தானத்தால் பெருகிய நீரும், துக்கத்தால் பெருகிய நீரும்! (Post No.3357)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 15 November 2016

 

Time uploaded in London:13-57

 

Post No.3357

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

by ச.நாகராஜன்

 

 

கடல்.

அதைப் பார்த்து வியக்காத மனிதர் உண்டா, என்ன?

அதைப் பாடாத கவிஞர் உண்டா என்ன?

ஒவ்வொரு கவிஞரும் கடலை ஒவ்வொரு பார்வையில் பார்க்கும் விதமே சுவையானது.

 

 

திருவள்ளுவர், வால்மீகி, கம்பன், திருத்தக்க தேவர், சிறுவெண்தேரையார், பாரதியார், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட நம் நாட்டுக் கவிஞர்களும் மேலை நாட்டுக் கவிஞர்களும் கடலை பல்வேறு பார்வைகளில் பார்த்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

 

அனைத்துமே அருமை தான்!

இரு பாடல்களை இங்கு பார்ப்போம்.

சிறுவெண்தேரையார் என்ற சங்க காலப் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் 362ஆம் பாடலாக மலர்கிறது.

 

 

ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த
மதி உறழ் ஆரம் மார்பில் புரளப்
பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்பப்
பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
செருப்புகன்று எடுக்கும் விசய வெண் கொடி
அணங்கு உருத்தன்ன கணங்கொள் தானை
கூற்றத்து அன்ன மாற்றரு முன்பின்
தாக்குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறை குறித்தன்று அருளாகாமையின்
அறம் குறித்தன்று பொருளாகுதலின்
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக்
கை பெய்த நீர் கடற்பரப்ப
ஆம் இருந்த அடை நல்கிச்
சோறு கொடுத்து மிகப் பெரிதும்
வீறு சான் நன் கலம் வீசி நன்றும்
சிறு வெள் என்பின் நெடு வெண் களரின்
வாய் வன் காக்கை கூகையொடு கூடிப்
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு
இல் என்று இல் வயின் பெயர மெல்ல
இடஞ் சிறிது ஒதுங்கல் அஞ்சி
உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே.

 

 

    பாட்டுடைத் தலைவன் சாதாரணமானவன் அல்லன். அவனைப் புகழ வந்த புலவர் சூரியனையும் சந்திரனையும் இணைக்கிறார். ஞாயிறு அன்ன ஆய மணி மிடைந்தவன்.மதி உறழ ஆரம்  மார்பில் கொண்டவன். பலி பெற்ற முரசுகள் போர்க்களப் பாசறையில் முழங்குகின்றன. விஜய வெண்கொடியை ஏந்தி பெரும் செயலைச் செய்யும் வீரர்கள் நாடெங்கும் பரந்துள்ளனர். அவர்களைப் பார்க்கவே கூற்றுவன் போல உள்ளது.

 

 

ஓ, பிராமணர்களே! தாக்குகின்ற குரல்களைக் (தாக்கி வரும் பகைவர்களின் ஒலிகளைக்) கேளுங்கள்! இது நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்பட்ட ஒன்று அல்ல! இது அருள் இல்லாதது என்பதால் இது அறம் சார்ந்த ஒன்று அல்ல. இது பொருள் குறித்தது. அறத்திற்கும் அருளுக்கும் சம்பந்தமில்லாத (மெடீரியலிஸம் குறித்த) ஒன்று. மருளும் தீர்ந்தது. மயக்கமும் ஒழிந்தது.

தலைவன் அந்தணர்களின் கையில் நீர் பெய்து வாரி வழங்குகிறான்.

அவன் இப்படிக் கொடுத்து கீழே விழும் நீர் எவ்வளவு தெரியுமா?

“கை பெய்த நீர் கடற் பரப்ப

 

 

அவன் கையிலிருந்து வழிந்த நீர் கடலாக ஆயிற்று.

அவன் வளம் கொழிக்கும் நிலங்களைக் கொடுத்தான். சோறு கொடுத்தான். விலையே மதிக்க முடியாத நல் பரிசுகளை அளித்தான். வெள்ளை எலும்புகள் சிதறிக் கிடக்க, வன் வாய் உள்ள காக்கை மற்றும் ஆந்தைகள் ஆகியவை இருக்கும் பகலிலும் நிரம்பியுள்ள காட்டில் உள்ள அவனது வீடு பேச்சுச் சத்தம் நிறைந்த சுற்றத்தாரால் நிரம்பி உள்ளது. ஆகவே இடம் சிறிது தான் இருக்கிறது என்று பயந்து அங்கிருந்து தன் உடலுடன் கிளம்பி பெரும் வீரர்கள் உள்ள நாட்டை நோக்கிச் சண்டையிட அவன் விரும்பிக் கிளம்புகிறான்.

 

   இந்தப் பாடலில் கடலை உவமையாகச் சொல்ல வருகிறார் கவிஞர். தலைவன் கையினால் நீர் சொரிந்து தானம் வழங்க அந்த நீர் கடல் எனப் பெருகிற்றாம்!

 

கடலைத் தானத்தால் கொடுத்த நீர் பெருக்கிற்கு சங்கப் புலவர் இப்படி ஒப்பிட்டார் என்றால் இன்னொரு புலவர் துக்கத்தால் பெருகிய நீருக்கு கடலை ஒப்பிடுகிறார்.

 

இரு வேறு பார்வைகள்; ஆனால் கடல் ஒன்று தான்!

 

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக் சிந்தாமணியில் வரும் பாடலைப் பார்ப்போம். பதுமையார் இலம்பகத்தில் அழகியான பதுமைக்கு அவளது தோழி கூறுவதாக அமைந்துள்ள பாடல் இது:

 

“பிரிந்தவர்க்கு இரங்கிப் பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள்

சொரிந்தவை தொகுத்து நோக்கில் தொடுகடல் வெள்ளம் ஆற்றா

முரிந்த நல் பிறவி மேனாள் முற்றிழை இன்னும் நோக்காய்

பரிந்து அழுவதற்குப் பாவாய் அடியிட்டவாறு கண்டாய்!

                          (சீவக சிந்தாமணி பாடல் எண் 1391)

 

 

பேதுற்று – வருத்தமடைந்து

தொடுகடல் – தோண்டப்பட்ட கடல்

ஆற்றா – அள்விடமுடியாது

முரிந்த –  கெட்ட

 

பாடலின் பொருள் :

 

பிரிந்து சென்ற கணவர்களை நினைத்து வருந்தி அழுதவர்கள் விட்ட கண்ணீரைக் கணக்கெடுத்துப் பார்த்தால் விண்ணைத் தொடவிருந்த கடல் நீரும் அதற்கு உவமை சொல்லப் பொருந்தாது. இழைமணி அணிந்தவளே! இன்னும் கேட்பாய்! முற்பிறவியில் அப்படி நாம் அழுது சிந்திய கண்ணீர்ரே, இப்பிறவியில் நாம் அப்படி வருந்தி அழுவதற்கு அடிக்கல் இட்டது போல அமைகிறது என்பதை அறிவாயாக!

 

   ஒவ்வொரு பிறவியிலும் பிரிந்த கணவனை எண்ணி அழுத கண்ணீர் வெள்ளம் கடலை விடப் பெரியது எனச் சொல்லி திருத்தக்க தேவர் கடல் நீரை கண்ணீர் வெள்ளத்திற்கு ஒப்பிடுகிறார்.

 

   அத்தனை பிறவிகள்! அத்தனை கணவர்கள்! அத்தனை பிரிவுகள்! அத்தனை ஆற்ற ஓண்ணா அழுகை ஓலம்!

