‘அருந்தவத்து அரசி’ சபரி – ராமாயண இன்பம் (Post No.3004)

sabari

Picture shows Sabari with Rama, Lakshmana

Article Written by London swaminathan

Date:25 July 2016

Post No. 3004

Time uploaded in London :– 8-05 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

கம்ப ராமாயணத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் சபரி என்னும் கானகப் பெண்மணியைப் பற்றிய பாடல்கள் மிகவும் குறைவு. ஆயினும் அந்தப் பாடல்களை, ஸ்லோகங்களைப் படிக்கும்போது இலக்கிய இன்பமும், பக்திச் சுவையும் கிட்டும்.

 

முதலாவது, கானகத்தில் தவம் செய்யும் கிழவிக்கு கம்பன் கொடுக்கும் அடை மொழி “அருந்தவத்து அரசி”. வால்மீகி அடிக்கடி பயன்படுத்தும் “தபோநிதி” – என்பதை கம்பன் வேறு வடிவத்தில், இப்படி மிகவும் அழகாகப் பகர்கிறான்.

 

கம்ப ராமாயணம் முழுதும், ராமனுக்கும் சீதைக்கும் அனுமனுக்கும் கம்பன் கொடுக்கும் அடை மொழிகள் படித்துப் படித்து இன்புறத் தக்கவை.

இருந்தனென் எந்தை நீ ஈண்டு எய்துதி என்னும் தன்மை

பொருந்திட இன்றுதான் என் புண்ணியம் பூத்தது என்ன

அருந்தவத்து அரசி தன்னை அன்புற நோக்கி எங்கள்

வருந்துறு துயரம் தீர்த்தாய்; அம்மனை வாழி என்றார்

பொருள்:

சபரி சொன்னாள்: என் தந்தையே! நீ இங்கே வரப்போகிறாய் என்று கேட்டு, உன்னை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். நீ வந்துவிட்டதால், இன்றுதான் என் தவம் பலித்தது ( என் புண்ணியம் பூத்தது).

உடனே, அருந்தவத்துக்கு ராணியான அவளைப் பார்த்து, அன்போடு ராமன் சொன்னான்: தாயே! வழிநடையால் ஏற்பட்ட களைப்பை, உன் உபசரிப்பால் தீர்த்துவிட்டாய், நீ வாழ்வாயாக.

 

அவள் சொல்கிறாள்: சிவனும் பிரம்மனும், இந்திரனும் என்னிடம் வந்து,  நீ சித்தி பெறும் காலம் வந்துவிட்டது. ராமன் இங்கே வருகிறான். அவனுக்கு உரிய உபசாரங்களைச் செய்துவிட்டு எம் உலகத்துக்கு வருக என்று அவர்கள் சொன்னார்கள்.

 

(பிரம்மா, சிவன் பெயரை மட்டும் சொன்னதிலிருந்து,   ராமனே விஷ்ணு என்பதையும் கம்பன் தெரிவிக்கிறான்.)

shabari

Picture: – சபரி என்ற வேடுவப் பெண்மணி

இன்னொரு பாடலில் ஞானிகள் யார் என்றும் கம்பன் சொல்கிறான். அவர்கள் “கேள்வியால் செவிகள் முற்றும் தோட்டவர்”. அதாவது, நமக்கு எல்லாம் காதில் இயற்கையாகவே துளை இருக்கிறது. சான்றோருக்கு,  கேள்வி  ஞானத்தால் – நல்லனவற்றைக் கேட்டதால் அத்துளை உண்டாயிற்றாம்!

 

சபரி வாழ்ந்த இடம் .மதங்க முனிவரின் ஆசிரமம் ஆகும். அந்த இடத்தின் இயற்கை அழகையும் பம்பா நதி தீரத்தின் இயற்கை அழகையும் வால்மீகி விரிவாக வருணிக்கிறார். கமபன் அந்த இடம் சொர்க்கலோகம் போல இருந்தது என்பான்:

எண்ணிய இன்பங்கள் அன்றித் துன்பங்கள் இல்லை ஆன

புண்ணியம் புரிந்தோர் வைகும் துறக்கமே போன்றது அன்றே

 

பொருள்:

புண்ணியம் செய்தோர் போகக்கூடிய சுவர்க்கம் (துறக்கம்) போல எப்போதும் இன்பம் மட்டுமே நிலவும் — துன்பமே இல்லாத – இடம் போல இருந்தது (மதங்க முனிவரின் இருப்பிடம்)

 

இறுதியில் ராமனுக்கு காய் கனிகளைக் கொடுத்து சபரி உபசரிக்கிறாள். அது மட்டுமல்ல சுக்ரீவன் வாழும் இடத்துக்கு எப்படி போவது என்றும் வழிகளை விரிவாகச் செப்புகிறாள். கடை சியில் யோக சக்தி மூலம் தன் உடம்பை விட்டு நீங்கி உயிர் துறக்கிறாள்.

 

வால்மீகி சிறிது வேறுவிதமாக முடிக்கிறார். யோக சக்தி என்பதற்குப் பதிலாக தீயில் புகுந்து சபரி உயிர் நீத்தாள் என்று இயம்புகிறார். அக்காலத்தில் சான்றோர்கள், தனது பணிகள் முடிந்தபின் இப்படி தீப்புகுந்து உயிர் துறப்பர்.

 

அதிகமான சங்கத் தமிழ் பாடல்களைப் பாடிய பிராமணப் புலவன் – “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” – கபிலனும் இப்படி தீப்புகுந்து உயிர்நீத்தான்.

 

சபரி பாடல்களில் இருந்து நாம் அறிவது என்ன என்று ஒரு ஆராய்ச்சி செய்வோம்:–

sabari ashram

Picture:– சபரி வாழ்ந்த இடம் .மதங்க முனிவரின் ஆசிரமம்

1.அந்தக் காலத்தில் பெண்களும் நல்ல ஆன்மீக அறிவு பெற்றிருந்த்னர். அவ்வையாருக்கு எல்லாம் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவர் சபரி. அப்போதே பெண்கள் ஆன்மீக தாகம் கொண்டு தவம் செய்தனர்.

2.ராமன் போன்றாரும், சபரியும் கானகத்தில் – வெஜிட்டேரியன் உணவை மட்டுமே சாப்பிட்டனர். காயும் கனிகளும் கீரையும் தேனும் திணை மாவுதான் அவர்கள் உண்டவை.

