Dynasties with Plant Names! Dynasty in Shiva’s Bilva Tree Name!

Bili_Tree_CM_Farm_Saldi

Research paper written by london swaminathan

research article No. 1602; Dated 25th January 2015.

 

Hindu wonders in a Muslim Country, Flowers in Tamil culture and Sanskrit Inscriptions in Strange places have listed lot of wonders in Indonesia and India’s obsession with flowers. Now I have come across another surprise in Indonesia, the largest Muslim country in the world. They had a kingdom named after Shiva’s favourite tree Vilva/Bilva.

 

Links

Hindu wonders in a Muslim country

https://tamilandvedas.com/2012/05/12/hindu-wonders-in-a-muslim-country/

Flowers in Tamil Culture

https://tamilandvedas.com/2012/08/25/flowers-in-tamil-culture/

 

Sanskrit Inscriptions in Strange places

https://tamilandvedas.com/2012/03/16/ancient-sanskrit-inscriptions-in-strange-places/

 

The Sugarcane Mystery: Indus Valley and Ikshwaku Dynasty

http://swamiindology.blogspot.co.uk/2011/11/sugarcane-mystery-indus-valley-and.html


781px-Majapahit_Empire.svg

Bilva ( in Tamil Vilvam; Holy Bael in English) tree belongs to Rutaceae family and the botanical name of the tree is Aegle marmalos. The leaves are offered to Lord Shiva and the fruits are used as medicine. The tree controls 21 types of Bacteria. In Nepal girls are ritually married to the Bilva fruits. The tree is called Maja in Indonesia. Majapahit meant bitter Maja. German orientalist Berthold Laufer found out why the empire that ruled Jawa for 200 years from 1293 was called Majapahit. It was named after the Maja tree.

 

It is common to name kingdoms after plants in India. The first dynasty of India was Ikshwaku dynasty. Ikshu is nothing but sugarcane. he was the one who taught sugarcane cultivation. Sugar is discovered in Indus valley Civilization and Ikshwaku must have ruled India before the Indus Valley civilization.

 

Please read my research paper;links are given above.

 

Following the Ikshwakus,  Pallavas named their kingdom after a creeper or twigs (pallavas), Kadamba dynasty after Kadamba trees. Sunga dynasty is also said to have plant’s name

 

Naming a dynasty after a plant is typical Hindu custom. Hindus are so obsessed with plants, they named the continents of the earth after plants. They named India that is Bharat as Jambudweepa and other continents as  Kusa dweepa, Shalmali dweepa, Plaksha dweepa, Sakah dweepa. Jambu, Kusa, Shalmali and Ska are plants.Tamils followed it and named their land divisions after local plants such as Kurinji, Neithal, Marutham,Mullai and Palai.

 

Tamils went one step ahead and wore flowers even when they went to war. They gave flower names to different stages in war. Both men and women wore flowers.

 

Majapahits of Indonesia used Saka era like Indian kings. The first King was Jayawardhana and his wives names were Tribhuvaneswari, Prajnaparamita, Naredraduhita and Gayathri Raja Patni. Since South East Asian countries had Hindu kings from first century CE, it was not a suprisse. Tamil King Sri Mara ( Tiru Mara in Tamil, a Pandya king) ruled Vietnam in the second century CE.

majapahit_kings_genealogy

Please read my article Tamil King who ruled Vietnam

http://swamiindology.blogspot.co.uk/2011/09/pandya-king-who-ruled-vietnam.html

Names of dynasties are interesting. There were Maurya named after peacock (Mayura), Snake (Naga) and Mushika ( Mouse) dynasties in India.

 

additional references:

 

Cadamba tree= Neolamarckia cadamba

Sugarcane= Saccharum officinarum

Holy Bael/Bilva = Aegle marmalos

Jambu dweepa= Blackberry Tree

Plaksha dweepa = Ficus tree

Pushkra dweepa = Maple tree

Kusa dweepa = Dharba grass

Shalmali dweepa = Bombax ceiba or malabaricum

 

Pictures are taken from Wikipedia and other sites.Thanks.

 

swami_48@yahoo.com

இந்தோனேஷியாவில் மேலும் ஒரு அதிசயம்!

Bili_Tree_CM_Farm_Saldi

Bilva Tree

Written by london swaminathan

Research article: 1601: Dated 25 January 2015

உலகிலேயே மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தோனேஷியாவில் ஏராளமான இந்து மத அதிசயங்கள் உள்ளன. முஸ்லீம் நாட்டில் இந்து அதிசயங்கள் என்ற தலைப்பிலும் வினோதமான இடங்களில் சம்ஸ்கிருத கல்வெட்டுகள் என்ற தலைப்பிலும் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினேன். அதில் எல்லா அதிசயங்களையும் பட்டியல் இட்டு விட்டேன. அவ்வப்பொழுது, பாலி தீவு, போரோபுதூர் போன்ற இடங்களுக்குச் சென்று வருவோர் ஏதோ தாங்கள் புதிதாகக்  கண்டு பிடித்தது போல எல்லவற்றையும் மீண்டும் ஒரு முறை   எழுதுவர். பலமுறை படித்தாலும் தவறில்லை. நிற்க.

இப்போது மேலும் ஒரு அதிசயத் தகவல் தெரிய வந்துள்ளது. வில்வ மரத்தின் பெயரில் அங்கே ஒரு ராஜ வம்சம் ஆட்சி செய்த தகவல் அது. மஜாபஹித் என்று அங்கே ஒரு ராஜ வம்சம் ஆண்டது. மஜாபஹித் என்றால் வில்வ மரம் என்று பொருள்.

வில்வ பத்திரம் (இலை) , சிவ பெருமானுக்கு உரியது. அதனால் பூஜை செய்வது மிக மிக விசேஷமானது. மேலும் வில்வ மரம் பல இடங்களில் தல மரமாகவும் உள்ளது. இதற்கு மருத்துவ குணங்களும் உண்டு. இருபதுக்கும் மேலான பாக்டீரியாக்களைக் கொன்றுவிடும் சக்தி இம் மரத்துக்கு இருப்பது அண்மைக் கால ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. நேபாலத்தில் வசிக்கும் நீவார் இன மக்கள் கன்னிப் பெண்களை விலவம் பழத்துக்குக் கல்யாணம் செய்துவைக்கும் சம்பிரதாயம் இன்றும் உளது.

781px-Majapahit_Empire.svg

மரங்கள், கொடிகள் பெயர்களில் ஆட்சி செய்வது இந்தியாவில் புதிதல்ல. இந்திய வம்சங்களிலேயே மிகவும் பழமையானது இட்சுவாகு வம்சம்.இக்ஷ்சு என்றால் கரும்பு என்று பொருள். இதுதான் முதல் தாவரப் பெயரில் உண்டான வம்சம்.

இதேபோல பல்லவ (இளம் துளிர் அல்லது கொடி), சுங்க, கடம்ப வம்சங்கள் மரங்களின் பெயர்களில் அமைந்துள்ளன. இந்தப் பூமியில் உள்ள எல்லாக் கண்டங்களையும் முதலில் இந்துக்கள் ஜம்பூ (நாவலந்தீவு), சால்மலி (இலவ மரம்), குச (தர்ப்பைப் புல்), ப்லக்ஷ (அரச மரம்) என்று மரம், செடி, கொடிகளின் பெயர்களில் பிரித்தனர்.

இதைப் பார்த்து தமிழர்களும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று செடி,கொடிகளில் பெயரில் நிலத்தைப் பாகுபாடு செய்தனர். தமிழர்கள் போருக்குச் செல்லும்போது கூட பூக்களை  அணிந்து சென்றனர். சேர, சோழ பாண்டியர்கள் ஒவ்வொரு மரத்தின் பூக்களை மாலையாகத் தொடுத்து அணிந்தனர்.

இதுதவிர ஒவ்வொரு தமிழ் மன்னரும் காவல் மரம் என்று ஊருக்கு வெளியே ஒரு மரத்தை அரசாங்கச் சின்னமாக வைத்து அதை பய பக்தியுடன் போற்றி வணங்கினர். அதாவது மரங்கள், செடி கொடிகள், பூக்கள் முதலியன உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தமிழ் இந்துக்கள் இடையே முக்கியத்துவம் பெற்றன. இயற்கையோடு இயைந்த இந்துக்களின்  வாழ்வுதான் இதற்குக் காரணம்.

இந்தோனேஷியாவில் வில்வ மரங்கள், ருத்ராக்ஷ மரங்கள், கற்பூர மரங்கள் சாம்பிராணி மரங்கள் ஆகியன உண்டு.

 

ஜெர்மானிய அறிஞர் பெர்தோல்ட் லோபர் (German Orientalist Bethold Laufer  ) என்பவர் — மஜாபஹித் என்பது கசப்பான மஜ  (வில்வ)  மரம் என்று பொருள்படும் என்றார்.அதன் மற்ற பெயர் வில்வ என்பதும் அவர்களுக்குத் தெரியும் இதன் தாவர இயல் பெயர் Aegle marmelos (another name Wilwa tikta)

 

மேலும் மஜபஹித் இந்திய ஆண்டான `சக வருஷம்` என்பதையே பயன்படுத்தினர். 1293 முதல் 200 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். முதல் மன்னரின் பெயர் ஜயவர்த்தன. அவனுடைய மஹாராணிகளின் பெயர்கள்: த்ரிபுவனேஸ்வரி, நரேந்திரதுஹித, ப்ரக்ஞாபரமித, காயத்ரி ராஜபத்னி.

கடம்ப மரத்தை அறியாதோர் இலர். மதுரை  நகரம், ஒரு காலத்தில் கடம்ப வனக் காடாக இருந்தது. இந்த மரத்தின் பெயரில் கடம்ப வம்சம் உருவானது.

majapahit_kings_genealogy

இக்ஷ்வாகு வம்ச மன்னன் கரும்புப் பயிரை முதல் முதலில் பயிரிட்டு வெல்லம், சீனி செய்யும் முறையை கற்பித்தான். சிந்து சமவெளியிலும் சீனி காணப்படுவதால், இக்ஷ்வாகு அதற்கும் முன்னால்  வாழ்ந்திருக்க வேண்டும். இவனை ஆய் குல மன்னர்களின் முதல்வனாகக் கருதலாம். கரும்பைக் கொண்டுவந்தவன் வழிவந்தவன் என்று அவ்வையார்,  புற நானூற்றில் பாடுகிறார்.

