2000 ஆண்டுகளாக பெண்கள் செய்யும் வியாபாரம்

 

2000 ஆண்டுகளாக பெண்கள் செய்யும் வியாபாரம்

(Please read my earlier post FLOWERS IN TAMIL CULTURE )

தமிழர்களுக்கும் பூக்களுக்கும் உள்ள தொடர்பு வால்மீகி முதல் வெள்ளைக்காரர் வரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. சங்கத் தமிழ் இலக்கியத்தில் பூக்களை விற்கும் பூக்காரி பற்றி பல குறிப்புகள் உள்ளன. இதில் வியப்பான விஷயம், இன்றுவரை அது நீடித்து வருவதாகும்!

நிலத்தைப் பிரித்ததும் பூக்கள் அல்லது தாவரங்களால்தான்: குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை

போருக்குப் போனாலும் ஆண்கள் தலையில் வெவ்வேறு பூக்களைச் சூடிச் சென்றனர்: வெட்சி, கரந்தை,வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை,பாடாண் என்று ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பூவை ஒதுக்கினர். வெற்றி ‘வாகை’ சூடினான் என்னும் சொற்றொடர் இதிலிருந்தே வந்தது.

அரசியல் தலைவர்கள், பெரியோர்கள், சாது ,சந்நியாசிகள், கடவுளர் எல்லோருக்கும் ஒவ்வொரு வகைப் பூவை ஒதுக்கி வைத்தனர்.

அகநானூறு பாடல் 391, நற்றிணைப் பாடல் 97,118,160 முதலிய பல பாடல்களில் பெண்கள் பூ வியாபாரம் செய்ததைக் குறிப்பிட்டுள்ளனர்.

ஓணம் பண்டிகையின் போது பூ அலங்காரம் செய்யும் வழக்கம் இன்னும் சேர (கேரள) நாட்டில் பின்பற்றப் படுகிறது.

கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்ககளின் பெயர்களை ஒரே மூச்சில் சொல்லி ‘கின்னஸ்  சாதனை’ படைத்துவிட்டார்.

தென்னாட்டினர் மட்டும் பூச்சூடும் வழக்கத்தை வால்மீகி தனது ராமாயணத்தில் தக்க இடத்தில் பயன்படுத்தியுள்ளார். அயோத்தியா காண்டம் 96ஆம் சர்க்கத்தில் பரதன் கூறுவதாக அவர் சொல்லுவதாவது: “ நமது யுத்த வீரர்கள் மேகங்களைப் போன்ற கருத்த கேடயங்களுடன் தென்னாட்டாரைப் போலத் தலைக்கு அணிகளாக பூக்களைச் சூடுகின்றனர்” என்று கூறுகிறார். இன்று இளம் பெண்களும் ஆண்களும் பூக்களைப் பரிமாறிக் கொள்ளும் வழக்கமும் அன்றே இருந்தது. நெய்தற்கலி 21ஆம் பாடலில் “ அவள் எனக்குத் தந்த பூக்கள் இவை. பூளைப் பூ, பொன் நிறமான  ஆவிரைப் பூ என்று காதலன் மெய்மறந்து புலம்புகிறான்.

நற்றிணைப் பாடல் 97ல் மாறன் வழுதி பாடுகிறார்:

“அதனினும் கொடியாள் தானே மதனின்

துய்த்தலை இதழ பைங்குருக்கத்தியோடு

பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என

வண்டு சூழ் வட்டியள் திரியும்”

வண்டு சுற்றும் கடகப் பெட்டியில் குருக்கத்தி, செண்பக மலர்களைப் பெண்கள் விற்றது இதிலிருந்து தெரிகிறது

பாடல் 118ல் பாலை பாடிய பெருங் கடுங்கோ பாதிரி மலர்களைத் தெருவில் விலை கூறி விற்றுச் சென்ற பூக்காரியைக் குறிப்பிடுகிறார். பாடல் 160 குவளை மலர் மாலை தொடுப்பது பற்றிப் பேசுகிறது. இப்படி எண்ணற்ற பூக்காரிகளைக் காண்கிறோம். இன்று கோவில் வாசலிலும் வீட்டு வாசலிலும் பூ விற்போரைக் காணும் போது 2000 ஆண்டுப் பண்பாடு இன்றும் நீடிப்பது பற்றி வியாக்காமல் இருக்க முடியாது. வெளி நாட்டினர் அனைவரும் பூ மார்க்கெட்டுக்குச் சென்று புகைப்படம் எடுக்கும் காட்சிகளும் மனக் கண் முன் நிழல் ஆடுகின்றன.

‘புறநானூற்றில் பகவத் கீதை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரையில் இருந்து  ஒரு பகுதி:

பத்ரம், புஷ்பம், பலம் ,தோயம்………

கீதையில் கண்ணன் கூறுகிறான்: எவன் எனக்கு பக்தியுடன் பச்சிலையோ பூவோ, பழமோ, நீரோ கொடுக்கிறானோ அதை நான் சாப்பிடுகிறேன் (9-26)

கபிலர் (புறம் 106);

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

புல் இலை எருக்கம் ஆயினும்,உடையவை

கடவுள் பேணேம் என்னா; ஆங்கு,

மடவர் மெல்லியர் செல்லினும்

கடவன் பாரி கை வண்மையே

அதாவது நல்லதாயினும் தீயதாயினும் அல்லாத, குவிந்த பூங்கொத்தும் புல்லிய இலையும் உடைய எருக்கம் பூவாயினும், ஒருவன் உள்ளன்புடன் சூட்டினால் அதனைத் தெய்வங்கள் விரும்பி ஏற்குமேயன்றி, யாம் அவற்றை விரும்பேம் என்று கூறா.

Contact swami_48@yahoo.com

(இலக்கியத் திருடர்களுக்கு ஒரு வேண்டுகோள்: என்னுடைய கட்டுரைகளை அப்படியே திருடி தங்கள் பெயரில் தாங்கள் எழுதியது போல வெளியிடுவதைக் கண்டு மனம் வருந்துகிறது. தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் துரோகம் செய்யாதபடி யார் எழுதியது, எந்த வெப்சைட்டில் எடுக்கப்பட்டது என்பதை தயவு செய்து வெளியிடுங்கள்)

தமிழ்நாட்டின் கிளியோபாட்ரா

எகிப்திய அரசி கிளியோபாட்ராவைப் பற்றி பல சுவையான கதைகள் சொல்லப்படுகின்றன. இதே போல திருச்சியிலிருந்து மதுரையை அரசாண்ட ராணி மங்கம்மாளைப் பற்றியும் பல கதைகள் உண்டு. இருவரிடையேயும் முழுக்க முழுக்க ஒற்றுமை காணப்படாவிடினும் சில விஷயங்களில் ஒற்றுமை நிலவுகிறது. இதோ சுவையான செய்திகள்:

 

முதலில் கிளியோபாட்ரா (கி.மு 69-30):

கி.மு 69-ல் ராஜ வம்சத்தில் பிறந்தார். அலெக்சாண்டருக்குப் பின்னர் எகிப்தை ஆண்ட டாலமி அரச வம்சத்தில் உதித்தார். இங்கே ஒரு புதிர். இவர் கிரேக்க வம்சம் இல்லை, ஆப்பிரிக்க கறுப்பினப் பெண் என்று. இதுவரை முடிவு தெரியாத சர்ச்சை. அவருடைய அம்மா யார் என்பதும் உறுதியாகத் தெரியாது. இவரது தந்தையான 12ஆவது டாலமி இறந்தவுடன் இவர் 13ஆவது டாலமியை மணந்தார். அதாவது சகோதரனை கல்யாணம் செய்துகொண்டார். இது எகிப்து நாட்டில் இருந்த வழக்கம்-சகோதர திருமணம்! அதிகாரம் இருக்கும் இடத்தில் மோதல் இருக்கத்தான் செய்யும். சகோதர்ருடன் மோதல்.

கிளியோபாட்ர சிரியா நாட்டுக்குத் தப்பிச்சென்று பெரும்படையுடன் திரும்பிவந்தார். அப்போது ரோமாபுரியை ஆண்ட ஜூலியஸ் சீசர் பாம்பி மன்னனைத் துரத்திக்கொண்டுவந்தார். அவன் எகிப்தில் தஞ்சம் புகுந்தான். காத்திருந்த அழகி (?) கிளி (யோபாட்ரா),  ஒரு கம்பளத்தில் தன்னைச் சுற்றிக்கொண்டு ஜூலியஸ் சிசரிடம் பரிசாகக் கொடுக்கச் சொன்னார். கம்பளத்தை விரித்தபோது வெளியே வந்த கிளியின் அழகில் ஜூலியஸ் மயங்கினார். இருவருக்கும் காதல்,கல்யாணம், முடிவில் ஒரு மகன். மீண்டும் சர்சை. பிற்காலத்தில் இந்த மகன் தனக்குப் பிறந்தவன் இல்லை என்று ஜூலியஸ் சொல்லிவிட்டார்.

 

ஜூலியஸ் சீசர் போரில் கொல்லப்பட்டவுடன் கிளி எகிப்துக்குப் பறந்தது. ஜூலியஸுக்குப் பின்னர் வந்த ஆண்டனி இவளை அழைக்கவே காதல், கல்யாணம், மூன்று மகன்கள்! நல்ல சந்தர்ப்பம் வாய்க்கவே எகிப்து நாட்டின் ஆட்சி அதிகாரத்தைத் திருப்பிப் பெற்றுக்கொண்டு அலெக்சாண்ட்ரியா நகருக்கு வந்தார். தங்க சிம்மாசனத்தில் அமர்ந்த தம்பதிகளுடன் மூன்று பிள்ளைகளும் அமர்ந்த காட்சியைக் காண நாடே திரண்டுவந்தது. இது நடந்தது கி.மு 34 ஆம் ஆண்டு.

கி.மு.31-ல் பெரும் போர் ரோமாபுரியில் மூண்டது. கிளியோ கொல்லப்பட்டதாக வதந்தியைப் பரப்பினர். இதைக் கேட்ட ஆண்டனி தற்கொலை செய்துகொண்டார். அதைக் கேட்ட கிளியோபாட்ரா ஒரு நல்ல பாம்பை நெஞ்சில் வைத்து கடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டார். ஆங்கில மாகவி ஷேக்ஸ்பியர் எழுதிய ஆண்டனி கிளியோபாட்ரா நாடகம் உள்பட ஏராளமான திரைப்படங்களும் கிளியின் நினைவைப் போற்றி வளர்க்கின்றன. அவர் பாம்பு கடித்து இறந்தாரா, அழகைப் பராமரிக்க தினமும் கழுதைப் பாலில் குளித்தாரா—எல்லாமே சர்ச்சைக்குரிய புதிர்கள்!!!

