தொல்காப்பியத்தில் வடதிசை பற்றி முதலில் சொன்னது ஏன் ?—2(Post.8764)

HIMALAYAS BY RADHIKA BALAKRISHNAN

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8764

Date uploaded in London – –2 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொல்காப்பியத்தில் வடதிசை பற்றி முதலில் சொன்னது ஏன் ?—2(Post.8764)

கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியாகியது . நல்ல காரியங்களை முடிவு செய்யும்போது கிழக்கு அல்லது  வடக்கு திசையை நோக்கி உட்கார்ந்து அல்லது நின்று கொண்டு முடிவு செய்தல் மரபு என்ற அரிய விஷயத்தை நச்சினார்க்கினியர் குறிப்பிட்டதை நேற்று பார்த்தோம்.

உரை எழுதுவதில் மன்னன் நச்சி. .அவரை “உச்சி மேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” என்று ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் போற்றுவர். அவர் மேலும் ஒரு அதிசயச் செய்தியை சொல்கிறார்.

தொல்காப்பிய நூல் பாயிரத்தில் ‘வட வேங்கடம் தென் குமரி’ என்று ஏன் வடதிசையை முதலில் வைத்தனர் என்ற விவாதத்தில் நச்சினார்க்கினியர் கூறும் மேலும் ஒரு கருத்து இதோ :–

“தென்புலத்தார்க்கு வேண்டுவன செய்வார் தெற்கும் மேற்கும் நோக்கிக் கருமங்கள் செய்வார் ஆதலின் கூறப்பட்டது” என்கிறார்.

இதில் அதிசயம் என்ன வென்றால் தெற்கு யமனுடைய திசை என்பதும் தென்புலத்தார் என்பவர் இறந்து போன நம்முடைய முன்னோர்கள் என்பதும் வேதங்களிலும் சங்க இலக்கியங்களிலும் அதற்குப்பின் வந்த திருக்குறளிலும் உளது ;ஆனால் மேற்கு பற்றி நச்சினார்க்கினியர் சொல்லும் கருத்து எகிப்திய நாகரீகத்தில்தான் உளது.

சூரியன் மறையும் இருண்ட திசை; அதனால் அதை இறந்தோர்க்கு ஒதுக்கினர் என்று சிலர் விளக்கம் காணக்கூடும்; அது சரியல்ல என்பதற்கு நான் சொல்லும் காரணங்கள் இதோ :-

1. எகிப்திய பெயர்கள்- தமிழ் பெயர்கள் இடையே ஒற்றுமை உளது.

2.எகிப்திய முத்திரைகள் தமிழ் சித்தர்கள் முனிவர்கள் முத்திரை போல உளது.

3. எகிப்திய குள்ளர் தந்தத்தில் கிடைத்தது இந்திய முனிவர் போல உள்ளது

4. மிக முக்கியமாக, சூரியனை வானத்தில் ஓடும் படகு/ ஓடம் என்ற வர்ணனை அகநாநூற்றிலும் (மாமூலனார் பாடல்) எகிப்திலும் உளது. சம்ஸ்க்ருத இலக்கியத்தில் சூரியன் 7 குதிரை பூட்டிய ஒரு சக்கரத் தேரில் ஊர்பவன் என்ற கருத்தே உளது. அதையும் தமிழ் இலக்கியத்தில் காணலாம்.

5. இதைவிட முக்கியமாக ஆத்மாவை கூண்டுப் பறவை (Cage bird) என்ற வர்ணனையை திருக்குறளிலும் எகிப்திலும் காணப்படுகிறது; பகவத் கீதை போன்ற நூல்களில் பழைய உடைகளுக்கே உடல் ஒப்பிடப்படுகிறது. பறவைக்  கூண்டுக்கு அல்ல.

6. திருமூலர் கருத்து எகிப்தில் இருப்பதையும் முன்னர் கட்டுரைகளில் கண்டோம்.

சுருக்கமாகச் சொன்னால் சம்ஸ்கிருத நூல்களில் உள்ள கருத்துக்களோடு, கூடுதல் எகிப்திய – இந்திய ஒற்றுமையைக் காணப்படுகிறது. நச்சி . சொல்லும் இறந்தோர் திசை மேற்கு எனபது புதிய விஷயம்.

யக்ஷர்கள் (Hyksos) எகிப்து மீது படை எடுத்த விஷயம், தசரதன் எழுதிய கடிதங்கள் (Amarna Letters) எகிப்தில் இப்பொழுதும் மியூசியத்தில் உள்ளது என்பதெல்லாம்  நான் முன்னரே எழுதிய விஷயங்கள்தான்.

***

வடக்கு உணர்ந்தே தெற்கு உணரப்படுதலின் பிற்கூறப்பட்டது என்பர் அரசஞ் சண்முகனார்.

இனி தொல்காப்பிய பாயிரத்திலுள்ள பிற சுவையான செய்திகளைக் காண்போம்.

வட வேங்கடம் என்பது திருப்பதி வேங்கடாசலபதி உறையும் புனித மலை ; குமரித் துறையோ புனித நீராடும் துறை. (தேவாரத்திலும் சிலப்பதிகாரத்திலும் காண்கிறோம்). இதனால்தான் — புனிதம் கருதித்தான் —   இதைக் குறிப்பிட்டனர் என்று மிகப் பழைய உரை ஆசிரியரான இளம்பூரணர் எழுதுகிறார். சுருங்கச் சொன்னால் தமிழர்கள் என்பவர் இந்துக்களே ; சம்ஸ்கிருத நூல்களில் உள்ள கருத்துக்களே இமயம் முதல் குமரி வரை உள்ளதும என்று அடித்துப் பேசுகிறார் இளம்பூரணர். அதாவது தமிழையும் இந்துமதத்தையும் பிரிக்க எண்ணுவோருக்கு சாவுமணி அடிக்கிறார்.

நச்சினார்க்கினியர் மேலும் ஒருபடி போகிறார் :-

“நிலங்கடந்த நெடுமுடியண்ணலை நோக்கி உலகந் தவஞ்செய்து வீடு பெற்ற மலையாதலானும் , எல்லாராலும் அறியப்படுதலானும்  வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் . குமரியும் தீர்த்தமாகலின் எல்லையாகக் கூறினார். இவ்விரண்டும் காலையே ஓதுவார்க்கு நல்வினை (புண்ணியம்) உண்டாம் என்று கருதிக் கூறினார்” .

ஆக, மதுரை நகர பாரத்துவாஜ கோத்ர ப்ராஹ்மணன் நச்சினார்க்கினியர் இங்கே மேலும் ஒரு புதிய செய்தியை நமக்கு அளிக்கிறார். இந்துக்கள் 7 புனித நதிகள், 7 புனித நகரங்கள், 7 சிரஞ்சீ விகள் , 7 புனிதக் காடுகள், 5 புண்ய ஸ்திரீக்கள்/பெண்கள் பெயரை தினமும் காலையில் பிரா த ஸ்மரணத்தில் சொல்லுவார்கள். இன்றும் ஆர் எஸ் எஸ் ஷாகாக்களில் இதைக் கேட்கலாம். பல லட்சம் இந்துக்கள் தினமும் காலையில் சொல்லுவர்; இதில் இல்லாதவை குமரியும் வேங்கடமும். 7 என்பது ஒரு தொடக்கம்தான் . அவற்றைச் சொல்லுகையில் அதுபோன்ற பல்லாயிரம் புனிதம் மிக்க என்ற பொருளும் தொனிக்கும். அதில் குமரி , வேங்கடம் என்ற பெயரைக் காலையில் சொன்னால் புனிதம் என்பதால்தான் தொல்காப்பியத்தில் – பாயிரத்தில் – அது இடம்பெற்றது என்பது நச்சி. தரும் நல்ல செய்தி ; அவரை மெச்சிப்  போற்றுவோம்.

****

இவ்வாசிரியர் ‘அகத்தியனார்க்குத் தமிழை செவியறிவுறுத்திய செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய  அறுமுகக் கடவுள் வரைப்பென்னும் இயைபு பற்றி என்பது’ எனக்கூறுவர்.

(இவ்வாசிரியர் என்பது தொல்காப்பிய விருத்தி ஆசிரியர் மாதவ சிவஞான யோகிகள்/ முனிவர் என்று நான் நினைக்கிறேன் . முனிவரின் சொற்களுக்கு தண்டபாணி தேசிகர் கூறும் விளக்கப் பகுதியில் இவை உள்ளன )

****

அரசஞ் சண்முகனார் கருத்து :-

“வேங்கட மலையின் வடக்கிலிருந்து இமயமலை வரை ஆரியமும், வேங்கட மலையின் தெற்கிலிருந்தது குமரிமலை வரைத் தமிழும் பரவியிருந்த படியா லும், அக்காலத்து வடதிசைக்கண் கங்கை யாறும் இமயமலையும் போல தென்றிசைக்கண் பஃறு ளி யாறும் குமரி  மலையும் எல்லோரானும் அறியப்பட்டுக் கிடந்தமையின் வடக்கும் தெற்கும் பிறவெல்லையும் உளவாக அவற்றைக் கூறாமல் , எல்லாரும் உணர்தற்பொருட்டு மறைவின்றி நெடுந்தூரந் தோன்றற்பாலவாகிய  மலைகளைக் கூறினார் என்பர் .

