இரவில் பால் சாதம், பகலில் தயிர் சாதம் ஆயுளை அதிகரிக்கும்! (Post No 2869)

milk-yoghurt-3-2_0

Written by London swaminathan

 

Date:5 June 2016

 

Post No. 2869

 

Time uploaded in London :–  7-13 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

veggy lunch

ஆயுளைக் கூட்டுவது எது? ஆயுளைக் குறைப்பது எது? என்று சொல்லும் இரண்டு அருமையான பாட்டுகள் (ஸ்லோகங்கள்) சம்ஸ்கிருதத்தில் உள்ளன.

 

வ்ருத்தார்கோ ஹோமதூமஸ்ச பாலஸ்த்ரீ நிர்மலோதகம்

ராத்ரௌ க்ஷீரான்னபுக்திஸ்ச ஆயுர்வ்ருத்திர்தினே தினே

(வ்ருத்த, அர்க, ஹோம, தூம, ச, பால, ஸ்த்ரீ,நிர்மல, உதகம், ராத்ரௌ, க்ஷீர, அன்ன, புக்தி, ச, ஆயுர், வ்ருத்தி, தினே தினே)

பொருள்:-

மாலை வெய்யில், ஹோமப் புகை, (தன்னைவிட)இளம் வயதுப் பெண்ணைக் கல்யாணம் செய்வது, சுத்தமான தண்ணீரைக் குடிப்பது, இரவில் பால் சோறு சாப்பிடுவது ஆகியன ஒவ்வொரு நாளும் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்.

 

அந்தக் காலத்திலேயே சுத்த நீரைக் குடிக்க வேண்டும் என்று எழுதியது, புறச்சூழல் பாதுகாப்பு பற்றிய அறிவும், உணர்வும் இருந்ததைக் காட்டும்.அடுத்த பாட்டில் அசுத்த நீர் பற்றி வருகிறது!

 

பாலார்க: ப்ரேததூமஸ்ச வ்ருத்தஸ்த்ரீ பல்வலோதகம்

ராத்ரௌ தத்யான்னபுக்திஸ்ச ஆயு: க்ஷீணம் தினே தினே

 

(பால, அர்க,பிரேத, தூம, ச, வ்ருத்த, ஸ்த்ரீ,பல்வல, உதகம், ராத்ரௌ, ததி அன்னம், புக்தி, ச,  ஆயு:, க்ஷீணம், தினே தினே)

பொருள்:- காலை சூரிய ஒளி, பிணம் எரிக்கும் புகை, தன்னைவிட வயதான பெண்ணை மணத்தல், கலங்கிய நீர், இரவில் தயிர் சாதம் சப்பிடுதல் ஆகியன ஒவ்வொரு நாளும் ஆயுளைக் குறைக்கும்.

curd-rice

ஆயுர்வேதம் எட்டு வகை:-

 

அதர்வ வேதத்தின் உபவேதமான ஆயுர்வேத சாஸ்திரம், சுஸ்ருதர் எழுதிய நூலின்படி எட்டு வகைப் படும்; அவையாவன:–

1.சல்யம்:-

ஆயுதத்தால் செய்யும் அறுவைச் சிகிச்சை; சர்ஜரி; ஆபரேஷன்

2.சாலக்யம்:-

அறிகுறிகளைக் கொண்டு நோயைக் கண்டுபிடித்தல் (டயக்னாசிஸ்)

3.காய சிகித்சா:-

உடலின் நோய்க்குச் சிகிச்சை

4.பூத வித்யா:-

பேய் பிசாசுகளால் ஏற்பட்ட மனோ வியாதிக்கு சிகிச்சை (பேய், பிசாசு = பயம், மனக் கவலை)

5.கௌமார ப்ருத்யம்:-

குழந்தைகள் நோய்ச் சிகிச்சை

6.அகத தந்த்ரம்:–

விஷ முறிப்பு

7.ரசாயன தந்த்ரம்:_

ஆயுள் வளர்ச்சிக்கு மருந்து

8.வாஜீகரண தந்த்ரம்:-

செக்ஸ் பிரச்சனைகள், நோய்கள் தொடர்பான மருந்துகள்

–சுபம்–

 

 

மன்மதன்,காம தேவன்: சங்கத் தமிழ் இலக்கியத்தில் காதல் தெய்வம்!(Post No.2862)

rathi.meenakshi13

Research Article written by London swaminathan

 

Date: 2 June 2016

 

Post No. 2862

 

Time uploaded in London :–  6-33 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Contact swami_48@yahoo.com

 

(English version of this article was published here yesterday)

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதத்தின் தென்கோடி முதல் வடகோடி வரை ஒரே பண்பாடு நிலவிவந்தது. தொல்காப்பியத்திலேயே வேதத்தில் போற்றப்படும் இந்திரன், வருணன், துர்கை ஆகியோரை தமிழர் தெய்வங்களாகப் போற்றுவதையும், தொல்காப்பியரும் மனுதர்ம சாத்திரத்திலுள்ள எண்வகை மணத்தைப் போற்றுவதையும் அவரும் தர்மார்த்த காம மோக்ஷம் ஆகிய வாழ்க்கை மூல்யங்களை பெரும் பண்புகளாகப் (அறம் பொருள் இன்பத்தைப்) போற்றுவதையும் சில கட்டுரைகளில் தந்தேன். மன்மதன் பற்றிய நம்பிக்கையும் அவ்வாறே இருந்துள்ளது!

 

மன்மதனுடைய கொடி மகரக் கொடி. மகரம் என்னும்  சொல் மீன், டால்பின் மற்றும் முதலையைக் குறிக்கப் பயன்பட்ட சொல். மன்மதனின் மகரக் கொடி பற்றிய குறிப்பு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய அக நானூற்றிலேயே வந்துவிடுகிறது. மேலும் இதைப் பாடிய பார்ப்பனப் புலவன் பரணன், அதே பாட்டில் மன்மதனை எரித்த சிவபெருமானையும் பாடியிருக்கிறார். பட்டினப்பாலையில் மன்மதன் கோவில் குறிப்பிடப்படுகிறது.

 

காளிதாசனின் காலம் பல சம்ஸ்கிருத அறிஞர்கள் கூறியது போல கி.மு. இரண்டாம் அல்லது முதலாம் நூற்றாண்டு என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் சங்க இலக்கியம் வாயிலாக நிரூபித்தேன். மன்மதன் பற்றி காளிதாசன் சொன்னதை நம்மவர்களும் சொல்வதிலிருந்து எனது வாதம் மேலும் உறுதிப்படுகிறது.

 

rathi 1

1.அகநானூறு (பாடல் 181)

நான்மறை முதுநூல் முக்கட்செல்வன்

ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய

பொய்கைசூழ்ந்த பொழில்மனைமகளிர்

கைசெய்பாவைத் துறைக்கண் இறுக்கும்

மகரநெற்றி வாந்தோய் புரிசைச்

சிகரம் தோன்றா சேணுயர் நல் இல்

பொருள்:-

பழமையான நான்கு வேதங்களை அருளிய முக்கண்ணனின் ஆலமுற்றம் என்னும் இடத்திலே, அழகாக அமைந்த பொய்கைகள் சூழ்ந்த பூங்காவில், சிறு வீடுகட்டி விளையாடும் சிறுமியர் செய்த மண்பாவைகள் (பொம்மைகள்) இருக்கும் துறையில் மகரக்கொடியை மதில் உச்சியில் கொண்ட மிக உயர்ந்த மாடங்களை உடைய அரண்மனைகளையுடைய புகார் நகரம்…..

 

காமன் விழா நடபெறுகையில் கட்டப்படும் மகர தோரணத்தை இது குறிக்கும் என்று  பழைய உரைகள் விளக்கும்.

இந்தக் காமன் பண்டிகை குறித்து வடமொழி பிருஹத் கதாவிலும், அதன் மொழிபெயர்ப்பான பெருங்கதையிலும் உண்டு.

நாடு முழுதும் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டதை இது உறுதி செய்யும்.

 

2.கலித்தொகை, பரிபாடல்

மன்மதன், மகரக் கொடி ஆகியன பற்றி கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டு சங்க இலக்கியங்களிலும் நிறைய குறிப்புகள் கிடைக்கின்றன. ஒரு சில குறிப்புகளைக் காண்போம்:-

காமற்கு வேனில் விருந்தெதிர்கொண்டு (கலி. 92-67/68)

 

கலித்தொகையில் வரும் மற்ற குறிப்புகள்: கலி. 108-4; 109-19/20; 147-59/60; பரிபாடல்11-123

மேற்கூறிய எல்லாவற்றிலும் சம்ஸ்கிருதச் சொல்லான காமன் வருகிறது. கலி.94-33ல் காமர் என்று இருக்கிறது.

