மறு பிறப்பு பற்றி ஆராய்ந்த மாபெரும் விஞ்ஞானி! (Post No. 2410)

book reincarnation

Written by S NAGARAJAN

Date: 21 December 2015

 

Post No. 2410

 

Time uploaded in London :– காலை 5-56

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

அறிவியல் துளிகள் தொடரில் 11,டிசம்பர்,2015 தேதியிட்ட பாக்யா இதழில் வெளியான கட்டுரை

மறு பிறப்பு பற்றி ஆராய்ந்த மாபெரும் விஞ்ஞானி!

.நாகராஜன்

 

அவர் (டாக்டர் ஸ்டீவன்ஸன்) ஒன்று மாபெரும் தவறை இழைத்திருக்க வேண்டும். அல்லது இருபதாம் நூற்றாண்டின் கலிலியோ என்ற (மாபெரும் புகழுடன்) அறியப்பட வேண்டும்”    

                                                            –   டாக்டர் ஹரால்ட்

 

லியஃப் (டாக்டர்ஸ்டீவன்ஸனின் மறுபிறப்பு ஆராய்ச்சி பற்றி ஜர்னல் ஆஃப் நெர்வஸ் அண்ட் மென்டல் டிஸீஸ் பத்திரிகையில் எழுதியது)

 

Capa livro Reencarnação

    உலகிலுள்ள மறுபிறப்பைப் பற்றி அறிவியல் ரீதியாக அணுவளவும் பிசகாது ஆய்வு நடத்தி உலகைப் பிரமிக்க வைத்தவர் டாக்டர் ஐயான் ஸ்டீவன்ஸன். கனடா நாட்டைச் சேர்ந்த இவர் 3000 குழந்தைகளைப் பற்றி ஆராய்ந்தார். பெரும்பாலும் குழந்தைகளுக்கே முன்பிறப்பு பற்றிய பல தகவல்கள் துல்லியமாகத் தெரிகின்றன என்று இவர் கண்டு பிடித்தார். மிகச் சிறு வயதில் அப்போது பிறந்திருக்கும் குடும்பத்தினரின் பழக்க வழக்கங்கள், நடத்தைகளுக்கு முற்றிலும் மாறுபட்டு நடக்கும் குழந்தைகள் இவரது கவனத்தை கவர்ந்தன. உலகமெங்கும் சுற்றினார். அப்படி முன்பிறவி பற்றிக் கூறும் தகவல்களை நுணுக்கமாக ஆராய்ந்தார்.

 

 

 தனது ஆய்வில் இவர் சேர்த்த இன்னொரு முக்கிய அம்சம் உடல் அடையாளங்கள் குறித்தது. இப்பிறவியில் உடலில் காணப்படும் வடுக்கள், தழும்புகள் முற்பிறவி வாழ்க்கையுடன் ஒத்திருப்பது இவரைப் பெரிதும் கவர்ந்தது. இந்த அங்க அடையாளங்கள் முற்பிறவியின்கதைகளைத்தெரிவிக்கும் ஒரு அம்சம் என்பதையும் இவர் கண்டுபிடித்தார்.

ஹிப்நாஸிஸ் அல்லாத அறிவியல் ரீதியிலான ஒரு அணுகுமுறையை இவர் மேற்கொண்டதால் இவரை யாரும் ஏளனம் செய்யவோ அல்லது மறுத்துப் பேசவோ முடியவில்லை.

 

 

தனது அறை ஒன்றில் விசேஷ பேழை ஒன்றை இவர் பூட்டி வைத்துள்ளார். அதை எப்படித் திறப்பது என்ற இரகசியம் அவருக்கு மட்டுமே தெரியும். தனது மறுபிறப்பில் அல்லது இன்னும் ஏதாவது ஒரு வகையில் அந்தப் பேழையை நிச்சயம் தன்னால் திறக்க முடியும் என்பது அவரது நம்பிக்கை. இப்போது இறந்து விட்ட அவர் எப்படி அந்தப் பேழையை எப்போது திறக்கப் போகிறார் என்பதை உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த நாள் என்று வருமோ!

 

 

20 Cases suggestive of reincarnation என்ற அவரது புத்தகம் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு புத்தகம்.

அவர் தரும் சில சுவையான முற்பிறவி சம்பவங்களில் முக்கியமான ஒன்றானஸ்வீட் ஸ்வர்ணலதாகேஸைப் பார்ப்போம்:-

 

 ian-stevenson-md1

ஸ்வர்ணலதாவிற்கு மூன்று வயது ஆகும் போது அவள் தனது முன்பிறவி பற்றிய 50 நுணுக்கமான தகவல்களைத் தந்தாள். அத்தனையையும் ஸ்டீவன்ஸன் ஆராய்ந்தார்.

ஸ்வர்ணலதா மிஸ்ரா 1948இல் இந்தியாவில், மத்யப்ரதேசத்தில் பிறந்த குழந்தை. ஒரு நாள் தந்தையுடன் கத்னி என்ற இடத்தின் அருகில் பயணப்பட்ட குழந்தை திடீரென்று டிரைவரை ஒரு சாலையைக் காட்டித் திரும்பச் சொல்லிதனது வீட்டிற்குப்போக வேண்டும் என்றாள். அங்கு நல்ல டீ கிடைக்கும் என்றாள் அவள்!

 

பின்னர் தன்னைப் பற்றிய முழு விவரத்தையும் அவள் கூறலானாள். அவள் முந்தைய ஜென்மத்திலும் பெண்ணாகப் பிறந்தவள் தான். பெயர் பியா பாதக். பாதக்கிற்கு இரண்டு மகன்கள்.

 

ஜுர்குடியா என்ற இடத்தில் இருந்த தனது வீடு பற்றிய சிறு சிறு விவரங்களையும் கூட விடாமல் அவள் சொன்னாள். வீட்டின் முன்னால் ஒரு ரயில் லைன். பின்னால் பெண்கள் பள்ளி உள்ளிட்ட அனைத்து அடையாளங்களையும் அவள் குறிப்பிட்டாள். தனது காரைப் பற்றிய விவரத்தையும் கூட அவள் குறிப்பிட்டாள். (ஐம்பதுகளில் கார் என்பதே அரிது)

 

தொண்டையில் வலி வந்ததால் ஜபல்பூரில் டாக்டர் எஸ்.சி. பாப்ரட்டிடம் சிகிச்சை பெற்றும் பலனின்றி (1939ஆம் ஆண்டு) இறந்ததாக அவள் சொன்னாள்.

 

1959ஆம் ஆண்டு பியாவின் கணவன், இரு மகன்கள், சகோதரர் ஆகியோர் முன்னறிவிப்பின்றி ஸ்வர்ணலதாவைப் பார்க்க வந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் சகோதரனை அன்புடன்பாபுஎன்று பெயர் சொல்லி அழைத்தாள் ஸ்வர்ணா! தனது கணவனான சிந்தாமனி பாண்டே அருகில் வந்த போது, ஸ்வர்ணலதா வெட்கத்துடன் அவரைப் பார்த்தாள்! தனது மகன்களையும் அவள் அடையாளம் கூறினாள். அவர்கள், தாங்கள் அவளுடைய மகன்கள் இல்லை என்று கூறிய போதிலும் கூட, அவள் அதனால் ஏமாறவில்லை. உள்ளது உள்ளபடி அனைத்தையும் பிட்டுப் பிட்டு வைத்தாள்!

 

பின்னர் 1200 ரூபாயை மறைத்து வைத்திருந்ததைத் தன்கணவரிடம்சொல்ல, பாண்டே அது தனக்கும் தன் மனைவிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் என்று பிரமிப்புடன் ஒப்புக் கொண்டார்.

 

பின்னர் பியாவை அவளது முன் ஜென்ம வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தான் இறந்த பிறகு செய்யப்பட்ட அனைத்து மாறுதல்களையும் சொன்னதோடு அக்கம்பக்கத்தார், உறவினர் அனைவரையும் அடையாளம் கண்டு சொன்னாள்.

 children reincarnation

சரி, வளர வளர இந்த முன் ஜென்ம ஞாபகங்கள் ஸ்வர்ணலதாவைப் பாதித்ததா?

தாவரப் படிப்பில் ((Botany) மேற்படிப்பை முடித்த ஸ்வர்ணா தனது வாழ்க்கை இயல்பாக இருக்கிறது என்றாலும் பழைய கத்னியை நினைத்தால் கண்கள் பனிக்கின்றன, அந்த பணக்கார வாழ்க்கை போல வருமா, என்ன என்றாள். ஆனாலும் கூட இப்போதைய மிஸ்ரா குடும்பத்தினரிடம் அவள் அன்பு குறையவில்லை! அழகிய இளம் பெண்ணாக வளர்ந்த ஸ்வர்ணலதா இந்த ஜென்மத்தில் தகுந்த மணவாழ்க்கையை மேற்கொண்டாள்!

 

அகதா கிறிஸ்டியின் மர்ம நாவல்களில் வரும் திருப்பங்கள், ஹிட்ச்காக் படங்களின் சஸ்பென்ஸ் ஆகிய அனைத்தையும் விஞ்சிய உண்மைச் சம்பவங்களை ஐயான் ஸ்டீவன்ஸன் எடுத்துரைக்கும் போது மெய் சிலிர்க்கும்.

ஸ்டீவன்ஸனின் ஆய்வுகள் முன் பிறவி பற்றி நமக்கு நம்பிக்கையை நிச்சயம் ஏற்படுத்தும்; ஏற்கனவே இருந்தால் அது வலுப்படும்!

ஸ்டீவன்ஸன் காட்டிய வழியில் இன்றும் பல விஞ்ஞானிகள் இந்த மறுபிறவி மாயத்தை ஆராய்ந்து வருகின்றனர்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

பிரிட்டனின் புகழ் பெற்ற ராஜதந்திரி, (முதல் உலக) போர்க்கால பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜ். ((Lloyd George 1863-1945) அவரை புது இடங்களை ஆராயும் சாகஸக்காரரான ராபர்ட் ஃபால்ஸன் ஸ்காட் (Robert Falson Scott) என்பவர் சந்தித்து தனது துருவ ஆராய்ச்சிப் பயணம் பற்றி சொல்லி அந்தப் பயணத்திற்கு ஏராளமாக செலவாகும், அதற்கு உதவ வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். உடனே லாயிட் ஜார்ஜ் பிரபலமான ஒரு பணக்காரரிடம் தன் பெயரைச் சொல்லி உதவி பெறுமாறு சொன்னார். அந்த நபர் அரசியலில் செல்வாக்கு உள்ளவரும் கூட.

