பால் (MILK) வேண்டாம் சாவே மேல்! (Post No7642)

Written by London Swaminathan

Post No.7642

Date uploaded in London – 2 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஜான் டன் (John Donne 1572-1631) என்பவர் பிரபல ஆங்கிலக் கவிஞர். அவர் மரணப் படுக்கையில் கிடந்தார். அவருக்கு டாக்டர்  சைமன் பேக்ஸ் (Dr Simon Faxe)  சிகிச்சை அளித்து வந்தார் . இனிப்பு மருந்துகள் தருகிறேன். அத்துடன் 20 நாட்களுக்கு தொடர்ந்து பசும் பால் குடியுங்கள். உடம்பு தேறி விடும்  என்றார் . ஆனால் ஜானுக்கு பால் அறவே பிடிக்காது.கஷ்டப்பட்டு கொஞ்சம் குடித்துப் பார்த்தார். ஆயினும் முடியவில்லை. “டாக்டர்!  பால் குடிப்பதை விட எனக்கு மரணமே மேல். நான் சாவதற்குத் தயார்” என்று சொல்லிவிட்டார்.

(அவரது காலத்தில் பாலில் இப்போதுள்ள அசுத்தங்கள் கிடையாது. ஆயினும் அவர் மறுத்தார்.) இப்போது மேலை நாடுகளில் வேகன் VEGAN என்னும் பால் பொருள்  வெறுப்பு அணியினர் பெருகி வருகின்றனர். பிரபல உணவு விடுதிகளான கென்டகி ப்ரைட் சிக்கன், மேக் டொனால்ட் , சப் வே Mac Donald, Kentucky Fried Chicken, Sub Way) முதலியன vegan வேகன் உணவுப் பொருட்களை விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்கின்றன.

காரணம் என்னவெனில் மேலை நாட்டிலுள்ள பெரும்பாலோருக்கு பாலில் உள்ள லாக்டோஸ்  (Lactose)  பொருட்கள் ஒத்துக் கொள்ளாது . மேலும் தேன், பால் முதலியன தேநீக்களையும் பசு மாடுகளையும் கொடுமைப்படுத்துவதாகும் என்றும் பிரசாரம் செய்யப்படுகின்றன. ஆனால் வேத காலம் முதல் இன்று வரை ஆசாரமான ஹிந்துக்கள் கூட இவற்றைப் பூஜையிலும் பயன் படுத்தி உணவாகவும் சாப்பிடுகின்றனர்.

அந்தக் காலத்தில் பிராணிகளுக்கு மிஞ்சியது போக இருந்ததை இந்துக்கள் எடுத்தனர். இப்போதோ மேலை நாடுகளில் இயந்திரங்களை வைத்து மாடுகளில் இருந்து பாலை ஒட்டப்பிழிந்து விடுகின்றனர். யார் வீட்டிலாவது மைக்ராஸ்க்கோப் என்னும் கருவி இருந்தால் மேலை நாட்டுப் பாலில் மிதக்கும் மாட்டின் முடி, கொழுப்பு , ரத்தம் மிதப்பதைக் காணலாம்.இதனால்தான் மஹாத்மா காந்தி, ஆட்டுப் பாலுக்கு மாறினார் என்ற ஒரு தகவலும் உண்டு.

பால் மற்றும் பால் பொருட்களைத் தவிர்க்கும் ‘வேகன்’கள் இதையெல்லாம் அறிவர். மேலும் மேலை நாட்டு பசுமாடுகள் சித்திரவதை செய்யப்படுகின்றன. அவை தலையைக் கூட ஆட்டமுடியாத படி நெருக்கமாகக் கூண்டுகளில் அடைக்கப்படுகின்றன. கொழுப்புச் சத்தைக்கூட்டி மாமிசத்துக்கு வெட்டுவதற்காக பலவகை  ஊசி மருந்துகள் ஏற்றப்படுகின்றன. மாமிசப் பொடி கலந்த உணவு ஊட்டப்படுகின்றன. இந்தியாவில் ‘நாய்ப் பிழைப்பு’ என்று சொல்லுவர் . ஆனால் மேலை நாட்டில் ‘பசு மாட்டுப் பிழைப்பு’ என்றே   சொல்ல வேண்டும். அவ்வளவு கேவலமாக மாடுகள் வாழ்கின்றன. நாய்கள் ‘சோபா’ (Sofa) வில் தூங்குகின்றன . கார்களில் பவனி  வருகின்றன. மாடுகளோ அடைக்கப்பட்ட லாரிகளில் கசாப்புக்கு கடைக்குச் செல்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கும் ‘பால்’களுக்கு 15 நாளைக்குப் பின்னர் எக்ஸ்பைரி டேட்Expiry Date  (பயன்படுத்தக் கூடாது என்ற ) முத்திரை குத்துகின்றனர். இவ்வளவு காலம் இது கெடாமல் இருப்பதற்கு இதில் பல பொருட்கள் கலக்கப்படுகின்றன.

இப்பொழுது கொரோனா வைரஸ் (Corona Virus)  மக்கள் உயிரைப் பறிப்பது போல மாடுகளுக்கு பைத்திய நோய் (Mad Cow Disease) பரவியவுடன் லட்சக்கணக்கான மாடுகளை எரித்துப் புதைத்தனர். கொடுமைகளுக்கு அளவில்லை என்ற அளவுக்கு பால் பண்ணைத் தொழில் நடக்கிறது . இந்தியாவிலாவது இத்தகைய கொடுமைகள் நிகழா வண்ணம் பாதுகாப்பது மக்களின் கடமை. மாட்டு மாமிசத்தை இந்துக்கள் தடை செய்ததற்கு இந்த MAD COW DISEASE ‘மேட் கவ் டிஸீஸ்’ ஒரு காரணம் போலும் . இது மனிதர்களுக்கும் பரவ முடியும் என்று மருத்துவர்கள் ஏசிசரித்தவுடன் அத்தனை பசுமாடுகளையும் கொட்டிலுடன் எரித்தனர். இது போல பல முறை கோடிக்கணக்கான கோழிக் குஞ்சுகளையும் முட்டைகளையும் அழித்தனர் சால்மோனெல்லா (SALMONELLA)  வைரஸ் பரவுகிறது என்று அச்சுறுத்தினர்.

இதன் ஆங்கில வடிவம் இந்த ‘பிளாக்’கில் வந்தவுடன் திரு நஞ்சப்பா என்ற நேயர் எழுதிய விமர்சனத்தில் எல்லா மிருகங்களும் குழந்தைப் பருவத்தில் மட்டும் பால் குடித்துவிட்டு பின்னர் நிறுத்திவிடுகின்றன. ஆ னால் மனிதன் மட்டும் தாய்ப்பாலை விட்டவுடன் பசும்பாலை குடிப்பது அவசியமில்லையே என்று எழுதினார். இந்து சிந்தனையைத் தூண்டும் பதில்; பாலில் உள்ள கால்சியம் போன்ற சத்துக்கள் நமக்குத் தேவை என்றாலும் பசு மாடுகளைக் கொடுமைப்படுத்தக் கூடாது என்பது நியாயமே.

tags — பால், வேண்டாம், ஜான் டன், வேகன், Vegan

நூறு எழுத்துக்களில் எத்தனை மூலிகைகள் உள்ளன? (Post No.7631)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7631

Date uploaded in London – 28 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 2822020

ஒவ்வொரு மூலிகைக்கும் துவங்கும்  எழுத்தும் அதற்கான எண்களும் இதோ –

1அதி….. 7.வல்…… 11.திப்….. 15.நா…. 19.கண்….. 27.சிறு….. 33. நெ…… 37.மி…. 40.அரு…. 46.ஆடா….. 50.ஆடு……58.குங்…… 64.குப் …….69. முட…… 76.கீழா….. 81.நில….. 86.பொன்…. 92.கடு….. 97. வி……….

