OLDEST GOLDEN TOOTH IS IN RIG VEDA! (Post No.7011)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 24 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 15-46

Post No. 7011


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

The oldest book in the world is Rig Veda if we accept the date of Herman Jacobi and Bala Gangadhara Tilak who independently dated Rig Veda between 4000 and 6000 BCE on the basis of astronomical references in the Rig Veda.

BARC carbon dating of underground water in the Sarasvati River basin and NASA’s images of dry beds of Sarasvati river also scientifically proved a date around or before 2000 BCE for the Rig Veda.

The Aitareya Brahmana and the Aitareya Aranyaka of the RV have some references to a teacher named ‘Mr.Gold tooth’ – Hiranya Dant. Keith and Macdonell in their 1912 publication of the two volume Vedic Index also noticed it and wrote that it was a reference to gold tooth. In spite of this, encyclopaedias mentioned Etruscans were the first in fixing golden teeth.

Gold was widely used in India which is proved by the innumerable references in the Vedic literature. Keith and Macdonell point out rich Vedic Hindus have Gold cups, ear rings, neck plates, gold tooth, coins etc.

Even Herodotus mentioned about the mysterious ‘Giant Ants’ entering the ground to pick up gold in India. He mistook the name of term for miners as Giant Ants. Indians are very familiar with Fish people (matsya desa) sugarcane people (Ikshvakus), Kumba karnas, Lamba Karnas etc. Poor Herodotus didn’t know it.

Following pages were taken from Vedic Index. Hindus must rewrite the history of science.

NISKA
DANTA – DENTAL – DENTISTRY
JATA RUPA = GOLD
CANDRA = GOLD

SUVARNA – GOLD

HIRANYA – GOLD

GOLDEN TOOTH- HIRANYA DANT

வேதத்தில் தங்கப் பல் வைத்தியம்! (Post No.7008)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 24 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 8-19 am

Post No. 7008


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

gold tooth

சந்தோஷம் தரும் வாழ்க்கை அமைப்போம், வாரீர்! (Post No.7005)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com


 Date: 23 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 13-21

Post No. 7005


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

பாக்யா 1-9-19 இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பதினைந்தாம் கட்டுரை – அத்தியாயம் 431

சந்தோஷம் தரும் வாழ்க்கை அமைப்போம், வாரீர்!

 ச.நாகராஜன்

ஜப்பானியப் பெண்மணியான மாரி காண்டோ சந்தோஷம் அடைவதற்கான வழிமுறையைக் காண்பித்துப் புகழ் பெற்ற நிலையில், இன்னொரு பெண்மணி பழக்கவழக்கத்தை நல்ல விதமாக மாற்றினால் சந்தோஷம் அடையலாம் என்கிறார்.

சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது, வாரீர், அது சுலபமானதும் கூட என்கிறார் அமெரிக்கப் பெண்மணியான க்ரெட்சென் ரூபின் (Gretchen Rubin)

இவரது பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி விட்டன; முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது முக்கியமான புகழ்பெற்ற இரு புத்தகங்கள் : The Four Tendencies, Better Than Before ஆகியவை.

க்ரெட்சென் மிஸௌரியில் உள்ள கான்ஸாஸ் நகரில் 1965ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி பிறந்தார். இளமையிலிருந்தே ஒருவரின் பழக்கவழக்கங்கள் அவர் வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை ஆராய ஆரம்பித்தார். சட்டம் படித்து பிரபல நீதிபதி ஒருவரிடம் வேலை பார்த்த அவர் பழக்க வழக்கங்களைப் பற்றிய தனது கண்டுபிடிப்புகளை புத்தக வடிவில் தந்ததோடு அதற்கான கருத்தரங்கம், பயிற்சி உள்ளிட்டவற்றை நடத்த ஆரம்பித்தார். மக்கள் ஆவலுடன் அவர் சொல்வதைக் கேட்டுத் தங்களுக்கு உதவாத பழக்கங்களை உதறி விட்டுத் தங்களை மாற்றிக் கொள்ள ஆரம்பித்தனர்.

மனிதனின் அன்றாட வாழ்க்கை 40 விழுக்காடு பழக்கத்தின் அடிப்படையிலேயே அமைகிறது என்கிறார் க்ரெட்சென்.

மனிதர்கள் ஒருவர் போல இன்னொருவர் இல்லை; ஆக இவர்கள் தங்களை மாற்றிக் கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் தாங்கள் எந்த வகையைச் சேர்ந்தவ்ர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கிறார் க்ரெட்சென்.

  1. UPHOLDER (திட்டமிட்டு உயர்பவர்)

இந்த வகை மனிதர்களுக்கு தாங்கள் என்ன செய்யப்போகிறோம் எப்போது செய்யப் போகிறோம் என்ற திட்டம் மிகவும் முக்கியம். காலை முதல் இரவு வரை, திங்கள் முதல் ஞாயிறு வரை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய திடமான திட்டம் கொண்ட இவர்களுக்குச் சற்று தூண்டுதல் தேவை.

