இந்துக்களுக்கு ஏன் இவ்வளவு சட்ட புத்தகங்கள்? நாகரீக வளர்ச்சியா? பின்னடைவா? (Post No.3103)

manusmriti-the-hindu-law-book-economic-ideas

Written by London Swaminathan

 

Date: 30 August 2016

 

Time uploaded in London: 8-48 AM

 

Post No.3103

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

manu 2

பழங்கால இந்தியாவில், இந்துக்களுக்கு உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு, நிறைய சட்ட புத்தகங்கள் இருந்தன. அதில் ஒன்றான மனு ஸ்மிருதி பற்றி இன்றும் பலரும் ‘கதைத்து’க் கொண்டிருப்பதால் இதை கொஞ்சம் அலசுவோம்.

 

‘சுருதி’ என்றால் காதால் மட்டும் கேட்டவை; கேட்கப்பட வேண்டியவை; அதாவது வேதங்கள்; இதை சங்க கால தமிழ்ப் புலவர்கள் “எழுதாக் கிளவி” என்றும் “நான் மறை” என்றும் “எழுதாக் கற்பு” என்றும் அற்புதமாக வருணித்துப் போற்றியுள்ளனர். இதற்கு அடுத்த படியாக இந்துக்கள் போற்றுவது ‘ஸ்மிருதி’; அதாவது நினைவில் வைத்துக்கொள்ளப் படவேண்டியவை. இதில் ஒன்றுதான் மனு ஸ்மிருதி. உலகில் மிகப் பழைய சட்டப்புத்தகம். கிருத யுகத்தில் ஒரு லட்சம் பாடல்களாக இருந்தது. இப்பொழுது 12 அத்தியாயங்களில் 2685 பாடல்களாகச் சுருங்கிவிட்டது.

 

மனு ஸ்மிருதியை கம்பனும், தமிழ்க் கல்வெட்டுகளும் போற்றுகின்றன. ஆனால் இதில் உள்ள “சூத்திரர்கள்” பற்றிய குறிப்[பு காரணமாக அவ்வப்பொழுது அரசியல்வாதிகளும், வெளிநாட்டுக்காரர்களும் சர்ச்சையை எழுப்புவர். இதில் சூத்திரர்களுக்கு எதிரான கருத்துகள், சுங்க வம்ச பிராமண ஆட்சிக்காலத்தில் இடைச் செருகலாக வந்தவை என்பது பலருக்கும் தெரியாது. மேலும் கி.மு.2600-ல் ஹமுராபி எழுதிய சட்டக்குறிப்புகளுக்கும் முந்தியது இது என்பதும் பலருக்கும் தெரியாது. மேலும் மனு எழுதிய புத்தகத்தில் இது வட  இந்தியாவுக்கு மட்டும்தான் என்று எழுதியிருப்பதும் பலருக்கும் தெரியாது. மேலும் மனு எழுதியது கிருதயுகத்துக்கு மட்டும் தான் என்று வடமொழி ஸ்லோகம் கூறுவதும் பலருக்கும் தெரியாது. மேலும் பலவேறு மனுக்கள், உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதும் பலருக்கும் தெரியாது. மேலும் இப்போதைய மனுஸ்மிருதி அவரது மகன் பிருகுவின் பெயரில் இருப்பதும் பலருக்கும் தெரியாது.

 

இந்துக்களுக்குப் பல்லாயிரம் நூல்கள் இருப்பதால் அதில் ஒன்றைக்கூட இந்துக்கள் படிக்காமலேயே திண்ணையில் உட்கார்ந்து கதைப்பது வெளிநாட்டுக்காரனுக்குத் தெரியும் . ஆகையால அவ்வப்பொழுது எங்காவது ஒன்றை எடுத்து சர்ச்சையை  உண்டாக்குவான். அவர்களிடம் காசு வாங்கும் டெலிவிஷன் நிலலையங்கள் அதைப் பூதாகாரமாகப் பெரிதுபடுத்துவர். உடனே ஜவஹர்லால் நேரு பலகலைக் கழக மார்கசீய ஆசிரியர்கள் மாணவர்களை உசுப்பிவிடுவர்.

 

நிற்க.

cover manusmriti

மனு நீதி என்று பிற்கால நூல்கள் குறிப்பிடுவது நேர்மையான, நீதியான நடைமுறை என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு குறிப்பிட்ட நூலை அன்று. இதனால்தான் தேர்க்காலில் மகனை முறை செய்த மனு நீதிச்சோழனை இன்றும் புகழ்கிறோம்.

 

மனு பற்றிய ஸ்லோகம் இதோ:-

க்ருதே து மானவா: ப்ரோக்தாஸ் த்ரேதாயாம் யாக்ஞவல்க்யஜா:

த்வாபரே சங்கலிகிதா: கலௌ பராசரா: ஸ்ம்ருதா:

 

“மனுவினுடைய சட்ட நூல் கிருத யுகத்துக்கும் யாக்ஞவல்கியரின் நூல் த்ரேதா யுகத்துக்கும், சங்க, லிகிதர் எழுதிய நூல்கள் த்வாபர யுகத்துக்கும், பராசர நூல் கலி யுகத்துக்கும்  உரியவை.”

 

இதிலிருந்து இப்போதுள்ள மனு நூல், முழுக்க நம்பக்கூடியது அல்ல என்பது தெள்ளிதின் விளங்கும்.

 

நாரத ஸ்மிருதி என்னும் நூல் யுகந்தோறும் மனு ஸ்மிருதி எப்படிச் சுருங்கியது என்று சொன்ன விஷயத்தை முன்னொரு கட்டுரையில் தந்தேன். அதாவது “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆயிற்று” அல்லது, “வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்” என்ற கதை ஆயிற்று.

 

மனு ஸ்மிருதி தவிர வேறு என்ன சட்ட நூல்கள் உள்ளன:

 

நாரத ஸ்மிருதி

யாக்ஞவல்கியர் ஸ்மிருதி

 

பராசரர் ஸ்மிருதி

சங்க ஸ்மிருதி

லிகித ஸ்மிருதி

 

விஷ்ணு ஸ்மிருதி

இது தவிர

 

ஆபஸ்தம்ப சூத்ரம்

போதாயன தர்ம சூத்ரம்

கௌதம தர்ம சூத்ரம்

வசிஷ்ட தர்ம சூத்ரம்

 

இது தவிர பொருளாதார குற்றங்கள் பற்றியும் தண்டனைகள் பற்றியும் கூறும் அர்த்தசாத்திரம், ப்ருஹஸ்பதி நீதி, சுக்ர நீதி இப்படி எத்தனையோ நூல்கள்!!

yajna smrti

மனு சொல்கிறார்:

ச்ருதிஸ்து வேதோ விக்ஞேயோ தர்மசாஸ்த்ரம் து வை ஸ்ம்ருதி:

தே சர்வார்தேஷ்வமீமாஸ்யே தாப்யாம் தர்மோ ஹி நிர்பபௌ

–மனு 2-10

 

“வேதமே ச்ருதி எனப்படுகிறது தர்ம சாத்திரங்களே ஸ்மிருதி எனப்படும்; இவைகளை சந்தேகித்தல் ஆகாது. கவனமாக ஆராயப்பட வேண்டியவை; ஏனெனில் இவற்றிலிருந்துதான் தர்மம் என்பதே தோன்றியது.

 

என் கருத்து:

 

மேற்கூறிய விஷயங்களில் இருந்து நாம் அறிவது என்ன?

1.தர்மம் என்பது காலத்துக்கு காலம் வேறுபடும். பூகோள எல்லைக்கு எல்லை வேறுபடும்; சமூகத்துக்கு சமூகம் வேறுபடும் ஆகையால் புதிய நூல்கள் தேவைப்படும். அதனால்தான் இவ்வளவு நூல்கள்.

 

2.தர்மம் என்பது காலத்துக்கும், தேசத்துக்கும், சூழ்நிலலைக்கும் ஏற்பட மாறுபடும். மாற்றம் என்பது இயற்கை நியதி. எதுவும் மாறாமல் நிலையாக நிற்காது. இப்படி நூல்களை அவ்வப்பொழுது மாற்றி எழுதியதில் சில “சூத்திரர் எதிர்ப்புகள்” பிற்காலத்தில் நுழைக்கப்பட்டன. இப்படிச் சில குறிப்புகளை வைத்து அவை பிற்காலத்தவை என்று தவறாக தேதி குறிக்கவும் வாய்ப்புளது. ஆகையால் நம் நூல்களுக்கு வெளிநாட்டார் தரும் தேதியும் தவறு; விளக்கங்களும் தவறு. தனக்கு வேண்டாத விஷயங்களை இடைச் செருகல் என்று வெளிநாட்டார் ஒதுக்குவர். தனக்கு வேண்டிய ஸ்லோகங்களை மட்டும் பெரிதுபடுத்துவர்; அதுதான் நூலின் ஒட்டு மொத்தக் கருத்து என்று பொய்மை உரைப்பர்.அவர்களின் நரித் தந்திரத்தை நாம் உணர்தல் வேண்டும்

 

3.இந்தியாவின் 5000 ஆண்டு வரலாற்றில் தோன்றியது போல உலகில் வேறு எங்கும் சட்ட நூல்கள் தோன்றியது இல்லை. இது உலகில் இந்தியாதான் மிகவும் முன்னேறிய நாடு என்பதைக் காட்டும்.

