முஸ்லீம் படைகளை விரட்டிய அர்கால் தேச ராணி! (Post No 2646)

ARKAL RANI (3)

Compiled by london swaminathan

 

Date: 19 March 2016

 

Post No. 2646

 

Time uploaded in London :–  15-14

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நஜருதீன் என்ற மன்னன் டில்லியை ஆண்டு வந்தபொழுது பிரயாகை (இப்பொழுது அதன் பெயர் அலஹாபாத்) அருகிலுள்ள அர்கால் என்னும் பிரதேசத்தை கௌதமன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் டில்லி அரசனுக்குக் கப்பம் கட்ட மறுத்தான். உடனே நஜருதீன், தன் கீழிருந்த டில்லி கவர்னர் தலைமையில் பெரும்படையை அனுப்பினான். ஆனால், கௌதமன் அவர்களைக் கொன்று குவித்தான். டில்லி கவர்னர் படை தோற்றோடியது.

 

கௌதமனின் முன்னோர்களும் மாவீரர்கள்; தோல்வியே கண்டறியாதவர்கள். ஆகையால் குல வழக்கப்படி வெற்றி விருந்து நடத்தினான். நகர மக்கள் அனைவரும் உண்டு மகிழ்ந்து கொண்டாடினர். அன்றைய தினம் பௌர்ணமி. முழு நிலவு ஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தது.

 

அர்கால் மஹாராணி, அதவது கௌதமனின் மனைவி, ஒரு மஹா பதிவிரதை; தெய்வ பக்தி மிகுந்தவள்; முன்னோர்கள் பின்பற்றிய பௌர்ணமி விரதத்தைக் கடைப்பிடிப்பவள்; சத்திய விரதை; உண்மை விளம்பி. வழக்கம்போல கங்கையில் புனித நீராடி விரதம் அனுஷ்டிக்க எண்ணினாள். ஆனால் கணவனிடம் அனுமதி கேட்டால், போகாதே என்பான். ஏனெனில் இன்னும் எதிரிப்படைகள் கங்கையின் மறு புறத்தில் நிலைகொண்டிருந்தன. மேலும் டில்லியிலிருந்து மேலும் படைகளைப் பெற்று டில்லி கவர்னர் தாக்கக்கூடும். கணவன் சொல்லையும் மீறி எந்தச் செயலையும் செய்யும் பழக்கமும் அவளுக்குக் கிடையாது. ஆகையால் அர்கால் மஹாராணி வேறொரு திட்டம் போட்டாள். தோழிகளுடன், நைஸாக நழுவி, கங்கைக்குப் போய் புனித ஸ்நானம் செய்து, கணவன் நலனுக்கும், நாட்டு மக்கள் நலனுக்கும் விரதம் இருக்க எண்ணினாள்.

நசருத்தீன்

ஒவ்வொரு தோழியும் சந்தடி செய்யமல் விருந்திலிருந்து நழுவி மஹாராணியுடன் கங்கை நதிக்கு வந்தனர். ஒரு ராணி குளிப்பதானால் ரஹசியமாகவா குளிக்கமுடியும்? ராணிக்கே உரிய பரிவாரங்களுடன் ஆரவாரத்துடன் குளித்தாள். இதற்குள் டில்லி கவர்னரின் காதுக்கு இந்தச் செய்தி போய்விட்டது. அவன் தனது மகளை அனுப்பி உளவு விவரங்களச் சேகரித்தான். உண்மை தெரிந்தவுடன் ராணியைப் பிடித்து பணயம் வைத்து பேரம் பேசலாம், கௌதமனை மடக்கிவிடலாம் என்று திட்டமிட்டு, படைகளுடன் வந்தான்.

 

மஹாராணி, இதற்குள் குதிரை மீது புறப்பட்டாள். அவளை விரட்டி வந்த, டில்லிப் படையினர் அவளைச் சுற்றி வளைத்தனர். அவள் தோழிகளின் நடுவே நின்று கவர்னரை நோக்கிக் கூறினாள், “ சீச்சீ! நீ ஒரு ஆண் மகனா அல்லது பேடியா? என் கணவனிடம் தோற்றோடிவிட்டு, தனிமையில் நிற்கும் ஒரு பெண்ணைப் பிடிக்கிறாயே,  இதுதான் உன் வீரமா? நான் ரஜபுத்ர குலத்தில் உதித்தவள்; என் கணவனும் ரஜபுத்ர வீரன். இங்கே கூடியிருக்கும் மக்களில், யாரேனும் ரஜபுத்ரர்கள் இருந்தால், உங்கள் சகோதரியாகிய என்னைக் காப்பாற்றுங்கள்”.

 

இதைக் கேட்டவுடன் அங்கேயிருந்த இந்துக்கள் பொங்கி எழுந்தனர். அவர்களில் நிர்பயசந்தன், உபயசந்தன் என்ற இரண்டு வீரர்கள் முன்னுக்கு வந்து தாக்குதலுக்குத் தலைமை வகித்தனர். பெரும் சண்டை நடந்தது. இரு படைகளிலும் சேதம் ஏற்பட்டது. இதற்குள் கௌதமனுக்கும் தகவல் போனது. அவன் பொறுக்கியெடுத்த சில வீரர்களுடன் குதிரையில் விரைந்து வந்து முஸ்லீம் படைகளை ஓட ஓட விரட்டினான்.

 

மன்னன் கௌதமனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உபயசந்தன், மன்னர் குலத்தில் பிறக்காவிடினும், அவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்வித்து, ராவ் (ராய= ராஜ) என்ற பட்டத்தைக் கொடுத்தான். ராஜஸ்தான் கிராம மக்கள் இன்றும் இந்த வீர,தீரச் செயல்களைக் கிராமீயப் பாடல்களாகப் பாடி ஆனந்தக் களிப்பு அடைகின்றனர். நிர்பயன், உபயன் ஆகிய இவ்விருவரின் புகழ் ஒரு புறம் பரவியது.மறு புறமோ பெண்ணிடம் ‘வீரம்’ காட்டிய டில்லி மன்னன், டில்லி கவர்னர் ஆகியோரின் இழிசெயல் தூற்றப்பட்டது.

புராதன இந்தியர்களின் சரித்திரம் ஒரு வீர காவியம்!

 

தீரத்திலே படை வீரத்திலே – நெஞ்சில்

ஈரத்திலே உபகாரத்திலே

சாரத்திலே மிகு சாத்திரங்கண்டு

தருவதிலே உயர்நாடு – இந்தப்

 

பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்

பாரத நாடு – (மஹாகவி சுப்ரமண்ய பாரதி)

1947 vikatan

–சுபம்-

 

 

மூன்று நாழிகை சிம்மாசன யோகம்! (Post No 2639)

3 NAZIKAI THRONE (2)

Written by london swaminathan

 

Date: 17 March 2016

 

Post No. 2639

 

Time uploaded in London :–  6-15 AM

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

HUMAYUN BABAR (2)

மொகலாய அரசர்களுள் ஹூமாயூன் இரண்டாவது அரசராவார். ஹுமாயூன் என்னும் சொல்லுக்கு அதிர்ஷ்டசாலி என்று பொருள். ஆனால் அவர்தான் மிகவும் துரதிருஷ்டசலியாக இருந்தார். இதற்குக் காரணம் அவரேதான். நல்ல வீரர்; இளகிய மனமுடையவர். ஆனால் சிற்றின்பப் பிரியர். அபினி தின்பதிலும் விருப்பமுடையவர்.

 

அவர் பட்டத்துக்கு வந்த சில நாட்களுக்குள் செர்ஷா என்னும் ஆப்கானிய பட்டாணியர் தலைவன் படையெடுத்து வந்தான். அவனை எதிர்த்து ஹுமாயூன் சென்ற போது அவன் மலைகளில் ஓடி ஒளிந்துகொண்டான்.; ஹுமாயூன் நடந்து, நடந்து சென்று வங்காளம் வரை போய்விட்டார். அங்கே மீண்டும் குடி, கூத்தில் காலத்தைக் கழித்தார்.

 

மழைக்காலம் துவங்கி ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்தது. அந்த நேரத்தில் செர்ஷா, மலைகளிலிருந்து இறங்கி வந்து போர் தொடுத்தான். வங்காளத்துக்கும் டில்லிக்கும் இடையேயுள்ள பாதையை அடைத்து முற்றுகையிட்டான். ஹுமாயூன், வங்களத்திலிருந்து, தலைநகர் டில்லிக்குப் போக முயற்சித்தார். முடியவில்லை. அவரது படைவீரர்களும் அதிகாரிகளும் நோய்வாய்ப்பட்டனர். உடனே செர்ஷாவுடன் சமாதானம் செய்துகொண்டு சில பகுதிகளை அவனுக்குத் தருவதாகச் சொன்னார். உடனே அவர் டில்லிக்குப் போக பாதையைத் திறந்துவிடுவதாக செர்சா வாக்கு கொடுத்தான். அவனை நம்பி எல்லோரும் கங்கைக் கரையில் ஓய்வு எடுத்தனர். அன்றிரவு அவர்கள் மீது பாய்ந்த ஆப்கன் படைகள் பலரையும் கொன்று தீர்த்தன.

 

ஹூமாயூன் உயிர் பிழைக்க வேண்டி முக்கிய அகாரிகளுடன் குதிரை மீது ஏறி கங்கை நதியைக் கடக்க முயன்றார். பலரும் கங்கைப் பிரவாகத்தில் சிக்கி இறந்தனர். ஹூமாயுனும் நதியில் விழுந்து மூழ்கி இறக்கவிருந்த நேரத்தில், தோல் பைகளில் கங்கை ஜலத்தை நிரப்பும் ஒரு நீர்துருத்திக்காரன், இரண்டு தோல் பைகளில் காற்றை நிரப்பி அந்த மிதவையில் நீந்திச் சென்று கொண்டிருந்தான். அவன், ஹுமாயூன் மீது இரக்கப்பட்டு தன் துருத்தியைப் பிடித்துக்கொண்டு நீந்தி வரும்படி கேட்டுக்கொண்டான். ஹுமாயூனும் அப்படியே செய்து கங்கை நதியைக் கடந்து ஆக்ராவுக்கு வந்து சேர்ந்தார்.

humayun-3

உயிர்தப்ப வைத்த உதவிக்கு நன்றிக்கடனாக அவனை மூன்று நாழிகை நேரத்துக்குச் சிம்மாதனத்தில் உட்கார வைத்து மொகலாய சாம்ராஜ்யத்தை ஆள்வதற்கு அனுமதிப்பதாக வாக்குக் கொடுத்தார். ஆக்ரா போய்ச் சேர்ந்தவுடன், அந்த நீர்துருத்திக்காரன், அவரிடம் போய் நின்றான். உடனே அவனை மூன்று நாழிகை நேரத்துக்கு சிம்மாசனத்தில் அமரவைத்தான். அதுமட்டுமல்ல.

