எங்கும் நிறைகின்ற பொருளே! (Post No 2660)

Togan-volcano_1369656a

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 25 March 2016

 

Post No. 2660

 

Time uploaded in London :–  6-21 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

விவேகானந்த அமுதம்

 

எங்கும் நிறைகின்ற பொருளே!

 

ச.நாகராஜன்

 

viveka 15 p

கிழவியின் வலி!

 

பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் மீது வீழ்ந்த அடி எல்லோர் மீதும் பட்ட ‘பிட்டுக்கு மண் சுமந்த கதையை’ நாம் அறிவோம்.

 

எங்கும் இருப்பதை உணர்த்துபவன் இறைவன் மட்டுமல்ல. அந்த அனுபவத்தை தீர்க்கமாக உணர்ந்து அவனுடன் ஒன்றி விட்ட அடியார்களும் எங்கும் இருப்பதையும் எங்கும் நடப்பதையும் அறிய வல்லவர்கள்.

 

ஸ்வாமி விவேகானந்தர் வாழ்க்கையில் நடந்த இரு அற்புத சம்பவங்களைக் காண்போம்.

 

மேலை நாட்டில் ஓய்வின்றி உழைத்ததால் ஸ்வாமிஜியின் உடல் நலம் குன்றி இருந்தது. அவர் தாயகம் திரும்பியவுடன் அவர் ஓய்வெடுக்க வேண்டிய அவசியத்தை அனைவரும் வ்ற்புறுத்தினர். அதை ஏற்று ஸ்வாமிஜி டார்ஜிலிங் சென்றார்.

அங்கு ஒரு நாள் காலை நடைப்பயிற்சியின் போது ஒரு வயதான கிழவி தன்னால் சுமக்க முடியாத சுமையைச் சுமந்து செல்வதைக் கண்டு வேதனையுற்றார்.

 

அவருடன் கூடச் சென்றவர்கள் ஸ்வாமிஜி படும் துன்பத்தைக் கண்டு அவர்களும் வேதனைப்பட்டனர்.

 

திடீரென்று எதன் மீதோ  தடுக்கி அந்தக் கிழவி கீழே விழுந்தாள். அவளது விலா எலும்புகளில் சரியான அடி. அவள் வலி தாங்காமல் அலறினாள்.

 

அதே சமயம் ஸ்வாமிஜியும் அலறினார். “என்னால் நடக்க முடியாது. பயங்கரமான வலி”  – என்றார் அவர்.

கூட இருந்த சீடர்கள், “எந்த இடத்தில் வலிக்கிறது, ஸ்வாமிஜி?” என்று கேட்டனர்.

 

கிழவிக்கு அடிபட்ட அதே இடத்தை –  விலா எலும்புகளைக்-  காண்பித்த ஸ்வாமிஜி, “இங்கே தான்” என்றவர், அந்தக் கிழவிக்கு எப்படிப்பட்ட அடி தெரியுமா?” என்றார்.

 

அனைவரையும் தானாகவே பாவித்த ஸ்வாமிஜியின் இந்த வாழ்க்கைச் சம்பவம் அவர் எப்படிப்பட்ட இரக்க சுபாவம் உள்ளவர், யார் எங்கு துயருற்றாலும் உடனே அவர் மனம் என்ன பாடுபடும் என்பதைக் காட்டும் சம்பவம்!

 

ஸ்வாமிஜி தனியே இருக்கும் போது மனித குலம் படும் துன்பத்தக் கண்டு அழுவார். அப்படி ஒரு இரக்க மனோபாவம் அவருக்கு.

 

 

பிஜிக்கு அருகே வெடித்த எரிமலை!

 

பேலூர் மடத்தில்  ஸ்வாமிஜி தங்கி இருந்த போது அவருக்கு அடுத்த அறையில் ஸ்வாமி விஞ்ஞானானந்தா தங்கியிருந்தார்.

ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு தன் அறையிலிருந்து வெளியே வந்த அவர் ஸ்வாமிஜி அமைதியின்றி தவித்தவாறே நடப்பதைக் கண்டார். ஆச்சரியப்பட்ட அவர் ஸ்வாமிஜியிடம், “ என்ன ஸ்வாமிஜி, தூங்கவில்லையா? தூக்கம் வரவில்லையா?” என்று கேட்டார்.

 

“நன்றாகத் தான் உறங்கிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு அதிர்ச்சி. உடனே எழுந்து விட்டேன். நிச்சயமாக உலகில் எங்கோ ஒரு பெரிய விபத்து நேர்ந்திருக்கிறது.  அதில் ஏராளமானோர் உயிரை இழந்திருக்க வேண்டும்”.  என்றார் ஸ்வாமிஜி.

 

 

ஸ்வாமி விஞ்ஞானானந்தா இதைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இங்கே ஒரு சிறிய அறையில் படுத்திருப்பவருக்கு உலகில் நடக்கும் பெரிய விபத்து எப்படித் தெரிய முடியும்?

 

மறுநாள்  பேப்பர் வந்த போது தான் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பிஜிக்கு அருகில் ஒரு எரிமலை வெடித்து ஏராளமானோர் அதில் உயிரை இழந்திருந்தனர். ஸ்வாமிஜி எந்த நேரத்தில் விபத்து நேர்ந்ததாக உணர்ந்தாரோ சரியாக அதே நேரத்தில் அந்த எரிமலை வெடித்த விபத்து நேர்ந்திருந்தது!

 

ஸ்வாமிஜி எங்கும் நிறைகின்ற பொருளை உணர்ந்தவர். அதனால் அவரும் கூட எங்கும் நிறைகின்ற பொருளாக ஆனவர்!

********

 

அன்னை தெரசாவுக்கு எதற்கு புனிதர் பட்டம்? லண்டன் பத்திரிக்கை கேள்வி (Post No 2644)

India-stamp5722mother-teressa

Compiled by london swaminathan

 

Date: 18 March 2016

 

Post No. 2644

 

Time uploaded in London :–  18-15

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

India-MotherTeresa

அன்னை  தெரசாவை ஒரு செயின்ட் , அதாவது புனிதர் என்று செப்டம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப் போவதாக தற்போதைய போப்பாண்டவர் ப்ரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்றைய லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்ட் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியானது. வழக்கமாக பத்திரிகைக்கு எழுதும் டான் ஜோன்ஸ் என்பவர்தான் இதையும் எழுதியுள்ளார்.

 

இந்திய அரசு இதுவரை அன்னை தெரசாவுக்கு மூன்று தபால்தலைகளை வெளியிட்டது. காங்கிரஸ் அரசு இப்படிச் செய்தபோது, மதமாற்றம் செய்யும் தெரசாவுக்கு எதற்கு இவ்வளவு தபால்தலைகள் என்று இந்து இயக்கங்கள் போர்க்கொடி தூக்கின. ஆனால் டான் ஜோன்ஸ் இந்த மாதிரி ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. ஒருவரை செயிண்ட் என்று அறிவிக்க வேண்டுமானால் அவர் செய்த இரண்டு அற்புதங்களாவது இருக்க வேண்டும் என்பது ரோமன் கதோலிக்க கிறிஸ்தவ மத மரபு. அன்னை தெரஸா செய்ததாகக் கூறப்படும் இரண்டு அற்புதங்களும் ஹோமியோபதி வைத்தியமே யன்றி அற்புதங்கள் அல்ல.அவை சரியான நொண்டிச் சாக்கு என்று அவர் எழுதியுள்ளார்.

 

இதோ அவரது வாசகங்கள்:

“செப்டம்பர் 4ஆம் தேதி அன்னை தெரஸா, புனிதர் ஆக்கப்படுவார் என்று வாடிகன் அறிவித்துள்ளது. இது கதோலிக்க அன்பர்களுக்கு ஆனந்தமளிக்கும் செய்தி என்பதில் ஐயமில்லை.ஆனால் நான் அப்படிக் கருதவில்லை. ஏனெனில் அன்னை தெரஸா செய்ததாகக் கூறப்படும் இரண்டு அற்புதங்களும் “உப்புக்குச் சப்பாணி, ஊருக்கு மாங்கொட்டை” என்ற கதையாக உள்ளன.

