ஏப்ரல் 22 – பூமி தினம் (Post No. 2701)

earth day 2

Written by S NAGARAJAN

Date: 7 April 2016

Post No. 2701

Time uploaded in London :–  9-27  AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 Earth-Day (1)

சுற்றுப்புறச் சூழலைக் காக்க உலகெங்கும் உள்ள சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் நாள் பூமி தினமாக 192 நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

பிரபஞ்சத்தில் தனித்தன்மை கொண்ட கிரகமாகத் திகழும் பூமியை நேசித்துக் கொண்டாடும் நாள் இது.

 

பூமி தினம் சம்பந்தமாக ஒவ்வொருவரும் அறிந்து  கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் இதோ:-

பூமி தினத்திற்கென தனியாகக் கொடி உண்டு. இதற்கு ஈகாலஜி ஃப்ளாக் (Ecology Flag) என்று பெயர். ரான் காப் (Ron Cobb) என்ற ஒரு கார்டூனிஸ்ட் தான் முதன் முதலில் இதை உருவாக்கினார். இதில் இடம் பெற்றுள்ள இரு ஆங்கில எழுத்துக்களான E மற்றும் O ஆகியவை Envirronment மற்றும் Organism ஆகிய வார்த்தைகளின் முதல் எழுத்திலிருந்து எடுக்கப்பட்டு கிரேக்க எழுத்துப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிமூன்று பட்டைகள் பச்சை மற்றும் வெண்மை நிறங்களில் மாறி மாறி இடம் பெறுகின்றன.

 

பூமி தினத்திற்கான தனிப் பாடல் ஒன்றும் உண்டு. 1970ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் இரண்டு கோடிப் பேர் இந்த முதல் பூமி தினத்தில் பங்கு கொண்டனர்.

உலகெங்கிலுமுள்ள 192 நாடுகளில் 22000க்கும் மேற்பட்டோர் சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். உலகின் மிகப் பெரும் இயக்கமாக இது உருவெடுத்துள்ளது. இன்று நூறு கோடிப் பேர் இந்த இயக்கத்தில் இணைந்து அரிய பூமியைக் காக்க சபதம் கொண்டுள்ளனர்.

 

2012ஆம் ஆண்டு சீனாவில் ஒரு லட்சம் பேர் கார்பன் டை ஆக்ஸைடு நச்சுப் புகை வெளியேறுவதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சைக்கிள்களை ஓட்டி விழிப்புணர்வு ஊட்டினர். இந்த நாளில் உலகெங்குமுள்ள தன்னார்வத் தொண்டர்கள் ஆங்காங்கே குப்பைகளை அகற்றி வாழுமிடத்தைச் சுத்தப்படுத்துவதோடு மரக்கன்றுகளையும் நடுகின்றனர்.

நம்மை உயிர் வாழ வைக்கும் பூமித் தாயை நன்றியுடன் போற்றுவதில் நாமும் இணைவோமாக!

 earth-day

சுபம்–

தட்பவெப்ப மாறுபாட்டினால் சீரழியும் மனித உறவுகள்! (Post No.2609)

drought,HT

Written by S Nagarajan (written for AIR)

 

Date: 8 March 2016

 

Post No. 2609

 

Time uploaded in London :–  8-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Part 38. தட்பவெப்ப மாறுபாட்டினால் சீரழியும் மனித உறவுகள்!

 

 wrestling 4

     உலகின் தட்ப வெப்ப நிலை மாறுபாடு எப்போதும் இல்லாத அளவு வெகு வேகமாக மாறி வருகிறது என்பதை அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்து அறிவித்துள்ளனர்.கடந்த 650 லட்சம் ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் எப்போதும் இல்லாத அளவு பத்து மடங்கு இந்த மாறுதல் அமைந்துள்ளது என்பது அவர்களின் கண்டுபிடிப்பு.

 

 

   இதே வேகத்தில் மாறுதல் தொடர்ந்தால் வெகு சீக்கிரமே சுற்றுப்புறச் சூழல் அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் பல்வேறு பிராணிகள் மற்றும் பறவைகளின் நடத்தைகளில் மாறுதல் ஏற்படும். புதிய பூகோள நிலைகளுக்கு ஏற்ப அவற்றிற்குத் தக அவைகள் வாழ வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

டைனோஸர்களின் அழிவுக்குப் பின்னர் ஏற்பட்ட மாறுதல்களில் இதுவே மிகப்பெரிய மாறுதல் என்று  ஸ்டான்போர்டைச் சேர்ந்த தட்பவெப்ப நிலை பற்றி ஆராயும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

 

     இது ஒரு புறமிருக்க, இப்படி தட்பவெப்ப நிலை மாறுபாட்டால் மனித உறவுகளும் சீரழியும் நிலை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் ஒரு ஆய்வின் முடிவில் கூறியுள்ளது ஸயின்ஸ் என்ற பிரபல அறிவியல் இதழில் பிரசுரமாகி உள்ளது.

 

Wrestling Stamp

Wrestling Stamp

 

   அதிகமான வெப்பத்தால் ஆங்காங்கே ஏற்படும் பஞ்சத்தினால் வெவ்வேறு பகுதிகளில் சச்சரவுகளும் சண்டைகளும் ஏற்படும் வாய்ப்பு 50 விழுக்காடிற்கும் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது என்பது அவர்களின் கணிப்பு.

 

 

     ஆகவே மனித உறவுகள் மேம்படவும் சீரடையவும் உலக வெப்பமயமாதலைத் தடுத்து நிறுத்த வேண்டியது மனித குலத்தின் ஒட்டு மொத்தப் பொறுப்பாக ஆகிறது.

 

 wrestling 3

    பல நாடுகள் வழியே பாயும் நதிகளும்,  ஒரே நாட்டில் பல மாநிலங்களின் வழியே பாயும் நதிகளும் வறண்டு போனால் நதிநீர்ப் பங்கீட்டில் சச்சரவுகள் ஏற்படுவதை உலகெங்கும் பல பகுதிகளில் இப்போதே பார்க்கிறோம். இந்த நிலை மோசமடையாமல் தவிர்க்க புவி வெப்பம் உயர்வதைத் தடுத்தல் வேண்டும். இதற்கான முதற்படி வாகனங்களிலிருந்து வெளிப்படும் நச்சுப் புகையை கட்டுப் படுத்துவதே ஆகும். வாகனப் பயன்பாட்டைக் குறைப்பது, வாகனங்களைச் சரியாகப் பராமரிப்பது, தனித் தனியே அவரவர் வாகனங்களைப் பயன்படுத்தாமல் குழுவாக இணைந்து பயணிப்பது உள்ளிட்ட ஏராளமான வழிகளின் மூலமாக சாமான்யரும் வெப்பம் அதிகமாவதைத் தடுக்க முடியும்; உலகைக் காப்பாற்ற முடியும். செய்வோமா?!

 

                                                         *********      

 

ஒரே சிந்தனை! கம்பன், பாரதி, கண்ணதாசன் மூவரும் பாடிய விஷயம்! (Post No.2604)

Kannadasan_stamp

Compiled by london swaminathan

Date: 6 March, 2016

 

Post No. 2604

 

Time uploaded in London :–  11-19 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; 

 

 

“பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை

ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்

மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை

மாகத் தோள் வீர பெற்றாலெங்கனம் வைத்து வாழ்தி”

 

–சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம், கம்பராமாயணம்

 

 

பொருள்:- வானளாவிய தோளை உடையவனே! மும்மூர்த்திகளில் ஒருவனான சிவன், உமாதேவியை தன் இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டான். திருமாலாகிய இன்னொருவன், செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியைத் தன் மார்பில்

வைத்துக்கொண்டான். பிரமன், சரசுவதியைத் தன் நாவில் வைத்துக்கொண்டான். மேகத்தில் தோன்றுகின்ற மின்னலை வென்ற நுண்ணிய இடையை உடைய சீதையை நீ அடைந்தால், அவளை எந்த இடத்தில் வைத்துகொண்டு வாழ்வாய்?

kambar

 

இது ராவணனிடம் சூர்ப்பநகை கேட்ட கேள்வி. அதாவது, அவன் சீதையை அபகரிக்க வேண்டும் என்பதும், அவளைக் காவலில் வைக்குமிடத்தை இப்பொழுதே முடிவு செய்ய வேண்டுமென்பதும் சூர்ப்பநகையின் சதித்திட்டம். அவளுக்குத் தெரியும் ரவணனின் மனிவியான மண்டோதரி, மஹா பதிவிரதை என்பது. ஆகையால் ராவணனை உளவியல் ரீதியாக (சைகலாஜிகல்) தயார்படுத்த இப்படிப் பல வசனங்களைக் கூறுகிறாள். இந்தப் பாடல் பாரதி, கண்ணதாசன் பாடல்களிலும் பிரதிபலிக்கிறது.

