இசை தரும் நோயற்ற வாழ்வு! -2

tamil yal panan

By ச.நாகராஜன்

 

     ‘தி டாவோ ஆஃப் ம்யூசிக்’ என்னும் புத்தகத்தை எழுதிய ஜான் எம் ஆர்டிஸ் (தோற்றம் 31-1-1952 மறைவு 11-4-2012) இசையை ஒரு சிகிச்சை முறையாகப் பயன்படுத்தி ஏராளமானோருக்கு உதவி புரிந்துள்ளார். மூட்டுவலியாலும் மனச்சோர்வாலும் பாதிக்கப்பட்டிருந்த வயதான மூதாட்டியை பூரண குணமாக்கிய சம்பவத்திலிருந்து பல்வேறு வலியாலும் மன அழுத்தத்தினாலும் தூக்கமின்மையாலும் அவதிப்பட்ட ஏராளமான பேர்களை அவர் மீட்டிருக்கிறார்.

 

 

    முதுமையை அடைந்து விட்டதால் கவலைப்படுவோரும் ஈடு செய்ய முடியாத இரத்த பந்தம் அல்லது சொந்தத்தில் இழப்பை அடைந்தோரும் இசையின் மூலமாக அற்புதமான ஆறுதலைப் பெற்று வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை ‘ம்யூசிகல் மெனு’ என்ற உத்தியின் மூலமாகத் தங்களுக்குரிய குணப்படுத்தும் முறையைத் தாங்களே ஏற்படுத்திக் கொள்ளும்படி தங்கள் சிகிச்சைக்கான மெனுவைத் தாங்களே தயாரித்துக் கொள்ளும் அளவு வழி காட்டியுள்ளார்.

 

 

     அவரது அரிய ஆராய்ச்சிகளின் முடிவாக அவர் கண்டுபிடித்துள்ளவை: இசையானது 1) மகிழ்ச்சியைத் தரும் 2)உறவுகளை மேம்படுத்தும் 3) நோய்களைக் குணப்படுத்தும் 4)படைப்பாற்றலை ஊக்குவிக்கும் 5) உடலுக்கு வலிமையையும் ஆற்றலையும் தரும் 6) ஆத்ம திருப்தியை உண்டாக்கும்

   நாடித் துடிப்பை சீராக்கி சுவாசத்தை ஒழுங்குபடுத்தி இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் சீராக்கி மூளை மின்னலைகளை சாந்த நிலைக்குக் கொண்டு செல்ல இசை ஒரு அற்புத வழியாகும் என்கிறார் அவர். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே வைப்ரேஷன் எனப்படும் துடிப்பு என்பதால் இயற்கையின் லயத்திற்கு இணங்க இருக்கும் இசையை நாம் கேட்பதால் அளப்பரிய நன்மைகளைப் பெறலாம் என்கிறார் ஆர்டிஸ்.

டான் காம்பெல் என்னும் பிரபல உளவியலாளர் ‘தி மொஜார்ட் எபக்ட்’ என்று இசையின் ஆற்றலை விளக்கும் உலக பிரசித்தி பெற்ற நூலை எழுதியுள்ளார். அதில் பல்வேறு இசை வகைகளைக் கேட்டால் கிடைக்கும் நன்மைகளையும் விவரித்துள்ளார்.

 

 

க்ரிகாரியன் சாண்ட் (Gregorian chant) : மன இறுக்கத்தை நீக்கி மனதை சாந்தப்படுத்தும்

பாரோக் இசை (Slower Baroque) வகைகளான பாச் ஹாண்டல் விவால்டி ஆகியவை படைப்பற்றலை ஊக்குவித்து புதியனவற்றைக் கண்டுபிடிக்க உதவும்

க்ளாஸிகல் இசை (மொஜார்ட் போன்றவை) ஒருமுனைப்படுத்தலை ஊக்குவித்து நினைவாற்றலை மேம்படுத்தும் (மாணவர்களுக்கு உகந்தது)

காதல் (ரொமாண்டிக்) இசை ( ஷூபெர்ட் ஷூமென், ட்சாய்கோவ்ஸ்கி போன்றவை) நம் புலன்களைக் கூர்மையாக்கி காதல் உணர்வையும் இரக்க உணர்வையும் அதிகரிக்கும்.

 

 

ஜாஸ் நம் உணர்வுகளை மேம்படுத்தி ஆனந்தத்தை உருவாக்கி சமுதாயத்துடன் இணையும் ஆவலை ஏற்படுத்தும்.

மத சம்பந்தமான இசையோ நம்மை உடல் மற்றும் உள்ள வலியிலிருந்து மீட்கும்.

இப்படி இசை நிபுணர்கள் கூறுவதை அறிவியல் ஆராய்ச்சிகள் உண்மையே என்று கூறி நிரூபிக்கின்றன.

 

The-String-Family-The-Bird-Feed

ட்ரினிடி காலேஜில் பேராசிரியராகப் பணியாற்றும் டான் லாய்ட் இசை பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் மூளைகளில் பல்வேறு விதமான மெல்லிய உணர்வுகளை எழுப்புவதாகக் கூறுகிறார்.இதற்கு மூளையை ஸ்கேன் செய்து மியூசிகல் இன்ஸ்ட்ருமெண்ட் டிஜிடல் இண்டர்பேஸ் ((MIDI)  மூலம் ஏராளமான  தரவுகளை (டேட்டா) சேகரித்தார். இதன் மூலம் ஒரு நோயாளியின் சீரற்ற செயல்பாடுள்ள மூளைக்கும் சாதாரண நிலையில் இருக்கும் மூளைக்கும் உள்ள வேறுபாடுகளை அவரால் சுலபமாக இனம் காண முடிந்தது.

நமது பாரம்பரிய இசையில் உள்ள பல்வேறு ராகங்கள் பல நோய்களைத் தீர்க்கும் அரிய விஷயத்தை அனைவரும் நன்கு அறிவர்.

 

 

பைரவி ராகம் பக்க வாத நோயைத் தீர்க்கும், காய்ச்சலைப் போக்கும்; எப்போதும் உடனடி சுறுசுறுப்பை ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது ‘ராக ஆராய்ச்சி மையம்’ மூலமாக பைரவியின் பெருமையைக் கண்டுணர்ந்த பிரபல இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன் இதை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நிஜமாக நடந்த  சம்பவங்கள் வாயிலாக விரிவாகக் கூறியுள்ளார்.

 

1933ஆம் ஆண்டு ப்ளோரென்ஸ் நகரில் நடந்த ஒரு மகாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரபல இசை விற்பன்னர் ஓம்கார்நாத் தாகூரை (1897-1967) இத்தாலிய சர்வாதிகாரி பெனிடோ முஸோலினி (1883-1945) சந்திக்க விருப்பம் தெரிவித்துத் தன் காரை பிரத்யேமாக அனுப்பி வைத்தார். ஓம்கார்நாத் தாகூர் ஹிந்தோள ராகத்தை அனுபவித்துப் பாடிக் காட்ட முஸோலினி அதில் உள்ள வீர ரஸத்தை அனுபவித்து உச்ச கட்டத்தில் நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று கூவினார்.அவர் வியர்வையில் மூழ்கி கண்கள் சிவக்க வீரத்தைக் காண்பிக்கும் கம்பீரத்தின் உச்சத்தில் இருந்தார்.

 

 

இப்படியும் ஒரு இசை இருக்க  முடியுமா என்று வியந்த முஸோலினிக்கு அடுத்து ஓம்கார் நாத் தாகூர் சாயாநாட் என்னும் துன்ப நிலையைச் சுட்டிக் காட்டும் ராகத்தைப் பாடிக் காட்ட முஸோலினி கண்ணீர் அருவியாகப் பொழிய இசையின் வலிமையைக் கண்டு அசந்து போனார். தூக்கமில்லாமல் தான் தவிப்பதைக் கூறிய முஸோலினிக்கு பூரியா ராகத்தை தாகூர் இசைக்க அரை மணி நேரத்திலேயே வெகு நாட்களாகத் தூங்காத முஸோலினி அசந்து தூங்கினார். பாரத இசையின் வலிமையை தானே நேரில் அனுபவித்த முஸோலினிக்கு வியப்புத் தாளவில்லை.

 

 

சர்வாதிகாரி என்றாலும் கூட இசையில் அபார பிரியம் கொண்ட முஸோலினி சைவ உணவை சமைத்து ஓம்கார் நாத்தைத் தன்னுடன் உணவருந்தி விட்டே செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்.பின்னர் ஓம்கார்நாத் தாகூர் பிரியா விடை பெற்றார்!

இன்னும் இலக்கியம் மற்றும் சரித்திரம் கூறும் சில செய்திகளையும் சம்பவங்களையும் காண்போம்.

 

 

(அறிவியல் துளிகள் என்ற தொடர் பிரபல டைரக்டர் திரு.கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்ட பாக்யா வார இதழில் 4-3-2011 இதழில் துவங்கியது.19-7-2013இல் 125 அத்தியாயங்களைக் கொண்டு வாசகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுத் தொடர்கிறது.      இதில் 21-9-2012 இதழில் 82ஆம் அத்தியாயமாக வெளியாகிய இசை தரும் நோயற்ற வாழ்வு கட்டுரையின் இரண்டாம் பகுதியை மகிழ்வுடன் அளிக்கிறோம்)

 

 

Please Read earlier posts on music written by London Swaminathan:

1.Rain Miracles: Rain and Fire by Music

2.மழை அற்புதங்கள்

3.இசைத் தமிழ் அதிசயங்கள்

4.சங்கீத ரகசியம்: இளமையில் கல்

5.தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி

6.முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள்

Contact swami_48@yahoo.com

படங்கள் பல வெப்சைட்டுகளில் இருந்து எடுக்கப்பட்டன. நன்றி.