3.சான்றோர்கள் தன் தவ வலிமையால் உடல் துறப்பது, தீப்புகுவது என்பது சர்வ சாதாரணமாக இருந்தது. அதாவது உடலைத் துச்சமாக எண்ணினர். நாம் பழைய உடைகளைக் குப்பைக் கூடையில் எறிவது போல அவர்கள் உடலைத் துறந்தனர்.

4.கானகத்தில் இருந்த ஆசிரமங்கள் மிகவும் இயற்கை அழகு மிக்கவை அவை சொர்க்க லோகம் போன்று இன்பமே எந்நாளும் என்ற இடமாகத் திகழ்ந்தன.

5.சபரி கடித்துச் சுவைத்து கொடுத்த பழங்களை ராமன்- மன்னன் மகன் — ஜாதி வேறுபாடின்றி சாப்பிட்டதையும் நாம் அறிவோம். ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடலை – ராமன் குகன் சம்பவத்திலும், சபரி சம்பவத்திலும் காட்டுகிறான்.

  1. எல்லாவற்றிற்கும் மேலாக ஆரிய-திராவிட வாதத்துக்கு செமையடி கொடுக்கிறது ராமாயணம். ஆதிகுடிகள், வேடுவர்கள் என்போரெல்லாம் திராவிடர் என்றும் , ராமன், கிருஷ்ணன் போன்றோர் எல்லாம் ஆரியர் என்றும் பிதற்றினர் வெளி நாட்டினர். அது தவறு – சபரியும் கூட யோக வாழ்வு நடத்தினாள் என்று காட்டுகிறது இந்த சம்பவம். மேலும் ராமனும், கிருஷ்ணனும் “காக்கா கறுப்பு நிறத்தோலினர் என்பதையும் நாம் அறிவோம். ஆக நிறவேற்றுமை புகுத்திய வெளி நாட்டுப் பேய்களுக்கு அடிமேல் அடி கொடுக்கிறது சபரி நிகழ்வு

7.சபரி என்ற வேடுவப் பெண்மணிக்கு நல்ல பூகோள அறிவு இருந்ததையும் இச்சம்பவம் காட்டும். அதாவது அவள், சுக்ரீவன் வாழும் ரிஷ்யமுக பர்வதத்துக்குப் போகும் வழியை இராம இலக்குவருக்கு இயம்புகிறாள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று ஒரு காலம் நிலவியது உண்மைதான். ஆனால் அதற்கு முன்னர் ‘கூகுள் மேப்’- ஐ (Google Map) விட அதிக அறிவு இருந்தது பெண்களுக்கு.

 

8.இப்படலம் சுவர்கம் பற்றிய தகலையும் நமக்குத் தருகிறது. சுவர்க்க லோகம் இன்பமே எந்நாளும் நிலவும் இடம். அங்கு துன்பம் என்பதே கிடையாது.

 

சபரி பிறப்பு நீங்கு படலத்தை கம்பன் முடிக்கும் முன்பாக, சபரி தன் யோக சக்தியால் உயிர் நீத்ததை ராமன் அதிசயத்தோடு பார்த்த செய்தியையும் கம்பன் கூறுகிறான்:-

அன்னது கண்ட வீரர் அதிசயம் அளவின்றி எய்தி

 

இந்த அதிசயத்தகவலை நமக்குக் கொடுத்த கம்பனுக்கும் வால்மீகிக்கும் நாமும் நன்றி சொல்வோம்.

 

–subham–

 

மனைவிக்கு ‘ஜாயா’ என்று பெயர் ஏன் ? (Post No.2997)

IMG_4412

Compiled by London swaminathan

Date:23 July 2016

Post No. 2997

Time uploaded in London :– 6-20 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஜாயா என்றால் பிறவிக்குக் காரணமானவள். இதை மனைவிக்கு சம்ஸ்கிருதத்தில் பயன்படுத்துவது விநோதமாக இருக்கும். இது தாயாருக்குப் பொருந்தும். ஆனால் தாயாருக்கு ஜனனி, மாதா போன்ற பல பெயர்கள் இருக்கின்றன.

 

ஜாயா என்பதற்கு மனு விளக்கம் தருகிறார்:–

 

பதிர் பார்யா சம்ப்ரவிஸ்ய கர்போ ப்ருத்வேஹ ஜாயதே

ஜாயாயாஸ்தத்தி ஜாயாத்வம் யதஸ்யாம் ஜாயதே புன:

–மனு 9-8

 

கணவன் (பதி:), இந்திரிய ரூபமாக மனைவிக்குள் (பார்யா) புகுந்து (சம்ப்ரவிஸ்ய), கர்ப்பமாக உருவாகி மீண்டும் பிள்ளையாகப் பிறக்கிறபடியால் மனைவிக்கு ஜாயா என்று பெயர்.

 

சுருக்கமாகச் சொல்லப்போனால், கணவனே மகனாகப் பிறக்கிறான்.

 

பிள்ளைக் குழந்தையை வாரி எடுத்து அணைக்கும்போது கணவனை அணைக்கும் இன்பத்தை மனைவி அனுபவிக்கிறாள். ஆனால் ஒரு பெரிய வித்தியாசம்: – கணவனை அணைக்கும் போது இருந்த பால் (செக்ஸ்) உணர்வுகள், இப்பொழுது தாயின் அன்பு வெள்ளமாக மாறிவிடுகிறது.

இன்னும் சொல்லப் போனால், குழந்தை  பிறந்தவுடன், கணவன் மீதான அன்பில் 50 % அன்பு,  குழந்தைக்குப் போய்விடும். கணவன்பாடு கொஞ்சம் திண்டாட்டம்தான்!

jaya hanuman

புலன்களை வென்றவன் (ஜிதேந்த்ரியன்) யார்?

 

ஸ்ருத்வா ஸ்ப்ருஷ்ட்வா அத த்ருஷ்ட்வா ச புக்த்வா க்ராத்வா ச ய: நர:

ந ஹ்ருஷ்யதி க்லாயதி வா ச விக்ஞேய: ஜிதேந்த்ரிய: (மனு 2-98)

 

 

ஸ்ருத்வா – கேட்டும்

ஸ்ப்ருஷ்ட்வா அத – தொட்டும்

த்ருஷ்ட்வா ச – பார்த்தும்

புக்த்வா – சுவைத்தும்

க்ராத்வா ச – முகர்ந்தும்

ய: நர: – எந்த மனிதன்

 

ந ஹ்ருஷ்யதி -மகிழ்வதில்லையோ

க்லாயதி வா – துக்கம் அடைவதில்லையோ

ச விக்ஞேய: — அவன் அறியப்படுவான்

ஜிதேந்த்ரிய: – புலன்களை வென்ற வீரன் என்று.