 

4.சட்ட நூல்கள் அதிகம் இருப்பது குற்றங்கள் அதிகம் இருப்பதைக் காட்டாதா? என்று ஒரு கேள்வி எழும். “காட்டாது” என்பதற்கு யுவாங் சுவாங், பாஹியான் போன்ற யாத்ரீகர்களின் குறிப்பும், காளிதாசன் போன்ற காவியங்களும் சான்று பகரும்.

 

5.பிராமணர்கள், பெரியோரை வணங்கும்போது சொல்லும் “அபிவாதயே” என்று துவங்கும் வணக்க மந்திரத்தில், என்ன சட்டப் புத்தகதைப் பின்பற்றுபவன் என்றும் சொல்லி அவர்கள் காலில் விழுந்து வணங்குவர். இன்று வரை சட்டப் புத்தகத்தின் பெயரைச் சொல்லி வணங்கும் முறை வேறு எங்கும் இல்லை. இது நாகரீகத்தின் உச்ச கட்டத்தை நாம் எய்தியதைக் காட்டுகிறது. (எடுத்துக்காட்டாக நான் என் வீட்டிற்கு வரும் பெரியோரின் காலில் விழும்போது என் கோத்திரம் கௌசிக கோத்திரம், நான் யஜுர் வேதத்தை அத்யயனம் செய்பவன், நான் ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்தைப் பின்பற்றுபவன், எனது ரிஷிகள் யார் யார், என் பெயர் என்ன என்று சொல்லி வணங்குவேன். உலகில் சட்ட நூலின் பெயரைச் சொல்லி வணங்கும் சமூகம் வேறு எங்குளது?

31oeb-hindu_jpg_645950e

வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே — பாரதியார்

 

வாழ்க ச்ருதிகள்! வளர்க ஸ்மிருதிகள்!!

 

ஆசை பற்றி 30 பழமொழிகள்; செப்டம்பர் 2016 காலண்டர் (Post No.3101)

ganapathy on baby

Compiled by London Swaminathan

 

Date: 29 August 2016

 

Time uploaded in London: 5-10 AM

 

Post No.3101

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

செப்டம்பர் மாத (துன்முகி ஆவணி– புரட்டாசி) காலண்டர், 2016

 

திருவிழா நாட்கள்:– செப்டம்பர் 4-சாமவேத உபாகர்மா, 5- விநாயக சதுர்த்தி, 13- ஓணம், பக்ரீத், 17– மாளய பட்சம் ஆரம்பம், 30- மாளய அமாவாசை;

 

அமாவாசை – 1, 30

பௌர்ணமி – 16

ஏகாதசி – 12/13, 26/27

முகூர்த்த நாட்கள் – 4,5,8, 14, 15

chacolate ganapathy

செப்டம்பர் 1 வியாழக்கிழமை

 

ஆசை காரணமாக எதுவும் செய்யக்கூடாதுதான்; ஆனால் உலகில் ஆசை இல்லாத செயல் எதுவுமில்லை; வேதம்  கற்பதும், சடங்குகளைச் செய்வதும்    ஆசையினாலன்றோ! -மனு 2-2

செப்டம்பர் 2 வெள்ளிக்கிழமை

ஆசை இல்லமல் ஒரு மனிதனும் ஒரு செயலையும் செய்வதில்லை; ஒரு ஆசையின் தூண்டுதலினால், ஆசை நிறைவேறவே அவன் எதையும் செய்கிறான்-மனு 2-4

 

செப்டம்பர் 3 சனிக்கிழமை

யோகத்தை அடைந்தவன் சாந்தியை அடைகிறான்; யோகம் கைகூடாதவன், ஆசையின் தூண்டுதலினால், பயனில் பற்றுக்கொண்டு, கட்டப்பட்டுவிடுகிறான் – பகவத் கீதை 5-12

 

செப்டம்பர் 4 ஞாயிற்றுக் கிழமை

நிலத்தில் விளையும் களை, பயிர்களைப் பாதிக்கின்றன; மனதில் விளையும் ஆசைகள், மனிதனின் குணநலன்களைப் பாதிக்கின்றன.- தம்மபதம் 359

 

செப்டம்பர் 5 திங்கட்கிழமை

நான் எல்லாவற்றையும் வென்றுவிட்டேன்; எனக்கு எல்லாம் தெரியும்; என் வாழ்க்கை தூய்மையானது; நான் அனைத்தையும் துறந்தவன்; நான் ஆசையிலிருந்து விடுபட்டவன்; யாரை குரு என்று நான் அழைப்பேன்? யாருக்கு நான் உபதேசம் செய்வேன்? –தம்மபதம் 353; புத்தர் சொன்னது.

 

ganesh manal

செப்டம்பர் 6 செவ்வாய்க் கிழமை

ஆசைக்கு அடிமையானோர், ஆசை வெள்ளத்தில் சிக்குகின்றனர்; சிலந்தி தான் பின்னிய வலையிலேயே கட்டுப்பட்டிருப்பதைப்போல –தம்மபதம் 347

 

செப்டம்பர் 7 புதன் கிழமை

ஒரு மரத்தை வெட்டினாலும் அதன் வேர்கள் சேதமாகாவிட்டால் அது தழைத்தோங்கும்; அதுபோல ஆசை வேர்கள் அறுபடாதவரை, துன்பம் தழைத்தோங்கும்- தம்மபதம் 338

 

செப்டம்பர் 8 வியாழக்கிழமை

ஒருவனை ஆசைகள் சூழுமானால், அவன் “பிரானா” கொடி வளருவதைப்போல, துன்பங்களால் சூழப்படுவாந்- தம்மபதம் 335

செப்டம்பர் 9 வெள்ளிக்கிழமை

உங்களை நான் நேசிப்பதால் சொல்கிறேன்; ஆசை என்னும் பந்தக்கட்டுகளை அறுத்து எறியுங்கள்; உசிரா என்னும் வாசனைக் கிழங்கு எடுப்பதற்காக, “பிரானா” கொடியை வெட்டி எறிவது போல ஆசையை வெட்டுங்கள் – தம்மபதம் 337

செப்டம்பர் 10 சனிக்கிழமை

ஓசைபெற்று உயர்பாற்கடல் உற்று, ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் – மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ! (4)

பொருள்:– பெரிய புனிதமான திருப் பாற்கடலை ஒரு பூனை நக்கிக் குடிப்பது போல, குற்றமற்ற, வீரம் மிக்க ராமன் கதையை சொல்லவேண்டும் என்ற ஆசையால் நான் சொல்கிறேன்.

 

ganesh yellow gem

செப்டம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை

ஆசை அறுபது நாட்கள், மோகம் முப்பது நாள், தொண்ணூறு நாளும் போனால் துடைப்பக் கட்டை அடி– தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 12 திங்கட்கிழமை

ஆசை அவள் மேலே, ஆதரவு பாய் மேலே –தமிழ் பழமொழி

செப்டம்பர் 13 செவ்வாய்க் கிழமை

ஆசை இருக்கிறது தாசில் பண்ண, அமிசை (அதிருஷ்டம்) இருக்கிறது கழுதை மேய்க்க –தமிழ் பழமொழி

செப்டம்பர் 14 புதன் கிழமை

மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை – தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 15 வியாழக்கிழமை

ஆசை காட்டி மோசம் செய்கிறதா? –தமிழ் பழமொழி

 

ganesh rose

செப்டம்பர் 16 வெள்ளிக்கிழமை

ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு ஆணும் –தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 17 சனிக்கிழமை

ஆசை பெரிதோ, மலை பெரிதோ? –தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 18 ஞாயிற்றுக் கிழமை

ஆசைப்பட்டு மோசம் போகாதே — தமிழ் பழமொழி

செப்டம்பர் 19 திங்கட்கிழமை

ஆசைப்பட்ட பண்டம் ஊசிப் போயிற்று –தமிழ் பழமொழி

செப்டம்பர் 20 செவ்வாய்க் கிழமை

ஆசையாய் மச்சான் என்றாளாம்; “அடி சிறுக்கி” என்று அறைந்தானாம் –தமிழ் பழமொழி

 

ganesh procession

செப்டம்பர் 21 புதன் கிழமை

ஆசை வெட்கம் அறியாது — தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 22 வியாழக்கிழமை

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை –தமிழ் பழமொழி

 

செப்டம்பர் 23 வெள்ளிக்கிழமை

தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்றல்லார்

அவம்செய்வார் ஆசை உட்பட்டு – குறள் 266

 

செப்டம்பர் 24 சனிக்கிழமை

“ஆசா லோகஸ்ய ஜீவனம்”- ஆசையே உலகிலுள்ள ஜீவன்கள் வாழ மூல காரணம் — சம்ஸ்கிருத பழமொழி

செப்டம்பர் 25 ஞாயிற்றுக் கிழமை

“ஆசாவதிம் கோ கத:?” ஆசைக்கடலின் கரையைக் கண்டவன் எவன்?