தங்களது உள்ளார்ந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றால் இவர்கள் எப்படியாவது உந்தப் பட வேண்டும். தங்களின் செயல்பாடுகளை இவர்கள் அவ்வப்பொழுது மதிப்பீடு செய்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் வெற்றி பெற ஒரு சிறந்த உத்தி இவர்கள் இன்னொருவருடன் கூட்டு சேர்வது தான். அடிக்கடி கூட்டாளியால் உந்தப்பட உந்தப்பட இவர்கள் முன்னேறலாம். தங்கள் வாழ்க்கை சிறப்பதைக் கண்டு ஆனந்தம் அடையலாம்.

  • QUESTIONER (கேள்வி கேட்பவர்)

எதையும் கேள்வி கேட்டுத் தெளிந்து கொண்ட பின்னரே செயலைச் செய்ய முற்படும் இவர்களுக்கு எதிலும் தெளிவு தேவை. எதைச் செய்ய வேண்டும், எதற்காகச் செய்ய வேண்டும் – இது தெரியாவிட்டால் இவர்கள் ஒன்றையும் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கான சரியான உத்தி மேற்பார்வையிடல் (Monitoring) தான்! தனக்குத் தானே கூட இவர்கள் அவ்வப்பொழுது தங்களைச் சரி பார்த்துக் கொண்டால் இவர்களுக்கு அமைவது சந்தோஷமான வாழ்க்கையே. எதிலிருந்தும் தப்பிக்கும் வழியைப் பார்ப்பது இவர்கள் பழக்கம்; அதைக் கண்காணித்து அலசி ஆராய்ந்தால் போதும் இவர்கள் தங்களது கெட்ட பழக்க வழக்கங்களை விட்டுவிட்டு  வெற்றி பெறலாம்.

உடல் பயிற்சி செய்வது அவசியம் தான், எனக்கும் அது பிடிக்கும்; ஆனால் வெளியில் ஒரே குளிராக இருக்கிறதே – இது தான் இவர்களின் தப்பிக்க முயலும் வழி. இதை உன்னிப்பாகப் பார்த்துத் தவிர்த்தால் இவர்கள் வெற்றி நிச்சயம்.

  • OBLIGER (சொன்னால் கேட்பவர்)

இந்த வகை மனிதர்கள் கணக்குக் காட்டும் பொறுப்புடமை என்ற பழக்கத்தை மேற்கொண்டால் அவர்களின் வாழ்க்கை மாறும். கெட்ட பழக்கத்திலிருந்து மீண்டு வர கடமை பற்றிய பொறுப்புணர்வு தேவை. எந்த காரியத்தை எப்போது முடிக்க வேண்டும், அதற்கு உதவுபவர் யார், மருத்துவரா, பயிற்சியாளரா, அல்லது நண்பர்களா, (ஏன் குழந்தைகளாகக் கூட இருக்கலாம்) – அவர்களை இனம் கண்டு இவர்கள் முன்னேறலாம். தங்களுக்காக இல்லாதது போலவும் மற்றவர்களுக்காக செய்வது போலவும் இவர்கள் சொல்வார்கள் – குழந்தை பிறக்கட்டும் பார், சிகரட் பிடிப்பதை நிறுத்தி விடுவேன்! -இது இவர்களின் போக்கு.

 இவர்களுக்கு கண்காணிப்பும் மேற்பார்வையும் தேவை. இவர்களைச் சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். நல்ல நட்பு, நல்ல சுற்றத்தார் என்ற வட்டத்தை அமைத்துக் கொண்டால் போதும் வெற்றிகரமான சந்தோஷ வாழ்க்கை இவர்களுக்கு அமைவது நிச்சயம். இவர்களுக்கு ஊக்குவிக்க அவ்வப்பொழுது ஒரு பாராட்டு விருந்து தேவை.

  • REBEL (புரட்சியாளர்)

எதிலும் புரட்சியை விரும்பும் இவர்களின் முதல் ஆசை தன்னை அனைவரும் மதிக்க வேண்டும் என்பது தான். எதிலும் தெளிவு தேவை என்பதால் எதற்காக, ஏன் என்ற கேள்விகளுக்கு இவர்கள் விடை கண்டால் போதும், செயல் பட ஆரம்பிப்பார்கள். எதையாவது செய்யச் சொன்னால் அதற்கு உடனே மறுப்பு தெரிவிக்கும் சுபாவத்தை இயல்பாகவே கொண்டிருக்கும் இவர்களுக்கு, திட்டமிடல், கணக்குக் காட்டல் உள்ளிட்ட எதுவும் வேலைக்கு ஆகாது. எதையும் வித்தியாசமாகச் செய்ய விரும்பும் இவர்களுக்கு காரண காரியத்துடன் எதையும் விளக்கினால்   தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டு இவர்கள் வெற்றி பெறுவார்கள்.

இனி பிடிவாதமாக நம்மை ஆட்டிப் படைக்கும் கெட்ட பழக்கங்களிலிருந்து எப்படி விடுபடுவது என்பதையும் நன்கு ஆராய்ந்து 21 உத்திகளை க்ரெட்சென் நமக்கு வழங்குகிறார்.

நான்கு வகை மனிதர்களில் நாம் எந்த வகை என்பதை நமக்கு நாமே கேட்டுத் தெரிந்து கொண்டால் இந்த உத்திகளில் நாம் முன்னேறுவதற்கான வழிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

சந்தோஷமான வாழ்க்கைக்கு அடிப்படையானவை நல்ல பழக்க வழக்கங்களே.

