பிராமணர், க்ஷத்ரியர், வைசியர் வேதம் படிக்க வேண்டும் – மநு கட்டளை (Post No.7353)

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 17 December 2019

Time in London – 9-38 AM

Post No. 7353

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

மநு நீதி நூல் – Part 46

ஒன்பதாவது அத்தியாயத்தை 16-11-2019-ல் முடித்தோம் . இன்று பத்தாவது அத்தியாயத்தைத் துவங்குவோம் இணைப்பில் முழு சுலோகங்களின் பொருள் உளது. முதலில் சுவையான செய்திகளை புல்லட் (BULLET POINTS) பாயிண்டுகளில் தருகிறேன்.

please go to swamiindology.blogspot.com for an old Manu Smriti Tamil Book.

இந்த அத்தியாயத்தில் மிக முக்கியமான பொன்மொழி ஸ்லோகம் 63-ல் வருகிறது .

அஹிம்ஸை, உண்மை, பிறர் பொருள் திருடாமை, தூய்மை , புலன் அடக்கம் ஆகியன நான்கு ஜாதிகளுக்கும் பொது என்று அறிவிக்கிறார்.

அதற்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்தது ஸ்லோகம் 62 ஆகும் . பிராமணன், கோ மாதா ,பெண்கள், குழந்தைகளைக் காக்க உயிர்விடுவோர் உயர்நிலையை அடைவர். இது சிலப்பதிகாரத்திலும் வருகிறது. மதுரையை எரிப்பதற்கு முன்னர் இவர்களை மட்டும் வருத்தாதே , தீண்டாதே என்று அக்கினி தேவனுக்கு கண்ணகி கட்டளை இடுகிறார். திருவள்ளுவரும் பிராமணர்களையும் பசுவையும் முதலில் வைக்கிறார். குறள் 560, 1066.

ஸ்லோகம் 65-ல் ஏழே தலைமுறையில் சூத்திரன் பிராமணன் ஆகிவிடுவான் என்கிறார்.

ஸ்லோகம் 69 முதல் 73 வரை மநு ஒரு சுவையான பட்டிமன்றம் நடத்துகிறார் விதை/ஆண் முக்கியமா , நிலம்/பெண்  முக்கியமா என்று. இறுதியில் நல்ல நிலத்தில் நல்ல விதை விதைப்பதே சாலச்சிறந்தது என்று தீர்ப்பு வழங்குகிறார் .

இந்த அத்தியாயத்தில் முதல் 70 சுலோகங்களில் கலப்புத் திருமணம், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் பற்றி நிறைய ‘வகை’கள் வருகின்றன. அதில் விராத்யர் , திராவிடர், தஸ்யூ , யவனர் காம்போஜர், சகர் முதலியோர் யார் என்று விளக்கப்படுகின்றனர் . ஆயினும் இவையனைத்தும் இன்று நாம் வழங்கும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை . ஏனெனில் வேறு பல தேச பெயர்களும் கலப்புத் திருமண வகைகளில் வருகிறது.

இரண்டு விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன.

1.மனு நீதி நூலின் இந்த அத்தியாயம் எழுதப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட காலத்தில் கலப்புத் திருமணம் பெருவாரியாக நிகழ்ந்தது. இதை நாம் மகாபாரதத்திலும் காண்கிறோம்.

2.யவனர், திராவிடர், காம்போஜர், சகரர் ஆகியோரும் இந்துக்களே.

முதல் இரண்டு ஸ்லோகங்களில் மூன்று வர்ணத்தினரும்  வேதம் படிக்க வேண்டுமென்பது எந்தக் காலம் வரை பின்பற்றப்பட்டது  என்பதை ஆராய வேண்டும்.

சுலோகம் 20, 22 –திராவிடர், விராத்யர் பற்றிப் பேசுகிறது. தமிழ்ச் சங்கத்தில் நக்கீரர் முதலிய பிராமணர்கள் விராத்தியர் எனப்படுவர். அவர் சங்கு அறுத்து வளையல் செய்யும் தொழிலில் இருந்தார்.