 

அந்தக் காலத்தில் புனிதர்கள், வாக்கிங் ஸ்டிக் எனப்படும் ஊன்றுதடியை மரமாக்கிக் காட்டினார்கள் (செயிண்ட் பாட்ரிக்).

பிராணிகளை மனிதர்கள் பேசுவது போல பேசவைத்தார்கள் (புனித எட்மண்ட்).

ஏசுபிரானுக்கு ஏற்பட்டது போல உடலில் காயங்களைத் தோன்றவைத்து அதிலிருந்து ரத்தம் வரச் செய்தார்கள் (அசிசி நகர புனித பிரான்ஸிஸ் மற்றும் பலர்).

வானத்தில் பறந்து காட்டினார்கள் (குபெர்டினோவின் புனித ஜோசப்).

எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னறிவித்தார்கள் (புனித மலாசி).

 

துடைப்பதற்கு துணியில்லாமலேயே ஈரமான பொருள்களை காயவைத்து அற்புதம் செய்தார்கள் ( ஸ்காட்லாந்தின் புனித மார்கரெட்).

இப்படி எவ்வளவோ சொல்லலாம்.

மதர் தெரசாவின் பெயரில் இரண்டே அற்புதங்கள் உள்ளன. அவர் யாரோ ஒருவரின் அடிவயிற்றில் தோன்றிய நோயைப் போக்கினாராம்; இன்னொருவர்க்கு மூளையில் ஏற்பட்ட கட்டியை குணப்படுத்தினாராம். மரியாதையுடந்தான் சொல்லுகிறேன் (கிண்டலோ பகடியோ அல்ல); இது அற்புதமல்ல; ஹோமியோபதி சிகிச்சைதான்”

 

இவ்வாறு லண்டன் பத்திரிக்கையில் டான் ஜோன்ஸ் எழுதியுள்ளார்.

rs 20 theresa

10,000 புனிதர்கள்!

ரோமன் கத்தோலிக்க மதத்தில் குறைந்தது 10,000 புனிதர்கள் இருக்கிறார்கள். முன்னர் 40 அல்லது 70 பேரை ஒரே நாளில் புனிதர் ஆக்கியபோதே பலரின் புருவங்கள் உயர்ந்தன. தற்போதைய போப், 800க்கும் மேலானோரை ஒரே நாளில் புனிதராக்கியவுடன் பலரின் புருவங்களும் நெளிந்தன. இவர் என்ன புனிதத்தன்மையே இல்லாமல், கிலோ கணக்கில், லிட்டர் கணக்கில் புனிதர்களை அளப்பார் போலிருக்கிறதே என்று பலரும் அங்கலாய்த்தார்கள். ஆனால் ஒரே இதாலிய நகரத்தைச் சேர்ந்த, அந்த 800 பேரும் மதம்மாற மறுத்தமைக்காக முஸ்லீம்களால் சிரச் சேதம் செய்யப்பட்டவர்கள். அதனால்தான் அவர்கள் புனிதராக்கப்பட்டனர் என்று வாடிகன் விளக்கமளித்தது.

 

-சுபம்-

அகநானூற்றுப் பாடலில் யாக குண்ட ஆமை!! புரியாத புதிர்!!! (Post No 2607)

charles-yaga

படம்: பிரிட்டிஷ்  இளவரசர் சார்ல்ஸ், கெமில்லா பார்க்கர், சுவாமி ச்தானந்த சரஸ்வதி

Research article written by london swaminathan

Date: 7 March, 2016

 

Post No. 2607

 

Time uploaded in London :–  9-26 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; 

 

 

எனது பிளாக்கிலுள்ள 2600 கட்டுரைகள் குறித்து, நாள் தோறும் எனக்கு  ஈ மெயில் மூலம் வரும் பல கடிதங்களில் ஒன்று இதோ:–

 

சார்,
அகநானூறு 361
‘தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,    (5)
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்’ என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
கரியாப் பூவின் பெரியோர் ஆர,     (10)
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,     (15)
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. –
எயினந்தை மகனார் இளங்கீரனார்

சார்,

இந்த பாடலின் பொருள் என்ன?
உயிர் பலியிடுதலை (ஆமை) சொல்கிறதா?

 

Yours sincerely

XXXX

rudra-baba

படம்: அதிருத்ர மஹா யக்ஞம், ஸ்ரீ சத்ய சாய் பாபா

 

இந்தப் பாடல் எனக்கும் பல ஆண்டுகளாகப் பொருள் விளங்காத பாடல். டாக்டர் இரா. நாகசாமி போன்ற சம்ஸ்கிருதமும், தமிழும் நன்கறிந்த ஒருவர்தான் இதற்கு சரியக விளக்கம் தர முடியும்.நானும் கொஞ்சம் முயற்சி செய்கிறேன்.

 

இபோதுள்ள பொருள்:

வாடாத மலரையுடைய தேவர் உண்பதற்காகத் தீ ஓங்கிய வேள்விக் குண்டத்தில் இடப்பட்ட ஆமை தான் முன்பு இருந்த நிழல் பொருந்திய பொய்கையில் போவதைப் போல

 

—என்பது நூல்கள் தரும் விளக்கம். ஆனால் இந்த உவமை அங்கு பொருத்தமாகவுமில்லை. மேலும் மக்கள் நன்கறிந்த ஒரு விஷயத்தைத்தான் உவமையாகக் கொடுக்கவேண்டுமென்பது செய்யுள்விதி. அவ்வகையிலும் இது பொருத்தமில்லை. ஏனெனில் அஸ்வமேத யாகத்தில் பலியிடப்படும் நூற்றுக் கணக்கான தாவரங்கள், பிராணிகள், ஹோமத் திரவியங்களில் ஒன்று , ஆமை, எனப் படித்திருக்கிறேன்.

 

மனு தர்ம சாஸ்திரத்தில், இறந்து போன முன்னோர்களுக்கு திதியில் (திவசத்தில்) வழங்கக்கூடிய மாமிசப் பொருட்களில் ஆமை மாமிசமும் ஒன்று. ஆனால் இதை மூன்று வருணத்தாரில் யார் வழங்கினர், எப்படி வழங்கினர் என்பதற்கு விளக்கமில்லை. வேள்வியில் வழங்கினரா, அல்லது, கண்ணப்ப நாயனார் செய்ததுபோல நைவேத்தியம்/படையல் செய்தனரா என்பதையும் அறியோம்.

 

அகநானூற்றுப் பாடலோ ஒரு ‘செக்ஸி’ (sexy) பாடல் (அவளுடைய வார் (Bra ப்ரா) அணிந்த முலைப்பரப்பு முயக்கத்தை ஒரு நூல், இடையில் தடுப்பதாயினும் அதை வெறுக்கும் மிகப் பெரிய காதலுடன் இன்பம் அனுபவிக்கும் ) . அதிலும் பிராமணரல்லாத ஒரு புலவர் (?) இப்படிப் பாடியதை, நாம் ஒப்புக்கொண்டால் தமிழ் நாட்டில் யாக யக்ஞங்கள் மிக, மிகப் பெரிய அளவில் – குறிப்பாக மன்னர்கள் மட்டுமே நடத்தும் அஸ்வமேத யாகம் — நடந்திருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அல்லது செக்ஸி கவிதையில் இப்படி ஒரு உவமை வராது!

 

(முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியன் அஸ்வமேத யாகம் நடத்தி, குதிரைப் படத்துடன் நாணயம் வெளியிட்டது பற்றியும், பாண்டியர்கள் இப்படி அஸ்வமேத யாகம் நடத்தி அவப்ருத ஸ்நானம் செய்வது பற்றி காளிதாசன் ‘ரகுவம்ச’ காவியத்தில் பாடியது பற்றியும் எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சொல்லியிருகிறேன்)

பாடல் வரி ‘கரியாப்பூவின் பெரியோர்’ = வாடாத மலருடைய பெரியோர்கள்= தேவர்கள். இவர்கள் வெளி உலக (Extra Terrestrials எக்ஸ்ட்ரா டெர்ரெஸ்ட்ரியல்) மனிதர்களா? என்றும் ஒரு ஆர்ச்ச்ய்ச்சிக் கட்டுரை எழுதியிருக்கிறேன். தேவர்களுக்கு வியர்க்காது, தேவர்கள் செக்ஸ் (Sex) செய்ய முடியாது, தேவர்களின் கால்கள் நிலத்தில் படியாது, தேவர்கள் போட்டுக்கொண்ட பூ மாலைகள் வாடாது, தேவர்கள் நினைத்த மாதிரத்தில் காற்று வழியாக பல உலகங்களுக்குச் செல்ல முடியும், தேவர்கள் கண் சிமிட்டமாட்டார்கள் –என்று நமது புராணங்கள் வருணிப்பதால் இவர்கள் – வெளி உலக வாசிகள் (ET) என்றும் முன்னரே ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளேன்.