அவற்றைக் கைக்கொள்வதற்கான உத்திகளில் முக்கியமான சில:

  • முதலில் நான்கு வகை மனிதர்களில் நீங்கள் எந்த வகை என்பதைக் கண்டுபிடியுங்கள்.
  • எது உங்களுக்கு உதவும் வழி என்பதை நிர்ணயித்துக் கொள்ளுங்கள் (அடுத்தவருக்கு உதவும் ஒரு வழி உங்களுக்கு உதவ வேண்டும் என்பதில்லை)
  • பழக்க வழக்கங்களை அன்றாடம் மேற்பார்வையிடுங்கள்
  • நல்ல பழக்கங்களுக்கான அஸ்திவாரம் அமையுங்கள்
  • அதற்கான திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள் (‘புரட்சியாளர்களுக்கு இது உதவாது)
  • கணக்குக் காட்டும் பொறுப்பை – கடமைப் பொறுப்பை கடைப்பிடியுங்கள் (‘சொன்னால் கேட்பவருக்கு இது சந்தோஷமாக இருக்கும்)
  • பழக்கவழக்க மாற்றத்தை மேற்கொள்ளும் முதல் வாய்ப்பைப் பாருங்கள்; அதைப் பயன்படுத்துங்கள். தொடர்ந்து வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்
  • தப்பிக்க வழியைக் கண்டுபிடிக்கும் மனப்பான்மை பற்றி கவனத்தோடு இருங்கள்
  •  உங்கள் கவனத்தைச் சிதற விடுபவை எவை என்பதைக் கண்டு பிடித்து அவற்றின் மீது கவனமாக இருங்கள்
  • மாறிய வாழ்க்கை முறை சந்தோஷத்தைத் தருவதாக இருப்பின் உடனடியாக உங்களுக்கு நீங்களே ஒரு பாராட்டு விருந்தை அளித்துக் கொள்ள மறவாதீர்கள். தொடர்ந்து முன்னேறுங்கள்
  • உங்களுக்கு உதவும் கூட்டாளியுடன் சேருங்கள்
  • எதிலும் தெளிவாக இருங்கள்
  • உங்களின் தனி அடையாளத்தை உறுதிப் படுத்துங்கள்

தேவையற்ற பழக்கங்களை அகற்ற ஒரு தினசரி டயரி கூட ஏற்படுத்திக் கொண்டு நமது முன்னேற்றத்தைப் பதிவு செய்து வரலாம்.

ஆயிரக்கணக்கானவர்கள் உலகெங்கும் இந்த உத்திகளால் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் போது நம்மால் முடியாதா என்ன?

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஆடிஸம் (Autism) என்னும் தன் பித்த நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர் பிரபல அறிவியல் பெண்மணியான டெம்பிள் க்ராண்டின் (Temple Grandin). 1947, ஆகஸ்ட் 29ஆம் தேதி பிறந்த இவருக்கு வயது 72. சிறு குழந்தைகளில் சில குழந்தைகள், தங்கள் கற்பனை உலகில் வாழ்ந்து தன் பித்த நோயினால் மன இறுக்கத்தைக் கொள்வதைக் கண்டு கொண்ட இவர் அதைப் போக்க தன் 17ஆம் வயதிலேயே ஹக் மெஷின் (Hug Machine) எனும் அழுத்தம் கொடுத்து அணைக்கும் ஒரு சாதனத்தைக் கண்டுபிடித்தார்.

ஒரு நாள் மாட்டுத் தொழுவத்தில் மாடுகளுக்கு ஊசி போடும் போது அவைகளை இப்படி அழுத்தம் கொடுத்து அணைத்து அவைகளின் இறுக்கத்தைப் போக்கும் வழிமுறையைக் கண்டார். ஏன், அதை மனிதர்களுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று நினைத்த டெம்பிள் தனது புது சாதனத்தைக் கண்டு பிடித்தார். இன்று ஆடிஸம் நோயினால் பாதிக்கப்படுவோருக்கு இந்த சாதனம் பெரிதும் பயன்படுகிறது. இவரைப் பற்றிய Temple Grandin என்ற திரைப்படம் புகழ் பெற்ற ஒன்று. 2010இல் டைம் பத்திரிகை உலகின் சிந்தனைப் போக்கை மாற்ற வல்ல நூறு பேரில் இவரையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது. விலங்கியலில் மிகவும் புகழ் பெற்ற இவரின் இன்றைய சொத்து மதிப்பு 10 லட்சம் டாலர்கள்! ‘Calling All Minds’ என்ற இவரது புத்தகம் மிகவும் புகழ் பெற்ற ஒன்று. ஆடிஸம் நோயினால் பாதிக்கப்பட்டோரைச் சுற்றி இருப்பவர்கள் படும் மன வேதனை சொல்லி மாளாத ஒன்று. அவர்களுக்கு ஆடிஸம் நோயைப் போக்க என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்பித்த இவர் உலகின் தலை சிறந்த மனிதாபிமானியாகக் கருதப்படுகிறார்.