விடை கீழே உளது………………………

Answers

1அதிமதுரம் 7.வல்லாரை 11.திப்பிலி 15.நாயுருவி 19.கண்டங்கத்திரி 27.சிறுவழுதுணை 33. நெருஞ்சி 37.மிளகு 40.அருகம்புல் 46.ஆடாதோடை 50.ஆடுதின்னாப்பாலை, 58.குங்கிலியம் 64.குப்பைமேனி 69. முக்கத்தான் 76.கீழாநெல்லி 81.நிலவேம்பு, 86.பொன்னாங்காணி 92.கடுக்காய், 97. வில்வம்

–subham–

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்! – 4 (Post No.7603)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7603

Date uploaded in London – – 22 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்வில் சில சம்பவங்கள்! – 4

ச.நாகராஜன்

ஸ்வாமி ராமதீர்த்தரின் வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்களில் இன்னும் சில: tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு டாக்டரின் கவிதை!

ஹரித்வாரில் பூரண்ஜி (ஸ்வாமி ராமா என்ற வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இவர் தான்!) ஸ்வாமியை மிஸ்டர் குதாதத் (Mr Khudadad) என்பவரிடம் அழைத்துச் சென்றார். குதாதத் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார். பின்னால் இவர் டாக்டர் பட்டம் பெற்றார்.

அவரைச் சந்தித்த பின்  ஸ்வாமி ராமா கூறினார்; “ஏன், இவர்களையெல்லாம் என்னிடம் அழைத்து வருகிறீர்கள்? அவர்கள் ஏற்கனவே ராமாவின் ஃபாஷனில் வந்து விட்டவர்கள்! அவர்களுக்கு கற்பிக்க ராமாவிடம் ஒன்றுமே இல்லை”

டாக்டர் குதாதத்திடம் அவர் கூறினார் : “ உங்கள் பெயரை ராமாவினால் புரிந்து கொள்ள முடியவில்லை. குதா (கடவுள் என்று பொருள்) தத் (கொடுக்கப்படது) என்பது குதா என்று இருந்தாலேயே போதுமே!”

உடனடியாக குதாதத் பதில் கூறினார் இப்படி; :கண்கள் உள்ளவர்களுக்கு இது; மற்றவர்களுக்கு அது (“For those who have eyes this, for others that)

இதைக் கேட்டதும் ஸ்வாமி ராமாவிற்கு ஒரே சந்தோஷம்.பெரிய புன்னகை ஒன்றை அவர் மிளிர விட்டார்.

பேட்டியால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த குதாதத்  உடனேயே கவிதை ஒன்றை இயற்றினார்:

:ஓ, ஸ்வாமி ராமா! உங்கள் புன்னகை எவ்வளவு மர்மம் பொருந்தியதாக இருக்கிறது!

வாழ்வின் ரகசியம் அதில் உருவெடுக்கிறது”

(O, Swami Rama! How mysterious is thy smile,

The secret of life is manifest therein)

இந்த இருவரிப் பாடலில் ஸ்வாமி ராமதீர்த்தரின் முழு வாழ்க்கையுமே அடங்கி விட்டது!

முதலைகளுக்கு அஞ்சாத ராமதீர்த்தர்!

1905ஆம் ஆண்டு ஜனவரி மாதம்.

ஸ்வாமி ராமா கிஷன்கர் மாநில விடுதியில் (Kishangarh State house) தங்கியிருந்தார். பூரண் சிங்கும் அங்கு வந்து சேர்ந்தார்.

மிகவும் பிரசித்தி பெற்ற புஷ்கர் ஏரிக்கரையில் அது அமைந்திருந்தது. அந்த ஏரியோ ஏராளமான முதலைகள் நிறைந்த ஏரியாகும்.

ஸ்வாமி ராமா தன் கையில் ஒரு சிறிய மூங்கில் தடியை வைத்திருந்தார்.

பூரண் சிங்கிடம் அந்தத் தடியைக் காண்பித்த ஸ்வாமி ராமா, “இந்த மூங்கில் தடியை நீங்கள் பார்க்கவில்லையே! இது பிரமாதமானது. இது தான் ராமாவின் மந்திரக் கோல். முதலைகளை இது விரட்டி விடும். அது மட்டுமல்ல, ராமாவின் பென்சில், பேப்பர் எல்லாவற்றையும் இதில் வைத்து விடலாம்.

(ஸ்வாமி மூங்கிலின் உள்பக்கம் காலியாக இருப்பதையும் அதில் அவரது பேப்பர், பென்சில் இருப்பதையும் காண்பித்தார்). இது தான் ராமாவின் அனைத்துமே! ராமா தனது உடைமைகளை இப்படிச் சுருக்கிக் கொண்டு விட்டார்” என்று கூறிச் சிரித்தார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

மேலும் அவர் தொடர்ந்து கூறினார்;” ஒருவனின் பயணப் பெட்டி இப்படிச் சுருங்கி விட்டதென்றால் அவன் உண்மையிலேயே ஒரு ராஜா தான்! இந்த காலியிடத்திற்குள் அவன் தேவைகள் எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் அது பிரமாதம்”!

ஸ்வாமி ராமாவிற்கு ஒரு அறைக்குள் உட்கார்ந்திருப்பது என்பது பிடிக்கவே பிடிக்காது. “ராமாவிற்கு அறை என்றாலே பிடிக்காது. ஏனெனில் அது கல்லறை போல இருக்கிறது” என்பார் அவர்.

சூரிய வெளிச்சம் உள்ள மாடியில் தான் அவர் அமர்வார்!

முதலைகளை அண்ட விடாத மூங்கில் கம்பு!

ஒரு நாள் பூரண் சிங்கையும் புஷ்கர் ஏரியில் குளிக்க வருமாறு ஸ்வாமி ராமா அழைத்தார். முதலைகள் நிறைந்த அந்த ஏரியில்  ராமா திரும்பி வரவேண்டுமே என்ற பாதி பயத்துடனும் தனது உயிர் நிலைத்திருக்க வேண்டுமே என்ற முழு பயத்துடனும் பூரண் சிங் இறங்கினார். பூரண் சிங்கிற்கு நீந்தத் தெரியாது.

முதலில் இறங்கிய ராமா, “ ராமா முதலில் போன பின் பின்னால் நீங்கள் நின்றவாறே அவருக்குப் பின்னால் குளித்தால் போதும் என்று பூரண் சிங்கிடம் சொன்னார்.

முதலைகளுக்கு சரியான இரண்டு மாமிச பிண்டங்கள் வருகிறது என்றால் எப்படி இருக்கும்?