 

அதாவது ஐம்புல நுகர்ச்சியானது அவனுக்கு மகிழ்ச்சியையோ, துக்கத்தையோ தராது. இந்தக் கருத்து பகவத் கீதையிலும் பல இடங்களில் வருகிறது.

 

ஒன்றாகக் காண்பதே காட்சி (அத்வைதம்)

புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம் (மஹாவீரன்) —

என்று அவ்வையாரும் செப்பினார்.

 

–Subham–

 

உலகை வலம் வருவதற்கு எளிய வழி! (Post No.2989)

globe trotting 2

Written by London swaminathan

Date:20 July 2016

Post No. 2989

Time uploaded in London :–21-21

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

உலகை வலம் வருவதற்கு விநாயகரும் முருகனும் பின்பற்றிய தந்திரங்களை நாம் திருவிளையாடல் புராணம் மூலம் அறிவோம். ஒரு மாம்பழத்தைப் பெறுவதற்காக முருகன்  மயில் மீது வலம் வந்தார். ஆனால், அவனது அண்ணனான பிள்ளையாரோ தாய், தந்தையான பார்வதி-பரமேஸ்வரனைச் சுற்றி வந்து ஒரு மாம்பழத்தைப் பரிசாகப் பெற்றார்.

 

இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என்றால் ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது:–

 

பூ ப்ரதக்ஷிண ஷடகேன காசீயாத்ரா (அ)யுதேன ச

சேது ஸ்நான சதைர்யச்ச தத்பலம் மாத்ருவந்தனே

 

தாயை வணங்குவதானது ஆறு முறை உலகை வலம் வந்ததற்கும், பத்தாயிரம் முறை காசியில் கங்கையில் குளித்ததற்கும் நூற்றுக் கணக்கான முறை ராமேஸ்வரத்தில் கடலில் குளித்தற்கும் மேலானது.

 

இப்போது புரிகிறதா? தாயை ஒரு முறை வணங்கிவிட்டால் ஆறுமுறைக்கு மேல் உலகை வலம் வந்ததற்குச் சமம்.

 

Xxx

babay, mother

 

 

தாயிற் சிறந்ததோர் கோயிலில்லை

 

சம்ஸ்கிருதத்தில் இன்னொரு வசனம் இருக்கிறது:–

“ந காயத்ரயா: பரோ மந்த்ரோ, ந மாதுர் தைவதம் பரம்”

 

பொருள்:–

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை

தாய்க்கு  மிஞ்சிய தெய்வமில்லை.

 

Xxx

 

 

மனு சொல்கிறார்: ஆயிரம் தந்தை = ஒரு தாயார்

 

பத்து உபாத்தியாயர்களைவிட ஒரு ஆசார்யார் (குரு) பெரியவர்; அப்படிப்பட்ட நூறு ஆச்சர்யார்களைவிட தந்தை பெரியவர்;  ஆனால் தாயாரோ ஆயிரம் தந்தைகளைவிடப் பெரியவர்.

 

–மனு ஸ்மிருதி 2-145

 

–SUBHAM–

பெண்ணுக்கு புதிய இலக்கணம்: பெண் – உரிச் சொல்; ஆண் -பெயர்ச் சொல் (Post No.2986)

IMG_3681

Written by London swaminathan

Date:19 July 2016

Post No. 2986

Time uploaded in London :–16-43

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கேசவ சந்திர சென் என்னும்  பெரியார் பெண்களை உரிச் சொல் (Adjective) என்றும் ஆண்களை பெயர்ச் சொல் (Noun) என்றும் வருணித்துள்ளார்.

 

எந்த மொழி இலக்கணத்திலும் பெயர்ச் சொல்லுக்கு அணுசரனையாக, அழகூட்டுவதாக உரிச் சொல் வரும். (எ.கா. அழகான ஆண், அழகான பெண்).

 

வேதத்திலும் இதுபோன்ற உவமை இருக்கிறது. அக்னிதேவனின் பிரகாசம், ஒரு வீட்டிலுள்ள பெண்மணியின் பிரகாசத்தைப் போல் இருந்தது என்று வேதகாலப் புலவர் பாடுகிறார். மனைவியை குடும்ப விளக்கு என்று சங்க இலக்கியமும், சம்ஸ்கிருத இலக்கியமும் போற்றும்.

 

வால்மீகி ராமாயணத்தில் சீதையும் ராம பிரானிடம் சொல்லுகிறாள்:-

 

உலகம் என்னைப் பற்றி கவலை கொள்ளாது

நானும் உங்கள் ஒருவரையே உண்மை என்று நம்பி இருக்கிறேன்

 

இதையே கொஞ்சம் மாற்றிப்போட்டு, ராமனும் சீதையிடம் நான் உன்னையே உண்மை என்று நம்பியிருக்கிறேன் என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். ஆண்கள், பெண்களிடத்திலும் , பெண்கள் ஆண்க ளிடத்திலும் அவ்வளவு விசுவாசம் கொண்டால், வாழ்க்கையின் துயரங்கள் மறையும்; பள்ளங்கள் மேடுகளாகிவிடும்.

 

இதையெல்லாம் சுட்டிக்காட்டும் அப்துல்லா யூசுப் அலி என்னும் பாரிஸ்டர், ஆணைப் பெயர்ச் சொல் என்றும், அதை செயல்பட வைக்கும் வினைச் சொல் (Verb) பெண் என்றும் வேடிக்கையாக வருணிக்கிறார்.

 

அமெரிக்காவில் ஒரு பொன்மொழி — பெண் மொழி — உளது. பெண்கள், இங்கிலாந்தில் கலியாணத்துக்கு முன்பாக சுதந்திரமானவர்கள்; பிரான்ஸில் கலியாணத்துக்குப் பின்னர் சுதந்திரமானவர்கள்; அமெரிக்காவிலோ எப்போதுமே சுதந்திரமானவர்கள்.