தித்தியம்= வேள்விக் குழி (யாக குண்டம்); வியப்பான விஷயம்! சுமார் 30,000 வரிகளையுடைய சங்க இலக்கியத்தின் 18 புத்தகங்களில், இந்த தித்தியம் என்னும் சொல், ஒரே இடத்தில்தன் கையாளப்பட்டுள்ளது! இது சம்ஸ்கிருதச் சொல்லா என்பதையும் ஆராய வேண்டும். ‘தைத்ய’ என்றால் திதி என்னும் பெண்ணின் மைந்தர்களான தைத்யர்கள், அதாவது அசுரர்கள். அந்தப் பொருளும் இங்கே பொருந்தாது.தித்தி, தித்தன் – என்ற சொற்கள் பல இடங்களில் வருகிறது. அவற்றின் பொருளும் இங்கே பயன்படா.

–subham–

 

சுவாமிஜிக்கு ஆவிகள் மீதும் பரிவு! (Post No.2583)

coin1

Written by S Nagarajan

 

Date: 29  February 2016

 

Post No. 2583

 

Time uploaded in London :–  5-50 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

coin2

அதீத உளவியல் ஆற்றல்

 

ஸ்வாமி விவேகானந்தரின் அற்புத அனுபவங்களும் ஆற்றலும்! – (5)

ச.நாகராஜன்

 

 

ஆவிகள் மீதும் பரிவு

 

ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் ஆவிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு.

 

சென்னையில் அவர் இருந்த சமயம் சில ஆவிகள் அவரைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தன.

 

இது நடக்கப் போகிறது, அது நடக்கப் போகிறது என்றெல்லாம் அவை ஸ்வாமிஜியை அடிக்கடி பயமுறுத்தி வந்தன.

இதெல்லாம் பொய் என்பதை ஸ்வாமிஜி நன்கு அறிவார். என்றாலும் தொந்தரவு தொந்தரவு தானே!

 

ஆரம்பத்தில் ஸ்வாமிஜி இவற்றைப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த ஆவிகளின் தொந்தரவு கட்டுக் கடங்காமல் எல்லை மீறிப் போனது.

அவர் சற்று கோபம் கொண்டார். இதைக் கண்ட ஆவிகள் இப்போது தங்கள் பரிதாப நிலையைத் தெரிவித்துக் கெஞ்ச ஆரம்பித்தன. தங்களுக்கு நற்கதி அளிக்குமாறு வேண்டின.

ஒரு நாள் அவர் மெரினா கடற்கரைக்குச் சென்றார். அங்கு அவர் கையில் ஒரு பிடி மணலை எடுத்துக் கொண்டார். அதையே தர்ப்பணப் பொருளாகப் பாவித்து அந்த ஆவிகளுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

 

அந்த ஆவிகளின் தொந்தரவு அன்றோடு நீங்கியது. அவை நற்கதி பெற்று விட்டன போலும்!

 

ஸ்வாமிஜியின் எல்லையற்ற கருணை ஆவிகளுகும் கிடைத்தது ஒரு அதிசயமே!

coin3

 

கழுத்தில் வெட்டுண்ட ஆவி

 

இன்னொரு சம்பவம் கோபால் லால் என்பவரின் தோட்ட வீட்டில் நடந்தது. ஸ்வாமிஜி ப்ரேமானந்தருடன்  ஒரு முறை அமர்ந்தவாறு அந்த வீட்டில் பேசிக் கொண்டிருந்தார்.

திடீரென்று அவரை நோக்கிய ஸ்வாமிஜி, பாபுராம்!  நீ இப்போது எதையாவது கண்டாயா?” என்று கேட்டார்.

அவர், “இல்லை” என்றார்.

 

“இப்போது நான் ஓரு ஆவியைக் கண்டேன். அதன் கழுத்து அறுபட்டிருந்தது. கெஞ்சும் பார்வையில் அது தனக்கு நற்கதி அருளுமாறு கேட்டது.” என்றார் ஸ்வாமிஜி.

பின்னர் கைகளைத் தூக்கி அந் ஆவிக்காகப் பிரார்த்தித்து அவர் அதை ஆசீர்வதித்தார்.

 

விசாரித்த போது தான் ஒரு உண்மை தெரிய வந்தது.

அங்கே பல வருடங்களுக்கு முன்னர் ஒரு பிராம்மணன் வாழ்ந்து வந்தான்.

 

பணத்தைக் கடனாகக் கொடுத்து வந்த அவன் கொள்ளை வட்டி வசூலித்து வந்தான்.

 

இந்த வட்டியின் கொடுமை தாங்காத ஒருவன் அந்த பிராமணனைக் கழுத்தை வெட்டிக் கொன்று விட்டான்.

அலைந்து திரிந்த அந்த அந்தணனின் ஆவியே ஸ்வாமிஜியிடம் அருள் வேண்டிக் கெஞ்சியது.

 

அனைவருக்கும் அருள் பாலிக்க வந்த ஸ்வாமிஜி ஆவிக்கா மாட்டேன் என்பார். அருளாசி தர, ஆவியும் நற்கதி அடைந்தது.

இது போல இன்னும் சில நிகழ்ச்சிகள் அவர் வாழ்வில் உண்டு.

  • தொடரும்
  • தொடரில் முன் நான்கு அத்தியாயங்களைப் படிக்காதவர்கள் படிக்கலாம்..

 

–subam-

கடலுக்கும் ஆற்றுக்கும் இடையே உரையாடல்! (Post No 2551)

IMG_1927

Translated  by London swaminathan

 

Date: 18  February 2016

 

Post No. 2551

 

Time uploaded in London :–  6-07 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

மழைக் காலம் வந்தது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. எல்லா ஓடைகளும் தண்ணீரைக் கொண்டுவந்து கொட்டின. மறு கரையே தெரியாத அளவுக்குப் பரந்து ஓடியது. அக்கரையில் நின்ற பசுமாட்டுக்கும் வீட்டுக்கும் இடையே வித்தியாசம் சொல்ல முடியாத அளவுக்குச் சின்னதாகத் தெரிந்தது. ஆற்றுக்கு ஒரே குஷி! நேராக சமுத்திரதுக்குச் சென்றது. இது வரை தன்னைவிட சிற்றோடை களையே கண்ட, அந்த ஆற்றுக்கு சமுத்திரத்தைப் பார்த்த மாத்திரத்தில் ஒரே மலைப்பு, திகைப்பு. ஆர்ப்பரிக்கும் கடலைக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தது.

 

IMG_1928

ஆறு சொன்னது:

“அரை வேக்காடுகளுக்கு முழு உண்மை தெரியாது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். என் விஷயத்தில் அது உண்மையாகிவிட்டது. கடந்தகாலத்தில் கன்பூசியஸின் கல்வி அறிவையும், ‘போ’வின் வீரதீரத்தையும் குறைகூறுவதைக் கேட்டிருக்கிறேன். இப்போது விரிந்து பரந்த உன்னைக் கண்டவுடன் என்னால் நம்ப முடியவில்லை. உன்னை மட்டும் நான் இன்று கண்டிருக்காவிட்டால், என் சிற்றறிவைக் கண்டு, விஷயம் தெரிந்தோர் என்னைப் பார்த்துப் பரிகசித்திருப்பார்கள்.

