என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3 (Post.4864)

Date: MARCH 30, 2018

 

 

Time uploaded in London- 5-49 am

 

 

Compiled by S NAGARAJAN

 

 

Post No. 4864

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் சிறப்பு :

நீங்கள் படிப்பது அயர்லாந்து சம்ஸ்கிருத ஆசிரியர் ரட்கெர் கோர்டன்ஹார்ஸ்ட் நிகழ்த்திய உரை!

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3

 

ச.நாகராஜன்

 

ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம். உங்கள் குழந்தை அதை எப்படி கற்க வேண்டி இருக்கிறது என்று பாருங்கள்!

ROUGH என்பதை எப்படிச் சொல்ல வேண்டும்? அதே சமயம் DOUGH என்பதை எப்படிச் சொல்ல வேண்டும்? WOMEN என்ற வார்த்தையில் உள்ள ‘o’  ஏன் ‘e’ போல ஒலிக்க வேண்டும்? SPECIAL என்ற வார்த்தையில் வரும் ‘ci’ ஏன் CINEMA என்ற வார்த்தையில் வரும் ‘ci’- ஐ விட மாறுபட்டு ஒலிக்க வேண்டும்?

ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘அது அப்படித்தான்’! அதைக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்கள்! அவர்களுக்கு தர்க்கரீதியாகக் காரணம் சொல்லத் தெரியவில்லை!

 

குழந்தைகளுக்கு அது ஒரு ‘hit and miss’ விஷயம் போல விசித்திரமாக இருக்கிறது! இது குழந்தைக்கு என்ன ஒரு நம்பிக்கையைத் தரும்?!

இப்போது விதிகள் உள்ள மொழியைப் பாருங்கள்.

 

எதையுமே ‘அது அப்படித்தான்’ என்று சொல்ல இடமில்லாமல் விதி முறை மாறாமல் இருக்கிறது.

அருமையான நேர்த்தியான தத்துவக் கருத்துக்கள் எளிய ‘அகர வரிசை’ சரியாக அமைக்கப்பட்டிருப்பதால் நன்கு உருவாகி கற்க முடிவதைப் பாருங்கள்!

சம்ஸ்கிருதத்துடனான தொடர்பினால் மற்றவர்கள் அப்படி நல்ல குணாதிசயங்களுடன் வளர்வதை நான் நேரடியாகக் கண்டிருக்கிறேன்.

பல வருடங்களாக சம்ஸ்கிருதத்தை ‘குறைந்த பட்ச புரிதலுடன்’ ‘அதிக பட்ச உற்சாகத்துடன்’ நாங்கள் கற்பித்து வந்துள்ளோம்.John Scttus School – இல் உள்ள குழந்தைகளுக்கும், தத்துவப் பள்ளியில் – School of Philosophy – இல் உள்ள பெரியவர்களுக்கும் நாங்கள் சம்ஸ்கிருதம் கற்பித்து வந்துள்ளோம்.

ஒருவேளை நாங்கள் ஏராளமானவர்களை சம்ஸ்கிருதம் படிக்க ஊக்குவிக்கவில்லையோ என்னவோ!

ஆகவே சம்ஸ்கிருதம் எங்கு தோன்றியதோ அங்கு செல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

சம்ஸ்கிருத ஆசிரியர்கள் சம்ஸ்கிருதத்திலேயே பேசுபவர்களாக இருக்கும் இடத்தில் வாழ வேண்டும்.

 

பெங்களூர் அருகில் உள்ள ‘சம்ஸ்கிருத பாரதி’ -இல் நான் மூன்று கோடைக் காலங்களைக் கழித்தேன்.

அது என்னை இன்னும் தீவிரமாக சம்ஸ்கிருதத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆசையைத் தோற்றுவித்தது.

ஆகவே பாரம்பரியமான ஒரு குருகுலத்திற்கு நான் சென்றேன்.

அதாவது அங்கேயே தங்கி இருக்க வேண்டும்.

அரிசி சாதம் சாப்பிட வேண்டும்.

ஏராளமான பவர் கட்டுகளை – மின் தடைகளை அனுபவிக்க வேண்டும்.

நீர் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டும்.

 

ஆனால் டிசம்பர் 2009இல் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். சீனியர் ஸ்கூலில் நான் வகித்து வந்த வைஸ்-பிரின்ஸிபால் வேலையை விட்டு விட்டு சம்ஸ்கிருதத்தை கற்பிப்பதிலேயே என் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

இன்னும் பல பேர்கள் நான் வகித்து வந்த வைஸ்-பிரின்ஸிபால் பதவியை வகிக்க தகுதியானவ்ர்களாக இருப்பார்கள். ஆனால் சம்ஸ்கிருதத்தை அயர்லாந்தில் போதிக்க வேறு யாரால் முடியும்?

ஆகவே இதை ஒரு பதவி உயர்வாகவே – ப்ரமோஷனாகவே – நான்  கருதுகிறேன்.

வயது ஆக ஆக என் உடல் தளர்ந்தாலும் கூட சம்ஸ்கிருதத்தினால் என் மனம் முன்னேறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

சம்ஸ்கிருதம் என்பது ஒரு முழு நேர ஆசிரியருடன் ஒப்பிடப்படக் கூடியது.

24/7 என்று முழு நேரமாக அது இருக்கிறது. மற்ற மொழிகள் எல்லாம் பகுதி நேர – Part time –  மொழியாகவே இருக்கின்றன!

சம்ஸ்கிருதம் கற்பதன் விளைவு என்னவெனில் அது உண்மையான நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்துகிறது.

இரண்டாவதாக எனது வார்த்தைகளை சீர் தூக்கிப் பார்த்து துல்லியமாக சரியாகப் பேச வேண்டும் என்று அது எனக்கு உணர்த்துகிறது.

குழப்பமின்றி நான் சொல்ல வருவதைச் சொல்ல அது எனக்குக் கற்பிக்கிறது.

ஆகவே எதையும் என்னால் சுருக்கமாகப் பேச முடிகிறது.

எனது கவன சக்தி சந்தேகமின்ரி அதிகரித்துள்ளது!

கேட்பதைத் தக்க வைக்கும் சக்தியும் அதிகரித்துள்ளது!

 

எப்படி சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது?

இந்தியாவில் பல இடங்களில் முறையாக அது கற்பிக்கப்படவில்ல என்பது எனக்கு ஆச்சரியமூட்டும் ஒரு விஷயம்!

9 முதல் 11 வயது முடிய அது மாணவர்களுக்கு அங்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால் மோசமாகக் கற்பிக்கப்படுவதால் அத்துடன் அதை விட்டு விடுகிறார்கள்.

சில விடாக்கண்டர்கள் மட்டும் அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல ஆசைப்படுகிறார்கள்.

இது ஏன்?

 

ஏனெனில் மேலை நாடுகளைக் காப்பி அடிக்க வேண்டும் என்ற ஒரு வெறி அங்கு உள்ளது.

காலனி ஆதிக்கத்தால் அவர்களின் பாரம்பரியம் திட்டமிட்டு வேருடன் அழிக்கப்பட்டுள்ளது.

கிழக்கத்திய ஞானத்தையும் இலக்கணத்தையும் அறிய பாரம்பரிய மிக்க ஒரு குருகுலத்தில் நான் சேர்ந்தேன்.

சம்ஸ்கிருதம் பேசுவதற்கோவெனில் நவீன அணுகு முறை அங்கு இல்லை என்பதை உணர்ந்தேன்.

அப்போது தான் புதுவையில் உள்ள அரவிந்த ஆஸ்ரமத்தில் இண்டர்நேஷனல் ஸ்கூலில் ஒரு ஆசிரியரைக் கண்டேன்.

அவர் பெயர் நரேந்திரா.

அவர் இலக்கணத்தைக் கற்பிக்க ஒரு புதிய எளிய வழி முறையைக் கண்டுள்ளார்.

அது இலக்கணம் படிக்கிறோம் என்ற உணர்வையே உங்களிடம் ஏற்படுத்தாது!

ஆனால் அதே சமயம் இலக்கணத்தை பயிற்சியாளர்களுக்குக் குறைத்துக் கற்பித்து விடாது. ஆகவே உங்களுக்கு இலக்கணத்தில் பகுதி அறிவு தான் ஏற்படும் என்ற நிலையும் ஏற்படாது.

சில சம்ஸ்கிருத பேச்சு வழக்கு வகுப்புகளிலும் நான் சேர்ந்தேன்.

இவை அனைத்தும் சம்ஸ்கிருதத்துடனான பரிச்சயத்தை எனக்கு அதிகப்படுத்தியது!

– தொடரும்

(அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்)

 

 

என் குழந்தை ஏன் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? -3 / A

 

ச.நாகராஜன்

 

Rutger Kortenhorst ஆங்கித்தில் உள்ள முரண்பாடுகள் ஒரு சிறிதை மட்டும் தனது உரையில் கோடி காட்டி விட்டுச் சென்று விட்டார்.

இது தொடர்பாக எனது தொகுப்பில் உள்ள ஒரு சிறு கவிதையை இங்கு தருகிறேன்.

ஆங்கித்தில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டும் சுவையான நையாண்டிக் கவிதை இது:-

WHY ENGLISH IS SO HARD

 

We’ll begin with a box, and the plural boxes,

But the plural of ox becomes oxen, not oxes

One fowl is goose, but two are called geese,

Yet the plural of moose should never be meese.

You may find a lone mouse or a nest full of mice

Yet the plural of house is houses, not hice.

 

If the plural of man is always called men,

Why shouldn’t the plural of pan be called pen?

If I speak of my foot and show you my feet,

And I give you a boot, would a pair be called beet?

If one is a tooth and a whole set are teeth,

Why shouldn’t the plural of booth be called beeth?

 

Then one may be that, and three would be those,

Yet hat in the plural would never be hose,

And the plural of cat is cats, not cose,

We speak of a brother and also of brethren

But though we say mother, we never say methern,

Then the masculine pronoun are he, his and him,

But imagine the feminine she, shis and shim!