****

மனித உடலில் 7 மில்லிகிராம் தங்கம்! (Post No.7004)

WRITTEN BY London Swaminathan

swami_48@yahoo.com


 Date: 23 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 9-03 a m

Post No. 7004


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

–சுபம் — லோகாஸ் சமஸ்தா சுகினோ பவந்து—

–xxxx–

ஆரோக்கியம் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்! – 2 (Post No.6987)

WRITTEN BY S. NAGARAJAN

swami_48@yahoo.com


 Date: 19 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 15-59

Post No. 6987

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

ஹெல்த்கேர் செப்டம்பர் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. கட்டுரையின் முதல் பகுதி 8-8-19 அன்று வெளியாகியுள்ளது : கட்டுரை எண் 6744

புத்தகச் சுருக்கம் : All about Good Health by Dr Christian Barnard, C.Northcote Parkinson, M.K. Rustomji 187 pages

ஆரோக்கியம் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்! – 2

தமிழில் தருபவர் : ச.நாகராஜன் 


Exercise  (உடல் பயிற்சி)

உடல் பயிற்சி ஏன் செய்ய முடியவில்லை என்பதற்கான அநேக காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் உண்மையில் இந்தக் காரணங்கள் அனைத்துமே சரியில்லை. எந்த வயதிலும் கூட உடல் பயிற்சியை ஆரம்பிக்கலாம். அனைத்து டாக்டர்களும் ஒருமித்துக் கூறும் ஒரே கருத்து உலகில் ஆரோக்கியத்துடன் வாழ உதவும் மிக முக்கியமான ஒன்று உடல் பயிற்சியே.

ஒரு விமானத்தின் ஆயுள்காலம் அது பறக்கும் மணி நேரங்களை வைத்துக் கணக்கிடப்படுகிறது. ஒரு காரின் ஆயுள்காலம் அது ஓடும் மைல்களைப் பொறுத்துக் கணக்கிடப்படுகிறது.ஆனால் மனிதனைப் பொறுத்த மட்டில் அவன் வயதாகும் விகிதம் என்பது அவன் வாழும் வருடங்களின் எண்ணிக்கையல்லாது அவன் எவ்வளவு (சக்தியை) செலவழிக்கிறான் எவ்வளவு சேகரிக்கிறான் என்பதைப் பொறுத்தே அமைகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் இரு விதமாக வயதானது அமைகிறது. காலண்டர் படி வருடங்கள் ஆகும் போது அமையும் வயது ஒன்று. இன்னொருன்று அவனது உடல் தகுதியை வைத்து அமைவது. இது உடல் பயிற்சியால் நன்கு நிர்ணயிக்கப்படலாம். ஒரு மனிதனின் காலண்டர் வயது அவன் உடல் தகுதி வயதை விட சுமார் 30 ஆண்டுகள் என்ற மலைக்க வைக்கும் அளவு மாறுபடலாம். அதாவது ஒருவன் காலண்டர் வயது படி 60 வயதை எட்டி விட்டாலும் உடல் தகுதி வயது அடிப்படையில் அவன் மிகவும் இளமையானவனாக இருக்க முடியும்.

மாவீரன் நெப்போலியன் முடிந்த போதெல்லாம் குதிரை சவாரி செய்து சக்தியைச் சேமித்து வைத்துக் கொள்வது வழக்கம்.

உடல்பயிற்சி தினமும் முறைப்படியாக சீராகச் செய்து வருவது அவசியம்.

15 நிமிடம் நாளுக்கு என்ற கணக்கில் வாரத்தில் மூன்று நாட்கள் உடல் பயிற்சி செய்வது மிகவும் அவசியம்.

உடலின் அனைத்து அங்கங்களையும் பயிற்சிக்குள்ளாக்கும் படி பார்த்துக் கொள்வதும் அவசியம்.

எப்போதுமே நிமிர்ந்து நடத்தல் நல்லது.

பூனை எப்படி தன்னை நீட்டித்துக் கொள்கிறது என்று பாருங்கள். அது போல டெலிபோன் ரிசீவரை எடுக்கும் போது கூட நீட்டித்துக் கொள்ளுங்கள்.

குளித்தபின் நன்கு அழுத்தித் துடைத்துக் கொள்ள வேண்டும்.

உட்காரும் போது எப்போதுமே முதுகை நேராக வைத்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.

ஆழ்ந்து சுவாசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஜப்பானில் இதை இளம் வயதிலிருந்தே சொல்லித் தருகிறார்கள்.

உடல் பயிற்சியைப் பற்றி மட்டுமே அனைவரும் வலியுறுத்துவது வழக்கம். ஆனால் மனதிற்கும் பயிற்சி அவசியமே. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் மனதை அமைதியாக ஓய்வாக வைத்துக் கொள்வது அவசியம்.

Physiology (உடலியல்)

பழைய காலத்தில் மனிதர்களைப் பெருமளவில் இறக்கச் செய்தது தொற்று வியாதிகள். ஆனால் நவீன காலத்திலோ மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவையே பெரிய ஆட்கொல்லிகளாக இருக்கின்றன.

இதைத்  தடுக்க உரிய பயிற்சிகளைச் செய்வது அவசியம்.

சரியான உணவுத் திட்டமும் கூட மாரடைப்பையும் பக்கவாதத்தையும் தடுக்கும். குண்டாக இருப்பது இதயத்திற்கு அதிகப்படியான இறுக்கத்தைத் தருகிறது. ஆகவே சீரான அளவில் உடல் எடையைப் பராமரிக்க உடல் பயிற்சியும் உணவுத் திட்டமும் அதன் மீதான அன்றாட கவனிப்பும் தேவை.

சவாசனம் மிகப் பெரிய அளவில் ஆரோக்கியத்தை உறுதிப் படுத்தும்.