இசை தரும் நோயற்ற வாழ்வு! – 1

musgrid1024

Part 1

ச.நாகராஜன்

ஓசை தரும் இன்பம் உவமை இலா இன்பம் என்றார் மகாகவி பாரதியார்!முறைப்படுத்தப்பட்ட ஓசை அல்லது ஒலி இசையாக உருவெடுத்து மனித மனங்களிலிருந்து வெள்ளமென பிரவாகிக்கும் போதும் அவர்களின் இசைக் கருவிகள் மூலமாக அருவியெனப் பொழியும் போதும் எண்ணிலா விந்தைகள் நடக்கின்றன. உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் நோயற்ற வாழ்வு வாழ இசை உதவுகிறது என்பது அறிவியல் ஆராய்ச்சிகளின் சமீபத்திய முடிவு.

அறிவியல் ரீதியாக இதை அறிந்து கொள்ள மூளை மின்னலைகளைப் பற்றி முதலில் சிறிது தெரிந்து கொள்ள வேண்டும்.மூளையின் செரிப்ரல் கார்டெக்ஸ் என்று அழைக்கப்படும் பகுதி மூளையின் மேல்பகுதியில் அமைந்திருக்கும் பல மடிப்புகளைக் கொண்ட வெளி அடுக்கு. (இதைத் தமிழில் மூளை மேலுறை என்று சொல்லலாம்.) இதில் கோடிக்கணக்கில் நியூரான்கள் உள்ளன. ஒரு சதுர மில்லி மீட்டர் அளவில் (ஒரு கடுகின் அளவில்) சுமார் பத்து லட்சம் நியூரான்கள் உள்ளன என்றால் எத்தனை கோடானு கோடி நியூரான்கள் மூளை இணைப்பில் உள்ளன என்று ஊகித்துப் பிரமிக்கலாம். இந்த நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டுள்ளன. மற்ற மூளைப் பகுதிகளிலிருந்து தகவல் முதலியவற்றின் உள்ளீடுகளைப் பெறுகின்றன. நரம்புத் தூண்டுதலினால் மின் செயல் பாட்டை ஓயாமல்  இவை தூக்கத்தில் கூட அனுப்புகின்றன; பெறுகின்றன. இந்த மூளைச் செயல்பாடு நின்று விட்டால் அதையே உடல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் மரணம் என்கிறோம்.

புலன்கள் அனுப்பும் அனைத்தையும் பெற்று நியூரான்கள் மூளை மேலுறையில் செய்யும் செயல்பாட்டை அளப்பதை எலக்ட்ரோ என்செபலோகிராம் அல்லது ஈஈஜி என்கிறோம். ஒரு ஈஈஜி எலக்ட்ரோடை மண்டையில் இணைத்து விட்டால் போதும், அதன் அடியில் உள்ள மூளையின் செயல்பாட்டை அது துல்லியமாகக் காட்டி விடும்.  ஈஈஜி, சீரான  இடைவெளியில் வருகின்ற ரிதம்களை ஆல்பா,  பீட்டா டெல்டா மற்றும் தீட்டா என நான்கு வகைகளாகப் பதிவு செய்கிறது.இவற்றை ப்ரீக்வென்ஸி (அலைவரிசை அல்லது அலைவெண்) என்று இனம் கண்டு ஹெர்ட்ஸ் அல்லது வினாடிக்கு இத்தனை சைக்கிள் (Hz or cycles/sec) என்றும் ஆம்ப்ளிட்யூட் எனவும் அளக்கிறோம்.

மண்டையோட்டுடன் இணைக்கப்படும்  எலக்ட்ரோரோடுகள் ஆம்ப்ளிட்யூடை மைக்ரோவோல்ட் அளவால் தெரிவிக்கும். ஒரு மைக்ரோ வோல்ட் என்பது பத்து லட்சம் வோல்ட்டின் ஒரு பகுதி!

இதைக் கீழ்க்கண்ட விளக்க அட்டவணை மூலமாகச் சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.

ரிதம்         ப்ரீக்வென்ஸி     ஆம்ப்ளிட்யூட்

(ஹெர்ட்ஸில்)     மைக்ரோவோல்ட்டில்

ஆல்பா         8-13                  20-200

பீட்டா            13-30                                          5-10

டெல்டா        1-5                   20-200

தீட்டா          4-8                    10

நமது மூளை மேலே காணப்படும் நான்கில் ஏதேனும் ஒன்றில் உள்ள பிரக்ஞை நிலையையே எப்போதும் கொண்டுள்ளது.

Musical-Instruments-The-Bird-Feed-1024x790

பீட்டா நிலை: விழித்து இருக்கும் போது உள்ள நிலை இது. கண்கள் திறந்திருக்கும். முற்றிலுமான விழிப்புணர்ச்சி இருக்கும். இந்த நிலையில் மேல் அளவை ஒருவர் தொடும் போது அதிக சிந்தனை வயப்பட்டு கவலையுடன் இருக்கிறார் என்று சொல்லி விடலாம்!

ஆல்பா நிலை: இது மனம் ஓய்வாக அமைதியாக இருக்கும் நிலை. மனதில் இருக்கும் டென்ஷனை மட்டும் ஒருவர் அகற்ற முடியுமானால் ஒரே நிமிடத்தில் கண்களை மூடிய நிலையில் இந்த நிலையை எய்தி விடலாம்..ஆல்பா நிலையில் இருக்கும் போது படைப்பாற்றல் திறன் எனப்படும் கிரியேடிவிடி அதிகரிப்பதாக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.ஆகவே தான் பல விளம்பரங்கள் உங்களை “ஆல்பா” நிலைக்கு அழைத்துச் செல்வதாகத் தம்பட்டம் அடிக்கின்றன. பகல் கனவு காணுவோரும் இந்த நிலையில் தான் இருப்பர்.

தியானத்தின் பலனாக ஆல்பா நிலையை அடைய முடியும் என அறிவியல் பூர்வமாக அறியப்பட்டு விட்டதால் தான் மேலை நாடுகள் அனைத்தும் யோகாவையும் தியானத்தையும் தங்கள் அன்றாட வாழ்வில் இப்போது கொண்டு வந்து விட்டன.

தீட்டா நிலை: இது தூக்கத்தின் முதல் படி என்பதால் தூக்க உணர்வு இதனுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆகவே தூங்குவோரை தீட்டா நிலையில் உள்ளதாகச் சொல்லி விடலாம். குழந்தைகள் பகல் கனவு காண்பதும் தீட்டா நிலையில் தான்!

டெல்டா நிலை: ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள ஒருவரின் நிலை டெல்டா நிலை. யோகிகள் மட்டும் விழித்திருக்கும் போதே தங்கள் பழக்கத்தினால் இதே நிலையில் இருப்பதும் உண்டு!

இசை மனிதனுக்கு மனச் சாந்தியைத் தந்து அவனை அமைதிப்படுத்துகிறது என்பதை பல நூற்றாண்டுகளாகவே அனைவரும் அறிந்துள்ளனர். ஆனால் சில குறிப்பிட்ட இசைத் துணுக்குகள் மூலமாக ஆல்பா நிலையை ஒருவர் உடனடியாக அடைய முடியும் என்பதை நவீன அறிவியல் சோதனைகள் நிரூபித்து வருகின்றன. பிரக்ஞை நிலையில் ஆல்பா நிலையை அடைந்து ஒரு ஆழ்ந்த லயத்துடன் மன சாந்தியை சுகமாகப் பெற விரும்புவோர் தங்களுக்கு உரிய ஆல்பா இசையைக் கேட்டு மகிழ்ந்து பயன் பெறலாம்.

 

கர்நாடக சங்கீதம் போன்ற கிளாஸிகல் இசை, மெல்லிசைப் பாடல்கள் ஆன்ம நிலையை உயர்த்தும் மத சம்பந்தமான ஸ்லோகங்கள் மற்றும் பாடல்கள் என எதை வேண்டுமானாலும் எது உங்களுக்கு மன அமைதியைத் தருகிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கேட்கலாம் என்கிறது அறிவியல்.

ஆனால் இசையின் இந்த வலிமையை வணிக ரீதியாகப் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் இதற்கெனவே இசைப் பாடல்களையும் இசைக் கருவிகளின் விசேஷ ஒலியையும் கொண்ட ப்ரெய்ன் வேவ் என்டர்டெய்ன்மெண்ட் எனப்படும் மூளை மின்னலைப் பொழுது போக்கு இசையை உலகெங்கும் அறிமுகப்படுத்தி வருகின்றன.நூற்றுக்கணக்கில் இந்த இசைப் பாடல்கள் சந்தையில் வந்து குவிந்து விட்டன!

இதை டவுன் லோடிங் எனப்படும் தரவிறக்கம் மூலமாக உங்கள்  கணினியில் ஏற்றிக் கொள்ளலாம். சி டி எனப்படும் குறுந்தகடில் பதிவு செய்து கேட்கலாம்.