 

    கடலைக் கண்டவுடன் பிறவிகளின் எண்ண முடியாத் தொடர்ச்சியும் அதில் பிரிவின் வேதனையும் அதனால் விளைந்த கண்ணீரும் கவிஞருக்கு நினைவில் வருகிறது; கவிதை மலர்கிறது.

 

பிறவிப் பெருங்கடல் என்றார் வள்ளுவரும்.

பிற ஆழி நீந்தல் அரிது என்ற அவர் யாருக்குப் பிற ஆழி நீந்த முடியாத ஒன்று என்பதையும் விளக்கமுறச் சொல்கிறார்.

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தாருக்கு அல்லால் — பிற ஆழி நீந்தல் அரிது.

 

 

அற ஆழி என்பதை தர்ம சக்கரம் என்று விளக்குகிறார் பரிமேலழகர்.

தர்ம சக்கரம் ஏந்திய அறமுடைய இறைவனின் அடி சேர்ந்தவர்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் முடியாது..

 

கடலை மட்டும் எடுத்துக் கொண்டு உலக இலக்கியங்களை அலச ஆரம்பித்தால் நாம் தெரிந்து கொள்ளும் உண்மைகள் ஏராளம். நூற்றுக் கணக்கான சுவையான பாடல்கள் உள்ளன.

********

 

 

மரங்களை அலங்கரித்த மங்கையர்: கம்பன் தரும் அதிசயத்தகவல் (Post No.3248)

img_4055

Written by London Swaminathan

 

Date: 13 October 2016

 

Time uploaded in London: 20-36

 

Post No.3248

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

முல்லைக்கு தேர் ஈந்த பாரி வள்ளலை நாம் அறிவோம். ஒரு முல்லைக் கொடி காற்றில், கொழு கொம்பு இல்லாமல் தத்தளிக்கிறதே என்று வருந்தி தனது தேரையே ஒரு முல்லைக் கொடிககு அளித்தான் தமிழ் மன்னன் பாரி.

 

இதூபோல உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலம் நாடகத்தில் கானகத்தில் வளர்ந்த, சகுந்தலை என்ற பெண், செடிகொடி களுக்குத் தண்ணீர் விட்டுவிட்டு அந்த நீரை பறவைகள் அருந்துவதைப் பார்த்துவிட்டுத்தான் சாப்பிடப்போவாள் என்றும் எல்லாப் ண்களுக்கும் உள்ள பூச்சூடும் ஆர்வம் அவளுக்கு இருந்தாலும் பூவைப் பறித்தால் அதன் அழகு போய்விடுமே என்று எண்ணி பூவைக்கூட செடியிலிருந்து பறிக்க மாட்டாள் என்றும் காளிதாசன் பாடுகிறான். அது மட்டுமல்ல பூங்கொடிகள் முதல் முதலில் பூத்த நாள ன்று சகுந்தலை ஒரு விழாக் கொண்டாடினாள் என்றும் காளிதாசன் பாடுகிறான்,(அபிக்ஞான சாகுந்தலம், நாடகம் அங்கம் 4)

 

நம்முடைய கிராமப்புறங்களில் பல மரங்களில், குழந்தை பிறக்காதவர்கள் தொட்டில் போன்ற பொம்மைகளைத் தொங்கவிடுவர். இன்னும் சிலர் தனது துணிமணிகளிலிருந்து நூல் அல்லது, கந்தைகளைக் கிழித்து தொங்கவிடுவர். இது போல மேலை நாடுகளிலும் அந்தக் காலத்தில் வழக்கம் இருந்தது. இப்போது பார்ப்பது அரிது. இது எல்லாம் பிரதி பலனை எதிர்பார்த்துச் செய்யும் செயல்கள். .ஆனால் சகுந்தலையும் பாரியும் பிரதிபலன் எதிர்பாராமல் தாவரங்களையும் தன்னுயிராகக் கருதினர். இது போல செடிகொடிகளை சகோதரியாகக் கருதிய பாடல் சங்க இலக்கியத்திலும் இருப்பதை முன்னரே காட்டிவிட்டேன்.

img_4033

கம்பன் தரும் ஒரு அரிய தகவல்– மரங்களை பெண்கள் அலங்கரித்த செயல் பற்றியது!

 

கம்ப ராமாயணம், பால காண்டத்தில் வரும் பாடல் இதோ:-

பூ எலாம் கொய்து கொள்ளப் பொலிவு இல துவள நோக்கி

யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி

கோவையும் வடமும் நாணும் குழைகளும் குழையப் பூட்டி

பாவையர் பனிமென் கொம்பை நோக்கினர் புரிந்து நிற்பார்

 

பொருள்:-

பூங்கொடிகளில் உள்ள மலர்களை எல்லாம் பெண்கள் பறித்துவிட்டனர். அடக் கடவுளே! நம் கணவன்மார்கள் வந்தபோது இந்தச் செடிகள் மொட்டையாக நின்றால் அழகாய் இராதே என்று எண்ணி தாம் அணிந்திருந்த முத்துமாலை, இரத்தின மாலை, தங்க வடங்கள், காதணிகள் எல்லா வற்றையும் கொடிகளுக்கும் செடிகளுக்கும் சூட்டி அவை அந்தக் கனத்தில் தாழத் துவங்கினவாம். பிறகு அந்தப் புதுப்பொலிவுபெற்ற செடிகொடிகளைக் கண்டு மகிழ்ந்தனராம்.

 

தாவரங்களின் மீது என்னே அன்பு. மேல நாடுகளில் நாய்களுக்கும் பூனைகளுக்கும் சட்டை, செருப்பு போட்டு மகிழும் மக்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் செடிகொடிகளுக்கு ஆபரணங்களைப் போட்டு அழகு பார்த்தது நம் நாட்டில்தான். அதுவும் கம்பன் மட்டுமே தரும் தகவல் இது!

img_4063

வாழ்க செடி கொடிகள்: வளர்க மரங்கள்!!

 

 

விஜய தசமி நாளில் வன்னி மரத்தை வழிபடுவது ஏன்?(Post No.3245)

vanni

Written by London Swaminathan

 

Date: 12 October 2016

 

Time uploaded in London: 8-49 AM

 

Post No.3245

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

1381580945_shami_tree

உலகிலேயே அற்புதமான மதம் இந்துமதம். உலகில் ஐந்து வல்லரசுகளுக்குப் பின்னர் முதலில் அணுகுண்டு வெடித்த வளரும் நாடு இந்தியாதான்! உலகில் ஐந்து வல்லரசுகளுக்குப் பின்னர் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதும் இந்தியாதான். உலகிலேயே அதிகமான கம்ப்யூட்டர் அலுவலர்களை அனுப்புவது இந்தியாதான். இப்படி அணுயுகத்திலும், விண்வெளி யுகத்திலும் முன்னனியில் நிற்கும் இந்தியா 3000 ஆண்டுகளுக்கு முன்னர் மரங்களுக்கும் மிருகங்களுக்கும் கொடுத்த மதிப்பையும் மரியாதையையும் இன்றும் கொடுக்கிறது!

 

ஒரு மூலையில் நாக பஞ்சமி என்ற பெயரில் பாம்பு வழிபாடு. மற்றொரு புறத்தில் தேள்கள் வழிபாடு. ராஜஸ்தானில் ஒரு கோவிலில் எலிகள் வழிபாடு. ஊர் தோறும் மர வழிபாடு. அருகம் புல்லுக்கும், தர்ப்பைப் புல்லுக்கும்—சந்யாசிகளுக்குத் தரும் மரியாதை!! துளசியும் வில்வமும் தினசரி பூஜையில்!!!