இரண்டு விரல்களால் மூக்கைப் பிடித்துக் கொண்டு நீரில் அமுங்கினார் ஸ்வாமி ராமா. tamilandvedas.com, swamiindology.blogspot.com

தனது மந்திரக்கோலை தனக்கு முன்னே நீரில அவர் மிதக்க விட்டார். ஏதோ அந்த மந்திரக்கோலை முதலைகள் தாண்டக்கூடாது என்று அவர் உத்தரவு போட்டது போல இருந்தது.

பின்னர் அவர் நீரிலிருந்து எழுந்து, “பூரண்ஜி! போகலாம், இதற்கு மேல் நெடுநேரம் நாம் இங்கிருப்பதை முதலைகள் விரும்பவில்லை என்று கூறி விட்டு கரையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார். இருவரும் கரைக்கு விரைந்தனர்.

தனது மந்திரக்கோலை ஸ்வாமி ராமா மறக்கவில்லை. ஞாபகமாக அதைக் கையில் எடுத்துக் கொண்ட அவர், “நல்ல அருமையான ஆள், இவன்! ராமாவிற்கு மிகவும் சிரத்தையாக இவன் சேவை செய்கிறான் என்றார்.

தண்ணீரைக் கண்டு அஞ்சாத நீச்சல்காரர் ஸ்வாமி ராமா!

ஆனால் அந்த ஜலத்திலேயே அவர் சமாதி நிகழும் என்று யார் தான் நினைத்தார்கள்?

*** (தொடர்ந்து செல்வோம்)

பிராணிகளுக்குக் கடிகாரம் பார்க்கத் தெரியுமா? (Post No.7600)

WRITTEN BY London swaminathan

Post No.7600

Date uploaded in London – 21 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் நேரம், காலம் (Notion of Time) பற்றிய உணர்வு உண்டா? என்ற கேள்வியை ஒரு நேயர் கேட்டவுடன், அதற்கு  லண்டன் (Daily Mail) டெயிலி மெயில் பத்திரிகை 1-4-2006ல் பதில் வெளியிட்டது. அந்த ‘பேப்பர் கட்டிங்’கை குப்பைத் தொட்டியில்   போடுவதற்கு முன்னர் மொழிபெயர்த்தால் என்ன? என்று தோன்றியது.அத்தோடு என் அனுபவத்தையும் சேர்த்துள்ளேன்; படியுங்கள்.

நாயின் மனது  (The Mind of the Dog by J R H Smythe) என்ற ஒரு புஸ்தகத்தை நாய்கள் வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் ஜே .ஆர் .எச் .ஸ்மித் எழுதினார். அதில் அவருடைய நாய் ‘பென்’ (Ben) னுக்கு கிழமைகள் கூட தெரியும் என்கிறார். காட்டு மிருகங்களை வளர்க்கும் ஒருவரிடம் அதை விலைக்கு வாங்கி இருந்தார். ஒவ்வொரு வியாழக் கிழமையும் காலையில் பென் (Ben) காணாமற்போய் விடும். மாலையில் திரும்பி வந்து விடும். ஸ்மித்துக்கு இந்த மர்மம் புரியவில்லை. ஒரு நாள் பஸ்ஸில் பயணம் செய்தபோது பஸ் கண்டக்டர் அந்த நாயை அடையாளம் கண்டுகொண்டு அதன் புதிய எஜமானரிடம் பழைய கதை ஒன்றைக் கூறினார். நாயை முதலில் வளர்த்தவர் அந்த பஸ்சில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 9 மணிக்கு நாயுடன் புறப்படுவாராம். பக்கத்திலுள்ள கிராமத்திற்குச் சென்றுவிட்டு  மாலை நேர பஸ்ஸில் சொந்த கிராமத்துக்குத் திரும்பி வருவாராம். ஏனெனில் பழைய மாஸ்டர் (Master)  வியாழக்கிழமை மட்டும் பறவைகளைச் சுடுவதற்கு இப்படிச் செல்வராம். வியாழக்கிழமைகளில் அந்த நாய் ‘நாயாக உழைத்து’ மாஸ்டருக்கு உதவி செய்யுமாம். புதிய எஜமானர் விலைக்கு வாங்கிய பின்னரும் அந்த நாய்க்கு வியாழக் கிழமை வந்தவுடன் வெளியே கிளம்பி விடுமாம். இதுதான் காலையில் போய் மாலையில் திரும்பி வருவதன் மர்மம்.

நாய்க்கு காலண்டரில் தேதி பார்க்கத் தெரியுமோ தெரியாதோ, ஆனால்  அதன் உடலுக்குள் உள்ள கடிகாரமும் காலண்டரும் வியாழக் கிழமை காலை ஒன்பது மணியை நினைவு படுத்துவது அதிசயமே.

டோக்கியோ நாய் ஹசிகோ Hachiko

ஹசிகோ என்ற உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய நாய்க்கு ஏன் டோக்கியோவில் ரயில் நிலையத்தில் சிலை வைத்து இருக்கிறார்கள் என்பது இந்த பிளாக்கில் பல முறை வெளி வந்து விட்டது. அதை வளர்த்தவர் இறந்த பின்னரும், ஒன்பது ஆண்டுகளுக்கு தன்னுடைய மாஸ்டருக்காக தினமும் ரயில் நிலையம் சென்று காத்திருந்த கதை பலரும் அறிந்ததே.

நான் 1986 டிசம்பர் 31ம் தேதி வரை இந்தியாவில் இருந்தேன். அத்தோடு என்னுடைய 16 ஆண்டு தினமணிப் பத்திரிக்கையின் சீனியர் சப் எடிட்டர் வேலை முடிந்து பி.பி.சியில் சேர்வதற்காக லண்டனு க்கு வந்தேன். மதுரையில் தினமணியில்  வேலை பார்க்கும்போது, வாரத்தில் இரண்டு நாட்களைத் தவிர மற்ற நாட்கள் எல்லாம் இரவு ஒன்பது மணிவரை அலுவலகத்தில் இருப்பேன். இரவு எட்டு மணிக்கு எல்லோருக்கும் பெரிய பன் ரொட்டியும் தேநீரும் தருவார்கள். பெரிய பன் ரொட்டியை அலுவலத்தில் உள்ள பியூனுக்குகே கொடுத்து விடுவேன். இப்படிப் பலரும் கொடுக்க துவங்கியதால் அவனே வேண்டாம் சார் என்று சொல்லிவிட்டான். ஒரு நாள்

வீட்டில் மாடிக்குப் போய் காகங்களுக்கு அதை போடுவோமே என்று போட்டால், அதைச்  சாப்பிட்ட காகம் என்ன பாஷையில் பேசியதோ தெரியவில்லை ஏராளமான காகங்கள் வந்து விட்டன. நானோ பறவை பிரியன். தினமும் இதைத் தொடர்ந்தேன்  . நூற்றுக் கணக்கில் காலையில் காகங்கள் படை எடுக்கத் துவங்கிவிட்டன.

காலையில் நான் தாமதமாகப் போனால் அவை மொட்டை மாடியிலும் அருகிலுள்ள மரங்களிலும் காத்திருக்கும். நான் போன அடுத்த நிமிடத்தில் அவை அங்கே கூடிவிடும். இதை பார்க்கையில் அவைகளும் எதோ ஒரு வகை கடிகாரங்களை வைத்திருப்பதாகவே தோன்றுகிறது!! இப்பொழுதும் இது போல பல நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். சென்னை முதலி ய நகரங்களில் தானியத்தைச் சாப்பிட பல ஆயிரம் கிளிகள் வரும் அதிசயத்தைக் ( in You Tube)  காண்கிறோம். அவைகளும் அருகிலுள்ள மரங்களில் இதற்காக காத்து இருக்கின்றன.