 

chennai ganesh motorcycle

செப்டம்பர் 26 திங்கட்கிழமை

“ஆசா துக்கஸ்ய காரணம்” – ஆசையே துன்பத்துக்கு காரணம்

செப்டம்பர் 27 செவ்வாய்க் கிழமை

“ஆசாபரே ந தைர்யம்” — ஆசை வந்துவிட்டால்; பொறுமை பறந்தோடிப் போகும்.

 

செப்டம்பர் 28 புதன் கிழமை

“கால: க்ரீடதி, கச்சத் ஆயு:, தத் அபி ந முஞ்சத் ஆசாவாயு:” — மோஹமுத்கரம் ( காலம் நம்முடன் விளையாடுகிறது; ஆயுளோ தேய்கிறது; ஆனால் ஆசையின் பிடிப்பு மட்டும் தளர மறுக்கிறது

 

செப்டம்பர் 29 வியாழக்கிழமை

ஆசை அணுவானாலும் ஆளை விடாது- தமிழ் பழமொழி –

செப்டம்பர் 30 வெள்ளிக்கிழமை

ஆசை அண்டாதானால் அழுகையும் அண்டாது –தமிழ் பழமொழி

ganesh indonesia

 

–Subham–

 

கல்வி பற்றி இந்துக்களின் அபூர்வ கண்டுபிடிப்பு (Post No.3098)

girls school

Written by London Swaminathan

 

Date: 28 August 2016

 

Time uploaded in London: 7-09 AM

 

Post No.3098

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

children 1

லண்டனுக்கு வருகை தந்துள்ள மாயூரம் ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியாரை 45 நிமிடங்கள் பேட்டி கண்டேன்; இந்துக்களின் விடுமுறை பற்றி அவர் சொன்னதை நேற்று வெளியிட்டேன்; இன்று கல்வி என்பது பற்றி இந்துக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி அவர் கூறியதைப் பார்ப்போம்.

 

நீங்கள் நடத்தும் வேத பாடசாலையில் மாணவர்களுக்கு என்ன கற்பிக்கிறீர்கள், எத்தனை ஆண்டுகள் என்று கேட்டேன்?

வேதத்தில் தேவையான சில பகுதிகளும் ஆகமங்களும் கற்பிக்கப்படுகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு இது நீடிக்கும் பின்னர் ஒரு சான்றிதழ் வழங்குகிறோம். அது தமிழ்நாடு அரசு அங்கீக ரம் பெற்ற தகுதி. கோவில்களில் அர்ச்சகராகப் பணி செய்ய அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்றார்.

 

நீங்கள் ஆங்கிலம் முதலிய விஷயங்களை ப் பள்ளிக் கல்வி போல கூடவே சேர்த்துக் கற்றுத் தரலாமே; அவர்களின் பிற்காலத்துக்கு உதவுமே என்றேன்.

 

ஆஸ்திரேலியாவில் வசித்த சங்கரன் என்ற நல்ல உள்ளம் படைத்த ஒருவர், வேத பாடசாலைகளுக்குச் சென்று, பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தைக் கற்பித்து வருகிறார். அவர் கிராமங்களுக்கும் சென்று எல்லா வகுப்பினருக்கும் இப்படி ஆங்கிலம் கற்பிக்கிறார். தனது சொந்தக் காசை செலவழித்து அரிய பணியைச் செய்கிறார். அவர் எங்களுடைய வேத பாட சாலைக்கும் வந்து அடிப்படை ஆங்கிலம் கற்றுத் தருகிறார். எனக்கும் இதன் தேவை புரிகிறது. இன்று உலகெங்கிலும் உள்ள இந்து ஆலயங்களுக்கு அர்ச்சகர்கள்  தேவைப்படுகிறார்கள். ஆகவே அவர்களுக்குப் பொது அறிவும் தேவைப்படுகிறது ; அதையும் நாங்கள் சொல்லித் தருகிறோம் என்றார்.

children 2

எனக்கு அப்போதும் திருப்தி ஏற்படவில்லை. நல்ல கல்வித் தகுதி இல்லாவிடில் அவர்கள் வருங்கால உலகில் வாழ்வது கடினமே; எப்படி முழு அறிவு பெற முடியும்? என்றேன்.

 

“வேதக் கல்வி என்பது வெறும் மனப்பாடம் செய்வது மட்டுமல்ல. வகுப்பு முடிந்தவுடன் அவர்களுக்குள், கற்றுத தந்த விஷயங்களை விவாதிக்கும் வகுப்பும் உண்டு” என்றார்.

(அதாவது லண்டனில் எனது பிள்ளைகள் பள்ளி வகுப்பில் நடந்தது போல அந்தக் காலத்தில் இருந்தே, இந்துக்கள் கல்வி கற்கும் இடங்களில் ரிவிஷன், விவாதம், கலந்துரையாடல் இருப்பது எனக்கு புதிய, மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது).

அவர் மேலும் சொன்னார்:

கல்வி என்பது ஆசிரியர் மட்டும் கற்றுத் தருவது அல்ல;

 

 

आचार्यात् पादमादत्ते पादं शिष्यः स्वमेधया ।
सब्रह्मचारिभ्यः पादं पादं कालक्रमेण च ॥

 

 

ஆசார்யாத் பாதம் ஆதத்தே பாதம் சிஷ்ய: ஸ்வமேதயா

சப்ரம்மசாரிப்ய: பாதம் பாதம் காலக்ரமேன ச

என்று அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

பொருள்:

 

ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது கால்வாசி (25 சதவிகிதம்) ; மாணவன் சுயபுத்தியால் கற்றுக்கொள்வது இன்னொரு கால் வாசி; சக மாணவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது கால் வாசி; காலம் செல்லச் செல்ல கற்றுக் கொள்வது இன்னொரு கால் பகுதி.

 

என்று  சுவாமிநாத சிவாச்சாரியார்  சொன்னார்.

என்ன அற்புதமான ஸ்லோகம் என்று சொல்லி வியந்தேன்.

boys play 1

என் கருத்து:

 

நேற்று, மனனம் செய்தல் (Memory Techniques), அதைத் திருப்பிச் சொல்லி நினைவுகூறுதல் (Revision), மாதத்துக்கு குறைந்த எட்டு நாள் விடுமுறை விடுதல் (8 Days Holiday a month) ஆகியன பற்றி எழுதினேன். இன்று இந்த ஸ்லோகத்தை மீண்டும் மீண்டும் படியுங்கள். என்ன அற்புதமான ஒரு கல்விக் கொள்கை (Concept of Teaching)  நம் முன் னோர்களிடம் இருந்தது என்பதை அறிய முடியும்.

 

ஒரே ஆசிரியர் ஒரே மாதிரி எல்லோருக்கும் கற்று த் தருகிறார். அதில் ஒருவர்தான் தலை சிறந்த கல்விமானாகவோ, விஞ்ஞானியாகவோ, நாட்டின் தலைவராகவோ வருகிறார். ஏன்? ஆசிரியர் சொல்லிக் கொடுப்பது 25 சதவிகிதமே; மாணவன் சுய புத்தியைப் பயன்படுத்தி அதைத் துருவித் துருவி ஆரா ய்ந்து மேலும் கற்க வேண்டும்; தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அகந்தையில் மனக் கோட்டை கட்டாமல் மற்ற மாணவர்களுடன் கலந்துரையாடி, மாற்றுக் கருத்துகளைக் கிரஹிக்க வேண்டும். இறுதியில் மூளை வளர்ச்சியினாலும், அனுபவ அறிவாலும் கடைசி 25 சதம் அறிவு வந்து 100 சதவிகித அறிவு பெற்றவனாக திகழ முடியும்.

 

உலகில் பெண் கல்விக்கே முதலில் சிலபஸ் (Syllabus) போட்டுக் கொடுத்தது இந்துக்கள்தான் என்று 64 கலைகள் பற்றிய கட்டுரையில் காட்டினேன். அது வாத்ஸ்யாயன மஹரிஷி எழுதிய காம சூத்திரத்தில் உள்ள பட்டியல். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் 64 கலைகளில் வல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நாடு இது.!!

children 3

வளர்க கல்வி: மிளிர்க பாரத மணித் திரு நாடு!!