 

இப்படி இருப்பதைப் பார்த்து முன்னர் மூட நம்பிக்கை என்று எழுதியவர்கள் எல்லாம், இப்பொழுது இந்துக்கள்தான் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்துகின்றனர்; இந்துக்கள்தான், புறச் சூழ்நிலையைப் பாதிக்காமல் பண்டிகை கொண்டாடுகின்றனர் என்று புகழத் துவங்கியுள்ளனர்.

 

வன்னி மர வழிபாடு மஹாபாரத காலத்திலிருந்து இருக்கிறது. அரச மர வழிபாடு புத்தருக்கும் முன்னாலேயே இருக்கிறது. அரச மரத்தின் பெயரில் பிப்பலாடன் முதலி ய ரிஷிகள் இருந்திருக்கின்றனர்.

 

12 ஆண்டு வனவாசமும் ஒரு ஆண்டு அஞ்ஞாத வாசமும் (மறைந்திருந்து வாழுதல்) விதிக்கப்பட்டதால் பாண்டவர்கள் ஐவரும் 13-ஆவது ஆண்டில் விராட தேசத்துக்குச் சென்றனர்.

 

ஒவ்வொருவரும் ஒரு மாறுவேடத்தில் விராடன் அரண்மனையில் வேலை யில் புகுந்தனர். அவர்கள் விராட தேசத்தில் மாறுவேடத்தில் இருப்பதை துர்யோதனன், உளவாளிகள் மூலம் கண்டுபித்தான் போலும். விராட தேசத்தில் பசுக்களை கவரும் ‘ஆநிறை கவர்த’லில் ஈடுபட்டான். இந்த வேத கால வழக்கம் புற நானூற்றிலும் உள்ளது அப்போது  அர்ஜுனன் சண்டைக்குப் புற[ப்பட்டான். ஆனால் அவன் விராடன் சபையில் அலி வேடம் போட்டுக்கொண்டு ஆடல் பாடல் சொல்லிக் கொடுத்ததால், முன்கூட்டியே,  தனக்கு சிவபெருமான் கொடுத்த ஆயுதங்களை வன்னி மரத்துக்கு அடியில் ஒளித்து வைத்திருந்தான். சண்டைக்குப் போவதற்கு முன்னர்  அவைகளைத் தோண்டி யெடுத்தான்.

 

துரியோதனனின் படைகளச் சிதறடித்து, ஆநிரைகளை (பசு மாடுகளை) மீட்டு பின்னர் வன்னி மர பூஜை செய்தான்  .

 

இந்த ஆண்டு மைசூர் தசரா விழாவில்கூட வன்னி மர பூஜை நடைபெற்றது. நாடு முழுதும் மன்னர்களும் க்ஷத்ரியர்களும் செய்யும் பூஜை இது. ஒரு வேளை அர்ஜுனனுக்கும் முன்னரே இந்த வழக்கம் இருந்ததால்தான் அர்ஜுனனும் இதைச் செய்தான் போலும். ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

vanni-2

விஜய தசமி நாளில் வன்னி மரத்தை வழிபடுவது ஏன்?(Post No.3245)

சமீ விருட்சம் எனப்படும் வன்னி மரத்தைப் பூஜை செய்கையில் சொல்லப்படும் ஸ்லோகங்கள்:-

 

(1).சமீ சமயமேபாபம், சமீ சத்ரு விநாசினீ, அர்ஜுனஸ்ய தனுர் தாரி, ராமஸ்ய ப்ரியதர்சினி

 

 

(2).சமீம் கமல பத்ராக்ஷீம், சமீம் கடக தரரிணீம், ஆரோஹது சமீம் லக்ஷ்மீம், ந்ருணாம் ஆயுஷ்யவர்தனீம்

 

(3).நமோ விஸ்வாச வ்ருக்ஷாய பார்த்த சஸ்த்ர தாரிணே, துவத்தஹ விரத பிரதீச்யாமி, ஸதா விஜயதாபவ.

 

(4).தர்மாத்மா சத்ய சந்தஸ்ச, ராமோதாசா திர்யதி, பௌருஷேசா பிரதி துவந்துவம், சரைநம் ஜஹிராவணீம்

 

(5).அமங்களாய சமனீம், துஷ்கிருதஸ்ய நாசினீம், துஸ் ஸ்வப்ன ஹாரிணீம் தன்னியாம், பிரபத்தியேஹம் சமீம் சுபாம்.

 

இந்த ஐந்து ஸ்லோகங்களையும் சொல்லி சமீம் மரத்தை/ வன்னி மரத்தை வழிபடுவது காலாகாலமாகப் பின்பற்றப்படுகிறது.

 

வாழ்க வன்னி மரம்! வளர்க சமீ மரம்!!

 

–Subham–

Why do Hindus Worship Vanni /Shami Tree on Vijaya Dasami Day? (Post No.3242)

1381580945_shami_tree

Written by London Swaminathan

 

Date: 11 October 2016

 

Time uploaded in London: 20-19

 

Post No.3242

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

Hindus are the most Nature-loving people on earth. They worship trees, rivers, animals, Birds and even insexcts lie ants. For every creature they have a story in their vast literature. Of all the tress the Ficus genus is the most loved and revered. Ficus Indica (Banyan Tree), Ficus Religiosa (Peepal tree/Asvatta Tree) and Ficus Udumbarata (Fig Tree). Bilva Tree, Badari Tree, Neem Tree, Mango Tree, Sami (Vanni) Tree , Tulsi Plant, Dharba Grass, Arka Grass and lot of Sthala Vrkshas (Temple Trees in South India) are also worshipped by the Hindus.most of the fragrant flowers are used in the religious rituals.

vanni

Of all the trees Vanni (Prosopis cineraria) has a special significance like the Asvatta Tree. The story of vanni tree is found in the Mahabharata. Following this tradition, Hindus do Puka to Vanni Tree. The Story is as follows:–

 

Arjuna, one of the Fiva Pandavas,had buried his weapons under the vanni Tree during his stay in the forest. He had to go to forest for 12 years along with his four brothers and in addition to 12 years he had to live incognito. Arjuna had won celestial weapons from Lord Siva by his austerities.

 

While in exile they all entered the palace of King Virata as servants. Arjuna disguised as a eunuch, taught music and dancing. The other brothers took suitable jobs according to their inherent skills. Princess Draupadi became a waiting woman in the same palace.

 

King Virata was troubled by cattle radis. Duryothana tried this trick to find out whether the Pandavas are actually living there. He would have got information through his spies to this effect. The enemies descended on the Kingdom of Virata while he was absent. Arjuna went into fight as a charioteer to the king. But before going to fight he dug out the buried celestial weapons from under the vanni Tree. Naturally with such weapons, he routed the enemies and rescued the cattle. Arjuna then took a vow to worship the Vanni tree every year.

 

Goddess Aparajita (Durga) is worshipped under this tree.

 

vanni-2

Tiruvanmiyur near Chennai has Vanni Tree as Sthala Vriksha (see the  picture)

On the Vijaya dasami day, Goddess killed the demon Mahisa Asuran. On that day Hindus worship Sami Tree with the following Sloka:-

 

Samii samayamepaapam , sami satru vinaasini, Arjunasya Dhanurdhari Ramasya priyadarsini.

Samim kamalapatrakshim, samim katadharinim arohatu samim lakshmim, nrunam ayushya vardhanim.

Namo visvasa vrksaya partha sastra dharine, twattaha vrata pradichyami, sada vijayatapava.

 

Dharmatma satya santasca ramodasatiryathi, paurusesha prati dwantvam saranamjahiravanim

 

Amangalaya samanim, duskrtasya nasinim, dus swapnaharinim tanniyam, prapatti moham shamim subham.

 

And then finished with the Palasruti (benefits received by the Puja) under the tree.