References to Plants:

 

Cadamba tree= Neolamarckia cadamba

Sugarcane= Saccharum officinarum

Holy Bael/Bilva = Aegle marmalos

Jambu dweepa= Blackberry Tree

Plaksha dweepa = Ficus tree

Pushkra dweepa = Maple tree

Kusa dweepa = Dharba grass

Shalmali dweepa = Bombax ceiba or malabaricum

Please read my articles

Tamil King who ruled Vietnam

http://swamiindology.blogspot.co.uk/2011/09/pandya-king-who-ruled-vietnam.html

Hindu wonders in a Muslim country

https://tamilandvedas.com/2012/05/12/hindu-wonders-in-a-muslim-country/

Flowers in Tamil Culture

https://tamilandvedas.com/2012/08/25/flowers-in-tamil-culture/

 

Sanskrit Inscriptions in Strange places

https://tamilandvedas.com/2012/03/16/ancient-sanskrit-inscriptions-in-strange-places/

 

The Sugarcane Mystery: Indus Valley and Ikshwaku Dynasty

http://swamiindology.blogspot.co.uk/2011/11/sugarcane-mystery-indus-valley-and.html

 

இக்கட்டுரைகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன.


-சுபம்-

Pictures are taken from Wikipedia and other sites;thanks.

Plants in Mahavamsa

mahabodhi
Mahabodhi Tree in Bodha Gaya

Research paper by London Swaminathan
Post No.1325; Dated 3rd October 2014.

This article is part of my series on Mahavamsa, Chronicle of Sri Lanka.

Studying about the plants mentioned in ancient literature helps us to understand the interaction between human beings and the plants. Mostly we read about the love and affection towards plants, respect and worship of sacred trees. What we find in Mahavamsa wouldn’t surprise any Hindu or a resident of Indian subcontinent, because we see such an attitude from Vedic days. Their approach was the same from Kashmir to Kandy.

Mahavamsa has lot of references to plants, particularly to the holy pipal tree known as Bodhi tree in Buddhist literature. Tamils named Arasa Maram meaning King of Trees. Since Buddha attained wisdom under the tree, it has got more respect than any other tree. But this pipal tree (Ficus religiosa) is in the Indus Valley Civilization, the Upanishads and later literature. In the Bhagavad Gita Lord Krishna says Of all the trees I am the papal tree. Along with two other trees of the same Ficus genus it is mentioned as one of the names of Lord Vishnu in Vishnu Sahasramana. Probably that is the reason Buddha decided to sit under the tree in his attempt to find the Truth.

Bodhi-Tree

Hindus are pioneers in naming the regions after the predominant plant of the area. They named lands after Jhambu, Ila, Shalmali plants etc. Tamil Hindus also followed this custom and named their five lands after five plants such as Kurinji, Mullai etc.

The most famous city of ancient India Pataliputra (Patna in Bihar) was named after the Patali tree. India’s name is Jambudwipa meaning Land of Indian Blackberry Tree. It’s botanical name is Syzygium cumini (Family Myrtaceae)

Plants in Mahavamsa

Chapters 18 and19 “Receiving and Coming of the Great Bodhi Tree” make very interesting reading. Asoka’s preparation to send the branch of the Bodhi/ Pipal tree from Bihar to Sri Lanka is described in detail. He paid respect to the tree like a king. In fact he offered the kingdom thrice to the tree and crowned it as the emperor of the Mighty Mauryan Empire. He asked his counterpart in Sri Lanka Devanam Priya Tissa to do the same. He also did give a big welcome to the tree.

Chapter 5 says that the angels brought Naga creeper twigs to brush the teeth, Myrobalans, mangoes, Terminalia for eating and celestial lotus and jasmine flowers for offering. In the same chapter we come across the story of Nigrodha (Mr Banyan Tree). When Emperor Asoka killed his elder brother Sumana, his pregnant wife was given refuge by the guardian angel of Nyakrodha tree (Banyan) and so her son was given the same name. He was protected by that angel.

Banyan_tree-2
Banyan Tree, Nyagrodha in Sanskrit

‘Nyakrodha’ is the name of Banyan tree (Ficus bengalensis or Ficus indica). The person’s name will be Mr Banyan Tree which is common in India. We have Pippaladan and other names in Upanishads meaning Mr Pipal Tree. Even several dynasties named themselves after plants such as Ikshvahu, Sunga, Kadamba, Pallava etc.

Chapter seven was about using lotus leaves to fetch water. Lotus leaves are used for eating food even today in several parts of India. Lotus stems are in the story of Indra stealing Agatya’s lotus plants in the Brahmana literature (Read my post – Why did Indra steal?)

We have a reference to Kadamba tree (Neolamrckia cadamba) in Chapter 18. Once Madurai in South India was full of these trees and Madurai was called Kadamba vana, where the world famous Meenakshi temple was built later.

screw pine
Image of screw pine (Ketaka)

Mandu Thorn killed Bodhi Tree !

In chapter 20, there is an interesting episode of the evil queen of Emperor Asoka killing the famous Bodhi tree with a poisonous thorn. It is called Mandu thorn. When the queen died, Asoka elevated another beautiful lady Tissarakkha to be the queen. She thought Asoka was pouring his love and affection to tree instead of her and used a Mandu thorn to kill the tree in the Mahamega arama. The commentator adds that there is another incident like this in the Dadhivahana Jataka. It was explained how the kernel of a mango fruit lost its germinating power when it was pierced with a Manu thorn. (I could not get the botanical term for this thorn).

In chapter 36 also we read about a murder by poisoning a tree. King Samgatissa accompanied by women used to go to East island between India and Sri Lanka, just to eat Jambu (Indian blackberries) fruits. People in the island hated this. So they poisoned the fruits of the tree. When the king ate it he died immediately.
In the same chapter 36, we read about Mucela tree (botanical term not known) and areca palm.
In chapter33, there is a report of the king writing his order of donation to Buddhist vihara on a Ketaka patra. The botanical term for Ketaka is Pandanus odoratissimus (Screw pine)

Mango_tree_in_Kolar
Mango Tree

About Palmyra in chapter10, I have already written a post “Palmyra worship in India and Sri Lanka”. Palmyra was worshipped as a sacred tree in India (Natrinai Tamil verse 303) and Sri Lanka. During Pandukabhayan rule he installed a Palmyra tree which is considered the tree of hunters’ god.
Building Technique

In chapter29, we read about a novel building technique. The resin gum of Kapitha tree (Feronica elephantum) is mixed with sweet water it helped to fix eight inch thick copper sheets.
Chapter 30 mentions Saptaparna tree (Alstonia scholaris) on which the king was leaning to watch the scenery.

Kadamba ful-11
Kadamaba Tree

Flowering plants Jasmine, Parijata (night jasmine) and Shenpak were mentioned in the book.
Chapter 31 says that Buddha’s double appearance happened under the gandamba tree and we do know what tree it was. We also read about Buddha’s last minute under the Sala tree.

In chapter 14 mango tree is used by the Thera to explain the doctrine to the king. This technique is already used by the Hindu Vedas ( Please read my post Three Apples that Changed the World!)

Chapter 34 refers to Ujjuka flowers, a kind of jasmine. Chapter 35 refers to Kumbandaka fruits. King Amandagamani distributed this fruit to all the Buddha Bikshus. So his name became Amanda after the fruit. Commentators identify this with Pumpkin gourd or ricinus plant. It is strange that the king himself was named after the fruit which he distributed. As a great enthusiast of fruits, he planted grape wine everywhere.

jambu-fruit-250x250
Jambu Tree (Name of India Jambudwipa)

Mahavamsa has mentioned many more plants, the study of which will throw more light on the people’s food habits.

Contact swami_48@yahoo.com

பனை மர வழிபாடு: மகாவம்ச, சங்க இலக்கியச் சான்றுகள்

palmyra with 8 branches
Rare type of Palmyra with 8 branches in Sri Lanka

தொகுத்து வழங்குபவர்- கட்டுரை மன்னன் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.. 1309; தேதி- 25 செப்டம்பர் 2014

மஹாவம்ச ஆய்வுக் கட்டுரை வரிசையில் இது பதினோராவது கட்டுரை.

2014 ஜனவரி 27ல் — “பனமரங்கள் வாழ்க” — என்று ஒருகட்டுரை (எண் 804) வெளியிட்டேன். மஹாவம்ச நூல் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது சங்க இலக்கியத்தில் உள்ள பனைமர வழிபாடு இலங்கையில் பௌத்த சமயத்திலும் இருப்பதைக் கண்டு வியந்தேன். அதன் விளைவாகப் பிறந்து இக்கட்டுரை.

மரங்களிலும் ஏரி, குளங்களிலும், காடுகளிலும் கடலிலும் அணங்குகள் (தேவதைகள்) வசிப்பதாக சங்க காலத் தமிழர்கள் நம்பினர். இவர்கள் பற்றியும் பேய்கள், பூதங்கள் பற்றியும் நூற்றுக் கணக்கான குறிப்புகள் சங்க இலக்கியத்தில் உண்டு.

மரங்கள் பற்றி மகாவம்சத்தில் 25–க்கும் மேலான குறிப்புகள் இருக்கின்றன. பட்டப் படிப்பில் தாவர இயலைக் கற்ற எனக்கு இவை எல்லாம் தேன் போன்று இனிக்கும் தகவல்கள். பனைமரம் பற்றிய குறிப்பு இதோ:

அத்தியாயம் 10– பாண்டுஅபயன் காலத்தில் நடந்தது இது.
“பொது கல்லறை, கொலைக் களம், மேற்றிசை ராணிகளின் ஆலயம், வேசவனத்து ஆலமரம், வேட்டை பூதத்துக்குரிய பனை மரம், யோனர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம், மகா யக்ஞ சாலை – ஆகிய இவைகளை அவன் மேற்கு வாயிலுக்கு அருகில் அமைத்தான்”.

இந்த மகாவம்ச தகவலுக்கு விளக்கம் எழுதியோர் இதை வேட்டைக் காரர்களின் கடவுள் என்று எழுதி இருக்கின்றனர்.

battocaola branched palmyra
Branched Palmyras in Mattakilappu (Batticaloa) of Sri Lanka

இதே போல சங்க இலக்கியத்திலும் பேசப்படும்.ஆனால் அது நெய்தல் என்னும் கடலும் கடற்சார்ந்த நிலமும் பற்றிய குறிப்பு. நற்றிணைப் பாடல் 303-ல் மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் பாடிய பாடலில்

“தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்
துணை புணர் அன்றில் உய்வுக்குரல் கேட்டொறும்
………………………………

என்ற வரிகளுக்கு உரை எழுதிய பின்னத்தூர் அ. நாராயணசாமி அய்யர் கூறுவது யாதெனில்: “ பண்டுதொட்டு உறைகின்ற கடவுள் தங்கப் பெற்ற பருத்த அடியையுடைய ஊர்ப்பொதுவிலுள்ள பனையின் வளைந்த மடலிடத்துச் செய்த குடம்பையின் கண் இருந்து தன் பெடையைப் புணர்கின்ற மகன்றிலின் வருத்தம் தரும் குரலைக் கேட்கும்தோறும்”

இதில் நமக்குத் தேவையானது பருத்த பனைமரத்தில் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையாகும். இதே நம்பிக்கை 2000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையை அரசாண்ட பாண்டு அபயனுக்கும் இருந்தது ஒப்பிடற்பாலது.