ஸ்லோகம் 25 முதல் கலப்புத் திருமண தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைகள் பற்றிப் பேசப்படுகிறது. இவையெல்லாம் இக்காலத்தில் பொருத்தம ற்றதாகிவிட்டன.

ஸ்லோகம் 47 முதல் அவர்கள் செய்யவேண்டிய தொழில்கள் பற்றி வருகிறது.

ஸ்லோகம் 58-ல் ஆர்யன் (ARYAN)  அல்லாதான் குணம் பற்றி வருகிறது. இன்று இனப் பொருளில் பயன்படுத்தும் ஆர்யன் அல்ல இது . பண்பாடற்றவன் என்பதே பொருள்- அனார்யன் . என்றால் நாகரீகமற்றவன் என்று பொருள். கிரேக்கர்கள் மற்றவர்களை பார்பேரியன் (BARBARIAN) என்று அழைத்தது போல. இன்று அந்தச்சொல்லின் பொருள் காட்டுமிராண்டி

மஹாபாரத நடிகர் சிகரெட் குடிக்கலாமா? (Post No.7274)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 28 NOVEMBER 2019

Time  in London – 17-08

Post No. 7274

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

பிரிட்டனில் மஹாபாரதம் நடந்தபோது ஆகஸ்ட் 16, 1992-ல் நான் தினமணியில் எழுதிய செய்தி. பழைய செய்தியானாலும் சுவை குன்றுவதில்லை

written by london swaminathan in Dinamani dated 16th August 1992.

ஜப்பானில் சாம வேதம்; வேத கால இசைக் கருவிகள் (Post No.7272)

SHOMYO IN JAPAN
SAMA VEDA CONFERENCE

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 28 NOVEMBER 2019

Time  in London – 10-03 AM

Post No. 7272

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

நேர்மையாக `அர்த்தம் விளங்கவில்லை` (MEANING IS OBSCURE, UNCERTAIN) என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

–SUBHAM–

TAGS -சாமவேதம், ஜப்பான், வேத கால, இசைக் கருவிகள்

SAMA VEDA PARAYANA

AINDRA GRAMMAR, PANINI AND TOLKAPPIAR (Post No.7266)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 26 NOVEMBER 2019

Time  in London – 18-48

Post No. 7266

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

Tamils have a special interest in Aindra grammar system. The reason being Tolkappiar, the author of the oldest book in Tamil (Tolkappiam) was well versed in it. Panamparanar who introduces Tolkappiar in his prolegomenon says this. So people wonder whether AINDRA was prevalent before Panini or after Panini or many systems existed at the same time in different parts of India. Tolkappiar says Indra and Varuna are gods of two Tamil regions along with Vishnu, Skanda and Durga representing other three Tamil regions.

Great Tamil poet Kamban says Hanuman was well versed in Aindra grammar. He is also praised as Nava Vyakarana Panditha. (Nava may mean NEW or NINE)

Agrawala says,

“According to Vedic literature Brahma taught grammar to Brihaspati and he taught Indra and Indra taught Bharadwaja. He in turn taught other Rishis (seers). Now we know there was another system Bharadwaja grammar. Bhardwaja was a master of Aindra as well. Panini also mentioned several teachers before him.

Tamils believe that there was one grammar before Tolkappair, codified by Agastya as well. Agastya’s own disciple Tolkappiya did another grammar within a short time.Why? we don’t know. From all these things what we understand is several grammar systems existed simultaneously, because there can’t be more than 50 years difference between Agastya and Tolkappiyar if we believe the story of most famous Tamil commentator Nachinarkiniyar. Tamils also believe that Shiva sent Agastya to codify a grammar to Tamil language. It is in the old Tamil verses. Poet Kalidasa also links Pandya with Agastya in his Raghuvamsa. It is all 2000 year old belief.

Indra is a Vedic God who has the highest number of hymns in the oldest book The Rig Veda. The very construction of the word Aindra (derived from Indra) is also of Sanskrit origin.