Vanni (Sanskrit: Vahni) means Agni/Fire. This indicates the energy given by the tree. In Tamil Nadu Lord Ganesh is seated under the tree. There is one Ganesh temple inside Madurai Meenakshi Temple.

 

Vannia Community of tamil Nadu, Bishnoi community of Rajasthan worship this tree. It has got many medicinal properties.

 

–Subham-

 

 

 

ஒரே துறையில் மானும் புலியும்: கம்பன் தரும் அதிசயத் தகவல் (Post No.3180)

animal-water-2

Written by London swaminathan

Date: 23 September 2016

Time uploaded in London: 8-43 AM

Post No.3180

Pictures are taken from various sources; thanks.

 

நல்ல மன்னர்கள் ஆட்சி செய்தால் அங்கு இயற்கையாகவே பகைமை கொண்ட கீரியும் பாம்பும், பூனையும் எலியும், புலியும் மானும் கூடப் பகைமையை விட்டு நட்பு பராட்டுமாம்.

கம்பனும் காளிதாசனும் தரும் தகவல் இது:-

 

இதோ கம்பன் பாடல்:

கருங்கடல் தொட்டனர் கங்கை தந்தனர்

பெரும்புலி மானொடு  புனலும் ஊட்டினர்

பெருந்தகை என் குலத்து அரசர் பின் ஒரு

திருந்திழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்

–கலன் காண் படலம், கிஷ்ககிந்தா காண்டம்

 

பொருள்:-

பெருமையுடைய எனது முன்னோர்கள் கடலைத் தோண்டினர் (சகரர் கதை); மேலுலகதில் இருந்த கங்கையை பூவுலகுக்கு கொண்டு வந்தனர் (Civil Engineer பொறியியல் வல்லுனன் பகீரதன் கங்கையைத் திருப்பிவிட்ட புராணக் கதை); போர் செய்யும் இயல்புடைய புலியையும் யானையையும் ஒரே துறையில் நீர் அருந்துமாறு செய்தனர் (தர்ம ஆட்சி). அவர்கள் குலத்தில் உதித்த நானோ மனைவியின் துயரைத் தீர்க்கும் தவத்தைச் செய்யாதவனாக உள்ளேன் (சீதை பற்றி ராமன் புலம்பல்)

–கிட்கிந்தா காண்டம்

 

animals-water-1

வேறொரு இடத்தில்

புலிப்போத்தும் புல் வாயும் ஒரு துறையில் நீருண்ண

உலகாண்டோன் ஒருவன் — என்று பாடியுள்ளான்

 

வள்ளுவனோ இதற்கும் ஒரு படி மேல் சென்று

தர்ம ஆட்சி நடத்தும் மன்னன் நாட்டில் பருவமழை கொட்டும்; விளைச்சல் பெருகும் என்பான் (குறள் 545); கொடுங்கோலன் நாட்டில் மழையும் பெய்யாது; பசு மாடும் பால் தராது; பார்ப்பனர்களுக்கு வேதங்கள் மறந்து போகும் என்பான் (குறள் 559, 560)

 

 

காளிதாசனும் இதே கருத்தை முன்வைக்கிறான், ரகு வம்சத்தின் ஆறாவது சர்கத்தில் 46 ஆம் பாடலில் ஒரு உவமை வருகிறது.முனிவர்களின் ஆஸ்ரமத்தில்  இயற்கையிலேயே பகைமை உடைய மிருகங்களும் எப்படி பகைமை பாராட்டாது நட்புறவு கொள்ளுமோ அதுபோல……………………………..

முனிவரின் ஆஸ்ரமத்தில் புலியும் மானும் யானையும் சிங்கமும் போன்றை ஒன்று தாக்காமல் அமைதியாக வரும் என்பது இதன் பொருள். அது போல நீப மன்னனின் ஆட்சியும் குண நலன்களும் இருந்தன என்பான் காளிதாசன்.

 

மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் சிவபெருமானின் கருணை பற்றிப் பேசுகையில் “புலி முலை புல்வாய்க்கு அருளினை போற்றி” என்று விதந்தோதுவார்.

 

animals-3

இளங்கோ தரும் அதிசயத் தகவல்

 

நெஞ்சையள்ளும் சிலப்பதிகார காவியத்தில் பாண்டிய நாட்டில் நீதியும் அமைதியும் நிலவுவதால் இடி, மின்னல் கூட மக்கள் மீது விழாது; புலியும் மானும் சண்டை போடாது; முதலைகள் தாக்காது; துர் தேவதைகள் ம னிதனைப் பிடிக்காது; பாம்பும் கடிக்காது; கரடி கூட புற்றுமண்ணைத் தோண்டி கறையான் எறும்புகளைச் சாப்பிடா து. ஏனெனில் அங்கே தர்ம ஆட்சி நடக்கிறது. பகல் நேரத்திலு ம் பெண்ணும் ஆணும் போவது போல இரவில் பவுர்ணமி வெளிச்சத்திலும் போகலாம்; ஒரு பயமும் இல்லை– என்று இளங்கோ அடிகள் இயம்புவார்.

கோள்வல் உளிஒயமும் கொடும்புற்று அகழா;

வாள்வரி வேங்கையும் மன் கணம் மறலா;

அரவும், சூரும், இரைதேர் முதலையும்,

உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா —

செங்கோல் தென்னவர் காக்கும் நாடு

 

—புறஞ்சேரி இறுத்த காதை, சிலப்பதிகாரம்

 

புறநானூற்றில் புலியும் மானும்

புறநானூற்றில் ஒரு அரிய செய்தி வருகிறது. ஒரு பெண் மானை ஒரு புலி கொன்றுவிட்டது. அதனுடன் ஒரு குட்டியும் இருந்தது. அந்தக் குட்டியை கொன்று சாப்பிடவில்லை. அதற்குக் காட்டிலுள்ள ஒரு முதிய காட்டுப்பசு பால் கொடுத்ததாம். தாயன்பு என்பது இந்த மிருகம், அந்த மிருகம் என்ற வரையரைக்கு எல்லாம் அப்பாற்பட்டது:-

புலிப்பாற்பட்ட ஆமான் குழவிக்குச்

சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்

—புறநானூறு 323

 

–subham–

 

 

 

 

சாளக்ராமம் பற்றிய சுவையான தகவல்கள் (Post No.3177)

fossil-puja

Translated by London swaminathan

Date: 22 September 2016

Time uploaded in London: 7-48 AM

Post No.3177

Pictures are taken from various sources; thanks.

 

From Arthur Miles’ book The Land of the Lingam 

 

ammonites

Ammonite Fossils

1933-ஆம் ஆண்டில் இந்து மதத்தையும், குறிப்பாக சிவ லிங்க வழிபாட்டையும் குறைகூறி ஆர்தர் மைல்ஸ் என்பவர் ஒரு புத்தகம் வெளியிட்டார். பக்கத்திற்குப் பக்கம் இந்து மத பழக்க வழக்கங்களை  “பகுத்தறிவுப் பகலவன்கள்”(?!?!) குறைகூறுவது போல எழுதினாலும் நிறைய விவரங்களைத் தருகிறார். அதில் ஒன்று சாலக்ராமம் பற்றியது.

ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்:-

 

சாளக்கிராமம் என்பது வெழுமூன இருக்கும் ஒரு கல். அதற்குள் விஷ்ணு சக்கரம் போல அச்சு இருக்கும். இது உண்மையில் உயிரியல் அறிஞர்கள் சோதனைக் கூடங்களில் சேர்த்து வைக்கும் படிம அச்சுகளாகும் FOSSILS. அதாவது மில்லியன் அல்லது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உரியினங்களின் கல் அச்சு.