 

– ANONYMOUS

***

 

 

சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்! (Post No.4823)

Date: MARCH 17,  2018

 

 

Time uploaded in London- 5-15 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4823

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

 

 

ஞான ஆலயம் குழு வெளியீட்டுப் பத்திரிகையான ஸ்ரீ ஜோஸியம் மாத இதழில் மார்ச் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

சாஸ்திரங்கள் கூறும் இரகசியங்கள்!

 

ச.நாகராஜன்

ஜோதிட சாஸ்திரம் உள்ளிட்ட நமது சாஸ்திரங்கள் நுட்பமானவை. பல நூற்றாண்டுகளில் கிடைத்த அனுபவத்தாலும், உள்ளுணர்வாலும் மனித குலத்திற்கு நலம் பயக்கும் நாட்களையும் நட்சத்திரங்களையும் மஹரிஷிகள் கண்டு அதை ஜோதிடம் உள்ளிட்ட சாஸ்திர நூல்களில் தொகுத்து வழங்கியுள்ளனர்.

 

தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களின் தொகுப்பைக் கீழே காணலாம்.

 

பஞ்சக நட்சத்திரங்களும் பஞ்சக் யோகமும்!

 

அவிட்டம் , சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்து நட்சத்திரங்கள் பஞ்சக் என்று அழைக்கப்படுகின்றன. பஞ்சகம் என்றால் ஐந்து. இந்த ஐந்து நட்சத்திரங்கள் உள்ள ராசிகள் கும்பமும் மீனமும் ஆகும். சந்திரன் இந்த ராசியில் சஞ்சரிக்கும் காலம் பஞ்சக் கால் என அழைக்கப்படுகிறது. இதை பஞ்சக யோகம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறும்.

இந்த நட்சத்திரங்களில் (அவிட்டம் கடைசி இரு பாதங்கள் மட்டும்) புல், மரம் வெட்டக் கூடாது.

தென் திசையில் பயணம் மேற்கொள்ளக் கூடாது

படுக்கை அமைக்கக் கூடாது

புதிய பிஸினஸ் துவங்கக் கூடாது

பிரேத தகனம் கூடாது. (அப்படியானால் ஐந்து நாட்கள் எப்படி ஒரு பிரேதத்தை தகனம் செய்யாமல் வைத்திருப்பது என்ற கேள்வி எழும். இப்படி எரித்தால் இன்னும் ஐந்து மரணம் வரும் என்பதாலேயே இது சொல்லப்படுகிறது. என்றாலும் பிரேதத்தை தகனம் செய்யும் போது பரிகாரமாக இன்னும் ஐந்து மலர், மாவு ஆகியவற்றினாலான உடல்களையும் சேர்ந்து எரிப்பது மரபு.

சுப காரியங்கள் விலக்கப்பட வேண்டும். சுப காரியம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் உரிய பரிகாரத்தைத் தெரிந்து கொண்டு செய்வது வழக்கம்.

பஞ்சக காலம் என்பது மாதம் ஒரு முறை அதாவது 27 நாள் சுழற்சியில் வரும். இதை முன்னதாகவே கணித்து நமது திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.

 

புத்தாடை அணிவதற்கான தினங்கள்!

 

புதன், வியாழன், வெள்ளி ஆகிய  கிழமைகளில் புத்தாடைகளை அணிய வேண்டும்.

  • முகூர்த்த மார்த்தாண்டம்

 

புத்தாடை அணிவதற்கான நட்சத்திரங்கள்!

 

அவிட்டம், புனர்பூசம்,ஹஸ்தம்,சித்ரா,ஸ்வாதி,விசாகம், அனுஷம்,பூசம்,அஸ்வினி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் புத்தாடை அணிய வேண்டும்.

– முகூர்த்த மார்த்தாண்டம்

 

எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் பொதுவான விதிகள்!

 

1)பணம் (செல்வம்), உறவினர், நிலை, தொழில், படிப்பு ஆகிய ஐந்தும் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. இவற்றில் ஒன்றை விட ஒன்று அதிக சிறப்பு வாய்ந்தது என்று கொள்ள வேண்டும்.

– மனுஸ்மிருதி, பவிஷ்ய புராணம், யாக்ஞவல்ய ஸ்மிருதி, கூர்ம புராணம்

2) எல்லா தார்மீக காரியங்களிலும் முதலில் நவக்ரஹ சாந்தி செய்ய வேண்டும். – வைஸ்வாரம்ப ஸ்மார்த்த சூத்ரம்

3) வீட்டின் ஸ்தீரி இல்லாமல் ஒரு யக்ஞ காரியமும் செய்யக் கூடாது.

-ஆனந்த ராமாயணம்

4) பாடம் படித்தல் (ஓதுதல்), தேவி பூஜை, வஸ்திரம், நகை அணிதல்,ஆகியவற்றை வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

-கருட புராணம்

 

சந்தியாகாலத்தில் செய்யக் கூடாதவை

 

சந்தியாகாலத்தில் 1) உணவு உண்ணக் கூடாது 2) உடல் உறவில் ஈடுபடக்கூடாது 3) உறங்கக் கூடாது 4) வேதம் ஓதக் கூடாது.

சத்வாரி கலு கர்மாணி சந்த்யாகாலே விவர்ஜியேத் |

ஆஹாரம் மைதுனம் நித்ராம் ஸ்வாத்யாம் ச சதுர்தகம் ||

  • ஸ்மிருதி சந்தர்ப: – 76

 

இப்படி நுணுக்கமாக அனைத்து விஷயங்களையும் நமது சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.

 

அனைவரும் அனைத்து சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற முடியாது என்பதாலேயே இதில் விற்பன்னராக உள்ள சாஸ்திர பண்டிதர்கள் அல்லது ஜோதிடரைக் கலந்தாலோசித்து அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும் என்ற எளிய வழியை முன்னோர்கள் ஏற்படுத்தினர்.

 

குடும்ப புரோகிதர், குடும்ப ஜோதிடர் ஆகியோரைக் கலந்தாலோசித்த பின்னரே ஒரு காரியத்தைச் செய்வது என்ற நடைமுறை சிக்கலான விஷயங்களை ஒரு குடும்பம் எதிர்கொள்ள நேரிடாதவாறு பாதுகாத்தது.

இன்றும் இதை நடைமுறையில் அனுஷ்டிப்போர் சிக்கலின்றி வாழ்வதைப் பார்க்கலாம்.

 

 

***

 

 

உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா (Post No.4821)

Written by London Swaminathan 

 

Date: 16 MARCH 2018

 

Time uploaded in London – 5-50 am

 

Post No. 4821

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

தமிழ்ப் பழமொழிகளும் சாணக்கிய நீதியும்

 

இருபதாயிரத்துக்கும் மேலான தமிழ்ப் பழமொழிகள் உள்ளன. இந்தப் பழமொழிகளில் பல, பாரதம் முழுதும் உள. அவைகளை ஒப்பிட்டு ஆராய்ந்தால் இமயம் முதல் குமரி வரை நம்பிக்கைகள் ஒன்றே என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.

 

இதோ! 2300 ஆண்டுப் பழமையான சாணக்கிய நீதியின் ஸ்லோகங்களும் இணையான பழமொழிகளும்

அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே என்பது தமிழ்ப் பழமொழி.

முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே- என்று அப்பர் பெருமான் தேவாரம் நாலாம் திருமுறையில் பாடுகிறார். புதரில் இருக்கும் இரண்டு பறவைகளைவிட கையில் இருக்கும் ஒரு பறவை மேல் A bird in hand is better than two in the bush என்பது ஆங்கிலப் பழமொழி. ‘உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா’ என்றும் ‘கையில் வெண்ணை இருக்க நெய்யிற்கு அலைவானேன்’ என்றும், ‘உள்ளங்கையில் தேனை வைத்துக் கொண்டு புறங்கையை நக்கினாற் போல’ என்றும் தமிழில் செப்புவர்.

 

 

யோ த்ருவாணி பரித்யஜ்ய ஹ்யத்ருவம் பரிஷேவதே

த்ருவாணி தஸ்ய நஸ்யதி ஹ்யத்ருவம் நஷ்டமேவ ஹி

 

-சாணக்கிய நீதி 1-13

பொருள்:

உறுதியான ஒன்றை விட்டு விட்டு உறுதியற்ற- நிச்சயமற்ற- பொருளை நாடுபவன், இருக்கும் ஒன்றையும் இழந்து விடுவான்; இல்லாத பொருள் கிடைக்காது என்பது ஏற்கனவே அறிந்த விஷயம்.

xxx

சிறு துளி பெரு வெள்ளம்

ஜல பிந்து நிபாதேன க்ரமசஹ பூர்யதே கடஹ

ஸ ஹேதுஹு ஸர்வ வித்யானாம் தர்மஸ்ய ச தனஸ்ய ச

12-21

பொருள்:

“சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் விழுந்தாலும் ஒரு பானை நிரம்பி விடும்.  இதுதான் மிகப் பெரிய ரஹஸியம் — செல்வம் சேர்வதும் இப்படித்தான், தர்மம் வளருவதும் இப்படித்தான்”.

 

எதிலுமே சிறுகச் சிறுக சேர்வது பின்னர் பெரும் கடல் போலப் பெருகிவிடும். பல ஓடைகளின் நீர் சேர்ந்து, நதிகளாகப் பெருகி சமுத்திரத்தை உண்டாக்குகின்றன. இயற்கையும் கூட நமக்கு கற்பிப்பது இந்த ரஹஸியமே!

xxx

 

மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி

யதா ராஜா ததா ப்ரஜாஹா (As the Ruler, So the Ruled)  என்பது ஸம்ஸ்க்ருதத்தில் உள்ள இணையான பழமொழி. பகவத் கீதையில் கண்ண பிரானும் ‘பெரியவர்கள் எதைச் செய்கிறார்களோ பொது மக்களும் அதையே செய்வர் (3-21) என்று சொல்லுவார்.

 

சாணக்கியன் நுவல்வதும் அஃதே!