 

 

 

பாரதி பாடியது

 

பாரதியார் பாடல்களை நன்கு ஊன்றிப் படிப்போர்க்கு, ஆழ்வார் பாடல், தேவாரம், திருவாசகம், திருக்குறள், கம்பராமாயணம் ஆகியன,  அவர் மீது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை அறிவர். கம்பனுடைய மேற்கூறிய பாடல்  கருத்தும் அப்படியே இடம் பெறுவதைக் காணலாம்.

 

 

பாரதியார் தன் சுயசரிதையில், காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம் என்று துவங்கும் பகுதியில் கம்பன் கூறியதை அப்படியே பயன்படுத்துகிறார்.

bharati-stamp

ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணிதனை நாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வம் எல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்
: வானோர்க்கேனும்
மாதர் இன்பம்போல் பிறிதோர் இன்பம் உண்டோ?
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.

 

கண்ணதாசன் கவிதைகள்

 

கண்ணதாசனும் யஜூர்வேதத்திலுள்ள ‘பஸ்யேம சரதஸ் ஸதம், ஜீவேம சரதஸ் ஸதம்’ (நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க………..) மந்திரம் முதல் எவ்வளவோ சம்ஸ்கிருதப் பாடல்களையும் தமிழ்ப் பாடல்களையும் அவரது பாடல்களில் பயன்படுத்தியிருக்கிறார். வீடு வரை உறவு, வீதி வரை மனைவி… என்ற பாடல் பகவத் கீதை, பஜ கோவிந்தம் ஆகிய துதிகளிலிருப்பதையெல்லாம் முன்னரே கட்டுரைகளில் சுட்டிக்காட்டி விட்டோம்.

 

ஆனால் கம்பன், பாரதி, கண்ணதாசன் ஆகிய மூவரும் ஒரே கருத்தை அதே வரிசையில் சொல்லுவதை இப்பொழுதுதான் காண்கிறேன்.

 

 

 

பூக்களிலே வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை கண்டாராம்
மரக்கிளையில் அணில் இறங்க ஆடிட கண்டாராம்
ராஜா மனதுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான்
அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால்கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தான்
ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தான்
யாரம்மா அது நானம்மா
யாரம்மா அது நானம்மா
(பாலக்காடு..)

படம்: வியட்னாம் வீடு
இசை: KV மகாதேவன்

ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் GREATMEN THINK ALIKE— அதாவது, “உயர்ந்த மனிதர்க்கு சிந்தனை ஒன்றே” – என்று

அது போல கம்பன், பாரதி, கண்ணதாசன் ஆகிய மூன்று உயர்ந்த கவிஞர்களும் ஒன்றே நினைப்பர்! நன்றே நினைப்பர்.

 

–சுபம்-

கருகத் திருவுளமோ? (Post No. 2589)

green field, hare krsna

Written by S Nagarajan

 

Date: 2 March 2016

 

Post No. 2589

 

Time uploaded in London :–  6-00 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

நாட்டு நடப்பு

கருகத் திருவுளமோ?

 

ச.நாகராஜன்

 

கெட்டதிலும் நல்லதைப் பார் என்று கூறுகின்றன ஹிந்து அற நூலகள்.

 

இது சாத்தியம் தானா? முயல்கிறோம். பார்க்கிறோம்!

சமீபத்தில் ஜவஹர்லால நேரு பல்கலைக் கழகத்தில் தலை தூக்கி கோர தாண்டவம் ஆடிய சக்திகள் இரண்டு விஷயங்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளன:

 

 

  • தாங்கள் தேச துரோக சக்திகள் என்பது.
  • தாங்கள் ஹிந்து விரோத சக்திகள் என்பது.

 

 

இந்த இரண்டையும் இணைத்து ஒரு தூண்டுதலைச் செய்தால் ஆங்காங்கு விதைக்கப்பட்டிருக்கும் இந்த தீய சக்திகளின் ஆதரவுகள் தலை தூக்கி ஆடும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் இந்தக் கெடுதலிலும் ஒரு நல்லதையே நாம் பார்க்கிறோம்.

 

 

நமது நாட்டின் இராணுவம் உலகின் தலை சிறந்த ராணுவம் என்றாலும் தனித் தனியாக தேச துரோக சக்திகளை இனம் காண நாட்கள் ஆகும்.

 

 

நமது நாட்டின் போலீஸ் அற்புதமான நுண்ணறிவுத் துறையைக் கொண்டிருக்கிறது என்றாலும் அதால் கூட அனைத்து ரவுடிகளையும் தேச துரோக சக்திக்ளையும் ஒரே இடத்தில் கூட வைக்க முடியாது.

 

இந்த அரிய காரியத்தை ஜவஹர்லால நேரு பல்கலைக் கழகம் செய்துள்ளது.

 

ஜவஹர்லால் நேருவுக்கு நன்றி. அவர் வாரிசுக்கு வாரிசு வழை வந்த ராகுல் காந்திக்கு நன்றி.

 

ஏன்?

 

இந்த நிகழ்வு மூலம் இவர்களை ஆதரிக்கும் தீய சக்திகள் எங்கெல்லாம் ஒளிந்திருக்கின்றன என்பதையும் சுலபமாகத் தெரிந்து கொள்ள முடிந்து விட்ட்து.

 

ஜவஹர்லால நேரு தந்த வாரிசுச் செல்வம் தேசத் துரோகிகளை நேரில் சென்று பார்த்து ஆதரவை வழங்கியது தீய சக்திக்குத் துணை போவது என்ற குற்றத்தின் பால் படாதா?

 

இந்த தேச துரோகிகளை ஆதரிக்கும் ஊடகங்களை சுலபமாக இப்போது அறிய முடிந்து விட்டதே!

field, HT

இதற்கு வரிந்து கட்டும் காம்ரேடுகள் எங்கெல்லாம் பாக்கட் பாக்கட்டாக குழுமி இருக்கிறார்கள் என்பது தெரிந்து விட்டதே!

மொத்தத்தில் தேச துரோக செயல்களைத் தூண்டி விடும் மோசமான அறிவு ஜீவிகள், அன்னிய சக்திகளிடமிருந்து பணமும் தளவாடமும் வாங்கி இந்த நாட்டைத் துண்டாட நினைக்கும் சதிகாரர்கள் ஆகிய அனைவரையும் நன்கு இனம் காண முடிகிறதே!

 

சாமர்த்தியமாக இதை காங்கிரஸ் ப்ளஸ் கம்யூனிஸ்டுக்கும்  பாரதீய ஜனதாவிற்கும் உள்ள கருத்து மோதலாகச் சித்தரிக்கப் பார்த்தால் அந்த  ஊடகங்களை மக்கள் ஒரேயடியாகப் புறக்கணித்து அழித்து விடுவர்.

 

ஏனெனில் கற்பில் ஒரு சதவிகிதக் கற்பு 99 சதவிகிதக் கற்பு என்று கிடையாது. கற்பு என்றால் அது 100 சதவிகிதம் தான்!

அதே போல,

 

தேச பக்தியிலும் விகிதாசார பக்தி கிடையாது.

தேச பக்தி என்றால் அதில் 100 சதவிகிதம் அலுங்காமல் குலுங்காமல் அப்படியே இருக்கும்.

 

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தர பாடுபட்ட காங்கிரஸ் இன்று இருக்கலாம். ஒரு வேளை காந்திஜியின் கனவை மெய்ப்பிக்க நாளையே இல்லாமல் போகலாம்.

