அதிசய புத்த துறவி ஸு யுன்! – 13 (Post no.3220)

buddha-face-sudhakar-chalke

Written by S. NAGARAJAN

Date: 5 October 2016

Time uploaded in London: 8-11 AM

Post No.3220

Pictures are taken from various sources; thanks

 

 

.நாகராஜன்

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 13

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 67. பீஜிங்கில் உள்ள அரசு அதிகாரிகளிடம் மடாலயத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் அபரிமிதமான வரிகளைத் தள்ளுபடி செய்யுமாறு ஸு யுன் கோரிக்கை விடுத்தார்.

 

 

அதிசயமாக அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டது. அடுத்து அங்கு திரிபிடகத்தின் ஒரு நகலை வைக்க ஸு யுன் விழைந்தார். அதுவும் ஏற்கப்பட்டது. அனைவரும் மன மகிழ்ச்சி அடைந்தனர்.

வருட முடிவு நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் பீஜிங்கிலேயே ஸு யுன் தங்கி இருந்தார்.

 

 

அடுத்த வருடம், ஸு யுன்னின் 68ஆம் வயதில் அவர் ஷாங்காய் மற்றும் அமாய் நகர்களுக்குச் சென்றார்.

அங்கு அவருக்கு ஒரு துயரச் செய்தி கிட்டியது. மவுண்ட் கு வில் இருந்த வ்யதான துறவி மியாவோ-லியான் மறைந்து விட்ட செய்தி கேட்டு ஸு யுன் மிக்க வருத்தமுற்றார். அவரது தகன கிரியைக்கு ஏராளமான துறவிகள் அங்கு சென்றனர்.

ஸு யுன்னும் அங்கு விரைந்தார்.

 

 

அவருக்கு நினைவுச் சின்னமாக வழக்கமான முறையில் ஒரு பகோடா நிறுவப்பட்டது.

நான்காம் மாதம் 10ஆம் நாளில் பகோடா முடிந்த நாளனறு சரியான மழை.

 

siddhartha_by_elvis882.jpg

அந்த ம்ழை 15 நாட்கள் தொடர்ந்தது. அடுத்த மாதம் எட்டாம் நாள் மழை நின்றது. அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பத்தாம் நாள் பகோடாவின் மீது ஸ்தூபி நிறுவப்பட்டது. நூறு மேஜைகளில் சைவ உணவு பரிமாறப்பட்டது. சூத்ரங்கள் சொல்லப்பட்டன.

 

 

உணவு படைக்கப்படும் போது சொல்லப்படும் மந்திரங்கள் ஓதப்பட்ட்ன.

திடீரென ஒரு சுழல் காற்று வீச ஆரம்பித்தது.ஸ்தூபியிலிருந்து ஒரு பிரகாசமான சிவப்பு ஒளி வீச ஆரம்பித்தது. படைக்கப்ப்ட்ட உணவு அனைத்தையும் ஸ்தூபத்தின் உச்சிக்கு  காற்று மேலே தூக்கிச் சென்றது. இந்த அற்புதமான காட்சியைக் கண்டு அனைவரும் மெய் சிலிர்த்துப் போற்றினர்.

அனைவரும் மடாலயம் திரும்பிய பின்னர் அடை மழை ஆரம்பித்தது.

 

 

மியாவோ-லியானின் அஸ்தியுடன் ஸு யுன் பினாங்கு வந்தார். அங்கு அவரை வரவேற்க பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்.\

 

அங்கும் சூத்ரங்கள் சொல்லப்பட்ட பின்னர் ஒரு சுழற்காற்று தோன்றியது படைக்கப்பட்ட அனைத்தும் ஆயிரக்கணக்கான மலர்களுடன் மேலே தூக்கிச் செல்லப்பட்டது. ஒரு சிவப்பு நிற ஒளி பகோடாவின் உச்சியிலிருந்து வீசியது.

 

 

 

இந்த இரு நிகழ்ச்சிகளை ஸு யுன் நேரில் கண்டு அனுபவித்தார். அவருக்கு புத்தரின் பொன்னான வாசகம் நினைவுக்கு வந்தது.

“ தொன்று தொட்டு இருந்து வரும் சடங்குகள் ஏற்கப்படும் விதம் மிகவும் மர்மமானது”

பின்னர் ஸு யுன் தாய்லாந்திற்கு – அப்போதைய சயாமிற்கு – கப்பலில் சென்றார்.

 

 

அப்போது ஒரு பிரிட்டிஷ் அதிகாரி அவரிடம் வந்து, “எங்கு செல்கிறீர்கள்” என்றார்.

ஸு யுன் : யூனானுக்கு

“அங்கு எங்கு தங்குவீர்கள்?”

 

 

“காக் ஃபுட் மலையில் உள்ள மடாலயத்தில்”

அவர் தன்னைப் பற்றித் தெரிவித்தார்.

டெங்கு யு வில் அவர் பிரிட்டிஷ் தூதரக அதிகாரியாக இருந்தவர்.

ஸு யுன் நன்கொடை திரட்டுவதை அறிந்த அவர் உடனே முன்னூறு டாலர்களைத் தந்தார்.

இது அவரது நல்ல கர்மாவின் விளைவே என்பதை ஸு யுன் உணர்ந்தார்.

 

 

கப்பல் சயாமை அடைந்தது.

ஸு யுன் பிரிட்டிஷ் அதிகாரியிடம் விடை பெற்றார்.

யூனானில் போதிசத்வரின் க்ஷிதிகர்ப சூத்ரங்களை ஸு யுன் விளக்கலானார்.

 

ஒரு நாள் அதே பிரிட்டிஷ அதிகாரி ஸு யுன்னைப் பார்க்க வந்தார். அவரிடம் 3000 டாலர்களை நன்கொடையாகத் தந்தார்!

திரிபிடகத்தை நிறுவ ஏராளமான பணம் ஸு யுன்னுக்குத் தேவையாக இருந்தது. இந்தப் பணத்தை சந்தோஷமாக அவர் பெற்றார்.

 

ஒரு நாள் கால்களை சம்மணம் போட்டு அமர்ந்த நிலையில் ஸு யுன் சமாதி நிலையை எய்தினார்.

ஒன்பது நாட்கள் அதே நிலையில் இருந்த அவர் சகஜ நிலைக்கு மீளவில்லை.

 

 

செய்தி நகரெங்கும் பரவியது. மக்கள் திரளாக அவரை தரிசிக்கக் கூடினர்.

 

 

ஒன்பது நாட்களுக்குப் பிறகு சமாதியிலிருந்து அவர் மீண்டார். தாய்லாந்து மன்னர் அவரை தரிசித்து தன்னை அவரது சிஷயனாக ஏற்குமாறு பணிவன்புடன் வேண்டினார்.

இப்போது பல்லாயிரம் பேர் அவரது சிஷ்யர்களாக மாறினர்.

ஒன்பது நாள் அமர்ந்த நிலையில் முதலில் கால்கள் நகர முடியாமல் மரத்துப் போயின. உடலிலும் அதே உணர்ச்சி!

இதை யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. ஒரு வேளை மரணம் அணுகினால் காக் ஃபுட் மலையில் உள்ள அறை கட்டப்பட மாட்டாது. அதில் திரிபிடகம் இடம் பெறாது.

என்ன செய்வது?

 

 

அவர் உறங்குகையில் ஒரு கனவு வந்தது.

 

 

அதில் ஒரு வயதான மனிதன் தோன்றினான். அவரிடம், “பிட்சுவே! உன் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாதே!

உனது துவராடையை  மடி. உன் திருவோட்டை அதை வைத்து  மூடி தலைகாணியாக அதை வைத்துக் கொண்டு தூங்கு” என்றார்.

விழித்தவுடன் ஸு யுன் அப்படியே செய்தார். உடலெல்லாம் வியர்த்தது.

 

 

இரண்டு நாளில் உடல் நலம் சீரடையத் தொடங்கியது. இருபது நாட்களில் அவர் பூரண குணமடைந்தார்.

 

 

அவர் சூத்ரங்களை விளக்கி ஆற்றிய் உரைக்காக அரசர் டாங் லி என்னும் இடத்தில் 4550 ஏக்கர் நிலத்தைப் பரிசாக அளித்தார். அதை ஏற்ற ஸு யுன் அந்த நிலத்தை ஜி லுவோ மடாலயத்திற்கு அளித்தார். அங்கு ஒரு ரப்பர் தொழிற்சாலையை நிறுவி ஒரு நிரந்தர வருமானத்திற்கு வழி செய்து கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.

 

 

புது வருடம் தொடங்கிய போது தொழிற்சாலை தயாரானது. அந்தத் தொழிற்சாலையிலேயே ஸு யுன் புது வருடத்தை வரவேற்றார்

– தொடரும்

, “

 

சீமந்தத்தின் விஞ்ஞான ரகசியம்! அக்கு பங்சர்!! (Post No.3197)

kumkum

Research article written by London Swaminathan

Date: 28 September 2016

Time uploaded in London: 17-51

Post No.3197

Pictures are taken from various sources; thanks.

சீமந்தத்தின் விஞ்ஞான ரகசியம்! அக்கு பங்சர்!! (Post No.3197)

“வேதத்தில் சிகை அலங்காரம்” பற்றி சென்ற ஆண்டு ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி வெளியிட்டேன். அதைப் படித்துவிட்டு ஒரு ஆசிரியை த்ங்களுடைய பள்ளிக்கூடம் டில்லியில் உள்ளது என்றும் இவ்வாண்டு பெண்களுக்குப் பழங்கால இந்தியாவில் சிகை அலங்காரம் என்ற ப்ராஜெக்ட் PROJECT எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு விவரங்கள் கிடைத்தால் நல்லது என்றும் எழுதி இருந்தார். இப்பொழுது நமது இலக்கியங்களைத் தோண்டதோண்ட தொட்டனைத்தூறும் மணற்கேணி என நிறைய விஷயங்கள் ஊற்றெடுக்கின்றன.

 

சீமந்தம் என்பது கர்ப்பிணிப் பெண்களுக்குச் செய்யும் ஒரு சடங்கு. இந்துக்கள் பிறந்தது முதல் இறந்தது வரை செய்யும் 40 சம்ஸ்காரங்களில் — மதச் சடங்குகளில் — இதுவும் ஒன்று. இந்த சீமந்தம் அல்லது வளைகாப்பு கர்பத்தின் ஆறாவது அல்லது எட்டாவது மாதத்தில் நடைபெறும். சிலர் கர்ப்பம் பற்றிக் கணக்கு செய்யும் முறை காரணமாக இதை 3, 5, 7, 9 என்ற ஒற்றைப்படை எண்களிலும் சொல்வர்.

