குறள் கதை- ஏமாறாதே! ஏமாற்றாதே!! (Post No.5016)

WRITTEN by London Swaminathan 

 

Date: 16 May 2018

 

Time uploaded in London – 7-37 am (British Summer Time)

 

Post No. 5016

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பர் சான்றோர்கள். யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம் என்பர் சிறியோர்கள். இதை விளக்க இதோ இரண்டு கதைகள். தமிழ் வேதம் தந்த வள்ளுவப் பெருமானும் பத்து குறள்களில் சிற்றினம் சேராமை நன்று என்று விளக்குகிறார்.

 

நல்லினத்தி  னூங்குந் துணையில்லை தீயினத்தின்

அல்லற் படுப்பதூஉம் இல் -குறள் 460

 

நல்லவர்களைத் துணையாகக் கொள்வதைவிடச் சிறந்தது உலகில் வேறு எதுவும் இல்லை. அதுபோல தீயவர்களைத் துணையாகக் கொள்வதைவிடத் தீங்கு எதுவும் இல்லை.

 

முதல் கதை

ஒரு ஊரில் சில வியாபாரிகள் இருந்தனர்; ஒருவருக்கொருவர் கில்லாடி; உண்மை என்பது வாயில் தப்பித் தவறியும் வராது. ஒரு நாள் அனைவரும் சந்தைக்குச் செல்லும் முன்னர், ஒரு பிள்ளையார் கோவிலுக்குச் சென்றனர். ஒரு வணிகனுக்குப் பேராசை. பிள்ளையார் தொப்புளில் காசு வைக்கும் பழக்கம் சில பக்தர்களுக்கு உண்டு என்பதை நினைத்து அங்கிருந்த பெரிய பிள்ளையார் சிலையின் தொப்புள் ஓட்டைக்குள் விரலை விட்டார். அங்கு ஒரு தேள் இருந்தது. அது சடக்கென்று அவர் விரலில் கொட்டியது. கடுமையான வலி. திருடனுக்குத் தேள் கொட்டினால் சொல்ல முடியுமா? பேசாமல் மூக்கின் அருகில் விரலைக் கொண்டு சென்று புன்னகைத்தார். எல்லோரும் என்ன என்ன? என்று ஆவலுடன் வினவினர்.

 

அந்த வணிகர் சொன்னார்:அடடா! என்ன வாசனை! என்ன வாசனை! கஸ்தூரி வாசனை, கோரோசனை வாசனை கமக்குது, கமக்குது என்றார்.

 

உடனே ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நின்று ஓட்டைக்குள் கையை விட்டனர். ஒவ்வொருவரையும் தேள் கொட்டியது. எல்லோரும் கஸ்தூரி வாசனை கமக்குது கமக்குது என்று ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு தன்னைதானே ஏமாற்றிக்கொண்டனர்.

XXXXX

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும் – குறள் 451

 

பொருள்

கீழ் மக்களைக் கண்டு அஞ்சி விலகிப்  போவார்கள் பெரியோர்; அற்பர்கள், அவர்களையே விரும்பி ஏற்றுக் கொள்வர்.

 

 

இரண்டாவது கதை

 

ஒரு ஊரில் வடை சுட்டு விற்கும் வியாபாரி அடுத்த ஊரில் வாரச் சந்தை கூடும் தினத்தன்று ஒரு கூடை நிறைய வடைகளை எடுத்துச் சென்றார்.

அவர் பாதி தூரம் செல்லும்போது அவரை ஒரு ரவுடிகள் கூட்டம் சூழ்ந்து கொண்டது.

ஏய்! கூடையில் என்ன? என்று கேட்டது.

இவர் கூடை நிறைய வடை என்றவுடன் கும்பலில் இருந்த ஒவ்வொரு ரவுடியும் ஆளுக்கு இரண்டு மூன்று தின்றுவிட்டு ஏப்பம் விட்டனர். காசு என்று கேட்டவுடன், முதுகிலும் கன்னத்திலும் நாலு அடி போட்டு விரட்டி விட்டனர். அவர் அலறிப் புடைத்துக் கொண்டு சொந்த கிராமத்துக்கு விரைந்து வந்தார்.

 

 

அவர் இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்ததைப் பார்த்த அடுத்த வீட்டு வியாபாரி என்ன வடை எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டதா? நல்ல விற்பனையோ? நல்ல கூட்டமோ? என்று வினவினார். அவர் அப்பம் சுட்டு விற்கும் வணிகர். அவர் கையில் கூடை நிறைய அப்பம் வைத்துக் கொண்டு இப்படி ஆவலுடன் கேட்டார்.

அடிபட்ட வியாபாரி சொன்னார்: சீக்கிரம் போங்கள். சந்தை வரை போகத் தேவையே இல்லை. பாதி தூரம் போகும்போதே கூடை காலி ஆகிவிடும் என்றார்.

 

ஆப்பக்கூடை வியாபாரி ஆசையோடு வேக நடை போட்டார். சந்தைக்குப் போகும் முன்னரே பாதி வழியில் அவரை ரவுடிகளின் கூட்டம் சுற்றி வளைத்தது. கூடையில் இருந்ததைத் தின்று முடித்தவுடன், வியாபாரி காசு கேட்டார். அவரையும் நாலு சாத்தி சாத்தி விரட்டி விட்டனர்.

 

கிராமத்துக்குத் திரும்பியவுடன், ஏற்கனவே அடிபட்ட வியாபாரி,

‘என்ன பிரமாதமான விற்பனையோ? இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாயே?’ என்றார்.

ஆமாம் ஆமாம்     இன்று சேல்ஸ் (sales) கன ஜோர் என்று சொல்லிக் கொண்டே நடையைக் கட்டினார்.

இதனால்தான் வள்ளுவனும் சிற்றினம் சேராமை என்று பத்து பாடல்களைப் பாடிவிட்டும் போனார்.

 

–சுபம்—

 

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு (Post No.5013)

RANI PADMAVATI; CHITTOOR RANI PADMINI

WRITTEN by London Swaminathan 

 

Date: 15 May 2018

 

Time uploaded in London – 10-23 AM (British Summer Time)

 

Post No. 5013

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

தமிழர்கள் வீரத்துக்குப் பெயர் எடுத்தவர்கள். புற நானூற்றில் காணப்படும் வீரத்தாய் வேத காலம் முதல் இருந்து வருவதை முந்தைய கட்டுரைகளில் மொழிந்தேன். வீர மாதா என்பதே ஸம்ஸ்க்ருதச் சொல். வீரம் என்பதும் ஸம்ஸ்க்ருதமே இதிலிருந்து ஆங்கிலச் சொல் ஹீரோ (VEERA=HERO) வந்தது. நிற்க.

 

இக்கட்டுரையில் யாம் உரைக்க வரும் விஷயம் காஷ்மீரப் புலவன் கல்ஹணன் உரைத்தது தமிழில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருப்பதைக் காட்டுவதாகும்.

 

கல்ஹணன் ராஜ தரங்கிணியில் சொல்கிறான்:

Courage
The heroic think an object attainable by courage, the timid by caution; otherwise between them there could be little difference. Rajatarangkini of Kalhana 6-363

 

துணிந்து செய்தால் எதையும் அடையலாம் என்று வீரன் எண்ணுகிறான்; கோழையோ எதிலும் உஷாராகப் போகவேண்டும், கவனமாகச் செல்ல வேண்டும் அப்பொழுதுதான் நினைத்ததைப் பெறலாம் என்கிறான். இதுதான் வீரனுக்கும் கோழைக்கும் உள்ள வேறுபாடு.

 

இதிலுள்ள தாத்பர்யம் என்ன?

 

துணிந்தவர்களுக்கே உலகம் கிடைக்கும். நின்று நிதானித்து அசைபோட நினைப்பவனை காலம், வெள்ளத்தில் அடித்துச் செல்வது போல அடித்துச் சென்றுவிடும். ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த வீர சிவாஜி, தென்னகத்தில் முஸ்லீம்களை வேரறுத்த விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் இத்தகைய வீரர்கள்.

 

பழந்தமிழகத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் மாவீரர்களாகத் திகழ்ந்தனர். இதனால் சுமார் 1500 ஆண்டுகளுக்கு தமிழர்கள் ஆட்சி நடந்தது. இது ஒரு சாதனையே! அவர்கள் 1500 ஆண்டுகளுக்குத் தங்களுக்குள் போரிட்டு அழிந்ததும் ஒரு சாதனையே. அதாவது ரிக்கர்ட் புஸ்தகத்தில் (BOOK OF RECORDS)  இடம் பெறும் சாதனை. தமிழ் அரசர்கள் போல நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர் உலகில் எவருமிலர்; உட் சண்டை போட்டவர்களும் எவருமிலர். இதற்குக் காரணம் வீரம்.

KITTOOR RANI CHANNAMMA

 

‘துணிந்தவனுக்கு தூக்குமேடை பஞ்சு மெத்தை’ என்று எண்ணியதால்தான் வீர் பாண்டிய கட்ட பொம்மன், மருது சஹோதர்ரகள், சுக தேவ், ராஜகுரு, பகத் சிங், தாந்தியா தோபே முதலிய வீர ர்களைக் கண்டது இந்நாடு.

பெண்களும் வாள் எடுத்து போரிட்டதற்கும் இதுவே காரணம்.

ஜான்ஸி ராணி, துர்கா தேவி, ருத்ராம்பாள், ராணி மங்கம்மாள், கங்காதேவி, சம்யுக்தை எனப் பல வீராங்கனைகளைக் காண்கிறோம்.