 

பி.ஜே.பி என்பது சில காலம் முன்னால் ஜனதா கட்சி. அதற்கும் முன்னர் ஜன சங்கம். நாளை ஒருவேளை இதன் பெயர் இன்னமும் ஒரு முறை மாறலாம். ஆனால் மக்கள் இந்தக் கட்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு தேசத்தை நேரிக்கிறார்கள்..

இன்று பிஜேபிக்கு இந்தியாவே ஒட்டு மொத்தமாகத் தரும் ஆதரவு அந்தக் கட்சிக்காக அல்ல; இந்த தேசத்திற்காக.

இந்த தேசத்தை எதிர்க்கும் தீய சக்திகளை அகற்றுவதற்காக.

இந்த தீய சக்திகளுக்கு காங்கிரஸும் காம்ரேடுகளும் துணை போவார்கள் என்றால் அவர்களை மக்கள் புறக்கணித்துப் புறம் தள்ளி விடுவார்கள்.

 

சட்டம் இவர்கள் மீது தன் கடமையைச் செய்யட்டும்.

யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டார் என்பதைக் கண்ட நீதி அரசர் சுமோடோ அடிப்படையில் தானே வழக்கைப் பதிவு செய்கிறார்.

மாபெரும் தேசத்திற்கு எதிராக சில சின்ன பொடிசுகள் ஆட்டம் ஆட நினைக்கும் போது அதற்குத் தூபமிட ‘பெரிய தல’கள் முன் வரும் போது நாட்டின் உச்ச நீதி மன்ற நீதியரசர்கள் தாமே வழக்கைப் பதிவு செய்து விடலாமே

 

இதை சமீபத்தில் 33 வருடம் கழித்துத் தீர்ப்பளித்ததைப் போலத் தீர்ப்பளிக்க கூடாது. ஒரு சில நாட்களிலேயே விசாரித்து இந்த தீமையைச் செய்தவர்களுக்கும் ஆதரவு அளித்தோருக்கும் எதிர்மறை ஊடக சக்திகளுக்கும் தண்டனை விதிக்க வேண்டும்.

டிவி சானல்களை உடனடியாக மூடி விட உத்தரவிட வேண்டும்.இதற்கென அப்பீலுக்கும் தடை விதிக்க வேண்டும்.

 

கட்சிகளை விட தேசம் பெரிது! தேசத்திற்கென பாடுபடும் கட்சிகள் மட்டுமே நிலைக்கும் அல்லாதவை அகலும்  அல்லது அழியும்.

 

இந்த வகையில் தேசத்தைக் காக்கும் பிஜேபிக்கு மக்களின் நல்லாதரவு கூடுகிற; இன்னும் கூடும்.

 

ஜ.நே.ப. போன்றவை இந்தியாவிலிருந்து அகலும். இனியும் தேச துரோக சக்திகளை அனுமதிக்க முடியாது.

 

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா?

இப்பயிரைக் கண்ணீரார் காத்தோம்

கருகத் திருவுளமோ?

கருக விடமாட்டோம்!

ஃபேஸ் புக் நல்லனவற்றைப் பரப்ப ஒரு நல்ல சக்தி. அதன் மூலம் வலுவான இந்தியவை உருவாக்குவோம். தேச துரோகிகளை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவொம்.

உலகமஹா கவிஞன் பற்றி ஒரு சுவையான கதை!(Post No 2587)

hindu poets

Date: 1st March 2016

 

Post No. 2587

 

Time uploaded in London :– 9-20

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

for more articles and pictures.

homer

கிரேக்க மகா கவி ஹோமர்(கி.மு.800)

உலகிலேயே மிகவும் பழைய கவிஞன் பெயர் உசனா கவி; அவரை உசனஸ் என்றும் அழைப்பர். கிருஷ்ணன், பகவத் கீதையில் காலங்களில் நான் வசந்தம், மாதங்களில் நான் மார்கழி என்று கூறும் விபூதி யோகத்தில் கவிஞர்களுள் நான் உசனா கவி என்கிறார். அவ்வளவு மிகப்பெரிய கவி அவர். ரிக் வேத காலத்திலேயே அவர் மிகவும் பழங்காலக் கவிஞர் ஆகிவிட்டார். அப்படியா னால் இற்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருப்பா ரென்பது எனது துணிபு.

 

எப்படித் தமிழில் பல கபிலர்கள், பல நக்கீரர்கள், பல அவ்வையார்கள் இருந்தனரோ அதே போல பிற்காலத்தில் வந்த சுக்ராச்சார்யாரையும் உசனா கவி என்றனர்.

ஆயினும் அவருக்கு முந்தி வாழ்ந்த முதல் உசனஸ் பற்றி மனு ஸ்மிருதி ஒரு ஸ்லோகத்தில் குறிப்பிடுகிறார். அதற்கு உரை எழுதியோர் மஹாபாரதத்திலும் (9-50), பஞ்சவிம்ச பிராமணத்திலும் உள்ள ஒரு சுவையான கதையைச் சொல்லுகின்றனர்.

goethe

இதோ அந்தக் கதை:

ஆங்கிரஸின் புதல்வரான உசனஸ், வயதில் மிகவும் சிறியவர். ஆனால் வேதத்தைக் கரை கண்டவர். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. அவர் தன்னைவிட வயதானவர்க ளுக்குப் பாடம் நடத்துகையில், “ஓ! சின்னப் பிள்ளைகளே! நன்றாகக் கவனியுங்கள்” என்று அடிக்கடி சொல்லுவார். வயதானவர்களுக்கோ கோபமும் ஆத்திரமும் வந்தது. இவனே பொடிப்பயல்; இவன் நம்மைப் பார்த்து, சின்னப் பையன்களே (புத்ரஹா) என்று சொல்லுவதாவது என்று முறைத்துப் பார்த்தனர். முகக்குறிப்பால அதிருப்தியைக் காட்டினர். ஆனால் உசனா கவி தன் வழக்கத்தை மாற்றிக்கொள்ளவிலை.

 

எல்லா ரிஷிகளும் ஒரு மஹஜரை எடுத்துக்கொண்டு, கடவுளிடம் போனார்கள். அவரும் சொல்லிவிட்டார், அவன் உங்களை சின்னப் பையன்களே என்று சொல்லுவது சரிதான் என்று! அவன் அறிவினால் தந்தைக்குச் சமமானவன் என்றும் கடவுள் தீர்ப்பு சொல்லி விடுகிறார்!

 

இக்கதையில் மிகப்பெரிய கருத்து உள்ளது. வேதங்களைக் கரைத்துக் குடித்தவனே அறிவாளி; மூத்தவன். மேலும் கவிஞன் என்பவன் தந்தைக்கு சமமானவன்; அவன் முக்காலமும் உணர்ந்தவன்.

dante

டாண்டே படம்

இந்தச் சின்னப் பையன் கதையைக் கோடிட்டு காட்டிய உலகின் முதல் சட்ட நிபுணன் மனு, இரண்டாம் அத்தியாயம் 150 ஸ்லோகம் முதல் பல விஷயங்களைச் சொல்லுகிறார். மனுவின் காலம் கி.மு. 1500 என்று அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ப்யூலர் கூறுகிறார். என் கருத்தும் அதுவே. ஏனெனில் ரிக் வேதத்திலேயே பல மனுக்களின் பெயர்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன.

இப்போது எழுத்து வடிவிலுள்ள மனு ஸ்மிருதி, பல இடைச் செருகல்களுடன் உள்ளது. சில பிராமண உற்சாகிகள், சூத்திரர்களுக்கு எதிராக சில ஸ்லோகங்களை நுழைத்துவிட்டனர். எல்லா நூல்களிலும் இடைச் செருகல் பற்றி பிரஸ்தாபிக்கும் வெள்ளைக்காரர்கள், மனு ஸ்மிருதி பற்றி மட்டும் எதுவுமே சொல்லமாட்டார்கள். ஏனெனில் அவர்கள், இந்து மதத்தை மட்டம்தட்ட அந்த ஸ்லோகங்களைப் பயன்படுத்துவர்.