 

 

தொல்காப்பியத்தில் கார்த்திகைத் திருவிழா (Post No.3089)

kartikai annamali

Written by London Swaminathan

 

Date: 24  August 2016

 

Time uploaded in London: 19-50

 

Post No.3089

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கார்த்திகை பௌர்ணமி அன்று நடைபெறும் கார்த்திகைத் திருநாள் கண்கொள்ளாக் காட்சியாகும். மூன்று நாட்களுக்கு ஜாதி, இன வேறு பாடின்றி அனைவர் வீட்டு வாசலிலும் தண்ணீர் தெளித்து சுத்தப் படுத்தி, கோலமிட்டு, அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைப்பர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் ஒரே விளக்கொளிதான்!

 

கோவில்களிலும் இது போலவே ஆயிரக் கணக் கான விளக்குகள் ஒளிரும். இதற்காகவே அன்று இலுப்பை எண்ணை   கொண்டு விளக்கு ஏற்றுவர்.

அதைப் பார்த்தவுடன் தீப மங்கள ஜோதி நமோ நம: — என்னும் அருணகிரியின் திருவாக்கு நினைவுக்கு வரும் ( நாதவிந்துகலாதீ நமோ நம: என்ற திருப்புகழ் ).

 

திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபம், பரணி தீபம் என்பன மிகவும் பிரசித்தமானவை. லட்சக் கணக்காணோரைக் கவர்ந்திழுக்கும் திருவிழாவாகும்.

karthikai deepam

தமிழ்நாட்டின் எல்லாக் கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்துல் நிகழ்ச்சியும் அன்று இரவில் நடைபெறும். ஐப்பசி கார்த்திகை மாதங்களில் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளி முதலிய பூச்சிகள் பெருகி இருக்கும் என்பதால் இப்படிச் சொக்கப்பனை கொளுத்துவர். அதில் பூச்சிகள் விழுந்து இறந்துவிடும். வீடுகளிலும் பழைய பொருட்களை வெளியே போட்டு சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இருந்திருக்க வேண்டும்.

 

கார்த்திகை பற்றி சங்க இலக்கிய நூல்களில் இடம்பெற்ற குறிப்புகளைப் பலரும் அறிவர். ஆனால் தொல்காப்பியத்தில் இது பற்றிய குறிப்பு இருப்பது பலருக்கும் தெரிந்திராது.

 

தொல்காப்பியத்தில்

 

வேலி நோக்கிய விளக்கு நிலையும்–

தொல்.பொருள்.புறத்திணை இயல்-35

 

வேலி நோக்கிய விளக்கு நிலையும்– என்ற சூத்திர வரிகளுக்குப் பொருள் கூறுகையில் “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு” என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.

kartik deep

தொல் காப்பியத்தில் வரும் இந்திரன், வருணன், அக்னி, துர்கை முதலிய குறிப்புகளுடன் இதையும் வைத்துப் பார்க்கையில் தொல்காப்பிய உரை சரியே என்று தெளிவுபெறலாம்.

அகநானூறு,  நற்றிணை போன்ற அகத்துறை நூல்களில் கூட  கார்த்திகை விழா பற்றிய குறிப்புகள் இருப்பது, இதன் புகழைக் காட்டும்.

 

தீபாவளிக்கு இப்பொழுது  எப்படி எல்லோரும் குடும்பத்தினரைப் பார்க்கப் போய்விடுகிறார்களோ, அது போல அந்தக் காலத்தில் கார்த்திகை திருவிழாவுக்கு எல்லோரும் சொந்த ஊருக்குப் போய்விடுவர்.

 

தொழில் விஷயமாக வெளியூர் என்ற கணவன், கார்த்திகை விழாவுக்கு வரட்டும் என்று மனைவி சொல்லும் பாடல் அகநானூற்றில் (141) இருக்கிறது

 

குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து

அறுமீன் சேரும் அகல் இருநடுநாள்

அறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி (அகம்.141)

 

இதே போல அகம்.185, 11, நற்றிணை 202 ஆகிய பாடல்களிலும் கார்த்திகை விழா சிறப்பிக்கப் படுகிறது.

 

சிலர் சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படும் ஆறு கோடுகள் எல்லாம் முருகனை வளர்த்த ஆறு கார்த்திகைப் பெண்கள் என்றும் நம்புவர்.

 

வேதத்திலும், குமார சம்பவம் முதலிய நூல்களிலும் கார்த்திகைப் பெண்களும், அவர்களைக் குறிக்கும் விண்மீன்களும் இடம் பெற்றிருகின்றன. ஆக வேத காலக் கார்த்திகை இன்று வரை வழிபடப் படுகிறது.

 

கார்த்திகை பௌர்ணமி அன்று இந்த ஆறு நட்சத்திரங்களும் நிலவுடன் நெருங்கி நிற்கும்.

 

வானவியல் கணக்குப்படி கார்த்திகை நட்சத்திரங்கள் ஏழு ஆகும். நாமும் அதை முருகன்+ ஆறு கார்த்திகைப் பெண்கள் என்று சொன்னாலும் தவறில்லை.

KARTIKAI DINDIGUL

முத்தொள்ளாயிரம் என்னும் நூலில்.

குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம்

புறப்படா பூந்தார் வழுதி — புறப்படின்

ஆபுகும் மாலை அணிமலையில் தீயே போல்

நாடறி கௌவை தரும்

 

 

என்றும்

சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர்

 

“குன்றிற் கார்த்திகை விளக்கீட்டென்ன”

என்றும்

 

பொய்கையார், கார் நாற்பதில்

“கார்த்திகைச் சாற்றிற் கழி விளக்கைப் போன்றனவே”

என்றும் கார்த்திகை தீபத்தைப் போற்றுவர்.

 

kartikai1

தொல்காப்பியம்  தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—

 

தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2, 24-12-2014

தொல்காப்பிய அதிசயங்கள், 14-11-2014

தொல்காப்பியர் காலம் தவறு-1, 9 செப்டம்பர் 2012

தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி 2, தேதி-10 செப்டம்பர் 2012

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு, 13 செப்டம்பர் 2012

தொல்காப்பியர் காலம் தவறு–பகுதி3, 12 செப்டம்பர் 2012

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி!, 31 மார்ச் 2014

தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!!, 9 ஏப்ரல் 2015

தொல்காப்பியர் காலம் தவறு—பகுதி1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)

தொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013

தொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013

மூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா? (25-2-2012)

தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் மங்கலச் சொற்கள் (Post No.2826), 20-5-2016

தீபாவளிக் கட்டுரை: தீப மங்கள ஜோதீ நமோ நம! , 10 நவம்பர், 2015

kartikai, sai babu.jpg

No Brahmins ! No Tamil ! (posted on 12/1/2012)

Tolkappian- A Genius ( posted on 12/9/2012)

Indra in the Oldest Tamil Book

Varuna In the Oldest Tamil Book

Did TOLKAPPIYAR copy from Sanskrit Books?, 10-9-2012

WHO WAS TOLKAPPIYAR?,9-9-2012

 

–Subham–

 

 

தமிழ் மன்னர்கள் செய்த யாகங்கள்! (Post No.3085)

radha krishna in jwala

Radha and Krishna appear in Yaga Fire

Compiled by London Swaminathan

 

Date: 23  August 2016

 

Time uploaded in London: 13-48

 

Post No.3085

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

பாரதீய கலாசாரம், இமயம் முதல் குமரி வரை ஒன்றுதான் என்பதற்கு சங்கத் தமிழ் இலக்கியமும், பிற்கால இலக்கியங்களும், கல்வெட்டுகளும் பட்டயங்களும் சான்று பகர்கின்றன.

 

தமிழ் மன்னர்கள் செய்த யாக யக்ஞங்கள் பற்றி இரண்டு கட்டுரைகளில் சொன்னேன். ஒன்று கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் பற்ற்றியது. மற்றொன்று சோழன் பெருநற்கிள்ளியின் ராஜசூய யக்ஞம் பற்றியது.

 

காஞ்சிப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், தமிழ்நாடு தொல்பொருட் துறையின் முன்னாள் டைரக்டருமான டாக்டர் இரா. நாகசாமி எழுதிய ஒரு நூலில் தமிழ்நாட்டு வேந்தர்கள் செய்த யாக யக்ஞங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

எத்தனை மன்னர்கள் யாகம் அல்லது வேள்விகளில் நம்பிக்கை வைத்து , ஆர்வத்தோடு அவைகளைச் செய்தார்கள் என்பதைப் பட்டியலைப் படித்தால் புரியும்.