****

ZOGILLA PASS IN THE HIMALAYAS BY RADHIKA BALAKRISHNAN

முடிவுரை

இதிலிருந்து நாம் பெறும் கருத்துக்கள் என்ன?

தமிழ் மொழி எக்காலத்தும் வட வேங்கட மலைக்கு அப்பால் — திருப்பதிக்கு அப்பால் வழங்கவில்லை. எமனோ, பர்ரோ , ஐராவதம் மகாதேவன் , அசுகோ பர்போலா சொல்வதெல்லாம் மஹா ‘பேத்தல்- உளறல்’;. வட திராவிட மொழிகள், மத்திய திராவிட மொழிகள்,  தென் திராவிட மொழிகள் என்பனவெல்லாம் மஹா ‘கப்ஸா’ . அங்குள்ள தமிழ் சொற்கள் என்று அவர்கள் கூறுவது போல உலகில் வேறு எந்த இரண்டு பழைய மொழிகளிலும் நான் சொற்களையும் காட்ட முடியும்; இலக்கண விதிகளையும் காட்ட முடியும் . அவையெல்லாம் ஒரு மொழியின் 100 சதவிகிதத்தில் 2 அல்லது 3 விழுக்காடே. ஜப்பானிய, கொரிய , ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க செனகல் மொழிகளை ஒப்பிடும் கட்டுரைகளை படிக்கையில் எனக்கு சிரிப்புதான் வரும். உண்மையான நெருக்கம் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும்தான் என்பதை சந்தி / புணர்ச்சி  விதிகள் காட்டுகின்றன. தேவாரமும் திருவிளையாடல் புராணமும் இரு மொழியும் ஒரே இடத்தில் தோன்றியவை என்பதைக் காட்டும்.

இரண்டாவது முக்கிய விஷயம், தமிழை சிவன், முருகன், அகத்தியனிடமிருந்து எவனாலும் பிரிக்க முடியாது. பழைய  உரைகாரர்கள் அனைவரும் இதை ஆதரிக்கின்றனர். தேவாரமும் திருவாசகமும் திவ்வியப்பிரபந்தமும் தெய்வத் தமிழ் என்பதை மீண்டும் மீண்டும் செப்புகின்றன.

மூன்றாவது முக்கிய விஷயம், இமயம் முதல் குமரி வரை புனித பூமி; நச்சி. சொல்லுவது போல ‘வடவேங்கடம் தென்குமரி’ என்று தொல்காப்பியத்தை படிக்கத் துவங்கினாலேயே  புண்ணியம்!!

கட்டுரையை முடிப்பதற்கு முன்பாக ஒரு எச்சரிக்கை. ‘ஆரியம்’ என்ற சொல் தேவாரம் முதல் தொல்காப்பிய விருத்திவரை காணப்படும் . இதன் பொருள் “பண்பட்ட” (மொழி, மக்கள் ) என்பதேயாம் என்பதை சங்க இலக்கிய தேவார உரைகளை படிப்போர் அறிவர் . கால்டு வெல்களும் மாக்ஸ்முல்லர்களும் பயன்படுத்தும் ‘விஷமேற்றிய சொல்’ (Polluted/poisoned) அல்ல. நேற்று வந்த கழிசடைகளை ஒதுக்கி விட்டு பழந்தமிழ் உரைகாரர்களை நம்புவோமாக.

வாழ்க தமிழ் !!

–சுபம்–

tags- வட திசை -2, தொல்காப்பியம் , நச்சினார்க்கினியர்

தொல்காப்பியத்தில் எண்.9 (Post No.7201)

WRITTEN BY London swaminathaan

swami_48@yahoo.com

Date: 11  NOVEMBER 2019

Time  in London – 6-54 am

Post No. 7201

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

–subham–

குதிரைச் சேவல், பன்றிப் பாட்டி தெரியுமா? தொல்காப்பியருக்குத் தெரியும் (Post No.6354)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 7 May 2019


British Summer Time uploaded in London – 14-10

Post No. 6354

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குதிரைச் சேவல், பன்றிப் பாட்டி தெரியுமா? தொல்காப்பியருக்குத் தெரியும் (Post No.6354)

தொல்காப்பியம் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/தொல்காப்பியம்/

1.      

2.      

Translate this page

தமிழில் பழமையான நூல் தொல்காப்பியம்எனப்படும் இலக்கண நூலாகும்; இதன் … தொல்காப்பியர் ஒரு பார்ப்பனர் என்றும் ரிக் வேதமும் பகவத் …. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com).

You’ve visited this page 3 times. Last visit: 16/12/16

தொல்காப்பிய அதிசயங்கள் | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பிய-அதிச…

1.      

Translate this page

14 Nov 2014 – ‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ எழுதிய தொல்காப்பியம் என்னும் … தொல்காப்பியர் தரும் சில அதிசயச் செய்திகளை மட்டும் …

தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2 | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பிய-அதிச…

1.      

Translate this page

24 Dec 2014 – அதியமான், அவ்வையார் First Part of Tolkappiya Athisayangal was published on 14th November 2014 (Post no 1410) The Wonder that is Tamil – Part 3 தொல்காப்பிய அதிசயங்கள் …

தொல்காப்பியர் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/தொல்காப்பியர்/

1.      

Translate this page

ஆனால் தொல்காப்பியர் மட்டும் நவரசத்தை —அஷ்ட ரசம்— ஆக்கிவிட்டார். இது ஒரு புதிராகவே இருந்து வருகிறது. ஏன் என்று தெரியவில்லை!

அகத்தியம் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/அகத்தியம்/

1.      

Translate this page

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு. Picture shows the greatest of the Choza Kings: Karikalan. தொல்காப்பியத்துக்கு முந்திய அகத்தியம், ஐந்திரம், காதந்திரம் …

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி! | Tamil …



https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

1.      

Translate this page

31 Mar 2014 – இப்பொழுதைய கட்டுரை துர்கை, சூரியன், சந்திரன், அக்னி வழிபாடு பற்றியது. தொல்காப்பியத்தில் சில மர்மங்கள் நீடிக்கின்றன.

தொல்காப்பியத்தில் … – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

1.      

2.      

Translate this page

இந்துமதத்தில் 8 வகைத் திருமணங்கள். Written by London swaminathan. Research article No. 1789 Date 9th April 2015. Uploaded from London at 10-18 காலை. கட்டுரையின் முதல் பகுதி …

தொல்காப்பியர் கதை | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பியர்-கத…

1.      

Translate this page

அதங்கோட்டாசனார் ஆசங்கித்துக் கடாவக் கடாவத் தொல்காப்பியர் முறையே விடைகளாக விளக்கியிருந்த புதிய சூத்திரங்கள் ஓராயிரத்தின் …

தொல்காப்பியர் காலம் தவறு-1 | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பியர்-கா…

1.      

2.      

Translate this page

9 Sep 2012 – ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று கற்றோரும் மற்றோரும் போற்றும் தமிழ் அறிஞனின் உண்மைக் காலம் எது என்பது …

தொல்காப்பியத்தில் வருணன் | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

1.      

2.      

Translate this page

8 Jul 2013 – தமிழில் கிடைத்த பழைய நூல் தொல்காப்பியம். பெரும்பாலான அறிஞர்கள் இதை கி.மு அல்லது கி.பி. முதல் நூற்றாண்டில் …

You’ve visited this page 3 times. Last visit: 05/02/17

தொல்காப்பியர் காலம் தவறு-1 | Swami’s Indology …



https://swamiindology.blogspot.com/2012/09/1_9.html

9 Sep 2012 – தொல்காப்பியர் ஏன் வேத கால தெய்வங்களான இந்திரனையும் … Labels: ஆய்த எழுத்து தொல்காப்பியர் காலம்த்ருணதூமக்கினி …

தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி 3 …



https://swamiindology.blogspot.com/2012/09/3.html

12 Sep 2012 – எள்: தொல்காப்பியர் காலமும் கலித்தொகை- பரிபாடல் காலமும் ஒன்றே என்பதற்கும் பல சான்றுகள் உள்ளன. எள் என்ற வித்தைக் …

தொல்காப்பியன் புகழ் (Post No.5217)

Written by London swaminathan

 

Date: 14 JULY 2018

 

Time uploaded in London – 14-37  (British Summer Time)

 

Post No. 5217

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

தமிழில் பழமையான நூல் தொல்காப்பியம் எனப்படும் இலக்கண நூலாகும்; இதன் ஆசிரியர் தொல்காப்பியர். அவர் குறித்துப் பல புலவர்கள் கூறிய பொன் மொழிகளைக் காண்போம்:

1.ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமையோன் – –பனம்பாரனார்

 

2.நல்லிசை நிறுத்த தொல்காப்பியன்

– பன்னிரு படலப் பாயிரம்

 

3.துன்னரும் சீர்த்தித் தொல்காப்பியன்

-புறப்பொருள் வெண்பா மாலை சிறப்புப் பாயிரம்

 

4.ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பிய முனி

–இலக்கணக் கொத்து சிறப்புப் பாயிரம்

 

சூத்திரங்களின் எண்ணிக்கை

இளம்பூரணர் உரை- 1595

நச்சினார்க்கினியர் உரை – 1611

 

பழம்பாடல்களின் படி 1612

 

பல சூத்திரங்களை ஒன்றாக இணத்தும் பகுத்தும் பார்த்ததால் இந்த வேறுபாடு என்று அறிஞர் பெருமக்கள் நுவல்வர்.