But many Tamils do not know much about Panini or other systems of grammar that existed in India. Agrawala in his book ‘India as known to Panini’ gives interesting details:–

KAMBAN, HANUMAN AND AINDRA GRAMMAR

ஐந்திரம் நிறைந்த | Tamil and Vedas

8 May 2018 – அனுமனை நவ வியாகரண பண்டிதன் என்றும் ராமாயணம் வருணிக்கும். நவ என்றால் இரண்டு பொருள் உண்டு. புதிய மற்றும் ஒன்பது …

–SUBHAM–

மந்திரங்களின் மகிமை! – 2 (Post No.7215)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 15  NOVEMBER 2019

Time  in London – 7-29 am

Post No. 7215

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

மந்திரங்களின் மகிமை! – 1 (Post No.7211)

Research article written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 13  NOVEMBER 2019

Time  in London – 9-42 am

Post No. 7211

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

சரக சம்ஹிதையில் 84 வகை மது பானங்கள்! (Post No.7158)

Triphala Powder

WRITTEN  by  London Swaminathan

swami_48@yahoo.com

Date: 30 OCTOBER 2019

Time  in London – 18-26

Post No. 7158

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ஆண் குழந்தைக்கு ஏன் மதிப்பு அதிகம்?- மநுநீதி நூல் -44 (Post No.7142)

மநு நீதிச் சோழன்

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 26 OCTOBER 2019

British Summer Time uploaded in London – 18-36

Post No. 7142

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

இதுவரை 8 அத்தியாயங்களை முடித்து 9-ம் அத்தியாயத்தில் 120 ஸ்லோகம் வரை கண்டோம். மநு  நீதி நூல் –44 ம் பகுதியில் மேலும் சில முக்கிய விஷயங்களை முதலில் புல்லட் (BULLET POINTS) பாயிண்டுகளில் தருகிறேன். பகுதி-4-10-2019ல் தேதி இந்த பிளாக்கில் பதிவிடப்பட்டது

இதோ இன்று மநு நீதி நூல் – பகுதி 44

ஒன்பதாம் அத்தியாயம் 123 முதல் காண்போம்

ஆண் குழந்தைக்கு ஏன் மதிப்பு அதிகம்?

இந்தப் பகுதியில் சொல்லப்படும் விஷயங்கள் இப்போது பயனற்றவை. ஆராய்ச்சியளருக்கு மட்டும் பயன்படக்கூடிய விஷயங்கள்தான். மநு சொல்லக்கூடிய 12 வகை புத்திரர்கள் பற்றிய விதிகள் பின்பற்றப்பட்டனவா என்பதே சந்தேகம். ஏதோ ஒரு காலத்தில் இவை எழுதப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சில சுவையான செய்திகளும் உள.

பிள்ளைக்கு ஏன் `புத்`ரன் என்று பெயர்? ஏன் என்றால் அவன் `புத்` என்னும் நரகத்திலிருந்து அவனது தந்தையை விடுவிக்கிறான். இதனால்தான் ஆண் குழந்தைகளுக்கு மதிப்பு அதிகம்- 9-138

ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் சம அளவில் இருப்பது உலகில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நீதியை நிலைநாட்ட உதவும். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்; பெண்கள் அளவுக்கு அதிகம் உள்ள சமுதாயத்தில் என்ன நிகழும்? ஒருவனுக்கு பல பெண்கள் என்ற அவல நிலை ஏற்படும். பின்னர் திரைப்படங்களில் காணப்படும் நீலாம்பரிகள் அதிகரிக்கும். கொலை, சதி முதலியன அதிகரிக்கும்.

மேலும் பழைய காலத்தில் ஆண் மட்டுமே சம்பாதித்து பெரிய குடும்பங்களைப் பராமரித்தான். உலகம் முழுதும் முக்கியத்தொழில் வேளாண்மையும் போர் புரிதலுமே. ஆகையால் நாட்டைக் காக்க வீர மகன்கள் தேவைப் பட்டது; வீரமாதா என்ற கொள்கையினை வேதத்திலும் புறநானூற்றிலும் காண்கிறோம் ஆகையால் அப்போது ஆண்களே விரும்பப்பட்டனர்.

