12-10-2020 உலக இந்து சமய செய்தி மடல் (Post No.8809-B)

GURUVAYUR TEMPLE

WRITTEN BY LONDON SWAMINATHAN (NEWS EDITOR, GNANAMAYAM)

Post No. 8809 -B

Date uploaded in London – –14 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அக்டோபர் 12-ம் தேதி —   திங்கட் கிழமை

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.

உங்கள் பேட்டை, நகரத்தில் நடைபெறும் விழாக்கள், உற்சவங்கள் பற்றி எங்களுக்கு செய்தி அனுப்புங்கள்.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

XXXX 

நேற்று முன் தினம் கடைசி புரட்டாசி சனிக்கிழமையானதால் தென் மாநிலங்கள் அனைத்திலும் பெருமாள் கோவில்களில் பக்தர்கள்   கூட்டம் பெருகியது.

இதோ தமிழ்நாட்டுச் செய்திகள்…………..

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாகாண்யம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீகல்யாண  சீ னிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை ஒட்டி ஸ்ரீகல்யாண சீனிவாச பெருமாளுக்கு அன்னக்கூட உற்சவமும் அகண்ட தீபமும் ஏற்றப்பட்டு கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில் புரட்டாசி மாதம் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தா்கள் அகண்ட தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினா்.

அழகா்கோவில், திருமோகூா், யானைமலை பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

தரிசனத்தின்போது பக்தா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக  இடைவெளியை பின்பற்றினா்.

திருமோகூா் காளமேகப்பெருமாள் கோயில் சுதா்ஸன சக்கரத்தாழ்வாா் சன்னிதியில் பக்தா்கள் கூட்டம் அதிகம் இருந்தது. யானைமலை யோக  நரசிம்மா் கோயிலிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளைத் தரிசித்தனா்.

டி.கல்லுப்பட்டி அருகே ஸ்ரீ வீரபக்த ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நல்லமரம் கொட்டாணிபட்டியில் ஸ்ரீ வீர பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன. பன்னீா், பழம், விபூதி உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து செந்தூரக் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயா், பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

Xxxxxx

உத்தரப் பிரதேச மாநிலச் செய்திகள்…………..

அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு அந்த அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்ற பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்று, கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

, பூமி பூஜைக்குப் பின் கடந்த இரு மாதங்களில் மட்டும் கோயிலுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமாக நன்கொடை குவிந்துள்ளதாக ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.. ஏராளமான வெளிநாட்டு கரன்ஸிகளும் வந்துள்ளன. இதேபோல 200 கிலோவுக்கும் அதிகமான வெள்ளி மற்றும் விலை மதிப்புள்ள பல்வேறு பொருட்களும் நன்கொடையாக பக்தர்கள் வழங்கியுள்ளனர்.

இதற்கிடையில் ராமேஸ்வரத்தில் செப்டம்பர் 17ம் தேதி புறப்பட்ட ராம ரத யாத்திரை  அயோத்தி நகரை அடைந்துவிட்டது. 11 மாநிலங்கள் வழியாக 4500 கிலோமீட்டர் கடந்து சென்ற இந்த யாத்திரை ஸ்ரீ ராமபிரானின் கால்நடைப் பயணத்தை நினைவு கூர்ந்தது . அது மட்டுமல்ல. நான்கு அடி உயரமுள்ள, ஜெய் ஸ்ரீ ராம் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, 613 கிலோ எடையுள்ள மணியையும் ரத யாத்திரைக்காரர்கள் கொண்டு சென்றனர் . அயோத்தி மாநகரத்தில் ராம பிரான் கோவிலில் கட்டப்படும் இந்தக் கோவிலின் மணி ஓசையை பத்து கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கலாம் என்று  ரதத்தை ஒட்டிச் சென்ற ராஜ லட்சுமி கூறினார்

xxxxxx

இனி கேரள மாநில செய்திகள்

கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற  பத்மநாப  சுவாமி கோவில் இருக்கிறது. அங்கு கோவில் ஊழியர், அர்ச்சகர் பலருக்கு வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டதால் கோவிலை சில நாட்களுக்கு மூட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி அக்டோபர் 15ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை . ஆயினும் கோவிலுக்குள்  வழக்கமான பூஜைகளை தந்திரிகள் நடத்தி வருகின்றனர்.

கேரளத்திலுள்ள மற்றோரு முக்கியக் கோவில் குருவாயூரிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் ஆகும். அங்கு ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டபோதும் 500 பேர் மட்டுமே வருகின்றனர். வெளியூர் பக்தர்கள் வருகை தடைப்பட்டு விட்டது. பருவ மழையும், போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளும் இதற்கான காரணங்கள் என்று தேவஸ்வம் அதிகாரி மோகன்தாஸ் தெரிவித்தார். முகூர்த்த நாட்களில் ஒவ்வொரு நாளும் 100 கல்யாணங்கள் கோவிலுக்குள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய திருமணங்கள் மட்டுமே நடைபெறுகின்றன.

xxxx

இனி ஆந்திர மாநிலச் செய்திகள்

ஆந்திர மாநிலத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை புறப்பட்டுள்ளது. விஜயவாடா அருகிலுள்ள கனக துர்கா கோவிலில் ஆண்டு தோறும் பவானி தீட்சையை முடிக்கும் பக்தர்கள் லட்சக்கணக்கில் வருவார்கள். இவ்வாண்டு நவராத்ரி நாட்களில் ஒவ்வொரு நாளும் 10,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில் கிறிஸ்தவ முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டியை கோவில் நிர்வாகம் அழைத்துள்ளது . இதற்கு முன்னர் திருப்பதி பாலாஜி கோவிலும் அவரை அழைத்தபோது மனைவி இல்லாமல் அவர் மட்டும் வந்ததை இந்து சமயத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் கண்டித்தனர். இந்த முறை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

இது ஒருபுறமிருக்க அந்தப் புகழ்மிகு கனக துர்கா கோவிலுக்கு, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தலைவர் மோகன் பகவத் விஜயம் செய்தார் . அவர்க்கு கோவில் நிர்வாகம் தக்க மரியாதையை செய்தார்கள்

Xxx

பிரிட்டனிலும் இந்துக்களுக்கு மனக்கசப்பு தரும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. GCSC (ஜி.சி எஸ் சி) பாடத்திட்டத்தில் இந்து மதம் பற்றிய படிப்பும் உள்ளது. இதில் இந்துக்களை பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்தும் சில  வரிகளுக்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “சில இந்துக்கள் பயங்கரவாதம் பக்கம் திரும்பியுள்ளனர்” என்ற வரி சிலபஸில் இருப்பது,

 ‘இல்லாத ஒன்றைக் காட்டுவதாகவும் இது ஏனைய மதத்தினருடன் ஒப்பிட்டு வாக்குவாதத்தை தூண்டுவதற்காகவும் பிற மத பயங்கரவாதிகளைப் பாதுகாக்க சேர்க்கப்பட்டதாகவும்  இந்துக்கள் குற்றம் சாட்டினர் . இந்த வரிகளை எதிர்த்து எல்லோரும் குரல் எழுப்பவேண்டும் என்றும் A Q A  (ஏ க்யூ ஏ ) அமைப்புக்கு ஈ  மெயில் அனுப்பவேண்டும் என்றும் வினய் சர்மா என்பவர் சமூக ஊடகம் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