சிறிது நாள் கழித்து ஜார்ஜை சந்தித்த ஸ்காட் நன்றி தெரிவித்தார். ‘எப்படி அவரிடம் பணம் வாங்கினாய்?’ என்று கேட்டார் ஜார்ஜ்.

 

உங்கள் பெயரைச் சொன்னவுடன் ஆயிரம் பவுண்டுகளை உடனே தந்தார். உங்களையும் நான் துருவத்திற்கு அழைத்துச் சென்றால் இருபதினாயிரம் பவுண்டுகள் தருவதாக வாக்களித்தார். அத்தோடு உங்களை துருவத்திலேயே விட்டு விட்டு நான் மட்டும் திரும்பி வந்தால் நிச்சயம் பத்து லட்சம் பவுண்டுகள் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்!” என்றார் ஸ்காட்!

அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா!!!

***********

 

 

ஆவி உலக எழுத்தாளர்கள்! ஆவி உலக அதிசயங்கள்! Post No. 2398

 

Drood_300x300

WRITTEN BY S NAGARAJAN

Date: 17 December 2015

 

Post No. 2398

 

Time uploaded in London :– 6-08 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

அறிவியல் துளிகள் தொடரில் 18, டிசம்பர் 2015 தேதியிட்ட பாக்யா இதழில் வெளி வந்த கட்டுரை

 

இறந்த பிறகும் எழுதிய அதிசய எழுத்தாளர்!

.நாகராஜன்

இறந்த பிறகு உலகம் உங்களை மறக்காமல் இருக்க ஒரு வழி இருக்கிறது, ஒன்று மற்றவர்கள் படிக்க உகந்த எதையேனும் எழுதுங்கள், அல்லது மற்றவர்கள் உங்களைப் பற்றி எழுத உகந்த செயல்களைச் செய்யுங்கள் – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்

 

 

உலக பிரசித்தி பெற்ற நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸின் (பிறப்பு 7-2-1812; மறைவு 8-7-1870) நாவல்களைப் படிக்காதவர்களே இருக்க முடியாது. அவரது கதாபாத்திரங்கள் அனைத்துமே உயிர் சித்திரங்கள். ஷேக்ஸ்பியருக்கு அடுத்தாற் போல மகோன்னதமான படைப்புகளைப் படைத்தவர் என்று உலகம் டிக்கன்ஸைக் கொண்டாடுகிறது.

 

220px-Drood_serial_cover

அதீத உளவியலில் அவர் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். அற்புதமான பேய்க் கதைகள் பலவற்றை அவர் எழுதியிருக்கிறார். To be taken with a Grain of Salt மற்றும் The Signalman ஆகிய அவரது இரு பேய்க் கதைகள் பிரபலமானவை.

The Mystery of Edwin Drood என்ற மர்ம நாவலை அவர் எழுதிக் கொண்டிருந்த போது இறந்து விட்டார். இதற்குச் சில காலம் கழித்து டி.பி.ஜேம்ஸ் என்ற ஒரு அமெரிக்கருக்கு சார்லஸ் டிக்கன்ஸ் மூலம் ‘ஆவி உலகச் செய்தி’ வந்தது.

 

ஜேம்ஸ் படிக்காத ஒரு மெக்கானிக். வெர்மாண்ட் என்ற இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அவருக்கு ‘ஆட்டோமேடிக் ரைடிங்’ என்ற ‘ஆவி ஒருவரின் மேல் ஆவிர்பித்து எழுதுகின்ற முறை’ மூலம், நாவல் டிக்கன்ஸ் மறைந்த போது விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தது.

 

1872ஆம் ஆண்டு கிறிஸ்துமஸிலிருந்து தொடங்கி 1873ஆம் ஆண்டு ஜுலை முடிய தவறாமல் நாவலின் அத்தியாயங்கள் ஜேம்ஸுக்கு ‘ஆட்டோமேடிக் ரைடிங்’ முறை மூலம் வந்தது.

 

இறந்த பிறகு சார்லஸ் டிக்கன்ஸ் இப்படி எழுதிய அத்தியாயங்கள் அவர் உயிருடன் இருந்த போது எழுதியதை விட அதிகமானவை. அந்த அத்தியாயங்கள் அற்புதமான முறையில் தொடர்ச்சி, அவரது நடை, சிந்தனா முறை ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

 

இறப்பதற்கு முன்னர் மற்றும் இறப்பதற்குப் பின்னர் எழுதிய இரண்டு பகுதிகளும் இணைந்து ‘தி மிஸ்ட்ரி ஆஃப் எட்வின் ட்ரூட்’ என்ற தலைப்பில் நாவலாக வெளி வந்தது. எழுதியவர் – சார்லஸ் டிக்கன்ஸ் என்று வேறு பிரசுரிக்கப்பட்டிருந்தது.

 

இதைப் படித்த சார்லஸ் டிக்கன்ஸின் உலகெங்கிமுள்ள ரசிகர்கள் மற்றும் ஆவி உலக அபிமானிகள் அனைவரும் இதைப் பாராட்டினர். ஆவி உலகம் இருப்பதற்கு இந்த நாவல் ஒன்றே அத்தாட்சி என்று அவர்கள் உரக்கக் கூறினர்.

OUIJA

ஆனால் இதை கடுமையாக விமரிசனம் செய்த ஒருவரும் இருந்தார். அவர் பெயர் தியோடர் ஃப்லோராய். உளவியலாளரான அவர் இதற்கும் சார்லஸ் டிக்கன்ஸுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் ஜேம்ஸ் தனது ஆழ்மனதில் உதித்த கற்பனை மூலமாகவே இதை எழுதினார் என்றும் கூறினார்.

 

இரு பெண்மணிகள் சந்திக்கும் ஒரு சீன் மிக அற்புதமாக சார்லஸ் டிக்கன்ஸ் எழுதியது போலவே இருக்கிறது என்று விமரிசித்த ஜெனிவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மேடம் கே. ஃபேர்பேங்க்ஸ் என்ற பெண்மணி இதர பல பகுதிகள் அவரது வழக்கமான நடை போல இல்லை என்றார்.

 

இதற்கிடையில் சார்லஸ் டிக்கன்ஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜான் ஃபோர்ஸ்டர் என்பவர் டிக்கன்ஸின் நோட்புத்தகங்கள், பேப்பர்களிலிருந்து இந்த நாவலில் பின்னால் வரப் போவதை அவர் முன் கூட்டியே ஒரு அத்தியாயமாக எழுதி வைத்திருந்ததைக் கண்டுபிடித்துக் கூறினார். அத்தோடு மட்டுமின்றி ஆவி உலகத்திலிருந்து டிக்கன்ஸ் எழுதிய பகுதியில் மூன்றே மூன்று கதாபாத்திரங்களே சேர்க்கப்பட்டிருப்பதையும், இதை எழுதிய ஜேம்ஸ், தான் டிக்கன்ஸ் எழுதிய நாவலின் முற்பகுதியைப் படித்திருப்பதை ஒத்துக் கொண்டதையும், டிக்கன்ஸ் இறந்த பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்தே இதை எழுதியிருப்பதையும் ஃபோர்ஸ்டர் சுட்டிக் காட்டினார்.

 

ஆனால் எது எப்படி இருந்த போதிலும் இறந்த பின்னரும் சார்லஸ் டிக்கன்ஸ் ‘எழுதிய’ நாவல் நன்றாகத் தான் இருந்தது!

டிக்கன்ஸ் மெஸ்மரிஸத்தை நன்கு பயின்றவர். அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு.

இதே போல ஏராளமான மீடியம்கள் ஆவி உலகத் தொடர்பினால் பல புத்தக்கங்களை எழுதி உள்ளனர்.

 

 

ஆயிரத்தி தொள்ளாயிரமாவது ஆண்டு தொடங்கிய போது செயிண்ட் லூயிஸ் என்ற இடத்தில் இல்லத்தரசியாகத் திகழ்ந்த பேர்ல் குரண் என்பவர் தன்னிடம் பேஷன்ஸ் ஒர்த் என்பவரின் ஆவி தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறினார். ஆவி உலகத் தொடர்பினால் வரும் செய்திகளை அறிந்து கொள்ளப் பயன்படும் ஊஜா போர்டை அவர் பயன்படுத்தினார். இதன் மூலம் 5000 கவிதைகள், ஒரு நாடகம், பல நாவல்களை அவர் எழுதினார். நாளடைவில் ஊஜா போர்டைத் தூக்கிப் போட்டு விட்டு சாதாரண நிலையிலேயே அவர் ஆவியின் மூலம் எழுத ஆரம்பித்தார்.

 

ouija_board

இப்படி ஆவி மூலம் எழுதிய இன்னொரு பிரபல பெண்மணி ஹெலன் ஸ்மித் என்பவர். காதரீன் எலிஸ் முல்லர் என்ற புனைபெயரில் அவர் எழுதலானார். இந்த புனைப் பெயருக்கு உரியவர் 1863இல் ஜெனிவாவில் பிறந்த ஒரு   மீடியம். அவர் தனது முந்தைய ஜென்மத்தில் ஹிந்து குருக்களாக இருந்ததாகக் கூறினார். அராபிய மொழியில் அவர் எழுத ஆரம்பித்தது அனைவரையும் வியக்க வைத்தது. தனது மொழியானது செவ்வாய் மற்றும் யுரேனஸ் கிரகத்தின் மொழி என்றார் அவர்.

 

 

இதை ஆராய வந்த ஜெனிவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் தியோடர் ஃப்ளர்நாய் என்பவர் ஹெலன் ஸ்மித்தின் ஆழ்மனமே இவற்றைப் படைத்தது என்றார். கற்பனை வளம் வாய்ந்த ஒரு பெண்மணியின் மொழியே செவ்வாய் கிரக மொழி என்றார் அவர். ஆனால் ஹெலன் மிகவும் பிரபலமான ஒருவராகத் திகழ்ந்தார்.