Gibraltar-Shakespeare-2014

இந்தச் சின்னப் பையன் கதையுள்ள பிராமணம் என்னும் இலக்கியம், சம்ஹிதைக்குப் பிறகு வந்தது. அதை கி.மு 1000 என்று மாக்ஸ்முல்லர் முதலியோரும் ஏனையோர் அதற்கும் முந்தையது என்றும் செப்புவர். எப்படிப் பார்த்தாலும் கிரேக்க நாட்டு ஹோமர் போன்றோர் தோன்றுவதற்கு நீண்ட நெடுங்காலம் முன்னரே உசனா கவி வாழ்ந்தார். ஆக அவரே உலகின் மிகப் பெரிய கவி; உலகின் மிக மூத்த கவி. மேலும் கவி, கவிஞன், கவிதை என்ற சொல்லெல்லாம் அவர் முதற்றே பிறந்தது எனின் மிகையாகாது.

 

சுமேரியாவிலுள்ள ஜில்காமேஷ் கவிதை போன்றவை வேதத்திற்குப் பிற்காலத்தில் வந்தவை. மேலும் மிகவும் நாகரீகத்தில் பின் தங்கியோரால் எழுதப்பட்டவை. ஆனால் வேத காலக் கவிதைகளோ நாகரீகத்தின் உச்சநிலையைத் தொட்ட ஒரு சமுதாயம் இயற்றியது. உலக அமைதி, மனித நேயம் பற்றிப் பாடுகிறது. அவர்களுக்கெல்லாம் மூத்தவர் நம் கவி – உசனா கவி. வேத இண்டெக்ஸ் தொகுத்த கீத், மக்டொனால்டு ஆகிய இருவரும், இந்தப் பெயர் வேத காலத்திலேயே, புராதனப் பெயராகிவிட்டது என்று பகர்வர். கண்ண பிரானும் பகவத் கீதையில் இவரைப் புகழ்வதால் கி.மு 1500 க்கு முன் அவர் வாழ்ந்தது உறுதியாகிறது.

 

அகஸ்தியர், விசுவமித்திரர் போன்ற வேத கால ரிஷிகள் பற்றி புராணங்களில் நிறைய செய்திகள் உள்ளன. ஆனால் உசனஸ் போன்றோர் பற்றி நாம் ஒன்றும் அறிய முடிவதில்லை. இதிலிருந்தே அவர்தம் பழமை வெள்ளிடை மலையென விளங்கும்.

ts eliot

மனு என்ன சொல்கிறார்?

மூத்தவர் என்ற தகுதி நரைமுடியாலோ, செல்வத்தாலோ, பரம்பரையாலோ வருவதில்லை. இது ரிஷிகள் வகுத்த சட்டம்; வேதங்களையும் வேதத்தின் அங்கங்களையும் கற்றவனே நம்மில் உயர்ந்தோன் (2-154 மனு).

பிராமணர்களில் மூத்தவன் வேதம் கற்றோன்;

க்ஷத்ரியர்களில் மூத்தவன், வீரம் மிக்கவன்;

வைஸ்யர்களில் மூத்தவன், அதிக தானியம் வைத்திருப்பவன்.

சூத்திரர்களில் மூத்தவன், வயதில் பெரியவன்! (மனு 2-155)

 

 

வேதத்தைப் படித்தவன், இளைஞனாக இருந்தாலும் அவனே பெரியவன் (2-156)

 

சங்க இலக்கியமான புறநானூற்றிலும் இதுவே வலியுறுத்தப்படுகிறது:

“ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னாது, அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” – (புறம் 183)

கவி என்றாலேயே அறிஞன் என்று பொருள்!

வாழ்க கவிகள்! வளர்க கவிதைகள்!

-சுபம்-

கோமாளி மன்றம் (Post No 2581)

clown

Written by S Nagarajan

 

Date: 28  February 2016

 

Post No. 2581

 

Time uploaded in London :–  6-30 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

நாட்டு நடப்பு

கோமாளி மன்றம்

 

ச.நாகராஜன்

 

 

clown2

நமது பாராளுமன்றம் மாட்சிமை பொருந்திய மன்றம் என்ற பெயரை மாற்றி ‘கோமாளி மன்றம்’ என்று சொல்ல வைக்கும் அளவு  ஒரு பாரம்பரியமிக்க கட்சி காட்சிகளை அரங்கேற்றுகிறது  என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

ரஷியாவுக்கும் சீனாவுக்கும் பாரம்பரியமாக வால் பிடிக்கும் காம்ரேட்கள் மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிப்பார்கள். பீகிங்கில் வெயில் அடித்தால் பேராவூரணியில் ஜீஸ் குடிப்பார்கள். இது அறிந்த விஷயம் தான்.

ஆனால் காங்கிரஸ்? ஆச்சரியம் ஆச்சரியமே.

பாராளுமன்றத்தில் ஸ்மிருதி இரானி ஹைதராபாத்தில் மாணவர்கள் என்ற போர்வையில் மறைந்திருக்கும் பிரிவினை சக்திகள் மஹிஷாசுரனுக்கு விழா எடுத்து துர்க்கையைப் பற்றி இழிவுறப் பேசியதை ஆதாரத்திற்காக அப்படியே வாசித்ததை ஆனந்த சர்மா வாசிக்கக் கூடாது என்று சொன்னது ஒரு பெரிய மாற்றத்தையே காங்கிரஸில் காண்பிக்கிறது.

 

 

அதாவது துர்க்கையம்மனை இழிவுபடுத்திப் பேசியவர்களைக் கண்டிக்காமல் அப்படிப் பேசினார்கள் என்று ஆதாரத்துடன் சொல்லி அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று சொன்ன பக்தையைக் கண்டிக்கிறார்கள்.

 

இது என்ன ஒரு கோமாளித்தனம்!

 

இதையே விரிவாகக் கற்பனை செய்து பார்த்தால் வாழ்க்கை முறையே மாறி விடும்.

 

 

காரை ஒருவன் மீது மோதுகிறான் என்று புகார் கொடுத்தால் அதை நீ ஏன் சொன்னாய்! தடுக்க வேண்டியது தானே என்று கூறலாம்.

 

அவனைக் கத்தியால் வெட்டியதை நான் பார்த்தேன் என்று சாட்சியம் கூற வந்தால், “உன்னை சிறையில் போடுவேன்; நீ அப்போது என்ன செய்து கொண்டிருந்தாய்! தடுக்காதது உன் குற்றம்” என்று நடவடிக்கை எடுக்கலாம்.

 

 

தீவிரவாதி ஒரு குற்றம் இழைக்கப்போகிறான் என்பதைத் தெரிந்து சொன்னால் அது எப்படி உனக்குத் தெரியும், நீ அவன் கூட்டாளி என்று சொல்லி நல்ல ஒரு தேசீயவாதிக்கே உலை வைக்கலாம்.

மொத்தத்தில் காங்கிரஸ் மாறுகிறது!

 

durga idol, kokatta

மஹாத்மாவின் பல அறிவுரைகளைப் புறக்கணித்தோம். அவர் சொன்ன, “ காங்கிரஸைக் கலைத்து விடுங்கள்” என்ற அறிவுரை ஒன்றையாவது கடைப்பிடித்திருக்கலாம்.

 

இதே கட்சியின் தலைவரை – மாபெரும் ராஜீவ் காந்தியை – மகாபாவிகள் திட்டமிட்டுக் கொலை செய்ததை நீதிமன்றம் பலகாலம் விசாரித்து தண்டனை கொடுக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலைச் செய்யச் சொல்லி முழக்கமிடுகிறார்களே, அப்போது காங்கிரஸ்காரர்களுக்கு எவ்வளவு மன உளைச்சல் ஏற்படுகிறது?

நீதியில் பற்றுள்ள நாமும் அவர்களுடன் சேர்ந்து அதை எதிர்க்கிறோம்.

 

 

கருத்துரிமை, ஜனநாயகம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் சொல்லி விடலாமா?

 

ஒரு கொலை நடக்கும் போது அதைத் தடுக்க முடியாத, மனித உரிமை என்ற பேரில் இயங்கும், மகா உத்தமர்கள் கொலை செய்தவரைத் தூக்கில் போடு என்கின்ற போது ஓடி வந்து தடுப்பது எந்த வகையில் நியாயம்?