தொல்காப்பியத்தில் மூன்று அதிகாரங்கள்:–

சொல் அதிகாரம்

எழுத்து அதிகாரம்

பொருள் அதிகாரம்

 

பொருள் அதிகாரம் பிற்காலத்தியது என்பது ஆன்றோர் கருத்து.

 

 

தொல்காப்பியருக்குப் பிடித்த எண் 9

 

மூன்று அதிகாரங்களிலும் தலா ஒன்பது இயல்கள் உள.

அவையாவன:

 

எழுத்து அதிகாரம்

 

1.நூல் மரபு

2.மொழி மரபு

3.பிறப்பியல்

4.புணரியல்

5.தொகை மரபு

6.உருபியல்

7.உயிர் மயங்கியல்

8.புள்ளி மயங்கியல்

9.குற்றியலுகரப் புணரியல்

 

சொல் அதிகாரம்

 

1.கிளவியாக்கம்

2.வேற்றுமை இயல்

3.வேற்றுமை மயங்கியல்

4.விளி மரபு

5.பெயரியல்

6.வினையியல்

7.இடையியல்

8.உரியியல்

9.எச்சவியல்

 

பொருள் அதிகாரம்

1.அகத்திணயியல்

2.புறத்திணையியல்

3.களவியல்

4.கற்பியல்

5.பொருளியல்

6.மெய்ப்பாட்டியல்

7.உவமவியல்

8.செய்யுளியல்

9.மரபியல்

 

தொல்காப்பியருக்குத் தெரிந்த மொழிகள்:–

தமிழ், ஸம்ஸ்க்ருதம் (ஐந்திரம் எனும் இந்திரன் பெயரில் உள்ள ஸம்ஸ்க்ருத இலக்கணம் கற்றவர். இந்த இலக்கணம் கிடைக்கவில்லை)

 

தொல்காப்பியரின் காலம்

கி.மு.முதல் நூற்றாண்டு முதல் கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வரை

 

இவர் ஆய்த எழுத்து என்பப்படும் மூன்று புள்ளி எழுத்து பற்றிக் குறிப்பிடுவதால் முதல் நூற்றாண்டுக்குப் பிறப்ப

ட்டவர் என்பது சிலர் கருத்து.

 

இவர் எண்வகைத் திருமணம் பற்றியும் வேத காலக் கடவுளரான இந்திரனையும் வருணனையும் தமிழர் கடவுள் என்று குறிப்பிடுவதாலும்,  பொருள் அதிகாரம் பிற்காலத்தியது என்பர். இன்னும் சிலர் அவை இடைச் சொருகல் என்று சொல்லி தப்பித்துக் கொள்வர்.

 

இவர் அகஸ்த்ய ரிஷியின் சிஷ்யர். அவருக்கும் இவருக்கும் இடையே நடந்த மோதல் பற்றி ‘உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்’ பகர்வர். அதே நச்சினார்க்கினியர் தொல்காப்பியரின் உண்மைப் பெயர் த்ருண தூமாக்கினி என்பர். தொல்காப்பியர் ஒரு பார்ப்பனர் என்றும் ரிக் வேதமும் பகவத் கீதையும் போற்றும் உசனஸ் ரிஷி பிறந்த காப்பிய கோத்திரத்தை சேர்ந்தவர் என்றும் செப்புவர்.

 

 

பொய்யுரை பேசும் திராவிடர்களுக்கு ஆப்பு வைக்கும் ஆதாரங்கள் தொல்காப்பியத்துக்கு உள்ளேயே இருக்கின்றன.

இவர் எழுத்து அதிகார உச்சரிப்பில் வேதம் பற்றிச் சொல்கிறார்.

மஹாபாரதம் முதலிய நூல்களில் உள்ள தர்ம, அர்த்த, காம, மோக்ஷத்தை அதே வரிசையில் அறம், பொருள், இன்பம் என்று சொல்கிறார்.

மேலும் இந்து தெய்வங்கள் அனைவர் பெயரையும் சொல்கிறார். சிவன் பெயரைச் சொல்ல வில்லை

 

இவர் நூலுக்கு ‘சர்டிபிகேட்’ கொடுத்தவர் கேரளத்து பிராஹ்மணன், சதுர்வேத சிகாமணி- நான்மறை முற்றிய அதங்கோட்டு (திருவிதாங்கோடு) ஆசார்யார்

 

இது அரங்கேறிய இடம்- நிலம் தரு திரு வில் பாண்டியன் சபை.

 

அக்காலத்தில் தமிழ் நாட்டின் எல்லை: குமரி மலை, திருப்பதி (வேங்கட மலை)

இவருக்கு பனம்பாரனார் உள்பட 12 சீடர்கள்.

இவர் பிறந்த இடமோ, இறந்த இடமோ, தாய் தந்தையர் பெயரோ தெரியாது.

 

இவர் இந்து தெய்வங்களைத் தவிர வேறு எவரையும் குறிப்பிடவில்லை. இவரது காலத்தில் பௌத்தமோ ஜைனமோ பிரபலம் ஆகாததால் இப்படி மௌனம் காத்திருக்கலாம்.

தொகாப்பிய ஏடுகளில் 2000 பாட பேதங்கள் இருந்தன. அவைகளை அறிஞர்கள் தட்டிக்கொட்டிச் சீர் செய்துவிட்டனர்.

 

இவர் நூலிலும் , சிலப்பதிகாரத்திலும், திருக்குறளிலும் அதிகாரம் என்னும் சொல் பயிலப்படுவதால் மூன்று நூல்களும் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் தொகுக்கபட்டு நமக்கு வழங்கியிருக்கலாம்.

 

தொல்காப்பியத்துக்குப் பல உரைகள் இருந்தாலும் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் உரைகளே சிறப்புடைத்து.

 

–SUBHAM–

 

தமிழ்ப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை! (Post No.3203)

ammami

Written by London Swaminathan

 

Date: 30 September 2016

 

Time uploaded in London:10- 39 AM

 

Post No.3203

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

தொல்காப்பியர்—  தமிழ்ப் பெண்கள் கடல் கடந்து  வெளிநாடு செல்லக்கூடாது என்கிறார். மனுவோ,  பிராமணர்கள் வெளிநாட்டிற்குச் செல்லாக் கூடாதென்கிறார்.

 

முந்நீர் வழக்கம் மகடூ உ வோடு இல்லை – 980

—-பொருளதிகாரம், அகத்திணையியல், தொல்காப்பியம்

 

கடல் வழிப்பயணம் செல்லும்போது பெண்டிரை அழைத்துச் செல்வதில்லை– 980

 

“காலில் பிரிவு, கலத்தில் பிரிவு இரண்டனுள் கலத்திற் பிரிவு தலை மகளுடன் இல்லை.

முந்நீர் = கடல், கலம் = கப்பல்

beauty-long-hair-baack

கப்பல் ஏறிக் கடல் பயணம் செய்ய மகளிர் உரிமை பெறார். எனவே தலைவன், தலைமகளை உடன் கொண்டு கால்களால் நடந்து செல்லும் பிரிவு மட்டுமே மகளிர்க்கு உண்டு.

முந்நீர் வழக்கம் = ஓதலும் தூதும் பொருளும் ஆகிய மூன்று நீர்மையால் செல்லும் செலவு என்பார் நச்சினார்க்கினியர் (ம்துரை பாரத்வாஜ கோத்ரப் பார்ப்பனன் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியன்)

.