 

இதற்கு சமுத்திரம் பதில் சொன்னது:

“கிணற்றுத் தவளையிடம் போய் சமுத்திரத்தைப் பற்றிப் பேசினால் புரியுமா? கோடைகால ஈக்களிடம் போய், பனிக்கட்டி பற்றி பேசினால் அதுகளுக்கு விளங்குமா? அதிகம் படித்தவனிடம் சட்டம் பற்றிப் பேசினால் அவனுக்கு என்ன தெரியும்? இப்போது நீ, என்னைப் பார்த்துவிட்டதால், உனக்கு பெரியது, சிறியது தெரியும். இனிமேல் நான் உன்னிடம் பெரிய கொள்கைகளை எடுத்துரைக்கலாம். உலகில் சமுத்திரத்தை விடப்பெரியது கிடையாது. உலகிலுள்ள எல்லா நதிகளும் இதில் விழுகின்றன. ஆனால் கடல் நிரம்பி வழிந்ததே இல்லை. இதிலிருந்து எவ்வளவோ தண்ணீர் வெளியேறினாலும் இதற்கு வெள்ளம், வறட்சி என்ற பிரச்சனையே இல்லை. எல்லா ஆறுகளையும் ஓடைகளையும் விடப் பெரியது. ஆயினும் நான் என்னைப் பற்றி பெருமை பேசுவதில்லை. எனது உருவத்தை இந்தப் பிரபஞ்சம் எனக்கு அளித்துள்ளது. ஆக்க சக்தி, அழிவு சக்தி என்னும் பிரபஞ்சம் முழுதும் பரவிய கொள்கையிலிருந்து எனக்கு சக்தி கிடைக்கிறது. நான், பெரிய பூமியில் ஒரு கூழாங்கல்லைப் போன்றவன்; பெரிய மலையில் ஒரு சின்னப் புதர் போன்றவன். மனிதனைக்கூட ஒரு முடியின் (மயிர்)நுனிதான் என்று ஒப்பிடுகிறார்கள்.

 

அளவுகளுக்கு, உருவங்களுக்கு எல்லையே கிடையாது. காலம் எல்லையற்றது. நிலைமைகள் மாறிக்கொண்டே இருக்கும். நாம் இடக்கூடிய பெயர்களும் முடிவானவை அல்ல. இப்படி இருக்கையில் ஒரு முடியின் நுனிதான் அளவில் சிறியது என்றோ பிரபஞ்சம்தான் மிகவும் வியாபகமானது என்றும் எப்படிச் சொல்ல முடியும்?”

IMG_1926

–சுபம்-

108 உபநிஷத்துகளின் பட்டியல் (Post No. 2539)

IMG_2976

List of 108 Upanishads in Tamil

 

Compiled by london swaminathan

 

Post No. 2539

Date: 14th February 2016

 

Time uploaded in London:- 11-55

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

 

swami_48@yahoo.com)

 

தமிழில் 108 உபநிஷத்துகளின் பெயர்கள் உள்ள பழைய நூல் ஒன்றை, பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். அதன் விவரங்கள் கீழே உள்ளன. ஆங்கிலத்தில் ஏற்கனவே 121 உபநிஷத்துகளின் பெயர்களை வெளியிட்டுள்ளேன்.

 

 

 

IMG_2980

 

IMG_2981

 

IMG_2982

 

IMG_2984

IMG_2986

 

IMG_2987

My Previous Upanishad Articles in English:–

List of 121 Upanishads; posted on 9 December 2014

Humour in the Upanishads 23 April 2014

Why did Shah Jahan’s son translate the Upanishads? 11 December 2014

Plato used Hindu Microcosm and Macrocosm 20 June 2015

Da..Da…. Da….. Story, posted 19 February 2014

 

 

List of 108 Upanishads in Tamil

 

Compiled by london swaminathan

 

Post No. 2539

Date: 14th February 2016

 

Time uploaded in London:- 11-55

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

 

swami_48@yahoo.com)

 

தமிழில் 108 உபநிஷத்துகளின் பெயர்கள் உள்ள பழைய நூல் ஒன்றை, பிரிட்டிஷ் லைப்ரரியில் கண்டேன். அதன் விவரங்கள் கீழே உள்ளன. ஆங்கிலத்தில் ஏற்கனவே 121 உபநிஷத்துகளின் பெயர்களை வெளியிட்டுள்ளேன்.

 

 

 

My Previous Upanishad Articles in English:–

List of 121 Upanishads; posted on 9 December 2014

Humour in the Upanishads 23 April 2014

Why did Shah Jahan’s son translate the Upanishads? 11 December 2014

Plato used Hindu Microcosm and Macrocosm 20 June 2015

Da..Da…. Da….. Story, posted 19 February 2014

புனித அய்யர் மலையைப் பற்றிய கதைகள்! (Post No. 2533)

IMG_9502 (2)

Written by london swaminathan

 

Post No. 2533

Date: 12th February 2016

 

Time uploaded in London  காலை 10-32

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

ஆஸ்திரேலியாவின் மத்தியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வறண்ட பிரதேசம் காணப்படும் பொட்டை வெளியில் அய்யர் மலை நிற்கிறது. இது உலக அதிசயங்களில் ஒன்று. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் புனிதச் சின்னம் இது.

 

வரலாற்று ரீதியிலும், புவியியல்  ரீதியிலும் இது ஒரு முக்கியச் சின்னம். பழங்குடி மக்கள் இதை உள்ளூரு என்று அழைபர். இந்த முறை எனது ஆஸ்திரேலியப் பயணத்தில் ஐய்யர்ஸ் ராக் எனப்படும் உள்ளூருக்குப் போகமுடியவில்லை. நான் சிட்னி மியூசியத்தில் கண்டதையும், புத்தகத்தில் படித்ததையும் கொண்டு இக்கட்டுரையை வரைகிறேன்.

 

இமயமலையில் பெரும் பனிநிறைந்த பொட்டை வெளியில் கயிலாயம் தனியாய் நிற்கிறது. அதை நாம் சிவனின் வடிவமாக, உறைவிடமாக வணங்குகிறோம். அதுபோல செந்நிறக் கல வகையாலான ஒற்றைக் கல் இது. சூரிய ஒளியில் கயிலாயம் தகதவென மின்னுவது போல இதுவும் செந்நிறப் பிழம்பாகக் காட்சிதருகிறது. வெய்யிலுக்கு ஏற்ப இதன் நிறமும் மாறுகிறது. இதன் உயரம் 1115 அடி; சுற்றளவு ஆறு மைல். தென் ஆஸ்திரேலியப் பிரதமராக இருந்த ஹென்றி அய்யர்ஸ் என்பவரின் பெயரை வெள்ளைக்காரகள் இம்மலைக்குச் சூட்டி ஆக்ரமித்தார்கள். ஆயினும் பழங்குடி மக்களின் உரிமை வலுக்கவே 1985 ஆம் ஆண்டில் இம்மலையை, ஆஸ்திரேலிய அரசு, பழங்குடி மக்களிடம் ஒப்படைத்து, பின்னர் 99 ஆண்டு குத்தகைக்கு  எடுத்துள்ளது. இன்று இது பெரிய சுற்றுலாத் தலம். ஆயினும் எளிதில் போக முடியாது. பக்கத்திலுள்ள அலீஸ் ஸ்பிரிங்ஸ் என்னும் ஊரே 450 மைல் தொலைவில் இருக்கிறது. விமானத்தில்தான் செல்ல முடியும்.

IMG_2401

இந்த மலையைச் சுற்றி 60 கதைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவின் எல்லா பழங்குடி மக்களின் பாதைகளும் இங்கு சங்கமிக்கின்றன. பாறையின் ஒவ்வொரு முகட்டும் ஒரு கதை சொல்லும். வேதகால மக்கள் எப்படி வாய்மொழியாக வேதங்களைப் பாதுகாத்தார்களோ, அது போலப் பழங்குடி மக்களும் பாடல் வடிவில் பல கதைகளைப் பாதுகாத்துப்  பாடிவருகிறார்கள். எல்லாம் பாம்பு, பல்லி தொடர்பான கதைகளாக இருக்கும். குனியா, வன்னாபி, வானவில் பாம்பு. விஷ ,மலைப்பாம்பு என்று பல வகைகள். ஒவ்வொன்றும் அந்தந்த இன மக்களைக் குறிக்கும்

 

இந்த அய்யர் மலையில் பல பழங்கால வண்ண ஓவியங்கள் இருக்கின்றன. 30 மைல் தொலைவில் கட தூஜா என்னும் இடமிருக்கிறது இது பெண்களுக்கு புனிதமான இடம். தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு பெண்ணின் உடலமைப்புபோலத் தோன்றும். நாம் சதி என்னும் பார்வதி தேவி தட்ச யக்ஞத்துக்குப் பின்னர் கோபமடைந்து தனது உடலை எரித்தபோது அதன் பகுதிகள் விழுந்த இடமெல்லாம் எப்படி சக்தித் தலங்கள் ஆனதாக நம்புகிறோமோ அதே போலப் பழங்குடி மக்களும் புனிதமான பெண்ணின் உடல் என்று நம்புகின்றனர்.