 

நீர்துருத்திக்காரன், தன் கொண்டுவந்த தோல்பையை துண்டு துண்டாக நறுக்கி அதில் தன் பெயரை முத்திரையிட்டு, அதை நாணயமாக்கி உற்றாருக்கும் உறவினருக்கும் கொடுத்தான்.அவர்களுக்கு நல்ல வெகுமதிகள் கிடைக்கவும் மன்னரிடம் உதவி நாடினான்.

 

இந்தக் நிகழ்ச்சி முடிந்தபின்னர், ஹூமாயூன், டில்லிக்குச் சென்றார். அங்கே திடீரென்று செர்ஷா தாக்குதல் நடத்தி, ஹுமாயூனை டில்லிக்கு வெளியே துரத்திவிட்டான். ஹூமாயுன், தன் சகோதர்ககளிடம் உதவி கேட்டார். அவர்கள் உபகாரம் செய்யாமல், அபகாரம் செய்து ஹுமாயூனை ஓட ஓட விரட்டினார்கள். அவர் பாரசீகத்துக்குத் தப்பிப் போனார். அங்குள்ள மன்னர், இவனுக்கு அன்பாக உதவிகளைச் செய்தார். அவருடைய படைகளின் உதவியுடன்  காபூல் நகரைப் பிடித்தார்.15 ஆண்டுகளுக்குப் பின்னர் டில்லிக்கு வந்து மீண்டும் ஆட்சியை ஏற்றார். அதற்கு முன்பாகவே செர்ஷாவும் அவருடைய மகனும் இறந்து போனார்கள்.

இதுதான் ஹுமாயுனின் கதை!

ஒரு நாழிகை= 24 நிமிடம்

-சுபம்-

நெப்போலியனின் வயது! (Post No 2560)

napole3

Written by S Nagarajan

 

Date: 21  February 2016

 

Post No. 2560

 

Time uploaded in London :–  6-28 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

19-2-16 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

நெப்போலியனின் வயது!

ச.நாகராஜன்

milan

இத்தாலியில் உள்ள மிலான் நகரைப் பிடிக்க மாபெரும் போரில் நெப்போலியன் ஈடுபட்டிருந்த காலம் அது.

மறுநாள் மிலான் நகரைக் கைப்பற்றுவதற்கான இறுதிப் போர் நடக்க இருக்கிறது.

 

 

கமாண்டர் இன் சீஃப் ஆக இருந்த நெப்போலியனை கௌரவிக்கும் வண்ணம் இரவு நேர விருந்தை ஒரு பெரிய மாளிகையில் பணக்காரப் பெண்மணி ஒருவர் அளித்தார்.

 

 

அதில் கலந்து கொள்ள வந்திருந்த நெப்போலியனை கூரிய கேள்விகளால் தொளைத்து எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.

மறு நாள் போரைப் பற்றிய தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்த மாவீரனோ கேள்விகளுக்கு ஓரிரு வார்த்தைகளில் சுருக்கமாக ஆனால் ஆழ்ந்த அர்த்தமுடைய வார்த்தைகளால் பதில் அளித்துக் கொண்டிருந்தான்.

 

 

இதைக் கவனித்துக் கொண்டே இருந்த அந்தப் பெண்மணி குத்தலாக நெப்போலியனை நோக்கி, “அது சரி. இந்த இளம் வயதிலேயே இவ்வளவு புகழ் பட்டங்களா உங்களுக்கு? உங்கள் வயது தான் என்ன?” என்று கேட்டாள்.

 

 

உடனே பளீரென்று சுருக்கமாக பதிலளித்தான் நெப்போலியன்: ”அதுவா, உண்மையில் என் வயது இன்று இருபத்தைந்து தான். ஆனால் நாளைக்கோ மி-லான்!” என்று பதிலளித்தான்.

 

 

மறுநாள் மிலான் நகரைக் கைப்பற்றி விடுவேன் என்பதைக் தன்னம்பிக்கையுடன் குறிப்பிடுகையில் மி-லான் என்ற வார்த்தையை சிலேடையாக அவன் பயன்படுத்தினான் பிரெஞ்சு மொழியில். மில் என்றால் ஆயிரம் என்று பொருள். ஆன் என்றால் வருடங்கள் என்று பொருள். மிலான் என்ற வார்த்தைக்கு ஆயிரம் வருடங்கள் என்று பொருள். மிலான் நகரை வென்று விட்டால் ஆயிரம் ஆண்டு புகழைப் பெறுவேன் என்று கூறிய மாவீரன் மறு நாள் மிலான் நகரைக் கைப்பற்றி பெரும் புகழை அடைந்தான்.

 

napole2

இத்தாலி போரில் படைவீரர்களை அணிவகுக்க வைத்த போது தனது தந்திரமான போர் முறையால் ஒவ்வொருவரும் எங்கிருந்து எப்படி தாக்குதலை நடத்த வேண்டும் என்று அவன் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குதிரைப்படை வீரன் ஒருவன், “மன்னரே! உங்களிடம் ஒரு நிமிடம் தனியாகப் பேச் அனுமதி வழங்க வேண்டும்” என்று வேண்டினான்.

அவனை அருகில் அழைத்த மாவீரன் “என்ன விஷயம்?” என்று கேட்டான்.

 

 

அந்த வீரன் நெப்போலியனின் ஒவ்வொரு உத்தரவையும் சொல்லி அது எப்படி எதிரிகளை வீழ்த்தி வெற்றியைத் தரப் போகிறது என்பதை புத்திசாலித்தனத்துடன் விளக்கினான்.

“அடப் போக்கிரி! மேலே ஒரு வார்த்தையும் பேசாதே! என் இரகசியம் எல்லாவற்றையும் சொல்லி விடுவாய் போல இருக்கிறதே!” என்று கூறி விட்டு அன்புடன் அவன் உதடுகளில் தன் விரல்களை வைத்து அவனை பேசாமலிருக்கச் செய்தான்.

.

குதிரை வீரன் விடை பெற்றுக் கொண்டு போர்க்களம் சென்றான்.

போர் முடிந்தது, மாபெரும் வெற்றியைப் பெற்ற நெப்போலியன் தன் உதவி தளகர்த்தரிடம் அந்த குதிரை வீரனைத் தன்னிடம் அழைத்து வருமாறு கூறினான்.

 

எங்கு தேடியும் அவன் அகப்படவில்லை. போரிலே குண்டடி பட்டு அவன் மாண்டிருக்கக் கூடும்!

 

நெப்போலியன் பெரிதும் வருந்தினான் – மாபெரும் புத்திசாலி வீரனை இழந்து விட்டோமே என்று. அவன் கௌரவிக்கப்பட்டு பதவி உயர்வு பெறுவதற்கு பதில் இந்த பூமியிலிருந்து மேல் உலகத்திற்கு உயர்வு பெற்று விட்டான்!

 

Napoleon on Horseback at the St Bernard Pass by Jacques-Louis David

இத்தாலிய சேனையின் கமாண்டராக இருந்த நெப்போலியன் ஆஸ்திரிய படைகளுக்கு எதிராகக் கடும் போரைத் தொடுத்தான்.

கோரமான போர்! இரண்டு நாட்கள் இடைவிடாமல் கடுமையாகப் போரில் ஈடுபட்டிருந்த வீரர்களைப் பார்த்த அவன் சூரியன் அஸ்தமிக்கும் மாலை நேரத்தில் தன் வீரர்களை நோக்கி, “இன்று இரவு முழுவதும் உங்களுக்கு ஓய்வு. நன்கு இளைப்பாறுங்கள்” என்று கட்டளையிடவே அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.

ஆனால் தனது படை பாசறையின் எல்லையில் மட்டும் கூடாரங்களை அமைத்துக் காவல் காக்க உத்தரவிட்டான் அவன்.

இரவு நேரத்தில் எல்லையோரத்தில் இருந்த கூடாரக் காவல் வீரன் இடைவிடாத போரினால் ஏற்பட்ட களைப்பில் தன்னை மறந்து உறங்கி விட்டான்.

 

 

இரவு நேரச் சோதனைக்காக அங்கு வந்த நெப்போலியன் அந்தக் காவல் வீரன் தூங்குவதைப் பார்த்தான்.

 

பேசாமல் அவன் கையிலிருந்த துப்பாக்கியை எடுத்துத் தானே நின்றவாறு காவல் காக்க ஆரம்பித்தான்.

ஒரு மணி நேரம் கழிந்தது. மெதுவாகக் கண் முழித்த அந்த வீரன் அங்கு தன் துப்பாக்கியைக் கையில் ஏந்தி இருப்பது யார் என்று பார்த்தான்.

 

மாமன்னன் நெப்போலியன் காவல் வீரனாக அங்கு இருந்தான்.

“ஐயோ!” என்று அலறிய அவன், “நான் தொலைந்தேன்!” என்று புலம்பினான்.

 

“இல்லை, நண்பனே! உன் களைப்பால் நீ தூங்கி விட்டாய்; ஆனால் முக்கியமான வேலையில் நீ இருக்கிறாய். ஒரு கணம் அசந்தாலும் நாம் தோற்க நேரிடும். பிடி உன் துப்பாக்கியை. கவனமாகக் காவல் வேலையைப் பார்!” என்று சொல்லி விட்டு மெதுவாக நகர்ந்தான் நெப்போலியன்.

o-NAPOLEON-facebook

Napoleon Bonaparte

அந்தக் காவல் வீரனின் கண்கள் கசிந்தன.

ஒரு உண்மையான தலைவனாக இருந்ததாலேயே உலக்ப் புகழ் பெற்ற வீரனாக அவன் மிளிர்ந்தான் என்பதற்கு இதைப் போன்ற ஏராள்மான சம்பவங்கள் அவன் வாழ்வில் உள்ளன!