பனைமரக் கொடியை கிருஷ்ண பரமாத்மாவின் அண்ணன் பலராமன் வைத்திருந்ததை ஒல்காப் புகழ் தொல்காப்பியனும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கிரனாரும் (புறம் 56) விதந்து ஓதுவதும் வியப்புக்குரியது. எத்தனையோ மரங்கள் இருக்க பலராமன் பனை மரத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்? என்று நான் வியப்பதுண்டு. ஆனால் விக்கிபீடியா பொன்ற கலைக்களஞ்சியங்கள் பனைமரம் 800 வகைகளில் பயன்படுத்தப்படுவதாக எழுதியதைப் படித்தவுடன் வியப்பு போய்விட்டது. பலராமன், கண்ணன் விளையாடிய ராஜ தந்திர ஆட்டங்களில் சிக்காமல், நாடு முழுதும் விவசாயத்தைப் பிரசாரம் செய்வதையே தனது அரும்பணியாகக் கொண்டவர். தோளில் கலப்பயுடன் காட்சிதருவார்!

palmyra 7
Rama piercing seven Palmyra Trees with a single arrow in Amriteshwar Temple, Karnataka

பனை மரம் பற்றிய மற்றொரு புதிரை பனைமரங்கள் வாழ்க என்ற கட்டுரையில் வெளியிட்டு ஒருவேளை இப்படி இருக்கலாம் என்று ஒரு ஊகச் செய்தி வெளியிட்டேன். இப்போது அதுவும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இலங்கை மன்னனாக விபீஷணனை அம்ர்த்திவிட்டுப் புறப்பட்ட இராம பிரானுக்கு விபீஷணன் ஒரு பரிசுப்பொருள் தருகிறான். இது தங்கத்தினால் ஆன ஏழு பனை மரங்கள் என்று இராமாயணம் பகரும். ஒருவேளை இரமன் ஒரே அம்பில் ஏழு மராமரங்களைத் துளைபோட்டு (கின்னஸ்) சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றதால் இப்படி இருக்குமோ என்று ஊகச் செய்தி வெளியிட்டேன்.

கோவில் சிற்பங்களில் உள்ள மரங்கள் பற்றி வெளியான ஆரய்ச்சிப் புத்தகத்தில்(See page 200 of Plants in Indian Temple Art by Shakti M Gupta) ராமபிரான் ஏழுபனை மரங்களைத் துளைத்த காட்சி கர்நாடக மாநில அமிர்தேஸ்வரர் கோவிலில் இருப்பதாக அவர் எழுதி இருந்தார். ஆக ராமன் பனைமரம் ஏழையும் துளை போட்டதற்காகவே விபீஷணன் ஒரு நினைவுப் பரிசு கொடுத்தான் என்பது பொருத்தமாகவே இருக்கிறது. ராமாயன மரா மரம் அந்தச் சிற்பத்தில் பனை மரமானதும் ஆய்வுக்குரியது.

அடிமுதல் முடி (நுனி) வரை நமக்குப் பயன்படும் பனை மரம் வடமொழியில் தாட என்றும் தால என்றும் எழுதப்படும். இதை ஓலைச் சுவடிகளாகப் பயன்படுத்தியதே இதன் புனிததன்மைக்குக் காரணம் என்று வேறு ஒரு புத்தகத்தில் படித்தேன். அவருக்கு மஹாவம்ச, சங்கத் தமிழ் இலக்கிய அறிவின்மையே அத்தகைய முடிபுக்குக் காரணம்.

இந்திய வரலாற்று ஆராய்ச்சியில் இறங்குவோருக்கு தமிழும் சம்ஸ்கிருதமும் தெரிந்திருக்கவேண்டும். இல்லாவிடில் நிறைய தவறான முடிவுக்கு வருவார்கள்.

OLYMPUS DIGITAL CAMERA
Tasty Palmyra fruits (fleshy parts inside is eaten)

கம்போடியா நாட்டு தேசிய மரமாகத் திகழும் பனை மரம், தமிழ்நாட்டில் திருப்பனந்தாள், திருப்பனங்காடு, திருப்பனையூர், திருமழல்பாடி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் தல மரங்களாக வழிபடப்படுவதும் குறிப்பிடத் தக்கது.

அனுராதா நட்சத்திரத்தை தமிழர்கள் முடைப் பனை என்று அழைப்பது, ஞான சம்பந்தப் பெருமான் ஆண் பனை மரங்கள் அனைத்தையும் பூத்துக் குலுங்கும் பெண் மரங்களாக மாற்றி அற்புதம் செய்தது, ஆதிசங்கரர் தாடங்கப் பிரதிஷ்டை செய்தது ( தால/தாட அங்கம் = தோடு), தாயத்துக்கும் பனைமரத்துக்கும் உள்ள தொடர்பு முதலிய விஷயங்களை முந்திய கட்டுரையில் கண்டு கொள்க.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் காதலில் தோவியுற்ற தமிழ் இளைஞர்கள் ஊர் அறிய பனைமர மடலான குதிரை மீது பவனி வருவர். இது தமிழர்களுக்கே உரித்தான வழக்கம். ஆயினும் இதிலும் வடக்கில் இருந்தோ அல்லது வெளிநாட்டில் இருந்தோ இறக்குமதி செய்யப்பட்ட குதிரையின் தொடர்பு இருப்பது ஏன் என்று விளங்கவில்லை. ஆனால் தமிழர்கள் பற்றிய செய்தி எல்லாம் குதிரைகள் நன்கு பயன்படுத்தப்பட்ட காலத்துக்குப் பிற்பட்டவையே. இதைத் தனியாக ஆராய்வோம்.

122 Amruteshwara temple Rama Sita Lakshmana Golden Deer
Ramayana is depicted in sculptures in Karnataka

My earlier Ramayana and Tree related posts:
1.Where is Rama Setu (Rama’s Bridge) ? 2. Did Sita Devi Die in Earth Quake? 3. Ramayana Wonders Part1 (4) . Ramayana Wonders Part2 :How many miles did Rama walk? (5) Ramayana Wonders Part 3: Rama and Sanskrit G’ramma’r (6) Part 4: Who can read all 300 Ramayanas? (7) Ramayana Wonders part 5: Indus Valley Cities in Ramayana (6) Indian wonder: The Banyan Tree (7) Ramyana Wonders Part 6 (8) Where there is Rama, No Kama and many more 9) இந்திய அதிசயம்: ஆலமரம் 10) பனை மரங்கள் வாழ்க 11)தமிழ் பக்தர்களின் அபார தாவரவியல் அறிவு 12)அருகம்புல் ரகசியம் 12)சிந்து சமவெளியில் அரச மரம் 13)மரத் தமிழன் வாழ்க 14) வேதத்தில் 107 மூலிகைகள் 15) சிவனுக்கும் தமிழர்களுக்கும் மரங்கள் சுவீகார புத்திரர்கள் 16)ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே 17) தமிழ்நாட்டைப் பற்றி 100 அதிசய செய்திகள் 18) Magic of Trees 19)இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும் 20) வாழைப்பழம் வாழ்க 21) தக்காளி ரசத்தின் மகிமை.

Contact swami_48@yahoo.com

Palmyra Tree Worship in India and Sri Lanka!

battocaola branched palmyra
Rare branched palmyra trees in Batticaloa in Sri Lanka.

Research paper written by London Swaminathan
Post No 1306; Dated 23rd September 2014.

Tree worship is practised around the world. We see it in Sumer, Indus and Maya civilizations to name a few. But India is a country where it is practised till today with same fervour as it was 2500 years ago. Vishnu Sahasranamam gives three trees as Gods names : Asvatta, Udumbara and Nyagrodha. All these trees belong to the genus Ficus (Pipal, Fig and Banyan Trees). We have even people named after these trees in our old literature- both secular and religious. But the surprising thing is the Worship of Palmyra Trees!

Palmyra’s botanical name is Borassus flabellifer (Family: Arecaceae or Palmae). It is indigenous to India. Lord Krishna’s brother Balarama had it on his flag. It is strange that he chose this tree when there were hundreds of beautiful flowering and fruit laden trees in India. The oldest Tamil book Tolkappiam mentioned the Palmyra flag of Balarama. Nakkirar in Purananauru verse 56 also praised Balarama carrying Palmyra flag and plough. The tree and its parts are used in hundreds of ways. No part of this tree is useless. So it is called Karpaga Taru (Wish Fulfilling Tree).

Major temples in Tamil Nadu have “Sthala Vrkshas” meaning the local tree of the temple. This is the tree of the temple in Tiruppanandal, Tiruppanangkadu, Tiruppanaiyur, Tirumazalpadi and Tirukkurungkudi. Both Buddhists and Hindus worshiped this tree. Some people thought it was because the palm leaf that was used for writing the scriptures and preserving them. But it is not convincing. Moreover the 2000 year old Sangam Tamil literature and Sri Lanka’s chronicle Mahavamsam specifically say that these trees are abodes of Gods!!

It is called Panai or Pennai in Tamil and Tal or Tad in most of the Indian languages. In a few temples in Tamil Nadu Adi Shankara and his followers did Tadanga Pradhista to Goddesses. It was used as an earring of women at one time. That is why it was called Thadanga ( In Tamil Thodu).

palmyra with 8 branches
Palmyra tree with 8 branches

In Mahavamsa

During the reign of Pandu abhayan in Sri Lanka he built several buildings and made several facilities for the public. One of them was the erection of a Palmyra tree surrounded by a fence which was the God of the Hunters (See chapter 10).

In Sangam Tamil literature Palmyra tree is said to be worshipped by the residents of Neithal landscape (sea shore and its surrounding area). Alamperi Sathanar of Natrinai verse 303 says that there was a Palmyra tree in the meeting place of the village and the tree had a huge stem where God resides. The commentator adds that it is common for the people of the littoral land to invoke family deity and city deity in the Palmyra tree.