இது போல வீடுகளில் நாய், பூனை வளர்ப்போரும் பல கதைகளைச் சொல்லக் கேட்டு இருக்கிறேன். அவைகளுக்கு சரியான நேரத்தில் சாப்பாடு வைக்காவிடில் நாம் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், யாருடன் பேசிக்கொண்டிருந்தாலும், அவை நம் அருகில் வந்து அன்பாக வாலை ஆட்டும். என்னை மறந்து விட்டாயா? என்று வாய் திறவாமலே கேட்கும்.

காக்காய் பிடித்த கதை

இறுதியாக காக்காய் பிடிப்பது எப்படி? என்று பார்ப்போம்.அந்தக் காலத்தில் பாட்டி, தாத்தாக்கள் தங்கள் பேரக் குழந்தைகளைக் கூப்பிட்டு டேய்! கால், கைகளைப் பிடித்து விடடா! உனக்கு காலணா தரேன். மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டு என்பர். இதன்  காரணமாக, நமக்கு சினிமா போகக்  காசு, ஹோட்டலில் சாப்பிட காசு என்று  காசு வேண்டிய நேரத்தில் எல்லாம் , நாமே அவர்களிடம் சென்று ‘பாட்டி கால், கை பிடித்து விடட்டுமா?’ என்று கேட்போம், அவர்களுக்கும் விளங்கி விடும். இதுதான் காக் காய்  (கால்+ கை ) பிடித்தல் என்பதாகும் . குல் லாப் போடுவது எப்படி என்பதை முன்னரே எழுதிவிட்டேன். ஞாபகம் இருக்கிறதா? ஒரு குல்லாய் வியா பாரி – குல்லா யுடன் மரத்தடியில் தூக்கம் – அவன் கூ டையில் இருந்த குல்லாய்களை குரங்குகளும் அணிந்தன ; அவன் குல்லாய் போட்டவுடன் அவைகளும் போட்டன. அவன் குல்லாயைத் தூக்கி எறிந்தவுடன் அவைகளும் தூக்கி எறிந்தன . அதாவது ‘ஆடுற மாட்டை ஆடிக்கறக்கனும் ,பாடுற மாட்டை பாடிக்கறக்கனும்’ .

. –subham—

பாம்புச் செடி உண்மையா? (Post No.7580)

பாம்புச் செடி உண்மையா ? (Post No.7580)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7580

Date uploaded in London – 16 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

ஞாயிறு தோறும் நான் நடத்தும் SKYPE ஸ்கைப் கிளாஸ்ஸில் கம்பராமாயணம் முடித்து அகநாநூற்றுக்கு  வந்துள்ளோம் . அகனானூற்றுப் பாடலில் பாம்புச் செடி பற்றி ஒரு குறிப்பு வருகிறது. அதுபற்றி எங்களிடையேயே விவாதம் எழுந்தது. உடனே நான் காளிதாசனும் தனது காவியத்தில் ஒளிவிடும் ஜோதிர்லதா மரம் பற்றி இரண்டு இடங்களில் கூறுகிறான். தமிழ் இலக்கியத்திலும் அது இருக்கிறது. பி.பி.சி. டீ.வி. யில் (David Attenborough) டேவிட் அட்டன்பரோவின் இயற்கை (Nature) பற்றிய டாகுமெண்டரிகளை பார்த்தபோது அதற்கு விளக்கம் கிடைத்தது. அவர் காட்டிய படம் இன்றுவரை மனதைவிட்டு அகலவில்லை tamilandvedas.com, swamiindology.blogspot.com

..

அதாவது நியூஜிலாந்தின் குகைகளில் பல லட்சம் மின்மினிப் பூச்சிகள் (Fire Flies)  வசிக்கின்றன. அவை ஒளிவிடும் போது அந்தக் குகைகள் முழுதும் ஜகஜ்ஜோதியாகக் காட்சி தரும். அடுத்த நிமிடம் இருள் சூழும் . அதாவது நாம் திருவிழாக்  காலங்களில் போடும் அலங்ககார விளக்குகள் போல எரிந்தும் (on and Off) அணைந்தும் மாறி மாறி வரும். இது போல அந்தக் காலத்தில் நம் இந்தியக் காடுகளிலும் சில இடங்களில் மரம் முழுதும் மின்மினிகள் வசித்து இருக்கலாம். அதைத்தான் காளிதாசன் ஜோதிர்லதா என்றும் தமிழ் இலக்கியம் ஒளிவிடும் மரங்கள் என்றும் சொல்லுகின்றன போலும் அந்தக் கோணத்தில் இந்த அகநானுற்றுப் பாடலையும் காண்போம் என்றேன். tamilandvedas.com, swamiindology.blogspot.com

உடனே ஸ்கைப் (Skype)  மாணவர்கள் புஸ்தகங்களில் இருந்து இரண்டு விளக்கங்களைப்  படித்தார்கள். ஆனால் நேற்று பிரிட்டிஷ் லைப்ரரியில் உட்கார்ந்து பழங்கால புஸ்தகங்களைப் படித்தபோது ஒரு அதிசயச்  செய்தி கிடைத்தது.

முதலில் அகநாநூற்றுப்  பாடல்

அன்னாய்  !  வாழி , வேண்டு அன்னை! நம் படப்பைத்

……………………

……………………

வெண்கோட்டு யானை விளிபடத்துழ வும்

அகல்வாய்ப் பாந்தட் படா அர் ப்

பகலும் அஞ்சும்  பனி க்கு கடுஞ் சுரனே

—அகநானூறு பாடல் 68

– என்று 21 வரிப் பாடல் முடிகிறது.

பாடியவர் ஊட்டியார் , திணை – குறிஞ்சி

இதில் ‘அகல்வாய் பாந்தள்’ என்பது யானையை விழுங்கும் மலைப் பாம்பா அல்லது பாம்புச்  செடியா ? (Python or Snake plant?) என்பதை யே ஆராய வேண்டியிருந்தது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாடலின் மொத்தக்க கருத்தும் மிகவும் சுவையானது. இரவு நேரத்தில் காதலியை ரகசியமாக சந்திப்பதற்கு காதலன் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறான். அப்போது தோழி போய், காதலியின் அம்மா அசந்து தூங்குகிறாளா அல்லது பாசாங்கு செய்கிறாளா என்பதற்கு மூன்று கேள்விகள் கேட்கிறாள். இறுதியில் அதற்கு அம்மா பதில் சொல்லாததால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள்; கஷ்டமான வழியைக் கடந்து வந்த காதலனை சந்திக்கலாம் என்று காதலிக்கு ‘க்ரீன் சிக்னல்’ Green Signal கொடுப்பது பாடலின் பொருள்.

காதலன் கடந்து வந்த கஷ்டமான பாதையை வருணிக்கும் போது ,

“யானைக் குட்டிகளை வெள்ளம் அடித்துச் செல்கிறது. அதைக் காப்பாற்ற வெண்மையான தந்தம் உடைய ஆண் யானையும் பெண் யானையும் ஆரவாரம் செய்கின்றன. . மேலும் அங்கே இடம் அகன்ற பாம்புச் செடிகள் வேறு  உள்ளன . இவைகளை எல்லாம் கடந்து வந்திருக்கிறான் உன் காதலன் என்கிறாள் தோழி.