காமவேள்- கலி.27-24, பரி.18-28

மன்மதனின் மற்றொரு சம்ஸ்கிருதப் பெயர் மாரன். இச்சொல் பரிபாடலில் (8-119) கையாளப்படுகிறது.

rathi3

3.ரதியும் காமனும்

உலகிலேயே மிகவும் அழகான பெண் ரதி. அவள் மன்மதனின் மனைவி. இரதிகாமன் என்ற சொல் பரிபாடலில் 19-48/49) பயன்படுத்தப்படுகிறது.

மன்மதன் என்பவன் விஷ்ணுவின் மனதில் பிறந்தவன் என்று சம்ஸ்கிருத புராணங்கள் கூறும். இதை நெடியோன் மகன் என்று கலித்தொகை இயம்பும் (140-89)

 

4.ஐந்து மலர் அம்பு

மன்மதனின் கரும்புவில்லிலிருந்து மலர் அம்புகளை விடுவான் என்று காளிதாசனும் பிற கவிஞர்களும் பாடுவர். இதை ‘அரிபடு ஐவிரை என்றும் (பரி.10-97), விரைமலர் அம்பினோன்’ என்றும் (பரி.22-26) பரிபாடலில் காணலாம்.

காமனின் அம்புப் புட்டில் பரி.18-30ல் வருகிறது.

ஓவியக்கூடம் காமனின் சிலம்பக்கூடம் போன்றது என்ற உவமை ‘எழுது எழில் அம்பலம் காமவேள் தொழில் வீற்றிருந்த நகர்’- என்ற வரிகளில் பளிச்சிடும் (பரி 18-27)

ஐந்து மலர்கள்:

மன்மதனின் அம்பிலுள்ள ஐந்து மலர்கள்:-தாமரை, அசோகம், மாம் பூ, முல்லை, நீலோத்பலம்.

 

5.மீன்கொடி

உலகில் கொடிகளையும், வாகனங்களையும்,சின்னங்களையும் பயன்படுத்திய முதல் நாடு பாரதம் என்று கொடிகள், வாகனங்கள் பற்றிய கட்டுரைகளில் சொன்னேன். இங்கே மீன் கொடி பற்றி கலித்தொகை புலவர்கள், மீனேற்றுக் கொடியோன் (கலி.26-3), காமன் கொடியெழுதி (கலி.84-24) என்ற வரிகளில் விளக்குவர்.

 

6.காமனின் தம்பி சாமன்

காமனின் தம்பி சாமன் பற்றி சம்ஸ்கிருதத்தில் பல குறிப்புகள் உண்டு. அதையும் தமிழ்ப் புலவர்கள் குறிப்பிடத் தவறவில்லை( கலி. 26-4; 94-33/34)

இதுதவிர இன்னும் சில குறிப்புகளும் உண்டு.

 

தமிழ் என்சைக்ளோபீடியாவான அபிதான சிந்தாமணியில் மன்மதன் வருணனையை, சிங்காரவேலு முதலியார் தந்துள்ளார்.

(சில புத்தகங்களில் கலித்தொகை பாடல் எண்களில் சிறிய மாற்றம் இருக்கும் ஆகையால் சங்கம் வோர்ட் இண்டெக்ஸ் புத்தகத்திலுள்ள வரிகளையும் தருகிறேன்:- மாரன் பரி. 8-119, காம வேள் கலி.27-24, பரி.18-28;காமற்கு கலி.92-67; காமன் கலி 84-24, 108-4, 109-19, 147-59, பரி. 11-123, 19-48; காமனது கலி.139-22;)

rthi2

7.திருக்குறளில்

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகுவான் (1197)

பொருள்:-

காமதேவன், காதலர் இருவர் இடையேயும் இருந்து இயங்காது, ஒருவர் பக்கத்திலேயே இருந்து செயல்படுவதால், அவன் என்னுடைய வருத்தத்தையும் தடுமாற்றத்தையும், உணரமாட்டான் போலும்!

 

8.மன்மதனுக்கு 19 பெயர்கள்!!!

உலகின் முதல் நிகண்டான (திசாரஸ்) அமர கோசத்தில், மன்மதனின் 19 சம்ஸ்கிருதப் பெயர்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அவையாவன:-

மதன:, மன்மத: (மனதைக் கடைபவன்), மாரன், ப்ரத்யும்னன், மீனகேதன: (மீன் கொடியோன்), கந்தர்ப:, தர்பகன், அனங்க: (உடல் அற்றவன்), காமன், பஞ்சசர: (ஐந்து அம்புடையோன்), ஸ்மர:, சம்பராரி: (அலிகளுக்கு எதிரி), மனசிஜ: (மனதில் பிறந்தோன்), குசுமேஷு (மலர் அம்பன்), அனன்யஜ:, புஷ்ப தன்வா (மலர் வில்லன்), ரதிபதி (ரதியின் கணவன்), மகரத்வஜ; (மீன் கொடியோன்), ஆத்மபூ: (மனதில் தோற்றுவிக்கப்பட்டவன்).

சம்ஸ்கிருத நூல்களில் காமனுக்குப் பல அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன (எனது ஆங்கிலக் கட்டுரையில் நிறைய பெயர்கள் கொடுத்துள்ளேன்; இங்கே அந்தப் பட்டியலை எழுதினால் காமதேவன் அஷ்டோத்திரம் போல ஆகிவிடும்!)

 

  1. கற்பனைக் கதா பாத்திரம்

அனங்கன் என்ற சம்ஸ்கிருத்ச் சொல்லுக்கு அங்கம்/ உடல் அற்றவன் எனப் பொருள்; சிவன் மனதில் காம உணர்வை ஏற்படுத்த மன்மதன் முயன்றபோது அவர் நெற்றிக் கண்ணைத் திறக்கவே மன்மதன் எரிந்து சாம்பலானான். அவன் மனைவி ரதி தேவி அழுது புலம்பவே உன் கண்ணுக்கு மட்டும் தெரிவான் என்று சிவன் வரம் கொடுத்ததாக வரலாறு. இது ஒரு தத்துவார்த்த கதை. உடல் ரீதியான கீழ்த்தரக் காமத்தை ஒழித்தால் முகநக நட்பு போய், மனைவியரிடதே அகநக நட்பு மலரும் என்பதே இதில் அடங்கிய தத்துவம்; சுருக்கமாக சிவன் எரித்தது காம வெறியைத் தான். உள்ளன்பு பூர்வமான காமத்தை அன்று.

இதே போல திருமாலின் மனதில் பிறந்தவன் என்ற பெயரும் அடையாள பூர்வ கதையே; எல்லோருக்கும் மனதில் பிறக்கும் காதலே/ காமமே கல்யாணத்திலும், இனப் பெருக்கத்திலும் முடிகிறது.

மன்மதன்= மனதைக் கடைபவன் என்பதும் காரணப் பெயரே. ஒருவருக்கு காதல் வியாதி வந்துவிட்டால், அதௌ மனதைக் கடைந்து படாதபாடு படுத்தும்!

மொத்தத்தில் மன்மதன் என்பது ஒரு எண்ணத்துக்கு (அப்ஸ்ட்ராக்ட் ஐடியா), ஒரு உருவம் கொடுத்த (கான்க்ரீட் ஷேப்) கற்பனைக் கதையே.

rati or who

10.காளிதாசனில்

காளிதாசன் காவியங்களில் வரும் மன்மதன் பற்றிய குறிப்புகள்:–

சாகுந்தலம்:– காமன் வழிபாடு(6-3), மதன பாண/அம்பு (3), மகரகேது/மீன் கொடி (3-5).

இது தவிர குசுமாயுத (பூ ஆயுதம்), குசுமாஸ்திர (பூ ஆயுதம்).

விக்ரமோர்வசீயம்:–மகர கேது 2-2;

குமாரசம்பவம்:– 1-41 மகர கேது

ரகுவம்சம்:– மகர கேது 9-39

ஐந்து மலர் அம்பு பற்றிய குறிப்புகள்:– குமாரசம்பவம் 7-92; விக்ரம 2-6,11; மாளவிகாக்னிமித்ரம் 4-12 (பஞ்சசார);

குசுமசர, குசுமாயுத என்ற மலர் அம்பு பற்றிய சொற்கள் காளிதாசனின் எல்லா நூல்களிலும் (மேகதூதம் 104, ரகு 9-39, 11-45, குமார சம்பவம் 3-10, 4-40, 45) முதலிய இடங்களில் வருகின்றன.