A Q A  (ஏ க்யூ ஏ) என்பது அரசு சார்பற்ற கூ ட்டமைப்பு . இது பாட திட்டங்களையும் தகுதிச் சான்றிதழ்களையும் பள்ளிக்கூட மட்டத்தில் வழங்கி வருகிறது  . இதில் இந்துக்கள் யாரும் உறுப்பினர் இல்லை; அவர்களை இதுவரை அனுமதிக்கவும் அவர்கள் மறுத்து வருகின்றனர் என்று இந்து மத கல்வி தொடர்பானோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

 இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

TAGS – ஆகாச த்வனி’, உலக இந்து சமய செய்தி மடல், 12-10-20

12-10-20 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH (Post No.8809-A)

WRITTEN BY LONDON SWAMINATHAN (NEWS EDITOR, GNANAMAYAM)

Post No. 8809 -A

Date uploaded in London – –14 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

This is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

12TH OCTOBER 2020 Weekly World Hindu News Bulletin

Namaste , Namskaram to everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at 2 pm London Time and 6-30 Pm Indian Time Every Monday.

Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

 Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘AaKaaSA DWANI’ Read by SUJATHA RENGANATHAN .

xxxx

First let me give you some good news from Uttar Pradesh,

Listeners may remember that Prime Minister, Shri Narendra Modi announced in parliament a trust to oversee the construction of a Ram Temple in Ayodhya, as ordered by the Supreme Court.

Now the trust  known as “Shri Ram Janmabhoomi Teerth Kshetra”,  has received donations exceeding rupees  one hundred crores. Apart from the cash donations, the trust has received silver vessels weighing 200 kilos.

In the mean time,


RAAMA RATHA YAATRAA HAS REACHED AYODHYA  from Rameswaram .

The yatra, organised by the Chennai-based Legal Rights Council, began on September 17 and covered a distance of 4,500 km across 11 states before reaching its destination.
on Wednesday  its participants handed over a large bell for installation at the Ram temple.

Talking to PTI, Rajlakshmi Manda, who drove the ratha, said the 4.1-foot-tall bell with ‘Jai Sri Ram’ embossed on it weighs 613 kg. Its sound can be heard within a radius of 10 km of the temple

Xxxx

Now some news coming from Kerala……

The expert committee constituted by the Kerala government to suggest measures for the safe conduct of  Sabarimala pilgrimage during Covid – 19 pandemic this season, has recommended that only 1000 devotees each should be allowed to climb up to the hill shrine on week days and two thousand each on Saturday and Sunday.

Pilgrims need Covid – 19 negative certificates  during the annual mandala-makaravilakku pilgrimage season . 

All testing and screening activities will be carried out at the Sabarimala base camp at Nilakkal

The mandala-Makaravilakku season will begin in November this year.

Devotees should carry reports to certify that they are not above 60 year of age and do not have any chronic ailments.

Xxxx

Shree Krishna temple in GURUVAAYUR is a famous temple in Kerala.

 Despite the government capping the daily number of  devotees allowed to enter the Guruvayur Sree Krishna Temple at 1,000, the  shrine now witnesses less than 50% of the permitted number of devotees. vertisement: 3:35

K B Mohandas, chairman,  Guruvayur Devaswom, told  newspapermen “Though 1,000 people are allowed to have darshan at the temple daily after booking their visit through the virtual queue system, hardly 50% of them turn up .

“Of the around 500 devotees who visit the temple daily, half of them are locals in the absence of devotees who have booked their visit.

The number of marriages held at the Guruvayur temple,  too has been drastically hit. Compared to the pre-Covid times when around 100 weddings used to take place daily at the divine abode, their number has come down to a handful now.

xxx

Another famous temple, is also affected due to virus attack.

The Sree Padmanabhaswamy Temple in Thiruvananthapuram has been closed for devotees till October 15, after at least 10 priests tested positive for COVID-19.

According to the temple authorities, daily poojas will be held by Tantris,  but devotees will not be allowed inside the temple till October 15.

xxxxxxxxxxxx

Another controversy is brewing in Andhra Pradesh

Chief Minister YS Jagan Mohan Reddy will present silk robes to Goddess Kanaka Durga atop Indrakeeladri on Moola Nakshatram day during Navaratri celebrations, according to Sri Durga temple Devasthanam

The temple trust board held a meeting on Wednesday to review arrangements for the nine-day Dasara festivities, which will be held from October 17 to 25.

The trust board passed as many as 37 resolutions regarding the arrangements for the annual temple festival and other development works. 

Addressing the media, temple Executive Officer MV Suresh Babu said the budget for the festivities is estimated at Rs 5 crore.

A few weeks ago Jagan mohan Reddy’s visit to the Balaji Temple at Tirupati created a controversy. He is a Christian and he came to the temple without his wife. Politicians and Hindu organisations criticised him for this.

In the mean time………………….

Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat offered prayers at the Goddess Kanaka Durga Temple on Saturday.

Bhagwat reached Vijayawada a day earlier to participate in the three-day RSS annual meeting .

On his visit to the hill shrine, temple Executive Officer  MV Suresh Babu and priests accorded him a traditional welcome.

Xxxx

Hindus in Britain have criticised the A Q A for linking Hindus with terrorism in the school syllabus.

AQA,  the Assessment and Qualifications Alliance, is an awarding body in England, Wales and Northern Ireland. It compiles specifications and holds examinations in various subjects at GCSE, AS and A Level and offers vocational qualifications.

AQA is a registered charity and independent of the government

Vinay sharma , a Hindu from London has brought this issues on social media and asked all Hindus concerned to send an e mail to AQA.

Mr Sharma pointed out the line in the syllabus

On Page 4 and page 11 of the GCSC syllabus it says  “some Hindus have turned to terrorism to protect Hindu beliefs.”

Hindu organisations have no representative in the AQA.  They see it as a deliberate attempt to malign Hinduism. They also point out a mountain is made out of molehill.

According to Mr Sharma their email is eos@aqa.org.uk

Hindus should ask the exam body to change these lines and any such matters in their syllabus

so that the image of Hindus and Hinduism is not wrongly projected amongst the children of this

country.

xxxx

 THAT IS THE END OF ‘AKASA DWANI’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON

READ BY SUJATHA RENGANATHAN.

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND

…………………………………………………………..