இசையின் வலிமையையும் பலன்களையும் அற்புதமாக விவரித்து ‘தி டாவோ ஆஃப் ம்யூசிக்’ என்னும் புத்தகத்தை ஜான் எம் ஆர்டிஸ் என்பவர் எழுதியுள்ளார்.

This article was written by my brother Santanam Nagarajan for Bakya Tamil Magazine.

************************

Musical Pillars in Hindu Temples

Picture of Hampi Temple with Musical Pillars.

Pictures are taken from other websites. Thanks.

Hindu Temples of India are architectural wonders. Each sculptor has shown his genius in the temple sculptures and carvings in his own way. Every temple has something to boast about. Modern engineers marvel at Indian temples and wonder how they built without the modern tools thousand years ago. Temples like Madurai Meenakshi temple contain thousands of statues.

 

South Indian temples stand unique in certain aspects. The Nayak kings of Vijayanagara Empire made unique contribution to art and architecture of South India in the past. Musical pillars found in five or more temples are Nayak’s contribution. The most famous Musical Pillars are in Sri Vittala Temple in Hampi in Karnataka. There are musical pillars in Madurai Meenakshi Temple, Nellaiyappar Temple in Tirunelveli, Thanumalayan Temple in Suchindrum and Adhinathar temple at Alwartirunagari in Tamil Nadu.

Musical Pillars are standing testimony to Hindu art. The sculptors have invested their sculptural and musical skills in them. Sri Vijaya Vittala temple was built in 15th century. It has got 56 musical pillars also known as SAREGAMA  pillars. Sa, Re, Ga, Ma are four of the seven musical notes.

Scores of articles, books and research papers have been written on these pillars. H.A.Patil has submitted one research paper on Hampi temple. Following is the gist:

 

“ In this paper, we present the spectral analysis of the sound recorded from a musical pillar at Vitthala temple, Hampi – a world heritage site in Karnataka. The pillars in this temple have musical columns which produce sounds of different musical instruments when struck with a thumb (i.e., a kind of impulse-like excitation). The sound recorded from a pillar is found to produce bell-like sound. In addition, an analysis is presented to model dynamics of such columns in a pillar to find the flexural frequencies along with its eigenmodes. It was observed that there is close correlation between spectral (i.e., resonance) characteristics of bell-like sound from pillar and actual bell sound. The measured frequencies of pillar have also been found to be in close agreement with flexural frequencies derived from Euler-Bernoulli beam model and energy separation algorithm (ESA) based on Teager’s energy operator. This model correctly predicts the resonant frequencies of the bell-like sound from the musical columns of the pillar”.

In the Nellaiappar Temple at Tirunelveli there are four  musical pillars. They have a central pillar around which there are 48 small cylindrical pillars of varying girth. When they are taped they give different sounds. When pillar is tapped, there are sympathetic vibrations from the neighbouring pillars.

In the Thanumalayan temple at Suchibram, there are four musical pillars. The central pillar is surrounded by 24 or 33 small pillars.

In the Adhinathar temple at Alwartirunagari, tow musical pillars are found.

Picture of Musical Pillars in Tirunelveli Temple

Madurai Meenakshi Temple is considered one of the 100 Wonders of the world ( Please read my post THE WONDER THAT IS MADURAI MEENAKSHI TEMPLE). The five musical pillars inside the temple are known to many. They are monoliths. Large central pillar is surrounded by 22 small pillars.

There are small pillars in Sivan Koil of Shenbagarama Nallur near Nanguneri in Tail Nadu.  They emit the sound of conch or horn if wind is blown in to the holes.

Please read about the Stone Nagaswaram of Alwartiru Nagari temple and Ivory nagaswaram of Tiruvarur temple in my earlier article 100 WONDERS OF TAMIL NADU. One foot long stone nagaswaram of this temple is made of granite. It has got seven notes.

 

Mr K K Pillai has written about Suchindram musical pillars in depth in his book on the Thanumalayan temple. He gives the follwig details:

“The two northern groups present each a cluster of 24 pillars, while the southern ones present each a cluster of 33. A striking feature is that all the pillars of each group, together with the exquisitely carved turret at the top of each group are chiselled out of a single rock of granite. A tap on each of the pillars in a group produces different sound”. He added that the quality of sound is not as good as Tirunelveli Musical pillars.

 

Medical Team’s Study of Meenakshi Temple Musical Pillars

A study team led by Dr S Kameswaran, Chief of the Ent Institute in the Madurai General Hospital has analysed the musical pillars in the above temples in 1981( Indian Express news report ,July 30, 1981).The cluster of pillars carved out of a huge block of resonant stone was played upon with two sticks, provided with a hard striking knob at the ends. The performers stood on opposite sides and played on pillars. Solo music as well as accompaniment was provided by them. Rhythmic accompaniment was given to performances of dance by playing jatis, hols on them; The tone colou of the notes emanating from the pillars resembles the tone colour of the ‘Thala Alangaram’.

 

The peak of excellence has been reached at the musical pillars in Suchindram. The study of these pillars with a high fidelity tape-recorder, wooden plant and inch tape included physical measurement of the pillar, sound recording and analysis and identifying modal points. The analysis of the rock sample (from the pillars) was done at the geology department of Presidency college, Chennai. According to Geology Professor Dr Subramanina, the rock rich in silica, is fairly abundant in Hospet near Hampi in Karnataka.

A book has been published by a research scholar on Music Pillars in Temples ( in English) long ago.

 

Please read my earlier post : THE WONDER THAT IS MADURAI MEENAKSHI TEMPLE

 

Contact swami_48@yahoo.com

Hindu Gods and Animals

Picture of Lord of Animals seal from Dilmun (Bahrain)

Hindu Gods and Animals

Muthuswami Dikshitar, one of the Musical Trinity of Tamil Nadu, rightly praised Lord Shiva as the one who blessed even the animals, birds and insects along with the saints. Dikshitar, in his composition ‘Thyagarajasya’ in Bekata raga, says it in the line ‘Muni, Pakshi, Mruga, Kidathi mukti pradha’.

In two other places he refers to two mythological stories where Vishnu helped the trees and a garden lizard.

King Nruka donated a cow which was already donated and so was cursed to be born as a garden lizard. He was released from that lizard form by Lord Krishna. Muthuswami Dikshitar sang about it in his composition Govindarajam in Mukari Raga. The line of reference to this is ‘ Nruka rajasya  grukalasa Janmapaham’.

He sang about Kubera’s sons Nalakuparan and Manigreevan who became trees (Marutha Maram in Tamil) by the curse of Narada and got released by Krishna in the tree/Mortar episode.

Gajendra Moksha episode is linked with many shrines including Tirumohur near Madurai. Lord Vishnu saved the elephant Gajendra from the mouth of a crocodile. Please see my earlier posts for the full story.

The spider and elephant story of Tiruanaikkaval near Trichy is very popular.

Madurai is the place associated with Shiva’s 64 ‘leelas’ (Divine games). Shiva helped pigs, swallow, heron and even a plant Mulli (in Tamil). Following is the list of towns that link animals with Lord Shiva:

Animals associated with Lord Shiva (Place names indicate where the temples are situated)

Elephant :Madurai, Trukkanapper, Tirukkurraalam, Tiruanaikka, Kalahasthi

Karivalam vantha nallur

Lion – Tirunallur ( Vishnu: Narasingam near Madurai, Sholingar,Hampi in A.P.)

Tiger –Perumpuliyur, Puliyur/ Chidambaram Vyagrapureeswarar

Horse – Ayavanthi

Cow  — Thirukkondeeswaram, Tiruaduthurai, Karuvur, Avur ,Patteeswaram , Tiruamathur

Goats – Tiruadanai

Bull/ eru—Tiruvaiyaru

Monkey – Kurankaduthurai, Kurankanimuttam, Kurankukaa, Kurankuth thali, Valikandapuram

Pig –sivapuram ,Pandrimalai, Madurai

Donkey – Karaveeram

Rabbit—Tiruppathiripuliyur

Picture of God Dattatreya with animals

Birds

Crow — Kurankanimuttam, Tirunallaru (as Vahana of Tirunallaru Saneeswaran)

Heron – Naraiyur ,Madurai

Kari kuruvi– Valivalam  ,Madurai

Eagle/ falcon /Garudan—Sirukudi, Tirukkazuku kundram, Vaitheeswaran kovil

(Parrots: Madurai, Srivillliputtur, Kanchipuram )

Beetle – Srisailam, Tiruvendurai, Valoliputhur

Amphibians and water living creatures

Frog –Utrathur

Crab –Tirunthuthevankudi

Turtle –Tirumanamcheri

Fish – Tiruchelur

Indus Seal of Lord of Animals (Pasupati)

Reptiles and small insects

Fly – Eengoimalai, Tiruchitremam

Ant – Tiruerumpur, Erumpiiswaram

Snake –Kalahasthi, Tiruppampuram, Kutanthai keelkottam, Tirunageswaram, Tirunagaikaronam, Nagarkoil,  Sankarankoil

Spider –Kalahasthi, tTruanaika

Squirrel – Kurankanimuttam

Iguana/Udumpu – Tirumakaral

Tirumakaral  is near Kanchipuram. King Rajendra Choza built a temple for lord Shiva 1000 years ago at Tirumakaral. The king saw a golden colour iguana in a shrub. When he ordered his servants to catch it, they cut the plants in the bush. When they accidentally cut the tail of the animals, blood gushed out. On seeing it,the king fainted an heard a voice from the sky that he should build a temple there.

