Pictures are taken from various sources for non-commercial use; thanks
English newspapers in Britain have published a news item that the British believed in gem power. The news appeared yesterday (8-1-2020). Hindu beliefs about gem power existed in Britain 500 years ago.
The lovers’ ring lost in a field 500 years ago
A MEDIEVAL gold ring discovered in a field is likely to have been a 15th century love token, an expert says.
The band, found by a detectorist in York in 2016 and now on display at the Yorkshire Museum, is thought to have been owned by gentry or those ‘associated with royalty’ because it is set with a ruby and an emerald.
Adam Parker, of the Yorkshire Museum Trust, which bought the ring for £20,000, said emeralds were linked with chastity and rubies with love so it could have been ‘a betrothal charm’.
He said the ‘exotic’ ring, which was buried for 500 years, may have been dropped, or stolen and hidden.
It was likely to have had its origin in the Middle East or North Africa.
But experts, while describing the gold ring set with ruby and emerald as an ‘incredible treasure’, say its provenance cannot be proved.
Mr Ibbotson, 52, from Blackpool, found it in a field at Fulford, near York, in December 2016. It was officially declared treasure and he and the landowner received £10,000 each. Now, after more than two years of research, Mr Ibbotson believes it could be the ring on the index finger of Anne of Cleves in Hans Holbein’s 1539 portrait.
தினமணிப் பத்திரிக்கையில் 1992ம் ஆண்டு நான் எழுதிய பறக்கும் தட்டுச் செய்தியை இணைத்துள்ளேன்.
27 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்னும் மர்மம் நீடிக்கிறது. ஒரு பறக்கும் தட்டையும் பிடிக்க முடியவில்லை. அகில் வரும் பிற கிரக மனிதர்களைப் பிடித்ததும் இல்லை. ஆயினும் அவ்வப்போது சில மனிதர்களைப் பார்த்ததாக மட்டும் பத்திரிகைகள் செய்தி வெளியிடும்.
இதோ லேட்டஸ்ட் Latest பறக்கும் தட்டு UFO) நியூஸ்
UFO bombshell: US Senator vows to declassify UFO files if she wins US presidential race
UFO files will be declassified to the public in the event of Amy Klobuchar winning the race to the White House, the US Senator has announced.
பறக்கும் தட்டு பற்றி அமெரிக்க அரசாங்கம் இதுவரை சேகரித்து வைத்துள்ள ரகசிய பைல்களை அம்பலப்படுத்துவேன் என்று ஜனநாயகக் கடசி வேட்பாளர் அமி நேற்று அறிவித்துள்ளார் . இவர் ஜன நாயகக் கடசி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நவம்பர் மாதத் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதி ஆனால்……………………… இது நடக்கும்.
UFO sighting: ‘Strange lights’ and ‘creepy stuff’ over the UK spark an alien UFO frenzy
UFO sightings and reports peaked last week when a mysterious chain of moving lights cut across the night skies over parts of the UK, prompting some to speculate aliens had finally visited Earth.
PUBLISHED: 15:59, Tue, Dec 31, 2019 | UPDATED: 15:59, Tue, Dec 31, 2019
The UFOs or unidentified flying objects were seen over Wales and England earlier last week. Eyewitness accounts shared on social media reported a train of bright lights moving across the starlit sky.
வேல்ஸ், இங்கிலாந்து பிரதேசங்களுக்கு மேல் பறக்கும் தட்டுகள் சென்றதாக ஒரு செய்தி வெளியானது. இப்படி வாரம்தோறும் செய்தி வருவதால் உண்மை எது, பொய் எது என்றே தெரிவித்தில்லை. கடந்த ஒரு வாரத்தில் லண்டன் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளை மட்டும் காட்டினேன்.
UFO- UNIDENTIFIED FLYING OBJECTS.
உலக நாடுகள் தபால் தலைகளிலும் பறக்கும் தட்டுப் படங்களைப் போட்டு மக்களின் ஆர்வத்தைத் தக்கவைக்கின்றன.
பாக்யா 1-1-2020 இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு இருபத்தி மூன்றாம் கட்டுரை -அத்தியாயம் 439
2019ஆம் ஆண்டின் அதிசய புதிய கண்டுபிடிப்புகள்!
ச.நாகராஜன்
2019ஆம் ஆண்டு முடிந்து விட்ட தருணத்தில் உலகில் உள்ள அனைத்து அறிவியல் இதழ்களும் இந்த ஆண்டின் அதிசய கண்டுபிடிப்புகள் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியுள்ளன. அடேயப்பா என்று பிரமித்துப் போகிறோம். குறிப்பாக டைம் மற்றும் லைவ் ஸயின்ஸ் போன்ற இதழ்கள் நூற்றுக் கணக்கான புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்துள்ளன. சிலவற்றை இங்கு பார்த்து பிரமிப்போம்.
காற்றிலிருந்து குடிநீர்
தண்ணீர் பற்றாக்குறை பெருகி வரும் இந்நாளில் வாட்டர்ஜென் (Watergen) என்ற இஸ்ரேல் நாட்டுக் கம்பெனி தயாரித்துள்ள ‘ஜென்னி’ (Genny) என்ற இயந்திரம் ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு . சாதாரணமாக நாம் அன்றாடம் பார்க்கும் வாட்டர்கூலர் போல இருக்கும் இது, தானே சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்றிலிருந்து நீரை எடுத்து, பருகும் அளவிற்குச் சுத்தம் செய்து தந்து விடும். ஒரு நாளைக்கு 7 காலன் தண்ணீரை (11 லிட்டர்) இது தரும். இது இயங்க மின்சக்தியோ அல்லது சூரிய ஆற்றலோ தேவைப்படும். இதன் விலை 1500 டாலர்! (ஒரு டாலரின் இந்திய மதிப்பு சுமார் ரூ 70)
ஸ்மார்ட் ஹலோ (SmartHalo)
பெருநகரங்களில் வழி தெரியாமல் அங்குமிங்கும் அலையாதபடிக்கு இப்போது உதவிக்கு வருவது மொபைல் போன். அதில் இருக்கும் படத்தைப் பார்த்தவாறே வண்டியை ஓட்டினால் போகும் இடம் தெரியும் என்றாலும் கூட அபாயம் அதிகம். சட்டப்படி வண்டி ஓட்டும்போது அதை உபயோகிப்பது தவறு. ஆக இப்படி புது இடம் செல்வோருக்கு வழிகாட்டி ஸ்மார்ட்ஹலோ2. இந்த சாதனம் ஸ்மார்ட்போனிலிருந்து செல்ல வேண்டிய திசையை எல் இ டி (LED) ஒளியாக மாற்றி பைக் அல்லது ஸ்கூட்டரின் ஹாண்டில்பாரில் அடுத்து எந்த திசையில் போக வேண்டும் என்று அம்புக்குறி இட்டுக் காட்டும். சைக்கிளிலும் இதை பொருத்திக் கொள்ளலாம். எது சுலபமான வழி, எதில் சென்றால் நேரம் குறைவாக இருக்கும் என்பது உட்பட இது அனைத்தையும் ஆராய்ச்சி செய்து வழி காட்டும்!