 

காளிதாசன் நூல்களில் வரும் உவமைகள் சங்க இலக்கியத்தில் 200க்கும் மேலான இடங்களில் வருவதால், சங்ககாலத்தின் அவன் நூல்கள் கற்ற புலவரிடத்தே பரவியிருந்ததை அறியமுடிகிறது. ரெவரெண்ட் ஜி.யூ.போப்பும் இந்தக் கருத்தைக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

11.வேதங்களில்

மன்மதன் அல்லது காமதேவனின் மூலம், உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்தில் இருக்கிறது. ஆசையே (காமம்) பிரபஞ்சத்தின் வித்து என்னும் அற்புதமான பாடல் ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் இருக்கிறது. அதன் பிறகு அதர்வ வேதம், காமனை கடவுள் நிலைக்கு உயர்த்துகிறது. இறைவனின் லீலா விநோதம்தான் இந்த உலகின், மனித இனத்தின் படைப்பு. அவர் மனதில் எழுந்த ஆசையே, விருப்பமே பிரபஞ்சமாக உருவானது. அறிவியலோ மாபெரும் வெடிப்பு – BIG BANG பிக் பாங்- ஏற்பட்டு பிரபஞ்சம் தோன்றியது என்று விளம்பும். ஆனால் அதற்கு முன் என்ன இருந்தது, ஏன் பெர்ம் வெடிப்பு ஏற்பட்டது என்பதற்கு விஞ்ஞானத்தால் விடைகூற முடியவில்லை. பிரஜாபதி பரமேஷ்டின் என்ற ரிஷி உலகின் முதல் விஞ்ஞானி ஆவார். அவர் ரிக்வேதத்தில் சொல்லும் மந்திரத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிப் பாடி வியக்கிறார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒரு ரிஷி பாடியது உலகின் முதல் நாகரீகம், பாரதத்தில் தோன்றியதை மெய்ப்பிக்கிறது.

 

“ஆரம்பத்தில் காமம் (ஆசை) இருந்தது

மனதின் மூல வித்து அதுவே;

ரிஷிகள் உள்ளத்தில் எழுந்த ஞானத்தால் தேடி,

இல்லாத ஒன்றில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்”

–ரிக் வேதம் 10-129

 

Haridass_1944_film_2

12.திரைப்படத்தில்

12.இறுதியாக முந்தைய தலைமுறையிரிடையே பிரபலமான திரைப்படப் பாடல்:–

பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்
பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்
திரைப்படம் : ஹரிதாஸ்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என்மதி மயங்கினேன் நான்
என்மதி மயங்கினேன் மூன்று உலகிலும்

என்னுடனே நீ பேசினால் வாய்முத்துதிர்ந்து விடுமோ? – உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ? – உனை
எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ?

உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ?
ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ? –  மனம் கவர்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?
என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

 

தற்காலத்தில் வந்த மன்மத லீலை என்ற திரைப்படத்தை அனைவரும் அறிவர்.

 

–சுபம்–

 

 

 

 

புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே (Post No. 2844)

தருமி1

ஜூன் 2016 காலண்டர் (துர்முகி வைகாசி/ஆனி)

 

Compiled by london swaminathan

Date: 27 May ,2016

 

Post No. 2844

 

Time uploaded in London :–  10-06 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

“இனியவை நாற்பது” நூலிலிருந்து  – முக்கிய 30 இனிமையான பொன்மொழிகள்

 

முகூர்த்த நாட்கள்:- 8, 9, 16, 23, 26

அமாவாசை:- 5

பௌர்ணமி:- 20

ஏகாதசி:- 1,16

 

 

சிவ சிவ

 

ஜூன் 1 புதன் கிழமை

கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே (முக்கண் உடைய சிவபெருமானின் பாதகமலங்களை இடையறாது சிந்தித்தல் இனிமையானது)

 

ஜூன் 2 வியாழக் கிழமை

பிச்சைபுக்கு ஆயினும் கற்றல் மிக இனிதே (வங்கியில் கடன் வாங்கியாவது படி)

 

ஜூன் 3 வெள்ளிக் கிழமை

உடையான் வழக்கு இனிது ( செல்வம் உடையவர்கள், அதை வறியவர்க்கு அளித்தல் இனிது)

 

ஜூன் 4 சனிக் கிழமை

ஏர் உடையான் வேளாண்மை தான் இனிது

 

ஜூன் 5 ஞாயிற்றுக் கிழமை.

ஊனைத் தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே (வெஜிட்டேரியன்ஸ் – வாழ்க)

 

 hare krishna food 2

ஜூன் 6 திங்கட் கிழமை

கோல்கோடி மாராயம் செய்யாமை முன் இனிது (நடுவு நிலைமை தவறி பாராட்டி பரிசு வழங்காதிருத்தல் இனிது)

 

ஜூன் 7 செவ்வாய்க் கிழமை

பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே (சான்றோரின் நல்ல மொழிகளைக் கேட்பது இனிது)

 

ஜூன் 8 புதன் கிழமை

அந்தணர் ஒத்து உடைமை ஆற்ற மிக இனிதே (அந்தணர்கள், வேதங்களை மறவாது ஓதுதல் இனிது)

ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே (வேதம் ஓதும் பார்ப்பனர்க்கு பசுவையும் தங்கக் காசுகளையும் தானம் செய்; உன் குலம் செழிக்கும்; ஊர் தழைக்கும்)

 

ஜூன் 9 வியாழக் கிழமை

ஊரும் கலிமா உரன் உடைமை முன் இனிதே (நீ செல்லும் குதிரை வலிமை உள்ளதாக இருக்க வேண்டும்; அதாவது காரில் செல்லும் முன் அதில் பெட்ரோல், டயரில் காற்று முதலியவற்றை சரி பார்)

 

ஜூன் 10 வெள்ளிக் கிழமை

அங்கண் விசும்பில் அகல்நிலாக்  காண்பு இனிதே (ஆயிரம் பிறை காண்; அதாவது 100 ஆண்டு வாழ்)

 நிலவு, சந்திரன், மூன்

ஜூன் 11 சனிக் கிழமை

கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே ( கடன் வாங்கிச் சாப்பிடாமல் வாழ்வது இனிது)

 

ஜூன் 12 ஞாயிற்றுக் கிழமை.

குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே ( பழைய உரைகாரர் எழுதியதை விட்டுவிட்டு, நூல்களுக்கு குதர்க்கமான பொருள் காணாமை இனிது)

 

ஜூன் 13 திங்கட் கிழமை

கிளைஞர் மாட்டு அச்சு இனிமை கேட்டல் இனிதே ( சுற்றத்தார் சுகமாக இருக்கிறார்கள் என்ற செய்தி இனிமையானது)

 

ஜூன் 14 செவ்வாய்க் கிழமை

தானே மடிந்திராத் தாளாண்மை முன் இனிதே (தன் கையே தனக்குதவி; சோம்பேறித் தனமில்லாமல், மற்றவர்களை ஏவாமல், அவரவர் காரியத்தை அவரவர் செய்தல் இனிது)

 

ஜூன் 15 புதன் கிழமை

குழவி தளர் நடை காண்டல் இனிதே;அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே (குழவி=குழந்தை)

குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே (குழந்தைகள் நோயில்லாமல் வாழ வகை செய்ய வேண்டும்; அதுவே இனிது)

குழந்தை சுட்டி

ஜூன் 16 வியாழக் கிழமை

பிறன் மனை பின் நோக்காப் பீடு இனிது (அயலான் மனைவியை காம எண்ணத்துடன் திரும்பிக்கூட பார்க்காமை இனிது)

 

ஜூன் 17 வெள்ளிக் கிழமை

கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே ( நன்கு படித்தவர் அறையில் அமர்ந்து நல்ல விஷயங்களை விவாதி; அப்பொழுது நீ படித்த விஷயங்களைச் சொல்லி, மகிழவைப்பது இனிது)

 

ஜூன் 18 சனிக் கிழமை

நட்டார்க்கு நல்ல செயல் இனிது (நண்பர்களுக்கு நல்ல உதவி செய்)

 

ஜூன் 19 ஞாயிற்றுக் கிழமை.

தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே ( தந்திர நூல்களைக் கற்ற தவ முனிவர்கள் பெருமையைப் பேசுவது, காண்பது இனிது)

 

ஜூன் 20 திங்கட் கிழமை

சலவரைச் சாரா விடுதல் இனிதே (வஞ்சகருடன் சேராமல் இருப்பது இனிது)

 

தருமி2

ஜூன் 21 செவ்வாய்க் கிழமை

புலவர்தம் வாய்மொழி  போற்றல் இனிதே (கற்றறிந்தோரின் சொற்களைக் கேட்டு அதன்படி நடத்தல் இனிது)

 

ஜூன் 22 புதன் கிழமை

பிறன் கைப்பொருள் வௌவான் வாழ்தல் இனிதே (மற்றவர்களுடைய பொருளைத் திருடாமல் வாழ்வது இனிது)

 

ஜூன் 23 வியாழக் கிழமை

ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே ( வேண்டியவர்க்கு சலுகை காட்டாத நடு நிலை இனிது)

 

ஜூன் 24 வெள்ளிக் கிழமை

 

காவோடு அறக்குளம் தொட்டல் மிக இனிதே (மரத்தை வளர்; சோலைகளை உருவாக்கு; குளங்களை உருவாக்கு; கோவில்களில் இவையிருந்தால் அதைப் பாதுகார்)

 சுசீந்திரம் கோவில்குளம்

 

ஜூன் 25 சனிக் கிழமை

எல்லிப் பொழுது வழங்காமை முன் இனிதே (இரவு நேரத்தில் துணையில்லாமல் செல்லாதே)

 

ஜூன் 26 ஞாயிற்றுக் கிழமை.