Every town has at least one animal story. This shows what that they believed in. As a result of such beliefs they respected the animals particularly, the cows the monkeys and the elephants. All the temples do regular Pujas (worship) to Cow and Elephant known as Go Puja and Gaja Puja.

Picture of Denmark seal with Lord of animals

50 Articles on Animals and Birds written &  posted by me:

To get my articles just google the title and add “in tamilandvedas.wordpress.com” or “in swamiindology.blogspot.com” .They are also posted in tamilbrahmins.com and The Speaking Tree.

Did Humans Communicate with Animals?

The Great Scorpion Mystery Part 1 and Part 2

The Story of Hypocritical Cat

Deer Chariot: Rig Veda to Santa Claus

45 Words for Elephant

Elephant Miracles

Gajendra Moksha in Africa

Do Animals Have Feelings?

Vishnu in Indus Valley

Serpent Queen: From Indus Valley to Sabarimalai

Bull Fighting: From Indus Valley to Spain via Tamil Nadu

Vedic Dog and Church Dog

Tiger Goddess of Indus Valley

Donkeys in Tamil and Sanskrit Literature

Four Birds in One Sloka

Animal Einsteins in Ancient Sanskrit and Tamil Literature

Animal Einsteins –Part 2

Vedic Homa Bird

Double Headed Eagle: Sumerian-Indian Connection

When Animals worship God, Why Not Men?

Eagle Shaped Fire Altar of Karikal Choza

Two Little Animals that Inspired Indians

Three Wise Monkeys from India

Mysterious Fish Gods around the World

Gods and Birds

Hindu Eagle Mystery Deepens

Can Parrots Recite Vedas?

Can Birds Predict your Future?

Multi Lingual Parrot mimics Arabic, Urdu and English Words

Mysterious Tamil Birdman

Birds for Finding Direction: Sumer to Tamil Nadu

Articles on VAHANAS (Mounts of GODS):

Vahanas in Kalidasa and Ancient Tamil Literature

Hindu Vahanas around the World

Hindu Vahanas in Italy and Greece

Vahanas on Coins and in Sculptures

Interesting Facts about Vahanas

Seven Gods Procession on Vahanas

Who Rides on What Vahana (Animal or Bird)?

Indian Crow by Mark Twain

Tamil Articles தமிழ் கட்டுரைகள்

அதிசய பறவைத் தமிழன்

கா.. கா.. கா..கா!!

கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம்

வாகனங்கள் தோன்றியது எங்கே?

எந்தக் கடவுளுக்கு என்ன வாகனம்?

சுமேரியாவில் தமிழ் பறவை

தேள் தெய்வம்

பாம்பு ராணி

வேத நாயும் மாதா கோவில் நாயும்

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை

சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண்

யானை பற்றிய நூறு பழமொழிகள்

Contact : swami_48@yahoo.com

முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள்

முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள்

ஆதாரம்: ஷண்மதமும் முத்துசுவாமி தீக்ஷிதரும், எழுதியவர்: என். பார்த்தசாரதி, ஆண்டு 2002.

சென்னை மேற்கு மாம்பலம் பார்த்தசாரதி அவர்கள் எழுதிய 24 பக்க புத்தகத்தில் ஒரு கலைக்களஞ்சிய அளவுக்கு தகவல்கள் உள்ளன. சங்கீத ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

 

அற்புதம் 1: காசியில் கங்கை நதியில் வீணை கிடைத்தது.

 

அற்புதம் 2: திருத்தணி முருகப்பெருமான் சன்னிதியில் அவன் அருளால் முதல் பாட்டைப் பாடி 440 கீர்த்தனைகளை இயற்றினார். (அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது ஒரு வயதான ஆள் அவர் வாயில் கற்கண்டைப் போட்டதாகவும் உடனே பாடல்கள் பொங்கி எழுந்ததாகவும் கூறுவர்). முதல் பாட்டு ‘ஸ்ரீ நாதாதி குருகுஹோ’ என்று அமைந்தது. அது முதற்கொண்டு எல்லா பாடல்களிலும் ‘குருகுஹ’ என்ற முத்திரையை வைத்துப் பாடினார்.

 

அற்புதம் 3: எட்டயபுரத்தில்  வறட்சி நிலவிய காலத்தில் அங்கு சென்றார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய’ பெருமக்கள் வரிசையில், மரபில் வந்தவர் அவர். உடனே அமிர்தவர்ஷினி ராகத்தில் அம்பிகை மீது ‘ஆனந்தாமிர்தகர்ஷினி’ என்ற க்ருதியைப் பாடவே மழை ‘பெய்யெனப் பெய்தது’.

 

அற்புதம் 4: தமிழ், சம்ஸ்கிருத மொழிகளில் வேற்றுமைகள் (விபக்தி) எட்டு ஆகும். இவைகளை வைத்துப் பாடினால் விபக்தி கிருதிகள் என்பர். இவ்வகையில் 32 கீர்த்தனைகள் இயற்றினார். ஒரு குறிப்பிட்ட கீர்த்தனையில் அதே வேற்றுமையில் வரிகள் அமையும். அபயாம்பிகை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பிகை, மதுராம்பிகை பெயர்களில் (4 x 8=32) இப்படிப் பாடினார்.

 

அற்புதம் 5: சிவன் மீது பாடிய ‘ஸ்ரீ விஸ்வநாதம்’ என்ற கிருதி சிகரமாக அமைந்தது. 14 ராகங்களைக் கொண்டு சிவனின் பெருமைகளை விளக்குகிறார். ஒரே பாட்டில் 14 ராகம்!

 

இனி அரிய தகவல்கள்

அரிய தகவல் 1: இவர் ஒவ்வொரு பாடலிலும் ‘குருகுஹ’ என்ற முத்திரையோடு பாடலின் ராகத்தையும் இணைத்துக் கூறுகிறார்.

 

தகவல் 2: கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான இவர் செய்த ‘வாதாபி கணபதிம் பஜே’ என்ற ஹம்சத்வனி ராக பாடலைத் தான் முதலில் கற்பிப்பார்கள். இவர் மும்மூர்த்திகளில் ஏனைய இருவரான சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர் ஆகியோர் காலத்தவர். ஷியாமா சாஸ்திரிகளைச் சந்தித்தது உறுதி, ஒருவேளை தியாகராஜரையும் சந்தித்திருக்கலாம்.

 

தகவல் 3: இவர் வாழ்ந்தகாலம் 1775- 1835. பிறந்தது திருவாரூர், சமாதி அடைந்தது எட்டயபுரம். காசியில் சிதம்பரநாத யோகியுடன் வசித்தது 5 ஆண்டுகள். திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சீபுரம், எட்டயபுரத்திலும் பல ஆண்டுகள் வாழ்ந்தார்.

 

தகவல் 4: சங்கீதம், யோக சாஸ்திரம், மந்திரம், உபநிஷதம், சம்ஸ்கிருதம், தெலுங்கு முதலியவற்றில் கரை கண்டவர். சம்ஸ்கிருத சொற்களை அடுக்கு மொழியில் அள்ளித் தெளித்திருக்கிறார். அவைகளில் அழ்ந்த  மந்திர தந்திரங்கள் நிறந்திருக்கின்றன.

 

தகவல் 5: பிள்ளையார் மீது சுமார் 24, சிவன் மீது 100, சக்தி மீது 150, முருகன் மேல் 30, ராமர், கிருஷ்ணர், விஷ்ணு மீது 60, நவக்கிரகங்கள் மீது 9 கிருதிகள் என்று ஷண்மத தத்துவங்களையும் பாடி இருக்கிறார்.

 

தகவல் 6: இவர் அம்பாள் மீது பாடிய பாடல்களை ஸ்ரீசக்ரம், மந்திர, யந்திர, தந்திரங்கள் அறிந்தவர்களே பூரணமாக விளங்கிக் கொள்ள முடியும். பரம ரகசியங்கள் நிறைந்தவை. அதே போல பலன்களும் கொடுக்க வல்லவை. இதில் மிகவும் முக்கியமானது நவாவரணக் கீர்த்தனைகள் 9 ஆகும். இதே போல நவக்கிரஹங்கள் பற்றிய 9 பாடல்களில் கிரஹ பீடைகள் விலக மந்திரபூர்வ பாடல்களைப் பாடியுள்ளார்.

தகவல் 7: இவர் பாடல்களில் வரும் புராண, இதிஹாச நிகழ்ச்சிகள் எண்ணற்றவை. அதிகமாகக் கேள்விப்படாத விஷயங்கள் சில: ஒரு பாடலில் குபேரனின் மகன்கள் நளகூபரனும் ,மணிக்ரீவனும் நாரதர் சாபத்தால் மருத மரங்களாகப் பிறந்து கிருஷ்ணனின் உரலால் சாப விமோசனம் பெற்றதைக் குறிப்பிடுகிறார். இன்னொரு பாடலில் தானம் கொடுத்த பசுவையே மீண்டும் தானம் கொடுத்த ந்ருக மகாராஜன் ஓணாயாகப் பிறந்து கண்ண பெருமானால் முக்தி அடைந்ததைப் பாடுகிறார்.