 

இனி மங்கம்மாள் (1689-1704) பற்றிய சுவை மிகு செய்திகள்:

கிளி (யோபாட்ரா) யைப் போலவே இவரும் அழகானவர். கிளி போலவே பல போர் புரிந்தவர். கிளி போலவே அழகால், சாதுர்யத்தால் ஆட்சி உரிமை பெற்றவர். மிகவும் திறமையான ஆட்சியாளர். மதுரை நகர் முழுதும் இன்றும் இவர் புகழ் பாடும். மர்மமான முறையில் (சிறையில்?) இறந்தார். ஆனால் இந்தச் செய்திகளில் சில, கிளி வரலாறு போலவே உறுதிப்படுத்தப் படாத செய்திகள். அவர் காலத்தில் வாழ்ந்த சின்ன வெங்கண்ணா, மங்கம்மாளைக் கிண்டல் செய்து எஉதிய கவிகளில் இருந்து பெறப்பட்ட கிளுகிளு செய்திகள் இவை.

அவர் சொல்லும் ரகசியம்: மங்கம்மாளின் இயற் பெயர் கனகா. அவர் தந்தை சந்திரகிரி துபாகுல நாயகர். அவர் ஒரு நடன மாது. வேலை தேடி தஞ்சை விஜயராகவரின் அரவைக்குச் சென்றார். அவர் அந்தப்புரத்தில் சேர்க்க தயாராக இருந்த தருணத்தில் எப்படியோ மதுரை சொக்கநாத நாயகரை(1659-1682) மணந்தார். மங்கம்மாளின் மகன் முத்துவீரப்ப நாயகர் (1682-1689) சிறிது காலம் ஆண்டு இறந்துவிட்டார். உடனே பேரன் விஜரங்க சொக்கநாத நாயக்கரின் பேரில் 1689-ல் ஆட்சியை ஏற்றுக்கொண்டார்.

 

மொகலாயப் பேரரசன் அவுரங்கசீப் தனது ஒரு செருப்பை நாடு முழுதும் ஊர்வலம் விட்டான். அஸ்வமேத யாக குதிரை போகும் இடம் எல்லாம் எப்படி பாரதீய சக்கரவர்த்திகளுக்குச் சொந்தமானதோ அதே போல செருப்பு போனமிடம் எல்லாம் கப்பம் கட்டவேண்டும். ராணி மங்கம்மாள் மிகவும் தைரிய சாலி. அவனது படைத் தளபதி அந்த ஒற்றை செருப்பை காலில் மாட்டிக்கொண்டு மற்றொரு செருப்பு எங்கே என்று கேட்டான். ஆனால் பின்னர் ராமநாதபுரத்தின் கிழவன் சேதுபதி, மைசூரின் சிக்க தேவராயா தஞ்சை மன்னன் ஷாஜி, திருவாங்கூர் மன்னன் ரவிவர்மா ஆகியோர் தொல்லை கொடுக்கவே அவுரங்கசீப்புடன் சமரசம் செய்துகொண்டு கப்பம் கட்டினார்.

மதுரை முழுதும் அன்ன சத்திரங்களைக் கட்டினார். கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் வாரி வழங்கினார். மதுரை சவுராஷ்டிர சமூகத்துக்குப் பிராமண அந்தஸ்து வழங்கினார். காவிரிப் பிரச்சினை இவர் காலத்தில்தான் துவங்கியது. சிக்கதேவராயன் காவிரி நதியின் குறுக்கே கண்ணம்பாடியில் அணை கட்டி தஞ்சைப் பாசனத்தைத் தடுக்கவே போர்க் குரல் எழுப்பினார். கடவுள் அருளால் பெரு மழை, வெள்ளத்தில் அணை  உடைந்தது. காவிரிப் பிரச்சினையும் தீர்ந்தது. இவர் கடைசி காலத்தில் சிறையில் இறந்ததாக ஒரு செய்தி. எது எப்படியாகிலும் இவரது சத்திரங்களும், கோவில், மசூதி, கிறிஸ்தவ சர்ச்சுகளுக்குக் கொடுத்த தானங்களும், மதுரை தமுக்கம் அரணமனையும் (இப்போது காந்தி மியூசியம்), மீனாக்ஷி கோவில், திருப்பரங்குன்றம் கோவில்களும் இருக்கும் வரை மங்கம்மாளின் புகழ் மங்கவே மங்காது.

 

அழகால் ஆட்சி பெற்றதும், போர் முனைகளில் எதிரிகளைச் சந்தித்ததும், மர்மமான முறையில் இறந்ததும் இவரை கிளியோபாட்ராவுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.

ஆர்.சத்தியநாத அய்யர் எழுதிய நாயக்கர் வரலாறு, டாக்டர் தேவகுஞ்சரி எழுதிய மதுரை வரலாறு, நா.பார்த்தசாரதி எழுதிய ‘ராணி மங்கம்மாள்’ என்னும் சரித்திர நாவல் ஆகியவற்றையும் படித்து இன்புறுக.

 

Pictures are taken from different sites. Thanks. Contact: swami_48@yahoo.com

 

(இலக்கியத் திருடர்களுக்கு ஒரு வேண்டுகோள்: என்னுடைய கட்டுரைகளை அப்படியே திருடி தங்கள் பெயரில் தாங்கள் எழுதியது போல வெளியிடுவதைக் கண்டு மனம் வருந்துகிறது. தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் துரோகம் செய்யாதபடி யார் எழுதியது, எந்த வெப்சைட்டில் எடுக்கப்பட்டது என்பதை தயவு செய்து வெளியிடுங்கள்).

காஞ்சீபுரம் கோவில்கள்

LIST OF KANCHIPURAM TEMPLES

Picture of Kailasanathar temple (Pictures from Wikipedia)

“ புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு

நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி “

 

என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. புஷ்பங்களில் ஜாதி முல்லை/மல்லிகை சிறந்தது, புருஷர்களில் பெரியவர் விஷ்ணு, பெண்களில் சிறந்தவர் ரம்பா, நகரங்களில் சிறந்தது காஞ்சீபுரம். இதை காளிதாசர் செய்ததாகச் சொல்லுவர்.

 

காஞ்சீபுரம் மஹாபாரத காலம் முதல் இன்றுவரை சீரும் சிறப்புடனும் திகழ்கிறது. சங்க இலக்கியம் பெரும்பாணாற்றுப்படை முதல் பல்லவர் கல்வெட்டுகள் வரை அனைத்தும் காஞ்சியின் புகழ் பாடுகின்றன. காஞ்சியை வெற்றிகொண்ட சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்ரமாதித்தன் அதன் அழகைக் கண்டு வியந்து இந்த நகரை அழிக்கவேண்டாம் என்று உத்தரவிட்டான். அந்தக் காலத்தில் ஒரு மன்னன் வெற்றிகொண்ட மாற்றான் நாட்டு நகரங்களைத் தீக்கிரையாக்குவது வழக்கம். காஞ்சிபுரம் மட்டும் தப்பியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

 

பதஞ்சலி மகரிஷி, போதிசத்துவர், ஆதிசங்கரர், பல்லவ மன்னர்கள், கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் பட்டுப் புடவைகள் மூலம் காஞ்சி உலக வரை படத்தில் அழியா இடம் பெற்றுவிட்டது. இந்தக் காட்டுரை காஞ்சியில் உள்ள நூற்றுக்கும் மேலான கோவில்களில் முக்கிய 83 கோவில்களைப் பட்டியல் இடுகிறது.

Picture of Ekampareswarar Temple

1.அகஸ்தீஸ்வரர் கோவில் 2.அபிராமீஸ்வரர் கோவில் 3.அமரேஸ்வரர் கோவில் 4.அஷ்டபுஜர் கோவில் 5.ஆலடிப்பிள்ளையார் கோவில் 6.இராமேஸ்வரர் கோவில் 7.இலட்சுமணேஸ்வரர் கோவில் 8.இறவாஸ்தாணீஸ்வரர் கோவில் 9.ஈயகோஷ்டேஸ்வரர் கோவில் 10.ஈஸ்வரர் கோவில்

11.உருத்ரகோடீஸ்வரர் கோவில் 12.உலகளந்த பெருமாள் கோவில் 13.ஏகாம்பரேஸ்வரர் கோவில் 14.ஐராவதேஸ்வரர் கோவில் 15.ஓணகாந்தேஸ்வர கோவில் 16.கங்கணேஸ்வரர் கோவில் 17.கங்காதேஸ்வரர் கோவில (ஒக்கப்பிறந்தான் கோவில குளக்கரை) 18. கங்காதேஸ்வரர் கோவில் (சர்வதீர்த்த குளக்கரை) 19.கச்சபேஸ்வரர் கோவில் 20.கடகேஸ்வரர் கோவில்

 

21.கயிலாயநாதர் கோவில் 22. காசி விசுவநாதர் கோவில் 23.காஞ்சி காமாட்சி கோவில் 24.காயாரோஹணேஸ்வரர் கோவில் 25.காளிகாம்பாள் கோவில் 26.குமரகோட்டம் கோவில் 27.சங்குபாணிப் பிள்ளையார் கோவில் 28.சதுர்புஜ ஆஞ்சநேயர் கோயில் கோவில் 29.சித்தீஸ்வரர் கோவில் 30.சித்ரகுபத் சுவாமி கோவில்

31.சிவாஸ்தானம் கோவில் 32.சீதேஸ்வரர் கோவில் 33.தவளேஸ்வரர் கோவில் 34.தாந்தோன்றீச்வரர் கோயில 35.திருக்கச்சி அநேக தங்காவதம் கோவில் 36. திருக்கச்சி மயானம் கோவில் 37.திருக் காஞ்சீஸ்வரர் கோவில் 38.திருக்காளீஸ்வரர் கோவில் 39.திருமேற்றளி கோவில் 40.திருவெட்டானீஸ்வரர் கோவில்

Picture of Kailasanathar temple

41.தீபப்ரகாசர் கோவில் 42.தீர்த்தேஸ்வரர் கோவில் 43.திரிகால ஞானேஸ்வரர் கோவில் 44.நகரீஸ்வரர் கோவில் 45.நசிம்மஸ்வாமி கோவில் 46.பச்சைவண்ணர் கோவில் 47.பவழவண்ணர் கோவில் 48.பணாதரேஸ்வரர் கோவில் 49.பாகீஸ்வரர் கோவில் 50.பாண்டவப்பெருமாள் கோவில்