TAGS – GNANAMAYAM, ENGLISH NEWS ,121020

SWAMI’S CROSSWORD 131020 (Post No.8808)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8808

Date uploaded in London – –13 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ACROSS

1. – 6 letters—KAMSA’S CHIEF COMMANDER SENT TO KRISHNA AS MESSENGER

4. –-6– MASCULINE NAME, MEANS RED

7. –5—GRASS

8. – 6—FRMININE NAME; MEANS GENTLE, SOFT, MOONISH

9. – 5-  BLOOD

DOWN

1. – 8 letters– PLACE OF GOLDEN TEMPLE

2. – 4—DISEASE; SICKNESS IN SANSKRIT

3. – 6—MINISTER IN SANSKRIT

5.—4–LADY’S FINGER VEGETABLE; BINDI

6. – 5—NUMBER THREE

–subham–

வெந்தால் தெரியும் வெங்காய மணப்பு !(Post.8807)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8807

Date uploaded in London – –13 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வெங்காயம் பற்றிய மேலும் 4 பழமொழிகளைக் கண்டுபிடி

ANSWERS :–

1.ஈர வெங்காயத்திற்கு இருபத்துநாலு புரை எடுக்கிறது

2.வெங்காயத்துக்கு எத்தனை வாசனை காட்டினாலும் துர்கந்தத்தையே வீசும்

3.வெங்காயம் இட்ட கறிக்கு சந்தேகம் இல்லை

4.வெங்காயம் உரிக்க உரிக்க தோலாயிருப்பது போல

TAGS–   வெங்காயம்

—SUBHAM–

சித்த மருத்துவமும் அதன் சீரும் சிறப்பும் – Part 1(Post No.8806)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8806

Date uploaded in London – – 13 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

12-10-2020 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.

ஒவ்வொரு திங்களன்றும் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஞானமயம் நிகழ்ச்சியை

facebook.com/gnanamayam-இல் பார்க்கலாம்.

சித்த மருத்துவமும் அதன் சீரும் சிறப்பும்

by Kattukutty

உலக வரலாற்றில் மிக மிக தொன்மை வாய்ந்தது மருத்துவக்கலை.

ஆதி மனிதன் தனக்கு ஏற்பட்ட நோய்களுக்கும், காயங்களுக்கும்

உடல் உபாதைகளுக்கும், இலை, தழை, மரம், பூ, காய், பழம், வேர்

முதலியவற்றைக் கொண்டு தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும்

வழி முறைகளைக் கண்டுபிடித்தான்.

இதைத்தான் மருத்துவ விஞ்ஞானம் என்கிறோம்.

மருத்துவம் என்றால் என்ன ???

உயிரினங்கள் நோய்வயப்படும் போதும் உடலை இயக்க முடியாமல்

இருக்கும் பொழுதும் அந்நிலையைக் கண்டுபிடிப்பதும் அதைக்

குணப்படுத்துவதும் மீண்டும் வராமல் செய்தலும் ஆகும்.

மருத்துவத்தின் பல முறைகள்

அல்லோபதி, சித்த மருத்துவம், ஆயுர் வேதம், ஹோமியோபதி, யுனானி,

அக்குபஞ்சர்,யோகா, இயற்கை மருத்துவம், மலர் மருத்துவம்,உயிர்

வேதியல் மருத்துவம், காந்த சிகித்சை, வண்ண மருத்துவம், இசை

மருத்துவம், ஜப்பானிய காம்போ மருத்துவம், பண்டைய சீன

மருத்துவம்……. மற்றும் பல……..

சித்த மருத்துவம்

உலக மருத்துவ வரலாற்றில் மிக மிக தொன்மை வாய்ந்தது சித்த

மருத்துவம். முதலில் சித்தர்கள் யார் என்று பார்ப்போம்

“சித்” என்றாலே அறிவு என்று அர்த்தம். சித்தர்கள் தன் அறிவினாலும்

அனுபவ முறைகளினாலும் பட்டறிவினாலும் கண்ட மருத்துவ முறைகளைப்

பயன்படுத்தி அஷ்டமாசித்திகளையும் பெற்று தனது

தவ வலிமையினால் சாகா வரம் பெற்றவர்கள்.

சித்தர்கள் கண்ட உண்மை

ஆன்மீக உலகம் இவ்வுடலை “பொய் “என்று கூறும் பொழுது இவ்வடலை

“மெய்”என்று கூறியவர்கள் சித்தர்கள்!!! மற்ற எல்லா

மருத்துவ முறைகளிலிலும் மனிதனுக்கு” மரணம்”உண்டு என்று

கூறும்போது சித்தர்கள் “மரணமில்லாப் பெருவாழ்வு” வாழலாம் எனக்

கூறி வாழ்ந்தார்கள், இன்றும் வாழ்கிறார்கள்!!!

வேதியல், மற்றும் பவுதிக முறைகளில் பொருள்களைப் பகுத்தறிந்து

இவ்வுலகில் முதன்முதலில் பயன் படுத்தியவர்கள் தமிழ் சித்தர்களைத்

தவிர வேறு யாருமில்லை!!! தமிழ் நாட்டில் தொன்று தொட்டு மரபு

வழியாக அவர்களால் செய்யப்பட்டு வரும் மருத்துவமே சித்த மருத்துவம் ஆகும்.

சித்தர்களின் கண்டுபிடிப்பு

மனித உடல் 18 குணங்களைக் கொண்டது. அந்த குணங்களின்

செயல்களால் வாழ்க்கை நடக்கிறது. அவைகள் :

வியப்பு, இன்பம், உவகை, உறக்கம், கேதம், கையறவு, நரை, நினைப்பு,

நீர்வேட்கை, நோய், பசி, அச்சம், பிறப்பு, மதம், வியர்வை, வெகுளி,

வேண்டல், மரணம்.

மனித உடல் பஞ்ச பூதங்களினால் ஆனது. நீர், நிலம், நெருப்பு, காற்று,

ஆகாயம் – இந்த ஐம்பூதங்களின் பிரதிபலிப்பே இந்த உடல்…….

நோய்களுக்கான காரணங்கள்

மனித உடலில் தோன்றும் நோய்களுக்கான காரணம்,

மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம், ஆகியவற்றின் வேறுபாடுகளே

காரணம்.

சித்த முறைப்படி ஒரு ஆரோக்கியமான உடலில் உள்ள நாடித்துடிப்பு

வாத நாடி – 1 மாத்திரை அளவும்,

பித்த நாடி – 1/2 மாத்திரை அளவும்,

கப நாடி. – 1/4 மாத்திரை அளவும், துடிக்க வேண்டும்.

இவற்றில் மாறுபாடு உண்டானால் வியாதி எனத் தெரியும்.

மேலும் இந்த வாத, பித்த, கப, நாடிகள் காலை, மதியம், மாலை

என்ற மூன்று வேளைகளுக்கும் மாறும்.

இதைத்தான் வள்ளுவரும்,

“மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்

வளி முதலாகிய மூன்று” என்று கூறியுள்ளார்.

இதை முக்குற்றம் எனக் கூறுவார்கள். சித்த வைத்தியர்கள் நாடி பார்த்து

இக்குற்றங்களின் வேறுபாடுகளை களைய மருந்துகள்

அளிப்பார்கள். அக்குற்றங்கள் அதிகமானால், அல்லது குறைந்தால்

என்னன்ன விளைவுகள் உடலில் ஏற்படும் என்பதைக் காணலாம்.

to be continued…………………………………….

tags–சித்த மருத்துவம் ,  சீரும் சிறப்பும் , 

நீ டப்பா தமிழனா ? முட்டாள் வடுகனா ? (Post No.8805)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8805

Date uploaded in London – –13 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நீ டப்பா  தமிழனா ? முட்டாள் வடுகனா ?