 

‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’ – என்பதை அறிந்து போரிட்டவர்களுக்கே வெற்றி கிட்டியது. அப்படி வெற்றி கிட்டாவிட்டாலும் காலத்தால் அழியாத புகழ் கிடைத்தது. அத்தனை வீர ர்களையும் பட்டியலிடுவது கட்டுரையின் நோக்கம் அன்று. கல்ஹணனின் கருத்து இமயம் முதல் குமரி வரை — குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தில் இருப்பதைக் காட்டவே எழுந்தது இக்கட்டுரை.

 

Death devours lambs as well as sheep

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

RANI LAXMIBHAI

‘க்லைப்யம் மா ஸ்ம கமஹ’ (2-3) (கோழைத்தனத்தை விட்டு எறி) என்று பகவத் கீதையில் கண்ணன் சொல்லும் ஸ்லோகம், ஸ்வாமி விவேகாநந்தருக்கு மிகவும் பிடித்த ஸ்லோகம். வீரனுக்கு உதவாத ஆண்மையின்மை உனக்கு எங்கிருந்து வந்தது? என்று அர்ஜுனனைத் தட்டி எழுப்புகிறான் கிருஷ்ணன். ‘உத்திஷ்ட’ (எழுந்திரு) என்று கட்டளையிடுகிறான்.

 

திரு வள்ளுவன் சொல்கிறான்:

 

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை

நாகம் உயிர்ப்பக்கெடும் (குறள் 763)

பொருள்:

பகைவரின் படை ஒரு எலிக்கூட்டம்;  அது எவ்வளவு சப்தம் போட்டு என்ன பயன்? பாம்பு மூச்சுவிட்டாலேயே அவை ஓடிவிடும் (763)

 

கூற்றுடன் மேல்வரினும் கூடிஎதிர் நிற்கும்

ஆற்ற லதுவே படை (765)

 

எமதர்மனே எதிர்த்து வந்தாலும் அஞ்சாமல் நிற்பதுவே படை எனப்படும்

 

கான முயல் எய்த அம்பினில் யானை

பிழைத்த வேல் ஏந்தல் இனிது (772)

 

முயல் மீது வேலை எறிந்து வெற்றி பெறுவதைவிட யானை மீது வேல் எறிந்து தோற்பது மேல். (வாழ்க்கையில் பெரிய குறிக்கோள் இருக்க வேண்டும்; பெரிய வீரனையும் விழுத்தாட்ட முயற்சிக்க வேண்டும்; சின்ன ஆளை அடித்து விட்டு மார் தட்டுதல் வீரம் அன்று.)

 

ஆக, கல்ஹணன் சொன்னதை வள்ளுவனும் அழகாகச் சொல்கிறான். அவனுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னான்.

 

புற நானூற்றில் உள்ள வீரத் தாய் முதலிய எழுச்சி மிகு பாடல்களை வீரத்தாய் பற்றிய என் கட்டுரையில் காண்க.

 

வீரத் தாயும் வீர மாதாவும் | Swami’s Indology Blog

https://swamiindology.blogspot.com/2012/09/blog-post_23.html

இந்தியா ஒரே நாடு! இந்திய சிந்தனை ஒரே சிந்தனை! “செப்பு மொழி …

 

September | 2012 | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/09

All posts for the month September, 2012. … வீரத் தாயும் வீர மாதாவும் . … வீரத் தாய், வீர …

 

மேவார் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மேவார்

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) ராஜஸ்தானில், … அவள் ஒரு வீரத்தாய்!

 

–சுபம்–

குறள் கதை-காலகாசார்யா தங்கை கடத்தல்! (Post No.5010)

குறள் கதை-காலகாசார்யா தங்கை கடத்தல்! (Post No.5010)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 14 May 2018

 

Time uploaded in London – 11-14 am (British Summer Time)

 

Post No. 5010

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலு ளெல்லாம்  தலை (குறள் 891)

பொருள்

தாம் எடுத்த காரியத்தை எண்ணியவாறே முடிக்க வல்லாரை இகழாமல் இருப்பது, தம்மைக் காத்துக் கொள்ளும் செயல்களில் மிகவும் முக்கியமானதாகும்.

 

 

விக்ரமாதித்தன் தொடர்பாக சமண மத நூல்களில் ஒரு கதை உண்டு. அவனைப் பற்றிய பல கதைகளில் ஒன்று இது. ஆனால் எல்லாக் கதைகளும் காலப்போக்கில் ஒரே விக்ரமாதித்தன்  தலையில் கட்டிவிடப்பட்டது. விக்ரமாதித்தின் என்றால் ‘வீரத்தில் சூரியன்’ என்று பொருள். வீரத்தில் சூரியனைப் போல ஒளி உள்ளவன், தஹிப்பவன், புகழ் பெற்றவன் என்று பல பொருள் உள்ளதால் ஆதித்தன் (சூரியன்) என்ற பெயர் பல மன்னர்களின் பெயரில்  — சோழ மன்னர்கள் – உள்பட சேர்க்கப்படும்.

 

வேதாளமும் விக்ரமாத்தித்தனும் என்ற கதையில் வரும் மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன். அவனைப் பற்றிய ஒரு சுவையான கதை இதோ:

 

உஜ்ஜைனியை தலைநகராகக் கொண்டு கர்த்தபில்லா என்ற மன்னன் ஆண்டு வந்தான். அப்பொழுது உஜ்ஜையினி நகரில் இருந்த மடத்தில் காலகாசார்யா என்ற சமண மதத் துறவி தலைவராக இருந்தார். அவருக்கு ஸரஸ்வதி என்ற பெயருள்ள அழகான ஸஹோதரி இருந்தாள். அவளை மடத்திலிருந்து மன்னன் கர்த்தபில்லா கடத்திச்  சென்றான். உடனே காலகாசார்யாவுக்கு கோபம் வந்தது.

 

பொதுவாக சமணர்கள் வன்முறையில் இறங்கமாட்டார்கள். ஆகவே அவர் முறையாக மன்னனைச் சந்தித்து சகோதரியை விட்டுவிடும் படி இறைஞ்சினார். ஆனால் மன்னனோ, ராவணன், சீதையை விடுதலை செய்வதற்கு மறுத்தது போலவே ஸரஸ்வதியை விடுதலை செய்யவும் மறுத்தான். அத்தோடு காலகாசார்யாவை இகழ்ந்தான். அவமானப்படுத்தினான்.

 

 

காலகாசார்யா, அருகிலுள்ள சக மன்னன் ஒருவனை அணுகி உதவி கேட்டார். அவனிடமோ குறைவான படைகளே இருந்தன. காலகாசார்யா சொன்னார்: நானே பயிற்சி கொடுத்து, நானே தளபதி பதவி ஏற்று படை நடத்துவேன் என்று. அவ்வாறே செய்தார். கர்த்தபில்லாவை வென்று ஸஹோதரியை மீட்டார். அந்த மன்னனையும் மன்னித்தார். மன்னன் காட்டில் சென்று வசித்தான்.  அவனை ஒரு புலி அடித்துக் கொன்றுவிட்டது. அவனது மகனே விக்ரமாதித்யன். அவன் பெரியவன் ஆனவுடன், பக்கத்து தேசத்தில் படை திரட்டி உஜ்ஜைனி மீது படை எடுத்தான். அவன் வெற்றி பெற்ற வருடத்தில் இருந்து விக்ரம சகாப்தம் என்ற புது ஆண்டுத் தொடக்கம் ஏற்பட்டது.

 

இந்தக் கதைகள் எல்லாம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுதப் பட்டன. இது தொடர்பான குட்டி ஓவியங்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வரையப்பட்டன. ஆக, எது உண்மை, எவ்வளவு தூரம் உண்மை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.

 

பெரியாரைப் பகைத்தால் ஆட்சிகள் முறியும் என்பது கர்த்தபில்லாவின் கதையில் தெரிகிறது.

காலகாசார்யா கதையைக் கூறும் ஓவியங்கள் பல மியூசியங்களில் உள்ளன. அமெரிக்காவில் ப்ரூக்ளின் மியூசியத்திலும் பல குட்டி ஓவியங்கள் இருக்கின்றன.

 

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து

வேந்தனும் வேந்து கெடும் (899)

 

உயர்ந்த கொளகைகளை உடைய பெரியார்கள் கோபம் அடைந்தால், பெரிய வேந்தர்களும் ஆட்சியை இழந்து கெட்டுப்போவர்.

 

–சுபம்–

 

டாக்டர் நாகசாமியின் திருக்குறள் நூல் தரும் புதிய செய்திகள் (Post No.4940)

டாக்டர் நாகசாமியின் திருக்குறள் நூல் தரும் புதிய செய்திகள் (Post No.4940)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 22 April 2018

 

Time uploaded in London –  20-54 (British Summer Time)

 

Post No. 4940

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

டாக்டர் இரா நாகசாமியை அறியாதோர் தமிழகத்தில் இருக்க முடியாது. தொல்பொருட் துறை இயக்குநராக நீண்ட காலம் பணியாற்றியவர். காஞ்சிப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். தமிழ் வரலாறு, தமிழக தொல்லியல் துறையில் கரை கண்டவர். உலகம் முழுதும் சென்று தமிழ்க் கலாசாரம் பற்றி விரிவுரை ஆற்றியவர்; 50-க்கும் மேலான நூல்களின் ஆசிரியர். அவர் திருக்குறள் பற்றி எழுதிய நூல் நிறைய புதிய செய்திகளைத் தருகிறது. சில பழங்கதைகளை உடைத்தெரிகிறது.