 

51.பிறவாஸ்தானீஸ்வரர் கோவில் 52.புண்யகோடீஸ்வரர் கோவில் 53.பெருமாள் (செவிலிமேடு) கோவில் 54.மச்சேஸ்வரர் கோவில் 55.மணிகண்டேஸ்வரர் கோவில் 56.மதங்கேஸ்வரர் கோவில் 57.மல்லிகார்ஜுனன் கோவில் 58.மன்மதேஸ்வரர் கோவில் 59.மாண்டகன்னீஸ்வரர் கோவில் 60.முக்தீஸ்வரர் கோவில (அடிசன் பேட்டை காந்தி ரோடு)

61. முக்தீஸ்வரர் கோவில் ( கீழண்டை ராஜ வீதி) 62.யதோத்காரி கோவில் 63.வரதராஜர் கோவில் 64.வரதராஜர் சந்நிதி ஆஞ்சநேயர் கோவில் 65.வளத்தீஸ்வரர் கோவில் 66.வியாச சாந்தலீஸ்வரர் கோவில் 67.விருபாட்சீஸ்வர கோவில் 68.வைகுண்டப் பெருமாள் கோவில் 69.வைரவேஸ்வரர் கோவில் 70.ஜூரஹரேஸ்வரர் கோவில்

Picture of silk sari weaveing

71.ஹிரண்யேஸ்வரர் கோவில் (நன்றி: காஞ்சீபுரம் மலர், மார்ச் 1979, பக்கம் 32) 72.வீற்றிருந்த லட்சுமண பெருமாள் கோவில் 73.அழகியசிங்கர் கோவில்(திருவெஃகா 74.ஜகதீஸ்வரர் கோவில் 75.ஆதிவாரஹப் பெருமாள் கோவில் 76.ஸ்ரீ சத்யநாதீஸ்வர கோவில் 77.ஸ்ரீ கருணாகரப் பெருமாள் கோவில் 78.கூரன் ஆதிகேசவப் பெருமாள் கோவில் 79.ஸ்ரீ விஜயராகவ பெருமாள் கோவில்

80.ஆதிகாமாட்சி கோவில் 81. கல்யாண வரதராஜப் பெருமாள் கோவில் 82.கோனேரிபுரம் கனகதுர்கா கோவில் 83..திருபருத்திகுன்றம் ஜைனர் கோவில் கோவில்.

 

List of Temples dedicated to Lord Vishnu (Source:- SCSVMV University)
• Varadharaja Perumal Temple
• Ashtabujakaram – Sri Adhikesava Perumal Temple
• Tiruvekkaa – Sri Yathothkari Temple
• Tiruththanka – Sri Deepa prakasa Perumal Temple
• Tiruvelukkai – Sri Azhagiya Singar Temple
• Neervalur – Sri Veetrirunda Lakshmi Narayana Perumal Temple
• Tirukalvanoor – Sri Adi Varaha Swami Temple
• Tiruoorakam – Sri Ulaganatha Swami Temple
• Tiruneeragam – Sri Jagadeeshwarar Temple
• Tirukaaragam – Sri Karunagara Perumal Temple
• Tirukaarvaanam – Sri Tirukaarvarnar Temple
• Tiruparamechura Vinnagaram – Sri Vaikunda Perumal Temple
• Tirupavalavannam – Sri Pavala Vanar Temple
• Tirupaadagam – Sri Pandava Thoodar Temple
• Tirunilaaththingalthundam – Sri Nilathingal Thundathan Perumal Temple
• Tirupputkuzhi – Sri Vijaya Raghava Perumal Temple
• Parithiyur-Kalyana Varadharaja Perumal Temple
• Sri Aadhi Kesava Perumal – Kooran [about 8 to 9 km from Kanchipuram]

List of Temples dedicated to Lord Shiva

• Kailasnatha Temple
• Ekambareswarar Temple
• Kachi Metrali
• Onakanthan Tali
• Kachi Anekatangapadam
• Kachi Nerikkaaraikkadu
• Kuranganilmuttam
• Tiru Maakaral
• Tiruvothur
• Panankattur
• Sangupani Vinayakar Temple
• Vazhakarutheeswarar Temple
• Thirumetrali Temple
• Satyanadeeswara Temple
• Adhi Kamakshi Temple
• Kanaka Durga Temple, Koneri Kuppam
• Thiruparruthikundram – Jaina Temple

Picture of Kanchipuram Paddy fields.

Contact swami_48@yahoo.com

தமிழ் சிறைச்சாலையில் சமூக சேவை

Inmates in Mumbai Prison

தமிழ் சிறைச்சாலையில் சமூக சேவை

சமூக சேவை என்பது இந்தியாவுக்கு புதிதல்ல. தாதியர்/ நர்ஸ்கள் என்றால் உடனே ப்ளரன்ஸ் நைட்டிங்கேலை நினைக்கிறோம். குற்றம் புரிந்தோரை நல்ல மனிதர் ஆக்கியவர் என்றால் மணிமேகலையை நினைக்க வேண்டும். யார் அந்தப்பெண்மணீ?

சிறைச் சாலையில் சமூக சேவை செய்து கைதிகளைத் திருத்தி நற்குடி மக்களாக மாற்றும் புரட்சிகர கருத்தை முன்வைத்தவர் மணிமேகலை என்றால் மிகையாகா. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் புத்த மதக் கருத்துக்களை முன்வைத்து எழுதப்பட்டது மணிமேகலை. ‘’நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார’’த்துடன் இரட்டைக் காப்பியங்களகத் தொன்றியது இந்நூல். சீழ்தலைச் சாத்தனாரின் கைவண்ணத்தில் மிளிர்ந்த மணிமேகலையின் காவியத்தலைவி–,கதாநாயகி மணிமேகலை என்னும் இளம் பெண் ஆவார்.

மாதவியின் மகளாக அவதரித்துப் பேரெழிலுடன் விளங்கிய மணி, ஒரு கட்டத்தில் சிறைச் சாளைக்கு விஜயம் செய்து அங்குள்ள கைதிகளைச் சந்திக்கிறார். அமுதசுரபி என்னும் வற்றாத உணவளிக்கும் அற்புத பாத்திரம் மூலம் அங்குள்ள கைதிகளுக்கு அறுசுவை உணவு படைக்கிறார். வயிற்றுக்குச் சோறிட்டதோடு நில்லாமல் மனதுக்கும் ஆறுதல் தரும் அன்பு மொழிகளையும்  நல்ல வாழ்க்கை நடத்தத் தேவையான அறிவுரைகளையும் வழங்குகிறார். அற்புதம்! அனைவரும் மனம் மாற்றம் அடைந்துவிடுகின்றனர். இதை அறிந்த சோழ மன்னன் அவளை அரண்மனைக்கு அழைக்கிறார். சிறைக் கைதிகளை உடனே விடுவிக்கும் படியும் சிறச்சாலைகளை சாது சந்யாசிகள தங்கும் திரு மடங்களாக மாற்றவும் ஆலோசனை வழங்குகிறார். மன்னனும் அதை ஏற்று செயல் படுத்துகிறான்.

சிறைக் கைதிகள் சீர்திருத்தம் Prisoners rehabilitation என்பது மேலை நாட்டில் புதிதாகப் பின்பற்றப்படும் கருத்து. இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்திக் காட்டியவர் மணிமேகலை!

பெரிய புராண, மஹா பாரத தண்ணீர் பந்தல் கதைகள்

12 ஆண்டுக்கு ஒரு முறை வரும் வறட்சி பற்றி வேதங்கள் முதல் திருவிளையாடல் புராணம் வரை பிரஸ்தாபிகின்றன. அத்தகைய காலங்களில் அக்ஷய பாத்திரம், அமுதசுரபி, காமதேனு, கற்பக விருக்ஷம், உலவாக்கிழி என்ற அற்புத கலயங்களும் சின்னங்களும் இந்திய மக்களைக் காப்பாற்றி வந்துள்ளன. இதை நம்பாதோரும் கூட கஷ்ட காலங்களில் மனிதர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற சிந்தனை மலர்ந்த பூமி இப் புனித பாரதம் என்பதையாவது ஒப்புக் கொள்ளவேண்டும்.

பெரியபுராணத்தில் வரும் அப்பூதி அடிகள் கதையும் மஹாபாரதத்தில் வரும் சல்லியன் கதையும் நாம் அறிந்ததே. அப்பர் என்னும் திருநாவுக்கரசர் நால்வரில் ஒருவர். சம்பந்தராலும் போற்றப்பட்ட புனிதர். ஆனால் அந்தணர் அல்ல. அவர் திங்களுர் சென்றபோது அவர் பெயரில் திருமடங்களும் தண்ணிர் பந்தலகளும் இருந்ததைக் கண்டு வியந்தார். யார் என்று வினவியபோது அப்பூதி அடிகள் என்னும் அந்தணர் இவ்வாறு செய்ததை அறிந்தார். அவரிடமே சென்று ஏனைய்யா இப்படி அப்பர் பெயரை வைத்தீர்? அவர் என்ன சாதனை செய்து கிழித்துவிட்டார் என்று வினவ, அப்பூதி அடிகள் புலி எனச் சீறி அப்பர் தம் பெருமையை விளக்கி வந்தவரை விரட்டப் பார்த்தார். தாம்தான் அப்பர் என்று அவர் தம்மையே அறிமுகப் படுத்தியபோது அப்பூதி அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. நாம் இங்கே கவனிக்கவேண்டியது தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் 1300 ஆண்டுகளாக இன்றும் தமிழகத்தில் நீடித்திருக்கும் ஒரு சமூகப் பணி என்பதாகும்.

இதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மஹாபாரத காலத்தில் இப்படி ஒரு கதை வருவதைப் பார்த்தால் இமயம் முதல் குமரி வரை 5000 ஆண்டுகளாக இப்படி நற்பணி நடந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும். பாண்டவ சகோதரர் நகுலன் சகாதேவனின் மாமன் மாத்ர தேச அதிபதி சல்லியன். மாபாரத போருக்கு முன் இவனை தம் பக்கத்தில் இழுத்துக் கொள்ளவேண்டும் என்று பாண்டவர்களும் கவுரவர்களும் முனைப்புக் காட்டினர். கள்ளத்தனத்தில் கெட்டிக்காரன் துரியோதணன். சல்லியன் வரும் வழியில் தண்ணீர் பந்தல்கள் வைத்து அவன் தாக சாந்தி செய்யவே அவனிடம் உதவி கேட்டனர். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரல்லவா? அவனும் அப்படியே உதவி தருவதாக வாக்களித்தான். கர்ணனின் தேரோட்டியாக அமர்ந்த சல்லியன், 18ஆம் நாளில் உயிர் துறக்கிறான். வாக்கிற்குக் கட்டுப்பட்ட சத்திய சீலன்!