 

ஆஸ்திரேலியாவின் படைப்புக் கதைகள் பழங்குடி மக்களின் புராணத்துக்கு அடிப்படையாக அமைகிறது. இதைக் கனவுநேரம் என்று அவர்கள் மொழியில் சொல்லுவர். நாம் திருமால், பாற்கடலில் பள்ளிகொண்டு அறிதுயில் செய்கிறார் என்பது போல இது. இந்தப் படைப்புக்காலத்தில் இரண்டு பையன்கள் , உளூரு மலையை உருவாக்கியதாக அவர்கள் கதைகள் சொல்லுகின்றனர். மேலும் குனியா என்னும் மலைப்பாம்பு மக்களை நீரு என்னும் விஷப் பாம்பு ஆட்கள் தாக்கியபோது படைப்புகாலம் முடிவுக்கு வந்தது என்பர்.

 

அவர்கள் புராணப்படி, முன்னோர்களின் ஆவிகள் இந்த உலகைப் படைத்ததாகவும், அவர்கள் பல இடங்களுக்கும் சென்று பெயர் சூட்டியதாகவும் அவை பாடல் வடிவில் உள்ளன என்றும் சொல்லபடுகிறது. இந்த விஷயங்களை, சமயத் தலைவர்கள் மட்டுமே அறிவர் என்பர். இது நமது வேதப் பாடல்களை ரிஷிகள் மட்டுமே “கேட்க” (சுருதி) முடியும் என்பதைப் போல. ஒரு பழங்குடி இனத் தலைவருடன் பயணம் செய்தால் அவர், ஒவ்வொரு முக்கிய இடத்துக்கும் அழைத்துச் சென்று அது தொடர்பான பாடல்களைப் பாடிக் கொண்டேயிருப்பார்.

 

மற்றொரு கதை குனியாவும் மாலாவும், ஒரு முக்கிய சடங்கிற்கு குறித்த காலத்தில் வராததால், விண்டுல்கா என்னும் மேற்குப்பகுதி மக்கள் கோபமடைந்ததாகவும் பின்னர் பலர் கொல்லப்பட்டதாகவும் சொல்கிறது.

IMG_9501

No. 22 Kata Tjuta and No.23 Uluru in this map.

 

எனது கணிப்பு

பழங்குடி மக்கள் பாம்பின் பெயரில் மக்களை அழைப்பதைப் பார்க்கையில் இவர்களும் இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்த நாகா இன மக்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அர்ஜுனனும் கிருஷ்ணனும் பழங்குடி நாகர்கள் எதிர்ப்பையும் மீறி காண்டவ வனத்தை எரித்ததையும் இதனால் நாகர்கள் – பாண்டவர்கள் ஜன்மப் பகை பல தலைமுறைகளுக்குப் பரவி பரீட்சித் கொல்லப்படவும், ஒரு நாகா இன ஆள் (பாம்பு) அவரைக் கொன்றதால் ஜனமேஜயன் சர்ப்ப யக்ஞம் நடத்தி பாம்புகளைக் (நாகா இன மக்களை) கொன்றதையும், பின்னர் இருவருக்கும் உறவினரான ஆஸ்தீக மகரிஷி சமாதான உடன்படிக்கை செய்து கொடுத்ததையும் இந்த பல்லாயிரமாண்டு வரலாற்றை பிராமணர்கள் தினமும் செய்யும் சந்தியாவந்தனத்தில் சொல்லிவருவதையும் முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விரிவாக எழுடியுள்ளேன் ( மாயா இன மக்கள் இந்திய நாகர்களா – என்ற கட்டுரையில் விவரம் காண்க) ).

 

 

பின்னர் மய தனவன் என்ற ஒரே ஒரு நாகர் இன மனிதன் மட்டும் அர்ஜுனனின் உதவியைப் பெற்றதையும் நமது புராணங்கள் விளக்குகின்றன. இவனது தலைமையில் பாதாள லோகத்துக்கு (தென் அமெரிக்கா) சென்றவர்களே மய= மாயா நாகரீகத்தைத் துவக்கினர். எகிப்தின் முதல் மன்னன் மனு, மாயா இன முதல் மன்னன் ஆகிய அனைவரும் கலியுக முதல் ஆண்டான கி.மு.3102-ல் ஆட்சி துவக்கியதாக அந்தந்த நாட்டு வரலாறு சொல்வதும், ஆஸ்தீக மகரிஷி பெயரில் அஸ்டெக் நாகரீகமிருப்பதும் இவைகளௌக்கு மேலும் சான்று பகரும். இதே போல ஆஸ்திரேலியாவிலும் நாகர்களே சென்று ஆட்சி அமைத்ததால் எல்லாம் பாம்பின் பெயரில் அமைந்துள்ளன. பல்வேறு காலத்தில் – 40,000 ஆண்டுகளில் — பல நாகா அணிகள் சென்றதால், கோஷ்டி மோதல் ஏற்பட்டிருக்கலாம்.

 

மாயா, ஆஸ்திரேலியப் பழங்குடிகள், எகிப்திய மன்னர்கள் ஆகியோருடன் வேறு பல ஒற்றுமைகளும் நிலவுவதை தனித் தனி ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கொடுத்து வதுள்ளேன். அதன் பிண்ணனியில் நான் கூறுவதை வைத்துப் பார்த்தால் நான் எதையும் மிகைப்படுத்தவில்லை என்பது விளங்கும்.

 

இந்துக்களுக்கு கன்யாகுமரிக்குக் கீழே 7 பாதாள லோகங்கள் இருப்பது நன்கு தெரியும். கடலில் சென்று அடையும் எல்லா தீவுகளையும் நாகர் தீவு என்றும் அங்குள்ள பெண்கள் நாக கன்னிகைகள் என்றும் சொல்லி வந்தனர். பல்லவர் வரலாறு, மணிமேகலையில் சோழர் வரலாறு முதலியவற்றிலும் இதைக் காணலாம்.

IMG_9505 (2)

ஆஸ்திரேலியாவில் முதல் முதலில் குற்றவாளிகளை மட்டுமே குடியமர்த்தி வந்தனர். இதே போல வாமனாவதாரத்திடம் தோற்றுப் போன மஹா பலி சக்ரவர்த்தியையும் தென் அமெரிக்கவுக்கு நாடு கடத்தி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திரும்பிவரலாம் என்று பணித்தனர். அப்படி வந்த நாளையே இன்று வரை மலையாளிகள் ஓணம் என்று கொண்டாடிவருகின்றனர். இதுபோலவே, வேத முறைகளைக் கைவிட்ட விஸ்வாமித்திரரின் மகன்களை தெற்கே அனுப்பி அவர்கள் திராவிடர்கள் எனப் பெயர் பெற்றனர் என்றும் புரணங்கள் கூறும். ராம லெட்சுமணர், பஞ்ச பாண்டவர்கள் கூட 14 ஆண்டுகளும், 13 ஆண்டுகளும் வனவாசத்தில் தெற்கு வரை வந்து சென்றனர்.

 

அதல, விதல, சுதல, தலாதல, மஹாதல, ரசாதல, பாதாள என்பதெல்லாம் பிற்காலத்தில் பல பெயர்கள் ஏற்படக் காரணமாயீற்று. அதல என்பதிலிருந்தே, அடலாண்டிக் மஹாசமுத்திரம் என்றும் சுதல என்பதிலிருந்தே சவுத் (தென் திசை என்பதும் ) வந்தன. கபிலாரண்யா என்பதே, அமெரிக்காவின் கலிபோர்னியா என மருவியது என்றும் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொற்பொழிவில் சொல்லியுள்ளார்.