 

அண்மையில் இவருக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது கொடுத்து கௌரவித்தது. இதுவே தாமதமாக கொடுக்கப்பட்ட பரிசு என்பது என் கருத்து. அந்தக் காலத்தில் புதை பொருள் இலாகா என்று பத்திரிக்கைகள் எழுதிய புதைந்து போன இலாகாவை பெருமை மிகு தொல்பொருட் துறையாக மாற்றி கொடிகட்டிப் பறக்க வைத்தவர் இவர்.

 

டாக்டர் நாகசாமியின் திருக்குறள் நூல் ஒரு ஆங்கில நூல். சுமார் 250 பக்கங்களில் அரிய விஷயங்கள் இருந்தும் விலை 150 ரூபாய்தான். நிற்க. புஸ்தகத்துக்குள் நுழைவோம்.

 

திருவள்ளுவர் தங்கக் காசு உண்மையா?

 

கல்கத்தாவில் ஒரு தங்கக் காசு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் முன்புறம் முனிவர் போன்ற உருவமும் பின்புறம் ஐந்து முனை நட்சத்திரமும் உளது. இதை ஐராவதம் மஹாதேவன் ,திருவள்ளுவர் காசு என்று எழுதி அதை தமிழ் அறிஞர் எல்லீஸ் வெளியிட்டிருக்க வெண்டும் என்று கதை கட்டினார். ஆனால் இதற்கும் எல்லீஸ் துரைக்கும் தொடர்புள்ள சான்றும் இல்லை. மேலும் இது திருவள்ளுவரும் இல்லை என்று டாக்டர் நாகசாமி பிட்டுப் பிட்டு வைக்கிறார். இதில் எல்லீஸ் பெயரை சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இழுத்தனர். இது புத்தரின் காசு. அதில் பூமி ஸ்பர்ஸ முத்ரை உளது என்கிறார் டாக்டர் நாகசாமி.

 

 

இந்துகளின் நான்கு வாழ்க்கை மூல்யங்கள் தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்பதாகும். இதே வரிசையில் திருவள்ளுவர் அறம் பொருள் இன்பம் என்று முப்பால் நூலை வகுத்து அறத்துப் பாலில் மோக்ஷம் என்பபடும் வீடு பேற்றையும் வைத்துளார்.

 

டாக்டர் நாகசாமி திருவள்ளுவரின் முப்பாலும் (அறம் பொருள் இன்பம்) ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள தர்ம சாஸ்திரம், அர்த்தசாஸ்திரம் காம சாஸ்திரம் நாட்ய சாஸ்திரம் ஆகியவற்றில் இருந்து ஏராளமான விஷயங்களை எடுத்திருப்பதை ஆதரங்களுடன் காட்டியுள்ளார். இதற்குமுன்னர் டாகடர் வி ஆர் ராமசந்திர தீக்ஷிதர் என்ற பேரறிஞர் இதே போல பல ஒப்பீடுகளைச் செய்தபோதிலும் டாக்டர் நாகசாமி கூடுதல் விஷயங்க ளைத் தருகிறார். தம்மபதம் என்னும் புத்தமத நூல், பகவத் கீதை ஆகியனவும் ஒப்பிடப்படுகின்றன.

 

ஜி.யு. போப் செய்த விஷமங்கள்

 

ரெவரண்ட் ஜி யூ போப் செய்த விஷமங்களை எடுத்துக் காட்டி அவர் முகத்திரையை கிழி கிழி என்று கிழித்துவிட்டார் டாக்டர் நாகசாமி.

1.புறநானூற்றின் பாடல்களில் 72 பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போப், கபிலர் என்னும் புலன் அழுக்கற்ற அந்தணாளனை, பிராஹ்மணனை— பறையன் என்று கூறியுள்ளார். கபிலர் தன்னை அந்தணன் என்று பறைசாற்றிய புற நானூற்றுப் பாடலை மறை த்துவிட்டார்.

  1. வள்ளுவர் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று தத்துப் பித்து என்று உளறியும் உள்ளார் ஜி யு போப்.

3.வள்ளுவர் மீது கிறிஸ்தவ மத தாக்கம் இருந்ததாகவும் இந்துக்கள் வரை வெறுத்ததாகவும் ஜி யூ போப் எழுதிய புளுகு மூட்டைகளை டாக்டர் நாகசாமி சொல்லால் எரித்துவிட்டார்.

விஷமக்கார ஜீ யூ போப்- புக்கு ஒரு ஆப்பு!

 

திருவள்ளுவர் சமணரா?

திருவள்ளுவர் சமணரா, திருக்குறள் சமண காவியமா என்ற விவாதத்துக்கே பொருள் இல்லை. ஏனெனில் இடை சமண நூல் என்று சொல்ல எந்தச் சான்றும் இல்லை என்கிறார். மேலும் திருவள்ளுவரின் சமயப் பிரிவு என்ன என்பதைத் தெரிவிக்கும் எந்த சான்றையும் அவர் அளிக்க விரும்பவில்லை என்றே தோன்றுகிறது என்கிறார்.

திருவள்ளுவரின் காலம்

டாக்டர் நாகசாமியின் புஸ்தகத்தைப் படித்தால் முந்தையவர் கூறிய வாதங்களை எல்லாம் தெரிந்து கொள்ளலாம். அவைகளை எல்லாம் சுருங்கக் கூறி பின்னர் தன் வாதத்தை முன்வைக்கிறார். திருவள்ளுவர் இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தும் முந்தையவர் என்று முடிவு செய்துள்ளார். இதற்கு சங்க நூல் சான்றுகளையும் சூத்ரம் பாணியில் வள்ளுவர் குறள் அமைந்திருப்பதும் அதன் பழமைக்கு சான்று பகரும் என்கிறார்.

 

காலனியாதிக்கப்  பேர்வழிகள் வள்ளுவரை கிறிஸ்தவராகவோ அல்லது கிறிஸ்தவர்களின் நண்பராகவோ காட்ட முயன்றதை எல்லாம் எடுத்துரைத்து அவைகளுக்கு ஆதாரமே இல்லை என்கிறார். ரெவரண்ட் லஸாரஸ் , எல்லீஸ் போன்றோரிம் அரும்பணிகளையும் மொழிந்துள்ளார்.

 

டக்டர் நாகசாமி ஆங்கிலம், தமிழ், ஸம்ஸ்க்ருதம் ஆகிய மூன்று மொழிகளில் வித்தகர். இப்படிப்பட்ட மும்மொழி அறிஞர்கள் தமிழகத்தில் மிகமிகக் குறைவு.

 

அவரே புஸ்தகத்தை முடிக்கும் முன் ‘புல்லட் பாயிண்டு’களில் ஒரு சுருக்கத்தைக் கொடுக்கிறார். அதில் அவர் சொல்லுவதாவது: ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள சாஸ்திரங்களை அறியாதோர் திருக்குறளை நன்கு விளங்கிக் கொள்ள முடியாது என்று சொல்கிறார்.

 

உ,வே.சா.வின் நாடக வழக்கு, மு.வ.வின் கருத்துக்கள் பற்றி                     யும் அலசி ஆராய்கிறார் டாக்டர்.

 

ஸம்ஸ்க்ருத குறிப்புகளை  ஸம்ஸ்க்ருதத்திலேயே மொழிபெயர்ப்புடன் கொடுத்திருப்பது எல்லோருக்கும், குறிப்பாக தமிழ் பேசாத வட இந்தியர்களுக்கு ஆசிரியர் எதை ஒப்பிடுகிறார் என்று அறிய உதவும்.

 

இவ்வளவு பெரிய ஆராய்ச்சி விஷயங்கள் அடங்கிய நூலுக்கு இவ்வளவு குறைவான விலை நிர்ணயித்தது தமிழர்களுக்கும் வட இந்தியர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமே.

 

ஜி.யூ.போப், லஸாரஸ், எல்லீஸ் போன்றோர் பற்றி இவ்வளவு விரிவாக எங்கும் காணமுடியாது. Drew ற்றூ என்னும் ஆங்கிலேயர் திருக்குறளின் காமத்துப் பாலை மொழிபெயர்க்கவே முடியாது அவ்வளவு ஆபாசமானது. இதை மொழிபெயர்த்தால் வள்ளுவரின் பேர் ‘ரிப்பேர்’ ஆகிவிடும், மானம் விமானத்தில் பறந்து விடும், கதி ‘சகதி’ ஆகிவிடும் என்று கருதியதையும் டாக்டர் நாகசாமி சுட்டிக்காட்டியுள்ளார். ஆரம்பகால வெள்ளையர்கள், தமிழ் இலக்கிய அகத்துறைப் பாடல்களை ஆபாச இலக்கியம் என்று கருதியதைப் பார்க்கும்போது நமக்கு சிரிப்புதான் வரும்.

திருக்குறளைப் போன்ற ஒரு ரத்தினம் தமிழ் இலக்கிய உலகில் இல்லை என்று அடித்துக் கூறி வான்புகழ் வள்ளுவனின் புகழை மேலும் பரப்புகிறார் டக்டர் நாகசாமி .

 

அனைவரும் வாங்கிப் படித்து பாதுக்காக வேண்டிய நூல். தள்ளாத வயதிலும்  தமிழ் பரப்பும் டாக்டர் நாகசாமி , தமிழ் தாத்தா உ.வே.சா.வை நினைவு படுத்துகிறார் என்றால் மிகையாகாது.

வாழ்க வள்ளுவர்!! வளர்க டாக்டர் நாகசாமி . புகழ்.