ஆக தண்ணிர் பந்தல், அன்ன தானம் என்பன பாரதீய வாழ்வில் இரண்டறக் கலந்த அம்சங்கள். வட இந்தியாவில் காளி கம்பளவாலா சத்திரங்கள் என்று வழி நெடுகிலும் உண்டு. அந்தக் காலத்தில் இமய மலையின் புனிததலங்களுக்குச் செல்லுவோருக்கு கம்பளி ஆடைகளை கொடுத்துதவிய ஒரு தர்மாத்மாவின் பெயரில் அமைந்த சத்திரங்கள் அவை. நம் தமிழ் நாட்டிலும் வழி நெடுகிலும் அன்ன சத்திரங்கள் இருந்த காலம் ஒன்று உண்டு.

எறும்புக்கும் கொசுவுக்கும் கூடத் தீங்கு செய்யாத சமண சமயத்தினர் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் மருத்துவ மனை நடத்திய நாடு இது!

Prisoners in Amritsar Women’s Prison

சிறுகுடிக் கிழான் பண்ணன்

பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் நிலம் தானம் கொடுத்த ஆயிரக் கணக்கான கல்வெட்டுகள் தமிழ் நாட்டில் உள்ளன. புலவர்களுக்கு பொற்காசுகளையும் உணவையும் கொடுத்த சங்க கால மன்னர்களையும் வள்ளல்களையும் நாம் அறிவோம். இவை சமூக சேவை ஆகா. பலனை எதிர்பார்த்தோ, துதி பாடலை எதிர்பார்த்தோ செய்யப்பட்ட உதவி இவை. ஆயினும் ஜாதி மதம் இனம் , குலம் கோத்திரம் என்று பாராது உணவு படைதோரும் உண்டு. சோழமன்னன் கிள்ளிவளவனும் போற்றிய ஒரு வள்ளல் சிறுகுடிக் கிழான் பண்ணன். புறநானூறு 173ஆம் செய்யுளில் எறும்பு முட்டை கொண்டு சாரை சாரையாக செல்லுவது போல பண்ணன் வீட்டை நோக்கிமக்கள் செல்லுவதைப் படித்து இன்புறலாம்.

விருந்தோம்பல், தேவதானம், புலவரை ஆதரித்தல் என்பது வேறு. சமூக சேவை என்பது வேறு. தண்ணீர் பந்தல் கதைகளும் மணிமேகலை சிறைச் சாலைச் சேவைகளும் தனி ரகம். பாரதத்தின் வழி தனி வழி. எல்லோருக்கும் முன் உதாரணமாகத் திகழும் தனி வழி!

Contact swami_48@yahoo.com

ஐங்குறு நூற்றில் வேதக் கருத்துகள்

இரண்டாயிரம் ஆண்டுப் பழமையுடைய சங்க நூல்களில் இந்துமதக் கருத்துக்களை ஆங்காங்கே காணமுடிகிறது. எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான ஐங்குறு நூற்றில் 500 பாடல்கள் உள்ளன. மருதத் துறை பற்றி ஓரம் போகியாரும் நெய்தல் துறை பற்றி அம்மூவனாரும் குறிஞ்சித் துறை பற்றி கபிலரும் பாலைத் துறை பற்றி ஓதல் ஆந்தையாரும் முல்லைத் துறை பற்றி பேயனாரும் பாடியுள்ளனர். இதில் ஓரம்போகியார் பாடிய 100 பாடல்களில் முதல் பத்துப் பாடல்களை வேட்கைப் பத்து என்று கூறுவர். ஒவ்வொரு பாடலிலும் உள்ள வரிகள்  வேதங்களிலும் ஏனைய இந்து மத நூல்களிலும் உள்ள கருத்துக்கள் ஆகும்.

இமயம் முதல் குமரி வரை பாரதப் பண்பாடு ஒன்றே என்பதற்கு இதுவும் ஒரு சான்று. தமிழ்ப் பண்பாடு என்பது இமயம் முதல் குமரி வரை பாரதம் முழுதும் நிலவிய ஒரே பண்பாடுதான்.

கீழ்கண்ட வடமொழி வாழ்த்துப் பாடல்களில் வரும் கருத்துகள் அழகிய, குறுகிய தமிழ் சொற்றொடர்களில் மந்திரம் போலவே ஓரம்போகியாரால் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் வடமொழி வாழ்த்துப் பாடல்கள்:

1.ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம் ந்யாயேன மார்கேன மஹீம் மஹீசா:

கோப்ராஹ்மணேப்ய சுபமஸ்து நித்யம் லோகா சமஸ்தோ சுகினோ பவந்து

சுருக்கமான பொருள்: ஆட்சி செய்வோர் மக்களை நல்ல முறையில் ஆளட்டும்; பசுக்கள் பிராமணர்கள் உள்பட உலகிலுள்ள எல்லோரும் சுகமாக இருக்கட்டும்

 

2.காலே வர்ஷது பர்ஜன்ய: ப்ருதுவி சஸ்ய சாலினீ

தேசோயம் க்ஷோப ரஹிதோ ப்ராஹ்மண சந்து நிர்பயா:

பொருள்: காலத்தில் மழை பெய்யட்டும், வயல்கள் நெற்பயிர்களுடன் குலுங்கட்டும், நாடு முழுதும் வளம் பெருகட்டும், பிராமணர்கள் பயமின்றி வாழட்டும்.

 

3.அபுத்ரா: புத்ரிண சந்து புத்ரிண சந்து பௌத்ரிண:

அதனா: சதனா: சந்து ஜீவந்து சரதாம் சதம்

பொருள்: குழந்தைகள் இல்லாதோருக்கு குழந்தைகள் பிறக்கட்டும், பிள்ளைகள் எடுத்தோர் பேரப் பிள்ளைகள் பெறட்டும், செல்வமில்லாதோருக்கு செல்வம் கொழிக்கட்டும், நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க.

 

இதோ ஓரம் போகியாரின் வாழ்த்து:

 

1.நெற்பல பொழிக பொன் பெரிது சிறக்க

ப்ருதுவி சஸ்ய சாலினீ

தேசோயம் க்ஷோப ரஹிதோ

 

2.விளைக வயலே வருக இரவலர்

ப்ருதுவி சஸ்ய சாலினீ

புஞ்ஜதே தே த்வகம் பாபா யே பசந்தி ஆத்மகாரணாத் (கீதை 10-13 எவர்கள் தமக்காகவே சமைக்கிறார்களோ அவர்கள் பாவிகள்)

 

3.பால்பல ஊறுக பகடு பல சிறக்க

கோ ப்ராம்மணேப்ய சுபமஸ்து நித்யம்

 

4.பகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுக

ப்ராஹ்மண சந்து நிர்பயா:

 

5.பசியில்லாகுக பிணிகேன் நீங்குக

அதனா: சதனா: சந்து ஜீவந்து சரதாம் சதம்

 

ஜன்ம, ம்ருத்யு, ஜரா, வ்யாதி, பயம் நைவோப ஜாயதே

(விஷ்ணு சஹஸ்ர நாமம்)

 

6.வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக

ந்யாயேன மார்கேன மஹீம் மஹீசா:

ஜீவந்து சரதாம் சதம் (பஸ்யேம சரதச் சதம் என்று துவங்கும் வேத மந்திரமும் இங்கே ஒப்பிடற்பாலது)

 

7.அறம்நனி சிறக்க அல்லது கெடுக

பரித்ராணாய சாதூணாம் விநாசாய துஷ்க்ருதாம் (பகவத் கீதை)

 

8.அரசுமுறை செய்க களவில் லாகுக

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய பரிபாலயந்தாம்

ந்யாயேன மார்கேன மஹீம் மஹிசா:

 

9.நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக

லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து

 

10.மாரிவாய்க்க வளம்நனி சிறக்க

காலே வர்ஷது பர்ஜன்ய:

தேசோயம் க்ஷோப ரஹிதோ

பாடல் 62ல் இவர் இந்திர விழா பற்றியும் குறிப்பிடுகிறார். ஆதன் அவினி என்ற சேர மன்னனை வாழ்த்திய பாடல்களில் இந்தக் கருத்துகள் வருகின்றன. வாழ்த்தும் முறையும் வேத கோஷங்களில் வரும் முறையில் உள்ளது. ஒவ்வொரு பாடலிலும் மூன்றாம் வரி ஒரே மாதிரியாக இருக்கும் (எனவேட் டோளே யாயே யாமே). ஓரம்போகியார் பாடிய பாடல்கள் புறநானூற்றிலும் உண்டு.

திருஞான சம்பந்தர் தேவாரப் பாடலில் இதே பொருளைப் பாடி இருப்பதும் படித்து இன்புறத்தக்கது:

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே

சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

 

தொல்காப்பிய செய்யுள் 109ல் வாழ்த்தப்பட வேண்டிய விஷயங்கள் எவை எவை என்றும் தொல்காப்பியர் கூறுகிறார். இதற்கு உரையாசிரியர்கள் எழுதிய கருத்துக்கள் பாரதம் முழுதும் நிலவிய கருத்துகளே. எல்லா கல்வெட்டுகளும் ஸ்வஸ்தி என்ற மங்களச் சொல்லுடன் துவங்கும். பல கல்வெட்டுகளில் இதை ஸ்வஸ்திகா அடையாளம் மூலமும் குறிப்பிட்டனர்.

வேதங்களை ஏற்றுப் போற்றும் தமிழ் இலக்கியங்கள் என்ற அருமையானதொரு நூலை திரு.கே.சி. லட்சுமிநாராயணன் எழுதி இருக்கிறார். அதில் நான் மேலெ ஒப்பிட்டுக் கூறிய கருத்துகள் இல்லை. பார்ப்பார் ஓதுக என்ற ஒரு வரியை மட்டும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். அனைவரும் படிக்க வேண்டுய நூல் அது.

Read related Previous Posts

புறநானூற்றில் பகவத் கீத—பகுதி 1, பகுதி 2

வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்

247 தமிழ் எழுத்துக்கள் வேண்டாமே!