-சுபம்-

 

 

 

கவிஞரின் வீ ட்டிற்குத் தானே வந்த கங்கை! (Post No 2522)

stamps vidyapathy

Written by S Nagarajan

 

Date: 9 February 2016

 

Post No. 2522

 

Time uploaded in London :–  9-27 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

ஹிந்து இலக்கியம்

 

மரண காலத்தில் அதிசயக் கவிஞரின் வீ ட்டிற்குத் தானே வந்த கங்கை!

 

ச.நாகராஜன்

 

vidyapatimaithil-mahaan-kavi-1-2-s-307x512

ஹிந்து இலக்கியத்தில் ஒரு முக்கிய பிரதேசமாக விதேஹம் விளங்கி வந்திருப்பதை வரலாறு நன்கு விளக்குகிறது.

ஆயிரமாயிரம் அதிசய உண்மைச் சம்பவங்களைக் கொண்டுள்ள ஹிந்து இலக்கிய வரலாறை யாரே முழுதுமாக அறிய வல்லார்?

இங்கு சொல்லப்படுவது சரித்திரத்தில் ஒரு சிறிய துளி; ஆனால் பெரிய தாக்கத்தை அனைவர் மனதிலும் அது ஏற்படுத்தும்.

 

மிக பிரம்மாண்டமான இந்திய இலக்கிய வரலாற்றில் பெருங் கவிஞர் வித்யாபதி தனி ஒரு இடத்தை வகிக்கிறார்.

தர்பங்கா மாவட்டத்தில் மைதிலி பிராமணர் குலத்தில் கி.பி. 1350 வாக்கில் அவர் பிறந்தார். அந்தக் காலம் இசையின் பொற்காலம்.

 

 

மைதிலி மொழியும் வங்காள மொழியும் போட்டி போட்டுக் கொண்டு இலக்கியச் செல்வங்களை வாரி வழங்கிய காலம் அது. அந்தக் காலத்தில் பிறந்த மாபெரும் கவியை இப்படி வெவ்வேறு இரு மொழிகளைப் பேசி வந்த மக்கள் தங்கள் கவிஞர் என்று உரிமை கொண்டாடியது உலக இலக்கிய வரலாற்றில் வேறெங்கும் காண முடியாத ஒன்று என்கிறார் வித்யாபதியைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் க்ரியர்ஸன் (Grierson)

வித்யாபதியின் வரலாறு பல நூறு பக்கங்களில் எழுதப்பட வேண்டிய ஒன்று. சுருக்கமாக இங்கு காணலாம்.

வித்யாபதி சிறு வயதில் பால்ய கால நண்பனான மஹாராஜா கீர்த்திசிம்மனுடன் விளையாடி வந்தார். அவரது தந்தை கணபதி தாகூரா மஹாராஜா கநேஸ்வரசிம்மனின் அரசவையில் பெரும் பதவி வகித்தவர்.

 

IMG_2695 (2)

பெரும் நியாய சாஸ்திர நிபுணரான – நையாயிகர் பக்ஷதார மிஸ்ராவின் வகுப்புத் தோழருமாக வித்யாபதி திகழ்ந்தார்.

வித்யாபதி ஏராளமான கவிதைகளை யாத்தார்.

பல அரசர்கள் போட்டி போட்டுக் கொண்டு வித்யாபதியை தங்கள் அரசவைகளுக்கு அழைத்து கௌரவித்தனர்.

வித்யாபதிக்கு இரு மனைவிகள்.இரு மனைவிகளும் அருமையான மகன்களையும் மகளையும் பெற்றேடுத்தனர். அவரது மருமகள்களில் ஒருவரான சந்த்ரகலா ஒரு பெரும் கவிஞர். வேத காலத்திலிருந்து பெண்களில் இப்படிப்பட்ட அரிய புலமை இருந்த ஏராளமானோரை நமது சரித்திரம் சுட்டிக் காட்டுகிறது. (ஆனால் அது தெரியாமல் பெண்களை நாம் அடிமைப் படுத்தி வைத்ததாக கூக்குரலிடுவது இப்போது ஒரு ஃபாஷனாகியிருப்பது பெரும் கொடுமை!)

 

 

 

தனது மரணம் எப்போது வரும் என்பதை அவர் முன் கூட்டியே அறிந்து விட்டார். மஹாராஜா சிவசிம்மன் என்ற மன்னர் இறந்து 32 ஆண்டுகள் கழித்து அவருக்கு ஒரு கனவு வந்தது.

அதில் தன் கருமையான உருவத்தை அவர் கண்டார்.

அதன் மூலமாகத் தனது மரணம் நெருங்கி விட்டது என்பதை அறிந்த அவர் தனது மகளைக் கூப்பிட்டு தனது இறுதி யாத்திரைக்கு வேண்டிய ஏற்பாடுகளை கங்கைக் கரையில் செய்யுமாறு கூறினார். அவர் இருந்த நிலையில் அவரால் கங்கைக் கரைக்குச் செல்ல முடியவில்லை.

அன்றிரவு கங்கை பெருக்கோடி அவர் எங்கு இருந்தாரோ அந்த  இடத்தை வந்து சேர்ந்தது. .

 

கங்கையைக் கண்ட மகிழ்ச்சியுடன் அவர் தனது மூச்சை விட்டார்.

 

தர்பங்கா மாவட்டத்தில் பஜித்புரா என்ற கிராமத்தில் இந்த அதிசயம் நடந்த இடம் இன்றும் உள்ளது.

folk_festivals_of_mithila_idi955

வித்யாபதியின் குறிப்பிடத்தக்க சம்ஸ்கிருத நூல்கள்: அநேக தர்ம சாஸ்திரங்கள், நிபந்தங்களைப் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகள் கொண்ட சைவசர்வசஸ்வசாரா, கங்காவாக்யாவளி, விபாகசாரா, தானவாக்யாவளி,துர்காபக்தி தரங்கிணி, கயாபட்டாலகா, வர்ஷக்ரித்யா உள்ளிட்ட ஏராளமான நூல்கள்.

புருஷபரிக்‌க்ஷா என்ற நீதி போதிக்கும் கதைக் கொத்தையும் அவர் எழுதியுள்ளார். மைதிலி மொழியில் அவர் எழுதியுள்ள நாடகம் கோரக்‌க்ஷவிஜயா.

 

 

இன்னும் ஏராளமான நூல்களை எழுதியுள்ள இ மாபெரும் கவிஞர் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து அமைதியாக வாழ்ந்த விதத்தை அற்புதக் கவிதைகளாகத் தந்துள்ளது குறிப்பிடத் தகுந்தது.

 

 

கங்கையே வீடு தேடி வந்து இறுதிக் காலத்தில் கவிஞரைக் ஆட்கொண்ட அதிசயக் கவிஞரின் புகழைச் சொல்லி மாளாது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று இவரை அறிந்தவர்கள் வெகு சிலரே.

 

இதைப் போக்கும் விதத்தில் வி.கே. மிஸ்ரா என்னும் அறிஞர் ‘A Cultural Heritate of Mithila’ என்ற ஆய்வு நூலை (A-4  பேப்பர் அளவில் 404 பக்கங்கள்) எழுதியுள்ளார். அதில் இவரது சரித்திரம் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.

art_of_mithila_idc945

கார்த்திகை மாத சுக்ல பட்ச திரயோதசி திதியில் (கார்த்திகை மாதம் 13ஆம் நாள்) இவர் மறைந்ததாக ஒரு பழம் பாடல் தெரிவிக்கிறது.