 

Details of the Publication:

Tirukkural- An Abridgement of Sastras

Dr R Nagaswamy

December 2017

Pages 248, Price Rs.150

Published by Tamil Arts Academy and Giri Trading Agency Private Limited

Contact: www.giri.in

sales@giri.in

-சுபம்-

பணம், பணம், பணம்– ரிக் வேதமும் தமிழ் வேதமும் புகழ்மாலை (Post No.4923)

பணம், பணம், பணம்– ரிக் வேதமும் தமிழ் வேதமும் புகழ்மாலை (Post No.4923)


WRITTEN by London Swaminathan 

 

Date: 17 April 2018

 

Time uploaded in London –  13-53 (British Summer Time)

 

Post No. 4923

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

‘பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்’ – என்பது தமிழ்ப் பழமொழி. ரிக் வேதமும், தமிழ் வேதமாகிய திருக்குறளும் பணத்தைப் போற்றுகின்றன. தமிழ் வேதம் என்று திருவள்ளுவமாலை போற்றும் திருக்குறளை விடப் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையுடைத்து ரிக் வேதம் . ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபி சுமார் 6000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று வானியல் குறிப்புகளை வைத்து மொழிந்தார். அவர் உரைத்ததை இன்று வரை தகர்த்தார் எவருமிலர். நிற்க

 

பணம் ஜிந்தாபாத்! பணம் வாழ்க! ஏன்? ஏன்?

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகியாங்கு (குறள் 247)

 

பொருள்

பணம் இல்லாதவர்களுக்கு இந்த உலகத்தில் நல்ல வாழ்வு இல்லை; அது போல அருள் (கருணை) இல்லாதவர்களுக்கு சுவர்க்கத்தில் இடம் இல்லை.

 

தொல்காப்பியரும் திருவள்ளுவரும் அதி தீவிர இந்துக்கள். ஆர். எஸ். எஸ்.காரர்கள் தோற்றுப்போவார்கள்!!

 

ஸம்ஸ்க்ருதத்தில் சொன்ன தர்ம, அர்த்த , காம என்ற வரிசையில் தீவிர இந்துத்வவாதியான திருவள்ளுவர் திருக்குறளை அமைத்தார். த்ருண தூமாக்கினி என்னும் தொல்காப்பிய ரிஷியோ இதைப் பல இடங்களில் அதே வரிசையில் செப்பிச் சென்றார்.

 

ஆக பொருள் (பணம்) என்பதன் முக்கியத்துவத்தைத் தொல்காப்பிய ரிஷியும் வள்ளுவ முனியும் வலியுறுத்துவர்.

 

இன்னொரு குறளில் வள்ளுவன் விளம்புவது யாதெனின்,

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்

அற்றார் மற்று ஆதல் அரிது (248)

 

உலகில் பணம் இல்லாதவர்களுக்கு திடீரென லாட்டரிப் பரிசு அடிக்க வாய்ப்பு உண்டு; ஆனால் கருணை இல்லாதவர்களுக்குப் பாவம் சேர்வதால் மீண்டும் வளம்பெறுவது கடினமே.

 

இவ்வாறு பல இடங்களில் வள்ளுவன் நுவல்வதோடு, வாணிகம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை  அப்படியே வள்ளுவத்தில் கையாளுவதால் அவர் நல்ல பிஸினஸ்வாதி என்றும் தெளிவு பெறலாம்.

 

சாணக்கிய நீதியில் சாணக்கியன் பகர்வான்-

 

கெட்ட வழியில் சம்பாதித்த பணம் பத்து ஆண்டுகளுக்கு இருக்கும். பதினோராவது ஆண்டு துவங்கும் போது அடியோடு, வேரோடு பிடுங்கிக் கொண்டு போய்விடும்.

 

செல்வம்  என்பது சக்கரம் போல. அது மாறி மாறி வரும் என்று ரிக் வேதம் புகலும். அதை மேற்கூறிய (248) குறளில் கண்டோம்.

15-6

அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி

ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி

 

 

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659

 

பிற மக்களை அழ, அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே ஏற்படும்.

இனி ரிக் வேதத்துக்குள் நுழைவோம்:-

 

எங்களுக்குச் செல்வத்தைக் கொடு; அதன் மூலம் தாக்கும் சக்தியையும் கொடு- என்று வேத மந்திரம் சொல்கிறது (ரிக் வேதம் 3-46)

 

பணம் இருந்தால்தான் எதிரிகளைத் தாக்கும் சக்தியும்  கிடைக்கும்.

 

ஆயினும் பணம் என்பது மோட்ச சாம்ராஜ்யத்துக்கு வழி இல்லை என்பதை பிருஹத் ஆரண்யக (பெருங்காட்டு உபநிஷதம்) உபநிஷத் தெளிவுபடுத்தும்:-

‘செல்வம் மூலம் முக்தி பெற முடியாது’- நாலாவது அத்யாயம், ஐந்தாவது பிராஹ்மணம், பிரு. உபநிஷத்.

 

xxx

 

கவச ஐலூஷன் என்ற ரிஷி பாடுகிறார் (10-31-2)

மனிதர்கள் செல்வம் பற்றி சிந்திக்கட்டும்

சட்டபூர்வ வழிகளிலும் வழிபாட்டின் மூலமும் வெல்லட்டும்

நன்கு சிந்தித்து விவேகத்துடன் செயல்படட்டும்

சுய சிந்தனையால் திறமையுடன் செயல்படட்டும்.

 

க்ருத்ஸமடர் என்ற ரிஷியும் செல்வம் பற்றிப் பாடுகிறார் (2-21-6)

 

இந்திரா! எங்களுக்கு நல்ல புதையல்கள் கிடைக்கட்டும்

திறமையான சிந்தனையையும் பிரகாசமான புத்தியையும் கொடு

செல்வம் அதிகரிக்கட்டும், உடல் ஆரோக்கியம் பெருகட்டும்

இனிமையான பேச்சு அமையட்டும், நாட்கள் நல்லதாக இருக்கட்டும்.

 

ஆக செல்வத்திதை வேண்டுவது, உலகின் பழமையான புஸ்தகத்தில் இருப்பது குறிப்பிடத் தக்கது. உலகில் இந்துக்கள் மட்டுமே இப்படி அறம்- பொருள்- இன்பம்- வீடு (மோக்ஷம்) என்று வாழ்க்க்கைக்கு நான்கு தூண்கள் நிறுவியவர்கள். வேறு எந்த ஒரு மதத்திலும் இவ்வாறான தெளிவான வரையறை இல்லை!

 

MY OLD ARTICLES ON THE SAME THEME

பண மோசடி பற்றி வள்ளுவன், சாணக்கியன் …

https://tamilandvedas.com/…/பண-மோசடி-பற்றி-வள…

Translate this page

1 Mar 2018 – அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659. பிற மக்களை அழ,அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே …

பாவங்கள் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பாவங்கள்/

Translate this page

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயன் நற்பாலவை (659). பிறரை அழவைத்து பிடுங்கிய பணம்எல்லாம், உன்னை அழ அழச் செய்துவிட்டு ஓடிப்போகும். உனக்கு பொருளே நஷ்டமானாலும், புண்ணியம் செய்தால் அது பிற்காலத்தில் பலன் தரும். இடுக்கட் படினும் இளிவந்த …

அஜீரணம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/அஜீரணம்/

Translate this page

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயன் நற்பாலவை (659). பிறரை அழவைத்து பிடுங்கிய பணம்எல்லாம், உன்னை அழ அழச் செய்துவிட்டு ஓடிப்போகும். உனக்கு பொருளே நஷ்டமானாலும், புண்ணியம் செய்தால் அது பிற்காலத்தில் பலன் தரும். இடுக்கட் படினும் இளிவந்த …

குறள் உவமை | Tamil and Vedas

https://tamilandvedas.com/category/குறள்-உவமை/

Translate this page

அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி. ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி.அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும். பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659. பிற மக்களை அழ,அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் …

 

–subham–

 

 

சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டணை! சாணக்கியன் (Post No.4913)

சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டணை! சாணக்கியன் (Post No.4913)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 14 April 2018

 

Time uploaded in London –  14-18 (British Summer Time)

 

Post No. 4913

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கௌடில்யன் எனப்படும் சாணக்கியன் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய, உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்தசாஸ்திரத்தில், தண்டனை பற்றி பல சுவையான விஷயங்கள் உள்ளன.

 

கடுமையான தண்டனை கொடுத்தால் மக்கள் வெறுக்கிறார்கள்;

குறைவான தண்டனை கொடுத்தால் மக்கள்  நிந்திப்பார்கள்;

தவற்றுக்கு ஏற்ற தண்டனை கொடுத்தால் மக்கள் மதிப்பார்கள் (அர்த்தசாஸ்திரம் 1-4

 

யார் ஒருவன் அதிகமாகக் குடிக்கிறானோ சூதாடுகிறானோ, வேட்டை ஆடுகிறானோ அவர்களை, சட்டம் சந்தேகத்துடன் பார்க்கும் – (4-6)

 

பெண்கள் விஷயத்திலோ அல்லது வேறு எதிலோ அதிக ஈடுபாடு கொண்டிருப்பது குற்றம் – (8-1)

 

ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்துக்குப் பின்னர் கூடி வாழ வேண்டும். மாத விலக்குக்குப் பின்னர் மனைவியுடன் படுக்க மறுக்கும் கணவன் குற்றம் இழைத்தவன் ஆவான் (1-3; 3-2)

மஹா பாரதமும் இந்தக் கருத்தைச் சொல்கிறது.