தமிழ் வாழ்க ! தமிழ் (எழுத்து) ஒழிக!!

ஆண்டுதோறும் லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் வகுப்பில் முதல் நாள்தான் எனக்கு மிகவும் கஷ்டமான நாள். முதல் ஒரு மணி நேரத்தில் தமிழையும் தமிழ் கலாசாரத்தையும் ‘இந்திரனே சந்திரனே’ என்று புகழ்வேன். தொல்காப்பியத்தில் துவங்கி இட்லி, சாம்பார், வடை, மசாலா தோசை முதலியவற்றை விளக்கிவிட்டு நகைப்புக்குரிய திராவிட கட்சிகள் பிளவுபட்டதையும் தமிழ் அரசியல் சினிமா அடிப்படையுடையது என்பதையும் சொல்லிவிட்டு, தமிழர்கள் சினிமா இல்லாமல் வாழமுடியாது என்ற பொன் மொழிகளை உதிர்த்துவிட்டு ஒரு ‘காப்பி பிரேக்’ கொடுத்து விடுவேன். சுவையான விஷயங்களை கேட்ட மாணவர்கள் ஆர்வத்தோடு திரும்பியவுடன் ஒரு குண்டைத் தூக்கிப் போடுவேன்.

“ ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் இருப்பது உங்களில் பெரும்பாலோருக்குத் தெரியும். தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்று தெரியுமா?” என்று கேட்பேன். பெரும்பாலும் அமைதியே நிலவும். ஏனெனில் படிக்க வருவோரில் ஒரு இத்தாலியர், ஒரு பிரெஞ்சு,, ஒரு ஜப்பானியர், அதிகமாக பிரிட்டனில் பிறந்த இந்திய-இலங்கைத் தமிழர்கள், அவர்களை மணந்துகொண்ட நார்வே, கனடா, சுவீடன் நாட்டினர் என்று ஒரே அவியல்தான்.

நான் சொல்கிறேன். தமிழில் 247 எழுத்துக்கள் என்றவுடன் வகுப்பில் பெருமூச்சு விடும் இரைச்சல் கேட்கும். பின்னர் ஒருவரை ஒருவர் புருவத்தை உயர்த்தியவாறே முறைத்துப் பார்ப்பார்கள். ஒரு நிமிடம் ‘பாஸ்’ கொடுத்துவிட்டு ஒரு ‘குட் நியூஸ்’ சொல்கிறேன். 12 உயிர் எழுத்துக்களையும் 18 மெய் எழுத்துக்களையும் படித்துப் புரிந்து கொண்டால் போதும் மற்ற 216 (18×12=216) எழுத்துக்கள் தானாக வந்து விடும் என்பேன். அப்போதும் அவர்கள் முகத்தில் ஏமாற்றமே தேங்கி நிற்கும். இன்னொரு ‘குட் நியூஸ்’ சொல்லட்டுமா? என்று சொல்லிக் கொண்டே மதுரை புதுமண்டபம் புத்தகக் கடைகளில் இருந்து வாங்கிவந்த பெரிய ‘போஸ்டர்’களைப் பிரித்து சுவற்றில் ஒட்டி இவைதான் 247 தமிழ் எழுத்துக்கள் என்று அறிமுகப் படுத்துவேன். பெரும்பாலான தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் தெய்வத்தின் முதல் தரிசனம் அதுதான். கன்னத்தில் போட்டுக் கொள்ளாத குறையுடன் பயபக்தியுடன் எழுத நோட்டுப் புத்தகங்களைத் திறப்பார்கள். இதற்குள் வேறு ஒரு போஸ்டரைத் திறந்து “ இதில் இவை எல்லாம் உதவாக்கரை எழுத்துக்கள். இன்று பயன்படாதவை. அதில் ஒன்று ஆயுத எழுத்து” என்றெல்லாம் விளக்குவேன்.

தமிழில் வேண்டாத எழுத்துக்களை எல்லாம் எடுத்துவிட்டு புதிய அரிச்சுவடி செய்தால் என்ன? என்று தோன்றவே தமிழ் எழுத்துக்கள் ஒழிக என்று தலைப்பிட்டேன்.

தமிழர்கள் ‘டியூப் லைட்’டுகள்! எந்தக் கருத்தைச் சொன்னாலும் முதலில் ஏற்கமாட்டார்கள். காரணம், புரிவதற்கு கொஞ்சம் தாமதமாகும். எங்களைப் போன்று வெளி நாட்டு மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தால்தான் இந்த விசயம் நன்கு புரியும் ‘ங’ வர்க்கம் ‘ஞ’ வர்கம் ‘ஔ’ வர்கம் ‘ ஃ ’ இவை இல்லாமல் தமிழால் வாழ முடியும். பல எழுத்துகளை நாம் பயன்படுத்துவதே இல்லை. ஆனால் அரிச்சுவடியில் இன்னும் இருக்கின்றன!!!!!

‘யுனிகோட்’ வந்த பின்னர்,  முன்னால் இருந்த பல எழுத்துக்கள் போய்விட்டன. பழைய கால குமுதம் ஆனந்த விகடன், கல்கி படிப்பவர்கள் “லை” முதலிய எழுத்துகள் வேறு விதமாக இருப்பதை அறிவார்கள். நானே கூட அவசரத்தில் போர்டில் அப்படி எழுதிவிடுவேன். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில் என்பது சரிதான். யாராவது ஒருவர் கேள்வி கேட்ட பின்னர் அது பழைய ‘ஆர்த்தோக்ராபி’ பற்றி விளக்குவேன்.

 

நீங்களும் யோசியுங்கள். கீழேயுள்ள எழுத்துக்கள் தேவையா?

ங வரிசை, ஞ வரிசை, ஔ வரிசையை எடுத்தால் சுமார் 40 எழுத்துக்களைக் குறைக்கலாம். மேலும் சிறிது முயற்சி செய்தால் எதிர்காலத்தில் இன்னும் குறைக்க முடியும்.

 

நான் முன்னர் எழுதிய இந்தக் கட்டுரைகளையும் படியுங்கள் :–

1.தமிழ் தாய் வாழ்த்தை மாற்றுக 2.தமிழ் ஒரு கடல் 3.தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்றா? 4.மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? உண்மையா 5. தொல்காப்பியம் காலம் தவறு- பகுதி 1,2,3,4,5 (6) தமிழர்களின் தழை உடை 1 & 2 (7) Ghost that killed 72 Tamil people 8). Three beautiful Tamil Hindu Weddings 9).இசைத் தமிழ் அதிசயங்கள் 10)தமிழ்நாட்டை உலுக்கிய பேய் 11) வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 12) வீரத்தாயும் வீர மாதாவும் 13) சங்க இலக்கியத்தில் வாகனங்கள் 14) தமிழர்கள் கணித மேதைகள் 15) Tamil saint’s Mad Experiment 17) Hundred Wonders of Tamil Nadu 18) Time Travel by Two Tamil Saints 19) Tamil Quiz பகுதிகள் 1, 2, 3. 20) First Tamil Historian 21) வரலாறு எழுதிய முதல் தமிழன் 22) தமிழ் பூதமும் கிரேக்க பூதமும் 23) முதல் திராவிட ராணீ 24) கலித்தொகையில் ஒரு அதிசய செய்தி 25) புறநானூற்றில் காமாட்சி 26) புறநானூற்றில் பகவத் கீதை—பகுதி 1&2 27) சுமார் 20 தமிழ் அறிஞர்களுடன் 60 வினாடி பேட்டிகள் (எ.கா) பாரதியுடன்… கம்பனுடன்…. வள்ளுவனுடன்……. 28) குறுந்தொகையில் இருதலைக் குழந்தை 29) 20,000 தமிழ் பழமொழிகள் 30)சங்க இலக்கியத்தில் காளிதாசன் உவமைகள் 31)தமிழர்களின் எண் ஜோதிடம் 32)அதிசய பறவைத் தமிழன் 33)Mysterious Tamil Bird Man 34) 3 Tamil Sangams: Myth and Reality 35) வரலாறு எழுதிய முதல் தமிழன் 36)தமிழன் காதுல பூ 37)Tolkappiyan –A genious 38) தமிழர்களுக்கு தாலி உண்டு

studytamil.wordpress.com

Free YouTube Videos!

The link to my YouTube channel is below.

http://www.youtube.com/user/swaminathansantanam

 

சமுத்திரத்தில் சேரும் இரு கட்டைகள்!

ராமாயண வழிகாட்டி- 4

ச.நாகராஜன்

 

சமுத்திரத்தில் சேரும் இரு கட்டைகள்!

 

யதா காஷ்டம் ச காஷ்டம் ச சமேயாதாம் மஹார்ணவே I

சமேத்ய ச வ்யபேயாதாம் காலமாஸாத்ய கஞ்சன் II

 

ஏவம் பார்யாஸ்ச புத்ராஸ்ச ஞாதயஸ்ச  வசூனி ச I

ஸமேத்ய வ்யவதாவந்தி த்ருவோ ஹ்யேஷாம் விநாபவ: II

 

மஹார்ணவே –சமுத்திரத்தில்

காஷ்டம் ச காஷ்டம் ச – இரண்டு கட்டைகள்

சமேயாதாம் – சேருகின்றன

கஞ்சன் காலே சமேத்ய – சிறிது காலம் கூடி

ஆஸாத்ய ச – இருந்து விட்டு

வ்யபேயாதாம் – பிரிகின்றன

யதா ஏவம் – அவ்வண்ணமே

பார்யா ச –மனைவிமார்களும்

புத்ரா ச – புதல்வர்களும்

ஞாதய: ச – ஞாதிகளும்

வசூனி ச – பொருள்களும்

ஸமேத்ய – சேர்ந்திருந்து

வ்யவதாவந்தி – பிரிகின்றன

ஏஷாம் விநாபவ: – இவர்களின் பிரிவு

த்ருவ: ஹி – நிச்சயமே

 

அயோத்யா காண்டம் 105ஆம் ஸர்க்கம் 26 மற்றும் 27ஆம் ஸ்லோகங்கள்

பரதன் ராமரிடம் ராஜ்யத்தை ஏற்க வேண்டிய போது ராமர் பித்ருவாக்கிய பரிபாலனத்தைச் சொல்லும் போது கூறியது இது.