பார்வைக்காக கண்ணாடி அணிந்தாலும் சரி, ஃபேஷனுக்காக சன் க்ளாஸ் அணிந்தாலும் சரி, இனி அதன் மூலம் ஒலியையும் கேட்க முடியும். போஸ் ஃப்ரேம்ஸ் (Bose Frames) என்ற பெயருள்ள இந்த சாதனம் நெற்றியின் இரு புறங்களிலும் பொருத்திக் கொள்ளக் கூடிய ஒரு சிறிய ஆடியோ சாதனத்தைக் கொண்டிருக்கும், அது அதை அணிபவருக்கும் மட்டும் கேட்கும்படியாக பாட்டு உள்ளிட்ட அனைத்தையும் ஒலிக்கும். இனி ஹெட் போனை மாட்ட வேண்டிய அவசியமோ அலது போட்காஸ்டோ தேவையில்லை. இந்த சன்கிளாஸை உங்களது ஸ்மார்ட்போனுடன் ப்ளூடூத் வழியாக இணைத்து விடலாம். வேண்டுமென்றால் உங்களுக்குத் தேவையான அனைத்துச் செய்திகள்/ குறிப்புகள் ஆகியவற்றை அததற்குறிய ‘ஆப்ஸின்’ மூலமாக ஒலியாகப் பெறலாம். ஆக இது நடந்தாலும், படுத்தாலும், வண்டி ஓட்டினாலும் உங்களுடன் பேசிக் கொண்டே இருக்கும் ஒரு அரிய துணையாக அமையும்!
பாதுகாப்பான மேக்-அப்பிற்கு சூப்பர்கூப்
கண்களைச் சுற்றியுள்ள தோல் பகுதி மிகவும் மெல்லியதானது; வயதானதை உடனே காட்டும் தன்மை கொண்டது; தோல் கான்ஸர் சுலபமாக வருவதற்கான இடமும் இது தான் என்பதால் 10 சதவிகிதம் பேருக்கு தோல் கான்ஸர் இங்கு ஏற்படுகிறது. ஆகவே மேக்-அப் போடும் போது பலர் எரிச்சலூட்டும் சாதனங்கள் பலவற்றைப் போட்டுக் கொள்வதில்லை. இந்தப் பாதுகாப்பற்ற தன்மையை நீக்கி உதவிக்கு வரும் சூப்பர் மேக்-அப் சாதனம் சூப்பர்கூப் (Supergoop). சோதனைச்சாலையில் பரிசோதிக்கப்பட்டு பாதுகாப்பானது என்ற சர்டிபிகேட்டைப் பெற்றது இது. சூரிய ஒளி கண்களைப் பாதிக்காமல் இருக்க சன்ஸ்க்ரீனை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். ஆனால் இனி கண்களைச் சுற்றி சூப்பர்கூப்பைப் போட்டாலே போதும், அழகு கூடும், அபாயம் குறையும்.
பேசும் ஹியரிங் எய்ட்
காது கேளாதோருக்கு ஒரு தர்மசங்கடம் ஹியரிங் எய்டை அணியலாமா வேண்டாமா என்பது தான்! ஸ்டார்கி ஹியரிங் டெக்னாலஜிஸ் (Starkey Hearing Technologies) என்ற கம்பெனி ஒரு புது ஹியரிங் எய்டைக் கண்டுபிடித்திருக்கிறது. இது செயற்கை அறிவு எனப்படும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஒரு கருவி. இதில் உள்ள சென்ஸர்கள் உங்களுக்குப் பிடித்தமான இசைப்பாடல்களைக் கேட்க வைக்கும். நீங்கள் கேள்வி கேட்டால் மொபைல் போன் பதில் சொல்வது போல கேள்விக்கு உரிய பதிலை அளிக்கும். அன்னிய மொழியில் ஒருவர் பேசுவதை உங்கள் மொழியில் மொழியாக்கம் செய்து தரும். தனியாக இருக்கும் வயதான மூத்தவர்களுக்கு இது ஒரு அரிய துணை. ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள் உள்ளிட்ட பல தகவல்களை உங்களுக்கு இது அளிக்கும். சாதாரணமாகக் காது கேட்பவர்களை விட இன்னும் அதிகத் துல்லியமாகக் கேட்பதற்கான ஒரே வழி இந்த ஹியரிங் எய்ட் தான்! இது தான் எங்கள் கம்பெனியின் சூப்பர் கண்டுபிடிப்பு, அதிகமாக விற்பதும் கூட என்கிறார் இந்தக் கம்பெனியின் தொழில் நுட்ப நிபுணரான் அச்சின் பௌமிக்.