 

சீமந்தம் என்றால் வகிடு — தலை முடியில் பகுப்பு — எடுப்பது என்று பொருள். இந்தச் சடங்கின் பெயரையே “வகிடு எடுத்தல்” என்று அழைத்தால் அதில் ஏதோ முக்கியம் இருக்க வேண்டும் அல்லவா?

img_9979

முள்ளம்பன்றி முள் (Picture)

இந்தச் சடங்கு தென் இந்தியாவிலேயே சிறப்பாக நடை பெ xx  கிறது. 2000 ஆண்டுக் காலமாக வட இந்திய இந்துக்கள் பல்வேறு இனத்தினர், மதத் தினரின் படை எடுப்புக்குள்ளானதால் இந்தச் சடங்கு வழக்கொழிந்து போயிருக்கலாம்.

 

சீமந்தத்தின் போது பூரண கும்பம் வைத்து வேத மந்திரம் முழங்க நீர் எடுத்து கர்ப்பிணியைக் குளிப்பாட்டுவர். அத்தோடு இறைவழிபாடு, சீர், செட்டு, பரிசுகள், வளையல்கள், விரு ந்துகள் எல்லாம் நடக்கும் இது எல்லாம் பெண்ணின் மனதில் ஒரு பெரிய நம்பிக்கையை ஊட்டும். பெரும்பாலும் ஆண் குழந்தையை வேண்டி பிரார்த்தனை செய்தாலும் ஆரோக்கியமாகப் பிறக்கும் எந்தக் குழந்தையையும் இரு வீட்டாரும் மனமுவந்து வரவேற்கிறார்கள்.

 

இந்த சீமந்தத்தின் போது வகிடு எடுக்க ஒரு முள்ளம் பன்றியின் (Porcupine)  முள்ளை வைத்துக் கோடு போடுவர். இந்த அக்குபங்க்சர் அல்லது அக்கு பிரஸ்ஸரில் ( acupuncture or acupressure ) ஏதோ மர்மம் இருக்க வேண்டும். மதச் சடங்கில் முள்ளம் பன்றி முள்ளுக்கு என்ன வேலை? இதில் ஏதோ மர்ம இருக்கக்கண்டுதான் நம் முன்னோர்கள் இதை வைத்திருக்க வேண்டும்

 

பீஷ்மர் எப்படி அம்புப் படுக்கையில் படுத்து acupuncture or acupressure மருத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினாரோ அது போல இதிலும் ரகசியம் உளது.

இந்துக்கள் குழந்தை பிறந்தவுடன் காது குத்துவது, பெண்களானால் காது,  மூக்கு இரண்டையும் குத்தி, தங்கம் அல்லது வெள்ளீ ஆபரணங்களை அணிவிப்பது எல்லாவற்றிலும் இதே ரகசியம் உளது. அக்குப்ரஸ்ஸர் என்பது அழுத்தம் மட்டும் கொடுக்கும் மருத்துவ சிகிச்சை; பல ஆசனங்கள் செய்யும்போதும் இது கிடைக்கும் அக்குபங்சர் என்பது ஓட்டை போடுவது (காது, மூக்கு குத்தல்)

 

மேலும் பெண்கள் அந்த தலை முடி வகிட்டில் குங்குமம் இடுவதும் வழக்கம். இது லெட்சுமி வசிக்கும் இடம் என்பதால் வீட்டில் வளம் கொழிக்க இது வகை செய்யும் அத்தோடு திருமணமான பெண் என்ற டையாளத்தையும் வெளிப்படுத்தும். காலில் மெட்டி, தலை வகிட்டில் குங்குமம இரண்டில் எது தென் பட்டாலும் அவர்களைத் தாய் போல நடத்த வேண்டு ம் என்பதற்காக இந்த அடையாளம். இது இந்து மதத்துக்கே உள்ள சிறப்பு.

 

ஆதி சங்கரர் இயற்றிய அற்புதமான சௌந்தர்ய லஹரியின் 100 ஸ்லோ   கங்களில் அம்பாளின் அழகு வருணிக்கப்படுகிறது. அதில் 44, 45 ஆவது ஸ்லோகங்கள் இந்த தலை முடி வகிடு, அதன் மங்கலத் தனமை, லெட்சுமீகரம் ஆகியவற்றை விளக்குகிறது.

kumkum-2

பொருள் (44ஆம் பாட்டு)

உன்னுடைய முக அழகின் வெள்ளப் பெருக்கு வழிந்தோடும் வாய்க்கால் போல இருக்கும்– தலை வகிட்டின் கோடானது — குங்குமத்தைத் தரித்து இருக்கிறது. அது எங்களுக்கு நன்மை அளிக்கட்டும். இருள் போன்ற உனது கூந்தல் அந்த குங்குமத்துடன் விளங்குவது சூரிய ஒளியிடம்  சிக்கிய இருள் (நீங்கி) போலப் பிரகாசிக்கிறது

 

பொருள் (45ஆம் பாட்டு)

மலர்ந்த புன்சிரிப்பு — பிரகாசிக்கும் பல்வரிசை – நறுமணத்துடன் கூடிய தாமரை போன்ற முகம் — (இவைகளைக் கண்டு) மன்மதனை எரித்த சிவனின் கண்கள் என்னும் வண்டுகள்  மயங்குகின்றன. உன்னுடைய நெற்றி இயற்கையாகவே சுருண்டு விழும் முன் நெற்றி மயிர்களால் அழகு பெறுகின்றது. இது வண்டுகள் நெற்றியை மொய்ப்பது போல உள்ளது. இது தாமரையை பரிகாசம் செய்வது போல இருக்கிறது.

 

 

 

ஆக சீமந்தம்,  தலை முடி வகிடு எடுத்தல், அதில் மங்களகரமான குங்குமத்தை வைத்தல், அதுவும் மருத்துவ முறையில் செய்யப்பட்ட மஞ்சள் குங்குமத்தை வைத்தல் ஆகிய அனைத்தும் விஞ்ஞான — அறிவியல் — அடிப்படையில் அமைந்தவையே. இதைப் பின்பற்றி எல்லா வளங்களும் பெறுவோமாக.

 

–சுபம்–

வானவியல் முறையில் வேதத்தின் காலம்! (Post No.3191)

img_8093

Written by London swaminathan

Date: 26 September 2016

Time uploaded in London:10-08 AM

Post No.3191

Pictures are taken from various sources; thanks.

 

 

நேற்றைய கட்டுரையில் மாக்ஸ்முல்லரின் ஊகத்தின்படி வேதத்தின் காலத்தைப் பார்த்தோம்.

 

வேதத்தின் காலம் பற்றி உளறுவோரிடம் முதலில் ஒரு கேள்வி கேட்க வேண்டும்:-

ஐயா, நீங்கள் சொல்லுவது போல வேதத்தின் காலலம் கி.மு.1200 என்று கொண்டால் ராமாயணம் எப்போது நடந்தது? மஹாபாரதம் எப்போது நடந்தது. புராணத்திலுள்ள அரசர்கள் ஆண்டது எப்போது? கோ கருநந்த அடக்கனின் கல்வெட்டு ஏழாவது நூற்றாண்டிலேயே கலியுகத்தின் காலத்தைக் காட்டுகிறதே! அதுவும் நாள் கணக்கில் சொல்லுகிறதே! 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் புளுகத் துவங்கி விட்டானா?

 

புத்தர் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். ராமாயணம் நடந்தது, மஹாபரதம் நடந்தது, உபநிஷதம் தோன்றியது, பிரம்மாண்டமான வேத இலக்கியம் –கிரேக்க நாட்டு ஹோமருக்கு முன் தோன்றியது எல்லாம்– 600 ஆண்டுக்குள் நடந்ததாக ‘கப்சா’ அடிக்கிறீர்களே!

 

ராமர் செய்த யுத்ததில் மஹா பாரத  வியூகங்கள் இல்லை, மஹாபாரத ஆயுதங்கள் இல்லை, கிருஷ்ணர் கால சூது-வாதுகள் இல்லை– அப்படியானால்  இரண்டுக்கும் பெரும் கால வேறுபாடு இருக்க வேண்டுமே. மஹா பாரத  கி.மு3102 காலத்தியது என்று இந்துக்கள் நம்புகின்றனர். அதை நம்பாதோரும் கி.மு.1500 என்று மஹாபாரத யுத்தத்துக்கு காலம் குறித்துள்ளனரே. அக்காலத்தில் வாழ்ந்த வியாசர்தானே வேதங்கள் மிகவும் பெருகிவிட்டன என்று நான்காகப் பகுத்தார்.

 

அது போகட்டும்; கிரேக்க நாட்டு மெகஸ்தனீஸ் அவருக்கு முன்னர் 140-க்கும் மேலான அரசர்கள்

மகத சாம்ராஜ்யத்தை ஆண்டதாக எழுதிவைத்துள்ளாரே! அர்ரியன் என்ற கிரேக்க எழுத்தர் கி.மு 6000 க்கு முன் துவங்கிய இந்து மன்னர் ஆட்சி பற்றிக் குறிப்பிடுகிறாரே. இதையெல்லாம் அவர்கள் எழுதியே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிவிட்டதே.

தமிழ் வளர்க்க அகத்தியர் தென்னகம் வந்தது கி.மு.700-க்கும் கி.மு ஆயிரத்துக்கும் இடையில் என்று அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்களே. இவை எல்லாம் இப்படி இருக்க நீங்கள் 600 ஆண்டுக் கால இடைவெளியில் இவ்வளவும் நடந்தது என்று சொல்லுவது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போல உளதே! என்று கேட்க வேண்டும்.

 

இதையெல்லாம் விட, வேத இலக்கியத்தில் உள்ள வானவியல் குறிப்புகளை இதுவரை யாரும் பொய் என்று சொல்லவில்லை அதன் கணக்குப்படி பார்த்தால் கி.மு 3000 அல்

லது அதற்கும் முன்னர் என்று வேதத்தின் காலம் கணக்கிடப்படுகிறதே.

அது போகட்டும். சரஸ்வதி நதி பற்றிய குறிப்புகள் வேதத்தின் காலம் கி.மு. 1900-க்கும் முன்னதாக என்று காட்டுகின்றனவே.

துருக்கி நாட்டில் பொகைஸ்கோயில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் பலகைக் கல்வெட்டில் வேத கால தெய்வங்களின் பெயரைச் சொல்லி இரு மன்னர்கள் கையெழுத்து இட்டது இருக்கிறதே. துருக்கியைத் தாண்டி ஈரான் வரை 3000 ஆண்டுகளுக்கு முன்னரே வேத கலாசாரம் பரவியுள்ளதே.