Indian temple sculptures from second century BCE show Palmyra tree in at least eight places. In many of them Balarama’s killing of Dhenukasura is portrayed with the tree. I have already written about Vibhishana’s gift to Rama in the Ramayana Wonders series where Vibishana presented Ram, a momento with seven golden Palmyra trees. It was a puzzle and I commented that it may be due to Rama’s heroic act of piercing through seven trees with one arrow. Now my guess is proved right.

palmyra 7
Amriteshwara temple, Karnataka

At the Amriteshwara temple in Amritapura, Karnataka, there is a sculpture with seven Palmyra trees. There are markings on the tree to show that it was pierced by an arrow and Sri Ramachandra is standing on the left with his bow. The arrow having pierced through the trees is denoted by a downward moving line. There is a snake under the trees. Lakshman, Hanuman and Sugreeva are all watching the scene (See page 200 of Plants in Indian Temple Art by Shakti M Gupta). So this is the reason for Vibishana donating a Seven Golden Palmyra trees memento to Rama. Ramayana refers to a different tree. Palmyra tree is Tala tree. There may be some confusion in the transcription of the word. There is scope for more research here.

In my Tamil article Long Live Palmyra Tress posted on 27th January 2014, I have listed the Tamil proverbs on Palmyra trees and the important Tamil verses where Palmyra is used as a simile.

Palmyra Tree Miracle
When the famous Saivite saint Sambandhar visited Tiruvothur he saw a devotee crying. The devotee raised some Palmyra trees so that he can use the income for his community service in the Shiva temple. By rare coincidence all the trees were male trees and did not yield fruits. Atheists were mocking at him and teased him asking when his god would yield him fruits. When Sambandhar asked him the reason for his sad face, he told him about the ‘male only Palmyra trees’. Later Sambandhar visited the Shiva temple and looked at the Palmyra trees and he sang ten verses in praise of the Lord and said the male trees will yield (Kurumpai Aan Panai Eenum in Tamil). Next minute all the trees bloomed and bore plenty of Palmyra fruits! Dr R Nagasamy, renowned historian and archaeologist, has quoted the Sanskrit lines from the Upamanyu Bhakta Vilasam giving the same meaning: Tala: pumamsa: sruthvai they bhavanthu paritha: palai:
OLYMPUS DIGITAL CAMERA
Fruits of Palmyra Tree

Talisman and Tale Tree
I guess the English word Talisman and Tamil word Tali came from the Sanskrit word Tala for Palmyra leaf. In the ancient India, Hindus wore ornaments made up of Palmyra leaf in which they wrote mantras. Adi Shankara and his followers installed Thadanga in Kanchi Kamakshi Temple and Trichy Akilandeswari Temple. But that is worn on the ear as ear studs.

During lunar and solar eclipse times the Brahmin priests visited my house and asked us to wear the Palmyra leaf with written mantra on our foreheads. This is to ward off the evil effects of the planets, if the eclipse occurred on the day of your birth star etc. This custom shows that wearing the palm leaf with written mantra has been there for ages.

Tamil Youths Ride on Toy Palmyra horses
In ancient Tamil Nadu, Tamil youths who fell in love with girls used to make a horse toy with Palmyra leaves and used to ride on it along the streets to make it public. Then the parents of the girls were forced to marry them. Though it was practised only by the Tamils in ancient India, the association of horse in this ritual show that it also came from the north. Horses came to India from outside. The oldest reference is in the Rig Veda.

Star Anuradha is called Mudai panayam in Tamil meaning stunted Palmyra tree.
Countries like Cambodia have Palmyra trees as their national emblem. In Tamil Nadu and Palakkadu area of Kerala the tree plays a big role in common man’s life. It may be due to the toddy tapped from these trees.

122 Amruteshwara temple Rama Sita Lakshmana Golden Deer
Ramayana in Karnataka Temple

My earlier Ramayana and Tree related posts:

1.Where is Rama Setu (Rama’s Bridge) ? 2. Did Sita Devi Die in Earth Quake? 3. Ramayana Wonders Part1 (4) . Ramayana Wonders Part2 :How many miles did Rama walk? (5) Ramayana Wonders Part 3: Rama and Sanskrit G’ramma’r (6) Part 4: Who can read all 300 Ramayanas? (7) Ramayana Wonders part 5: Indus Valley Cities in Ramayana (6) Indian wonder: The Banyan Tree (7) Ramyana Wonders Part 6 (8) Where there is Rama, No Kama and many more

Contact swami_48@yahoo.com

Pictures are taken from different websites;thanks.

பொங்கி வரும் புனிதம்! கங்கோத்ரி ரகசியம்!!

Sunrise_Varanasi
Sun Rise at Varanasi

By ச.நாகராஜன்
Post No.1287; Posted on 14th September 2014.

“ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ ( நதிகளுக்குள் கங்கா நதி நான்! )
கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் (10ஆம் அத்தியாயம், 31ஆம் ஸ்லோகம்)

விஸ்வ பாவினி மாதா
பிரபஞ்சத்தையே தூய்மையாக்கும் ‘விஸ்வ பாவினி’ என்றும், அனைவரின் பயங்களைப் போக்கும் ‘பய ஹாரிணி’ என்றும், அற்புதமான அங்கங்களைக் கொண்டிருக்கும் ‘சுப அங்கிணி; என்றும்,உலக மக்கள் அனைவரின் நதியாக ‘லோக நதி’ என்றும் போற்றித் துதிக்கப்படும் ஆயிரக்கணக்கான நாமங்களால் பூஜிக்கப்படுபவள் கங்கா மாதா!

பகீரதனின் தவத்தால் பூமியில் கங்கை இறங்கிய அரிய செயலை நினைத்து மனம் மகிழ்ந்த நரசிம்மவர்ம பல்லவன் அந்த அழியாக் காவியத்தை சிற்பமாக மாமல்லபுரத்தில் வடித்து பாரத ஒற்றுமையையும், நல்லோரின் அரிய செயல் உலகத்திற்கே நன்மை பயப்பதையும் சுட்டிக் காட்டினான் ராமேஸ்வரத்தில் மணல் எடுத்து கங்கோத்ரியில் கரைப்பதை தொன்று தொட்டு செய்து வரும் பண்பாட்டுப் பழக்கமும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஒரு சான்று!

GANGA SUNSET

நான்கு ‘க’காரங்கள்
ஹிந்துக்கள் போற்றும் நான்கு ‘க’காரங்கள் கங்கா, கீதா, காயத்ரி, கோ (பசு) ஆகும். மரணமடைந்த ஜீவனைப் பற்றி யமன் சர்ச்சை செய்யாமலிருக்க வேண்டுமா? ஆதி சங்கரர் அதற்கான எளிய உபாயத்தைக் கூறி இருக்கிறார்:

பகவத் கீதா கிஞ்சிததீதா கங்கா ஜல லவ கணிகா பீதா சக்ருதபி யேன முராரி சமர்ச்சா க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா
-பஜ கோவிந்தம் பாடல் 20

“பகவத் கீதையைச் சிறிது படித்தாலோ கங்கை ஜலத்தில் துளியை உட்கொண்டாலோ கிருஷ்ண நாமத்தை ஒரு முறையேனும் உச்சரித்தாலோ அப்படிப்பட்டவரைப் பற்றி யமன் விவாதிக்கவே மாட்டான்” என்று ஆணித்தரமாக ஆதி சங்கரர் பஜ கோவிந்தத்தில் அருளும் உரையைப் படிக்கும் போது கங்கா, கீதா, கிருஷ்ணா பற்றிய மஹிமையை உணர்கிறோம்; மலர்கிறோம்.
கங்கா ஜலத்தின் ஒரு சிறு துளி யமனையும் சற்று விலகி இருக்கச் செய்யும்!

அலெக்ஸாண்டர் விரும்பிய இறுதி இடம்
கங்கை எங்கிருந்து தோன்றுகிறது என்பது ஒரு அரிய ரகசியம். அந்த ரகசியத்தைப அறிய ஏராளமானோர் முயன்றதை சரித்திரம் விளக்குகிறது, அக்பர் (கி.பி,1336-1605) ஒரு பெரிய குழுவையை அனுப்பி கங்கை தோன்றும் இடத்தைப் பார்த்து வருமாறு அனுப்பினார். அக்பரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள அப்துல் ஃபஜல், அவர் எப்போதும் கங்கை ஜலத்தையே அருந்தி வந்தார் என்று குறிப்பிடுகிறார். வெளியிடங்களுக்குப் பயணம் செல்லும் போது கூட ஹரித்வாரிலிருந்து எடுக்கப்பட்ட கங்கை ஜலத்தையும் கூடவே அக்பர் கொண்டு சென்று பயன்படுத்தினார் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

ஸ்பெயினிலிருந்து வந்து அக்பர் அரசவையில் இருந்த கிறிஸ்தவ மிஷனரியான பாதர் மான்சரேட் தான் முதன் முதலாக இமயமலையின் வரைபடத்தைத் தயாரித்தார். 1807இல் பிரிட்டிஷார் கங்கையின் தோற்றம் காணத் துடித்து முயற்சியை ஆரம்பித்தனர். 1857இல் தான் அது சாத்தியமானது.

மாமன்னன் அலெக்ஸாண்டர் தனது இறுதி இருப்பிடமாக இருக்க விரும்பித் தேர்ந்தெடுத்த இடம் கங்கை பிரதேசம்!ஆனால் அவன் அல்பாயுளில் மறைந்து போனதால் அவன் விருப்பம் நிறைவேறவில்லை.

2500 கிலோமீட்டர் தூரம் ஓடுகின்ற புனித நதி கங்கை. அதன் அகலமோ மூன்று கிலோமீட்டர்கள். மழை காலத்தில் சில இடங்களில் பத்து கிலோமீட்டராகப் பரந்து ஓடும்! கோமுகியில் தோன்றி 250 கிலோமீட்டர் தூரம் பாகீரதியாகப் பரிணமிக்கும் பிரவாகம் தேவ ப்ரயாக்கில் அலக்நந்தாவுடன் இணைந்து கங்கையாக உருவெடுக்கிறது.

GANGA LAMP

அமேஸான் நதி 90 கிலோமீட்டர் அகலமும் 6992 கிலோமீட்டர் நீளமும் கொண்டு பெரிய நதியாக விளங்கினாலும் புனிதத்திலும் அரிய குணங்களிலும் சற்றும் கங்கைக்கு அருகில் கூட வர முடியவில்லை.