நச்சித்தன் சென்றார் நசைகொல்லா மாண்பு இனிதே ( உன்னிடம் ஒரு பொருளை நாடி வந்தவரின் விருப்பத்தை நிறைவேற்றல் இனிது)

 

ஜூன் 27 திங்கட் கிழமை

ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே ( ஒரு காரியத்தைச் செய்ய இயலாதவனிடம் போய், இதைச் செய், இதைச் செய் என்று நச்சரித்து, உன் சக்தியை எல்லாம் வீணடிக்காமல் இருப்பது இனிது)

 

ஜூன் 28 செவ்வாய்க் கிழமை

உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே (உயர்ந்த குறிக்கோளை முன் வை; ஊக்கத்துடன் அதை அடை; உத்திஷ்ட, ஜாக்ரத, ப்ராப்யவான் நிபோதத)

 

ஜூன் 29 புதன் கிழமை

மன்றம் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே ( பொது மன்றத்தில் ஏறிப் பொய் சாட்சி சொல்லாதே; அ ந்தப் பாவம் உன்னை சும்மா விடாது)

 

ஜூன் 30 வியாழக் கிழமை

பத்துக் கொடுத்தும் பதி இருந்து வாழ்வது இனிதே ( பத்துப் பொருட்களைக் கொடுத்தாவது, சொந்த ஊரில் சுற்றத்தாருடன் வாழ்வதே இனிது).

 

school village

-சுபம்-

 

தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் மங்கலச் சொற்கள் (Post No.2826)

08.08.67.earth.med

Research article written by London swaminathan

 

Date: 20 May 2016

 

Post No. 2826

 

Time uploaded in London :–  15-36

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

உலகில் வேறு எந்த இலக்கியங்களிலும் காணாத ஒரு வழக்கு இந்து மத இலக்கியங்களில் காணப்படுகிறது. சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் சிவபெருமானிடமிருந்து பிறந்து அவனருளால் பாணினி, அகத்தியன் ஆகிய இருவரால் இலக்கணம் வரையப்பட்டதால் இந்த வழக்கு நீடிக்கிறது. இரண்டு மொழிகளும் இன்னென்ன சொற்களைக் கொண்டே ஒரு நூல் துவக்கப்பட வேண்டும் என்று சொல்லும். இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அப்படியே பின்பற்றப் பட்டு வந்துள்ளது.

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆரிய, திராவிட மொழிக் குடும்பம் என்பதெல்லாம் வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்கள் எட்டுக்கட்டிய கட்டுக்கதை என்பதை மொழியியல் ரீதியாக முன்பே நிரூபித்துவிட்டேன்.

 

tricolour om

சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லும்:–

ஓம்காரஸ்ச அதசப்தஸ்ச த்வாவேதௌ ப்ரஹ்மண: புரா

கண்டம் பித்வா விநிர்யாதௌ தஸ்மான் மாங்கலிகாஉபௌ

–பாதஞ்ஜலதர்சனம்

பொருள்:– ஓம், அத என்ற இரண்டு சொற்களும் பிரம்மனின் திருவாயிலிருந்து வெளிவந்ததால் இரண்டும் மங்கலச் சொற்களாக கருதப்படும்.

 

பழங்கால சம்ஸ்கிருத நூல்கள் அனைத்தும் இவ்விரு சொற்களுடனேயே துவங்கும்.

‘அத ரிக் வேத:’

‘அத ஸ்ரீமத்பகவத் கீதா’

என்று நூல்கள் ஆரம்பமாகும். நூலின் உள்ளே கடவுள் வாழ்த்து என்ற துதி இருக்கும். அதில் கடவுளின் பல பெயர்கள் வரும். கடவுள் வாழ்த்தே இல்லாவிடினும்

‘அத யோகானுசாசனம்’ (பதஞ்சலி யோக சூத்ரம்)

‘அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாசா’ (பிரம்ம சூத்ரம்)

அமரகோசம் என்னும் நிகண்டும் ‘அத’ சப்தத்தை மங்கல சொல்லாகப் பட்டியலிட்டுள்ளது.

ஓம்காரம் மிகவும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த மூல மந்திரத்திலிருந்துதான் பிரபஞ்சமே உற்பத்தியாகியது. இதை மாண்டூக்ய உபநிஷத் நன்கு விளக்கும். நவீன விஞ்ஞாமும் சப்தத்திலிருந்து பிரபஞ்சம் எல்லாம் உருவானதை ஒப்புக் கொள்கிறது.

‘அத’ என்றால் ‘இப்பொழுது’ என்று பொருள். அ –என்னும் எழுத்துதான் உலகின் பழைய மொழிகளின் முதல் எழுத்து. ரிக் வேதம் முதலான புனித நூல்கள் அக்னி என்று அ- வில் துவங்கும் அல்லது ஓம் என்னும் மந்திரத்துடன் துவங்கும்.

பழங்காலத்தில் குருமார்கள் மேடையில் அமர்வர். சிஷ்யர்கள் கீழே அமர்வர். குரு, ‘அத வால்மீகி ராமாயண’, ‘அத மஹா பாரத’ என்று உபதேசிக்கத் துவங்குவார்.

முடிவில் ‘சுபம்’ என்றோ ‘சாந்தி’ என்றோ சொல்லி முடிப்பார். உலகில் வேறு எங்கும் காண முடியாத அற்புத இலக்கிய வழக்கு இது.

 

moon night

கடவுளை நேரிடையாக குறிப்பிடாவிட்டால், ‘லோகம்’, ‘விஸ்வம்’, ‘ஸ்வஸ்தி’ போன்ற மங்கலச் சொற்களைப் பயன்படுத்துவர்.

விஷ்ணு சஹஸ்ர நாமம், ஓம் ‘விஸ்வம்’ என்று துவங்கும்.

தமிழ் வழக்கு

சம்ஸ்கிருதம் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய தமிழும் இதை அப்படியே பின்பற்றுகிறது. ஆனால் தமிழில் பெரிய பட்டியல் உள்ளது.

ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (தமிழ் என்சைக்ளோபீடியா) வழங்கும் பட்டியல்:–

சீர், எழுத்து, பொன், பூ, திரு, மணி, யானை, தேர், பரி, கடல், புகழ், மலை, மதி, நீர், ஆரணம்(வேதம்), சொல், புயல், நிலம், கங்கை, உலகம், பரிதி (சூரியன்), அமிர்தம் ஆகியனவும் இவை தொடர்பன சொற்களும்.

 

தமிழில் கிடைத்த மிகப் பழைய நூலான, கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தொல் காப்பியம் ‘எழுத்து’ என்ற சொல்லுடன் துவங்கும்.

ஆயினும் பெரும்பாலான நூல்கள் ‘உலகம்’ என்ற சொல்லுடன் துவங்கும். முன்காலத்தில் இதை ‘லோகம்’ என்ற சம்ஸ்கிருதச் சொல் என்று கருதினர். ஆனால் எனது ஆராய்ச்சியில் இது இரு மொழிகளுக்கும் பொதுவான சொல் என்பது கண்டறியப்பட்டுளது. (ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதற்கும் தமிழ்-சம்ஸ்கிருத மூல மொழியே காரணம்).

sheep, sun

‘உலகம் உவப்ப வலனேர்பு’

சங்கத் தமிழ் நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு’ – என்று துவங்கும்

மற்ற நூல்களின் முதல் வரிகள்:–

‘உலகந்திரியா’ (மணிமேகலை),

‘உலகம் மூன்றும்’ (வளையாபதி),

‘உலகெலாம் உணர்ந்து’ (பெரிய புராணம்),

‘உலகம் யாவையும்’ (கம்ப ராமாயணம்)

‘நனந்தலை உலகம்’ (முல்லைப் பாட்டு),

‘மூவா முதலா உலகம்’ (சீவக சிந்தாமணி),

‘நீடாழி உலகத்து’ (வில்லி பாரதம்),

‘வையகம் பனிப்ப’ (நெடுநல் வாடை),

‘மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை’ (சிறு பாணாற்றுப்படை),

‘மாநிலஞ்சேவடியாக’ (நற்றிணை)

இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மாநிலம், வையகம், உலகம் – ஆகியன ஒரு பொருளுடைத்து.