இதோ கீழே கண்ட வானவியல் குறிப்புகளை மறுத்துப்பேச முடியுமா? சொல்லுங்கள்:–

precession_animation_small_new

சிறுவர்கள் பம்பரம் ஆடுவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி பம்பரம் ஆடுகையில் கடைசியில் பம்பரம் ஆட்டம் முடிந்து அது தரையில் சாயும் முன் சாய்வாகச் சுற்றி கீழே விழுவதையும் பார்த்திருப்பீர்கள் இது போலத்தான் பூமியும் சாய்வாகச் சுற்றுகிறது. வான மண்டலத்தில் வட்டமாக உள்ள ஒரு பொருள் சுற்றும்போது அது சாய்வாகச் சுற்றுகிறது என்றால் என்ன? பொருள் விளங்க வில்லையே? என்று கேட்கலாம். அதாவது பூமியின் அச்சு இப்படிச் சாய்வாக இருக்கிறது. இதனால் இந்தக் கோட்டின் கீழ்ப்   புறமும் மேல் புறமும் அச்சுக்கு நேராக நிற்கும் நட்சத்திரங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

 

துருவ நட்சத்திரம் என்று நாம் இன்று காணும் நட்சத்திரம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துருவ நட்சத்திரமாக இல்லை! வேறு ஒரு நட்சத்திரம்தான் துருவன் பதவியை வகித்து வந்தது. இப்படி மாறிய பல நட்சத்திரங்களை வேத மந்திரங்களில் காண முடிகிறது.

 

இதையெல்லாம் கொண்டு ஜாகோபி என்ற ஜெர்மானிய அறிஞரும் , பால கங்காதர திலகர் என்ற இந்திய அறிஞரும் வேதத்தின் காலத்தைக் கணக்கிட்டனர். ஒருவருக்கொருவர் தெரியாமல், அறியாமல், தனித்தனி ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்த விஷயங்கள் இதோ:-

சதபத பிராமணத்திலுல் கிருத்திகா/ கார்த்திகை நடசத்திர உதயம் பற்றி உள்ளது. இது மார்ச் 21 ஆம் தேதி சம இரவு நாட்கள்  (Vernal Equinox) நிலையாகும். 2000 ஆண்டுகளுக்கு ஒரு பூமியின் முறை அச்சு வேறு ஒரு நட்சத்திரத்தைக் காட்டும். பம்பரம் போல் வேக மாகச் சுற்றாமல் பூமியின் அச்சு மெதுவாகச் சுற்றுவதால் 27 நட்சத்திரங்களில் ஒவ்வொன்றாக மாற 2000 ஆண்டுகள் பிடிக்கும். இன்றைய நிலயை ஒப்பிடுகையில், இது (கிருத்திகா/ கார்த்திகை நடசத்திர உதயம்) கி.மு 2500 இல் இருந்த நிலை என்பதை வானவியலாளர் அறிவர்.

 

ரிக்வேதத்திலும் ஒரு குறிப்பு உள்ளது இது மிருக சீர்ஷம் பற்றிய குறிப்பாகும். இந்த நிலை கி.மு 4500 இல் இருந்த நிலை என்று ஜெர்மானியர் ஜாகோபி எழுதினார்.

 

கி.மு 2500-ல் இப்போதைய துருவ நட்சத்திரம் இல்லை. Alfa draconia ஆல்பா ட்ராகோனியா என்ற நட்சத்திரமே இருந்தது. இவை எல்லாம் ரிக் வேதத்தின் காலத்தை கி.மு 4500 என்று காட்டுவதாக ஜாகோபி சொன்னார்.

சுதந்திரப் போராட்ட வீரர் திலகரோ, ரிக் வேதத்தில் புனர்வசு நடசத்திரம் பற்றியுள்ள குறிப்பைக் காட்டி வேதத்தின் காலம் கி.மு.6500 என்று காட்டினார்.

டாக்டர் ஆச்சார், அண்மையில் நடத்திய ஆய்விலும் .கி.மு 3000 என்று கண்டுள்ளார்.

f7wobble

அவர் சொல்லும் கணக்கு (கி.மு)

அஸ்வினி – 200

பரணி- 1200

கார்த்திகை- 2200

ரோஹிணி- 3200

மிருகசீர்ஷம்- 4200

 

கிருத்திகையில் ஆண்டு துவங்குவதாக பிராமணங்கள் கூறுவது அவை 2200-ஐ ஒட்டி எழுதப்பட்டதைக் காட்டும்.

பிரம்மாவின் “தலையை வெட்டியதாக”க் கூறும் புராணக்கதைகள் 4200-ஐ ஒட்டி எழுந்த கதைகள்.

 

சப்தரிஷிக்கள் காலண்டர்

சப்த ரிஷிக்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் 100 ஆண்டுகள் இருப்பர் என்ற பழைய சப்தரிஷி காலண்டர் இன்றும் கூட நாட்டின் சில பகுதிகளில் பின்பற்றப்படுகிறது. 2700 ஆண்டு சுழற்சியின் அடிப்படையில் உடையது. “சப்த ரிஷிக்கள்- கிருத்திகை நட்சத்திரக் கல்யாணம்” என்பன எல்லாம் இந்த காலண்டாரின் அடைப்படையில் வந்ததே.

 

தற்போதைய கணக்குப்படி இதன் துவக்கம் 3076. ஆனால் கிரேக்க ஆசிரியர்கள் அர்ரியன், பிளினி ஆகியோர் இது கி.மு.6676ல் துவங்கியதாக எழுதியுள்ளனர்.

 

இந்து மத நூல்களில் அஸ்வமேத யக்ஞம் துவங்கப்பட்ட நட்சத்திரம், ஆண்டு துவங்கும் மாதம் ஆகியன மாறுபட்டிருப்பதற்கு அவ்வப்போது இருந்த நட்சத்திர நிலையும் அதன் பழமையும் காரணமாகும்.

 

 

“மாதங்களில் நான் மார்கழி” என்று பகவத் கீதையில் கண்ணன் கூறுவது மஹா  பாரதத்தின் பழமையைக் காட்டும். அப்போது மார்கழி மாதமே ஆண்டின் துவக்க மாதமாக இருந்தது என்றும் ஆராய்ச்சியாளர் நவில்வர்.

img_8095

தொல்பொருட் துறை சான்று

ஹிட்டைட் மன்னரும் மிட்டனி மன்னரும் துருக்கி நாட்டில் பொகாஸ்கோய் என்னுமிடத்தில் கைச்சாத்திட்ட உடன்பாட்டில் இந்திரன், மித்திரன், வருணன், நாசத்யர் பேரில் உடன்படிக்கையை கை எழுத்திட்டுள்ளனர். இவை எல்லாம் இந்தோ- ஐரோப்பிய இலக்கியத்திலும் வெவ்வேறு கால கட்டங்களில் இருந்ததாகக் காட்டுவோரும் “நாசத்யர்” என்ற அஸ்வினி தேவர்களைக் காட்ட முடியவில்லை. நாசத்யர் என்பது இந்துக்கள், இந்திய மண்ணில் வேதம் பாடியபோது போற்றப்பட்ட தெய்வங்கள். ஆக இதுவரை வானவியல் குறிப்புகளை மறுத்தோ, தொல்பொருட் துறைக் குறிப்புகளை மறுத்தோ அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

 

சரஸ்வதி  நதி  சான்று

சரஸ்வதி நதி பற்றிய குறிப்புகளும் ரிக்வேத காலத்தைக் கணிக்க பெரிதும் துணைபுரிகிறது. இந்த நதி கடலில்

கலக்கும் நதி என்று ரிக்வேதம் கூறும். ஆனால் பிற்காலத்தில் ஏற்பட்ட பிரம்மாண்டமான பூகம்பத்தால் இது திசை றிப்போய் பின்னர் வறண்டுவிட்டது. அண்மைக்கால விஞ்ஞான சோதனைகள் 1900.ல் இது ஏற்பட்டதாகக் காட்டுவதால் ரிக்வேதத்தை கி.மு 1900க்கு முன்னர்தான் கணிக்கமுடியும். இப்படி வானவியல், தொல்பொருட் துறை, மொழியியல், மக்களின் பாரம்பர்ய நம்பிக்கை, இலக்கியச் சான்றுகள் எல்லாம் வேதத்தின் பழமையைப் பறை சாற்றுவதால் வெளிநாட்டான் எழுதியதும் அதற்குத் தாளம் போடும் மார்கஸீய திராவிடங்களின் வாதங்களும் நகைப்புக்குள்ளாகி விடுகின்றன.

அட நகைச் சுவை என்பது ஆராய்ச்சியிலும் தேவைதானே!

img_8104

–சுபம்—

 

பருப்பை நான்காம் தமிழுக்கு ரிஸர்வ் செய்த தீர்க்கதரிசி ஔவையார்! (Post No.3190)

milk-and-honey

Written by S NAGARAJAN

Date: 26 September 2016

Time uploaded in London:5-40

Post No.3190

Pictures are taken from various sources; thanks.

 

 

 

பிள்ளையாரைத் தமிழர்கள் கும்பிடவில்லையா??!! என்ற கட்டுரையை முதலில் படித்து விட்டு இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

 

பருப்பை நான்காம் தமிழுக்கு ரிஸர்வ் செய்த தீர்க்கதரிசி ஔவையார்!

ச.நாகராஜன்

 

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்                                 

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                           

 சங்கத் தமிழ் மூன்றும் தா!”

 

 

ஔவையாரின் இந்த பாடலைப் பல முறை படித்தால் பல விஷயங்கள் தெரிய வரும்.

 

நான்கு தந்து மூன்று கேட்ட ஔவையாரைப் பற்றிச் சற்று யோசித்த போது ஔவையார் ஒரு தீர்க்கதரிசி என்பது புலனாகிறது.

 

 

இயல், இசை, நாடகத் தமிழ் என முத்தமிழை பால், தெளி தேன், பாகு, பருப்பு ஆகிய நான்கைத் தந்து கேட்ட ஔவையாரின் வணிக பேர நேர்த்தியைக் கண்டு மனம் மகிழும் போதே எதற்கு அவர் பருப்பையும் சேர்த்து விநாயகருக்குப் படைத்தார் என்பது முதலில் புலனாகாது தான்!