 

 

பிரேஜில் நாட்டைச் சேர்ந்த மீடியமான பிரான்ஸிஸ்கோ சேவியர் 1910ஆம் ஆண்டில் பிறந்தவர். வரலாறிலேயே ஆட்டோமேடிக் ரைடிங்கிற்காக அதிகப் புகழ் பெற்றவர் இவர். ஒரு லட்சம் பக்கங்களை ஆவியின் மூலமாக இவர் எழுதித் தள்ளி விட்டார். அவர் பள்ளியில் படித்ததே இல்லை என்பது தான் பெரிய அதிசயம்! விஞ்ஞானம், இலக்கியம் என பல்துறை புத்தகங்களை அவர் எழுதியது அனைவரையும் வியக்க வைத்தது! ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அவர் உலகெங்கும் நடத்திய டாக்-ஷோக்கள் மிகவும் பிரபலமாயின. தன் புத்தகங்களிலிருந்து வந்த வருமானத்தை அறக்கட்டளை நிறுவி தர்ம காரியங்களுக்காக அவர் செலவழித்தார்.

 

 

இப்படி சார்லஸ் டிக்கன்ஸ் போல இறந்தும் எழுதியோர் அநேகர் உண்டு. ஆவிகளாக எழுதினாலும் கூட அவர்களின் நூல்கள் சுவையாகத் தான் உள்ளன!

 

Baron-Alexander-Von-Humboldt-to-the-Americ

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்….

ஜெர்மானிய விஞ்ஞானியான பரோன் அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Baron Alexander Von Humboldt) ஒரு முறை அமெரிக்கா வந்த போது அமெரிக்க ஜனாதிபதி ஜெஃபர்ஸனை (Jefferson) அவரது அலுவலக அறையில் சந்தித்தார். அங்கு மேஜை மீது ஜனாதிபதி ஜெஃபர்ஸனைத் திட்டிக் கேவலமாகவும் ஆபாசமாகவும் எழுதி இருந்த பத்திரிகை ஒன்றைக் கண்டு திடுக்கிட்டார்.

“இந்த பத்திரிகையை இன்னும் ஏன் தடை செய்யவில்லை?” என்று ஆச்சரியத்துடன் கேட்ட அவர், “இதன் ஆசிரியரை சிறையில் அடைத்தாயிற்றா? இவருக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது?” என்று கேட்டார்.

 

BARON CURRENCY

ஜெஃபர்ஸன் புன்முறுவல் பூத்தார்.

‘அதை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள், பரோன்” என்ற ஜெஃபர்ஸன்,

“உங்களிடம் யாரேனும் அமெரிக்காவில் சுதந்திரம் இருக்கிறதா என்று சந்தேகப்பட்டுக் கேட்டாலோ அல்லது அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா என்று கேட்டாலோ, இந்தப் பத்திரிகையைக் காண்பியுங்கள். இதை எங்கிருந்து நீங்கள் பெற்றீர்கள் என்பதையும் சொல்லுங்கள்” என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி என்றால் அமெரிக்க ஜனாதிபதி தான்!

************

 

 

விவேகானந்தரும் நெப்போலியனும்! (Post No. 2395)

VIVEKA QUOTE

WRITTEN BY S NAGARAJAN

Date: 16 December 2015

 

Post No. 2395

Time uploaded in London :– 8-10 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

 

விவேகானந்தர் சரிதம்

 

ஸ்வாமி விவேகானந்தரும் நெப்போலியனும்!

 

ச.நாகராஜன்

 

 

கதாம்ருதம் எழுதிய மகான் எம்

 

எம் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகேந்திர நாத் குப்தா (ஜனனம் 14-7-1854; சமாதி 4-6-1932) ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சமாதியான பின்னர், அன்னை சாரதா தேவியாரின் அருள் பாலிப்பில் வாழ்ந்து வந்தார். அன்னையின் மறைவுக்குப் பின் தாயை இழந்த சேய் போல அவர் துடித்தார். எழுபது வயது நிரம்பிய அவர்.”ஆஹா! அன்னை அல்லவா என்னை 35 வருட காலம் பாதுகாத்தார்! இப்போது அவர் இல்லையே! நான் என்ன செய்வேன்” என்று மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தார்.

 

 

பின் மிஹிஜம் என்ற இடத்தில் ஒரு சிறு ஆசிரமத்தை அமைத்து அங்கு வசிக்கலானார்.

அமைதியையும் ஞானத்தையும் நாடுவோர் அந்த ஆசிரமத்திற்கு வரலாயினர். வேத கால ஆசிரமம் போல அது விளங்க ஆரம்பித்தது.

 

காலையிலிருந்து இரவு முடிய பரமஹம்ஸரின் அருளுரைகளும் அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களும் அங்கு ‘எம்’மால் நினைவு கூரப்பட்டன.

 

பரமஹம்ஸரின் பக்தரான பாபு என்பவர் உலகியல் வாழ்க்கையில் அதிக துன்பம் அடைந்திருப்பதாக கேள்விப்பட்ட எம், ஒரு நாள் தனது தொண்டர்களில் ஒருவரை அவருக்கு உதவ கல்கத்தா அனுப்பி வைத்தார்.

 

அந்தத் தொண்டரிடம்  “பாபுவிடம் ஷிமுல்தலாவுக்கு (பாபு வாழ்ந்த இடம் – வங்காளத்தில் உள்ளது) என்னால் இப்போது வர முடியாது என்று சொல். யாருக்குத் தான் துன்பம் இல்லை, கஷ்டங்கள் இல்லை!” என்று கூறியவர் தொடர்ந்து வாழ்க்கையில் வாழ வேண்டிய முறையை அங்கு கூடியிருந்தோருக்கு உபதேசிக்க ஆரம்பித்தார்.

 

QUOTE VIEVEKA

எம்மின் உபதேச உரை

 

“உலகம் என்பது புயல் அலைகளைக் கொண்ட ஒரு பெரும் கடல். அதில் பலஹீனமானவர்கள் தலையை நிமிர்த்திக் கொண்டு நிலைத்திருக்க முடியாது. துன்பங்களோ, சறுக்கல்களோ ஏற்பட்டால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்கள் எப்போதும் சுகமாக இருப்பதையே விரும்புகிறார்கள்.

ஸ்வாமி விவேகானந்தர், “ எவர்கள் துன்பங்களையும் சறுக்கல்களையும் சந்திக்கவில்லையோ அவர்கள் குழந்தைகள்.. பச்சைக் குழந்தைகள்” என்று சொன்னார்.

 

 

ஸ்வாமிஜி தனது நண்பர் ஒருவரிடம். “ உனக்கு தொந்தரவு, தாழ்வுகள், சறுக்கல்கள் என்றால் என்ன என்று தெரியுமா? எவர்கள் அபாயங்களையும் கஷ்டங்களையும் சந்திக்கவில்லையோ அவர்கள் எல்லாம் மனிதர்களா, என்ன?” என்று கேட்டார்.

 

 

பரமஹம்ஸர் ஒரு  முறை சொன்னார்: “சுகத்தை மட்டுமே விரும்புபவர்கள் ஐந்து ரூபாய்க்குச் சமம். ஆனால் எவர்கள்  வெற்றி தோல்வியில் மயங்காமல் இருக்கிறார்களோ அவர்கள் எழுபத்தைந்து ரூபாய்க்குச் சமம். அவர்கள் தொட்டவுடன் துள்ளிப் பறந்தோடும் காளைக்குச் சமம். அவர்கள் எந்த ஒரு சந்தோஷமான உணர்வுக்கும் அடி பணீய மாட்டார்கள்”.

 

 

(கிரேக்கத்தில் உள்ள) ஸ்பார்டாவில் ஒரு  முறை பலஹீனமானவர்களை மலை உச்சியிலிருந்து தூக்கிப் போட்டார்கள். அந்த தேசத்தில் பலஹீனமானவர்களை ஒரு பெரும்  தொந்தரவு என்று நினைத்தார்கள். பலஹீனமானவன் எதையும் சாதிக்க முடியாது. துன்பங்களைச் சந்திக்காதவன் மனிதனா என்ன?

 

மஹாபுருஷர்களின் குணாதிசயங்கள் எவை தெரியுமா? பொறுமை, அபாய தருணங்களில் சீரான முன்னேற்றம், நல்ல காலங்களில் தர்ம சிந்தனை, பேச்சில் நளினம், போர்க்களத்திலோ அபார வீரம் – சிங்கத்தைப் போல!”

 

Statue équestre de Napoléon

L’empereur désigne le port.

 

நெப்போலியனின் நன்றி உணர்வு

 

இதைத் தொடர்ந்து எம் பாண்டவர்கள் துன்பங்களை எதிர் கொண்டு வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டார். பி நெப்போலியனைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்னர்ர்.

“நெப்போலியன் படை விரானாக இருந்த போது அவனுக்கு திடீரென்று வேலை போனது.  கஷ்டத்தில் வாடும் அவனது தாயார் அவனுக்கு உடனடியாகப் பணம் அனுப்புமாறு கடிதம் எழுதினார். அவனால் வேதனையைத் தாள முடியவில்லை. நேராக ஆற்றை நோக்கி ஓடினான். அதில் குதித்து உயிரை விட் நினைத்தான். அப்போது அவனைப் பின்னாலிருந்து ஒரு கரம் தொட்டது. அவனது நண்பர்களில் ஒருவனின் கரம் அது.

 

 

‘என்ன விஷயம்’ என்று அவன் கேட்க நடந்ததை நெப்போலியன் சொல்லி வருந்தினான். உடனே அந்த நண்பன் தன் பையிலிருந்த (இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான) பிரெஞ்சு நாணயங்களை எடுத்து அவன் கையில் கொடுத்தான். தபால் அலுவலக நேரம் முடியப் போவதை நினைத்த நெப்போலியன் அவனுக்கு நன்றி கூடச் சொல்லாமல் அதை அனுப்ப ஓடினான். காலம் ஓடியது. படிப்படியாக உயர்ந்த நெப்போலியன் சக்கரவர்த்தியாக மாறினான.

ஒரு நாள் தன் நகரில் மக்கள் வெள்ளம் சூழ ஊர்வலமாக வந்த போது வழியில் ஒரு ஓரமாக நின்றிருந்த பழைய நண்பனைப் பார்த்தான். ஓடோடிச் சென்று அவனைத் தழுவிக் கொண்ட நெப்போலியன் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்தான்.

 

 

அந்த நிலையிலும் கூட அந்த நண்பன் தான் நெப்போலியனுக்கு பணம் கொடுத்து உதவியதைச் சொல்லவில்லை. ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் நெப்போலியன் வற்புறுத்தி அவனுக்கு ஒரு பெரும் பதவியைத் தந்து கௌரவித்தான்.”

napoleon_statue_inside_les_invalides_2_1600

 

ஸ்வாமிஜியின் வாழ்க்கையில்

 

எம் இதைச் சொல்லி நிறுத்தினார். உடனே குழுமியிருந்த சீடர்களில் ஒருவர் இது ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்ததைப் போல அல்லவா இருக்கிறது என்று கூறி வியந்தார்.