IMG_3686

மனு என்ன சொன்னார்: பெண்கள் எப்போதுமே பாதுகாக்கப்பட  வேண்டியவர்கள்: சிறுமியாக இருக்கையில் தந்தையும், இளமையோடு இருக்கையில் கல்யாணமானவுடன் கணவனும் வயதான காலத்தில் மகனுன்களும் பெண்களைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களை எப்போதும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்கிறார்.

 

பெண்களுக்கு சகோதரனும், கணவனும் நகை, நட்டுகளையும் துணி மணிகளையும் வாங்கித் தந்து சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்; பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் இடத்தில் தெய்வம் வசிக்கும்; பெண்கள் துயரக் கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் வேரோடு சாயும் என்றும் மனு பாடி வைத்தார்.

 

பெண்களுக்கு குடும்ப பாரம் ஒன்றே போதும்; வேலை செய்யும் பாரம் வேறு வேண்டாம் என்று இந்துக்கள் நம்பினர். ஆனால் தர்மம் என்பது காலத்துக்கு காலம் மாறும் என்று மனு எழுதிவைத்தார். அதன்படி இன்று பெண்களும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

 

ஆனால் அந்த பொருளாதார சுதந்திரம் வந்தவுடனே அடங்காபிடாரித்தனமும், கட்டுப்பாடின்மையும், விவாக ரத்துகளும்  — அதனுடனேயே பவனி வருவதைக் காண்கிறோம். காலத்தின் கோலம் இது.

–SUBHAM–

 

கணக்கு வரவில்லை! கவிதை வந்தது! நான் கவிஞனாக மாறிய கதை (Post No.2983)

sarojini

Compiled by London swaminathan

Date:18 July 2016

Post No. 2983

Time uploaded in London :– 14-43

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

sarojini book

இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கில இலக்கிய மேதை, கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவம் இது:-

 

அவர் எப்படி கவிதை எழுதத் துவங்கினேன் என்று சொல்லுகிறார்:-

 

“எனக்கு அப்போது வயது 11. ஒரு அல்ஜீப்ரா கணக்கு போட வேண்டியிருந்தது. விடை தெரியவில்லை;  மிகவும் போராடிக் கொண்டிருந்தேன். அந்த போராட்டம் ஒரு கவிதையாக கொப்புளித்தது. உடனே அவசரம், அவசரமாக அதை எழுதி வைத்தேன். அப்போதிலிருந்து கவிதை என்பது சுலபமாக வர ஆரம்பித்தது”.

 

இலக்கியத்தி ல்பெண்கள் சிறப்படைந்தது  இது  முதல் தடவை அல்ல. குமார கம்பண்ணனின் மனைவி கங்கா தேவி, கணவனின் படையெடுப்பின்போது, மதுரை மாநகர மீனாட்சி கோவில் வரை வந்து, மதுரா விஜயம் என்ற காவியத்தைப் படைத்தார்.

 

ரிக் வேதத்தில் , சங்கத் தமிழ் இலக்கியத்தில், பிராக்ருத நூலான காதா சப்த சதியில் நிறைய பெண்புலவர்களைக் காண்கிறோம். காரைக்கால் அம்மையாரும், ஆண்டாளும், அவ்வையாரும் நிறைய கவிதைகளைப்ப்ழிந்தனர்.  பொழிந்தனர். அவுரரங்க சீப்பின் மகள் ஜெப் உன்னிசாவும்  ஒரு எழுத்தாளர்.

 

உலகின் பல நாடுகளில் பெண் எழுத்தாளர்கள் உண்டு. ஆயினும் பழங்கால நாகரீகங்களில் சுமார் நூறு இலக்கியகர்த்தாக்களை கிரேக்க நாட்டிலோ, எகிப்திலோ, சுமேரியாவிலோ, ரோமானிய சாம்ரஜ்யத்திலோ, காண முடியாது. எபிரேய மொழியிலோ சீன மொழியிலோ காணக்கிடைக்காது. அவை எல்லாம் ஆண் ஆதிக்கம் மிக்க சமூகங்கள்.

 

 

ரிக் வேத காலத்தில் 20 பெண்மணிகள் கவிதைகளை எழுதி உபநிஷத காலத்தில் பொதுச் சபை விவாதத்துக்கு — பட்டி மன்றத்துக்கு — வந்த கார்க்கி போன்ற பெண்கள் உலகில் வேறு எங்கும் இல்லை. இவர்களுக்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்வ்வையார், நப்பசலை, நச்செள்ளை போன்ற பல சங்க இலக்கிய பெண்மணிகளைக் காண்கிறோம்.

 

sarojini 3

நான் காற்று வாங்கப் போனேன்

 

“நான் காற்று வாங்க போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்

அதைக் கேட்டு வாங்கிப் போனாள்

அந்தக் கன்னி என்ன ஆனாள்  — என்று பாடினார் கண்ணதாசன்.

 

தமிழில் கவிதை புனையும் ஆற்றல், சரோஜினிக்கு இருந்திருந்தால்,

 

நான் கணக்குப்போடப் போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்;

 

அதைக் கேட்டு சொக்கிப் போனார்கள்

ஒரு கவிஞனாகி விட்டேன்.

 

என்று பாடியிருப்பார்.

 

–SUBHAM–

 

மனைவி சொத்தில் வாழலாமா? (Post No. 2965)

kalai3

Written by London swaminathan

Date:12 July 2016

Post No. 2965

Time uploaded in London :– 14-19

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

மனைவி சொத்தில் வாழலாமா? மனைவி மூலம் கிடைத்த பணத்தில் வாழவே கூடாது. அது மிக மிக கடைத்தரமானது. அப்படியே கிடைத்தாலும், அதை விஞ்சும் அளவு ஒரு ஆண்மகன் சம்பாதித்துக் காட்டவேண்டும். செய்யும் தொழிலே தெய்வம்; உழைப்பே செல்வம்.

 

குந்தித் தின்றால் குன்றும் கரையும்; ஒருவன் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவானால், அந்தச் செல்வம் மலை போல இருந்தாலும் கரைந்து போகும் என்பது சான்றோர் வாக்கு.