 

 

ஆனால் ஔவையாரின் காலத்திற்குப் பின்னர் பல நூற்றாண்டுகள் கடந்து வந்த பின்னர் இன்று தமிழில் புதிய சேர்க்கையாக அறிவியல் தமிழ் இணைந்து விட்டது.

இயல், இசை, நாடகம் ஆகியவற்றோடு அறிவியல் தமிழும் சேர்ந்து விட்டதால் இப்போது முத்தமிழ், நாற்றமிழ் – அதாவது – நான்கு தமிழாகி விட்டது!

 

 

தமிழர்கள் விநாயகரை நான்கு தமிழைக் கேட்க வழி வகை செய்யும் வகையில் பருப்பையும் சேர்த்துப் படைத்து விட்டார் போலும் ஔவையார். அறிவியல் தமிழுக்காக அவர் பருப்பை ரிஸர்வ் செய்த அதிசயத்தை நினைத்து வியக்க வேண்டியதாக இருக்கிறது.

 

இனி என்ன கவலை?

 

 

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்                                  

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                            

சங்கத் தமிழ் மூன்றும் தா!” 

 

என்பதைச் சற்றே மாற்றி

 

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்                                  

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                            

தங்கத் தமிழ் நான்கையும் தா

 

என்று இனிமேல் பாடி வேண்டலாம்!

 

இயல் – பால்

இசை – தெளி தேன்

நாடகம் – பாகு

அறிவியல் – பருப்பு

 

ஆக அறிவியல் தமிழ் உருவாவதைக் கண்ட தீர்க்கதரிசி ஔவையாருக்கு நன்றி சொல்லி அதை விக்னமின்றி நமக்கு அருளும் விநாயகருக்கும் நம் பயபக்தியுடன் கூடிய வணங்குதலைச் செய்து வேண்டுவோம்.

 

 

வாழ்க ஔவையார்! வளர்க அறிவியல் தமிழ்!!

                   **********

 

 

 

 

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – Part 12 (Post No.3183)

buddha

WRITTEN BY S.NAGARAJAN

Date: 24 September 2016

Time uploaded in London: 5-13 AM

Post No.3183

Pictures are taken from various sources; thanks.

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 12

ச.நாகராஜன்

 

 

மலையிலே தனியாக க்வாரண்டைனில் விடப்பட்டிருந்த மக்களின் எண்ணிக்கை சுமார் ஆயிரத்திற்கும் மேலாகவே இருக்கும். அவர்களுக்கு தங்க சரியான இருப்பிடம் இல்லை. பகலில் வெயிலிலும் இரவில் கடும் குளிரிலும் மழையிலும் அவர்கள் கஷ்டப்பட்டனர்.

 

 

ஒவ்வொருவருக்கும் ரேஷன் அள்வாக சிறிது அரிசியும் இரண்டு காரட் துண்டங்களும் தரப்பட்டன, அவர்களே அதைச் சமைத்துக் கொள்ள வேண்டும்.

 

ஒரு நாளைக்கு இரு முறை ஒரு டாக்டர் வந்து அவர்களை சோதித்துக் கொண்டிருந்தார்.

ஏழு நாட்களுக்குள் அவர்களின் பாதிப் பேர் விடுவிக்கப்பட்டனர். ,ஸூ யுன்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ப்த்தாம் நாள் வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

 

 

ஸு யுன் மட்டும் மலையிலே தனியாக் இருந்தார். அவருக்கோ உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. அவரால் எதையும் சாப்பிட முடியவில்லை.

பதினெட்டாம் நாளன்று ஒரு டாக்டர் வந்து அவரை காலியாக இருந்த ஒரு வீட்டிற்குச் செல்லுமாறு ஆணையிட்டார். ஸு யுன்னும் சந்தோஷமாக அந்த வீட்டில் புகுந்தார்.

 

 

அங்குள்ள வயதான காவலாளியிடம் அவர் பேச ஆரம்பித்தார். அந்த காவலாளி ஜுயான் ஜூ என்ற இடத்தைச் சேர்ந்தவர்.

அவர் பெருமூச்சு விட்டவாறே ஸு யுன்னிடம் கூறலானார்: “இந்த அறை இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு ஒதுக்கப்படும் அறை! நீங்கள் இங்கு அனுப்பப்பட்டதற்கான காரணம் நீங்கள் இறந்த பிறகு பிரேத பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்பதற்காகத் தான்!”

 

ஜி லூ மடாலயத்திற்கு வருகை புரிய வேண்டி தான் வந்ததை ஸு யுன் அவரிடம் தெரிவித்தார்.

அவர் நெகிழ்ந்து போனார்.

 

“நான் உங்களுக்கு ஒரு ம்ருந்தைத் தருகிறேன்” என்று சொன்ன அவர்  ஷென் கு என்ற மருந்தைத் தயார் செய்து அதை ஒரு கிண்ணத்தில் ஸு யுன்னிடம் கொடுத்தார்.

 

 

அதை இரண்டு வேளை சாப்பிட்ட பின்னர் ஸு யுன் சற்றுத் தெம்பாக இருப்பதாக உணர்ந்தார்.

 

காவலாளி அவரிடம் வந்து கூறலானார்: “இப்போது டாக்டர் வருவார். நான் இருமுவேன். உடனே மிகவும் நன்றாகத் தேறியது போல உற்சாகத்துடன் இருங்கள். அவர் எந்த மருந்தைக் கொடுத்தாலும் அதைச் சாப்பிடாதீர்கள்”

 

டாக்டர் வந்தார். காவலாளி சொன்ன படியே ஏதோ ஒரு மருந்துக் கலவையைத் தயார் செய்து அதை விழுங்குமாறு ஸு யுன்னிடம் கூறினார்.

buddha01

 

அவரது வார்த்தையை மறுக்க முடியாமல் ஸு யுன் அதைத் தயங்கித் தயங்கி அருந்தினார்.

 

டாக்டர் சென்ற பிறகு காவலாளி ஓடி ஸு யுன்னிடம் வந்தார்:” அடடா, அந்த மருந்தை ஏன் சாப்பிட்டீர்கள்? நீங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்து விடுவீர்கள். டாக்டர் உங்கள் உடலை அறுத்துப் பார்க்க மீண்டும் நாளை வருவார்.”

 

ஸு யுன்னுக்குக் கண்கள் திறந்திருந்த போதிலும் எதையும் பார்க்க முடியவில்லை. தரையெங்கும் இரத்தம்

அந்தக் காவலாளி மீண்டும் மருந்தை கொண்டு வந்து கொடுத்தார். ஸு யுன் அதை அருந்தினார்.

 

 

“இன்னொருவராக இருந்திருந்தால் இந்நேரம் செத்திருப்பார். ஆனால் நீங்கள் சாகும் வேளை வரவில்லை போலும். புத்தர் உங்களைக் காப்பாற்றுகிறார். டாக்டர் நாளை வரும் போது நான் இருமுவேன். நீங்கள் நல்ல திட்த்துடன் இருப்பது போலக் காண்பியுங்கள்.”

 

மறு நாள் டாக்டர் வந்தார். ஸு யுன் உயிருடன் இருப்பதைப் பார்த்தார்.

 

 

ஒரு விரலை அவர் முன் நீட்டியவாறே சிரித்தார்.  பின்ன்ர் சென்று விட்டார்.

‘ஏன் டாக்டர் அப்படிச் சிரித்தார்’ என்று கேட்ட ஸு யுன்னிடம், “ ஏனெனில் நீங்கள் சாகும் விதி இல்லை என்பதால் தான்!” என்றார் காவலாளி.

 

உபாசகர் காவ் கொஞ்சம் பணத்தை ஸு யுன்னிடம் கொடுத்திருந்தார். அவர் டாக்டரிடம் கொஞ்சம் டாலரைக் கொடுக்குமாறு காவலாளி மூலம் ஸு யுன்னிடம் சொல்லி அனுப்பி இருந்தார்.

 

ஸு யுன் நாற்பது டாலரை டாக்டருக்குத் தருமாறு கூறவே காவலாளி அதை வாங்கிக் கொண்டார். உதவி செய்ததற்காக இன்னொரு இருபது டாலரை ஸு யுன் காவலாளிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.

 

“இன்று வரும் டாக்டர் ஐரோப்பிய் டாக்டர். அவர் பணத்தை வாங்க மாட்டார். நாளை வரும் டாக்டரிட்ம பணத்தைத் தருகிறேன். உங்கள் விடுதலை நிச்சயம்” காவலாளி கூறியது போலவே மறு நாள் ஸு யுன் விடுவிக்கப்பட்டார்.

அவருக்கென் காத்திருந்த படகில் ஏறி பயணப்பட்டு குவாங்-பு என்னுமிடத்தை அடைந்தார்.

 

அங்கு உபாசகர் காவ் அவரை வரவேற்க அனுப்பி இருந்த பிட்சு அவரை வரவேற்றார்.

அவருக்காக நெடு நாட்களாகக் காத்திருப்பதாக அந்த பிட்சு சொல்லவே ஸு யுன் தனக்கு நேர்ந்தது அனைத்தையும் விவரித்தார்.

 

 

அவர் மிகவும் வருத்தப்பட்டார். உடல் நலம் தேறிய பின்னர் அங்கு ஸு யுன் லோடஸ் சூதார்வை விவரித்துச் சொல்ல ஆரம்பித்தார். ஒரே கூட்டம்.

மலேசிய நகரங்களில் வரிசையாக அவர் சொன்ன சூத்திர விரிவுரைகளைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்.

பத்தாயிரம் சிஷ்யர்கள் உருவாயினர்.

 

சீனாவுக்குத் திரும்பி வருமாறு தந்தி மேல் தந்தி வந்து கொண்டிருந்தது. குளிர்காலமும் தொடங்கியது.

வருடம் முடியப் போகிறது. புது வருடக் கொண்டாட்டத்தின்போது கோலாலம்பூரில் ஸு யுன் இருந்தார். நாட்கள் கழிந்து கொண்டிருந்தன..

 

*************

 

சாளக்ராமம் பற்றிய சுவையான தகவல்கள் (Post No.3177)

fossil-puja

Translated by London swaminathan

Date: 22 September 2016

Time uploaded in London: 7-48 AM

Post No.3177

Pictures are taken from various sources; thanks.

 

From Arthur Miles’ book The Land of the Lingam 

 

ammonites

Ammonite Fossils

1933-ஆம் ஆண்டில் இந்து மதத்தையும், குறிப்பாக சிவ லிங்க வழிபாட்டையும் குறைகூறி ஆர்தர் மைல்ஸ் என்பவர் ஒரு புத்தகம் வெளியிட்டார். பக்கத்திற்குப் பக்கம் இந்து மத பழக்க வழக்கங்களை  “பகுத்தறிவுப் பகலவன்கள்”(?!?!) குறைகூறுவது போல எழுதினாலும் நிறைய விவரங்களைத் தருகிறார். அதில் ஒன்று சாலக்ராமம் பற்றியது.

ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்:-

 

சாளக்கிராமம் என்பது வெழுமூன இருக்கும் ஒரு கல். அதற்குள் விஷ்ணு சக்கரம் போல அச்சு இருக்கும். இது உண்மையில் உயிரியல் அறிஞர்கள் சோதனைக் கூடங்களில் சேர்த்து வைக்கும் படிம அச்சுகளாகும் FOSSILS. அதாவது மில்லியன் அல்லது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உரியினங்களின் கல் அச்சு.

 

இந்துக்களுக்கு இந்த படிம அச்சுகள் மிகவும் புனிதமானவை. சங்கு சக்கரம் போலப் பதிவான சித்திரம், விஷ்ணுவின் அடையாளம் என்று இந்துக்கள் கருதுவதால் அதற்கு தினமும் அபிஷேகம் ஆராதனை செய்து பூஜிப்பர்.

 

இது குறித்து ஆர்தர் மைல்ஸ் எழுதிய விஷயங்களை ஆங்கிலத்தில் அப்படியே வெளியிட்டேன். அதன் சுருக்கத்தைக் காண்போம்:

 

1.சாளக்ராமம் தோன்றிய கதை:

ஒரு நாட்டியம் ஆடும் பெண்மணி பேரழகி. அவளுக்கு ஈடு இணையான

அழகுள்ள ஒரு ஆண்மகனும் கிடைக்கவில்லை. ஆகை யால் இமய மலைக்குப் போய்த் தவம் செய்வோம் என்று புறப்பாட்டாள். அங்கு விஷ்ணு வந்தார். அவருடைய பேரழகைக் கண்டவுடன் இந்தப் பெண் தவத்தை எல்லாம் விட்டுவிட்டு அவரிடம் சென்று என்னைத் திருமண ம் செய்து கொள்ளுங்கள் என்றார். அவரோ மானுடனாகப் பிறந்த நடன மாதுவைக் கைப்பிடிக்க விரும்பவில்லை. இருந்த போதிலும் இப்படிப்பட்ட பேரழகியை விடக்கூடாதென்று ஒரு வழி கண்டுபிடித்தார். பெண்ணே நீ கண்டகி நதியாகப் (GANDAKI RIVER) பிற ந்து வா. நான் அங்கே கிடக்கும் சாலக்ராமமாக அவதரிக்கிறேன். நீ என்னை எப்போதும் தழுவிச் செல்லலாம் என்றார்.

 

இந்தக்தையின் உண்மைப் பொருள்: நேபாள நாட்டிலுள்ள கண்டகி நதியில்தான் அதிகமாக இவ்வகை படிம அச்சுகள் FOSSILS கிடைக்கின்றன. அது விஷ்ணுவின் அம்சம். அதை உணர்த்த இந்தப் புனைக்கதை உருவாக்கப்பட்டது. இந்துக்கள் எதையுமே நேரடியாகச் சொல்லாமல் அடையாள க் குறி யீட்டுகளால் (symbolic story) காட்டுவர் அப்படிப்பட்ட ஒரு கதை இது.

sripadarajamatha_saligramas

  1. சாளக்ராம மகிமை:-

 

நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு வீரன் (க்ஷத்ரியன்) எதேச்சையாக ஒரு சாளக்ராம கல்லை வாயில் வைத்து கொண்டு நீந்தி வந்தார். அவருக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம் அடித்தது. அவருக்கு அரச பதவியும் கிடைத்தது. பின்னர் விஷ்ணுவே வந்து மேக ரூபமாக அவரை சுவர்க்க லோகத்துக்கு அழைத்துச் சென்றார். அதற்குப் பிறகு கண்டகி நகர சாளக்கிராம கற்களின் மகிமை உலகிற்குத் தெரிந்தது. இப்பொழுது அது பஞ்ச்சாயதன பூஜையின் ஒரு பகுதியாக இந்துக்களின் வீட்டின் பூஜை அறையில் உள்ளது!

 

3.சாளக்கிராம கல்லை மதிப்பிடுவது எப்படி?

சாளக்கிராம கற்களை எடுக்கும் உரிமை அந்தக் காலத்தில் நேபாள மன்னர்களிடம் மட்டுமே இருந்தது. அவர்கள் அந்த உரிமையைக் குத்தகைக்கு விடுவர். ஆனால் யார் அவற்றைக் கண்டுபிடித்தாலும் அதை அரசரிடம் கொடுக்க வேண்டும். அவர்கள் அதிலுள்ள சக்கரம், குறிப்பிட இடத்திலுள்ள ஓட்டை இவற்றைக் கொண்டு மதிப்பிடுவர். அதற்குப் பின் அதைச் சுத்தம் செய்துவிட்டு ஒரு தராசின் ஒரு தட்டில் வைப்பர். ஒவ்வொரு கல்லுக்கும் சமமான அரிசியை மற்றொரு தராசுத் தட்டில் வைப்பர். மறு நாள் (24 மணி நேரத்தில்) அரிசியின் எடை அதிகரித்து அந்தத் தட்டு கீழே தாழ்ந்திருந்தால் அதன் மதிப்பு அதிகம். அரிசியின் அளவு இரு மடங்கு கூட ஆனதுண்டாம். அரிசியின் அளவு அதே மாதிரி நீடித்தாலோ அல்லது குறைந்தாலோ சாளக்கிராமத்துக்கு மதிப்பில்லை.

 

4.அதர்வ வேதத்தில் சாளக்ராமக் கல்

சாளக்ராமக் கல் இல்லாத வீடு சுடுகாட்டுக்குச் சமம் என்றும் அங்கே சமைக்கப்பட்ட உணவு நாயின் விட்டைக்குச் சமம் என்றும் அதர்வண வேதம் கூறுவதாக ஆர்தர் மைல்ஸ் எழுதுகிறார். சாளக்ராமக் கல்லின் அபிஷேக நீர்  மகிழ்ச்சியை அளிக்கும் என்றும் அதை அபிஷேகம் செய்து ஆராதிப்போர் வீ ட்டில் லட்சுமி நிரந்தரமாகக் குடியிருப்பதால் செல்வம் தழைக்கும் என்றும் இந்துக்கள நம்புகின்றனர்.

ஒரு காலத்தில் 4000 பவுண்டு கொடுத்து கூட அதை வாங்கினராம்.

 shaligram-sila

5.கந்த புராணத் தகவல்

 

கந்த புராணத்தில்தான் சாளக்ராம மகிமை கூறப்பட்டிருக்கிறது. இதை வீட்டில் வைத்திருந்து பூஜை செய்யாமல் இருந்தால் துரதிருஷ்டம் பீடிக்கும். சாளக்ராமத்தில் உக்ர சக்ர சாளக்ராமங்கள் என்பன தீய விளைவுகளை ஏற்படுத்துமாம். அப்படி தீய விளைவை உண்டாக்கும் கற்கள் இருந்தால் அவைகளை க் கோவில்களில் கொடுத்து  விட்டால் ஒரு கஷ்டமும் வராது. கோவிலிலுள்ள மகத்தான சக்தி, பூஜைகளால் அவை உக்ரம் இழந்துவிடும்.

இறுதியாக சாலக்கிராமத்தில் போலி கற்களும் உண்டு. அதாவது மோசடி செய்வோர் அதன் மீது கருவிகளால் கோடு, ஓட்டைகளைப் போட்டு அவறறை சாளக்ராமம் என்று விற்பர். இவைகளைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. (ஆகையால் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்).

 

-subham-

 

அஸ்வமேத யாகத்தில் புரியாத புதிர்கள் (Post No.3168)

krishna_advising_on_the_horse_sacrifice

Written  by London swaminathan

Date: 19 September 2016

Time uploaded in London:9-19 AM

Post No.3168

Pictures are taken from various sources; thanks.

அஸ்வமேத யக்ஞம் பற்றிய அதிசயச் செய்திகள் – பகுதி 2 

 

 

அஸ்வமேத யக்ஞத்தில், — ஓராண்டுக் காலம் பல நாடுகளுக்குச் சென்றுவந்த குதிரையைக் கழுத்தை நெறித்துக் கொன்றார்கள் — அந்தக் குதிரையுடன் மஹாராணி இரவு முழுவதும் கணவன் – மனைவி போல  நெருங்கிப் படுத்திருக்க வேண்டும் —  அப்பொழுது ஆபாச வசனங்களை மற்ற பெண்கள் சொல்ல வேண்டும் — என்று மட்டும் எழுதி அந்த யக்ஞத்தைக் கொச்சைப்படுத்தும் வெளிநாட்டுப் படை எடுப்பா ள ர்களும் அவர்களின் உள்நாட்டுத் திராவிட அடிவருடிகளும் அந்த யாகம் பற்றிய முழு விஷயத்தையும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் இது அவர்களுக்கும் புரியவில்லை; கேட்டால் நமக்கும் புரியாது. அவர்கள் ஆபாச வசனங்களை  மட்டும் பரிமாறிக் கொள்ளவில்லை. பல விடுகதைகள்,  புதிர்களையும் பகிர்ந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல; அதில் ஒரு குஷ்ட ரோகியும் பங்கு பெற்றார். இதற்கெல்லாம் என்ன பொருள் என்று பார்க்கும்போது வியப்பாக இருக்கும்.

 

அஸ்வமேதத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குதிரை என்ன நிறத்தில் இருக்க வேண்டும் என்று சிரௌத சூத்திரங்கள் சொல்லுகின்றன. நெற்றியில் கருப்புப் பொட்டுடன் இருக்கும் வெள்ளைக் குதிரை அல்லது பழுப்பு குதிரையாக இருக்கலாம். ஆது ஆயிரம் பசு மாடுகளின் விலைக்குச் சமமானதக இருக்க வேண்டும் என்றும் சொல்லும். எல்லா குதிரைகளையும், பந்தயத்தில் தோற்கடிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் அது சூரியனின் அடையாளம். அதன் மீது இதுவரை யாரும் ஏறி சவாரி செய்திருக்கக்கூடாது!

இந்தக் குதிரைக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை எல்லாம் பார்த்தால் அப்படி ஒரு குதிரை கிடைக்குமா என்று வியப்போம்!