 

காளிதாசனும் மற்ற சம்ஸ்கிருதப் புலவர்களும் கூட இப்படித்தான் எழுதுகின்றனர். வியாபாரம், போர், அரசியல், தூது ஆகியவற்றுக்காக வெளி நாட்டிற்குச் சென்றவர்கள் திரும்பிவரும் வரை பெண்கள் சிகை அலங்காரம் செய்யக்கூடாதென்று எழுதி வைத்துள்ளனர். பிரிவு குறித்து ஏங்குவது பற்றியும் பருவ காலம் மாறுவதால் கணவன் வரும் அறிகுறிகள் தென்படுவதாகவும் எழுதி வைத்துள்ளனர்.

 

தொல்காப்பியர் மிகத் தெளிவாகவே சொல்லுகிறார்:–

பெண்கள் கடல் கடந்து போகக்கூடாது என்று.

 

சீதை போன்றவர்கள் ‘கடத்தப்பட்டதால்’, கடல் கடக்க வேண்டி இருந்தது. அதற்கும் கூட ஒரு வண்ணா ன் சொன்னான் என்பதற்காக தீப்புகுந்து தன் தூய்மையையும் நாணயத்தையும் நிரூபிக்க வேண்டி இருந்தது.

 

ஆண்கள் வெளி நாடு சென்றாலேயே கலாசாரச் சீரழிவுகள் ஏற்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். பெண்களும் போய், அவர்களும் தன் பண்பாட்டை விட்டு விட்டால், இப்பொழுது அமெரிக்கா, பிரிட்டனில் பிறந்த குழந்தைகள் போல ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று வாழ்க்கை நடத்துவர். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கோ “மம்மி, டாடி” –யயைத் தவிர அம்மா, அப்பா என்பதும் தெரியாது. அம்மா, அப்பாவின் பாசமும் பற்றும் புரியாது.

 

girls-painting

பிராமணர் மீது மனு விதித்த தடை மிகப் பொருத்தமானதே. தருமத்தை காக்கவேண்டிய அவனே தர்மத்தைப் பின்பற்ற முடியாத ஓரிடத்தில் சென்றால், வசித்தால் அமாவாசையும் கிடையாது பவுர்ணமியும் கிடையாது. தீபாவளி, பொங்கல் எல்லாம் காலண்டரில் மட்டுமே. அல்லது சங்கங்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளில் மட்டுமே.

 

ஆக தொல் காப்பியர் சொன்னது, மனு சொன்னது முதலியவற்றை அந்தக்காலத்தில் வைத்து அதன் பின்னணியில் பார்க்க வேண்டும்.

 

தொல்காப்பியர் பெண்களுக்கு வேண்டிய குணநலன்கள் பற்றிச் சொல்லுவதையும் கூட இன்று பெண்கள் ஏற்பார்களா என்பது ஐயப்பாடே!சந்தேகமே!

 

இதோ பெண்கள் பற்றி அவர் சொன்னது:–

 

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

மெல்லியற் பொறையும்நிறையும் வல்லிதின்

விருந்து புறந்தருதலும்சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்

முகம் புகல்  முகைமையின் கிழவோற்கு உரைத்தல்

அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய – தொல்காப்பியம் 1098

 

 

பொருள்:-

உயிரினும் மேலாகக் கற்பு நெறியைப் போற்றலும், தலைவன் மீது மிகுந்த அன்பு காட்டுதலும், சான்றோர் கூறிய நல்லொழுக்கம் பேணலும், மென்மையான தன்மையுடைய சொற்களால் பிறர் கூறும் கடுஞ் சொற்களைப் பொறுத்தலும், ரகசியம் வெளிப்படாத வாறு மனதில் வைத்துக் கொள்ளலும், விருந்தினரை வரவேற்று உணவு படைத்தலும், சுற்றத்தாரைக் காத்தலும் — இவை போன்ற பிற பண்புகளும்  தலைவியிடம் அமைந்துள்ள நல்ல குணங்களாம்  . அவளுடைய செயல்களை முகம் மகிழ்ந்து  கேட்கும் நிலையில்  தலைவனிடம் உரைத்தல், மனைக்கண் பழகும் பாணர் , பாங்கர் போன்றோர் கூற்றுகளாக அமையும்.

 

azaki-with-metal-pot

எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல்

பொற்புடை நெறிமை இன்மையான – 981

 

எந்த நிலத்திலும் பெண்கள் மடல் ஏறுதல் இல்லை அது சிறப்புடைய ஒழுக்கம் இல்லாததால்.

 

(ஆண்கள் மட்டும் பனை மர மடலால் செய்யப்பட்ட குதிரையில் ஏறி ஊரறிய, காதலை வெளிப்படுத் துவது தமிழரின் தனி வழக்கம்)

 

–subham–

 

தொல்காப்பியத்தில் கார்த்திகைத் திருவிழா (Post No.3089)

kartikai annamali

Written by London Swaminathan

 

Date: 24  August 2016

 

Time uploaded in London: 19-50

 

Post No.3089

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கார்த்திகை பௌர்ணமி அன்று நடைபெறும் கார்த்திகைத் திருநாள் கண்கொள்ளாக் காட்சியாகும். மூன்று நாட்களுக்கு ஜாதி, இன வேறு பாடின்றி அனைவர் வீட்டு வாசலிலும் தண்ணீர் தெளித்து சுத்தப் படுத்தி, கோலமிட்டு, அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைப்பர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் ஒரே விளக்கொளிதான்!

 

கோவில்களிலும் இது போலவே ஆயிரக் கணக் கான விளக்குகள் ஒளிரும். இதற்காகவே அன்று இலுப்பை எண்ணை   கொண்டு விளக்கு ஏற்றுவர்.

அதைப் பார்த்தவுடன் தீப மங்கள ஜோதி நமோ நம: — என்னும் அருணகிரியின் திருவாக்கு நினைவுக்கு வரும் ( நாதவிந்துகலாதீ நமோ நம: என்ற திருப்புகழ் ).

 

திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபம், பரணி தீபம் என்பன மிகவும் பிரசித்தமானவை. லட்சக் கணக்காணோரைக் கவர்ந்திழுக்கும் திருவிழாவாகும்.

karthikai deepam

தமிழ்நாட்டின் எல்லாக் கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்துல் நிகழ்ச்சியும் அன்று இரவில் நடைபெறும். ஐப்பசி கார்த்திகை மாதங்களில் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளி முதலிய பூச்சிகள் பெருகி இருக்கும் என்பதால் இப்படிச் சொக்கப்பனை கொளுத்துவர். அதில் பூச்சிகள் விழுந்து இறந்துவிடும். வீடுகளிலும் பழைய பொருட்களை வெளியே போட்டு சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இருந்திருக்க வேண்டும்.

 

கார்த்திகை பற்றி சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்ற குறிப்புகளைப் பலரும் அறிவர். ஆனால் தொல்காப்பியத்தில் இது பற்றிய குறிப்பு இருப்பது பலருக்கும் தெரிந்திராது.

 

தொல்காப்பியத்தில்

 

வேலி நோக்கிய விளக்கு நிலையும்–

தொல்.பொருள்.புறத்திணை இயல்-35

 

வேலி நோக்கிய விளக்கு நிலையும்– என்ற சூத்திர வரிகளுக்குப் பொருள் கூறுகையில் “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு” என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.

kartik deep

தொல் காப்பியத்தில் வரும் இந்திரன், வருணன், அக்னி, துர்கை முதலிய குறிப்புகளுடன் இதையும் வைத்துப் பார்க்கையில் தொல்காப்பிய உரை சரியே என்று தெளிவுபெறலாம்.

அகநானூறு,  நற்றிணை போன்ற அகத்துறை நூல்களில் கூட  கார்த்திகை விழா பற்றிய குறிப்புகள் இருப்பது, இதன் புகழைக் காட்டும்.

 

தீபாவளிக்கு இப்பொழுது  எப்படி எல்லோரும் குடும்பத்தினரைப் பார்க்கப் போய்விடுகிறார்களோ, அது போல அந்தக் காலத்தில் கார்த்திகை திருவிழாவுக்கு எல்லோரும் சொந்த ஊருக்குப் போய்விடுவர்.

 

தொழில் விஷயமாக வெளியூர் என்ற கணவன், கார்த்திகை விழாவுக்கு வரட்டும் என்று மனைவி சொல்லும் பாடல் அகநானூற்றில் (141) இருக்கிறது

 

குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து

அறுமீன் சேரும் அகல் இருநடுநாள்

அறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி (அகம்.141)

 

இதே போல அகம்.185, 11, நற்றிணை 202 ஆகிய பாடல்களிலும் கார்த்திகை விழா சிறப்பிக்கப் படுகிறது.

 

சிலர் சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படும் ஆறு கோடுகள் எல்லாம் முருகனை வளர்த்த ஆறு கார்த்திகைப் பெண்கள் என்றும் நம்புவர்.

