Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
ஷேக்ஸ்பியர் (Shakespeare) மூலமாக பிரிட்டனுக்கு கிடைக்கும் வருவாய் மிகப்பெரிய வருவாய் ஆகும். உலகில் வேறு எந்த நாடாவது ஒரு கவிஞர் பெயரை வைத்து இவ்வளவு சம்பாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே .
எப்போது பார்த்தாலும் ஒருபுறம் நாடகம் நடக்கும். மற்றொரு புறம் ஷேக்ஸ்பியர் பற்றிய புத்தக விற்பனையோ அபரிமிதம் .
ஷேக்ஸ்பியர் பிறந்த ஊரான ஸ்ட்ராட்போர்ட் அபான் ஆவனுக்கு (Stratford Upon Avon) வரும் கூட்டமோ
எக்கச்சக்கம் . அங்கு சேக்ஸ்பியர் கண்காட்சியையும் அவரது வீட்டையும் பார்க்கவோ 25 பவுன் கட்டணம் — அவரது கையெழுத்து பல லட்சம் பவுண் பெறும் ஏல த்தில்! இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் . நிற்க. நான் தினமணியில் 25-10-1992ல் எழுதிய கட்டுரை
26 Aug 2018 – தமிழில் ஷேக்ஸ்பியர் கவிதைகள் சில! (Post No.5365). COMPILED BY LONDON SWAMINATHAN. Date: 26 August 2018. Time uploaded in London – 14-29 (British Summer Time). Post No. 5365.
17 Sep 2017 – பெண்ணின் மனம்: ரிக் வேதம், ஷேக்ஸ்பியர், தமிழ் பாட்டு ஒப்பீடு (Post No.4220). Written by London Swaminathan. Date: 17 September 2017. Time uploaded in London- 6-56 …
22 Nov 2018 – ஷேக்ஸ்பியர் திரைப்படங்கள் 525 (Post No.5680). Written by S Nagarajan. Date: 20 November 2018. GMT Time uploaded in London –5-28 am. Post No. 5680. Pictures shown here are taken from various …
1 Dec 2017 – ஷேக்ஸ்பியர் நாடகத்தில் இந்துக்கள் போற்றும் துருவ நட்சத்திரம்! (Post No.4450). Written by London Swaminathan. Date: 1 DECEMBER 2017. Time uploaded in London- …
11 Nov 2019 – ஹோமர், உமர் கய்யாம், ஷேக்ஸ்பியர் (Post No.7202). Blind Poet Homer of Greece. Compiled by London swaminathaan. swami_48@yahoo.com. Date: 11 NOVEMBER 2019. Time in London – 7-15 …
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்! (Post No.7327)
WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 11 DECEMBER 2019
Time in London – 5-28 AM
Post No. 7327
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
STATUE OF BHARATI AT SETUPATI HIGH SCHOOL, MADURAI.
தமிழ் அன்பர் : மஹாகவியே! பார் புகழும் பாரதியாரே! கோடி வணக்கம். போற்றுகிறோம் உம்மை இந்த நன்னாளில். சில கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுகிறோம்.
பாரதியார் : சபாஷ்! பாண்டியா! கேள்.
அன்பர் : உமக்குத் தொழில் யாதோ?
பாரதியார் : நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்.
அன்பர்: தொழில் கவிதையா ! … எப்படிப்பட்ட கவிதை?
பாரதியார் : “சுவை புதிது, நயம் புதிது வளம் புதிது
சொற் புதிது ஜோதி கொண்ட
நவ கவிதை எந்நாளும் அழியாத
மஹா கவிதை”
அன்பர் : அடடா! இப்படிப் போற்றிப் புகழ்வது யார்?
பாரதியார் : என்று நன்கு …..
பிரான்ஸென்னும் நாட்டிலுயர்
புலவோரும் பிறரும் ஆங்கே
விராவு புகழ் ஆங்கிலத்தீம் கவியரசர்
தாமும் மிக வியந்து கூறிப்
பராவியென்றன் தமிழ்ப்பாட்டை மொழிபெயர்த்துப்
போற்றுகின்றார்.