இன்னும் இது போல 2019இன் சிறந்த 95 கண்டுபிடிப்புகளின் விவரத்தை பிரபல டைம் இதழ் படத்துடன் தந்துள்ளது. தனது நிருபர்கள், ஆன் லைன் தகவல் சேகரிப்பு ஆகியவற்றின் மூலமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் உலகின் தலை சிறந்த முதல் நூறு கண்டுபிடிப்புகளை இந்த இதழ் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய உலகின் உள்ளே செல்ல இருக்கிறோம் என்பதையே இந்த அறிவியல் அதிசயங்கள் எடுத்துரைக்கின்றன!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
நமது நாட்டின் முதல் பயிரியலாளர் (Botanist) ஒரு பெண்மணி என்பதைப் பலரும் அறிந்திருக்க முடியாது. கேரளாவைச் சேர்ந்த ஜானகி அம்மாள் இந்தப் பெருமையைப் பெறுகின்ற அரிய பெண்மணி. 1897ஆம் ஆண்டு 19 சகோதர, சகோதரிகளைக் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்த இவர் தைரியமாக தாவரவியலைத் (Botany) தேர்வு செய்து மதறாஸ் பிரஸிடென்ஸி காலேஜில் படிக்க ஆரம்பித்து பெரும் நிபுணரானார். போர்பர் ஸ்காலர்ஷிப் என்று ஒரு அரிய உதவிதொகை கிடைக்கவே முதன் முதலாக அமெரிக்காவிற்குச் சென்ற தாவரவியல் பெண்மணி என்ற பெயரும் இவருக்கு கிடைத்தது. அங்கு பல அரிய கண்டுபிடிப்புகளைச் செய்த இவரை அனைவரும் பாராட்டினர்; இவர் பெயர் மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மாள் (Magnlolia Kobus Janaki Ammal) என்றே ஒரு புதிய தாவரத்திற்குச் சூட்டப்பட்டது.
ஒரு முறை எல்லிஸ் ஐலண்டிற்குச் சென்ற இவரை உள்ளே நுழைய அங்குள்ள அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆனால் இவரது நீண்ட சுருண்ட கேசத்தையும் உடையையும் பார்த்து அசந்து போன அவர்கள் நீங்கள் ஒரு இந்திய ராஜகுமாரியா என்று கேட்டனர். அதற்குத் தன் புன்னகையால் பதில் அளித்த இவரை உள்ளே வர அனுமதித்தனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பல்வேறு வித தாவர இனங்களை இனம் கண்டு வகை பிரித்த இவர் உலகின் முதல் இந்திய தாவர இயல் விஞ்ஞானி எனக் கொண்டாடப்பட்டார். இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு இவரது அரிய திறமையை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று விரும்பி அவரை உடனே இந்தியா வருமாறு வேண்ட ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் அவர் இந்தியா வந்தார். கரும்புச் சாகுபடியில் பல நல்ல முன்னேற்றங்களைச் செய்து காட்டினார்.
இந்தியாவில் உள்ள அரிய தாவர வகைகளை வெளி நாட்டு விஞ்ஞானிகள் இங்கு வந்து எடுத்துச் சென்று தங்கள் நாட்டில் ஆராய்ச்சி செய்து வந்தனர். (இன்றும் கூடப் பெரும்பாலும் இதே நிலை தான்!) எந்த இந்திய தாவரமானாலும் சரி வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் சோதனைச் சாலைகளே அதற்கான செய்திகளைத் தரும். அதை மாற்ற விரும்பி ஒரு பெரும் தகவல் களஞ்சியத்தை இவர் உருவாக்கினார். 87ஆம் வயதில் மறைந்த இவர் பற்றி பெரும்பாலானோருக்குத் தெரியாது என்பதே உண்மை! ஆனால் வெளிநாட்டுப் பத்திரிகைகள் இன்றளவும் இவரைப் பற்றிப் புகழ்ந்து கட்டுரைகள் எழுதி வருகின்றன!
நவரத்தினங்களுள் தனி இடத்தைப் பெறுவது கோமேதகம்! ஏனெனில் சுகபோக வாழ்வையும் வெற்றியையும் தருவது அது!
வெற்றிக்கான கல்லான கோமேதகத்தை பழங்கால நாகரிகத்தினர் அனைவரும் போற்றி அணிந்தனர். இது கண் திருஷ்டியிலிருந்து ஒருவரைக் காப்பாற்றும் என்றும், பயங்கரமான தீய கனவுகளைப் போக்கும் என்றும் அவர்கள் நம்பினர். இதை அணிந்தால் தோல் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கி விடும் என்பதும் அவர்களது நம்பிக்கை. ஒருவருக்கு அபாயம் வரும் போது இதன் ஒளி மங்கி விடும்; ஆகவே உடனேயே தக்க தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் அவர்கள் நம்பினர்.
இத்தாலியில் இதை விதவைகளின் கல் என்று அழைத்து வந்தனர். ஏனெனில் பெரும்பாலும் கணவனை இழந்த விதவைகளே தங்களின் பெரும் இழப்பால் ஏற்பட்ட சோகத்திலிருந்து மீள கோமேதக நெக்லஸை அணிந்து வந்தனர்; கொண்டை ஊசியிலும் கோமேதகக் கல்லைப் பதித்துப் பயன்படுத்தினர்.
கோமேதகம் அணிவோருக்குக் காதலில் வெற்றி, நம்பிக்கை, விசுவாசம், தம்பதியினரிடம் பரஸ்பர அன்பு, தீக்காயங்களிலிருந்து பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்படுகிறது.
ஜோதிட சாத்திரம் கூறும் பலன்கள்
ஜோதிட சாத்திரத்தின் படி சாயா கிரகமான ராகு கிரகத்திற்கு உரியது கோமேதகம். ராகுவைப் போற்றித் துதிக்கும் ராகு அஷ்டோத்தர சத நாமாவளியில் 19வது நாமமாக கோமேதாபரண ப்ரியாய நமஹ என்று கூறப்படுவதால் கோமேதக ஆபரணத்தை அணிந்தவர் ராகு என்பது பெறப்படுகிறது.
ராகு தசை நடக்கும் காலத்திலும் ஒரு ஜாதகத்தில் ராகு தீய பலன்களைக் கொடுக்கும் இடத்தில் இருந்தாலும் கோமேதகத்தை அணிந்தால் கெட்ட பலன்கள் நீங்கும்; நல்ல பலன்கள் ஓங்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கிரகத்திற்கு உரிய கோமேதகம் பரிந்துரைக்கப்படுகிறது. விருச்சிக ராசிக்காரர்கள் கேதுவிற்கு உரியதாக உள்ள வைடூரியம் அணியலாம்.