 

********

 

புனித அய்யர் மலையைப் பற்றிய கதைகள்! (Post No. 2533)

IMG_9502 (2)

Written by london swaminathan

 

Post No. 2533

Date: 12th February 2016

 

Time uploaded in London  காலை 10-32

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

ஆஸ்திரேலியாவின் மத்தியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வறண்ட பிரதேசம் காணப்படும் பொட்டை வெளியில் அய்யர் மலை நிற்கிறது. இது உலக அதிசயங்களில் ஒன்று. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் புனிதச் சின்னம் இது.

 

வரலாற்று ரீதியிலும், புவியியல்  ரீதியிலும் இது ஒரு முக்கியச் சின்னம். பழங்குடி மக்கள் இதை உள்ளூரு என்று அழைபர். இந்த முறை எனது ஆஸ்திரேலியப் பயணத்தில் ஐய்யர்ஸ் ராக் எனப்படும் உள்ளூருக்குப் போகமுடியவில்லை. நான் சிட்னி மியூசியத்தில் கண்டதையும், புத்தகத்தில் படித்ததையும் கொண்டு இக்கட்டுரையை வரைகிறேன்.

 

இமயமலையில் பெரும் பனிநிறைந்த பொட்டை வெளியில் கயிலாயம் தனியாய் நிற்கிறது. அதை நாம் சிவனின் வடிவமாக, உறைவிடமாக வணங்குகிறோம். அதுபோல செந்நிறக் கல வகையாலான ஒற்றைக் கல் இது. சூரிய ஒளியில் கயிலாயம் தகதவென மின்னுவது போல இதுவும் செந்நிறப் பிழம்பாகக் காட்சிதருகிறது. வெய்யிலுக்கு ஏற்ப இதன் நிறமும் மாறுகிறது. இதன் உயரம் 1115 அடி; சுற்றளவு ஆறு மைல். தென் ஆஸ்திரேலியப் பிரதமராக இருந்த ஹென்றி அய்யர்ஸ் என்பவரின் பெயரை வெள்ளைக்காரகள் இம்மலைக்குச் சூட்டி ஆக்ரமித்தார்கள். ஆயினும் பழங்குடி மக்களின் உரிமை வலுக்கவே 1985 ஆம் ஆண்டில் இம்மலையை, ஆஸ்திரேலிய அரசு, பழங்குடி மக்களிடம் ஒப்படைத்து, பின்னர் 99 ஆண்டு குத்தகைக்கு  எடுத்துள்ளது. இன்று இது பெரிய சுற்றுலாத் தலம். ஆயினும் எளிதில் போக முடியாது. பக்கத்திலுள்ள அலீஸ் ஸ்பிரிங்ஸ் என்னும் ஊரே 450 மைல் தொலைவில் இருக்கிறது. விமானத்தில்தான் செல்ல முடியும்.

IMG_2401

இந்த மலையைச் சுற்றி 60 கதைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவின் எல்லா பழங்குடி மக்களின் பாதைகளும் இங்கு சங்கமிக்கின்றன. பாறையின் ஒவ்வொரு முகட்டும் ஒரு கதை சொல்லும். வேதகால மக்கள் எப்படி வாய்மொழியாக வேதங்களைப் பாதுகாத்தார்களோ, அது போலப் பழங்குடி மக்களும் பாடல் வடிவில் பல கதைகளைப் பாதுகாத்துப்  பாடிவருகிறார்கள். எல்லாம் பாம்பு, பல்லி தொடர்பான கதைகளாக இருக்கும். குனியா, வன்னாபி, வானவில் பாம்பு. விஷ ,மலைப்பாம்பு என்று பல வகைகள். ஒவ்வொன்றும் அந்தந்த இன மக்களைக் குறிக்கும்

 

இந்த அய்யர் மலையில் பல பழங்கால வண்ண ஓவியங்கள் இருக்கின்றன. 30 மைல் தொலைவில் கட தூஜா என்னும் இடமிருக்கிறது இது பெண்களுக்கு புனிதமான இடம். தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு பெண்ணின் உடலமைப்புபோலத் தோன்றும். நாம் சதி என்னும் பார்வதி தேவி தட்ச யக்ஞத்துக்குப் பின்னர் கோபமடைந்து தனது உடலை எரித்தபோது அதன் பகுதிகள் விழுந்த இடமெல்லாம் எப்படி சக்தித் தலங்கள் ஆனதாக நம்புகிறோமோ அதே போலப் பழங்குடி மக்களும் புனிதமான பெண்ணின் உடல் என்று நம்புகின்றனர்.

 

ஆஸ்திரேலியாவின் படைப்புக் கதைகள் பழங்குடி மக்களின் புராணத்துக்கு அடிப்படையாக அமைகிறது. இதைக் கனவுநேரம் என்று அவர்கள் மொழியில் சொல்லுவர். நாம் திருமால், பாற்கடலில் பள்ளிகொண்டு அறிதுயில் செய்கிறார் என்பது போல இது. இந்தப் படைப்புக்காலத்தில் இரண்டு பையன்கள் , உளூரு மலையை உருவாக்கியதாக அவர்கள் கதைகள் சொல்லுகின்றனர். மேலும் குனியா என்னும் மலைப்பாம்பு மக்களை நீரு என்னும் விஷப் பாம்பு ஆட்கள் தாக்கியபோது படைப்புகாலம் முடிவுக்கு வந்தது என்பர்.

 

அவர்கள் புராணப்படி, முன்னோர்களின் ஆவிகள் இந்த உலகைப் படைத்ததாகவும், அவர்கள் பல இடங்களுக்கும் சென்று பெயர் சூட்டியதாகவும் அவை பாடல் வடிவில் உள்ளன என்றும் சொல்லபடுகிறது. இந்த விஷயங்களை, சமயத் தலைவர்கள் மட்டுமே அறிவர் என்பர். இது நமது வேதப் பாடல்களை ரிஷிகள் மட்டுமே “கேட்க” (சுருதி) முடியும் என்பதைப் போல. ஒரு பழங்குடி இனத் தலைவருடன் பயணம் செய்தால் அவர், ஒவ்வொரு முக்கிய இடத்துக்கும் அழைத்துச் சென்று அது தொடர்பான பாடல்களைப் பாடிக் கொண்டேயிருப்பார்.

 

மற்றொரு கதை குனியாவும் மாலாவும், ஒரு முக்கிய சடங்கிற்கு குறித்த காலத்தில் வராததால், விண்டுல்கா என்னும் மேற்குப்பகுதி மக்கள் கோபமடைந்ததாகவும் பின்னர் பலர் கொல்லப்பட்டதாகவும் சொல்கிறது.

IMG_9501

No. 22 Kata Tjuta and No.23 Uluru in this map.

 

எனது கணிப்பு

பழங்குடி மக்கள் பாம்பின் பெயரில் மக்களை அழைப்பதைப் பார்க்கையில் இவர்களும் இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்த நாகா இன மக்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அர்ஜுனனும் கிருஷ்ணனும் பழங்குடி நாகர்கள் எதிர்ப்பையும் மீறி காண்டவ வனத்தை எரித்ததையும் இதனால் நாகர்கள் – பாண்டவர்கள் ஜன்மப் பகை பல தலைமுறைகளுக்குப் பரவி பரீட்சித் கொல்லப்படவும், ஒரு நாகா இன ஆள் (பாம்பு) அவரைக் கொன்றதால் ஜனமேஜயன் சர்ப்ப யக்ஞம் நடத்தி பாம்புகளைக் (நாகா இன மக்களை) கொன்றதையும், பின்னர் இருவருக்கும் உறவினரான ஆஸ்தீக மகரிஷி சமாதான உடன்படிக்கை செய்து கொடுத்ததையும் இந்த பல்லாயிரமாண்டு வரலாற்றை பிராமணர்கள் தினமும் செய்யும் சந்தியாவந்தனத்தில் சொல்லிவருவதையும் முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விரிவாக எழுடியுள்ளேன் ( மாயா இன மக்கள் இந்திய நாகர்களா – என்ற கட்டுரையில் விவரம் காண்க) ).

 

 

பின்னர் மய தனவன் என்ற ஒரே ஒரு நாகர் இன மனிதன் மட்டும் அர்ஜுனனின் உதவியைப் பெற்றதையும் நமது புராணங்கள் விளக்குகின்றன. இவனது தலைமையில் பாதாள லோகத்துக்கு (தென் அமெரிக்கா) சென்றவர்களே மய= மாயா நாகரீகத்தைத் துவக்கினர். எகிப்தின் முதல் மன்னன் மனு, மாயா இன முதல் மன்னன் ஆகிய அனைவரும் கலியுக முதல் ஆண்டான கி.மு.3102-ல் ஆட்சி துவக்கியதாக அந்தந்த நாட்டு வரலாறு சொல்வதும், ஆஸ்தீக மகரிஷி பெயரில் அஸ்டெக் நாகரீகமிருப்பதும் இவைகளௌக்கு மேலும் சான்று பகரும். இதே போல ஆஸ்திரேலியாவிலும் நாகர்களே சென்று ஆட்சி அமைத்ததால் எல்லாம் பாம்பின் பெயரில் அமைந்துள்ளன. பல்வேறு காலத்தில் – 40,000 ஆண்டுகளில் — பல நாகா அணிகள் சென்றதால், கோஷ்டி மோதல் ஏற்பட்டிருக்கலாம்.

 

மாயா, ஆஸ்திரேலியப் பழங்குடிகள், எகிப்திய மன்னர்கள் ஆகியோருடன் வேறு பல ஒற்றுமைகளும் நிலவுவதை தனித் தனி ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கொடுத்து வதுள்ளேன். அதன் பிண்ணனியில் நான் கூறுவதை வைத்துப் பார்த்தால் நான் எதையும் மிகைப்படுத்தவில்லை என்பது விளங்கும்.

 

இந்துக்களுக்கு கன்யாகுமரிக்குக் கீழே 7 பாதாள லோகங்கள் இருப்பது நன்கு தெரியும். கடலில் சென்று அடையும் எல்லா தீவுகளையும் நாகர் தீவு என்றும் அங்குள்ள பெண்கள் நாக கன்னிகைகள் என்றும் சொல்லி வந்தனர். பல்லவர் வரலாறு, மணிமேகலையில் சோழர் வரலாறு முதலியவற்றிலும் இதைக் காணலாம்.