ஒரு நூலை மங்கலச் சொல்லுடனே துவங்க வேண்டும் என்பது,

“வழிபடு தெய்வ வணக்கம் கூறி, மங்கல மொழி முதல் வகுத்தெடுத்துக் கொண்ட, இலக்கண, இலக்கியம் இடுக்கணின்றி, இனிது முடியும் என்மனார் புலவர்” என்னும் சூத்திரத்தில் உளது.

 

 

swastik, om lamps, kotipali shivratri

பழங்கால சம்ஸ்கிருத, பிற்கால தமிழ் கல்வெட்டுகள் ‘ஸ்வஸ்தி’ என்ற மங்கலச் சொல்லுடன் துவங்கும்.

பழைய தமிழ் திரைப்படங்கள், நூல்கள் எல்லாம் ‘சுபம்’, அல்லது ‘ஓம் சாந்தி’, ‘ஓம் தத்சத்’ என்று முடியும்.

பிரிடிஷ் லைப்ரரியில் நான் காணும் நூற்றாண்டுகளுக்கு முந்தைய நாவல்கள், நாடகங்களிலெல்லாம் இதைக் காண்கிறேன். வடமொழி நாடகம் அனைத்தும் ‘ஸ்வஸ்தி’ வாசகத்துடன் முடிவடையும். காளிதாசன் போன்ற உலக மகா கவிஞனும் கூட கடவுள் வாழ்த்துடன் துவங்கி, ஸ்வஸ்தி வாசகத்துடன் முடிக்கிறான்.

 

தமிழ் வேதமாகிய திருக்குறள் ‘அகர’ என்ற மங்கலச் சொல்லுடன் துவங்கும். ‘அ’ – என்ற சொல் அவ்வளவு புனிதமானது. உலகிலேயே மிகவும் பழைய சமய நூலான ரிக் வேதம் அக்னி – என்ற ‘அ’-காரத்துடன் துவங்கும்.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்னும் காவியம், ‘திங்கள், ஞாயிறு, மாமழை’ — ஆகிய மூன்றையும் வாழ்த்தித் துவங்கும்.

தொல்காப்பிய சூத்திரத்தில் கடவுள் வாழ்த்து பற்றிக் கூறுகையில், “கொடிநிலை, கந்தழி, வள்ளியென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்பார். அந்தக் ‘கொடிநிலை’, ‘கந்தழி’, ‘வள்ளி’ இதுதான் என்று சில உரையாசிரியர் பகர்வர். எப்படியாகிலும் இம்மூன்றும் மங்கலச் சொல் பட்டியலில் உள்ள சொற்களே!

உலகில் வேறு எங்குமிலாத இந்த மங்கலச் சொல் வழக்கு இந்து இலக்கியத்தில் மட்டும் இருப்பது பாரதீயப் பண்பாட்டின் தனிப்பெரும் முத்திரை ஆகும்!

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

–சுபம்–

 

எது அழகு? நான்கு கவிஞர்கள் கருத்து (Post No.2787)

bob painting 3

Written by london swaminathan

 

Date: 6 May 2016

 

Post No. 2787

 

Time uploaded in London :– 10-27 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

bob painting 2

கல்வி அழகு

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம் யாமென்னு நடுவு நிலைமையால்

கல்வியழகே அழகு – நாலடியார் 131

 

சிகை அலங்காரமும், ஆடையினது கரை அழகும், மஞ்சள் பொடி பூசியதால் ஏற்படும் அழகும் அழகல்ல. மனத்தினால் நாம் நல்லவர் என்று எண்ணும் நடுநிலைமையால் கல்வியால் உண்டாகும் அழகே அழகு. (கல்விகற்றால், நல்லவர் ஆவர். அதுவே அழகு)

நாலடியார் என்பது பல கவிஞர்கள் சேர்ந்து படிய 400 பாடல்களைக் கொண்ட நூல்.

xxx

சொல் அழகு

மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு

–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)

 

பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்ரமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.

Xxx

bob painting1

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்

நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ

டெழுத்தின் வனப்பே வனப்பு

–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)

பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.

Xxx

thalai atti bommai

வள்ளுவன் கூறுகிறான்

சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்

மண்மாண் புனை பாவை அற்று

–திருக்குறள் 407 (திருவள்ளுவர் இயற்றியது)

 

–Subham–

 

வள்ளுவர் சொன்ன ‘செக்ஸி’ உவமை! (Post No 2783)

hugging

Written by london swaminathan

 

Date: 5 May 2016

 

Post No. 2783

 

Time uploaded in London :– 6-19 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

காமத்துப் பாலில் 250 குறள்களில் காம சம்பந்தமான விஷயங்களை வள்ளுவன் பாடியிருப்பதை நாம் அறிவோம். அறம், பொருள் பற்றிப் பாடிய குறள்களிலும் ஆங்காங்கே சில ‘செக்ஸி’ உவமைகள் இருப்பது படித்து இன்புறத் தக்கது.

 

முலையிரண்டும் இல்லாத பெண், ஆசைவயப்பட்டது பற்றிப் பாடுகிறான் (குறள் 402) வள்ளுவன்.

 

அறியாமை (கல்லாமை) பற்றி பத்து குறட்பா எழுதிய வள்ளுவன் 5 பாடல்களில் அருமையான உவமைகளைப் பயன்படுத்தி உலக மஹா கவிஞன் – உவமை மன்னன் — காளிதாசனுடன் போட்டியிட முயல்கிறான்!

 

முதலில் மஹாபாரதத்தில் வரும் அறியாமை பற்றிய ஒரு ஸ்லோகத்தைக் காண்போம்:

 

“மனிதனுக்கு ஒரே எதிரி அறியாமைதான்; இரண்டாவது எதிரியே அவனுக்கு இல்லை; அறியாமையால் சூழப்பட்டவன் மோசமான கொடூரமான செயல்களில் இறங்கிவிடுகிறான்” – என்று வியாசர் சொல்லுகிறார்:-

 

ஏகசத்ருர் நத்வீயோ(அ)ஸ்தி சத்ருரக்ஞானதுல்ய: புருஷஸ்ய ராஜன்

யேனாவ்ருத: குருதே சம்ப்ரயுக்த: கோராணி கர்மாணி சுதாருனானி

–மஹாபாரதம், சாந்தி பர்வம், 297-28

 

வள்ளுவன் வாய்மொழி

உவமை 1

கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற்றற்று- குறள் 402

பொருள்:- கல்லாத ஒருவன் ஒரு சபையில் பேச விரும்புவது, இயல்பாகவே ஸ்தனங்கள் (முலைகள்) இரண்டுமில்லாத ஒரு பெண், இன்பத்தை அனுபவிக்க விரும்பிய கதையாக முடியும்.

 

உவமை 2

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் கல்லாதவர் குறள் 406

பொருள்:-கல்லாதவர்கள் இருந்தும் இறந்தவர்களுக்குச் சமம்; அவர்கள் எதுவும் விளையாத களர் நிலத்துக்கு ஒப்பானவர்கள்.

 

உவமை 3

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவையற்று-குறள் 407

பொருள்:- ஆழ்ந்த, சிறந்த அறிவு இல்லாதவனின் அழகு (தோற்றம்) மண்பொம்மை போல இருக்கும் (தண்ணீரில் விழுந்தால் சாயம் வெளுத்துப் போகும்!)

 

உவமை 4

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்–குறள் 410

 

பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)

 

உவமை 5

அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல் -குறள் 401

பொருள்:- நூல் பல கல்லாமல், ஒரு சபையில் பேசுவது, கட்டம் போட்டு சதுரங்கம் வரையாமல் தாயக் கட்டையை உருட்டுவது போலத்தான்.

fool

‘உன் மனைவி ஊருக்கே மனைவி’ கதை

முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது? (31 அக்டோபர் 2015) என்று முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:–

 

நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுபவன் மூடன், முட்டாள் என்று இந்திய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக மஹா கவி காளிதாசனும் இப்படி இருந்தவர் என்றும் பின்னர் காளிதேவியின் அருள் பெற்று சிறந்தவர் என்றும் செவி வழிக் கதைகள் செப்பும்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை

முட்டாள்கள் அர்த்தம் தெரியாமல் சொற் பிரயோகம் செய்வர். தமிழில் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. ஒரு ஊரில் ஒரு பெரியவரின் தாயார் இறந்தவுடன் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்றனர். ஒரு முட்டாள் ஏது சொல்வதென்று திகைத்திருந்த தருணத்தில் எல்லோரும் செல்வதைக் கவனித்தான். “உனது தாயின் இழப்பு உனக்கு மட்டும் இழப்பன்று; அவர் ஊருக்கே தாயாக விளங்கினார். ஆகையால் இன்று நாங்கள் எல்லோரும் தாயை இழந்த பிள்ளையாகி விட்டோம் என்று பலரும் கூறினர். இவனும் அப்படியே கூறிவிட்டு,  வீட்டுக்கு வந்தான். மற்றொரு நாள் ஊர்ப் பெரியவரின் மனைவி இறந்து போனாள். இவன் எல்லோருக்கும் முன் முந்திக் கொண்டு, முந்திரிக் கொட்டை போலச் சென்றான். ஊரே கூடியிருந்தது. இந்த முட்டாள் முன்னே சென்று, “உனது மனைவியை இழந்தது உனக்கு மட்டும் துக்கமன்று. அவள் உனக்கு மட்டும் மனைவியில்லை; ஊருக்கே மனைவியாகத் திகழ்ந்தாள் இன்று நாங்கள் அனைவரும் மனைவியை இழந்த கணவர் ஆகிவிட்டோம்” என்றான். பக்கத்தில் இருந்த பத்துப் பேர் அவனுக்கு அடி உதை கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!!