ஒவ்வொரு மொழி பேசுவோரும் ‘காக்கைக்கும் தன்  குஞ்சு பொன் குஞ்சு’– என்ற பாணியில் தன் மொழியே உலகில் சிறந்தது, இனியது என்று தம்பட்டம் அடித்துக் கொள்வர். இதில் வியப்பு ஒன்றுமில்லை. இது போலவே ஒவ்வொரு மதத்தினரும் தன் மதமே உயர்ந்தது என்பர். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று பிற மத தூஷணம் செய்வார்கள். கிறிஸ்தவர்கள், ஏனைய மதத்தினரை பேகன் pagan என்றும் முஸ்லீம்கள் , மற்ற மதத்தினரை காஃபிர் kafir என்றும் இகழ்ந்துரைப்பர். இந்துக்கள் மட்டும் ‘வசுதைவ குடும்பகம் – இந்த உலகமே ஒரு குடும்பம்’- என்பர். மாணிக்கவாசகர் போன்றோர் அசுரர்களும் தேவர்களும் புல்லும் பூண்டும் ஒரே ஆன்மாவின் பல பிறவிகள் என்று பாடுகிறார்கள். பாரதியோ ‘காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’ என்று அதே கருத்தை எதிர் ஒலிக்கிறார்.

பாரதி போன்ற உயர்ந்த உள்ளம் படைத்த கவிஞர்கள் ‘சுந்தரத் தெலுங்கு’, என்றும் ‘பாகு மொழிகளில் புலவர்கள் போற்றும் பாரத ராணி’ என்றும், சம்ஸ்கிருத மொழியை ‘தெய்வீக சாகுந்தலம்’ தோன்றிய மொழி என்றும் பாராட்டுகிறார். ஆயினும் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிதான் இனிது’ என்றும் முடிவுசெய்கிறார்.

மொழிகள் மூலம் சண்டை போடுவது உலகெங்கிலும் நடக்கிறது. பிரெஞ்சுக்காரர்களுக்கு இங்கிலிஷ் என்றால் வெறுப்பு. ஆங்கிலேயருக்கு பிரெஞ்ச் என்றால் வெறுப்பு. பிரிட்டனுக்குள் இங்கிலீஷ்கார்கள், அருகிலுள்ள ஐரீஷ் , ஸ்காட்டிஷ், வெல்ஷ் மொழிகளையும் அவர்களது ஆங்கில உச்சரிப்புக்களையும் எள்ளி நகையாடுவர். இது டெலிவிஷன் காமெடி ஷோ comedy show க்களில் அடிக்கடி நடைபெறும்.

50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய பார்லிமெண்டில் இந்தி மொழி பற்றி காரசார விவாதம் நடந்தது. இந்தி நேற்று வந்த மொழி; அதில் என்ன இலக்கியம் இருக்கிறது? கனத்த, தடித்த டெலிபோன் டைரக்டரியும் ரயில்வே கால அட்டவணையும்தான் உளது என்று தமிழ் மொழி எம்.பிக்கள் சாடினர் ; இந்தி மொழி அபிமானியான சேத் கோவிந்ததாஸ் எழுந்து ‘அட, போடா , தமிழா, உன் பாஷை யே கர்ண கடூரமானது. ஒரு தகர டப்பாவில் கற்களைப் போட்டு குலுக்கினால் என்ன ஸப்தம் வருமோ அதுதாண்டா தமிழ்’ என்று பதில் கொடுத்தார்..

அதாவது ஒரு மொழி புரியாவிட்டால் அல்லது அந்த மொழி பேசுவோரைப் பிடிக்காவிட்டால் இப்படித் திட்டுவது வழக்கம். கிரேக்கர்கள் தங்கள் மொழியைப் பேசாதோரை barbarian பார்பேரியன் என்று அழைத்தனர். இப்போது அதன் பொருள் மிகவும் மருவி காட்டுமிராண்டி என்று மாறிவிட்டது. உண்மையில் அவர்கள் சொன்னது நமமைப் போல பண்பட்ட மொழியைப் பேசாதவர்கள் என்றுதான் சொன்னார்கள்.

இது போல நாகரீகமே இல்லாத அராபியர்கள் மிகவும் நாகரீகம் அடைந்த இரானியர் மொழியை ‘அஜம்’ என்றனர். அதாவது ‘ஊமை மொழி’ என்று பொருள். ‘ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை’ என்ற பழமொழியை நினைவுபடுத்தும்.

அரவர் என்றால் ‘அதிக சப்தம் போடுவோர்’ என்று பொருள். இதைத் தான் தெலுங்கர்கள் தமிழர்களைத் திட்டப் பயன்படுத்தினர் இதற்கு ‘பாம்பு’ என்ற கெட்ட பொருளும் பாம்புக்கால் முனிவரான பதஞ்சலி என்ற நல்ல பொருளும் உண்டு. (See Ananda Vikatan Tamil Dictionary 1935)

தமிழில் தெலுங்கர்களைக் கிண்டல் செய்யும் பல பழமொழிகள் இருக்கின்றன . அவர்களைத் தமிழர்கள் ‘வடுகர்’ என்று அழைத்தனர். வடுகர் என்றால் தெலுங்கர் என்றும் முட்டாள், மூடன் என்றும் பொருள். உண்மையில் சொல்லப்போனால் இப்படிப்பட்ட தீய பொருள் வருவது, அவர்கள் நமக்கு எதிராக மாறும்போதுதான்.

இதோ சில தெலுங்கு எதிர்ப்பு பழமொழிகள்—

வடுகச்சி அம்மா, வாலம்மா, வாலைப் பிடித்துக்கொண்டு தொங்கம்மா

வடுகச்சி காரியம்  கடுகுச்சு  முடுகுச்சு 

வடுகத் துரட்டு மகா வில்லங்கம்

வடுக வில்லங்கமாய் வந்து வாய்த்தது

வடுகனும் தமிழனும் கூட்டுப் பயிரிட்ட கதை

வடுகன்  தமிழறியான் வைக்கோலை கசு வென்பான் .

வடுகு பொடுகாச்சு,  வைக்கோற் போர் நெல்லாச்சு

வடுகு கொழுத்தால் வறையோட்டிற்கு  மாகாது.

xxx

ஆரியனா , அனார்யனா ?