 

கவிஞர் பூதவுடல் கங்கைக் கரையில் எரியுண்டாலும் புகழுடல் இன்றும் திகழ்கிறது. என்றும் திகழும்

*********

ஆஸ்திரேலியாவில் ஒரு அற்புத புத்தர் கோவில்! (Post No.2514)

IMG_3108

Picture of Nan Tien Temple in Australia

 

Written by london swaminathan

Date: 6 February 2016

 

Post No. 2514

 

Time uploaded in London :– 9-51 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

five buddhas

 

IMG_3105

IMG_3111

 

சிட்னி நகரிலிருந்து சுமார் ஒர் மணிநேரம் காரில் சென்றால் உல்லாங்காங் என்ற இடத்தை அடையலாம். அதற்கு அருகில் புகழ் பெற்ற நான்  டியன் (Nan tien)  புத்தர் கோவில் இருக்கிறது. இது மிகப் பெரிய கோவில். நல்ல இயற்கை வனப்பு மிக்க இடத்தில் கட்டி இருக்கிறார்கள். படிக்கட்டுகள் மூலம் உயர உயர செல்ல வேண்டும். அதற்கும் மேலாக ஒரு பெரிய மணி இருக்கிறது. அதை அடைய இன்னும் மேலே செல்ல வேண்டும்.

 

பசுமையான இந்த பூமியில் நுழையும்போதே மனோரம்யமான காட்சிகள் காத்திருக்கின்றன. உள்ளே நுழைகையில் நம்மை வரவேற்கிறார் சிரிக்கும் புத்தர். இது ஒரு அதிஷ்டசின்னமாகக் கருதப்படுவதால் சென்னை, பம்பாய் நகரங்களில் பலர் வீடுகளிலும் இதை இப்போது காணலாம்.

IMG_3116

பின்னர் பெரிய, உயரமான படிக்கட்டுகள் வழியே சென்றால் முதல் நிலை புத்தர் கோவில். பெரிய, உயரமான வண்ண புத்தர். அவருடைய பல அவதாரங்களைப் பிற்கால பவுத்த நூல்கள் கூறுவதால் அது என்ன மைத்ரேயர் என்ற விவரங்களை சீன மொழியிலும், ஆங்கில மொழியிலும் பொறித்திருக்கிறார்கள். உள்ளே மவுனமாக பிரார்த்தனை, தியானம் செய்யலாம். செருப்புகள் அணிந்தே உள்ளே செல்லலாம்.

 

ஆனால் இதற்கு மேலே மூன்று புத்தர்கள், அதற்கும் மேலே உயரமான இடத்தில் ஐந்து பல வண்ண புத்தர் சிலைகள் உள்ளன. அங்கே செருப்புகளை வெளியே போட்டுவிட்டுச் செல்ல வேண்டும்.

நான் ஹாங்காங்கிலுள்ள புகழ் பெற்ற புத்தர் கோவிலுக்குச் சென்ற போது எல்லோரும் செருப்புக் காலுடன் சென்று வணங்குவதைக் கண்டு வியந்தேன்.

இந்த புத்தர் கோவிலில் சிக்குடை, பாதி உடை அணிந்த பெண்களை அனுமதிப்பதில்லை. ஒரு ஆஸ்திரேலிய வெள்ளைக்காரி, பாதி உடை அணிந்திருந்ததால் அவரை மரியாதையாக திருப்பி அனுப்பினர். வரவேற்பு பகுதிக்குச் சென்றால், சால்வை கிடைக்கும் என்றும் அதைப் போர்த்திக்கொண்டு வரலாமென்றும் சொல்லி அனுப்பினர்.

 

 

IMG_3151

IMG_3118

எல்லா புத்தர் கோவில்களிலும் ஊதுபத்தி வாங்கி கொளுத்தி வைக்கின்றனர். இதற்கென பிரமாண்டமான தொடீகள் உள.

ஆக மிகப்பெரிய, பல வண்ண ஒரு புத்தர், 3 புத்தர், 5 புத்தர் என்று தரிசித்த பின்னர் தியான மண்டபத்தில் அமர்ந்து தியானமும் செய்யலாம். இந்துக்கள் போலக் கையெடுத்துக் கும்பிடாமல், எல்லோரும் ஜப்பானிய முறையில் சிரம் தாழ்த்தியோ, மண்டியிட்டோ வணங்கினர். நானோ கரம் குவித்து, சிரம் தாழ்த்தி, தாழிட்டு வணங்கினேன்.

 

இந்த பிரம்மாண்டமான காம்பவுண்டில் சில் குறிப்பிடத்தக்க விஷயங்கள்:-

 

அருமையான சைவ உணவு சிற்றுண்டி சாலையில் 13 டாலருக்கு இழை, தழை சகிதம் சைவ உணவு கிடைக்கும். மாமிச சாஸேஜ் போலத் தோன்றும் டோபு, சோயா மொச்சை, காய்கறிக் கூட்டு ஆகியன சுவையும் மணமும் மிக்கவை. பெரிய காண்டீன். சுகமாகச் சாப்பிட்டோம்.

 

எங்கு பார்த்தாலும் புத்தர் சிலைகள்- புத்த பிட்சு சிலைகள், பல போஸ்களில்!

IMG_3120

கோவிலுக்கு அருகிலுள்ள திறந்தவெளி அரங்கில் சீன ராசிகளின்படியான 12 பிராணிகளின் சிலைகளும் அந்தந்த ராசியின் பலனும் எழுதப்பட்டுள்ளன. இதைச் சுற்றி புகைப் படமெடுக்க பெரும் கூட்டம். அதே இடத்தில் ஒரு அதிர்ஷ்ட மரமும் இருக்கிறது. அதன் மீது ஒரு சிவப்பு நிற ரிப்பனை எறிவர். இதை கோவில்காரர்களே விற்பனை செய்கின்றனர். நாம் நினைத்த காரியம்நிறைவேற இப்படிச் செய்யலாம் என்கின்றனர்.

 

கீழே மரத்தில், அழகான குரங்கு பொம்மைகள் தொங்குகின்றன. மேலே மியூசியம், சீன மட்பாண்ட,பீங்கான் விற்பனைக் கூடம், படம்-புத்தக கலைப் பொருள் விற்பனைக் கூடங்கள் இருக்கின்றன. மியூசியத்திலிருக்கும் தங்க நிற புத்தர் உருவங்கள் காணவேண்டியவை.

 

பெரிய பகோடா, தனியே ஓரிடத்தில் இருக்கிறது. மேலே ஏறிச் சென்றால் மிகப்பெரிய மணி இருக்கிறது அதை அடிக்க பெரிய மரக்கட்டையைப் பொருத்தி இருக்கிறார்கள். முன்னோர்களின் நினைவாக நன்றி தெரிவிக்க இந்த ஏற்பாடு. முன்னோர்களின் சாம்பல்/அஸ்தி அடங்கிய பேழையை வைக்க ஒரு புத்தர் கோவிலில் ஏற்பாடு செய்திருக்கிரார்கள். இதற்குக் கட்டணம் உண்டு.

IMG_3134

IMG_3154

 

சிட்னி நகருக்குச் செல்லும் அனைவரும் பார்க்கவேண்டிய இந்தக் கோவிலில் புகைப்ப்படமெடுக்க நூற்றுக் கணக்கான இடங்கள் உள்ளன. ஆனால் மூன்று பிரதான கோவில்களிலும் புகைப்படமெடுக்கக் கூடாது.

மூங்கில் தோப்பு, தாமரைக் குளம், பிரமாண்டமான மரங்கள் ஆகியன இவ்விடத்தை அலங்கரிக்கின்றன. மேலே மணி அடிக்கச் செல்லும் புல் மேட்டில் பாம்புகள் ஜாக்கிரதை என்ற போர்டு வைத்துள்ளனர். பெரும்பாலும் சீன, ஜப்பானியர் கூட்டமிருந்தாலும் ஆங்காங்கே தமிழ்க் குரல்களும், இந்தியும் பயணிகளிடையே ஒலித்தன.

IMG_3128

கோவிலைப் பார்க்க கட்டணமில்லை. ஆயினும் நாமே அதனழகைக் கண்டு வியந்து உண்டியலில் காசு போட விழைவோம்.

அமைதியான, அற்புதமான, அழகான கோவில்.

புத்தம் சரணம் கச்சாமி

தம்மம் (தர்மம்) சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி!!!