போரில் சண்டையிட்டு இறந்தால் சொர்க்கத்துக்கு நேரடி டிக்கெட் கிடைக்கும் என்று புறநானூறும், பகவத் கீதையும், குரானும் சொல்கிறது.

எந்த ஒரு நூலையும் மதிப்பிடுவதற்கு முன்னர் அது எப்பொழுது எழுதப்பட்டது? அதை அப்படியே பின்பற்றியதற்கு ஆதாரம் உளதா? மேலும் அதே காலத்தில் வேறு சமுதாயங்கள் எப்படி இருந்தன? என்பதையெல்லாம் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

சந்திரனுக்கு ஏன் 27 மனைவிகள்?

மநு வேறு ஒரு சுவையான செய்தியையும் சொல்கிறார் (9-128)

இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் யார் மூத்தவன்? ஏனெனில் மநுவின் வாதப்படி மூத்தவனுக்கே அதிகம் சொத்துரிமை; ஏனெனில் அவன் தான் நீர்க்கடன் செலுத்தி முன்னோர்களை நரகத்திலிருந்து விடுவிக்கிறான். இரட்டைக் குழந்தைகளில் யார் இரண்டாவதாக தாயின் ஜனன உறுப்பிலிருந்து வெளி வருகிறதோ  அந்தப்பிள்ளையே மூத்தவன். ஏனெனில் அதுதான் முதலில் உருவான கரு. வை யெல்லாம் உரைகாரர்களின் வியாக்கியானம் (9-126)

9-126 ல் மநு சொல்லும் இந்திரன் துதி ஐதரேய பிராஹ்மண (6-3) நூலில் வரும்  சுப்ரஹ்மண்யா துதிகள் என்பதையும்

உரைகாரர்கள் சு ட்டிக்காட்டுவர்.

சரி, ஒருவருக்கு ஆண் குழந்தையே இல்லை; அப்படியானால் அவருக்கு நரக வாசம்தானா? இல்லை. அவருக்குப் பிறந்த பெண்களின் குழந்தைகள் நீர்க்கடன் செலுத்துவர் ( இறந்து போன மூதாதையருக்கு).

பாருங்கள்; அந்தக் காலத்தில் தட்சனுக்குப் பிறந்த 50 பெண்களை எப்படி மணம் செய்வித்தான் என்று (9-129).

தட்சன் 50 பெண்களில் பத்துப் பேரை தர்மனுக்கும், 13 பேரை காஸ்யபருக்கும் 27 பேரை சோமனுக்கும் (சந்திரன்) கொடுத்தான் அல்லவா?

மக்களைப் பெற்ற மகராசி

ஒருவனுக்குப் பிறக்கும் மகன்,  தந்தையைப் போன்றவன்.மகளோ மகனுக்கு சமமானவள்; அப்பாடியிருக்கையில் அவளுக்கு சொத்துரிமையை எப்படி மறுக்க முடியும்? 9-130

தட்சனின் கதை மஹாபாரஹத்திலும் உள்ளதை (1-70; 12-329-57) உரைகாரர்கள் எடுத்துரைப்பர்.

பின்னர் 12 வகை உறவினர்களில் எந்த ஆறு பேர் நீர்க்கடன் செலுத்தலாம், எந்த ஆறு பேர் செலுத்த முடியாது  என்றும் (9-158 முதல்) விளக்குகிறார்.

இவையெல்லாம் ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் பாகப் பிரிவினை சண்டை வரும்போது பயன்பட்டிருக்கலாம்.