IMG_9505 (2)

ஆஸ்திரேலியாவில் முதல் முதலில் குற்றவாளிகளை மட்டுமே குடியமர்த்தி வந்தனர். இதே போல வாமனாவதாரத்திடம் தோற்றுப் போன மஹா பலி சக்ரவர்த்தியையும் தென் அமெரிக்கவுக்கு நாடு கடத்தி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திரும்பிவரலாம் என்று பணித்தனர். அப்படி வந்த நாளையே இன்று வரை மலையாளிகள் ஓணம் என்று கொண்டாடிவருகின்றனர். இதுபோலவே, வேத முறைகளைக் கைவிட்ட விஸ்வாமித்திரரின் மகன்களை தெற்கே அனுப்பி அவர்கள் திராவிடர்கள் எனப் பெயர் பெற்றனர் என்றும் புரணங்கள் கூறும். ராம லெட்சுமணர், பஞ்ச பாண்டவர்கள் கூட 14 ஆண்டுகளும், 13 ஆண்டுகளும் வனவாசத்தில் தெற்கு வரை வந்து சென்றனர்.

 

அதல, விதல, சுதல, தலாதல, மஹாதல, ரசாதல, பாதாள என்பதெல்லாம் பிற்காலத்தில் பல பெயர்கள் ஏற்படக் காரணமாயீற்று. அதல என்பதிலிருந்தே, அடலாண்டிக் மஹாசமுத்திரம் என்றும் சுதல என்பதிலிருந்தே சவுத் (தென் திசை என்பதும் ) வந்தன. கபிலாரண்யா என்பதே, அமெரிக்காவின் கலிபோர்னியா என மருவியது என்றும் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொற்பொழிவில் சொல்லியுள்ளார்.

-சுபம்-

 

 

 

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532)

IMG_3156 (2)

Written by london swaminathan

 

Post No. 2532

Date: 12th February 2016

 

Time uploaded in London  காலை 8-48

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

IMG_3147

 

IMG_3154 (2)

IMG_3157 (2)

 

புத்த மதம் பற்றிய ஒரு நூலின் பின்னட்டையில் இந்த புத்தக விளம்பரம் வெளியாகியுள்ளது. இதை பிரிட்டிஷ் லைப்ரரியில் நேற்று புகைப்படமெடுத்தேன். வருங்கால ஆராய்ச்சியாளர்களுக்கு  உதவும் என்பதால் இங்கே பதிவு செய்கிறேன்.

 

சுமார் நூறு ஆண்டுகளுக்கு  முன் வெளியான எல்லா, தமிழ் ஆங்கிலப் புத்தகங்களிலும் திருவள்ளுவர் பற்றிப் பல தகவல்கள் உள்ளன. ஆனால் சமீப காலத்தில் வெளிவரும் நூல்களில் அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுவருகின்றன. இதே போல திருக்குறள் நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு நூல் என்ற உண்மையும் மறைக்கப்பட்டு வருகிறது.

 

நாங்கள் லண்டனில் பல்கலைக் கழக வளாகத்தில் வள்ளுவர் சிலை நிறுவியபோது, இவர் ஐந்தாம் நூற்றாண்டுப் புலவர் என்றே எழுதி அழைப்பிதழ் வெளியிட்டோம். வள்ளுவர் ஆண்டை கி.மு.31 என்று நிர்ணயித்த மகநாட்டில், கடும் எதிர்ப்பு, வெளிநடப்புகள் நடந்த விஷயங்களை தமிழ்கூறு நல்லுக அறிஞர்கள் அறிவர். அதிகாரம் என்ற சொல்லும், ஒவ்வொரு அதிகாரத்திலும் சம்ஸ்கிருதச் சொல்லும் இருப்பதால் வள்ளுவனின் காலத்தை மொழியியல் ரீதியில் ஐந்தாம் நூற்றாண்டிலேயே வைக்கமுடியும்.

 

இன்றுள்ள நிலையில் தொல்காப்பியம் (குறிப்பாகப் பொருளதிகாரம்), சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய மூன்றும் தமிழ்நாட்டின் வரலாற்றில் இருண்ட காலம் என்று கருதப்படும் 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டிலேயே தோன்றின. தொல்காப்பிய காலம் பற்றிய எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இதை விரிவாக எழுதியுள்ளேன்.

எனது வேறு சில பழைய கட்டுரைகள்:

Who was Tiruvalluvar? written and posted by me on 24 July 2013

 

Abert Einstein and Tiruvalluvar, posted on 17 December 2013

Tamil Merchant who dumped god into sea, posted on 17 August 2014

Elelasingan Kathai (Tamil), posted on 17 August 2014

 

வள்ளுவனும் வன்முறையும் (ஜூலை 24, 2013)

 

வள்ளுவன்  ஒரு  சம்ஸ்கிருத  அறிஞன் (நவம்பர் 5, 2012)

 

வள்ளுவான் சொன்ன புராண, இதிஹாசக் கதைகள் (ஜூலை 30, 2013)

 

வள்ளுவன் காமெடி ( 5 ஜனவரி, 2015)

தொல்காப்பியம் பற்றி சுமார் பத்து கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

 

–சுபம்–

ஸ்வாமி விவேகானந்தரும் அக்பர் சமாதியும் (Post No. 2531)

viveka lanka

Written by S Nagarajan

 

Date: 12  February 2016

 

Post No. 2531

 

Time uploaded in London :–  8-01  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

akbar-1

Picture of Akbar

12-2-2016 பாக்யா இதழில் வெளியாகி உள்ள கட்டுரை

 

ச.நாகராஜன்

 

 

 

முகலாய மன்னர்களிலேயே வித்தியாசமானவர் அக்பர். அவர் வாழ்நாள் இறுதி வரை கங்கை ஜலத்தையே அருந்தி வந்தார்.

அவர் பயணப்படும் போதெல்லாம் கங்கை ஜலம் குடம் குடமாகப் போதுமான அளவு கூடவே எடுத்துச் செல்லப்பட்டது.

அக்பருக்கு சூரியனிடத்தில் அளவு கடந்த பக்தி. தினமும் சூரியோதயத்திற்கு முன்னர் எழுவது அவர் வழக்கம்.

ஜைன மதத்தைச் சேர்ந்த பண்டிதரான பானுசந்திர உபாத்யாய அவருக்கு சூரிய ஸஹஸ்ரநாமத்தை உபதேசித்தார்.  ஆயிரம் நாமங்களைச் சொல்லி சூரியனை வழிபடும் வழக்கத்தை தன் வாழ்நாள் இறுதி வரை அக்பர் கடைப்பிடித்தார். சூரிய நமஸ்காரத்தை தினமும் செய்து வந்ததால் மிக்க ஆரோக்கியத்துடன் அவர் இருந்து வந்தார்.

இப்படிப்பட்ட அக்பரிடம் ஸ்வாமி விவேகானந்தருக்கு அலாதி ஈடுபாடும் மரியாதையும் உண்டு.

 

 

ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சமாதிக்குப் பின்னர் ப்ரிவ்ராஜகராக தன்னந்தனியே தான் யார் என்று சொல்லாமல் ஸ்வாமி விவேகானந்தர் பாரதம் முழுவதும் சுற்றி வந்தார்.

அவரது புத்தி கூர்மையையும் வேதாந்தத்தை அவர் விளக்கும் விதமும் அவரது பரந்த அறிவையும் கண்டு வியந்து அவரிடம் மரியாதை கொண்ட சமஸ்தான மன்னர்கள் பலர்.

அவர்களுள் ஒருவர் கேத்ரி மன்னர். ஸ்வாமிஜியிடம் அலாதி பக்தி கொண்ட அவர் தன்னை அவருடைய சீடனாகவே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று விண்ணப்பித்தார்.

 

 

ஸ்வாமிஜிக்கும் அவரது அன்னைக்கும் இருநூறு ரூபாயை அவர் மாதம் தோறும் உதவித் தொகையாக அனுப்பி வந்தார் என்றால் அவரது பக்தியை நாம் நன்கு ஊகிக்க முடியும்.

ஆக்ராவுக்கு அடுத்து உள்ள சிகந்தராவில் அக்பர் தான் வாழ்ந்த காலத்திலேயே தனக்கென ஒரு அற்புதமான சமாதியை அமைக்கலானார். 119 ஏக்கர் பரப்பில் இது 1600ஆம் ஆண்டு வாக்கில் கட்டப்பட்டது. அக்பரே கட்டிடத்தைத் தன் விருப்பப்படி வடிவமைத்தார். 1605இல் அவர் மறையவே அவரது மகன் ஜிஹாங்கீர் அதை 1613இல் முடித்தார்.

 

samadhi of akbar

Picture of Tomb of Akbar

ஆனால் அவுரங்கசீப் காலத்தில் ஜட் ராஜாவான ராஜாராம் ஜட் அநத சமாதியை முற்றிலுமாக அழித்தார். சமாதி முழுவதுமாக  கொளுத்தப்பட்டது. அக்பரின் எலும்புகளையும் அவர் எரித்தார்.

சமாதி சிதிலமடைந்தது. இதை பிரிட்டிஷ் அரசு காலத்தில்  லார்ட் கர்ஸன் பிரபு சிறிது சீரமைத்தார்.

இந்த சிதிலமடைந்த சமாதியை ஸ்வாமிஜி தன் சுற்றுப் பயணத்தின் போது பார்த்தார். அதுவோ கேத்ரி மன்னரின் ஆளுகையில் இப்போது இருந்தது.

 

தொண்டை அடைக்க கண்களில் நீர் அரும்ப, “அக்பரின் சமாதி இந்த நிலையில் இருக்கலாமா? மேற்கூரையில்லாமல் சூரிய வெளிச்சத்திலும் மழையிலும் இதை பார்க்கவே என் மனம் பொறுக்கவில்லையே” என்று அடிக்கடி அவர் கேத்ரி மன்னரிடம் கூறுவார்.

 

 

ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கேத்ரி மன்னரின் மனதில் ஆழப் பதிந்தது. குருநாதரின் ஆசை அல்லவா அது!

விவேகானந்தர் பின்னர் அமெரிக்கா சென்று சர்வமத மகாசபையில் உரையாற்றி உலகப் புகழ் பெற்று விட்டார். ஸ்வாமிஜியை அறிந்த மன்னர்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சி. மக்களிடமோ பெரும் எழுச்சி ஏற்பட்டது.

 

 

யாருமறியாத சாதாரண சந்யாசியாக பாரதத்தை விட்டுச் சென்றவர் அகில உலகப் புகழுடன் திரும்பி வந்தார்.