கங்கை நீரின் புனிதமும் அதிசயத் தன்மையும்
டி.எஸ்.பார்கவா என்பவர் மூன்று வருட கால ஆராய்ச்சியை கங்கையில் மேற்கொண்டு ஆக்ஸிஜனைப் பெற விரும்பும் அளவானது மற்ற நதிகளை விட கங்கை நீரில் மிகவும் குறைவு என்று கண்டு பிடித்துள்ளார். கங்கை நீரின் தூய்மையாக்கும் தன்மை உலகின் இதர எல்லா நதிகளைக் காட்டிலும் 25 மடங்கு அதிகம் என்றும் அவர் கண்டறிந்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியல் நிபுணரான் சி. இ.நெல்ஸன் ஹூக்ளி நதிப் பகுதியிலிருந்து எடுத்த நீர் லண்டனைச் சேரும் வரையில் கெடாமல் இருந்தது என்று அதிசயிக்கிறார் ஹூக்ளி கங்கையின் அசுத்தமான பகுதி. அதுவே இப்படி நீண்ட காலம் தூய்மையோடு இருந்தது என்றால் கங்கோத்ரியில் எடுக்கப்படும் நீர் எவ்வளவு காலம் புனிதத் தன்மை கெடாமல் இருக்கும்! பிரமித்து வியக்க வேண்டியது தான்!

1896ஆம் ஆண்டு, எர்னஸ்ட் ஹான்பரி ஹான்கின் என்ற பிரிட்டிஷ் உயிரியல் நிபுணர் கங்கை நீரை நன்கு ஆராய்ந்து தன் முடிவுகளை பிரான்ஸை சேர்ந்த அறிவியல் இதழில் எழுதி அறிவித்தார். அதில் காலரா கிருமிகளை கங்கை நீரில் விடும் போது அவை துடிதுடித்து மூன்றே மணி நேரத்தில் இறந்து விடுகிறது என்ற அதிசயச் செய்தியை அறிவித்தார்.இதே கிருமிகள் தூய்மையாக்கப்பட்ட நீரில் 48 மணி நேரமானாலும் அப்படியே இருப்பதை அவர் விவரித்த பொது உலகமே அதிசயித்தது. டெல்லியைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனம் கங்கை நீர் கொசுக்களை உற்பத்தி செய்ய விடுவதில்லை என்ற அரிய ரகசியத்தைக் கண்டுபிடித்து அறிவித்துள்ளது.

இப்படிப்பட்ட இயற்பியல் உண்மைகளாலும் தெய்வீக ரகசியத் தன்மைகளாலும் தான் போலும், ஆயுர் வேத ஆசார்யர் சரகர் பல வித வியாதிகளுக்கு கங்கை ஜலத்தை அருமருந்தாக உட்கொள்ளுமாறு அறிவுரை பகர்கிறார்.

yoga-meditation-rishikesh
Meditation in Rishikesh

கங்கோத்ரி ஆலயம்
உத்தரகாசியிலிருந்து கங்கோத்ரி நோக்கிச் செல்லும் பாதை நெடுகிலும் அதிசயங்கள், ஆன்மீக வரலாறுகள், அவற்றுள் பொதிந்திருக்கும் ரகசியங்கள் தாம் உள்ளன.
சிவனின் ஜடாமுடியிலிருந்து கங்கை பூமிக்கு அவதரித்த கங்காவதரண் தினம் ஜேஷ்டா (ஆனி) மாதம் சுக்ல பட்சம் தசமி திதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த சுக்ல தசமியை கங்கா தசரா எனக் கொண்டாடுகின்றனர் அனைவரும்! கங்கோத்ரி ஆலயம் திறக்கப்படுவதும் இன்று தான்! கங்கோத்ரி ஆலயத்திற்கு அருகில் உள்ளது பகீரதன் தவம் செய்த அற்புத இடம்!

உத்தரகாசியிலிருந்து கங்கோத்ரி செல்லும் பாதையில் கங்கா நானியில் ரிஷி குண்ட் என்று அழைக்கப்படும் இடத்தில் வெந்நீர் ஊற்று உள்ளது. அதைத் தாண்டிச் சென்று சுகி எனும் அழகிய இடத்தில் பாகீரதி நதிக்கரை சரிவில் திரௌபதி கா தண்டா என்னும் இடம் உள்ளது. சுவர்க்கத்திற்கு செல்லும் வழியில் திரௌபதி உடலை உகுத்த பிரதேசம் இது. இந்தப் பகுதியின் அருகில் உள்ள ஹிமாச்சல் பகுதியில் திரௌபதி உடலை உகுத்த இடம் உள்ளது.

சுகியைத் தாண்டிச் சென்றால் ஹரிசில் என்று அழைக்கப்படும் ஹரி சிலா உள்ளது.கங்கை பூமியில் இறங்கியவுடன் விஷ்ணு தவம் செய்த இடம் ஹரிசில்! சில்லென்று அதி வேகமாக இங்கு வீசும் காற்றைப் பற்றி பக்தர்கள் கூறும் போது வாயு பகவான் விஷ்ணுவை வழக்கமாக வணங்கும் இடம் இது என்பதால் அவர் பிரத்யக்ஷமாக இங்கு இருக்கிறார் என்கின்றனர். இதையும் தாண்டிச் சென்றால் பிரபலமான கூர்க்கா வீர்ர் அமர்சிங் தாபா கட்டிய கங்கா மாதா கோவிலை அடையலாம்.

சுமார் 21 அடி சதுரபீடத்தில் ஒன்றரை அடி உயரமுள்ள கங்கா மாதா சிலை அற்புதமாக அமைந்திருக்க சற்று கீழே லக்ஷ்மி, சரஸ்வதி,அன்னபூரணி பாகீரதி, ஜாஹ்னவி,யமுனை ஆகியோரின் தெய்வீகச் சிலைகள் அமைந்துள்ளன.

3200 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக அமைந்துள்ள கங்கோத்ரியிலிருந்து கங்கா மாதா பொங்கி வரும் புனிதமாக, அமிர்த பிரவாகமாகப் பாய்ந்து அனைவரின் உடல் அழுக்கையும் உள்ள அழுக்கையும் போக்கி முக்தி என்னும் பேரின்ப நிலையையும் காலம் காலமாக அளித்து வருகிறாள்.

modi-aarti-1_051814120309

பொங்கி வரும் புனிதம்
அவளை மாசு படுத்தும் நவீன கால முயற்சிகளைத் தகர்த்து புகழோங்கிய பழைய காலப் பெருமையையும் புனிதத்தையும் திருப்பிக் கொண்டு வரும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டு விட்டது. கங்கையின் அசுத்தங்கள் அகற்றப்படுகின்றன. தூய்மைப் பிரவாகமாகப் பெருகி வரும் அலையில் ஊழல் எல்லாம் அடிபட்டு, அகற்றப்பட்டு மகோன்னதமான, பாரதம் உருவாக இருக்கிறது; உத்வேகம் ஊட்டப்பட்ட கங்கையின் செல்வர்களான நாம் உலகின் தலைமை பீடத்தைப் பெறப் போகிறோம்!

ganga ARTI2

கங்கா மாதா கீ ஜெய்!
(This article was written by my brother S.Nagarajan for a Tamil magazine: London Swaminathan)
ஞான ஆலயம் ஆகஸ்ட் 2014 இதழில் வெளியாகி உள்ள கட்டுரை
பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மெஜாரிடி பெற்றவுடன் நரேந்திர மோடி கங்கா ஆரத்தியை நிகழ்த்தி கங்கையை வழிபட அதைத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகப் பார்த்தவர்களின் மெய் சிலிர்த்தது. காலம் காலமாக நாம் வழிபட்டு வரும் கங்கா மாதா தூய்மைக்குத் தூய்மை தருபவள் அவளைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வு ஆரம்பமாகி விட்டதை ஒட்டி மலரும் கட்டுரை இது!
CONTACT swami_48@yahoo.com

The Holy Ganga River

(Pictures are taken from various websites;thanks)
***************
.

சேர நாட்டு ராஜா வந்தார்………கூடவே………

jackfruits-7811209
Jack Fruit (Palaa Pazam in Tamil)

ஆய்வுக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.:—1205; தேதி:- 31 ஜூலை, 2014

தமிழ் நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த காட்சிகளை நம் மனக் கண்ணுக்கு முன்னே நிறுத்துவதில் சிலப்பதிகாரம் சிறந்த பங்களிக்கிறது. மஹாபாரதத்தில் சபா பர்வத்தில் யுதிஷ்டிரன் (தருமர்), ராஜ சூய யக்ஞம் செய்யும்போது அவருக்கு என்ன என்ன பொருட்களை கப்பம் கட்டும், திரை செலுத்தும் ராஜாக்கள் கொடுத்தனர் என்ற பட்டியல் இருக்கிறது. இதே போல வட இமயத்தை வெற்றி கொண்ட கரிகால் சோழனுக்குக் கிடைத்த மூன்று முக்கியமான பொருட்களை சிலப்பதிகாரம் சொல்கிறது. இதை எல்லாம் விட ஒரு நீண்ட பட்டியல் சிலப்பதிகார காட்சிக் காதையில் வருகிறது. இது மன்னர்கள் செலுத்திய கப்பம் அல்ல. அன்பின் காரணமாக கானக மக்கள் கொடுத்த அன்புப் பரிசுகள்.

சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் தனது மனைவியிடம் கூறுகிறான் அன்பே! இன்றைக்கு ‘பிக்னிக்’ போவோமா? உன்னை நான் இன்று இயற்கை அழகு மிக்க இடத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கே அருவிகள் ‘சோ’ என்ற இரைச்சலுடன் நீரைப் பொழியும். மேகங்கள் மலை மீது தவழ்ந்து செல்லும். அழகான சோலைகள் இருக்கும். புறப்படு என்கிறான்:

gods_own_country_kerala_09
(Hill country Kerala, Malai Naadu/Chera Naadu in Tamil)

“துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் சோலை மலைவளம் காண்குவம் என ”

ராஜாராணி தங்கள் பரிவாரம் புடைசூழப் புறப்பட்டனர். அரசனும் அரசியும் வருவதை அறிந்த கானக மாக்கள் – குன்றக் குறவர்கள் – நிறைய பொருட்களை அன்புக் காணிக்கையாக கொண்டு வந்தனர். இதோ சுமார் 35 பொருட்களின் பட்டியல்:

யானையின் வெண்மையான தந்தங்கள்
அகில் கட்டைக் குவியல்
மான் மயிரால் கட்டிய சாமரம்/விசிறி
குடம் குடமாகத் தேன்
சந்தனக் கட்டை
சிந்தூரக் கட்டி
அஞ்சனத் திரள்
அழகிய அரிதாரம்
ஏலக் கொடி
கருமிளகுக் கொடி
கூவை நூறு (அரரூட் மாவு)
கவலைக் கொடியின் கிழங்குகள்
தென்னை நெற்றுகள்
இனிப்பான மாம்பழங்கள்
பச்சிலை மாலை
பலாப்பழம்
வெள்ளுள்ளி
கரும்பு
பூக்கள் நிறைந்த கொடிகள்
பாக்கு மர குலைத் தாறுகள்
வாழைப் பழக் குலைத் தாறுகள்
ஆளி, சிங்கம், புலி, யானை, குரங்கு, கரடி ஆகியவற்றின் குட்டிகள்
வரையாடுகள்
வருடை மான்கள்
மான் குட்டிகள்
கஸ்தூரி மான் குட்டிகள்
கீரிப் பிள்ளைகள்
ஆண் மயில்கள்
புனுகுப் பூணைக் குட்டி
கானக் கோழி
தேன் மொழி பேசும் கிளிகள்

musk deer
(Musk Deer, Kasturi Maan in Tamil)

இவைகளைத் தலை மேல் சுமந்து வந்து கொடுத்தனர் என்கிறார் இளங்கோ. காடு வாழ் மக்களுக்கு எவ்வளவு அன்பு பாருங்கள். மலை நாட்டின் இயற்கை வளம் எத்தகையது என்றும் இதிலிருந்து உணர முடிகிறது. அருமையான இயற்கைக் காட்சிக்கு நடுவே இத்தனை பொருட்களும் குவிந்தன!!

grizzly-bear-cubs
யானை வெண்கோடும் அகிலின் குப்பையும்
மான் மயிர்க் கவரியும், மதுவின் குடங்களும்
சந்தனக் குறையும், சிந்துரக் கட்டியும்
அஞ்சனத் திரளும், அணி அரிதாரமும்
ஏல வல்லியும் இருங்கறி வல்லியும்
கூவை நூறும், கொழுங்கடிக் கவலையும்
தெங்கின் பழனும், தேமாங்கனியும்
பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்
காயமும் கரும்பும் பூமலி கொடியும்
கொழுந்தாட் கமுகின் செழுங்குலைத் தாறும்
பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்
ஆளியின் அணங்கும் அரியின் குருளையும்
வாள்வரிப் பறழும், மதகரிக் களபமும்
குரங்கின் குட்டியும் குடாவடி உளியமும்
வரையாடு வருடையும் மடமான் மறியும்
காசறைக் கருவும் ஆசறு நகுலமும்
பீலி மஞ்சையும் நாவியின் பிள்ளையும்
கானக் கோழியும் தேமொழிக் கிள்ளையும்
மலைமிசை மாக்கள் தலை மிசைக் கொண்டு
—–காட்சிக் காதை, சிலப்பதிகாரம்
tiger cubs

வாழ்க இளங்கோ!! வளர்க தமிழ்!!!

–சுபம்—

contact swami_48@yahoo.com
black pepper

(Black Pepper, Karu Milaku in Tamil)

தமிழ் பக்தர்களின் அபார தாவரவியல் அறிவு!!

purnakumba

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1189; தேதி 23 ஜூலை, 2014.

இந்து சமயத்தைப் பின்பற்றுவோருக்கு அந்தக் காலத்தில் எல்லாக் கலைகளும் தெரிந்திருந்தன. வானத்தில் உள்ள எல்லா கிரகங்களும் 27 நட்சத்திரங்களும் தெரியும். சாப்பாட்டு அறைக்கு வரும் 10, 15 கீரை வகைகள் தெரியும். துவையலுக்குப் பயன்படும் பல மூலிகைகள் தெரியும். இதெல்லாம் மருத்துவம் உணவு சம்பந்தப்பட்ட தாவரங்கள். ஆனால் இந்து மதம் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டால் ஒரு உலக அதிசயம் காத்திருக்கிறது!

இந்து மதத்தில் பயன்படுத்தும் பூக்களின் வகைகள் மட்டும் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன! விநாயக சதுர்த்தி அன்று பயன்படுத்தும் இலைகள் (பத்திரங்கள்) மட்டுமே 21 இருக்கின்றன. உலகில் இந்த அளவுக்கு இலைகளையும் பூக்களையும் மரங்களையும், மதத்தில் பயன்படுத்தும் கலாசாரம் வேறு எங்கும் இல்லை. தமிழ் இந்துக்களின் வாழ்வு எந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றி இருந்தது என்பதற்கு இது ஒரு சான்று.

இந்தக் கட்டுரை, சமயத்தில் பயன்படும் தாவரங்களைப் பற்றியது. சித்த, ஆயுர் வேத மருத்துவத்தில் பயன்படுத்தும் தாவரங்களைச் சேர்த்தால் ஆயிரக் கணக்கில் வந்து விடும்!!!

homa dravyas

கபிலர் அறிவுரை
குறிஞ்சிப் பாட்டு என்னும் சங்க இலக்கிய நூலை 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பிராமணப் புலவன் கபிலன் 99 பூக்களின் பெயரை ஒரே மூச்சில் பாட்டில் எழுதி சாதனைப் புத்தகத்தில் — தமிழரின் சாதனைப் புத்தகத்தில் — இடம்பெற்றான். அதே புலவன் புற நானூற்றில் ஒரு பகவத் கீதை ஸ்லோகத்தை மொழி பெயர்த்து புதுமையும் செய்தான்:

எனக்கு பக்தியுடன் கொடுக்கும் பச்சிலை, பூ, தண்ணீர், பழம் எதுவானாலும் — (பத்ரம், புஷ்பம், பலம், தோயம்) —- அதை நான் உண்கிறேன் (பகவத் கீதை 9-26) என்று கண்ண பிரான் கூறுவான். இதையே கபிலர் பாடுகிறார் (புறம்—106):–

“நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா”

பொருள்: நல்லதோ, கெட்டதோ எருக்கம் பூவை உள்ளன்போடு கொடுத்தாலும் கடவுள் வேண்டாம் என்று சொல்லமாட்டார்.
ஆக தமிழன் 2000 ஆண்டுகளாக எருக்கம் பூ, இலையைப் போட்டு பூஜை செய்வதைக் கபிலர் சொல்லிவிட்டார்.

homadravyas5

துளசி, வில்வம்
துளசி இலை இல்லாத பெருமாள் கோவில் இல்லை; வில்வம் இல்லாத சிவன் கோவில் இல்லை.

கோவிலைச் சுற்றி விற்கப்படும் பூக்கள் — பிரதேசத்துக்கு பிரதேசம், பருவத்துக்கு பருவம் — மாறு படும். இவ்வகையில் தாமரை முதல் அரளி வரை நூற்றுக் கணக்கான பூக்கள் வந்து விடும்.
கழுத்தில் போடும் ருத்ராக்ஷம், துளசிமணி, தாமரை மணி மாலை வரை எல்லாம் தாவர வகைகளே!

நவ சமித்துகள், நவ தானியங்கள்

நவக்ரஹ ஹோமத்தில் போடப்படும் நவதானியங்கள், நவ சமித்துகள் ஆகியனவும் தாவரங்களே; இதோ அந்தப் பட்டியல்:

நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, எள், வெள்ளை மொச்சை, கொள்ளு, உளுந்து, கொத்துக் கடலை

நவக்ரஹ ஹோம சமித்துகள்

எருக்கு, புரசு (பலாசம்), அத்தி, அரசு, வன்னி, அருகம் புல், கருங்காலி, நாயுருவி,, தர்ப்பை.

அரச மரம் வேதத்தில் உள்ளது, சிந்து சமவெளியிலும் உள்ளது. அரசு, ஆல், அத்தி ஆகிய மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இது மூன்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் மூன்று நாமங்களாக வருகின்றன.
வன்னி மரத்தையும் அரச மரத்தையும் கொண்டு தயாரிக்கப்பட்ட அரணிக் கட்டையைக் கொண்டே யாக யக்ஞங்களுக்கான தீ/ அக்னி மூட்டப்படும்.

பலாச மரத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் கரண்டிகளைக் கொண்டே யாகத்தில் ஹவிஸ், நெய் முதலியவற்றை ஆகுதி செய்வர்.

pavitra
pavita made up of Dharba grass

21 இலைகள் (பத்ரம்):
பிள்ளையார் சதுர்த்தி அன்று 21 இலைகளைப் போட்டு பூஜை செய்வது விசேஷம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த 21 இலைகளையும் தமிழர்கள் தெரிந்து வைத்திருந்தனர்:–
இதோ 21 இலைகள் (பத்ரம்):
மாசீ பத்ரம், ப்ருஹதி பத்ரம், வில்வ பத்ரம், தூர்வாயுக்ம (அருகம்புல்) பத்ரம், துத்தூர பத்ரம், பதரீ பத்ரம், அபாமார்க பத்ரம், துளசி பத்ரம் சூத (மாவிலை) பத்ரம், கரவீர பத்ரம், விஷ்ணுகிராந்தி பத்ரம், தாடிமீ (மாதுளை) பத்ரம், தேவதாரு பத்ரம், மருவ பத்ரம், சிந்துவார பத்ரம், ஜாஜீ பத்ரம், கண்டகீ பத்ரம், சமீ (வன்னி) பத்ரம், அஸ்வபத்ரம், அர்ஜுன பத்ரம், அர்க (எருக்கு) பத்ரம்.

spoons
yaga utensils made up of palasa wood

பூஜைக்கு உதவும் 27 இலைகள்
வில்வம், துளசி, மருக்கொழுந்து, நாயுருவி, பூளை, நொச்சி, கரந்தை, செங்கீரை, மாசிப்பச்சை, மலைப் பச்சை, திருநீற்றுப் பச்சை, எலுமிச்சம் பச்சை, சமுத்திரப் பச்சை, கதிர்ப் பச்சை, கொண்டை, குடத்தன் குதம்பை, வன்னி, கிளுவை, மாவிலங்கை, விளா, மா, எலுமிச்சை, நாரத்தை, நாவல், மருது, நெல்லி, இலந்தை.

பழங்கள்
மா, பலா, வாழை என்னும் முக்கனிகளை தென்னிந்தியர்கள் கடவுளுக்குப் படைக்கிறார்கள். மஞ்சள் அட்சதை, வாழை இலை, மாவிலை, தேங்காய் வெற்றிலை, பாக்கு இல்லாத பூஜைகள் கிடையாது. தென்னை, வாழை ஆகிய மரங்களின் எல்லா பகுதிகளையும் ஏதோ ஒரு வகையில் பயன்படுத்துகிறோம். வாழை இலையில் தொன்னை செய்தும், தென்னை ஓலையில் விசிறி செய்தும் கோவில்கள், பூகைகளில் பயன்படுத்துவர்.