 

வேதத்திலும், குமார சம்பவம் முதலிய நூல்களிலும் கார்த்திகைப் பெண்களும், அவர்களைக் குறிக்கும் விண்மீன்களும் இடம் பெற்றிருகின்றன. ஆக வேத காலக் கார்த்திகை இன்று வரை வழிபடப் படுகிறது.

 

கார்த்திகை பௌர்ணமி அன்று இந்த ஆறு நட்சத்திரங்களும் நிலவுடன் நெருங்கி நிற்கும்.

 

வானவியல் கணக்குப்படி கார்த்திகை நட்சத்திரங்கள் ஏழு ஆகும். நாமும் அதை முருகன்+ ஆறு கார்த்திகைப் பெண்கள் என்று சொன்னாலும் தவறில்லை.

KARTIKAI DINDIGUL

முத்தொள்ளாயிரம் என்னும் நூலில்.

குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம்

புறப்படா பூந்தார் வழுதி — புறப்படின்

ஆபுகும் மாலை அணிமலையில் தீயே போல்

நாடறி கௌவை தரும்

 

 

என்றும்

சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர்

 

“குன்றிற் கார்த்திகை விளக்கீட்டென்ன”

என்றும்

 

பொய்கையார், கார் நாற்பதில்

“கார்த்திகைச் சாற்றிற் கழி விளக்கைப் போன்றனவே”

என்றும் கார்த்திகை தீபத்தைப் போற்றுவர்.

 

kartikai1

தொல்காப்பியம்  தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—

 

தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2, 24-12-2014

தொல்காப்பிய அதிசயங்கள், 14-11-2014

தொல்காப்பியர் காலம் தவறு-1, 9 செப்டம்பர் 2012

தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி 2, தேதி-10 செப்டம்பர் 2012

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு, 13 செப்டம்பர் 2012

தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி3, 12 செப்டம்பர் 2012

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி!, 31 மார்ச் 2014

தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!!, 9 ஏப்ரல் 2015

தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)

தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013

தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013

மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)

தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் மங்கலச் சொற்கள் (Post No.2826), 20-5-2016

தீபாவளிக் கட்டுரை: தீப மங்கள ஜோதீ நமோ நம! , 10 நவம்பர், 2015

kartikai, sai babu.jpg

No Brahmins ! No Tamil ! (posted on 12/1/2012)

Tolkappian- A Genius ( posted on 12/9/2012)

Indra in the Oldest Tamil Book

Varuna In the Oldest Tamil Book

Did TOLKAPPIYAR copy from Sanskrit Books?, 10-9-2012

WHO WAS TOLKAPPIYAR?,9-9-2012

 

–Subham–

 

 

தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் மங்கலச் சொற்கள் (Post No.2826)

08.08.67.earth.med

Research article written by London swaminathan

 

Date: 20 May 2016

 

Post No. 2826

 

Time uploaded in London :–  15-36

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

உலகில் வேறு எந்த இலக்கியங்களிலும் காணாத ஒரு வழக்கு இந்து மத இலக்கியங்களில் காணப்படுகிறது. சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் சிவபெருமானிடமிருந்து பிறந்து அவனருளால் பாணினி, அகத்தியன் ஆகிய இருவரால் இலக்கணம் வரையப்பட்டதால் இந்த வழக்கு நீடிக்கிறது. இரண்டு மொழிகளும் இன்னென்ன சொற்களைக் கொண்டே ஒரு நூல் துவக்கப்பட வேண்டும் என்று சொல்லும். இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அப்படியே பின்பற்றப் பட்டு வந்துள்ளது.

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆரிய, திராவிட மொழிக் குடும்பம் என்பதெல்லாம் வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்கள் எட்டுக்கட்டிய கட்டுக்கதை என்பதை மொழியியல் ரீதியாக முன்பே நிரூபித்துவிட்டேன்.

 

tricolour om

சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லும்:–

ஓம்காரஸ்ச அதசப்தஸ்ச த்வாவேதௌ ப்ரஹ்மண: புரா

கண்டம் பித்வா விநிர்யாதௌ தஸ்மான் மாங்கலிகாஉபௌ

–பாதஞ்ஜலதர்சனம்

பொருள்:– ஓம், அத என்ற இரண்டு சொற்களும் பிரம்மனின் திருவாயிலிருந்து வெளிவந்ததால் இரண்டும் மங்கலச் சொற்களாக கருதப்படும்.

 

பழங்கால சம்ஸ்கிருத நூல்கள் அனைத்தும் இவ்விரு சொற்களுடனேயே துவங்கும்.

‘அத ரிக் வேத:’

‘அத ஸ்ரீமத்பகவத் கீதா’

என்று நூல்கள் ஆரம்பமாகும். நூலின் உள்ளே கடவுள் வாழ்த்து என்ற துதி இருக்கும். அதில் கடவுளின் பல பெயர்கள் வரும். கடவுள் வாழ்த்தே இல்லாவிடினும்

‘அத யோகானுசாசனம்’ (பதஞ்சலி யோக சூத்ரம்)

‘அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாசா’ (பிரம்ம சூத்ரம்)

அமரகோசம் என்னும் நிகண்டும் ‘அத’ சப்தத்தை மங்கல சொல்லாகப் பட்டியலிட்டுள்ளது.

ஓம்காரம் மிகவும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த மூல மந்திரத்திலிருந்துதான் பிரபஞ்சமே உற்பத்தியாகியது. இதை மாண்டூக்ய உபநிஷத் நன்கு விளக்கும். நவீன விஞ்ஞாமும் சப்தத்திலிருந்து பிரபஞ்சம் எல்லாம் உருவானதை ஒப்புக் கொள்கிறது.

‘அத’ என்றால் ‘இப்பொழுது’ என்று பொருள். அ –என்னும் எழுத்துதான் உலகின் பழைய மொழிகளின் முதல் எழுத்து. ரிக் வேதம் முதலான புனித நூல்கள் அக்னி என்று அ- வில் துவங்கும் அல்லது ஓம் என்னும் மந்திரத்துடன் துவங்கும்.

பழங்காலத்தில் குருமார்கள் மேடையில் அமர்வர். சிஷ்யர்கள் கீழே அமர்வர். குரு, ‘அத வால்மீகி ராமாயண’, ‘அத மஹா பாரத’ என்று உபதேசிக்கத் துவங்குவார்.

முடிவில் ‘சுபம்’ என்றோ ‘சாந்தி’ என்றோ சொல்லி முடிப்பார். உலகில் வேறு எங்கும் காண முடியாத அற்புத இலக்கிய வழக்கு இது.

 

moon night

கடவுளை நேரிடையாக குறிப்பிடாவிட்டால், ‘லோகம்’, ‘விஸ்வம்’, ‘ஸ்வஸ்தி’ போன்ற மங்கலச் சொற்களைப் பயன்படுத்துவர்.

விஷ்ணு சஹஸ்ர நாமம், ஓம் ‘விஸ்வம்’ என்று துவங்கும்.

தமிழ் வழக்கு

சம்ஸ்கிருதம் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய தமிழும் இதை அப்படியே பின்பற்றுகிறது. ஆனால் தமிழில் பெரிய பட்டியல் உள்ளது.

ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (தமிழ் என்சைக்ளோபீடியா) வழங்கும் பட்டியல்:–

சீர், எழுத்து, பொன், பூ, திரு, மணி, யானை, தேர், பரி, கடல், புகழ், மலை, மதி, நீர், ஆரணம்(வேதம்), சொல், புயல், நிலம், கங்கை, உலகம், பரிதி (சூரியன்), அமிர்தம் ஆகியனவும் இவை தொடர்பன சொற்களும்.

 

தமிழில் கிடைத்த மிகப் பழைய நூலான, கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தொல் காப்பியம் ‘எழுத்து’ என்ற சொல்லுடன் துவங்கும்.

ஆயினும் பெரும்பாலான நூல்கள் ‘உலகம்’ என்ற சொல்லுடன் துவங்கும். முன்காலத்தில் இதை ‘லோகம்’ என்ற சம்ஸ்கிருதச் சொல் என்று கருதினர். ஆனால் எனது ஆராய்ச்சியில் இது இரு மொழிகளுக்கும் பொதுவான சொல் என்பது கண்டறியப்பட்டுளது. (ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதற்கும் தமிழ்-சம்ஸ்கிருத மூல மொழியே காரணம்).

sheep, sun

‘உலகம் உவப்ப வலனேர்பு’

சங்கத் தமிழ் நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு’ – என்று துவங்கும்

மற்ற நூல்களின் முதல் வரிகள்:–

‘உலகந்திரியா’ (மணிமேகலை),

‘உலகம் மூன்றும்’ (வளையாபதி),

‘உலகெலாம் உணர்ந்து’ (பெரிய புராணம்),

‘உலகம் யாவையும்’ (கம்ப ராமாயணம்)

‘நனந்தலை உலகம்’ (முல்லைப் பாட்டு),

‘மூவா முதலா உலகம்’ (சீவக சிந்தாமணி),

‘நீடாழி உலகத்து’ (வில்லி பாரதம்),

‘வையகம் பனிப்ப’ (நெடுநல் வாடை),

‘மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை’ (சிறு பாணாற்றுப்படை),

‘மாநிலஞ்சேவடியாக’ (நற்றிணை)

இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மாநிலம், வையகம், உலகம் – ஆகியன ஒரு பொருளுடைத்து.