ராக்ஞி தர்மிணி தர்மிஷ்டாஹா  பாபே பாபாஹா ஸமே ஸமாஹா

ராஜானம் அனுவர்தந்தே யதா ராஜா ததா ப்ரஜாஹா- 13-7

 

பொருள்

அரசன் நேர்மையாளனாக இருந்தால் மக்களும் அப்படியே இருப்பர்; அவன் பாபம் செய்தால், மக்களும் பாவம் செய்வர்; அவன் நடு வழியில் சென்றால் அவர்களும் நடு வழியில் செல்லுவர்; மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி.- 13-7

 

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி – என்பதைப் பொது வாழ்விலும் காணலாம். ஆட்சியாளர்களே ஊழல் செய்தால் மக்களும் கெட்டுப் போவார்கள்

 

xxx

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு – என்று பாடினான் சொற்தேரின் சாரதியாம் பாரதி.

 

ஒற்றுமையே உயர்வு என்பதற்குப் பல கதைகளை பஞ்ச தந்திரம் ‘மித்ர பேதம்’ என்னும் பிரிவில் எடுத்துரைக்கும்

 

சாணக்கியன் மொழிவதும் அஃதே!

பஹூனாம் சைவ ஸத்வானாம் ஸமவாயோ ரிபுஞ்ஜயஹ

வர்ஷதாஅதரோ மேகஸ்த்ருணரபி நிதார்யதே

14-4

 

பல கைகள் ஒன்று சேர்ந்தால், எதிரிகளை வென்று விடலாம்; வைக்கோலைச் சேர்த்துக் கட்டிய பாயும் பெரு மழையைத் தடுக்கவில்லையா!

 

xxx

 

குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு

குடித்து விட்டு, வீட்டிற்கு வந்து பிள்ளைகளையும் மனைவியையும் அடிக்கும் குடிகாரனை எல்லோரும் கண்டித்தவுடன் நாளை முதல் குடிக்க மாட்டேன் இது சத்தியம் என்பான்; ஆனால் மறு நாளே குடிக்கச் செல்லுவான். குடி போதையில் இருக்கும் போது மனைவியைப் பார்த்து உனக்கு தங்கச் சங்கிலி, வைர நெக்லஸ் வாங்கித் தருவேன் என்பான். காலையில் எழுந்தவுடன் — குடி போதை தெளிந்தவுடன் கதையே மாறிவிடும்.

 

இதே போலத்தான் ஸ்மசான வைராக்யம்– சுடுகாட்டு சபதம்-

 

யாராவது நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இறந்தவுடன், அடடா! வாழ்க்கையே அநித்யமானது- உடனே நல்லது செய்துவிட வேண்டும்- கெட்ட வழியில் செல்லக்கூடாது- செல்ல மாட்டேன் என்று மனைதுக்குள் சபதம் செய்வர். பத்து நாள் சென்ற பின்னர் ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்று ஆரம்பித்து விடுவர். இதை ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் – உள்ளிப்பூண்டு வைத்த பாத்திரத்துடன் ஒப்பிடுவார். அந்த வாடை என்றுமே போகாது

 

இதோ சாணக்கியன் சொல்

 

தர்மாக்யானே ஸ்மசானே ச ரோகிணாம் யா மதிர்பவேத்

ஸ ஸர்வதைவ திஷ்டேச்சேத் கோ ந முச்யேத் பந்தனாத்

14-6

 

பொருள்

ஒரு சமயச் சொற்பொழிவினைக் கேட்கும் நோயாளி மனதில் ஓடும் எண்ணங்களும், சுடுகாட்டில் இரங்கல் தெரிவிக்கும்போது மனதில் ஓடும் எண்ணங்களும் நிலையாக மனதில் தங்கிவிட்டால் எல்லோரும் பற்றற்றான் பற்றினைப் பற்றிவிடுவரே! பந்தங்கள் அறுபட்டு மோட்ச சாம்ராஜ்யத்துக்குச் சென்று விடுவது எளிதாகி விடுமே!

 

xxx

 

விநாச காலே விபரீத புத்தி

விதி கெட்டுப் போனால்

மதி கெட்டுப் போகும்

ந நிர்மிதஹ கேன ந த்ருஷ்டபூர்வஹ

ந ச்ரூயதே ஹேம மயஹகுரங்கஹ

ததாபி த்ருஷ்ணா ரகுநந்தனஸ்ய

விநாச காலே விபரீத புத்திஹி

 

-சாணக்கிய நீதி, அத்யாயம் 16, ஸ்லோகம் 5

 

பொருள்:

உலகில் தங்க நிற மான் என்பது கிடையவே கிடையாது. யாரும் முன்னால் பார்த்ததும் இல்லை; யாரும் அப்படி ஒன்று இருப்பதாகக் கேட்டது கூட இல்லை. ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது புத்தி பேதலித்து விடும்.”

(தங்க நிற மான் ஒன்றைப் பார்த்து சீதா தேவி ஆசைப்பட்டதால், ராமாயணம் என்னும் கதை வளர்ந்தது பற்றிய குறிப்பு இது )

–Subham—

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்? பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

 

 

 

வேலைக்காரர் படும் பாடு! (Post No.4783)

Date: 25 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 7-19 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4783

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

வேலைக்காரர் படும் பாடு!

 

ச.நாகராஜன்

 

உலகியல் வாழ்க்கையில் அனைவரது நிலையையும் மிகச் சரியாகக் கணித்து அனுதாபப்படுபவர் கவிஞர் பர்த்ருஹரியைப் போல இன்னொருவரைப் பார்ப்பது துர்லபம்.

வேலைக்காரர்களின் மனோபாவத்தையும் அவர்கள் படும் பாட்டையும் நீதி சதகத்தில் விளக்குகிறார். (பாடல் 47)

 

பாடலைப் பார்ப்போம்:

 

மௌநாத் முக:ப்ரவசந

படு வாசகோ ஜல்பகோவா

த்ருஷ்ட: பார்ச்வே பவதி ச

வஸந் தூரதோப்ய ப்ர கல்ப: |

க்ஷாந்த்யா பீருர்யதி

ந ஸஹ்தே ப்ராயசோ

நாபி ஜாத: ஸேவாதர்ம:

பரம கஹந; யோகிநாமப்ய கம்ய: ||

 

வேலக்காரன் (மௌநாத்) சற்றுத் தள்ளி ப்வ்யமாக இருந்தால் ஊமை எனப்படுகிறான்,

நன்றாகப் பேசினாலோ (ப்ரவசன ப்டு) அதிக ப்ரசங்கி எனப்படுகிறான்.

யஜமானன் பக்கத்தில் நின்றாலோ (பார்ச்வே பவதி) துணிச்சல்காரன் எனப்படுகிறான்.

தூரத்தில் (தூரத:) இருந்தாலோ தைரியமற்றவனாக நினைக்கப்படுகிறான்.

வசவு, திட்டுகளைப் பொறுத்தால் (க்ஷாந்த்யா) பயந்தாங்கொள்ளி எனப்படுகிறான்.

வார்த்தைகளைப் பொறுக்காவிட்டாலோ (யதி ந ஸஹதே) நல்ல குலத்தில் பிறந்தவன் இல்லை என்கிறார்கள்.

பிறரிடம்  ஊழியம் செய்யும் காரியமானது (ஸேவா தர்மம்) பெரும்பாலும் மிகவும் கடினமானது. (பரம கஹன)

மூன்று காலமறிந்த யோகிகளுக்கும் கூட புலப்படாதது. ( யோகிநாமபி அகம்ய)

 

ஒரு நல்ல வேலைக்காரன் எப்படி ஊழியம் செய்தாலும் விமரிசிக்கப்படுகிறான்.

 

அவனால் என்ன தான் செய்ய முடியும்?

 

ஆகவே தான் வாழ்நாள் முழுவதும் ஊழி யம் செய்வதில் மாட்டிக் கொண்ட ஒருவன் இருந்தும் இறந்தவனே என்று பெரியோர் சொல்கின்றனர்.

 

(இருந்தும் இறந்தவர் யார் யார் கட்டுரையைப் பார்க்கவும்)

 

நன்றி: எஸ்.கல்யாணசுந்தரம் 11-2-1949, கும்பகோணம்

பிரசுரகர்த்தா & மானேஜர்

ஸ்ரீ ஜனார்த்தனா பிரிண்டிங் பிரஸ்

***

வேதம் பிராஹ்மணனிடம் என்ன சொன்னது? (Post. 4673)

வேதம் பிராஹ்மணனிடம் என்ன சொன்னது? மநு தகவல்- மநு நீதி நூல்- Part 13 (Post No 4763)

 

Date: 19 FEBRUARY 2018

 

Time uploaded in London- 11-59 AM

 

Written by London swaminathan

 

Post No. 4763

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மானவ தர்ம சாஸ்திரம்- இரண்டாம் அத்தியாயம் தொடர்ச்சி

 

 

2-89 இந்திரியங்களைப் பெரியோர்கள் பதினொன்றாக வகுத்துள்ளனர். அதை நான் இப்போது விளக்குவேன் (207)

2-90.காது, தோல், கண், நாக்கு, ஐந்தாவதாக மூக்கு, ஆசன வாய், ஜனன இந்திரியங்கள், கை, கால், பத்தவதாக பேசும் உறுப்பு ஆகியனவும்

2-91. இவைகளில் காது முதல் மூக்கு வரை உள்ள ஐந்தும் ஞானேந்திரியம், ஆசனவாய் முதல் வாய் வரையுள்ள ஐந்தும் கர்மேந்திரியங்கள்

 

2-92. இந்த பத்து உறுப்புகளையும் கட்டுப்படுத்தும் மனம் பதினோராவது இந்திரியம் ஆகும். அதைக் கட்டுப்படுத்தினால் ஏனைய பத்து இந்திரியங்களையும் கட்டுப்படுத்திவிடலாம். (210)

 

2-93. புலன் வழிச் சென்று, அதன் போக்கில் இன்பங்களை அனுபவிப்பவன் தவறுகளைச் செய்வான்; ஆனால் இவைகளைக் கட்டுப்படுத்துபவன் இன்பத்தையும் வெற்றியையும் அடைவான்.