எண் கணிதத்தின் படி ராகுவின் எண் 4 ஆகும். நான்கு எண்ணில் பிறந்தவர்களும் (பிறந்த தேதி 2,13, 22 ஆகிய தேதிகள்) கூட்டு எண் நான்கைக் கொண்டிருப்பவர்களும் கோமேதகத்தை அணியலாம்.இதனால் காரியசித்தியும் தெய்வ பலமும் கை கூடும்.
தெய்வீகக் கல் கோமேதகம்
தேவி பாகவதம் தேவியின் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள பிரகாரங்களை வர்ணிக்கிறது. இதில் கோமேதக பிரகாரம் பத்மராக பிரகாரத்திற்கு மேல் செம்பருத்தி மலர் போல பிரகாசித்து ஒளிர்வதாகக் கூறப்படுகிறது. இங்கு 32 சக்திகள் நானாவித சஸ்திரங்களைக் கொண்டு கோமேதக மணிகளால் அலங்கரிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டவாறு இருக்கின்றனர்.
சிலப்பதிகாரம் ஊர் காண் காதையில் (190ஆம் வரியில்) ‘இரு வேறு உருவவும்’ என்று கூறப்படுகிறது. ஆகவே இரு வண்ணமுடைய கோமேதகமே சிறந்தது என்பது வலியுறுத்தப்படுகிறது.
ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள்
பழம் பெரும் நூலான ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள் இவை:-
மஞ்சளுடனான சிவப்பு வண்ணம் கலந்த கல் இது.
இது கோமேதகம் என ஏன் அழைக்கப்படுகிறதெனில் இது கோமயம் போல இருப்பதால் தான்.
நல்ல ஒரு கோமேதகம் என்பது : 1) பசுவின் தெளிந்த சிறுநீரின் வண்ணத்தை ஒத்திருக்கும் 2) ஒளி ஊடுருவதாய் இருக்கும் 3) எண்ணெய் பூச்சு பூசப்பட்டது போல இருக்கும் 4) சமனான பரப்புடன் இருக்கும் 5) கனமாக இருக்கும் 6) அடுக்கு அடுக்காய் (layers) இருக்காது 7) வழவழப்பாய் இருக்கும் 8) ஒளி பிரகாசிப்பதாய் இருக்கும்.
விலக்கத்தக்க கோமேதகம் என்பது 1) இரண்டாவது வண்ணம் இல்லாமல் ஒரு வண்ணத்துடன் மட்டுமே இருக்கும் 2) இலேசானதாய் இருக்கும் 3) கரடுமுரடாய் இருக்கும் 4) தட்டையாய் இருக்கும் 5) ஒரு அடுக்கு இருப்பது போல இருக்கும் 6) ஒளி இருக்காது 7) மஞ்சள் நிறக் கண்ணாடியைப் பார்ப்பது போல இருக்கும்.
ஒவ்வொரு ரத்தினமும் தனக்கென உள்ள பிரதானமான வண்ணத்தைத் தவிர ஒரு உப வண்ணத்தையும் கொண்டிருக்கும். இந்த வண்ணம் 1) வெள்ளை 2) சிவப்பு 3) மஞ்சள் 4)கறுப்பு ஆகிய வண்ணமாக இருக்கலாம். இப்படிப்பட்ட கல்லும் கோமேதகமே.
பிரதானமாக உள்ள மஞ்சள் வண்ணத்துடன் மேலே கூறப்பட்ட எந்த வண்ணத்தையும் நல்ல கோமேதகம் கொண்டிருக்கலாம்.
மிக மிகச் சிறந்த கோமேதகம் என்பது கனமாயும், அதிக பிரகாசத்துடனும், எண்ணெய் பூசப்பட்டது போன்ற தோற்றத்துடனும், மிருதுவாகவும், ஒளி ஊடுருவதாகவும் இருக்கும். இப்படிப்பட்ட சிறந்த கோமேதகம், அதை அணிபவருக்கு செல்வத்தைத் தரும்; அதிர்ஷ்டத்தையும் தரும்.
அதிக பித்தம் இருந்தால் பித்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கும்.
ரத்த சோகையை நீக்கும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும். அதிக பசி எடுக்க வைக்கும். தோலுக்கு நலம் பயக்கும். ஆயுளை அதிகரிக்கும்.
நல்ல கோமேதகம் இமயமலையில் சிந்து நதி உள்ள சிந்து மாநிலத்திலும் சிந்து சாகரத்திலும் கிடைக்கும். நல்ல கோமேதகம் தானா என்பதை நெருப்பை மூட்டித் தெரிந்து கொள்ளலாம்.
அதாவது கோமேதகத்தை நெருப்பில் வாட்டினால் அதன் நிறம் மாறிக் கொண்டே இருக்கும். இதை வைத்து அறிந்து கொள்ளலாம்.
இப்படி ரஸ ஜல நிதி கூறுவதைத் தவிர ஏனைய பல நூல்களும் கோமேதகத்தின் அருமை பெருமைகளை விளக்குகின்றன.
பதார்த்த குண சிந்தாமணி என்னும் நூல் கோமேதகம் அணிந்தால் பித்த சம்பந்தமான நோய்கள் நீங்கும், மலக் கட்டறுக்கும், குஷ்ட நோய்கள் நீங்கும், வாத நோய் நீங்கும், உடல் ஒளி ஓங்கும் என்று கூறுகிறது.
அறிவியல் தகவல்கள்
இது சிலிகேட் கனிம வகையைச் சார்ந்ததாகும்.
மோவின் அளவுகோல் படி இதன் கடினத்தன்மை : 6.5 – 7.5
இதன் ஒப்படர்த்தி (Specific Gravity) : 3.1 – 4.3
இதன் இரசாயன பொது வாய்பாடு : X3Y2(SiO4)3
செயற்கைக் கற்களும் கிடைக்கும் இடங்களும்
கோமேதகத்தில் அரிய பல வகைகள் உண்டு. இவற்றை தொழிலகப் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.