 

தகவல் 8: இது வேறு ஒரு ஆங்கிலப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்: தீட்சிதர் , காஞ்சிபுரத்தில் உபநிஷத் பிரம்மம் என்ற சாதுவுடன் 4 ஆண்டுக் காலம் வசித்தார். அவர் இயற்றிய ராம அஷ்டபதிக்கு இசை அமைத்தார்.

 

தகவல் 9: இவருடைய சீடர்களில் திருவாரூர் நடன மாது திருவாரூர் கமலமும் ஒருவர். அவர் கோவிலில் ஆடுவதற்காக 2 தெலுங்கு பாடல்களையும் இயற்றினார். அதைப் பார்க்க நாட்டியப் பேரறிஞர்களான தஞசாவுர் நால்வரான பொன்னையா, சின்னையா, வடிவேலு, சிவானந்தம் ஆகிய நால்வரும் வந்தனர்.

 

மேலும் விவரம் வேண்டுவோர், என்.பார்த்தசாரதியின் “ஷண்மதமும் முத்துசுவாமி தீக்ஷிதரும்” என்ற நூலையும் டி.எஸ்.பார்த்தசாரதி எழுதிய   ‘Muthuswami Dikshitar’ ( in the book Great Composers ) என்ற ஆங்கிலக் கட்டுரையையும் படிக்கவும்.

தாயுமானவர் உண்டாக்கிய தமிழ் மழை

இரண்டு தினங்களுக்கு முன் “மழை வர பிரார்த்தனை” என்ற தலைப்பில் மழையைப் பெய்யச் செய்யும் தமிழ் பதிகங்களைப் பிரசுரித்தேன். முத்துசுவாமி தீட்சிதர் அமிர்தவர்ஷினி ராகத்தில் பாடி மழை கொட்டச் செய்ததையும் மேலே படித்தீர்கள். இதே போல தாயுமானவரும் செய்திருக்கிறார்.

தாயுமானவர் ராமேஸ்வரம் சென்றபோது மழையே இல்லை, ஒரே வரட்சி. காய்ந்து கருகிப்போன பூமியில் வசிக்கும் மக்களின் அவல நிலையைக் கண்டு மனம் உருகினார். உடனே இப்படிப் பாடினார்:

 

சைவ சமயம் சமயம் எனில் அச் சமயத்

தெய்வம் பிறை சூடும் தெய்வம் எனில்—ஐவரை வென்

றானந்த இன்பில் அழுந்துவது முத்தி எனில்

வானக்காண் பெய்மின் மழை.

 

இந்த வெண்பாவைப் பாடிய உடனே பெரு மழை கொட்டித் தீர்த்தது. மக்கள் எல்லோரும் தாயுமானவரின் பெருமையை உணர்ந்தனர்.

 

Please Read my earlier posts on music:

1.Rain Miracles: Rain and Fire by Music

2.மழை அற்புதங்கள்

3.இசைத் தமிழ் அதிசயங்கள்

4.சங்கீத ரகசியம்: இளமையில் கல்

5.தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி

 

Contact swami_48@yahoo.com

 

இசைத் தமிழ் அதிசயங்கள்

1).காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திரு க்கிறார்:

“ துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்

உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கை யோடு

தகுணிதம் துந்துபி டாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்து

அத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்பன் இடம்திரு வாலங் காடே”

 

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

 

2).பத்துப் பாட்டில் ஒன்றான மலைபடு கடாம் என்ற நூலில் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களின் பட்டியல் வருகிறது:

திண்வார்விசித்த முழவோடு ஆகுளி

நுண்ணுருக் குற்ற விளங்கடர்ப் பாண்டில்

மின்னிரும் பீலி அணிதழைக் கோட்டொடு

கண்ணிடை வகுத்த களிற்றுயிர்த் தூம்பின்

இளிப்பயிர் இமிரும் குறும்பரத் தூம்பொடு

விளிப்பது கவரும் தீங்குழல் துதைஇ

நடுவுநின் றிசைக்கும் அரிக்குரல் தட்டை

கடிகவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்

கார்க்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப

நேர்சீர் சுருக்கிய காய கலப்பையீர் ( மலைபடு. 1-14)

 

இவ்வரிகளில் முழவு, ஆகுளி, பாண்டில்,  கோடு, தூம்பு, குழல்,  தட்டை, எல்லரி, பதலை முதலிய கருவிகளைக் காண்கிறோம்.

இசைக் கருவிகளை தமிழர்கள்  தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி ,கஞ்சக் கருவி என்று பகுத்து வைத்தனர். குழலும் கோடும் தூம்பும் துளைக் கருவிகள் முழவு, முரசு, பறை, பதலை, துடி போன்றன தோல் கருவிகள். யாழ் என்பது நரம்புக் கருவி. பாண்டில் என்பது கஞ்சக் கருவி. (ஜால்ரா போன்றது).

 

 

3). இப்போது கிடைக்காமல் போன பல இசை நூல்களை உரைகாரர்கள் மேற்கோள் காட்டுவர். அவற்றின் பட்டியல் இதோ:

இறையனார் களவியல் உரை: முதுநாரை, முது குருகு.

அடியார்க்கு நல்லார் உரை: இசை நுணுக்கம், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சபாரதீயம், இந்திரகாளியம்

அரும்பத உரை ஆசிரியர்: பதினாறு படலம்

யாப்பருங்கல விருத்தி உரை: வாய்ப்பியம், குலோத்துங்கன் இசை நூல்

 

4). சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் பேரி யாழ், மகர யாழ் சகோட யாழ் செங்கோட்டு யாழ் ஆகிய  பல வகை  யாழ்களைக் குறிக்கிறார். இவை முறையே 21, 19, 14, 7 நரம்புகளை உடையன.

 

5.)மலைச் சாரல் பகுதியில் தினைப் பயிரைத் திண்ண ஒரு காட்டு யானை வந்தது. அங்குள்ள குறத்தி அழகான குறிஞ்சிப் பண்ணைப் பாடினாள். அதைக் கேட்டு மெய் மறந்து நின்ற யானை பயிரைச் சாப்பிட மறந்து போனதாம்:

ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி

பெருவரை மருங்கில் குறிஞ்சி பாடக்

குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது

படாஅப் பைங்கண் பாடுபெற்று ஒய்யென

மறம்புகல் மழகளிறு உறங்கும் (அகம்.102)

6).பாலை நிலத்தில் வாழும் கள்வர்கள் அவ்வழியாகச் செல்வோரை வழிமறித்துத் தாக்கிக் கொன்றுவிட்டு பொருள்களை எடுத்துக் கொள்வர். அப்பேர்ப்பட்ட கல் நெஞ்சுடையோரும் பாலைப் பண்ணைக் கேட்டுக் கொலைத் தொழிலை மறந்தனராம்:

ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறு தலை பெயர்க்கும் மறுவின் பாலை (பொருந. 21-22)

 

7). புண் பட்ட போர் வீரர்களை பேய்களிடம் இருந்து காப்பாற்ற காஞ்சிப் பண்ணையும், நரியை விரட்ட விளரிப் பண்ணையும் பாடியதாக புறநானூறு கூறுகிறது (பாடல் 281- 291)

 

8).தமிழ் மொழியை இசை, இயல், நாடகத் தமிழ் என்று பிரித்து முத்தமிழ் எனப் பெயரிட்டனர். யாழ், பறை, யாழ் பற்றிய நூல் ஆகியவற்றை தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

தொல்காப்பியர் காலத்தில் துவங்கிய தமிழ் இசை அருணகிரிநாதர் காலத்தில் சிறப்போடுத் திகழ்ந்தது. இதோ திருப்புகழில் இசை:

தகுட தகுதகு தாதக தந்தத்

திகுட திகுதிகு தீதக தொந்தத்

தடுடு டுடுடுடு டாடக டிங்குட்  டியல் தாளம்

தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்

கரடி தமருகம் வீணைகள் பொங்கத்

தடிய ழனவுக மாருதச் சண்டச் சமரேறி………

என்று சிதம்பரத்தில் பாடியது ஆடல்வல்லானை மனதிற்கொண்டுதான் என்பதைச் சொல்லத் தேவை இல்லை.

9). வயலூரில் பாடிய திருப்புகழில் நீண்ட தாளத்துக்குப் பின்

பேரி திமிலை கரடிகை பதலை சலரிதவில்

தமர முரசுகள் குடமுழவொடு துடி

சத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர

 

என்று பாடி இசைக் கருவிகளின் ஒலியை எழுப்புகிறார். இன்னும் பல பாடல்களில் இதே போல தாள ஒலிகளுக்குப் பின்னர் அருமையான பொருள் பொதிந்த வரிகளைச் சேர்த்திருக்கிறார்.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருணகிரி காலத்தில் நிலவிய வாத்தியச் சொற்கள் கூட இன்று வழக்கொழிந்துவிட்டன.

 

10)  பரிபாடல்-12 வையை நதி பற்றிய பாடல்.