ஒரு ஆண்மகன் இஷ்டப்பட்டால் வீட்டை விட்டு ஓடிப் போய் சந்யாசி ஆகிவிட முடியாது. அவன் தனது மனைவியும், மகனும் வாழ வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்த பின்னரே சந்யாசம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதானவ ஒருவர் காவி ஆடை போட்டுக்கொள்ள விரும்பினாலும் அரசாங்க அதிகாரிகளுக்குச் சொல்லாமல் செய்வது தண்டணைக்கு உரிய குற்றம் ஆகும் – (2-1)

 

ஒரு அரசன் கூட எதிலும் நிதானம் காட்ட வேண்டும் என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கொள்கை. அரசன் சுக போக விஷயங்களில் ஈடுபட்டால் அறமும் இல்லை, பொருளும் இல்லை என்று ஆகிவிடும் (பொருள்= செல்வம்; அறம்= தர்மம்) – மநு 7-46

 

தொல்காப்பியமும் திருக்குறளும் அறம், பொருள், இன்பம் ( தர்ம, அர்த்த, காம) என்ற சொற்களைப் பல இடங்களில் வலியுறுத்துகிறது. இதையே கௌடில்யன் எனப்படும் சாணக்கியன் அவ்விரு நூல்களுக்கும் முன்னரே சொல்லிவிட்டான்.

இன்பம் இல்லாமல் வாழாதீர்கள் (ந நிஸ்ஸுகஸ்யாத்- 1-7) என்று கௌடில்யன் கூறுவான். உள்ளத்தில் ஆசைத் தீ எரியட்டும். ஆனால் அறத்துக்கும் பொருளுக்கும் ஊறு விளைவிக்காத வகை யில் காமம் (ஆசை) இருக்க வேண்டும் என்பான் (1-7).

 

சாணக்கியன் சொல்லும் பல விஷயங்கள் மஹா பாரத சாந்தி பர்வத்திலும் உள்ளது. இது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததால் தமிழர்களும் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் அறம், பொருள் இன்பமென்பதை அதே வரிசையில் அப்படியே (தர்ம, அர்த்த, காம) விளம்பினர்.

 

திருக்குறளின் பெயர்களில் ஒன்று முப்பால் (அறம், பொருள், இன்பம்).

இந்த மூன்று விஷயங்களை (த்ரிவர்க) என்று இயம்புவர்.

வாத்ஸ்யாயனர் எழுதிய காம சூத்ரமும் இது பற்றிக் கூறும்:-

 

ஒரு மனிதனுடைய வாழ்வு 100 ஆண்டுகள். இதை அவர்கள் முறையாகப் பிரித்து, ஒன்றுக்கு ஒன்று மோதாமல், அனுசரணையாக இருக்கும்படி அமைத்துக்  கொள்ள வேண்டும். மாணவப் பருவத்தில் கல்வியும், பொருள் ஈட்டும் வழிகளும் நோக்கம் ஆக இருக்க வேண்டும்.

வாலிபப் பருவத்தில் காம சுகங்களை நாட வேண்டும்; முதுமையில் மோட்சத்துக்கான வழிகளில் மனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து, தக்க விதத்தில் இக்குறிக்கோள்கள்களைப் பின்பற்ற வேண்டும்.

 

திருக்குறளுக்கு முப்பால் என்று பெயரிட்டது ஏன்?

த்ரிவர்கங்களில் (அறம், பொருள் இன்பம்) மூன்றையும் அல்லது இரண்டையாவது அடையும்   செயல்களைச் செய்ய வேண்டும்.  ஆனால் மூன்றில் எந்த ஒன்றும்  அடுத்த இரண்டு குறிக்கோள்களைப் பாதிக்கக்கூடாது.(காமசூத்திரம் 1-2-51)

இவற்றைக் காணும் போது திருக்குறளுக்கு முப்பால் என்று பெயர் வந்தது ஏன்? திருவள்ளுவர் ஏன் தன் நூலை முப்பால்களாகத் தொகுத்தார் என்பது நன்கு விளங்கும்.

 

கிரேக்க அறிஞர் அரிஸ்டாடிலும் கூட கிட்டத்தட்ட இந்தக் கருத்துகளை எதிரொலிக்கிறார்.

 

எந்த ஒரு விஷயத்திலும் மிக அதிக ஈடுபாடோ மிகக் குறைவான ஈடுபாடோ அழிவை ஏற்படுத்தும். உடற்பயிற்சியில் இப்படி ஏற்ற தாழ்வு இருந்தால் பலம் பாதிக்கப்படும்; மதுவிலோ, மாமிச உணவிலோ இப்படி ஏற்ற தாழ்வு இருந்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தைரியம், கோபம் முதலிய குணங்களில் ஏற்ற தாழ்வு இப்படி இருந்தால் அழிவை உண்டாக்கும்; நடுநிலை வகிப்பதே சாலச் சிறந்தது (ETHICS , ARISTOTLE எதிக்ஸ் 2-2)

 

மநுவும் மனு நீதி நூலில் இதையே உரைக்கிறார்:

மன்னன் என்பவன் தர்ம அர்த்த காம விஷயங்களைக் கற்றவன் ஆக இருத்தல் அவசியம்; தன் ஆட்சி அதிகாரத்தில் இம்மூன்றிலும் படிப்படியாக முன்னேற்றம் காண வேண்டும் (தர்ம காமார்த்தகோவிதம்; த்ரைவர்கேனாபிவர்ததே- மநு 7-26/27)

 

அர்த்தசாஸ்திரம் இதை இன்னும் தெளிவாகச் செப்பும்:

 

அறம், பொருள் இன்பம் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றை அளவுக்கு அதிகமாகப் பின்பற்றினால் பின்பற்றப்பட்ட ஒரு விஷயம் பாதிப்பதோடு மற்ற இரண்டையும் கெடுத்துவிடும் (1-7)

 

2000 அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இதையெல்லாம் சிந்தித்துஎழுதி இருப்பது சிறப்புக்குரியது.

xxxx

 

தொல்காப்பியத்தில் அறம் பொருள் இன்பம்

தொல்காப்பியத்தில் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

Translate this page

… (மோட்சம்)= அறம்பொருள்இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு நூல்களில் பெருகுவதைக் காணலாம். புறம் 28, 31 பாடல்களில் காணப்படும் இந்த இந்து மதக்கருத்துக்கள் தொல். இல் 1363, 1038 சூத்திரங்களிலும் காணக்கிடக்கிறது. 9.

அறம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/அறம்/

Translate this page

”தர்ம, அர்த்த, காம” என்ற வட மொழிச் சொற்றொடர் ”அறம்,பொருள்இன்பம்” என்று தமிழில் அதே வரிசையில் வருகிறது. இவை வாழ்க்கை மூல்யங்கள்- இந்தியர்களின் ஆதார சுருதி- பாரதீய வாழ்வின் அஸ்திவாரக் கற்கள்.–இதை மஹாபாரதத்திலும் காணலாம். தொல்காப்பியம்(சூத்திரம்1037, 1363) …

தொல்காப்பியத்தில் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

Translate this page

தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!! … ஆரிய திராவிட வாதம் பேசும் அரை வேக்காடுகளுக்கு சூத்திரம் சூத்திரமாகத் தொல்காப்பியர் அடிமேல் அடி கொடுக்கிறார். … வாழ்க்கையின் லட்சியங்களை அறம்பொருள் இன்பம், வீடு (தர்மார்த்த காமமோக்ஷ) என்று பிரிப்பது.

 

Bhagavad Gita in Tamil | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/bhagavad-gita-in-tamil/

Translate this page

“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும். அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல” (புறம் 31, கோவுர் கிழார்). மேலும் சில :தொல்காப்பியம் 1038,,கலி.141,திருவள்ளுவ மாலையில் 5 இடங்கள். உ.வே.சாமிநாத அய்யர் புறநானூறு பாடல் முறை வைப்பு அறம்,பொருள்,இன்பம் என்ற தலைப்பில் …

You’ve visited this page 2 times. Last visit: 03/02/17

 

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு | Tamil …

https://tamilandvedas.com/…/பகுதி4-தொல்காப்பி…

Translate this page

13 Sep 2012 – ஒரு இலக்கண நூலில் இவ்வளவு இடங்களில் தெய்வம் பற்றிப் பேசியதையும் நோக்கவேண்டும் (கடவுள் பற்றி பொருள். 5, 88, 18, 57, 93, 115 சூத்திரங்களிலும் அறம் பொருள் இன்பம் பற்றி பொருள் 92, 418 சூத்திரங்களிலும் வருகிறது). தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்போடுவதால் …

தொல்காப்பியம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/தொல்காப்பியம்/

Translate this page

தொல்காப்பியர் பெண்களுக்கு வேண்டிய குணநலன்கள் பற்றிச் சொல்லுவதையும் கூட இன்று பெண்கள் ஏற்பார்களா என்பது ஐயப்பாடே!சந்தேகமே! ….. தர்ம, அர்த்த, காம, (மோட்சம்)= அறம்பொருள்இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு …

You’ve visited this page 3 times. Last visit: 16/12/16

கண்ணனின் பக்தி அறம், பொருள், இன்பம் …

https://tamilandvedas.com/…/கண்ணனின்-பக்தி-அற…

Translate this page

1 Feb 2014 – … சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் …

–சுபம்–

இரண்டு கதைகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! (Post No.4891)

இரண்டு கதைகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! (Post No.4891)

 


Written by London Swaminathan 

 

Date: 7 April 2018

 

Time uploaded in London –  9-42 am (British Summer Time)

 

Post No. 4891

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

உயிர்கள் அனைத்தும் ஒன்றே; அவைகளில் வேற்றுமை இல்லை; அவரவர் செய்யக்கூடிய கர்ம வினைகளால் அவவர் நிலை மேம்படுகிறது அல்லது தாழ்வுறுகிறது என்று பகவத் கீதையிலும் புற நானூற்றிலும் (யாதும் ஊரே யாவரும் கேளிர்- புறம் 192). ஹிதோபதேசத்திலும் தமிழ் வேதமாகிய திருக்குறளிலும் கண்டோம். இதை விளக்க இரண்டு கதைகள் — உண்மைச் சம்பவங்கள் ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் உள்ளன.