பெரும்பாலோனோருக்கு முதுகுவலி ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு:- சரியாக நிமிர்ந்து நடப்பது நல்ல பயனைத் தரும். இன்னொரு பயிற்சி முழங்கால்களை மடித்து அதன் மீது எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கு நேராக உட்காரும் பயிற்சியாகும்.

நீரிழிவு நோய் ஒரு அபாயகரமான வியாதியாகும். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய படி வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

திடீரென அனைத்து சக்தியும் போய் விட்டது போல உணர்வது, தீராத தாகம் எடுப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகமாகப் பசி எடுப்பது, திடீரென அதிகப்படியாக உடல் எடை குறைவது, உடலில் கட்டிகள் தோன்றி மறைவது, விளக்கமுடியாதபடி திடீரென உடல் வலி ஏற்படுவது – இவை டயபடீஸுக்கான் அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக இனிப்புச் சத்தைக் குறையுங்கள்; கார்போஹைட்ரேட்டைக் குறையுங்கள்.

அல்சர் எனப்படும் வாய்ப்புண் அல்லது குடல் புண்ணும் ஆபத்தான ஒன்று தான். அமெரிக்காவில் மட்டும் 50 லட்சம் பேர்கள் இதனால் அவதிப் படுகிறார்கள்  என்றால் உலக அளவில் எத்தனை பேர் என்பதை கற்பனை செய்து கொள்ளலாம்.

தீராத புண்கள் சில சமயம் கான்ஸரில் கொண்டு போய் விடும்.

38 முதல் 55 வயது முடிய உள்ளோருக்கு சாதாரணமாக அல்சர் வருகிறது.

காரமில்லாத உணவு, வயிற்றைப் பொரும வைக்காத உணவு எடுத்தல் அவசியம்.

ஒரு சுலபமான வழி – அதிகப்படி அமிலத்தைக் கட்டுப்படுத்த உண்டு. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எதையேனும் உட்கொள்வது ஒரு தீர்வாகும் – ஓரிரு பிஸ்கட் கூட போதும்!

1.36 கிலோ எடையுள்ள கல்லீரல் உடலின் முக்கியமான அங்கம். இது பிரம்மாண்டமான மல்டி பர்பஸ் – பல்நோக்கு கெமிக்கல் அங்கமாகும். அனைத்து உணவையும் புரோட்டின், கார்போ ஹைட்ரேட், மற்றும் கொழுப்புத்  துகள்களாக இது மாற்றுகிறது. சுத்திகரிக்கப்பட்டவுடன் இவை அனைத்தும் ரத்தத்தில் சேர்கிறது.

அற்புதமான இந்த அங்கம் ரீ ஜெனரேஷன் எனப்படும் புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டது. மது அருந்தி இதைக் கெடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து உடலின் மிக முக்கியமான அங்கம் உடலில் உள்ள இரு சிறுநீரகங்கள். ஒவ்வொரு சிறுநீரகமும் சில கிராம் எடையே கொண்டது. ஆனால் இவற்றில் நம்பமுடியாத பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபில்டர் – வடிகட்டிகள் உள்ளன. இதற்கு நெஃப்ரான் என்று பெயர். இவை இரத்தத்தை வடிகட்டுகின்றன.

நமது உடலில் உள்ள மொத்த ரத்தத்தின் அளவின் இரு மடங்கு உடலில் அமைந்துள்ள  இரு சிறுநீரகங்களின் வழியே ஒவ்வொரு மணி நேரமும் செல்கிறது. இரத்தம் இப்படி இடையறாது வடிகட்டப்பட்டு கழிவுகள் அதிலிருந்து எடுக்கப்பட்டு ப்ளாடர் எனப்படும் சிறுநீர்ப்பைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

முதுகுவலி, சிறுநீரில் இரத்தம் அல்லது நிறமாற்றம் தோன்றுதல், சிறுநீரில் நாற்றம் – இவையெல்லாம் சிறுநீரகக் கோளாறுக்கான அறிகுறிகளாகும்.

அதிகமான திரவ பதார்த்தத்தை எடுத்துக் கொள்வது சிறுநீரகத்தைப் பாதுகாக்க சிறந்த வழி.

General – பொது

மது அருந்தாதீர்கள். அளவுக்கு மீறும் போது அது ஆட்கொல்லியாக மாறும்.

சிகரெட் புகைக்காதீர்கள். கார்பன் மானாக்ஸைடு நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை ஹீமோகுளோபின் எடுப்பதைப் பாதிக்கிறது. புகை பிடிக்கும் பழக்கம் இதய நோயில் கொண்டு விடுகிறது

அதிகமான சத்தமும் ஆபத்தானது தான். 110 டெசிபல் என்ற ஓசை அளவு ஆபத்தானது. இரண்டு மணி நேரம் இந்த டெசிபல் அளவில் நாம் இருந்தால் நம் காது கேட்கும் திறனை இழக்க ஆரம்பிக்கும். உலகின் அனைத்து மகான்களும் அறிஞர்களும் ஒருமிக்க வலியுறுத்துவது மௌனத்தையே!

வாழ்க வளமுடன்!