 

நூலின் பெயர்:- யாவரும் கேளிர்

ஆசிரியர் – இரா.நாகசாமி

வாசகர் வட்டம், சென்னை-17

1973

swathi homam, narasimhar, injimedu

Narasimha appear in Swathi Homam

 

“அரசர்கள் இருவகை வேள்வி வேட்டனர். அறக்கள வேள்வி என்றும் மறக்கள வேள்வி என்றும் அவை அழைக்கப்பட்டன. போரில் வெற்றி கண்ட காலத்து துணித்த மாற்றானின் தலையை அடுப்பாக அமைத்து, குருதியை உலையகவும், துண்டிக்கப்பட்ட கரத்தை துடுப்பாகவும் கொண்டு போர்க்களத்தில் வேள்வி செய்வது ஒரு மரபு. இதையே மறக்கள வேள்வி என்பர். பாண்டியன் தலையங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் களவேள்வி வேட்டான் என்று மாங்குடிக்கிழார் கூறுவார். இதே நிகழ்ச்சியை மதுரைக் காஞ்சியில்  மாங்குடி மருதனாரும் கூறியுள்ளார்.

 

 

தேவர்களை வேண்டி தீயில் வேட்பது அறக்கள வேள்வி.

நான்மறையாளரைச் சுற்றமாகக் கொண்டு, அடிபணிந்த அர்சர் ஏவல் செய்ய, தலையங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அறக்கள வேள்வி செய்தான் என மாங்குடிக்கிழார் கூறுவார் (புறம்.29)

 

பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி பல யாகங்களைச் செய்ததால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப்பெயர் பெற்றான் (புறம்.15)

 

இதுபோன்று சங்ககாலப் பேரரசர்கள் அனைவரும் வேள்வி வேட்டனர். கரிகால் பெருவலத்தான் பருந்து வடிவில் செய்யப்பட்ட வேள்விக் குண்டத்தில் யூபத்தை நாட்டி வேத வேள்வித் தொழிலாகிய யாகத்தை முடித்தான். அப்போது குற்றமற்ற அவாது குலமகளிர்கள் அவனருகே நின்றனர் (புறம்.224)

 

தூவியற் கொள்கை துகளறு மகலிரொடு

பருதியுருவிற் பல்படைப் புரிசை

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

வேத வேள்வித் தொழில் முடித்த தூஉம் (புறம்.224)

 

இவனது குலத்தில் வந்த பெருநற்கிள்ளி, இராஜசூயம் என்னும் அரசர்க்குரிய சிறந்த வேள்வி வேட்டு, இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி எனப் பெயர் பெற்றான்.

பல சேர மன்னர்கள் வேள்வி வேட்டனர்

charles-yaga

Prince Charles in Rishikesh

பல்யானை செல்கெழுகுட்டுவன் கௌதமனாருக்காக பார்ப்பாரில் பெரியோரைக் கேட்டு பத்து பெருவேள்வி வேட்பித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 3)

 

பெருஞ்சேரல் இரும்பொறை வேள்விக்குரிய விதிகளைக் கேட்டு வேள்வி வேட்பதற்கு முன், தான் இருக்க விரதங்களை முறைப்படி முடித்து வேள்வி முடித்தான். (பதிற்றுப்பத்து, பதிகம் 74-1-20

 

 

இளஞ்சேரல் இரும்பொறை முறைப்படி சாந்தி வேட்டான். சேரமான் செங்குட்டுவன் வஞ்சிமாநகரின் குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த இடத்தில் வேள்விச்சாலை அமைத்தான். வேள்விமாக்களை கேட்டு  உரிய முறையில் ராஜசூயம் வேட்டான. அதை ஒட்டி சிறையிருந்த எல்லாக் கைதிகளையும் விடுதலை செய்தான். வந்திருந்த மன்னருக்கேற்ப வரிசை முடித்தான்

 

பேரிசை வஞ்சிமூதூர்ப்புறத்து தாழ்நீர் வேலி தண் மலர்ப்பூம் பொழில் வேள்விக்கான மாளிகை கட்டி நன் பெரு வேள்வி முடித்த பின் — என சிலம்பு (28–196-199) கூறுகிறது.

அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர்கள் “அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்” சிறப்பெய்தினர் (புறம்.99) வேளிர்கள் வேள்விக் குண்டத்தில் தோன்றியவர் என்ற வரலாறு உண்டு. சங்க காலத்தில் அரசர் வேள்வி வேட்டலை மிகச் சிறப்பாகக் கருதினர்.

rudra-baba

Sathya Sai baba in Adhi Rudra Yaga

சங்க காலத்திற்குப்பின் வந்த பல்லவரும் பாண்டியரும் வேள்வியில் ஈடுபாடு நிறைந்து விளங்கினர். ஒரு பாண்டிய மன்னன் காலையிலும் மாலையிலும் அக்னியில் ஹோமம் செய்தான் என்று தளவாய்புரம் செப்பேடு கூறுகிறது.

 

பாண்டியர்களில் அரிகேசரி மாறவர்மன் ஹிரண்யகருப்பம், துலாபாரம், பகு சுவர்ணம் என்பவற்றைச் செய்தான்

 

தேர்மாறன் என்னும் பாண்டியனும் எண்ணிறைந்த கோசஹஸ்ரமும், ஹிரண்யகருப்பமும், துலாபாரமும்,  செய்தான் என்று வேள்விக்குடி செப்பேடுகள் குறிக்கின்றன.

மாறவர்மன் இராஜசிம்மன் துலாபாரம் செய்தான் என்றும் சின்னமனூர் செப்பேடு கூறுகிறது.

 

பல்லவர்கள் முறைப்படி பல வேள்விகளை வேட்டவர்கள் என்று அவர்களது கல்வெட்டுகள் கூறுகின்றன. சிவ ஸ்கந்தவர்மன் என்பான் அக்னிஷ்டோமம், அச்வமேதம், வாஜபேயம் ஆகிய வேள்விகளை வேட்டான்.

 

குமார விஷ்ணு அச்வமேத யாகம் செய்தான். சோமயாகம்

செய்யாதவரே பல்லவ குலத்தில் கிடையாது என ஒரு செப்பேடு குறிக்கிறது. அவர்கள் பல வேள்விகளை வேட்டதால்  பிரும்மண்யம் நிறைந்தவராய் இருந்தனர். அதனால் பரம பிரும்மண்யர் என்று அழைக்கப்பட்டனர்.

 

சோழர்களில் முதல் ராஜாதி ராஜன் அச்வமேத யாகம் செய்தான் என அவன் கல்வெட்டுகள் கூறுகின்றன. விஜயாலயன் வழிவந்தவர்களில் இராஜாதி ராஜன் ஒருவனே அச்வமேத யாகம் செய்தவன்”.

 

–சுபம்–

 

 

மனைவி ஒரு மருந்து- மஹாபாரதப் பொன்மொழி (Post No.3077)

IMG_4925.JPG

Compiled by London swaminathan

Date: 20th August 2016

Time uploaded in London:  14-23

Post No.3077

 

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

மஹா பாரதத்தில் 18 பர்வங்கள் உண்டு. அதில் மூன்றாவதாக அமைந்த வனபர்வத்தின் மற்றொரு பெயர் ஆரண்ய பர்வம். இதை வால்மீகி ராமாயணத்திலுள்ள ஆரண்ய காண்டத்துடன் குழம்பிக்கொள்ளக்கூடாது.

 

வனபர்வம் எனப்படும் ஆரண்ய பர்வம் பஞ்சபாண்டவர்களி ன் 12 ஆண் டு கானுறை வாழ்வைச் சித்தரிக்கும் பர்வம். அதற்குள் 21 உட்பிரிவுகள் இருக்கின்றன. அதில் மனைவி பற்றிய ஒரு பாடல் (ஸ்லோகம்) மனைவியை “சர்வ துக்க நிவாரணி” என்கிறது.

IMG_4919

நாம் சர்வ ரோக நிவாரணி – என்று மருந்துகளுக்குக் கொடுக்கும் விளம்பர  ங்களைப் படித்திருக்கிறோம். சர்வ துக்க நிவாரணி என்பதை பொதுவாக கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால் மஹா பாரதமோ மனைவியை கைகண்ட மருந்து என்றும், எல்லா துக்கங்களையும் போக்குபவள் என்றும் சித்தரிக்கிறது.

 

இதோ அந்த ஸ்லோகம்:–

 

ந ச பார்யா சமம்  கிஞ்சித் வித்யதே பிஷஜாம் மதம்

ஔஷதம் சர்வ துக்கேஷு சத்யமேதத் ப்ரவீமி தே

–ஆரண்ய பர்வம்

 

பொருள்:-

“மனைவிக்குச் சமமான ஒன்றுமே இல்லை; எல்லா துக்கங்களுக்கும் மருந்தாக இருப்பவள் மனைவி என்பவளே. உண்மையைச் சொல்லுகிறேன்.”

 

 

இன்னொரு பாடல் அம்மாதான் நன்கு சாப்பாடு போடுபவள், மனைவிதான் நன்கு சந்தோஷப்படுத்துபவள் என்று பாராட்டுகிறது.