 

 

பாராளுமன்றத்தில் துர்க்கையை இழிவு படுத்தும் வகையில் பேசியிருந்தால் அவர்கள் மீது நாங்களும் நடவடிக்கை எடுக்க சம்மதிக்கிறோம் என்று சொன்னால் அது காங்கிரஸுக்கு அல்லவோ பெருமை?

 

மதவாத சக்தி பிஜேபி என்று குற்றம் சாட்டுபவர்கள் மிக வெளிப்படையாக முஸ்லீம்களுக்கு மட்டுமென்றே இயங்கும் முஸ்லீம் லீகை மதவாதக் கட்சி என்று சொல்லாமல் அதனுடன் கூட்டு சேர்கிறார்களா? இது என்ன கொடுமை?

 

பிஜேபியில் ஒரு முஸ்லீமைப் பார்க்கலாம். ஒரு கிறிஸ்துவரைப் பார்க்கலாம் – பொறுப்பில்!

 

முஸ்லீம் லீகில் ஒரு உறுப்பினராகக் கூட இன்னொரு மதத்தவரை – இந்துவை-  கிறிஸ்தவரை- ஜைனரை- புத்தமதத்தவரைப் பார்க்க முடியுமா?

யார் உண்மையில் மதவாதக் கட்சி!

 

ஆச்சரியமாக இருக்கிறது – மக்கள் எல்லோருமே சிந்திக்கத் தெரியாத ஜடங்கள் என காங்கிரஸும் காம்ரேட் கட்சியும் எடை போடுகிறதா?

 

சோவியத் சிதறுண்டது போல கம்யூனிஸ்டுகளும் சிதறி வலிமையை இழப்பது கண்கூடு.

 

மதிப்பிற்குரிய சீதாராம் எச்சூரி, துர்க்கைக்கு ஆதரவாக ஆனால் இரானிக்கு எதிராகப் பேசியது எவ்வளவு பெரிய கோமாளித்தனம்!

மதம் ஒரு அபின் என்ற மார்க்ஸியவாதி துர்க்கைக்கு வக்காலத்து வாங்குவது எவ்வளவு பெரிய போலித்தனம்!

 

 

காங்கிரஸ் மகாத்மாவின் கனவை மெய்ப்பிப்பது போல அதை அழித்து விடுவார்களோ, என்னவோ! காந்திஜியின் கொள்கைகளை ஆட்சியில் இருந்த போது அமுல் படுத்த முடியாமல் போனதற்கு பிராயச்சித்தமாக அவரது கடைசி ஆசையை நிறைவேற்றத் துடிக்கிறார்களோ!

 

 

அதற்கு துர்க்கா தேவியின் அருள் வேண்டித் துதிக்கிறார்களோ!

காங்கிரஸின் புதிய பக்தரா, துர்க்கா தேவியின் நிரந்தர பக்தை ஸ்மிருதி இரானியா – யார் உண்மையாக துர்க்கா தேவி அருளுக்குப் பாத்திரமானவர் என்பதை மக்கள் சின்ன துண்டுச் சீட்டின் வழியாக முடிவு செய்து விடுவர்!

****

தமிழகத்தில் புதிய கட்சி மு.மு.க. — தேர்தலில் போட்டியிடுமா?(Post No 2575)

fool

Written by S Nagarajan

 

Date: 26  February 2016

 

Post No. 2575

 

Time uploaded in London :–  4-44 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

நையாண்டி மடல்  (மடல் எண் 1)

 

முட்டாள்கள் முன்னேற்றக் கழகம்!

 

ச.நாகராஜன்

 

 

அன்புடையீர்,

 

நீஙகள் வெகு ஆவலுடன் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த முமுக ( முட்டாள்கள் முன்னேற்றக் கழகம்) ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பதை மகிழ்வுடன் அறிவித்துக் கொள்கிறோம்.

 

இதை ஏன் தமிழகத்தில் ஆரம்பிக்கிறோம் என்பது உங்களுக்கே மிக நன்றாகத் தெரியும்.

 

இங்கு இதன் உறுப்பினர்கள் ஒரே நாளில் ஆயிரக் கணக்கில் சேர்ந்து விடுவார்கள் என்பதே காரணம்.

 

இதில் சேர எந்த விதமான தகுதியும் தேவையில்லை என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

 

brit parties

தமிழகத்தின் ஒரு சில துர்பாக்கியசாலிகளைத் தவிர மற்ற அனைவருமே இதில் உறுப்பினர்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.

நான் முட்டாள் இல்லையே என்று சொன்னால், ஹ.. ஹ.. ஹ.., நிச்சயமாக நீங்கள் முட்டாள் தான்!

 

நான் முட்டாள், என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் சொன்னால், அப்புறம் என்ன, நீங்களே ஒப்புக் கொண்டுவிட்டீர்கள், நீங்கள் கழகத்தின் ஆயுள் கால உறுப்பினர் தான்!

 

 

நீங்கள், ‘நான் முட்டாளா, இல்லையா என்று எனக்கே தெரியவில்லை என்ற முட்டாள் குழப்பத்தில் இருந்தால், கவலைப் பட வேண்டாம். சேர்க்கப்பட்டவுடன் கியாரண்டியாக நீங்கள் முட்டாள் ஆகி விடுவீர்கள்.

 

ஆக, சேருவதைப் பற்றிய பிரச்சினை இத்தோடு தீர்ந்தது.

அடுத்து நமது கழகத்தின் ஆலோசகர்களாக யார் வேண்டி விரும்பிச் சேர்ந்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டால் நீங்கள் அசந்து போவீர்கள்.

 

இந்தியாவின் தலை நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசிரியர்கள் தாம் நமது ஆலோசகர்கள்.

 

 

இவர்களது அபார அறிவுத் திறனையும் அனைவரையும் வழி நடத்தும் பாங்கையும் கண்டு உலகமே வியக்கிறது; அதிசயிக்கிறது.

 

நமது கொள்கைகளை வீடு வீடாக எப்படிக் கொண்டு சேர்க்கிறது என்ற கவலையே எந்த முட்டாளுக்கும் (அது தான் நீங்கள் உறுப்பினர் ஆகி விட்டீர்களே) வேண்டாம்.

 

 

டெல்லியில் உள்ள அனைத்து டெலிவிஷன் சானல்களும் நம்மை வெகுவாக விளம்பரப்படுத்த ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

இதற்காகவே, நரைத்த விக் வைத்த தடியர்( சற்று உடல் பருமனைக் குறிப்பிடுகிறோம்) கீச்சுக் குரலில் கத்திப் பேசும் பேராசிரியர், எதிராளியைப் பேச விடாமல் தானே காச் மூச் என்று கத்திக் கொண்டே இருக்கும் காம்ரேட், மற்றும் அழகிய சல்வார் கமீஸ், நல்ல லிப்ஸ்டிக் மற்றும் மேக்-அப்பில் கவனம் செலுத்தி ஸ்டுடியோவுக்கு வருகை புரியும் பெண்ணியப் போராளி ஆகிய அனைவரும் இந்த டெலிவிஷ சானல்கள் வாயிலாக நமக்கு நல்லாதரவு தினமும் தருவது உறுதி.

 

 

“இந்தியா அறிய விரும்புகிறது” என்ற கர்ஜனைக் குரலுடன் தினமும் நமது நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்படும்.

நீங்கள் அறிவாளிகள் (யாராவ்து இருந்தால்) பற்றிப் பயப்பட வேண்டாம்.

 

நமது புதிய அகராதியை அவர்கள் முன் வீசி எறியுங்கள். அவர்கள்  சற்று மறுத்துப் பேசினால்..  .. ஹ. ஹ. அவர்களையே வீசி எறியுங்கள்.

 

 

எடுத்துக் காட்டாக ஒரு வார்த்தையைச் சொல்லி இந்த எமது முதல் மடலை  முடிக்கிறோம்.