‘ஸ்கைப்’ கிளாஸ் முடிந்தவுடன் பழைய உரைகளைத் தேடித் படித்தேன். அதில் ‘அகல் வாய்ப் பாந்தள்’ என்பதற்கு அகன்ற வாய் உடைய பாம்புச் செடிகள் என்று சொல்லிவிட்டு அகன்ற வாயுடன் யானையை விழுங்கும் மலைப் பாம்பு என்றும் சொல்லுவர் என்று கண்டேன் tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

முன்னரே யானையை விழுங்கும் மலைப் பாம்புகள் பற்றிய சங்க இலக்கியப்  பாடல்களை இதே ‘பிளாக்’கில் எழுதியுள்ளதாலும், நானே பி.எஸ்சி. பாட்டனி (தாவரவியல்) படித்ததாலும் பாம்புச் செடி தவறென நினைத்தேன்.

ஆனால்………………………………

ஆனால் வாரத்துக்கு மூன்று முறை லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரி போய் 100 ஆண்டுப் பழமையான புஸ்தகங்களை ஆராயும் ஒரு பகுதியாக நேற்று ஒரு புஸ் தகத்தை போட்டோ காப்பி எடுத்தேன் . புஸ்தகத்தின் தலைப்பு –

கொடைக்கானல் அருகில் பண்ணைக்காட்டில் கன்னியநாதசுவாமிகள் என்ற  மாம வுன தேசிகர் பற்றிய புஸ்தகம் 1924ல் வெளியிடப்பட்டது. இதை பெரியகுளம் கற்பூர திருவேங்கட சுவாமிகள் இயற்றியிருக்கிறார். இதில் பழனிக்கும் கொடைக்கானலுக்கும் இடையே உள்ள காட்டுப் பகுதி பற்றி வருணிக்கும் பகுதியில் ‘நாகதாளி’ என்னும் செடி பாம்புபோலச் சீறி தீப்பொறி கக்கும் என்கிறார். பின்னர் மலையில் எழும் வினோத ஒலிகளை வருணிக்கிறார். tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

எனது கருத்து

நாகதாளி என்பதற்கு ஒரு வகை மரம், சப்பாத்திக்கு கள்ளிச் செடி என்று ஆனந்த விகடனின் பழைய அகராதி கூறுகிறது . தாவரவியல் விலங்கியல் படித்த நான் (Phosphorescent)  ஒளி உமிழும் மீன் வகைகள், கடல் பிராணிகள், பிளாங்க்டன் (Planktons)  என்னும் நுண்ணுயிர்கள் , சில வகை  (Glow worms)புழுக்கள், மின்மினி பூச்சிகள்  முதலியவற்றை  அறிவேன். ஆ னால் பாம்பு போல சீறும் செடி வகைகளை அறியேன்; சில காலத்துக்கு முன்னர் மனிதர்களைக் கண்டால்  நிலத்துக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் ஒரு செடியின் வீ டியோவைக்  கண்டேன். ஆயினும் இதில் 99 சதவிகிதம் மோசடி வீடியோக்கள் தான் அதிகம். . யாரும் எதையும் எடிட் செய்து என்ன அற்புதத்தை வேண்டுமானாலும் யூ  டியூ ப்பில்  காட் டமுடியும் . ஆயினும் 1920களிலேயே இப்படி பழனி மலைக்காடுகளில் நாகதாளி என்னும் பாம்புச்  செடி இருந்ததாக மக்கள் நம்பியது தெரிகிறது. ஆகையால் அகநாநூறு பாடல்  விளக்கத்தில் நாகதாளி செடி என்றும் கொள்ளலாம் .

ஒரு வேளை உண்மையில் இப்படி பாம்புச் செடிகள் இருந்து அழிந்தும் போயிருக்கலாம். சங்க இலக்கியத்தில் சர்வ சாதாரணமாக வருணிக்கப்படும் நீர் நாய்களை (Otter) நாம் இப்போது எல்லா நதிகளிலும் காண முடியவில்லை. திருவள்ளுவர், கபிலர் வருணிக்கும் முகர்ந்தால் வாட்டும் அனிச்சம் பூவையும் காணமுடியவில்லை. அதுபோல நாகதாளி என்னும் பாம்புச் செடியும் அழிந்து இருக்கலாம். tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxxx

Snake Flowers of Himalayas and North America

ஆனால் பாம்பு போலத் தோன்றும் பலவகை பூக்கள்  உடைய செடி கொடிகள் உண்டு. கூகுள் (Google) செய்தால் நிறைய செடிகளைப்  பார்க்கலாம். நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கும் நாகலிங்கப் பூக்கள் முதல் இமயமலை பாம்புப் பூ  வரை பல செடி கொ டிகள் இருக்கின்றன.

xxxx

From Wikipedia

டார்லிங்டோனியா என்பது ஓர் ஊனுண்ணித் தாவரம் ஆகும். இது சாரசீனியேசியீ என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இவற்றில் ஒரே ஒரு இனம் மட்டுமே உள்ளது; இதனை அமெரிக்க சாடிச் செடி அல்லது கலிபோர்னிய சாடிச் செடி எனவும் அழைப்பார்கள். இது ஈரமான மண் சேறு நிறைந்த சதுப்பு நிலப்பகுதியில் வளரும் ஒரு செடி ஆகும். ஆண்டுக்கு ஒரு முறை இதில் புதிய இலைகள் வளர்கின்றன. இது தரையில் வளரும் மிகச்சிறிய மட்டத்தண்டு கிழங்கைக் கொண்ட செடியாகும். மண்ணின் மேல் இலைகள் ரோஜாப்பூ இதழடுக்கு போல அமைந்திருக்கும். இந்த இலை போன்ற அமைப்பு குழாய்வடிவ ஜாடிகளாக நேராக நிமிர்ந்து செங்குத்தாக நிமிர்ந்து இருக்கும். சில நேரங்களில் இந்த இலை போன்ற அமைப்பு நுனியில் முறுக்கிக் கொண்டு, இரண்டாகப் பிளவுபட்டுக் காணப்படும். இது பாம்பு படமெடுத்து ஆடுவது போல தோற்றமளிக்கும் எனவே இதனை பாம்புச் செடி எனவும் கூறுவர்.(Wikipdia)

common name of this plant is Snake Plant.

TAGS — பாம்புச் செடி, நாகதாளி, சப்பாத்திக்கு கள்ளி, சங்க இலக்கியம்

–subham–

குங்குமப் பூ பாபா கதை (Post No.7573)

WRITTEN BY London Swaminathan

Post No.7573

Date uploaded in London – 14 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

குங்குமப் பூவே கொஞ்சசும் புறாவே — என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இங்கே போஸ்ட் செய்திருந்தேன். அதற்குப் பின்னர் தினமணி கதிரில் 2-8-1992ல் வாசகர் கடிதப் பகுதியில் சென்னை தி.வி.கிருஷ்ணசாமி எழுதிய ஒரு கடிதம் கண்டேன். அதில் அவர் கூறுவதாவது-

“12-7-1992 தினமணி கதிரில் குங்குமப் பூ பற்றி இல்லந்தோறும் இயற்கை மருந்து பகுதியில் டாக்டர் கே. வெங்கடேசன் சிறப்பித்து எழுதியிருந்தது பாராட்டத் தக்கது. இதை பற்றி மேலும் சில தகவல்கள் :-

குங்குமப் பூவின் தாயகம் தென் ஐரோப்பா . இந்தியாவிலேயே ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில்தான் இது அதிகம் விளைகின்றது.பழங்காலத்தில் ஸ்ரீநகர் அருகில் பாம்பூரில் ஷேக் பாபா என்ற துறவிக்கு கண் நோய் ஏற்பட்டது; அவர் பல மூலிகைகளைப் பயன்படுத்தியும் குணமடையாமல் வருந்தினார்.