 

உடலைப் போஷிக்கும் விஷயங்கள்

IMG_4927

மாத்ரா சமோ நாஸ்தி சரீர போஷணே

பார்யா சமோ நாஸ்தி சரீர தோஷணே

வித்யா சமோ நாஸ்தி சரீர பூஷணே

சிந்தா சமோ நாஸ்தி சரீர சோஷணே

 

உடலை வளர்க்க உதவுவதில் அம்மாவுக்குச் சமமானவள் யாரும் இல்லை;

நம்மை மகிழ்விப்பதில் (சந்தோஷப்படுத்துவதில்) மனைவிக்குச் சமமானவள் எவரும் இல்லை;

ஒருவரை அலங்கரிக்கச் செய்யும் விஷயத்தில் கல்விக்குச் சமமான எதுவும் இல்லை

உடலை வாடச் செய்யும் விஷயத்தில் துக்கத்துக்குச் சமமான எதுவும்  இல்லை

IMG_3212

–Subham–

 

 

எதிரியைக் கொல்லும் தமிழ் மொழி!(Post No.3074)

nanneri-muzhamum-uraiyum-26608

Written by London swaminathan

Date: 19th August 2016

Time uploaded in London: 18-34

Post No.3074

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

சிவ பெருமானின் உடுக்கை ஒலியிலிருந்து தோன்றிய சம்ஸ்கிருத மொழிக்கும் தமிழ் மொழிக்கும் எதிரிகளையும் கொல்லும் சக்தி உண்டு. உலகில் எத்தனையோ வகையான ஆயுதங்கள் உண்டு. ஆனால் மொழி ஆயுதம் என்பதை இந்தியாவில் மட்டுமே காணமுடியும்.

 

உண்மைக் கவிஞர்கள் கோபப்பட்டால் தங்கள் எதிரிகள் மீது சரம கவி பாடுவர். இதைப் பாடிய மாத்திரத்தில் எதிரி சுருண்டு விழுந்து இறந்து விடுவார். சிலர், பரிதாபப்பட்டு மீண்டும் அவரை உயிர்த்தெழவும் கவிதை பாடுவர். உடனே அவர் உயிர் பெற்று எழுவார். இது சாபங்கள் என்ற வகையில் வராது.

 

சாபங்களில் கவிதை பாடும் பணி இல்லை. சொற்களோ வாக்கியங்களோதான் இருக்கும்.சாபங்களில் இருந்து விமோசனம் பெற  நீண்ட காலம் ஆகும். ஆனால் சரம கவிகளிலிருந்து விடுதலை பெறுவது உடனே நடக்கும்.

இந்தியாவில் சரம கவி சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.

காளிதாசன் — போஜராஜன் மோதல், நக்கீரர் — குயக்கோடன் மோதல், நந்திவர்மன் சம்பவம் எனப் பல உண்டு

 

சிவப் பிரகாச சுவாமிகள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் காண்போம்.

IMG_5308

சிவப் பிரகாசர் ஒருநாள் மணிமுத்தா நதியில் குளித்துவிட்டு வருகையில் மாஞ்சோலை வழியாக வந்தார். சோலைக்கு வெளியே இருந்த ஒரு மாமபழத்தைப் பார்த்தவுடன் இதை சிவ பெருமானுக்கு நைவேத்யம் செய்வோம் என்று எடுத்தார். அதைப் பார்த்த காவற்காரன், இவர் மாம்பழத்தைத் திருடுபவர் என்று நினைத்து அவர் ஆடையைப் பிடித்து இழுத்து வந்தான். மனம் வருந்திய சிவப் பிரகாசர் அவனைத் தண்டிக்க எண்ணி,

அடுத்து வரும் தொண் டனுக்கா வந்தகனைத் தாளா

லடர்த்ததுவுஞ் சத்தியமேயானால் – லெடுத்ததொரு

மாங்கனிக்கா வென்னை மடிபிடித்த மாபாவி

சாங்கனிக்கா தித்தன் வரத்தான்

என்னும் வெண்பாவைப் பாடிச் சூரியன் உதித்தவுடன் உயிர் துறக்கும்படி செய்தார்.

பொருள்:

ஒரு தொண்டனுக்காக, சிவ பெருமான், யமனைக் காலால் உதைத்த து உண்மையானால், சிவத் தொண்டனாகிய என் ஆடையை பிடித்திழுத்து வருந்தச் செய்த இந்த மஹா பாவி,  ஆதித்தன் உதித்த மாத்திரத்தில் இறந்தொழியட்டும்.”

 

அவன் நற்கதி அடையட்டும் என்பதுவே அவருடைய உள்நோக்கம் ஆகும்.

சிவப் பிரகாசர் ஒருநாள், தன்னுடைய ஞானகுருவுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ஆகாயத்தில் சந்திரன் உதித்தது. அதன் அழகைக்கண்டு களித்து கவி மழை பொழிந்தார்:–

 

கடன் முரச மார்பக் கதிர் கயிற்றாலேறி

யடைமதி விண்கழை நின்றாடக் – கொடை மருவு

மெங்கள் சிவஞான வேந்த லிறைத்தமணி

தங்கியவே டாரகை கடாம்

 

இவர் ஒரு நாள் கடற்கரையில் உட்கார்ந்திருந்தபோது கவி பாடத்தோன்றியது. அவர் அப்பொழுது பாடிய 40 பாடல்களும்  நன்னெறி என்னும் நூலில் உள்ளன.

இவர் பாடிய நூல்களுள் மிகவும் சிறப்பானது நன்னெறி ஆகும். அதன் அழகை வேறு ஒரு கட்டுரையில் காண்போம்.

சிவப் பிரகாசர் 35 நூல்களைப் பாடியுள்ளார்.

 

–Subham–

 

உங்களுக்கு 10, 9, 8, 7, 6 5, 4, 3, 2, 1 தெரியுமா? (Post No.3044)

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

Written by london swaminathan

Date: 8th    August 2016

Post No. 3044

Time uploaded in London :– 8-32 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

இந்து மதத்திலும் தமிழ்,ச ம்ஸ்கிருத இலக்கியத்திலும் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.

எங்கே உங்கள் சமய, இலக்கியஅறிவைச் சோதியுங்கள் பார்க்கலாம்!

 

10.”பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்” என்பதை பலரும் சொல்லக் கேட்டிருப்பீர்கள். அது என்ன பத்து?

 

9.நவரத்தின மோதிரம் அணிந்தால் நல்லது என சாத்திரங்கள் கூறும். அந்த 9 ரத்தினங்கள் எவை?

gem ring

  1. அஷ்டலெட்சுமி கோவில் பற்றிக் கேட்டிருப்பீர்கள். அந்த எட்டு (அஷ்ட) லெட்சுமிக்கள் யார் யார்?

 

7.ஏழு நகரங்களில் இறந்துபோனால் மோட்சம் உறுதி என்ற நம்பிக்கை இந்துக்களிடையே நெடுங்காலமாக இருந்துவருகிறது? அந்த 7 மோட்ச புரீக்கள் எவை?

 

  1. அறுசுவை உணவைச் சாப்பிட்டிருப்பீர்கள். அவை என்ன என்ன சுவை?

 

5.பஞ்சாப் என்பது ஐந்து நதிகள் பாயும் பிரதேசம் எனப்பெயர் கொண்ட மாநிலம். அவை எவை?

 

4.சதுர்வித உபாயங்களால் எதையும் சாதிக்கலாம் என்பார்கள். அந்த 4 வழிமுறைகள் என்ன?

 

3.திரிகடுகம் என்ற தமிழ் நூல் மூன்று மூலிகைச் சரக்குகளின் பெயரில் எழுந்தது. அந்த மூன்று மூலிகைகள் என்ன என்ன?

 

2.மீமாம்ச சாத்திரத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. அவை யாவை?