அன்பர்: அடடா! எப்படி இப்படிப்பட்ட கவிதை மலர்கிறதோ?
பாரதியார் : செய்யும் கவிதை பராசக்தியாலே செய்யப்படுங் காண்!
அன்பர் : ஆஹா! அருமை!
பாரதியார் : மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்
மனோன்மணியென் மாசக்தி வையத் தேவி
அன்பர் : பார் புகழும் தங்கள் எழுத்தும் பாட்டும் எங்களைப் பரவசப்படுத்துகிறது.
பாரதியார் : எழுது கோல் தெய்வம்; இந்த எழுத்தும் தெய்வம்!
அன்பர் : உங்களின் குறிக்கோள் என்ன?
பாரதியார் : சொல் ஒன்று வேண்டும் தேவ சக்திகளை நம்முள்ளே
நிலை பெறச் செய்யும் சொல் வேண்டும்.
அன்பர்: அற்புதமான சொற்களைக் கவிதை வாயிலாக அள்ளிக் கொட்டுகிறீர்கள்.. உங்கள் குறிக்கோள் என்ன?
பாரதியார் : நூலைப் பலபலவாகச் சமைத்து நொடிப் பொழுது
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறி எனக்கே
அன்பர் : கணபதியின் காலைப் பிடித்து அவன் பதம் கண்ணில் ஒற்றி இப்படி நீவீர் பாடி இருப்பது எம்மைப் புல்லரிக்க வைக்கிறது. கவிப் பெருக்கு நாட்டிற்கு என்ன செய்யும்?
பாரதியார் : வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும் கவிப் பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழி பெற்றுப் பதவி கொள்வார்
அன்பர் : ஆகவே …. ?
பாரதியார் : பாட்டும் செய்யுளும் கோத்திடுவீரே!
பாரதநாட்டியக் கூத்திடுவீரே!!
அன்பர் : எந்தச் சொல் செய்யுளுக்கு நலம் பயக்கும்?
பாரதியார் : சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!
அன்பர் : இதைப் பெற என்ன செய்ய வேண்டும்?
பாரதியார் : வாணி கலைத் தெய்வம் மணி வாக்கு உதவிடுவாள்
ஆணி முத்தைப் போலே அறிவு முத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியைக் காண்பதெல்லாம் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே!
அன்பர் : வாணியைக் கூவுங்கால் என்ன ஆகும்?
பாரதியார் : கதைகள் சொல்லிக் கவிதை எழுதென்பார்;
காவியம் பல நீண்டன காட்டென்பார்;
விதவிதப்படு மக்களின் சித்திரம்
மேவு நாடகச் செய்யுளை மேவென்பார்;
இதயமோ எனில் காலையும் மாலையும்
எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்
எதையும் வேண்டிலது அன்னை பராசக்தி
இன்பம் ஒன்றினைப் பாடுதல் அன்றியே
நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
நையப் பாடென் றொரு தெய்வம் கூறுமே;
கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டிலே அறம் காட்டெனும் ஓர் தெய்வம்;
பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும்
ஊட்டி எங்கும் உவகை பெருகிட
ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே
நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
நானிலத்தவர் மேல்நிலை எய்தவும்
பண்ணிலே களி கூட்டவும் வேண்டி, நான்
மூட்டும் அன்புக் கனலொடு வாணியை
முன்னுகின்ற பொழுதில் எல்லாம் குரல்
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்
கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்.
மழை பொழிந்தியும் வண்ணத்தைக் கண்டு நான்
வான் இருண்டு கரும்புயல் கூடியே
இழையும் மின்னல் சரேலென்று பாயவும்
ஈர வாடை இரைந்தொலி செய்யவும்
உழை எலாம் இடை இன்றி இவ்வான நீர்
ஊற்றும் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
“மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண்
வாழ்க தாய்” என்று பாடும் என் வாணியே.
சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள்
சொல்ல வேறிடம் செல்ல வழி விடாள்
அல்லினுக்குள் பெருஞ்சுடர் காண்பவர்
அன்னை சக்தியின் மேனி நலம் கண்டார்
கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால்
கால வெள்ளத்திலெ நிலை காணுங்கால்
புல்லினில் வயிரப் படை காணுங்கால்
பூதலத்தில் பராசக்தி தோன்றுமே!
அன்பர் : பராசக்தியை என்ன வேண்டுகிறீர்?
பாரதியார் : சுவை நண்ணும் பாட்டினொடு தாளம் -மிக
நன்றாய் உளத்தழுந்தல் வேண்டும் – பல
பண்ணிற் கோடி வகை இன்பம் – நான்
பாடத் திறனடைதல் வேண்டும்
கல்லை வயிரமணி ஆக்கல் – செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல் – வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல் – பன்றிப்
போத்தைச் சிங்க ஏறாக்கல் – மண்ணை
வெல்லத் தினிப்பு வரச் செய்தல் – என
விந்தை தோன்றிட இந் நாட்டை – நான்
தொல்லை தீரத்து உயர்வு கல்வி – வெற்றி
சூழும் வீரம் அறிவு ஆண்மை
கூடுந் திரவியத்தின் குவைகள் – திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள்-இவை
நாடும் படிக்கு வினை செய்து – இந்த
நாட்டோர் கீர்த்தி எங்கும் ஓங்க – கலி
சாடும் திறன் எனக்குத் தருவாய் – அடி
தாயே! உனக்கு அரியதுண்டோ?!
அன்பர் : ஆஹா! உங்கள் கவிதையால் பாரத மக்கள் நாங்கள் எல்லோரும் பராசக்தியைப் பாடுவோம்; ஆசிர்வதியுங்கள் கவிஞரே!
பாரதியார் : நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப்பாள்;
“அல்லது நீங்கும்” என்றே உலகேழும்
அறைந்திடுவாய் முரசே!
சொல்லத் தகுந்த பொருள் அன்று காண்! இங்குச்
சொல்லும் அவர் தமையே,
அல்லல் கெடுத்து அமரர்க்கிணை ஆக்கிடும்
ஓம்; சக்தி, ஓம் சக்தி, ஓம்!
அன்பர் பாரதியாரை பக்தியுடன் வணங்கி விடை பெறுகிறார்.
கவிஞர் பிறந்த நாள் டிசம்பர் 11, 1882
அவர் மலரடிக்கு நமது அஞ்சலி உரித்தாகுக!
****
FROM KALAKSHETRA, CHENNAI
பாரதியாரின் பாடல்களே பாரதியாரின் கூற்றாக இக்கட்டுரையில் அமைந்துள்ளது.
கவிதை பற்றி அவர் கூறும் அவரது பாடல்கள் இன்னும் ஏராளம் உள்ளன. அவற்றை அன்பர்கள் படித்து மகிழலாம்.