 

இந்துக்களுக்கு இந்த படிம அச்சுகள் மிகவும் புனிதமானவை. சங்கு சக்கரம் போலப் பதிவான சித்திரம், விஷ்ணுவின் அடையாளம் என்று இந்துக்கள் கருதுவதால் அதற்கு தினமும் அபிஷேகம் ஆராதனை செய்து பூஜிப்பர்.

 

இது குறித்து ஆர்தர் மைல்ஸ் எழுதிய விஷயங்களை ஆங்கிலத்தில் அப்படியே வெளியிட்டேன். அதன் சுருக்கத்தைக் காண்போம்:

 

1.சாளக்ராமம் தோன்றிய கதை:

ஒரு நாட்டியம் ஆடும் பெண்மணி பேரழகி. அவளுக்கு ஈடு இணையான

அழகுள்ள ஒரு ஆண்மகனும் கிடைக்கவில்லை. ஆகை யால் இமய மலைக்குப் போய்த் தவம் செய்வோம் என்று புறப்பாட்டாள். அங்கு விஷ்ணு வந்தார். அவருடைய பேரழகைக் கண்டவுடன் இந்தப் பெண் தவத்தை எல்லாம் விட்டுவிட்டு அவரிடம் சென்று என்னைத் திருமண ம் செய்து கொள்ளுங்கள் என்றார். அவரோ மானுடனாகப் பிறந்த நடன மாதுவைக் கைப்பிடிக்க விரும்பவில்லை. இருந்த போதிலும் இப்படிப்பட்ட பேரழகியை விடக்கூடாதென்று ஒரு வழி கண்டுபிடித்தார். பெண்ணே நீ கண்டகி நதியாகப் (GANDAKI RIVER) பிற ந்து வா. நான் அங்கே கிடக்கும் சாலக்ராமமாக அவதரிக்கிறேன். நீ என்னை எப்போதும் தழுவிச் செல்லலாம் என்றார்.

 

இந்தக்தையின் உண்மைப் பொருள்: நேபாள நாட்டிலுள்ள கண்டகி நதியில்தான் அதிகமாக இவ்வகை படிம அச்சுகள் FOSSILS கிடைக்கின்றன. அது விஷ்ணுவின் அம்சம். அதை உணர்த்த இந்தப் புனைக்கதை உருவாக்கப்பட்டது. இந்துக்கள் எதையுமே நேரடியாகச் சொல்லாமல் அடையாள க் குறி யீட்டுகளால் (symbolic story) காட்டுவர் அப்படிப்பட்ட ஒரு கதை இது.

sripadarajamatha_saligramas

  1. சாளக்ராம மகிமை:-

 

நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு வீரன் (க்ஷத்ரியன்) எதேச்சையாக ஒரு சாளக்ராம கல்லை வாயில் வைத்து கொண்டு நீந்தி வந்தார். அவருக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம் அடித்தது. அவருக்கு அரச பதவியும் கிடைத்தது. பின்னர் விஷ்ணுவே வந்து மேக ரூபமாக அவரை சுவர்க்க லோகத்துக்கு அழைத்துச் சென்றார். அதற்குப் பிறகு கண்டகி நகர சாளக்கிராம கற்களின் மகிமை உலகிற்குத் தெரிந்தது. இப்பொழுது அது பஞ்ச்சாயதன பூஜையின் ஒரு பகுதியாக இந்துக்களின் வீட்டின் பூஜை அறையில் உள்ளது!

 

3.சாளக்கிராம கல்லை மதிப்பிடுவது எப்படி?

சாளக்கிராம கற்களை எடுக்கும் உரிமை அந்தக் காலத்தில் நேபாள மன்னர்களிடம் மட்டுமே இருந்தது. அவர்கள் அந்த உரிமையைக் குத்தகைக்கு விடுவர். ஆனால் யார் அவற்றைக் கண்டுபிடித்தாலும் அதை அரசரிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் அதிலுள்ள சக்கரம், குறிப்பிட இடத்திலுள்ள ஓட்டை இவற்றைக் கொண்டு மதிப்பிடுவர். அதற்குப் பின் அதைச் சுத்தம் செய்துவிட்டு ஒரு தராசின் ஒரு தட்டில் வைப்பர். ஒவ்வொரு கல்லுக்கும் சமமான அரிசியை மற்றொரு தராசுத் தட்டில் வைப்பர். மறு நாள் (24 மணி நேரத்தில்) அரிசியின் எடை அதிகரித்து அந்தத் தட்டு கீழே தாழ்ந்திருந்தால் அதன் மதிப்பு அதிகம். அரிசியின் அளவு இரு மடங்கு கூட ஆனதுண்டாம். அரிசியின் அளவு அதே மாதிரி நீடித்தாலோ அல்லது குறைந்தாலோ சாளக்கிராமத்துக்கு மதிப்பில்லை.

 

4.அதர்வ வேதத்தில் சாளக்ராமக் கல்

சாளக்ராமக் கல் இல்லாத வீடு சுடுகாட்டுக்குச் சமம் என்றும் அங்கே சமைக்கப்பட்ட உணவு நாயின் விட்டைக்குச் சமம் என்றும் அதர்வண வேதம் கூறுவதாக ஆர்தர் மைல்ஸ் எழுதுகிறார். சாளக்ராமக் கல்லின் அபிஷேக நீர்  மகிழ்ச்சியை அளிக்கும் என்றும் அதை அபிஷேகம் செய்து ஆராதிப்போர் வீ ட்டில் லட்சுமி நிரந்தரமாகக் குடியிருப்பதால் செல்வம் தழைக்கும் என்றும் இந்துக்கள நம்புகின்றனர்.

ஒரு காலத்தில் 4000 பவுண்டு கொடுத்து கூட அதை வாங்கினராம்.

 shaligram-sila

5.கந்த புராணத் தகவல்

 

கந்த புராணத்தில்தான் சாளக்ராம மகிமை கூறப்பட்டிருக்கிறது. இதை வீட்டில் வைத்திருந்து பூஜை செய்யாமல் இருந்தால் துரதிருஷ்டம் பீடிக்கும். சாளக்ராமத்தில் உக்ர சக்ர சாளக்ராமங்கள் என்பன தீய விளைவுகளை ஏற்படுத்துமாம். அப்படி தீய விளைவை உண்டாக்கும் கற்கள் இருந்தால் அவைகளை க் கோவில்களில் கொடுத்து  விட்டால் ஒரு கஷ்டமும் வராது. கோவிலிலுள்ள மகத்தான சக்தி, பூஜைகளால் அவை உக்ரம் இழந்துவிடும்.

இறுதியாக சாலக்கிராமத்தில் போலி கற்களும் உண்டு. அதாவது மோசடி செய்வோர் அதன் மீது கருவிகளால் கோடு, ஓட்டைகளைப் போட்டு அவறறை சாளக்ராமம் என்று விற்பர். இவைகளைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. (ஆகையால் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்).

 

-subham-

 

தாய்தன்னை அறியாத கன்று இல்லை! கம்பன் உவமை நயம்!! (Post No 3079)

 

pasuvum kandrum

Written by London swaminathan

Date: 21 August 2016

Time uploaded in London: 7-53 AM

Post No.3079

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

கம்ப ராமாயணம் ஒரு இனிய நீர் ஊற்று; தோண்டத் தோண்ட இனிய நீர் சுரக்கும். தொட்டனைத்தூறும் மணற் கேணி அது; படிக்கப் படிக்க கற்றனைத்தூறும் அறிவு.

