

காசி சென்று பல காலம் லிங்கப் பிரதிஷ்டை செயது சிவனைக் குறித்து பலகாலம்

தவம் செய்தார் சுக்ரன்.

அவர் தவத்தை மெச்சி சிவபிரான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சக்தி வாய்ந்த

“மிருத சஞ்சிவினி” என்ற மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார்.

பார்க்கவன் என்ற சுக்கிரனிடமிருந்த இந்த சக்தியை அறிந்து கொண்ட அசுரர்கள்

அவரைத் தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டார்கள்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அவ்வப்போது போர் நடக்கும்.

அசுரர்கள் பலர் இறந்தனர். அசுரர்களின் அரசன் விருஷ பர்வா,

குல குரு காலில் விழுந்து காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டான்.

அனவரையும் உயிர்ப்பித்தார் சுக்கிரன். அரண்டு, மிரண்டு போன தேவர்கள்

சிவனிடம் போய் முறையிட்டனர். சிவன் நந்தியை ஏவ, பார்க்வன் என்ற சுக்கிரனை

கொண்டு வர, அப்படியே விழுங்கி விட்டார் .

சிவ பெருமான் வயிற்றிலேயே ஆயிரம் ஆண்டுகள தவம் செய்தான் பார்க்கவன்.

அவன் தவ யோகத்தை மெச்சி அவனை வயிற்றிலிருந்து

வெளியே கொணர்ந்தார் சிவன்.

வெண்மை நிறமாக அதாவது சுக்கிலம் என்றால் வெண்மை வெளிப்பட்டதால் சுக்கிரன் எனப்

பெயர் பெற்றார் பார்க்கவன்.

அசுரர்களுக்கு ஆச்சாரியாராக இருந்ததால் “சுக்ராச்சாரியார்” என்ற பெயரையும்

பெற்றார் சுக்கிர பகவான்!!!

புராஜெக்ட் – சஞ்சீவினி !!!

தேவர்களுக்கு கவலையோ கவலை. இப்படி மிருத சஞ்சீவினி உடைய

அசுரர்களுடன் சண்டையிட்டால் நாம் ஜெயிக்க முடியாததுடன்

அழிந்தே போவோம் என்பதே அவர்கள் கவலை.

அனைத்து தேவர்களும், குருவான பிரஹஸ்பதியுடன் மந்திராலோசன நடத்தினர்.

கடைசியில், பிருஹஸ்பதியின் மகன் கசன் எனபவனை அசுரகுருவிடம் சிஷ்யனாக்குவது,

பிறகு அந்த மிருத சஞ்சீவினீ மந்திரத்தை தந்திரமாக கற்றுக் கொண்டு வந்து விடுவது…..

”புராஜக்ட் – சஞ்சீவினி” ரெடி!!!!

வெற்றிலை பாக்கு ஆயிரம் பழத்தட்டுகளுடன் சுக்கிராச்சாரியாரின்

காலில் விழுந்தான் கசன். யார் என்று கேட்டார் சக்கிராச்சாரியார்.

தான் இன்னாரென்ற முழு உண்மையைக் கூறி தன்னை மாணவனாக ஏற்றுக்கொள்ளும்படி

கூறினான் கசன்.

அக்கால வழக்கப்படி காலில் விழுந்து சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளும்படி

வேண்டிக் கொண்டதால், அவரும் முழு மனதுடன் சம்மதித்தார்.

தேவயானியின் ஒரு தலை ராகம்

இனிமேல் தான் வருகிறது காதல் கதை!!!

சுக்கிரச்சரியாருக்கு மிக மிக அழகான பெண்ஒருத்தி… பெயர் தேவயானி……

அப்பாவிற்கு தொண்டு செய்வாள் அவள்.

கரு கரு முண்டங்களான அசுர ஜன்மங்களையே பார்த்த அவள்

கண்களுக்கு சிவப்பான, அழகான, தேவகுமாரன் கசனைப் பார்த்ததும்

அவன் மேல் அவளுக்குக் காதல் உண்டாகிவிட்டது…….

பார்த்தார்கள் அசுரர்கள். இப்படி “எதிரி” கேம்பிலிருந்து ஒருவன்

வந்து துணிச்சலாக குருவிடம் பாடம் கற்க வந்ததும், குரு அவனை ஏற்றுக் கொண்டதும்

அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை…….

கொலை முயற்சி

அசுரர்கள் ஒரு நாள் அவனை கொன்று கிணற்றில் வீசி விட்டனர்.

கசனைக் காணாத தேவயானி சுக்கிராச்சாரியாரை நச்சரித்ததால் ஞான திருஷ்டியில்

கசன் கிணற்றில் கண்ட துண்டமாக கிடப்பதை அவர் கண்டார்.