ஒரு நூலை மங்கலச் சொல்லுடனே துவங்க வேண்டும் என்பது,

“வழிபடு தெய்வ வணக்கம் கூறி, மங்கல மொழி முதல் வகுத்தெடுத்துக் கொண்ட, இலக்கண, இலக்கியம் இடுக்கணின்றி, இனிது முடியும் என்மனார் புலவர்” என்னும் சூத்திரத்தில் உளது.

 

 

swastik, om lamps, kotipali shivratri

பழங்கால சம்ஸ்கிருத, பிற்கால தமிழ் கல்வெட்டுகள் ‘ஸ்வஸ்தி’ என்ற மங்கலச் சொல்லுடன் துவங்கும்.

பழைய தமிழ் திரைப்படங்கள், நூல்கள் எல்லாம் ‘சுபம்’, அல்லது ‘ஓம் சாந்தி’, ‘ஓம் தத்சத்’ என்று முடியும்.

பிரிடிஷ் லைப்ரரியில் நான் காணும் நூற்றாண்டுகளுக்கு முந்தைய நாவல்கள், நாடகங்களிலெல்லாம் இதைக் காண்கிறேன். வடமொழி நாடகம் அனைத்தும் ‘ஸ்வஸ்தி’ வாசகத்துடன் முடிவடையும். காளிதாசன் போன்ற உலக மகா கவிஞனும் கூட கடவுள் வாழ்த்துடன் துவங்கி, ஸ்வஸ்தி வாசகத்துடன் முடிக்கிறான்.

 

தமிழ் வேதமாகிய திருக்குறள் ‘அகர’ என்ற மங்கலச் சொல்லுடன் துவங்கும். ‘அ’ – என்ற சொல் அவ்வளவு புனிதமானது. உலகிலேயே மிகவும் பழைய சமய நூலான ரிக் வேதம் அக்னி – என்ற ‘அ’-காரத்துடன் துவங்கும்.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்னும் காவியம், ‘திங்கள், ஞாயிறு, மாமழை’ — ஆகிய மூன்றையும் வாழ்த்தித் துவங்கும்.

தொல்காப்பிய சூத்திரத்தில் கடவுள் வாழ்த்து பற்றிக் கூறுகையில், “கொடிநிலை, கந்தழி, வள்ளியென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்பார். அந்தக் ‘கொடிநிலை’, ‘கந்தழி’, ‘வள்ளி’ இதுதான் என்று சில உரையாசிரியர் பகர்வர். எப்படியாகிலும் இம்மூன்றும் மங்கலச் சொல் பட்டியலில் உள்ள சொற்களே!

உலகில் வேறு எங்குமிலாத இந்த மங்கலச் சொல் வழக்கு இந்து இலக்கியத்தில் மட்டும் இருப்பது பாரதீயப் பண்பாட்டின் தனிப்பெரும் முத்திரை ஆகும்!

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

–சுபம்–

 

தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2

Adhiyamaan and Avvaiyar

அதியமான், அவ்வையார்

First Part of Tolkappiya Athisayangal was published on 14th November 2014 (Post no 1410)

The Wonder that is Tamil – Part 3

தொல்காப்பிய அதிசயங்கள்

கட்டுரையை எழுதியவர் :– London swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1513; தேதி 24 டிசம்பர், 2014.

அதிசயம் 11

கி.பி.12 ஆம் நூற்றாண்டில் நேமிநாத ஆசிரியர் குணவீர பண்டிதர், தொல்காப்பியத்தைக் கடலாகவும் நேமிநாதம் என்னும் நூலை அக்கடலில் செல்லும் சிறு படகாவும் கொள்வார்:–

தொல்காப்பியக் கடலிற் சொற்றீபச் சுற்றளக்கப்

பல்காற் கொண்டோடும் படகென்ப

அதிசயம் 12

வழிபடு தெய்வம் நிற்புறங்காப்பப்

பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து

பொலிமின் (தொல். 1367)

நாம் விரும்பிய தெய்வத்தை வழிபடும் உரிமையையும், இறைவன் நம்மை எல்லா வளங்களும் கொடுத்துக் காப்பான் என்றும் தொல்காப்பியர் கூறுகிறார். பழிதீர் செல்வம் என்ற சொற்றொடர் குறிப்பிடத்த்க்கது. நல்ல வழியில் சம்பாதிக்கும் பொருள்!

tamil poets1

அதிசயம் 13

தந்தையர் ஒப்பர் மக்கள் (1092)

“தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை” — என்று தமிழில் ஒரு பழ மொழி உண்டு. மனுஸ்மிருதியில் பிள்ளை என்பவன் தந்தையின் மறு அச்சு என்கிறார். அதைத் தொல்காப்பியரும் தந்தையர் ஒப்பர் மக்கள் (1092)

என்கிறார்.

அதிசயம் 14

பெரும் பெயர் புலவர்கள்

தமிழில் பெயர்பெற்ற புலவர்களுக்கு சிறப்பு அடைமொழிகள் உள்ளன. கற்றறிந்தோர் எப்போதும் அந்த அடை மொழிகளைப் பயன்படுத்துவர்

ஒல்காப்புகழ் தொல்காப்பியன்

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்

வானோர் ஏத்தும் வாய் மொழிப் பல் புகழ்

ஆனாப் பெருமை அகத்தியன்

உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்

புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலன்

தெய்வப் புலவன் திருவள்ளுவன்

பல்கலைக் குரிசில் பவணந்தி

உளம்கூர் கேள்வி இளம்பூரணர்

ஆனாப் பெருமைச் சேனாவரையர்

WCTC/Padma Subramaniam

அதிசயம் 15

தொல்காப்பியர் தமிழுக்கு புதிய இலக்கணம் வகுத்தார் என்பதைவிட அவருக்கு முந்தியிருந்த கருத்துக்களைத் தொகுத்து நூல் வடிவில் தந்தார் என்பதே பொருந்தும். அவர் மற்றவர் வகுத்த விதிகளை மேற்கோள் காட்டும்போதெல்லாம் என்ப, மொழிப போன்ற வினைச் சொற்களைப் பயன்படுத்துகிறார். இவ்வாறு 287 இடங்களில் அவர் சொல்கிறார்.

அதிசயம் 16

பாணிணியில் சொற்செட்டை தொல்காபியத்தில் காண முடியாது. சொன்னதையே மீண்டும் சொல்லி நம் பொறுமையைச் சோதிக்கும் இடங்களும் உண்டு:–

ஆறறிவு உயிர்கள் பற்றிய சூத்திரத்தில்

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே என்று

திரும்பத் திரும்பச் சொல்லுவார்.

இதுபோல வேறு சில இடங்களில்

என்ன பெயரும் அத்திணையவ்வே,

மேலைக் கிளவியொடு வேறுபாடிலவே என்று

திரும்பத் திரும்பச் சொல்லுவார்.

paari

பாரி வள்ளல்

அதிசயம் 17

தொல்காப்பியர் 94 சம்ஸ்கிருதச் சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார். இது சங்க இலக்கியத்தை விட அதிகம் என்று கே கே பிள்ளை போன்றோர் செப்புவர்.

தொல்காப்பியத்தை முதல் முதலில் பிரசுரித்தவர் யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளை ஆவார். 1891ல் முதல் பதிப்பு அச்சிடப்ப்ட்டது. 1610 சூத்திரங்கள் கொண்ட 3 அதிகாரங்களையும் அவர் வெளியிட்டார்.

தொல்காப்பிய அதிசயங்கள்

astrologer

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1410; தேதி 14 நவம்பர், 2014.

‘ஒல்காப் புகழ் தொல்காப்பியன்’ எழுதிய தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் தமிழ் மொழியின் மிகப்பழைய நூலாகக் கருதப்படுகிறது. ஆயினும் இதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. தொல்காப்பியர் தரும் சில அதிசயச் செய்திகளை மட்டும் சுருக்கமாகக் காண்போம்.