 

சின்ன வயதில் எனக்கு ஒரு வியப்பு! நான் மதுரையில் வடக்கு மாசி வீதியில் யாதவர் (கோனார்கள் ) இடையே வாழ்ந்தேன். அந்தக் காலத்தில் மதுரையில் வைகை நதியில் தண்ணீர் ஓடும். ஆகையால் யாதவ இளைஞர்கள் தினமும் மாடுகளை எங்கள் தெரு வழியாக ஆற்றங்கரைக்கு நடத்திச் செல்லுவர். அந்த மாட்டுக் கூட்டம் வரும்போது வீட்டு வாசலில் உள்ள சைக்கிள், மோட்டார் சைக்கிள் எல்லாவற்றையும் அவசரம் அவசரமாக சுவற்றை ஒட்டி நிறுத்துவோம் அல்லது ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு இடிததுச் சென்று விடும். அந்த மாட்டுக் கூட்டம் வரும் முன்னே, “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்ட மணிகளும் தகர டப்பிகளும் (ஏழைகளின் மணி!) சப்தம் போடும்.

 

அப்பொழுது ஒவ்வொரு மாடும் அதன் கன்றுடன் செல்லும். கூட்டத்தில் அது அது அதனதன் தாய்ப் பசுவுடன் செல்லும்.  நானோ பள்ளிக் கூடப் பையன். அட, எல்லா மாடுகளும் ஒரே மதிரியாக இருக்கிற தே, எல்லா கன்றுகளும் ஒரே மதிரியாகத் தெரிகின்றனவே. எப்படி அது அது அதனதன் தாயாரை அறிகிறது என்று வியந்து நிற்பேன்.

pasu cow claf kandru

கம்பனும் இப்படி ஒரு காட்சியைக் கண்டான் போலும்! அவனது உவமைகளில் ஒன்று — “தாய்தன்னை அறியாத கன்று இல்லை”.

 

வேதத்திலும் தாய்ப் பசு -கன்றின் அன்பு அடிக்கடி உவமையாகக் கையாளப்படுகிறது. இந்துக்களின் மிகப்பெரிய கண்டு பிடிப்புகள் இரண்டு:

  1. காடுகளில் திரிந்த பல விலங்குகளில் மாட்டின் பால்தான் தாய்ப்பாலுக்கு நிகரானது என்று கண்டுபிடித்து அதை நாட்டு விலங்காக மாற்றி (DOMESTICATION) உலகம் முழுதும் விவசாயத்தையும் மாடு வளர்ப்பையும் கற்றுக் கொடுத்தான்.
  2. இரண்டாவது கண்டு பிடிப்பு– டெசிமல் சிஸ்டம் DECIMAL SYSTEM (தசாம்ச முறை). இந்த இரண்டையும் இந்துக்கள் கற்பிக்காவிடில் உலகில் நாகரீகம் என்பதோ விஞ்ஞானம் என்பதோ வளர்ந்திரா. நிற்க.

 

கம்பன் உவமை நயத்தைக் காண்போம்:-

 

தாய்தன்னை அறியாத கன்று இல்லை தன் கன்றை அறியாத

ஆயும் அறியும் உலகின் தாய் ஆகி ஐய

நீ அறிதி எப்பொருளும் அவை உன்னை நிலை அறியா

மாயை இது என்கொலோ வாராதே வரவல்லாய்

 

பொருள்:–

“தலைவனே! பக்தர்களிடம் வருவதற்கு அரியவன்போல் தோன்றி, பிறகு எளிதாக வந்து காட்சி தரும் வல்லமை உள்ளவனே! தன்னைப் பெற்ற தாயைத் தெரிந்து கொள்ளாத கன்றுகள் இல்லை. தான் பெற்ற கன்றுகளை தாயும் அறிந்து கொள்ளும். உன்னிடமிருந்தே உலகம் தோன்றியதால் நீ உலகத்தின் தாயாக விளங்கி, எல்லாப் பொருள்களையும் அறிகிறாய். ஆனால் அப்பொருள்கள் எல்லாம் உனது தனிமையான நிலையை அறிய மாட்டா.”

 

எனது கருத்து:–

இதைப் படிக்கையில் பதி, பசு, பாசம் என்ற சைவ சித்தாந்த உண்மையும் நினைவுக்கு வருகிறது.

 

வாத்சல்யம் (தாய்ப் பசு – கன்று (வத்ஸ) இடையிலுள்ள அன்பும் நினைவுக்கு வருகிறது.

 

ஒவ்வொரு பசுவும் அதன் கன்றை அறியும். அது போல ஒவ்வொரு கன்றும் அதன் தாயை அறியும்.

இதே போல தாயாகிய இறைவனே நீ எங்கள் எல்லாரையும் அறிவாய். நாங்கள் உன்னை அறியும் பக்குவம் பெறவில்லையே. இது என்ன மாயமோ என்று கம்பன் வியக்கிறான்.

கன்று எப்படி தன் தாயை அறிகிறதோ அது போல நாமும் இறைவனை  அறிய வேண்டுமானால் அது போலப் பாசம் (பக்தி) வேண்டும். இறைவனோ எப்போதுமே தாய்ப்பசு போல நம் மீது அன்பைப் பொழிந்துகொண்டிருக்கிறான்.

எது எப்படியாகிலும் வேதத்தில் காணும் இந்த உவமை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டது சிறப்புடைத்து.

வேத கால உவமை சைவ சித்தாந்தத்துக்கும் வித்திட்டது!

hi-620-emperor-penguins-on-the-sea-ice-close-to-halley-research-station-credit-british-antarctic-survey

இன்னும் வியப்பு நீங்கவில்லை

 

டெலிவிஷனில் இயற்கை பற்றி வரும் ‘டாகுமெண்டரி’களைப் (Documentary ) பார்ப்பேன். அதில் ஒன்று அண்டார்ட்டிகா என்னும் தென் துருவப் பகுதியில் வாழும் பெங்குவின் பறவைகளைப் பற்றியது. அவை கூட்டமாக வாழும். கூட்டம் என்றால் அப்படிப் பெரிய கூட்டம்! திருவிழாக் கூட்டம்!!! ஆண் பெங்குவின்கள், கடலில் குதித்து நீந்திவிட்டுக் கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின் திரும்பி வரும். ஒவ்வொன்றும் அதன் பெண்சாதியைக் கண்டுபிடித்து அதன் அருகி ல் போய் நிற்கும். குட்டிகளும் அதன் அருகே நிற்கும். இதைக் கண்டு எல்லோரும் வியப்பர். எப்படி பல்லாயிரம் பெங்குவின்கள் இடையே ஒவ்வொன்றும் தன் மனைவியைக் கண்டு பிடிக்கின்றன என்று. ஆக , கம்பனின் உவமையை இப்பொழுது நாம் பெக்குவினுக்கும் மாற்றலாம்!

penguin kuuttam

–subham–

 

கம்பனின் அதிசய உவமை! புறச்சூழல் உண்மை!!(Post No.3065)

Dead fish floated in the green waste water.

Written by London swaminathan

Date : 15th August 2016

Time uploaded in London: 17-56

Post No.3065

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

கம்பராமாயணம் ஒரு தேன் கூடு;  பிழியப் பிழிய தேன் வரும். ஆனால் என் போன்றோர் இலக்கிய நயத்துக்காக நூல்களைப் படிப்பதில்லை. அதிலுள்ள விஞ்ஞான உண்மைகளையும் தத்துவ உண்மைகளையும் ஆழத் துருவி ஆராய்வதே நோக்கம். ஆரணிய காண்டத்தில் மாரீசன் வதை படலத்தில் கம்பன் ஒரு அசாதாரண உவமையைக் கையாளுகிறான். இதைப் பார்க்கும் போது 1200 ஆண்டுகளுக்கு முன்னரே புறச் சூழல் அறிவு இருந்திருப்பது புலனாகிறது.