அந்தச் சீடர் கூறினார்:- “அடடா! நெப்போலியன் எப்படிப்பட்ட அரும் குணம் உடையவன். பொது சபையில் தன் நண்பனை கௌரவித்தானே! ஸ்வாமிஜியின் வாழ்க்கையிலும் இதே போல நிகழ்ச்சி நடந்துள்ளதே! அல்மோராவில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் தனது பழைய கால நண்பர் ஒருவரைச் சுட்டிக் காட்டி வரவழைத்து பெரிதும் கௌரவித்தார். உணவின்றி பசியால் வாடி விவேகானந்தர் அலைந்த காலத்தில் அந்த நண்பர் அவருக்கு ஒரு வெள்ளரிக்காய் கொடுத்து அவர் பசியைப் போக்கினார். அந்த நன்றியை அவர் மறகக்வே இல்லையே” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

 

 

எம் கூறினார்: “அது தான் மஹாபுருஷர்களின் குணநலமாகும். அவர்கள் ஒவ்வொரு நல்ல செயலையும் -அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அதை – மறக்க மாட்டார்கள். என்றும் நன்றியுடன் இருப்பர்.”

 

 

இரவு நேர சந்திர ஒளி பிரகாசமாக ஒளிர ஆசிரமத்தின் வனாந்திர சூழ்நிலை ஸ்வாமிஜியின் நினைவால் புனிதம் பெற்றது.

 

நெப்போலியன் வாழ்விலும் ஸ்வாமிஜியின் வாழ்விலும் நிகழ்ந்த அதிசய ஒற்றுமையை மனதில் அசை போட்டு வியந்தவாறு சீடர்கள் அனைவரும் ஆனந்தத்துடன் கலைந்தனர்.

 

*********

ஸ்வாமி நித்யாத்மனந்தா எழுதிய ‘M – THE APOSTLE AND THE EVANGELIST’ (VOLUME – 1) என்ற நூலில் 346 முதல் 349ஆம் பக்கம் முடிய உள்ள உரையாடலை அடிப்படையாகக் கொண்டது இந்தக் கட்டுரை.

100 Year Old Tamil Jokes (Post No. 2390)

donkey, horse

Compiled by London swaminathan

Date: 14 December 2015

 

Post No. 2390

Time uploaded in London :– 16-04

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Following jokes were taken from 100 year old Tamil book Vinotha Vikata Chintamani; Book given by S Srinivasan of Chennai.

Horse & Donkey

A judge and a lawyer were very friendly in a town in Tamil Nadu. One day the judge wanted to belittle the lawyer and said with a smile:

My dear friend, if both of us are to become donkey and horse what would you be?

Lawyer: Sir, definitely a donkey is my preference!

Judge: Why do you want to become a donkey?

Lawyer: I know at least a donkey has got the post of a judge, but a horse has never got it. So I would like to be a donkey!!

Xxx

 

Mother tongue

Why do they call one’s native language a “Mother” tongue?

Because nobody listens to a “ father” in the house!

 

XXX

Who is a Hero?

A hero boasted: Look at me. I have brought the legs of one thousand soldiers. What other proof is required to prove me a hero?

Others said, “No, No, if you have brought one thousand heads of the enemies, they will consider you a great hero”

What can I do? Someone has chopped off all the heads already. That is why I cut the legs!

XXX

Cape-Buffaloes-0560

Two buffaloes!

A village farmer went to a school teacher and asked how much it would cost him to educate his son.

Teacher said : It would cost you Rs.50

Villager: Oh my God! If I have Rs.50, I will buy a buffalo.

Teacher: Please go ahead. Then you will have two buffaloes in the house.

Xxx

 

Dying Brahmin

An age old Brahmin was in his death bed following long period of sickness. During that period he was put on a diet.

Priests came to him and advised him to take Sanyasa (This is the fourth stage in every Hindu’s life: Brahmachary/student, Grahastha/Householder, Vanaprastha/Secluded life in the forest and Sanyasin/Given up all attachments)

 

Immediately the Brahmin said: I am ready. But what is the Patyam/diet?

XXX

 banana

Stomach pain

The teacher asked the students: Don’t you know the answer? It is a simple arithmetic sum. I give all the four of you

100 bananas

And 60 mangoes

What does each one get?

Youngest of the boys : Stomach ache, Sir!

 

XXX

Purattasi Saturday Leave

A man left his native town and studied abroad. He did not know his mother tongue Tamil, but very fluent in English. He was appointed as the Deputy Collector in Tamil Nadu. One of his subordinates went to him and  asked for leave of absence for a Saturday in the month of Purattasi (It is a holy day and prayers are offered to Vishnu).

 

Deputy collector asked him whether there is any precedent to give him holiday. And asked him ‘’did you get this leave last year?’’

 

The subordinate replied humbly and politely in Tamil, “Sir last year it fell on a Sunday. So there was no leave granted”.

Ok, leave sanctioned, said the Deputy Collector!

Xxx

Tailor Subramanya Mestry

A woman came to tailor Subramanya Mestry and gave a piece of cloth for stitching blouse for her. Mestry’s wife was watching it from behind the door. As soon as the woman customer left, he cut a piece from it and hid it in the table drawer. His wife came and asked him why he did that. He replied without any hesitation, “I did it to follow our tradition and to keep something to remind me.”

halwa

 

xxx

Coffee Club Kalyanam Iyer

A clever and cunning man went to Kalyanam Iyer’s Sweetmeat shop.

Man : Please give me one kilo Halwa (Indian sweet).

When he got it he returned it saying he changed his mind.

Man: Give me One kilo Jalebi instead.

He got and walked away without paying for the sweets.

Kalyanam: Hey, give me the money for Jalebi.

Man: I have given you one kilo Halwa for that.

Kalanam: Where is the money for the Halwa.

Man: I don’t have it in my bag. I returned it to you.

 

–Subham–

நட்சத்திரப் பாடல்!(Post No. 2389)

IMG_0349 (2)

Zodiac Coins issued by Mogul Emperor Jehanghir

Compiled by S NAGARAJAN

Date: 14 December 2015

 

Post No. 2388

Time uploaded in London :– 7-40 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ச.நாகராஜன்

 

 

தமிழ் என்னும் விந்தை

 

நட்சத்திரப் பாடல்

 

தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் 27 நட்சத்திரங்கள் தொன்று தொட்டு இடம் பெற்று வந்துள்ளன. இந்த நட்சத்திரங்களைப் புலவர்கள் தம் பாடல்கள் பலவற்றில் பல்வேறு விதமாகக் கையாண்டுள்ளனர். மிக சுவாரசியமான பாடல்கள் அவை.

 

மதுரகவிராயர் என்றொரு புலவர் இருந்தார்.  அவர் இளம் பெண் ஒருத்தியைக் கண்டு மோகித்தார். அப்போது அவருக்கு ஞாபகம் வந்தது 27 நட்சத்திரங்களின் ஒன்றின் பெயர். அதைப் பாடலில் சூசகமாகப் பயன்படுத்திப் பாடலை இயற்றினார்.

 

asrtrology

Zodiac stamps issued by India

பாடல் இதோ:-

 

 

மூவொன்ப தென்பதிலோர் நாளில்லை மொய்வனத்தில்    

தாவுந் தனிமிருகந் தானில்லை – நேரே                    

வளையா நடையில்லை வாரிறுக விம்மும்            

முலையாளை யான் முயங்குதற்கு

 

 

இதன் பொருளைப் பார்ப்போம்:

வாரிறுக விம்மும் முலையாளை – கச்சு இறுகும் படி விம்மிப் பருத்துள்ள மார்பகங்களை உடையவளை

யான் முயங்குதற்கு – நான் கட்டித் தழுவுவதற்கு                   மூவொன்ப தென்பதில் – மூன்று ஒன்பது, அதாவது 27 நட்சத்திரங்களில்                                               ஓர் நாளில்லை – ஒரு நட்சத்திரம் இல்லை        மொய்வனத்தில் – அடர்ந்த காட்டில்                          தாவுந் தனிமிருகந் தானில்லை – தாண்டித் திரிகின்ற ஒப்பற்ற மிருகம் இல்லை

நேரே வளையா நடையில்லை – நேராக வளையாத நடையும் இல்லை.

 

 

மூவொன்பதில் ஓர் நாளை இங்கு உத்தரம் என்று கொள்ள வேண்டும். அதாவது 27 நட்சத்திரங்களில் ஒன்று உத்தரம். அவள் நான் கட்டித் தழுவுவதற்கு எனக்கு உத்தரம் – மறுமொழியும் சொல்ல மாட்டேன் என்கிறாள்.

 

 

மொய் வனத்தில் தாவும் தனி மிருகம் வேங்கையாகும் வேங்கைக்கு இன்னொரு சொல் பொன் என்பதாகும். என்னிடம் தங்கமும் இல்லை.

 

 

நேரா வளையா நடை அன்னத்திற்கே உரியது. அந்த அன்னமும் என்னிடம் இல்லை.

 

பொன்னும் அன்னமும் இல்லாத அவளை எப்படிக் கட்டித் தழுவுவது, அவளோ உத்தரம் தர மாட்டேன் என்கிறா என்று அங்கலாய்க்கிறார் கவிஞர்.

 

Zodiac, SL

Zodiac Stamps issued by Sri Lanka

ராசிப் பாடல்

இன்னொரு பாடலில் 12 ராசிகளையும் அமைத்துப் பாடியுள்ளார் ஆசுகவிப் புலவர் கவி காளமேகம்.

 

அவரிம் ஒருவர் சவால் விடுத்தார். சவால் விடுத்தவரோ சாதாரணமானவர் இல்லை.  மன்னரிடம் பாடல் பாடி அவன் வியந்து தண்டிகை பரிசை அளித்தால் அவர் சிறந்த தண்டிகைப் புலவர் எனப்படுவார். அப்படிப்பட்ட அருமையான 64 தண்டிகைப் புலவர்களில் அவரும் ஒருவர்.