இந்தக் கட்டுரையில் உள்ள பாரதியாரின் கவிதைகளைப் பற்றிய உதவிக் குறிப்பு இதோ (பாடல் தலைப்புகள் தரப்பட்டுள்ளன) :
நமக்குத் தொழில் : விநாயகர் நான்மணி மாலையில் வெண்பா
சுவை புதிது : ஸ்ரீமான் எட்டயபுரம் மஹாராஜா அவர்கள் மீது சீட்டுக் கவிகள்
என்று நன்கு பிரான்ஸென்னும் : மேலே உள்ள அதே பாடல்
செய்யும் கவிதை : விநாயகர் நான்மணி மாலையில் கலித்துறை
மனத்தினிலே நின்றிதனை : பாரதி அறுபத்தாறு – முதல் பாடல்
எழுது கோல் தெய்வம் : பாரதி அறுபத்தாறு – பாடல் 18
சொல் ஒன்று வேண்டும் : சொல் – வாணி
நூலைப் பலபலவாக : விநாயகர் நான்மணி மாலையில் கலித்துறை
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
Ritual for lunar eclipse
அரிஸ்டோக்ரடீஸ் என்ற கிரேக்க சிறுவனுக்கு அவனது ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்ட ஜாதகம் களிமண் கல்வெட்டில் உள்ளது. இன்று நாம் எப்படி ஜாதகம் எழுதுகிறோமோ அதே பாணியில் ஜாதக வாசகம் உளது!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000
சமராஞ்ச்
பிறப்பு- 17 ஜூலை 1920
இறப்பு – 21 ஏப்ரல் 2010
நான் தினமணியில் கட்டுரை எழுதிய தேதி 25-10-1992
அடுத்த ஒலிம்பிக் ஜப்பானி ன் தலைநகரான டோக்கியோவில் 24 ஜூலை 2020ல் துவங்குகிறது
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
மாலைமலர் நாளிதழில் 7-12-2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
திருவிளக்கு ஏற்றுவோம், செல்வச் சிகரம் ஏறுவோம்!
ச.நாகராஜன்
கடன் தொல்லை, தாங்க முடியாத தரித்திரம், வியாபார நஷ்டம், தீராத வறுமை, அளவில்லாச் செலவு என்று இப்படி அல்லல் படுவோருக்கு நமது அறநூல்களும் மகான்களும் காட்டும் ஒரு நல்ல வழி திருவிளக்கைத் தினமும் வீட்டில் ஏற்றுவது தான்!
வீட்டுக்கு வரும் மணப்பெண்ணை மகாலெட்சுமியாகக் கருதுகிறது நமது பண்பாடு. வீட்டிற்குள் நுழைந்தவுடன் மருமகளை விளக்கேற்றி வைக்கச் சொல்வது ஒரு அர்த்தமுள்ள பழக்கம்.
ஏனெனில் தீபத்தை ஏற்றி வைப்பதன் மூலம் தரித்திரம் தொலைவதோடு இனி ஆரம்பிக்க இருக்கும் வாழ்க்கை செல்வ வளம், உடல் ஆரோக்கியம், சமூக நலம் உள்ளிட்ட அனைத்திற்குமான அடிப்படையாக அமைகிறது என்பதை ஆன்றோர் அனுபவத்தால் கண்டு அதை மரபாகக் கடைப்பிடித்தனர்.
மஹாலட்சுமி வசிக்கும் இடங்களில் முக்கியமானது
மஹாலட்சுமி வாசம் புரியும் இடங்களில் முக்கியமானதாகத் திகழ்வது விளக்கு. தினமும் காலையும் மாலையும் பூஜை அறையில் விளக்கை ஏற்றி வழிபடுவது வளத்தையும் செல்வத்தையும் கொடுக்கும்.
மாலையில் சூரிய அஸ்தமன சமயம் வாயிலின் இரு புறங்களிலும் அகல் விளக்கு ஏற்றி வருவோர் ஒரு நாளும் வறுமை என்ற கொடிய பிணியை அடைய மாட்டார்கள்.
பழைய காலத்தில் மாட விளக்கு என்று திண்ணையின் இரு புறங்களிலும் உள்ள பிறை மாடங்களில் விளக்கை ஏற்றி வைப்பர். அவர்கள் நிம்மதியாகவும் தரித்திரம் இன்றியும் வாழ்ந்து வந்தனர். (இன்று நவீன வாழ்க்கை முறையில் மாடத்தைக் காணோம்!)
சங்க இலக்கியத்தில் அகநானூறு, நற்றிணை உள்ளிட்ட நூல்களில் விளக்கை ஏற்றி வைப்பது பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது. ‘நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா’ என்று விளக்கு அணைந்தால் அது தீய சகுனமாகக் கருதப்பட்டதை புறநானூறு (பாடல் 280) குறிப்பிடுகிறது.