தன்னை நம்பி வந்த சீடன் இப்படிக் கொலையுண்டதை

சகிக்காமல் அவனை உயிர்ப்பித்தார்.தேவயானிக்கு சந்தோஷம் பொங்கியது….

மறுநாள் காலையில் அசுரர்களுக்கு ஒரே ஆச்சரியம்

நேற்று வெட்டிப் போட்ட ஆள் இன்று கிளாசில் உட்கார்ந்திருக்கானே???

விஷயத்தை ஊகித்தறிந்த அசுரர்கள் பிளான் பி க்கு வந்தார்கள.

அதாவது கசனைக் கொன்று அவனை அவருடைய நாய்க்கே தீனியாகப் போட்டு விட்டார்கள்.

கிளாசில் கசனைக் காணாத

தேவயானி அழ, சுக்கிராச்சாரியார் ஞான திருஷ்டியில் பார்த்து

அதிர்ந்து போனார் .

அருமை நாயை இழக்க விரும்பாத அவர்

தேவயானியை கன்வின்ஸ் செய்யப் பார்த்தார்.

தேவயானி நான் கசனைக் காதலிக்கிறேன் என்றும், அவனில்லாமல் வாழமுடியாதென்றும்

கதறி அழ நாயின் வயிற்றிலிருந்து கசனை வரவழைத்து நாயையும்

காப்பாற்றினார். பார்த்தாரகள் அசுரர்கள் பிளான் “ சி “க்கு வந்தார்கள்…..

அதாவது கசனை கொன்று எரித்து சாம்பலை அவருடைய மதுபானத்திலேயே

கலந்து விட்டார்கள்.

மறுநாள் கசனை காணாத தேவயானி கதறி அழ, சுக்ராச்சாரியார்

கசா எங்கிருக்கிறாய்??? என்றார்.

நான் உங்க வயிற்றில் இருக்கிறேன் ஸ்வாமி !!! என்று குரல் வந்தது!

அதிர்நது போனார்கள் சுக்ராச்சாரியாரும், தேவயானியும்.

தேவயானி மனமுடைந்து கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு

முயற்சி செய்தாள். வேறுவழியே இல்லாமல் வயிற்றுக்குள் இருக்கும்

கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் செய்தார் சுக்ராச்சாரியார்.

வெளியே வந்த கசன் குரு த்ரோகம் செய்யாமல் அவர் உபதேசித்த சஞ்சீவினி

மந்திரத்தை அவரிடமே உபயோகித்து அவரை உயிர்ப்பித்தான்!!!.,

அவ்வளவுதான், தான் எதற்காக வந்தானோ அந்த வேலை முடிந்தது!!!

கசன் தன் குருவிடம் விடை பெறக் கிளம்பியதும் தேவயானி

கசனின் காலை பிடித்துக் கொண்டு கதறினாள்.

கசன் சொன்ன ஒரே பதில் – “நான் உன் தகப்பன் வயிற்றிலிருந்து வந்திருக்கிறேன்.

சரியாகச் சொல்லப் போனால், நான் உனக்கு சகோதரன் முறை ஆக வேண்டும்!!!”

அவ்வளவுதான் கசன், சுக்கரச்சாரியார் சொல்லச் சொல்ல, கிணற்றினில குதித்தாள் தேவயானி…

…அவ்வழியே வந்த குரு வம்சத்து அரசன் யயாதி என்பவன் அவளைக் காப்பாற்றினான்……

சுக்கிரச்சாரியாரின் சாபம்

எதிரியான தேவர்களுக்கு சஞ்சீவினி மந்திரம் போனதும், மகள்

கிணற்றில் விழுந்ததும், சுக்ராசாரியார் மனதை ரொம்பவுமே பாதித்தது.

வெகு நேர ஆராய்ச்சிக்குபின் மூல காரணம்”மது”அருந்தியதால்தான்

என்பதைக் கண்டு பிடித்தார் சுக்கிரச்சாரியார். மனது வெதும்பி

சாபம் இட்டார் அன்று. “எவன் எவனெல்லாம் மது அருந்துகிறானோ,

அவன் மதி இழந்து போகட்டும். அவன் பெண்களினால்

துன்பமுறட்டும். குடும்பத்தில் வறுமை வந்து கூத்தாடட்டும்”

இது தேவ லோகத்தில இருக்கிறவர்களுக்கு மட்டும் என்று

நினைச்சுகாதீங்கோ…….பூலோகத்தில இருக்கிற அமெரிக்கா,

லண்டன், ஜப்பான், இந்தியா உள்பட எல்லா நாடுகளுக்கும் தான்!!!