Arani Mantha
Arani wood made up of Peepal and Sami tree to kindle fire.

பூர்ண கும்ப தாவரங்கள்
பூர்ண கும்ப கலசங்களுக்குள் கிராம்பு, ஏலக்காய், குங்குமப் பூ முதலியனவும் மேலே மாவிலை, தேங்காய் எனவும் உபயோகிக்கிறோம். நைவேத்யத்துக்கு பல வகையான பழங்களையும், காலத்திற்கேற்ப பயன் படுத்துவர். பிள்ளையார் சதுர்த்தி என்றால் விளாம்பழம், நாவல் பழம் என்பது போல.

உலகிலேயே தாவரத்தின் பெயரில் உள்ள ஒரு நாடு இந்தியாதான். ஜம்புத்வீபம், நாவலந்தீவு என்பது இந்தியாவின் பெயர். கோவில்களிலும், பிராமணர் இல்லங்களிலும் அன்றாடம் ‘’சங்கல்ப’’த்தின் போது ஜம்புத்வீபம் என்பது ஒலிக்கும். ஏழு த்வீபங்களுக்கும் ஏழு தாவரப் பெயர்கள் வைக்கப்பாட்டாலும் இந்தியாவின் பெயர் மட்டுமே அன்றாடப் புழக்கத்தில் இருக்கிறது. இதைப் பார்த்து தமிழர்களும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என ஐந்து தாவரங்களைக் கொண்டு நிலப் பெயர் அமைத்தனர்.

நவதானிய படம்1
ஸ்தல மரங்கள்

பூஜையில் வாசனைக்காகப் பயன்படுத்தும் அகில், சந்தனம், சாம்பிராணி, சூடம், ஊதுவத்திக் குச்சி முதலியனவும் தாவரங்களே.

நீண்ட பட்டியலைத் தருவதற்குப் பதிலாக ஒரு மாதிரி சர்வே மட்டுமே கொடுத்து இருக்கிறேன். ஒவ்வொரு ஊரிலும் உள்ள தலமரங்களின் பட்டியலைத் தனியே தருவேன்!

லண்டன் புறாவும் கம்பன் புறாவும்

pigeon1

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1181; தேதி:– 19 July 2014.

கம்பராமாயணப் பாடலைப் படிதவுடன் லண்டன் காட்சி ஒன்று நினைவுக்கு வந்தது. இங்கெல்லாம் ஒவ்வொரு சுரங்க ரயில் பாதை ஷ்டேஷனிலும் வீடுகளிலும் புறாக்கள் உட்காரக் கூடாது என்பதற்காக மேல் கூரையில் கூரான கம்பிகளைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள். காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் ஆட்களின் ‘கோட்டு- சூட்’டுகள் மீது புறாக்கள் எச்சம் போட்டுவிடக்கூடாது என்பதற்காக! லண்டனின் மத்தியப் பகுதியில் உள்ள டிரபால்கர் சதுக்கத்தில் புறாக்களுக்கு பொறி வாங்கிப்போடுவதை யும் தடுத்துவிட்டனர்.

லண்டன் முதலிய மேலைநாடுகளில் ஆடு, மாடு, நாய், பூனை, கோழி, சேவல் எல்லாவற்றையும் வளர்ப்பார்கள்; “மானே, தேனே, முத்தே, மணியே, கரும்பே, கற்கண்டே” என்று கொஞ்சுவார்கள். விருந்தினர் வரும் அன்று எல்லாம் “டைனிங் டேபிளில்” சாப்பாடாக மாறிவிடும். குழந்தைகள் கொஞ்சம் வருத்தப்பட்டால், அடுத்த விருந்து நடக்கும் வரை மரணத்தை ஒத்திப் போடுவார்கள். வெளிநாடு போகும்போது நாய் பூனைகளைக் கொலைக்களத்துக்கு அனுப்பிவிடுவார்கள். இதற்கான அறநிறுவனங்கள் அவற்றை வேறு யாரும் ஏற்காவிடில், ஒருவாரத்தில் எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து ‘’கருணையோடு’’ கொன்று விடுவார்கள்.

இதைத் தவிர ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் ஆடு மாடுகளின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில்!! லண்டனில் மட்டும்!!

கம்பன் பாடலில் அயோத்தி நகர மாளிகையில் புறவுக்கு மாடம் வைத்திருப்பதை ஒரு அழகு, ஒரு சிறப்பு என்று வருணித்ததைப் படித்தவுடன் இத்தனையும் நினைவுக்கு வந்தது!!!

pigeon2

புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை
தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன
எள்ள அருங் கதிரவன் இள வெயிற் குழாம்
வெள்ளி வெண் கிரிமிசை விரிந்த போலுமே
-பால காண்டம், பாடல் 121, கம்ப ராமாயணம்.

பொருள்: மாளிகைகளில் தங்கத் தகடுகள் வேயப்பட்டன. அவைகளை எளிதில் அகற்ற முடியாது. புள்ளிகளை உடைய மாடப் புறாக்கள் தங்குவதற்கு உரிய இடங்கள் இருந்தன. வெள்ளியிலான மலையில் காலை இளம் கதிரவனின் கிரணங்கள் பரவினால் எப்படி இருக்குமோ அப்படி அந்த மாளிகைகள் பிரகாசித்தன.

இதில் மாடப்புறாக்கள் தங்குவதற்கு இடம் இருந்தது என்பதைப் பெருமையாகக் கூறுகிறான் கம்பன். அதாவது மாடப் புறாக்கள் தங்குவதும் ஒரு அழகு. மாடங்களில் தங்குவதால்தான் அவைகளுக்கு மாடப்புறாக்கள் என்று பெயர். பறவைகளின் மீதுள்ள அன்புக்கு இதுவும் ஒரு சான்று.

beware pigeon

இந்தியப் புலவர்கள் இயற்கையின் மீது பற்று உடையவர்கள். காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதி சுயம்வரக் காட்சியில் ஒரு பாடல் வருகிறது. சூரசேன மஹாராஜாவை இளவரசி இந்துமதிக்கு தோழி சுநந்தை அறிமுகப்படுத்துகிறாள் —- ஒவ்வொரு அரசனையும் அறிமுகப்படுத்தும் போதும் ஒவ்வொரு இயற்கைக் காட்சியும் வருகிறது. சூரசேன மன்னனை நீ மணந்துகொண்டால் கோவர்த்தன மலையில் உள்ள பாறைகளில் அமர்ந்துகொண்டு மயில்கள் ஆடுவதைப் பார்த்து ரசிக்கலாம் என்று கூறுகிறான் காளிதாசன்.

மேலை நாட்டு, கீழை நாட்டு அணுகுமுறைக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

trafalgar sq
Trafalgar Square in London. Now feeding pigeons is not allowed.

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்-
நோக்கும் திசை எல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம் — (பாரதி)

புறவுக்காக உயிர் கொடுக்க முன்வந்த சிபிச்சக்ரவர்த்தியின் புகழைப் பாடும் பாடல்கள் புறநானூற்றில் உண்டு. சோழநாட்டுக் கண்ணகியும் இதைக் குறிப்பிட்டு பாண்டிய மன்னனை வசைபாடுகிறாள்.

வாழ்க பறவைகள்!! வளர்க அஹிம்சை!!

-சுபம்-

அன்னப் பறவை பற்றிய அதிசயச் செய்திகள் !!

800px-Mute_swan_Vrhnika

ஆய்வுக் கட்டுரை எழுதியவர் :- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1155; தேதி:– ஜூலை 7, 2014.

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால், அன்னப் பறவை பாலை மட்டும் பிரித்துக் குடிக்கும் என்பது உண்மையா?

பெரிய ஞானிகளை பரம ஹம்ச — (பெருமைமிகு அன்னம்)— என்று அழைப்பது ஏன்?

அன்னப் பறவையை பரணர், பிசிராந்தையார் முதலிய தமிழ் புலவர்களும், நள தமயந்தி போன்றோரும் தூது விட்டது ஏன்?

பெண்களின் நடையை அன்ன நடை என்று வருணிப்பது ஏனோ?

அதிசயச் செய்தி ஒன்று

கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினக்கிற் பிணி பல – தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழிய
பால் உண் குருகின் தெரிந்து — (நாலடியார்)

பொருள்:– கற்கவேண்டிய விஷயம் கடல் போலப் பரந்தது. நம்முடைய வாழ்நாளோ சிறியது. போதாக் குறைக்கு நோய்கள் வேறு நம்மைப் பிடித்து ஆட்டுகின்றன. இதனால்தான் சான்றோர்கள் அன்னப் பறவை எப்படி தண்ணீரை விட்டுவிட்டு பாலை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்கிறதோ அப்படியே நல்ல நூல்களை மட்டும் எடுத்துப் படிப்பார்கள்.

Translation:– Learning has no bounds; the learners’ days are few and if they would calmly reflect, diseases are also many. Let them therefore carefully investigate and learn what is essential, making a good choice like the swan which drinks the milk separating it from the water.

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என்பது வேத காலத்தில் இருந்து வழங்கும் ஒரு நம்பிக்கை. இதுவரை விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்வதில்லை. ஆயினும் இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கம் உண்டு!
உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலத்திலும் — ( காட்சி 6- செய்யுள் 33)– இந்தச் செய்தி வருகிறது. அதற்கு முன் யஜூர் வேதத்தில் — (காடக, மைத்ராயணி, வாஜஸ்நேயி சம்ஹிதை) — சோம ரசத்தைப் பருகிவிட்டு தண்ணீரை ஒதுக்கிவிடும் பறவை என்ற செய்தி இருக்கிறது. வடமொழிச் சொல்லான க்ஷீர என்பது பாலையும் தூய தண்ணீரையும் குறிக்கும் என்பர் வடமொழி அறிந்தோர்.

அன்னம், குள்ள வாத்து, நாரை போன்ற பறவைகள் ஒரே இனத்தை சேர்ந்தவை. இதில் வாத்து போன்ற பறவைகளின் வாயில் சல்லடை போன்ற அமைப்பு உள்ளது விலங்கியல் படித்தோர் அறிந்த உண்மை. ஆக சகதியை ஒதுக்கிவிட்டு நீரையும், தனக்கு வேண்டிய புழுப் பூச்சிகளையும் வாத்துகள் உண்ணும். ஒருவேளை நமது முன்னோர்கள் இந்த விலங்கியல் புதுமையைக் குறிக்க இப்படி – பால்/தண்ணீர்—கதை சொல்லி இருக்கலாம். அல்லது அழிந்து போய்விட்ட, நமக்குத் தெரியாத வேறு வகை அன்னப் பறவை பற்றியும் சொல்லி இருக்கலாம்.