1.தமிழர்களின் 4 முக்கிய தெய்வங்களில் இந்திரனையும் வருணனையும் சேர்த்த தொல்காப்பியர் ஏன் சிவபெருமானை அறவே ஒதுக்கிவிட்டார் என்பது இன்றுவரை புரியவில்லை. மாயோன் (விஷ்ணு), சேயோன் (முருகன்), வேந்தன் (இந்திரன்), வருணன் ஆகியோரை மட்டுமே நானிலத் தெய்வமாகக் குறிப்பிடுகிறார்.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள் 1-5)

2.தொல்காப்பியத்தில்
1610 சூத்திரங்கள் – சூத்திரங்கள் (நூற்பாக்கள்)
5630 சொல் வடிவங்கள்
மூன்று அதிகாரங்கள்
அதிகாரத்துக்கு 9 வீதம் 27 இயல்கள்
3999 வரிகள் உடையது
தொல்காப்பிய ஏட்டுச் சுவடிகளில் உள்ள பாட பேதங்கள் -2000
(13,699 தொடை வகைகள் உள்ளதாக தொல்காப்பியர் கூறுகிறார்— சூத்திரம் 1358)
தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் அறுவர் :—- இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர்.

3.பனம்பாரனார் எழுதிய தொல்காப்பியப் பாயிரம் தமிழ்நாட்டின் எல்லைகளைத் தெளிவாகக் கூறுகிறது:
வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகம் — என்றும்

தொல்காப்பியனார்
வண்புகழ் மூவர்தண்பொழில் வரைப்பின்
நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
யாப்பின் வழியது — 1336.தொல் — என்றும்

இதையே பாரதியார்
நீலத் திரை கடல் ஓரத்திலே — நின்று
நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை – வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு – என்றும் பாடினர்.
tolkappiyar

4.அதே பாயிரம், நான்கு வேதங்களையும் அறிந்த அதங்கோட்டு ஆச்சார்யார் என்ற பிராமணர் தலைமையில் நிலந்தரு திருவிற் பாண்டியன் சபையில் தொல்காப்பியம் அரங்கேறிய நற்செய்தியையும் நமக்குத் தரும்:–
நிலம்தரு திருவில் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து (பாயிரம்)

5.தமிழின் தனிச் சிறப்பு உயர்திணை, அஃறிணை என்ற பிரிவுகளாகும். மக்கள், கடவுளர் எல்லோரும் உயர்திணை. அஃதில்லாதது அஃறிணை என்பார் தொல்காப்பியர்:
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையில் இசைக்குமன சொல்லே (484)

6.உயிரினங்களை ஆறு அறிவு உடைய பிரிவுகளாகத் தொல்காப்பியர் பிரித்திருப்பதும் வேறு எங்கும் காணாத புதுமை:

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

tamil-lovers

தொல்காப்பியம் எவ்வளவுதான் சிறப்புடைத்தாலும் மேலே உள்ள சூத்திரத்தில் கூறியது கூறல் என்னும் குற்றம் ( பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே) — இருப்பதைக் காண்கிறோம். இதனால் பாணினியின் வடமொழி இலக்கணத்தையும் தமிழ் இலக்கணத்தையும் ஒருங்கே கற்றோர் பாணினியை இமயமலைக்கும் தொல்காப்பியனை விந்திய மலைக்கும் ஒப்பிடுவர்.

7.கடவுள் வாழ்த்து பற்றிச் சொல்லும் தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து அமையாதது ஏனோ என்று வியக்கத் தோன்றுகிறது. உயிர் எழுத்துக்களில் ஒன்றான ‘’ஔ’’ பற்றித் தொல்காப்பியத்தில் இருந்தாலும் திருக்குறளிலோ சங்க இலக்கியத்திலோ இந்த எழுத்தில் துவங்கும் சொற்களே இல்லை!!! இது மிகப் பெரிய தமிழ் அதிசயம்!!! ‘’ஔ’’ என்பது வடமொழி இறக்குமதியாக இருக்கலாம்!

8.தர்ம, அர்த்த, காம (மோட்சம்) என்ற வடமொழி நூல் வழக்கத்தை இவரும் திருவள்ளுவரும் அறம், பொருள், இன்பம் என்று அப்படியே பின்பற்றுகின்றனர் (காண்க சூத்திரங்கள்:-1038, 1363)

9.பெண்களுக்கு இருக்கவேண்டிய பண்புகளை அழகாகப் பட்டியலிட்டுள்ளார்:–

கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள் (1097)

10.பறவைகள், மிருகங்கள் போல எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் ஓடி விடக் கூடாது. திருமணத்திற்கு தசப் பொருத்தம் – பத்து வித பொருத்தங்கள் பார்க்க வேண்டும் என்பார் தொல்காப்பியர்:
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவுநிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (1219)

varadaraja iyer

11.எல்லோரும் கல்யாணம் என்ற பெயரில் பல மோசடிகள் செய்து பொய், பித்தலாட்டம் செய்யத் துவங்கிய பின்னர் ஐய்யர்கள் கல்யாணம் என்ற சடங்கை உண்டாக்கினர் என்று தொல்காப்பியர் கூறுகிறார்:

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே (1090)
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (1091)

சூத்திரம் 1090 மஹாபாரதத்தில் உள்ளது. ஒரு முனிவரின் மனைவியை மற்றொருவர் அழைத்துச் சென்றதைக் கண்டு வெகுண்டெழுந்தவர்கள் இப்படிச் சடங்குகள் செய்த கதை மஹாபாரதத்தில் வருகிறது.
சூத்திரம் 1091: ஆர்ய (சம்ஸ்கிருதம்)= அஜ்ஜ (பிராக்ருதம்)= அய்ய (தமிழ்)=ஐயர்.; ஜ– என்பது தமிழில் ய – ஆக மாறும். எ.கா. அஜன்= அயன்; கஜமுகன்= கயமுகன்; பிற மொழிகளிலும் இப்படி உண்டு. ஜீஸஸ்=யேசு, ஜூதர்=யூதர்)

12.தொல்காப்பியர் காலம் பற்றி தமிழர் இடையே கருத்து ஒற்றுமை காண்பது அறிது. 20,000 ஆண்டு முதல் கி.மு.முதல் நூற்றாண்டு வரை அவரது காலத்தை வைப்பர். மொழியியல் அறிவு இல்லாதோரும் உலக மொழிகளின் வளர்ச்சி பற்றி அறியாதோரும் அடிக்கும் கூத்து இவைகள்!

12.உலகில் எல்லோரும் இலக்கண நூல்களில் சொல், எழுத்து, சொற்றொடர் போன்றவற்றோடு நிறுத்திக் கொண்டனர். தொல்காப்பியர் மட்டும் பொருள் அதிகாரம் என்று ஒன்றைச் சேர்த்து இலக்கண நூலில் புதுமை செய்தார்! ஆனால் இந்தப் பொருளதிகாரம் அவர் எழுதியது அல்ல – இது ஒரு பிற்கால இணைப்பு என்று வெளிநாட்டுத் தமிழறிஞர் செப்புவர். நான் செய்த ஆய்வு முடிவுகளைத் தொகாப்பியம் பற்றிய எனது கட்டுரைத் தொடர்களில் கொடுத்து இருக்கிறேன்.

arumuganavalar

13. தொல்காப்பிய மயக்கம்
“சிலபல நூற்பாக்கள் சொற்கள் எளிமையாக இருந்தும், அவற்றின் உண்மைப் பொருளை நாம் அறிய இயலவில்லை
பாங்கன் நிமித்தம் பன்னிரண்டென்ப -1050
முன்னைய நான்கும் முன்னதற்கென்ப – 998
பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே – 1145

அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் –1021

என்றின்னவாறு பல இடங்களில் வரும் தொகைச் சொற்களும், உயர்ந்தோர், இழிந்தோர், கீழோர், மேலோர் என வரும் நிலைச் சொற்களும், கொடிநிலை, கந்தழி, வள்ளி எனவும், பால்கெழு கிளவி உயர்மொழிக் கிளவி, ஒருபாற்கிளவி எனவும் சுட்டு நகை சிறப்பு எனவும் வரும் பல்வகைச் சொற்களும் பொருள் மயக்கமாகவே உள. பொருள் மயக்கம் தொல்காப்பியச் சொற்களில் இல்லை. அக்காலத்து அவற்றின் பொருள்கள் தெளிவுடையனவே. உடன்பிறப்பு நூல்கள் இன்மையானும், தொன்மை யானும், உயர்ந்தோர், கீழோர், மேலோர் என்ற எளிய சொற்களுங் கூட நமக்குப் பொருள் காட்டவில்லை”— ( இதை மட்டும் நான் ‘’தொல்காப்பியக் கடல்’’, மூதறிஞர் வ.சுப.மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம் 1987 நூலில் இருந்து அப்படியே கொடுத்துள்ளேன்)

14.தொல்காப்பியர் ஒரு சம்ஸ்கிருத அறிஞர். ஏராளமான விஷயங்களை பாணீணீயம் (எழுத்து ஒலி பிறகும் இடங்கள்) மனுதர்ம சாத்திரம் (எண்வகைத் திருமணங்கள் மற்றும் உடன்கட்டை ஏறுதல்– சூத்திரம் 1025), மஹாபாரதம் முதலியவற்றில் இருந்து எடுத்தாண்டுள்ளார். சம்ஸ்கிருதச் சொற்களை தயக்கம் இன்றிக் கையாளுகிறார். எ.கா. கடைசி சூத்திரம் 1610-ல் ஞாபகம், மனம், உத்தி, முதலிய பல சொற்களைக் காணலாம்.