***

புத்தகத்தின் மிக முக்கியமான பகுதிகள் மட்டுமே இங்கு தரப்பட்டிருக்கின்றன. புத்தகம் முழுவதையும் ஆழ்ந்து படித்து நூலாசிரியர்கள் தரும் அறிவுரைகளின் படி நடப்போர் ஆரோக்கியமான் நல்வாழ்வு வாழ்வது திண்ணம்.

மீண்டும் இன்னொரு புதிய புத்தகத்தில் சந்திப்போம்.

XXX SUBHAM XXX

பாம்பும் வசம்பும் (Post No.6949)

Compiled by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 29 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 9-20 AM

Post No. 6949

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

பழைய பத்திரிக்கைகளில் பாம்புக்கடிக்கு சில மருந்துகள் சொல்லப்படுகின்றன. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது தமிழ்ப் பழமொழி. வசம்பைக் கண்டால் பாம்பும் நடுங்கும் என்பது பத்திரிக்கை மொழி; எந்த அளவுக்கு உண்மை என்பது பாம்புப் பிடாரர்களுக்கே தெரியும். tamilandvedas.com, swamiindology.blogspot.com

நஞ்சு முறிப்பான், வசம்பு பற்றிய செய்திகளுடன் கொஞ்சம் மருத்துவ துணுக்குகளும் இதோ:-

TAMIL TABLE- WEIGHTS, KUNDUMANI, VARAHAN

tags- பாம்பு விஷம், வசம்பு, நஞ்சு முறிச்சான், மண் ட் ரேக், மாசக்காய், குங்குமப்பூ

List of ‘Sexy’ Plants (Post No.6946)

Compiled  by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com

 Date: 28 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 19-24

Post No. 6946

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

I have already given a list of 255 plants. Here is a list of sexy plants, I mean, listed in the book  about aphrodisiacs (drugs, herbs, chemicals stimulating sexual feelings).

255 Indian Trees, Herbs and Shrubs mentioned in Brhat Samhita- Part …



https://tamilandvedas.com › 2015/02/23 › 255-indian-tr…

23 Feb 2015 – (Sapta parna, Ezilai Palai in Tamil). Compiled by London swaminathan. Post No.1670; Dated 23 February 2015. In the first part posted on 21st …

Trees | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › trees

  1.  
  2.  

If a Brahmin cuts the fruit treesshrubs, vines, , creepers or flowering plants , a … 255 Indian treesherbs and flowers mentioned in Brhat Samhita Part1, posted …

255 Indian Trees, Herbs and Shrubs mentioned in Brhat Samhita- Part …



https://swamiindology.blogspot.com › 2015/02 › 255-indian-trees-herbs-and…

21 Feb 2015 – 255 Indian TreesHerbs and Shrubs mentioned in Brhat Samhita– Part-1 ….. ஜப்பானியர் அட்டூழியம்- part 1 (Post No.6723).

Plants in Mahavamsa | Tamil and Vedas



https://tamilandvedas.com › 2014/10/03 › plants-in-mahavamsa

  1.  

3 Oct 2014 – Studying about the plants mentioned in ancient literature helps us to … We have Pippaladan and other names in Upanishads meaning Mr Pipal …

Plants list 2 | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › plants-list-2

  1.  

23 Feb 2015 – In the first part posted on 21st February I gave the names of 130 trees. Here is the second part: 131.Patra =Laurus cassia, Cinnamomum …

நடையா இது நடையா! ஆரோக்கியக் கட்டுரை!! (Post No.6895)

Adi Shankara, Youngest and longest walker on earth

WRITTEN BY London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 18 AUGUST 2019  


British Summer Time uploaded in London – 7-09 AM

Post No. 6895

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Ramana Maharishi, who walked bare footed
from 75 year old Sakti magazine
C M of U.P. Yogiji who walks

ஆரோக்கியம் தெரிந்து கொள்ளுங்கள்! – 1 (Post No.6744)

Written  by S Nagarajan

swami_48@yahoo.com

 Date: 8 AUGUST 2019  


British Summer Time uploaded in London – 6-49 am

Post No. 6744

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஹெல்த்கேர் ஆகஸ்ட் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

புதிய பகுதி

புத்தகச் சுருக்கம் : All about Good Health by Dr Christian Barnard, C.Northcote Parkinson, M.K. Rustomji 187 pages

ஆரோக்கியம் பற்றிய அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்! – 1

தமிழில் தருபவர் : ச.நாகராஜன்

நூலாசிரியர்கள் பற்றி :-

Dr Christian Barnard உலகின் தலைசிறந்த டாக்டர். The Body Machine என்ற அவரது புத்தகம் மூன்று லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி இருக்கிறது. உலகில் முதல் இதய மாற்று நடவு சிகிச்சையைச் செய்தவர் இவரே. (Heart Transplant operation) C.Northcote Parkinson உலகின் தலைசிறந்த மருத்துவ புத்தகங்களை எழுதியவர். ஒவ்வொரு புத்தகமும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன.

M.K. Rustomji ஆரோக்கியம் பற்றி எளிமையாக விளக்குபவர் என்பதால் உலகளாவிய அளவில் பிரபலமானவர். இந்தப் புத்தகம அவரது ஒன்பதாவது புத்தகம். நிர்வாக இயல் பற்றியும் அவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.அதில் ஒன்று திரைப்படமாகப் பிடிக்கப்பட்டு இந்திய அரசாங்கத்தின் பரிசையும் பெற்றது.