 

உத்தமம் ஸ்வ ஆர்ஜிதம் வித்தம் மத்யமம் பிதுரார்ஜிதம்

அதமம் சேவகாவித்தம் ஸ்த்ரீ வித்தம் அதமாதமம்

 

 

ஸ்வ ஆர்ஜிதம்உத்தமம் – சுயமாக சம்பாதிப்பது மிகச் சிறந்தது

 

பிதுரார்ஜிதம் மத்யமம் – அப்பா விட்டுச் சென்ற சொத்தைப் பெறுவது மத்தியமம் – இடைநிலைப்பட்டது.

 

சேவகாவித்தம் அதமம் – பிறரிடம் உழைத்துச் சம்பாதிப்பது கடைநிலைப்பட்டது ( அதமம்)

 

ஸ்த்ரீ வித்தம் அதமாதமம் – பெண்கள் (மனைவி) மூலம் கிடைத்த சொத்து மிகவும் கீழ்த்தரமானது. அதமத்திலும் அதமம்!

 

பெண்கள் வருமானத்தில் பெற்றோர்கள் வாழ்வதும் கூட பல பிரச்சினைகளை உண்டாக்குவதைக் காண்கிறோம்.

 

பெண்கள், திருமணமாகிப் போனால், தங்களுக்கு வருமானம் நின்று, வாழ்வு இருண்டுவிடுமே என்று கருதி, தி ருமணத்தைப் பல சாக்குகள் சொல்லி தள்ளிப்போட்டு,  சொந்தப் பெண்களின் வாழ்க்கையையே பாழாக்கிவிடுகிறார்கள்.

kalai23

மற்றொரு புறம் பெண்கள் சுயமாகச் சம்பாதிக்கத் துவங்கிவிட்டால், அவர்கள் ஆட்டம்போடுவது அதிகரிப்பதையும் காண்கிறோம். இஷடப் பட்ட இடத்துக்கு இஷ்டப்பட்ட ஆட்களோடு போய்விட்டு,  இஷட்ப்பட்ட நேரத்துக்கு நள்ளிரவில் வீட்டுக்கு வருவதையும் அதனால் ஏற்படும் சீர்கேடுகளையும் காண்கிறோம்.

 

மனு ஸ்ம்ருதி சொல்வது போல பெண்களுக்கு அவர்களது சகோதரர்கள் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்த முந்தைய சமுதாயம் ஒழுங்குக் கட்டுப்பாடுகளுடன் இருந்தது. பெண்களை மனமகிழ்ச்சியோடு வைக்காத வீடு அடியோடு அழிந்துவிடும், பெண்கள் மகிழ்ச்சியாக உள்ள இடத்தில் மட்டுமே தெய்வங்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் என்றும் மனு ஸ்மருதி சொல்லுகிறது. அப்படி அவர்களை மகிழ்ச்சியாக வைத்துவிட்டால் பின்னர், அவர்களுக்க் சம்பாதிக்கும் தேவையும் இல்லையே.

 

இன்ன பிற காரணங்களால்தான் மேற் சொன்ன சம்ஸ்கிருத ஸ்லோகம் பெண்களின் பணத்தில் வாழ்வது அதமாதமம் என்று சொன்னதுபோலும்!!!

 

–Subham–

 

 

மர்மம் நிறைந்த இந்தியப் பழங்குடி மக்கள் – பகுதி 1 (Post No.2958)

tribe-1khampti

காம்ப்டி பழங்குடி மக்கள்

Research Article Written by London swaminathan

Date: 10 July 2016

Post No. 2958

Time uploaded in London :– 9-09 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(காம்ப்டி இனமக்கள் பர்மாவிலும், வடகிழக்கு இந்தியாவிலும் வாழ்கின்றனர். புத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். வடகிழக்கு வாழ் மக்களில் மிகவும் புத்திசாலிகள் இவர்கள்தான். மிகவும் உழைப்பாளிகள்; எப்பொழுதும் துணிமணிகளை நெய்து சாயமேற்றி, பூவேலைப்பாடு செய்வர்.)

 

நான் ஆங்கிலத்தில் எழுதிவரும் பழங்குடி மக்கள் பற்றிய கட்டுரைகளை தமிழிலும் வெளியிடும்படி பலர் எழுதினர். ஆகையால் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளின் சாராம்சத்தை, பகுதி பகுதியாக தமிழிலும் வெளியிடுகிறேன்.

இந்தியாவை ஆக்ரமிக்கவந்த வெளிநாட்டினர், இந்திய மக்களை ஆரியர்கள், திராவிடர்கள் என்று பிரித்து கட்டுரைகளை எழுதினர். மலைகளில் வாழும் பழங்குடி மக்களைப் பார்த்தபோது இந்த வாதம் சரிப்பட்டு வரவில்லை. உடனே கொஞ்சம் மாற்றி ஆரியர், திராவிடர், முண்டா இன மக்கள் என்று பிதற்றினர். அப்படியும் வாதம், உளுத்த வாதமாக இருந்தவுடன் ஆரியர், திராவிடர், முண்டா, மங்கோலியர், பூர்வ குடியினர் என்று பிரித்தனர். அப்படியும் அவர்கள் வாதம் உளறல் என்று பலர் கண்டு பிடித்தனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் மனிதர்களைப் பிடித்து உண்ணும் ஜாரவாஸ், இலங்கையிலுள்ள வெட்டா முதலிய இனங்களைப் பார்த்தவுடன் நீக்ரோ இன மக்கள் என்ற ஒன்றையும் சேர்த்தனர்!!

 

வியப்பிலும் வியப்பு என்ன என்றால், அதிசயத்திலும் அதிசயம் என்னவென்றால், சங்கத் தமிழ் இலக்கியத்திலும் அதற்கு குறைந்தது 1500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய சம்ஸ்கிருத இலக்கியத்திலும் இனம் பற்றியோ ஆரிய, திராவிடர் இனவாதம் பற்றியோ ஒன்றுமே இல்லை. உலகிலுள்ள எல்லா இலக்கியங்களையும் விடப் பழமையானது சம்ஸ்கிருத-தமிழ் இலக்கியம்; அளவிலும் மஹத்தானது. அதில் ஒரு வரி கூட இல்லை! அது மட்டுமல்ல. வெள்ளைக்காரன் சொன்னதற்கு நேர் மாறாக வேறு, நமது இலக்கியங்கள் செப்புகின்றன.