ஆயிரக்கணக்கான பாடல்கள் தீபம் பற்றிக் குறிப்பிடுகின்றன.
விளக்கின் வகைகள்
விளக்கில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. அனைத்துமே நலம் பயம் பயப்பவை தான்.
களிமண்ணால் ஆன அகல் விளக்கு எளியோரும் ஏற்றி முன்னேற வழி வகுப்பது.
குத்து விளக்கு பல்வேறு வடிவமைப்புகளில் கிடைக்கும் ஒன்று. இன்றைய காலத்தில் எல்லோர் வீட்டிலும் இடம் பெறும் ஒன்று.
தூங்கா விளக்கு இடைவிடாது இறைவன் சந்நிதியில் எரியும் விளக்கு.
காமாட்சி விளக்கு மணப்பெண்ணின் சீதனமாக வரும் விளக்கு.
தொங்கு விளக்கு கோவில்களில் தொங்கும் விளக்கு.
இன்னும் நந்தா விளக்கு, யானை விளக்கு, கிளி விளக்கு,பாவை விளக்கு, வாசமாலை விளக்கு, சரவிளக்கு, அன்ன விளக்கு, தூண்டாமணி விளக்கு என இப்படி பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பு அம்சம், வரலாறு உண்டு.
விளக்கை ஏற்றும் திசைகள்
விளக்கை கிழக்கு, வடக்கு, மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து ஏற்றலாம். தெற்கு திசையைப் பார்த்து மட்டும் ஏற்றுதல் கூடாது.
இதன் அரிய பலன்கள்:
துன்பம் விலகும்.
கடன் தொல்லை போகும்
மங்களம் உண்டாகும்
திருமணத் தடை நீங்கும்
பல விதமான கிரக தோஷங்களும் நீங்கும். பெண்கள் நலம் பெறுவர்.
விளக்கின் முகங்கள்
விளக்கில் ஒரு முகத்திலிருந்து பல முகங்கள் வரை உண்டு.
ஒரு முகம் மட்டும் உள்ள விளக்கு நோய்களை நீக்கும்.
இரண்டு முகம் உள்ள விளக்கு குடும்ப ஒற்றுமையை நிலைப்படுத்தும்.
மூன்று முகம் உள்ள விளக்கு சகோதர சகோதரிகளிடையே நல்லுறைவை மேம்படுத்தும். புத்திர பாக்கியத்தை ஏற்படுத்தும்.
நான்கு முகம் வாகன சுகம், வியாபார வளத்தைத் தரும்.
ஐந்து முகம் பூர்வ ஜென்ம புண்ணிய பலன்களைத் தரும். சகல சௌபாக்கியத்தையும் தரும்.
ஆறு முகம் சத்ருக்களை வெல்லும். ரோகம் நீக்கும்.
ஏழு முகம் : திருமணத்தை நடைபெற வைக்கும்.
இப்படி ஒவ்வொரு விளக்கும் நற்பயன்களையே தரும். அனைத்திற்கும் அடிநாதமாக இருக்கும் செல்வம் பெருகும். மங்களம் தங்கும்.
எண்ணெயும் திரியும்
சாதாரணமாக நாம் பயன்படுத்தும் நல்லெண்ணெய் சௌபாக்கியத்தைத் தரும்.
பசு நெய் மகாலட்சுமியை வரவேற்று தங்கச் செய்யும்.
கடலை எண்ணெய் மட்டும் கூடாது. அது தீய பலன்களைத் தரும்.
திரிகளிலும் பருத்திப் பஞ்சு, தாமரைத் தண்டு, வெள்ளெருக்கு எனப் பல வகைகள் உண்டு.
பருத்திப் பஞ்சினால் உள்ள திரி சௌபாக்கியத்தையும், தாமரைத் தண்டைத் திரியாக இடுவது குழந்தைச் செல்வத்தையும் வெள்ளெருக்குப் பட்டை செல்வ வளத்தையும் ஏற்படுத்தும்.