 

 

அவர் போட்ட நிபந்தனைகள் இவை:

ஒரு வெண்பா பாட வேண்டும். அதன் முதல் சீராக பகருங்கால் (சொல்லப் போனால்) என்று வர வேண்டும். இறுதியிலோ வசையறு மிராசி வளம் என்று ஈற்றடி (கடைசி அடி) அமைய வேண்டும்.  இடையில் 12 ராசிகளின் பெயர்கள் வரவேண்டும். ராசிகளுக்கு அடைமொழிகள் எதுவும் இருக்கக் கூடாது.

 

கடினமான போட்டி தான். கவிஞருக்கு கிடைத்திருப்பது இரண்டே முக்கால் அடி தான். விட்டாரா காளமேகம்.

பாடினார் இப்படி:-

 

 

பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க                  

டகஞ்சிங்கம் கன்னி துலாம் விர்ச் – சிகந்த                 

நுசுமகரங் கும்பமீ நம்பன்னி ரண்டும்                             

 வசையறு மிராசி வளம்

 

 

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம்,  விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆக பன்னிரண்டு ராசிகளும் முறையே வரிசையாக அமைத்து வெண்பா இலக்கணம் தவறாமல் பாடி வெற்றி பெற்றார் காளமேகம்.

தமிழ் என்னும் விந்தையில் உலக மொழிகளில் இல்லாதபடி நட்சத்திரப் பாடல்கள் ஏராளம் உள்ளன.

 

 

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

 

 

மேலே உள்ள நட்சத்திரப் பாடலும் ராசிப் பாடலும் தமிழுக்கே உரித்தான முத்திரைப் பாடல்களில் சில!

********

 

பம்பாய் நகரில் சில அதிசயங்கள்!! (Post No. 2388)

IMG_2814 (2)

Compiled by London swaminathan

Date: 14 December 2015

 

Post No. 2388

Time uploaded in London :– 6-06 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

This article was published in English

 

எனது மும்பை யாத்திரை!

இரண்டு ஆண்டுகளுக்கு  முன்னர் மும்பை சென்றபோது நான் பார்த்த இரண்டே இடங்கள் மஹாலக்ஷ்மி கோவிலும், சித்தி விநாயகர் கோவிலும்தான். இம்முறையாவது ஜுஹு பீச்/கடற்கரை, பயங்கர வாதிகள் தாக்கி நூற்றுக் கணக்காணோரைக் கொன்ற தாஜ் ஹோட்டல், இந்தியா கேட் (இந்தியாவின் நுழைவாயில்), விக்டோரியா டெர்மினஸ் (ரயில் நிலையம்), பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம், ஆகியவற்றைக் காண வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன். ஆயினும் எனது சம்பந்தியின் வலியுறுத்தலின் பெயரில், விமானத்திருந்து இறங்கிய நாளன்றே மீண்டும் சித்தி விநாயகர் கோவிலுக்கே சென்றோம். ஒரே கூட்டம், அரை நிமிட தரிசனம். கையில் பூ, வாயில் கொழுக்கட்டையுடன் திரும்பினோம். தமிழர்களுக்கு முருகன் எப்படியோ அப்படி மஹாராஷ்டிரர்களுக்கு கணபதி. நாம், அறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனைத் தரிசிப்பது போல, அவர்கள் விநாயகரின் எட்டு தலங்களுக்குச் சென்று வருவர். விநாயக சதுர்த்தி அங்கு தேசிய தேசிய திருவிழா!

IMG_2803 (2)

வெளியே வந்தவுடன் கடைகளில் இருந்த, தமிழ் நாட்டில் காணக்கிடைக்காத பூ வகைகளையும், சிறிய கொழுக்கட்டை முதல் மிகப்பெரிய ராட்சதக் கொழுக்கட்டைகள் (மோதகம்) வரையும் போட்டோ எடுத்தேன்.

 

நாசிக்கிலிருந்து திரும்பிவந்து மூன்று நாள் கல்யாண சாப்பாடு சாப்பிட்ட பின்னர் ஒரு நாள் ‘ஷாப்பிங்’ சென்றோம். பின்னர் ஒரு டாக்ஸியில் விக்டோரியா டெர்மினஸ் சென்றோம். இந்தியா கேட்டுக்கு எதிரே புகழ்மிகு டாஜ் ஹோட்டல் இருக்கிறது. அதில் நைசாக உள்ளே நுழைந்தோம் ரிசப்ஷன் வரை சென்று வழ வழ தரையில் நடந்தோம். எல்லா இடங்களிலும் எலக்ட்ரானிக் செக்யூரிட்டி கேட்டுகள் உள்ளன. நம்மைச் சோதித்தே அனுப்புகின்றனர். காரணம்—எதிரேயுள்ள கடல் வழியாக ரப்பர் படகில் வந்த பயங்கர வாதிகள் சுமார் 300 சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதே. இது சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

IMG_2790

தாஜ் ஹோட்டலுக்கு எதிரேயிருந்த இந்தியா ‘கேட்’டருகே அன்று கடற்படை விழா நடந்ததால், பக்கத்தில் அனுமதிக்கவில்லை. தூரத்தில் கப்பல்கள் மட்டும் விளக்கொளியில் ஜொலித்தன. தொலைவிலிருந்து இந்தியா கேட்டையும், கப்பல்களையும், நூற்றுக் கணக்கான மின் விளக்கு பொருத்தப் பட்ட அலங்கார குதிரை வண்டிகளையும் பார்த்தோம். நல்ல கூட்டம். குழந்தைகளுடன் வந்தோரும், வெளி நாட்டினரும், அலங்கார குதிரை வண்டிகளில் ஏறி பவனி வந்தனர். ஒரு புறம், சுண்டல், பொறி கடலை விற்பனை நடந்து கொண்டிருந்தது. மறு புறம் இளம் சிட்டுகள் ‘செல்பி’ படம் எடுத்துக் கொண்டிருந்தன. ஒரு வியாபாரி ஐம்பது ரூபாய் விலையுள்ள ராட்சத பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார்!

 

வீர சிவாஜி வாழ்க (ஜய ஜய பவானி: பாரதி பாட்டு)

 

மஹாராஷ்டிரத்தில் விநாயகருக்கு அடுத்தபடியாக போற்றப்படுபவர் வீர சிவாஜி! பல இடங்களில் இவரது சிலை உண்டு. இந்தியா கேட் வீர சிவாஜி, ஏர்போர்ட் வீர சிவாஜி ஆகியவற்றை காரிலிருந்தே படம் எடுத்தேன். சாண்டாக்ரூஸ் விமான நிலையத்தின் பெயர் சத்ரபதி சிவாஜி விமான நிலையம். இப்படி ரயில் நிலையம், விமான நிலயம், மியூசியம் எல்லவற்றின் பெயர்களையும் சிவாஜியின் பெயரில் மாற்றிவிட்டனர். மொகலாய சாம்ராஜ்யத்தை விழுத்தாட்டி, முஸ்லீம்களின் ஆட்சிக்கு சாவு மணி அடித்த சிவாஜியின் பெயரை நம் நாட்டிற்கே சூட்டினாலும் அது போ.ற்றப்பட வேண்டியதே.

IMG_9425

 

IMG_9427

பம்பாய் ஐடியா/ யோஜனை

சுவிடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம், பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ், அமெரிக்கவிலுள்ள நியூ யார்க், இதாலியிலுள்ள ரோம் ஆகிய இடங்களுக்குச் சென்றவுடன், சின்னச் சின்ன பயனுள்ள விஷயங்களை எழுதி இவைகளை ஏன் மற்றவர்களும் பயன்படுத்தக் கூடாதென்று கேட்டிருந்தேன். பம்பாயிலும் ஒன்றிரண்டு விஷயங்களைக் கண்டேன்.

 

பட்டுப்போன மரங்களுக்கு பல வண்ணப் பெயிண்ட் அடித்து அதில் கண் காது மூக்கு வரைந்து அழகு செய்துவிட்டனர். இதுபோல வைரம் பாய்ந்த மரங்களை நாமும் அலங்கரிக்கலாமே!

 

பல இடங்களில் மரத்தின் உச்சியில் மஞ்சள் நிற டயர்கள் தொங்கின. முதலில் அவை ஆபத்துக்கு உதவும் லைப் போட் ( உயிர் காக்கும் படகுகள்) என்று நினைத்தேன். மூலைக்கு மூலை அவைகலைக் கண்டவுடன் டிரைவரிடம் கேட்டேன். அவை எல்லாம் டயர்களுக்கு பங்க்சர் ஒட்டும் கடைகளாம். அதை எளிதில் காட்ட மரங்களின் கிளைகளிலிந்து மஞ்சள் நிற டயர்களைத் தொங்க விட்டுள்ளனர். இது போல ரயில் நிலையங்களைக் காட்டவும் பஸ் ஸ்டாப்புகளைக் காட்டவும் நாமும் சில அடையாளங்களை — தொலைவிலிருந்து எளிதில் காணும் அடையாலங்களைத் தொங்கவிடலாமே.

IMG_9550

லண்டன் ஐடியா

லண்டனில் பல்வேறு மொழிகள் ( 130 மொழிகள்) பேசுவோர் வாழ்கின்றனர். ஆகையால் செண்ட்ரல் மிடில்செக்ஸ் ஆஸ்பத்தியில் ரிசப்ஷன் பகுதிலிருந்து பல்வேறு வண்ணக் கோடுகள் செல்லும். யாரேனும் பிளட் டெஸ்ட் (ரத்த பரிசோதனை) எங்கே என்றால், சிவப்பு நிறக் கோட்டைக் காட்டி அதைப் பின்பற்றும்படி சைகை காட்டுவர். ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் FOLLOW THE RED LINE, PLEASE என்பர். இப்படி எக்ஸ்ரே என்றால் நீல நிறம் – என்று முக்கிய டிபார்ட்மெண்டுகளுக்கு கலர் கோடிங் (COLOUR CODING வண்ண அடையாளம்) வைத்துள்ளனர். இதைப் பின்பற்றும்படி வேறு சில மருத்துவ மனைகளுக்கும் நான் எழுதினேன்.

 

சமீப காலமாக லண்டன் விக்டோரியா (VICTORIA STATION) ரயில் நிலயம் போன்ற பெரிய ஸ்டேஷன்களும் பயணிகளுக்கு இந்த கலர் லைன்களப் போட்டு, பஸ், டாக்ஸி டாய்லட் ஆகியவற்றுக்கு வழிகாட்டுகின்றனர். இந்தியாவிலும் இப்படி கலர் கோடிங் பின்பற்றலாம். பிளட் டெஸ்ட் BLOOD TEST என்றால் உலகம் முழுதும் சிவப்பும், எக்ஸ் ரே X RAY என்றால் உலகம் முழுதும் நீல நிறமும் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்குM? இதே போல டாக்ஸி, ரயில், பஸ் ஆகிய நிலையங்களுக்கும் உலகம் முழுதும் ஒரே நிற சைகைகள் இருந்தால் நலம்.