அவர் அன்று இட்ட சாபம் இன்றும் பலிக்கிறது. நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்

சுக்கிரனுக்குபிடிக்காத சமாசாரம்

“டிரிங்ஸ்”.

to be continued………………………………………………………………….

tags-   சுக்கிரன், சஞ்சீவினி மந்திரம்,  சுக்ராசாரியார்,  தேவயானி

மஹரிஷி தனுஸாக்ஷர்! (Post No.9040)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 9040

Date uploaded in London – – 16 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி தனுஸாக்ஷர்!

ச.நாகராஜன்

முன்னொரு காலத்தில் வாலதி என்ற முனிவர் ஒருவர் இருந்தார். மிகுந்த தவ வலிமை உடைய அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது இறந்தும் போனது. இதனால் அவர் மிகுந்த துக்கம் அடைந்தார்.

ஆகவே இறப்பில்லாத சாஸ்வதமான புத்திரனை அடைய வேண்டுமென்று எண்ணம் கொண்ட அவர் உக்ரமான தவம் செய்தார். தேவர்கள் அந்த முனிவரிடம் கருணை மிகக் கொண்டனர். ஆனால் அவரது புத்திரனை தேவர்கள் போல சாஸ்வதமாய் இருக்கச் செய்ய மனமற்றவர்களாய் இருந்தனர்.

அவர்கள் அவரை நோக்கி, “ ஓ! முனிவரே, இறக்கக் கூடிய ஒருவனை எப்படியானாலும் இறப்பில்லாதவனாய் ஆக்குவதென்பது முடியாத காரியம்.

என்றாலும் கூட, உமது புத்திரனுடைய உயிரானது அவனது தேக அழிவைப் பொருத்ததாக இல்லாமல் வேறு வஸ்துவின் நாசத்தைச் சார்ந்ததாக இருக்கும்” என்று கூறினர்.

அதற்கு வாலதி முனிவர், “ஓ! தேவர்களே! இதோ இந்த மலைகள் ஆதி முதல் அழிவில்லாமல் அப்படியே இருக்கின்றன.அவைகளே என் புத்திரனின் உயிரிழப்பதற்குக் கருவி, காரணமாக இருக்கட்டும்” என்றார்.

“அப்படியே ஆகுக!” என தேவர்களும் அவருக்கு வரம் அளித்தார்கள்.

சில காலம் சென்ற பிறகு வாலதி முனிவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மேதாவி என்று பெயர். அவன் இயற்கையிலேயே மிகுந்த கோபம் உடையவனாக இருந்தான். தனது பிறப்பு சம்பந்தமான விஷயங்களைக் கேட்ட அவன், இறப்பில்லாமல் இருப்போம் என எண்ணி, அகங்காரம் கொண்டு முனிவர்களை அவமதித்துக் கொண்டே இருந்தான். அவர்களுக்கு இடைஞ்சல்கள் செய்து உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருந்தான்.

      ஒரு நாள் மிகுந்த தவ சிரேஷ்டரான ‘தனுஸாக்ஷர்’ என்ற முனிவரை அவன் கண்டான். வழக்கம் போல மேதாவி அவரையும் துன்புறுத்தி இம்சை செய்தான். அவருக்கு அடங்காத கோபம் வ்ந்தது. அவனை நோக்கி அவர், “நீ சாம்பலாகக் கடவாய்” என்று சபித்தார். ஆனால் மேதாவி சாம்பலாகவில்லை.

உடனே தனுஸாக்ஷர் மேதாவியின் உயிர் போவதற்குக் காரணமாக அமையும் மலைகளை எருமைகளால் பிளந்தார். அம்மலைகள் பிளந்ததும் மேதாவி தன் உயிரை இழந்தான்.

மேதாவியின் தந்தை தன் மகனுக்கு நேர்ந்த கதியை நினைத்துத் துக்கம் தாளாமல் அவனைக் கட்டிக் கொண்டு அழுதார்.

அப்போது இதர முனிவர்கள் அவரை நோக்கி, “ஐயா! ஏன் இப்படி வீணாக அழுது புலம்புகிறீர்கள்? சாவுக்குட்பட்ட ஒருவன், விதியால் ஏற்படுவதை ஒரு போதும் எவ்விதத்தாலும் தடுக்க முடியாது” என்றனர்.

தனுஸாக்ஷர் எருமைகளைக் கொண்டு மலைகளைக் கூடப் பிளக்கும்படியான சக்தி உள்ளவராக இருந்தார்.

இந்த மாதிரி சிறிய தபஸ்விகள் வரங்களைப் பெற்று அதனால் கர்வம் கொண்டு சீக்கிரத்தில் நாசத்தை அடைகின்றனர்.

மஹாபாரதம் வன பர்வம் வாலதி ரிஷி பற்றிக் கூறுவதைக் காணலாம்.

***

tags — மஹரிஷி, தனுஸாக்ஷர்