‘ஆரிய’ என்றால் பண்பாடு உடையவர்கள், நாகரீக முடையோர் , ரிஷி முனிவர்களுக்குச் சமமானவர்கள்  என்றே பொருள். மாக்ஸ்முல்லர் கும்பலும் கால்ட்வெல் கும்பலும் இந்துமதத்தை அழிக்கும் நோக்கத்தோடு ‘ஆர்ய’ என்ற எழுத்தை ஆங்கிலத்தில் பெரிய Arya எழுத்தில் எழுதி ஒரு இனம் என்று காட்டத்  துவங்கினர். இதனால் இதைப் பண்பாடுடையோர் என்று மொழி பெயர்க்காமல் ஆரிய Arya என்றே எழுதத்துவங்கினர்.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழிக்கு இலக்கணம் எழுதிய பாணினி ‘ஆரிய’ என்ற சொல்லை பிராமண, க்ஷத்ரிய, வைஸ்யர்களுக்குப் பயன்படுத்தினார் . இன்றும் தமிழ்நாட்டில் ‘ஆர்ய வைஸ்ய சபா’–க்களைக் காணலாம்.

பகவத் கீதையிலும் கூட  இதற்கு உதாரணம் உளது ;

அர்ஜுனன்  கோழை போல நடந்து கொண்டவுடன் ஏன் ‘ஆரியனில்லாத’—‘பண்பாடில்லாத’- வன் போல நடந்து கொள்கிறாய்? என்று கேட்கிறார் (கீதை 2-2).

ன் க்ஷத்ரியவன் இல்லாதவன் போல் என்று கேட்கவில்லை.

ஏன் பிராமணன் போல, சூத்திரன் போல, வைஸ்யன்போல நடந்து கொள்கிறாய்? என்று கேட்கவில்லை.

நாம் யாராவது நடை உடை பாவனையில் கோளாறு இருந்தால் உடனே ‘என்ன பட்டிக்காட்டானா நீ?’ என்று திட்டுவோம்.

எதையாவது காணாதது கண்டது போல முறைத்துப் பார்த்தால் ‘பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல’ என்று திட்டுவோம் . இங்கே பட்டிக்காடு, என்பது இனமல்ல; ஜாதியுமல்ல.

இதுபோலவே ‘அனார்யாஜுஷ்டம்’ உனக்கு எங்கிருந்து வந்தது என்கிறார்.

இந்த சுலோகத்துக்கு வியாக்கியானம் எழுதிய டாக்டர் ராதாகிருஷ்ணனும் ‘வீரம், பெருந்தன்மை, மரியாதை , நேரிய அணுகுமுறை’ முதலிய குணங்களை உடையவர்கள் ஆரியர் எனப்படுவோர் என்கிறார்.

ஆக ஆரிய என்பது ஒரு உரிச் சொல்லேயன்றி (Adjective) இனப்பெயர் அல்ல.

ஆர்ய என்ற சொல் பிராகிருத / பேச்சு வழக்கில் ‘அஜ்ஜ’ என்று மருவி, தமிழில்  ‘அய்யர்’ என்று வந்தது . கௌடில்யரோ 2400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்ய என்றால் சுதந்திர மனிதன், தாச என்றால் அடிமை என்கிறார்.

வேதத்தில் சப்பை மூக்கு சீனர்களை கடுஞ்சொல் மக்கள் என்கின்றனர். அவர்களை ‘தஸ்யூ’ என்றும் அழைத்தனர். இதை ஒரு கும்பல், திராவிடர்களைத் தான் இப்படிச் சொன்னார்கள் என்று கதைகட்டிவிட்டது. சப்பை மூக்கு திராவிடர்கள் வடக்கில் வாழ்ந்ததற்கு இதுவரை எந்த சான்றும் கிடைக்கவில்லை. சிந்து-சரஸ்வதி நதி தீரத்தில் கிடைத்த எலும்புக்கூடு எல்லாம் நீண்டு உயர்ந்த பஞ்சாபியர் எலும்புக்கூடுகளே . சங்கத் தமிழர்கள் ரோமானியர்களை ‘வன் சொல் யவனர்’ என்று வருணித்தது போலவே சப்பை மூக்கு சீனர்களை கடுமையான வசனம் உடையோர் என்று அழைத்தனர். சங்கத் தமிழ் நூல்களிலும் சம்ஸ்கிருத நூல்களிலும் ‘மிலேச்சர்’ என்ற சொல் வருகிறது இதுவும் வேற்று மொழி பேசிய, நம் கலாசாரத்தைப் பின்பற்றாத கும்பலையே குறித்தது.

2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பதஞ்சலி முனிவர்கூட ஒரு இலக்கண உதாரணத்துக்கு, ‘படுத்துக்க கொண்டே உணவு சாப்பிடும் யவனர்’ என்று வசைபாடுகிறார்.

xxxx

பிளாக்,  நீக்ரோ Black, Negro

ஆக்ஸ்போர்டு அகராதியில் பறையா’ ‘ஐயோ’ போன்ற அசிங்கமான தமிழ்ச் சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நாம் எவரையும் ‘பறையா’ என்று இப்போது திட்டவும் முடியாது; கூப்பிடவும் முடியாது. அனால் ஆங்கில அகராதியில் உள்ள ‘பறையா’ என்ற சொல்லை உலகம் முழுதும் உள்ள ஆங்கிலப் பத்திரிகைகள் நாள்தோறும் பயன்படுத்துகின்றனர் தீண்டத்தகாத untouchable  என்ற பொருளில் பயன்படுத்துகின்றனர். தமிழனை அவமானப்படுத்தும் பறையா , ஐயோ போன்றவற்றை நீக்க நாம் போராடவேண்டும்.

லண்டனில் வசிக்கும் நான், கறுப்பின மக்களை ‘கறுப்பர்’ என்றோ ‘நீக்ரோ’

என்றோ அழைக்க முடியாது. கடும் அபராதம் விதிக்கப்படும். ஆப்ரிக்க- கரீபிய இனத்தினர் afro-Caribbean community என்றுதான் குறிப்பிட்ட முடியும் இதே போல ‘பறையா’ என்ற சொல்லையும் ஒழிக்க முன் வருக!

Tags-  வடுகன், அரவர், யவனர், மிலேச்சர் , பார்பேரியன், ஆரிய, தெலுங்கு எதிர்ப்பு

–subham–

கண் திருஷ்டியைத் தவிர்க்க என்ன செய்வது? – 2(Post No.8804)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8804

Date uploaded in London – – –13 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

கண் திருஷ்டியைத் தவிர்க்க என்ன செய்வது? – 2

 ச.நாகராஜன்

கிரேக்க நாகரிக இலக்கியத்தில் பொறாமையுடன் பார்க்கப்படும் பார்வை பொல்லாத பார்வை என்று குறிப்பிடப்படுகிறது. ‘பூரி நஜர்’ (தீய பார்வை) என்றும் இது பொதுவாக எங்கும் இது சொல்லப்படுகிறது.

திருஷ்டியை அறிவியல் ரீதியில் விளக்கம் கொடுக்க முன்வந்த முதல் அறிஞர் கிரேக்க நாட்டு அறிஞரான ப்ளூடார்க் (Plutarch) தான்! மனிதனின் கண்களிலிருந்து வெளிவரும் ஆற்றல் சில சமயங்களில் மிருகங்களை அல்லது குழந்தைகளைக் கூடக் கொல்லும் ஆற்றல் படைத்தது என்று அவரது சிம்போஸியாக்ஸில் (Symposiacs) அவர் விளக்குகிறார். அவர் மேலும் இது பற்றி விளக்குகையில், “சிலருக்கு இன்னும் அதீதமான ஆற்றல் கண் பார்வையில் இருக்கிறது. அவர்கள் பார்வையினாலேயே சாபம் இட வல்லவர்கள்’ என்கிறார்!