IMG_8067

ஆல மரமும் கரும்பு ஜூசும்

மஹாராஷ்டிரத்தில் நிறைய ஆலமரங்கள் உள்ளன. தென்காசி- செங்கோட்டை சாலையில் 40 ஆண்டுகளுக்கு முன் இப்படிப் பார்த்தது நினைவுக்கு வந்தது. இதே போல கரும்புச் சாறும் பல இடங்களில் விற்கப்படுகிறது. இப்போது வெங்காய விலையேற்றமும், தட்டுப்பாடும் இருப்பதால், சாலை ஓரங்களில் மூட்டை மூட்டையாக வெங்காயம் விற்கப்படுவதையும் கண்டோம்.

 

அஞ்சல்தலைக் கண்காட்சி

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தினமும் இலவச ஆங்கில நாளேடுகள், அறையின் வாசலில் கிடக்கும். அதை எடுத்தபோது அதிலிருந்து விழுந்த நோட்டீஸ் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நவி மும்பை (புதிய பம்பாய்) பகுதியில் ஒரு தபால்தலைக் கண்காட்சி- இலவச அனுமதி – என்று அச்சிட்டிருந்தனர். மாப்பிள்ளை அழைப்பன்று மதியச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு காரில் விரைந்தேன். லண்டனில் கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த எந்த தபால்தலைக் கண்காட்சியையும் நான் தவறவிட்டதில்லை. மேலும் சென்னை, மதுரை தலைமைத் தபால அலுவகங்களில் பிலாடெலிக் கவுண்டரில் தபால்தலைகள் வாங்கவும் திட்டமிட்டிருந்தேன். ஆனால் சென்னை வெள்ளத்தால் விமானங்கள் ரத்தாயின என்று கேட்டு என்ன செய்வதென்று திகைத்தபோது, “கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல” – தபால்தலைக் கண்காட்சி நோட்டீஸ் வந்தது.

IMG_9639

தபால்தலைக் கண்காட்சியில் பல இந்திய தபால்தலைகளை விலைக்கு வாங்கினேன். ஆனால் லண்டனில் 150 வியாபாரிகள் ஸ்டால்களில் தபால் தலைகள் விற்பார்கள். மும்பையில் வெறும் அரசு ஸ்டால்கள் மட்டுமே இருந்தன. ஆயினும் கும்பல் கும்பலாக பள்ளி மாணவ மாணவியர் வந்து அஞ்சல்தலைகளைத் ‘தரிசித்த’ வண்ணமிருந்தனர். அதைக் கண்டபோது மகிழ்ச்சி பொங்கியது.

 

தபால்தலை சேகரிப்பு உலகில் அழிந்துவருகிறது. காரணம்: இண்டர்நெட், பேஸ்புக், கம்ப்யூட்டர் கேம்ஸ். இதுதவிர அஞ்சல்தலைகளின் விலையேற்றம்– நான் பிரிட்டனில் ஆண்டுதோறும் வெளியிடும் தபாலதலைகளை வாங்க நூறு பவுண்டுகளுக்கு மேல் செலவிடுகிறேன். இன்னுமொரு காரணம் தபால்தலைகளை ஒட்டுவதற்குப் பதிலாக, போஸ்ட் ஆபீஸ்காரகளே அச்சு முத்திரை குத்தும் வழக்கம் மேலைநாடுகளில் பரவிவருகிறது

IMG_9631

உலக அதிசய தபால் கார்டு!!

அஞ்சல்தலைக் கண்காட்சியில் தபால் கார்ட் (போஸ்ட் கார்ட்), உறை முதலியனவும் வாங்கியபோது வியப்பு மேலிட்டது. ஒரு கார்டின் விலை ரூ 2-50, உறையின் விலை ரூ.4. எங்கள் நாட்டு கணக்கில் இரண்டரை பென்ஸ், நாலு பென்ஸ்!! உலகிலேயே குறைந்த தபால் கட்டணம் இந்தியாவில்தான்! இமயம் முதல் குமரி வரையுள்ள பன்னிரெண்டரை லட்சம் சதுரமைல் பரப்பில்  உள்ளோரைத் தொடர்புகொள்ள இரண்டரை ரூபாய் போதும்! ஐரோப்பாவில் 15 நாடுகளைக் கடக்கும் தூரம் 3500 மைல் (குமரி- காஷ்மீர்).இதற்கு நாங்கள் 60 பென்ஸ் முதல் ஒரு பவுண்ட் வரை ( ஒரு பவுண்ட்= 100 ரூபாய்) செலவிடுகிறோம்.

வாழ்க இந்தியா! வளர்க அஞ்சல் துறை!

IMG_2731

விமானநிலயத்தில் ஒரு சர்ப்ரைஸ் !!

சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமானநிலயத்தில் ட்யூட்டி Fரீ கடைப் பகுதியில் கோண்டு இனப் பழங்குடி மக்களின் ஓவியங்கள் கலைப் பொருட்களை விற்கும் இரண்டு கடைகளைக் கண்டேன். மிக அருமையான வண்ண ஓவியங்கள்; கலைப் பொருட்கள். ஆனால் விலையோ யானை விலை, குதிரை விலை!! பார்த்துப் பார்த்து ரசித்தேன். அவர்கள் அனுமதி கேட்டு புகைப் படமும் எடுத்தேன். நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கோண்டுகள் வனம் என்பதே = கோண்ட்வானா லாண்ட்= காண்ட வனம் என்பதை நிரூபித்து இருக்கிறேன். காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்ணனும் எரித்தபோது தென் அமெரிக்காவுக்குச் சென்றவர்களே மாயா இன மக்கள் என்றும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன். ((காண்டவ = கோண்ட், காண்டவ வனம் = கோண்ட்வானா லாண்ட்.))

 

இப்பொழுது இந்தப் பழங்குடி மக்கள் மத்தியப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களில் வசிக்கின்றனர்.

 

வாழ்க காண்டவ வன கோண்ட் மக்கள்!

 

–Subham–

 

மூன்று செவிடர்கள் கதை (Post No. 2386)

deaf4

Compiled by London swaminathan

Date: 13 December 2015

 

Post No. 2386

 

Time uploaded in London :–7-09 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

 

நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்

deaf joke1

மூன்று செவிடர்கள் கதை

பொண்டிரெட்டிபட்டி யென்றவூரில் பொம்மனனென்றவனுக்கு வல்லாளகண்டியென்னும் பெண்வாழ்க்கைப் பட்டிருந்தாள். அவ்விருவரும் பீரங்கிபோட்டாலும் புகையென்று சொல்லக்கூடிய காதுகேளாத கம்பிளிகள்.

 

ஒருநாள் பொம்மணன் தன் மனைவியைப் பார்த்து, அடியே! இன்று அரைக்கீரை மசியலும் , உருளைக் கிழங்கு வறுவலும் செய்யென்று சொன்னான். அதற்கவள் தாங்கள் அசலூருக்குப் போவதால் எனக்குச் சமையல் வேண்டாமென்றாள். அதற்குப் பொம்மணன், சரி, செய். வயலுக்குப்போகிறேனென்று சொல்லிப்போய்விட்டான்.  இவள் தனக்குச் செய்துவைத்திருந்த சாப்பாட்டைச் சாப்பிடப்போகும் தருணத்தில்  புருஷன் கதவைத்திறந்து உள்ளே வந்து, அடியே எனக்கு இலையைப் போடு என்றான்.

 

மனைவி:– ஏன் ஊருக்குப்போகவில்லையா?

புருஷன்:- நான்தான் உருளைக்கிழங்கு வறுவலும், அரைக்கீரை மசியலும் செய்யச் சொன்னேனே! செய்தாயா?

 

மனைவி: வண்டி உருளையை நான் பார்க்கவில்லையே!

 

புருஷனுக்குக் கோபம் வந்து உடனே தலைமயிரைப் பிடித்து அடித்துவிட்டு, ஊருக்கு மேற்கிலுள்ள மண்டபத்திலுட்கார்ந்து யோஜனைசெய்துகொண்டிருக்கும்போது,

deaf joke2

ஒரு செவிட்டு இடையன் தன் ஆடுகளில் மூன்று காணாமற்போனதால், அதைத்தேடிக்கொண்டுவர மண்டபத்திலுட்கார்ந்திருக்கும் பொம்மணனைப் பார்த்து ஐயா! என் ஆட்டுக்குட்டிகளைப் பார்த்தீராவென்று கேட்க, இவனென்னமோ கேட்கிறானென்று கீழ்திசையை நோக்கிக் கையைக் காட்டினான். அதற்கு இடையன், சாமி! ஆடுகள் அகப்படால் உங்களுக்கு நொண்டியாடு ஒன்றிருக்கிறது. அதைத் தருகிறேனென்று சொல்லிப்போனான். தற்செயலாய் அத்திசையில் மூன்று ஆடுகள் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துக்கொண்டு அம்ம்மண்டபத்துக்கு வந்து, செவிட்டுப் பொம்மனைப் பார்த்து, இச்செவிட்டிடையன், சாமி! இந்தாங்க, நொண்டியாடு வாங்கிக் கொள்ளுங்கள் என்றான்.

 

பொம்மண: அடே போடா! நான் ஒடிக்கவில்லை, காலை.

இடையன்: நல்ல ஆடாவேணும்! அது முடியாது. (காலைக் காட்டி) நொண்டியாடுதான் கொடுப்பேன்.

 

பொம்மண: வலது காலும் ஒடிக்கவில்லை, இடது காலும் ஒடிகவில்லை போடா!

இதேது, உபத்திரமாயிருக்கிறது. பெண்சாதி, சொன்னபடி கேட்கவில்லையென்று இங்குவதால் இவன் ஆட்டின் காலை ஒடித்தானென்கிறானே!

 

இடையன்; கும்பிட்டு விழுகிறேன் சாமி! கோபித்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் ஒப்புக்கொண்டபடி இந்த நொண்டியாட்டை வாங்கிக்கொள்ளவேணும்.