ஒத்த குழலின் ஒலி எழ முழவிமிழ்

மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்தளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்

 

என்ற வரிகளில்  மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, முழவு ஆகிய வாத்தியங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

 

11) கொங்கு நாட்டில் ஈரோடு—காங்கயம் பாதையில் அரச்சலூர் என்னும் இடத்தில் மூன்று பழைய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் எழுத்தமைதியைக் கொண்டு இவை இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று மதிப்பிடுகின்றனர். இதை எழுதியவன் தேவன் சாத்தன் என்று மூன்றாம் கல்வெட்டில் பெயர் உள்ளது. இது ஒரு இசைக் கல்வெட்டு. முதல் இரண்டு கல்வெட்டுகளில் இடமிருந்து வலமாகப் படித்தாலும் மேலிருந்து கீழாகப் படித்தாலும் ஒரே மாதிரி உள்ளதைக் காணலாம். இதோ முதல் கல்வெட்டு:

த தை தா தை த

தை தா தே தா தை

தா தே தை தே தா

தை தா தே தா தை

த தை தா தை த

 

முத்தமிழ் வாழ்க! தமிழ் இசை வெல்க!!

Contact London Swaminathan at swami_48@yahoo.com  or swaminathan.santanam@gmail.com

Please read other 425 English and Tamil posts already uploaded by me.

சங்கீத ரகசியம்: இளமையில் கல்

Picture: My Friend Violinist Nagaraju’s son

சங்கீத ரகசியம்: இளமையில் கல்

 

தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமா? சங்கீதம் கற்றுக் கொள்ளுங்கள்.

ஞாபக சக்தி வளர வேண்டுமா? சங்கீதம் கற்றுக் கொள்ளுங்கள்.

வயதான போதும் இளமை திரும்ப வேண்டுமா? சங்கீதம் கற்றுக் கொள்ளுங்கள்.

அதுவும் இளமையில் இசையைக் கற்கவேண்டும்!!!

பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘நியூ சை ன்டிஸ்ட்’ New Scientist பத்திரிக்கை ஒரு நல்ல சுவையான செய்தியை வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்பாக ‘சைன் டிFபிக் அமெரிக்கன்’, ‘நேச்சர்’ Nature, Scientific American ஆகிய பத்திரிக்கைகளிலும் நியுரோ சை ன்டிஸ்ட்’ பத்திரிக்கைகளிலும் இதே கருத்து வெளியாகி இருக்கிறது.

பார்ப்பனச் சிறுவர்களை ஐந்து வயதிலேயே வேதத்தின் ஒரு ஷாகையயும் வேதத்தின் ஆறு அங்கங்களையும் (ஷட்+ அங்கம்= சடங்கு) கற்க அனுப்பியதால், அவர்கள் பெரிய அறிவாளிகளாக விளங்கினர். நீண்ட ஆயுளுடனும் நல்ல ஞாபக சக்தியுடனும் விளங்கினர். இதே முறையை சங்கீதப் பயிற்சிக்கும் பின்பற்றினர். வேதமும் இசையை அடிப்படையாக உடையது. இரண்டும் பய பக்தி கலந்த, மரியாதை மிக்க குரு குல வாச முறையில் பயிலப் பட்டன.

பள்ளிக்கூடத்தில் சேர வருவோருக்கு கணிதமும் சங்கீதமும் தெரிந்திருக்க வேண்டும் என்று கிரேக்க அறிஞர் பிளாட்டோ வலியுறுத்தினார்.

இசை என்பது காதோடு மட்டும் நிற்பதல்ல. இசையின் நுண்ணலைகள் நம்முள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை படைத்ததவை.

முதலில் புதிய செய்தியைப் பார்ப்போம்:

சங்கீதத்தில் புகழ்பெற்ற, திறமைமிக்க 36 பேர்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களில் பாதிப்பேர் ஏழு வயதுக்கு முன்னரே இசையைக் கற்கத் துவங்கினர். மீதி பாதிப்பேர் ஏழு வயதுக்குப் பின்னர் இசையைக் கற்கத் துவங்கினர். எல்லோரையும் எம்.ஆர். ஐ. ஸ்கேன் (Magnetic Resonance Imaging Scan) செய்து பார்த்தனர். ஒரு அதிசயமான உண்மை அம்பலத்துக்கு வந்தது.

மனிதர்களின் மூளையில் இரண்டு பிரிவுகள் உள்ளன. இதை இணைக்கும் வெள்ளைத் திசுவுக்கு கார்ப்பஸ் கல்லோசம் என்று பெயர். நாம் ரேடியோ அல்லது கம்ப்யூட்டர் ஆகியவற்றைப் பிரித்துப் பார்த்தால் பினபக்கத்தில் ஏராளமான இணைப்புகளைப் பார்க்கலாம். அது போல முளையின் இரண்டு பகுதிகளை இணக்கும் பகுதியே கார்பஸ் கல்லோசம். யார் சின்ன வயதிலேயே இசையைக் கற்கச் சென்றார்களோ அவர்களுக்கு இந்தப் பகுதி நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கிறது. ஏழு வயதுக்குப் பின்னர் பயின்றவர்களுக்கு இசைப் பயிற்சி இல்லாதவர்களின் அளவுக்கு இந்த வெண்ணிறப் பகுதி இருக்கிறது.

இந்த வெண்ணிறப் பகுதியின் வளர்ச்சி எதைக் காட்டுகிறது? இடது கையும் வலது கையும் ஒருங்கிணைந்து செயல்படுவதைக் காட்டுகிறது. சங்கீதம் கற்பவர்கள் ஒரு கருவியைக் கற்கவோ கைகளால் தாளம் போடவோ இது மிகவும் அவசியம்

இதை ஜெர்மனியில் லைப்சிக் நகரில் இருக்கும் மூளை, மனித அறிவு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ளது. இதை கிறிஸ்டோபர் ஸ்டீல்,

( மாக்ஸ் பிளன்க் நிறுவனம் Max Planck Institute for Human Cognitive and Brain Sciences, Leipzig, Germany) அறிவித்தார். இளமையில் சங்கீதம் கற்போர் மற்றவர்களை விஞ்சிவிடுவர் என்பது இந்த ஆய்வின் துணிபு.

நம் முன்னோர்கள் “இளமையில் கல்” என்றும் “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்றும் சொன்னது எவ்வளவு உண்மை?

****

இசையும் செயல்பாடும்

இதோ இன்னொரு செய்தி:

வெளிநாடுகளில் இருந்து மூன்று பிரபல விஞ்ஞானப் பத்திரிக்கைகள் வருகின்றன.: New Scientist, Nature, Scientific American. இந்த மூன்று பத்திரிக்கைகளில் வெளியாகும் செய்திகளுக்கு தனி மதிப்பு உண்டு.

பாட்டுக் கேட்டாலே போதும். மூளை வளர்ச்சி பெறும் என்று இந்த செய்தி கூறுகிறது! சங்கீதம் கற்போருக்கு பல மொழிகளைக் கற்கும் திறன் அதிகரிக்கும் என்றும் பெரும் இரைச்சலில் இருந்து சொற்களைப் பிரித்தெடுக்கும் சக்தி அதிகம் என்றும் இந்த ஆய்வுகள் காட்டின. 45 பேரைத் தேர்ந்தெடுத்து  பல உரையாடல்களை பயங்கர இரைச்சலுக்கு இடையே ஒலிபரப்பினர். சங்கீதம் கற்றோர் மற்றவர்களை விட உரையாடல்களை நன்கு கேட்க முடிந்தது.  Journal of Neuroscience இந்தச் செய்தியை வெளியிட்டது.

பிரபல இசை மேதை மோசார்ட்டின் இசையை ரசிப்போருக்கு சில விஷயங்களில் அறிவும் திறமையும் கூடுதலாக இருப்பதாக 1993ல் நேச்சர் பத்திரிக்கை ஒரு ஆய்வை வெளியிட்டது. இளம் வயதில் சிறிது இசைப் பயிற்சி பெற்றாலும் வயதான பின்னரும் அவர்களின் கேள்வி ஞானம் சிறப்பாக இருக்கிறது என்று நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) 2012ல் இதை உறுதி செய்துள்ளது. (A Little Music Training Goes a Long Way: Practicing Music for Only Few Years in Childhood Helps Improve Adult Brain)

 

வயது ஆக ஆக ஆக மூளையின் செயல்பாடு குறையும் என்பது பொது விதி. ஆனால் சங்கீதம் கற்றுத் தொடர்ந்து பயிற்சி செய்வோரிடம் இந்த தேய்மானம் அந்த வேகத்தில் இல்லை. ஞாபக சக்தித் தேர்விலும், வேகமாக எதையும் புரிந்து கொள்ளும் தேர்விலும் சங்கீதக்காரர்கள் அதிகம் மதிப்பெண் பெறுகிறார்கள் (ஆதாரம்: 2012 July issue of Frontiers in Human Neuroscience).

*****

இதை எழுதும்போது, எனக்கு 1960களில் என் பெரிய அண்ணன் செய்த ஒரு செயல் நினைவுக்கு வருகிறது. மதியம் ஒலிபரப்பாகும் ‘விவித் பாரதி’ ஹிந்தி பாட்டுகளைக் கேட்டுகொண்டேதான் பாடங்களைப் படிப்பான். அவன் ஏமாற்றுவதாக அம்மாவும் சகோதரர்களும் அவனைக் கேலி செய்வோம். இப்போது நிறைய பேர் காதில் ‘இயர் போனை’ வைத்து பாட்டுக் கேட்டுக்கொண்டு பாடப் புத்தகங்களைப் படிப்பதைப் பார்க்கிறோம். இதிலும் பலன் உண்டு என்றே சொல்லத் தோன்றுகிறது!