ஒரு நாள் கல்கத்தாவிற்கு வரும் வழியில் அவருக்கு ஒரு செய்தி வந்தது. கேத்ரி மன்னர் அக்பரின் சமாதியை புனருத்தாரணம் செய்து வந்ததாகவும், ஒரு நாள் சாரம் முழுவதுமாக கீழே சரிந்து விழவே உயரத்திலிருந்த மன்னரும் விழுந்து மாண்டார் என்றும் ஸ்வாமிஜியிடம் தெரிவித்தார்கள்.

மிகவும் மனம் வருந்தினார் விவேகானந்தர்.

 

vivekaa maly

நீண்ட காலமாகத் தான் விரும்பியபடியே சமாதி நன்கு அமைக்கப்பட்டதை நினைத்து மகிழ்வதா? அல்லது தன்னால் உத்வேகமூட்டப்பட்ட தன் சீடர் கேத்ரி மன்னர் இதற்காக உயிர்த்தியாகம் செய்ததை எண்ணி வருந்துவதா!

நெடுநாள் அவர் மனம் கலங்கி வருந்தி இருந்தார்.

 

 

“கேத்ரி மன்னர் சில மாதங்களுக்கு முன் கீழே விழுந்து இறந்தார். எனவே என்னைச் சுற்றி அனைத்தும் இருளாக உள்ளன”  என்று எழுதினார் அவர்.

 

அக்பரின் சமாதியைப் புனரமைக்க உத்வேகம் ஊட்டிய மாபெரும் வீ ரத் துறவி விவேகானந்தர் என்றால் அந்தப் பணியில் உயிர்த் தியாகம் செய்த மாபெரும் மன்னராக கேத்ரி மன்னர் திகழ்கிறார்!

*******

 

பிரிஸ்பேன் நகர அதிசயங்கள்! (Post No. 2529)

IMG_8880

Free Red Ferry of Brisbane

 

Written by london swaminathan

Post No. 2529

Date: 11th February 2016

 

Time uploaded in London  14-27

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_8850

 

பிரிஸ்பேன் (Brisbane) என்னும் நகரம் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது சிட்னி நகரிலிருந்து 1000 கிலோமீட்டர் தூரத்தில் பிரிஸ்பேன் நதிக்கரையில் இருக்கிறது. நாங்கள், உலக மஹா இயற்கை அதிசயமான பெரும் பவளத்திட்டைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் பிரிஸ்பேன் வந்தோம்.

 

பிரிஸ்பேனில் என்னை அதிசயிக்க வைத்த முதல் விஷயம், இலவச படகு சவாரி! உலகில் பத்துப் பதினைந்து நாடுகளுக்குப் போயிருக்கிறேன். நியூயார்க்கில் சுதந்திர தேவி சிலையைப் பார்க்க படகு சவாரியானலும் சரி, அல்லது பாரீஸ் நகரில் செயின் நதியில் பவனி வருவதானாலும் சரி காசு கொடுத்து டிக்கெட் வாங்கினால்தான் படகில் ஏற்றுவர். அட! எங்கள் லண்டன் மாநகரில் எங்கள் வீட்டுக்கு வரும் நண்பர்களையும் உறவினர்களையும் தேம்ஸ் நதியில் உலாவர அழைத்துச் சென்றபோதும் ஒவ்வொரு ஆளுக்கும், ஒரு இருபது  பவுனாவது (ரூ2000) செலவழிக்க வேண்டும். ஆனால் பிரிஸ்பேனில் இலவச படகு சவாரி.

IMG_8886

Beautiful Brisbane River

ஹோட்டலில் ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம், சில தகவல் விசாரித்தபோது ‘ரெட் Fபெர்ரி’யில் (Red Ferry) போங்கள்; டிக்கெட் எதுவும் வேண்டம் என்று ஒரு துப்பு கொடுத்தார். சிவப்பு நிற படகில் ஏறினால் பிரிஸ்பேன் முழுதும் சுற்றிப் பார்க்கலாம். ஊரின் வரைபடம் கையிலிருந்தால் எந்த ‘ஸ்டாப்’பில் இறங்கினால் என்ன சுற்றுலாக் கவர்ச்சி இருக்கிறது என்பது தெரியும். ஆங்காங்கே இறங்கி இலவசமாகப் பார்த்துவிடலாம்.

 

உலகில் சில இடங்களில் நதியின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானால் இலவச சவாரி இருக்கும். ஆனால் நதியில் ஊர் முழுவதும் செல்ல இலவச சவாரி, எனக்குத் தெரிந்தவரை இது ஒன்றுதான். வாழ்க பிரிஸ்பேன்.

IMG_8843

Himalayan Salt for Good Health

இன்னொரு அதிசயம்!

பிரிஸ்பேனில் கடை கண்ணிகளை வேடிக்கை பார்த்தவாறு நகர்ந்தோம். ஒரு கடையின் வாசலில் பெரிய பெரிய பாறைகளாக (சிவப்புக் கூழாங்கற்கள் போல இருக்கும்) 30 கிலோ, 35 கிலோ என்று வைத்திருந்தார்கள். ஆங்கிலத்தில் ஹிமாலயன் சால்ட் – (Himalayan Salt) இமய மலை உப்பு என்று எழுதிவைத்திருந்தனர். எனக்கு ஒரே வியப்பு. அட! இந்தியாவில் கூட நான் பார்த்திராத இமயமலை உப்பை ஆஸ்திரேலியாவில் விற்பதன் மர்மம் என்ன என்ற ஐயம் எழவே, கடைக்குள் சென்றேன். அங்குள்ள ஒரு இளம் பெண் வாடிக்கையாளர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவரிடமென் ஐயப்பாட்டைக் களைய வினாக்கள் தொடுத்தேன். அவர் சொன்னார்: “ இவை அனைத்தும் இமயமலையிலிருந்து வந்தவை. இது மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்குச் சுகமளிக்கும். காற்றைத் தூய்மையாக்கும்”. பல புத்தகங்களும் வைத்திருந்தனர். காசு கொடுத்து வாங்க மனமுமில்லை. ஓசியில் புரட்டிப் பார்க்கத் துணிவுமில்லை. மனைவி மக்கள் விரட்டவே மெதுவாக நகர்ந்தேன்.

IMG_8897

Asia Pacific Art Gallery

எங்களுக்கு போனஸ்

ஒவ்வொரு இடத்திலும் ஒரே நாள் இரவு ஹோட்டல் ரிசர்வ் செய்திருந்ததால் அருகிலுள்ள கோல்ட்கோஸ்ட், (Koala) கோவாலா சரணாலயம் ஆகியவற்றுக்குப் போகமுடியவில்லையே என்று வருத்தம். கோவாலா என்னும் மரக் கரடியும். கங்காரு என்னும் மிருகமும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே வாழும் பிராணிகள்.

 

ஆயினும் கலைக் கூடத்துக்குச் (Art Gallery) சென்று வண்ண ஓவியங்களைப் பார்ப்போம் என்று குடும்ப உறுப்பினர் அனைவரும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி கலைக்கூடத்துக்குள் நுழைந்தோம். எங்களுக்கு போனஸ் காத்திருந்தது. நாலு மாதங்களுக்கு ஆசிய- பசிபிக் வண்ண ஓவியங்களின் விசேஷ காட்சி என்பதைக் கண்டு மகிழ்ந்தோம். உள்ளே சென்றவுடன் அருமையான ஓவியங்களைக் கண்டு இரண்டு காமிராக்களையும் முடுக்கினேன். ஒரு நூறு படங்கள் கிடைத்தன. நேபாள, இந்திய ஓவியர்கள் பல இந்துமத ஓவியங்களைத் தீட்டியிருந்தனர்.

 

எல்லா ஊர்களிலும் இருப்பது போல இராட்சத ராட்டினம் (பிரிஸ்பேன் வீல் Brisbane Wheel) இங்கும் இருந்தது. ஆனால் அதைவிட்டுவிட்டு வேறு ஒரு புதுமையைக் காண விரைந்தோம். செயற்கைக் கடற்கரை அங்கு இருப்பதாக சுற்றுலாக் கவர்ச்சிப் பட்டியலில் இருந்தது. ஒரு பெரிய பூங்காவில் நிறைய கடல் மணலை நிரப்பி வைத்துள்ளனர். அதில் ஏராளமான பெண்கள் அரைநிர்வாண உடையுடன் வெய்யில் காய்ந்து கொண்டிருந்தனர். அருகிலேயே குழந்தைகள் , அவர்களுடைய விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். எனக்கு அப்படி ஒன்றும் கவர்ச்சியாகத் தோன்றவில்லை. அட, சரியப்பா! ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூதானே சர்க்கரை என்று சொல்லிக் கொண்டு நகர்ந்தோம்.

IMG_2014

Brisbane Wheel

இரவு நெருங்க நெருங்க பசி எடுத்தது. நாங்களோ சுத்த சைவம். எனது மகன் கஷ்டப் பட்டு, கூகிள் செய்து ஒரு ‘வெஜிட்டேரியன் ரெஸ்டாரண்டைக் கண்டுபிடித்திருந்தான். ‘கூகிள் மேப்’ பைப் பயன்படுத்தி அங்கே போவதற்குள் இரவு ஒன்பதரை ஆகிவிட்டது. அது ஒரு தாய்(லாந்து) ரெஸ்டாரண்ட். வழக்கம்போல எங்கள் பல்லவியைப் பாடினோம். “நாங்கள் அனைவரும் சுத்த வெஜிட்டேரியன்ஸ். அதன் பொருள் என்ன வென்றால், ‘நோ பிஷ்’, ‘நோ மீட்’, ‘நோ எக்’ No Fish, No Meat, No Egg (மச்சம், மாமிசம், முட்டை அற்ற) என்று விளக்கினோம். அந்தப் பெண்ணோ, ‘நோ பிராப்ளம்’, பிஷ் சாஸ் (No Problem; we will use fish sauce or oyster sauce)  போடுகிறோம் அல்லது ஆய்ஸ்டர் சாஸ் போடுகிறோம், மாமிசம், முட்டை எதுவும் போட மாட்டோம்’ என்று உறுதி தந்தாள்!!!! அடக் கடவுளே! அது வெஜிட்டேரியன் அல்லவே என்றோம். அதற்கென்ன, அதையெல்லாம் போடாமல் செய்வோம் .ஆனால் அது ‘ஹாரிபிள்’ (Horrible அதி பயங்காச் சுவை) ஆக இருக்குமென்று அச்சுறுத்தினாள்; தாயே, உண்மையைச் சொன்னாயே; நீ வாழ்க, உன் குடும்பம் வாழ்க என்று மனதிற்குள் வாழ்த்திக்கொண்டே ஒரு இதாலிய ரெஸ்டாரண்டில் நுழைந்து வழக்கம்போல பீட்ஸா (Pizza), பாஸ்தா (Pasta) சாப்பிட்டு ஹோட்டல் அறைக்குத் திரும்பினோம்.