நூல் sex, Psyvhology, Food, Ecercise, Physiology, General என்ற ஆறு பகுதிகளைக் கொண்டது.

முக்கிய விஷயங்கள் இங்கு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. முழு நூலையும் வாசித்துப் பயன் பெறலாம்.

  1. SEX

தூக்கம் போல பாலியல் உறவும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு விஷயம்.

பாலியல் உறவில் திருப்தி அடையாத ஒரு பெண்மணியுடன் வாழ்க்கை வாழ்வது மிகவும் கஷ்டம். பாலியல் உறவில் 50%க்கு மேல் பெண்கள் உச்சகட்ட இன்பத்தை அனுபவித்ததில்லை என்பதை ஆய்வு செய்த உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாலியல் உறவில் எந்த ஒரு தோற்ற நிலையும் (Pose and Posture) மோசமானதில்லை

உறவை அடிக்கடி கொள்ளலாமா?

இது ஆணின் ஆண்மை வீரியத்தையும் வயதையும் பொறுத்த ஒரு விஷயம். பெண்களால் அடிக்கடி உறவு கொள்ள முடியும். ஆனால் ஒரு வயதுக்கு மேல் – 45 வயதுக்கு மேல் – இதில் ஆர்வம் பலருக்கும் போய் விடுகிறது.

ஒரு முறை உறவு கொள்வது என்பது 15 முதல் 20 வரை உள்ள press-upக்குச் சமமானது. இதய சம்பந்தமான நோய் உள்ளவர்கள் சீரான உடல்பயிற்சி மேற்கொள்ளல் அவசியம்.

சீரான இடைவெளியில் உறவு கொள்வது ஆரோக்கியத்தைத் தருகிறது; ஆயுளையும் நீட்டிக்கிறது.

ஆண்மையற்ற தன்மை என்பது பெரும்பாலும் உளவியல் ரீதியிலான ஒன்று.

அதிகமாக மது அருந்துவது பாலியல் உறவுக்கு தீங்கு பயக்கும் ஒன்று; இது ஆண்மையற்ற தன்மையை உருவாக்குவது.

“பாலியல் உறவு கொள்ளுங்கள்; இதயத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான ஒரு இரவு இயற்கையின் இயல்பான தூக்கம் தரும் மருந்து” என்று பிரபல அமெரிக்க பாலியல் நிபுணரான டாக்டர் யூஜின் ஷெய்மேன் (Dr Eugene Scheimann) கூறுகிறார்.

எந்த ஒரு வயதும் பாலியல் உறவுக்கு ஒரு தடையில்லை.

2. PSYCHOLOGY

How to overcome tension and stress

மன இறுக்கமும் மன அழுத்தமும் 50 சதவிகித நோய்க்குக் காரணமாக அமைகின்றன. கவலை நரம்பு மண்டலத்திற்குப் பெரும் தீங்கை உண்டாக்குகிறது.

மன இறுக்கம் அதிகமாகும் போது சில ஹார்மோன்கள் அதிகமாக உடலில் சுரக்கிறது. Blood sugar அதிகமாகிறது.

மன இறுக்கம்,மன அழுத்தத்தை எப்படிப் போக்குவது?

முதலில் அது ஏன் ஏற்படுகிறது என்ற காரணத்தை அறிய வேண்டும். காரணத்தை அறிந்த பின் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் கவலையை மனம் விட்டுப் பேசுவதிலேயே பாதிப் பேருக்கு பல நோய்கள் போய் விடுகின்றன.

சிறு சிறு விஷயங்களையும் கூட மனம் திறந்து பாராட்டுவது, அன்பு பாராட்டுவது, மரியாதை தருவது போன்றவை உடலையும் மனதையும் சீராக வைக்க உதவுபவை.

இளமையான மனத்தை எப்போதும் கொண்டிருப்பது உடலையும் இளமையுடன் வைத்திருக்கும். பெர்னார்ட் ஷா, பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், சாமர்செட் மாம், மைக்கேல் ஆஞ்சலோ, வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் இதற்கு உதாரணம்.

சவாசனம் போன்ற ஆசனம் கவலையைப் போக்கும். மனதிற்கும் உடலுக்குமான பயிற்சி இது.

அவ்வப்பொழுது ஓய்வான நேரத்தை உருவாக்கிக் கொண்டு எப்போதும் உழலும் வாழ்க்கையிலிருந்து ஒரு ஓய்வை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நிகழ்காலத்தில் வாழ்வது என்பது இன்னொரு உத்தி. நாளை என்ன நடக்கப் போகிறதோ என்று கவலைப்படுவதை விட்டு விட்டு இன்றைய பொழுதின் மீது கவனம் செலுத்தல் வேண்டும்.

மருத்துவம் சம்பந்தமாக சில தவறான விஷயங்கள் உண்மை போலக் கூறப்படுகின்றன. அவற்றில் சில

நீச்சலுக்கு முன்னர் உணவை உட்கொள்ளக் கூடாது. இது தவறு. மிதமான உணவுக்குப் பின்னர் கூட நீந்தலாம்.

வயது அதிகமாகும் போது எடை கூடினால் பரவாயில்லை. இது தவறு. 21 வயதில் என்ன உடல் எடை இருந்ததோ அதை சீராக வைத்திருப்பதே ஆரோக்கியத்திற்கு உகந்த ஒன்று.