 

1.ஏகாக்ஷரீ மந்த்ரம் (ஓரெழுத்து மந்திரம்) என்பது என்ன?

ashta lakshmi

விடைகள்:–

  1. பசி வந்திடப் பத்தும் பறந்து போம்:

மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், உயர்வு, தாளாண்மை/முயற்சி, காமம்

 

9.நவரத்தினங்கள்: வைரம், வைடூர்யம், மாணிக்கம், மரகதம், நீலம், முத்து, பவளம், புஷ்பராகம், கோமேதகம்

 

8.அஷ்ட லெட்சுமி: தன (செல்வம்), தான்ய, தைர்ய (துணிவு), வீர,  விஜய(வெற்றி), வித்யா (கல்வி) ,சந்தான (பிள்ளைப்பேறு), கஜ (யானை)லக்ஷ்மி

 

7.முக்திதரும் ஏழு தலங்கள்:- அயோத்தி, மதுரா, மாயா(ஹரித்வார்), காசி(வாரணாசி), காஞ்சி, அவந்திகா(உஜ்ஜைனி),துவாரகா

6.அறு சுவை:- இனிப்பு, கார்ப்பு (காரம்), துவர்ப்பு, கசப்பு, கைப்பு(உப்பு), புளிப்பு

5.ஜீலம், சீனாப், ராவி, பியாஸ்(வியாச), சட்லெஜ் நதிகள்

  1. சாம (சமாதானம்), தான (பொருள் கொடுத்தல்), பேத (பிரித்தாளும் சூழ்ச்சி), தண்ட (தண்டித்தல் அல்லது தாக்கி அழித்தல்)

 

3.திரிகடுகம்:- சுக்கு மிளகு, திப்பிலி

 

3.திரிகடுகம்:- சுக்கு மிளகு, திப்பிலி

 

2.பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் (அத்வைதம்)

 

1.ஓரெழுத்துமந்திரம்:– ஓம்

 sapta-puri

Earlier Quiz posted by me:

 
(1&2) 27 Star Quiz (In English and Tamil)
(3&4)Hindu Picture Quiz-1 (In English and Tamil)
5.தமிழ் தெரியுமா? Tamil Quiz—1
6.தமிழ் தெரியுமா? Tamil Quiz—2
7.Tamil Quiz—3 தமிழ் தெரியுமா?
8.Hindu Tamil Quiz (in Tamil)
9.Hindu Tamil Quiz (in Tamil)-2
10.Hindu Tamil Quiz (in Tamil)-3
11.Hindu Tamil Quiz (in Tamil)-4
12.Hindu Quiz–1
13.Hindu Quiz–2
14.Hindu Quiz–3
15.Hindu Quiz–4
16.Hindu Quiz on Holy Forests
17.காடுகள் பற்றி இந்து மதம்: கேள்வி பதில்
18.ராமாயண வினா விடை
19.பிள்ளையார் பற்றி வினா விடை
(20&21)Quiz on Saivaite Saints (Both Tamil and English)
22.சைவம் பற்றி வினா விடை
23 & 24) Quiz on Hindu Hymns in English and Tamil

  1. Are you familiar with Number Four ?( (5 February 2014)
  2. நீங்கள் நாலும் தெரிந்தவரா? (5 February 2014)
  3. முருகப் பெருமானும் எண்களும்: ஒரு ‘க்விஸ்’ posted on 30 April 2016
28. நீங்கள் தமிழ்ப் புலியா? தமிழ்க் கிளியா? தமிழ் எலியா? ,30 April 2015

29.Hindu Flower Quiz (15 August 2014)

  1. பூ………….. இவ்வளவுதானா?, posted on 15 August 2014

 

31.இந்திரனைத் தெரியுமா உங்களுக்கு? 16 July 2014

32.Do you know Indra?,16 July 2014

  1. புண்ணிய தீர்த்தங்கள் கேள்வி-பதில் (க்விஸ்), posted on 6 May 2014

34.உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா? 27-3-14
35.Interesting Quiz on Logos (30 July 2012)
36. Answers for Interesting Quiz on Logos (31 July 2012)

 

 

 

 

கறுப்புப் பணம், வெள்ளைப் பணம், கறைபடிந்த பணம்! (Post No.3040)

rupee6

Written by london swaminathan

Date: 6th    August 2016

Post No. 3040

Time uploaded in London :– 13-18

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சம்ஸ்கிருதம் இப்பொழுது வழங்கும் மொழிகளிலேயே மிகவும் பழமையானது; மிகவும் வளமானது. இதற்கு அருகில் வரக்கூடிய மொழிகள் இன்றைய உலகில் இல்லை. சம்ஸ்கிருத மொழியில் இல்லாத விஷயமே இல்லை. கிரேக்க மொழி இதற்குக் கொஞ்சம் பக்கத்தில் வரும். ஆனால் அதில் கி.மு.800 முதலே இலக்கியங்கள் கிடைக்கும். தமிழோ இதற்கு மிகவும் பிந்தியது. கி.மு. முதல் நூற்றாண்டு முதல்தான் இலக்கியங்கள்! சீன மொழியும், எபிரேய (ஹீப்ரு) மொழியும், லத்தீன் மொழியும் தமிழைவிட மூத்த மொழிகள்; ஆனால் சம்ஸ்கிருதம் அளவுக்கு வளம் நிறைந்தவை அல்ல!

 

இந்தியாவிலுள்ள எவரும் சம்ஸ்கிருதச் சொல் இல்லாமல் ஐந்து நிமிஷம்கூடப் பேச முடியாது. அப்படி கஷ்டப்பட்டு பேச முயற்சித்தால் எதிரே உள்ளவருக்கு விளங்காது!!!

 

மொழிகள் பற்றி நாம் எதைச் சொன்னாலும் அதற்கு ஆதாரம், சான்று இருக்கிறதா? என்று கேட்கவேண்டும். சம்ஸ்கிருத மொழியில் கி.மு.1400 முதல் கல்வெட்டுகளும், இலக்கியமும் உள்ளன. தமிழ் மொழியில் கி.மு.300 முதல் கல்வெட்டுகளும் கி.மு.100 முதல் இலக்கியங்களும் உள்ளன. (எனது முந்தைய கட்டுரைகளில் விவரங்கள் உள)

 

கறுப்புப் பணம், வெள்ளைப் பணம், கறைபடிந்த கரங்கள் என்பன கூட சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவைதான் போலும்!

Currency-of-the-world-006

பணம் எத்தனை வகை? சம்பாதிக்கும் முறை எத்தனை வகை? என்பதை கீழ்க்கண்ட சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும்:–

தனமூலா: க்ரியாசர்வா அதஸ்தஸ்யார்ஜனம் மதம்

வர்தனம் ரக்ஷணம் போக இதி  தஸ்ய விதி: க்ரமாத்

 

தத் புனஸ் ச த்ரிவிதம் ஞேயம் சுக்லம்  சபலமேவ ச

க்ருஷ்ணம் ச தஸ்ய விஞேய: ப்ரபேதஸ்சப்ததா புன:

 

ச்ருதசௌர்யம் தப: கன்யா  யாஜ்ய சிஷ்யா அன்வயாகதம்

 

தனம் சப்தவிதம் சுக்லம் உதயோப்யஸ்ய தத்வித:

குசீத க்ருஷிவாணிஜ்ய சுல்க சில்பானு வ்ருத்திபி:

 

க்ருதோ உபகாராதாப்தம் ச சபம்லம் சமுதாஹ்ருதம்

பார்ஸ்வகத்யூத தைன்யார்த்தீ ப்ரதிரூபக சாஹசை:

 

வ்யாஜேனோபார்ஜிதம் யச்ச தத் க்ருஷ்ணம் சமுதாஹ்ருதம்

யதா விதேன த்ரவ்யேன பக்திசேஹகரோத்யயம்

 

தத்விதம் பலமாப்னோதி தத்பலம் ப்ரேத்யசேஹ ச

 

 currencies

பொருள்:–

எல்லா காரியங்களுக்கும் பணம் வேண்டியிருப்பதால் அதை சம்பாதிப்பது இன்றியமையாதது.

 

சம்பாதித்த பணத்தைக் காப்பாற்றுதல், அதை முதலீடு செய்து அதிகரித்தல், செலவு செய்து அனுபவித்தல் என்று மூன்று வகை இருக்கிறது.

 

அவை ஒவ்வொன்றும் சுக்லம்/வெள்ளை, சபலம்/புள்ளி அல்லது கறை, க்ருஷ்ணம்/கறுப்பு என்று பிரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றும் மீண்டும் ஏழு விதங்களாகப் பிரிக்கப்படும்;

 

கல்வி, வீரதீரச் செயல், தவம், கன்யாதானம் (சீதனம்), யாகம் செய்வித்தல், சிஷ்யபரம்பரையாகக் கிடைத்தல் (குருதட்சிணை) , புதையல்  ஆகிய வரும்படி வெள்ளைப் பணம் (சுக்லம்)

 

வட்டி, விவசாயம், வியாபாரம், சுங்கவரி, கலைகள், உபதொழில்கள், உதவி செய்தமைக்காகக் கொடுக்கப்படும் பணம் (கையூட்டு) என்ற வகை வரும்படிகள் புள்ளி அல்லது கறையுள்ள வரும்படி;

 

தொண்டூழியம் (அடிமைத் தொழில்), சூதாட்டம் (லாட்டரி), பிறரை வருத்தி பொருளீட்டல், கெட்ட வழிகளில் பொருளீட்டல், ஆள்மாறாட்டம், சாகசச் செயல்கள், கடைத்தர வியாபாரம் (ஏமாற்று, மோசடி) ஆகிய வகை வரும்படி கறுப்பு வருமானம்.

 

யார் யார் எவ்வெவ்வகையில் சம்பாதிக்கின்றனரோ அந்தந்த பலனை அனுபவிப்பர்.