Picture posted by S P Ramanathan

2-94. ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலம் அதைத் திருப்தி செய்வதென்பது முடியாது. ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயல்வது, தீயில் நெய்யை ஊற்றி அதை அணப்பதற்குச் சமம் ((அதை மேலும் வளர்ப்பது போலாகும்)).

 

 

2-95. சிலர் ஆசைகளை நிறைவேற்றலாம்; சிலர் ஆசைகளை அறவே ஒதுக்கலாம்; ஆனால் அறவே ஆசைகளை அகற்றுவதே சிறந்தது.

 

2-96. ஆசைகளை அகற்றுவதற்கு தெளிந்த ஞானம்தான் உதவும்; அவைகளில் இருந்து தனித்து வாழ்வதால் ஆசைகளை ஒழிக்க முடியாது.

 

2-97. எவன் ஒருவன் புலன் இன்பங்களில் நாட்டம் உடையவனாக இருக்கிறானோ அவன் செய்யும் யாக யக்ஞங்களும், வேதம் ஓதுதலும், தானமும் தவமும் பயனற்ற செயல்களே.-215

2-98. எவன் ஒருவன் ஐம்புல நுகர்ச்சியால இன்பத்தையோ துன்பத்தையோ அடைவதில்லையோ அவனே புலன்களை வென்றவன் ஆவான்.

2-99. ஐந்து புலன்களில் ஒன்று பலவீனமானாலும், ஓட்டைப் பானையில் இருந்து தண்ணீர் வெளியேறுவது போல ஞானம் வெளியேறி விடும்

2-100. ஆகவே பொறிகளையும் மனதையும் கட்டுப்படுத்தி, உடலை வருத்தாமல், இம்மை மறுமை ஆகியவற்றின் நன்மைகளை நாட வேண்டும்.

Picture posted by Lalgudi Veda

 

2-101. அதி காலையில் சூரியன் உதயம் ஆகும் வரை நின்றுகொண்டு காயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மாலையில் அமர்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும். நட்சத்திரங்கள் தோன்றும் வரை செய்க (காணாமல், கோணாமல், கண்டு கொடு; சூரியனைக் காணாமல் காலையிலும், நிழல் கோணாமல் நண்பகலிலும், சூரியனைக் கண்டு, அது மறையும் வரை மாலையிலும் காயத்ரீ மந்திரம் சொல்க)

 

2-102.காலையில் நின்று கொண்டு ஜபம் செய்வதால் இரவில் செய்த பாபங்கள் அழிந்து விடும்; மாலையில் அமர்ந்து கொண்டு செய்யும் தவத்தால் பகற்பொழுதில் செய்த பாவங்கள் நசித்துவிடும்.-220

2-103.யார் ஒருவன் இவ்வாறு காலை மாலை ஜபங்களைச் செய்வதில்லையோ அவன் இரு பிறப்பாளன் என்ற தகுதியை இழக்கிறான்.

2-104.ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திலோ, நதிக்கரைகளிலோ, ஒன்று குவிந்த மனதுடன் காயத்ரீ ஜபிக்க வேண்டும்.

 

2-105.இவைகளைச் செய்யக்கூடாத காலம் என்று விலக்கு எதுவும் இல்லை. வேதாங்கம் கற்கவும், வேதம் சொன்ன தினசரிச் சடங்குகளைச் செய்யவும் விடுமுறை நாட்கள் என்பது எதுவும் இல்லை.

 

2-106.இவை எல்லாம் வேதம் கற்பதின் ஒரு பகுதி என்பதால் விலக்கு எதுவும் இல்லை. அவை  வேறு காரணங்களினால்  தடைப் பட்டாலும் பலன் குன்றாது

 

2-107.யார் ஒருவன் ஓராண்டுக் காலத்துக்கு இவ்வாறு இடைவிடாமல், புலனடக்கத்துடன் செய்கிறானோ, அவன் இருக்கும் இடத்தில் பாலும் தேனும் வெண்ணையும் தயிரும் வற்றாது பாயும்-225

 

 

2-108. குருகுல வாசம் செய்யும் காலம் முழுதும் ஒரு மாணவன், வேதம் ஓதுதல், அக்னியில்  சமித்தினால் ஹோமம் செய்தல், பிச்சை எடுத்தல், குருவுக்குப் பணிவிடை செய்தல், தரையில் படுத்தல் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.

 

2-109.வேத உபதேசம் ஏற்கக் கூடிய பத்து வகை மாணவர்கள் உண்டு: குருவின் மகன், தருமம் அறிந்தவன், ஒழுக்க சீலன் ( தூய்மையுள்ளவன்), உறவினர், கொடையாளி, பணிவுடையன், நம்பத் தகுந்தவன் (பொய்பேசாதவன்), வேதத்தை கற்கும் சக்தியுடையவன், , சேவை செய்பவன், மற்றவர்களுக்கு ஞானம் அளிப்பவன்.

आचार्यपुत्रः शुश्रूषुर्ज्ञानदो धार्मिकः शुचिः ।

आप्तः शक्तोऽर्थदः साधुः स्वोऽध्याप्या दश धर्मतः

 

 

2-110. ஒருவர் கேட்காத எதையும் விளக்காதே; குதர்க்கமாகப் பேசுபவர்களுக்குப் பதில் கொடுக்காதே; உனக்கு விஷயம் தெரிந்தாலும் முட்டாள் (ஒன்றும் தெரியாதவன் போல) இரு.

2-111.யார் தர்மத்துக்குப் புறம்பாக கேட்கிறானோ அல்லது தர்மத்துக்கு எதிராக விளக்குகிறானோ, அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ, விரோதம் காரணமாக இறக்க நேரிடலாம்.

2-112. தர்மமோ, தட்சிணையோ, அடக்கமோ இல்லாதவனுக்கு (வேதத்தைக்) கற்பிக்கக் கூடாது; பயன் தராத ஆளுக்குக் கல்வி கற்பது உவர் நிலத்தில் விதைகளை விதைப்பது போலாகும்-230

 

2-113.வேதம்  அ றிந்தவன், ஒரு தவறானவனுக்குக் கற்பிப்பவதைவிட, இறப்பதே மேல்

 

2-114.வேதம், பிராஹ்மணனிடம் சொன்னது: “நான் பெரும் பொக்கிஷம்;

என்னைக் காப்பாற்று நிந்திப்பவர் எவருக்கும் என்னை அளித்துவிடாதே. அப்போதுதான் நான் மிகவும் சக்தியுடன் விளங்குவேன்”.

विद्या ब्राह्मणमेत्याह शेवधिस्तेऽस्मि रक्ष माम् । %[ं।शेवधिष् टे]

असूयकाय मां मादास्तथा स्यां वीर्यवत्तमा ॥ Bछ्.Sछ्॥

 

यमेव तु शुचिं विद्यान्नियतब्रह्मचारिणम् । %[ं। विद्या नियतं ब्रह्मचारिणम्]

तस्मै मां ब्रूहि विप्राय निधिपायाप्रमादिने ।

 

2-115. தூய்மையுடைய, புலன் அடக்கம் உடைய, கிரஹிக்கும் சக்தியுடைய, பொக்கிஷத்தைப் பாதுக்காக்கக் கூடிய பிராமணன் இடத்தில் என்னைக் கொடு

2-116. வேதம் அறிந்த ஒருவரின் அனுமதி இல்லாமல், வேதத்தைக் கற்பவன் வேதத்தைத் திருடியவன் ஆவான். அவன் நரகத்தில் வீழ்வான்.-234

ब्रह्म यस्त्वननुज्ञातमधीयानादवाप्नुयात् ।

स ब्रह्मस्तेयसंयुक्तो नरकं प्रतिपद्यते

 

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

எனது கருத்து

 

இந்தப் பகுதி வேதம் எவ்வளவு புனிதமானது என்பதை விளக்குகிறது.

 

தகுதி இல்லாதவருக்குக் கற்பிப்பதைவிட அந்த அறிவுடன் இறந்து போனாலும் பரவாயில்லை என்கிறது.

 

மீண்டும் மீண்டும் ஒழுக்கத்தையும் புலன் அடக்கத்தையும் மநு வலியுறுத்துகிறார்.

 

புலன் அடக்கமும், ஆசையின்மையும், ஒழுக்கமும்தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிராமணரை உயர் நிலையில் வைத்தது.

 

வேதம் பிராமணனிடம் வந்து சொன்ன வாசகம் அருமையானது; நான் ஒரு பொக்கிஷம்; என்னைப் பாது காத்து இதன் மதிப்பை அறிந்த தூயவனிடம் என்னை ஒப்படை.

 

இன்னும் ஒரு அறிவுரை எல்லோருக்கும் பொதுவானது: கேள்வி கேட்காமல் பதில் சொல்லாதே. குதர்க்கமாக கேட்பவனிடம் முட்டாளைப் போல நடி.

 

3 நல்ல உவமைகள்

ஆசைகளைப் பூர்த்தி செய்ய விழைவது, தீயில் நெய்யை ஊற்றி அதை அ ணைப்பதற்குச் சமம் என்ற உவமையும்

 

பயனற்ற ஆட்களுக்கு வேதம் கற்பிப்பது, உப்பு மணலுள்ள நிலத்தில் விதை விதைப்பதற்குச் சமம் என்ற உவமையும்,

இந்திரியங்களில் ஒரு இந்திரியம் (புலன்கள்) பலவீனமாக இருந்து மனதைப் பரிதவிக்கவிட்டாலும், அது ஓட்டையுள்ள தண்ணீர்ப் பைக்குச் சமம் என்ற உவமையும் ரசிக்கக் கூடியவை.

 

அந்தக் காலத்தில் தோலினால் ஆன தண்ணீர்ப் பை இருந்ததை இந்த ஸ்லோகம் காட்டுகிறது.

பிராமணர்களுக்குச் சொன்ன காணாமல் கோணாமல் கண்டு கொடு- (சந்தியா வந்தனம் செய்) என்பதும் நோக்கற்பாலது.