பிராமணனுக்கு 4 மனைவி

ஒரு பிராஹ்மணனுக்கு 4 மனைவி இருந்தால் என்ன நிகழும்? 9-149

கல்யாணமாகாத பெண் தகப்பன் வீட்டில் ரகசியமாகக் குழந்தை பிறந்தால் என்ன நிகழும்? (9-172) என்றெல்லாம் மநு விவாதிக்கிறார். அபூர்வமாக இப்படியெல்லாம் நிகழக்கூடும் என்பதை யோசித்து எழுதிய மநு மஹா ‘ஜீனியஸ்’தான். எதையும் அவர் மறைக்கவும் இ ல்லை; மறக்கவும் இல்லை.

ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால், பாரத நாட்டில் ஒழுக்கமிக்க சமுதாயமே இருந்தது. இதை 2000 ஆண்டுகளாக வந்த வெளிநாட்டு யாத்ர்ரீகர்கள் எழுதி வைத்துள்ளனர். இந்த நாட்டில் எதுவும் பத்திரத்தில்  எழுதுவதில்லை இல்லை. வாய்ச்சொல் போதும் (சத்தியம்) ; அவ்வளவு நேர்மையானவர்கள் என்றும் எழுதி வைத்துள்ளனர். மேலும் பல விஷயங்களை ஸ்லோகங்களில் காண்க .

up to 9-220

–subham–

கீதையின் இரண்டாவது கட்டளை! (Post No.7101)

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com

Date: 16 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 6-45 AM
Post No. 7101

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கட்டுரை எண் 7085 வெளியான தேதி 11-10-2019 – ‘கீதை தரும் ஏழு கட்டளைகள்! ஜே.பி. வாஸ்வானி விளக்கம்”

கட்டுரை எண் : 7088 வெளியான தேதி : 12-10-2019 – கீதை : மனிதகுலத்திற்கான அற நூல் : பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி!-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை

கீதையின் இரண்டாவது  கட்டளை!

ச.நாகராஜன்

ஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை தருவதாகக் கூறும் ஏழு கட்டளைகளுள் இரண்டாவது கட்டளையைப் பார்ப்போம் :

இரண்டாவது கட்டளை : Thou Shalt Not fail to do Thy Duty

                          நீ உனது கடமையைச் செய்யத் தவறாதே

இதைப் பற்றி விளக்குகையில் அவர் தரும் சம்பவங்கள் பல.

அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே பார்ப்போம்:

மஹாத்மா காந்திஜி கடமையைத் தன் உயிரினும் மேலாக நேசித்தார். பலனை எதிர்பாராமல் நிஷ்காம்யகர்மமாக தேசத் தொண்டை அவர் செய்த போது ஒரு கணத்தைக் கூட வீணாக்கக் கூடாது என்பது அவரது எண்ணம்; அவரது சங்கல்பம்.

இதே போல தன்னுடன் இருந்தவர்களும் தங்கள் நேரத்தை வீணாக்காது முழு நேரத்தையும் தேசப் பணிக்கென அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார்.

அவருடைய காரியதரிசியான மஹாதேவ தேசாய் அவருடனேயே இருப்பவர். அண்ணலைக் கண் போலப் பாதுகாத்து வந்தவர்.

ஒரு சமயம் மஹாதேவ தேசாய் பிரெஞ்சு மொழி படிக்கிறார் என்பது காந்திஜிக்குத் தெரிய வந்தது.

ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் இதற்காக அவர் செலவிடுகிறார் என்பதும் அவருக்குச் சொல்லப்பட்டது.

அவர் மஹாதேவ தேசாயை அழைத்தார்.

காந்திஜி :- “மஹாதேவ், நீங்கள் பிரெஞ்சு மொழி கற்று வருவது உண்மைதானா? –

மஹாதேவ் :- ஆமாம், பாபுஜி

காந்திஜி :- ‘எப்பொழுது படிக்கிறீர்கள்? எவ்வளவு நேரம் படிக்கிறீர்கள்?

மஹாதேவ் :- ஒரு மணி நேரம் பாபுஜி

காந்திஜி: – இன்னும் எத்தனை நாள் படிக்க வேண்டும்

மஹாதேவ் – இன்னும் ஒரு ஆறு மாதம் ..