 

பிரிஸ்பேன் நகரில் வானளாவிய கட்டிடங்களுக்கு இடையே, நீல நதியில் படகு செல்லும் காட்சி கண்கொள்ளாக் காட்சி. நல்ல பூங்காக்கள், தாவரவியல் பூங்கா ஆகியனவும் அழகூட்டுகின்றன. சுமார் 24 மணி நேரமே இருந்தாலும் மலையளவு சாதித்த மகிழ்ச்சி.

IMG_2021

Whale song

ஆர்ட் காலரிக்குச் செல்லும் வழியில் அந்த ஊர் அறிவியல் காட்சிசாலையும் உள்ளது. அந்தக் கூடத்தில் பெரிய திமிங்கில உருவங்களைத் தொங்கவிட்டுள்ளனர். திமிங்கிலங்கள் கடலில் எழுப்பும் பெரிய சங்கொலி போன்ற சப்தத்தை திமிங்கிலப் பாட்டு (Whale Song) என்பர். அதை அப்படியே ரிகார்ட் செய்து அந்தக் கூடத்தில் ஒலிபரப்பிய வண்ணம் இருக்கிறார்கள். முதலில் இது என்ன ஒலி, எங்கிருந்து வருகிறது என்று வியந்த எங்களுக்கு தலையை நிமிர்த்திப் பார்த்தபோதுதான் விளங்கியது.

 

எல்லா ஊர்களையும் போல, பல ஷாப்பிங் மால் (கூடங்கள்), தெருக்களும் இருக்கின்றன. பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல. அதையும் பார்த்து பொழுதும் போக்கலாம்.!

IMG_8854

 

IMG_8865

 

IMG_8825

Brisbane by Night

 

–subham–

 

 

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சுவையான வரலாறு (Post No. 2526)

IMG_2380

Research Article written by london swaminathan

Post No. 2526

Date: 10th February 2016

Time uploaded in London  பகல் 12-07

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2253

ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் பற்றிய நாலாவது கட்டுரை இது. முதல் மூன்று கட்டுரைகள் கடந்த 3 நாட்களில் இங்கே வெளியிடப்பட்டன.

 

சுமார் 40,000 முதல் 50,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மக்கள் இங்கே குடியேறியதாக இப்போதைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. மற்றொரு ஆய்வு, இந்தியர்கள் இங்கே 5000 ஆண்டுகளுக்கு முன்பு வந்து, புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியதாகக் கூறும். ஆனால் இத்தகைய ஆய்வுகளை அப்படியே நம்பிவிடக்கூடாது. இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு இதை மறுத்து வேறு ஒரு தகவல் வரும்!

 

20, 30 ஆண்டுகளுக்கு முன் தினமணிச் சுடரில் பிலோ இருதயநாத் என்பவர் எழுதிய இந்தியப் பழங்குடி மக்கள் வரலாற்றையும், மஞ்சரியில் மாதம் தோறும் வெளியான பழங்குடி மக்களின் வரலாற்றையும் படித்து பேப்பர் கட்டிங் சேகரித்து வைத்துள்ள எனக்கு ஆஸ்திரேலிய வரலாற்றில் அதிகம் புதுமை இருப்பதாகத் தெரியவில்லை.

 

ஒவ்வொரு இன மக்களும் பிறப்பு, இறப்பு, ஆவிகள், திருமணம், தொடக்கூடாதவை, தீட்டு, இசை, நடனம் ஆகியவற்றில் கொஞ்சம் கொஞ்சம் மாறுதலுடன் பல விநோதக் கொள்கைகளையுடவர்களாய் இருப்பார்கள். இந்தியப் பழங்குடி மக்களின் நம்பிக்கைகளில் இந்துமதத்தின் தாக்கமும், சம்ஸ்கிருத மொழியின் தாக்கமும் ஆழமாகவே தெரிகிறது. இப்போது கோண்ட்வானா லாண்ட் என்று சொல்லப் பாடும் சொல்லே, காண்டவ வனம் என்பதன் மரூஉ என்பதையும் “கோண்டு”கள் என்போர் அர்ஜுனனும், கிருஷ்ணனும் எரித்த “காண்ட”வ வன மக்கள் என்பதையும் நான் முன்னரே என் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் எழுதியுள்ளேன். ஆஸ்திரேலியப் பழங்குடிகள் பற்றி தமிழில் அதிக விஷயங்கள் கிடைக்காததால், சிட்னி நகர ஆஸ்திரேலிய மியூசியத்தில் நான் சேகரித்த விஷயங்களை மொழிபெயர்த்துத் தருகிறேன்.

IMG_2450

250 மொழிகள், 250 குழுழுக்கள்

ஆஸ்திரேலியப் பழங்குடி இன மக்கள் ஒரே மொழியைப் பேசவில்லை. 250 மொழிகளையும், கிளை மொழிகளையும் பேசுகின்றனர். கடல் என்பதற்குக் கூட ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல்! ஏன் இவ்வளவு மொழிகள் வந்தன என்பது ஆச்சரியமான விஷயமே. அருகிலுள்ள நியூகினி தீவுகளில் 750 மொழிகள் உள்ளன. மொழியியலாரின் கொளகைகளை எல்லாம் பொய்மையாக்கிவிடும் நிலவரம் இது.

இதே போல ஆஸ்திரேலியப் பழங்குடி இன மக்கள் அனைவரும் ஒரே அணி அல்ல. அவர்களிடையே 250 பிரிவுகள் உண்டு.

ஒவ்வொருவரும் தனது இடத்தை நாடு என்றும், அதிலுள்ள குழு எல்லாம் ஒரே இனம் என்றும் கருதுவர். ஆயினும் ஒரு குழு, மற்றொரு குழுவில் தலையிடாது. மேலும் அத்தகையோர் போற்றும் புனிதமான மிருகத்தை மற்றொரு குழுவினர் புசிக்கமாட்டார்கள். அவர்களிடையே, பல பொதுவான அம்சங்களும் இருக்கின்றன.

IMG_2258

முன்னொரு காலத்தில்

“இப்பொழுது ஆஸ்திரேலியாவில் காணப்படும் பிராணிகள் எல்லாம், மிகப் பழைய காலத்தில், கடலுக்கு அப்பாலுள்ள வேறு ஒரு பிரதேசத்தில் வசித்தன. அப்போது அவை எல்லாம் மனித உருவில் இருந்தன. அவை எல்லாம் ஒரு நாள் ஒன்று கூடி நமக்கு நல்ல வேட்டை நிலம் வேண்டும் என்று முடிவு செய்து ஒரு படகில் ஏறி இங்கு (ஆஸ்திரேலியாவுக்கு) வந்தன” என்பது பழங்குடியினர் கூறும் கதை.

 

முதல் குடியேறிகள்

சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் தாழ்வாக இருந்தது. ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்குப் படகுகள் மூலம் போவது எளிதாக இருந்தது. அவர்கள் அக்காலத்தில் குடியேறிய ஆஸ்திரேலிய நிலப் பகுதிகளை இப்பொழுது கடல் கொண்டுவிட்டது. ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் பூர்வ கதைகளும் இதையே சொல்லுகின்றன. தாங்கள் படகுகள் மூலம் வேறு  ஒரு இடத்திலிருந்து வந்ததாகவும், மழை மேகங்களைப் பின்தொடர்ந்து உள்நாட்டிற்குள் சென்றதாகவும் அவர்கள் கதைகள் சொல்லுவர். உலகில் இந்திய இலக்கியங்கள் மட்டுமே தாங்கள் வெளிநாட்டிலிருந்து வந்ததாகக் கூறுவதில்லை. வேறு சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய, ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும் தங்களை வந்தேறு குடிகள் என்று பகிரங்கமாக அறிவிக்கின்றனர். உலகின் நாகரீக தோற்றத்துக்கு இந்தியாவே மூல முதல்வன் என்பதை நமது இதிஹாச புராணங்கள் தெள்ளத் தெளிவாக உரைக்கின்றன. நிற்க

 

சுமார் 40000 ஆண்டுகளில், இவர்கள் ஆஸ்திரேலிய கண்டம் முழுதும் பரவிவிட்டனர். இந்தியர்கள் 56 தேசங்கள் வைத்து ஆண்டது போல இவர்கள் 250 “நாடு”களை உருவாக்கினர். 1700-ம் ஆண்டுகளில், இந்தோநேஷியத் தீவுகளிலிருந்து பலர் மீன் வியாபாரத்தின் பொருட்டு இங்கேவந்தனர். அதுதான், ஆஸ்திரேலியாவின் முதல் வெளி உலகத் தொடர்பு. பின்னர் கேப்டன் குக் முதலான வெள்ளையர்கள் வந்தனர்.

IMG_2259

1788ல் முதல் காலனி

உலகில் வடபகுதியில் நிலப்பரப்பு இருப்பதுபோலவே தென் பகுதியிலும் நிலப்பரப்பு  இருக்க வேண்டும், அப்படியில்லாவிடில் பூமியின் சமநிலை கெட்டு அது ஆட்டம் காணும் என்று கிரேக்க தத்துவ ஞானிகள் ஊகித்தனர். (இந்துக்கள், கீழ் ஏழு பாதாள லோகங்களில் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றைச் சேர்த்திருந்தது வெள்ளைக்காரர்களுக்கு தெரியாது. எனது மாயா- நாகர் தொடர்பு கட்டுரைகளைப் படிப்போருக்கு இது விளங்கும்). பின்னர் 1570 ஆம் ஆண்டில் ஆர்டீலியஸ் என்பவர் டெர்ரா ஆஸ்ட்ராலிஸ் என்று தனது வரைபடத்தில் ஆஸ்திரேலியாவை வரைந்தார். இதைத் தொடர்ந்து டச்சு கிழக்கு இந்தியக் கம்பெனியார் அங்கு போய் நியூ ஹாலந்து எனப் பெயரிட்டு, அது ஒன்றுமில்லாத இடம் என்று திரும்பிப் போய்விட்டர்கள்.