நண்பகலில் செய்யப்படும் மாத்யாஹ்னிகம் பற்றி மநு ஒன்றும் செப்பாதது வியப்புக்குரியது. அவர்காலத்தில் மதிய வழிபாடு இல்லையா? அல்லது எல்லோருக்கும் தெரிந்ததைச் சொல்ல  வேண்டியதில்லை என்று விட்டுவிட்டாரா?

இன்னும் 2400 ஸ்லோகங்கள் உள.

 

தொடரும்—

 

 

 

மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்! (Post No.4659)

Date: 24 JANUARY 2018

 

Time uploaded in London- 6-06 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4659

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

(தமிழை வளர்க்க விரும்புபவர்கள், தன் மனைவி, மகன்கள், கணவர்கள் , ஆளும் அரசாங்கத்தினர் ஆகியோர் தன்னிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர் என் எழுத்துக்களைத் திருட மாட்டார்கள். எழுதியவர் பெயருடன் பகிர்வார்கள்; பிளாக் பெயரை நீக்க மாட்டார்கள்)

 

 

மஹாபாரதம்

 

மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்!

 

ச.நாகராஜன்

1

உலகின் ஆகப் பெரும் இலக்கியமான மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள் மட்டும் சுமார் எட்டாயிரம் உள்ளன. ஒரு லட்சம் ஸ்லோகங்களில் 8000 என்றால் 8 % என்று ஆகிறது.

வியாஸர் மஹா கண்பதியை அணுகி தனக்கு இந்த இதிஹாஸத்தை எழுத உதவி புரிந்து அனுக்ரஹிக்குமாறு வேண்ட, அவரோ ‘எழுதுகிறேன், ஆனால் தங்கு தடையின்றி நிற்காமல் சொல்ல வேண்டும்’ என்று நிபந்தனை போடச் சற்றுத் திகைத்துப் போனார் வியாஸர். பதில் நிபந்தனையாக, ‘புரிந்து கொண்டு எழுத வேண்டும்’ என்று சொல்ல அதற்கு ஒத்துக் கொண்டார் விநாயகர். ஆகவே தான் எழுந்தன இந்த அற்புதமான புதிர் ஸ்லோகங்கள். ஆங்காங்கே முடிச்சுகளைப் போட, அதைப் புரிந்து கொள்ள விநாயகருக்குச் சற்று நேரம் ஆனது. அதற்குள் அடுத்த பல நூறு ஸ்லோகங்களை மனதிற்குள் கவனம் செய்து கொண்டார் வியாஸர்.

இந்த ஸ்லோகங்களுக்கு ‘ கூட ஸ்லோகங்கள்’ என்று பெயர்.

இவை அனைத்தையும் தொகுத்திருக்கும் புத்தகம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

ஆங்காங்கு பல காலமாக பல்வேறு விற்பன்னர்கள் நடத்திய உபந்யாசங்களில் இவை இடம் பெறும். கேட்போர்களின் மனதைக் கவரும். அவர்களையும் யோசிக்க வைக்கும்.

2

மஹாபாரத ஆராய்ச்சியில் ஈடுபட்ட அறிஞர் சி.வி. வைத்யா 1905ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட புத்தகம் ‘தி மஹாபாரதா – எ கிரிடிஸிஸம்’ (‘The Mahabharata: A Criticism” – C.V.Vaidya). இதில் அவர் மஹாபாரதத்தின் முதல் பர்வங்களில் நிறைய புதிர் ஸ்லோகங்களும், பின்னால் உள்ள பர்வங்களில் குறைந்த அளவு புதிர் ஸ்லோகங்களும் உள்ளன என்று கூறுகிறார்.

ஆதி பர்வத்தில் 3; சபா பர்வத்தில் 2; வன பர்வத்தில் 3; விராட பர்வத்தில் 4; உத்யோக பர்வத்தில் 3; பீஷ்ம பர்வத்தில் 1; துரோண பர்வத்தில் 5; கர்ண பர்வத்தில் 3; சாந்தி பர்வத்தில் 2;அஸ்வமேத பர்வத்தில் 1; ஆக மொத்தம் 27  புதிர் ஸ்லோகங்களை எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார். ஆனால் எட்டாயிரம் ஸ்லோகங்களையும் புரிந்து கொண்டு தொகுப்பார் இல்லையோ என்னவோ!

1915ஆம் ஆண்டு  மஹாபாரதத்தைச் சிறந்த முறையில் தமிழில் மொழிபெயர்த்து அளிக்கும் மகத்தான பணியில் இறங்கிய கும்பகோணம் காலேஜ் ரிடையர்ட் தலைமைத் தமிழ்ப் பண்டிதர் பாஷாபாரத துரந்தர, மஹாமஹோபாத்யாய, ஸ்ரீ ம.வீ. இராமானுஜாசாரியார் பல ஸ்லோகங்களுக்கு மஹாபாரத விற்பன்னர்களாலும் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாமல் போனதென்றும் அதற்கான சரியான அர்த்தத்தைக் கண்டுபிடித்து வெளியிட முயன்றதால் சில பர்வங்களை வெளியிடுவதில் கால தாமதம் ஆனதாகவும் தெரிவிக்கிறார்.

ஆக புதிர் ஸ்லோகங்கள் அனைத்தையும் ஒரு சேரப் படிக்க முடியாமலேயே உள்ளது.

 

3

விநாயகருக்கே சவாலாக அமைந்த தனது ஸ்லோகங்களைப் பற்றி வியாஸர் கூறும் போது, “அதன் கருத்தை நான் அறிவேன்; சுகன் அறிவான்; ஸஞ்சயன் அறிவானோ! மாட்டானோ!” என்று குறிப்பிடுகிறார்.

எடுத்துக் காட்டாக ஒரு புதிர் ஸ்லோகத்தை இங்கே காண்போம்:

நதீஸ லங்கேஅ ஸவநாரி கேது: நகாஹ்வ யோநாம நகாரி |

ஸுநு: ஏஷோங்க நாவேஷதா: கிரீடி:|

ஜித்வாவய; நேஷ்ய திசாத்ய காவ: ||

இதில் உள்ள முடிச்சை அவிழ்ப்பது கஷ்டமான ஒன்று.

சரியான இடத்தில் பதத்தைப் பிரித்து அர்த்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்!

அர்ஜுனன பேடியாக மாறி உத்தரனை தேரோட்டும் சாரதியாகக் கொள்ளும் விராட பர்வத்தில் கோக்ரஹண காலத்தில் வரும் ஸ்லோகம் இது.

துரோணர், பீஷ்மர், துரியோதனன் ஒரு சேர இருக்கின்றனர்.

பக்கத்தில் உள்ள துரியோதனன் அறியாத வண்ணம் பீஷ்மருக்கு, துரோணர், “ அவன், பசுக்களை மீட்க வந்த அர்ஜுனன்” என்பதைப் பூடகமாகத் தெரிவிக்கும் ஸ்லோகம் இது.

விநாயகர் கூடச் சற்று திகைத்து விட்டு அர்த்தம் கண்டுபிடிக்கும் படியாக அமைந்த ஸ்லோகமும் இது தான்;

பொதுவாக கவனித்தால் அர்த்தமே விளங்காது!

“ நதீ ஜலம் கேசவ நாரி கேது நநாஹ்வயோ நாம நகாரி ஸுநு:”

ஆற்றின் ஜலம், கேசவன், பெண், கொடி, கொடி மரத்தின் பெயர், மலையின், சத்ரு, பிள்ளை – என்ன இது? ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத சொற்கள்!

இதில் என்ன அர்த்தம் இருக்க  முடியும்?

ஆனால் பதம் பிரிக்கும் போது நதீ ஜலம் என்று பிரிக்காமல் நதீஜ என்று கொண்டால் நதீஜ – நதியின் புத்திரனான பீஷ்மன்- அதாவது கங்கைக்குப் பிறந்த பீஷ்மன் என்று அர்த்தம் வரும்.

லங்கேசவந – இலங்கையில் உள்ள அசோக வனம்.

அரி சத்ரு  – அந்த அசோகவனத்திற்கு எதிரி ஆஞ்சநேயர்.

கேது – அவரைக் கொடியாக உடையவன்

நகாஹ் வய – அர்ஜுன என்ற மரத்தின் பெயரைப் பெற்றவன்

நகாரி ஸுநு: – மலைச் சத்ருவான இந்திரனின் குமாரனான அர்ஜுனன்

என்று இப்படிப் பிரித்து ஸ்லோகத்தின் சரியான பொருளை உணர வேண்டும்!

பெண் வேஷத்துடன் கிரீடம் தரித்த அர்ஜுனன் நம்மை ஜயித்து பசுக்களை ஓட்டிச் செல்வான் என்பது இதன் பொருள்.

4

 

சபா பர்வத்தில் வரும் ஒரு சொற்றொடர் இது: “மனஸாதாளம் பேரிம்”

மனஸா என்றால் 12;

தாளம் என்றால் ஒரு சிறிய இடைவெளி.

ஆக இதன் உண்மையான அர்த்தம் 12 வெளியை விட்டமாகக் கொண்ட ஒரு பேரிகை!( A Drum with 12 spans as diameter)

5

மஹா பாரதத்தை நூற்றுக் கணக்கான கோணங்களில் அலசி ஆராய்ந்து படித்து வியக்கலாம். அதில் ஒன்று தான் கூட ஸ்லோகம் – புதிர் கவிதைகள் – கண்டு படிப்பது! புத்திக்குச் சவாலாக அமையும் இந்த புதிர் ஸ்லோகங்கள் மஹாபாரத்தைப் படிக்க ஆவலைத் தூண்டுபவை மட்டும் அல்ல; விநாயகரையே மலைக்க வைத்த வியாஸரின் புத்தி கூர்மையைக் காட்டும் ஸ்லோகங்களும் ஆகும்!

இப்படி ஒரு புதிர் செய்யுள்களைக் கொண்டுள்ள இன்னொரு இலக்கியம் உலக மொழிகளில் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத் தகுந்தது!