காந்திஜி : – ஓஹோ! அதாவது 180 நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், சரி தானே!

மஹாதேவ் :- என்னால் அது முடியும். சீக்கிரமாகவே கற்றுக் கொள்வேன்.

காந்திஜி :- அதாவது அத்தனை மணி நேரம் தேசப் பணிக்கான நேரத்திலிருந்து எடுத்துக் கொள்கிறீர்கள் என்று ஆகிறது. ஒவ்வொரு கணமும் தேசத்திற்காகத் தான் என்று நாம் உறுதி மொழி எடுத்துக் கொண்டோமில்லையா? மற்ற எல்லாம் அது எவ்வளவு நல்லதாக இருந்தாலும் சரி, அவை நமக்கு ஆடம்பரம் போலத் தான். இப்போது நமது நேரத்தை ஆடம்பரத்தில் வீணாக்க முடியாது.

    மஹாதேவ தேசாய் காந்திஜியின் வார்த்தைகளுக்கு மிக்க மதிப்பு தருபவர். பிரெஞ்சு மொழி கற்பதை அவர் நிறுத்தி விட்டார்.

*

பாரத பிரதம மந்திரியாக ஜவஹர்லால் நேரு இருந்த போது நடந்த சம்பவம் இது :

ஒரு முறை அவர் தனது காரில் ஒரு அவசரக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார். ரெயில்வே க்ராஸிங் ஒன்று வந்தது. அது மூடப்பட்டிருந்தது.

காரின் டிரைவர், கேட் கீப்பர் அருகே சென்று, “கேட்டைத் திற. உள்ளே உட்கார்ந்திருப்பது யார் தெரியுமா? பாரதப் பிரதமர். அவராலெல்லாம் காத்திருக்க முடியாது. கதவைத் திற”

கேட் கீப்பர் மரியாதையாக பதிலளித்தார் இப்படி : “ எனது கடமை சிக்னல் வந்தவுடன் கேட்டை மூட வேண்டியது தான். திறக்கும்படி சிக்னல் வந்தவுடன் தான் என்னால் திறக்க முடியும்.”

டிரைவருக்குக் கோபம் வந்து விட்டது. “உன்னை எச்சரிக்கிறேன். உன்னை டிஸ்மிஸ் செய்யச் சொல்லப் போகிறேன், பார். உனது வேலை போகப் பொகிறது.கதவைத் திற.”

ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

பண்டிட் நேரு இதைக் கேட்ட போது கேட் கீப்பரின் கடமை உணர்ச்சியை எண்ணி சந்தோஷப்பட்டார். அந்த கேட்கீப்பரைப் பாராட்டுவித்து அடுத்த பிரமோஷனுக்கு அவர் ஏற்பாடு செய்தார்.

*

மிகப் பெரிய இசைக் கலைஞரான ப்ராஹ்ம்ஸ் (Brahms) ஒரு இசை நிகழ்ச்சிக்காக ஹங்கேரிக்கு அழைக்கப்பட்டார். அவரது நண்பரன ஜொயாசிம்மும் (Joachim) அவருடன் கூட வரவே அவரது மகிழ்ச்சி இரட்டிப்பானது.

புடாபெஸ்ட் நகருக்கு மிகுந்த ஆவலுடன் அவர்கள் சென்று சேர்ந்தனர். ஆனால் என்ன ஏமாற்றம்! ஒரே ஒருவர் தான் மண்டபத்தில் அமர்ந்திருந்தார்.

ஜோயாசிம் வெறுப்புடன் கூறினார்: “சீ, என்ன இது! இந்த இசை நிகழ்ச்சியை கேன்ஸல் செய்து விடுவோம். அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவோம்.” என்றார்.

ப்ராஹ்ம்ஸ் ஒப்புக் கொள்ளவில்லை. “இவர் நமது இசை நிகழ்ச்சியைக் கேட்பதற்காக வந்துள்ளார்.அவரை ஏமாற்றமடையச் செய்து எப்படித் திருப்பி அனுப்புவது. நமது கடமை இசை நிகழ்ச்சியை நடத்துவது தான்!’