 

செகுலரிஸம் என்றால்  மதச்சார்பின்மை என்று அந்த ஆக்ஸ்போர்டும் இதர அகராதிகளும் சொல்வது சுத்தப் பத்தாம் பசலித்தனம். செகுலரிஸம் என்றால் ஹிந்து மதத்தையும் அதைச் சார்ந்த தொன்மத்தையும் நம்பிக்கையையும் அதில் இருக்கும் உறுப்பினர்களையும் இழிவு படுத்துவதே! கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய கொள்கைகளைப் பற்றியோ அவர்களின் தொன்மம், நம்பிக்கை பற்றியோ பேசவே கூடாது. (நமக்கு எதற்கு உடல் ரீதியான விபரீதம்?) இதுவே செகுலரிஸம்.

 

IMG_9517 (2)

இப்படிப் பல புதிய விஷயங்களை நமது ஆலோசகர்கள் அவ்வப்பொழுது கூறிக் கொண்டே இருப்பார்கள். அதனால் நமது முட்டாள்தனம் நீண்ட நெடு நாளாய் இருக்கப் போவது உறுதி.

யாரும் கவலைப்பட வேண்டாம். அடுத்த மடல் விரைவில் வரும்.

 

அன்புடன்

முமுக தலைவர்

 

 

மூன்றாம் கடிதம்:மாமிகளின் துயரமும் மருமக்களின் கொண்டாட்டமும் (Post No. 2570)

ATTU URAL

Compiled  by London swaminathan

 

Date: 24 February 2016

 

Post No. 2570

 

Time uploaded in London :–8-25 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

 
(குறைந்தது 75 ஆண்டு பழமையான விநோத விகட சிந்தாமணி  என்ற நூலிலிருந்து தொகுத்தது; நேற்றும், அதற்கு முந்திய நாளும் 2 மாமிகளின் கடிதங்கள் வெளியானது. இது மூன்றாவது கடிதம்)

 

 

என்னருமைக் குமாரத்தியே,

 

நான் இக்கடிதம் எழுதும்போது என் மனம் என்னை விட்டுச் சென்று எங்கெங்கோ அலைகின்றது. இவ்விடத்தில் நான்படும் துயரங்களையெல்லாம் கடிதத்தின் மூலம் எப்படித் தெரிவிக்க முடியும்? ஆயினும் யானடைந்திருக்கும் துன்பங்களைப் பிறரிடம் கூறினால் என் மனது சற்றே தேறுதலடையுமென்றே இச்சிறு கடிதத்தை வரையலானேன்.

 

என்னுடன் பிறந்த அண்ணனுக்கு நான் தேடிவைத்த தேவியால் நான் அடைந்த துன்பம் போதும். அதை நினைக்க நினைக்க என் மனம் பகீர் பகீரென்று திடுக்கிடுகின்றது.

 

கல்யாணமாகுமுன் நீங்கள் எனக்குச் சொன்ன நற்புத்திகளெல்லாம் துற்புத்திகளாகத் தோன்றின. பட்டபின் புத்தி வந்துவிட்டது,.ஐயோ என் தலைவிதியை என் சொல்வேன்? நமது பந்துக்களில் ஒரு பெண்ணைக் கட்டியிருந்தால் அவள் மாமியார் என்னும் பக்தி விசுவாசத்தை வைத்து சற்று கீழ்ப்படிந்து  நடந்து எனக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்திருப்பாள். அல்லது நாட்டுப் புறங்களிலிருந்து ஒரு பெண்ணைக் கொண்டுவந்திருந்தால் அவள் கள்ளம்,கபடின்றி இருந்திருப்பாள். உன் அண்ணன் நாட்டுப்புறங்கள் எல்லாம் உதவாது, ‘நான்சென்ஸ்’ என்று சொல்லிவிட்டபடியால், பட்டினத்தில் பெண்ணைக்கொள்ள வேண்டியதாயிற்று.

 

அவள் யாதொரு வீட்டு வேலையும் செய்கிறது கிடையாது .எல்லாம் நானே செய்துதீர வேண்டும். அதிகாலையில் எழுந்து மற்ற பெண்களைப்போல அலுவலைப் பார்க்காமல், , அவள் நன்றாகப் பொழுது விடிந்த பின், சுமார் எட்டு மணிக்கு எழுந்து, பள்ளியறையை விட்டு வெளியே வந்து பல் துலக்கிக்கொண்டு, ஒழுங்காகத் தலையைச் சீவி மினுக்கி, தளுக்குப் பொட்டிட்டுக்கொண்டு, அண்டை அயலார் பெர்ரியோர், சிறியோர் என்ற மரியாதையை கிஞ்சிற்றேனும் கவனியாமல் உன் அண்ணன் எதிரே நின்று கொஞ்சிக் குலாவி வார்த்தையாடிய பின், பலகாரம் சாப்பிட வருவாள்.

 

இதற்குள்ளாக நான் அதிகாலையில் எழுந்திருந்து, வீடு பெருக்கி, பாத்திரம் சுத்தம் செய்து, காப்பி போட்டு, ஏதேனும் பலகாரம் செய்து வைத்திருக்க வேண்டும். ஒரு நாள் உடம்பு சரியில்லாததால், அதிகாலையில் எழுந்து காப்பிபோடாவிட்டாலும், என்னை முகத்தால் சுட்டு, ஜாடை மாடையாகத் திட்ட ஆரம்பிப்பாள். இதென்ன இழவு, தின்கிறதற்கு ஆட்கள் இருக்கிறார்களேயொழிய, வேலை செய்வதற்கு ஆட்கள் கிடையாதா? ஒருதரம் சொன்னால் உரைக்காதா? எந்நேரமும் இந்த வீட்டில் பெரிய ரோதனயாய்விட்டது. படுக்கையிலிருந்து எழுந்தவுடன் காப்பி சாப்பிட்டோம், சந்தோஷமாக இருந்தோம் என்பதே இல்லை. இங்கே நாங்கள் என்ன லட்சாதிபதிகளா? கையால் உழைத்தால் தானே கூலி கிடைக்கும். காலை நீட்டிக்கொண்டு, கணக்கு வழக்குப் பார்க்காமல் உனக்கென்ன, எனக்கென்ன, கணக்கென்ன, வழக்கென்ன என்று இப்படி இருந்தால் குடும்பம் எப்படி நடக்கும்? என்று சரமாரியாகப் பொழிவாள். இன்னும் சொல்லொணாத வார்த்தைகளையும் பொழிவாள். நானவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு, “பகவானே! என் தலைவிதி இப்படியாயிற்றே,மருமகள், மருமகளென்று மகிழ்ந்தேனே. இப்போது என் மகிழ்ச்சியெல்லாம் இகழ்ச்சி ஆய்விட்டதே. சர்வ ஜீவ தயாபரனே! என்னை இரட்சித்தல் வேண்டும்” என்று வேண்டி காலத்தைக் கழித்து வருகிறேன்.

bags on back of women

அதிகாலையிலெழுந்து யான் காப்பி, பலகாரம் தயாராக வைத்திருந்தால், அவள் அதை எடுத்துக்கொண்டு அன்ன நடை நடந்து, அலங்காரமாகத் தன் பள்ளியறைக்குச் சென்று மேஜை மீது வைத்துவிட்டு, எதிர் எதிராக உன் அண்ணனுடன் உட்கார்ந்து ஆனந்தமகத் தின்று தாம்பூலமருந்தியபின், இருவரும் அவ்வறையைவிட்டு வெளியே வருவார்கள். யான் வேலைக்காரியைப் போல, அவ்வறைக்குள் போய் சுத்தம் செய்யவேண்டும்.பிறகு சமையல் வேலை.

 

உன் அண்ணன், என்னைத் தாயார் என்று சற்றேனும் யோசியாமல், வேலையாளை நியமிக்காமல், துரை போலத் தன் மனைவியுடன் ஆனந்தமாகக் காலம் கழித்துவருகிறான். ஈசன், இறுதி நாளில் எனக்கு இந்தக் கஷ்டத்தை வைத்தான். மாமியார் என்ற பட்டம் எனக்குக் கிடையவே கிடையாது. ஏதாவது நற்புத்தி கூறப்புகின், உனக்கென்ன பெரியதனம்? மூலையில் நாரிக்கிட, இதற்காகவா உன்னை அழைத்தது? என்று உன் அண்ணன் சொல்லி விடுகிறான். அப்புறம் அச்சிறுக்கி என்னை எப்படி மதிப்பாள்? அவளும் என்னை அலட்சியம் செய்கிறாள்.