1.ஆதி சங்கரர் மனீஷா பஞ்சகம் இயற்றிய கதை

2.சோமாசி நாயனார் கதை

 

அயம் நிஜ: பரோ வேதி கணனா லகுசேதஸாம்

உதராசரிதானாம் து வசுதைவ குடும்பகம் –

—ஹிதோபதேசம், பஞ்ச தந்திரம்

பொருள்:- இது தன்னுடையது, அது பிறருடையது என்பது சின்ன புத்தியுடையோரின் செய்கையாகும்; நற்குணம் பொருந்தியோருக்கோவெனில் இந்த உலகமே ஒரு குடும்பம்.

 

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான் – (திருக்குறள் –972)

 

என்று வள்ளுவன் இதை இன்னும் அழகாகச் சொல்லுவான்.

பொருள்:– எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையுடையது; அங்கே வேறுபாடில்லை. செய்யும் தொழில்களால் – செயல்களினால் தான் வேறுபாடுகள்.

 

 

ஜாதிகள் இல்லையடி பாப்பா- குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்பதை விளக்கும் கதைகள் இவை. ஆன்மா என்பது எல்லா உயிர்களிடத்திலும் வேற்றுமை இன்றி ஒளிர்கிறது; வெளி வேஷத்தினால் அதன் ஒளி மங்காது; அதன் மேல் உள்ள சாம்பலை, புகை மூட்டத்தை அகற்றினால் போதும் என்பதை விளக்க இரண்டு உண்மைச் சம்பவங்கள்:

 

சிவ பெருமான் எந்த வேடத்திலும் வருவார்!

இந்துக்களின் புனித க்ஷேத்ரமான காசியில் கங்கை நதியில் குளித்து விட்டு, உலக மஹா தத்துவ ஞானி ஆதி சங்கரர் திரும்பி வந்து கொண்டு இருந்தார். ஒரு சண்டாளன், நான்கு நாய்களுடன் எதிர்த் திசையில் வந்தான். அவன் வருவதைக் கண்டவுடன் எல்லோரும் விலகிப் போ என்றனர். பொதுவாக புனிதர்கள் வரும்பாதையில் அவர்கள் குறுக்கிடவும் மாட்டார்கள்; அப்படியே வந்து விட்டாலும் விலகி வழி விடுவார்கள். இந்த சண்டாளனோ என்னை விலகச் சொல்கிறீர்களா? அல்லது என்னுள்ளே உறையும் ஆன்மாவை விலகச் சொல்கிறீர்களா? சூரிய ஒளி எந்த ஜலத்தில் பிரதிபலித்தாலும் ஒன்றுதானே? வெற்றிடம் என்பது எந்தக் குடத்தில் இருந்தாலும் வெற்றிடமே; அது இருக்கும் இடத்தினால் அது அசுத்தம் அடையாதே என்று தத்துவக் கருத்துகளை உதிர்த்தான். உடனே ஆதி சங்கரருக்கு அந்த சண்டாளன் சாதாரண ஆள் இல்லை. இறைவனின் வடிவமே- சிவ பெருமானே நான்கு வேதங்களை நான்கு நாய்கள் உருவத்தில் கொண்டு வந்துள்ளார் என்பதை அறிந்து மனிஷா பஞ்சகம் என்ற துதியைப்  பாடினார்.

 

பண்டிதாஹா சமதர்ஸினஹ– என்ற பகவத் கீதை    வாக்கியத்துக்கு இலக்கணமாக அமைந்தது இது. பிறக்கும் எல்லா உயிர்களும் சமமே என்ற வள்ளுவத்தை விளக்கும் சம்பவம் இது. இதில் எதிரே வந்த ஆள்,  ஜாதிகளுக்கு எல்லாம் புறம்பாக வைக்கப்படும் சண்டாளனாக வந்தது இந்து மதத்தில் ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஜாதி ஒரு தடையில்லை என்பதைக் காட்டுகிறது.

 

புலையனாக வந்த சிவன்

மாடு தின்னும் புலையா! உனக்கு மார்கழித் திருநாளோ?’– என்ற நந்தனார் நாடக பாடல் எல்லோரும் அறிந்ததே. அங்கு புலையனாக வந்த நந்தனுக்கு சிவன் காட்சி தந்தார். சிவ பெருமானே புலையனாக வந்து காட்சி தந்தார் சோமாசி நாயனாருக்கு!

 

 ஸோம யாகம் செய்தவரை ஸோமயாஜி என்பர். இது பேச்சுத் தமிழில் ஸோமாசி என்று மருவும். அப்படிப்பட்ட ஸோமயாகம் செய்த ஒருவர் அம்பல் என்னும் ஊரில் பிறந்தார். இது திருவாரூர் அருகில் இருக்கிறது. அவர் ஒரு யாகம் செய்யத் திட்டம் இட்டார். சிவ பெருமானை நேரில் அதற்கு வரவழைக்க வேண்டும் என்று ஆசை கொண்டார். இது அவ்வளவு எளிதான காரியம் இல்லை; சரியான சிபாரிசு இல்லாவிடில் அவரைப் பிடிப்பது கடினமே என்பதை உணர்ந்தார். எப்போதும் சிபாரிசுக் கடிதம் வேண்டும் என்றால் நேரடியாக அணுகாமல் நண்பருக்கு நண்பர் என்ற வழியில் செல்ல வேண்டும் என்பதை அவர் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே பின்பற்றினார். அவர் பெயர் சோமாசி நாயனார்; 63 நாயன்மார்களில் ஒருவர்.

 

சிவ பெருமானின் நெருங்கிய நண்பர் சுந்தர மூர்த்தி சுவாமிகள்; அவரைப் பிடித்து சிவனையும் பிடிப்போம் என்று ஒரு வழி கண்டு பிடித்தார். சுந்தரருக்கு மிகவும் பிடித்த தூதுவளைக் கீரையை அவர் வீட்டுக்கு தினமும் அனுப்பினார். திடீரென்று சப்ளையை நிறுத்தினார். விசாரணை துவங்கியது; இது வரை யார் கொடுத்தார்? அது ஏன் திடீரென்று நிறுத்தப்பட்டது? இடைத்தரகர் வியாபாரிகள் புகுந்து பதுக்கல் செய்து விலையை உயர்த்தப் பார்க்கிறார்களா? என்றெல்லாம் எண்ணி சுந்தரரின் மனைவி பரவை , ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்தார். அதன் காரணமாக சோமாசி நாயனாரும் விசாரணைக்குப் பிரசன்னம் ஆயினார்.

 

 

இந்த அரிய சந்திப்பை சோமாசி நாயனார் பயன்படுத்தி யாகத் திட்டத்தையும் சிவன் வரவேண்டியதையும் வலியுறுத்தினார். சுந்தரரும் மசிந்தார்; இசைந்தார்; ஆனால் சிவனோ அப்படி எளிதாகப் பிடி கொடுக்காமல் தாமரை இலைத் தண்ணீர் போல பதில் அனுப்பினார்.

 

யாம் வருவோம்; ஆயினும் பக்தர்கள் கண்களில் மட்டுமே பளிச்சிடுவோம்- என்றார் சிவன்.

 

சுந்தரருக்கும் மகிழ்ச்சி; ஸோமாசிக்கும் சந்தோஷம்; செய்தி காட்டுத் தீ போலப் பரவியது. யாகத்தில் பெரும் கூட்டம்; கூட்டத்துக்கோ தலைவர் (சிவ பெருமான்) வந்த பாடில்லை; தலைவர் வந்து கொண்டு இருக்கிறார், வருகிறார், வருகிறார் என்ற அறிவிப்பும் மைக்கில் ஒலிக்கவில்லை. பலருக்கும் ஸோமாஸி நாயனார் கப் ஸா விட்டாரோ என்ற ஐயம் பிறந்தது; சந்தேகம் மலர்ந்தது. பொறுமையின்மை வளர்ந்தது.

 

பூர்ண ஆஹுதி நேரம் நெருங்கியது.

 

அந்த நேரத்தில் ஒரு புலையன் மனைவி மக்களுடன் வந்தான். இடுப்பில் கள் நிறைந்த குப்பி தொங்கிக் கொண்டு இருந்தது.

 

யாகம் செய்வோர் அனைவரும், ‘அபசாரம், அபசாரம் இந்தப் பக்கம் வந்துவிடாதே என்று அலறினர். அவனோ கேட்ட பாடில்லை; ‘ரோடு ரோலர் போல உருண்டு வந்தான். தக்க யாகத்தில் புல்டோஸர் வந்த கதை ஆகிவிடுமோ என்று பதறிய ஐயர்கள் சிதறினர். அன்பெனும் வலையில் அகப்படும் மலையான சிவ பெருமான் ஸோமாஸி கண்களுக்குத் தெரிந்தார். நான்கு நாய்களும் நான்கு வேதமென அறிந்தார். துதி பாடினார்- ஆடினார்- கொண்டாடினார்-

 

 

பூர்ண ஆகுதிப் பொருள்களைப் புலையனுக்கு — புலையனாக வந்த சிவனுக்கு- வழங்கினார். சுந்தரருக்கும் சோமாஸிக்கும் சிவனாகக் காட்சி தந்தார். இப்போதும் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி அம்பலில் விழாவாகக் கொண்டாடப் படுகிறது.