தொல்காப்பியம் முழுதும் படிக்கப் படிக்கச் சுவை தரும். பல வழக்கங்கள் இமயம் முதல் குமரிவரை ஒரே மாதிரி இருந்தது பாரத ஒற்றுமைக்குச் சான்று தருவனவாக உள்ளன.

இது தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—
தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி 1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)
தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013
தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013
மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)
தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி (அக்டோபர் 25, 2014)
தமிழனின் ஆறு பருவங்கள்:ஆரிய-திராவிட வாதத்துக்கு அடி (ஜூலை 22, 2014)
ராவணன் — பாண்டியர் சமாதான உடன்படிக்கை (ஜூன் 24, 2014)
தொல்காப்பியத்தில் துர்க்கை, அக்னி (மார்ச் 31, 2014)

No Brahmins ! No Tamil ! (posted on 12 /1 / 2012)
Tolkappian- A Genius ( posted on 12/9/2012)
Indra in the Oldest Tamil Book
Varuna In the Oldest Tamil Book
Did Tolkappiar copy from Sanskrit Books? (Sept.10, 2012)
Who was Tolkappiar? (Sept.9, 2012)

தொல்காப்பியமே என்ன என்று தெரியாதோர் முதலில் படிக்கவேண்டிய நூல்:– தொல்காப்பியக் கடல், மூதறிஞர் வ.சுப. மாணிக்கம், மணிவாசகர் பதிப்பகம் 1987. ஒவ்வொரு கட்டுரையிலும் தொல்காப்பியருக்கு ஆசிரியர் வெவ்வேறு காலம் கற்பித்து எழுதி இருந்தாலும் தொல்காப்பியத்தின் அருமைதனை, பெருமைதனை எடுத்துரைக்கும் எளிய நடை நூல் இது. தமிழர் வீடுகளில் இருக்க வேண்டிய நூல் இது.
Contact swami_48@yahoo.com

தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி

tolkappian-katturai

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1369; தேதி அக்டோபர் 25, 2014.

( கேள்விகள் –சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்-தொல்காப்பியத்திலிருந்து )
1.ஒல்காப் புகழ் தொல்காப்பியனாரே! தமிழனுக்கு கடவுள் யார்?
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள் 1-5)

2.துவக்கமே சுபமாக இருக்கிறது. விஷ்ணு, முருகன், இந்திரன், வருணன் நம் கடவுள்கள்.— வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகம் என்று பனம் பாரனார் கூறுகிறாரே?

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழா அமை இசைக்கும் சொல்லே (398)
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச் சொற் கிளவி (சூத்திரம் 400)

3.ஆம், புரிகிறது. செந்தமிழ் நிலத்தில் பேசும் இயற்சொற்கள் மாறாது– பக்கத்திலுள்ள 12 பகுதிகளிலிருந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள். இது தவிர திரி சொல், வட சொல் ஆகியனவும் உண்டு. ஒவ்வொரு நிலத்திற்கும் தெய்வம், உணவு, மிருகம், மரம், பறவை, முரசு, தொழில், இசை ஆகியவும் உண்டா?

தெய்வம் உணா மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகை இ
அவ்வகை பிறவும் கருவென மொழிப. (பொருள் 1-18)

4.சரி. அதைப் பட்டியலில் பார்த்துக்கொள்கிறேன். மனிதர்களுக்கு ஆறு அறிவு என்றால் மற்ற உயிரகளுக்கு எவ்வளவு அறிவு?

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

15FR-_TOLKAPPIYAM__1120361e

5.அது சரி, 1610 சூத்திரங்களில் 68 இடங்களில் ‘’என்மனார்’’ என்றும், 15 இடங்களில் ‘’வரையார்’’ என்றும் இன்னும் பல இடங்களில் ‘’என்ப, மொழிப’’ என்றும் கூறுகிறீர். இதைப் பார்த்தால் உமக்கு முன்னரே நிறைய விதிகள் இருந்து நீவீர் அவைகளத் தொகுத்தது போல் அல்லவோ இருக்கிறது?
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் (சொல் 402)

6.யான் பெற்ற இன்பம் இவ் வையகம் என்றும் ‘’லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து’’ — என்றும் பெரியோர்கள் கூறுகிறார்களே. நீங்கள். . . . ..

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்

7.உங்களுடைய உண்மைப்பெயர் த்ருணதூமாக்கினி என்று சிலர் சொல்லுகிறார்கள். நீங்கள் வேதம் கற்ற பார்ப்பனரா?
அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளவிற்கோடல் அந்தணர் மறைத்தே
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென

8.கடவுள் நம்பிக்கை இல்லாத தமிழரும் உங்கள் நூலைப் புகழ்கிறார்கள். நீரோ ‘’தர்மார்த்த காமம்’’ என்பதையும் கடவுளையும் பற்றிப் பேசுகிறீர். உண்மை என்ன?
கொடிநிலை,கந்தழி வள்ளியென்ற மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை

10.அட, நீரும் வள்ளுவனைப் போல அறம், பொருள் இன்பம் (தர்ம அர்த்த காம) பற்றிப் பேசிவிட்டீர் — பெண்கள் வாழ்க — என்பது உமது கொள்கையாமே?
செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான

11.தமிழில் மாற்றங்களை ஏற்க வேண்டுமா?
உணரக் கூறிய புணரியல் மருங்கிற்
கண்டு செயற்குரியவை கண்ணினர் கொளலே

tolkappaima

12.சரி. நீர் மாற்றங்களை ஆதரிப்பதற்கு நன்றி. ‘’பசுப் பாதுகாப்பு இயக்கம்’’ பற்றியும் நீர் பேசினீராமே?
வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக் களவின்
ஆ தந்தோம்பல் மேவற்றாகும் (1003)

13.போர் வேண்டாம் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். உமது கருத்து என்னவோ?
இரு பெரு வேந்தர் தாமும் சுற்றமும்
ஒருவரும் ஒழியாத் தொகை நிலை

14.நன்றி. நீரும் போரை எதிர்ப்பதற்கு நன்றி. வள்ளுவன் சுருங்கs சொல்லி விளங்கி வைத்தான். நீர் எதிர்பார்ப்பது என்ன?
ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதலின்றிப் பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்தமைப்பதுவே

15.அற்புத மாகச் சொன்னீர்கள். கண்ணாடியில் பார்ப்பது போல தெளிவு வேண்டும். அடடா, அருமை, அருமை. நன்றி! தொல்காப்பியனாரே!

முந்தைய 60 வினாடி பேட்டிகள்
இவைகளையும் படிக்க வேண்டுகிறேன்

1.அப்பருடன் 60 வினாடி பேட்டி
2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி
3.ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி
4.இளங்கோவுடன் 60 வினாடி பேட்டி
5.கம்பனுடன் 60 வினாடி பேட்டி
6.கண்ணதாசனுடன் 60 வினாடி பேட்டி
7.காரைக்கால் அம்மையாருடன் 60 வினாடி பேட்டி
8.சாக்ரடஸுசுடன் 60 வினாடி பேட்டி
9.சீத்தலைச் சாத்தனாருடன் 60 வினாடி பேட்டி
10..சுந்தரருடன் 60 வினாடி பேட்டி
11.தாயுமானவருடன் 60 வினாடி பேட்டி
12.தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி
12.திருஞானசம்பந்தருடன் 60 வினாடி பேட்டி
13.திருமூலருடன் 60 வினாடி பேட்டி
14.பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி
15.பாரதியுடன் 60 வினாடி பேட்டி
16.பாரதிதாசனுடன் 60 வினாடி பேட்டி
17.மாணிக்கவாசகருடன் 60 வினாடி பேட்டி
18.வள்ளுவருடன் 60 வினாடி பேட்டி
19.ஸ்ரீ கிருஷ்ணனுடன் 60 வினாடி பேட்டி
20.சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி
21.தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி
22.திரிகூடராசப்ப கவிராயருடன் 60 வினாடி பேட்டி

English 60 second Interviews:
60 second Interview with Swami Vivekananda
60 second Interview with Socrates
60 second Interview with Adi Shankara
60 second Interview with Sri Sathya Sai Baba

contact swami_48@yahoo.com