 

காமாலைக் கண் படைத்த, கோணல் புத்தியுடைய, பிரித்தாளும் சூழ்ச்சியில் நரிகளையும் மிஞ்சும் வெள்ளைக்காரன் கூ,ட உபநிஷத்துகளில் பழமையானது பிருஹத் ஆரண்யக உபநிஷத் (பெருங் காட்டு உபநிஷத்) என்றும் அது புத்தருக்கெல்லாம் மிகவும் முன்னதாக, கிரேக்கர்கள் எல்லாம் இலக்கியம் படைப்பதற்கு  முன்னதாக எழுந்தது என்றும் எழுதிவைத்தான். அதிலேயே தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் மூவரும் தவம் செய்து ஒரே கடவுளிடம் சென்று உபதேசம் கேட்டபோது வானம் “த, த, த” என்று ஒலி செய்தது. உடனே மூவரும் அதற்கு வெவ்வேறு பொருள் கண்டனர்  என்று எழுதியுள்ளது.

(த, த, த கதையை முன்னரே எழுதியுள்ளேன்). இதிஹாசம், புராணம் முழுதும், அசுரர், தேவர் எல்லோரும் ஒரே கடவுளைக் கும்பிட்டு வரங்கள் பெற்றதும் நூற்றுக்கணக்கான கதைகளில் வருகிறது. அது மட்டுமல்ல. அவர்கள் ஒருதாய் வயிற்றுப் புதல்வர்கள், குணத்தினால் மட்டும் வேறுபட்டவர்கள் என்றும் நமது இலக்கியங்கள் பகர்கின்றன.

 

இந்துக்கள் எல்லாரையும் தேவர், அசுரர், கந்தர்வர், வித்யாதரர், நாகர், கின்னரர் முதலிய 18 குழுக்களாகப் பிரித்தனர்

 

பழங்குடி மக்களைப் பார்க்கும் போதும், அவர்கள் பற்றிப் படிக்கும்போதும் நம் மனதில் எழும் கேள்விகள்:–

இவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? ஏன் இப்படி “நாகரீகமற்ற” வாழ்க்கை வாழ்கின்றனர்? என்ற கேள்விகள் தோன்றும்.

 

வெள்ளைக்காரன் பின்னிவிட்ட, ஜோடனை செய்த கதைகளில் வருவது போல இவர்கள் சிந்து சமவெளியில்ருந்து ஆரியர்களால் விரட்டப்பட்டவர்களாக இருந்தால், இவர்கள் பல மொழிகளைப் பேசுவது எப்படி? உருவத்தில் பலவண்ணம் இருப்பது எங்கனம்? பல நூறுவிதமான நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவது எப்படி? ஒருவரை ஒருவர் கல்யாணம்கூடச் செய்யாமல் தனித்து வாழ்வது ஏன்? நீலகிரி, கேரள மலைப்பகுதிகளில் அருகருகே பல வகையான பழங்குடிகள் இருப்பது எப்படி முடியும்?

tribe-3chulikata

சுலிகாடா பழங்குடி மக்கள்

இது சுலிகாடா பெண்ணின் படம். வடகிழக்கு வாழ் மக்களில் மிகவும் ஆக்ரோஷமான இனம் இது . அவர்கள் திபெத் மக்களுடன் வணிகம் செய்வர். தலை  முடியை கிராப் செய்வதால் சுலிகாடா என்று பெயர். இவ்விஷயத்தில் அருகிலுள்ள மிஷ்மி, அபார் இன மக்களிடமிருந்து வித்தியாசமானவர்கள். ஆண்களும், பெண்களும் முடி அலங்காரம் செய்வது குறிப்பிடத்தக்கது.

மொழிகளில் ஏன் ஒற்றுமை இல்லை? சிந்து சமவெளியில் நாகரீகமாக வாழ்ந்தவர்கள், அதை மறந்து களிமண் குடிசைகளில் வாழ்வது எப்படி? அவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே?

 

அவர்கள் கடவுள் பெயர்கள் சம்ஸ்கிருதப் பெயர்களாக இருப்பது எப்படி? இந்துமத நம்பிக்கைகள் பல அவர்கள் பழக்க வழக்கங்களில் இருப்பது ஏன்? அவர்கள் ஒரே கடவுளைக் கும்பிடாமல் பல கடவுள்களைக் கும்பிடுவது ஏன்? ஒவ்வொருவரும் தங்கள் குடி எப்படித் தோன்றியது என்பதில் பல நூறுவிதமாகச் சொல்லுவது ஏன்?

 

வெவ்வேறு மூதாதையர்கள், சின்னங்கள், திருமண முறைகள், இறந்தோரை அப்புறப்படுத்தும் முறைகள், சில விஷயாங்கள் குறித்த பயங்கள், விநோத நம்பிக்கைகள் இருப்பது ஏன்?

 

“சிந்து சமவெளி திராவிட மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகள்” ஆகியவற்றுக்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லாதது ஏன்? (சிந்துவெளியில் திராவிட மண்டை ஓடுகள் எதுவும் கிடைக்கவில்லை)

 

சிந்து சம்வெளியில் ஆரிய மண்டை ஓடுகள் மட்டும் கிடைப்பது ஏன்? (இப்போது அப்பகுதிகளில் வாழும் பஞ்சாபியர், சிந்து இன மக்கள் போன்ற எலும்புக்கூடுகளே கிடைத்திருக்கின்றன)

 

 

உண்மை என்ன வென்றால்………….

பழங்குடி மக்கள் எப்பொழுதுமே இந்த நாட்டில் இருந்து வந்துள்ளனர். சிந்து சமவெளி நாகரீக காலத்திலும், அதற்கு முந்தைய வேத, இதிஹாச காலத்திலும் அவர்கள் இருந்துள்ளனர். இன்று நகர நாகரீகம் நிலவும்போது எப்படி அவர்கள் மலைகளில் தனிப்பட்ட வாழ்வு வாழ்கின்றனரோ அதுபோல அப்போதும் அவர்கள் வாழ்ந்தனர்.