வால்மீகி மஹரிஷி முதல் முதல் காவியத்தைச் செய்தவர் என்பதால் ஆதிகவி என்று போற்றப்படுகிறார். வால்மீகி ராமாயணத்தில் வரும் அற்புதமான உவமைகளும் கருத்துக்களும் காலம் காலமாக பின் வந்த இலக்கியங்க:ளில் காணப்படுகின்றன. மேலே உள்ள கருத்தை மஹாபாரதத்திலும் காணலாம்.சாந்தி பர்வத்தில் வரும் இதே கருத்தைப் பார்க்கலாம்:

எவ்விதம் பெரிய கடலில் கட்டையும் கட்டையும் சேர்க்கை அடையுமோ, சேர்ந்த பின் விலகுமோ அவ்விதம் பிராணிகளின் சேர்க்கையிருக்கிறது. புத்ரர்களும் பௌத்ரர்களும் ஞாதிகளும் பந்துக்களும் அவ்விதமே இருக்கிறா

ர்கள்.

   (சாந்தி பர்வம் 173வது அத்தியாயம்; மோக்ஷ தர்மம்)

 

ஸேனஜித் என்ற மன்னன் தன் புதல்வனை இழந்த சோகத்தால் வாட அவனது நண்பரான பிராமணர் ஒருவர் ஆறுதல் அளிக்கும் போது இந்தக் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

இதே கருத்து சங்க நூலான புறநானூற்றிலும் இடம் பெறுகிறது.

இடம் பெறும் பாடலோ உலகப் புகழ் பெற்ற பாடல். கணியன் பூங்குன்றனார் இயற்றியது. புறநானூறு பாடல் எண் 192 ஐப் பார்ப்போம்:

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னாதென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர்

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே.

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

(புறநானூறு 192)

இதன் சுருக்கமான பொருள் :-

அனைத்து ஊர்களும் எம்முடைய ஊர்களே. அனைத்து மக்களும் எமது உறவினரே! தீமையும் நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை. துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை. செத்துப் போவது புதுமை இல்லை. வாழ்தல் இன்பம் என்று மகிழ்ந்தது இல்லை. வாழ்வது துன்பம் என வெறுத்து ஒதுங்கியதுமில்லை. மின்னலொடு வரும் மழை வானத்திலிருந்து பொழிந்து கல்லை மோதி மணலைப் புரட்டி வரும் வளமார்ந்த பெரிய ஆறு ஒன்றில் ஓடுகின்ற தெப்பம் (கட்டை) போல இயற்கை வழியில் நடக்கும் உயிர் வாழ்வு என்பதை திறவோர் கண்ட காட்சியால் தெளிந்து அறிந்திருக்கிறோம். ஆகவே பெரியோரை வியப்பதும் இல்லை. சிறியோரை இகழ்ந்து தூற்றுவதும் இல்லை

ஹிந்து மதக் கருத்தான இதை முதலில் கூறிய ராமாயணம், மஹாபாரதம் ஆகிய நூல்களை விட்டு விட்டு பௌத்த மதத்திற்கு வலிந்து ஏற்றி கணியன் பூங்குன்றனாரை ஒரு பௌத்தர் என்று சிலர் சித்தரிப்பது அவர்கள் பழைய நூல்களை நன்கு கற்காததும், சம்ஸ்கிருதத்தை அவர்கள் அறியாததுமே காரணம் என்று கொள்ளலாம்.

***********  

 

 

 

தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்றா?

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை -7

தமிழ் எழுத்துக்கள் முப்பதா? ஐம்பத்தொன்றா?

 

51 எழுத்துக்கள் 51 தேவதைகள் 51 புலவர்கள்

சம்ஸ்கிருதத்தில் அ முதல் க்ஷ வரை 51 எழுத்துக்கள் உள்ளன. இதையே தமிழ்ப் புலவர்களும் ஏற்றுக்கொண்டு பாடல்களில் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். திருமூலர், அருணகிரிநாதர், பரஞ்சோதி முனிவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சங்கத் தமிழ் புலவர்கள் 49 பேரும் 49 எழுத்துக்களின் வடிவம் என்ற திருவிளையாடல் புராணக் கதையும் சுவையானது.

51 எழுத்துக்களை பீஜாக்ஷரங்கள் (வித்து எழுத்துக்கள்) என்பர் அவற்றால் ஏற்படும் மாலை மந்திர மாலை அல்லது மாத்ருகா புஷ்ப மாலை எனப்படும். 51 எழுத்துக்களுக்கும் தனித் தனி தேவதைகள் உண்டு.

 

விராலிமலையில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில்:

“ ஐந்து பூதமும் ஆறு சமயமும்

மந்த்ர வேத புராண கலைகளும்

ஐம்பத்தோர்விதமான லிபிகளும்    வெகுரூப ”

என்றும் இன்னுமோர் இடத்தில்

“ அகர முதலென உரை செய் ஐம்பதொரக்ஷரமும்

அகில கலைகளும் வெகுவிதங் கொண்ட தத்துவமும்

அபரிமித சுருதியும் அடங்கும் தனிப் பொருளை ”

 

என்றும் பாடுகிறார். இந்தப் பாடல்களுக்கு திரு. கோபாலசுந்தரம் எழுதிய உரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பில் மிகவும் தெளிவாக 51 சம்ஸ்கிருத எழுத்துகள் என்றே விளக்குகிறார். ஆக சம்ஸ்கிருத 51 எழுத்துக்களையே தமிழ்ப் புலவர்கள் 51 என்று குறிப்பிடுதல் தெளிவு. ஏனெனில் தமிழில் எக்காலத்திலும் 51 எழுத்துகள் இருந்ததற்கு பழந்தமிழ் நூல்களில் ஆதாரம் இல்லை.

கந்தர் அநுபூதியை 51 பாக்களில் அருணகிரி அமைத்தமைக்கும் மாணிக்கவாசகரின் திருவாசகம் 51 பாடல்களில் அமைந்தமைக்கும் இந்த மந்திர எழுத்துக்களே காரணம் என்றும் பெரியோர் கூறுவர்.

 

திருமந்திரம்

திருமந்திரத்தில் 51 எழுத்துக்கள் என்பதை திருமூலர் பல பாடல்களில் பாடுகிறார். இவைகளுக்கு உரை எழுதியோர் தொல்காப்பிய காலத்துக்கு முன் தமிழிலும் 51 எழுத்துக்கள் இருந்ததாக எழுதியுள்ளனர். பின்னர் அது 33 ஆகவும் முப்பதாகவும் குறைக்கப்பட்டதாகச் சொல்லுகின்றனர். (பக்கம் 366, பாடல் 878க்கு திரு ப ராமநாத பிள்ளை எழுதிய உரையில் இவ்வாறு கூறுகிறார்.) ஆனால் இதற்கு ஆதாரம் எதையும் அவர் காட்டவில்லை. ஆதாரம் இருப்பதாகவும் தெரியவில்லை.

“ இணையார் திருவடி எட்டெழுத்தாகும்

இணையார் கழலிணை யீரைந்தாகும்

இணையார் கழலிணை ஐம்பதொன்றாகும்

இணையார் கழலிணை ஏழாயிரமே” (878)

( பாடல் 925,942,944,904, 1195, 1200, 1209, 1726,2650, 2826 ஆகியவற்றிலும் இதை திருமூலர் வலியுறுத்துகிறார்.)

12 உயிர் ,18 மெய், ஒரு ஆயுதம் உட்பட 31 தமிழ் எழுத்துகளே இன்று வரிவடிவத்தில் இருக்கின்றன. இத்தோடு உயிர்மெய் எழுத்துக்கள் 216 ஐயும் சேர்த்து 247 எழுத்துகள என்று சொல்லுவது வழக்கம்.

 

திருவிளையாடல் புராணம்

பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் சங்கப் பலகை தந்த படலத்தில் ,” ஓ வாணியே,  உன் சொரூபமான ஐம்பத்தோரெழுத்தில் அகர முதலாக நாற்பத்தெட்டு எழுத்துகளும் நாற்பத்தெட்டு புலவர்களாக உலகத்தில் பிறக்ககடவன. திருவாலவாயானும் ஒரு புலவராகத் தோன்றி 49ஆவது புலவராக சங்கத்தில் அமரட்டும் என்று பிரம்ம தேவன் கூறியதாக உள்ளது.

 

காஞ்சிப் பெரியவர் 14-10-1932-ல் சென்னையில் ஆற்றிய சொற்பொழிவு

“அம்பிகையே வாக் ஸ்வரூபமாக இருப்பவள். அம்பாள் உருவம் முழுவதும் அக்ஷரங்கள். நம்முடைய உடம்பில் எல்லாம் நாற்றமுள்ள வஸ்துக்களெ நிரம்பி இருக்கின்றன. இந்த ஆசாபாசங்களுள் அறிவு என்ற ஒரு மணி இருக்கிறது அம்பாள் உடம்போ அகாராதி க்ஷகாராந்தம் இருக்கும் அக்ஷரங்கள்தான. தர்க்கத்தில் முக்தாவளியில் சப்தத்தைப் பற்றி இரண்டு நியாயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. வீசிதரங்க நியாயம், கதம்பமுகுள நியாயம் என்பவை அவை.

வீசிதரங்க நியாயம் என்பது அலைகளில் இருந்து அலை பிரிவது. அதாவது பெரிய அலைகளில் இருந்து சிறு சிறு அலைகள் பிரிந்து சென்று கடைசியில் சிறிதாகி அடங்குவதைப் போல்வது.

சப்தம் கொப்பளித்து வெவ்வேறு ஒலியாக விழுதல் கதம்ப முகுள நியாயம். இந்த சப்தங்கள் தாம் 51 அக்ஷரங்கள். அவற்றிற்கு மாத்ருகா என்று பெயர். இந்த அக்ஷரங்கள் ஒரு உருவம் எடுத்ததுதான் அம்பிகையின் வடிவம், அக்ஷரமாலிகை, மாத்ருகா ஸ்வரூபம் என்பர். ‘ஸர்வ வர்ணாத்மிகே’ என்று காளிதாசர் சொல்லி இருக்கிறார். எல்லா எழுத்துக்களின் வடிவமாய் இருப்பவளே என்பது அதன் கருத்து.

நாம் ஜபத்தில் அங்கந்யாச கரன்யாசங்கள் செய்கிறோம். அந்த அந்த மந்த்ர தேவதைக்கு அந்த அந்த அக்ஷரம் அந்த அந்த அங்கங்களாக இருக்கின்றன என்பது குறிப்பு”.