 

இதோ பாட்டும் அதன் பொருளும்:–

 

வெஞ்சுற்றம் நினைந்து உகும் வீரரை வேறு

அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர்

நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான்

நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால்

 

பொருள்:

மாயமான் வடிவத்தில் சென்று சீதையை ஏமாற்று — என்று ராவணன் ஏவியபோது மாரீசன் மன நிலை பற்றிய பாடல் இது:–

 

“இராவணன் செயலால தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் அழிவு வரும் என்பதை மாரீசன் உணர்ந்தான். தனது அன்பிற்குரிய சுற்றத்தாரை நினைத்து வருந்தினான். மானிட வீரர்களான இராம இலக்குவரை எண்ணி மனதில் குழப்பம் அடைந்தான். இது எப்படி இருந்ததென்றால்….

ஆழமான பள்ளத்தில் உள்ள நீர் நச்சுத் தனமை அடையும் போது, அதில் வாழும் மீன் அந்த நீரில் இருந்தாலும் சரி, நிலத்தில் இருந்தாலும் சரி இறப்பது உறுதி. அந்த மீன்கள் எப்படி நடுங்குமோ அப்படி மாரீசன் நடுங்கினான். அந்த மாரீசனின் மன நிலையை நம்மால் முடியாத அளவுக்கு அவன் பயப்பட்டான்”

இந்தப் பாட்டில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவது இலக்கிய நயம்: விஷ நீரில் மீன் இருந்தாலும் சாகும். வெளியே போனாலும் சாகும். அது போல மாரீசன் மாய மான் வேடம் போடாமல் சென்றால் ராவணன் கொன்றுவிடுவான். மாய மான் வேடம் போட்டாலோ ராமன் கொன்று விடுவான்! இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை!

fishes 2

இரண்டாவது அறிவியல் விஷயம்:

 

ஒரு விஷயத்தை உவமையாகப் பயன்படுத்த வேண்டுமானால் அது மக்களுக்குப் புரிய வேண்டும்; தெரிந்திருக்க வேண்டும்.

 

நீர் நிலைகள், குறிப்பாக ஆழமான கிணறுகள், அசுத்தமடைவதும், அதனால் மீன்கள் இறப்பதும் மக்களுக்குத் தெரிந்திருந்தது. ஒரு வேளை நீரை அசுத்தம் செய்யாதீர்கள்! நடுக்குறும் மீனின் கதி , உங்களுக்கும் வரும் என்று கம்பன் அறிவுரை பகர்கிறான் போலும்.

 

எது எப்படியாகிலும் இப்பேற்பட்ட உவமை அரிதிலும் அரிது. கம்பன் கையாளும் உவமைகளைப் பட்டியலிட்டுப் பார்த்தால் அவன் மேதா விலாசமும் நமக்கு வெள்ளிடை மலையென விளங்கும்.

 

–SUBHAM–

ஆழ்வார் தரும் அதிசயத் தகவல் : 7 மலை, 7 கடல், 7 முகில்! (Post No.3064)

chart-cloud-types.jpg

Written by London swaminathan

Date : 15th August 2016

Time uploaded in London: 9-21 AM

Post No.3064

Pictures are taken from various sources; thanks for the pictures.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்பு நூலிலே பன்னிரெண்டு ஆழ்வார்களின் அற்புதமான பாசுரங்கள் உள்ளன. அத்தனையிலும் பக்தித் தேன் சொட்டும். கடவுளைப் பற்றிக் கவிஞர்கள் கவிதை பாடினால் அதில் இலக்கிய அழகு அதிகம் இருக்கும். பக்தர்கள் கவி பாடினாலோ அதில் சொந்த ஆன்மீக அனுபவச் சுவை அதிகம் இருக்கும். ஆயினும் ஆராய்ச்சி நோக்குடன் படிப்போருக்கு வேறு பல விஷயங்களும் கிடைக்கும்.

 

நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியும் பக்திச் சுவை மிக்கதே. ஆயினும் போகிற போக்கில் அவர் பல அதிசய விஷயங்களை யும் சொல்கிறார். ஒரு பாசுரத்தில் 7 மலைகள், 7 கடல்கள், 7 மேகங்கள் பற்றிச் சொல்லுகிறார்.

 

நாங்கள் எல்லோரும் சிறுவர்களாக இருந்தபோது,  பல பாலர் பத்திரிக்கைகளில் வரும் மந்திரவாதி, மாயா ஜாலக் கதைககளைப் படிப்போம். அதில் பல கதைகளில் 7 மலை, 7 கடல் தாண்டி ஒரு குகையில்…………………..!! என்று படிப்போம். நம்மாழ்வாரும் 7 மலை, 7 கடல்  பாடி இருக்கிறார்:–

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து

பேரேன் என்று, என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

கார் ஏழ், கடல் ஏழ், மலை ஏழ், உலகு உண்டும்

ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே

பாடல் 3969, நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

 

பொருள்:-

“திருப்பேர் நகரில் உள்ள பெருமான் இன்று வந்து நின்று என் உள்ளத்தில் புகுந்து  இதைவிட்டுப் போகேன் என்று உறைகின்றான்.

ஏழு மேகங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் உள்ள இந்தப் பூமியை அப்படியே உண்டும்,  வயிறு நிறையாத, வயிற்றை உடைய அப்பெருமானை நான் உள்ளத்தில் சிறைப் படுத்தி விட்டேன்.”

 

இதில் அதிசய விஷயம் மேகம்/ மழை/ காற்று மண்டலம் பற்றியதுதான். இது பற்றி நம்மாழ்வாரும், காளிதாசரும் பாடியிருப்பது இந்துக்களின் கால நிலை பற்றிய அறிவைக் காட்டும்

earth-atmosphere-layers

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

காளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.

முதலாவது வாயு ஆவாஹ என்றும் அது  புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே –  நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.

 

ஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும்  சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான்.  அங்கே இயங்கும் காற்று பரவாஹ.

 

இதற்கு ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகம்:–

ஆவஹோ நிவஹஸ்சைவ உத்வஹ: சம்வஹஸ்ததா

விவஹ: ப்ரவஸ்சைவ பரிவாஹஸ்ததைவ ச

ஒவ்வொரு மழைக்கும் உலகில் நடந்த அதிசய நிகழ்ச்சிகள் மூலம் பழைய கட்டுரையில்விளக்கியுள்ளேன்.

 

ஏழுவகை மழைகள்:-

சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)

ஆவர்த்தம்- நீர் மழை

புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை

சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)

துரோணம் – மண் மழை

காளமுகி- கல் மழை

நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)

 

ஏழு மலைகள்

இமயம்/கயிலை, மந்த்ரம், விந்தியம், நிடதம், ஹேமகூடம், நீலம், கந்தமாதனம்

 

ஏழு கடல்கள்

உவர் நீர், தேன்/மது, நன்னீர், பால், தயிர், நெய், கரும்புச் சாறு

 

உப்பு, தேன், மது, ஒண் தயிர், பால், கரும்பு,

அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்

துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்,

தப்பிற்று அவ் உரை, இன்று ஓர் தனுவினால்.

cloud_types

எண்கள் பற்றி நான் எழுதிய முந்தைய கட்டுரைகள்:—-

இந்துக்களின் கண்டுபிடிப்பு: ஏழு வகை மழை, ஏழு வகை காற்று (Post No 2878), 8 June 2016

ஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் சிந்துவெளி வரை! ரிக் வேதம் முதல் சிந்து வெளி வரை!, posted on 22-11-2014