 

நான் எழுதிய முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கோண்ட் இன மக்கள் காண்டவ வன மக்கள் என்றும் அவர்களுக்கும் அர்ஜுன-கிருஷ்ணன் கோஷ்டிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர்கள் தென் அமெரிக்க நாடுகளில் குடியேறி மாயா, அஸ்டெக் நாகரீகங்களைத் தாபித்தது பற்றியும் எழுதியுள்ளேன்.

tribe-6digharu

திகரு/ தைன்பழங்குடி மக்கள்

 

பிம்பேட்கா குகைப்பகுதிகளில் உள்ள ஓவியங்கள், மத்தியப் பிரதேசத்தின்  அடர்ந்த காட்டுப்பகுதிகளில் 30,000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததைக் காட்டுகின்றன. அதாவது வேத கால, சிந்து சமவெளிகாலத்திலும் அதற்கு முன்னரும் கூட அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

 

நான் பிலோ இருதயநாத் முதலிய எழுத்தாளர்கள் தினமணிச் சுடர், மஞ்சரி முதலிய பத்திரிக்கைகளில் எழுதிய விஷயங்களை 45 ஆண்டுகளாகப் படித்தும் சேகரித்தும் வருகிறேன். அண்மையில் “இந்திய மக்கள்” என்ற தலைப்பில் ஹெர்பர்ட் ரிஸ்லி எழுதிய புத்தகத்தைப் படித்தேன். அதிலுள்ள 30 பழைய படங்களும் வருணனைகளும் இக்கட்டுரைத் தொடரை எழுதத் தூண்டின. நான் வெளியிடும் விஷயங்களைப் படித்தபின்னர் நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம்.

 

முதல் கட்டுரையில் வடகிழக்கு இந்திய பழங்குடி மக்களின் படங்கள் உள்ளன. இதில் காம்டி இன மக்கள் தங்கள் தலைமுடியை அலங்கரிக்கும் பாணியிலிருந்தே திருமணம் ஆனவர், ஆகாதவர் என்று வேறுபடுத்திக் காட்டுகின்றனர். வடகிழக்கில் மட்டும் ஒரே ஒரு குடியில் இந்த வழக்கம் உளது. இது வேறு எங்கும் காண முடியாத புதுமை. இப்பொழுது இந்துக்கள் காலில் மெட்டி, கழுத்தில் தாலி, தலைமயிர் வகிட்டில் குங்குமம், மடிசாரைப் புடவை முதலியவற்றின் மூலம் திருமணம் ஆனவர் என்பதைக் காட்டுகின்றனர்.

 

இப்படி நகை, உடை, முடி அலங்காரம், நம்பிக்கைகள் முதலியவற்றில் வியப்பான வித்தியாசங்களைக் காட்டுகிறேன்.

 

பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கில் வாழும் திகரு, தைன் மக்கள் மிகவும் சாதுவான மக்கள். வெள்ளி நகைகளை அணிவர்.

 

tribe-10female digaru

திகரு/ தைன்பழங்குடி மக்கள்

 

இந்த இன மக்களிடையே ஏன் இவ்வளவு வேறுபாடு? சிந்தியுங்கள்.

 

–அடுத்த கட்டுரையில் மேலும் சில இனங்களைக் காண்போம்

 

 

 

பெண்கள், ரத்தினம், கல்வி: எங்கிந்தாலும் பெறுக! (Post No.2945)

assorted-coloured-gemstones-1

Written by London swaminathan

Date: 5 July 2016

Post No. 2945

Time uploaded in London :– 9-24 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

ஸ்த்ரியோ ரத்னானி அத வித்யா தர்ம: சௌசம் சுபாஷிதம்

விவிதானி ச சில்பானி சமாதேயானி சர்வத:

–மனு ஸ்மிருதி 2-240

 

எல்லா திசைகளிலிருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டியவை:-

பெண்கள், ரத்னக் கற்கள், கல்வி, தர்மம் (அறச் செயல்கள், அற விதிகள்)

தூய்மை (விதிகள், உணவு),  நல்ல சொற்கள் (பொன்மொழிகள், பழமொழிகள், உபதேசங்கள்)

மனு சொல்வதை புறநானூற்றிலும் காணலாம்

 

நான்கு ஜாதிகளில், தாழ்ந்தவரானாலும், கல்வியில் சிறந்தவன் சொல்லைத் தான் அரசனும் கேட்டு நடப்பான்:–

 

 

வேற்றுமை தெரிந்த நாற்பலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,

மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே (புறம்.183)

 

மனு, இதை மேலும் அழகான உவமைகளால் விளக்குவான்:-

 

விஷத்திலிருந்து கூட அமிர்தம் எடுக்க முடியும்;

குழந்தையிடமிருந்து கூட அருமையான யோஜனைகள் கிடைக்கும்;

எதிரியிடமிருந்து நற்குணங்களை கற்றுக்கொள்ளலாம்;

அசுத்தமான மண்ணிலிருந்தும் தங்கத்தைக் காய்ச்சி எடுக்கலாம்

மனு 2- 239

 

இந்த உவமைகளைச் சொன்ன பிறகே நல்ல பெண்களை எங்கிருந்தாலும் திருமணம் செய்க என்பான்.

ms garland making

மனு, மற்றொரு இடத்தில் (9-23), கீழ் ஜாதியில் பிறந்த அருந்ததி, உலக மஹா கற்புக்கரசியாக மதிக்கப்படுவதை எடுத்துக் காட்டுவான்.

 

2-241ஆவது ஸ்லோகத்தில் பிராமணர் அல்லாதார் இடமிருந்தும் வேதங்களைக் கற்கலாம் என்கிறார் (உபநிடதங்களில் க்ஷத்ரிய மன்னர்களிடம், பிராமணர்களும் வேதாந்தம் கற்றனர் என்ற குறிப்பு உள்ளது.  க்ஷத்ரிய மன்னர் குலத்தில் பிறந்த கௌதம புத்தரை பிராமண அறிஞர்களும் பின்பற்றியபோது புத்தரின் முகம் தாமரை போல மலர்ந்தது என்று தம்மபத விரிவுரைகள் பகரும்.)

 

வேதங்களைக் கற்பிக்கும் போது அவர்களைக் குருவாக மதிக்க வேண்டும் என்கிறார் மனு. ஜனக மன்னனிடம் பலரும் கற்றதை இங்கே நினைவு கூறலாம்.

 

ஜாதியை விட உயர்ந்தது கல்வியும், நல்லொழுக்கமும் என்று மனு நிறைய இடங்களில் வலியுறுத்திக் கொண்டே போவதை கற்றோர் அறிவர்.