சற்று கூட நேரம் தூங்குவது நல்லது. இது தவறு. தேவையான அளவு தூக்கம் போதும்.

உடல் பயிற்சி செய்யும் பெண்மணிகள் தங்கள் பெண்மைத் தன்மையை இழக்கின்றனர். இந்த நம்பிக்கை தவறு. உடல் பயிற்சி ஆரோக்கியத்தை உறுதி செய்து ஓய்வான தன்மையையும் அளிக்கிறது.

நீரிழிவு நோய்க்கு சிறுநீர பரிசோதனையை மேற்கொள்ளல் அவசியம்.

இரத்த அழுத்த சோதனை இதய நிலை பற்றி அறிய உதவும்;

அதிக கொழுப்புச் சத்துக்கும் இது உதவும்.

மத்திய வயதை அடைந்த பெண்கள் தங்கள் மார்பகங்களைச் சீரான இடைவெளியில் சோதித்துக் கொள்வது அவசியம். மார்பகப் புற்று நோய் இருக்கிறதா, கட்டி உள்ளதா என்பதைச் சோதித்துக் கொள்வது நல்லது. ஏனெனில் வலி இல்லாமல் இருந்தாலும் கூட இவை இருக்கும் அபாயம் உண்டு என்பதால் தான்!

ஆழ்மனதின் சக்தி (The power of Subconscious mind) அபாரமானது. தீர்க்க முடியாத சில பிரச்சினைகளை அதனிடம் விடுவது நல்லது. உறக்கத்தின் போது அது வேலை செய்து பிரச்சினைகளைத் தீர்க்கும் தீர்வுகளை நீங்கள் எழுந்திருக்கும் போது அது உங்களுக்கு வழங்கும்!

  • FOOD

பாக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகளும், குளிர்பானங்களும் தேவையற்றவை; பல சமயங்களில் தீங்கு பயப்பவை. சமச்சீர் உணவே ஆரோக்கியத்திற்குப் போதுமானது.

ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவு உண்ண வேண்டும்? எப்பொழுது உண்ண வேண்டும். பொதுவாகச் சொல்லப் போனால் பெரும்பாலானவர்கள் தேவைக்கு அதிகமாகவே உண்கிறார்கள். பொதுவான விதி – பசி எடுத்தவுடன் உண்ணுங்கள் என்பது தான்!

இன்னொரு அருமையான விதி : குறைவான அளவே உண்ணுங்கள்;பல முறை கூட உண்ணலாம். ஓரிரு முறை சாப்பிட்டு வயிறைத் தேவைக்கு அதிகமாகச் சுமக்க வைப்பதை விட இது மேலானது.

சரியாகச் சமைக்காததே பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.

இந்தியர்களின் வீட்டில் உள்ள உணவில் சப்பாத்தி, அரிசி, பருப்பு வகைகள், கறிகாய்கள் உள்ளன. இதுவே போதுமானது. சில சமயங்களில் மட்டும் விடமின்கள் தேவைப் படலாம். ஆன்ட்டி பயாடிக்ஸ் மாத்திரைகள் சாப்பிடும் போது சில சமயங்களில் விடமின் B  தேவைப்படலாம்.

உடல் பயிற்சியானது உடல் நலமாக இருக்கும் உணவை எப்போதும் ஒருவருக்கு நல்கும்.

எடுத்துக்காட்டாக, ஒரு சிறிய ரொட்டித் துண்டு 40 நிமிட நேர கடும் பயிற்சியைத் தேவைக்குள்ளாக்குகிறது. ஆகவே உடல் எடையைச் சீராக வைத்திருக்கவும், அதிக எடை ஏற்படாமல் இருக்கவும் உடல் பயிற்சி எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணரலாம்.

High Fibre Diet – அதிக பைபர் அடங்கிய உணவு ஏராளமான நன்மைகளைத் தருகிறது. இது சீராக மலத்தைக் கழிக்க உதவுகிறது. கோலன் கான்ஸரை – பெருங்குடலில் புற்றுநோய் வரும் அபாயத்தைத் தடுக்கிறது. ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது.

*** அடுத்த இதழில் முடியும்

WEDDING FEAST PICTURES (Post No.6681)

WRITTEN  by London  Swaminathan

swami_48@yahoo.com


Date: 26 JULY 2019


British Summer Time uploaded in London – 8-50 AM

Post No. 6681


Pictures are taken by London swaminathan 
((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Few years ago, I wrote in this blog that India is the land of highest number of food items. It was part of my Deepavali Research article (the talk I gave at Harrow Desis Diwali Festival). I counted over 160 sweet items/dishes. I gave the proof for my research as well. Every week I used to go to Willesden Green Library in London and visit the cookery section. The shelf on cookery books had more books on Indian cookery than any other country. When I did some statistical research through the index of many country’s cookery books, I arrived at the conclusion that INDIA HAS THE LARGEST NUMBER OF FOOD ITEMS IN THE WORLD. Every state, even every big city, has its own speciality.

Recently (July 10 and 11, 2019) I went to Bangalore to attend a wedding. On two days I counted over 60 items, leave alone the desserts. Some mouth- watering dishes are pictured here (all pictures are taken with my poor I pad)—

VEGETARIANS OF THE WORLD ZINDABAD!!

Long live Vegetarians .