 

அஸ்வமேத யக்ஞம் நான்கு புரோகிதர்களால் செய்யப்படும். அரசனின் நான்கு மனைவியர் கூடவே இருக்க வேண்டும். குதிரையைத் தொடர்ந்து 400 வீரர்கள் செல்ல வேண்டும். அரசனுடன் எட்டு ஆலோசகர்கள் செல்ல வேண்டும் . எல்லாம் நான்கு என்ற எண்ணின் மடங்குகள்! ஏன்?

 

நான்கு புரோகிதர்களும் ஒரு வாரத்துக்கு முன் சந்திப்பர். அப்பொழுது அரசன் கொடுத்த அரிசிக் கஞ்சியை சாப்பிடுவர். அரசன் ஒவ்வொரு புரோகிதருக்கும் 1000 பசுமாடுகளும் தங்கமும் தருவான். அவர்கள் நால்வரும் அரசனின் கழுத்தில் தங்கச் சங்கிலி ஒன்றைக்கட்டுவர். குதிரையைத் தர்பைப் புல்லைக் கொண்டு சுத்தம் செய்வர்.

(இன்றும்கூட பிராமணர்கள் தர்பைப் புல்லை வைத்துதான் சுத்தப்படுத்துவார்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்படி பின்பற்றப்படும் ஒரு வழக்கம் வேறு எந்த கலாசாரத்திலும் இல்லை!).

 

அஸ்வமேதக் குதிரை ஓராண்டுக்கு அது இஷ்டப்பட்ட இடங்களுக்கு எல்லாம் செல்லும்’ அந்த நாடுகள் எல்லாம் அரசனின் தலைமையை ஏற்கவேண்டும். அல்லது அவனுடன் சண்டை போட்டு வெல்ல வேண்டும்.

அச்வமேதக் குதிரையைச் சுற்றி 100 குதிரைகள் செல்ல வேண்டும்.

அந்தப் பிரதான குதிரைக்கு ஒவ்வொரு ராணியும் 1000 முத்துகள் உடைய மாலையைச் சூட்டவேண்டும் என்று ஆபஸ்தம்ப ச்ரௌத சூத்திரம் சொல்லும். 4X1000 = 4000 முத்துக்கள்.

 horse-sacrifice2

எனது கருத்து:

இந்த முத்துகளும், யாகத்தில் கொடுக்கப்பட்ட தங்கமும் எங்கிருந்து வந்தன? தென் கடல் முத்தாக இருந்தால் வேத காலத்திலேயே அவர்களுக்கு தென்னாட்டு உறவு இருந்தது தெரிகிறது. மற்ற நாட்டு முத்தானால் அவர்களுக்கு கடல் சார் வணிக உறவுகள் இருந்தது நிரூபணமாகிறது. சில பரதேசிகள், வேத கால இந்துக்களுக்கு “கடல்” என்றால் என்ன என்று தெரியாது என்று எழுதின!

 

 

யக்ஞத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பல எண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். குறிப்பிட்ட எண்ணுடைய காட்டு மிருகங்கள், வீட்டு மிருகங்கள், 13 ஆசீர்வாதங்கள், 13 கம்பங்கள் என்று பல எண்கள் குறிப்பிடப்படுகின்றன; ஏன் என்பதற்கு பல விளக்கங்கள் கூறப்பாட்டாலும் இது மிகவும் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட யாகம் என்பதை அறிய முடிகிறது.

எனது கருத்துகள்:

ரிக் வேதத்திலேயே மூன்று மண்டலங்களில் குறிப்பிடப்படும் அஸ்வமேதம், வேத கால மக்கள் கணிதத்தில் எவ்வளவு முன்னேறியவர்கள் என்பதைக் காட்டும் அது மட்டுமல்ல. தங்கமும் ஆயிரக்கணக்கான பசுமாடுகளும் அவர்களுடைய செல்வ வளத்தை காட்டும். நூற்றுக் கணக்கான குதிரைகள் பயன்படுதப்பட்டன. அரிசிச் சோறு பயன்படுத்தப்பட்டதால் அவர்கள் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதும் தெளிவாகிறது.

 

வேத காலத்தில் அரசர்கள் இருந்ததும் அவர்கள் பெரிய யாகங்களை நடத்தி தனது தலைமையை நிலைநாட்டியதும் இந்த யக்ஞத்தால் புலனாகிறது. ஆரியர்களை நாகரீகம் தெரியாத நாடோடிகள் என்று எழுதிய பரதேசிகளுக்கு இது செமை அடி கொடுக்கிறது. ஒரு பக்கம் அஸ்வமேதத்தைக் குறை கூறி எழுத பல உண்மைகளை மறைத்து அரைகுறை விஷயங்களை எழுதியதும் அம்பலம் ஏறுகிறது.

(பரதேசி = வெளிநாட்டான்)

உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இது போன்ற யக்ஞங்கள் இல்லை. ஆனால் இமயம் முதல் குமரி வரை இந்த யாக யக்ஞங்கள் இருந்ததை புறநானூற்றுப் பாடல்கள் உரைக்கின்றன. இவ்வளவு பெரிய பரப்பில் இவ்வளவு பெரிய நாகரீகம்–கலாசாரம் உலகில் வேறு எங்கும் இருந்ததில்லை. இன்றைய பரப்பளவில் பாரதம், உலகில் ஏழாவது பெரிய நாடு. 2000 ஆண்டுகளுக்கு முன்னரோ உலகில் நாம்தான் “ஒரே கலாசாரம்” உள்ள பெரிய நாடு.

 

யக்ஞத்தில் பயன்படுத்தப்பட்ட மிருகங்களை எண்ணிப் பார்த்தால் 609 என்று வருகிறது ஆனால் அவை அனைத்தும் இறுதியில் உயிருடன் விடப்பட்டன என்றே தெரிகிற து அகநானூற்றில் கூட, வெளியே உலாவரும்  வேள்விக்குண்ட ஆமை ஒன்றை உவமையாகக் கூறுகின்றார் ஒரு புலவர்.

 

மேலும் இந்த யக்ஞம் பற்றி விரிவாகப் பேசும் சதபதப் பிராமணம் என்னும் நூலே உயிர்ப்பலியை எதிர்த்துப் பேசுகிறது. யாகத்தில் மாவினால் செய்யப்பட்ட உருவங்களைப் போடுவதே சிறந்தது என்றும் செப்புகிறது. அடையாளபூர்வமாக ஓரிரு மிருகங்கள் பலியிடப்பட்டதாகவும் ஊகிக்க முடிகிறது.

 

இன்று,  மதத்தின் பெயரால் பலியிடப்படும் மனிதர்கள், ஒட்டகங்கள், ஆடுகள், மற்றும் உணவுக்காக (சாப்பிடுவதற்காக) நாள் தோறும் கொல்லப்படும் கோடிக்கணக்கான உயிரினங்களை ஒப்பிடுகையில் இது ஆற்று மணல் துகள் அளவே என்று சொல்லலாம்.  ஏனெனில் அஸ்வமேதம் செய்த  அரசர்களின் எண்ணிக்கை இந்திய வரலாற்றில் மிகக்குறைவு. சுமார் 30 பேர்தான் . வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அதற்கும் குறைவே. ஆகையால் உலகில் யாரும் இது பற்றிப் பேச தார்மீக உரிமை இல்லை.

aswamedha

குஷ்டரோகி!

 

யாகத்தின் முடிவில் எல்லோரும் ஊர்வலமாகச் சென்று ஒரு குளத்தில் குளிக்க வேண்டும். வருண பகவானுக்காக ஒரு குஷ்ட ரோகியின் தலையில் வெண்ணை அபிஷேகம் செய்யப்படும். அந்த மனிதனை 1000 பசுக்கள் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டும் என்று சாங்க்யாயன ச்ரௌத சூத்திரம் சொல்லுகிறது.அவன் அத்ரி குலத்தைச் சேர்ந்த பிராமண குஷ்ட ரோகியாக இருக்க வேண்டும்! ஏனெனில் வருண பகவான் குஷ்டரோகி வடிவம் எடுக்கிறாராம். அவனை ஆற்றில், வாய்க்குள் நீர் புகும் வரை, முழ்க வைத்து பின்னர் வீட்டுக்கு அனுப்பிவிடுவர். பின்னர் அதே இடத்தில் எல்லோரும் குளித்துவிட்டு புத்தாடை அணிவர்.

 

சிறைக்கதிகளை அந்த இடத்திற்கு அழைத்து வந்து அவர்களையும் குளிக்கச் செய்து விடுதலை செய்துவிடுவார்கள்.

 

மஹாபாரதம், ராமாயணம் முதலிய சம்ஸ்கிருத நூல்களில் அஸ்வமேதம் பற்றிப் பல செய்திகள் உள்ளன.

 

வள்ளுவனும் மனுவும்

 

அவி சொரிந்  தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர் செகுத்து ண்ணாமை நன்று (குறள் 259)

 

தீயில் அவியைப் போட்டு ஆயிரம் வேள்விகளைச் செய்வதைப் பார்க்கிலும் ஒன்றன் உயிரைக் கொன்று அதன் மாமிசத்தைத் தின்னாமல் இருப்பது மேலானது.

அவி= அரிசிச் சோறு+நெய்

 

இது மனு ஸ்மிருதியின் எதிரொலி; அவர் கூறியதையே வள்ளுவரும் வேறு விதமாகக் கூறுகிறார் (மனு. 5-53)

“ஓராண்டுக்கு ஒரு அஸ்வமேத யக்ஞம் வீதம் நூறு ஆண்டுகளுக்கு நூறு அஸ்வமேதம் செய்பவருக்கு என்ன பலன் கிடைக்குமோ அது ஒருவன் புலால் உணவைச் சாப்பிடாததால் கிடைக்கும்.”

 

100 அஸ்வமேதம் செய்தால் அவர்களுக்கு இந்திரன் பதவி கிடைக்கும் என்றும் நமது சாத்திரங்கள் சொல்லும். அந்த அளவுக்குப் பெருமை பொருந்தியது மாமிசம் உண்ணாமை!

 

Books used:-

 

The Asvamedha – by Subhas Kak; 2002

 

The Vedic horse sacrifice –  by Stephen Fuchs

 

Xxx

 

My Old Article on the same subject

 

அகநானூறு ஆமை ரகசியம் அம்பலம்! (Post No.3028)

Research Article written by london swaminathan

Date: 2nd  August 2016

Horse headed Seer: Rig Veda Mystery No.1; Research Paper written by London

No.1255; Dated 27th August 2014.

 

 

–சுபம்–

சூரியனிடம் பாடம் கற்றான் அனுமன்: கம்பன் தகவல் (Post No.3165)

anajaneyavijayawada

Written by London swaminathan

Date: 18 September 2016

Time uploaded in London:10-31 AM

Post No.3165

Pictures are taken from various sources; thanks.