மோட்சார்ட் இசையைக் கேட்ட பின்னர் புத்திசாலித்தன (ஐ.க்யூ) சோதனைய்ல் மானவர்கள் அதிகம் மதிப்பெண் பெற்றதாக முதலில் கலிபோர்னியா பல்கலைகழகம் செய்தி வெளியிட்டது ஆனால் பின்னர் மற்ற பல்கலைகழகங்கள் இதே சோதனையைச் செய்து பார்த்தபோது அந்தப் பல்ன்கள் கிடைக்கவில்லை . ஆகவே இந்த சோதனை ஒத்துக்கொள்ளப் படவில்லை.

*****

இசையும் பிராணிகளும்

25/05/1983ல் ஹிந்து நாளேடு வெளியிட்ட செய்தி என் கோப்பில் இருக்கிறது. அதில் பக்திப் பாடல்கலைக் கேட்ட பசு மாடுகள் அதிகம் பால் சுரந்ததாக ஆராய்ச்சி முடிவு வெளியானது. இன்று வரை அது நடக்கிறதா என்று தெரியவில்லை. அன்னமாசார்யா கீர்த்தனைகள், வெங்கடேஸ்வர சுப்ரபாதம் ஆகியன பாடப்பட்டபோது பால் உற்பத்தி அதிகரித்தது.

சங்க இலக்கியத்தில் தினைப்புனத்தை மேயவந்த யானை கூட இசைக்குக் கட்டுபட்டு நின்ற செய்தி உளது. பிருந்தாவனத்தில் ஆநிரைகள் கண்ணனின் புல்லாங்குழலுக்குக் கட்டுப்பட்டு மெய்மறந்து நின்றதையும் நினைவு கூறுவோமாக.

Contact London Swaminathan at swami_48@yahoo.com

தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்- மஹான் தியாகராஜரின் பாடல்களிலிருந்து)

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்று எங்கள் சுப்ரமணிய பாரதி சொன்னது உங்கள் கீர்த்தனைகளைக் கேட்டுத்தானோ!  13 வயதில் நீவீர் பாடிய முதல் பாட்டு என்ன?

நமோ நமோ  ராகவாய

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரே, 96 கோடி தடவை  ராம நாமம் ஜபித்தீர், எழுதினீர்.  “ஓ ராம, நீ நாமமு ஏமி ருசிரா ,ஸ்ரீ ராம, நீ நாமமு எந்த ருசிரா”

என்று பத்ராசலம் ராமதாசர் பாடினார். நீங்கள் ராமனை எப்படிப் பாடினீர்கள்?

மேலு மேலு ராம நாம சுகமு ஈதரலோ

நிண்டு தாஹமு கொன்ன மனுஜுலகு நீருத்ராஹின சுகம் புகண்டே

சண்ட தாரித்ர மனுஜுலகு தன பாந்தமு அப்பின——–

( பொருள்: ராம, இந்தப் பூமியில் உன் நாமமே சுகம் தரும். தாகத்தால் தவிக்கும் மனிதனுக்கு தண்ணீர் கிடைத்ததைவிட, ஏழைக்குப் பணம் கிடைத்ததைவிட, வெப்பம் தாங்காதவனுக்கு குளிர்ந்த குளம் கிடைத்ததைவிட, பயத்தால் நடுங்குபவனுக்கு துணிவு கிடைத்ததைவிட, தீராப் பசியுடையவனுக்கு பாயசத்துடன் அறுசுவை விருந்து கிடைத்ததைவிட———– ராமா, உன் நாமமே சுகம் தரும்)

அருமையான பாட்டு. ஆழமான பொருட்சுவை. உங்களைத் திருடர்கள் தாக்கி வழிமறித்த போது ராம லெட்சுமணனே வந்து காப்பாற்றினார்கள். என்ன பாட்டு பாடியவுடன் அவர்கள் வந்தார்கள்?

முந்து வெனுக இரு பக்கல தோடை முரகர ஹர ராரா (தர்பார் ராகத்தில்)

(பொருள்: முர, கரகளை வதம் செய்தோனே, எனக்கு இருபக்கத்திலும் துணையாக வாரும் ஐயா—-)

ஒரு முறை ஒரு கிழ தம்பதியர் வந்து உம் கையில் காசையும் கொடுத்துவிட்டு ராமனும் சீதையுமாய் மறைந்தார்களே.என்ன பாடினீர்?

பவனுத நா ஹ்ருதயமுன (மோகன ராகத்தில்)

திருவாரூரில் அவதரித்த த்யாகப்ரம்மமே, உமது தந்தை ராமப்ரம்மத்தின் ராமாயண கதாகாலச்சேபத்தை கேட்டுத்தான் ராம பக்தி ஏற்பட்டிருக்க வேண்டும்.உமது குரு ராமக்ருஷ்ணானந்தா நாரத மந்திரம் உபதேசித்தார். ராமன் மட்டுமின்றி சிவன் முதலியோர் மீதும் கிருதிகள் பாடினீரா?

சிவ சிவ சிவ யனராதா,  பவ பய பாதலனண சுகோராதா (பந்துவராளி ராகம்) பொருள்: சிவ சிவ சிவ என்று சொல்லக் கூடாதா? உங்கள் பிறவி என்னும் துயரைப் போகக்கூடதா?)

உமது சங்கீத குரு வேங்கடரமணய்யா உமது கிருதிகளை வியந்து அவருடைய பதக்கங்களையே எடுத்து உம் மீது சூட்ட அதை பெருந்தன்மையுடன் அவரது மகள் கல்யாணத்தில் கொடுத்தீர்கள்.

சரபோஜி மன்னன் அழைத்தபோது போக மறுத்து “பணம் சுகம் தருமா, ராமா உன் முன்னிலையில் இருப்பது சுகமா” என்று பாடினீரே, அந்தப் பாட்டைக் கொஞ்சம்………

நிதி சால சுகமா ராமுனி சந்நிதி சேவ சுகமா (கல்யாணி ராகம்)

இதனால் உங்கள் தமையனார் கோபத்தில் நீர் பூஜித்த விக்ரகங்களை ஆற்றில் போட்டார். அதையும் கண்டுபிடித்தீர். 2000க்கும் அதிகமான கிருதிகளை எழுதினீர், 200க்கும் அதிகமான ராகங்களைப் பயன் படுத்தினீர்கள். எங்களுக்குக் கிடைத்ததோ 700 கிருதிகள்தான்.உங்கள் தமையன் செய்த அநியாயங்களை ராமனிடம் முறையிட்டீராமே!

அநியாயமு சேயகுரா ராம நன்னன்யுனிகா……..

(ராமா, எனக்கு அநீதி இழைக்காதே, என்னை வேற்று மனிதனாகப் பார்க்காதே………..என் அண்ணன் தரும் தொல்லைகள் தாங்கவில்லை.)

உங்களுக்குக் கோபம் அதிகமாமே. ஒருமுறை உங்கள் மனைவி இதைச் சுட்டிக் காட்டியவுடன் கோபத்தின் தீமையை உணர்ந்து ஒரு பாடல்…….

சாந்தமுலேக சவுக்கியமுலேது —–(சாந்த குணம் இல்லாவிடில் சௌக்கியமும் இல்லை)

நாதத்தின் தோற்றம், சப்தஸ்நரங்களின் பிறப்பு, ராகங்களின் குணம் பற்றியே 15 கிருதிகள் எழுதினீர். அவைகளில்  சில……

சோபில்லு ஸப்தஸ்வர ஸுந்தரலு பஜிம்பவே

நாபி, ஹ்ருத், கண்ட, ரசன நாச ஆதுலயந்து

சோபில்லு ஸப்தஸ்வர ஸுந்தரலு பஜிம்பவே

(பொருள்: ஏழு ஸ்வரங்கள் எனப்படும் சுந்தரர்களை வழிபடுவாய். கொப்பூழ், இதயம், தொண்டை, நாக்கு, மூக்கு ஆகியவற்றில் திகழும் சுந்தரர்களை வழிபடுவாய். ருக் சாம முதலிய வேதங்களிலும் காயத்ரி மந்திரத்திலும்,வானோர், அந்தணர் உள்ளங்களிலும், தியாகராஜனின் கீர்த்தனைகளிலும் நடமாடும் சப்தஸ்வரங்களை வழிபடு).

வெறும் வாய்ப்பாட்டு மட்டும் இறைவனிடம் அழைத்துச் செல்லுமா?

சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்கமு கலதே

ப்ருங்கி, நடேச, சமீரஜ, கடஜ, மதங்க நாரத ஆதுலு உபாசிஞ்சே

சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்கமு கலதே

(பொருள்: பக்தி இல்லாமல் பாடும் இசை, சன்மார்க்கத்துக்கு இட்டுச் செல்லாது. ப்ருங்கி முனிவர், நடேசன், வாயு மைந்தன், அகத்தியன், மதங்கர், நாரதர் முதலியோரால் உபாசிக்கப்பட்ட இசை ஞானம் (அவர்களைப் போல பக்தியுடன் பயிலப்பட வேண்டும்) பக்தி இலாவிடில் நல் வழிக்கு கொண்டுசெல்லாது.)