அன்னப் பறவைகளில் ராஜ ஹம்சம், கால ஹம்சம், க்ஷுத ஹம்சம், மஹா ஹம்சம், காதம்ப ஹம்சம், மத்த ஹம்சம் என்று பல வகைகளை வடமொழி நூல்கள் பாடுகின்றன.
Whooper_Swan

அதிசயச் செய்தி இரண்டு

பரமஹம்ச என்று முனிவர்களை அழைப்பது ஏன்?
உயர் அன்னம் (பரம ஹம்ச) என்று ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘ஒரு யோகியின் சுயசரிதை’ என்ற புகழ்பெற்ற நூல் எழுதிய பரமஹம்ச யோகானந்தா ஆகியோர் அழைக்கப்படுகின்றனர். ஒரு முஸ்லீம் படைத் தளபதிக்கு சங்கேத மொழியில் உபதேசம் வழங்கிய சதாசிவ பிரம்மேந்திரர் ( என்னுடைய ஒரு கட்டுரையில் இவரது அற்புதச் செயல்கள் உள்ளன.) எழுதிய அருமையான, இனிமையான வடமொழிப் பாடல்களில் அவரது முத்திரை ‘’பரமஹம்ச’’ என்ற சொல் ஆகும்.

ஞானிகளுக்கும் அன்னப் பறவைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை. காயத்ரீ மந்திர வகைகளில் ஒன்று ஹம்ச காயத்ரீ:–

ஓம் ஹம்சாய வித்மஹே
பரமஹம்சாய தீமஹி
தன்னோ ஹம்சப் ப்ரசோதயாத்

–என்பது ஹம்ச காயத்ரீ. நம் ஆத்மனில் உறையும் ஹம்சத்தை நாம் உணர்வோமாக. அந்தப் பரமஹம்சத்தை ( பரமாத்மா ) தியானிப்போம். அந்த ஹம்சம் நமது அறிவைத் தூண்டட்டும் என்பது மந்திரத்தின் பொருள்.

ஞானிகள் மூச்சை உள்ளே இழுக்கும் போது ‘’அஹம்’’ என்றும் வெளியே விடும்போது ‘’ ச: ’’ என்றும் சப்தம் கேட்கும். “நானே அவன், அவனே நான்” என்ற அத்வைதப் பேருண்மையை உணர்த்தும் சொற்கள் இவை. ‘’தத்வம் அஸி’’, ‘’அஹம் பிரம்மாஸ்மி’’ போன்ற பெரிய மந்திரங்கள் மனிதனும் இறைவனும் ஒன்றும் நிலையை உணர்த்துவன. ‘’ஒன்றாகக் காண்பதே காட்சி புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்’’ — என்ற அவ்வைப் பெருமாட்டியின் அற்புத மந்திரமும் இதுவே.

‘’ஹம்………ச………ஹம்……..ச………..’’ என்ற மூச்சை அறிவோர் பரம ஹம்சர்கள் ஆவர். தேவி துர்க்கையை நினைத்த மாத்திரத்தில் சமாதியில் மூழ்கிவிட்ட ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையைப் படித்தோருக்கு இதெல்லாம் தெள்ளிதின் விளங்கும்.

சாந்தோக்ய உபநிஷதத்தில் அன்னப் பறவை கற்பிக்கும் பாடம் வருகிறது. தத்தாத்ரேயர் என்ற முனிவர், இயற்கையில் உள்ள ஒவ்வொரு பிராணி, பறவை, பூச்சி ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றது பாகவதத்தில் வருகிறது.

swans

அதிசயச் செய்தி மூன்று

இன்னொரு விளக்கமும் சொல்லலாம்:–
அன்னப் பறவை தூய வெண்ணிறப் பறவை. இந்திய இலக்கியங்களில் வெள்ளை நிறம் என்பது தூய்மையயும், புகழையும் குறிக்கும். மேலும் அன்னப் பறவைகள் புனித இமயத்தில் மானசஸரோவர் என்ற நிர்மலமான ஏரியில் வசிப்பதைப் புற நானூற்றுப் புலவர்களும் காளிதாசனும் பாடுகின்றனர். அவை சூரியனை நோக்கிப் போவது போல உயரமாகப் பறப்பது, ஞானிகள் இறைவனை நாடிச் செல்வதைப் போன்றதே என்றும் புலவர்கள் புகழ்கின்றனர்.

அன்னப் பறவைகள் ஏகபத்னி (ஒருவனுக்கு ஒருத்தி) விரதம் கொண்ட பறவைகள் என்பதாலும் இந்துக்கள் விரும்புவர். பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் வாஹனம்!! விஷ்ணுவின் பல அவதாரங்களில் ஒன்று ஹம்சாவதாரம். குட்டிகள் இடத்திலும், மனைவி இடத்திலும் பாசம் உடைய பறவை என்பதால் இந்திய இலக்கியங்கள் இவற்றை உவமைகளாகப் பயன்படுத்தும்.

வீட்டைவிட்டு ஓடிப்போன சித்தார்த்தனை (கௌதம புத்தர்), அன்னப் பறவை போல வந்துவிடு என்று புத்தசரிதம் சொல்லும்.

ramakrishna
Sri Ramakrishna Paramahamsar

வேதத்தில் அன்னப் பறவைகள்

உலகின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். அதிலும் அதற்குப் பின் வந்த 3 வேதங்களிலும் நிறைய குறிப்புகள் உள்ளன:–

ரிக் வேதத்தில் (1-65-5; 1-163-10;2-34-5;3-8-9;; அதர்வணம் AV 6-12-1 etc) கூட்டமாகப் பறப்பவை, பின்புறத்தில் கருப்பு வண்ணம் உடையவை, அதிக இரைச்சல் செய்பவை, இரவில் முழித்திருப்பவை என்று புலவர்கள் பாடுவர்.

இரட்டையர்களான அஸ்வினி தேவர்களை சோமயாகத்துக்கு அன்னப் பறவை போல ஜோடியாக வரவேண்டும் என்று ரிக்வேத ரிஷி பாடுகிறார் (RV 5-78-1).

சூரியனையும் உயர் நிலையிலுள்ள ஞானியையும் அன்னத்துக்கு ஒப்பிடுகிறது சிவ புராணம் (2-15-10)
மாங்குடிக் கிழாரும் சூரியனை நோக்கிப் பறக்கும் அன்னப்பறவை பற்றிச் சொல்கிறார் — (மதுரைக் காஞ்சி 385-386)

“ஒள்கதிர் ஞாயிறு ஊறு அளவா திரிதரும் செங் கால் அன்னத்துச் சேவல் அன்ன குரூஉ மயிர் புரவி”
ஆய்தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு மேகம் திரிதரும் – கலித்தொகை 69
இது ரிக்வேதத்தில் 1-163-10 வரும் வெள்ளைக் குதிரை பற்றிய பாடலின் எதிரொலி!!!

அதிசயச் செய்தி நான்கு

மஹாபாரதத்தில் நள தமயந்தி கதையில் நளன், அன்னப் பறவையை தூது அனுப்புகிறான். தமயந்தி அதைப் பிடித்து விஷயத்தை அறிகிறாள். பரணரும் (நற்றிணை 356), பிசிராந்தையாரும் (புறம் 67) தென்கடலில் மீன்களைச் சாப்பிட்டுவிட்டு, அன்னங்கள் பொன் நிறம் பிரகாசிக்கும் இமயமலையை நோக்கிப் பறப்பதைப் பாடுகின்றனர். அவைகளை தூது விடுகின்றனர்.
அன்னச் சேவல் அன்னச் சேவல்

……………………
குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின் (புறம்.67)

நிலம்தாழ் மருங்கின் தென்கடல் மேய்ந்த
இலங்குமென் தூவி செங்கால் அன்னம்
பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி
வானர மகளிர்க்கு மேவல் ஆகும் — (நற்றிணை 356)

காளிதாசன் படைத்த ரகுவம்ச, மேகதூத காவியங்களில் எண்ணற்ற குறிப்புகள் இருக்கின்றன.
எல்லாப் புலவர்களும் பெண்ணின் நடையை அன்னத்தின் நடைக்கு ஒப்பிடுவர் (அகம் 279)
படுக்கைத் தலையணைகளில் அன்னத் தூவி (சிறகு) வைத்துப் பயன்படுத்தினர்.

yogananda
Sri Paramahamsa Yogananda.

அதிசயச் செய்தி ஐந்து
ராமாயணத்தில் ஒரு கதை

ராமாயண, மஹாபாரதத்தில் நிறைய இடங்களில் அன்னம் பற்றிய உவமைகள் வருகின்றன. ஒரு சுவையான கதையும் உண்டு. அணிலுக்கு ஏன் முதுகில் மூன்று கோடுகள்?, காகத்துக்கு ஏன் ஒரு கண் குருடு? போன்ற பல கதைகளைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் அன்னத்துக்கு ஏன் தூய வெண்ணிறம் என்று தெரியுமா?

ராவணன் கண்டு பிடிக்காமல் இருப்பதற்காக வருண பகவான் அன்னப் பறவையாக மாறினாராம். பின்னர் நன்றிக் கடனாக அன்னத்துக்கு என்றும் தூய வெண்ணிறத்தை அளித்தாராம் வருண பகவான்:–

வர்ணோ மனோரம: சௌப்ய சந்த்ரமண்டல சந்நிப:
பவிஷ்யதி தவோதக்ர: சுத்தனேண சமப்ரப: — 7-18-29

ஹம்சானாம் ஹி புரா ராம ந வர்ண: சர்வ பாண்டுர:
பக்ஷா நீலாக்ர சம்வீதா: க்ரோடா: சஸ்பாக்ர நிர்மலா: – 7-18-31

இதே போல மஹாபாரதத்திலும் அன்னப் பறவை பற்றி சில கதைகள் இருக்கின்றன.

ஆகவே அன்னம் என்பதை புகழ், தூய்மை, உயர்வு, ஞானம், தெய்வீகம், அன்பு, பாசம், ஏகபத்னி விரதம், அழகிய நடை, கிண்கிணி ஓசை என்னும் பல பொருள் தொனிக்க நயம்படப் பாடினர் நம் முன்னோர்கள்!!

-சுபம்-