இதே போல கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹெலியோடோரஸ் (Heliodorus), “ அருமையான ஒன்றை பொறாமை கொண்ட கண்ணுடன் ஒருவன் பார்த்தானானால் சுற்றி இருக்கும் சூழ்நிலையையே அவன் மாற்றுகிறான்; உயிரைப் போக்கும் அளவு மோசமான சூழ்நிலையை உருவாக்குகிறான், அத்துடன் தனது விஷத்தைக் கண் மூலம் தனக்கு அருகில் இருக்கும் அனைத்தின் மீதும் பாய்ச்சுகிறான்” என்கிறார்.

ப்யூர்டோ ரிகோசில் பிறந்த குழந்தைகளுக்கு அஜாபச்சே (Azabache) என்ற அதிர்ஷ்டத்திற்கான தாயத்து தரப்படுகிறது.

துருக்கியில் வாழ்ந்த பழங்குடியினர் தங்களது சுவர்க்க தேவதையான் தெங்ரி நீல நிறத்துடன் இருப்பதால இளநீல வண்ணத்தை கொண்ட தாயத்துகளையும் கோபால்ட், தாமிரம் ஆகியவற்றையும் பயன்படுத்தினர். இன்றும் துருக்கியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கண் திருஷ்டி டோக்கன் வழங்கப்படுவது வழக்கம்!

இத்தாலியில் திருஷ்டிக்குப் பெயரான மால் ஓச்சியோ (Mal Occhio) என்பதையே தலைப்பாகக் கொண்டு  அகடா டே சாண்டிஸ் என்பவர் ஒரு டாகுமெண்டரி திரைப்படத்தை எடுத்தார். அதில் திருஷ்டியினால் தலைவலி, வயிற்றுவலி போன்றவை வந்து அவஸ்தைப் படுவோர் அதைப் போக்க செய்ய வேண்டிய சடங்கை விளக்குகிறார். பல அறிஞர்களைச் சந்தித்து கண் திருஷ்டி பற்றிய அவர்களது கருத்தையும் கேட்டு திரைப்படத்தில் அதை அவர் தந்துள்ளார். முடிவான கருத்து என்னவென்றால் இதை மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விட முடியாது என்பது தான்!

கி.பி. முதல் ஆறு நூற்றாண்டுகளில் வாழ்ந்த அராபியர்கள் கல், மரம் உள்ளிட்டவற்றால் செய்த தாயத்துகளை பாதுகாப்பிற்காக அணிந்தனர்.

பழைய கால ஹீ ப்ரு, எகிப்திய நாகரிகத்தைச் சேர்ந்த மக்களும் அந்தக் காலத்தில் தாயத்துகளை அணிந்தனர். ஆனால் இன்றைய நவ நாகரீக காலத்திலோ அவர்கள் ஒரு சிறிய பேப்பரில் பிரார்த்தனை மந்திரம் ஒன்றை எழுதி வைத்துக் கொள்கின்றனர். இது குர் ஆன் வசனமாக இருக்கும். இதை ஒரு வயதான ஆன்மீகப் பெரியார், தான் தேர்ந்தெடுத்த பொருள் ஒன்றில், கறுப்பு மையால் எழுதித் தருவார்.

இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் தேச மை பேப்பரில் நன்கு ஆழமாகப் பதிவதால் அந்த மைக்கு மவுசு அதிகம்.

இப்படிப் பட்ட தாயத்துக்களை இடது கையிலோ அல்லது கழுத்திலோ அணிவது பாரம்பரிய பழக்கம்.

வரலாற்றை அலசிப் பார்த்தால் பல பிரபலங்கள் தீய திருஷ்டிப் பார்வையைக் கொண்டவர்களாக இருப்பது தெரியவரும்.

இந்தப் பட்டியலில் ஆங்கிலக் கவிஞர் பைரன், போப் ஒன்பதாம் பயஸ், போப் பதிமூன்றாம் லியோ, இரண்டாம் கெய்ஸர் வில்லியம், மூன்றாம் நெப்போலியன் உள்ளிட்ட பலர் இடம் பெறுகின்றனர்.

போப் ஒன்பதாம் பயஸ் கையில் குழந்தையை வைத்துக் கொண்டிருந்த ஒரு நர்ஸை ஜன்னல் வழியே பார்த்தார். சில விநாடிகளிலேயே அந்தக் குழந்தை இறந்து விட்டது. இது அனைவருக்கும் பரவியது. இதன் பின்னர் அவர் செய்யும் ஒவ்வொரு ஆசீர்வாதமும் கெட்ட விளைவுடனேயே முடிந்தது. அவர் 1878ஆம் ஆண்டு மறைந்தார். 

இதே போல போல் போப் பதிமூன்றாம் லியோ பார்வையும் மற்றவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துமாம். அவர் போப்பாக இருந்த காலத்தில் ஏராளமான கார்டினல்கள் இறந்து விட்டதால் அவரைக் கண்டாலேயே அனைவருக்கும் பயமாம் – தனக்கும் சாவு வந்து சேருமோ என்று தான் பயம்! முத்தாய்ப்பாக அறிவியல் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். அது கண் திருஷ்டியின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஆனந்தம் தரும் செய்தியாக அமைகிறது.

 உலகம் கண்ட மிகப் பெரும் விஞ்ஞானிகளுள் ஒருவரான ராபர்ட் ஓப்பன்ஹீமர் அணுகுண்டைக் கண்டு பிடித்தவர். அதனால் அணுகுண்டின் தந்தை என்று அவர் போற்றப்படுகிறார். அணுகுண்டு வெடிப்பதை நேரில் பார்த்து மலைத்தவர் அவர்.

ஹிந்து மதத் தத்துவத்தின் பால் ஆழ்ந்த மதிப்புக் கொண்ட அவர் அணுகுண்டு வெடிப்பைப் பற்றி கீதையின் 11வது அத்தியாயத்தில் வரும் 12வது சுலோகத்தை எடுத்துக்காட்டாகக் கூறினார்.

 “திவி சூர்ய சஹஸ்ரஸ்ய” என்பதைக் கூறிய அவர், ஆயிரம் சூரியன் ஒரே சமயத்தில் உதித்தால் எப்படி இருக்குமோ அதே போல அணுகுண்டி வெடிப்பு இருந்தது என்றார்.

 ஓப்பன்ஹீமர் ஹிந்து பழக்க வழக்கங்களை நன்கு ஆராய்ந்து அவற்றின் பால் பற்றுக் கொண்டவர்.

அவரது வாழ்க்கை வரலாற்றை ஆப்ரஹாம் பயஸ் என்பவர் ஜே.ராபர்ட் ஓப்பன்ஹீமர் என்ற புத்தகத்தில் விவரிக்கிறார்.

 அதில் வரும் ஒரு செய்தி கண் திருஷ்டியைப் பற்றியது.