குத்துவிளக்கில் அடிப்பாகம் பிரம்மாவையும் நீண்ட நடு தண்டுப்பாகம் விஷ்ணுவையும் மேற்பகுதி சிவனையும் குறிப்பதால் அது மும்மூர்த்திகளைக் குறிப்பதாக ஆகிறது. மும்மூர்த்திகளையும் போற்றி வணங்குவதாக ஆகிறது!
குடும்பங்களின் பாரம்பரியப் பழக்கமாக மாவிளக்கு மற்றும் எலுமிச்சை விளக்கு போன்றவற்றை ஏற்றுவதால் குடும்பத்தினருக்கு சகல நலன்களும் கிட்டும்; இவற்றை அந்தந்தக் குடும்பப் பெரியோர்கள் விடாது செய்யும்படி இளைய தலைமுறையினரை அறிவுறுத்துவர்; இதனால் இது பரம்பரை பரம்பரையாக்த் தொடர்கிறது.
தீப மங்கள ஜோதி நமோ நம
திருவிளக்கு உலகியல் வாழ்க்கைக்கான செல்வ வளத்தையும் சௌபாக்கியத்தையும் மட்டும் தரும் ஒன்றல்ல.
ஆன்மீக வாழ்க்கையில் ஏற்றம் பெறச் செய்து பெறுதற்கு அரிதான முக்திக்கும் வழிவகை செய்யும் ஒரு அரிய சாதனம்.
இறைவன் ஜோதி வடிவம் என்பதை நமது அருளாளர்கள் ஆயிரக்கணக்கான பாடல்களில் பாடி வலியுறுத்தியுள்ளனர்.
தமஸோ மா ஜோதிர் கமய: – இருளிலிலிருந்து ஒளிக்கு என்னை இட்டுச் செல்க என்பதே உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வேத பிரார்த்தனை!
திருவண்ணாமலை அக்னி தலம். அங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை அன்று தீபத் திருவிழா உலகம் கண்டிராத அரிய திருவிழாவாக தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.
ஜோதி வடிவாகச் சிவன் எழும்ப, முடியையும் அடியையும் பிரமனும் விஷ்ணுவும் காண முடியாத நிலையை இத் திருவிழா புலப்படுத்துகிறது.
திருவண்ணாமலை மஹா தீபத்தில் ஏழு அடி உயரமுள்ள தாமிர விளக்கு பயன்படுத்தப்படுகிறது. தீபம் எரிய 3000 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. திரியாக 3000 அடி நீளத் துணியும், இரண்டு கிலோ கற்பூரமும் இடை விடாமல் பதினோரு நாட்கள் எரிய பயன்படுத்தப்படுகிறது.
முக்திக்கு வழி காட்டும் இந்த ஜோதியைத் தான் தீப மங்கள ஜோதி நமோ நம என அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். ஜோதியைக் கும்பிடுவதே சிவ வாழ்வாகும். ‘ஜோதி உணர்கின்ற வாழ்வு சிவமென்ற சோஹமது தந்து எனை ஆள்வாய்’ எனப் பெரிய மந்திர ரகசியத்தை அருணகிரிநாதர் (வாதினை யடர்ந்த எனத் தொடங்கும் திருப்புகழில்) விளக்குகிறார். (சோஹம் = ஸ + அஹம் = அவனே நான் என்று பொருள் – சிவனே நான்!)
அப்பர், ஞான சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகியோர் ‘மாசற்ற ஜோதியை’ வர்ணித்துப் புளகாங்கிதம் அடைகின்றனர்; நம்மையும் அடையச் செய்கின்றனர்!
அருட்பெருஞ் ஜோதி தனிப் பெருங்கருணை
சமீப காலத்தில் வாழ்ந்த வள்ளலார் ‘அருட் பெரும் ஜோதி தனிப் பெருங்கருணை’ என்ற தாரக மந்திரத்தை அருளியதோடு ஜோதியின் பெருமையை அருட்பெருஞ்சோதி அகவலில் தெள்ளத் தெளிவாக எடுத்து இயம்புகிறார்.