 

மஹாபாரதம் இதை இன்னும் அழகாகச் சொல்லுகிறது. ஒரு கிளியானது சொன்னதைச் சொல்லும்; அழகாகச் சொல்லும். ஆனால் அதையே ஒரு பூனை பிடிக்க வரும் போது அம்மா, என்னை பூனை பிடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. இதே கதைதான் முட்டாள்களின் கதையும்.

 

பல மொழிகளிலும் அறியாமை பற்றிய கருத்துகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன:

 

1.Ignorance is the night of the mind (Chinese proverb)

 

மனதின் இருண்ட நேரம் அறியாமை (சீனப் பழமொழி)

 

2.There is no blindness like ignorance.

அறியாமை என்பது அந்தகத்தன்மை (குருடு)

 

3.Thedevil never assails a man except he find him either void of  knowledge or  of the fear  of god.

அறிவு இல்லாதவனையும், கடவுளை நம்பாதவனையும்தான் பேய்கள் பிடிக்கின்றன

 

4.Scinece has no enemy but the ignorant.

விஞ்ஞனத்துக்கு ஒரே எதிரி அறிவற்றவனே

 

5.Art has no enemy but ignorance

கலையின் எதிரி அறியாமை

 

6.If the blind lead the blind, both shall fall into the ditch

குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் விழுவர் (உபநிஷத்திலும், பைபிளிலும் உள்ள உவமை)

 

இறுதியாக மத்திய கிழக்கில் அராபிய மொழியில் உள்ள பழமொழி

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

அறியான் அறியான் தான் அறியாதவன் என்று – அவன் ஒரு முட்டாள் – ஒதுக்குக

அறியான் அறிவான் தான் அறியாதவன் என்று – அவன் எளியவன் – கற்பிக்க

அறிவான் அறியான் தான் அறிந்தவன் என்று – அவன் உறங்குகிறான் – எழுப்புக

அறிவான் அறிவான் தான் அறிந்தவன் என்று – அவன் மேதாவி – பின்பற்றுக

–சுபம்–

அரிது, அரிது, ‘அநாயாச மரணம்’ அரிது! (Post No 2780)

happy-valmiki-day08

Written by london swaminathan

 

Date: 4 May 2016

 

Post No. 2780

 

Time uploaded in London :– 8-20 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சம்ஸ்கிருதத்தில் ஒரு பொன்மொழி இருக்கிறது. எது துர்லபம்? அதாவது கிடைத்தற்கு அரியது எது?

 

“அநாயாசேன மரணம் வினா தைன்யேன ஜீவனம்”

அநாயாசேன மரணம்= எளிதான/ கஷ்டப்படாமல் மரணம்

வினா தைன்யேன ஜீவனம் = வறுமையற்ற வாழ்வு.

 

‘உடம்பைக் கடம்பால் அடி’ என்பது  தமிழ்ப் பழமொழி. என் பாட்டி கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலில் படுத்து உறங்குவாள். அவள் இறுதி மூச்சு வரை நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தாள். நாங்கள் எனக்குத்தான் இறுதிக் காலத்தில் இந்த கட்டில் சொந்தம் என்று சகோதரர்களுக்குள் “ஜோக்” அடித்துக் கொள்வோம்! அக்கட்டில் இன்னும் மதுரையில் இருக்கிறது. அந்தப் பாட்டி தினமும் தூங்குவதற்கு முன் எனக்கு அநாயாச மரணதத்தைக் கொடுடாப்பா என்று பெரிதாக பிரார்த்தனை செய்துவிட்டுத் தூங்குவாள். சிறுவயதில் இந்தச் சொற்களுக்கு எங்களுக்கு அர்த்தம் தெரியாது.

இரவில் பாட்டியைப் பார்த்தால் பாட்டி சொன்னதையே திருப்பிச் சொல்லி கிண்டல் செய்வோம்.

 

கஷ்டப் படாமல் ஒருவர் இறப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். நான் பார்த்த பல ‘கேஸ்’கள் ஆஸ்பத்திரியில் பல காலம் கிடந்து, படுக்கையிலேயே மல, மூத்ர விசர்ஜனம் செய்து, குடும்பத்தினரே, இவர் இருந்து சித்திரவதைப்படுவதை விட, (உண்மையில்………எங்களைச் சித்திரவதைப்படுத்துவதை விட), போவதே மேல் என்று சொல்லுமளவுக்குப் போய்விடுகிறது. இன்னும் பலர் விஷயத்தில் காசுக்காக டாட்டர்களே மெஷின் மூலம் உயிரைத் தக்கவைத்து, வேண்டாதபோது நம்மைக் கூப்பிட்டு எல்லா உறவினர்களையும் வரும்படி சொல்லுங்கள், பிளக்கைப் பிடுங்கப் போகிறோம் (ஆக்சிஜன் சப்ளை, இருதயத்துடிப்புக்கு உதவும் மிஷின்) என்று சொல்லுவதைப் பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் பார்க்கையில் நமக்கு அநாயாச மரணம் எவ்வளவு முக்கியம் என்று தெரியும். நாமும் பிரார்த்திப்போம்.

 

வறுமை பற்றி பெரியகட்டுரை எழுதத்தேவையே இல்லை. எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. கொடிது கொடிது வறுமை கொடிது – என்று அவ்வையே பாடிவிட்டார்.

 

வால்மீகி கூறும் அரிய விஷயம்

 

எது அரிது (துர்லபம்)? என்பதற்கு வால்மீகி முனிவர் வேறு பதில் சொல்லுகிறார்.

சுலபா புருஷா ராஜன் சததம் ப்ரியவாதின:

அப்ரியஸ்ய ச பத்யஸ்ய  வக்தா ஸ்ரோதா ச துர்லப:

–வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், 37-2

 

பத்யஸ்ய  வக்தா = கசப்பான உண்மையைச் சொல்பவர்

 

பத்யஸ்ய  ஸ்ரோதா = கசப்பான உண்மையைக் கேட்பவர்

 

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நமக்கு இது எவ்வளவு உண்மை என்று தெரியும். அம்மா, அப்பாவைத் தவிர வேறு எவரும் நம்மிடம் மனம் திறந்து பேசுவதில்லை. கசப்பான உண்மையை அவர்கள் மட்டுமே நமக்குச் சொல்வர். நாமோ அதைக் கேட்பதில்லை ஆகவே துர்லபம்; அதாவது அரிதே.

 

கசப்பான உண்மையை நமக்கு வேறு யாரும் சொலாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள்:

குடும்பத்திலும் அலுவலகத்திலும் பொது வாழ்விலும் நம் மீது பொறாமை கொண்டவர்கள், “ஆள் நன்றாகச் சிக்கித் தவிக்கட்டும்; வேடிக்கை பார்ப்போம்” என்று எண்ணலாம். இரண்டாவது காரணம்:- நமக்கு ஏன் வம்பு? கசப்பான  உண்மையைச் சொன்னால் நம்மைத் தப்பாக நினைப்பார்கள் என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள்.ஆகவே இவ்வகை ஆட்களும் அரிதே!

IMG_3286.JPG

 

அரிது அரிது ……………………….. அவ்வைப் பாட்டி சொன்னது

 

என்னுடைய ஒரு பழைய கட்டுரையில் நான் கூறிய விஷயம் இதோ :-மாநுடப் பிறவி அரிது! அரிது!! (21 அக்டோபர் 2013)

 

அரியது கேட்கின் வரிவடி வேலோய்!
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவிடு
பேடு நீக்கிப் பிறத்தல் அரிது
பேடு நீக்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே

என்று அவ்வைப் பாட்டியும் கூறுவர்.