ராபர்ட் ஓப்பன்ஹீமர் ஹிந்துக்களின் திருஷ்டி கழிக்கும் பழக்கத்தைப் பற்றி ஆராய்ந்தார்.

அதன் முடிவில் பிரமிக்க வைக்கும் ஒரு உண்மையைக் கண்டுபிடித்தார்.

“ஹிந்துக்கள் உப்பை (கடல் உப்பு அல்லது கல் உப்பு, உப்புப் பொடி அல்ல) ஒரு சிறு பாத்திரத்தில் (பழைய கால ஆழாக்கு அல்லது படி) போட்டு இடது புறமும் வலது புறமும் தலையைச் சுற்றி திருஷ்டியைக் கழிக்கின்றனர்.

அப்போது லட்சக்கணக்கான நெகடிவ் ஐயான்கள் (Negaive Ions) அவர்கள் உடம்பை விட்டு வெளியேற்றப்படுகின்றன.” என்கிறார் அவர்.

லட்சக் கணக்கான நெகடிவ் ஐயான்கள் என்ற சொற்றொடர் குறிப்பிடத் தகுந்தது.

ஆக இப்படி உலகின் ஆகப் பெரும் விஞ்ஞானியே ஹிந்துக்களின் திருஷ்டி கழிப்பை அறிவியல் ரீதியாக ஆமோதித்துப் புகழ்கிறார்.

  எப்படி இப்படி திருஷ்டியைக் கழிக்கும் ஒரு அரிய பழக்கத்தை ஹிந்துக்களின் முனிவர்கள் கண்டுபிடித்தனர்? இது வியப்புக்குரிய ஒரு விஷயம்!

ஆகவே கண் திருஷ்டி என்பது உண்மை தான்; அதைத் தவிர்க்க ஹிந்துக்கள் பாரம்பரியமாக மேற்கொள்ளும் கல் உப்பைச் சுற்றிப் போடுதல், கர்பூர ஆரத்தி எடுத்தல் உள்ளிட்ட பாரம்பரியப் பழக்கங்கள் பொருள் பொதிந்தவையே என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

திருஷ்டியைப் பற்றி இவ்வளவு விவரங்களை அறிந்து  கொண்ட நீங்கள் இந்த ஞானமயம் நிகழ்ச்சி முடிந்த பின்னர் என்ன செய்யப் போகிறீர்கள் என்று எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும்! இப்படி திருஷ்டியைப் பற்றி எல்லோரிடமும்  அறிவியல் ரீதியாக விளக்கினால், திருஷ்டி பற்றிய உங்கள் அறிவைக் கண்டு உங்கள் மீது திருஷ்டி பட்டு விட்டால்?! கல் உப்பை ஆழாக்கில் போட்டு வீட்டில் மூத்த பெண்மணியை வைத்து உங்கள் வீட்டு வழக்கப்படி திருஷ்டி சுற்றிப் போட்டுக் கொள்ள வேண்டியது தான்!

என்ன இருந்தாலும் கண் திருஷ்டி பொல்லாதது தானே! நன்றி, வணக்கம்!

                 *           முற்றும்

tags – கண் திருஷ்டி-2

R U AN ARYAN OR A BARBARIAN; VADUGAN OR ARAVAN? (Post No.8803)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8803

Date uploaded in London – –12 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ARE YOU AN ARYAN OR ARAVAN OR BARBARIAN?

For every language speaker another language is unsweet, harsh, uncultured and uncivilized.

Vedic Hindus called the Chinese and Mongoloid people as ‘snub nosed’, ‘harsh worded’ Dasyus. Foreigners attributed it to Dravidians . But Dravidians were not in that area at all. All the skeletons discovered in Indus/Sarasvati valley have Punjabi Hindu features; none Dravidian.

Tamils called the neighbouring Telugu speakers Vadugan. It has got good and bad connotations. It meant Muttal/ Muta

 in Sanskrit. Telugus called Tamils Aravan. Noisy, boisterous lot. It has also a bad connotation- snake. So each one criticised the other.

Seth Govindadas called Tamil language in Lok Sabha as a noisy language equivalent to putting stones in a tin box and shaking. When Tamil MPs said that there is no literature in Hindi except Thick and Bulky Railway Time Table or Telephone Directory. So each one mocked at others’ languages.

This type of criticism is in every part of the world. Greeks called Turkish with a different word and Turkish used different word for the Greeks. All belittling and mocking words.

Nowadays we don’t even call a Black or Negro. In my Britain they are called a person from Afro-Caribbean community. You should not say Black. If you say Negro, you will lose your post. You will  be sacked.

Though we banned the Tamil word Pariah in Tamil Nadu, (Tamil dalit), all the English newspapers use it every day around the world to mean an ‘untouchable’. Another Tamil word with bad connotation AYYOH (alas) is also added to Oxford dictionary. Tamils must fight with them and remove both the bad words. Otherwise English newspapers will use the word Pariah for ever.

The real meaning of Arya till the Max muller gang and Caldwell gang changed it, it meant a cultured person or a civilised person or  a person equal to Himalayan saint. Kautilya used it for a man with freedom and Dasa for a slave.

Tamil Sangam poets and Devotional poets use it for saints and Lord Shiva.

Even Krishna used it in that sense in Bhagavad Gita . When Arjuna behaved like a coward Krishna did not call his attitude or his behaviour  ‘Un Kshatriya’ or ‘like a Shudra’ or ‘like a Brahman’a or ‘like a Vaisya.’

He asked him where did you get this ‘ANAARYAJUSTAM’ (B.G.2-2)?

Where did you get this ‘un Aryan attitude’?

Arya is used with brahmin, kshatriya and vaisya in Panini’s grammar.

****

The word  Arya meant ‘a person with courage and courtesy, nobility and straight dealing according to philosopher Dr S Radhakrishnan and others. Arya became Ajja in Prakrit and Ayyer in Tamil.

Sangam age Tamils criticised Yavanas (People from Italy and Greek) as Mlecha and harsh worded (Van Sol Yavanar); they simply copied it from Northern Sanskrit speakers. Pre Sangam age Patanjali also criticised Yavana Greeks

****

Greeks and Barbarians

When Kalhana used the word Mlecha in Raja Tarangini RS Pandit interpreted them as Greeks

Mlechcha , he says, literally meant the people of indistinct speech. The Greeks similarly used the word Barbarian for those  whose speech they did not understand.

The Arabs when they conquered called the highly civilised Iranians the Ajam, the dumb.

In Raja Tarangini 1-107 and 8-2763 and 2766, Kalhana used the word Mlechchas. In the 8th chapter , actually  they were the allies of Prince Bhoja .

Likewise city people mocked at villagers as uncultured, uncivilised and not mannered . in Tamil also they are called Pattikkaattan, meaning country brute.

Christians called others as Pagans and Muslims called others as Kafirs. Hindus called the entire world as one family (Vasudaiva Kutumbakam)

English always mocked at the French and the Scottish. There are English proverbs against Irish as well.

So you can always call your neighbours idiots and fools, dumb and noisy, short and ugly, but you must remember they have also got another dictionary where you are mocked at.