சாகாக் கலையை ஜோதி வழிபாடு கற்பிக்கிறது என்பது அவரது அருளுரை.
‘மடல் எல்லாம் மூளை மலர்ந்திட
அமுதம் உடல் எலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பி’
என்று இப்படி மனித உடலானது ஜோதி உடலாகப் படிப்படியாக மாறும் விதத்தை அவர் உலகினர் முன் வைக்கிறார்.
அவரது பாடல்களை ஊன்றிக் கற்போர் அறிவது : ‘ஜோதி வழிபாட்டால் சிவ அருள் சித்திக்கும்; நீடித்த நோயற்ற வாழ்வும் பெரும் பேறும் கிடைக்கும் என்பதையே!
வள்ளலார் கூறும் இன்னொரு முக்கியமான அறிவுரை – இரவில் விளக்கில்லாமல் இருக்கும் அறையில் படுத்து உறங்கக் கூடாது என்பது தான். விளக்கு எரியும் அறையில் படுப்பது ஆயுளை நீட்டிக்கும் என அவர் வலியுறுத்துகிறார்.
உலக மக்கள் இன்புற ஆழ்வார்கள் ஏற்றும் அற்புத விளக்கு!
ஆழ்வார்களோவெனில் உலகம் முழுவதுற்குமான நன்மைக்கு விளக்கை ஏற்றி வைக்கின்றனர்.
வையமே அகல்; வார் கடலே நெய். சூரியனே விளக்கு; துன்பமாகிய கடல் என்னும் இடர் ஆழி நீங்க, சுடர் ஆழி வண்ணனுக்கு பாமாலை சூட்டித் தீபம் ஏற்றுகிறார் பொய்கையாழ்வார்.
பூதத்தாழ்வாரோ அன்பை அகலாகக் கொண்டு ஆர்வத்தை நெய்யாக ஊற்றி இன்புருகு சிந்தையை திரியாக ஆக்கி ஞானத் தமிழால் நாராயணனுக்கு ஞானச் சுடர் விளக்கு ஏற்றுகிறார்.
ஸ்ரீ சத்ய சாயிபாபா போதிக்கும் தீப தியானம்
முக்திக்கு வழி கோலும் ஒரு அடிப்படையை யோக வழிமுறையாக தீப தியானம் அருளாளர்களால் பண்டைக் காலம் தொட்டே பரிந்துரைக்கப்பட்டு வந்திருக்கிறது.
நவீன காலத்தில் கணினி தொழில்நுட்பம், தொழிற்சாலைகளில் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றால் ஏற்படும் மன இறுக்கத்திற்கும், மன உளைச்சலுக்கும் இது ஒரு அருமருந்து. இந்த தியானம் உலகியல் பலன்களை முதலில் தந்து பின்னர் ஆன்மீக சிகரத்தில் ஏற்றி விடும்.
ஸ்ரீ சத்யசாயி பாபா இந்த தியானத்தை மிகவும் வற்புறுத்துகிறார்.
அவர் தனது அருளுரையில், “மனிதன் தெய்வீகமானவன். அவன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ள தியானம் இன்றியமையாதது. நான் உங்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தியான முறையைத் தருகிறேன்” என்று கூறி தீப தியான முறையை விளக்குகிறார் இப்படி:- (Sathya Sai Speaks Volume 6 உரை எண் 50)
“தினந்தோறும் சில நிமிடங்களை ஒதுக்குங்கள். நீங்கள் அமைதியை உணரும் போது பின்னர் நிச்சயமாக இதற்கென அதிக நேரத்தை ஒதுக்குவீர்கள். உதயத்திற்கு முன்னர் இதைச் செய்யுங்கள். ஏனெனில் உடலானது தூக்கத்தினால் புத்துணர்ச்சி பெறுகிறது. பகல் நேரத்திலோ பல்வேறு செயல்களினால் உடல் மற்றும் மன ஆற்றல் சிதறுபடுகிறது.