தமிழர்களின் எண் ஜோதிடம்(posted on 16th April 2012)
நீங்கள் நாலும் தெரிந்தவரா? (தமிழ் க்விஸ்)
Mystic No.7 in Music! (posted on 13th April 2013)
Numbers in the Rig Veda (posted on 3rd September2014)
Hindus’ Magic Numbers 18,108,1008! (posted on 26th November 2011)
Most Hated Numbers 666 and 13 (posted on 29th July 2012)
King and 8 Ministries in Vedic Period (posted on 28th May 2013)
Four Stages and Seven Ages of Man (posted on 21st March 2013)

கீழ்கண்ட கட்டுரைகளிலும் ஏழு எண் பற்றிய தகவல்கள் உள்ளன:–

தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும், posted on 15 February 2015பனை மரங்கள் வாழ்க!, posted on 27 January 2014பனை மர வழிபாடு: மகாவம்ச, சங்க இலக்கியச் சான்றுகள், posted 25 September 2014

–subham–

 

ஏரிக்கடியில் அரண்மனை: காளிதாசன், வால்மீகி தரும் அதிசய தகவல் (Post No. 3000)

megalaya forest,jungle

Written by London swaminathan

Date:24 July 2016

Post No. 3000

Time uploaded in London :– 5-22 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

இப்பொழுது பல மாயாஜாலக் கதைகளைப் படிக்கிறோம். ஏராளமான சித்திரத் தொடர்கதைகளைப் படிக்கிறோம். ஹாரி பாட்டர் போன்ற புதிய கதைகளும், திரைப்படங்களும் கோடிக்கணக்கில் பணத்தைக் குவிக்கின்றன. ஆனால் எல்லா கதைகளிம் கருக்களும், விதைகளும் இந்திய இலக்கியங்களில் உள்ளன. சம்ஸ்கிருத இலக்கியத்திலும், நாட்டுப்புற கதைகளிலும் இதை அதிகம் காணலாம். ஈசாப் கதைகளானாலும் சரி, ஜோனதன் ஸ்விப்டின் கலிவரின் யாத்திரை ஆனாலும் சரி, பொக்காஸியோவின் டெக்காமொரோன் ஆனாலும் சரி — எல்லாக் கதைகளின் கருத்துகளும் வடமொழியில் இருப்பதைக் காணலாம்.

chilka 10, fb

வால்மீகி ராமாய ண த்தில் அலிபாபா-அலாவுதீன் விளக்கு ,  கதைகளை விட அதிசயமான கதைகள் இருக்கின்றன. பரத்வாஜர் கதை. மாண்டகர்ணி என்ற ரிஷியின் கதை ஆகியன குறிப்பிடத்தக்கன.

 

காளிதாசன் சொல்கிறான்:-

“இதோ தெரியும் இந்த பஞ்சாப் சரஸ் ஏரியானது சாதகர்ணி என்னும் முனிவரின் ஏரி ஆகும் இது அவர் நீர்விளையாட்டுக்காக அமைத்தது. நான்கு புற ங்களும் அடர்ந்த, இருண்ட காடுகள் இடையே இது பள, பள என்று பிரகாசிப்பதால் இதை இருண்ட வானத்தில் செல்லும் சந்திரனுக்கு ஒப்பிடலாம்”.

 

ஏதத்முனே: மானினிசாதகர்ணே: பஞ்சாப்சர: நாம  விஹாரவாரி

ஆபாதி பர்யந்தவனம் விதூராத் மேகாந்தர் ஆலக்ஷ்யம்இவ இந்து பிம்பம்

–ரகுவம்சம், 13-38

 

காளிதாசன் சாதகர்ணி என்று சொல்லும் முனிவரின் பெயர் ராமாயணத்தில் மாண்டகர்ணி என்று வருகிறது. அவர் 16,000 ஆண்டு தவம் செய்துகொண்டிருந்தார் (16000 ஆண்டு = நீண்ட காலம்). தேவர்களுக்கு அச்சம் நிலவியது. உடனே ஐந்து அப்சரஸ் அழகிகளை அனுப்பிவைத்தனர். அவரும் சொக்கிப்போனார்.

 

அவர் அந்த ஐந்து பேரையும் மண ந்து கொண்டார். தன்னுடைய தவ வலிமையால் அந்த ஏரியின் அடிப்பகுதியில் ஒரு அரண்மனையைக் கட்டினார். அதில் அவர்களுடன் வசித்தார். ஐந்து அப்சரஸ் பெண்களின் நினைவாக அந்த ஏரி பஞ்சாப் சரஸ் என்று அழைக்கப்படும்.

 

முன்பு தர்ப்பைப் புல்லின் குருத்துக்களை மட்டும் உண்டு, மான்களோடு விளையாடி வந்த முனிவர்,  இந்திரனின் கபடத்தால்,  “ஐந்து அழகிகளின் இளமை என்ற கூட்டு”க்குள் அடைக்கப்பட்டார் என்று காளிதாசன் மேலும் வருணிக்கிறான்.

 

நீருக்கடியில் மறைந்திருந்த அந்த மாளிகையிலிருந்து எழுந்த இன்னிசை ஒலி (சங்கீத – மிரிருதங்க – கோஷம்) ஆகாயத்தை அடைந்து அங்கே சென்ற விமானங்களில் மீது மோதி எதிரொலித்தன.

 

வால்மீகி ராமாயணந்த்தில் ஆரண்ய காண்டத்தில் 11ஆவது சர்கத்தில் 15 ஸ்லோகங்களில் வரும் வருணனைகள், காளிதாசனின் மனதை மிகவும் கவர்ந்ததால், இந்த சர்கத்தில் இப்படி வருணித்தான்.

 

இதிலிருந்து நாம் அறியும் விஷயங்கள்:–

 

1.அந்தக் காலத்தில் நீருக்கு அடியில் கட்டிடம் அமைக்கும் பொறியியல் வல்லுநர்கள் இருந்தனர்.

2.காட்டுக்கு அடியில் தவ வலிமை மூலம் அமைத்தாலும், ஒரு கட்டிட வரைபடம், அமைப்பு இல்லாமல் இது நடந்திராது.

  1. வானில் விமானங்கள் சென்று கொண்டிருந்ததையும் அறிகிறோம்.
  2. இன்று சாமியார்கள், பெண்களிடம் சரணடைவது போல அன்றும் பல முனிவர்கள் அடிமையானதையும் அறிகிறோம்.
  3. காட்டில் முனிவர்கள் தவம் செய்கையில், இலை, தழைகளைச் சாப்பிட்டுக் கொண்டு, மான்களோடு விளையாடி இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை நடத்தினர்.
  4. நீண்டகாலம் என்பதை- 16,000 ஆண்டுகள் — என்ற மரபுச் சொற்றொடர் மூலம் (இடியம்) எழுதும் வழக்கம் இருந்ததையும் காண்கிறோம்.

7.பரத்வாஜர் கதையும், விஸ்வாமித்ர/காமதேனு கதையும், மாண்டகர்ணி கதையும் பல மாயாஜால விஷயங்களை கூறுகின்றன. இவை அனைத்தும் தவ வலிமையால் நிகழ்ந்தன என்ற தகவலையும் அறிகிறோம்.

 

வால்மீகி தரும் தகவல்

 

வால்மீகி ராமாயணம் இந்த ஏரியின் இயற்கை அழகை மிக அழகாக வருணிக்கிறது. அடர்ந்த காட்டுக்குள் இன்னிசை ஒலி கேட்டவுடன் ராம, லெட்சுமணர்கள் , தர்மப்ருத் என்ற முனிவரிடம் இது எங்கிருந்து வருகிறது? ஜன நடமாட்டமே இல்லையே என்கிறார்கள். உடனே மேற்கூறிய கதையை அவர் விவரமாகக் கூறுகிறார். இதையே காளிதாசன் சுருக்கித் தந்துள்ளான்.

 

–subham–