 

அந்தச் சிறுக்கியோ பட்டினத்துப் பெண்ணாகையால் தினமும் தவறாமல் ஒழுங்காக ஸோப் பூசிக்கொண்டு குளித்துவிட்டு நைஸாக உடையை உடுத்திக்கொண்டு சல்லா முந்தாணியைப் பின்புறம் சொருகாமல் தாசிகளைப்போல

தொங்க விட்டுக்கொண்டு, முழங்கைக்குக் கீழ் குச்சி ரவிக்கையை அணிந்து மேனா மினுக்கியைப்போல காலம் கழிக்கிறாள். நான் புழுக்கைச் சிறுக்கியைப்போல கரித்துணியைக் கட்டிக்கொண்டு அடுப்பண்டையி லிருக்கவேண்டியதுதான். எனக்குத் துணிமணி இருக்கிறதா என்று கவனிப்பதேயில்லை. யானே அச்சிறுக்கிக்குத் தெரியாமல் உன் அண்ணனிடம் என் மனக்கவலையைச் சொன்னாலும் “டுஷ், டாம், கூஸ், அதெல்லாம் என் காதில் போடாதே. உனக்கிஷ்டமிருந்தால் இங்கேயிரு. இப்படி வீண் கதையை வளர்த்துக்கொண்டு என் மானத்தை வாங்குவதாயிருந்தால் வீட்டை விட்டு ஒருவரிடமும் சொல்லாமல் வெளியே போய்விடு” என்கிறான். என் பிள்ளையே எனக்கு சத்ருவாக இருந்தால் என்னை யார் காப்பாற்றுவார்கள்? யான் இவ்விடத்தில் இருக்கும் துன்பங்களையொழித்துவிட்டு, உன்னிடம் வந்து, இருக்கும் பணக்காசுடன் வாழலாமென்றாலோ பிள்ளையைப் பிரிந்திருக்க மனம் வரவில்லை. ஒரே பிள்ளை யென்று யான் சீராட்டி பாலூட்டி வளர்த்த பெருமை எனக்குத் தெரியுமேயொழிய வேறு யாரறிவார்கள்? அவந்தான் அவள் மாய்கையில் மூழ்கி தாய் என்ற விசுவாசம் இல்லாமலிருந்தால் யான் அப்படியிருக்க என் மனம் சகிக்கவில்லையே. பிறரை நோவானேன்? அவரவர் வினையை அவரவர் அனுபவிக்க வேண்டு மாகையால் யானிதைப்பற்றி வருத்தப்படுவதால் என்ன பயன்?

a aa i ii

 

அழுதாற் பயனென்ன, நொந்தால் பயனென்ன வாவதில்லை 

தொழுதாற் பயனென்ன நின்னையொருவர் சுடவுரைத்த

பழுதாற் பயனென்ன நன்மையும் தீமையும் பங்கயத்தோ

னெழுதாப்படி வருமோ சலியாதிரு யென்னேழை நெஞ்சே!

 

என்றன்றோ ஆன்றோர் கூறியிருக்கின்றனர். என்றைக்கு என் துன்பமொழியுமோ, என்னைக் கடவுள் ரட்சிப்பாரோ? யானறியேன். என் பிள்ளையைப் பற்றி பலரிடம் இகழ்ச்சியாகக் கூறினால் எனக்கே அவமானம். ஆகையால் ஒருவரிடமும் சொல்லாமலும், இவ்விடத்தைவிட்டு நீங்காமலுமிருக்கின்றேன்.

 

உன் அன்புள்ள தாயார்

மாணிக்கவல்லி

 

–சுபம்–

 

ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்று தீர்ப்பளித்த நீதிபதி! (Post No. 2545)

IMG_8847

Written by S Nagarajan

 

Date: 16  February 2016

 

Post No. 2545

 

Time uploaded in London :–  8-10 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

அதீத உளவியல் ஆற்றல்

 

 

பாக்யா 5-2-2016 இதழில்  அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

 ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்று தீர்ப்பளித்த நீதிபதி!

.நாகராஜன்

 

 

IMG_1991

சிறப்பில் மனதை  மயக்கும் உன்னதமான ஆவி உலகம் எப்போதும் அப்படி இருக்கவே விரும்புகிறது”

                                – பிரபல எழுத்தாளர் விக்டர் ஹ்யூகோ

 

 

உலேண்ட்  லுட்விக் (Uhland Ludwig 1787-1852) என்பவர் பிரபல்மான ஜெர்மானியக் கவிஞர். இவரது சொத்து யாருக்குச் சேர வேண்டும் என்பது பற்றிய சிக்கலான வழக்கு இவர் இறந்து 58 ஆண்டுகளுக்குப் பின்னர் 1930ஆம் ஆண்டில் பெர்லின் நகரில் தொடரப்பட்டது. விசித்திரமான இந்த வழக்கை நீதிபதி எப்படி தீர்த்து வைக்கப் போகிறார் என அனைவரும் ஆவலுட்ன் எதிர்பார்த்திருந்தனர்.

 

 

ஒரு நாள் சொத்தின் மீது உரிமை கொண்டாடிய ஒரு பெண்மணி ஆவி உலகத் துணையை நாடினார். சற்று அரை இருட்டாக இருந்த அறையில் மீடியமும் அந்தப் பெண்மணியும் மற்றவர்களும் குழுமினர்.திடீரென ஒரு கை தோன்றியது. அது அந்தப் பெண்மணியின் கையைப் பற்றியது. அந்தக் கையில் மஞ்சள் நிறமுள்ள தோல் ஒன்று இருந்தது. அதை அந்தப் பெண்மணி பெற்றார்.

 

 

ஹோலோகிராப் பார்ச்மெண்ட் (Holograph parchment)  என்பது சொத்துக்குரிய ஒருவர் தன் கைப்பட  தோலில் அது யாருக்குச் சேரவேண்டும் என்பதை எழுதிக் கொடுக்கும் ஒரு ஆவணமாகும்.

மீடியம் கையில் பெறப்பட்ட தோல் ஆவணம் காலத்தால் பழுப்பேறிக் கிடந்தது. அதில் சொத்து பற்றிய விபரம் அடங்கிய இரண்டு செய்யுள்கள் – குறள் போல – இருந்தன. அதில் உலேண்ட் லுட்விக்கின் கையெழுத்தும் இருந்தது.

முதலில் கையெழுத்து கவிஞருடையது தானா என சரிபார்க்கப்பட்டது அந்த தோல் ஆவணத்தின் நிலை காலத்தால் அது முற்பட்டது என்பதையும் அதில் இருந்த செய்யுளின் நடை லுட்விக்கின் நடை தான் என்பதும் கையெழுத்தும் அவருடையது தான் என்பதும் உறுதி செய்யப்பட்டன.

 

 

வழக்கு விசாரணைக்கு வந்த போது சாட்சிகள் தோல் ஆவணத்தை மீடிய்மாக் இருந்த பெண்மணியின் கையில் ஆவி கொடுத்ததைத் தாங்கள் பார்த்ததாக சாட்சியம் கூறினர்.

நீதிபதி ஆவி கொடுத்த ஆவணத்தை ஏற்பதாகக் கூறி அந்த சொத்துக்கான உரிமையை அந்தப் பெண்மணிக்கே அளித்து தீர்ப்புக் கூறினார்.

 

 

ஆவி உலக ஆதரவாளர்கள் பெரிதும் இதை வரவேற்றனர். பரபரப்பான இந்த வழக்கில் ஆவி உலகமே வென்றது!

 

இதே போல  கவிஞர்கள் மட்டுமல்லை, ராஜதந்திரிகள் கூட ஆவி உலகை நம்புபவர்களாக இருந்ததை வரலாறு சுட்டிக் காட்டுகிறது. இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக நான்கு முறை பதவி வகித்தவர் டபிள்யூ. ஈ. க்ளாட்ஸ்டோன். (W.E.Gladstone 1809-1908).  மிகச் சிறந்த ராஜதந்திரி என்று உலகத்தினரால் பாராட்டப்பட்டவர் இவர்.