படிப்போம்; வியப்போம்; புதிரை அவிழ்த்து மகிழ்வோம்.

***

 

சிறந்த மூலிகை எது? சாணக்கியன் தகவல் (Post No.4648)

Written by London Swaminathan 

 

Date: 22 JANUARY 2018

 

Time uploaded in London 8-17 am

 

 

 

Post No. 4648

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கௌடில்யர் என்றும் சாணக்கியன் என்றும் பெயர் கொண்ட மேதாவி 2300 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்தார். ஏழையாகவும், அவலட்சணமாகவும் இருந்த அந்த ப்ராஹ்மணன், மகத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். பல நீதி நூல்களை யாத்தார். உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்தசாஸ்திரத்தையும் எழுதினார். அவர் டாக்டர் அல்ல. ஆயினும் போகிற போக்கில் பல மருத்துவக் குறிப்புகளையும் பாடி வைத்துள்ளார். மூலிகையில் சிறந்தது எது என்றும்,  நீரின் மஹிமை, நெய்யின் சக்தி என்ன   என்றும் சொல்லிவைத்தார்.

 

இதோ மூலிகையில் சிறந்தது எது என்ற ஸ்லோகம்:-

 

ஸர்வௌஷதீனாம் அம்ருதா ப்ரதானா

ஸர்வேஷு ஸௌக்யேஷ்தசனம் ப்ரதானம்

ஸர்வேந்த்ரியானாணாம் நயனம் ப்ரதானம்

ஸர்வேஷு காத்ரேஷு சிரஹ ப்ரதானம்

சாணக்ய நீதி, அத்யாயம் 9, ஸ்லோகம் 4

 

பொருள்:

எல்லா மூலிகைகளிலும் சிறந்தது அம்ருதா

மகிழ்ச்சியான விஷயங்களில் சிறந்தது   உணவு உண்ணல்;

ஐம்புலன்களில் சிறந்தது கண்;

உடல் உறுப்புகளில் சிறந்தது தலை.

 

எண்சாண் உடம்புக்கு சிரசே (தலை) பிரதானம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் இவர் சொல்லக்கூடிய அம்ருதாவை அம்ருதவல்லி என்ற மூலிகையாக வியாக்கியானக்காரர்கள் கருதுகின்றனர்

 

எது அமிர்தவல்லி என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. தமிழில் சீந்தில் கொடி என்றும் இந்தியில் ‘குடூசி’

என்றும் சொல்லுகின்றனர். இதனுடைய தாவரவியல் பெயர் கொக்குலஸ் கார்டிபோலியஸ்  (Cocculus Cordifolius OR Tinospora cordifolia) என்று சாணக்கிய நீதியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அறிஞர் சத்ய வ்ரத சாஸ்திரி சொல்கிறார். கார்டிபோலியஸ் என்றால் இருதய வடிவிலான இலை என்று பொருள்; இந்த மாதிரி இருதய வடிவு இலைகள் அரச மரத்துக்குக் கூட உண்டு.

 

 

சீந்தில் கொடிக்கு பல    மருத்துவ குணங்கள் உண்டு; இது சர்க்கரை வியாதி, புற்று நோய் ஆகியவற்றுகும் வேறு பல நோய்களுக்கும் மருந்து என்று ஆயுர்வேத நூல்கள் பகரும்.

 

 

சிலர் அமிர்தவல்லி, ஓம வல்லி என்றும் சொல்லுவர். எப்படியாகிலும் குறிப்பிடப்படும் எல்லா மூலிகைகளுமே நன்மை பயக்கக்கூடியவையே.

XXX

நெய்யின் மஹிமை

 

சாணக்கியன் நெய், மாமிசம், பால் பற் றிப் பல சுவையான விஷயங்களைக் குறிப்பிடுகிறான். இதோ ஸ்லோகங்கள்:

 

அன்னாத் தசகுணம் பிஷ்டம் பிஷ்டாத் தசகுணம் பயஹ

பயசோ அஷ்ட குணம் மாம்ஸம் மாம்ஸாத் தசகுணம் க்ருதம்

சாணக்ய நீதி, அத்யாயம் 10, ஸ்லோகம் 19

 

 

அரிசியைவிட பத்து மடங்கு சக்தி வாய்ந்தது மாவு; மாவை விட பத்து மடங்கு சக்தி வாய்ந்தது பால்;  பாலை விட எட்டு மடங்கு சக்தி வாய்ந்தது மாமிஸம்; மாமிஸத்தை விட பத்து மடங்கு சக்தி வாய்ந்தது நெய்.

 

XXXX

 

சாகேன ரோகா வர்தந்தே பயஸா வர்ததே தனுஹு

க்ருதேன வர்ததே வீர்யம் மாம்ஸான் மாம்ஸம் ப்ரவர்ததே

சாணக்ய நீதி, அத்யாயம் 10, ஸ்லோகம் 20

 

 

பொருள்

காய்கறிகள் மூலம் வியாதிகள் வருகின்றன; பால் மூலம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது; நெய் மூலமாக ஆண்களின் விந்து பெருகுகிறது; மாமிஸம் மூலம் உடலில் மாமிஸம் கூடுகிறது.

 

இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்; கழுவாத காய்கறிகளோ, கெட்டுப்போன காய்கறிகளோ உடலுக்குக் கேடு விளைவிக்கும். மேலும் மேலை நாட்டு வைத்திய முறையில் இல்லாத பத்தியம் என்பது ஆயுர்வேதம், சித்த மருத்துவ சிகிச்சைகளில் உண்டு; சிற்சில சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளும் போது சிற்சில காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும் என்று நாட்டு வைத்தியர்கள் சொல்லுவர். அந்த வகைகளிலும் காய்கறிகள் நோயை உண்டாக்கும் என்ற வாசகம் பொருந்தும்

 

மாமிஸத்தால் உடல் மாமிஸம் அதிகரிக்கும் எனபது வள்ளுவனும் சொன்ன அருமையான வாக்கு ஆகும்

 

 

தன்னூன் பெருக்கற்குத்தான் பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள் (குறள் 251) என்பார்

 

“தன் உடம்பைப் பெருக்குவதற்கு பிற உயிரின் ஊனைக் கொன்று தின்பவனுக்கு வாழ்க்கையில் அருள் எப்படி இருக்க முடியும்? “(குறள் 251)

வள்ளுவனின் கேள்வி நல்ல கேள்வி.

 

XXX

 

நீரின் மஹிமை

 

இன்னும்  ஒரு பாட்டில் நீரின் மஹிமை பற்றி செப்புகிறார்:

அஜீர்ணே பேஷஜம் வாரி ஜீர்ணே வாரி பலப்ரதம்

போஜனே வாரி சம்ருதம் வாரி போஜனாந்தே விஷப்ரதம்

—சாணக்ய நீதி, அத்யாயம் 8, ஸ்லோகம் 7

 

 

பொருள்

அஜீர்ணக் கோளாறு உள்ளவர்கள் தண்ணீர் சாப்பிடுவது மருந்து போலாகும்; ஜீரண சக்தியோடு உடலுக்குப் பலத்தையும் தரும்; சாப்பாட்டுடன் நீர் அருந்துவது அமிர்தத்துக்கு ஒப்பாகும்; சாப்பிட்டு முடித்த பின்னர் குடிக்கும் நீர் விஷத்துக்குச் சமம்.

 

இவ்வாறு சாணக்கியன் சொல்லும் பல மருத்துவக் குறிப்புகள் நீதி வாசகங்களுக்கு இடையே உள்ளன.

 

–SUBAHM–

 

கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை (Post No.4643)

Date: 21 JANUARY 2018

 

Time uploaded in London- 6–37 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4643

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இன்பம்

கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை

.நாகராஜன்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

1

கவியரசு கண்ணதாசன் சம்ஸ்கிருதத்தில் கவிதை எழுதி இருக்கிறாரா? முதலில் அவருக்கு சம்ஸ்கிருதம் தெரியுமா?

கேள்விகள் நியாயமானவை தான்.

ஆரம்ப காலத்தில் சேரக் கூடாதாரோடு சேர்ந்திருந்த காலத்தில் அவர் எழுதிய் கவிதை இது:

 

“செத்த மொழி பெற்ற மகன், தமிழைப் பார்த்துத்

திணறுகிறான்! மயங்குகிறான்! வேற்று நாட்டுப்

பொத்தல்களைத் தமிழாக்கி விற்ப தற்குப்

புறப்பட்டோன், ஆதலினால் புலம்பு கின்றான்!

அத்தியிலே பூத்தம்லர் அனைய நாட்டில்

அழகுமொழி படைத்த மறைமலையைக் கண்டால்

சித்திரமும் தமிழ் பேசும்; திறமில் லாத

சிறுநரிதான் ஊளையிடும்; இட்டான் ஊளை!

வேரெடுத்த செம்மைமொழி தமிழல் லாமல்

வேறெது தான் தமிழாகும்! அத்திம் பேரும்

பூரிகளும் ஸ்வாமிகளும் ஆச்சார் யாளும்

பூரணமும் ஸ்வாகதமும் தமிழா?”

  • தமிழ் போலும் – மொழி இல்லை என்ற கவிதையில்

ஆனால் பக்குவப்பட்ட நிலையில், அவர் கூறியது:

“முட்டாள்தனமாக ‘வடமொழி செத்த மொழி’ என்று எவனெவனோ சொன்னதைக் கேட்டு நான் தான் காலத்தை வீணாக்கி விட்டேன். இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும். ஆங்கிலம் காப்பாற்றாத அளவுக்கு வ்டமொழி காப்பாற்றும். வடமொழியின் மூலம் சிறந்த எழுத்தாளனாகலாம்; பேச்சாளனாகலாம்; மொழிபெயர்ப்பாளனாகலாம்.”

 

 

2

“தமிழின் பெயரால் கூப்பாடு போடுவது அரசியல்; தமிழ் நம் உயிர்; அது போல் வடமொழி நமது ஆத்மா”

இதை விடச் சிறப்பாக இந்த இரு மொழிகளையும் பற்றி வேறு யார் தான் கூற முடியும்? என்னதான் கூற முடியும்!