 

புலையனும் சிவனே! சண்டாளனும் சிவனே; இறைவனுக்கு வடிவமோ ஜாதியோ இல்லை. எல்லோருமோர் குலம்; எல்லோருமோர் இனம் என்ற பாரதியின் வாக்கு எங்கும் ஒலித்தது.

 

சுபம்—

 

My Old articles:–

“வசுதைவ குடும்பகம்”- Vasudhaiva … – Parivazhagan…

parivazhagan.blogspot.com/2015/…/2-vasudhaiva-kutumbakam.ht…

14 Jul 2015 – இதைச் செய் ; இதுதான் சரி ; இது மட்டுமே உண்மை; இவரே கடவுள் ; இது ஒன்றே வழி; என்று யாரையும் வற்புறுத்தியது இல்லை நம் சனாதன தர்மம். உன்னுடைய விருப்பத்திற்கே அனைத்தையும் விட்டு விடுகிறது. நீயே உன் இஷ்ட தெய்வத்தை ; நீயே உன் விருப்பமான …

பிறப்பொக்கும் எல்லா … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/பிறப்பொக்கும்-எல்…

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! வசுதைவ குடும்பகம்!! (Post No. 2458). best bharat mata. Written by London swaminathan. Date: 4 January 2016. Post No. 2456. Time uploaded in London :– 8-30 AM. ( Thanks for the Pictures ). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. “எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம். எல்லாரும் …

 

 

கனி மொழி பற்றி வள்ளுவன், கம்பன் (Post No.4865)

WRITTEN by London Swaminathan 

 

Date: 30 MARCH 2018

 

Time uploaded in London –  6-33 am (British Summer Time)

 

Post No. 4865

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கனி இருப்ப பூக்கொய்யலாமோ? — கம்பன்

 

கம்பன் கனி மொழிகளை உதிர்க்கிறான் கம்ப ராமாயணத்தில்! வள்ளுவனைக் கரைத்துக் குடித்த கம்பனுக்குப் படலம் தோறும், திருக்குறள் வரிகளும், சொற்களும் தாமாக வந்து விழுகின்றன.

‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ — என்றான் வள்ளுவன்.

கனி வரும் காலத்து ஐய பூக் கொய்யக் கருதலாமோ?

——-என்றான் கம்பன்

 

முனிவரும் கருணை விவைப்பர் மூன்று உலகத்தும் தோன்றி

இனிவரும் பகையும் இல்லை ஈறு உண்டு என்று  இரங்க வேண்டா

துனிவரும் செறுநர் ஆன தேவரே துணைவராவர்

கனி வரும் காலத்து ஐய பூக் கொய்யக் கருதலாமோ?

 

 

எங்கே, எப்போது, யார் நுவல்வது இஃது?

 

கும்பகர்ணனைக் கஷ்டப்பட்டு உசுப்பிவிட்டு ராமன் முன்னிலையில் போருக்கு நிறுத்தினார்கள். வேத நாயகனான ராமன், யாரையா இந்தப் புது முகம்? என்று விபீஷணனிடம் வினவுகிறான். அப்போது கும்பகர்ணனை அறிமுகம் செய்து வைக்கிறான். இவரையும் நமது கட்சியில் சேர்த்துக் கொண்டால் நமக்கு வெற் றி  நிச்சயம் என்று சுக்ரீவன் ஒரு யோஜனை சொல்கிறான். ராமனும், எத்தனை பேர் வந்தாலும் எனது கட்சியில் இடம் உண்டு; அழைத்து வா- என்று விபீஷணனை அனுப்புகிறான்.

அப்போது விபீஷணன், கட்சி மாறினால் வரும் சாதகங்களை உரைக்கிறான்:

“நீ ராமன் கட்சியில் சேர்ந்தால், அந்த நிலையில் முனிவர்களும் உன்னிடம் கருணை காட்டுவார்கள்; மூன்று உலகங்களிலும் உனக்குப் பகைவர்கள் இரார். உனக்கு சாவு என்பதே கிடையாது. தேவர்களும் நண்பர்கள் ஆவர். இனிக்கும் பழங்கள் தோன்றும் காலத்தில் வெறும் மலர்களைப் பறிப்பதற்கு நினைக்கலாமா? (கூடாது).”

இந்திய மக்கள்– குறிப்பாகத் தமிழர்கள், இயற்கையோடு இயைந்த வாழ்வு நடாத்தியதால், இயற்கையாகவே மரம், செடி, கொடி, காய், கனி உவமைகள் வரும்.

கனி மொழி பற்றி வள்ளுவன்

 

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந்  தற்று- குறள் 100

 

பொருள்

இனிமையான சொற்கள் இருக்கையில் ஒருவன் சுடு சொற்களைப் பெய்வது, இனிப்பான பழங்கள் இருக்கும் போது கய்களைத் தின்றது போலாகும்.

 

சேலத்து மாம்பழமும் , மல்கோவா, பாதிரி, நீலம் அல்பான்ஸோ பழங்களும் இருக்கும்போது நாட்டுப்புறத்தில் கீழே விழுந்து கிடக்கும் புளிச்ச மாங்காயைத் தின்னும் மாங்காய் மடையனாக இராதே என்று கனி மொழி பற்றி வள்ளுவன் சொல்கிறான்.


(
பிறர் எழுதியதைத் திருடுபவனும் பிறர் மனைவியைத் திருடுபவனும் பிறர் பொருளைத் திருடுபவனும் ஒன்றே – ஐன்ஸ்டீனின் அண்ணன்பெர்னார்ட் ஷாவின் தம்பிகாந்திஜியின் தாத்தா சொன்னது)

–Subham —

 

பண மோசடி பற்றி வள்ளுவன், சாணக்கியன் விநோதக் கணக்கு! (Post No.4797)

Written by London Swaminathan 

 

Date: 1 MARCH 2018

 

Time uploaded in London – 7-56 AM

 

Post No. 4797

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

(பேஸ்புக்- கிற்கும் பிளாக்- குகளுக்கும் எப்படி நன்றி சொல்லுவது என்றே புரியவில்லை!!! அவ்வளவு அயோக்கியர்களையும் எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது; நான் எழுதியதை பெயரை நீக்கி விட்டு — என் பிளாக்-கின் பெயரை நீக்கிவிட்டுப் போடுகிறார்கள்; இன்னும் சிலர் கொஞ்சம் வரிகளை மாற்றியும், பாரா–க்களை மாற்றியும் வெளியிடுகிறரர்கள்; இது இரண்டாம் தரம்.; இவர்கள் அத்தனை பேரையும் காட்டிக் கொடுக்கிறது FACEBOOK AND BLOGS!)

 

பண மோசடி செய்தவர்கள் எப்படி அழிவார்கள் என்பது பற்றி திருவள்ளுவன் திருக்குறளிலும் ,உலக மஹா மேதை சாணக்கியனின் சாணக்கிய நீதியிலும் சுவையான கணக்குகள் உள்ளன. அழ, அழ பணம் சம்பாதித்தவனை அழ அழ வைத்து லெட்சுமி போய் விடுவாளாம்– இது வள்ளுவன் கணக்கு; ஆனால் சாணக்கியனோ ஒரு விநோதக் கணக்குப் போடுகிறான். பண மோசடி செய்தவர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஆட்டம் போடுவார்களாம்; பின்னர் 11 ஆவது வருஷத்தில் ‘அம்போ’ன்னு போவார்களாம்; வள்ளுவன், சாணக்கியன் சொற்களிலேயே படியுங்கள்.

அகலாது அணுகாது வாழ்க!

 

அக்னிராபஹ ஸ்த்ரியோ மூர்க்காஹா ஸர்பா ராஜ குலானி ச

நித்யம் யத்னேன ஸேவ்யானி ஸத்யஹ ப்ராணஹராணி ஷட்

 

கீழ்கண்ட ஆறு விஷயங்களில் கவனமாக நடக்க வேண்டும்; ஏனெனில் இவர்கள் வெகுண்டால் உடனே மரணம் சம்பவிக்கும்: தீ, தண்ணீர், பெண்கள், முட்டாள்கள், பாம்பு, ஆட்சியாளர்கள் (ராஜ குலம்)

 

14-12

அத்யாஸன்னா விநாசாய தூரஸ்தா ந பலப்ரதாஹா

தே ஸேவ்யா மத்யாபாகேன ராஜா வஹ்னிர் குருஹு ஸ்த்ரியஹ

14-11

அரசன், ஆசிரியர், அக்னி (தீ) , பெண்கள் ஆகியோருக்கு மிகவும் அருகில் இருந்தாலும் மிகவும் தூரத்தில் இருந்தாலும் பயனில்லை; ஆகையால் நடு வழியில் செல்க.

 

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர் சேர்ந்தொழுகுவார் – குறள் 691

 

அரசனைச் சார்ந்து வாழ்பவர்கள்; நெருப்பில் குளிர் காய்பவனைப் போல, மிக அருகிலும் போகக்கூடாது; மிக விலகியும் போகக் கூடாது. நடுவழியில் நின்று கடமை ஆற்ற வேண்டும்

 

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப்பட்டார் தொடர்பு (920)

 

பொது மகளிர், கள், சூது ஆகியவற்றில் ஈடுபடுவோரிடம் லெட்சுமி தேவி தங்க மாட்டாள்

XXX

கெட்ட வழியில் சம்பாதித்த பணம் பத்து ஆண்டுகளுக்கு இருக்கும். பதினோராவது ஆண்டு துவங்கும் போது அடியோடு, வேரோடு பிடுங்கிக் கொண்டு போய்விடும்.