ஆதிசங்கரர் கூற்று

ஆதிசங்கரர் பல இடங்களில் மாநுடப் பிறவியின் அரிய தன்மை பற்றிக் கூறுகிறார்: “ஜந்தூனாம் நரஜன்ம துர்லபத:” (அரிது அரிது மானுடராதல் அரிது). அவர் எழுதிய விவேக சூடாமணியில் 2, 3, 4– ஆவது ஸ்லோகங்களிலேயே இதைப் பற்றிப் பிரஸ்தாபிக்கத் துவங்கி விடுகிறார்.

அரிது அரிது மனிதப் பிறவி, அதிலும் அரிது பிரம்மத்தை நாடும் பிறவி
அதனிலும் அரிது வேத அறிவு, அதனிலும் அரிது ஆத்ம ஞானம்
முக்தி பெறுவதோ நூறு கோடியில் ஒன்றே!

மூன்றாவது ஸ்லோகத்தில் மூன்று அரிய விஷயங்களைக் கூறுகிறார்: மனுஷ்யத்வம், முமுக்ஷுத்வம், மஹா புருஷர்களின் அருள். மனிதப் பிறவி, வீடு பேற்றை நாடல், பெரிய குருவின் பூரண பாதுகாப்பு என்பதே அவர் கூறுவது.

வேதத்தைப் படித்த பின்னரும் முக்தியை நாடாதவன் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம் என்கிறார் நாலாவது ஸ்லோகத்தில்.

இதையெல்லாம் படிப்பவர்களும் அரிதே!!!

–சுபம்–

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் -1 (Post No 2779)

hindu-zodiac

Date: 4 May 2016

 

Post No. 2779

 

 

Time uploaded in London :–  6-12 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்.

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.ஆ

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் -1

 

.நாகராஜன்

star2

நட்சத்திர தலங்கள்

ஹிந்து அற நூல்கள் காட்டும் வழிகாட்டுதலின் படி 27 நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்களே. அவரவரக்கு உரிய காலத்தில் உரிய பலனை வழங்கும் அற்புத ஆற்றலை அவை கொண்டிருக்கின்றன.

இந்த 27 நட்சத்திரங்களும் பூஜித்த தலங்கள் இந்தியாவெங்கும் உள்ளன. இவற்றைத் தனது இடையறாத ஆய்வால் கண்டு தமிழ்த்தாத்தா ஸ்ரீ உ.வே.சாமிநாதையர் குறிப்புகளாக எழுதி வைத்துள்ளார்.

அதிகாரபூர்வமான ஆய்வு என்பதால் இதில் உள்ள சிறப்பை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நட்சத்திரங்கள் பூஜித்த தலங்கள் வருமாறு:-

 

அசுவதி –  திருக்கடையூர்

மயிலாடுதுறைதரங்கம்பாடி இரயில் கிளைப்பாதையில் 22 கிலோமீட்டரில் உள்ள தலம். இறைவன்: அமிர்தகடேசர். இறைவி அபிராமி அம்மை. அமிர்த புஷ்கரணி உள்ள தலம். எம சம்ஹாரம் நடந்த தலம். சித்திரை மாதம் 18 நாட்கள் நடக்கும் விழாவில் மக நட்சத்திரத்தில் இத்திருவிழா சிறப்புற நடக்கும்.

 

பரணிஸ்ரீ வாஞ்சியம்

ஸ்ரீ வாஞ்சியம்: கங்கை குப்தமாக (மறைவாக) வசிக்கப்பெற்ற தலம்.சுவாமி சூலத்தால் குத்தி உண்டாக்கப்பெற்றது. சூலம் குத்திய அடையாளமாக மூன்று கிணறுகள் இங்கு உண்டு. யமன் அக்கினி மூலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். லட்சுமி திருமாலை அடைவதற்குத் தவம் செய்த தலம். சந்தன விருட்சம் பிரகாரத்தில் இருக்கிறது. கோவிலின் வடக்கில் உள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்நானம் செய்வது விசேஷம். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு யம வாதனை இல்லை. கோவிலில் யமனுக்கு ஒரு சன்னதி இருக்கிறது. சுவாமிக்கு யமவாகனம் உள்ளது.காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் தென்னாட்டுத் தலங்கள் ஆறினுள் ஒன்று. (இதர ஐந்து தலங்கள்: திருவெண்காடு, திருவையாறு, மாயூரம், திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு)

 

கார்த்திகைசரவணப் பொய்கை, காசி, அருணாசலம்

காசி:மோட்சபுரிகள் ஏழில் நடு நாயகமாக விளங்கும் தலம். இந்தப் பிறவியிலேயே முக்தி தரும் சிறப்புடைய தலம். பிரளய காலத்தில் மூலப் பொருள், அனைத்தையும் ஒரு குடுக்கையில் அமுதம் கலந்து அடைத்து விடுகிறது. அதைப் பத்திரப்படுத்தும் இடம் காசி. சாலோக்யம், சாரூப்யம், சாந்நித்யம் சாயுஜ்யம் என்ற நான்கு வகை முக்திகளில் இறைவனே ஆதல் என்ற சாயுஜ்ய  முக்தி தரும் தலம். ஜைன மதத்தைத் தோற்றுவித்த பார்சுவநாதர் பிறந்த இடமும் இதுவே.

 

ரோஹிணி – ஆனைக்கா, எல்லா விஷ்ணு தலங்களும்

திரு ஆனைக்கா : காவிரியின் வடபுறம் ஒரு மைல் தூரத்தில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் அப்புலிங்க தலம்.சுவாமி பெயர் – ஜம்புகேஸ்வரர். அம்பாள்: அகிலாண்டேஸ்வரி.இங்கு ஒரு யானையும் ஒரு சிலந்தியும் பூஜை செய்து கொண்டு வந்தன.வெயில் படாமல் இருப்பதற்காக சிலந்தி லிங்கத்தின் மேல் கூடு கட்டும். யானை தினமும் காவேரி ஸ்நானம் செய்து துதிக்கையில் காவேரி தீர்த்தம் ஏந்தி ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும். சிலந்தி கட்டிய கூடு கலைந்து விடும். இதைக் கவனித்து வந்த சிலந்தி ஒரு நாள் கோபம் கொண்டு யானையின் துதிக்கையினுள் நுழைந்து கடிக்கவே  யானை வலி பொறுக்க முடியாமல் புரண்டு துடித்து மரணம் அடைந்ஹது. சிலந்தியும் மாய்ந்தது.இச்சிலந்தி மறு ஜன்மத்தில் கோச்செங்கணான் சோழனாகப் பிறந்தது. கோட்செங்கச் சோழன் யானை ஏறி வர முடியாதபடி 54 மாடக் கோவில்களைக் கட்டுவித்தான்.

இங்கு தவம் செய்து வந்த ஜம்பு மஹரிஷி தலையில் நாக மரம் உண்டாயிற்று. தவம் செய்து வந்த இடத்தில் லிங்கம் இருந்த படியால் இது ஜம்புகேஸ்வரம் என்ற பெயரைப் பெற்றது. இந்த தலத்தை ஜம்புகேஸ்வரம் என்று அழைப்பர். பஞ்ச பிரகாரங்கள் உள்ள இந்தக் கோவிலில் அம்பாள் கன்னிப் பெண்ணாகவே தவம் செய்வதாக ஐதீகம். இரண்டாம் பிரகாரத்தில் ராமபிரானால் கட்டப்பட்ட பெரிய மண்டபம் உள்ளது.

தொடரும்

மாடு மேய்க்காமல் கெட்டது, பயிர் பார்க்காமல் கெட்டது! (Post No.2761)

air ulavan

மே 2016 காலண்டர் (துர்முகி  சித்திரை/ வைகாசி)

Compiled by london swaminathan

Date: 27 ஏப்ரல் ,2016

 

Post No. 2761

 

Time uploaded in London :–  16-50

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 3 gaurs

பசு, காளை, மாடு பற்றிய 31 தமிழ்ப் பழமொழிகள் மே மாத காலண்டரை அலங்கரிக்கின்றன. ஒவ்வொரு பழமொழியையும் யோசித்துப் பார்த்தால் பொருள் விளங்கும்; நீங்களே ஒவ்வொன்றைப் பற்றியும் கட்டுரை எழுதத் துவங்கி விடுவீர்கள். இது வரை இந்த பிளாக்கில் சுமார் 2000 தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதப் பழமொழிகளை தலைப்பு (சப்ஜெக்ட்) வாரியாகத் தொகுத்துக் கொடுத்துள்ளேன். தமிழில் 20,000 பழமொழிகள் உள்ளன!! வாழ்க தமிழ்!

 

 

முக்கிய நாட்கள்:- மே 1 மே தினம்,  4 அக்னி நட்சத்திரம் ஆரம்பம், 9 அக்ஷய த்ருதியை, 21 புத்த ஜயந்தி, வைகாசி விசாகம், 28 அக்னி நட்சத்திரம் முடிவு.