ஒருநாள் இறைவன் அவர் கனவில் தோன்றி , குங்குப் பூவின் நிறம், அமைப்பு, இருக்குமிடம் இவற்றைக் கூறியதோடு குங்குமப் பூவை, மை  போல அரைத்து கண் மீது பூசும்படி கூறியதும் , பாபாவும் அதன்படியே செய்ய, கண் நோய் வியக்கத்தக்க வகை யில் சீக்கிரமே மறைந்து, பூரண குணம் ஏற்பட்டது  . அங்கு வாழும் மக்கள் இந்த அற்புதத்தைக் கண்டு வியந்து குங்குமப் பூவை தெய்வ மூலிகையாக கருதினர். பாபாவின் அருள் கட்டளைக்கிணங்க அந்த செடியை பெருமளவில் வளர்த்தார்கள் .பாபா சமாதி அடைந்ததும் குங்குமப்பூ தோட்டத்துக்கு அருகிலேயே அவரை அடக்கம் செய்தார்கள்.

ஒவ்வொரு வருஷமும் பாம்பூர் வாசிகள் பாபா சமாதியடைந்த தினத்தில்  சமாதி இருக்கும் இடத்திற்குச்  சென்று  வழிபடுவார்கள்; அன்றய தினம் சைவ உணவையே ஆகாரமாகக் கொள்வார்கள். குங்குமப் பூவை உலகறியச்  செய்த பெருமை பாபாவையே சாரும் .

ஸ்பெயின் நாட்டில் விழாக்காலங்களில் அரிசியோடு குங்குமப் பூவை சேர்த்து சமைப்பதை கௌரவமாகக் கருதுகிறார்கள் .

ஈரம்  படாதபடி குங்குமப் பூவை வைத்திருந்தால் இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம்.

குங்குமப் பூவை வியாபாரிகள் தங்கத்திற்குச்  சமமாகக் கருதுகிறார்கள் . ஒரு கிலோ நல்ல தரமான குங்குமப் பூ விலை ரூ.20,000 வரை மதிப்பிடப் படுகிறது (12-7-1192)”.

Xxxx

MY OLD ARTICLE

குங்குமப் பூவே கொஞ்சும் …

tamilandvedas.com › 2019/10/14 › குங்கு…

  1.  

14 Oct 2019 – குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே….. (Post No.7094). Written by London Swaminathan swami_48@yahoo.com. Date: 14 OCTOBER 2019. British Summer Time uploaded in London – 7-45 am

மஷ்ரும் , பூண்டு , வெங்காயம் சாப்பிடாதே – அம்பலவாணர் அட்வைஸ் (Post No.7565)

WRITTEN by  London Swaminathan

Post No.7565

Date uploaded in London – 12 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

நமக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அம்பலவண கவிராயர் எழுதிய 100  , அருமையான நூறு  பாடல்களில் நல்ல பல அறிவுரைகளை வழங்குகிறார். அதில் சாப்பிடக்கூடாத உணவு வகை என்ன என்று சொல்கிறார். இப்பொழுது பிட்ஸா , பாஸ்தா (PIZZA AND PASTA) போன்ற உணவுகளில் காளான் எனப்படும் மஷ்ரும் (MUSHROOM) களைச் சேர்ப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. மேலை நாடுகளில் மேலும் பல அயிட்ட (ITEMS)ங்களில் மஷ்ரும் சேர்ப்பதோடு மஷ்ரும் சூப்பு வேறு விற்பார்கள் . இதில் ஏராளமான வகைகளும் உண்டு. ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய அறப்பளிச்சுர சாதகத்திலும் இது இருப்பது வியப்பானதே. கிராமப்புறங்களில் பயன்படுத்தி இருப்பர் போலும்!

சிவன் கோவில் நிர்மால்யம் பற்றியும் அம்பல வாணர் எச்ச ரிக்கிறார் ; அவரே சிவபக்தர் என்பதால் இது நன்கு தெரிந்து இருக்கிறது. எல்லா கோவில்களிலும் பிரசாதம் வாங்கிச் சாப்பிடலாம். அதை மூட்டை கட்டிக்கொண்டு வீட்டுக்கு கொண்டுவரக் கூடாது. நிர்மாலியம் என்பது கோவிலில் மிஞ்சிப் போன பழைய பொருள்கள் ஆகும். இங்கே சிவன் கோவிலில் மிஞ்சிப்  போன பிரசாதத்தை– சமைத்த உணவைக் குறிக்கிறது. பொதுவாகவே ‘சிவன் சொத்து குல நாசம்’ எனபது பழமொழி . அதாவது கோவிலில் உள்ள எதையும் வீட்டு உபயோகத்துக்கு, சுய நலத்துக்குப் பயன்படுத்தக் கூடாது.

சாப்பிட்டக்கூடாத– அதாவது ஆன்மீக நாட்டம் உடையோர்– சாப்பிடக்கூடாத உணவு வகைகளின் பட்டியல்:–

ஆட்டுப் பால் , கடையில் விலைக்கு வாங்கும் பால், காராம் பசுவிலிருந்து கறக்கப்பட்ட பால், சுரைக்காய் , முருங்கைக் காய் ,காளான் , நீர் முலாம்பழம்,பழைய சோறு , பயனில்லாத கீரை வகைகள், பீர்க்கங்காய் , அத்திக் காய் ,தென்னை வெல்லம் , வெள்ளைப் பூண்டு, வெங்காயம்,பெருங்காயம் , வெள்ளை உப்பு, வெள்ளைக் கத்தரிக்காய் , சிவன் கோவிலில் மிஞ்சிய உணவுப் பிரசாதம் , இருளில் உள்ள உணவு ஆகியன ஆசாரம் உடைய மக்களுக்கு ஆகாது என்று பழைய நூல்கள் சொல்கின்றன என்று கவிராயர் செப்புகிறார் . இறுதியில் ஐம்புலன்களை வென்ற சிவ பெருமானை வாழ்த்தி வணங்குகிறார் கவிராயர்; இதில் ஆசாரம் உடையார்க்கு என்பது அடிக்கோடு இடவேண்டிய சொற்கள்.

நாங்கள் இத்தாலிக்கு இருமுறை சென்றபோது தினமும் சாப்பிட்ட ‘வெஜிட்டேரியன்’ உணவில் மஷ்ரூம், வெங்கயம், பூண்டு இருந்தன. வேறு எதுவும் கிடைக்கவில்லை.ஆகையால் உணவு விதிகளும் கால, தேச, வர்த்தமானத்தைப் பொறுத்ததே. மனு நீதி நூலும் பகவத் கீதையும் சொல்லும் உணவுக் கட்டுப்பாடுகளை முன்னரே எழுதிவிட்டேன்.