15-6

அன்யாயோபார்ஜிதம் வித்தம் தச வர்ஷாணி திஷ்டதி

ப்ராப்தே சைகாதசே வர்ஷே ஸமூலம் தத் வினஸ்யதி

 

 

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்

பிற்பயக்கும் நற்பாலவை – குறள் 659

 

பிற மக்களை அழ,அழ வைத்து சம்பாதித்த பொருள் எல்லாம், அந்த மனிதனை அழ அழ வைத்துவிட்டுப் போய் விடும்; உண்மையாக உழைத்து சம்பாதித்த பணம் போனாலும், அதில் ஒரு நன்மையே ஏற்படும்.

–SUBHAM–

மாம்ஸபக்ஷிணி, குடிகாரர்கள் மீது வள்ளுவன், சாணக்கியன் கடும்தாக்கு (Post No.4793)

 

Written by London Swaminathan 

 

Date: 28 FEBRUARY 2018

 

Time uploaded in London – 8-59 am

 

Post No. 4793

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

மாம்ஸபக்ஷிணி, குடிகாரர்கள் மீது வள்ளுவன், சாணக்கியன் கடும்தாக்கு (Post No.4793)

 

மாமிசம் உண்ணுவோரும், குடிகாரர்களும் இந்த பூமிக்குப் பாரம் என்று சாணக்கியன் கடுமையாகத் தாக்குகிறான்; வள்ளுவன் அதற்குப் பின் யாத்த திருக்குறளில் கள்ளுண்ணல் , புலால் மறுத்தல் என்ற அதிகாரங்களில் மாம்ஸ பக்ஷிணிகள் மீதும் குடிகாரர்கள் மீதும் சுத்தி அடி, நெத்தி அடி கொடுக்கிறான். இரு பெரும் அறிஞர்களும் செப்புவது ஒன்றே; இமயம் முதல் குமரி வரை பாரதீய சிந்தனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒன்றாக இருப்பதை அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் அண்மைக் காலத்தில் மொழிந்ததில் இருந்தும் நாம் அறிகிறோம்.

சாணக்கியன் எழுதியது சாணக்கிய நீதி ;திருவள்ளுவன் எழுதியது திருக்குறள்.

 

 

ஒரு ஜாடி விஷம்!

 

பரோக்ஷே கார்ய ஹந்தாரம் ப்ரத்யக்ஷே ப்ரிய வாதினம்

வர்ஜயேத் தாத்ருசம் மித்ரம் விஷம் கும்பம் பயோமுகம்

2-5

 

நாம் இல்லாத போது நமக்கு குழிபறிப்பதும், நாம் இருக்கும் போது நம்மை இந்திரனே, சந்திரனே என்று புகழ்வதும்  உண்மையான நட்பு அல்ல; அவன் உண்மையான நண்பன் அல்ல; அவன் பால் போல் இருக்கும் விஷ ஜாடி; அதாவது அடிப்பகுதி முழுதும் விஷம் – மேல் பகுதி மட்டும் பால்.

வள்ளுவன் புகல்வான்:–

மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து

நட்பினுள் சாப்புல்லற் பாற்று (829) –வள்ளுவன் சொல்லுவான்- வெளியே நண்பன் போல நடித்து, மனதுக்குள் நம்மை மட்டம் தட்டுவோனைப் பார்த்து சிரித்துக்கொண்டே, மெல்ல ஓடிப் போய்விடுங்கள்.

 

xxxxxx

 

உண்மையான மகன்

தே புத்ரா யே பிதுர் பக்தாஹா ஸ பிதா யஸ்து போஷகஹ

தன் மித்ரம் யஸ்ய விஸ்வாஸஹ ஸா பார்யா யத்ர நிவ்ருத்திஹி

2-4

 

தந்தையிடம் மரியாதையும், விசுவாசமும் உடையவன் உண்மையான மகன்;

மகனை கல்வி, கேள்விகளில் முன்னுக்குக் கொண்டு வருபவன்  உண்மையான தந்தை;

 

நம்பக்கூடிய ஒருவனே உண்மையான நண்பன்;

இன்பமும் மகிழ்ச்சியும் அளிப்பவளே உண்மையான இல்லாள்.

 

வள்ளுவன் விளம்புவதும் அஃதே!

 

மங்கலம் என்பது மனைமாட்சி– குறள் 60 — இல்வாழ்க்கையில் இன்பமும் அழகும் சேர்ப்பது மனைவி.

 

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல் (67) — மகனை முதலிடத்தில் நிற்க உதவுபவன் தந்தை.

 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்லெனுஞ் சொல் (70) –இவனைப் பெற, இவன் எந்தை என்ன தவம் செய்தனன் என்று வியக்க வைப்பது மகனின் கடமை.

 

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

நினைக்கரிய யாவுள காப்பு (781) –நட்பினைப் போல அரிய பொருளோ, பாதுகாப்பு தருவதோ வேறு ஏதேனும் உண்டோ!

xxxx

 

Brahmin Tiruvalluvar with Punul/ Sacred thread of Brahmins; from Chennai

தட்டிக் கேட்கும் அமைச்சன் வேண்டும்

 

நதி தீரேஷு யே வ்ருக்ஷாஹா பர க்ருஹேஷு காமினீ

மந்த்ரி ஹீனாஸ்ச ராஜானஹ சீக்ரம்நஸ்யந்த்ய ஸம்சயம்

2-15

ஆற்றோர மரங்கள் அடி சாய்வது நிச்சயம்;

பிறர் இடத்தில் வாழும்/ வேலை செய்யும் பெண்கள் தாழ்வதும் நிச்சயம்;

மந்திரிகள் இல்லாத மன்னன் அழிவதும் நிச்சயம்;

இவை விரைவில் நடப்பதும் நிச்சயம் (உறுதி)

 

வள்ளுவன் இயம்புவான்:–

 

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பாரிலானுங் கெடும் (448)

தட்டிக்  கேட்டு புத்தி சொல்லும்  மந்திரி  இல்லாத மன்னனுக்கு எதிரியே தேவை இல்லை; அவன் தன்னாலே அழிந்தொழிவான்

xxxxx

கொக்கு போல இரு

புத்திசாலி மனிதன் கொக்கு போலக் காத்திருக்க வேண்டும்; தக்க இடம், தக்க நேரம், தனது சக்தி ஆகியவற்றை எடை போட்டு, காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.

 

இந்த்ரியாணி ச ஸம்யம்ய பகவத் பண்டிதோ நரஹ

தேச கால பலம் ஞாத்வா ஸர்வ கார்யாணி ஸாதயேத்

6-16

வள்ளுவன் பகர்வான்:–

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து (490) — அமைதியாக இருங்கள்; நல்ல சமயம் வாய்த்ததும் கொக்கு, மீனைக் கவ்விப் பிடிப்பது போலப் பாயுங்கள்.

 

xxxxx

 

மனிதர் உருவத்தில் மிருகங்கள்!

 

மாம்ஸ பக்ஷைஹி ஸுரா பானைர் மூர்க்கஸ்ச அக்ஷர வர்ஜிதைஹி

பசுபிஹி புருஷாகாரைர் பாராக்ராந்தா ச மேதினீ

8-21

 

இந்த உலகிற்கு பாரம் யார்? புலால் உண்ணுவோர், குடிகாரர்கள், எழுத்து அறிவில்லாத மூடர்கள் ஆகியோர் மனித உருவில் நடமாடும் பிராணிகள் ஆவர். இவர்கள் இந்த உலகிற்குப் பாரமானவர்கள் (நடைப் பிணங்களே)

வள்ளுவன் செப்புவான்:–

 

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுன்பான்

எங்ஙனம் ஆளும் அருள் (251)- தன்னுடைய சதையைப் பெருக்க மற்றவற்றின் சதையைத் தின்பவனுக்கு கருணை இருக்குமா?

 

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன் (258) – மயக்கமும், குற்றமும் இல்லாத அறிஞர்கள், உயிர் போன உடலைத் தின்ன மாட்டார்கள்

 

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண்ணுபவர் (926)- தூங்குபவனும் செத்துப்போனவனும் சிந்திக்க முடியாது; அதுபோல கள் குடிப்போரும் அறிவு/ சிந்தனை இல்லாதவரே. அவர்கள் விஷம் குடித்து விழுந்தவர் போல நினைவு தப்பிப் போனவர்களே!

 

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா  தவர் (393)-  படித்தவனுக்குக் கண் உண்டு; படியாதவனுக்குக் கண் இல்லை; அவன் முகத்தில் இரண்டு  காயங்களே இருக்கின்றன.

xxx

 

ரஹசியம் காவான் அழிவான்

ஒருவருடைய ரஹசியங்களை மற்றவர்களுக்கு வெளியிடுவோர் பாம்புப் புற்றில் வசிக்கும் பாம்பு போல அழிவார்கள்

 

பரஸ்பரஸ்ய மர்மாணி யே பாஷந்தே நராதமாஹா

த ஏவ விலயம் யாந்தி வல்மீகோதர ஸர்பவத்

9-2

 

வள்ளுவான் உரைப்பான்:–

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் (1076) — தாம் கேட்ட ரஹஸியங்களை ஊர் அறியச் சொல்பவன் திருடன்; அவன் ஒரு டமாரம்; தாங்களாகவே பேட்டை தோறும் அடிக்கும் பறைகள் (டமாரம் அடிப்பவன்).

Orignal Tiruvalluvar Picture from an old book.

இன்னும் வரும்…………………..

 

சுபம்- சுபம்-