அப்படியே முழுநேர இசை நிகழ்ச்சி அந்த ஒருவருக்காகவே நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியை வெகுவாக ரசித்த அந்த ரசிகர், “அந்த நிகழ்ச்சியைத் தன் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்று நெகிழ்ச்சியுடன் கூறிச் சென்றார்.

அடுத்து, இந்திய சாஸ்திரீய சங்கீத விற்பன்னரான விஷ்ணு திகம்பர் பண்டிட் அவர்களுக்கும் இதே போல ஒரு சம்பவம் நடந்தது.

ஒரு முறை சிறிய நகர் ஒன்றில் அவரது இசை நிகழ்ச்சி ஏற்பாடானது. அங்கு ஒரே ஒருவர் தான் வந்திருந்தார்.

விஷ்ணு தனது முழு இசைக் குழுவுடன் நிகழ்ச்சி முழுவதையும் நன்கு நடத்தி முடித்தார். 3 மணி நேர நிகழ்ச்சிக்கு அந்த ரஸிகர் கொடுத்தது 4 அணாக்கள் தான். (இந்தக் கால 25 பைசாக்கள்)

*

ஒரு  முறை பிரிட்டனைச் சேர்ந்த பிரபல நடிகர்கள்  மூவர் ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். ஒரு சின்ன போக்குவரத்து விதியை அவர்கள்  மீறி விட்டனர்.

கார் நிறுத்தப்பட்டது. போலீஸ் ஆபீசர் காரின் அருகில் வந்தார்.

காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த ரால்ஃப் ரிச்சர்ட்ஸன்(Ralph Richardson), “ஆபீஸர், நான் என்று உங்களுக்குத் தெரிகிறதா?” என்றார்.

“எஸ், சார்! நீங்கள் தான் டி.வி. நிகழ்ச்சிகளில் தோன்றும் ரால்ஃப் ரிச்சர்ட்ஸன். உங்களை அடிக்கடி டி.வியில் பார்ப்பேன்” என்றார் போலீஸ்காரர்.

“இதோ இருக்கிறாரே, இவர் தான் சர் செட்ரிக் ஹார்ட்விக் (Sir Cedric Harwicke ). பின்னால் இருக்கிறாரே அவர் தான் லாரன்ஸ் ஆலிவர் (Laurence Oliver). நிச்சயமாக நீங்கள் அபராத சீட்டைத் தரமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்” என்றார் ரால்ஃப்.

“சார், நான் எனது கடமையைச் செய்ய வேண்டும். நீங்கள் மன்னர் ஆர்தரின் ரவுண்ட் டேபிளில் அமரும் பிரபுக்கள் என்றாலும் கூட நான் உங்களுக்கு டிக்கட்டைத் (அபராத சீட்டை) தந்தே ஆக வேண்டும் என்றார் அந்த போலீஸ் ஆபீசர்.

இப்படி கடமை உணர்ச்சி கொண்டவர்கள் உலகில் ஆங்காங்கே ஏராளம் பேர் உள்ளனர்.

சாது வாஸ்வானி இப்படி இன்னும் அநேக சம்பவங்களைக் கூறி கடமையைச் செய்வதிலிருந்து ஒரு நாளும் விலகக் கூடாது என்று விளக்கி விட்டு அடுத்த மூன்றாவது கட்டளைக்குச் சென்றார்.

அதை அடுத்துப் பார்ப்போம்.

***

இராமாயணங்களின் பட்டியல்! (Post No7063)

RAMAYANA IN ONE STONE, ELLORA CAVES


 WRITTEN by S NAGARAJAN
swami_48@yahoo.com

Date: 6 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 10-55
Post No. 7063

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

த்விபத ராமாயணம் – தெலுங்கில் உள்ளது.

இந்த ராமாயணப் பட்டியலுக்கு முடிவே இல்லை.

தொகுப்பின் இன்னும் பெருகும்!

RAMAYANA SCENE IN THAILAND