விஞ்ஞான ஆராய்ச்சிக்காக ஜோசப் பாங்க்ஸ் என்பவருடன் லெப்டினண்ட் கேப்டன் குக் 1770 ஆம் ஆண்டில் வந்தார். பாங்ஸ் நிறைய படங்களை வரைந்தார். பின்னர் நியூ சவுத் வேல்ஸில் குடியேறி வசிக்கலாம் என்று அறிவுரை வழங்கினார். 1788ஆம் ஆண்டில் ஒரு கப்பல் நிறைய ஆட்கள் வந்து ஆஸ்திரேலியாவை ஆக்ரமிக்கத் தொடங்கினர். ஆனால் முதலில் இங்கு அனுப்பப்பட்டவர்கள் எல்லாம் குற்றவாளிகள். வெள்ளைக்காரர்கள், நமது சுதந்திரப் போராட்டவீரர்களை அந்தமான் தீவுக்கு அனுப்பியதுபோல இங்கு பலரை அனுப்பினர்.

IMG_9059

கேடயங்கள்

ஒவ்வொரு குழுவும் ஒருவகை பாணியில் கேடயங்களைத் தயாரித்தனர். இவை பாதுக்காப்புக்கு மட்டுமின்றி கலாசார சின்னங்களாகவும் விளங்கும். ஒவ்வொரு இளைஞரும் அந்தக் கேடயத்தில் ஒரு புது வடிவு செய்து தனது தனித்துவத்தையும் காட்டுவார். கேப்டன் குக் வந்த போது அவரது பீரங்கி, துப்பாக்கிகளுக்கு , பழங்குடி மக்கள் ஈடு கொடுக்க முடியவில்லை. தங்கள் கேடயங்களைப் போட்டுவிட்டு காட்டிற்குள் சென்று மறைந்தனர். கேப்டன் குக் எடுத்துவந்த இந்த கேடயங்களே முதல் நினைவுப் பொருட்களாகும். இப்பொழுது ஆஸ்திரேலிய மியூசியத்தில் நூற்றுக்கணக்கான கேடயங்களைக் காட்சிக்கு வைத்துள்ளனர்.

 

வெள்ளையர்களுக்கு உதவிய இருவர்

ஆஸ்திரேலியாவை காலனியாக்க வந்த வெள்ளையர்களுக்கு இரண்டு பழங்குடி இன மக்கள் உதவினர். ஒருவர் பெயர் வைலி. 1840 ஆம் ஆண்டில் எட்வர்ட் ஜான் அய்ர் என்பவருக்கு உதவினார். பின்னர் இவருடன் வந்த வேறு இரு பழங்குடி இனத்தவர் (யார்ரி, ஜோயி) அவருடன் வந்த ஜான் பாக்ஸ்டர் என்பவரைக் கொன்றுவிட்டனர். வைலி மட்டும் இறுதிவரை அய்ருக்கு உதவி பின்னர் அரசு பென்ஷனும் பெற்றார். ஆஸ்திரேலிய கண்ட ஆராய்ச்சிகள் இப்படிப் பல படுகொலைகள் நடக்கக் காரணமாயின.

ஜாக்கி ஜாக்கி என்று புனைப்பெயருடைய கல்மாரா என்ற பழங்குடி இனத்தவர் எட்மண்ட் கென்னடி என்பவருக்கு உதவினார். ஆனால் ஒரு பழங்குடி இனக் குழு கென்னைடியை ஈட்டியால் துளைத்துக் கொன்றுவிட்டனர். கல்மாரா ஓடிச் சென்று, கப்பலில் இருந்த வெள்ளையரிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டு கென்னடியின் சடலத்தை மீட்க மீண்டும் புதர்களுக்குத் திரும்பிவந்தார். இதனிடையே அந்த ஆராய்ச்சிக் குழுவில் இருந்த பலர் காணாமற்போயினர். இரண்டுபேர் தவிர அனைவரும் மறைந்தனர். இப்படி ஐரோப்பியர்கள் சென்றவிடம் எல்லாம்  இரத்தக் களரியுடந்தான் வரலாறு துவங்கும். பின்னர் அதைக் காரணம் காட்டி, குருவி சுடுவதுபோல, பழங்குடி இனமக்களைச் சுட்டுக்கொல்லுவர். வட அமெரிக்க, தென் அமெரிக்க வரலாற்றைப் படிப்போருக்கு இது நன்கு விளங்கும்.

IMG_2382

 

IMG_9065

படங்கள்: கேடயங்கள் (லண்டன் சுவாமிநாதன்)

—தொடரும்

ஆஸ்திரேலியப் பழங்குடி கலாசாரத்தில் ‘அக்னி’ (Post No. 2523)

IMG_9051

Research Article written by london swaminathan

Post No. 2523

Date: 9th February 2016

Time uploaded in London காலை 10-27

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2345

(பழங்குடி மக்கள்- இந்துக்கள்  இடையேயுள்ள கருத்தொற்றுமைகளைக் காணும் மூன்றாவது கட்டுரை இது. நேற்றும், அதற்கு முதல் நாளும் வெளியிட்ட கட்டுரைகளையும் காண்க)

 

 

இந்துக்களின் வேதத்தில் இந்திரனுக்கு அடுத்தபடியாக, அதிகம் போற்றப்படுபவர் அக்னி பகவான். வேத காலத்தில் வீட்டிலும், அரண்மனைகளிலும், கோவில்களிலும் 400 வகையான யாக, யக்ஞங்கள் நடத்தப்பட்டன. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் அக்னி வழிபாடு செய்யாவிட்டாலும், இந்துக்களைப் போல, தீயை ஒரு புனிதப் பொருளாகவே கருதினர். மேலும் ஒரு ஒற்றுமை. வேத கால பிராமணர்கள், மந்திரம் சொல்லி, அரணிக்கட்டையை வைத்து தீயை மர ஓட்டைகளிலிருந்து கடைந்தெடுத்தது போலவே பழங்குடி மக்களும் செய்தனர். ஆயினும் இவ்வழக்கம் இந்தியா, ஆஸ்திரேலியா தவிர மாயா நாகரீகத்தில் கூட உள்ளது. ஆக, யார் யாரிடமிருந்து கடன் வாங்கினர் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயமே.

 

அக்னியை உண்டாக்க பழங்குடியினர், அரணியைப் போல வுள்ள கருவிகளையே பயன்படுத்தினர். அவர்கள், இதற்காகப் பலவகைக் கருவிகளைச் செய்து, தீக்குச்சி போலத் தோன்றும் பெரிய குச்சிகளையும் வைத்திருந்தனர். தீப்பொறி வந்தவுடன் அதைக் கொளுத்திக் கொள்வர்.

IMG_9039

எதையும் வீணடிக்காதே

நான் சிட்னி மியூசியத்தில், ஆஸ்திரேலிய பிரிவை பார்த்துக் கொண்டிருக்கையில் எனது கவனத்தை ஈர்த்த மற்றொரு விஷயம் – எதையும் வீணடிக்காதே என்ற பழங்குடி மக்களின் வாசகமாகும்.

 

இந்துக்கள், எல்லா பொருள்களையும் கடவுளின் பொருளாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்கமாட்டார்கள். ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்’ – என்று உபநிஷதம் கூறுவதால், காலையில் படுக்கையிருந்து எழுந்து பூமி  மீது பாதங்களை வைக்கும் முன் ‘பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே’ (கால்களை உன் மீது வைக்கிறேன்; மன்னிப்பாயாக) என்று சொல்லித்தான் வைப்பர். கிணறு வெட்டுகையிலும், நிலத்தை உழும்போதும் பூமாதேவியிடம் மன்னிப்புக் கேட்பர். இப்படிக் காடு மலை, ஆறு, குளம், செடி கொடி, தோப்பு, துறவு எல்லாவற்றையும் ஈசனின் படைப்பாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்க மாட்டார்கள். அளவுக்கு அதிகமாகச் சுரண்ட மாட்டார்கள். மிருகங்களைக்கூட, நாட்டிற்குள் நுழைந்து தொல்லை கொடுக்கையில் மட்டுமே வேட்டையாடுவர். சிட்னி மியூசியத்தில் இந்தக் கருத்தை பழங்குடி மக்களும் எழுதிவைத்தது சிந்தனையின் ஒருமைப்பாட்டைக் காட்டி நின்றது.

IMG_9041

நீ நாட்டைப் போற்று, அது உன்னைப் போற்றும்!

 

என் கவனத்தை ஈர்த்த மற்றொரு போர்டு, நீ நாட்டைக் கவனி, அது உன்னைக் கவனிக்கும் – என்பதாகும். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ( நீ அறத்தைக் காத்தால், அறம் உன்னைக் காக்கும்) என்ற இந்துமதக் கருத்தை இது பிரதிபலிக்கிறது. ஆஸ்திரேஇயப் பழங்குடி மக்கள், ‘நாடு’ என்று சொல்லுவது, அவர்களுடைய குழுக்களையாகும். ஆக நாம் மற்றவர்களைக் காப்பார்ரினால், அனத தர்மமே நம்மைக் காக்கும் என்றும், இருக்கும் இயற்கை வளத்தை மிதமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.

 

ஒரு பழங்குடி மக்களிடையே இப்படி உயர்ந்த சிந்தனை இருப்பது அவர்களுடைய பழைய இந்துமத அடிப்படையைக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றியது.

அவர்களுடைய, மொழி, நடை உடை பாவனை போன்ற அனைத்தையும் காண்கையில் இது உறுதிப் படுகிறது. இந்தியப் பழங்குடி மக்களிடையேயும் இப்படி இருப்பதை காணலாம். ஆயினும் 40,000 ஆண்டுகளாகத் தனித்து வாழ்ந்த இனங்கள் ஆகையால் பல வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

 

அடுத்த கட்டுரையில் , ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சில விநோத நம்பிக்கைகள், பழக்க, வழக்கங்களை சுருக்கி வரைவேன்.

IMG_8996

ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களிடையே இந்துமத கருத்துக்கள் (Post No. 2520)

IMG_2255

Research Article written by london swaminathan

Post No. 2520

Date: 8th February 2016

Time uploaded in London 9-18 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

IMG_2338

 

கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது – “ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் தமிழர்களா?” – என்ற தலைப்பில். அதைப் படித்துவிட்டு, இந்தக் கட்டுரையைப் படிப்பது நலம் பயக்கும்.