ஆபத்துக் காலத்திலும், நோய்களைத் தீர்ப்பதற்காகவும் எதையும் சாப்பிடலாம்.

இந்தக் காலத்தில் வெங்காயம், உள்ளிப் பூண்டு சாப்பிடா தோரைப் பார்ப்பது அரிது.அனால் இவை இரண்டும் இல்லாமலேயே சுவையான உணவு ஆக்க முடியும் என்பதற்கு பிராமணர் வீட்டு உணவு வகைகளும்  மலையாள சமையலும் சான்று பகரும் .

இன்றும்கூட, ஹரே கிருஷ்ண இயக்கத்தினரும், சுவாமி நாராயண சம்பிரதாய குஜராத்திகளும் மேற்கண்ட விலக்கப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதே  இல்லை.

tags- ஆட்டுப் பால் , மஷ்ரும் , பூண்டு , வெங்காயம், சாப்பிடாதே

XXX subham xxxx

சாப்பிடக் கூடாத இலைகள் எவை? (Post No.7554)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7554

Date uploaded in London – 9 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

சாப்பிடக் கூடாத இலைகள் எவை?

சதகம்  என்றால் 100 பாடல்களின் தொகுப்பு என்று அர்த்தம். தமிழில் நிறைய சதக நூல்கள் உள; பெரும்பாலும் இவை திருக்குறள் , நாலடியார் போல நீதிகளை உரைக்கும். ஏனைய சில பாண்டி மண்டலம் கொங்கு மண்டலம் போன்ற இடங்களின் சிறப்புகளை விதந்தோதும் . இந்துக்களுக்குப் போட்டியாக முஸ்லிம்கள் , கிறிஸ்தவர்கள் பாடிய சதகங்களும் இருக்கின்றன. நமக்கு கிடைத்த மிகப்  பழைய தமிழ்ச் சதகம் மாணிக்கவாசகர் பாடிய திருச் சதகம் ஆகும். ஆயினும் அது திருவாசகத்தின் ஒரு பகுதி என்பதால் 11 ஆம் நூற்றாண்டில் தோன்றிய கார்மண்டல சதகம் தான் முதலில் கிடைத்த தமிழ்ச் சதகம் என்பர். பழமொழிகள் நிரம்பிய தண்டலையார் சதகம் படிக்கச் சுவையானது. அம்பல வாணக் கவிராயர் பாடிய அறப்பளீச்சுர  சதகம்சதுரகிரி மலையில் உள்ள இறைவனை வேண்டிப் பாடியது. நீதிகள் , அறிவுரைகள் நிரம்பியது tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாம் எல்லோரும் வாழை இலையில் சாப்பிடுகிறோம் . தாமரை இலையில் சாப்பிடலாமா ? அரச இல்லை அல்லது புரசை இலைகளைத் தைத்து  செய்யப்படும் தையல் இலைகளில் சாப்பிடலாமா இதற்கெல்லாம் கவிராயர் சொல்லும் பதில்களைப்  பாருங்கள் .

(இதற்கிடையில் நாக்கில் தண்ணீர் ஊறவைக்கும் சுவையான செய்தி. அந்தக் காலத்தில் சில ரயில் நிலையங்களில் பட்டணம் பக்கோடா, போண்டா , வடை முதலியவற்றை தையல் இலையில் கட்டி விற்பார்கள். நானும் என் தம்பி சூரிய நாராயணனும் ந்த்ராலயத்தில் உள்ள ரா கவேந்திர சுவாமிகள்  மடத்துக்குப் போய் சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசித்தோம். முடிந்தவுடன் தையல் இலையில் சுவையான சாப்பாடு! மந்தாரை இலைகளைத் தைத்து தையல் இலை செய்வார்கள் என்று கேள்வி. நிற்க )

மா, பலா, வாழை இலைகளிலும், புன்னை, புரசு, குருக்கத்தி, பன்னிர்  இலைகளிலும் சாப்பிடலாம்.

சாப்பிடக்கூடாத இலைகள் எவை?

ஆல மரம் , அத்தி, அரசு, எருக்கு, முள் எருக்கு , தாழை , தாமரை , பாதிரி , ஆமணக்கு, சகதேவ , இத்தி மர இலைகளில் சாப்பிடக்கூடாது tamilandvedas.com, swamiindology.blogspot.com

.

அத்துடன் வேறு சில அறிவுரைகளையும் சேர்த்துச் சொல்கிறார் –

அடிக்கடி சாப்பிடாதே; குறைவாகவோ, அதிகமாகவோ சாப்பிடாதே . மேற்கண்ட இலைகளில் சிற்றுண்டி கூட  சாப்பிடக்கூடாது; தண்ணீரும் பருகக்கூடாது . இதோ பாடலும் பொழிப்புரையும் –

அறப்பளீச்சுர சதகம்

அம்பலவாணக்  கவிராயர் பாடிய இந்த நூறு பாடல்களும் கொல்லி மலையில் உள்ள அறப்பளீஸ்வரர் என்ற சிவபெருமானை நோக்கிப் பாடியதாகும். அந்த மலை, சதுர கிரி என்று அழைக்கப்படும். மதுரைக்குப் பக்கத்திலும் ஒரு சதுரகிரி உள்ளது . அது வேறு ; இது வேறு.

Singapermal Kovil Temple

—subham—

விபூதியின் மஹிமை! – 2 (Post No.7553)

paramam pavithram Baba Vibhuutim

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7553

Date uploaded in London – – 9 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

விபூதியின் மஹிமை! – 2

ச.நாகராஜன்

தேவி பாகவதம் விபூதி எப்படித் தயாரிக்கப்பட வேண்டும், அவற்றின் வகைகள், பெயர்கள், பயன்கள் என்ன என்று விரிவாகக் கூறுகிறது.

சில முக்கிய விஷயங்களை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்: –

(உத்தூளனம் என்றால் நெற்றி முழுவதும் விபூதியைப் பூசுவது என்று பொருள்; திரிபுண்டரதாரணம் என்றால் நெற்றியில் மூன்று கோடுகளை கிடைமட்டமாக விபூதியினால் தரிப்பது என்று பொருள். இதை மனதில் கொண்டு கட்டுரைகளை மேலே படிக்கலாம்.) tamilandvedas.com, swamiindology.blogspot.com

பஸ்மம் இல்லாத நெற்றியைச் சுடு,

சிவாலயம் இல்லாத கிராமத்தைச் சுடு,

சிவார்ச்சனம் இல்லாத ஜன்மத்தைச்  சுடு,

சிவாஸ்ரயம் இல்லாத வித்தையைச் சுடு, என்று இவ்வாறு வேதம் கூறுகிறது.

பிரம்மா சிருஷ்டியினாலும் திரிபுண்டரதாரணத்தைக் காண்பித்திருக்கிறார்!

எப்படியெனில்,  அவர் நெற்றியைக் குறுக்காயும், ஊர்த்துவமாயும் படைத்திருக்கிறார், இல்லையா?!

விருத்தமாகச் சிருஷ்டிக்கவில்லை அல்லவா!

மானிடருக்கேயல்லாமல் சகல பிராணிகளுக்கும் நெற்றியில் திரியக் ரேகைகள் காணப்படுகிறதில்லையா!

அப்படிக் காணப்பட்டும் கூட மூட மனிதர்கள் திரிபுண்டரதாரணம் செய்கிறதில்லை!