இதைச் சொல்லி விட்டுச் சும்மா இருக்கவில்லை.

அவர் கூறுகிறார்:

“வடமொழி ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். இரண்டு ஆண்டுகளாக நான் வடமொழியில் பயிற்சி பெற்று வருகிறேன்.”

இந்தப் பயிற்சிக்கு அவரது உற்ற நண்பர் ஒருவர் – ஆல் இந்தியா ரேடியோ அதிகாரி ஒருவர் – துணை புரிந்தார்.

இந்த வட மொழிப் பயிற்சி தமிழுக்குப் பெரிய நலனை அளித்தது.

 

3

ஆம், என்ன நலன்? சில பல நல்ல நூல்கள் வடமொழியிலிருந்து அவர்  மூலமாக தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழுக்குக் கிடைத்தது.

அவரது வார்த்தைகளில் அதைப் பார்ப்போம்;

“வடமொழியைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக இப்போது பகவத்கீதை விளக்கவுரையைக் கவிதையிலும் உரைநடையிலும் எழுதியுள்ளேன்.

 

 

பஜகோவிந்தத்தில் வரும் முப்பத்தோரு பாடல்களையும் விவேக சிந்தாமனியைப் போல சந்தக் கவிகளாக்கியுள்ளேன்.”

மிக அருமையான மொழி பெயர்ப்புக் கவிதைகளாக இவை அமைந்துள்ளதைப் படித்துப் பார்த்து உணரலாம்.

இது மட்டுமல்ல, கீத கோவிந்தத்தில் மனதைப் பறி கொடுத்த அவர் அதை, “கோபியர் கொஞ்சும் ரமணன்” என்று தமிழில் தந்தார்.

 

 

ஜெயதேவரின் அஷ்டபதி பற்றி அவர் தனது கவிதையில் கூறும் போது சொல்வது இது:

கண்ணனின் லீலையை அஷ்டபதி – என்னும்

காவிய மாக்கிய ஜெயதேவன்

எண்ணி உரைத்ததை நானுரைத்தேன் – அதில்

இன்னும் பலப்பல போதையுண்டு!

 

கோலமிகும் இந்தப் பாடலினை – கீத

கோவிந்தம் என்றும் உரைப்பார்கள்

ஞால மொழிகளில் வந்ததிது – கண்ணன்

ரஸ லீலாவினைச் சொல்வதிது!

 

மொத்தம் இருபத்துநான்கு வண்ணம் – அது

மோகச்சுவை ரஸம் ஊறும் கிண்ணம்

அத்தனையில் இங்கு ஒன்பதையே – நான்

அள்ளிக் கொடுத்தனன் என் மொழியில்

 

போஜன் மகன் ஜெய தேவனவன் – இங்கு

போதனை செய்தது ஞான ரஸம்!

ராஜன் பராசரர் வம்சமவன் – அந்த

ஞானியின் பாடலைப் பாடுகவே”

24 அஷ்டபதியில் ஒன்பதைத் தமிழாக்கினார் கவிஞர்.

 

 

4

வடமொழியின் சுவையையும் அருமையையும் உணர்ந்த கவிஞர் அதில் தோய்ந்தே போனார்.

அதன் விளைவு தான் அவர் எழுதிய சம்ஸ்கிருதக் கவிதை.

“இதோ எனக்குத் தெரிந்த வடமொழியில் நான் எழுதிய ஒரு பாடல்:” என்று கூறி விட்டு அவர் தரும் அற்புத சம்ஸ்கிருதக் கவிதை இது தான்:-

 

அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்

முரளி மோகனம் சுவாமி அசுர மர்த்தனம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

 

நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம்

நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம்

பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

 

ஸத்திய பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம்

சர்வ ரக்ஷகம் சுவாமி தர்ம தத்துவம்

ராத பந்தனம் சுவாமி ராஸ லீலகம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

எப்படி இருக்கிறது சம்ஸ்கிருதக் கவிஞர் கண்ணதாசனின் சம்ஸ்கிருத கவிதை!

 

 

5

என்ன ஒரு வருத்தம் நமக்கெல்லாம்..? நமது கவியரசு இன்னும் ஒரு நாற்பது ஆண்டுகளாவது கூட வாழ்ந்திருக்கலாம்.

“ஆண்டவன் எனக்கு இன்னும் பத்தாண்டுகள் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பானேயானால், ஆங்கிலத்தில் ஒரு சிறு காவியமும், வடமொழியில் ஒரு சிறு காவியமும் எழுதுவேன்.” என்றார் அவர்.

ஆனால் கொடுத்து வைக்கவில்லை – தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும்.

என்றாலும் கூட இறைவன் அருளால் அவர் தமிழில் எழுதியுள்ள ஆன்மீக இந்துக் களஞ்சியம் நிச்சயம் ஒரு அற்புத ஞான  ஓவியமே.

அதைப் படித்து அவரது மேன்மையைத் தெரிந்து கொள்ளலாம்; அப்போது இந்து மதச் சிறப்பும் தானாகவே தெரிய வரும்.

 

 

 

ஆதாரம் :

  1. முதல் பக்கம் – கல்கியில் வந்த கட்டுரை – தலைப்பு “மொழி வெறுப்பு – விழி இழப்பு”

2.கோபியர் கொஞ்சும் ரமணன் – கண்ணதாசன் மாத இதழ் ஜனவரி 1978

3.கண்ணதாசன் கவிதைகள் – முதல் இரண்டு தொகுதிகள்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

ரொம்பவும் நல்லவனாக இருக்காதே! சாணக்கியன் ‘அட்வைஸ்’!!! (Post No.4605)

ரொம்பவும் நல்லவனாக (இளிச்சவாயனாக, அப்பாவியாக) இருக்காதே! சாணக்கியன் ‘அட்வைஸ்’!!! (Post No.4605)

Written by London Swaminathan 

 

Date: 11 JANUARY 2018

 

Time uploaded in London  7-39 AM

 

 

 

Post No. 4605

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சாணக்கியன் சொல்லுகிறான்:

 

மிகவும் நேர்மையாக நிமிர்ந்து நிற்காதே! காட்டுக்குப் போய் மரங்களைப் பார்; நேராக நிமிர்ந்து சென்ற மரங்களை எல்லாம் வெட்டி எடுதுக் கொண்டு போய் விட்டார்கள்; கூனிக் குறுகிய மரங்களை யாரும் தொடவில்லை. அப்படியே நிற்கின்றன.

நாத்யந்தம் ஸரலைர்பாவ்யம் கத்வா பஸ்ய வனஸ்தலீம்

ச்சித்யந்தே ஸரலாஸ்தத்ர குப்ஜாஸ்திஷ்டந்தி பாதபாஹா

–சாணக்கிய நீதி, அத்யாயம் 7, ஸ்லோகம் 12

 

இதைப் படித்தவுடன் சாணக்கியனைத் தப்பாக எடை போட்டுவிடதீர்கள்; அவன் மஹா மேதாவி; மகதப் பேரரசை உருவாக்கிய பின்னரும் குடிசையில் வாழ்ந்த ஏழைப் ப்ராஹ்மணன் அவன். இங்கே சொல்ல வந்தது எல்லாம் அரசியலுக்கு மட்டுமே பொருந்தும்; மேலும் அசத்தியத்தை, அதர்மத்தை அழிக்க கிருஷ்ணன் போல சாம, தான, பேத, தண்டத்தைப் பின்பற்றலாம் என்பதே அவன் சொல்ல வந்த விஷயம்.

 

 

‘தூங்கும் புலியைத் தட்டி எழுப்பாதே’,

‘தூங்கும் புலியை சீண்டாதே’, என்றும் ‘தூங்குகின்ற புலியை இடறிய சிதடன்’ என்றும் தமிழில் சொல்லுவர்.

 

எந்த ஏழு பேர் தூங்கிக் கொண்டிருந்தால் எழுப்பலாம் , யாரை எழுப்பக்கூடாது என்று பட்டியல் தருகிறான் சாணக்கியன்

 

 

((தமிழ்த் திருடர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால்இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக்கு கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்நீயே கவனித்துக்கொள்!))

 

 

எழுப்பு! எழுப்பு! ஏழு பேரை எழுப்பு!!!

 

 

கீழ்கண்ட ஏழு பேர் தூங்கினால் உடனே எழுப்பிவிடு

வித்யார்த்தி சேவகஹ பாந்தகஹ க்ஷுதார்த்தோ பயகாதரஹ

பண்டாரீ ச ப்ரதிஹாரீ ஸப்த ஸுப்தான் ப்ரபோதயேத்

——சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 6

 

கீழ்கண்ட ஏழு பேரை எழுப்பு:

மாணவன், வழிப்போக்கன், வேலைக்காரன், பசியால் வாடுபவன், பயத்தால் நடுங்குபவன்,  பண்டகசாலை பொறுப்பாளர், வேலைக்காரன்

 

எழுப்பாதே, எழுப்பாதே, ஏழு பேரை எழுப்பாதே!

அஹிர் ந்ருபம் ச சார்தூலம் கிடிம் ச பாலகம் ததா

பரஸ்வானம் ச மூர்க்கம் ச ஸப்த ஸுப்தான் ந போதயேத்

—சாணக்கிய நீதி, அத்தியாயம் 9, ஸ்லோகம் 7

 

கீழ்கண்ட ஏழு பேரைத் தூங்கும் போது எழுப்பாதே:

பாம்பு, அரசன், புலி, காட்டுப்பன்றி, குழந்தை, வேறு ஒருவரின் நாய், முட்டாள்.

 

அருமையான புத்திமதிகள்; நன்றாக யோசித்துப் பார்த்தால் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு வியாஸமே எழுதலாம்.

வாழ்க சாணக்கியன்!

 

சுபம், சுபம்–

 

மூன்று பொம்மை கதை, சாணக்கியன் எச்சரிக்கை – (Post No.4602)

Written by London Swaminathan 

 

Date: 10 JANUARY 2018

 

Time uploaded in London  7-53 AM

 

 

 

Post No. 4602

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

((தமிழ்த் திருடர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால்இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக்கு கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்நீயே கவனித்துக்கொள்!))