கோமேதகத்தின் அரிய பல வகைகள் தாய்லாந்து, சீனா, அமெரிக்கா, பிரேஜில் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கிடைக்கிறது.
நியூயார்க் மாகாணத்தின் அதிகாரபூர்வமான மாநில ரத்தினம் கார்னெட் (New York State Gemstone : Garnet) ஆகும்!
செயற்கை முறையில் தயாரிக்கப்படும் கார்னெட் உள்ளிட்ட வகைகள் ஏராளமாகத் தயாரிக்கப்படுவதால் இயற்கையாகக் கிடைக்கும் கோமேதகத்தைத் தேர்வு செய்ய விரும்புவோர் கவனத்துடன் தக்க நிபுணர்களை நாடுவது நலம்.
இந்தியாவில் மேற்குப் பகுதியிலும் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் கோமேதக தாது ஏராளமாகக் கிடைக்கிறது. ஆனால் பாதுகாப்பற்று இருப்பதாலும் இப்படி ஒரு அரிய வகை ரத்தின தாது இருப்பது அதன் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் இருப்பதாலும் இந்த தாது திருடப்படுவது வருந்தத்தக்க விஷயம்.
பொதுவாகவே ஒரு அரிய வகைக் கல்லையோ அரிய தாதுக்கள் கொண்ட மண்வளத்தையோ உரிமையாகக் கொண்டிருப்பவர் அதன் மாதிரியை (Sample) இதற்கெனவே அமைந்துள்ள ஜெம்மாலஜி சோதனைச்சாலைகளில் சோதனை செய்து என்ன வகை, என்ன விலை பெறும் என்பதைச் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம்.
பொதுவாகவே ஒரு நவரத்னக் கல்லை அணியும் போது அதை பசும்பாலில் நனைத்து, பின்னர் தண்ணீரில் அலசி அணிவது மரபு. கல்லுக்குரிய கிழமையன்று அணிவது சிறப்பாகும். மாணிக்கம் – ஞாயிறு; முத்து – திங்கள்; பவளம் – செவ்வாய்; மரகதம் – புதன்; கனக புஷ்பராகம் – வியாழன்; வைரம் – சுக்ரன்; இந்திரநீலம் – சனி என்று இப்படி அணிவது சிறப்பாகும்.
பரம்பரை பரம்பரைச் சொத்தாக வருகின்ற நவரத்னக் கற்கள், மற்றும் மாலைகளை வீட்டின் உள்ளே பெட்டியில் வைத்துப் பூட்டாமல் அதைச் சுத்தம் செய்து துலக்கி, தேவையெனில் சோதனைச்சாலையில் அதன் மதிப்பையும் அரிய தன்மைகளைப் பற்றியும் அறிந்து கொண்டு அவற்றை அணிந்து நல்ல பலன்களைப் பெற்று மகிழலாம்.
முடிவுரை
நவரத்தினங்களைப் பற்றிய இந்தக் கட்டுரைத் தொடருக்கு வாசகர்கள் பெருமளவில் உற்சாக ஆதரவு தந்தனர். குறிப்பாகத் தாய்மார்களும் ஆர்வத்துடன் இவற்றைப் படித்து வந்தனர். வாசக அன்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கட்டுரைத் தொடரை எழுத ஊக்குவித்த மாலைமலர் சி.இ.ஓ. (C.E.O) திரு ரவீந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் பயன்படக் கூடிய ஒரு தொடர் பற்றிச் சிந்தித்து அதை உங்கள் முன் வழங்கி இருப்பதிலிருந்தே சமுதாயம் மேம்படுவதற்கான கலைகளையும் துறைகளையும் ஊக்குவிக்கும் அவரது பாராட்டப்பட வேண்டிய சமுதாய நோக்கு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
திரு வசந்த்ராஜ் உள்ளிட்ட ஆசிரிய குழுவினர் கட்டுரைகளை நல்ல முறையில் வெளியிட ஆர்வத்துடன் உதவியுள்ளனர். மாலைமலர் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.
தொலைபேசியில் ஆயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்டோர் என்னிடம் பேசி விளக்கங்கள் கேட்டுப் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் உரிய கற்களைப் பெற்று நலமாக வளமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
கற்களை அணிந்தவுடன் ஏற்பட்ட நல்ல பலன்களை மகிழ்ச்சியுடன் தொலைபேசி மூலம் பங்கு கொண்டவர்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்!
நமது பூர்வ ஜென்ம கர்மங்களுக்கு ஏற்ப நல்லவையும் தீயவையும் இப்பிறவியில் அவ்வப்பொழுது நமக்கு அமைகின்றன. ஆனால் தீயவற்றைப் போக்கவும் கஷ்டங்களிலிருந்து விடுபடவும் இறைவன் அருளியுள்ள வழிகள் மணி, மந்திரம், ஔஷதம்.
இந்த மூன்றுமே உடனுக்குடன் பலன் அளிக்கும் என்பதால் முன்னோர்கள் அரிய பல சாத்திரங்களை வகுத்து நமக்கு வழி காட்டி அருளியுள்ளனர்.
ஏழாம் நூற்றாண்டு நூலான ரஸ ஜல நிதி, தமிழின் பழம் பெரும் காப்பியமான சிலப்பதிகாரம் (அடியார்க்கு நல்லார் உரை), ரத்தின சாஸ்திரம், தேவி பாகவதம், கருட புராணம், சிவ புராணம், சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் பதார்த்த குண சிந்தாமணி உள்ளிட்ட நூல்கள் பல அரிய செய்திகளை வழங்குகின்றன.
1930இல் இங்கிலாந்தில் வெளியான Amulets and Superstitions என்ற சிறந்த ஆய்வுப் புத்தகம் சர்.இ.ஏ. வாலிஸ் பட்ஜ் (Sir E.A. Wallis Budge) அவர்களால் எழுதப்பட்டது. இந்த நூல் பழம் பெரும் நாகரிகத்தினர் மணிகளை எப்படிப் பயன்படுத்தினர் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறது.