பிரப்ல நாவலாசிரியையான வயலட் ட்வீடேல் என்பவரின் அழைப்பை ஏற்று. அவர் வீட்டிற்கு க்ளாட்ஸ்டோன் வருகை புரிந்தார்.

 

 

அங்கு ஆவிகளை அழைக்கும் அமர்வு நடந்தது. அதில் அவர் கலந்து கொண்டு பல சோதனைகளை நடத்தி மிகவும் திருப்தியுற்றார். வில்லியம்ஸ் மற்றும் ஹஸ்க் ஆகிய இரு மீடியம்கள் க்ளாட்ஸ்டோன் ஆவி உலத்துடன் தொடர்பு கொள்ள உதவினர்.

 

 

இந்த அமர்வுகள் முடிந்த பின்னர் விஞ்ஞானிகளை நோக்கி அவர் கூறினார் இப்படி:” விஞ்ஞானம் இந்தக் காலத்தில் மிகப் பெரிய அரும் பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது.ஆனால் விஞ்ஞானிகள் தங்களின் விதிகளுக்கும்  நடைமுறைகளுக்கும் ஒத்து வராத எதையும் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் ஆவி உலக ஆராய்ச்சியில் இப்போது பெரும் பணி ஒன்று உலகில் நடந்து வருகிறது. அதை உணருங்கள்” என்று ஆவி உலகத் தொட்ர்பு பற்றிய ஆராய்ச்சியைப் புகழ்ந்து பேசினார்.

க்ளாட்ஸ்டோன் தன் வீட்டிற்கு வந்தது உள்ளிட்ட ஆவி உலக அனுபவங்களை வயலட் ட்வீடேல், ‘தி கோஸ்ட்ஸ் ஐ ஹாவ் சீன்’ (The Ghosts I have seen) என்று புத்தகமாக எழுதினார்.

 

 

 

இது ஒரு புறமிருக்க, ஆவிகள் மூலம் கொலை வழக்குகளில் குற்றம் இழைத்தவரைக் கண்டு பிடிக்க முடியுமா என்பன போன்ற கேள்விகளை ப்லர் எழுப்புவதுண்டு!.

உலகில் அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் சிக்கலான கேஸ்களைக் கண்டுபிடிக்க போலீஸாரின் துப்பறியும் பிரிவு மீடியம்களின் உதவியை இப்போது நாடி வருகின்றது.. சைக்கிக் டிடெக்டிவ்ஸ் என்று அழைக்கப்படும் இவர்கள் ஆவிகளின்  துணையோடு நடந்தது என்ன என்பதை அக்கு வேறு ஆணி வேறாக அலசிச் சொல்லி விடுகின்றனர். நூற்றுக் கணக்கான கேஸ்களில் ஒன்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.

பெர்ரி சாரா என்ற பெண்மணி அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட்டில் 1973ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி கோரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாள். எவ்வளவோ முயன்றும் போலீஸாரால் அவரைக் கொன்றவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.டிடெக்டிவ் ஜார்ஜ் மஜ்ஜாகேன் சைக்கிக் மீடியமான பசகரெல்லா டவுனி என்பவரின் துணையை நாடினார்.

 

 

அவர் மிகத் தெளிவாக,” கொலையாளியின் மீது ஆயில் நாற்றம் அடிக்கிறது.  அவர் ஒரு மெக்கானிக்கிற்கான யூனிஃபாரத்தை அணிந்தவர்.. அவரது சட்டையில் ‘E’ என்ற ஆங்கில எழுத்து காணப்படுவதால் அவர் பெயர் ‘E’ யில் ஆரம்பிக்கும். ஆனால் தப்பி ஓடும் சாமர்த்தியசாலி என்பதால் அவரைப் பிடிக்க நெடுங்காலம் ஆகும்” என்றார்.

 

 

அதே போலவே நடந்தது. 26 வருடங்கள் கழித்து 1999ஆம் ஆண்டு எட்வர்ட் என்பவர் சாராவைக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். டிஎன்ஏ  சோதனை மூலம் அவரது குற்றம் நிரூபணமானது. கொலை செய்த சமயத்தில் அவர் மெக்கானிக்காக வேலை பார்த்ததும் தெரிய வந்தது! அவர் கொலைக் குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டார்.

இது போல சுவாரசியமான கேஸ்கள் சைக்கிக் டிடெக்டிவ்களால் தீர்க்கப்பட்டுள்ளது ஆச்சரியப்பட வைக்கும் ஒன்று.

Thomas-Alva-Edison  Thomas-Alva-Edison-1847-1931

. அறிவியல் அறிஞர் வாழ்வில்

 

தாமஸ் ஆல்வா எடிஸனுக்கு தனது கணக்குப் பிரிவில் இருப்பவர்களைக் கண்டாலே அவ்வளவாகப் பிடிக்காது. தனது உள்ளுணர்வை வைத்தே கணக்கு விஷயத்தில் அனைத்தையும் அவர்  முடிவு செய்து விடுவார். அடிக்கடி அவர்  “இந்த கணித மேதைகளிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கூறி கணக்கைப் போட சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு பெரிய பேப்பரை எடுத்துக் கொண்டு வரிசை வரிசையாக  கோடு போட்டு ஏ என்றும் பி என்றும் எக்ஸ் என்றும் ஒய் என்றும் எழுதி அந்த கட்டங்களில் ஏராளமான நம்பர்களைப் போட்டு நிரப்புவார்கள். கடைசியில் ஒன்றுக்கும் உதவாத ஒரு தப்பான விடையைத் தருவார்கள்.” என்று சொல்வது வழக்கம். தன் மனதிலேயே கணக்கைப் போட்டு உடனடியாக உள்ளுணர்வில் தோன்றியபடி விஷயத்தை முடித்து விடுவார் அவர்.

 

 

ஒரு முறை வெஸ்டர்ன் யூனியன் கம்பெனி அவரது ஒரு கண்டுபிடிப்புக்காக ஒரு லட்சம் டாலர் தொகையைத் தந்தது. அவ்வளவு பெரிய தொகையைப் பார்த்துப் பிரமித்துப் போனார் எடிஸன். கம்பெனி நிர்வாகத்திடம், “ எனக்கா இவ்வளவு பெரிய தொகை? இதை என்னிடம் தர வேண்டாம். நீங்களே பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆண்டொன்றுக்கு ஆறாயிரம் டாலர் வீதம் பதினேழு ஆண்டுகளுக்கு எனக்கு நீங்கள் தாருங்கள்” என்றார். அந்த நிறுவனமும் அப்படியே செய்ய சம்மதித்தது!

**********

 

 

 

Never Lose Hope! (Post No.2543)

two pillars

Compiled by London swaminathan

 

Date: 15  February 2016

 

Post No. 2543

 

Time uploaded in London :–  9-53 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

Escape may lie between this pillar and that!

 

An innocent man was condemned to death by an unjust governor, and when the executioner had bound him to a pillar and was about to cut off his head, the victim begged he might be bound to the next pillar instead.

 

The executioner laughed at him, saying “what can you hope to gain so brief an interval? You might just as well let me finish my job.”

But eventually he gave way to the man’s entreaties; and while he was engaged in untying him and fastening him to the next pillar, the king chanced to pass by and asked the meaning of the large crowd that had gathered. On being told, he sent for the condemned man, who was able to convince him of his innocence, and so escaped death.

 

Xxx

cow

May God always bless us with such evil!

A pious man bought a cow in the market and set out for his home. He was followed by a thief who planned to steal his cow. On the way the thief fell in another man who revealed himself as a demon who planned to take the pious man’s life.

 

As they drew near to the latter’s house, where the cow was now tied up, it occurred to the thief that if the demon killed the pious man first, his family may be aroused, and it would be impossible to steal the cow. At the same time the demon thought that, f the thief stole the cow first, the pious man would be awakened by the bellowing, and so would escape death.

 

Each began to ask the other to wait and take the second place, and eventually they came to blows. The thief began to shout, ‘O Pious man, here is a demon who has come to take your life!’ while the demon shouted back ‘O Pious man, here is a thief who has come to steal your cow!’

 

In the end the man and his family were aroused, the thief and the demon took to their heels, and the pious man prayed, “May God always bless us with such evil” for the benefit of his family.

–Subham–