எவன் ஒருவன் பஸ்மம் மற்றும் ருத்திராக்ஷம் தரிக்கின்றானோ, அவனது ரோகம், வியாதி, துர்பிக்ஷம், திருடு முதலியவை நாசகரமாகும். அவன் பிரம்மத்தை அடைகிறான்.

திருமூர்த்திகளாலும், இரண்யகர்ப்பனாலும் வருணன் முதலியவர்களாலும் உமை, லட்சுமி, சரஸ்வதி என்னும் மூவராலும் ஏனைய தேவதா ஸ்திரீகளாலும் யட்ச, ராட்ஸச, கந்தர்வ, சித்த ,வித்தியாதர்களாலும், முனிவர்களாலும் பஸ்மோத்தூளனமும் திரிபுண்டரமும் தரிக்கப்பட்டிருக்கின்றன.

முக்தி என்கிற ஸ்திரீயை வசீகரம் செய்து கொள்ள வேண்டியவனுக்கு சிவலிங்கம், ருத்திராக்ஷம் பஞ்சாக்ஷரம் பஸ்மம் என்னும் இவைகள் ஔஷதங்களாகும்.

ஐஸ்வர்யமாகிய விபூதி சாதனத்தை ஒருவன் கபடத்தினாலாவது அணிவான் என்றாலும் கூட அவன் அடையும் கதியை நூறு யாகம் செய்தவன் கூட அடைய முடியாது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஒரு அரசன் தனது அடையாளம் தரிக்கப்பட்ட ஒருவனை எப்படித் தன்னவனாக எண்ணுகிறானோ அதே போல மஹாதேவனும் தனது அடையாளமாகிய பஸ்ம திரிபுண்டரங்களை அணிபவனைத் தன்னவனாகவே எண்ணுகிறான்.

சுருதிகளும் ஸ்மிருதிகளும் எல்லாப் புராணங்களும் விபூதி மகிமையையே கூறுகின்றன.

பஸ்ம ஸ்நானத்தை விட வேறு சுத்தமான ஸ்நானம் பிறிதில்லை.

ஜல ஸ்நானத்தை பிரகிருதி என்றும் பந்தம் என்றும் சொல்கின்றனர். பிரகிருதியாகிய பந்தத்தைத் தொலைப்பதற்கே இந்த பஸ்ம ஸ்நானம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்நானத்தால் ஜுரம், பிரம்ம ராட்ஸச பிசாசம், பூத சேஷ்டைகள், குஷ்டம், குன்மம், பகந்தரம் முதலிய அறுபத்திநான்கு  வாத ரோகங்களும், சிலேஷ்ம ரோகங்களும், வியாக்ரம் முதலிய துஷ்ட பயங்கர மிருகங்களும், திருடு போன்ற பயங்களும் சிங்கத்தைக் கண்ட யானையைப் போல நசித்துப் போகும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

விதியுக்தமாகிய வன்னி வீரியத்தினால் உண்டாகிய பஸ்மத்தைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இது நிச்சயம்.

இது போல் கழுத்தில் தரிப்பதால் கண்டத்தில் உண்டாகும் பாபமும், மார்பில் தரிப்பதால் மனதால் செய்த பாவமும்,

நாபியில் தரிப்பதால் ஆண்குறியினால் செய்த பாவமும்,

பிருஷ்ட பாகத்தில் தரிப்பதால் அதனால் செய்த பாவமும்,

பக்கங்களில் தரிப்பதால் பர ஸ்திரீகளைத் தழுவிய பாவமும் நசித்துப் போகும்.

பஸ்மத்தைத் தரித்தே காயத்திரியை ஜபிக்க வேண்டும்.

ஒருமுறை துர்வாச முனிவர் பிதுர் லோகம் சென்றார்.அவரை அனைவரும் மரியாதையுடன் எதிர்கொண்டழைத்தனர்.

அப்போது அங்கிருந்த கும்பீபாகம் என்னும் நரகத்திலிருந்து ஐயோ ஐயோ, கொளுத்தப்பட்டோம், அறுக்கப்பட்டோம், பிளக்கப்பட்டோம் என்று பலரும் அலறும் குரல்கள் கேட்கப்பட்டன. tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதனால் துர்வாசர் துக்கமுற்று இது யாருடைய குரல்கள் எனக் கேட்க பாவிகளின் குரல்கள் இவை, கும்பீபாகம் என்ற நரகத்திலிருந்து எழும் குரல்களே இவை என பதில் வந்தது.

துர்வாசர் அதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார்.

அந்தக் கணமே கும்பீபாகத்தில் இருந்த அனைவருக்கும் சொர்க்கத்திலிருக்கும் சுகத்திற்கும் மேலான சுகம் கிடைத்தது.

இதனால் ஆச்சரியம் அடைந்த யமதூதர்கள் விஷயத்தை எமனிடம் சொல்ல எமன் ஆச்சரியப்பட்டு விரைந்தோடி வந்தான். காரணம் புரியவில்லை அவனுக்கு. இந்திரனும் பிற தேவர்களும் வந்தனர்; பின்னர் விஷ்ணுவும் அங்கு வந்தார். அவர்களுக்கும் இதன் காரணம் புரியவில்லை!

காரணம் புரியாததால் மஹாதேவரை அனைவரும் அணுகினர்.

விஷயத்தைக் கேட்ட சிவபிரான் புன்னகை பூத்தார்.

“வேறொன்றுமில்லை, துர்வாசர் கும்பீபாக நரகத்தைக் குனிந்து பார்த்தார் இல்லையா, அவரது நெற்றியிலிருந்து சில விபூதி துளிகள் அந்த நரகத்தில் விழுந்தன. ஆகவே அந்த நரகம் சொர்க்கம் போல ஆயிற்று. இனி அதை பிதுர் தீர்த்தம் என அழையுங்கள்’ என அருளுரை புகன்றார்.

அனைவரும் விபூதி தாரண மகிமையையும் துர்வாசரின் விபூதி துளிகளின் மகிமையையும் அறிந்தனர்.

இப்படி தேவி பாகவதம் விரிவாக விபூதி மகிமையை எடுத்துரைக்கிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com

    அடுத்து சைவ சமயக் குரவர் மந்திரமாவது நீறு என்று கூறி ஆற்றிய அற்புதத்தையும் அவர் கூறும் திருநீற்றின் மகிமையையும் உணர்ந்து,  திருநீற்று மகிமைத் தொடரை முடிப்போம்.

***

அடுத்த கட்டுரையுடன் இந்தக் குறுந்தொடர் முடியும்

சிலந்தி டாக்டர் , சிலந்தி ஆஸ்பத்திரி (Post No.7550)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7550

Date uploaded in London – 8 February 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

உலகில் 43, 000 வகை சிலந்திப் பூச்சிகள் (Spiders)  உள்ளன. பெரிய,  

முடியுள்ள அமெரிக்க கண்ட சிலந்திகளை டரண்டுலா (Tarantula) 

என்பர். 

சிலந்திகளை வளர்க்கும் பைத்தியங்கள் அவைகளில் 

அபூர்வமானவற்றை 300 டாலர் கொடுத்து வாங்குகின்றனர்.

நான் தினமணி கதிரில் 2-8-1992ல் எழுதிய கட்டுரையை 

இணைத்துள்ளேன்.