1905ஆம் ஆண்டு வெளியான Precious Stones என்ற புத்தகம் நவரத்தினங்களைப் பற்றிய அரிய செய்திகளைத் தருகிறது. இதை எழுதியவர் ஏ.ஹெச்.சர்ச் (A.H.Church F.R.S) என்பவர். அறிவியல் பூர்வமாகவும் கலை நோக்குடனும் விலை மதிப்பற்ற அபூர்வ மணிகளைப் பற்றி இவர் விளக்கி எழுதியுள்ளார்.
இப்படிப்பட்ட இன்னும் பல நூல்களையும் ஆராய்ந்து ஒப்பு நோக்கி நவரத்தினங்களைப் பற்றிய செய்திகளை வழங்க முடிந்தது. இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
காலம் கடந்து நின்று எப்போதும் ஜொலிக்கும் மணிகள் மனித குலத்தின் பொக்கிஷம்!
Our twin registry. Our registry of 12,000 adult twins is the largest in the UK. Working with the Department of Twin Research and Genetic Epidemiology at King’s …
Twin studies are studies conducted on identical or fraternal twins. They aim to reveal the importance of environmental and genetic influences for traits, …
‘Tracy’ the sheep (1990-97) was genetically modified to produce a human protein, alpha antitrypsin, in her milk. The protein is being clinically tested by PPL Therapeutics, who also donated Tracy to the Science Museum, with the aim of finding a treatment for the symptoms of cystic fibrosis. Tracy was born in 1990 after human DNA was inserted into fertilised sheep embryos at the Roslin Institute near Edinburgh, Scotland. In an attempt to reproduce animals such as Tracy, the Roslin Institute later cloned Dolly the sheep.
தாவர உலகில் ஆர்க்கிட் (Orchids) என்னும் மலர்களின் உருவம் வினோதமாக இருக்கும் .இது பற்றி நான் தினமணியில் 17-5-1992ல் எழுதிய கட்டுரையை இத்துடன் இணைத்துளேன்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
21-12-2019 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
ச.நாகராஜன்
இசைபட வாழ வைக்கும் வைடூரியம்
நீங்கள் ஒரு இசைக் கலைஞரா, பேச்சாளரா, கல்லூரியிலோ அல்லது பெரிய நிறுவனங்களிலோ வேலை பார்ப்பவரா, உங்கள் சொல்லை மற்றவர் மதித்து நடக்க வேண்டிய தலைமை இடத்தில் இருப்பவரா, உங்களுக்கெனவே இருக்கிறது வைடூரியம் என்னும் அபூர்வ ரத்தினம். நவ ரத்தினங்களுள் ஒன்றான இதை ஆங்கிலத்தில் கேட்ஸ் ஐ – (Cat’s Eye) என அழைக்கின்றனர். தோன்றில் புகழொடு தோன்றுக என்று ஆணையிட்ட வள்ளுவர் ஈதல் இசைபட வாழ்தல் -அதாவது புகழுடன் வாழ்தல் – உயிருக்கு ஊதியம் என்ற ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.
குரல் வளம் சிறக்கவும் இசைபட – புகழுடன் – வாழவும் பெரிதும் உதவுவது வைடூரியம்!
இலக்கியம் புகழும் வைடூரியம்
பழைய காலத்திலிருந்தே அனைத்து நாகரிக மக்களும் கொண்டாடிய கல் வைடூரியம்.
செய்வினை, மந்திர சக்தி, மரணம் ஆகியவற்றிலிருந்து இது ஒருவரை காப்பாற்ற வல்லது என்று பழைய நாகரிகத்தினர் பெரிதும் நம்பினர். அராபியர்களோ பெரும் யுத்த களத்தில் இதை அணிந்தால் மறைந்து இருந்து மாயாவியாகப் போர் புரிய முடியும் என்று நம்பினர்.
சிலப்பதிகாரத்தில், ஊர் காண் காதையில் “தீதறுக் கதிரொளி தெள் மட்டு உருவவும்” என்று குறிப்பிடப்படும் வரியினால் (வரி 189) ‘குற்றமற்ற கதிரவனின் ஒளி போலவும் தெளிந்த தேன் துளி எனச் சொல்வதற்கு ஒத்த உருவமும் உடையது வைடூரியம்’ என்பது தெரிய வருகிறது.
இராமாயணத்தில் அயோத்தி நகரமும் இலங்கையும் வைடூரியக் கற்களினால் ஜொலிப்பது பல இடங்களில் அழகுற வர்ணிக்கப்பட்டுள்ளது.
ரஸ ஜல நிதி தரும் சுவையான செய்திகள்
வைடூரியம் பற்றி மிகப் பெரும் பண்டைய நூலான ரஸ ஜல நிதி தரும் சுவையான தகவல்கள் இவை : –
இந்தக் கல் காம-பூதி நாட்டின் எல்லையில் உள்ள மிக உயரமுடைய மலையான விதுர மலையில் தோண்டி எடுக்கப்படுகிறது. (காம-பூதி என்பதைக் கம்போடியா என அறிஞர்கள் ஆய்வு செய்து சொல்கின்றனர்). இந்தக் கல்லின் உள்ளே பார்த்தால் ஊஞ்சலாடும், கழுத்தைச் சுற்றி அணியும் துணி போன்ற குறி தெரியும்!
வைடூரியத்தின் வகைகள்
இந்தக் கல் மூன்று வகையாக இருக்கிறது. 1) மஞ்சளுடன் கறுப்பு வண்ணம் கலந்திருப்பது 2) சிவப்புடன் நீல வண்ணம் கலந்திருப்பது 3) வெள்ளையுடன் கறுப்பு வண்ணம் கலந்திருப்பது
வைடூரியம் மூன்று விதங்களில் கிடைக்கும் 1) பச்சை மூங்கில் இலை வண்ணத்துடன் இருப்பது 2) மயிலின் கழுத்தில் ஜொலிக்கும் வண்ணத்துடன் இருப்பது 3) பூனையின் கண்ணில் இருக்கும் கபில வண்ணம் போல இருப்பது.