–Subham–

 

திருடர்கள் இரண்டு வகை! ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்! (Post No.3036)

260px-Japanesethieves

Written by london swaminathan

Date: 5th    August 2016

Post No. 3036

Time uploaded in London :– 7-52 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

kili 2

சம்ஸ்கிருதத்தில் திருட்டுக் கலை பற்றி தனி நூல்களே இருக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் இருக்கும் அளவுக்கு பரந்த வீச்சு உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. காம சாஸ்திரம், விமான சாஸ்திரம், ஆயுர்வேதம், மூலிகை விஷயங்கள், திருட்டு சாஸ்திரம்,  ஜோதிட சாஸ்திரம், இலக்கணம், இலக்கியம், தர்க்க சாஸ்திரம், நாடகம், கவிதை, பழமொழிகள், பொன்மொழிகள், சட்ட நூல்கள்,  நிகண்டு, மொழியியல்  என பல நூறுவகை விஷயங்கள் அதில் அடக்கம். எனக்குத் தெரிந்தவரை, கிரேக்க மொழி இதற்கு கொஞ்சம் பக்கத்தில் வரும். ஆனால் கிரேக்க மொழி சம்ஸ்கிருதத்தை விட குறைந்தது 600 வருடமாவது வயது குறைந்த மொழி.

நிற்க.

 

திருடர்கள் இரண்டு வகை என்கிறார் உலகின் முதல் சட்டப் புத்தகத்தை எழுதிய மனு. அதில் சோதிடர்கள், குறி சொல்லுவோர், ரேகை சாத்திரக்காரர் கள் மீதும் தாக்குதல் தொடுக்கிறார்!

 

இதோ அவர் எழுதிய மனு ஸ்மிருதியில் உள்ள சில பாக்கள் (ஸ்லோகங்கள்):–

 

ப்ரகாச வஞ்சகா: தேஷாம் நானா பண்ய உபஜீவின:

ப்ரச்சன்ன வஞ்சகா: து ஏதே யே ஸ்தேன ஆடவிகாதய:

 

உத்கோச  காஸ்ச: பதிகா: வஞ்சகா: கிதவா: ததா

மங்களாதேசவ்ருத்தா: ச பத்ரா ச ஏகக்ஷணிகை: சஹ

 

அசப்ய காரிணை: ச ஏவ மஹாமாத்ரா சிகித்சகா:

சில்யோபசாரயுக்தாஸ்ச நிபுணா: பண்யயோஷித:

மனு 9-258 -260

 

 kili 5

மனு 9-256

உளவாளிகள்தான் அரசனுக்குக் கண்கள்; அவர்கள் மூலமாக மக்களின்  உடைமைகளைத் திருடும்  வெளிப்படைத் திருடர்கள், மறைமுகத் திருடர்கள் ஆகிய இரண்டு வகைத் திருடர்களையும் அரசன் கண்டுபிடிக்க வேண்டும்

 

மனு 9-257

வணிகத்தில் மோசடி செய்யும் அனைவரும் வெளிப்படைத் (தெரிந்த) திருடர்கள்; வீடு புகுந்து திருடுவோர், காடுகளில் வழிப்பறி செய்வோர் முதலியோர் மறைமுகத் திருடர்கள்.

 

மனு 9-258

லஞ்சம் வாங்குவோர், மோசடிப் பேர்வழிகள், ஏமாற்றுப் பேர்வழிகள், சூதாட்டக்காரர்கள்,  மற்றவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று ஆரூடம் சொல்லுவோர், குறி சொல்லுவோர்…………..

 

மனு 9-259

முறையற்ற வழியில் ஈடுபடும் மந்திரிகள், டாக்டர்கள், கலைகள் மூலம் சம்பாதிப்போர், வேசிகள்………….

 

மனு 9-260

இப்படிப்பட்டோர் வெளிப்படைத் திருடர்கள்; நல்லோர் வேஷம் போட்ட கீழ் ஜாதியார் மறைமுகத் திருடர்கள்.

 

மனு 9-261

இப்படிப்பட்ட திருடர்களை ரகசிய உளவாளிகள் மூலம் கண்டுபிடித்தவுடன் அவர்களைக் குற்றம் செய்யும் சூழ்நிலையை உருவாக்கி அதில் சிக்கவைத்து  கையும் களவுமாகப் பிடிக்கவேண்டும்.

மனு 9-262

ஒவ்வொருவர் செய்த தவறு என்ன என்பதைச் சொல்லி, தவற்றுக்கு ஏற்ற அளவு தண்டணை கொடுக்கவேண்டும்.

மனு 9-263

இந்தப் பூமியில் அமைதியாக உலவிவரும் தீயோரின்  நடவடிக்கைகளை  தீயோரைத் தண்டிப்பது ஒன்றினால்தான் செய்ய இயலும்.

மனு 9-264— மனு 9-266

சபைகள், சாலை ஓர நீர் குடிக்கும் இடங்கள், தாசி வீடுகள், உணவு விடுதிகள் (ஆப்பக் கடைகள்), மதுபானக் கடைகள், முச்சந்திகள், பொதுமக்கள் வேடிக்கை பார்க்கக் கூடும் இடங்கள், புனித மரங்கள், தோட்டங்கள், கலைஞர் வீடுகள், காலியாக இருக்கும் மனைகள், பொட்டல் காடுகள், புதர் மண்டிய பிரதேசங்கள் ஆகிய இடங்களில் உளவாளிகளையும் துருப்புகளையும் நிறுத்தி வைப்பதாலோ, அல்லது ரோந்து (காவல் சுற்று) செய்வதாலோ திருட்டுகளைக் கட்டுப்படுத்தலாம்.

 

kili 7

மனு 9-267

ஏற்கனவே திருட்டில் ஈடுபட்டு, இபோது திருந்தியவர்களைக் கொண்டு  புதிய திருடர்களைப் பிடிக்க வேண்டும் . அவர்களுடன் பழக வைத்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்து, அந்தத் திருடர்களை அடியோடு அழிக்க வேண்டும்

மனு 9-268

சாது சந்யாசிகளை சந்திக்க அழைப்பது போல அழைத்தோ, உணவு, கேளிக்கைக்காக கூப்பிடுவது போல கூப்பிட்டோ அல்லது அவர்களது சாகச செயல்களைப் பாராட்டுவது போல பாசாங்கு செய்தோ அவர்களை வளைத்துப் பிடிக்க வேண்டும்.

மனு 9-269

 

இந்த வலையில் சிக்காமலோ, அல்லது இதை அறிந்தோ தப்பித்து ஓடும் திருடர்களையும் , அவர்களுடைய தாய்வழி, தந்தை வழி உறவினர்களை  யும், நண்பர்களையும் அழிக்க வேண்டும் (உறவினர் நண்பர் மூலம் தான் செய்தி தெரிந்திருக்கும் என்பதால்)

 

(திருக்குறள் 550–ம் கொலையில் கொடியாரை மரண தண்டனை கொடுத்து தீர்த்துக் கட்டுங்கள் என்று செப்பும்.)

 

ஒரு திருடனிடம், அவன் திருடிய பொருட்கள் இல்லை என்றால் அவனைத் தண்டிக்கக்கூடாது. திருடிய பொருட்களோ திருட்டுச் சாதனங்களோ இருந்தால் தயக்கமின்றி தண்டணை கொடுக்க வேண்டும்.

 

இதற்குப் பின்னர், திருட்டுகளை ஒழிப்பதில் உதவாத அதிகாரிகளைத் தண்டிப்பது பற்றி பகர்கிறார்.

 

அதற்குப்பின்னுள்ள ஒரு ஸ்லோகம் குறிப்பிடற்பாலது:–

ஒரு கிராமம் கொள்ளை இடப்படுகையிலோ, ஒரு அணை உடைந்தபோதோ, சாலை வழிப்பறி நடக்கும்போதோ, அவர்களுக்கு உதவாதபடி, வேடிக்கை பார்ப்பவர்களை நாடுகடத்த வேண்டும்.

 

இரவில் திருடுபவர்களின் இரண்டு கைகளையும் வெட்டுங்கள். பிக் பாக்கெட் அடிக்கும் ஜேப்படித் திருடர்களின் விரல்களை வெட்டுங்கள் என்றும் மனு உத்தரவு இடுகிறார்.

 

ஒன்பதாவது அத்தியாயம் திருடர்கள் பற்றி இன்னும் பல விசயங்களை இயம்புகிறது. அக்காலத்தில் திருடர்கள் விஷயத்தில் எவ்வளவு கடுமையான விதிகள் இருந்தது என்பதை அறிவது அவசியம். 1600 ஆண்டுகளுக்கு முன்னர் – குப் தர் காலத்தில் — இந்தியாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் பாஹியான், இந்தியாவில் திருட்டு பயமே இல்லை, மக்கள், வீடுகளின் கதவுகளைப் பூட்டாமல்தான் தூங்குவார்கள் என்று எழுதியுள்ளான்.

 

வாழ்க மனு! வளர்க மனு நீதி!