 

பொம்ம: ஐயையோ! இதேது இழவாயிருக்கிறது, இந்த நொண்டியாட்டை வைத்துக்கொண்டு வேறே ஆடு கேட்கிறானே. இது அநியாயம்.

deaf 3

இதற்குள் வழியே போன ஒரு தகல்பாஜி இச்செய்கையறிந்து,  இடையனைக் கூப்பிட்டு, அடே உனக்கெனடா, இந்த நொண்டியாட்டைக் கட்டிவிட்டுப் போவென்றான். அந்தப்படி கட்டிவிட்டு அவன் நெடுந்தூரம் போனபிறகு, ஓய், இதோ பாரும், நீர் இந்த ஆட்டின் காலை ஒடித்ததற்காக ஒரு போலீஸ்காரனைக் கூட்டிவரப்போகிறான் என்று உரத்துக் கூறப் பொம்மணன் விழுந்து ஓட்டமாயோடித் தன்வீடு போய்ச் சேர்ந்தான். தகல்பாஜியும் இதுதான் சமயமென்று நொண்டியாட்டைப் பிடித்துக்கொண்டுசென்றான்.

–சுபம்–

 

முட்டாள் யார்? (Post No: 2366)

horses

Compiled by London swaminathan

Date: 27 November 2015

Post No. 2366

 

Time uploaded in London :– 8-21 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

சில வியாபாரிகள் ஓர் இராஜாவிடம் சென்று குதிரையைக் காட்டி விலை கூறினர். அரசன் அவற்றையேற்றுப் பின்னும் பல குதிரைகளைக் கொண்டுவரும்படி கூறி லக்ஷம் ரூபாய் கொடுத்தனுப்பினார். அப்படியே வியாபாரிகள் சென்றனர்.

 

மூன்றாம் நாள் அரசன் போதையாயிருக்கும் போது, “மந்திரி நம் தேசத்திலிருக்கும் முட்டாள்களின் பெயரை எழுதி ஒரு பட்டியல் கொண்டுவா “ என்றார்.

 

மந்திரி அவ்வாறே எழுதிக் கொண்டுவர அரசன் அதைப் பார்த்துக் கோபம் கொண்டான். என் பெயரை ஏன் முதலில் எழுதிவைத்தாய்? என்றான். அதற்கு மந்திரி, “யாதொரு ஆதாரமும் இல்லாமல் வழிப்போக்கர்களாகிய குதிரை வியாபாரிகளுக்கு லக்ஷம் ரூபய் கொடுத்தீர்களே! இது முட்டாள்தனமல்லவோ? ஆதலினால்தான் உமது திருநாமம் முதலில் வந்தது என்று சொன்னார்.

 

“அவர்கள் குதிரைகளைக் கொண்டுவந்துவிட்டால், என்ன செய்வாய்?”

என்று அரசன் கேட்டார்.

fool

உமது திருநாமத்தை எடுத்துவிட்டு, அவர்கள் பெயரைப் பதிந்துவிடுவேன்” என்றார் மந்திரி.

 

–சுபம்–

 

தாசியை ஏமாற்றிய ஜோசியர்! (Post No. 2357)

astrologer

Compiled by London swaminathan

Date: 24 November 2015

Post No. 2357

 

Time uploaded in London :– 9-04 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

எமகாத ஜோஸிய கிண்டன், மோச நாச தர்மராஜ ஜோஸியர்—கதை 2 (முதல் கதை நேற்று வெளியாகியது)

 

தர்மராஜ ஜோஸியர், சிப்பாயைப் புலியின் கையில் ஒப்படைத்துவிட்டு அமிர்தபுரி என்ற ஊருக்குச் சென்றார். அங்கு தாசிகள் வசிக்கும் தெரு வழியாகச் செல்லுகையில் ஆங்குள்ள ஒரு பெரிய மாடி வீட்டில் நுழைந்தார். அந்த இடத்தில் வரைந்த படத்தைப் பார்த்து, அதன் கீழே எழுதியிருந்ததை வாசித்தார். “ஜெகம் புகழ், சங்கீத பரத நளின, சரச உல்லாச லீலாவமிர்த பூஷணியாகிய சரசவல்லி என்ற மனோன்மணியிடம் வரப் பிரியப் படுபவர்கள் இரவு ஒன்றுக்கு ரூபாய் இரு நூறு கொடுக்கவேண்டுமென்று கண்டிருக்க இவளையும் ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டு உள்ளே நுழைந்தார்.

 

அங்கேயிருந்த தாய்க்கிழவியுடன் சம்பாஷித்து, சம்மதித்த பின்னர் சரசவல்லியிடம் சாதுர்யமாகப் பேசினார். அப்போது கிழவியைக் கூப்பிட்டு, இந்தா அரை ரூபாய், இதற்கு குதிரைக்குப் போட நயமான கொள்ளு வாங்கிவா வென்று அனுப்பினார். அவள் பின்னாலேயே அவளுக்குத் தெரியாமல் சென்றார். அவள் கால் ரூபாய்க்கு கொள்ளு வங்கியதைக் கண்டறிந்தார். சட்டென்று தாசி வீட்டுக்குத் திரும்பி வந்தார்.

 

free_horse_lines_by_s1088-d4rfsuo

அன்றிரவு அம்மனோகரியிடம் மனம்போனபடி சுகானுபவங்களை அனுபவித்துவிட்டு, இரவு இரண்டு மணிக்கு குதிரை லாயத்துக்கு வந்து, குதிரை லத்திகளைக் கையிலெடுத்து ஆயிரம் ரூபாய் நாணயங்களை அதனுள்ளே திணித்தார். பின்னர் படுக்கச் சென்றார். விடிந்ததும் காப்பி சாப்பிட்டுவிட்டு கிழவியை அழைத்தார். அவளை ஒரு பெரிய அண்டாவைக் கொண்டுவரச் செய்து, அதில் குதிரை லத்திகளைப் போட்டு தண்ணீர்விட்டுக் கலக்கினார். அப்போது கிழவிக்கு முன், ஆயிரம் ரூபாய் நாணயங்களையும் எடுத்து வைத்தார் அதைக் கண்ட தாசி சரசவல்லி, குதிரை லத்தியில் ஆயிரம் ரூபாய் நாணயங்கள் எப்படி வந்தன என்று வியப்புடன் கேட்டாள்.

ஜோஸியர்: ஏ கிழவி! நீ கால் ரூபாய்க்குத் தானே கொள்ளு வாங்கினாய்?

கிழவி: இல்லை, சாமி. தாங்கள் கொடுத்த அரை ரூபாய்க்கு வாங்கினேன்.

ஜோஸியர்: ஏ, துஷ்டி! பொய் சொல்லாதே. அரை ரூபாய்க்கு கொள்ளு வாங்கியிருந்தால் 2000 ரூபாய் கிடைத்திருக்குமே, பொய் சொல்லாமற் சொல் என்றார். கிழவியும் உண்மையை ஒப்புக்கொண்டாள்.

 

இதையெல்லாம் பார்த்த தாசிக்கு குதிரையை எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென்ற ஆசை எழுந்தது.

 

சரசவல்லி: என் பிராண நாதரல்லவா நீங்கள்! அந்தக் குதிரை என் வீட்டிலேயே இருக்கட்டும்.நான் 16,000 ரூபாய் தருகிறேன் என்றாள்.

 

ஜோஸியர்: இந்தா சரசம்! அதெல்லாம் சொல்லாதே. இந்தக் குதிரையை நான் சம்பாதிக்க பட்டபாடு பகீரதப் பிரயத்தனமென்பது போல் நிரம்பக் கஷ்டப்பட்டுக் கிடைத்தது. அதையன்றி வேறு சமாச்சாரம் பேசு, இன்னும் ஐநூறு வேண்டுமேனாலும் நான் உனக்குத் தருவேன் என்றான். ஆசை யாரை விட்டது? வெகுநேரம் தர்க்கமாடிப் பிறகு 20,000 ரூபாய் பெறுமான நகைகளையும், ரொக்கம் 16000 ரூபாயையும்  பெற்றுக் கொண்டு குதிரையைக் கொடுத்துவிட்டு ஜோசியர் கம்பிநீட்டினார்.

wedding

அப்படிப் போகையில் ஒரு ஊரில் ருது சாந்திமுகூர்த்தம் – அதாவது ருதுவான பெண்ணுக்குச் சாந்தி செய்யக் கூட்டம் கூடியிருந்தது. இந்த தர்மராஜ ஜோசியரும் அந்தக் கூட்டத்துடன் சேர்ந்து போஜனம் முதலானவற்றைச் செய்துமுடித்தார். கலியாண மாப்பிள்ளையை தனியாக அழைத்து வேடிக்கையாகப் பேசி கையில் கஞ்சா லேகியத்தைக் கொடுத்தார். இது ஒரு சஞ்சீவி மருந்து சாப்பிட்டால் நல்ல சுகம் கிடைக்குமென்று சொல்ல மாப்பிள்ளையும் அதை சாப்பிட்ட அரை மணி நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே ஜோசியர் அவனுடைய புது வஸ்திரங்களைப் போட்டுக்கொண்டு, கலியாண வீட்டுக்குப் போய்நி ற்க, ஒருவர் அவரை “மாப்பிள்ளை, மாப்பிள்ளை” என்றழைக்க இவர் என்ன கூப்பிட்டீர்களா? என்று முன்னால் சென்றார். முகூர்த்த லக்னம் தவறிவிடப் போகிறதேயென்று கவலைப்பட்ட புரோகிதர் ஜோசியரை மாப்பிள்ளை என்று நம்பி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து இருவரையும் சயன கிருகத்துக்கு (படுக்கை அறை) அனுப்பிவைத்தார். ஜோசியர் காலையில் எழுந்து புதுமணப்பெண்ணை அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தார்.

 

சில நாட்கள் சென்றதும், ஜோசியரிடம் ஆட்டை விலைகொடுத்து வாங்கிய பிராமணனும், குதிரை வாங்கிய தாசியும், கஞ்சா லேகியம் சாப்பிட்ட மாப்பிள்ளையும் ஜோசியரைத் தேடி வந்தார்கள். அபோழுது ஜோசியர், போஜனம் முடிந்து வெற்றிலைச் செல்லத்துடன் திண்ணையில் வந்து அமர்ந்தார். அவகளைப் பார்த்து, எப்படி இங்கே வெகு தூரம் வந்தீர்கள்? சாப்பாடு ஆகிவிட்டதா? இல்லாவிட்டால் ஹோட்டலில் போய்ச் சாப்பிட்டு வாருங்கள். உங்கள் முகத்தைப் பார்த்தாலே பசிக் களைப்பு தெரிகிறது என்றார். இதெல்லாம் பசப்பு வார்த்தைகள் என்று அறிந்து, சாப்பிடச் செல்வதாக வெளியே வந்தனர். மறைவாக நின்றுகொண்டு, ஜோதிடர் வெளியே வரும்போது, அவரைப் பிடித்து ஒரு சாக்கில் போட்டுக் கட்டினர். ஜோதிடர் இருந்த சாக்குப் பையை மலையிலிருந்து உருட்டிவிட ஏற்பாடு செய்தனர்.