 

அனுமனை– ஆஞ்சநேயனை — மாருதியை – சொல்லின் செல்வன் என்றும் மாபெரும் இலக்கண மேதை என்றும் அனைவரும் போற்றுவர்.

அனுமனை நினைத்தேலேயே சொல்வன்மை பெருகும் என்று சம்ஸ்கிருத துதி சொல்லும்:

 

புத்திர் பலம் யசோ தைர்யம்

நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வம் ச

ஹனூமத் ஸ்மரணாத் பவேத்

 

அனுமானை நினைத்த மாத்திரத்தில் அறிவு, புகழ், வீரம், அஞ்சாமை, ஆரோக்கியம், உற்சாகம், சொல்வன்மை எல்லாம் கிடைக்கும். அவனை வழிபட்டால்  இவை எல்லாம் நமது உடைமை ஆகிவிடும்.

 

கம்பன் சொல்கிறான்- இந்த சொல்வன்மைக்குக் காரணம் அவன் சூரியனிடம் இலக்கணம் படித்ததே என்று.

 

வால்மீகி ராமாயணமும், அனுமன் அஷ்டோத்தரமும் அவனை “நவ வியாகரண பண்டிதன்” என்று போற்றுகிறது. கம்பன் அவனைப் போற்றும் பாடல் கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது:–

 

 

கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட

புண்டரீகக் கண் ஆழிப் புரவலன் பொலன் கொள் சோதிக்

குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ

பண்டை நூல் கதிரோன் சொல்ல படித்தவன் படிவம் அம்மா

 

—அனுமப் படலம், கிஷ்கிந்தா காண்டம், கம்ப ராமாயணம்

 

பொருள்:

ஓங்கி உலகளந்த உத்தமன் சுவர்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்களைக் கடந்தான். செந்தாமரைக் கண்களையும், சக்கரப் படையையும் உடைய அவன் இதோ இராமனாக இருக்கிறான். அப்பேற்பட்டவன் பொன்னால் ஆன குண்டலங்களை அணிந்த அனுமனைக் காணமுடியவில்லை. பழமையான இலக்கணம் முதலிய சாத்திரங்களைச் சூரியனிடம் கற்றுத் தேர்ந்த அனுமான் இப்படிப்பட்டவன் என்று எடுத்துக் கூறவும் முடியுமோ?

 

(அனுமன் தனது சுய ரூபத்தை காட்ட பேருருவம் எடுத்ததைக் கூறும் பாடலுக்கு அடுத்து வரும் பாடல் இது)

anjaneya-in-yaga-fire

Anjaneya is seen in Yajna Fire
நவ வியாகரணம் என்பது ஒன்பது வகையான வடமொழி இலக்கணங்களே. அவையாவன: இந்த்ரம், ஸாந்த்ரம், காசகிருத்ஸ்னம், கெளமாரகம், சகதயனம், ஸாரஸ்வதம், ஆபிசலம், ஸாகலம், பாணிணீயம்.

 

அனுமன் கற்ற நவ (9) வியாகரணம் என்ன என்பதை காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் சந்திர சேகர இந்திர சரஸ்வதி அவர்களின் சொற்களில் காண்போம்:-

 
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
வியாகரணம் : வேதத்தின் வாய்
இலக்கண நூல்கள்
இங்கே பரமேச்வரனைக் கவி “சந்த்ராவதம்ஸன்” என்கிறார். அப்படியென்றால் சந்திரனைத் தலையணியாக, சிரோபூஷனமாகக் கொண்டவன் என்று அர்த்தம். “சந்திரசேகரன்”, “இந்துசேகரன்” என்றாலும் இதே பொருள்தான். வியாகரண சாஸ்திரங்களில் இரண்டுக்கு ஆச்சரியமாக இந்த ‘இந்துசேகர’ப் பெயர் இருக்கிறது. ஒன்று, ‘சப்தேந்து சேகரம்’ வியாகரணத்தில் இந்த நூல் வரைக்கும் ஒருத்தன் படித்து விட்டால், “சேகராந்தம் படித்தவன்”என்று பாராட்டிச் சொல்வார்கள்.

 

‘இன்னொரு புஸ்தகம், “பரிபாஷேந்து சேகரம்” என்பது.
சிக்ஷா சாஸ்திர நூல்கள் சுமார் முப்பது இருப்பது போல், வியாகரணத்திலும் ஏராளமான கிரந்தங்கள் இருக்கின்றன. அவற்றில் பாணினி ஸூத்ரம், அதற்குப் பதஞ்ஜலி பாஷ்யம், வரருசி வார்த்திகம் ஆகிய மூன்றும் தலைமை ஸ்தானத்தில் இருக்கின்றன.
வரருசியும் காத்யாயனரும் ஒருத்தரே என்ற அபிப்ராயத்தில் இங்கே நான் சொல்லியிருக்கிறேன். அவர்கள் வெவ்வேறு பேர் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
விக்ரமாதித்தன் ஸபையிலிருந்த ‘நவரத்ன’ங்களில் ஒருத்தர் வரருசி. இலக்கண புஸ்தகங்கள் எழுதினவர். வார்த்திகம் பண்ணின காத்யாயனர் இவரா இல்லையா என்பதில் அபிப்ராய பேதம் இருக்கிறது.
பர்த்ருஹரியின் “வாக்யபாதயம்” என்ற நூலும் முக்யமான வியாகரண புஸ்தகங்களில் ஒன்றாகும்.
‘நவ வ்யாகரணம்’ என்பதாக ஸம்ஸ்கிருதத்தில் ஒன்பது இலக்கண நூல்கள் குறிப்பிடப் படுகின்றன. ஆஞ்ஜநேய ஸ்வாமி ஸூரிய பகவானிடமிருந்து இவற்றைக் கற்றுக் கொண்டார். பிற்பாடு ஸ்ரீராமரே ஆஞ்சநேயரை “நவவ்யாகரண வேத்தா” என்று புகழ்கிறார்.
நவ வியாகரணங்களில் ஒன்று “ஐந்திரம்” – இந்திரனால் செய்யப்பட்டதால் இப்படிப் பெயர். தமிழ் இலக்கணத்துக்கு மூலமான “தொல்காப்பியம்” இந்த ஐந்திரத்தை மூலமாகக் கொண்டு அந்த வழியிலேயே செய்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

–Subham–

Asvamedha: New Explanation (Post No.3163)

horse-sacrifice2

Written by London swaminathan

Date: 17 September 2016

Time uploaded in London:21-41

Post No.3163

Pictures are taken from various sources; thanks.

Interesting Titbits about Asvamedha Yajna- Part 2

 

The Asva medha is performed by a king who is assisted by his FOUR wives and FOUR different priests address them with mantras.

 

Description of the sacrifices as follows:

It is a three-day Soma sacrifice. It is done in spring. Six or seven days before the full moon in the month of Phalguna, the four priests, the Adhvaryu, the Hotr, the Brahmin and Udgatr meet. The Adhvaryu cooks rice meal and the king gives the rice meal and gold plates to four priests. The four queens are also present and  the horse is purified with Dharba grass (SB 13-4-1/8, 13-1-1/2)

My comments:

Vedic society had kings and that too, rich kings with lot of gold. Rice is used so they were not from Europe or central Asia. They were sons of the soil i.e. a tropical country like India. The mathematics behind the construction of altars show their mathematical skills. So they are advanced in knowledge and they were not nomads as projected by half- baked foreign writers.

aswamedha

400 soldiers

The horse selected for the Yajna is black in the forepart and white in the back part. It has a mark on its forehead. It is allowed to roam for a year. FOUR HUNDRED soldiers followed it!

(look at the mysterious 4, 400 etc)

The horse is surrounded by 100 more horses and the king is surrounded by EIGHT councillors.

 

The horse can wander into any country. If it is not challenged by the king of the country that means he accepts the sovereignty of the performing king. If he challenges the horse the Yajna performing king will fight with him. After a year the horse returns and then the fire sacrifice is done in which horse or a figure of horse is sacrificed. Some rites such as the chief queen lying with the straggled horse for one night and other queens speaking obscene dialogue is also in the scripture. The priests exchange lot of riddles.

 

Mysterious numbers!

A lot of numbers are used and the reason for such numbers is also explained in the scriptures. This shows their obsession with numbers; some examples:-

Prajapati -17; 16 and 13 represent domestic and wild animals; queens weave 101 pearls into the mane and tail; primary numbers linked to Asvamedha are 21, 260 and 337 representing the number of stakes, the number of wild animals and the number of domestic animals. So lot of organisation is required to do an Asvamedha.

 

Since Rig Veda links King Traiaruna with Asvamedha, the Vedic society was highly civilized and organised.

The hydraulic research in the Sarasvati basin and the precession of the earth mentioned in the Vedas scriptures show the Vedas must be composed before 1900 BCE or 3000 BCE. Latest news says that even the Indus valley civilisation is older than 3000 BCE. All the dates must be recalculated and Max Muller’s date should be thrown into dust bin.

My comments
The numbers show that they were highly literate and numerate.

According to Apastamba Srauta Sutra (20-15) each of the four wives of the king should hang 1000 pearls around the neck of the sacred horse. 4X1000 = 4000 pearls!

 

The use of 1000s of pearls for all the horses show that they were sea faring people. If they had imported from other places that shows their vast geographical knowledge and maritime trade.

The Darba grass used in the Vedic time is still used by the Brahmins in their ceremonies. It shows a continuous tradition followed from Kantyakumari to Kashmir for thousands of years. No culture in the world has such a long tradition on such a vast land. If any other religion shows any other custom like this, we know the date is long after the Vedic period.

The presence of women in all Vedic ceremonies is a must. This shows the highest respect shown to women by the Hindus. No other culture insists that women must be present and participate. From the Vedic days till this day women must be present for all the Hindu ceremonies.

Until today no one can say for sure what Soma plant was. Because the Western society is highly addictive to drugs they can’t think of anything other than narcotic substances. But the eighth mandala of Rig Veda which is fully devoted to Soma, speaks of magical powers of the Soma plant. No culture in the world will dedicate one full section/chapter for narcotic drug, that too in praise of it!

 

krishna_advising_on_the_horse_sacrifice

Lepers in the Ceremony

Why a leper is involved in the Asvamedha remains a mystery; no can explain it or justify it. A leper is washed in the same place where every participant bathes and he is honoured with dakshina (fees); actually he is also one of the objects of sacrifice. This shows that no one is thrown into fire, but it is only symbolic.