 

–Subham–

மாப்பிள்ளை உள்பட 5 பேருக்கு பணத்தின் அருமை தெரியாது ! (Post No.2942)

IMG_4371

Written by London swaminathan

 

Date: 4 July 2016

Post No. 2942

Time uploaded in London :– 10-09 AM

( Thanks for the Pictures)

 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஐந்து பேருக்கு பணத்தின் அருமையோ, பணக் கஷ்டமோ தெரியாது. யார் அந்த ஐந்து பேர் என்று ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகம் அழகாகச் சொல்கிறது:

 

விருந்தாளி (அதிதி)

சிறுவர், சிறுமியர் (பாலக:)

பெண்கள் (ஸ்த்ரீ ஜன:)

அரசன் (ந்ருபதி:)

மாப்பிள்ளை (ஜாமாதா)

 

அதிதிர் பாலகஸ்சைவ ஸ்த்ரீஜனோ ந்ருபதிஸ் ததா

ஏதே வித்தம் ந ஜானந்தி ஜாமாதா சைவ பஞ்சம:

 

IMG_4496 (2)

சோறுகண்ட இடம் சொர்கம் — என்று உட்கார்ந்து சாப்பிடும் விருந்தாளிகளுக்கு பணக் கஷ்டம் பற்றி என்ன கவலை? விருந்து அளிப்பவன் , பாவம், கடன் வாங்கி விருந்து கொடுத்துக் கொண்டிருப்பான்!

 

சின்னக் குழந்தைகள் யானையையும், காரையும் கூடப் பார்த்து எனக்கு அதை வாங்கிக்கொடு – என்று அடம் பிடிக்கும். வீட்டில் நாய், பூனை, மீன் வளர்க்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கும். அவர்களுக்குப் பணக் கஷ்டம் தெரியுமா?

 

பெண்களுக்கு ஆசை அதிகம். வைர நெக்லஸ், தங்க அட்டிகை, பெரிய பங்களா, சொகுசான கார் – என்று பெரிய பட்டியல் வைத்திருப்பர். அந்தக் கலத்தில் அவர்கள் வேலைக்குப் போகாததால் பணத்தின் அருமை தெரியாது. இப்பொழுது அவர்களும் வேலைக்குப் போவதால், “கொஞ்சம்” தெரிந்திருக்கிறது.

 

அரசனுக்கும், ஆளுவோருக்கும் மக்கள் கஷ்டம் தெரியாது என்பதை விளக்கத் தேவையே இல்லை. மக்கள் மீது வரி மேல் வரி போட்டு வாட்டி வதைப்பர். தாங்கள் மட்டும் எல்லாவற்றையும் அனுபவிப்பர்.

 

கடைசியாக மாப்பிள்ளை! பெண் வீட்டுக்குப் போய் அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா என்று அதிகாரம் செய்வர். அவர்களோ சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் கஷ்டப்படுவர்.

IMG_4545

எவ்வளவு அனுபவபூர்வமான கண்டுபிடிப்புகள்!

 

-சுபம்-

 

கருணையுள்ள வேலைக்காரி! (Post No.2935)

maid

Written by London swaminathan

 

Date: 1 July 2016

Post No. 2935

Time uploaded in London :– 18-45

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

வில்லியம் டீன் ஹோவல்ஸ் என்பவர் சிறந்த நாவல் ஆசிரியர். அவருடைய மனைவி, ஒரு வேலைக்காரியை வீட்டு வேலைக்கு வைத்திருந்தார். நாவல் ஆசிரியர் என்பதால் வில்லியம் எப்போதும் வீட்டிலிருந்தே கதை எழுதி வந்தார். இதைப் பார்த்த வேலைக்காரிக்கு கருணை ஏற்பட்டது.

 

ஒரு நாள், சமையல் அறைக்குள், திருமதி  ஹோவல்ஸ் நுழைந்தார்.

வேலைக்காரி: அம்மா, உங்களிடம் கொஞ்சம் பேசலாமா?

திருமதி ஹோவல்ஸ்: என்ன வேணும்? மேரி, சொல்லு.

 

ஒன்றுமில்லை, அம்மா, நீங்கள் எனக்கு வாரத்துக்கு நாலு டாலர் சம்பளம் தருகிறீர்கள்…………….

 

திருமதி ஹோவல்ஸ்: – இதோ பார் இதற்கு மேல் என்னால் தரமுடியாது.

 

வேலைக்காரி: அம்மா, அதை நான் சொல்லவில்லை. ஐயா வீட்டிலெயே இருக்கிறாரே. எனக்குப் பார்க்க கஷ்டமாய் இருக்கிறது. அவருக்கு வேலை கிடைக்கும் வரை என் சம்பளத்தை மூன்று டாலராகக் குறைத்துக் கொடுங்களேன்.

 

 

வேலைக்காரிக்கு இவ்வளவு கருணை உள்ளமா? என் று திகைத்துப்  போனார் திருமதி ஹோவல்ஸ்.

KWS Mona Lake dead fish 6.JPG

Dead fish float on the shoreline of Mona Lake along Wellesley Drive just east of Ross Park in Norton Shores Wednesday. Date shot: 4/2/08.

கருவாடு நாற்றம்!!

 

வில்லியம் வாண்டபில்ட் என்பவர் தக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை அடிக்கடி சொல்லுவார். அவர் ஒரு ஹோட்டலில் (விடுதியில்) தங்கி இருந்தார். ஹோட்டல் அறையில் இருந்த ஒரு துண்டு, துவைக்காத துண்டுபோல அழுக்காக இருந்தது.

 

ஹோட்டல் ஊழியரை அழைத்து, அதைக் காண்பித்தார்.

 

“ஸார், வழக்கமான லாண்டரியில்தான் சார், எல்லாம் சலவைக்குப் போய் வருகிறது.”

 

வாண்டர்பில்ட்: “இந்த துண்டை முகர்ந்து பார். கருவாட்டு நாற்றம் வீசுகிறது.”

 

“ஓ, அதுவா? ஸார்? ஒரு வேளை நீங்கள் முன்னதாகப் பயன்படுத்தி இருப்பீர்கள். பின்னர் மறந்து போயிருக்கலாம் அல்லவா?”

 

(வாண்டர்பில்ட் தலையில் அடித்துக்கொள்ளாததுதான் குறை!!)

–subham-