ருத்ராக்ஷ மாலா, ஸ்படிகாக்ஷ மாலா என்பனவற்றை விளக்குகையில் அ முதல் க்ஷ வரை உள்ள 51 எழுத்துக்களைக் குறிக்கவே அக்ஷ என்பதைச் சேர்த்திருபதாகவும் பெரியவர் விளக்குகிறார். எழுத்துக்கு வடமொழியில் அக்ஷ—ரம் என்பர். இதிலேயே முதல் அ–வும் கடைசி க்ஷ–வும் இருக்கிறது.

 

மந்திர சாஸ்திர விளக்கம்

அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு என்ற பழமொழிக்கிணங்க 51 சக்தி பீடங்களும் தேவியின் 51 மாத்ருகா அக்ஷரங்களைக் குறிக்கும் என்றும்  உடலில் ஆறு ஆக்ஞா சக்ர ஸ்தானங்களில் இந்த 51 அக்ஷரங்களும் உள்ளதாகவும் மந்திர சாஸ்திரம் அறிந்தோர் விளக்குவர்.

கொரிய மொழியில் சாமா என்ற 51 எழுத்துக்கள் (27+24) உண்டு.

உலகில் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் சிவன், முருகன், தேவியர் ஆகியோருடன் தொடர்பு படுத்தும் அளவுக்கு வேறு எந்த மொழியும் கடவுளுடன் தொடர்பு படுத்தப்படவில்லை!!

கடந்த சில நாட்களில் வெளியான ஏனைய திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படித்து இன்புறுக. இன்னும் வரும்…………..

Contact london swaminathan at :  swami_48@yahoo.com

ஒரு வேளை உண்பான் யோகி

Greatest ascetic of this century, Kanchi Shankaracharya, who lived 100 years.

 

ஆமை போல நீண்ட காலம் வாழும் ரகசியம்

ஒரு மனிதனோ பிராணியோ நீண்ட காலம் வாழும் ரகசியம் என்ன? அது சாப்பிடும் உணவு காரணமா? மூச்சு விடும் வேகம் (அளவு) காரணமா? காம (செக்ஸ்) உணர்வுகள் காரணமா? சுத்தமான காற்று காரணமா? அதன் எடை காரணமா? மரபணுக்கள் காரணமா? இந்த ஆராய்ச்சிக்கு நேரடியான விடை கிடையாது. ஆயினும் உணவு, மூச்சு விடும் விகிதம் ஆகியன ஒருவரின் ஆயுள் குறையவோ கூடவோ காரணமாகிறது என்பது உண்மை.

நீதி வெண்பாவில் வரும் தமிழ் பாட்டு ஒன்று கூறுகிறது:

 

“ ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!

இருபோது போகியே யென்ப—திரிபோது

ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்

போகியே யென்று புகல் உண்பான் ”

(ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி  நான்குவேளை உண்பான் போகியே போகி (ஆள் அவுட்!) என்பது இதன் பொருள்).

 

இந்தப் பாடல் நமக்குக் கற்பிக்கும் விஷயம் என்ன? ஒருவன் அதிகம் உண்டால் ஆயுள் குறையும். அதுவும் ஆரோக்கியக் குறைவான உணவு உண்டால் இன்னும் ஆயுள் குறையும். இப்போது மருந்துகள் மூலம் ஆயுளை அதிகரிக்கச் செய்கிறார்கள் என்பது உண்மதான். ஆனால் அவர்களுடைய வாழ்வோ நரக வாழ்வு. இருந்தும் இறந்தவர்களுக்குச் சமம். சுருங்கச் சொன்னால் நடைப் பிணம்.

ஆமைகளை ஆயுளுடன் தொடர்பு படுத்தியும் யோகிகளுடன் தொடர்பு படுத்தியும் வரும் கீதை, குறள் பாடல்களை ஆங்கிலக் கட்டுரையில் கண்டோம் (காண்க: The Tortoise Mystery: Can we live for 300 years?)

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்புடைத்து (குறள் 126)

 

வள்ளுவருக்கு முன்பாக இதை கீதையில் கண்ணனும்(2-58), மனுதர்ம சாஸ்திரத்தில்(7-105) மனுவும்,திவ்யப் பிரபந்தத்தில்(2360) ஆழ்வார்களும் சொல்லிவிட்டார்கள்.

“யதா சம்ஹரதே சாயம் கூர்ம அங்கானீவ ஸர்வச:

இந்த்ரீயாணி இந்த்ரியார்தேப்ய: தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா” (கீதை 2-58)

பொருள்: ஆமை தனது அங்கங்களைச் செய்வதுபோல எப்போது யோகியானவன் புலன்களை இந்திரிய விஷயங்களில் இருந்து எல்லா வகையிலும் உள்ளே இழுத்துக் கொள்கிறானோ அப்போது அவனுடைய ஞானம் உறுதியாகும்.

இது பிராணாயமத்தின் மகிமையைப் புலப்படுத்துகிறது. அதாவது மூச்சுவிடுவதை முறையாகக் கட்டுப்படுத்தினால் ஆயுள் அதிகரிப்பதோடு பல அற்புத சக்திகளும் உடலில் தோன்றும். அதைத் தவறாகப் பயன்படுத்தும்படி தேவதைகள் தூண்டும். அதற்குக் கீழ்படிபவர்கள் சில ஆனந்தாக்கள் (சாமியார்கள்) போல அதோகதிக்குப் போய்விடுவார்கள்.

திருமூலர் இவர்களுக்கு எல்லாம் ஒருபடி கூடுதலாகப் போய் ஆமையைவிட இன்னும் ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழலாம் என்கிறார் (2264 & 2304)

 

A simple Yogi, Sri Ramana maharishi, who lived over 70 years

 

மனிதனும் செக்ஸும்

ஒரு மனிதன் பாலுறவில் ஈடுபடும்போது அவன் சுவாசம் இருமடங்காகிறது. அதாவது நிமிடத்துக்கு 30 முறை. ஒரு சராசரி மனிதன் தனது வாழ்நாளில் 5000 முறை உடலுறவு கொள்கிறான் அல்லது விந்துவை வெளிவிடுகிறான். . ஆனால் யோகிகள் 48 ஆண்டு வரை பிரம்மசர்யம் காக்கிறார்கள். இது வடமொழி நூல்களிலும் சங்கத் தமிழ் இலக்கியத்திலும் (திருமுருகாற்றுப்படை) வரும் செய்தி.

கடவுள் (பிரம்ம தேவன்) ஒவ்வொருவருக்கும் இவ்வளவு கோடி மூச்சு என்ற ‘பாங்க் பாலன்ஸுடன்’ (மூச்சு வங்கிக் கணக்குடன்) நம்மை பூமிக்கு அனுப்புகிறான். வேகமாகச் செலவிடுவோர் விரைவில் பரலோகம் சேருவர். மெதுவாக முச்சுக் காற்றை விடுவோர் நீண்ட காலம் வாழ்வார்கள். இதை முறையாகக் கற்றுக் கொடுப்பதுதான் தியானமும் பிராணாயாமமும். ஆனால் விஷயம் தெரிந்தவர்களிடம் இதைக் கற்கவேண்டும்.

ஒரு சுவையான கணக்குப் போட்டுப் பார்ப்போம்: வேதங்கள் மனிதனுடைய ஆயுள் 100 என்று சொல்லுகின்றன. பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற மந்திரத்தைச் சொல்லுகிறார்கள். கண்ணதாசன் இதை ஒரு சினிமாப் பாடலில் அழகாக மொழிபெயர்த்துள்ளார்: “ நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வாழ்க” என்று.

 

நிமிடத்துக்கு 15 முறை சுவாசித்தால் 100 ஆண்டு வாழலாம்

நிமிடத்துக்கு 18 முறை சுவாசித்தால் 83 ஆண்டு வாழலாம்

நிமிடத்துக்கு 2 முறை சுவாசித்தால் 750 ஆண்டு வாழலாம்

நிமிடத்துக்கு ஒரு முறை சுவாசித்தால் 1500 ஆண்டு வாழலாம்.

ரிஷி, முனிவர்கள் இப்படிச் செய்ததாகவும் காட்டில் அவர்கள் மீது பாம்புப் புற்றுகள் வளர்ந்ததாகவும் படிக்கிறோம். திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாகவும் படிக்கிறோம். இப்போது லண்டன் பத்திரிகைகளில் மனிதனை 1000 ஆண்டு வாழச் செய்யும் ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக மரபணு ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்!

 

Sri Shanthananda who lived like a Rishi.

 

பிராணிகள் மூச்சு விடும் அளவு

ஒரு நிமிடத்துக்கு………

மனிதன் 15 முறை சுவாசிக்கிறான் –சராசரி ஆயுள் 100 வயது

ஆமை 5 முறை சுவாசிக்கிறது—150 ஆண்டு முதல் 300 ஆண்டு வரை

பாம்பு 8 முறை சுவாசிக்கிறது– 30 ஆண்டு (உணவு வேட்டை ஆடுகையில் 15 முறையாக அதிகரிக்கும்)

யானை 12 முறை சுவாசிக்கிறது—90 ஆண்டு

குதிரை 19 முறை சுவாசிக்கிறது— 50

பூனை 25 முறை சுவாசிக்கிறது—13 ஆண்டு

நாய் 29 முறை சுவாசிக்கிறது—14 ஆண்டு

புறா 37 முறை சுவாசிக்கிறது—9 ஆண்டு

முயல் 39 முறை சுவாசிக்கிறது–8 ஆண்டு

திமிங்கிலம் 6 முறை சுவாசிக்கிறது –111 ஆண்டு

யானை 4,5 (படுத்த நிலையில்) முறை சுவாசிக்கிறது —70 ஆண்டு

குதிரை 8-15 முறை சுவாசிக்கிறது —50 ஆண்டு

சிம்பன்சி குரங்கு -14 முறை சுவாசிக்கிறது -40 ஆண்டு

குரங்கு—32- முறை சுவாசிக்கிறது –18-23 ஆண்டு

மூஞ்சுறு—170 முறை சுவாசிக்கிறது — 1 ஆண்டு

வீட்டு எலி- 95-160 முறை சுவாசிக்கிறது—2 முதல் 3 ஆண்டு

 

பிராணிகளின் ஆயுட்காலம்

ஆப்பிரிக்க சாம்பல் கிளி— 50 ஆண்டு, அமேசான் கிளி—80 ஆண்டு,இந்திய கிளி—80 ஆண்டு, முதலை— 45 ஆண்டு, நீரில் மட்டும் வாழும் முதலை—68

அமெரிக்க பெட்டி ஆமை- 125, தவளை, தேரை -15

ராணி எறும்பு –3, வேலைக்கார எறும்பு- அரை ஆண்டு, வௌவால்—25, காண்டாமிருகம்—40, கரடி—40, ராணி தேனீ—5, வேலைக்கார தேனி—1, பாம்பு வகைகள்—20 முதல் 30, பசு மாடு—22, மான் –35, கழுதை—45, கழுகு—55, விலாங்கு மீன் –55, கேட் பிஷ் (மீன்) –60,ஆடு—15, ஆந்தை—68, கொரில்லா—20

சிம்பன்சி—40, குதிரை—40, குள்ள நரி—14, சிறுத்தை—17.சிங்கம்-35, கீரி—12

புறா-11, அணில்—16, புலி—22, அன்னம்—102, கங்காரு—9, கோவாலா—8

கலாபகாஸ் ஆமை–200

இந்தப் பட்டியலில் இருந்து ஒரு உண்மை புலப்படும். ராணித் தேனீயை விட வேலைக்காரத் தேனீயின் ஆயுள் மிக மிகக் குறைவு. ராணி எறும்பை விட வேலைக்காரத் எறும்பின் ஆயுள் மிக மிகக் குறைவு. வேகமாகச் செயல்படுவதால் இந்த இழப்பு. இதேபோலத்தான் வேகமாகப் பாயும் சிங்கம், புலி, சிறுத்தைகளின் ஆயுளும் குறைவு.