இந்த அனைத்து வகைகளிலும் சிறந்த வைடூரியம் என்று கூறப்படுவதன் குணாதிசயங்கள் இவை :- கனமாக இருப்பது, வழ்வழுப்புடன் இருப்பது, பொதுவான குறைகளான கோடு, கீறல், பள்ளம். புள்ளி போன்றவை இல்லாமல் இருப்பது (முந்தைய பல ரத்தினங்களுக்காக சொல்லப்பட்ட குறைகள் இருக்கக் கூடாது),ஒளி ஊடுருவிப் பிரகாசிப்பது ஆகியவை கொண்ட கற்களை அணியலாம்.
கறுப்பு வண்ணத்துடன் இருப்பது, நீர் வண்ணம் கொண்டது, தொப்பி வடிவம் கொண்டது, இலேசானது, கரடுமுரடாக இருப்பது, சிவப்பு வண்ணத்துடன் கூடிய, ஊஞ்சலாடும் கழுத்தைச் சுற்றி அணியும் துணி போன்ற தோற்றத்துடன் இருப்பது ஆகியவை விலக்கப்பட வேண்டியவையாகும்.
நல்ல ஒரு வைடூரியத்தை அணிந்தால்,
ரத்தக்கசிவு, ரத்தப்போக்கு நீங்கும்,
அறிவு மேம்படும்,
ஆயுள் நீடிக்கும்,
வலிமை கூடும்,
பித்தத்தினால் ஏற்படும் அனைத்து வியாதிகளும் நீங்கும்,
ஜீரண சக்தி கூடும்,
மலம் இளகி நீங்கும்.
ஒரு நல்ல வைடூரியத்தை எப்படிக் காண்பது எனில் அதை உரைகல்லில் வைத்து உரசிப்பார்த்தால் அது ஒளி விட்டுப் பிரகாசிக்கும்.
இப்படிப்பட்ட அரிய செய்திகளை ரஸ ஜல நிதி மூலமாக அறிகிறோம்!
கேட்ஸ் ஐ என்ற வார்த்தை எப்படி வந்தது?
க்ரைசோபெரில் (Chrysoberyl) என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்தக் கல்லின் நடுவே ஒளியைப் பாய்ச்சினால் உள்ளே பூனையின் கண்ணைப் போல இருக்கும் வடிவைக் காணலாம். அதனால் தான் இது கேட்ஸ் ஐ என்ற பெயரைப் பெற்றது. கேட்டோயர் (chatoyer) என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து வந்தது கேட்ஸ் ஐ என்ற வார்த்தை.
ஜோதிட சாத்திரம் கூறும் உண்மைகள்
ஒரு ஜாதகத்தில் கேது தசை நடந்தாலோ அல்லது கேது புக்தி நடந்தாலோ இதை அணிவது நலம் பயக்கும். கேது வைடூரிய ஆபரணத்தை அணிந்தவன் – வைடூர்ய விபுஷண தாரணாயாம் – என்று கேது தியான ஸ்லோகம் கூறுகிறது.
சாயா கிரகம் எனப்படும் நிழல் கிரகமான இந்தக் கேதுவினால் ஏற்படும் சில தோஷ பலன்களை நீக்க வைடூரியம் அணியலாம்; உடனே தீய பலன்கள் நீங்கி விடும். குறிப்பாக சர்ப்ப கிரக தோஷம் என்ற தோஷத்தால் புத்திர பாக்கியம் தாமதப் படுவோர் இதை அணிந்தால் சீக்கிரமே புத்திர பாக்கியம் கை கூடும்.
வைடூரியத்தில் அதன் நடுவில் இருக்கும் கோடு தான் அதற்கு அழகூட்டுகிறது. இதை ரத்தின சாஸ்திரம் சூத்ரம் என்று அழைக்கிறது. இந்த சூத்ரம் இருபுறமும் முழுவதும் ஓடுவதாக இருக்க வேண்டியது அவசியம். இப்படி அணிந்தால் தைரியம் கூடும்; தெய்வ பலமும் சேரும்.
எண் கணிதத்தில் 7 என்ற எண்ணுக்குரியது வைடூரியம். ஆகவே 7 எண் (7,16,25 ஆகிய தேதிகள்) பிறந்த தேதியாக இருந்தாலோ அல்லது கூட்டு எண் ஏழாக அமைந்தாலோ வைடூரியம் நல்ல பலன்களை அளிக்கும்.
வைடூரியத்திற்கு கேது ரத்னம், சூத்ர மணி என்று வேறு பெயர்களும் உண்டு.
பிரபலங்களின் ஸ்பெஷல்!
இதை மோதிரமாகவோ பதக்கமாகவோ அணியாத பிரபலங்களே இல்லை எனலாம். குறிப்பாக வாக்கு சக்தியை இது கூட்டும், குரல் வளம் ஓங்கும் என்பதால் இசைக் கலைஞர்களும், பேச்சாற்றல் உள்ளவர்களும் இதை அணிகின்றனர்.
ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுவோர் இதை அணிவது வழக்கம். அத்துடன் அபாயகரமான விளையாட்டுக்கள் மற்றும் மலையேறுவது, சூதாடுவது போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு ஆபத்துக்களை விலக்கிப் பாதுகாப்பளிப்பதும் வைடூரியமே. சில அபூர்வமான வைடூரியக் கற்கள் இரு வண்ணங்களைச் சரி பாதியாகக் கொண்டிருக்கும். ஒரு பக்கம் இலேசான வண்ணம் மற்றொரு பக்கம் அடர்த்தியான வண்ணம் கொண்டிருக்கும் இந்த வகைக் கற்களை பால்-தேன் விளைவைக் (Milk and Honey effect) கொண்டிருப்பது என்று கூறுவர்.