முகூர்த்த நாட்கள்:- 2, 4, 9, 11, 12, 19,26; அமாவாசை:- 6; பௌர்ணமி:- 21; ஏகாதசி:- 3, 17.

 

மே 1 ஞாயிற்றுக் கிழமை

ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கனும்.

மே 2 திங்கட் கிழமை

மாடு கெட்டால் தேடலாம், மனிதர் கெட்டால் தேடலாமா?

மே 3 செவ்வாய்க் கிழமை

மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை பெய்யும்

மே 4 புதன் கிழமை

மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.

மே 5 வியாழக் கிழமை

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

 2PADDY THRASHING

 

மே 6 வெள்ளிக் கிழமை

அடியாத மாடு படியாது.

மே 7 சனிக் கிழமை

மாடு கிழமானாலும் பாலின் ருசி போகுமா?

மே 8 ஞாயிற்றுக் கிழமை

மாடு தின்கிற மாலவாடு, ஆடு தின்கிறது அரிதா?

மே 9 திங்கட் கிழமை

மாட்டைப் புல் உள்ள தலத்திலும், மனிதனை சோறு உள்ள தலத்திலும் இருக்க ஒட்டாது.

மே 10 செவ்வாய்க் கிழமை

மாடு நினைத்த இடத்தில் தொழுவம் கட்டுவதா?

beauty bull

 

மே 11 புதன் கிழமை

மாடு மேய்க்கிற தம்பிக்கு மண்டலமிட்ட பெண்சாதி

மே 12 வியாழக் கிழமை

மேய்க்கிற மாட்டின் கொம்பிலே புல்லைக் கட்ட வேணுமா?

மே 13 வெள்ளிக் கிழமை

பாலைப் பார்த்து பசுவைக் கொள்ளு, தாயைப் பார்த்து பெண்ணைக் கொள்ளு.

மே 14 சனிக் கிழமை

பசு உழுதாலும் பயிரைத் தின்ன வொட்டான்.

மே 15 ஞாயிற்றுக் கிழமை

பசுத்தோல் போர்த்திய புலி போல

 azakana madu, cow

 

மே 16 திங்கட் கிழமை

பசுமாடு நொண்டியானால், பாலும் நொண்டியா?

மே 17 செவ்வாய்க் கிழமை

பசுவைக் கொன்று செருப்பு தானம் செய்தது போல.

மே 18 புதன் கிழமை

பசுவுக்கு பிரசவ வேதனை , காளைக்கு காம வேதனை

மே 19 வியாழக் கிழமை

பசு விழுந்தது புலிக்கு ஆதாயம்

மே 20 வெள்ளிக் கிழமை

மாடு திருப்பினவன் அர்ச்சுனன்

 

buffalo boy, cambodia

மே 21 சனிக் கிழமை

மாடு தின்னிக்கு வாக்குச் சுத்தம் உண்டா?

மே 22 ஞாயிற்றுக் கிழமை

மாடு மறுத்தாலும் பால் கறக்கும், வாலில் கயிறைக் கட்டினால்.

மே 23 திங்கட் கிழமை

காளை போன வழியே கயிறு போகும்.

மே 24 செவ்வாய்க் கிழமை

இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்

மே 25 புதன் கிழமை

எருதுக்கு நோய்வந்தால் கொட்டகையைச் சுடுகிறதா?

 

fighting boys

மே 26 வியாழக் கிழமை

எருது ஏழையானால் (கூடாவிட்டால்), பசு பத்தினித்துவம் கொண்டாடும்

மே 27 வெள்ளிக் கிழமை

எருது கெட்டார்க்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளைத் தாய்ச்சிக்கும் எட்டே கடுக்காய்

மே 28 சனிக் கிழமை

எழுது கொழுத்தால் தொழுவத்தில் இராது, பறையன் கொழுத்தால் பாயில் இரான்.

மே 29 ஞாயிற்றுக் கிழமை

பசு மாடும் எருமை மாடும் ஒன்றாகுமா?

மே 30 திங்கட் கிழமை

பசு கருப்பென்று பாலும் கருப்பா?

மே 31 செவ்வாய்க் கிழமை

மாட்டை மேய்த்தானாம், கோலைப் போட்டானாம்

தண்ணீர் மாடு

–சுபம்–

 

 

கவிதைச் சித்தன் கும்மாளம்! (Post No.2743)

IMG_3286

Compiled  BY S NAGARAJAN

Date: 21 April 2016

 

Post No. 2743

 

 

Time uploaded in London :–  9-15  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தமிழ் என்னும் விந்தை

கவிதைச் சித்தன் கும்மாளம்!

புலவர் குடந்தை வேலன்

.நாகராஜன் (எனது நோட்புக்கிலிருந்து)

 

கவிஞன் ஒருவனின் கும்மாளத்தைச் சித்தரிக்கும் கவிதை ஒன்று இது.
இது போன்றதொரு கவிதையை யாரும் பார்த்திருக்க முடியாது; படித்திருக்க முடியாது.

 

‘கவிஞராக’ என்ற புத்தகத்தில் அ.கி,பரந்தாமனார் எடுத்துக்காட்டாகத் தந்த இந்த ‘கவிதைச் சித்தன் கும்மாளம்’ என்ற கவிதை எனது நோட்டுப் புத்தகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் குறித்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது செல்லரித்துப் போன நிலையில் எனது சகோதரர் திரு சீனிவாசன் திடீரென்று அது கிடைத்து விட்டதாககக் கூறி தனது குறிப்பேட்டிலிருந்து அதை போட்டோ பிடித்து அனுப்பி இருந்தார்.

 

இதை எழுதியவர் குடந்தை வேலன். இவரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் அற்புதமான கவிஞர் இவர் என்பதில் ஐயமே இல்லை. கவிதையைப் படித்தோர் கும்மாளம் போட்டுச் சொல்லும் உண்மை இது.

நல்ல கவிதை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அதை இங்கு பகிர்கிறேன்.

 

கவிதைச் சித்தன் கும்மாளம்!

எழுதியவர் குடந்தை வேலன்

 

கல்லொடு கல்லினைத் தட்டிக் களைத்திடுங்

கற்றறி மூடர்களே – ஒரு

சொல்லொடு சொல்லினைத் தட்டி நெருப்பொடு

சூளை கிளப்பிடுவோம்

 

ஆனையைப் பானையில் மூடி வைப்போமந்த

அண்டப் பெருவெளியும் – மிகக்

கூனிக் குறுகியெம் சொல்லெனும் மாயக்

குடுக்கையில் நின்றாடும்

 

வெண்ணெயை வைத்திட்டு நெய்க்கு அலைந்திடு

வீணர்களே வாரும் – இந்த

மண்ணில் இருக்குது விண்ணுலகம் எங்கள்

மந்திரத்தில் பாரும்

 

சப்பி எறிந்திட்ட கொட்டையில் மாமரம்

சட்டென ஓங்குது பார் – எழில்

சிப்பியில் முத்தெனச் சொல்லினில் வையச்

சிலிர்ப்பு கிளம்புது பார்

 

ஐந்தலைப் பாம்பையும் ஆட்டிப் பிடித்தே

அடக்கி மடக்கிடுவோம் –கர்ம

சிந்தையில் சீறிடும் அஞ்சு புலன்களைச்

சிந்தில் ஒடுக்கிடுவோம்

 

வானத்தில் வில்லை வளைத்திடுவோம் அந்த

மண்ணைச் சுருட்டிடுவோம் பர

மோனத்தை ஞானத்தளையில் பிடித்தே

மூப்பில் ஆழ்த்திடுவோம்

IMG_4972

நச்சினைத் தேனென்று மாந்திடுவோம் இசை

ஞான நடம் புரி கொள்வோம் –அந்த

அச்சிவ சங்கரன் நச்சை அயின்றதும்

அற்புதம் அற்புதமோ

 

வேதக்குயவன் வனைந்திட்ட மட்குடம்

வீழ்ந்தே  உடைந்ததடா –யாம்

நாதக்குழம்பில் புனைந்திட்ட சொற்கடம்

ஞானம் முழங்குதடா

(சொற்கடம் என்பதை சொற்கள் தம் எனப் பிரிக்க வேண்டும்)

 

என்ன ஒரு அருமையான கவிதை! இது போலொரு கவிதையை நான் கவிக் கூற்றாக எந்த ஒரு மொழியிலும் படித்ததில்லை.

 

இதை இயற்றியவரைப் பற்றிய குறிப்புகள் இல்லையே என மனம் ஏங்குகிறது.

 

அவரது இதர கவிதைகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதையும் மனம் சிந்தித்து உவகை கொள்கிறது!

*****