 

மூன்று பொம்மை கதை

விஜய நகரப் பேரரசன் கிருஷ்ண தேவ ராயர் சபைக்கு ஒரு வணிகன் மூன்று பொம்மைகளைக் கொணர்ந்தான். அவற்றின் ரஹசியங்களைக் கண்டு பிடிக்கும் அறிவாளி யாரேனும் அந்தச் சபையில் உண்டா என்று வினவினான். எல்லோரும் பொம்மைகளை வாங்கிப் பார்த்துவிட்டு திரு திரு என முழித்தனர். விடை காண இயலாமல் தவித்தனர். அரசனும் சில நாட்கள் கழித்து அந்த வியாபாரியை திரும்பி வரும்படி சொல்லி அனுப்பினன். தெனாலி ராமன் கையில் அந்த பொம்மையைக் கொடுத்தவுடன் அவனுக்கு அதன் சூக்ஷ்மம் புரிந்தது.

Masks sold in Bangalore; newspaper picture

மறு நாள் எல்லோரும் ராஜ சபையில்  இருக்கையில் ஒரு சிறு கம்பியைக் கொண்டுவருமாறு தெனாலி ராமன்

வேண்டினான்.

 

கம்பி என்ன? தம்பி; உனக்குத் தங்கக் கம்பியே தருகிறேன் என்றான் மன்னவன்

 

தம்பி கையில் கம்பி வந்தது.

 

முதலில் ஒரு பொம்மையை எடுத்து காதின் ஒரு புறத்தில் உள்ள ஓட்டை வழியாக உள்ளே செலுத்தினான். அது மறு புறமுள்ள செவி வழியே வெளி வந்தது.

 

யாரும் பார்க்காத  துளைகளை அவன் மட்டும் பார்த்தது முதலில் எல்லோருக்கும் வியப்பு அளித்தது.

 

இரண்டாவது பொம்மையை எடுத்தான். இப்போது காது வழியே சென்ற கம்பி வாயின் வெளியே வந்தது. எல்லோரும் அதன் ‘தாத்பர்யம்’ விளங்காமல் விழித்தனர்

 

இதற்குள் தெனாலி ராமன் மூன்றாவது பொம்மையை எடுத்தனன் ; தங்கக் கம்பியை நுழைத்தனன்;  எங்கே கம்பியின் மறு புறம் என்று  வியந்தனர்.

 

தெனாலி ராமன் சொன்னான்; அது அதன் நடுப்பகுதியில் உள்ள மனதுக்குள்—இதயத்துக்குள்– சென்று விட்டது என்று சொன்னான்.

 

இதன் பொருள் என்ன என்றும் செப்பினான்:

 

முதல் பொம்மை ‘அதமர்’களுக்குச் சமம்; கீழ் மட்ட மக்கள்; எதைச் சொன்னாலும் காதிலேயே வாங்க மாட்டார்கள் இந்தப் பக்கம் செவியில் விழுவது அடுத்த பக்க செவி வழியே வந்து விடும் ; மனதில் அடங்காது.

 

இரண்டாவது பொம்மை ‘மத்யமர்’; இடைத் தர மக்கள்; சொன்னதை மற்றவர்களிடம் சொல்லி விடுவர்; ரஹஸியம் தங்காது.

 

மூன்றாவது பொம்மை ‘உத்தமர்’களைக் குறிக்கும்; உயர் மட்ட மக்கள்; அவர்கள் காதில் வாங்குவதை மனதில் பதிப்பர்; எந்த ரஹஸியத்தையும் வெளியே விடாது காப்பர் என்றான்.எல்லோரும் அவன் பதிலைக் கேட்டு ஆரவாரம் செய்து பாராட்டினர்.

 

அகம் மகிழ, உளம் குளிர, மாமன்னனும் பரிசு மழை பொழிந்தான்.

 

இது ரஹஸியத்தின் பெருமைதனைக் கூறும் ஒரு நிகழ்வு.

இதையே புலவர்களும் பாடி வைத்தனர்.

XXXX

சாணக்கியன் எச்சரிக்கை – ரஹஸியம், பரம ரஹஸியம்!!

 

மனஸா சிந்திதம் கார்யம் வசஸா ந ப்ரகாசயேத்

மந்த்ரேண ரக்ஷயேத் கூடம் கார்யே சாபி நியோஜயேத்

 

பொருள்

உன் மனதில் உள்ள விஷயங்களை எல்லாம் வார்த்தைகளில் வடிக்காதே; அதை ரஹசியமாக வைத்திருந்து செயல் வடிவில் காட்டுக.

சாணக்கிய நீதி, அத்தியாயம் 2, ஸ்லோகம் 7

 

 

இது நல்ல புத்திமதி; ஏன்?

1.ஒருவன் சொன்னபடி செய்ய முடியாமல் போனால் உலகம் அவனைப் பார்த்து சிரிக்கும்

2.முன் கூட்டிச் சொன்னால் அதற்கு யாரேனும் தடை போட முடியும்

 

3.படை எடுப்பு, தாக்குதல்போன்ற விஷயங்களைச் சொன்னால், எதிரி நம்மையும் விட ஒரு படி மேலே போய்விடுவான்

  1. ஆராய்ச்சி, கல்வி முதலிய விஷயங்களை முன்கூட்டிச் சொன்னால் வேறு ஒருவர் அதைச் சொல்லி புகழ் பெறுவர்.

 

  1. பேடண்ட் PATENT வாங்கும் முன் யோஜனைகளை வெளியிட்டால் நம்மைவிட வேறு ஒருவர் செயலில் இறங்கி நம்மைப் பின்னுக்குத் தள்ளக் கூடும்.

 

விவேக சிந்தாமணி என்னும் நூலும் எதில் எதில் ரஹஸியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லும்:-

 

குருவுபதேச மாதர்கூடிய வின்பத் தன்பால்

மருவிய நியாயங் கல்வி வயதுதான் செய்த தருமம்

அரிய மந்திரம் விசார மாண்மையிங் கிவைகளெல்லாம்

ஒருவருந்தெரிய வொண்ணா துரைத்திடி லழிந்து போமே

 

பொருள்

ஆசிரியர் செய்த உபதேசம்,

ஸ்த்ரீயிடத்தில் தான் அனுபவித்த இன்பம்,

தான் எவ்வளவு நியாயவான்,

எவ்வளவு படித்தவன்,

எவ்வளவு தருமம் செய்தனன்,

என்ன வயது ஆகியவற்றையும்

பரமரஹஸியமாக வைத்திருக்க வேண்டும்.

தனக்கு உபதேசம் செய்யப்பட்ட மந்திரம்,

தனது பலம்,

பலவீனமிவைகள் எல்லாம் ஒருவருக்கும் தெரியக் கூடாது;

அப்படித் தெரிந்தால் அதனால் கிடைக்கக் கூடிய பலன் கிடைக்காமற் போய்விடும்.

 

திருவள்ளுவனும் திருக்குறளில் ரஹஸியம் பரம ரஹஸியத்தின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறார்:-

அறை பறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் – குறள் 1076

 

பொருள்

சிலர்,  தாம் கேட்ட ரஹசியச் செய்திகளையும் பல இடங்களுக்குச் சென்று வெளியிடுவர். இப்படிச் செய்பவர்கள் கயவர்கள்;  அவர்கள் அறையப்[படும் டமாரம்- அறை- போன்றவர்கள் ஆவர்.

xxx

பழமொழி நானூறு என்னும் நூலிலும் ரஹசியத்தின் பெருமை விதந்து ஓதப்படுகிறது:

 

பெருமலை நாட! பிறரறியலாகா

அருமறையை ஆன்றோரே காப்பர் – அருமறையை

நெஞ்சிற் சிறியார்க்குரைத்தல் பனையின் மேல்

பஞ்சிவைத் தெஃகிவிட்டற்று

 

பொருள்

பெரிய மலை நாட்டுக்கு உரிமையுடையோனே! சான்றோர்கள், பிறர் அறியக்கூடாத விஷயத்தை ரஹஸியமாகக் காப்பர்; அதை சிறுமனம் படைத்தோருக்கு — சிற்றறிவு படைத்தோருக்குச்— சொன்னால் அது பனை மரத்தின் மீது பஞ்சு வைத்து அதைப் பறக்கவிட்டது போலாகும்; அதாவது மரத்தின் மீது பஞ்சு மூட்டையைக் கொண்டு வைத்தால் அது எப்படி எல்லாத் திசைகளிலும் எளிதில் பரவுமோ அப்படி ரஹஸியமும் அம்பலத்துக்கு வந்துவிடும்.

 

 

இன்னொரு பாடலில் பழமொழி ஆசிரியர் முன்றுரை அரையனார் பகர்வதாவது:-

 

நயவர நட்டொழுகுவாரும் தாம் கேட்ட

துயவாதொழிவார் ஒருவருமில்லை

புயலமை கூந்தல் பொலந்தொடி! சான்றோர்

கயவர்க் குரையார் மறை

 

பொருள்

மேகம் போன்ற கரிய கூந்தலையும் தங்க வளையல்களையும் அணிந்த பெண்ணே, கேள்! அன்போடு உள்ள நண்பரிடமும் கூட ஆராயாது எல்லா விஷயங்களையும் சொல்பவர் எவரும் இல்லை. ஆகவே அறிவுடையோர், கீழ் மக்களுக்கு ரஹஸியத்தைச் சொல்ல மாட்டார்கள்

 

Earlier Article……………….

ரகசியம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ரகசியம்/

 

TAGS: ரகசியம், ரஹசியம், பரம, மந்திரம், ஜொராஸ்டர். இது தொடர்பான எனது பழைய கட்டுரைகள்:–. போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் … https://tamilandvedas.com/…/போலி-சாமியார்-பற…. 2 days ago – போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் (Post No.4294) … கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில், போலி …

 

— சுபம், சுபம் —