18 வயதில் பார்வதியையும் அவர் 5 ஆண்டுகளில் இறக்கவே அவர் தங்கை கமலாம்பாவையும் கல்யாணம் செய்தீர். ஒரு மகளை ஈன்றெடுத்தீர். நீங்கள் மூன்று நாடகங்கள் எழுதினீர்கள், அவை யாவை?

பிரஹலாத பக்தி விஜயம், நவ்க சரித்திரம், சீதாராம விஜயம்

புத்தூரில் கோவில் கிணற்றில் ஒருநல்ல மனிதர் தவறி விழுந்து இறந்தபோது என்ன பாட்டு பாடி அவரை உயிர்ப்பித்தீர்கள்?

நா ஜீவாதார நாநோமு பலமா

ராஜீவ லோசன ராஜராஜ சிரோமணி

நாஜீபு ப்ரகாசமா, நா நாசிகா பரிமளா

நா ஜப வர்ண ரூபமா, நாது பூஜாஸீமமா (பிலஹரி ராகம்)

(பொருள்: என் ஜீவனுக்கு ஆதாரமே, என் நோன்புகளின் பலனே, தாமரைக் கண்ணனே, ராஜ ராஜனே, என் கண்களின் ஒளியும் நீயே, மூக்கில் நறுமணமும் நீயே, என் ஜபங்களின் வடிவும் நீயே, என் பூஜை மலரும் நீயே)

திருவையாயாற்றில் சமாதி அடையும் முதல் நாளன்று பிரம்மாநந்தாவிடம்  சந்யாசம் பெற்றீர். இறுதி நாள் நெருங்கிவிட்டதை அதற்கு சில நாட்களுக்கு  முன் கனவில் கண்டு பாடிவிட்டீரே, அது என்ன பாட்டு?

கிரிபை நெல (சகானா ராகம்)

திருவையாற்றிலுள்ள உங்கள் சமாதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆராதனையில் பாடப்படும் (ஐந்து) பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் எவை?

நாட்டை ராகத்தில்- ஜகதாநந்த காரக

ஆரபி ராகத்தில் – சாதிஞ்செனே, ஓ மனசா

கௌளை ராகத்தில் – துடு குகல நன்னே தொர

வராளி ராகத்தில் – கன கன ருசிரா

ஸ்ரீ ராகத்தில் –எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கு வந்தனமுலு

கர்நாடக சங்கீத பிதாமஹர் புரந்தர தாசர் தனது பாடல்களில் புரந்தர விட்டல என்றும் சியாமா சாஸ்திரிகள் சியாம கிருஷ்ண என்றும் முத்து சுவாமி தீட்சிதர் குரு குஹ என்றும் முத்திரை வைத்து பாட்டு எட்டுக் கட்டினர். உங்கள் முத்திரை என்னவோ?

பவமான சுதுடுபட்டு, பாதார விந்தமுலகு

நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்களம்

ப்ர்ஹ்லாத நரதாதி பத்லு பொகடி ஸண்டு

ராஜீவ நயன தியாகராஜாதி வினுதனமன

(தியாகராஜரின் சுந்தரத் தெலுங்கு வாழ்க, எங்கும் மங்களம் பொங்குக)

Rain Miracles : Rain by Fire and Music!

By S Swaminathan

Donkey wedding, Karnataka, 2010

Frog Wedding, West Bengal, 2009

Hindus, knowing the importance of rain, have been singing about it from the Vedic days “When the rains fail, the strong victimise the weak, for the waters, they are the law”, says the Satapata Brahmana. The great Tamil poet Tiruvalluvar compared rains to Amrita/ambrosia. He continues “if rains fail charities and devotional practices will not be observed. Festivals and daily worship of the gods will cease”. “For nine months, the sky drank the ocean’s water, sucking it up through the sun’s rays, and now gives birth to a liquid offspring, the elixir of life” (Valmiki Ramayana 4-27-3).

Rain by Havan, Rain by Women, Rain by Music, Rain by Rishis, Rain by King, Rain by Venus, Rain by Donkey and Frog weddings; Read about the strange Hindu practises.

“If there is one righteous person is on earth, rain will fall for that person’s sake” says another Tamil poem.

Rains are crucial in India, as the majority of the country’s population of over a billion depend on agriculture. When it doesn’t rain for a long time, Hindus perform strange things to bring back the rains.

1. Rain by Havan (Fire ceremony):

Hindus believed that the fire ceremony will make the heavens open. So they organised special types of yagnas/havans glorifying Varuna, the god of water sources. When there is a scarcity of rain priests stand in water and recite certain mantras praying to Varuna. It is called Varuna Japam. Twigs from certain trees are used with butter for this purpose. Hindus used mango or peepal twigs for the yagnas, along with butter.

2. Rain by Chaste Women:

Another strange belief is that chaste women can control and command nature. Tamil poet Tiruvaluvar said, ”A virtuous woman who knows no other god but her husband may command the very clouds to pour forth rain and they will do so”. (Ref. Tirukkural 55)   We should not take it literally. If women are chaste, god will be pleased to send the rains to that place. Discipline in society was valued more than anything else.

3. Rain by Music

Hindus believed that particular a raaga (key) called Malhar will bring rains. There is a very interesting anecdote about one of the three great composers of Carnatic music Sri Muthuswami Dikshitar (1775-1835). Dikshitar, Thyagaraja and Shyama Sastry are regarded as the Trinity of Carnatic Music. Dikshitar was famous for his Sanskrit compositions. Once he travelled to a place called Ettayapuram in Tamil Nadu. Drought had caused havoc in the region. He invoked the Goddess Ambika by composing a song in the raga Amritavarshini. Immediately after he sang it there was a downpour bringing relief to the people of the region.

4. Rain by Rishis: Deer Horn Saint/Rishyasringa:

Rishyasringa was the son of Vibandaka and celestial nymph Urvasi. When the region of Angadesa was affected by a serious drought King Romapada was advised to invite Rishyasringa to bring rain to his kingdom. The king and his ministry worked out a curious plan. They sent beautiful girls to dance in front of him when his father was away. Rishyasringa who hadn’t seen a woman ever before became transfixed by them and followed them to Angadesa. The rain followed. This is not only a story of rain but also a story of human psychology. Sex is a natural instinct and nothing unusual about it. Ancient Hindus believed that there will be three rains every month if truth prevails in all aspects of life.

5. Rain by King’s Just Rule:

Tamil and Sanskrit literature say that the rains will fail a country where an unjust king rules. If the king is good, there will be plenty of rain and natural forces will abide by the king. Kalidasa and Sangam Tamil literature say that a deer and a tiger will drink water from the same source, forgetting their natural enmity in a place where there is rule of law. If the rains failed, people blamed the king.

6. Rain by Planet Venus:

Planet Venus, known as Shukra in Sanskrit (Velli in Tamil) is associated with rain. Its position in the heavens cancels the negative effects of other planets with regard to rain. So they keenly watched the position of Venus to forecast rain. The Mayans and other Mesoamerican cultures also gave much importance to Venus and linked it with the rains and the production of corn. Tamil Sangam literature has several references to Venus and rain. Venus appears in the morning for some time and evening for some time of the year. Tamils believed that Venus portends the prospect of rain for the year. (ref. Pathitrup. 24). In Purananuru, another anthology of 400 Tamil verses, all the verses about Venus are arranged together: 383, 384, 385, 386, 387, 388, 389 and 390. This arrangement of all Venus verses together shows us that they cared deeply about the position of Venus 2000 years ago. All the poets linked Venus with either rain or drought.

Tamil book Pattinappalai (lines 1 and 2) says that there will be drought when Venus moves southward. This is confirmed by three more poets (puram 117, 338, Pathitru.24)

7. Rain by Donkey Wedding and Frog Wedding

The village folk believe that a wedding of donkeys or frogs make the sky god happy enough to send rain. In recent years farmers of Patalur of Karnataka married off two donkeys. The donkeys entered wedlock in the presence of a priest. Like human beings the donkey bride and bridegroom were taken in a procession with colourful new wedding dress. The entire village wore a festive look on the wedding day of the VIPs! City people did not lag behind in such rituals. The people of Bangalore, the Silicon Valley of India, also performed a donkey wedding. Two donkeys, Ganga and Varuna, tied the knot in front of 100 guests. The donkeys wagged their tails happily.

Villagers in West Bengal caught and named two frogs Rama and Sita and performed their marriage. The frogs’ heads were smeared with Kunkum and 3000 people were fed in Madhya Baragari village. The frogs went in to the river for their honey moon! The marriage of frogs for rain is a local custom followed in Assam and Bangladesh as well.

8. Proverbs about Rain:

Apart from all of these beliefs there are lot of proverbs about rain. One of them is that if ants carry their eggs and go to raised areas rain will follow. If cuckoos sing and peacocks dance then there will be rain. Peacocks spread their feathers like fans when they see dark clouds. Hindus are keen observers of nature and used their knowledge for farming. If Venus is not visible (asthamana), there won’t be rain. When Venus is in Aquarius there will be plenty of rain and flooding. Venus’ northward journey will bring the rain according to Hindu astrology.

9. Cloud seeding

Scientists use Cloud Seeding to make rain. They place dry ice (frozen carbon dioxide, silver iodide or liquid propane in the clouds to make it precipitate. Havan and Yagnas (Hindu Fire Ceremonies) come very close to this planting of frozen carbon dioxide in the clouds. More research is required to prove it.

**************************