 

“பிறந்தனவெல்லாம் இறப்பது உறுதி

இறந்தனவெல்லாம் பிறப்பது உறுதி” – என்பது இந்து மதத்தின் தலையாய கருத்து. “புனரபி ஜனனம், புனரபி மரணம்,புனரபி ஜனனி ஜடரே சயனம்” – என்று இதையே ஆதி சங்கரர் அழகாகப் பாடி வைத்தார். அதற்கெல்லாம் முன்னதாக காலத்தால் அழியாத பகவத் கீதையில் கண்ண பிரானும், “ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர், த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச (பகவத் கீதை 2-27) – என்று சொல்லிவைத்தார். மறு பிறப்பில் நம்பிக்கை இலாதோருக்குக் கூட பிறந்தன எல்லாம் இறப்பது உறுதி – என்பது தெரிந்த விஷயமே. ஆனால் இதை எழுத்தில் வடிக்கும்போதுதான், ஒரு இனம் இதுபற்றி எவ்வளவு கவலைப் படுகிறது என்பது தெரியவரும். நான் சிட்னி நகரில் ஆஸ்திரேலிய மியூசியத்தில், பழங்குடி இனத்தின் பிரிவுக்குச் சென்றபோது, அவர்களுடைய நம்பிக்கைகளைப் படங்களுடன் போர்டு, போர்டாக எழுதி வைத்துள்ளதைக் கண்டு மகிழ்ந்தேன். அதில் ஒரு போர்டின் வாசகம் பிறந்தன எல்லாம் இறப்பது உறுதி. இதற்கும் மேலே அவர்கள் எழுதிய விஷயமும் இந்து மதக் கருத்தே! இறந்த பின்னர் ஆவிகள் மேலுலகம் செல்லும், அதற்குச் சரியான பாதை காட்ட வேண்டும் என்பதாகும்.

ஒருவர் வீட்டில் மரணம் அடைந்த பின்னர், பிராமண புரோகிதர்கள் ஓதும் வேத மந்திரங்களும் இதையே சொல்கிறது. இறந்தவரின் ஆவி நல்ல நிலையை அடைய பல கடவுளர்களை வேண்டும் மந்திரங்கள் அவை. இதற்கும் மேலாக இறப்போர் பற்றி மேலும் ஒரு ஒற்றுமையையும் கண்டேன்.

 

பழங்குடி மக்கள், பல முகமூடிகளை அணிந்து நடனம் ஆடிவிட்டு, இறந்தோர் நினைவாக கம்பங்களை நட்டு வைக்கின்றனர். ஆதி காலத்தில் தமிழர்களும் நடு கல் நட்டு இறந்தோரை வழிபட்டனர். இந்தச் செய்தி நிறைய சங்கத் தமிழ் பாடல்களில் உள. கர்நாடகத்தில் மாஸ்தி கல் என்றும் ராஜஸ்தானில் கை சின்னங்களுடன் நினைவுச் சின்னங்களும் வைத்தனர். சாது சந்யாசிகள் இறந்தால் அவர்கள் சமாதிக்கு மேல் சிவலிங்கம் அல்லது, துளசி மாடம் எழுப்பினர். பிராமணர்கள், இறந்தோர் நினைவாக ஒரு கல்லை தோட்டத்தில் புதைத்து வைப்பர். இப்போது இது எல்லாம் அருகிவிட்டது. ஆக ஆதி காலத்தில் எல்லோரும் பின்பற்றிய வழக்கங்கள் பின்னர் கூனிக் குறுகி அறவே மறைந்துவிட்டன என்று கொள்ளல் பொருந்தும்.

IMG_2399

இறந்தவர்களைப் போற்றி வழிபடும் வழக்கம் இந்துமத்தில் உள்ளது போல வேறு எந்த மத்திலுமில்லை. தென்புலத்தாரை தினமும் வழிபடும் ஐவேள்வி (பஞ்ச யக்ஞம்) பற்றி வள்ளுவனும், மனுவும் பாடி வைத்தனர். இது இந்துக்கள் தினமும் செய்வது நின்று இப்பொழுது மாவாசை தர்ப்பணம் என்று மாதமொரு சடங்காக மலிந்துவிட்டது.

IMG_2331

சம்ஸ்கிருதச் சொற்கள்

ஆதி மக்களிடையே பல சம்ஸ்கிருத சொற்களும், தமிழ்ச் சொற்களும் புழங்குவது அவர்கள் இந்தியாவிலிருந்து சென்றவர்களே என்பதைக் காட்டுகிறது. ஆஸ்திரேலியப் பழங்குடிகள்வெளியிலிருந்து வந்ததாகச் சொல்லும் வாசகமும் மியூசியத்திலுள்ளது. நேற்று அணங்கு என்ற தூய தமிழ்ச் சொல்லைக் கண்டோம். மற்ரஒரு மக்கள் பெயர் துர்கா இன மக்கள். இறந்தோர் நினைவாக எழுப்பும் கம்பங்களை துங்கம் என்பர். இது வடமொழிச் சொல். உயரமான, உஅய்ர்த்தப் பட்ட என்பது இதன் பொருள்.

 

இப்படி நிறைய சம்ஸ்கிருதச் சொற்களை – ஆனால் மாறுபட்ட பொருளுடன் வழங்குவதைக் காணலாம்.

 

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி….

பாரத தேசம் பற்றிப் பாரதியார் பாடினார்:-

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே (அவரும் கூட இந்தப் பாட்டில் ‘துங்கம்’ என்ற சொல்லைப் பயிலுகிறார்!)

 

இப்படிப்பட்ட தேசபக்தப் பாடல்கள் அதர்வ வேதத்தில் உள்ளன. பூ சூக்தம் என்ற பாடலில் பூமியை மிக விரிவாகப் போற்றிப் புகழ்கின்றனர் வேத கால ரிஷிகள். ஆஸி. பழங்குடி மக்களும் பூமி பற்றி இதே கருத்தைக் கொண்டுள்ளனர். இயற்கைச் சக்திகளை அவர்களும் போற்றுகின்றனர். நாடு, மண், காற்று, மரம் ஆகியவற்றை உடலின் உறுப்பாக உணருகின்றனர்.

தைத்ரீய ஆரண்யகத்தில் உள்ள வேத மந்திரம் சொல்கிறது (மது வாதா ருதாயதே….)

“காற்று இனிமையாக வீசட்டும். நதிகள் இனிமையாகப் பெருக்கெடுத்து ஓடட்டும். செடி, கொடிகள் இனிமை அளிப்பவையாக இர்க்கட்டும். வன விருக்ஷங்கள் இன்பம் நிறைந்தவகளாய் இருக்கட்டும். சூரியன் இன்பம் தரட்டும். பசுக்கள் மதுரமான பாலையளிக்கட்டும் – தைத்ரீய ஆரண்யகம்

 

IMG_2327

எனைத்தானும் நல்லவை கேட்க…

மூத்தோர் சொல் அமிர்தம்- என்பது தமிழ்ப் பொன்மொழி. ஏதேனும் கொஞ்சமாவது நல்லதைக் கேளுங்கள் (திருக்குறள் 416) என்கிறார் வள்ளுவர். செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பார் வள்ளுவர். இவையெல்லாம் வேதத்திலுளது. எல்லா இடங்களிருந்தும் எங்ளுக்கு நல்ல கருத்துக்கள் வரட்டுமென்று உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் (1-89-1) கூறுகின்றது.

ஆஸி. பழங்குடி மக்க: இதை ‘இங்காரா’ என்பர். நாங்கள் பிறந்த அன்றே எங்களுக்கு ‘இங்காரா’வைச் சொல்லித்தந்துவிட்டனர். நாங்கள் முதியோர் சொல்லைக் கேட்போம். நாலு பேர் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கேட்போம். எங்களுடைய செயல்கள் உயிரினங்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அறிவோம். அறிவு, ஞானம், விவேகம் அடையவும் உயிர் பிழைக்கவும் ஒரே பாதை ‘இங்காரா’தான். எங்கள் முன்னோர்கள் அறிவியல், தொழில்நுட்ப அறிவின் உறைவிடம்”

 

இது போன்ற சிந்தனை ஒரு குழுவின் மத்தியில் தோன்றவேண்டுமானால் அவர்கள் பக்குவம் அடைந்த, முன்னேறிய ஒரு இனம் என்றே நாம் கருதுவோம். இவை அனைத்தும் வேதத்திலும் உள்ளது.

IMG_2282

வான சாத்திர நிபுணர்கள்

ஆஸி. பழங்குடி மக்களின் பூகோள அறிவு அபாரமானது. அவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மூலை, முடுக்கெல்லாம் தெரியும். அவர்கள் உதவியுடந்தான் வெள்ளைக்கார குடியேற்றக்காரர்கள் உட்பகுதிகளுக்குச் சென்றனர். அவர்கள் வானில் இயங்கும் கிரகங்கள், நட்சத்திரங்களை நன்கு அறிவர். அவைகளின் இயக்கத்தைக் கணகிட்டே அவர்கள் காலத்தை அளந்தனர். பெரிய வட்டக் கற்கள் அமைத்து காலம் முதலியவற்றை அளந்தனர். வேதங்களிலும் ஏராளமான வானியல் குறிப்புகள் உண்டு. அவற்றைக் கொண்டே ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் சுதந்திரப் போராட்ட வீரர் திலகரும் ரிக் வேதம் 6000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று சொன்னார்கள். பழங்குடியினர் நட்சத்திரங்கள் பற்றி கதைகள் சொல்லி, அவைகளுக்குப் பெயரிட்டது போல நாமும் துருவன் , அகஸ்தியன், சப்த ரிஷிக்கள், சந்திரனின் 27 மனைவியர், திரிசங்கு நட்சத்திரக் கூட்டம் என்றெல்லாம் பெயரிட்டோம். இப்படிக் கதை சொன்னால் பாமரர்களும் நினைவு வைத்துக் கொண்டு, அடர்ந்த காடுகளிலும், பாலைவனத்திலும் எது வடதிசை, எது தென் திசை என்று இரவு நேரத்தில் வழி கண்டுபிடித்துவிடுவார்கள். ஆஸி. பழங்குடி மக்களுக்கு ஆஸ்திரேலியாவில் தெரியாத இடமே இல்லை. 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் அங்கே வெள்ளைக் காரர்கள் வந்தனர். பழங்குடியினரோ 30,000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டின் வழியாக அங்கே சென்று, சிறப்புடன் வாழ்ந்துள்ளனர்.

ஆஸி. பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ச்சிகள் விரிவடைய, விரிவடைய அவர்களுடைய அபூர்வ திறமைகளை உலகம் உணரத் துவங்கியுள்ளது.

 

IMG_2403

 

 

IMG_2398

தொடரும்………………………………..