ஒரு விளக்கைச் சிறிய நேராக எரியும் சுடருடன் உங்கள் முன்னர் எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை தீபங்களை அந்தத் தீபம் ஏற்றினாலும் கூட அது தன் சுய ஒளியில் சிறிதும் குறைந்து போவதில்லை. ஆகவே சுடர் என்றுமுள்ள நிரந்தரப் பொருளுக்கான பொருத்தமான அடையாளம். அதன் முன்னர் பத்மாசனம் அல்லது உங்களுக்கு சௌகரியமானபடி அமர்ந்து கொள்ளுங்கள். சுடரை நேராகப் பாருங்கள். பின்னர் கண்களை மூடிக் கொண்டு அதை உங்கள் அகத்தில் இரு கண்களின் புருவங்களுக்கிடையே உணர முயலுங்கள்.
அதிலிருந்து அது உங்கள் இதயத் தாமரைக்கு செல்லும் பாதையெல்லாம் ஒளி பெறச் செய்தவாறே இறங்கட்டும். மார்பில் உள்ள இதயத்தின் நடுவே அது செல்லும் போது தாமரை மலரின் இதழ்கள் ஒன்றன் பின் ஒன்றாக விரிவது போலக் கற்பனை செய்யுங்கள். அது ஒவ்வொரு எண்ணத்தையும், உணர்ச்சியையும், உணர்வையும் ஒளியில் குளிப்பாட்டி இருளை அகற்றுவது போல எண்ணுங்கள்.
இப்போது ஒளியின் முன்னர் இருளுக்கு இடம் இல்லை. சுடரை பெரிதாக, அகலமாக இன்னும் அதிக பிரகாசமாக ஆக்குங்க்ள். அது உங்கள் அங்கமெல்லாம் பரவட்டும். அதை நீங்கள் நன்கு உணர்கிறீர்கள். அதுவே அன்பின் ஒளியாக ஆகட்டும். அது உங்கள், நாக்கு, கண்கள், காதுகள் உள்ளிட்ட இடங்களை அடையட்டும். அனைத்து உலகையும் அந்த ஒளி அன்பால் அணைக்கட்டும்.
இதை தினந்தோறும் விடாமல் செய்யுங்கள். நீங்கள் தெய்வீகமாக, சுத்தமானவராக, அமைதி உள்ளவராக ஆகி விடுவீர்கள்.”
ஏற்றம் பெற திருவிளக்கு ஏற்ற வேண்டும்
ஆக திருவிளக்கு ஏற்றுதலும் அதன் வழிபாடும் உலக வாழ்வில் சகல நலன்களையும் அருள்வதோடு அதற்கப்பாலும் உள்ள முக்தியை அடையவும் வழி வகுக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
திரு விளக்கு தினமும் ஏற்றுவோம்; செல்வச் சிகரத்தில் ஏறுவோம் ; தெய்வீக உணர்வை அடைந்து உயர்வோம்!
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
இளம்பெருமானடிகள் , அதிராவடிகள், பட்டினத்தடிகள், நம்பி ஆண்டார் நம்பி.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
வெங்காயம் ரிகார்டும் 2014-ல் மாறிவிட்டது . ஒருவர் 18 பவுண்டுக்கு மேல் எடையுடைய வெங்காயத்தை உற்பத்தி செய்துள்ளார்.
British gardener grows Guinness World Record breaking onion
A GREEN-fingered Brit has planted himself in the Guinness World Records book with the largest ever onion.
Tony Glover has smashed the existing record for his whopping vegetable, which weighs an eye-watering 18lbs and 11oz and measures 32 inches around its widest part.
When recipes call for a large onion, on average they mean around 12 ounces. But Mr Glover’s whopper was almost 25 times that size.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000