 

IMG_3124

 

–subham–

கர்ம பலன்: அந்த மாங்காய் இது அல்லவே! (Post No. 2513)

mango thongum

Written by S Nagarajan

 

Date: 6 February 2016

 

Post No. 2513

 

Time uploaded in London :–  5-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

ச.நாகராஜன்

 

 IMG_2704

 

 

 

அந்த மாங்காயும் இந்த மாங்காயும்

 

கர்ம பலன் என்பது ஒரு மர்மமான விஷயம். பெரிய முனிவர்களும் கூட அறிய முடியாத இரகசியம். 750 கோடி பேர் இன்று உலகில் இருக்கிறார்கள். அதைத் தவிர கோடானு கோடி எண்ணிக்கையே  தெரியாத உயிரினங்கள் இன்றைய உலகில் உள்ளன. எந்த கர்மத்தால் யாருக்கு என்ன நல்லது அல்லது கெட்டது நடக்கிறது. அது எப்போது நடக்கிறது?

யாருக்கும் தெரியாது. ஆனால் நல்லவை செய்தவர்க்கு நல்லதும் கெட்டவை செய்தவர்க்க்கு கெடு பலனும் வந்து சேரும்.

 

 

நாகசேனரின் விளக்கம்

 

புத்தர் மறுபிறப்பு பற்றியும் கர்மபலன் பற்றியும் போதுமான அளவு விளக்கியுள்ளார்.

ஒரு சின்ன கதை கர்ம பலனின் ஒரு அம்சத்தைப் பற்றி விளக்குகிறது.

நாகசேனர் மஹாராஜா மிலிந்தனுக்கு இதைப் பற்றி விளக்கும் கதை இது.

 

நாகசேனர்: அரசே! ஒரு மாங்காய் தோப்பு ஒருவனுக்கு சொந்தமாக இருந்தது. அதில் இருந்த மரத்தில் ஒன்றின் மாங்காய்களை ஒருவன் பறித்து விட்டான். மாந்தோப்பிற்குச் சொந்தக்காரன் அரசனிடம் சென்று முறையிட்டான். அரசன் மாங்காய்களைப் பறித்தவனைக் கூப்பிட்டு ஏன் பறித்தாய் என்று கேட்டான். அதற்குப் பறித்தவன், “இந்த மனிதர் எநத மாங்காய்களை விதைத்தாரோ அது வேறு மாங்காய்கள். அதை நான் பறிக்கவில்லை. நான் பறித்த மாங்காய் அது அல்லவே!” என்று பதில் அளித்தான். அரசே! இப்படி பதில் கூறியவன் குற்றமிழைத்தவனா, இல்லையா?”

 

மிலிந்தன்: ஐயனே! நிச்சயமாக அவன் குற்றமிழைத்தவனே! அவனுக்கு தண்டனை உண்டு.

 

நாகசேனர்: என்ன காரணத்திற்காக?

மிலிந்தந்: எவ்வளவு புத்திசாலித்தனமாக அவன் பதில் கூறினாலும் அது செல்லாது. பறிக்கப்பட்ட கடைசி மாங்காய் முதலில் நட்ட முதல் மாங்காயிலிருந்தே உருவானது. அதனால் தான்!

 

நாகசேனர்: ஓ! மன்னா! அதே போலத்தான் இந்த உடல் மற்றும் ,மனத்தினால் செய்யப்பட்ட ஒரு நல்லதோ அல்லது கெட்டதோ இன்னொரு உடல், மனம் எடுத்த போது அதன் விளைவை அனுபவிக்கிறது.

 

 

இன்னொரு பிறவி எடுத்த போது முந்தைய ஜன்மம் பற்றிய நினைவும் இல்லை; அதில் செய்த நல்லது கெட்டதும் தெரிவதில்லை.

 

ஆனால் இதனால் விளைவு நம்மைச் சேராமல் இருக்காது. நினைவுக்கும் விளைவுக்கும் துளியும் சம்பந்தமில்லை.

எடுத்துக்காட்டாக குற்றம் இழைத்த ஒருவன், அது பற்றிய ஞாபகமே தனக்கு இல்லை என்றால் நீதிபதி ஒத்துக் கொள்வாரா அல்லது குற்றமிழைத்தவன் வயதான காரணத்தினாலோ அல்லது ஆரோக்கியக் கேட்டினாலோ மறதியை அடைந்து அதை செய்ததே தெரியவில்லை என்றால் நீதிபதி ஒப்புக் கொள்வாரா?

நான் அவன் இல்லை என்று தப்பித்துக் கொள்ள முடியாது!

நாகசேனரின் விளக்கத்தை மன்னன் புரிந்து கொண்டான்.

 

 

IMG_2705

புத்தகோஸரின் விளக்கம்

 

இந்த ஜன்மத்தில் எடுத்த ஒரு உருவத்தில் செய்த பிழைக்கு அடுத்த ஜன்மத்தில் விளைவா என்று புத்தரிடம் சீடன் குடதந்தன் வியக்கிறான்.

 

இந்த உடல் பிரக்ஞையில் செய்த செயலுக்கு -விதைத்த விதைக்கு – அடுத்த  ஜன்ம உடலில் உள்ள பிரக்ஞையுடன் இருக்கும் போது விளைவு ஏற்படுவது சரிதானா?

இதற்கு புத்தகோஸர் அருமையாக விடையளிக்கிறார்.

அடுத்தாற்போல விளைவை அநுபவிப்பவன் முந்தைய நபரும் இல்லை; முந்தைய நபர் இல்லாமலும் இல்லை!!

இதற்கு புத்த மதத்தில் இரண்டு எடுத்துக்காட்டுகள் மூலமாக விளக்கம் அளிக்கப்படுகிறது.

 

ஒன்று பட்டாம்பூச்சி உவமை.

இன்னொன்று தீ ஜுவாலை உவமை.

 

 

ஒரு பட்டாம்பூச்சி எப்படி உருவாகிறது? முதலில் முட்டை, பின்னர் புழுவாகிறது. பின்னர் கிறிஸ்லிஸ் (Chrysalis) என்ற பொற்புழு நிலையை அடைகிறது.பின்னர் முழு

வண்ணத்துப்பூச்சியாக உரு மாறுகிறது. அதனுடைய ஒரே வாழ்க்கையில் தான் இந்த மாற்றம் நிகழ்கிறது. புழுவாக இருந்த அதே வண்ணாத்திப்பூச்சி இப்போது இல்லை, ஆனால் அதே சமயம் அதிலிருந்து மாறுபட்ட ஒன்றும் இல்லை! தொடர்ச்சியைக் கொண்டுள்ள ஒரு முறையில் ஒன்று இன்னொன்றாகப் பரிமளிக்கிறது.

 

 

தீபம் ஒன்றை இரவு எட்டு மணிக்கு ஏற்றுவதாக வைத்துக் கொள்வோம்.அதன் ஒளி எங்கும் பரவுகிறது. தீப ஜுவாலையைப் பார்க்கிறோம். அதே தீபத்தை காலை ஆறு மணிக்கு மீண்டும் பார்க்கிறோம். இரவு எட்டு மணிக்குப் பார்த்த தீப ஜுவாலை இப்போது இல்லை என்றாலும் தொடர்ந்து எரிவதால் இப்போதுள்ள தீப ஜுவாலை மாறுபட்ட ஒன்றும் இல்லை என்றாகிறது.

 

 

வினையின் விளைவு தொடரும்

 

அதே போல ஒரு உயிர் தனது தொடர் கர்மத்தினால் அதன் விளைவை இன்னொரு உடலில் அநுபவித்தே ஆக வேண்டும்.

சரி, தன்னை உணர்ந்த ஞானி ஒருவர் கர்மம் செய்து கொண்டே இருக்கிறாரே என்று கேட்டால் ரமண மஹரிஷி வேதாந்தம் மூலம் விடையளிக்கிறார்.

 

ஞானியின் கர்மம் வறுத்த விதை போல. அது கர்மம் தான் என்றாலும் அதற்கு விளைவு இருக்காது!

இப்படி கர்ம பலனில் ஏராள ரகசியம் இருக்கிறது. முற்றிலும் உணர்ந்தவர் யாரும் இல்லை.

 

வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது தான் கர்ம நியதி. தர்ம நியதி!

**********