–subham–

காதலியை பிக்குணியாக மாற்றினார் புத்தர் (Post No.8802)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8802

Date uploaded in London – –12 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவதானம் என்றால் செயற்கரிய செயல் புரிவது என்று பொருள். தமிழ் நாட்டிலும் ஆந்திர தேசத்திலும் அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்ற அடைமொழிகளுடன் பலர் வாழ்ந்ததையும் அவர்கள் ஒரே நேரத்தில் 8 அல்லது, 10 அல்லது, பத்துக்கு மேற்பட்ட செயல்களை செய்ய வல்லவர்கள் என்றும் நாம் அறிவோம்.

புத்த மத நூல்களில் ஒன்று திவ்யாவதானம் . இது  கி.பி நாலாம் நூற்றாண்டைச்  சேர்ந்தது. இதில் புஷ்ய மித்ர சுங்கன்  மற்றும் ரோமானிய தினாரா நாணயம் பற்றி வருவதால் காலத்தை ஓரளவு கணிக்க முடிகிறது

இதிலுள்ள சார்த்தூல  கர்ணாவதானம் என்னும் பகுதி சீன மொழியில் கி.பி 265ல் மொழிபெயர்க்கப்பட்டது . அதில் வரும் ஒரு சுவையான கதை–

புத்தரின் பிரதம சீடன் ஆனந்தன் . அவன் மிக மிக வலியுறுத்தியதன் பேரில்தான் பெண்களை புத்த மத பிக்குணிகளாக புத்தர் அனுமதித்தார். அதுவும் என் மதம் நான் நினைத்த காலத்தை வீட சீக்கிரமே மறைந்துவிடும் என்று சொல்லி வருத்தத்துடன் அனுமதித்தார். நிற்க.

கௌதம புத்தர் சிராவஸ்தி நகரில் தங்கி இருந்தார். ஒருநாள் புத்தரின் முக்கிய சிஷ்யனான  ஆனந்தன், பிக்ஷையின் பொருட்டு நகர தெருக்களுக்குச் சென்றுவிட்டு  திரும்பி வந்து கொண்டிருந்தான்  . அப்போது ஒரு சண்டாள ஜாதி பெண்மணி  கிணற்றில்  தண்ணீர் இறைத்து, வந்து கொண்டிருந்தாள். அவள் பெயர் பிரகிருதி. அவளிடம் கொஞ்சம தண்ணீர் தருமாறு ஆனந்தன் கேட்க, அவள் தன ஜாதியைக் காட்டி தண்ணீர் தருவதற்கு மறுத்தாள்.

ஆனந்தன் சொன்னான்- நான் உன் குலம், கோத்திரம் பற்றிக் கேட்கவில்லை சகோதரியே; தண்ணீர் தானே கேட்டேன் என்றான். அவளும் தண்ணீர் கொடுத்தாள் . ஆனந்தனுக்குத் தண்ணீர் தாகம் போயிற்று. சண்டாளப் பெண்மணிக்கோ காதல் தாகம் பிறந்தது. உடனே தாயாரிடம் திரும்பி வந்து ஆனந்தனை,  தான் மணம் புரியமுடியாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றாள் .

அவளுடைய தாய் ஒரு பெரிய மந்திரவாதி. அவள் ஒரு வசிய மந்திரத்தை எழுதி உருவேற்றி ஆனந்தனை , பிரகிருதியின் படுக்கையில் வந்து அமரும்படி செய்தாள். ஆனந்தன் கண்களிலிருந்து திடீரென கண்ணீர் வழிந்தோடியது. அவன் புத்தரை தியானம் செய்யவே புத்தர் தோன்றி சூனியக்காரியின் வசிய மந்திரத்தை முறியடிக்கிறார்.  ஆனந்தன் பத்திரமாக புத்த மடத்துக்குத் திரும்பி வந்தபோதும் பிரகிருதியின் காதல் தீரவில்லை. அவள் ஆனந்தன் செல்லுமிடமெல்லாம் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தாள் . ஆனந்தன் புத்தர் உதவியை நாடினான்.

புத்தர் , பிரகிருதியின் காதல் தாகத்தைத் தனிப்பதாக அழைத்து ,தர்ம உபதேசம் செய்தார். ‘அடிக்க அடிக்க அம்மியும் நகருமன்றோ’; அவளும் மனம் மாறினாள் ; பிக்குணி / சன்யாசினி ஆனாள் .

இப்படி சண்டாளப் பெண்ணை சன்யாசினியாக மாற்றி மடத்தில் உட்கார வைத்தவுடன், அந்தணர் முதலிய ஜாதியினர் மன்னன் பிரசேனஜித்திடம் முறையிட்டனர்.  அவரும் மக்களின் மகஜரை- மனுவை — புத்தரிடம் கொண்டு சென்றார். பெரும் கூட்டமும் மன்னருடன் சென்றது. உடனே புத்தர் கதைத்தார்:—

“முன்னொரு காலத்தில் திரிசங்கு என்ற சண்டாள அரசன் இருந்தான். அவனுக்கு சார்த்தூல  கர்ணன் என்ற மகன் இருந்தான். அவன் கல்வி கேள்விகளில்  சிறந்தவன். அந்த ஊர் அந்தணரான புஸ்கராச்சாரி என்பவரின் மகளைத் திருமணம் செய்ய விரும்பினான். அந்தணரோ மறுத்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. ஜாதி, குலம், கோத்திர வேறுபாடுகளை திரிசங்கு கண்டித்து , பிறக்கும்போது ஏது ஜாதி என்று வினவுகிறான். அவனுடைய அபார அறிவினை மெச்சி , கல்யாணத்துக்கு அனுமதி தருகிறார் அந்தணர்.

இதைச் சொன்ன புத்தர் அந்த அந்தணரின் மகளே இந்த ஜென்மத்தில் பிரகிருதி என்னும் சண்டாளியாகவும், புஸ்கரசாரி ஆனந்தராகவும்  , சண்டாள அரசன் திரிசங்கு புத்தராகவும் வந்து பிறந்ததாகச் சொல்லி முடிக்கிரறார் .

எல்லோரும் கலைந்து சென்றனர்

புத்தர் காலத்தில் ஜாதி, குலம் , கோத்திரம் பெரும்  பிர ச்சினையாக விவாதிக்கப்பட்டது . அவருக்கு 2600 ஆண்டுகளுக்குப் பின்னரும் டெலிவிஷனும் பத்திரிக்கைகளும் எதிர்க்கட்சிகளும் ‘தலித்’ பிரச்ச்சினையைப் பெரிதாக்குவது இந்தியா மாறவில்லை என்பதைக் காட்டுகிறது.

tags-காதலி, பிக்குணி, புத்தர்

–SUBHAM–

PLEASE JOIN US MONDAY 2 PM LONDON TIME, 6-30 PM INDIAN TIME- FACEBOOK.COM/ GNANAMAYAM

 WORLD HINDU NEWS

Q AND A ON HINDUISM

COME TO FACEBOOK.COM / GNANAMAYAM EVERY MONDAY