In various groups 609 animal victims were listed for the sacrifice; 312 of them were domestic animals and 260 of them were wild animals. But they were all released at the end; may be a symbolic sacrifice of a goat or ram was done.

Catholic missionary Abbe J A Dubois who lived in India from 1792 to 1823 gave a detailed description of this yajna. He says the King of Amber (Jaipur) did an Asvamedha and gave one lakh rupees as dakshina to the chief priest. In today’s money it would be millions of rupees.

 

Puranas talk about another king called Asvamedhadattan. He belongs to Lunar dynasty and his mother was Vaitheki and Janamejayan was his grandson.

 

Satapata Brahmana gives details about Asvamedha yajna. The general impression is that a horse was sacrificed in the fire at the end. But Satapata Brahmana (here afterwards SB) itself says that prior to King Syaaparna Saayakaayana, sacrifice of several animals took place, but now it is limited to the Aja (goat)—SB 6-2-1-39.

In Sanskrit Aja means grains as well. SB also adds that plants are appropriate for sacrifice. So we can conclude that at one stage animal sacrifice was completely abandoned and only plants or animals made up of flour were sacrificed.

 

Mahabharata explains what is happening in the world (12-5):-

“I see no being which lives in the world without violence. Creatures exist at the mercy of one another; the strong consume the weak. The mongoose eats mice, just as the cat eats the mongoose. The dog kills the cat, and the wild beasts eat the dog. Man eats them all. Everything that moves and is still food for someone”

This is very true until today. SB and scriptures like Bhodayana (22-1) and Aupamanyava (16-6-2) Srauta sutras say that a clay or golden replica of animals were sacrificed. More over Atharva Veda says that Inner Yajna is superior to outer one (AV 7-5-4/5). So even at the Vedic times Yajna attained several meanings.

Some people even interpret astronomical events are given as Yajnas. That is how we got all animal signs in zodiac. SB speaks of creation of the universe by Prajapati (6-1) where Asva, Rsaba, Aja, Kurma come before the creation of the earth. RV 1-164-2 and Nirukta (4-4-27) define Asva as the Sun.

 

My Comments:

Vedic literature is very vast. But here we see a big leap from animal sacrifice to symbolic sacrifice with clay model and late lot of astronomical explanations. But the foreign authors date them within a short span which is impossible. No culture in the wold changed that quickly. Foreign writers select some passages which suits them for their novel revolutionary theories and hypotheses. And no two foreign “scholars” agree on any topic! So Indian tradition is the best to follow.

 

Aurobindo’s Interpretation

Aurobindo explains Asvamedha in his Vedic Glossary as follows: –

Asvamedhaaya means for the horse sacrifice. The Horse Sacrifice is the offering of Life Power with all its impulses, desires, enjoyments to the divine existence. The Life-Soul (Dwita) is itself the giver of the sacrifice which it performs when by the power of Agni it attains to vision on its own vital plane, when it becomes, in the figure of the hymn, the illumined seer Ashwamedha (RV 5-27-4)

 

Books used:-

The Asvamedha – by Subhas Kak; 2002

 

The Vedic horse sacrifice –  by Stephen Fuchs

My Old Article on the same subject

Horse headed Seer: Rig Veda Mystery No.1; Research Paper written by London

No.1255; Dated 27th August 2014.

 

–Subham–

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 12 (Post No.3160)

buddha-amaravati

Written by S NAGARAJAN

Date: 17  September 2016

Time uploaded in London: 5-21 AM

Post No.3160

Pictures are taken from various sources; thanks.

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 12

.நாகராஜன்

 

 

இப்போது ஸு யுன்னுக்கு வயது 66.

இளவேனில் காலம்.

 

போதனைகளைக் கூறி அருளுமாறு ஸ்டோன் பெல் மடாலயம் ஸு யுன்னுக்கு  அழைப்பு விடுத்தது.  அங்கு அவரது அமிதாப சூத்ராவின் விளக்க உரையைக் கேட்க நூற்றுக் கணக்கில் மக்கள் திரண்டனர்.

 

 

பிறகு அவர் பர்மா சென்று மாந்தலேயை அடைந்தார். அங்கு அவர் திடீரென்று நோய்வாய்ப்பட்டார்.

 

லுடாங்கில் உள்ள அவலோகிடேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்ற அவர் அங்கிருந்த துறவியான டிங்-ரு என்பவரைச் சந்தித்தார்.

அவருடனேயே இருந்த ஸு யுன் மணியை ஒலித்தும் மத்தளம் அடித்தும் அவருக்கு உதவியாக இருந்தார்.

ஆலயத்தில்  விமோசன உரையை முடித்த அந்தத் துறவி திடீரென்று, “கொல். கொல். கொல்” என்று மூன்று முறை உரக்கக் கூவினார்.

 

பிறகு மூன்று முறை நமஸ்கரித்தார்.

இது மறுநாளும் தொடர்ந்தது.

இதைப் பார்த்த ஸு யுன் அதிசயித்தார். காலை, நடுப்பகல், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் யாராவ்து இப்படி ‘கொல்’ என்று சொல்வார்களா?

 

 

மாலை உணவாக அந்தத் துறவி வெங்காயம் பூண்டு மற்றும் பாலை உண்டார். ஆனால் ஸு யுன் உணவை ஏற்கவில்லை.

மௌனமாக தண்ணீரை மட்டும் அருந்தினார்.

அந்தத் துறவி ஸு யுன் ஏன் உணவை ஏற்கவில்லை என்பதை அறிந்து கொண்டார். வெங்காயத்தையும் பூண்டையும் நீக்கி விட்டு சாதமும் கஞ்சியும் தர ஏற்பாடு செய்தார். ஸு யுன்னுக்கு இப்போது உணவை ஏற்க முடிந்தது.

 

ஏழு நாட்கள் கழிந்தன. அவர் தேநீர் அருந்த ஸு யுன்னுக்கு  அழைப்பு விடுத்தார். அவரிடம் சென்ற ஸு யுன் ஏன் அவர் பிரார்த்தனை நேரத்தில் ‘கொல், கொல், கொல்’ என்று உச்சரிக்கிறார் ஏன்று கேட்டார்.

 

அதற்கு அவர், “நான் வெளி நாட்டினரைக் கொல் என்கிறேன். ஹுனான் மாகாணத்தில் பாவ் –கிங் என்ற இடத்தைச் சேர்ந்தவன் நான். எனது தந்தை ராணுவத்தில் பணி புரிந்து வந்தார். அவர் மறைவிற்குப் பின்னர் பூ-டோ தீவில் தர்ம்ம் பற்றி அறிந்து கொண்டேன். மாஸ்டர் சூ சானின் போதனைகளை ஏற்று அவற்றைப் பின்பற்றினேன்.

பத்து வருடங்களுக்கு முன்னர் ஹாங்காங்கிலிருந்து கப்பலில் ஏறி சிங்கப்பூருக்குச் சென்றேன். அங்கிருந்த அந்த வெளிநாட்டினர் என்னை மிகவும் கேவலமாகக் கொடுமைப்படுத்தினர். அதனால் தான் அவர்களை வெறுத்தேன். என் வாழ்நாள் முழுவதும் அவர்களை வெறுப்பேன். ஆகவே தான் வெளிநாட்டினரைக் ‘கொல்’ என்கிறேன்.

 

 

இங்கு நான் படங்களை விற்கிறேன். அவற்றை இங்குள்ள மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். என் வாழ்க்கை கவலையின்றிக் கழிகிறது. இங்கு வரும் துறவிகள் உணர்ச்சி வசப்படும் சாதாரண நிலையில் உள்ளவர்கள். உங்களைப் போன்ற லயத்துடன் இசைந்த ஒரு துறவியைக் காண்பது மிகவும் அரிதான ஒரு விஷயம். ஆகவே தான் உங்களிடம் மட்டும் என்னைப் பற்றிய உண்மையை உரைக்கிறேன்” என்று கூறி முடித்தார்.

அவரிடம் ஸு யுன் எதிரியையும் நண்பனையும் ஒன்றாகப் பாவிக்க வேண்டும் என்று கனிவுடன் கூறினார். ஆனால் வெளிநாட்டினரை வெறுக்கும் அவர் மனதை மாற்ற முடியவில்லை.

 

 

உடல் நிலை ஒருவாறாகத் தேறியது. ஸு யுன் அங்கிருந்து விடை பெற விழைந்தார். ஆனால் அநதத் துறவியோ அவரை அங்கேயே இருக்குமாறு வேண்டினார். ஆனால் ஸு யுன் தான் ஆலயத்திற்கு நிதி திரட்டி வந்த விஷயத்தை எடுத்துரைத்தார்.

உடனே அவர் பயணத்திற்குத் தேவையான பணம் மற்றும் இதர பொருள்களை அன்புடன் தந்து உதவினார். ஒரு ரயிலில் செல்ல் டிக்கட்டையும் வாங்கித் தந்தார்.

 

silver-buddha-coin-bothsides

ரங்கூனில் இருந்த உபாசகர் காவ் வான் – பேங்கிற்கு ஒரு தந்தியையும் அடித்தார்.

ஸு யுன்னுக்கு ரங்கூனில் அபாரமான வரவேற்பு காத்திருந்தது.

காவ் வான் – பேங் பெருந்திரளான கூட்டத்துடன் வந்திருந்து அவரை வரவேற்றார்.

பூஜனைக்குரிய மாஸ்டர் மியாவ்- லியான் ஸு யுன்னைப் பற்றிக் கூறியதை அவர் விவரித்தார்.

 

 

சீனாவிற்கு உடனே திரும்பி வருமாறு மாஸ்டர் மியாவ்-லியான் கூறியதையும் அவர் ஸு யுன்னிடம் தெரிவித்தார்.
உபாசகர் காவ் படகுத் துறை வந்து வழியனுப்பினார். ஜி-லூவோ மடாலயத்திற்கு ஒரு தந்தி அடித்து பல துறவிகள் வந்து வரவேற்பு தந்து ஸு யுன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கப்பல் வந்தது.

 

 

ஆனால் அதிலிருந்த ஒரு பயணி தொற்றுநோய் ஒன்றால் இறந்திருந்தார். ஆகவே மஞ்சள் கொடி ஒன்று ஏற்றப்பட்டிருந்தது.

அனைத்துப் பயணிகளையும் மலையில் தொலைதூரத்தில் நோய் பரவாதிருக்கத் தனியாக அடைத்து வைக்கும் குவாரண்டைன் முறைப்படி அடைத்து வைத்தனர்.

 

-தொடரும்