காய்கறி உணவையே மட்டும் சாப்பிடும் யானை, கிளி போன்றவை நீண்ட காலம் வாழ்கின்றன என்பதும் வியப்பான விஷயம். ஆனால் மூச்சு வேகம் மட்டுமோ, உணவு மட்டுமோ காரணம் என்று கருதிவிடக் கூடாது.

5000 ஆண்டுகள் உயிருடன் இருக்கும் மரம் பற்றியும் 450 ஆண்டுகள் கடலில் வாழும் கடல் மட்டி பற்றியும் நான் எழுதிய கட்டுரையையும் காண்க: Do Hindus believe in E.T.s and Alien Worlds? and Why Do Hindus Practise Homeopathy?

 

Contact swami_48@yahoo.com

*********

தமிழ் முனிவர் அகஸ்தியர்

Agastya Rishi Statue from Indonesia;location-London V&A Museum.

 

By ச.நாகராஜன்

தமிழ் இலக்கணம் வகுத்த மஹரிஷி

தமிழர்களுக்கு மிகவும் பிடித்த மஹரிஷி அகத்தியர். முருகனிடமிருந்து தமிழைப் பெற்று அதற்கு இலக்கணமெல்லாம் வகுத்து தமிழைத் தமிழருக்குத் தந்த மஹரிஷி அகஸ்தியர். இவரைப் பற்றிய ஏராளமான சுவையான கதைகள் ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களிலும் பதினெட்டு புராணங்களிலும் காணலாம்.

ராமருக்கு ஆதித்ய ஹ்ருதயத்தை  உபதேசித்தவர்.ஹயக்ரீவரிடமிருந்து லலிதா சஹஸ்ரநாமத்தைப் பெற்றவர். சரஸ்வதி ஸ்தோத்திரத்தை இயற்றியவர். இவரது மனைவி லோபாமுத்ரை அம்பாளின் மிக நெருங்கிய அணுக்க பக்தை.

 

அகத்தியரின் நாடி ஜோதிடம்

தமிழ் சித்தர்களில் மிகப் பெரும் சித்தர் அகத்தியர். அகத்தியர் பெயரால் உலவி வரும் ஏராளமான சித்த மருத்துவ நூல்கள் அவரது வைத்திய புலமையைப் பறை சாற்றும். அகத்தியர் சிறந்த ஜோதிட மஹரிஷியும் கூட. குறிப்பாக நாடி ஜோதிடத்தில் அகத்தியரின் நாடி ஜோதிடம் தனி ஒரு இடத்தைப் பிடிக்கிறது.

 

பனை ஓலைச் சுவடிகளில் உலகில் பிறக்கும் அனைவரது ஜாதகங்களும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பலன்களை பிறந்ததிலிருந்து இறக்கும் வரை சொல்வதோடு அவர்களின் முன் ஜென்ம வரலாறும் சுருக்கமாகக் கூறப்படுவதைக் கண்டு வியக்காதவர்களே கிடையாது.

 

நாடி ஜோதிடம் பார்க்க முதலில் ஆண் என்றால் வலது கைப் பெருவிரலும் பெண் என்றால் இடது கைப் பெருவிரலும் காட்டப்படவேண்டும். அகத்தியரின் நாடி ஜோதிட சுவடிகளில் தம்மிடம் உள்ள சுவடிகளில் குறிப்பிட்ட ஜாதகரின் ஜாதக பலன் இருக்கிறதா என்று ஜோதிடர் கண்டு பிடிப்பார். ரேகைக்கு விதவிதமான நல்ல பெயர்களும் உண்டு (முக்கமல சங்கு ரேகை என்பது போல!)முன் ஜென்மத்தில் செய்த தர்மம் (நல்ல காரியம்) எவ்வளவு, கர்மம் (தீய காரியம்) எவ்வளவு என்பது தெரிவிக்கப்படும் (தர்மம் 9 கர்மம் 1- நல்ல ஜாதகர்) இதைத் தொடர்ந்து ஜாதகரின் முன் ஜென்மமும் விளக்கப்படும். பின்னர் ஜாதகர் பிறந்த வருடம், ஜாதகம் தெளிவாகச் சொல்லப்படும். பின்னர் பலன்களும் ஆயுள் குறித்த விவரங்களும் வரும். பரிகாரம் தேவையெனில் அவையும் கூட விளக்கப்படும்.

ஆங்கிலேயர் ஒருவரின் பெயரைப் பற்றிச் சுவடி குறிப்பிடும் போது முழத்தில் பாதி இவர் பெயர் என வர அவர் ஜான் (முழத்தில் பாதி சாண்) என்று சொல்லப்பட்ட நேர்த்தியும் நாடி ஜோதிடத்தில் தான் உண்டு!

இப்படிப்பட்ட அகத்தியரின் நாடி ஜோதிடம் உள்ளிட்டவற்றை ரஷ்யர்கள் மொழிபெயர்த்து ஆய்வு செய்வது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு ஜாதகரின் குண நலன்கள், அவரது வெற்றிகள், தோல்விகள், மனைவி மக்கள், பதவி, நோய்கள் என அனைத்தையும் அகத்தியரின் சுவடிகள் தெரிவிக்கும் போது பிரமிப்பின் உச்சியைத் தான் எட்ட வேண்டியிருக்கும்!

 

அகத்தியரின் பிறப்பு

அகத்தியரைப் பற்றிய பிறப்பு பற்றி மஹாபாரதம் ஆதி பர்வம் கூறுவதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்:

பிரம்மாவினுடைய புத்திரர் மரீசி. மரீசியினுடைய புத்திரர் காஸ்யபர். காஸ்யபருக்கு தக்ஷப்ராஜாபதியின் புத்திரியாகிய அதிதி என்பவளிடத்தில் பன்னிரெண்டு புத்திரர்கள் ஜனித்தார்கள். அவர்களுக்கு பன்னிரெண்டு ஆதித்தியர்கள் என்று பெயர். அப்பன்னிருவரில் மித்திரர் என்பவர் ஒருவர். அந்த மஹாத்மாவுக்கு ஊர்வசியின் காரணமாக விந்து வெளியேற அதைக் கும்பத்தில் ஏந்தினார்.அதிலிருந்து அகஸ்தியர் உண்டானார். இந்தக் காரணத்தினால் அவருக்கு கும்ப சம்பவர் என்றும் பெயருண்டு.

Statue of Agastya from Prambanan, Indonesia (Wikipedia picture)

 

அகத்தியரின் மனைவி

அவரது மனைவி லோபாமுத்ரை பற்றிய கதையும் ஒன்று உண்டு. ஒரு சமயம் இவரது முன்னோர்கள் குழியில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதன் காரணத்தை அகஸ்தியர் வினவ அவர்கள்,”உனக்குக் குழந்தைகள் இல்லாததால் இப்படி இருக்கிறோம்” என்று பதில் தந்தனர். இதனால் நல்ல மனைவியைத் தேடி அலைந்த அகஸ்தியர் யாரும் அகப்படாததால் ஜீவராசிகளின் சகல நல்ல அம்சங்களையும் ஒருங்கு திரட்டி ஒரு அழகான பெண்ணை சிருஷ்டித்தார். அந்தச் சமயம் விதர்ப்ப தேசத்து அரசன் குழந்தை வேண்டி தவித்துக் கொண்டிருந்தான். அவனிடம் அந்த சிசுவை மகளாகும் படி அகஸ்தியர் அனுக்ரஹித்தார். நாளுக்கு நாள் அந்தக் குழந்தை அழகுடன் மிளிர்ந்து வளர்ந்தது. அவளுக்கு அந்தணர்கள் லோபாமுத்திரை என்று பெயரிட்டனர். அவளையே தனக்கு கன்னிகாதானம் செய்விக்கும்படி விதர்ப்ப ராஜனைக் கேட்க அவனும் சம்மதித்தான்.அகஸ்தியருக்கும் லோபாமுத்ரைக்கும் திருதா

ஸ்யூ என்ற புத்திரர் ஜெனித்தார்.இப்படி ஒரு சத்புத்திரன் பிறந்ததால் அகஸ்தியரின் முன்னோர்கள் தாம் விரும்பிய நற்கதியை அடைந்தனர்.

பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் நடந்த விவாஹத்தின் போது தேவர்கள் அனைவரும் ஹிமகிரியில் கூட வடகோடி உயர்ந்து தென்கோடி தாழ்ந்தது. அதை சரிப்படுத்த ஈஸ்வரன் அகஸ்தியரைத் தென் திசைக்கு அனுப்ப அன்றிலிருந்து அகஸ்தியர் பொதியமலை வாசியானார். இந்த விருத்தாந்தத்தை ஸ்கந்த புராணம் விரிவாகக் கூறுகிறது.

ஆக இப்படி அகஸ்தியரைப் பற்றிய ஏராளமான தகவல்களை நமது புராணங்களிலும் ஜோதிட நூல்களிலும் சித்த மருத்துவ நூல்களிலும் நாம் படித்து அகத்தியரின் பெருமையை உணரலாம்.

************

My brother S NAGARAJAN is writing a series about all the Great Seers (Rishis) of India. He has already written about the 27 stars and other topics in Astrology. It is all based on science or Hindu scriptures.Next article is about Varahamihira in two parts. All his articles are in Tamil. If you need English translation, please let us know.