 

ஒரு வேலைக்காரன், ஜோதிடர் அடைக்கப்பட்ட மூட்டையை தலைமேல் சுமந்து சென்றான். அவனுக்குத் திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டுமென்பதால், மூட்டையைக் கிழே வைத்துவிட்டு வயல் வரப்புக்குச் சென்றான். ஜோதிடர் யாரோ நடந்து வரும் காலடிச் சப்தம் கேட்டு, “எனக்கு வேண்டாம் ராஜா மகள்”, “எனக்கு வேண்டாம் ராஜா மகள்” என்று கத்திக் கொண்டேயிருந்தார். அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு நாட்டுப்புறத்தான், அந்த மூட்டையை அவிழ்த்துவிட்டு என்ன செய்தி? என்று கேட்டான்.

அப்பா! எனக்கு ஒரு அழகிய ராஜா மகளைக் கலியாணம் செய்துவைத்து ராஜாவாகப் பட்டபிஷேகம் செய்ய வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கின்றனர். நான் வேண்டாமென்கிறேன் என்றார். அதைக் கேட்ட நாட்டுப்புறத்தான, ஐயா, கவலைப்படாதீர்கள் என்னை மூட்டையில் வைத்துக் கட்டுங்கள். நான் போகிறேன் என்றான். உடனே ஜோஸியர், அவனை சாக்குப் பையில் கட்டிவைத்து விட்டு கொஞ்சம் தள்ளிப் போய் மறைவாக நின்று வேடிக்கை பார்த்தார். சிறுநீர் கழித்துவிட்டுக் கைகால் கழுவிய வேலைக்கரன் அந்த மூட்டையைச் சுமந்து சென்றதைப் பார்த்தபின்னர் நிம்மதியாக வீடுபோய்ச் சேர்ந்து சுகமாக வாழ்ந்தார்.

–சுபம்–

 

எமகாத ஜோஸிய கிண்டன், மோச நாச தர்மராஜ ஜோஸியர்—கதை1 (Post No. 2354)

Goats

Compiled by London swaminathan

Date: 22 November 2015

 

Post No. 2354

 

Time uploaded in London :– காலை 9 -49 மணி

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

தர்மாபுரம் என்ற ஊரில், அணித, கணித நிகா கணித, மகா கணித, தர்மராஜ ஜோஸியர் என்ற பிராமணர் ஒருவர் வயல்களைச் சுற்றிப்பார்த்து வருகையில் புதுக் காலணா ஒன்று கீழே கிடந்ததை எடுத்துப் பார்க்கையில் தற்செயலாய் அவ்விடத்தில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த ஒரு இடைப்பையன், “சாமி அது  என்னெ”வென்று கேட்டான்

தர்மராஜ ஜோஸியர்: “அடே அது பவுன்”.

 

இடைப்பையன்: சாமி, எங்கே பார்ப்போம். காசை எனக்குக் கொடுங்கள். நல்ல ஆடு ஒன்று தருகிறேன் என்று சொல்லி காசைப் பெற்றுக்கொண்டு ஒரு ஆட்டைக் கொடுத்துவிட்டு தன் போக்காக சந்தோஷமாய் அக்காசை திருப்பித்திருப்பிப் பார்த்துக்கொண்டே போய்ச் சேர்ந்தான்.

ஆட்டைப் பெற்றுக்கொண்ட பிராமணன் அதை வெகு ஆதரவாக வைத்துக் காப்பாற்றினான். அடுத்தவீட்டு

அச்சுதராமையன்: – “ஓய் ஜோஸியரே! ஏதுகாணும் பிராமணன் ஆடு வாங்கி வளர்க்கிறீரே?”

 

ஜோஸியர்: போங்காணும், போம், போம். அந்த ஆடு சாமான்யமான ஆடு என்று நினைத்தீரா? அது மிருகண்டு மகரிஷி யாகம் செய்தபின் உற்பவித்த ஆடு. நேற்று என் கனவில் தோன்றி இன்ன இடத்தில் ஆடு ஒன்று நிற்கிறது. அதைப்பிடித்துக் கொண்டுபோய் ஒரு வருஷம் வளர்த்தால் சொர்ண (தங்க) புழுக்கையாய்ப் போடும் என்று சொன்னதின் பேரில்தான் இதைப் பிடித்துக் கொண்டுவந்து நான் வளர்த்து வருகிறேன்

 

அச்சுதராமையன்: ஓய் ஜோஸியரே! என்னகாணும் புளுகுகிறீர்! காலம் கலி காலம், போம்!!

 

ஜோஸியர்:- சரி சரி போம். உம்ம ஜோலியைப் பார்த்துக்கொண்டு போம். உம்மிடம் புளுகினால் எனக்கு என்ன லாபம்?

 

 

பிறகு தினம் ஒவ்வொரு பிராமணனாக வந்து வந்து மேற்கண்ட சங்கதிகளை விசாரித்துச் செல்லுவதைப் பார்த்த அச்சுதராமய்யன் பேராசை என்னும் வலையில் சிக்குண்டு, மறுபடி ஜோஸியரிடம் போய் ஜோஸியரே! என்ன சமாசாரம், ஆட்டின் விஷயமெப்படி யிருக்கிறது?

 

ஜோஸியர்: ஓய் பிராமணா! ஆட்டின் விஷயம் மாத்திரம் என்னைக் கேட்காதீர். அதுவுமக்கு நம்பிக்கையில்லை. அதுவிஷயமெனக்குத் திருப்திதான். நீர் போரும்

அச்சுதராமய்யன்: ஓய் ஜோஸியரே! இங்கு வாரும் கோபிச்சுகாதேயும். ஒருத்தர் கிட்டேயும் சொல்லாதேயும். அந்த ஆட்டின் விலையென்ன சொல்லும். இப்பொழுதே வேணுமென்றாலும் ரொக்கத்தை எண்ணித் தருகிறேன்.

 

ஜோஸியர்: இந்தாரும் ஆட்டுச் சமாசாரத்தைப் பேசாதேயும். அது நீர் ஐநூறு கொடுத்தாலும் முடியாது. ஆயிரம் கொடுத்தாலும் முடியாது. நான் எவ்வளவோ கஷ்டப்பட்டுச் சம்பாதித்தேன். அதைத் தவிர வேறு ஏதாவது பேசும்.

அச்சுதராமய்யன்: ஓய் உம்மைக் கெஞ்சுகிறேன் காணும். இந்தாரும் ஓய் ஆயிரம் ரூபாய். இதைப் பெற்றுக்கொண்டு ஆட்டைக்கொடுங்காணும்.

amur-tiger1_100608

ஜோஸியர்:- “சரி, ஒருவரிடமும் சொல்லாதேயும்”

 

என்று சொல்லி ஆட்டைக் கொடுத்து ரூபாயை வாங்கிக் கொண்டு இனி இங்கிருக்கக் கூடாதென்று நினைத்துக் காட்டை நோக்கிப் புறப்பட்டார். அப்போது ஒரு வேங்கைப் புலி இவரைத் துரத்திக்கொண்டுவர இவர் ஒரு ஆலமரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டார். புலியோவெனில் அவருக்கு எதிர்ப்புறம் நின்று கொண்டு இவரைப் பிடிக்க இரு புறமும் கைகளை நீட்டியது. உடனே ஜோஸியர் இரண்டு கைகளையும் கெட்டியாகப் பிடிக்க, புலியும் அவரும் பலமுறை மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தனர். அப்போது அவர் ஆடு விற்று மடியில் கட்டிவைத்திருந்த பணம் ஒவ்வொன்றாக விழத் துவங்கியது. அதுசமயம் ஒரு சிப்பாய் குதிரைமேல் சவாரி செய்துகொண்டு வந்தான். அவனைக் கூப்பிட்டு, ஓய் சிப்பாய், இந்தப்புலியைக் கொன்றுவிடு என்று கெஞ்சினார்.

 

சிப்பாய்: போம் ஓய் பொம்மன். என் மாமனார் பெயர் புலியப்பக் கவுண்டர். ஆகையினால் புலியை நாம் கொல்ல மாட்டோம்- என்று சொல்லி நெருங்கிவர ரூபாய் ஒவ்வொன்றாக விழுந்து கொண்டிருந்ததைப் பார்த்த சிப்பாய்க்கு பேராசை பிடித்துக் கொண்டது. எப்படி எங்கேயிருந்து ரூபாய் நோட்டுகள் விழுகின்றன? என்று சிப்பாய் கேட்டான்.

 

ஜோஸியர்: இந்த மரத்தில் ஒரு முனி இருக்கிறது. புலியின் கைகளைப் பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தால், ரூபாய் நோட்டுகள் விழ ஆரம்பித்துவிடும் என்றார்.

 

சிப்பாய்: நல்லது ஓய்! கொண்டாரும் கையை என்று சொன்னவுடனே புலியின் கையை சிப்பாயிடம் கொடுத்துவிட்டு, ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு சிப்பாயின் குதிரை மீதேறிக்கொண்டு,சிட்டாக பறந்தார்.

 

சிப்பாய் கூவினான்: “ என்ன இது? ரூபாய் நோட்டுகள் எதுவும் விழவில்லையே! என்றான். உன்னைக் கொன்று போடுவேன் என்று கத்தினான்.

ஜோஸியர்: போடா போ, புத்தியில்லாத மடையா! எங்கள் சித்தப்பா வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்). நான் புலியைக் கொல்ல மாட்டேன்” என்று சொல்லிவிட்டு குதிரையைச் சிட்டாகப் பறக்கவிட்டார்.

 

CAPTIVE Bengal Tiger

683999257 Bengal Tiger Panthera tigris CAPT Young Male Native to Indian Subcontinent Wildlife Rescue

–இரண்டாவது பகுதியில் ஒரு கிழவியையும் விபசாரியையும் மாப்பிள்ளையையும் ஜோஸியர் ஏமாற்றிய கதைகளைக் காண்போம்.

–தொடரும்…………………………..