அறிவியல் தரும் தகவல்கள்
இதன் ரசாயன சமன்பாடு : BeAl2O4 மோ அலகின் படி இதன் கடினத் தன்மை : 8.5 இதன் ஒப்படர்த்தி (Specific Gravity ) : 3.5 – 3.84
அறிவியல் வளர்ச்சியால் வைடூரியம் செயற்கை முறையிலும் தயாரிக்கப்பட ஆரம்பித்து விட்டது. இது இயற்கையான வைடூரியம் போலவே தோற்றம் அளிக்கும். இயற்கை வைடூரியத்தையும் செயற்கையினாலான சிந்தடிக் வைடூரியத்தையும் அருகருகில் வைத்துப் பார்த்தால் எது இயற்கை, எது செயற்கை என்று இனம் காண்பது மிகவும் கடினம். வெவ்வேறு வண்ணங்களில் கூட செயற்கை வைடூரியம் கிடைக்கிறது. ஆனால் நமக்கு வேண்டிய நல்ல பலன்களுக்காக நாம் நாட வேண்டியது இயற்கையில் கிடைக்கும் வைடூரியக் கற்களை மட்டுமே தான்!
19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த கன்னாட் டியூக் (Duke of Connaught) வைடூரியம் பதித்த மோதிரத்தை நிச்சயதார்த்த மோதிரமாக கொடுத்த போது இது மிகவும் பிரபலமானது.
வைடூரியத்தைப் பற்றிய சுவையான ரோமானியக் கதை ஒன்று உண்டு. வ்ரிணா என்ற ஒரு இளவரசி ரோம் நகரத்தை ஆண்டு வந்தாள். அவளிடம் வைடூரியப் பதக்கம் பதித்த மாலை ஒன்று இருந்தது.
ஒரு பெரிய யோகி அவளிடம், ஒரு போதும் அந்தப் பதக்கத்தை அவள் அணியாமல் இருக்கக் கூடாது என்றும் மிகவும் மோசமான கால கட்டத்தில அந்தப் பதக்கம் அவளை அந்த நிலையிலிருந்து மீட்கும் என்றும் மிருகங்களுடன் பேசும் சக்தி அப்போது அவளுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.
ஒரு சமயம் மழை பொய்க்கவே நாடெங்கும் பஞ்சம் தலை விரித்தாடியது. இளவரசி ஏழ்மை நிலை அடைந்து வருந்தினாள். அனைத்து செல்வமும் இழந்த நிலையில் செய்வதறியாது அவள் திகைத்த போது ஓவென அவள் அழ ஆரம்பித்தாள். அப்போது பூனையின் கண் போல கண்கள் கொண்ட ஒரு பல்லி அவள் அருகில் வந்து அவளிடம் பேச ஆரம்பித்தது. “இளவரசியே, அழாதே! நதியின் வறண்ட கரைப் பகுதிக்கு செல். உனக்குத் தேவையானது அங்கு கிடைக்கும். இழந்த நிலையை நீ மீண்டும் பெறுவாய்” என்றது அது. உடனே வ்ரிணா தன் படை வீரர்களுடன் நதிக் கரையை அடைந்து அங்கு தோண்ட ஆரம்பித்தாள். என்ன ஆச்சரியம்! வைடூரியச் சுரங்கம் ஒன்றை அவள் கண்டாள். ஏராளமான வைடூரியக் கற்களை அவளால் வெட்டி எடுக்க முடிந்தது. அந்தக் கற்கள் மூலமாக இழந்த செல்வம் மீண்டும் வர பெரும் ராணியானாள் அவள். இந்தக் கதை ரோமானிய நாகரிகத்தில் மிகவும் பிரபலமாக சொல்லப்பட்ட கதை.
இதிலிருந்தே இழந்த செல்வத்தை மீண்டும் தரும் வைடூரியத்திற்கு ரோமானியர்கள் எவ்வளவு மதிப்புக் கொடுத்தனர் என்பதை அறியலாம்!
கிடைக்கும் இடங்கள்
இலங்கையின் பல பகுதிகளில் அருமையான வைடூரியம் கிடைக்கிறது.
பிரேஜில், சீனா, தாய்லாந்து, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இப்போது வைடூரியம் கிடைக்கிறது.
இந்தியாவில் திருவனந்தபுரம் மற்றும் மலபார் பகுதிகளிலும், ஒரிஸாவின் சில பகுதிகளிலும் வைடூரியம் கிடைக்கப் பெறுகிறது.
தேவி இருக்குமிடத்தில் வைடூரிய பிரகாரம்
தேவி பாகவதத்தில் பன்னிரெண்டாம் ஸ்கந்தம் பதினொன்றாம் அத்தியாயம் மணித்வீபத்தைப் பற்றி வர்ணிக்கிறது.
மணித்வீபம் என்பது பிரம்ம லோகத்திற்கு மேல் உள்ள உலகம். இதில் தேவி வசிக்கிறாள். அவள் வசிக்குமிடத்தில் உள்ள பிரகாரங்கள் வர்ணிக்கப்படுகையில் வஜ்ர பிரகாரத்திற்கு மேலுள்ள பிரகாரமாக அமைவது வைடூரிய பிரகாரம். இங்குள்ள ராஜ மார்க்கம், வாபி, தடாகம், கால்வாய், மணல் எல்லாமே வைடூரியம் தான்! பிராம்ஹி, மாஹேஸ்வரி,கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த மாதர்களும் வசிக்கும் இடம் இது. இவர்களோடு மஹாலக்ஷ்மியும் இங்கு வாசம் செய்கிறாள். பிரகாரத்தின் துவாரங்களில் திரிமூர்த்திகளுடைய வாகனங்களான அன்னம், கருடன், ரிஷபம் ஆகியவை வெகு ஜாக்கிரதையுடன் (எக்கணத்திலும் புறப்படச்) சித்தமாயிருக்கும்.
இன்னும் பல செய்திகளைத் தரும் இந்த வர்ணனை பிரமிப்பூட்டும் ஒன்று. லக்ஷ்மி வாசம் செய்யும் இடம் வைடூரிய பிரகாரம் என்பதை அறியும் போது செல்வ வளத்தை வைடூரியம் கொடுக்கும் என்ற இரகசியம் பெறப்படுகிறது.
செல்வ வளத்துடன் இசைபட வாழ அனைவரும் வைடூரியத்தை வணங்கி வரவேற்று அணிவோம்!
****
அடுத்த கட்டுரையுடன் இந்த நவரத்தினத் தொடர் நிறைவுறும்.
You must be logged in to post a comment.